Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

தாவரங்கள் வாழும் உலகம் Book Back Questions 6th Science Lesson 4

6th Science Lesson 4

4] தாவரங்கள் வாழும் உலகம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

விக்டோரியா அமேசோனிக்கா என்ற தாவரத்தின் இலைகள் மூன்று மீட்டர் விட்டம் வரை வளரக்கூடியவை. நன்கு வளர்ச்சியடைந்த இலையின் மேற்பரப்பு 45 கிலோகிராம் எடை அல்லது அதற்கு இணையான ஒருவரைத் தாங்கும் திறன் கொண்டது.

உலகில் மிக நீளமான நதி நைல் நதியாகும். இது 6,650 கி.மீ. நீளம் உடையது. இந்தியாவின் மிக நீளமான நதி கங்கையாகும். இதன் நீளம் 2,525 கி.மீ.

தாமரையின் இலைக் காம்பில் உள்ள காற்று இடைவெளிகள் (Air Spaces) அவை நீரில் மிதக்க உதவுகின்றன.

470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான நிலவாழ்த் தாவரங்கள், மாஸ்கள், மற்றும் லிவர்வோர்ட்ஸ்கள் ஆகும். தென் அமெரிக்காவிலுள்ள அமேசான் மலைக் காடுகள் உலகிற்கான ஆக்ஸிஜன் தேவையில் பாதியை உற்பத்தி செய்கின்றன.

மணல் குன்றுகளால் ஆன மிகப்பெரிய பாலைவனமான தார் பாலைவனம் இந்திய துணைக் கண்டத்தில் உள்ளது. இதன் ஒரு பகுதி வடமேற்கு இந்தியாவிலுள்ள ராஜஸ்தானிலும். மற்றொரு பகுதி கிழக்கு பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்திலும் காணப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை உலக வாழிட நாளாக அனுசரிக்கப்படுகிறது.

வளரும் பருவ நிலையில் அதிவேகமாக வளரக் கூடிய தாவரம் மூங்கில் ஆகும்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. குளம் _____________ வாழிடத்திற்கு ஒரு உதாரணம்.

(அ) கடல்

(ஆ) நன்னீர்

(இ) பாலைவனம்

(ஈ) மலைகள்

2. இலைத்துளையின் முக்கிய வேலை ___________

(அ) நீரைக் கடத்துதல்

(ஆ) நீராவிப்போக்கு

(இ) ஒளிச்சேர்க்கை

(ஈ) உறிஞ்சுதல்

3. நீரை உறிஞ்சும் பகுதி ______________ ஆகும்.

(அ) வேர்

(ஆ) தண்டு

(இ) இலை

(ஈ) பூ

4. ஆகாயத் தாமரையின் வாழிடம்

(அ) நீர்

(ஆ) நிலம்

(இ) பாலைவனம்

(ஈ) மலை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. புவிப்பரப்பு _____________ % நீரால் மூடப்பட்டுள்ளது.

2. பூமியில் காணப்படும் மிகவும் வறண்ட பகுதி ______________

3. ஊன்றுதல், உறிஞ்சுதல் ஆகிய இரண்டும் _______________ன் வேலை.

4. ஒளிச்சேர்க்கை நடைபெறும் முதன்மைப் பகுதி ___________

5. ஆணிவேர்த் தொகுப்பு ___________ தாவரங்களில் காணப்படுகிறது.

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக: தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக:

1. தாவரங்கள் நீரின்றி வாழ முடியும்.

2. தாவரங்கள் அனைத்திலும் பச்சையம் காணப்படுகிறது.

3. தாவரங்களில் மூன்று பாகங்கள்- வேர், தண்டு, இலைகள்.

4. மலைகள் நன்னீர் வாழிடத்திற்கு ஓர் உதாரணம்.

5. வேர் முட்களாக மாற்றுரு அடைந்துள்ளது.

6. பசுந்தாவரங்களுக்கு சூரிய ஒளி தேவை.

IV. பொருத்துக:

1. மலைகள் – அ. ஒரு வித்திலைத் தாவரங்கள்

2. பாலைவனம் – ஆ. கிளைகள்

3. தண்டு – இ. வறண்ட இடங்கள்

4. ஒளிச்சேர்க்கை – ஈ. இமயமலை

5. சல்லிவேர்த் தொகுப்பு – உ. இலைகள்

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. நன்னீர், 2. நீராவிப்போக்கு, 3. வேர், 4. நீர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. 70%, 2. பாலைவனம், 3. வேரின், 4. இலைகள், 5. இருவித்திலை

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக: தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக:

1. முடியாது, 2. சரி, 3. பல்வேறு பாகங்கள் உள்ளன, 4. நில வாழ் இடத்திற்கு உதாரணம், 5. இலைகள், 6. சரி

IV. பொருத்துக:

1. ஈ, 2. இ, 3. ஆ, 4.உ, 5. அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!