Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

இந்தியாவில் கூட்டாட்சி 12th Political Science Lesson 5 Questions in Tamil

12th Political Science Lesson 5 Questions in Tamil

5] இந்தியாவில் கூட்டாட்சி

1) கூட்டாட்சி பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – மாநில அரசாங்கங்கள் இருந்தால் மட்டுமே ஒரு அரசியல் முறையை கூட்டாட்சி என அழைக்கமுடியாது.

கூற்று 2 – மாநில அரசாங்கங்கள் அரசமைப்பால் தோற்றுவிக்கப்பட்டால் மட்டுமே ஒரு ஆட்சி அமைப்பை கூட்டாட்சி முறை என அழைக்க முடியும்.

கூற்று 3 – பொதுவாக பல வகையான மக்கள் வசிக்கும் நாடுகளில் கூட்டாட்சி முறை பின்பற்றப்படுகிறது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – ஓர் மத்திய அரசாங்கத்திற்கும், பல மாநில அரசாங்கங்களுக்கும் இடையில் அரசால் வழங்கப்பட்டுள்ள, பாதுகாக்கப்பட்டுள்ள அதிகார பகிர்வை உடைய அரசியல் முறையை கூட்டாட்சி என அழைக்கிறோம். மாநில அரசாங்கங்கள் இருந்தால் மட்டுமே ஒரு அரசியல் முறையை கூட்டாட்சி என அழைக்கமுடியாது. மாநில அரசாங்கங்கள் அரசமைப்பால் தோற்றுவிக்கப்பட்டால் மட்டுமே ஒரு ஆட்சி அமைப்பை கூட்டாட்சி முறை என அழைக்க முடியும்)

2) வட அமெரிக்காவில் எத்தனை காலனிகள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் உருவாக்கின?

A) பன்னிரெண்டு

B) பதிமூன்று

C) பதினான்கு

D) பதினைந்து

(குறிப்பு – ஒரு நாட்டின் பகுதிகள் இனம் மொழி மதம் போன்ற காரணங்களால் பல வகை மக்களை பெற்றிருந்தால் கூட்டாட்சி முறை அரசாங்கம் பின்பற்றப்படவேண்டும். அரசமைப்பு பெற்றோர் எனில், மாநில அரசாங்கங்கள் குழந்தைகளாகவும், மத்திய அரசாங்கம் குழந்தையாகவும் பாவிக்கப்படவேண்டும்.வட அமெரிக்காவில் 13 காலணிகள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் உருவாக்கின.)

3) உலக வரலாற்றில் முதல் கூட்டாட்சி அரசமைப்பாக தோன்றிய நாடு எது?

A) இந்தியா

B) அமெரிக்கா

C) ரஷ்யா

D) சீனா

(குறிப்பு – உலக வரலாற்றில் முதல் கூட்டாட்சி அரசமைப்பு அமெரிக்காவில் தோன்றியது. பின்னர் ஆஸ்திரேலியா, கனடா ஆகிய ஆங்கிலேய காலணிகளும் கூட்டாட்சி முறையை அமைத்துக் கொண்டன. மூன்று மொழிகளை பின்பற்றும் சுவிட்சர்லாந்து கூட்டாட்சி முறையைக் கொண்டுவந்தது. தற்போது உள்ள ஐரோப்பிய யூனியன் விருப்பத்தின் அடிப்படையில் அமைந்த கூட்டாட்சி முறை எடுத்துக்காட்டாகும்)

4) இந்தியாவில் எந்த சட்டம் கூட்டாட்சி முறையின் தோற்றத்தை உருவாக்கியது?

A) ஒழுங்குமுறை சட்டம் – 1773

B) பிட் இந்திய சட்டம் – 1784

C) இந்திய அரசாங்கச் சட்டம் -1919

D) இந்திய கவுன்சில் சட்டம் – 1893

(குறிப்பு – இந்தியாவில் ஒழுங்குமுறை சட்டம் -1773, கூட்டாட்சி முறையின் தோற்றத்தை உருவாக்கியது. கிழக்கிந்திய கம்பெனியின் விவகாரங்களை கட்டுப்படுத்துவதற்கு இங்கிலாந்து அரசாங்கத்தால் இயற்றப்பட்ட முதலாவது சட்டமே ஒழுங்குமுறை சட்டம்-1773 என்பதாகும். மேலும் இந்த சட்டமே இந்திய ஆட்சி முறையின் வளர்ச்சியில் முதலாவது படியாகும். இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சிக்கான அடிக்கல் ஆகும்.)

5) ஒழுங்குமுறை சட்டம் 1773 இன்படி கீழ்க்காணும் எந்த பிரதேசத்தை கல்கத்தாவிலுள்ள கவர்னர் ஜெனரலின் ஆளுமையின் கீழ் கொண்டு வரவில்லை?

A) சென்னை

B) பம்பாய்

C) கல்கத்தா

D) டில்லி

(குறிப்பு – இந்தியாவில் ஒழுங்குமுறை சட்டம்-1773, கூட்டாட்சி முறையின் தோற்றத்தை உருவாக்கியது. சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய பிரதேசங்களை கல்கத்தாவில் உள்ள கவர்னர் ஜெனரலின் ஆளுமையின் கீழ் சட்டம் கொண்டுவந்தது. இந்திய தேசிய இயக்கம் இந்தியாவின் பன்முகத் தன்மையை உணர்ந்து கூட்டாட்சி முறையை ஆதரித்தது.)

6) கீழ்க்காணும் எந்த சட்டம் இரட்டை ஆட்சியை அறிமுகம் செய்தது?

A) ஒழுங்குமுறை சட்டம் – 1773

B) பிட் இந்திய சட்டம் – 1784

C) இந்திய அரசாங்கச் சட்டம் -1919

D) இந்திய கவுன்சில் சட்டம் – 1893

(குறிப்பு – இந்திய அரசாங்கச் சட்டம் இரட்டை ஆட்சியை அறிமுகம் செய்தது 1935ம் ஆண்டு இந்திய அரசாங்க சட்டம் மாநிலங்களுக்கு சுயாட்சியை வழங்கியது குழுவின் அறிக்கையும் ஜவஹர்லால் நேருவின் கருத்துக்களும் கூட்டாட்சி அமைப்பை இந்தியாவிற்கு வலியுறுத்தின)

7) கீழ்க்காணும் எந்த சட்டம் மாநிலங்களுக்கு சுயாட்சியை வழங்கியது?

A) ஒழுங்குமுறை சட்டம் – 1773

B) பிட் இந்திய சட்டம் – 1784

C) இந்திய அரசாங்கச் சட்டம் – 1919

D) இந்திய அரசாங்கச் சட்டம் – 1935

(குறிப்பு – இந்தியாவில் ஒழுங்குமுறை சட்டம்-1773, கூட்டாட்சி முறையின் தோற்றத்தை உருவாக்கியது.சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய பிரதேசங்களை கல்கத்தாவிலுள்ள கவர்னர் ஜெனெரலின் ஆளுமையின் கீழ் சட்டம் கொண்டுவந்தது.இந்திய தேசிய இயக்கம் இந்தியாவின் பன்முகத் தன்மையை உணர்ந்து கூட்டாட்சி முறையை ஆதரித்தது. இந்திய அரசாங்க சட்டம் 1919 இரட்டை ஆட்சியை அறிமுகம் செய்தது.1935 இந்திய அரசாங்கச் சட்டம் மாநிலங்களுக்கு சுயாட்சியை வழங்கியது)

8) இந்திய அரசமைப்பின் எந்த பகுதியில் கூட்டாட்சி முறை பற்றி கூறப்பட்டுள்ளது?

A) ஐந்தாவது பகுதி

B) ஆறாவது பகுதி

C) ஏழாம் பகுதி

D) எட்டாம் பகுதி

(குறிப்பு – நேரு குழுவின் அறிக்கையும் (1928), ஜவஹர்லால் நேருவின் கருத்துக்களும் கூட்டாட்சி அமைப்பு இந்தியாவிற்கு வலியுறுத்தின.பாகிஸ்தான் உருவாக்கமும் அதன் பின் துயரமான சம்பவங்களும் வலுவான மத்திய அரசு உள்ள கூட்டாட்சி முறையை உருவாக்க காரணமாக இருந்தன. விடுதலை இந்தியாவின் அரசமைப்பின்ஆறாவது பகுதியில் கூட்டாட்சி முறை பற்றி வழங்குகிறது)

9) இந்திய அரசமைப்பின் எந்த அட்டவணையின் மூலம் கூட்டாட்சி பற்றிய கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது?

A) ஆறாம் அட்டவணை

B) ஏழாம் அட்டவணை

C) எட்டாம் அட்டவணை

D) ஒன்பதாம் அட்டவணை

(குறிப்பு – விடுதலை இந்தியாவின் அரசமைப்பு ஆறாவது பகுதியில் கூட்டாட்சி முறையை வழங்குகிறது. அரசமைப்பின் ஏழாவது அட்டவணை 3 பட்டியலை உருவாக்கி அதிகாரப் பகிர்வை மத்திய மாநில அரசாங்கங்களுக்கு வழங்குகின்றன.அவை மாநிலபட்டியல், மத்திய பட்டியல் மற்றும் பொதுப் பட்டியல் என்பன ஆகும்)

10) இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி தன்மைகளுள் அல்லாதவை கீழ்க்கண்டவற்றில் எது?

A) எழுதப்பட்ட அரசமைப்பு

B) ஈரவை நாடாளுமன்றம்

C) நெகிழும் அரசமைப்பு

D) சுதந்திர நீதித்துறை

(குறிப்பு – இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி தன்மைகள் ஆவன, நெகிலா அரசமைப்பு, சுதந்திர நீதித்துறை, ஈரவை நாடாளுமன்றம், அதிகாரப்பகிர்வு, அரசமைப்பின் உயர்வு மற்றும் எழுதப்பட்ட அரசமைப்பு போன்றவைகளாகும். இந்திய ஒன்றியம் என்ற கருத்து இந்திய நிலப்பரப்பு என்பதிலிருந்து வேறுபட்டதாகும். இந்திய ஒன்றியம் என்பது கூட்டாட்சி முறையில் உள்ள 28 மாநில அரசாங்கங்களையும், மத்திய அரசாங்கத்தையும் குறிக்கும்)

11) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இந்தியாவில் தற்போது ஒரு மத்திய அரசும், 29 மாநில அரசாங்கங்களும் உள்ளன.

கூற்று 2 – அரசமைப்பு நாட்டின் மிக உயர்ந்த ஆவணமாகும்.

கூற்று 3 – எந்தவொரு அரசாங்கமும் அரசமைப்பை மீறி செயல்பட கூடாது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – கூட்டாட்சி முறைக்கு எழுதப்பட்ட அரசமைப்பு இன்றியமையாததாகும். பல மாநில, மத்திய அரசாங்கங்கள் கூட்டாட்சி முறையில் செயல்படுவதால் அவற்றின் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு இருக்கவேண்டும். தற்போது இந்தியாவில் ஒரு மத்திய அரசும், 28 மாநில அரசாங்கங்களும் உள்ளன. இவைகளின் அதிகாரங்களையும் பணிகளையும் அரசமைப்பு தெளிவாக வரையறுக்கின்றது.)

12) அமெரிக்காவின் கூட்டாட்சி முறையில் எத்தனை பட்டியல் மூலமாக அதிகாரப்பகிர்வு எடுத்துரைக்கப்பட்டுள்ளது?

A) ஒன்று

B) இரண்டு

C) மூன்று

D) நான்கு

(குறிப்பு – மத்திய மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு கூட்டாட்சி முறையின் அடிப்படை தன்மையாகும். இந்திய அரசமைப்பு மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு இடையே அதிகார பகிர்வை விரிவாக வழங்குகிறது. இந்தியாவில் மூன்று பட்டியல் மூலமாக அதிகாரப்பகிர்வு வழங்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவின் கூட்டாட்சி முறையில் ஒரு பட்டியல் மூலமாகத்தான் அதிகாரப்பகிர்வு எடுத்துரைக்கப்பட்டுள்ளது)

13) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – கூட்டாட்சி முறையில் ஈரவை நாடாளுமன்றம் இந்தியாவில் காணப்படுகிறது.

கூற்று 2 – இந்தியாவில் நாடாளுமன்றத்தின் மேலவை மாநிலங்களவை எனவும், கீழவை மக்களவை எனவும் அழைக்கப்படுகிறது.

கூற்று 3 – இந்தியாவின் மாநிலங்களவை மாநில பிரதிநிதிகளை கொண்டுள்ளது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – இந்தியாவில் கூட்டாட்சி முறையில் ஈரவை நாடாளுமன்றம் காணப்படுகிறது. நாடாளுமன்றத்திற்கு இரண்டு வகைகள் உள்ளன. இந்தியாவில் நாடாளுமன்றத்தின் மேலவை மாநிலங்களவை என அழைக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் கீழவை மக்களவை என அழைக்கப்படுகிறது. மாநிலங்களவை மாநில பிரதிநிதிகளை கொண்டுள்ளது. மாநில உரிமைகளின் பாதுகாவலனாக அது கருதப்படுகிறது. உலகம் முழுவதும் நாடாளுமன்றத்தின் மேலவை மாநில உரிமைகளின், நலன்களின் பாதுகாவலனாக செயல்படுகிறது)

14) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – அரசமைப்பு கருத்துக்களை மாற்றுவதற்கு அரசியல் சாசனத்தின் சட்டதிருத்த முறையோ அல்லது தனி அமைப்பு உள்ள அரசு அமைப்புகளுக்கு நெகிழாத அரசமைப்பு முறை என்பது பெயராகும்.

கூற்று 2 – இந்திய அரசமைப்பு நெகிழா அரசமைப்பு என அழைக்கப்படுகிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – அரசமைப்பு கருத்துக்களை மாற்றுவதற்கு அரசியல் சாசனத்தின் சட்டதிருத்த முறையோ அல்லது தனி அமைப்பு உள்ள அரசு அமைப்புகளுக்கு நெகிழாத அரசமைப்பு முறை என்பது பெயராகும். சாதாரண சட்டமியற்றும் முறை மூலமாக அரசமைப்பில் மாற்றங்களை செய்ய முடியாது. இங்கு மாற்றங்களை கொண்டு வருவதற்கு அறுதிப் பெரும்பான்மையுடன் அரசமைப்பு திருத்தச் சட்டத்தை கொண்டு வர வேண்டும்)

15) இந்திய அரசமைப்பின் எந்த பகுதியில் அரசமைப்புச் சட்டத்திருத்தம் பற்றி கூறப்பட்டுள்ளது?

A) 18வது பகுதி

B) 19வது பகுதி

C) 20வது பகுதி

D) 21வது பகுதி

(குறிப்பு – அரசமைப்பை மாற்றுவதற்கு சாதாரண சட்டமியற்றும் முறை போதும் என்றால் மாநிலங்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பு இருக்காது. இந்திய அரசாங்கமே அரசமைப்பை திருத்தி மாநில உரிமைகளை பறிக்கலாம் என்ற ஆபத்து உள்ளது நமது அரசமைப்பின் இருபதாவது பகுதியில், அரசமைப்பை மாற்றுவதற்கான சிறப்பு சட்டத்திருத்த முறைகள் வழங்கப்பட்டுள்ளது.)

16) இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பு அரசமைப்பின் சட்டத்திருத்தம் முறை பற்றி கூறுகிறது?

A) உறுப்பு – 367

B) உறுப்பு – 368

C) உறுப்பு – 369

D) உறுப்பு – 370

(குறிப்பு – இந்திய அரசமைப்பின் இருபதாவது பகுதியின், 368வது உறுப்பில் அரசமைப்பை மாற்றுவதற்கான சிறப்பு திருத்தச்சட்ட முறைகள் வழங்கப்பட்டுள்ளதால் இந்திய அரசமைப்பு நெகிலா அரசமைப்பு என அழைக்கப்படுகிறது. முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தம் 1951ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.)

17) இந்தியாவில் கூட்டாட்சி விவகாரம் பற்றிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ள நீதிமன்றம் எது?

A) மாவட்ட நீதிமன்றம்

B) உயர்நீதிமன்றம்

C) உச்ச நீதிமன்றம்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – இந்திய உச்ச நீதிமன்றம் கூட்டாட்சி முறையில் நடுவணாகவும், அரசியலமைப்பின் பாதுகாவலனாகவும் விளங்குகிறது. அரசமைப்பை விளக்கும் உரிமையை இது பெற்றுள்ளது. மத்திய மாநில உரிமைகளுக்கு இடையே முரண்பாடுகள் அல்லது சிக்கல்கள் இருந்தால் உச்சநீதிமன்றம் தீர்த்து வைக்கின்றது. உச்ச நீதிமன்றத்திடம் தனிப்பட்ட அதிகாரம் உள்ளது. உச்சநீதிமன்றம் மட்டும்தான் கூட்டாட்சி வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது.)

18) இந்தியர்களுக்கு அரசமைப்பு எழுதும் ஆற்றல் இல்லை என்று சவால்விடுத்த ஆங்கிலேயர் யார்?

A) இங்கிலாந்து பிரதமர்

B) லார்டு மவுண்ட்பேட்டன்

C) லார்டு அட்லீ

D) லார்டு பிர்ஹன்வுட்

(குறிப்பு – இந்தியர்களுக்கு அரசமைப்பு எழுதும் ஆற்றல் இல்லை என்று சவால் விடுத்த ஆங்கிலேயர் லார்டு பிர்ஹன்வுட் என்பவராவார். இதனை எதிர்த்து 1928 ஆம் ஆண்டு நேரு அறிக்கை சமர்ப்பித்தார். நேரு அறிக்கை(1928), மோதிலால் நேருவினால் தயாரிக்கப்பட்டது.)

19) இந்தியாவிற்கு என தனி அரசமைப்புச் சட்டம் என்ற கருத்தை முதன் முதலில் முன் வைத்தவர் யார்?

A) ஜவஹர்லால் நேரு

B) டாக்டர் அம்பேத்கர்

C) டாக்டர் ராதாகிருஷ்ணன்

D) எம்.என்.ராய்

(குறிப்பு – இந்தியாவிற்கு என தனி அரசமைப்புச் சட்டம் என்ற கருத்தை முதன்முதலில் முன்வைத்தவர் எம்.என்.ராய் என்பவராவார். இந்திய அரசமைப்பிற்கான குறிக்கோள் தீர்மானம் ஜனவரி 22,1947 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் முன்மொழியப்பட்டது. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக இருந்தவர் டாக்டர் சச்சிதானந்த சின்கா என்பவர் ஆவார்.)

20) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு ஒரே ஒரு அரசமைப்பு தான் உள்ளது.

கூற்று 2 – அமெரிக்காவில் மாநிலங்கள் தங்களுக்கென ஒரு அரசமைப்பை பெற்றுள்ளன.

கூற்று 3 – அமெரிக்கா ஒரு கூட்டாட்சி நாடாகும்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு ஒரே ஒரு அரசமைப்பு தான் உள்ளது. தேசிய அரசமைப்பு மாநிலங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. மாநிலங்களுக்கு என்று தனி அரசமைப்பு கிடையாது. ஆனால் பாரம்பரிய கூட்டாட்சி நாடான அமெரிக்காவில் மாநிலங்கள் தங்களுக்கென அரசமைப்பை பெற்றுள்ளன)

21) கீழ்க்காணும் நாடுகளில் இரட்டை குடியுரிமை இல்லாத நாடு எது?

A) அமெரிக்கா

B) சீனா

C) கனடா

D) ஆஸ்திரேலியா

(குறிப்பு – நமது நாட்டில் இந்திய குடியுரிமை மட்டுமே உள்ளது. தேசிய குடியுரிமை மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு என்று தனி குடியுரிமை கிடையாது. ஆனால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் தேசிய குடியுரிமை மட்டுமல்லாது, மாநில குடியுரிமையையும் பெற்றுள்ளது.)

22) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – சாதாரண சட்டமியற்றும் முறை மூலமாக அரசமைப்பின் பகுதிகளை மாற்ற முடிந்தால் அந்த அரசமைப்புக்கு நெகிழும் அரசமைப்பு என்று பெயராகும்.

கூற்று 2 – இங்கிலாந்தில் நெகிழும் அரசமைப்பு காணப்படுகிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – சாதாரண சட்டமியற்றும் முறை மூலமாக அரசமைப்பின் பகுதிகளை மாற்ற முடிந்தால் அந்த அரசமைப்புக்கு நெகிழும் அரசமைப்பு என்று பெயராகும். இங்கு அரசமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு சிறப்பு அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் தேவையில்லை. இங்கிலாந்தில் நெகிலும் அரசமைப்பு காணப்படுகிறது. இந்திய அரசமைப்பில் சில முக்கிய பகுதிகளை மாற்றுவதற்கு சாதாரண சட்டமியற்றும் முறை அதிகாரத்தை பெற்றிருக்கின்றன. நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை ஆதரவுடன் இப்பகுதிகளை மாற்ற முடியும்)

23) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இந்திய அரசமைப்பு மாநிலங்களுக்கு பெயர் உரிமை மற்றும் வாழ்வுரிமையை வழங்கவில்லை

கூற்று 2 – அரசமைப்பின் மூன்றாவது மற்றும் நான்காவது உறுப்புகள் மாநிலங்களை மாற்றவும், புதிய மாநிலங்களை உருவாக்கவும் வழிமுறை வழங்குகின்றன.

கூற்று 3 – அமெரிக்காவில் மாநிலங்களின் பெயர் மற்றும் வாழ்வுரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – இந்திய அரசமைப்பு மாநிலங்களுக்கு பெயர் உரிமை மற்றும் வாழ்வுரிமையை வழங்கவில்லை நாடாளுமன்றம் சாதாரண சட்டங்கள் மூலமாக மாநிலங்களில் பெயர்களையும் நிலப்பரப்பு களையும் மாற்றி அமைக்க முடியும் அரசமைப்பின் மூன்றாவது மற்றும் நான்காவது உறுப்புகள் மாநிலங்களை மாற்றவும் புதிய மாநிலங்களை உருவாக்கவும் வழிமுறையை வழங்குகின்றன)

24) கீழ்க்கண்டவற்றில் மாநில உரிமைகளின் பாதுகாவலனாக விளங்குகிறது?

A) சட்டமன்றம்

B) மக்களவை

C) மாநிலங்களவை

D) நீதிமன்றம்

(குறிப்பு – பொதுவாக நாடாளுமன்றத்தின் மேலவை மாநில உரிமைகளில் பாதுகாவலனாக பணியாற்றுகின்றது.இந்தியில் ராஜ்யசபா என்றால் தமிழில் மாநிலங்களவை என்பது பொருளாகும். மாநிலங்களவை மாநிலங்களின் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்டது. மாநில உரிமைகளில் பாதுகாவலனாக பணி புரிகிறது ஆனால் மூன்று முக்கிய தளங்களில், மாநில உரிமைகளுக்கு எதிராக மாநிலங்களவை செயல்படுகிறது)

25) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இந்தியாவில் மாநிலங்களவையின் அமைப்பு முறையில் சமத்துவம் பின்பற்றப்பட்டுள்ளது.

கூற்று 2 – அனைத்து மாநிலங்களும் ஒரே அளவிலான மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கையை பெற்றுள்ளன.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – மாநிலங்களவையின் அமைப்பு முறையில் சமத்துவம் பின்பற்றப்படவில்லை. இடங்கள் மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வழங்கப்பட்டிருக்கின்றன. மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 31 இடங்கள் மாநிலங்களவையில் உள்ளன. ஆனால் நாகாலாந்து போன்ற சிறிய மாநிலங்களுக்கு ஒரு இடம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கூட்டாட்சி நாடாகிய அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரு இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.)

26) இந்திய மாநிலங்களவையில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை எத்தனை?

A) 16 இடங்கள்

B) 17 இடங்கள்

C) 18 இடங்கள்

D) 19 இடங்கள்

(குறிப்பு – இந்திய மாநிலங்களவையில், தமிழ்நாட்டிற்கு 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய மாநிலங்கள் அவை 250 உறுப்பினர்களை கொண்டதாகும். இதில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுவர். மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்)

27) கீழ்க்காணும் எந்த உறுப்பின் படி ஒரு அதிகாரத்தை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாநிலங்களவையால் மாற்ற முடியும்?

A) 246வது உறுப்பின்படி

B) 247வது உறுப்பின்படி

C) 248வது உறுப்பின்படி

D) 249வது உறுப்பின்படி

(குறிப்பு – இந்திய அரசமைப்பின் 249 ஆவது உறுப்பின் படி ஒரு அதிகாரத்தை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்ற முடியும். தேசிய நலன் கருதி மாநிலங்களவை இம்மாற்றத்தை செய்ய முடியும். வருகை தந்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு முறையின்படி மாநிலங்களவை ஒரு தீர்மானத்தை இயற்றினால் மாநில அதிகாரத்தை மத்திய பட்டியலுக்கு ஒரு வருட காலத்திற்கு மாற்றலாம்)

28) அரசமைப்பின் எந்த உறுப்பின் கீழ் புதிய அனைத்து இந்திய பணிகளை உருவாக்கும் அதிகாரம் மாநிலங்களவைக்கு வழங்கப்பட்டுள்ளது?

A) 310வது உறுப்பின்படி

B) 311வது உறுப்பின்படி

C) 312வது உறுப்பின்படி

D) 313வது உறுப்பின்படி

(குறிப்பு – இந்திய அரசமைப்பின் 312 உறுப்பின் கீழ் அனைத்து இந்திய பணிகளை உருவாக்கும் அதிகாரம் மாநிலங்களவைக்கு வழங்கப்பட்டுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் மொத்த உறுப்பினர்களின் அறுதிப் பெரும்பான்மை ஆதரவுடன் புதிய அனைத்து இந்திய பணிகளை உருவாக்கும் அதிகாரத்தை மாநிலங்களவை பெற்றிருக்கிறது)

29) இந்தியாவில் மாநிலங்களவையின் தலைவராக பதவி வகிப்பவர் யார்?

A) இந்திய குடியரசு தலைவர்

B) இந்திய துணை குடியரசு தலைவர்

C) மாநிலங்களவை உறுப்பினர்களில் மூத்தவர்

D) இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

(குறிப்பு – மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். மாநிலங்களவைத் தலைவராக குடியரசுத் துணைத்தலைவர் பதவி வகிப்பார்.மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறும்.)

30) மாநிலங்களவை ஒரு தீர்மானத்தை இயற்றினால் மாநில அதிகாரத்தை மத்திய பட்டியலுக்கு____________ காலத்திற்கு மாற்றமுடியும்.

A) ஒரு வருட காலத்திற்கு

B) இரண்டு வருட காலத்திற்கு

C) மூன்று வருட காலத்திற்கு

D) நான்கு வருட காலத்திற்கு

(குறிப்பு – மாநிலங்களவை ஒரு தீர்மானத்தை இயற்றினால் மாநில அதிகாரத்தை மத்திய பட்டியலுக்கு ஒரு வருட காலத்திற்கு காலத்திற்கு மாற்றமுடியும். தேவைப்பட்டால் மீண்டும் மீண்டும் மாற்றத்தை நீட்டிக்க முடியும். வேலியே பயிரை மேய்வது போல மாநில உரிமைகளின் பாதுகாவலனாகிய மாநிலங்களவையே மாநில உரிமையை பாதிக்கின்றது)

31) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – மத்திய அரசாங்கம் மாநிலங்களை விட எண்ணிக்கையில் அதிக அதிகாரங்களை பெற்றுள்ளது.

கூற்று 2 – அதிக வருமானத்தை ஈட்டித் தரும் அதிகாரங்கள் மத்திய அரசின் வசமே உள்ளன.

கூற்று 3 – கூட்டாட்சி நாடான அமெரிக்காவில் இதர அதிகாரங்கள் மாநிலங்களிடம் வழங்கப்பட்டுள்ளன.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – நமது அரசமைப்பு சமமற்ற அதிகாரப் பகிர்வை உருவாக்கி உள்ளது என மாநிலங்கள் குற்றம் சுமத்துகின்றன.மத்திய அரசுக்கு சாதகமாகவும், மாநிலங்களுக்கு எதிராகவும் அதிகாரப் பகிர்வு உள்ளதாக பல மாநிலங்கள் கூறுகின்றன.மத்திய அரசாங்கம் மாநிலங்களை விட எண்ணிக்கையில் அதிக அதிகாரங்களை பெற்றுள்ளது. முக்கியமான அதிகாரங்களும் மத்திய அரசிடமே உள்ளன. எண்ணிக்கை, முக்கியத்துவம், வருமானம் ஆகிய காரணிகளில் மாநிலங்கள் பலவீனமான நிலையில் உள்ளன)

32) இந்திய அரசமைப்பில் எந்தப்பகுதியில் அவசர காலம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன?

A) 16 வது பகுதியில்

B) 17 வது பகுதியில்

C) 18 வது பகுதியில்

D) 19 வது பகுதியில்

(குறிப்பு – இந்திய அரசமைப்பின் பதினெட்டாவது பகுதியில் உறுப்புகள் 352 முதல் 360 வரை மூன்று விதமான அவசர காலங்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன.நெருக்கடி நிலை (Emergency) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிவுகள் 352, 356 மற்றும் 360 இவ்வகையான நெருக்கடி நிலைமைகளை விளக்குகின்றன)

33) கீழ்க்காணும் எந்த உறுப்பு நிதிநிலைக்கான அவசரநிலையை பற்றி குறிப்பிடுகிறது?

A) உறுப்பு – 352

B) உறுப்பு – 356

C) உறுப்பு – 360

D) உறுப்பு – 366

(குறிப்பு – பிரிவு 352 போர் மூலம் ஏற்படும் அவசர நிலையையும் (National Emergency) பிரிவு 356 மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைவதால் அல்லது அரசியல் சாசனப் பிரிவுகள் கடைப்பிடிக்கப்படாததால் (State Emergency ) எழும் நிலையையும் மற்றும் பிரிவு 360 நிதிநிலையால் ஏற்படும் அவசரநிலையையும் (Financial Emergency ) விளக்கும். அவசர காலங்களில் இருந்தால் கூட்டாட்சி முறை ரத்து செய்யப்பட்டு ஒற்றை ஆட்சி முறை பின்பற்றப்படும். மாநில உரிமைகள் பாதிக்கப்படும்.)

34) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இந்திய அரசமைப்பு நீதித்துறையில் கூட்டாட்சி முறையை வழங்கவில்லை.

கூற்று 2 – இந்தியாவில் உச்சநீதிமன்றத்திற்கு கீழ் உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்கள் இயங்குகின்றன

கூற்று 3 – அமெரிக்காவின் நீதித்துறையிலும் கூட்டாட்சி முறை பின்பற்றப்படுகிறது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாக் கூற்றுகளும் சரி

(குறிப்பு – இந்திய அரசமைப்பு நீதித்துறையில் கூட்டாட்சி முறையை வழங்கவில்லை. நீதித்துறை ஒருங்கிணைந்த துறையாக உள்ளது. உச்சநீதிமன்றத்தின் கீழ் உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்கள் இயங்குகின்றன. ஒருங்கிணைந்த படிநிலை அமைப்பு அடிப்படையில் நீதித்துறை உள்ளது. ஆனால் அமெரிக்காவில் நீதித்துறையிலும் கூட்டாட்சி முறை பின்பற்றப்படுகிறது.)

35) இந்தியாவில் கூட்டாட்சி முறை பின்பற்றப்படாத துறை கீழ்கண்டவற்றில் எது?

A) சட்டமன்றம்

B) ஆட்சித்துறை

C) நீதித்துறை

D) நிதித்துறை

(குறிப்பு – இந்தியாவில் சட்டமன்றம், ஆட்சித்துறை, நிதிதளங்களில் மட்டுமே கூட்டாட்சியில் இயங்குகின்றது. நீதித்துறையில் கூட்டாட்சி இல்லை இந்திய அரசமைப்பு நீதித்துறையில் கூட்டாட்சி முறையை வழங்கவில்லை. பொதுப்பட்டியல் அதிகாரங்களில் மத்திய அரசு சொல்வதை மாநில அரசாங்கங்கள் கேட்க வேண்டிய நிலை உள்ளது.பட்டியலில் இல்லாத இதர அதிகாரங்கள் நமது அரசமைப்பில் மத்திய அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளன).

36) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இந்தியாவில் தேசிய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலை நடத்துகிறது.

கூற்று 2 – இந்தியாவில் மாநில சட்டமன்றங்களின் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்துகின்றது.

கூற்று 3 – தேர்தல் முதன்மை அதிகாரி தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைமையின்கீழ் செயல்படுவார்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாக் கூற்றுகளும் சரி

(குறிப்பு – தேசிய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலையும், மாநில சட்டமன்றத் தேர்தலையும் நடத்துகின்றது. மாநில சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கு தனி தேர்தல் ஆணையம் கிடையாது. முதன்மை அதிகாரி தேசிய தேர்தல் ஆணையம் தலைமையின் கீழ் செயல்படுவார். பாரம்பரிய கூட்டாட்சி நாடுகளில் தேர்தலை, தேசிய தேர்தல் ஆணையம் நடத்துகின்றது. ஆனால் நமது அரசமைப்பு ஒருங்கிணைந்த தேர்தல் ஆணையத்தை உருவாக்கியுள்ளது)

37) சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் கீழ்க்காணும் எந்த அரசியல் சாசன திருத்த சட்டத்தின் அடிப்படையில் சுயாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்துகிறது?

I. 72வது அரசியல் சாசனம் சட்டத்திருத்தம்

II. 73வது அரசியல் சாசனம் சட்டத்திருத்தம்

III. 74வது அரசியல் சாசனம் சட்டத்திருத்தம்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் கூட்டாட்சி முறையின் அங்கம் இல்லை. அவ்வாணையம் 73வது, 74வது அரசியல் சாசன திருத்தச்சட்டங்கள் அடிப்படையில் சுயாட்சி அமைப்புகளுக்கு (பஞ்சாயத்து, நகராட்சி அமைப்புகள்) தேர்தலை நடத்துகிறது.

38) தலைமைக் கணக்கு தணிக்கையாளர் பற்றி குறிப்பிடும் உறுப்பு எது?

A) 146 வது உறுப்பு

B) 147 வது உறுப்பு

C) 148 வது உறுப்பு

D) 149 வது உறுப்பு

(குறிப்பு – இந்திய அரசமைப்பு மத்திய மாநில அரசாங்கங்களுக்கு ஒருங்கிணைந்த தணிக்கை முறையையும், அமைப்பையும் உருவாக்கி உள்ளது.சி.ஏ.ஜி. எனப்படும் தலைமை கணக்கு தணிக்கையாளர் அரசமைப்பின் 148வது உறுப்பின்படி தேசிய மற்றும் மாநில அளவிலான தணிக்கை அதிகாரத்தை பெற்றுள்ளார். இந்திய கூட்டாட்சி முறையில் மாநிலங்களுக்கு என்று தனியான தணிக்கை அமைப்பு இல்லை).

39) இந்தியாவின் கூட்டாட்சியை தனித்துவமானது என்று வர்ணித்தவர் கீழ்கண்டவர்களில் யார்?

A) பேராசிரியர் வேர்

B) பேராசிரியர் அலெக்ஸாண்ட்ராவிக்ஸ்

C) பேராசிரியர் வில்லியம்

D) பேராசிரியர் ஹென்றி

(குறிப்பு – பேராசிரியர் வேர் இந்திய கூட்டாட்சி முறையை பற்றி “இந்தியா ஒரு பாதியளவு கூட்டாட்சி முறையான அரசாங்கம் உள்ள நாடாகும். இந்தியா ஒரு வலுவில்லா கூட்டாட்சி தன்மைகள் உள்ள ஒற்றையாட்சி நாடாகும். அது வலுவான கூட்டாட்சி உள்ள ஒற்றையாட்சி நாடு கிடையாது” ரஷ்ய நாட்டை சேர்ந்த அரசியல் சாசன அறிஞரான பேராசிரியர் அலெக்சாண்ட்ராவிக்ஸ் இந்தியாவின் கூட்டாட்சியை “தனித்துவமானது” என்று வர்ணித்தார்)

40) மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப்பகிர்வுகளில் தவறானது கீழ்கண்டவற்றுள் எது?

A) சட்டமன்ற அதிகாரப்பகிர்வு

B) ஆட்சித் துறை அதிகார பகிர்வு

C) நீதித் துறை அதிகார பகிர்வு

D) நிதி அதிகாரப்பகிர்வு

(குறிப்பு – அதிகாரப் பகிர்வு மத்திய மாநில உறவுகளின் அச்சாணியாக உள்ளது. மத்திய மாநில அரசாங்கங்களுக்கு இடையே அதிகார பகிர்வு மூன்று தளங்களில் காணப்படுகிறது. அவை சட்டமன்ற அதிகாரப்பகிர்வு, ஆட்சித்துறை அதிகாரப் பகிர்வு மற்றும் நிதி அதிகாரப்பகிர்வு என்பன ஆகும்.)

41) மத்திய மாநில உறவுகளில் சட்டமன்ற அதிகாரப்பகிர்வு கீழ்காணும் எந்த இரண்டு தளங்களில் வழங்கப்பட்டுள்ளது?

I. அதிகார பகிர்வின் எல்லை

II. அதிகாரங்கள் பகிர்வு

III. அதிகாரங்களின் விதிவிலக்கு

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – மத்திய மாநில உறவுகளில் சட்டமன்ற அதிகாரப் பகிர்வு இரண்டு தளங்களில் வழங்கப்பட்டுள்ளது. அவை அதிகாரப் பகிர்வின் எல்லை மற்றும் அதிகாரங்களின் பகிர்வு என்பன ஆகும்.)

42) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – மத்திய அரசு இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் எந்த பகுதியிலும் வசிக்கும் இந்திய குடிமகன்கள் மற்றும் அவர்கள் சொத்துக்கள் மீது அதிகாரம் செலுத்துகின்றது.

கூற்று 2 – மாநில அரசாங்கங்கள் அந்தந்த மாநில எல்லைக்குள் மட்டுமே அதிகாரம் செலுத்துகின்றன.

கூற்று 3 – மத்திய மாநில அரசாங்கங்களுக்கு இடையே அரசமைப்பு அதிகாரத்தை 2 பட்டியல் மூலம் பகிர்ந்து அளிக்கிறது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் தேசத்தின் எல்லை முழுவதும் காணப்படுகின்றது. மாநில அரசாங்கங்களின் அதிகாரம் மாநில எல்லைவரை மட்டுமே காணப்படுகின்றது. மேலும் மத்திய அரசு எல்லைகளைத் தாண்டிய அதிகாரத்தையும் பெற்றிருக்கின்றது. அதாவது மத்திய அரசு இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் எந்த பகுதியிலும் வசிக்கும் இந்திய குடிமகன்கள் மற்றும் அவர்கள் சொத்துக்கள் மீது அதிகாரம் செலுத்துகின்றன.ஆனால் மாநில அரசாங்கங்கள் அந்தந்த மாநில எல்லைக்குள் மட்டுமே அதிகாரம் செலுத்துகின்றன. மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அரசமைப்பு அதிகாரத்தை மூன்று பட்டியல்கள் மூலம் பகிர்ந்து அளிக்கிறது.)

43) கீழ்க்கண்டவற்றில் எது ஒன்றிய பட்டியலில் அடங்காதவை?

A) பாதுகாப்பு துறை

B) பொது சுகாதார துறை

C) வங்கித்துறை

D) வெளியுறவு துறை

(குறிப்பு – ஒன்றிய பட்டியலில், ஒன்றிய அரசு முழு அதிகாரத்தை பெற்றிருக்கும். பாதுகாப்பு துறை, வங்கித் துறை, நாணயம், வெளியுறவுத் துறை உள்ளிட்ட 100 அதிகாரங்கள் ஒன்றிய பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பொது சுகாதாரம் என்பது மாநிலப்பட்டியலில் அடங்கியுள்ளது)

44) மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை கீழ்க்கண்டவற்றுள் எது?

A) 100 அதிகாரங்கள்

B) 59 அதிகாரங்கள்

C) 50 அதிகாரங்கள்

D) 70 அதிகாரங்கள்

(குறிப்பு – மாநிலப்பட்டியலில் உள்ள துறைகளில் மாநில அரசாங்கங்கள் முழு அதிகாரத்தை பெற்றிருக்கும். இங்கு 59 அதிகாரங்கள் உள்ளன. சட்டம் – ஒழுங்கு, பொது சுகாதாரம், சுயாட்சி அமைப்புகள், விவசாயம், வனங்கள் போன்றவை மாநில பட்டியலில் இடம்பெற்றுள்ளன)

45) பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை என்ன?

A) 100 அதிகாரங்கள்

B) 59 அதிகாரங்கள்

C) 52 அதிகாரங்கள்

D) 70 அதிகாரங்கள்

(குறிப்பு – பொதுப் பட்டியலில் 52 அதிகாரங்கள் உள்ளன. கல்வி, திருமணம், குடிமை சட்டம் போன்றவைகள் இங்கு இடம்பெற்றுள்ளன. மத்திய மாநில அரசாங்கங்கள் இரண்டுமே இப்பட்டியலில் அதிகாரம் செலுத்துவதால் இதற்கு பொதுப்பட்டியல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உள்ள அதிகாரத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டால் மத்திய அரசாங்கத்தின் சட்டமே செல்லுபடியாகும்)

46) கீழ்காணும் எந்த உறுப்பின் படி ஒரு மாநிலத்திற்கான சட்டத்தை நாடாளுமன்றம் இயற்ற முடியும்?

A) உறுப்பு – 350

B) உறுப்பு – 356

C) உறுப்பு – 360

D) இவை எதுவும் இல்லை

(குறிப்பு – குடியரசுத் தலைவர் தேசிய அவசரகால சட்டத்தை பிறப்பித்தால் நாடாளுமன்றம் மாநில அதிகாரங்கள் மீது சட்டமியற்றும் அதிகாரத்தை பெறும். ஓர் அந்நிய ஆக்கிரமிப்பு, ஆயுதமேந்திய புரட்சி போன்ற காரணங்கள் அடிப்படையில் குடியரசுத் தலைவர் தேசிய அவசர சட்டத்தை பிரகடனம் செய்வார். அரசமைப்பின் 356 உறுப்பின் படி அவசர காலத்தை ஒரு மாநிலத்தில் பிறப்பித்தால், குடியரசு தலைவர் அந்த மாநிலத்திற்கான சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றலாம் என அதிகாரம் வழங்குவார்.)

47) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – சர்வதேச ஒப்பந்தங்களை அமல்படுத்துவதற்கான நாடாளுமன்றம் மாநில பட்டியலில் உள்ள அதிகாரத்தில் சட்டங்களை இயற்ற முடியும்.

கூற்று 2 – இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மாநிலங்கள் தங்கள் நன்மை கருதி ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தில் மத்திய அரசு தங்களுக்கான பொதுச் சட்டத்தை நிறைவேற்றி தருக எனக் கூறினால் நாடாளுமன்றம் அந்த சட்டத்தை நிறைவேற்றி தரும்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – மாநிலப் பட்டியல் மத்திய பட்டியல் மற்றும் பொதுப் பட்டியல் போன்ற அதிகாரப்பகிர்வு பொதுவாக இந்தியாவில் பின்பற்றப்படும் ஆனால் சில சிறப்பு சமயங்களில் மேற்கண்ட அதிகாரப்பகிர்வு நிறுத்தி வைக்கப்படும்.இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மாநிலங்கள் தங்கள் நன்மை கருதி ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தில் மத்திய அரசு தங்களுக்கான பொதுச் சட்டத்தை நிறைவேற்றி தருக எனக் கூறினால் நாடாளுமன்றம் அந்த சட்டத்தை நிறைவேற்றி தரும்.)

48) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. நமது கூட்டாட்சி முறையில் மத்திய மாநில அரசாங்கங்கள் இடையே பணி ஒப்படைப்புமுறை என்பது இல்லை.

கூற்று 2 – மத்திய அரசாங்கம் மாநில ஆளுநரின் இசையுடன் தனது நிர்வாக பணிகளை நிறைவேற்றுமாறு மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம்.

கூற்று 3 – மாநில அரசாங்கம் குடியரசு தலைவரின் ஆதரவுடன் தனது நிர்வாக பணிகளை மத்திய அரசிடம் ஒப்படைக்கலாம்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – நமது கூட்டாட்சி முறையில் மத்திய மாநில அரசாங்கங்கள் இடையே பணி ஒப்படைப்புமுறை காணப்படுகின்றது.மத்திய அரசாங்கம் மாநில ஆளுநரின் இசையுடன் தனது நிர்வாக பணிகளை நிறைவேற்றுமாறு மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம்.மாநில அரசாங்கம் குடியரசு தலைவரின் ஆதரவுடன் தனது நிர்வாக பணிகளை மத்திய அரசிடம் ஒப்படைக்கலாம். மத்திய அரசு மாநில ஆளுநரின் இசை பை இல்லாமல் நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் தனது நிர்வாக கடமைகளை நிறைவேற்றுமாறு மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம்.)

49) இந்தியாவின் கூட்டாட்சி முறையில் கீழ்க்காணும் எந்த இரண்டு வருமானங்கள் மத்திய மாநில அரசாங்கங்களுக்கு இடையே நிதிப் பகிர்வில் காணப்படுகின்றன?

I. ஏற்றுமதி-இறக்குமதி வருமான பகிர்வு

II. வரி வருமான பகிர்வு

III. இதர வருமான பகிர்வு

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – கூட்டாட்சி முறையின் வெற்றிக்கு நிதி அதிகாரப் பகிர்வு மிகவும் முக்கியமானதாகும். இந்திய அரசமைப்பு மத்திய மாநில அரசாங்கங்கள் இடையே நிதி அதிகாரப் பகிர்வை விரிவாக வழங்குகின்றது. இப்பகிர்வானது இந்திய அரசாங்கச் சட்டம் 1935யை பெரிய அளவில் பிரதிபலிக்கின்றது. இரண்டு வகையான வருமானங்கள் நிதிப் பகிர்வில் காணப்படுகின்றன. அவை வரி வருமான பகிர்வு மற்றும் இதர பிரிவு என்பதாகும்)

50) வரி வருமான பகிர்வு குறித்த கீழ்காணும் கூற்றுகளில் எது தவறானது?

A) சுங்கவரி போன்றவைகள் முற்றிலும் மத்திய அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

B) மத்திய மாநில நிதி பகிர்வில் வரி வருமான பகிர்வு ஐந்து வகைகளில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

C) விற்பனை வரி போன்ற வரிகள் முற்றிலும் மாநில அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

D) செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்கள் மீதான வரியை மத்திய அரசாங்கம் எடுத்துக்கொள்கிறது.

(குறிப்பு – வருமானவரி பகிர்வில், சுங்கவரி போன்றவைகள் முற்றிலும் மத்திய அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. விற்பனை வரி போன்ற வரிகள் முற்றிலும் மாநில அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சில வரிகளை மத்திய அரசாங்கம் விதித்து வசூலிக்கிறது. ஆனால் அந்த வருமானம் மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்கள் மீதான வரி.)

51) கீழ்க்காணும் எந்த துறை மாநில அரசாங்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் அல்ல?

A) மின்சாரம்

B) நீர்ப்பாசனம்

C) அஞ்சல் துறை

D) தரைவழிப் போக்குவரத்து

(குறிப்பு – தொழில் நிதி நிறுவனம், ரயில்வேதுறை, ஒளிபரப்பு, அஞ்சல்துறை போன்றவை மத்திய அரசாங்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகும். மின்சாரம், நீர் பாசனம், வனங்கள், தரைவழிப் போக்குவரத்து போன்ற துறைகளில் மாநில அரசாங்கம் வணிக தொழில் நிறுவனங்கள் மூலமாக வருமானத்தை ஈட்டிக் கொள்ளலாம்.)

52) ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒருமுறை ஒரு நிதி குழுவை அமைப்பவர் யார்?

A) பிரதமர்

B) குடியரசு தலைவர்

C) மத்திய நிதி அமைச்சர்

D) மாநில நிதி அமைச்சர்

(குறிப்பு – ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் குடியரசு தலைவர் ஒரு நிதி குழுவை அமைப்பார். நிதிக்குழு ஒரு தலைவரையும், நான்கு உறுப்பினர்களையும் பெற்றிருக்கும். நிதிக்குழுவின் தலைவர் பொது நடவடிக்கைகளில் (விவரங்கள்) அனுபவம் பெற்றவராக இருப்பார்.)

53) நிதி குழுவைப் பற்றி இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பு விவரிக்கிறது?

A) உறுப்பு – 270

B) உறுப்பு – 280

C) உறுப்பு – 290

D) உறுப்பு – 300

(குறிப்பு – இந்திய அரசமைப்பின் 280 உறுப்பு நிதிக்குழுவின் அமைப்பை பற்றி விவரிக்கின்றது. ஒரு நிதிக்குழு ஒரு தலைவரையும் நான்கு உறுப்பினர்களையும் பெற்றிருக்கும். நிதிக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் நிதி நிர்வாகம், பொருளாதாரம், பொது கணக்குகள் மற்றும் அரசு நிதி துறை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.)

54) இதுவரை எத்தனை நிதி குழுக்கள் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளன?

A) 12 நிதிகுழுக்கள்

B) 13 நிதிகுழுக்கள்

C) 14 நிதிகுழுக்கள்

D) 15 நிதிகுழுக்கள்

(குறிப்பு – ஒரு நிதிக்குழு ஒரு தலைவரையும் நான்கு உறுப்பினர்களையும் பெற்றிருக்கும். நிதிக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் நிதி நிர்வாகம், பொருளாதாரம், பொது கணக்குகள் மற்றும் அரசு நிதி துறை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். நிதிக்குழுவின் நான்காவது உறுப்பினர் உயர்நீதிமன்ற நீதிபதியாக தகுதி பெற்றவராவார். இதுவரை 14 நிதி குழுக்கள் இந்தியாவில் குடியரசுத் தலைவரால் அமைக்கப்பட்டுள்ளன)

55) நிதி குழு கீழ்க்காணும் எந்த பரிந்துரையை அரசுக்கு வழங்காது?

A) வருமானத்தை மத்திய மாநில அரசுகள் இடையே பகிர்தல் தொடர்பாக

B) உதவி மானியம் வழங்கப்படும் வழிமுறைகள் தொடர்பாக

C) குடியரசு தலைவரால் நிதி சம்பந்தப்பட்ட விஷயத்தில் கோரப்படும் பரிந்துரைகள் தொடர்பாக

D) பாதுகாப்பு துறைக்கு செய்யும் செலவுகள் தொடர்பாக

(குறிப்பு – நிதிக்குழு அரசிற்கு பரிந்துரைகளை கீழ்கண்டவாறு வழங்கும். வருமானத்தை மத்திய மாநில அரசுகளுக்கிடையே பகிர்தல் உதவி மானியம் வழங்கப்படும் வழிமுறைகள், பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளின் நிதி ஆதாரங்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்தியாவின் தொகுப்பு நிதி அதிகரிப்பதற்கான பரிந்துரைகள், குடியரசு தலைவரால் நிதி சம்பந்தப்பட்ட விஷயத்தில் கோரப்படும் பரிந்துரைகள்)

56) இந்திய கூட்டாட்சியை கூட்டுறவு கூட்டாட்சி என வர்ணித்த கிரான்வில் ஆஸ்டின் கீழ்காணும் எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார்?

A) கனடா

B) பிரேசில்

C) பிரான்ஸ்

D) அமெரிக்கா

(குறிப்பு – அமெரிக்காவின் புகழ்பெற்ற அரசமைப்பு நிபுணரான கிரான்வில் ஆஸ்டின் இந்திய கூட்டாட்சியை கூட்டுறவு கூட்டாட்சி என வர்ணித்தார் மத்திய மாநில அரசாங்கங்கள் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு உருவாக்கும் நோக்கத்தில் இந்திய கூட்டாட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது)

57) இந்தியாவில் கூட்டுறவு கூட்டாட்சியின் விழுதுகளாக வகைப்படுத்துவனவற்றில் அல்லாதது எது?

A) அரசமைப்பு நிறுவனங்கள்

B) நீதி அமைப்புகள்

C) சட்ட அமைப்புகள்

D) அரசமைப்புகள்

(குறிப்பு – இந்திய அரசியலில் பல்வேறு பகுதிகள் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் கூட்டுறவு கூட்டாட்சியின் விழுதுகளாக உள்ளன. அவைகளை மூன்று வகைகளாக வகைப்படுத்தலாம்.அவை அரசமைப்பு நிறுவனங்கள், சட்ட அமைப்புகள் மற்றும் அரசமைப்புகள் என்பன ஆகும்)

58) குடியரசு தலைவர் மாநிலங்களுக்கு இடையேயான குழுவை உருவாக்கலாம் என கூறும் அரசமைப்பு உறுப்பு எது?

A) உறுப்பு – 260

B) உறுப்பு – 261

C) உறுப்பு – 262

D) உறுப்பு – 263

(குறிப்பு – இந்திய அரசமைப்பில் 263 ஆவது உறுப்பு குடியரசு தலைவர் பொதுநலனுக்காக மாநிலங்களுக்கு இடையே ஆன குழுவை உருவாக்கலாம் என்று கூறுகின்றது. மூன்று பணிகளை இக்குழு பெற்றிருக்கின்றது.மாநிலங்களுக்கு இடையேயான சிக்கல்களை ஆராய்ந்து ஆலோசனை வழங்குவது, மத்திய மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான பொதுவான விஷயங்களை விவாதிப்பது, ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு பரிந்துரைகளை வழங்குதல் போன்றவைகள் ஆகும்)

59) கீழ்க்காணும் எந்த குழு மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு அதிகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட குழு ஆகும்?

A) மத்திய சுகாதாரக்குழு

B) போக்குவரத்து வளர்ச்சி மன்றம்

C) தல சுயாட்சி மத்தியகுழு

D) இவை அனைத்தும்.

(குறிப்பு – மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு பல குழுக்கள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய சுகாதாரம், போக்குவரத்து வளர்ச்சி மன்றம், தல சுயாட்சி மத்திய குழு போன்றவைகள் அவற்றின் எடுத்துக்காட்டுகள் ஆகும்.)

60) எந்த குழுவின் பரிந்துரையின்படி 1990-களில் கூட்டாட்சி முறையில் உள்ள அரசாங்கங்களிடையே பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக மாநிலங்களுக்கு இடையேயான குழு தோற்றுவிக்கப்பட்டது?

A) ராஜமன்னார் குழு

B) சர்க்காரியா குழு

C) வெங்கட செல்லையா குழு

D) புன்ச்சி குழு

(குறிப்பு – சர்க்காரியா குழுவின் பரிந்துரைப்படி 1990களில் கூட்டாட்சி முறையில் உள்ள அரசாங்கங்கள் இடையே எல்லாத் துறைகளிலும் பரஸ்பர ஒத்துழைப்பு அதிகரிப்பதற்காக மாநிலங்களுக்கு இடையேயான குழு தோற்றுவிக்கப்பட்டது. பிரதமர் இக்குழுவின் தலைவராக இருக்கின்றார்.)

61) மத்திய மாநில அரசாங்கங்கள் இடையே எல்லாத்துறைகளிலும் பரஸ்பர ஒத்துழைப்பு அதிகரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் ஒன்றிய அமைச்சரவைக் குழுவின் எண்ணிக்கை எத்தனை?

A) ஐந்து

B) ஆறு

C) ஏழு

D) எட்டு

(குறிப்பு – சர்க்காரியா குழுவின் பரிந்துரைப்படி 1990களில் கூட்டாட்சி முறையில் உள்ள அரசாங்கங்கள் இடையே எல்லாத் துறைகளிலும் பரஸ்பர ஒத்துழைப்பு அதிகரிப்பதற்காக மாநிலங்களுக்கு இடையேயான குழு தோற்றுவிக்கப்பட்டது. பிரதமர் இக்குழுவின் தலைவராக இருக்கின்றார். எல்லா மாநிலங்களின் முதல்வர்களும், ஒன்றிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளின் முதல்வர்களும், ஆறு ஒன்றிய அமைச்சரவை குழுக்களும், ஒன்றிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் நிர்வாகத் தலைவர்களும், குடியரசுத் தலைவர் ஆட்சியிலிருக்கும் மாநிலங்களின் ஆளுநர்களும் இக்குழுவின் உறுப்பினர்களாக இருக்கின்றனர்)

62) மாநிலங்கள் இடையில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் ஒரு நிலைக் குழு உருவாக்கப்பட்டது. இதில் எத்தனை மாநில முதல்வர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்?

A) எட்டு

B) ஒன்பது

C) பத்து

D) பதினைந்து

(குறிப்பு – மாநிலங்கள் இடையில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் ஒரு நிலைக் குழு உருவாக்கப்பட்டது. இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் தவிர 5 மத்திய அமைச்சர்கள் குழு மற்றும் 9 மாநில முதல்வர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.)

63) மண்டல குழுக்கள் எந்த மாநில சீரமைப்பு குழு சட்டத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்டன?

A) மாநில மறுசீரமைப்பு குழு 1956

B) மாநில மறுசீரமைப்பு குழு 1960

C) மாநில மறுசீரமைப்பு குழு 1963

D) மாநில மறுசீரமைப்பு குழு 1966

(குறிப்பு – நாடாளுமன்றத்தின் சட்டங்களால் உருவாக்கப்பட்ட பல அமைப்புகளும் கூட்டுறவு கூட்டாட்சியை வெளிப்படுத்துகின்றன. மாநிலங்கள் மறுசீரமைப்பு குழு 1956 சட்டத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்டன. மொழிவாரியாக மாநிலங்கள் உருவான போது மண்டல குழுக்களும் உருவாகின.)

64) மண்டல குழுக்களின் நோக்கம் கூட்டுறவு கூட்டாட்சி வழக்கத்தை வளர்ப்பது என்று கூறியவர் யார்?

A) ஜவஹர்லால் நேரு

B) இந்திரா காந்தி

C) டாக்டர் அம்பேத்கர்

D) சர்தார் வல்லபாய் பட்டேல்

(குறிப்பு – சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மண்டல குழுக்களின் நோக்கம் கூட்டுறவு கூட்டாட்சி வழக்கத்தை வளர்ப்பது என்றார். மொழிவாரியாக மாநிலங்கள் உருவான போது மண்டல குழுக்களும் உருவாகின.)

65) தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட மண்டல குழுக்களின் எண்ணிக்கை எத்தனை?

A) நான்கு

B) ஐந்து

C) ஆறு

D) ஏழு

(குறிப்பு – ஆரம்பத்தில் ஐந்து மண்டல குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டன. அவை வடக்கு மண்டல குழு, தெற்கு மண்டல குழு, கிழக்கு மண்டல குழு, மேற்கு மண்டல குழு மற்றும் மத்திய மண்டல குழு என்பன ஆகும்.)

66) வட கிழக்கு மண்டல குழு கீழ்க்காணும் எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது?

A) 1970 இல்

B) 1971 இல்

C) 1972 இல்

D) 1973 இல்

(குறிப்பு – 1921 ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணங்களுக்கு ஆக சிறப்பு மண்டல குழு உருவாக்கப்பட்டது தற்போது ஆறு மண்டல குழுக்கள் இயங்குகின்றன.அவை வடக்கு மண்டல குழு, தெற்கு மண்டல குழு, கிழக்கு மண்டல குழு, மேற்கு மண்டல குழு மத்திய மண்டல குழு மற்றும் வட கிழக்கு மண்டல குழு என்பன ஆகும்.)

67) எல்லா மண்டல குழுக்களின் பொது தலைவராக இருப்பவர் கீழ்கண்டவர்களில் யார்?

A) பிரதமர்

B) குடியரசு தலைவர்

C) மத்திய உள்துறை அமைச்சர்

D) மத்திய நிதி அமைச்சர்

(குறிப்பு – தற்போது ஆறு மண்டல குழுக்கள் இயங்குகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் எல்லா மண்டல குழுக்களின் பொதுத் தலைவராக உள்ளார். மேலும் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு மாநிலத்தின் முதல்வர் மற்றும் இரண்டு அமைச்சர்களும், ஒன்றிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் நிர்வாக தலைவர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள்)

68) மண்டல குழுவின் பணி ஆவன கீழ்க்கண்டவற்றுள் எது?

A) பொருளாதார சமூக திட்டமிடல்

B) எல்லை பிரச்சினைகள்

C) போக்குவரத்து துறை பிரச்சினைகள்

D) இவை அனைத்தும்.

(குறிப்பு – மண்டலங்களில் உள்ள மாநிலங்களுக்கு இடையே எவ்வாறு ஒத்துழைப்பையும் முன்னேற்றத்தையும் உருவாக்கி வளர்ப்பது என்று மண்டல குழு பரிந்துரை வழங்கும். பொருளாதார, சமூக திட்டமிடல், எல்லைப் பிரச்சனைகள், போக்குவரத்து போன்ற துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு வழங்க மண்டலகுழுக்கள் செயல்படும்)

69) நதிகள் ஆணைய சட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

A) 1952 இல்

B) 1956 இல்

C) 1958 இல்

D) 1960 இல்

(குறிப்பு – நதி ஆணையங்கள் சட்டம் 1956 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதிகளை மேலாண்மை செய்வதற்கு, மாநிலங்களுக்கு பரிந்துரைகள் வழங்குவதற்காக ஆணையத்தை உருவாக்கியது)

70) நதிநீர் சிக்கல் சட்டம் 1956 அரசமைப்பின் எந்த உறுப்பின்படி உருவாக்கப்பட்டது

A) உறுப்பு – 260

B) உறுப்பு – 261

C) உறுப்பு – 262

D) உறுப்பு – 263

(குறிப்பு – மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் சிக்கல் சட்டம் 1956 அரசமைப்பின் உறுப்பு 262 இன்படி உருவாக்கப்பட்டது. சம வெளி மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் குறைகளை ஒழுங்குபடுத்துவது இந்த சட்டத்தின் நோக்கம் ஆகும். இவ்வகையான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தீர்ப்பாயங்களை இந்த சட்டம் உருவாக்குகின்றது)

71) நிதி ஆயோக் உருவாக்கப்பட்ட ஆண்டு எது?

A) 2014

B) 2015

C) 2016

D) 2017

(குறிப்பு – மத்திய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பைத் தோற்றுவித்தது. இந்தியாவின் மாற்றத்திற்கான தேசிய குழு என்பது இதன் பொருளாகும். திட்டக்குழு நீக்கப்பட்ட பிறகு இப்புதிய குழு தோற்றுவிக்கப்பட்டது. பிரதமர் இக்குழுவின் தலைவராக இருப்பார்.)

72) நிதி ஆயோக் அமைப்பின் நிரந்தர உறுப்பினர்கள் யார்?

I. மாநில முதல்வர்கள்

II. ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் முதல்வர்கள்

III. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணை ஆளுநர்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – மாநிலங்களின் முதல்வர்கள், ஒன்றிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளின் முதல்வர்கள்(புதுச்சேரி, புதுடில்லி), அந்தமான் நிகோபார் தீவுகளின் துணை ஆளுநர் ஆகியோர் நிதி ஆயோக் குழுவின் நிரந்தர உறுப்பினர்களாக செயல்படுவார்கள். பிரதமர் இக்குழுவின் தலைவராக இருப்பார்)

73) நிதி ஆயோக் அமைப்பின் முக்கிய நோக்கம் கீழ்க்கண்டவற்றுள் எது?

A) நதிநீர் பங்கீடு

B) நிதித்துறை பங்கீடு

C) கூட்டுறவு கூட்டாட்சி வளர்த்தல்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – மாநிலங்களுக்கு இடையேயான அமைப்பு ரீதியாக தொடர்ச்சியாக கூட்டுறவு கூட்டாட்சி வளர்ப்பது இக்குழுவின் நோக்கமாகும். உறுதியான மாநிலங்கள் உறுதியான தேசத்தை உருவாக்கும் என்பது இந்த குழுவின் எண்ணமாகும். வருமான ஆதாரம் இல்லாததாலும் அரசமைப்பு வசதி இல்லாததாலும் மாநிலங்கள் மத்திய அரசை சார்ந்தே இயங்குகின்றன. இயற்கை பேரழிவுகளை சமாளிப்பதற்கு கூட மத்திய அரசை சார்ந்து இருக்கின்றன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பது நிதி ஆயோக்கின் நோக்கமாகும்)

74) காவிரி நதிநீர் பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ள மாநிலங்களுள் அல்லாதவை எது?

A) தமிழ்நாடு

B) கேரளா

C) ஆந்திர பிரதேசம்

D) புதுச்சேரி

(குறிப்பு – இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி முறையை மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல்கள் பெரிய அளவில் பாதிக்கின்றன. பல்வேறு நதிநீர் சிக்கல்கள் நமது நாட்டில் காணப்படுகின்றன. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகியவை காவிரி பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ளன)

75) சட்லஜ் ஆறு பிரச்சினையில் சம்பந்த பட்டுள்ள மாநிலங்கள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. பஞ்சாப்

II. ஹரியானா

III. குஜராத்

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – ஆண்டாண்டு காலமாக நதிநீர் பிரச்சனையில் ஒரிசா, ஆந்திரப்பிரதேசம் சம்பந்தப்பட்டுள்ளன. சட்லெஜ் ஆற்று பிரச்சனையில் பஞ்சாப் மற்றும் அரியானா சம்பந்தப்பட்டுள்ளன. கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகம் ஆகியவை மகாதயி ஆற்று பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ளன.)

76) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – அரசமைப்பின் 262 வது உறுப்பு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகள் தீர்ப்பதற்கு வழிமுறையை வழங்குகின்றது.

கூற்று 2 – நதிநீர் பிரச்சினைகள் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் இருந்து நாடாளுமன்றம் விலக்கி வைக்கலாம்.

கூற்று 3 – நாடாளுமன்றம் நதிநீர் பிரச்சினைகள் சம்பந்தமாக ஒரு சட்டத்தை இயற்ற முடியும்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – அரசமைப்பின் 262 வது உறுப்பு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகள் தீர்ப்பதற்கு வழிமுறையை வழங்குகின்றது. நதிநீர் பிரச்சினைகள் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் இருந்து நாடாளுமன்றம் விலக்கி வைக்கலாம்.நாடாளுமன்றம் நதிநீர் பிரச்சினைகள் சம்பந்தமாக ஒரு சட்டத்தை இயற்ற முடியும். நதிநீர் பிரச்சனை பல லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றது)

77) மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் சிக்கல்கள் சட்டம் 1956 யாரால் உருவாக்கப்பட்டது?

A) பிரதமரால்

B) குடியரசுத் தலைவரால்

C) பாராளுமன்றத்தால்

D) உச்ச நீதிமன்றத்தால்

(குறிப்பு – மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் சிக்கல்கள் சட்டம் 1956 நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது. நதி நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய அரசாங்கம் தீர்ப்பாயங்கள் அமைக்கலாம் என்று இந்தச் சட்டம் வழி வகுக்கின்றது. நதிநீர்ப் பிரச்சினைகள் பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது)

78) நதிநீர் பிரச்சனைக்கான தீர்ப்பாயத்தின் தலைவரை நியமிப்பவர் யார்?

A) குடியரசு தலைவர்

B) பிரதமர்

C) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

D) ஆளுநர்

(குறிப்பு – பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மத்திய அரசாங்கத்தை நாடலாம். மத்திய அரசாங்கம் குறிப்பிட்ட நதி நீர்ப் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒரு தீர்ப்பாயத்தை அமைக்கும். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அந்த தீர்ப்பாயத்திற்க்கான தலைவரை நியமிப்பார். ஆரம்பத்தில் தீர்ப்பாயம் அல்லது நடுவர் மன்றம் ஒரே ஒரு உறுப்பினரை தான் கொண்டிருந்தன)

79) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – நடுவர் மன்றங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களை பெறுவதற்கு சட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.

கூற்று 2 – நடுவர் மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தேர்வு செய்வார்.

கூற்று 3 – நதிநீர் ஆணையம் சட்டம் 1956 கீழ்வரும் நதிகளின் மீது நடுவர் நீதிமன்றங்களை அமைக்க முடியாது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – நடுவர் மன்றங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களை பெறுவதற்கு சட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.நடுவர் மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தேர்வு செய்வார். நடுவர் மன்றத்தின் தீர்ப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சமமானதாகும். நடுவர் மன்றம் விசாரிக்கும் நதிநீர் பிரச்சனையில் வேறு எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது.நதிநீர் ஆணையம் சட்டம் 1956 கீழ்வரும் நதிகளின் மீது நடுவர் நீதிமன்றங்களை அமைக்க முடியாது.)

80) காவிரி நீரை பயன்படுத்தும் ஒப்பந்தம் மெட்ராஸ் மாகாணம் மற்றும் மைசூர் அரசுக்கு இடையே எந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது?

A) 1920 இல்

B) 1924 இல்

C) 1928 இல்

D) 1932 இல்

(குறிப்பு – காவிரி நதிநீர் சிக்கல் தமிழ்நாடு கர்நாடகா கேரளா புதுச்சேரி ஆளுகைக்கு உட்பட்ட பகுதி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனை ஆகும்.காவிரி நீரை பயன்படுத்தும் ஒப்பந்தம் மெட்ராஸ் மாகாணம் மற்றும் மைசூர் அரசுக்கு இடையே 1924 ஆம் ஆண்டு கையெழுத்தானது. )

81) மெட்ராஸ் மாகாணம் மற்றும் மைசூர் அரசுக்கு இடையேயான காவிரி நதிநீர் பயன்பாட்டு ஒப்பந்தம் 1924, எத்தனை ஆண்டுகள் கழித்து காலாவதியானது?

A) 25 ஆண்டுகள்

B) 35 ஆண்டுகள்

C) 40 ஆண்டுகள்

D) 50 ஆண்டுகள்

(குறிப்பு – காவிரி நதிநீர் சிக்கல் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆளுகைக்கு உட்பட்ட பகுதி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனை ஆகும்.காவிரி நீரை பயன்படுத்தும் ஒப்பந்தம் மெட்ராஸ் மாகாணம் மற்றும் மைசூர் அரசுக்கு இடையே 1924 ஆம் ஆண்டு கையெழுத்தானது. 50 ஆண்டுகள் கழித்து 1974ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் காலாவதி ஆனது)

82) காவிரி நதிநீர் நடுவர் மன்றம் கீழ்காணும் எந்த ஆண்டு மத்திய அரசால் அமைக்கப்பட்டது?

A) 1990 இல்

B) 1991 இல்

C) 1992 இல்

D) 1993 இல்

(குறிப்பு – மெட்ராஸ் மாகாணம் மற்றும் மைசூர் அரசுக்கு இடையேயான காவிரி நதிநீர் ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டு காலாவதி ஆனது. பின்னர் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தின. ஆனால் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. எனவே நதி நீர் சிக்கல் திட்டம் 1956 இன் படி காவிரி நதி நீர் நடுவர் மன்றம் 1991ம் ஆண்டு மத்திய அரசால் அமைக்கப்பட்டது)

83) காவிரி நதிநீர் நடுவர் மன்றம் எந்த ஆண்டு தீர்ப்பை வழங்கியது?

A) 2005 இல்

B) 2007 இல்

C) 2009 இல்

D) 2011 இல்

(குறிப்பு – காவிரி நதிநீர் நடுவர் மன்றம் 2007 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதன்படி மாதந்தோறும் கர்நாடகம் பிலிகுண்டுலு என்ற எல்லை பகுதியில் தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்ட அளவு நீரை வழங்க வேண்டும். காவிரி நதியிலிருந்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு தண்ணீரை குறிப்பிட்ட அளவில் நடுவர் மன்றம் பங்கீடு செய்தது.)

84) கீழ்காணும் எந்த குழு மாநில ஆளுநர்கள் கூட்டாட்சி முறைக்கு எதிராக இருப்பதாக விமர்சித்தது?

A) சர்க்காரியா குழு

B) ராஜமன்னார் குழு

C) புன்ச்சி குழு

D) வெங்கட செல்லையா குழு

(குறிப்பு – மத்திய அரசாங்கத்தின் முகவராக ஆளுநர் மாநிலத்தில் செயல்படுவதை மாநில அரசாங்கங்கள் எதிர்க்கின்றன. ராஜமன்னார் குழு மாநில ஆளுநர்கள் கூட்டாட்சி முறைக்கு எதிராக இருப்பதாக விமர்சித்தது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்கள் காலத்தில் இருந்து, ஆளுநர்களின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வந்தது)

85) ஆரம்ப காலத்தில் கல்வி கீழ்க்காணும் எந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தது?

A) மத்திய பட்டியல்

B) மாநிலப் பட்டியல்

C) பொதுப்பட்டியல்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – ஆரம்ப காலகட்டத்தில் கல்வி இரண்டாவது பட்டியலான மாநிலப் பட்டியலில் தான் இடம்பெற்றிருந்தது. அதன் பின்னர் அது மூன்றாவது பட்டியலான பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் பொதுப்பட்டியல் என்ற மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.)

86) கீழ்க்காணும் எந்த அரசமைப்பு சட்ட திருத்தத்தின் படி கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது?

A) 40வது அரசமைப்பு சட்ட திருத்தம்

B) 41வது அரசமைப்பு சட்ட திருத்தம்

C) 42வது அரசமைப்பு சட்ட திருத்தம்

D) 43வது அரசமைப்பு சட்ட திருத்தம்

(குறிப்பு – 1976 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் 42 ஆவது அரசியல் சாசன திருத்த சட்டத்தின் மூலம் கல்வியை மூன்றாவது பட்டியலான பொதுப் பட்டியலுக்கு மாற்றியது. இதன்மூலம் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரம் மத்திய மாநில அரசாங்கங்களுக்கு பொதுவானதாக மாற்றப்பட்டது.)

87) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – பொதுப் பட்டியலில் தற்போது கல்வி இருப்பதால் மத்திய மாநில அரசாங்கங்களுக்கு இடையில் முரண்பாடுகள் தோன்றினால் மத்திய அரசின் அதிகாரமே செல்லுபடி ஆகும்.

கூற்று 2 – மாநிலங்கள் நிறைவேற்றும் சட்ட முன்வரைவுகளை ஆளுநர் குடியரசுத் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம். ஆளுநர்கள் தேக்கி வைத்தால் குடியரசுத்தலைவர் அவைகளை நிராகரிக்கலாம் அல்லது அவைகளுக்கு தனது இசைவை தெரிவித்து அவைகளை சட்டம் ஆகலாம்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – மாநிலங்கள் நிறைவேற்றும் சட்ட முன்வரைவுகளை ஆளுநர் குடியரசுத் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம். ஆளுநர்கள் தேக்கி வைத்தால் குடியரசுத்தலைவர் அவைகளை நிராகரிக்கலாம் அல்லது அவைகளுக்கு தனது இசைவை தெரிவித்து அவைகளை சட்டம் ஆகலாம். மாநிலத்தின் சாதாரண சட்ட முன்வரைவுகள் ஆளுநர்களால் தேக்கி வைக்கப்பட்டால், குடியரசு தலைவர் அந்த முன்வரைவுகளை திரும்பவும் விவாதிக்குமாறு மாநில சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.)

88) இந்திய அரசமைப்பின் பதினெட்டாவது பகுதியிலுள்ள உறுப்பு – 356 பற்றிய தவறான கூற்று எது?

A) இது அவசரகாலநிலை பற்றிக்கூறும் உறுப்பாகும்

B) இந்த உறுப்பு குடியரசு தலைவர், ஒரு மாநிலத்தில் அவசர நிலையை அமல்படுத்தலாம் என்று கூறுகிறது.

C) ஆளுநரின் அறிக்கை அடிப்படையில் மட்டுமே குடியரசு தலைவர் உறுப்பு 356 இன்படி அவசரநிலையை அறிவிக்க முடியும்.

D) உறுப்பு 356 நீக்கப்பட வேண்டும் என்று பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

(குறிப்பு – இந்திய அரசமைப்பின் பதினெட்டாவது பகுதியிலுள்ள உறுப்பு – 356 ஒரு மாநிலத்தில் அரசமைப்பு ஆட்சி முறை சீர்குலைந்து விட்டால் குடியரசுத் தலைவர் அவசர காலத்தை அமல்படுத்தலாம் என்று கூறுகின்றது.ஆளுநரின் அறிக்கையின் அடிப்படையிலோ அல்லது ஆளுநரின் அறிக்கை இல்லாமலோ குடியரசுத் தலைவர் உறுப்பு 356 ஐ அமல்படுத்தலாம். நமது நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பதற்காக இப்பிரிவை அரசமைப்பு உருவாக்கியுள்ளது.)

89) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. அரசமைப்பின் உறுப்பு 312 வழியாக அனைத்து இந்திய பணிகள் உருவாக்கப்படுகின்றன.

II. இப்பணிகளில் அதிகாரிகள் மத்திய அரசாங்கத்தினால் தேர்வு செய்யப்படுகின்றனர்.

III. மாநில அரசாங்கங்கள் அனைத்து இந்திய பணி அதிகாரிகளை இடமாற்றம் செய்யலாம். ஆனால் மத்திய அரசாங்கம் மட்டுமே அனைத்து இந்திய பணி அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்க முடியும்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – அரசமைப்பின் உறுப்பு 312 வழியாக அனைத்து இந்திய பணிகள் உருவாக்கப்படுகின்றன.இப்பணிகளில் அதிகாரிகள் மத்திய அரசாங்கத்தினால் தேர்வு செய்யப்படுகின்றனர். மாநிலங்களுக்கு மத்திய அரசினால் இந்த அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.மாநில அரசாங்கங்கள் அனைத்து இந்திய பணி அதிகாரிகளை இடமாற்றம் செய்யலாம். ஆனால் மத்திய அரசாங்கம் மட்டுமே அனைத்து இந்திய பணி அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்க முடியும்.

90) நமது நாட்டின் நிர்வாக சீர்திருத்தங்களுக்காக இதுவரை எத்தனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன?

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

(குறிப்பு – நமது நாட்டின் நிர்வாக சீர்திருத்தங்களுக்கு இதுவரையில் 2 நிர்வாக சீர்திருத்தங்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலாவது நிர்வாக சீர்திருத்த குழு 1966இலும், இரண்டாவது நிர்வாக சீர்திருத்த குழு 2005 இலும் அமைக்கப்பட்டது)

91) முதல் நிர்வாக சீர்திருத்த குழுவின் தலைவராக இருந்தவர் யார்?

A) மொரார்ஜி தேசாய்

B) கரன் சிங்

C) வெங்கடப்பா

D) வீரப்ப மொய்லி

(குறிப்பு – முதல் நிர்வாக சீர்திருத்த குழு 1966 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மொரார்ஜி தேசாய் தலைமையிலும், பின்னர் அனுமந்தையா தலைமையிலும் உருவாக்கப்பட்டது. இக்குழு 20 அறிக்கைகளை வழங்கியது. அவைகளில் ஒரு அறிக்கை மத்திய மாநில உறவுகளை பற்றி பரிந்துரைகளை வழங்கியது)

92) கீழ்கண்டவர்களில் நிர்வாக சீர்திருத்த குழுவின் தலைவராக அல்லாதவர் யார்?

A) மொரார்ஜி தேசாய்

B) அனுமந்தையா

C) வீரப்ப மொய்லி

D) கரன் சிங்

(குறிப்பு – முதலாவது நிர்வாக சீர்திருத்த குழுவின் தலைவராக முதலில் மொரார்ஜி தேசாயும் பின்னர் கே. அனுமந்தையா என்பவரும் இருந்தனர். இரண்டாவது நிர்வாக சீர்திருத்த குழுவின் தலைவராக முதலில் வீரப்பமொய்லியும், பின்னர் வி.ராமச்சந்திரன் என்பவரும் தலைவர்களாக இருந்தனர்.)

93) கீழ்க்கண்ட வகைகளில் எது மத்திய மாநில உறவுகளுக்கான குழு அல்ல?

A) நிர்வாக சீர்திருத்த குழு

B) ராஜமன்னார் குழு

C) பசல் அலி குழு

D) வெங்கட செல்லையா குழு

(குறிப்பு – நிர்வாக சீர்திருத்தங்கள் குழு, ராஜமன்னார் குழு, சர்க்காரியா குழு, வெங்கட செல்லையா குழு மற்றும் புன்ச்சி குழு ஆகியவை மத்திய மாநில உறவுகளுக்காக உருவாக்கப்பட்ட குழுக்கள் ஆகும். பசல் அலி குழு என்பது மொழிவாரி மாநில சீரமைப்புக்கான குழு ஆகும்)

94) ராஜமன்னார் குழுவின் உறுப்பினர் அல்லாதவர் யார்?

A) பி.வி.ராஜமன்னார்

B) ஏ.லட்சுமண சுவாமி

C) பி.சந்திர ரெட்டி

D) கே. அனுமந்தையா

(குறிப்பு – தமிழ்நாடு அரசாங்கம் நமது அரசமைப்பின் மத்திய மாநில உறவுகள் ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்குவதற்கு ராஜமன்னார் குழுவை அமைத்தது. ராஜமன்னார் தலைமையிலான குழுவில், சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் ஏ.லட்சுமண சுவாமி, ஆந்திர உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முனைவர் பி.சந்திர ரெட்டி ஆகியோர் இக்குழுவில் இருந்தனர்.)

95) ராஜமன்னார் குழு எந்த ஆண்டு தங்களது பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்கியது?

A) 1970ஆம் ஆண்டு

B) 1971ஆம் ஆண்டு

C) 1972ஆம் ஆண்டு

D) 1973ஆம் ஆண்டு

(குறிப்பு – தமிழ்நாடு அரசாங்கம் நமது அரசமைப்பின் மத்திய மாநில உறவுகள் ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்குவதற்கு ராஜமன்னார் குழுவை அமைத்தது. ராஜமன்னார் தலைமையிலான குழுவில், சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் ஏ.லட்சுமண சுவாமி, ஆந்திர உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முனைவர் பி.சந்திர ரெட்டி ஆகியோர் இக்குழுவில் இருந்தனர். தங்களது பரிந்துரைகளை குழு அரசாங்கத்திற்கு 1971ம் ஆண்டு வழங்கியது மாநில சுயாட்சி வரலாற்றில் மிகவும் முக்கிய மைல்கல்லாக இக்குழுவின் அறிக்கை உள்ளது.)

96) ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளுள் அல்லாதது கீழ்கண்டவற்றுள் எது?

A) அரசமைப்பின் 263 ஆவது உறுப்பு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்.

B) அரசமைப்பின் உறுப்புகள் 256, 257, 339(2) ஆகியவைகளை நீக்கவேண்டும்.

C) மூன்று பட்டியலில் இல்லாத இதர அதிகாரங்கள் மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கு மாற்றப்பட வேண்டும்.

D) வரி விதிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே இருக்க வேண்டும்.

(குறிப்பு – அரசமைப்பின் 263 ஆவது உறுப்பு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்.அரசமைப்பின் உறுப்புகள் 256, 257, 339(2) ஆகியவைகளை நீக்கவேண்டும். மூன்று பட்டியலில் இல்லாத இதர அதிகாரங்கள் மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கு மாற்றப்பட வேண்டும். வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு மாற்றப்படவேண்டும் அரசமைப்பின் பதினெட்டாவது பகுதியில் உள்ள உறுப்பு 356 மத்திய அரசால் கவனமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பனவாகும்)

97) இந்திய ஆட்சிப் பணி(IAS) உள்ளிட்ட அனைத்து இந்திய பணிகளை அரசமைப்பில் இருந்து நீக்குவதற்கு கீழ்க்காணும் எந்த குழு பரிந்துரைத்தது?

A) நிர்வாக சீர்திருத்த குழு

B) ராஜமன்னார் குழு

C) பசல் அலி குழு

D) வெங்கட செல்லையா குழு

(குறிப்பு – ராஜமன்னார் குழு அனைத்து இந்திய பணிகளில் பெரிய அளவில் மாற்றங்களை பரிந்துரைத்தது. நமது நாட்டில் இரண்டு வகையான பணிகள் மட்டுமே இருக்க வேண்டும். மத்திய பணிகள் மத்திய அரசிற்கும், மாநில பணிகள் மாநில அரசிற்கும் நிர்வாக தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டிற்கும் பொதுவான மத்திய அரசுக்கு சாதகமான, மாநில அரசுகளுக்கு எதிரான, அனைத்து இந்திய பணிகள் தேவையில்லை என்று பரிந்துரை செய்தது)

98) ராஜமன்னார் குழு கீழ்க்காணும் அரசமைப்பின் எந்த உறுப்புகளை நீக்க வேண்டும் என பரிந்துரை செய்யவில்லை?

A) உறுப்பு – 263

B) உறுப்பு – 256

C) உறுப்பு – 257

D) உறுப்பு – 339(2)

(குறிப்பு – தற்பொழுது உள்ள மத்திய-மாநில உறவுகள் மத்திய அரசுக்கு சாதகமாக உள்ளது. ஆகவே அரசமைப்பின் உறுப்புகள் 256, 257, 339(2) ஆகியவைகளை நீக்க வேண்டும். இந்த உறுப்புகள் மாநில உரிமைகளை பாதிப்பதால் அவைகளை நீக்கி மாநில உரிமைகளை வலுப்படுத்த வேண்டும் என ராஜமன்னார் குழு பரிந்துரை செய்தது.)

99) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – நிதி ஆதாரங்களை மத்திய அரசாங்கத்திடமிருந்து மாநில அரசாங்கத்திற்கு அதிக அளவில் மாற்றி தர வேண்டுமென ராஜமன்னார் குழு பரிந்துரை செய்தது.

கூற்று 2 – மாநிலங்களின் நிதி சக்தியை அதிகரிப்பதற்கு தொழில் நிறுவனங்கள் வரி, ஏற்றுமதி வரி, சுங்க வரி போன்றவற்றை மத்திய அரசாங்கத்திடமிருந்து மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் என்ன ராஜமன்னார் குழு பரிந்துரை செய்தது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – நிதி ஆற்றல்தான் மாநில உரிமைகளில் அச்சாணி என்று ராஜமன்னார் குழு கருதியது. ஆகவே அரசமைப்பின் 7 ஆவது அட்டவணையில் திருத்தங்கள் பெரிய அளவில் செய்ய வேண்டும். மத்தியபட்டியல், பொதுப்பட்டியல் ஆகியவற்றிலிருந்து மாநிலப்பட்டியலுக்கு அதிகாரங்களை மாற்ற வேண்டும் என்று ராஜமன்னார் குழு பரிந்துரை செய்தது. தேசிய ஒற்றுமை, வளர்ச்சி, மாநில உரிமைகள் மற்றும் அடையாளங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நிதிக்குழு ஒரு நிரந்தர பாகுபாடு இல்லாத அமைப்பாக மாறவேண்டும் என ராஜமன்னார் குழு பரிந்துரைத்தது)

100) ராஜமன்னார் குழுவின் பரிந்துரையின்படி, 263 வது உறுப்பின் படி உருவாக்கப்படும் மாநிலங்களுக்கிடையிலான குழு கீழ்க்காணும் எந்த அம்சங்களை பெற்றிருக்கவேண்டும்?

I. இந்த குழுவின் தலைவராக பிரதமர் பணிபுரிய வேண்டும்

II. மாநில முதல்வர்கள் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் உறுப்பினர்களாக பணியாற்ற வேண்டும்.

III. மாநிலங்களுக்கு இடையேயான குழுவிடம் அதிக அதிகாரங்கள் இருக்க வேண்டும்.

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – அரசமைப்பின் 263 ஆவது உறுப்பு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். மாநிலங்களுக்கிடையேயான குழு உருவாக்கப்படவேண்டும். இக்குழுவின் தலைவராக பிரதமர் பணிபுரிய வேண்டும். மாநில முதல்வர்கள் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் உறுப்பினர்களாக பணியாற்றவேண்டும். மாநிலங்களுக்கு இடையேயானக்குழுவிடம் அதிக அதிகாரங்கள் இருக்க வேண்டும். மத்திய அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளையும் நாடாளுமன்றத்தின் சட்டங்களையும் இக்குழுவில் ஆலோசிக்க வேண்டும். தேசத்தின் பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய இரண்டு அதிகாரங்கள் தவிர இதர எல்லா அதிகாரங்களையும் பயன்படுத்தும் முன் மத்திய அரசு மாநிலங்களுக்கு இடையேயான குழுவை ஆலோசிக்க வேண்டும், என்பன ராஜமன்னார் குழு பரிந்துரைத்தவை ஆகும்)

101) சர்க்காரியா குழு கீழ்க்காணும் எந்த ஆண்டில் அமைக்கப்பட்டது?

A) 1980 இல்

B) 1981 இல்

C) 1983 இல்

D) 1984 இல்

(குறிப்பு – மத்திய அரசாங்கம் பல கூட்டாட்சி கோரிக்கைகள் மாநிலங்களால் ஏற்பட்டதால் 1983 ஆம் ஆண்டு நீதி அரசர் ஆர்.எஸ்.சர்க்காரியா தலைமையில் ஒரு குழுவை உருவாக்கியது. இது சர்க்காரியா குழு என்று அழைக்கப்பட்டது. இது மத்திய மாநில உறவுகளுக்காக உருவாக்கப்பட்ட குழு ஆகும்)

102) சர்க்காரியா குழு எத்தனை பரிந்துரைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது?

A) 230 பரிந்துரைகள்

B) 247 பரிந்துரைகள்

C) 253 பரிந்துரைகள்

D) 266 பரிந்துரைகள்

(குறிப்பு – சர்க்காரியா குழுவில் பி. சிவராமன், முனைவர் ஆர்.எஸ்.எஸ்.சென் ஆகிய நிபுணர்களும் உறுப்பினர்களாக இருந்தனர். இந்தக் குழு 247 பரிந்துரைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கையை ஐந்து வருடங்கள் கழித்து மத்திய அரசிற்கு சமர்ப்பித்தது)

103) சர்க்காரியா குழு சமர்ப்பித்த பரிந்துரைகளுள் அல்லாதது கீழ்க்கண்டவற்றுள் எது?

A) மாநிலங்கள் இடையில் எனும் சிக்கல்களில் தலையிடும் அதிகாரம் மாநிலங்களுக்கு இடையேயான குழுவிற்கு வழங்கக்கூடாது.

B) இந்திய அரசமைப்பின் உறுப்பு 356 மிகவும் கவனமாக, மிகவும் குறைவாக பயன்படுத்தப்பட வேண்டும்

C) ஆளுநர் பதவியை ரத்து செய்ய வேண்டும்

D) மும்மொழிக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும்

(குறிப்பு – இந்திய அரசமைப்பின் உறுப்பு 356 மிகவும் கவனமாக மற்றும் மிகவும் குறைவாக பயன்படுத்த வேண்டும். கடைசி ஆயுதமாக இந்த உறுப்பு பயன்படுத்தப்பட வேண்டும். ஆளுநர் பதவியை ரத்து செய்ய வேண்டும்.மும்மொழிக் கொள்கையை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்பன சர்காரியா குழுவின் பரிந்துரைகள் ஆகும்)

104) சர்க்காரியா குழு பரிந்துரை செய்தவற்றில் கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – மாநிலங்களுக்கு இடையேயான குழு உருவாக்கப்பட வேண்டும்.அரசமைப்பின் உறுப்பு 263(பி) மற்றும் 263(சி) பணிகளை செய்யும் அதிகாரம் குழுவிடம் வழங்கப்பட வேண்டும்.

கூற்று 2 – மாநிலங்களின் பொதுவான நலன்கருதி மாநிலங்களுக்கு இடையேயான குழு பரிந்துரைகளை வழங்க வேண்டும்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – நிலங்களுக்கு இடையேயான குழு உருவாக்கப்பட வேண்டும்.அரசமைப்பின் உறுப்பு 263(பி) மற்றும் 263(சி) பணிகளை செய்யும் அதிகாரம் குழுவிடம் வழங்கப்பட வேண்டும்.மாநிலங்களின் பொதுவான நலன்கருதி மாநிலங்களுக்கு இடையேயான குழு பரிந்துரைகளை வழங்க வேண்டும். ஆனால் அரசமைப்பின் உறுப்பு 263(அ) வின் அதிகாரம் இக்குழுவிற்கு வழங்கப்படக்கூடாது. அதாவது மாநிலங்கள் இடையில் எழும் சிக்கல்களில் தலையிடும் அதிகாரம் மாநிலங்களுக்கு இடையேயான குழுவிற்கு வழங்கப்படக்கூடாது என்பதாகும்)

105) ஆளுநர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என பரிந்துரை செய்த குழு எது?

A) ராஜமன்னார் குழு

B) நிர்வாக சீர்திருத்த குழு

C) சர்க்காரியா குழு

D) வெங்கட செல்லையா குழு

(குறிப்பு – சர்க்காரியா குழு ஆளுநர் பதவியை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஆளுநரை நியமிக்கும் முன் சம்பந்தப்பட்ட மாநில அரசை கலந்தாலோசிக்க வேண்டும் என்ற சில அரசியல் கட்சிகளின் கருத்துக்களை நிராகரித்தது. கூட்டாட்சி முறை நன்கு செயல்படுவதற்கு அரசியல் தலைவர்களை ஆளுநராக நியமிக்க கூடாது என இக்குழு பரிந்துரை செய்தது.)

106) புன்ச்சி குழு கீழ்க்காணும் எந்த ஆண்டில் அமைக்கப்பட்டது?

A) 2003 இல்

B) 2005 இல்

C) 2007 இல்

D) 2009 இல்

(குறிப்பு – புதிய அரசாங்கம் 2007ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மதன் மோகன் புன்ச்சி என்பவரின் தலைமையில் ஒரு புதிய குழுவை அமைத்தது இக்குழுவில் மூன்று நிபுணர்களும் ஒரு செயலரும் இருந்தனர். இந்தக் குழு 2010 ஆம் ஆண்டு தனது பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கியது)

107) புன்ச்சி குழுவின் பரிந்துரைகளுள் தவறானது எது?

A) மாநில ஆளுநர்கள் குறிப்பிட்ட பதவி காலத்திற்கு நியமிக்கப்பட வேண்டும்.

B) குடியரசு தலைவரை பதவி நீக்கம் செய்யும் முறை போல மாநில ஆளுநர்களும், நாடாளுமன்றத்தின் பதவி நீக்க தீர்மானம் மூலம் மட்டுமே பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

C) குடியரசுத் தலைவர் ஆட்சி எப்பொழுதும் அமல்படுத்தப்படகூடாது.

D) இந்திய அரசமைப்பின் உறுப்புகள் 355 மற்றும் 356 இல் மாற்றம் செய்யப்பட வேண்டும்

(குறிப்பு – மாநில ஆளுநர்கள் குறிப்பிட்ட பதவி காலத்திற்கு நியமிக்கப்பட வேண்டும். குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் முறை போல மாநில ஆளுநர்கள் நாடாளுமன்றத்தின் பதவி நீக்க தீர்மானம் மூலம் மட்டுமே பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். ஒரு மாநிலத்தில் கிளர்ச்சியில் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் அல்லது பகுதிகளில் மட்டுமே குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை. இதற்காக அரசமைப்பின் உறுப்புகள் 355 மற்றும் 356 மாற்றம் செய்யப்பட வேண்டும், என்பன புன்ச்சி குழுவின் பரிந்துரைகள் ஆகும்)

108) எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் எந்த ஆண்டு வழங்கப்பட்டது?

A) 1992 இல்

B) 1994 இல்

C) 1996 இல்

D) 1998 இல்

(குறிப்பு – சோம ராயப்ப பொம்மை என்பவர் கர்நாடக மாநிலத்தின் பதினோராவது முதல்வராக பணியாற்றியவர் ஆவார். இவர் முதல்வராக இருந்தபோது கர்நாடக அரசாங்கம் மத்திய அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து முதல்வர் எஸ் ஆர் பொம்மை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் 1994 ஆம் ஆண்டு தீர்ப்பை வழங்கியது. மத்திய மாநில உறவுகளில் மாநில உரிமைகளை காப்பதில் பொம்மை வழக்கு தீர்ப்பு மிக முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது)

109) அண்ணல் அம்பேத்கர் அரசமைப்பின் எந்த உறுப்பை தேவையற்ற வார்த்தை என்று வர்ணித்தார்?

A) உறுப்பு 352

B) உறுப்பு 354

C) உறுப்பு 356

D) உறுப்பு 358

(குறிப்பு – அண்ணல் அம்பேத்கர் அரசமைப்பின் உறுப்பு 356ஐ தேவையற்ற வார்த்தை என்று வர்ணித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு எதிராக இந்த உறுப்பு உள்ளதை அவர் கசப்புடன் ஏற்றுக் கொண்டார்.)

110) வெங்கட செல்லையா குழு கீழ்க்காணும் எந்த ஆண்டில் அமைக்கப்பட்டது?

A) 2000 இல்

B) 2002 இல்

C) 2004 இல்

D) 2006 இல்

(குறிப்பு – பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய மக்களாட்சி கூட்டணி அரசாங்கம் 2000ஆம் ஆண்டு, நீதியரசர் நாராயணராவ் வெங்கட செல்லையா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு அரசமைப்பு மதிப்பாய்வு தேசியக் குழு(NCRWC) அரசமைப்பில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என கூறியது)

111) பொருத்துக

I. மத்திய பட்டியல் – a) மூன்றாம் பட்டியல்

II. மாநில பட்டியல் – b) முதலாம் பட்டியல்

III. இதர பட்டியல் – c) இரண்டாம் பட்டியல்

IV. பொதுப்பட்டியல் – d) இவை எதுவும் அல்ல

A) I-b, II-c, III-d, IV-a

B) I-a, Ii-b, III-d, IV-c

C) I-c, II-a, III-b, IV-d

D) I-b, II-a, III-c, IV-d

(குறிப்பு – மத்திய, மாநில மற்றும் பொதுபட்டியல் முறையே முதலாம், இரண்டாவது மற்றும் மூன்றாவது பட்டியலாகும். இதர பட்டியல் என்பது இம்மூன்றில் இல்லாத அம்சங்களை கொண்டிருப்பதாகும்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!