Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் 12th History Lesson 7 Questions in Tamil

12th History Lesson 7 Questions in Tamil

7] இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

காந்தியடிகள் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை’ நடத்த முடிவு செய்த ஆண்டு

A) 1942 மார்ச்

B) 1942 மே

C) 1942 ஆகஸ்ட்

D) 1942 அக்டோபர்

(குறிப்பு: பிரிட்டிஷார் காங்கிரசின் அனைத்துத் தலைவர்களையும் கைது செய்ததோடு, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தையும் இருப்புக்கரங்கொண்டு அடக்கினர். காந்தியடிகள் மே 1944 வரை சிறையில் கடும் நெருக்கடிகளுக்கு உட்படுத்தப்பட்டார்.)

இரண்டாம் உலகப்போரின் காரணமாக அதிருப்தியிலிருந்த தேசியவாதிகளை அரவணைக்கும் பொருட்டு கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியாவுக்கு வருகை புரிந்த ஆண்டு

A) 1942 பிப்ரவரி

B) 1942 மார்ச்

C) 1942 மே

D) 1942 அக்டோபர்

(குறிப்பு: இந்தியாவிற்கு புறப்படும் முன்பாக கிரிப்ஸ், பிரிட்டிஷாரின் கொள்கை நிலைப்பாடு இந்தியாவை பொறுத்தமட்டில் ‘விரைவில் சுயாட்சியை உணர்த்தும் அரசுமுறையை நிறுவுதல்’ என்று மொழிந்தார். ஆனால் அவர் பேச்சுவார்த்தையைத் துவக்குவதற்கு முன்பாக வெளியிட்ட வரைவில் விடுதலை பற்றிய உறுதியான நிலைப்பாடு ஏதும் இருக்கவில்லை.)

வினோபா பாவே மகாராஷ்டிரத்தில் அமைந்த பாவனர் ஆசிரமத்தருகே தனிநபர் சத்தியாகிரகத்தை தொடங்கிய நாள்

A) 1940 அக்டோபர் 7

B) 1940 அக்டோபர் 17

C) 1940 ஆகஸ்ட் 7

D) 1940 அக்டோபர் 17

(குறிப்பு: காந்தியடிகள் டிசம்பர் 1940 இல் தனிநபர் சத்தியாகிரக இயக்கம் முடிவுக்கு வந்ததாக அறிவித்தார்.)

தனிநபர் சத்தியாகிரகம் சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட பின் மீண்டும் குழு சத்தியாகிரகமாக உருவெடுத்தது எப்போது?

A) டிசம்பர் 1940

B) ஜனவரி 1941

C) பிப்ரவரி 1941

D) ஆகஸ்ட் 1941

(குறிப்பு: காந்தியடிகள் இந்த குழு சத்தியாகிரகத்தை ஆகஸ்ட் 1941 இல் திரும்பப்பெறுவதாக அறிவித்தார்.)

கீழ்க்கண்டவற்றுள் லின்லித்கோ பிரபுவின் ஆகஸ்ட் நன்கொடை அளிக்க முன்வந்த சலுகைகள் எவை?

1. வரையறுக்கப்படாத ஒரு தேதியில் டொமினியன் அந்தஸ்து

2. அதிகமான இந்தியர்களைக் கொண்டு அரச பிரதிநிதியின் குழுவை (செயற்குழு) விரிவாக்கம் செய்தல்

3. இந்திய உறுப்பினர்களைக் கொண்ட போர் ஆலோசனைக் குழுவை உருவாக்குதல்

4. சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கீகரித்தல்

5. போருக்குப் பின் இந்திய மக்கள் தங்களுக்கென்ற ஒரு அரசியல் சாசனத்தை இயற்ற உள்ள உரிமையை ஏற்று அதற்கு வாய்ப்பளிக்க உறுதியளித்தல்

A) அனைத்தும் B) 1, 2, 4, 5 C) 2, 3, 4, 5 D) 2, 3, 4

(குறிப்பு: லின்லித்கோ பிரபுவின் ஆகஸ்ட் நன்கொடை வெளிவந்த நாள் 1940 ஆகஸ்ட் 8.)

கூற்று 1: தனிநபர் சத்தியாகிரகம் என்பது அரசபிரதிநிதி லின்லித்கோ பிரபுவின் ஆகஸ்ட் கொடைக்கு காங்கிரஸ் கொடுத்த பதிலடியாகும்.

கூற்று 2: காங்கிரசின் உறுப்பினர் எண்ணிக்கை 1938 – 39 இல் 4.5 மில்லியன் என்ற நிலையிலிருந்து 1940 – 41இல் 1.4 மில்லியன் என்ற அளவுக்குச் சரிந்தது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

கல்கத்தாவில் கூடிய அனைத்து இந்திய காங்கிரஸ் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து போஸ் பதவி துறப்பு செய்யதவுடன் ____________ தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

A) காந்தியடிகள்

B) லாலா லஜபதிராய்

C) தாதாபாய் நௌரோஜி

D) இராஜேந்திர பிரசாத்

(குறிப்பு: காங்கிரசிற்குள் சுபாஷ் சந்திரபோஸ் ஓரங்கட்டப்பட்டதால் அவ்வமைப்பின் முக்கிய மேல்மட்டத் தலைவர்கள் அவரோடு ஒத்துழைக்க மறுத்தனர். அதனால் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் போஸ் பதவி துறப்பு செய்தார்.)

காங்கிரசின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் சுபாஷ் சந்திர போஸ் விடுவிக்கப்பட்ட ஆண்டு

A) 1939 ஆகஸ்ட்

B) 1939 அக்டோபர்

C) 1940 ஆகஸ்ட்

D) 1940 அக்டோபர்

(குறிப்பு: காங்கிரசின் தலைவர் பதவியிலிருந்து போஸ் விலகினாலும் காங்கிரசிற்குள் செயலாற்ற விரும்பி ஃபார்வர்டு பிளாக் கட்சியை உருவாக்கினார்.)

இஸ்லாமியர்களுக்கான தனிநாடு என்ற கோரிக்கை ______________ அன்று லாகூரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் முக்கியக் கட்டத்தை எட்டியது.

A) 1939 மார்ச் 13

B) 1940 மார்ச் 13

C) 1940 மார்ச் 23

D) 1941 மார்ச் 23

(குறிப்பு: இஸ்லாமியர்களுக்கான தனிநாடு என்ற கோரிக்கையின் துவக்கம் 1930களில் கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் தனிப்பகுதி அல்லது சில பகுதிகள் என்ற நிலையிலிருந்து லாகூர் தீர்மானத்தின் மூலம் இது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியது.)

கீழ்க்கண்டவற்றுள் அச்சு நாடுகள் அல்லாதது எது?

A) ஜெர்மனி

B) இத்தாலி

C) அமெரிக்கா

D) ஜப்பான்

(குறிப்பு: இந்தியாவில் போஸ் ஒருவர் மட்டுமே நேசநாடுகளோடு ஒத்துழையாமல் அச்சு நாடுகளை ஆதரித்தார்.)

கூற்று: இரண்டாம் உலகப்போரின் போது போர்க்கால அமைச்சரவையைத் தலைமையேற்று நடத்திக்கொண்டிருந்த வின்ஸ்டன் சர்ச்சில், சர் ஸ்டாஃப்போர்டு கிரிப்ஸை காங்கிரசோடு பேச்சுவார்த்தை நடத்த அனுப்பி வைத்தார்.

காரணம்: இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தென்கிழக்கு ஆசியப் பகுதியில் முன்னேறி வந்ததும் பிரிட்டிஷ் படைகளின் வீழ்ச்சியும் போரின் நிலைமையைப் பெரிதும் மாற்றின. இதனால் விடுதலைக்கு ஒப்புதல் வழங்காமலேயே போர் முயற்சிகளில் இந்தியர்களின் ஒத்துழைப்பை பெற வேண்டிய அவசரமான சூழல் உதித்தது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி

D) கூற்று, காரணம் இரண்டும் தவறு

முத்து துறைமுகம் என்ற அமெரிக்க துறைமுகம் தாக்கப்பட்ட ஆண்டு

A) 1940 ஜனவரி 7

B) 1940 டிசம்பர் 7

C) 1941 ஜனவரி 7

D) 1941 டிசம்பர் 7

தவறான கூற்றைத் தேர்ந்தெடு. (கிரிப்ஸ் முன்மொழிவு)

1. கிரிப்ஸ் டொமினியன் அந்தஸ்தையும் போருக்குப் பின் அரசியல் சாசன வரைவுக்குழுவை உருவாக்குதலையும் ஆதரித்தார்.

2. அரசியல் சாசன வரைவுக் குழு மாகாண சபைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டும் சுதேச அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து நியமிக்கப்பட்டவர்களைக் கொண்டும் ஏற்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது.

3. கிரிப்ஸ் முன்மொழிவில் இந்திய பிரிவினைப் பற்றியும் பாகிஸ்தான் பற்றியும் குறிப்பிடப்படவில்லை.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) எதுவுமில்லை

(குறிப்பு: கிரிப்ஸ் முன்மொழிவில் பாகிஸ்தான் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.)

காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகத்தை துவக்கிய ஆண்டு

A) 1940 ஆகஸ்ட்

B) 1940 அக்டோபர்

C) 1942 ஆகஸ்ட்

D) 1942 அக்டோபர்

“நான் முதன்முறையாக இவ்வரைவை வாசித்த போது கடுமையான மன அழுத்தத்திற்கு உட்பட்டேன்” என்று கிரிப்ஸ் முன்மொழிவை பற்றி கூறியவர்

A) காந்தியடிகள்

B) சுபாஷ் சந்திர போஸ்

C) ஜவஹர்லால் நேரு

D) மோதிலால் நேரு

இரண்டாம் உலகப் போருக்குப் பின் விடுதலையையும், உடனடியாக முக்கியப் பிரிவுகளில் அதிகாரப் பகிர்வையும் உறுதியளிக்க பிரிட்டிஷ் அரசு முன்வந்தால் தாங்கள் போரில் ஒத்துழைப்பு நல்கத் தயார் என்ற தீர்மானத்தை காங்கிரஸ் செயற்குழு எப்போது நிறைவேற்றியது?

A) 1941 ஜனவரி

B) 1941 ஏப்ரல்

C) 1941 ஆகஸ்ட்

D) 1941 டிசம்பர்

சுபாஷ் சந்திர போஸ் ஜெர்மனியில் இருந்து ஆசாத் ஹிந்து ரேடியோ மூலம் இந்திய மக்களைத் தொடர்பு கொண்டு உரை நிகழ்த்தியது

A) ஜனவரி 1942

B) மார்ச் 1942

C) ஏப்ரல் 1942

D) ஜூலை 1942

(குறிப்பு: போஸின் ஆசாத் ஹிந்து ரேடியோ உரையின் பின்புலத்தில் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவக்கினார்.)

கூற்று 1: காந்தியடிகள் மே 1942இல் இந்திய தேசிய காங்கிரசை அடுத்தக்கட்ட செயல்பாட்டிற்குத் தயார்படுத்தலானார்.

கூற்று 2: இம்முறை, பெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க காந்தியடிகள் முனைந்த நேரத்தில் C. இராஜாஜியும் நேருவும் பெரும் ஆதரவளித்தனர்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: மே 1942இல் காந்தியடிகள் பெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க முனைந்த நேரத்தில் C. இராஜாஜியும் நேருவும் தயக்கம் காட்டினர்.)

நாடு தழுவிய சட்டமறுப்பு போராட்டம் நடத்த 1942 ஜூலை 14 இல் ______________ இல் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

A) கல்கத்தா

B) பம்பாய்

C) அகமதாபாத்

D) வார்தா

(குறிப்பு: இத்தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த இராஜாஜியும் புலாபாய் தேசாயும் காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து பதவித் துறப்பு செய்தனர். நேருவும் அதே நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதும் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவுக்குக் கட்டுப்பட்டார்.)

“இந்தியாவைக் கடவுளிடம் விட்டுவிடுங்கள், அது அதீதமான ஒன்றாக இருக்குமானால் அதை இயற்கையின் அராஜகப் போக்கில் கூட விட்டுவிடுங்கள். இவ்வரையறுக்கப்பட்ட ஒழுங்குமுறை கொண்ட அராஜகம் நீங்கிச் செல்வதால் முற்றிலும் தறிகெட்டு சட்டசீர்கேடு ஏற்பட்டாலும் அந்த ஆபத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.” என்று கூறியவர்

A) ராஜாஜி

B) சுபாஷ் சந்திர போஸ்

C) நேரு

D) காந்தியடிகள்

(குறிப்பு: மேற்கண்ட கூற்றை காந்தியடிகள் 1942 மே 16 இல் கூடிய பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தினார். அதன்பின் அவர் மக்களை நோக்கி “செய் அல்லது செத்துமடி” என்று கூறி “முடிவை நோக்கிய ஒரு சண்டையாகக்” கருதி தனது மறுப்பியக்கத்தைத் துவக்கினார்.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு. (வெள்ளையனே வெளியேறு போராட்டங்கள்)

1. வெள்ளையனே வெளியேறு போராட்டங்களின் போது காலனிய அரசு காந்தியடிகள் உட்பட அனைத்துக் காங்கிரஸ் தலைவர்களையும் 1942 ஆகஸ்ட் 9 அன்று அதிகாலையில் கைது செய்து சிறையில் தள்ளியது.

2. ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழிற்சாலையில் வேலை நிறுத்தப் போராட்டம் ஆகஸ்ட் 20 இல் துவங்கி 31 நாட்கள் நடைபெற்றது.

3. அகமதாபாத்தின் ஜவுளித் தொழிற்சாலை ஊழியர்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழிற்சாலையில் வேலை நிறுத்தப் போராட்டம் ஆகஸ்ட் 20 இல் துவங்கி 13 நாட்கள் நடைபெற்றது.)

” 1857 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின் கவலை கொள்ள வைக்கும் ஒரு வளர்ச்சி; எனினும், அதன் முக்கியத்துவத்தையும் வீரியத்தையும் இராணுவக் காரணங்களுக்காக உலகத்தின் பார்வையில் இருந்து மறைக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது” என்று வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை பற்றி சர்ச்சிலுக்கு எழுதியவர்

A) வில்லியம் பெண்டிங் பிரபு

B) கானிங் பிரபு

C) மெளண்ட்பேட்டன் பிரபு

D) லின்லித்கோ பிரபு

வெள்ளையனே வெளியேறு இயக்கம் ____________லிருந்து தாக்குதல்களையும் அரசின் தொலைத்தொடர்பு வசதிகளான தந்திக்கம்பிகளையும் இருப்பு பாதைகளையும் இரயில் நிலையங்களையும் நாசமாக்குவதையும் அரசு அலுவலகங்களுக்கு நெருப்பு வைப்பதையும் உத்தியாகக் கொண்டிருந்தது.

A) 1942 ஏப்ரல்

B) 1942 ஜூலை

C) 1942 செப்டம்பர்

D) 1942 நவம்பர்

(குறிப்பு: மேற்கண்ட தாக்குதல்கள் நாடு முழுவதும் பரவியபோதும் கிழக்கு ஒருங்கிணைந்த மாகாணங்களிலும் பீகார், மகாராஷ்டிரா மற்றும் வங்காளப் பகுதிகளிலும் அதிதீவிரமாக பின்பற்று வந்தது.)

உணவு தானியங்களின் விலை ஏப்ரல் 1942 இல் இருந்து அதே ஆண்டு ஆகஸ்டுக்குள் ____________ புள்ளிகள் அளவில் ஏறியது.

A) 40 B) 50 C) 60 D) 70

வங்காளத்தின் மிட்னாப்பூர் மாவட்டத்தில் ____________ வரை ‘தம்லுக் ஜாட்டியா சர்க்கார்’ அரசு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

A) 1943 ஆகஸ்ட்

B) 1943 செப்டம்பர்

C) 1944 ஆகஸ்ட்

D) 1944 செப்டம்பர்

(குறிப்பு: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது புரட்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதிகளில் ‘தேசியவாத அரசை’ நிறுவிவிட்டதாக பறைசாற்றிக் கொண்டனர். இதற்கு உதாரணம் தம்லுக் ஜாட்டியா சர்க்கார் ஆகும். சதாராவிலும் ஓர் இணை அரசாங்கம் செயல்பட்டது.)

காந்தியடிகள் 1943 பிப்ரவரி 10 இல் சிறைச்சாலையில் _____________ நாட்கள் உண்ணாவிரதத்தை துவக்கினார்.

A) 10 B) 12 C) 21 D) 28

(குறிப்பு: காந்தியடிகளின் இந்த உண்ணாவிரதம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்து இயக்கத்திற்கு (சில நெறிமுறைகளுக்கு உட்பட்ட வன்முறைக்கும்) வலுவேற்றியது.)

ஆசம்கரின் ஆட்சியராக இருந்து புரட்சியாளர்களின் மீது போதுமான நடவடிக்கை எடுக்க தவறியதால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்

A) வில்லியம் பெண்டிங்

B) ஆர்கிபால்டு வேவல்

C) லின்லித்கோ

D) R.H. நிப்ளெட்

(குறிப்பு: R.H. நிப்ளெட் தனது நாட்குறிப்பில் குறித்து வைத்தப் பதிவின்படி ‘பிரிட்டிஷார் காவல்துறையினரின் மூலமாகப் பல கிராமங்களைத் தீக்கிரையாக்கியதோடு பல மைல்களுக்கு தீயைப் பரவவிட்டு ‘வெள்ளை பயங்கரத்தை’ அரங்கேற்றி அடக்குமுறையே ஆட்சிமுறை என்ற அளவுக்கு அக்காலகட்டத்தில் நடந்து கொண்டார்கள்’ என அறிய முடிகிறது.)

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 1943 ஆம் ஆண்டின் முடிவில் ________________ என்ற அளவை எட்டியது.

A) 83,916 B) 85,691 C) 91,836 D) 98,136

(குறிப்பு: இதே காலத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1060 ஆனது. அரசின் 208 காவல் கண்காணிப்பு நிலைகளும் 332 இருப்புப்பாதை நிலையங்களும் 945 அஞ்சல் அலுவலகங்களும் முற்றிலுமாக அழிக்கப்படவும் சேதத்திற்கு உட்படுத்தப்படவும் வெள்ளையனே வெளியேறு இயக்க நடவடிக்கைகள் காரணமாக அமைந்தன.)

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி ஒலிபரப்பிற்கு வித்திட்டவர்

A) சுபாஷ் சந்திர போஸ்

B) ஷா நவாஸ் கான்

C) உஷா மேத்தா

D) G.S. தில்லான்

(குறிப்பு: இரகசிய வானொலி ஒலிபரப்பி பம்பாயில் ஓரிடத்தில் என்றில்லாமல் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டுக்கொண்டே இருந்தது. இதன் ஒலிபரப்பு மதராஸ் வரை கேட்கப்பட்டது.)

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் காரணமாக 1942 ஆகஸ்ட் 9 அன்று கைது செய்யப்பட்ட காந்தியடிகள் எப்போது விடுவிக்கப்பட்டார்?

A) 1943 பிப்ரவரி 10

B) 1943 ஆகஸ்ட் 6

C) 1944 பிப்ரவரி 10

D) 1944 மே 6

(குறிப்பு: உடல்நலம் சார்ந்த காரணங்களுக்காக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட காந்தியடிகள் தனது ஆக்கபூர்வமானச் செயல் திட்டங்களை மேற்கொள்ளலானார்.)

லின்லித்கோ பிரபுவிற்குப் பின் அரசபிரதிநிதியாக வேவல் பிரபு பதவியேற்ற ஆண்டு

A) 1942 அக்டோபர்

B) 1943 ஆகஸ்ட்

C) 1943 செப்டம்பர்

D) 1943 அக்டோபர்

1942 இல் 40,000 பேரை கொண்டு இந்திய தேசிய இராணுவத்தை பலப்படுத்தியவர்

A) சுபாஷ் சந்திர போஸ்

B) அம்மு சுவாமிநாதன்

C) டாக்டர் லட்சுமி

D) மோகன் சிங்

(குறிப்பு: ஜப்பானியர்களின் ஆதிக்கத்திலிருந்த பகுதியில் வாழ்ந்த இந்தியர்கள் இந்திய தேசிய இராணுவத்தையும் மோகன் சிங்கையும் ஒரு பாதுகாவலராகப் பார்த்தாலும் அவருடன் இருந்த அதிகாரிகள் இந்திய தேசிய காங்கிரஸ் அழைப்புவிடுத்தாலொழிய இந்தியா மீது படைநடத்தி செல்லப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.)

சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூர் சென்ற ஆண்டு

A) 1942 ஜூலை 2

B) 1942 செப்டம்பர் 12

C) 1943 ஜூலை 2

D) 1943 செப்டம்பர் 12

(குறிப்பு: போஸ் சிங்கப்பூரிலிருந்து டோக்கியோ சென்று பிரதமர் டோஜோவைச் சந்தித்தார். இந்தியாவை ஆக்கிரமிக்கும் எண்ணம் ஜப்பானுக்கு இல்லை என்று ஜப்பானிய அரசர் அறிவித்தார். எனவே போஸ் சிங்கப்பூருக்கு திரும்பி தற்காலிக அரசை ஏற்படுத்தினார்.)

சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவின் தற்காலிக அரசை ஏற்படுத்திய நாள்

A) 1943 ஆகஸ்ட் 12

B) 1943 அக்டோபர் 21

C) 1943 செப்டம்பர் 21

D) 1943 ஆகஸ்ட் 21

(குறிப்பு: இத்தற்காலிக அரசு பிரிட்டன் மீதும் பிற நேச நாடுகள் மீதும் போர் அறிவிப்பு செய்தது. அச்சு நாடுகள் போசின் தற்காலிக அரசை தமது நட்பு வளையத்துக்குள் ஏற்றுக்கொண்டன.)

இந்திய தேசிய இராணுவத்தின் ராணி ஜான்சி என்ற படைப்பிரிவிற்கு தலைமையேற்றவர்

A) அம்மு சுவாமிநாதன்

B) டாக்டர் லட்சுமி

C) டாக்டர் சரஸ்வதி

D) நேதாஜி

(குறிப்பு: டாக்டர் லட்சுமி என்பவர் மருத்துவராகப் பணியாற்றியவரும் சென்னையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரருமான அம்மு சுவாமிநாதனின் மகள் ஆவார்.)

காந்தியடிகளை “தேசத்தின் தந்தை” என்று அழைத்தவர்

A) டாக்டர் லட்சுமி

B) ஜவஹர்லால் நேரு

C) வல்லபாய் படேல்

D) சுபாஷ் சந்திர போஸ்

(குறிப்பு: சுபாஷ் சந்திர போஸ் 1944 ஜூலை 6 இல் தனது ஆசாத் ஹிந்த் ரேடியோவின் மூலம் ரங்கூனிலிருந்து காந்தியடிகளை நோக்கிய ஒரு உரையை ஆற்றினார். காந்தியை “தேசத்தின் தந்தையே” என்று அழைத்த அவர் இந்தியாவின் கடைசி விடுதலைப் போருக்கு அவர்தம் ஆசியைக் கோரினார்.)

சுபாஷ் சந்திர போஸ் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

A) இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1940 ஜூலை 3 அன்று கைது செய்யப்பட்ட போஸ் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

B) ஐரோப்பாவில் தொடர்ந்து நடந்தப் போரில் பிரிட்டனே வெல்லும் என்று போஸ் நம்பினார்.

C) கல்கத்தாவிலிருந்து 1941 ஜனவரி 16-17 இன் நள்ளிரவில் தப்பிய போஸ், காபூல் மற்றும் சோவியத் நாடு வழியாக ஒரு இத்தாலியக் கடவுச்சீட்டைக் கொண்டு மார்ச் மாதத்தின் கடைசியில் பெர்லின் சென்று சேர்ந்தார்.

D) பெர்லினில் இரு நாசிசத் தலைவர்களான ஹிட்லரையும் கோயபல்ஸையும் போஸ் சந்தித்தார்.

(குறிப்பு: ஐரோப்பாவில் தொடர்ந்து நடந்தப் போரில் ஜெர்மனியே வெல்லும் என்று போஸ் நம்பினார். அவர் அச்சு நாடுகளோடு கைக் கோர்ப்பதன் மூலம் இந்தியா சுதந்திரம் பெறமுடியும் என்ற சிந்தனையை வளர்த்தெடுத்தார்.)

டெல்லியின் செங்கோட்டையில் இந்திய தேசிய இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட விசாரணையில் இந்திய தேசிய இராணுவ வீரர்களின் சார்பில் வழக்கில் ஆஜரானவர்

A) காந்தியடிகள்

B) ஜவஹர்லால் நேரு

C) வல்லபாய் படேல்

D) மோதிலால் நேரு

(குறிப்பு: காந்தியடிகளின் குரலுக்கு இசைந்து ஒத்துழையாமை இயக்கத்தின் பின்புலத்தில் 1920களின் ஆரம்பத்தில் தனது சட்டப்பணிகளைத் துறந்த ஜவஹர்லால் நேரு, நீண்ட இடைவெளிக்குப் பின் தனது கருப்பு அங்கியை அணிந்து இந்திய தேசிய இராணுவ வீரர்களின் சார்பில் வழக்கில் ஆஜரானவர்.)

ஷெகல், தில்லான், ஷா நவாஸ்கான் ஆகியோரை முப்படைகளின் தளபதி விடுதலை செய்த ஆண்டு

A) 1945 ஜனவரி 8

B) 1945 அக்டோபர் 10

C) 1946 ஜனவரி 6

D) 1946 அக்டோபர் 5

(குறிப்பு: காலனிய ஆட்சியாளர்கள் 39. ஷெகல், தில்லான், ஷா நவாஸ்கான் ஆகிய இந்திய தேசிய இராணுவத்தின் மூன்று முக்கிய அதிகாரிகளை பிரித்தெடுத்து விசாரணை நடத்தியது. இந்திய நாட்டின் பத்திரிகைகள் யாவும் இவ்விசாரணையை உணர்ச்சிகரமாகப் பிரசுரித்ததோடு தலையங்கங்கள் அனைத்திலும் அவர்தம் விடுதலைக்காகக் கோரிக்கை வைத்தன.)

HMIS தல்வார் என்ற போர்க்கப்பலின் பக்கவாட்டில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று எழுதியவர்

A) P.K.ஷெகல்

B) G.S. தில்லான்

C) ஷா நவாஸ் கான்

D) B.C. தத்

(குறிப்பு: B.C. தத் என்பவர் HMIS தல்வார் என்ற போர்க் கப்பலில் மாலுமியாகப் பணியாற்றியவர். ஆங்கிலத்தில் ரேட்டிங் என்று வழங்கப்பட்ட இப்பதவிப் பெயரே பல்வேறுபட்ட போர் கப்பல்களிலும் இராயல் இந்திய கடற்படையின் போர்கப்பல்களிலும் பணியாற்றிய மாலுமிகளைக் குறிப்பதாக அமைந்தது.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1. B.C. தத்தின் கைது 1946 பிப்ரவரி 18 இல் வெடித்துக் கிளம்பிய கலகத்திற்கு உந்துவிசையாக அமைந்தது.

2. பம்பாய் மற்றும் கல்கத்தாவின் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் இறங்கியதில் இரு நகரங்களும் போர் முனைகள் போல் காட்சியளித்தன.

3. பம்பாயின் கலகச் செய்தி கராச்சியை அடைந்ததும் பிப்ரவரி 19 இல் HMIS ஹிந்துஸ்தான் கப்பலின் மாலுமிகளும் கராச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிறரும் மின்னல் வேகத்தில் போராட்டத்தைத் துவக்கினர்.

4. போராட்ட அலை கடற்படை முழுவதும் பரவியதால் 78 கப்பல்களிலும் 20 கரைசார்ந்த பணியிடங்களிலும் இருந்த 20000 மாலுமிகள் 1946 பிப்ரவரி 18 க்கு பின் போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.

A) அனைத்தும் சரி

B) 1, 2, 3 சரி

C) 1, 2, 4 சரி

D) 2, 3, 4 சரி

இராயல் இந்திய கடற்படையின் கலகத்தை பம்பாய் நகரில் இருந்த ______________ முடிவிற்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டார்.

A) காந்தியடிகள்

B) ஜவஹர்லால் நேரு

C) இராஜாஜி

D) வல்லபாய் படேல்

இந்தியாவில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் என்ற நிலையிலிருந்து ஒரு தனிநாடு என்ற நம்பிக்கைக்கு மாற காரணமாக இருந்த தீர்மானம்

A) புனே தீர்மானம்

B) அலகாபாத் தீர்மானம்

C) லக்னோ தீர்மானம்

D) லாகூர் தீர்மானம்

(குறிப்பு: மார்ச் 23, 1940இல் (குறிப்பு: மார்ச் 23, 1940இல் நிறைவேற்றப்பட்ட லாகூர் தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது: ” பூகோளரீதியில் தொடர்ச்சியாக அமையப்பெற்ற பகுதிகள் பிரிக்கப்பட்டும் தேவைக்கேற்ப இந்தியாவின் வடமேற்கிலும் கிழக்குப் பகுதியிலும் எண்ணிக்கை அளவில் இஸ்லாமியப் பெரும்பான்மை இருப்பது போன்றப் பகுதிகளை உருவாக்கி இவையாவற்றையும் இணைத்து தன்னாட்சியும் இறையாண்மையும் கொண்டவைகளாக மாற்றி அதிலிருந்து ஒரு தனிநாட்டை உருவாக்க வேண்டும்”.)

சிம்லா மாநாட்டின் போது காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக பதவிவகித்தவர்

A) ஜவஹர்லால் நேரு

B) சர்தார் பட்டேல்

C) மெளலானா அபுல் கலாம் ஆசாத்

D) இராஜாஜி

(குறிப்பு: சிம்லா மாநாட்டிற்கு முகாந்திரம் அமைக்கும் பொருட்டு மார்ச், 1945இல் லண்டன் சென்ற வேவல் பிரபு சர்ச்சிலிடம் போருக்குப் பின் எழும் நெருக்கடியைச் சமாளிக்க காங்கிரஸையும், முஸ்லீம் லீக்கையும் இணைத்து ஆட்சியமைக்க ஒப்புதல் பெற்றார்.)

கூற்று 1: வேவல் பிரபு ஜூன், 1945இல் பேச்சுவார்த்தை நடத்த சிம்லா மாநாட்டைக் கூட்டினார்.

கூற்று 2: தீர்மானமெதையும் எட்டாமலேயே ஜூன் 25 முதல் ஜூலை 14 வரை நடந்த சிம்லா மாநாடு முடிவடைந்தது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: அரசப் பிரதிநிதியின் குழுவிற்கு உறுப்பினர்களை அனுப்புவதில் இந்திய தேசிய காங்கிரசிற்கும், முஸ்லிம் லீக்கிற்கும் இருந்த உரிமை பற்றியப் பிரச்சனையை முன்வைத்தே சிம்லா மாநாட்டில் பேச்சுவார்த்தை முறிவடைந்தது.)

டெல்லியில் __________அன்று நடந்த முஸ்லிம் லீக்கின் சட்டசபை உறுப்பினர்கள் மாநாட்டில் பாகிஸ்தான் ஒரு ‘இறையாண்மை கொண்ட தனிநாடு’ என்று வர்ணிக்கப்பட்டது.

A) மார்ச் 1945

B) ஏப்ரல் 1945

C) மார்ச் 1946

D) ஏப்ரல் 1946

(குறிப்பு: இம்மாநாட்டில் முதன்முறையாக அதன் பூகோள வரையறையையும் வெளிப்படுத்திய முஸ்லிம் லீக் வடகிழக்கில் வங்காளத்தையும், அசாமையும் போன்று வடமேற்கில் பஞ்சாப், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து, பலுசிஸ்தான் ஆகிய முஸ்லிம் மக்கள்தொகை அதிகம் கொண்ட பகுதிகளைச் சுட்டிக்காட்டியது.)

சர் ஸ்டாஃப்போர்டு கிரிப்ஸ் தலைமையிலான அமைச்சரவைத் தூதுக்குழு ____________ அன்று இந்தியா வந்தடைந்தது.

A) ஜனவரி 1946

B) பிப்ரவரி 1946

C) மார்ச் 1946

D) ஏப்ரல் 1946

(குறிப்பு: இந்திய நாட்டிற்கென்று நியமிக்கப்பட்டிருந்த அரசு செயலரான சர். ஸ்டாஃப்போர்டு கிரிப்ஸ், A.V. அலெக்ஸாண்டர், பெதிக் லாரன்ஸ் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைச்சரவை தூதுக்குழு இந்தியா வந்தடைந்து முழு அதிகார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான அரசை உருவாக்க முன்வந்தது.)

தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

1. 1946 ஜூன் 6 இல் ஜின்னா அமைச்சரவை தூதுக்குழுவின் முன்மொழிவிற்கு ஒப்புதல் அளித்தார்.

2. 1946 ஜூலை 7 இல் கூடிய அனைத்திந்திய காங்கிரஸ் குழுவில் பேசிய நேரு இந்திய தேசிய காங்கிரஸ் அமைச்சரவை தூதுக்குழுவின் முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக தெரியப்படுத்தினார்.

3. 1946 ஜூலை 19 இல் பேசிய ஜின்னா முஸ்லீம் லீக் அம்முன்மொழிவை நிராகரிப்பதாக அறிவித்தார்.

A) 1, 2 தவறு

B) 2, 3 தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

(குறிப்பு: 1946 ஜூலை 29 இல் பேசிய ஜின்னா முஸ்லீம் லீக் அமைச்சரவை தூதுக்குழுவின் முன்மொழிவை நிராகரிப்பதாக அறிவித்தார்.)

1946 ஜூன் 15 இல் அரசபிரதிநிதி இடைக்கால அரசை நடத்த எத்தனை பேருக்கு அழைப்புவிடுத்தார்?

A) 10 B) 12 C) 14 D) 16

(குறிப்பு: அரசப் பிரதிநிதியால் அழைக்கப்பட்டவர்கள்

காங்கிரஸ் சார்பாக ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், இராஜேந்திர பிரசாத், இராஜாஜி மற்றும் ஹரி கிருஷ்ண மஹ்தப் ஆகியோரும் முஸ்லிம் லீக் சார்பாக முகம்மது அலி ஜின்னா, லியாகத் அலி கான், முகம்மது இஸ்மாயில் கான், குவாஜா சர் நிஜாமுதீன் மற்றும் அப்துல் ரப் நிஷ்தர் ஆகியோரும், சீக்கியர்கள் சார்பாக சர்தார் பல்தேவ் சிங்கும், பார்சிகளின் சார்பில் சர் N.P. இஞ்சினியரும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சார்பாக ஜெகஜீவன்ராமும் இந்திய கிறித்தவர்கள் சார்பாக ஜான் மத்தாயும் ஆவர்.)

இடைக்காலக் குழுவில் பங்கெடுக்க காங்கிரசுக்கு வழங்கப்பட்ட ஐந்து இடங்களில் ஒன்றனுக்கு காங்கிரசால் முன்மொழியப்பட்ட முஸ்லிம் நபர்

A) P.K. ஷெகல்

B) ஜாகிர் ஹூசைன்

C) இப்ராகிம் அகமது

D) ஷா நவாஸ் கான்

(குறிப்பு: இதற்கு 1946 ஜூலை 29 இல் முஸ்லிம் லீக் எதிர்ப்பு தெரிவித்ததோடு தாங்கள் சட்டசபையில் பங்கெடுக்கப் போவதில்லை என்று அறிவித்தது. இதற்கு ஆங்கிலேய நிர்வாகம் கடுமையான எதிர்வினையாற்றியது.)

அரசபிரதிநிதி ____________ அன்று, தான் காங்கிரஸ் தலைவர் நேருவை அழைத்து இடைக்கால அரசை உருவாக்கப் போவதாகத் தெரிவித்தார்.

A) 1946 ஆகஸ்ட் 12

B) 1946 ஆகஸ்ட் 15

C) 1946 ஆகஸ்ட் 21

D) 1946 ஆகஸ்ட் 28

(குறிப்பு: நேருவோடு கலந்தாலோசித்த பின் 1946 ஆகஸ்ட் 25இல் தேசிய இடைக்கால அரசின் 12 உறுப்பினர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டது.)

கீழ்க்கண்டவர்களுள் இடைக்கால அரசின் 12 உறுப்பினர்களில் இடம்பெறாதவர் யார்?

A) ஆசப் அலி

B) குவர்ஜி ஹொர்முஸ்ஜி பாபா

C) ஜான் மத்தாய்

D) G.S. தில்லான்

(குறிப்பு: இடைக்கால அரசின் 12 உறுப்பினர்கள்

நேரு, வல்லபாய் படேல், இராஜேந்திர பிரசாத், ஆசப் அலி, இராஜாஜி, சரத் சந்திர போஸ், ஜான் மத்தாய், சர்தார் பல்தேவ் சிங், சர் ஷாஃப்த் அகமது கான், ஜெகஜீவன் ராம், சையது அலி ஸாகீர் மற்றும் குவர்ஜி ஹொர்முஸ்ஜி பாபா.)

தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

1. ஐந்து இந்துக்கள், நான்கு முஸ்லிம்கள், பட்டியல் இனம், இந்திய கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள் போன்றோரில் இருந்து தலா ஒரு நபர் என்ற அடிப்படையில் இடைக்கால அரசின் உறுப்பினர் பட்டியல் அமைக்கப்பட்டிருந்தது.

2. ஹரி கிருஷ்ண மஹ்தபின் இடத்தில் சரத் சந்திர போஸ் நியமிக்கப்பட்டார்.

3. பார்சி இனத்தில் N.P. இஞ்சினியர் இடத்தில் குவர்ஜி ஹொர்முஸ்ஜி பாபா நியமிக்கப்பட்டார்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) எதுவுமில்லை

(குறிப்பு: ஐந்து இந்துக்கள், மூன்று முஸ்லிம்கள், பட்டியல் இனம், இந்திய கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள் போன்றோரில் இருந்து தலா ஒரு நபர் என்ற அடிப்படையில் இடைக்கால அரசின் உறுப்பினர் பட்டியல் அமைக்கப்பட்டிருந்தது.)

இடைக்கால அரசின் உறுப்பினர் பட்டியலில் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் காங்கிரஸ் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் யார்?

1. ஆசப் அலி 2. ஷாபத் அகமது கான்

3. சையது அலி ஸாகீர் 4. ஜாகிர் ஹூசைன்

A) 1, 2, 4 B) 1, 2, 3 C) 2, 3, 4 D) 1, 3, 4

முஸ்லிம் லீக் _____________ இல் நேரடி நடவடிக்கை செயலில் இறங்க இஸ்லாமியர்களுக்கு அறைகூவல் விடுத்தது.

A) 1946 ஆகஸ்ட் 14

B) 1946 ஆகஸ்ட் 15

C) 1946 ஆகஸ்ட் 16

D) 1946 ஆகஸ்ட் 17

“இஸ்லாமியர்களும் இந்தியர்களே! அதனால் அவர்களை பாதுகாப்பது இந்திய அரசின் பொறுப்பேயாகும்” என்று இடைக்கால அரசை வலியுறுத்தியவர்

A) நேரு

B) முகமது அலி ஜின்னா

C) இராஜாஜி

D) காந்தி

(குறிப்பு: நேரடி நடவடிக்கை நாள் கலவரத்தின் காரணமாக காந்தியடிகள் கல்கத்தாவை வந்தடைந்து அங்கே பேலிகாத்தா என்ற மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியின் புறக்கணிக்கப்பட்ட ஒரு வீட்டில் தங்க முடிவு செய்தார். பின் 1946 செப்டம்பர் 9 இல் டெல்லியை வந்தடைந்த காந்தி இஸ்லாமியர்களும் இந்தியர்களே என்று வலியுறுத்தினார்.)

இடைக்கால அரசின் 12 உறுப்பினர்களும் எப்போது பதவியேற்றனர்?

A) 1946 ஆகஸ்ட் 2

B) 1946 ஆகஸ்ட் 22

C) 1946 செப்டம்பர் 2

D) 1946 செப்டம்பர் 22

(குறிப்பு: இதன் பின் ஒரு இனக்கலவரம் வெடித்துக் கிளம்பியபோது அது பம்பாயையும், அகமதாபாத்தையும் கடுமையாகத் தாக்கியது. வேவல் பிரபு மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தி நேருவின் ஆலோசனையைப் பெற்று மீண்டும் முஸ்லிம் லீக்கை இடைக்கால அரசில் பங்கெடுக்க அழைப்புவிடுத்தார். முஸ்லிம் லீக் அவரது அழைப்பை ஏற்றாலும் ஜின்னா அமைச்சரவையில் பங்கெடுக்க மறுத்துவிட்டார்.)

இடைக்கால அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்ட நாள்

A) 1946 அக்டோபர் 16

B) 1946 அக்டோபர் 22

C) 1946 அக்டோபர் 23

D) 1946 அக்டோபர் 26

(குறிப்பு: மறுசீரமைக்கப்பட்ட இடைக்கால அரசின் அமைச்சரவையில் முஸ்லிம் லீக் சார்பில் பங்குபெற்றோர் லியாகத் அலி கான், I.I.சுந்துரிகர், A.R. நிஷ்தர், கஸன்பர் அலி கான் மற்றும் ஜோகேந்திர நாத் மண்டல் ஆகியோர் ஆவர்.)

ஜூலை-ஆகஸ்ட் 1946 இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 210 ற்கு ___________ பொது இடங்களைப் பெற்று பெரும் வெற்றியை குவித்தது.

A) 195 B) 197 C) 199 D) 207

(குறிப்பு: இஸ்லாமியருக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களில் ஒன்று நீங்கலாக 76 இடங்களை முஸ்லிம் லீக் பெற்றிருந்தது. எனினும் சட்டசபையில் பங்கெடுப்பதைப் புறக்கணிக்க அது முடிவு செய்தது.)

1946 டிசம்பர் 9 இல் கூடிய முதல் சட்டசபையில் ____________ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

A) 199 B) 207 C) 209 D) 212

மார்ச் 1947 இல் ‘சோஷலிஸ நிதிநிலை அறிக்கை’யை தாக்கல் செய்தவர்

A) ஜவஹர்லால் நேரு

B) கஸன்பர் அலி கான்

C) A.R. நிஷ்தர்

D) லியாகத் அலி கான்

(குறிப்பு: இந்த நிதி நிலை அறிக்கையில் தொழிற்சாலைகள் மீதும், தொழில்கள் மீதும் அடுக்கடுக்காகப் பல வரிகளைச் சுமத்திய நிதியமைச்சர் ஒரு ஆணையத்தின் மூலம் 150 பெரும் வர்த்தக அமைப்புகளின் செயல்பாடுகளையும் அவைகளின் மீது இருந்த வரிஏய்ப்புக் குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க நிர்பந்தித்தார்.)

பிரிட்டிஷ் பிரதமரான அட்லி 1947 பிப்ரவரி 20 இல் பாராளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி பிரிட்டிஷார் _____________ வாக்கில் இந்தியாவை விட்டு வெளியேறுவதில் தீர்மானமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

A) 1948 ஜூன்

B) 1948 ஜூலை

C) 1948 அக்டோபர்

D) 1948 டிசம்பர்

வேவல் பிரபு ______________இல் அரசபிரதிநிதி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அப்பதவிக்கு மெளண்ட்பேட்டன் பிரபு நியமிக்கப்பட்டார்.

A) 1947 பிப்ரவரி 21

B) 1947 மார்ச் 22

C) 1947 ஏப்ரல் 23

D) 1947 ஏப்ரல் 28

(குறிப்பு: மெளண்ட்பேட்டன் இந்தியப் பிரிவினையை ஏற்படுத்த ஒரு தெளிவான திட்டத்தைக் கொண்டிருந்தார். அதன்படி பஞ்சாபை மேற்கு-கிழக்காகப் பிரிப்பதும், அது போன்றே வங்காளத்தைப் பிரித்து அதன் மேற்குப் பகுதியை இந்தியா வைத்துக்கொள்ளவும் கிழக்குப் பகுதியைப் பாகிஸ்தானின் அங்கமாக மாற்றவும் அம்சங்கள் இருந்தன.)

காங்கிரஸ் செயற்குழு ______________இல் இந்திய பிரிவினைத் திட்டத்திற்கு உடன்படுவதாக மெளண்ட்பேட்டனிடம் தெரிவித்தது.

A) 1947 மார்ச் 28

B) 1947 ஏப்ரல் 1

C) 1947 ஏப்ரல் 21

D) 1947 மே 1

(குறிப்பு: இதையடுத்து லண்டன் சென்று திரும்பிய அரசபிரதிநிதி இந்திய பிரிவினைக்கான வரைவை வெளியிட்டதோடு பிரிட்டிஷார் குறித்த தேதிக்கு முன்பாகவே 1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியாவை விட்டு மொத்தத்தில் விலக விரும்புவதாகத் தெரிவித்தார்.)

அனைத்திந்திய காங்கிரஸ் குழு 1947 ஜூன் 15 இல் கூடிய போது ____________ என்பவர் இந்தியப் பிரிவினைக்கான தீர்மானத்தை முன்னெடுத்தார்.

A) ஜவஹர்லால் நேரு

B) A.R. நிஷ்தர்

C) கோவிந்த் பல்லப் பந்த்

D) கோவிந்த ரானடே

(குறிப்பு: நேரு, படேல் போன்றவர்களின் அதிகாரமட்ட வலியுறுத்தும் திறனும், காந்தியடிகளின் தார்மீக சக்தியுமே அனைத்திந்திய காங்கிரஸ் குழுவில் இத்தீர்மானம் வெற்றி பெறக்காரணிகளாக அமைந்தன.)

பொருத்துக.

1. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் i) டோஜா

2. சீனக் குடியரசுத் தலைவர் ii) வின்ஸ்டன் சர்ச்சில்

3. பிரிட்டிஷ் பிரதமர் iii) ஷியாங் கே ஷேக்

4. ஜப்பான் பிரதமர் iv) எஃப்.டி. ரூஸ்வெல்ட்

A) i iv iii ii

B) i iii ii iv

C) iv iii ii i

D) iv ii iii i

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!