Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

காந்தியடிகள் தேசிய தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் 12th History Lesson 4 Questions in Tamil

12th History Lesson 4 Questions in Tamil

4] காந்தியடிகள் தேசிய தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

1) மகாத்மா காந்தி பிறந்த ஆண்டு எது?

A) 1867ஆம் ஆண்டு

B) 1868ஆம் ஆண்டு

C) 1869ஆம் ஆண்டு

D) 1870ஆம் ஆண்டு

(குறிப்பு – மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1879 ஆம் ஆண்டு, அக்டோபர் 2ஆம் நாள், குஜராத் மாநிலத்தில் உள்ள கடற்கரையோர நகரான போர்பந்தரில் பிறந்தார். இவரது தந்தை கரம்சந்த் காந்தி மற்றும் தாயார் புத்லி பாய் என்பவராவார். மகாத்மா காந்தி 1893 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு சென்றார்.)

2) மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியாவுக்கு திரும்பினார்?

A) ஜனவரி 9, 1914இல்

B) ஜனவரி 9, 1915இல்

C) ஜனவரி 9, 1916இல்

D) ஜனவரி 9, 1917இல்

(குறிப்பு – 1893ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்கா சென்றார். பின்னர் ஜனவரி 9ஆம் நாள் 1915 ஆம் ஆண்டு அவர் இந்தியா திரும்பினார். தென்னாபிரிக்காவின் இனவாத அரசு விதித்த சமூக சமத்துவம் இல்லாத நிலைமை களுக்கு எதிரான காந்தியடிகளின் போராட்டங்கள் ஒரு சாதனையாக இருந்தன)

3) மகாத்மா காந்தியின் அரசியல் குரு கீழ்க்கண்டவரில் யார்?

A) சர்தார் வல்லபாய் பட்டேல்

B) கோபால கிருஷ்ண கோகலே

C) சுபாஷ் சந்திரபோஸ்

D) சந்திர சேகர ஆசாத்

(குறிப்பு – இந்திய தேசிய சக்திகளுக்கு உதவ வேண்டும் என்று காந்தியடிகள் உறுதியாக விரும்பினார். தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்காக முன்னர் ஆதரவு திரட்டிய போது காங்கிரஸ் தலைவர்களுடன் அவர் தொடர்பில் இருந்ததால்,காந்தியடிகளுக்கு இந்தியத் தலைவர்களுடன் தொடர்பு இருந்தது. கோபால கிருஷ்ண கோகலேவின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரை தனது அரசியல் குருவாக மகாத்மா காந்தி அடையாளம் கண்டார்.)

4) மகாத்மா காந்தி குறித்த கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு மேல் வசித்தார்.

கூற்று 2 – மகாத்மா காந்தி கோபால கிருஷ்ண கோகலேவின் அறிவுரையை ஏற்று இந்தியா திரும்பினார்.

கூற்று 3 – மகாத்மா காந்தி தன்னாட்சி இயக்கம் (ஹோம் ரூல் லீக்) என்ற அரசியல் இயக்கதினில் தீவிரமாக பங்கேற்கவில்லை.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – இந்தியாவை விட்டு 20 ஆண்டுகள் வெளியே இருந்த காந்தியடிகள், கோபால கிருஷ்ண கோகலேவின் அறிவுரையை ஏற்று இந்தியா திரும்பியவுடன் நாட்டின் நிலைமையோடு தன்னை பொருத்திக் கொள்ளும் விதமாக நாடு முழுவதும் ஓராண்டு காலத்துக்கு பயணம் மேற்கொண்டார்.அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவிய காந்திஜி தன்னாட்சி இயக்கம் போன்ற அரசியல் இயக்கங்களில் தீவிரமாக பங்கேற்கவில்லை)

5) சம்பரான் இயக்கம் நடைபெற்ற ஆண்டு எது?

A) 1916ஆம் ஆண்டு

B) 1917ஆம் ஆண்டு

C) 1918ஆம் ஆண்டு

D) 1919ஆம் ஆண்டு

(குறிப்பு – 1917ஆம் ஆண்டு, சம்பரானில் இருந்த விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று இந்திய மக்களை ஒன்றிணைக்கும் முதல் முயற்சியை காந்தியடிகள் மேற்கொண்டார். அவர் போராட்டத்தை துவங்கும் முன் நிலைமை குறித்து விரிவாக ஆராய்ந்தார். சம்பரான் மாவட்டத்தில் இருந்த கருநீலச்சாய (இண்டிகோ) விவசாயிகள் ஐரோப்பிய வர்த்தகர்களால் பெரிதும் ஏமாற்றப்பட்டனர். அவர்களிடம் இருந்த 3/20 பங்கு நிலத்தில் விவசாயிகள் கருநீலச்சாயத்தை கட்டாயம் விளைவிக்க வேண்டும், அதனையும் வர்த்தகர்கள் நிர்ணயிக்கும் விலைக்கே விற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர்)

6) சம்பரான் இயக்கம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – சம்பரான் மாவட்டம், பீகார் மாநிலத்தில் உள்ளது.

கூற்று 2 – ராஜேந்திர பிரசாத், ஆச்சாரிய கிருபாளினி,மகாதேவ தேசாய், மஜாருல் ஹக் போன்றவர்கள் சம்பரான் இயக்கத்திற்கு (1917ஆம் ஆண்டு) ஆதரவு தெரிவித்தவர்கள் ஆவர்.

கூற்று 3 – சம்பரான் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த மகாத்மா காந்தி, பிரிட்டிஷ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – ராஜேந்திர பிரசாத், ஆச்சாரிய கிருபாளினி,மகாதேவ தேசாய், மஜாருல் ஹக் போன்ற உள்ளூர் தலைவர்களுடன் காந்தியடிகள் விரிவான விசாரணை மேற்கொண்டார்.உடனடியாக அந்த மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் காந்தியடிகளுக்கு உத்தரவிட்டனர். ஆனால் வெளியேற மறுத்த காந்தியடிகள், இந்த உத்தரவை நியாயமற்றது என்று மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி உத்தரவை மீறுவதன் மூலம் ஏற்படும் விளைவுகளை சந்திக்க போவதாகவும் கூறினார்)

7) கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறானது?

A) சம்பரான் இயக்க போராட்டத்தின் விளைவாக, காந்தியடிகளை ஒரு உறுப்பினராக கொண்டு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

B) அகமதாபாத் துணிஆலைப் பணியாளர்களுக்கும், ஆலை முதலாளிகளுக்கும் இடையே நிலவிய பிரச்சனையின் போது காந்தியடிகள் இரு தரப்பையும் சந்தித்து பேசினார்.

C) அகமதாபாத் ஆலை ஊழியர்களுக்கு 50 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு காந்தியடிகள் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

D) அகமதாபாத் துணி ஆலை ஊழியர்களுக்கு ஆதரவாக மகாத்மா காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். இறுதியில் அந்தப் போராட்டம் வெற்றி பெற்றது.

(குறிப்பு – அகமதாபாத் நகர மையத்தில் பணியாளர்களுக்காக மக்களை ஒன்று திரட்டும் பணி மகாத்மா காந்திக்கு காத்திருந்தது. துணி ஆலை பணியாளர்களுக்கும், ஆலை முதலாளிகளுக்கும் இடையே பிரச்சனை நிலவியது. மிகக் குறைவான ஊதியம் பெற்ற பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்க முதலாளிகள் மறுத்ததையடுத்து, 35 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு காந்தியடிகள் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் அவர்களுக்கு ஆதரவாக காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன்மூலம் ஆலைமுதலாளிகள், தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.)

8) கேதா போராட்டம் நடைபெற்ற ஆண்டு எது?

A) 1917 ஆம் ஆண்டு

B) 1918 ஆம் ஆண்டு

C) 1919 ஆம் ஆண்டு

D) 1920 ஆம் ஆண்டு

(குறிப்பு – கேதாமாவட்ட விவசாயிகள் பருவமழை பொய்த்ததன் காரணமாக சிரமத்தை சந்தித்தனர். 1918ஆம் ஆண்டில் நிலவருவாய் வசூலை ரத்து செய்யுமாறு காலனி ஆட்சி நிர்வாகத்திடம் அவர்கள் கூறினர். அரசின் பஞ்சகால விதியின்படி, பயிர் சாகுபடி சராசரியாக 25 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் பயிரிடுவோர் முழு நிலவரி ரத்திற்கு தகுதி பெறுவர்.ஆனால் நிர்வாகத்தினர் இந்த விதியை அமல்படுத்த மறுத்துவிட்டு முழுமையாக பணத்தை செலுத்துமாறு துன்புறுத்தினர். எனவே கேதா போராட்டம் தொடங்கியது.)

9) கேதா போராட்டத்தின் போது மகாத்மா காந்தியடிகள் கீழ்க்கண்டவரில் யாரிடம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்?

A) ஆச்சார்ய கிருபாளினி

B) விதல்பாய் பட்டேல்

C) மஹாதேவ தேசாய்

D) மஜாருல் ஹக்

(குறிப்பு – கேதா போராட்டத்தின்போது பிளேக் நோயால் அதிக விலை ஏற்றத்தால் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காந்தியடிகள் உறுப்பினராக அங்கம் வகித்த இந்திய பணியாளர் சங்கத்தினர் ஏழை விவசாயிகள் சார்பாக உடன் இணைந்து தலையிட்டு காந்தியடிகள் பணம் செலுத்துவதை நிறுத்தி விட்டு இந்திய தேசியம் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்த்து சாகும்வரை போராட்டம் நடத்துமாறு அறிவுறுத்தினார்)

10) 1905ஆம் ஆண்டு, இந்திய பணியாளர் சங்கத்தை தோற்றுவித்தவர் கீழ்க்கண்டவரில் யார்?

A) ஆச்சார்ய கிருபாளினி

B) கோபால கிருஷ்ண கோகலே

C) மஹாதேவ தேசாய்

D) மகாத்மா காந்தி

(குறிப்பு – பல்வேறு சாதி, பிரதேசங்கள், மதங்கள் ஆகியவற்றை சேர்ந்த இந்தியர்களுக்கு நலப்பணிகளில் பயிற்சி வழங்க இந்திய பணியாளர் சங்கத்தை கோபால கிருஷ்ண கோகலே 1905 ஆம் ஆண்டு நிறுவினார். பின்தங்கிய, ஊரக மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நாட்டின் முதலாவது மதச்சார்பற்ற அமைப்பு இது ஆகும். இதன் உறுப்பினர்கள் நிவாரணப் பணி, கல்வி அறிவூட்டல் மற்றும் இதர சமூக கடமைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்)

11) கோபால கிருஷ்ண கோகலே உருவாக்கிய இந்திய பணியாளர் சங்கத்தின் தலைமையகம் எங்கு அமைந்திருந்தது?

A) பூனா

B) சென்னை

C) மும்பை

D) நாக்பூர்

(குறிப்பு – 1905 ஆம் ஆண்டு கோபால கிருஷ்ண கோகலே இந்திய பணியாளர் சங்கத்தை நிறுவினார். ஐந்தாண்டு காலத்துக்கு பயிற்சி பெற வேண்டிய உறுப்பினர்கள் குறைவான சம்பளத்திற்கு பணியாற்ற ஒப்புக்கொள்ள வேண்டும் இந்த அமைப்புக்கு தலைமையகம் மகாராஷ்டிராவின் பூனாவில் அமைத்திருந்தது. சென்னை, மும்பை, அலகாபாத் மற்றும் நாக்பூரில் முக்கிய கிளைகளும் இருந்தன)

12) மாண்டேகு-செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம் எந்த ஆண்டில் கொண்டு வரப்பட்டன?

A) 1918 ஆம் ஆண்டில்

B) 1919 ஆம் ஆண்டில்

C) 1920 ஆம் ஆண்டில்

D) 1921 ஆம் ஆண்டில்

(குறிப்பு – இந்தியாவுக்கான பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் எட்வின் மாண்டேகுவும், அரசப் பிரதிநிதி(வைசிராய்) செம்ஸ்ஃபோர்டும் இந்தியாவுக்கான அரசியல் சாசன மாற்றங்களை அறிவித்தனர். அவையே பின்னர் 1919 ஆம் ஆண்டில் இந்திய கவுன்சில் சட்டம் என்று அழைக்கப்பட்டன. மாகாண சட்டப்பேரவையில் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் விரிவுபடுத்த இந்த சட்டம் வகை செய்தது)

13) மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்த்திருத்தம் மூலம் கீழ்க்காணும் எந்த துறைகள் ஆங்கிலேய அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது?

I. நிதி

II. சட்டம், ஒழுங்கு

III. கல்வி

A) I மட்டும்

B) II, III மட்டும்

C) I, II மட்டும்

D) I, III மட்டும்

(குறிப்பு – மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம் மூலம், இரட்டை ஆட்சியின் கீழ் மாகாண அரசுகளுக்கு நிர்வாகத்தில் அதிக பங்கு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு, நிதி ஆகிய முக்கியமான துறைகள், ஆங்கிலேயருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் ஆளுநர்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர். சுகாதாரம், கல்வி, உள்ளாட்சி போன்ற இதர துறைகள் இந்திய பிரதிநிதிகளுக்கு மாற்றப்பட்டது)

14) மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்களில் கீழ்க்கண்டவகைகளில் எது தவறானது?

A) இரட்டை ஆட்சியின் கீழ் மாகாண அரசுகளுக்கு நிர்வாகத்தில் அதிக பங்கு வழங்கப்பட்டது.

B) நிதி, சுகாதாரம், கல்வி போன்ற துறைகள் இந்திய பிரதிநிதிகளுக்கு மாற்றப்பட்டது.

C) சிறப்பு அதிகாரங்களின் கீழ் அந்தந்த மாகாணங்களின் ஆளுநர்கள் அமைச்சர்களை அதிகாரம் செய்ய முடியும்.

D) சட்டம் ஒழுங்கு துறை ஆங்கிலேயருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் ஆளுநர்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர்

(குறிப்பு – நிதி, சட்டம் ஒழுங்கு துறை போன்ற முக்கிய துறைகள் ஆங்கிலேயருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் ஆளுநர்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர். சுகாதாரம், கல்வி போன்ற இதர துறைகள் இந்திய பிரதிநிதிகளுக்கு மாற்றப்பட்டது. இத்தகைய மாற்றப்பட்ட துறைகளுக்கு பொறுப்பேற்ற அமைச்சர்கள் சட்டப்பேரவைகளுக்கு கடமைப்பட்டவர்கள் ஆனார்கள். ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகளுக்கு பொறுப்பை ஏற்றவர்கள் சட்டப்பேரவைக்கு கடமைப்பட்டவர்கள் இல்லை. இதனால் இந்த அமைப்பு முழுவதுமே நகைப்புக்கிடமாகின )

15) 1919ஆம் ஆண்டு மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் போது மத்திய சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?

A) 144 உறுப்பினர்கள்

B) 154 உறுப்பினர்கள்

C) 164 உறுப்பினர்கள்

D) 174 உறுப்பினர்கள்

(குறிப்பு – மத்திய சட்ட பேரவையிலிருந்த 144 மொத்த உறுப்பினர்களில் 41 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். மாநிலங்களவை என்றழைக்கப்பட்ட மேலவையில் மொத்தம் இருந்த 60 உறுப்பினர்களில் 26 நபர்கள் நியமன உறுப்பினர்களாக இருந்தனர். கவர்னர் ஜென்ரல் மற்றும் அவரது நிர்வாக கவுன்சில் மீது இரண்டு அவைகளுக்கும் எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் மாகாண அரசுகள் மீது மத்திய அரசுக்கு முழு கட்டுப்பாடு இருந்தது)

16) 1918ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் சிறப்பு அமர்வு எந்த இடத்தில் நடைபெற்றது?

A) சென்னை

B) பம்பாய்

C) கொல்கத்தா

D) பூனே

(குறிப்பு – பிரிட்டனின் போர் முயற்சிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்த இந்தியாவின் பொது நலன் மீது அக்கறை கொண்ட மக்கள் மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தில் நிறைய எதிர் பார்த்தனர். ஆனால் இந்த மாண்டேகு செம்ஸ்போர்டு திட்டம் 1918 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட போது, இந்தியா முழுவதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 1918 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பம்பாயில் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் சிறப்பு அமர்வில், இந்த திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த திட்டம் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்தது)

17) நாம சூத்ரா இயக்கம் எந்த இடத்தில் தொடங்கப்பட்டது?

A) பீகார்

B) மேற்கு வங்கம்

C) மகாராஷ்டிரா

D) ஆந்திரப் பிரதேசம்

(குறிப்பு – பல்வேறு அடுக்குகள் கொண்ட இந்திய சமூகமும் அதனுள் இருந்த முரண்பாடுகளும் உயர்வகுப்பு ஆளுமையை கேள்வி கேட்கும் சாதி அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் தோன்ற ஏதுவாக அமைந்தன வங்காளத்திலும், இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலும் தொடங்கப்பட்ட நாமசூத்ரா இயக்கம் இந்த நூற்றாண்டின் திருப்பத்தில் தங்கள் குரல்களை எழுப்பின.

18) பொருத்துக

I. நாம சூத்ரா இயக்கம் – a) தமிழகம்

II. ஆதிதர்மா இயக்கம் – b) மேற்குவங்கம்

III. சத்யசோதக் இயக்கம் – c) வடமேற்கு இந்தியா

IV. திராவிட இயக்கம் – d) மேற்கு இந்தியா

A) I-b, II-c, III-d, IV-a

B) I-c, II-b, III-d, IV-a

C) I-d, II-b, III-c, IV-a

D) I-d, II-c, III-b, IV-a

(குறிப்பு – வங்காளத்திலும், இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலும் தொடங்கப்பட்ட நாம சூத்ரா இயக்கம், இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் தொடங்கப்பட்ட ஆதிதர்மா இயக்கம், மேற்கு இந்தியாவில் சத்திய சோதக் இயக்கம் மற்றும் தென்னிந்தியாவின் திராவிட இயக்கங்கள் இந்த நூற்றாண்டின் திருப்பத்தில் தங்கள் குரல்களை எழுப்பின. பிராமணரல்லாத தலைவர்களால் நடத்தப்பட்ட இந்த இயக்கங்கள், பிராமணர்கள் மற்றும் இதர உயர் வகுப்பினரின் மேன்மை குறித்து கேள்வி எழுப்பின)

19) ஜோதி ராவ் பூலேவின் புத்தகம் குலாம் கிரி என்ற தலைப்பில் எந்த ஆண்டு வெளிவந்தது?

A) 1870 இல்

B) 1872 இல்

C) 1874 இல்

D) 1876 இல்

(குறிப்பு – 1872 இல் ஜோதிராவ்பூலேவின் புத்தகம் குலம்கிரி என்ற தலைப்பில் முதலில் வெளிவந்தது. அவரது அமைப்பு, சத்தியசோதக்சமாஜ், பிராமணியத்தின் கொடுங்கோல் மற்றும் சுரண்டல் ஆகியவற்றிலிருந்து ஒடுக்கப்பட்ட சாதியினரை விடுவிப்பதற்கான அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. காலனித்துவ நிர்வாகிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை மறைமுகமாக இப்போக்கை ஊக்குவித்தனர்)

20) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – காலனித்துவ காலத்தில் இந்நாட்டு மக்களுக்கென அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து புதிய வாய்ப்புகளிலும் பிராமணிய ஆதிக்கம் அதிகரித்து தொடங்கியபோது, காலனி அரசாங்கம் 10 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளை வெளியிட தொடங்கியது.

கூற்று 2 – உள்ளூர் பொது கருதினால் அங்கீகரிக்கப்பட்ட சமூக முன்னுரிமையின் அடிப்படையில் சாதிகளை வகைப்படுத்தி மக்கள்த்தொகை கணக்கெடுப்பு குறிப்பிட்டபோது சாதிகள் இடையே மோதல்கள் எழுந்தன.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – ஜோதி ராவ் பூலே அமைப்பு, சத்திய சோதக் சமாஜ், பிராமணியத்தின் கொடுங்கோல் மற்றும் சுரண்டல் ஆகியவற்றிலிருந்து ஒடுக்கப்பட்ட சாதியினரை விடுவிப்பதற்கான அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். காலனிய அரசாங்கம் உள்ளூர் பொது கருதினால் அங்கீகரிக்கப்பட்ட சமூக முன்னுரிமையின் அடிப்படையில் சாதிகளை வகைப்படுத்தி மக்கள் தொகை கணக்கெடுப்பில் குறிப்பிட்டது. இது சாதிகளுக்கு இடையே மோதல்கள் உருவாக வழி செய்தன. உரிமை குரல்களும், அவற்றை எதிர்த்து உரிமையோடு மறுப்பதும் என இந்த அமைப்புகளின் தலைவர்கள் தாங்கள் முக்கியத்துவம் பெறுவதற்காக போராடத் துவங்கினர்.)

21) வாக்குரிமை அரசியல் கீழ்க்காணும் எந்த காலகட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது?

A) 1880 களில்

B) 1890 களில்

C) 1900 களில்

D) 1910 களில்

(குறிப்பு – சமூக அடையாளத்தை பெறுவதற்கு தங்கள் சாதிகளை போராட்டத்திற்கு ஒருங்கிணைக்க வேண்டும் என்று சாதிகளின் முன்னணி தலைவர்கள் உணர்ந்தனர். அங்கீகாரத்தை எதிர்த்து அவர்களில் பலர், ஆண்டுகள் செல்லச் செல்ல அவர்களது சாதி சார்ந்த மாணவர்கள் கல்வி பெறவும், கல்வி பெற்ற இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெறவும் உதவினர். இதனிடையே, வாக்குரிமை அரசியல் 1880களில் அறிமுகம் செய்யப்பட்டு இது போன்ற அமைப்புகளின் இடத்தை அவை நிரப்பின)

22) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பிராமணரல்லாதார் இயக்கத்திலிருந்து இரண்டு போக்குகள் வெளியாகின கீழ்நிலை ஜாதிகளுக்கு சமஸ்கிருதத்தை சொல்லிக்கொடுப்பது, மற்றொன்று அந்த காலகட்டத்தில் தீவிரமாக இருந்த ஏழைகளுக்கு, முற்போக்கு தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்பது.

II. வடக்கு மற்றும் கிழக்கு சாதி இயக்கங்கள் பெரும்பாலும் சமஸ்கிருதம் சார்ந்தும், மேற்கத்திய மற்றும் தெற்கத்திய இயக்கங்கள் பிளவுபட்டு அப்போது வளர்ந்து வந்த தேசியவாதம் மற்றும் திராவிட இடதுசாரி இயக்கங்களை சேர்த்துக் கொண்டன.

III. அனைத்து இயக்கங்களும் பிராமண ஆதிக்கம் என்று குறிப்பிட்டு அதனை எதிர்த்து கடுமையாக விமர்சனம் செய்தன. தங்கள் அமைப்புகள் மூலம் நீதிவேண்டி அரசிடம் கோரிக்கை வைத்தன.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – பம்பாய் மற்றும் மதராஸ் மாகாணங்களில் அரசு சேவைகள் மற்றும் பொதுக் கலாச்சாரம் சார்ந்த துறைகளில் பிராமணர்கள் தெளிவாக ஆதிக்கம் செலுத்தினர். அதன் விளைவு பிராமணரல்லாதோரின் அரசியலுக்கு வழிவகுத்தது. இந்த இயக்கத்தின் வடிவமைப்பு சற்று வித்தியாசமாக இருந்தது. பிராமண ஆதிக்கத்திற்கு அதிக காரணம் அவர்கள் வெறும் 3.2 சதவீதம் மட்டுமே மக்கள் தொகையில் இடம்பெற்றிருந்தாலும், அவர்களில் 72% பட்டதாரிகளாக இருந்தனர். பிராமணரல்லாதோர் சாதிகளைச் சேர்ந்த கல்விகற்ற மற்றும் வர்த்தக சமூக உறுப்பினர்களின் சவால்களை அவர்கள் சந்திக்க நேர்ந்தது)

23) பிராமணரல்லாதோரின் இயக்கமாக பிராமணேதரா பரிஷத் கீழ்காணும் எந்த மாநிலத்தில் தோன்றியது?

A) மும்பை

B) சென்னை

C) கல்கத்தா

D) பீகார்

(குறிப்பு – இந்தியாவை பிரித்தாளும் சூழ்ச்சியில் பிராமணரல்லாதோரின் உண்மையான குறைகளை பயன்படுத்திக்கொள்ள காலனி ஆதிக்க அரசு முயன்றது. பம்பாய் மாகாண பிராமணேதரா பரிஷத், மதராஸ் மாகாண நீதிக்கட்சி ஆகியவைகளுக்கு இது குறைந்தபட்சம் 1930 வரை பொருந்தியது.தீவிரமான தலித் பகுஜன் இயக்கம் அம்பேத்கர் தலைமையிலும், சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி தலைமையிலும் உருவாகி சமூகநீதி சார்ந்த அடிப்படை மாற்றம் கோரும் இயக்கங்கள் இந்த இரண்டு பகுதிகளிலும் செயல்பட்டன)

24) ரௌலட் சட்டம் கீழ்காணும் எந்த ஆண்டில் கொண்டுவரப்பட்டது?

A) 1919 இல்

B) 1920 இல்

C) 1921 இல்

D) 1922 இல்

(குறிப்பு – மிதவாத தேசியவாதிகளுக்கு முக்கியத்துவம் தருவதும், தீவிர தேசியவாதிகளை தனிமைப்படுத்தும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்தது. 1919ஆம் ஆண்டில் இந்திய கவுன்சில் சட்டம் மற்றும் ரௌலட் சட்டம் ஆகியவை ஒரே ஆண்டில் இயற்றப்பட்டன.உலகப் போர் நடந்த காலகட்டத்தில் தீவிரத் தன்மை உடையோர் மற்றும் தேசபக்த புரட்சியாளர்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகள் தொடர்ந்தன. பலர் தூக்கில் தொங்க விடப்பட்டனர் அல்லது நீண்டகாலத்திற்கு சிறையில் அடைக்கப்பட்டனர்)

25) ரௌலட் சட்டம் பற்றி கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரௌலட் சட்டத்தை ஆங்கிலேய ஆதிக்க அரசு நிறைவேற்றியது. எந்தவித நீதிமன்ற விசாரணையும் இன்றி எவரையும் சிறையிலடைக்க அரசுக்கு இந்த சட்டம் அதிகாரம் அளித்தது.

II. காந்தி அடிகள் உருவாக்கிய சத்யாகிரக சபை, இந்த சட்டத்தை மீறுவது என்று முதல் முதலாக உறுதி ஏற்றது.

III. ரௌலட் சட்டத்திற்கு எதிராக தொழிலாளர்கள், கைவினைகலைஞர்கள், விவசாயிகள் ஆகியோரின் பங்கேற்புடன் சத்தியாகிரகம் என்ற ஆயுதம் பயன்படுத்தப்பட்டது.காதி இதன் அடையாளமானது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – இதன் மூலம் மக்கள் விழிப்புணர்வு அடைந்து அரசியல் பணிகளில் தீவிரம் காட்டினால் தான் இந்தியாவில் சுயராஜ்யம் என்பது நடைமுறைக்கு வரும் என காந்தியடிகள் நம்பினார். 1919 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ரௌலட் சட்டத்திற்கு எதிராக வேலை நிறுத்தத்தை கடைபிடிக்குமாறு காந்தியடிகள் அழைப்பு விடுத்தவுடன், நாடு முழுவதும் ஊக்கம் பிறந்தது. இந்துக்களையும், முஸ்லிம்களையும் ஒன்றிணைத்த கிலாபத் இயக்கத்தை காந்தியடிகள் இத்துடன் இணைத்தார்.)

26) ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த தினம் கீழ்கண்டவற்றுள் எது?

A) ஏப்ரல் 11, 1919

B) ஏப்ரல் 12, 1919

C) ஏப்ரல் 13, 1919

D) ஏப்ரல் 14, 1919

(குறிப்பு – நாடு முழுவதும் நடந்த மக்கள் போராட்டங்கள் மற்றும் மக்களிடம் காணப்பட்ட மகத்தான தன்னெழுச்சி காரணமாக காலனி அரசு ஆத்திரமடைந்தது. 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ம் நாள், அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் பகுதியில் நிராயுதபாணிகளான மக்கள் மீது மிகக் கடுமையான அரசியல் குற்றங்கள் இழைக்கப்பட்டன. ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர்.இது ஜாலியன் வாலாபாக் படுகொலை என அழைக்கப்படுகிறது.)

27) கீழ்க்கண்டவற்றில் யாரை கைது செய்ததற்காக ஜாலியன்வாலாபாக் இடத்தில் மக்கள் அமைதியாக கூடி போராட்டம் நடத்தினர்?

I. சத்யபால்

II. சாய்புதீன் கிச்லு

III. முகமது அலி

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – சத்யபால் மற்றும் சைபுதீன் கிச்சுலு ஆகியோரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதியான வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்னுமிடத்தில் கூடினர். பஞ்சாபின் துணை நிலை ஆளுநராக மைக்கேல் ஓ டயரும், ராணுவ கமாண்டராக ஜெனரல் ரெஜினால்ட் டயரும் பதவி வகித்தனர். அவர்கள் இருவரும் தங்களுடைய அதிகாரங்களை பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பாடம் புகட்ட விரும்பி, நுழைவாயிலை மூடி விட்டு எந்திரத் துப்பாக்கி மூலம், குண்டுகள் தீரும் வரை சுடுமாறு ஜெனரல் டயர் உத்தரவிட்டார். இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்)

28) ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிர்வினையாக ரவீந்திரநாத் தாகூர், பிரிட்டிஷ் வைசிராய்க்கு எதிர்ப்பு கடிதத்தை எப்போது அனுப்பினார்?

A) மே 11ஆம் நாள், 1919

B) மே 21ஆம் நாள், 1919

C) மே 30ஆம் நாள், 1919

D) மே 31ஆம் நாள், 1919

(குறிப்பு – ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குப் பிறகு ரவீந்திரநாத் தாகூர் தனது அரச பட்டத்தை துறந்தார். 1919 ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி அரச பிரதிநிதிக்கு(வைசிராய்) அனுப்பிய எதிர்ப்பு கடிதத்தில் தாகூர் இவ்வாறு எழுதினார் “இணக்கமற்ற சூழல் நிலவும் வேளையில் அவமானத்தின் சின்னமாக இந்த மதிப்பிற்குரிய பட்டம் திகழ்கிறது. மனிதர்களாகக்கூட கருத முடியாத நிலையில் மதிப்பிழந்து போன எனது நாட்டு மக்களுக்கு ஆதரவாக, எனது தரப்பில் நான் மேற்கொள்ளும் செயலாக எனக்கு வழங்கப்பட்ட அனைத்து சிறப்பு பட்டங்களையும் திரும்ப ஒப்படைக்கிறேன்”)

29) ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிதீர்க்கும் விதமாக உத்தம்சிங், ஜெனரல் டயரை எந்த ஆண்டு கொலை செய்தார்?

A) 1939ஆம் ஆண்டு

B) 1940ஆம் ஆண்டு

C) 1941ஆம் ஆண்டு

D) 1943ஆம் ஆண்டு

(குறிப்பு – கால்சா ஆதரவற்றோர் காப்பகத்தில் வளர்க்கப்பட்ட சீக்கிய பதின்பருவ இளைஞரான, உதம்சிங் இந்த நிகழ்வை தமது கண்களால் கண்டார். ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிதீர்க்கும் விதமாக 1940 ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி லண்டனின் காக்ஸ்டன் அரங்கில் மைக்கேல் ஓ டயரை உத்தம்சிங் படுகொலை செய்தார்.லண்டனின் பெண்டோன்வில்லே சிறையில் உதம் சிங் தூக்கிலிடப்பட்டார்)

30) கிலாபத் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் கீழ்க்கண்டவரில் யார்?

I. மௌலானா சௌகத் அலி

II. முகமது அலி

III. மௌலானா அபுல் கலாம் ஆசாத்

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, III மட்டும்

D) இம்மூவரும்

(குறிப்பு – இந்து முஸ்லிம் ஒற்றுமை குறித்து அக்கறை கொண்ட காந்தியடிகளும், காங்கிரசும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டதாக உணரப்பட்ட முஸ்லிம் தோழர்களுக்கு துணையாக நின்றனர். மௌலானா சவுக்கத் அலி மற்றும் முகமது அலி என்ற சகோதரர்கள் மௌலானா அபுல் கலாம் ஆசாத் உடன் இணைந்து கிலாபத் இயக்கத்தின் முக்கிய தலைவராக விளங்கினர்)

31) ஒத்துழையாமை இயக்கம் தோன்றிய நாள் கீழ்க்கண்டவற்றுள் எது?

A) 1920, ஆகஸ்ட் 10

B) 1920, ஆகஸ்ட் 15

C) 1920, ஆகஸ்ட் 20

D) 1920, ஆகஸ்ட் 31

(குறிப்பு – கிலாபத் மாநாட்டில் காந்தி அடிகளின் வற்புறுத்தலின் பேரில் 1920 ஆகஸ்ட் 31ஆம் நாள், ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நீதிமன்றங்களை புறக்கணிக்கும் திட்டத்தை அலகாபாத்தில் கூடிய அனைத்து கட்சி கூட்டம் முடிவு செய்தது 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் சிறப்பு அமர்வில் காலனி ஆதிக்க அரசுடன் ஒத்துழையாமை கடைபிடிப்பது என்ற காந்தியடிகளின் யோசனைகளை ஏற்றுக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது)

32) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பள்ளிகள் கல்லூரிகள் நீதிமன்றங்கள் அரசு அலுவலகங்கள் சட்டப்பேரவையில் அன்னிய பொருட்களை புறக்கணித்தல் அரசு வழங்கிய பட்டங்களையும் விருதுகளையும் திரும்ப ஒப்படைப்பது ஆகியன ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்க்கப்பட்டன.

II. தேசிய பள்ளிகள், பஞ்சாயத்துகள் ஆகியன அமைக்கப்பட்டு சுதேசி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும்.

III. வரிகொடா இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் போன்ற பல இயக்கங்களை, பின்னர் இந்த போராட்டத்தில் இணைக்க முடிவு செய்யப்பட்டது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – 1920 ஆம் ஆண்டு நாகூரில் நிகழ்ந்த காங்கிரஸ் அமர்வில், முந்தைய தீர்மானங்கள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. மொழி சார்ந்த மாகாண காங்கிரஸ் கமிட்டிகளை அங்கீகரித்து அமைப்பதற்கு வகை செய்யும், மற்றொரு முக்கிய தீர்மானம் நாக்பூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இதனால் பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் அந்த இயக்கத்தில் சேர்ந்தனர்)

33) வேல்ஸ் இளவரசர் எந்த ஆண்டு இந்தியாவின் பல நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டார்?

A) 1920 இல்

B) 1921 இல்

C) 1922 இல்

D) 1923 இல்

(குறிப்பு – ஒத்துழையாமை இயக்கத்தின்போது உள்ளூர் மக்களால் ஆயிரக்கணக்கான பள்ளிகள், நூற்றுக்கணக்கான கல்லூரிகள் மற்றும் வித்யாபீடங்கள் நிறுவப்பட்டன. பல முன்னணி வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலை கைவிட்டனர். தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்ட அலி சகோதரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்குமாறு மக்களுக்கு அந்தந்த பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் அழைப்பு விடுத்தன. இந்தியாவின் பல நகரங்களுக்கு 1921 ஆம் ஆண்டில் வேல்ஸ் இளவரசர் மேற்கொண்ட பயணமும் புறக்கணிக்கப்பட்டது.)

34) ஒத்துழையாமை இயக்கத்தின்போது நடைபெற்ற சம்பவங்களில் கீழ்க்கண்டவற்றில் எது சரியானது?

I. சிராலா-பெராலாப் அப்பகுதியை சேர்ந்த அனைத்து மக்களும் வரி செலுத்த மறுத்து கூட்டம் கூட்டமாக நகரங்களை காலி செய்து வெளியேறினார்கள்.

II. நூற்றுக்கணக்கான கிராம பட்டேல்களும்,ஷான்போக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்

III. ராஜாஜி, சத்தியமூர்த்தி, தந்தை பெரியார் ஆகிய தலைவர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்பட்டது.

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ஒத்துழையாமை இயக்கம் போராட்டத்தின் இந்த காலகட்டத்தில் தென்னிந்தியா முன்னேறி சென்றது. ஆந்திர விவசாயிகள் ஜமீன்தார்களுக்கு வழங்க வேண்டிய வரிகளை நிறுத்தி வைத்தனர். நூற்றுக்கணக்கான கிராம பட்டேல்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். கேரளாவில் ஜென்மி- களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்)

35) சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கப் போவதாக காந்தியடிகள் எந்த ஆண்டு அறிவித்தார்?

A) 1922, பிப்ரவரி

B) 1921, பிப்ரவரி

C) 1923, பிப்ரவரி

D) 1924, பிப்ரவரி

(குறிப்பு – உத்திரப் பிரதேசம், வங்காளம், அசாம், பீகார், ஒரிசா ஆகியவற்றின் பல பகுதிகளில் இருந்த கீழ் வகுப்பு மக்கள் இந்த போராட்டங்கள் காரணமாக தீவிரமாக பாதிக்கபபட்டதாக இந்திய அரசுதுறை செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் அரச பிரதிநிதி (வைசிராய்) ஒப்புக்கொண்டிருந்தார். இந்த இயக்கத்தின் தீவிரம் கண்டு ஊக்கம் பெற்ற காங்கிரஸ், தனது சிறப்பு மாநாட்டில் இந்த இயக்கத்தை இன்னும் தீவிரமாக்குவதைபற்றி உறுதியுடன் கூறியது. அரசு 7 நாட்களுக்குள் பத்திரிக்கை சுதந்திரத்தை மீட்டுக் சிறைக்கைதிகளை விடுதலை செய்யாவிட்டால், பர்தோலியில் வரிகொடா பிரச்சாரங்கள் உட்பட சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கப் போவதாக காந்தியடிகள் பிப்ரவரி 1922 ஆம் ஆண்டு அறிவித்தார்.)

36) அல்லூரி சீதாராம ராஜூ தலைமையில் எந்த இடத்தில் பழங்குடியினர் கிளர்ச்சி செய்தனர்?

A) ஆந்திரா

B) கர்நாடகா

C) கேரளா

D) ஒடிசா

(குறிப்பு – நாடு விடுதலை அடைநது சுயராஜ்ஜியம் கிடைத்துவிடும் என்று பொதுமக்களும் தேசியவாத தொண்டர்களும் அதிகம் ஊக்கம் கொண்டு போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்றனர். காடுகளில் வசித்த பழங்குடிகள் உள்பட அனைத்து வகுப்பு மக்களும் இது பாதித்ததோடு, ஈர்க்கவும் செய்தது. கலவரங்கள் மற்றும் மோசமான வன்முறைகளும் நாட்டில் நிகழ்ந்தன. மலபார் மற்றும் ஆந்திராவில் இரண்டு வன்முறை கிளர்ச்சிகள் நடந்தன. ஆந்திராவின் ராம்பா பகுதியில், அல்லூரி சீதா ராம ராஜு தலைமையில் பழங்குடியினர் கிளர்ச்சி செய்தனர். மலபாரில் முஸ்லிம் விவசாயிகள்(மாப்பிள்ளை) ஆயுதம் ஏந்தி உயர்வகுப்பு நிலப்பிரபுக்கள் மற்றும் பிரிட்டிஷாருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்)

37) சௌரி சௌரா என்னும் இடம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

A) உத்தர பிரதேசம்

B) உத்தராகண்ட்

C) பீகார்

D) ஒடிசா

(குறிப்பு – உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் சௌரி சௌரா என்ற கிராமத்தில் மதுக்கடைகள் மற்றும் உள்ளூர் சந்தையில் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதை கண்டித்து ஒரு தன்னார்வக் குழு ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தியது. 1922 ஆம் ஆண்டு, பிப்ரவரி 5ஆம் தேதி, 3 ஆயிரம் நபர்களுடன் நடந்த ஒரு காங்கிரஸ் கட்சி பேரணி மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்ட குழுவினர், காவல் நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதோடு அதை கொளுத்தியதில் 22 போலீசார் உயிரிழந்தனர்)

38) எந்த சம்பவத்துக்குப் பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தை திரும்ப பெறுவதாக காந்திஜி அறிவித்தார்?

A) ஜாலியன் வாலாபாக் படுகொலை

B) சௌரி சௌரா சம்பவம்

C) ரௌலட் சட்டம்

D) கவுன்சில் சட்டம்

(குறிப்பு – கோரக்பூர் மாவட்டம் சௌரிசௌராவில் 1922ஆம் ஆண்டு, பிப்ரவரி 5ஆம் நாள், மூன்றாயிரம் நபர்களுடன் நடந்த ஒரு காங்கிரஸ் கட்சி பேரணி மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்ட குழுவினர் காவல் நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதோடு அதை எரித்தனர். அதில் 22 போலீசார் உயிரிழந்தனர். இந்த நிகழ்வை அடுத்து காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். தேசியவாத தொண்டர்களுக்கு ஏமாற்றம் தரும் விதமாக பர்டோலியில் இந்த முடிவை காங்கிரஸ் செயற்குழு ஏற்றுக்கொண்டது)

39) சௌரி சௌரா சம்பவத்துக்குப் பின்னர் மகாத்மா காந்தியடிகள் எத்தனை ஆண்டுகாலம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்?

A) ஐந்து ஆண்டுகள்

B) ஆறு ஆண்டுகள்

C) ஏழு ஆண்டுகள்

D) எட்டு ஆண்டுகள்

(குறிப்பு – சௌரி சௌரா சம்பவத்திற்குப் பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெறுவதாக மகாத்மா காந்தியடிகள் தெரிவித்தார். தேசியவாத தொண்டர்களுக்கு ஏமாற்றம் தரும் விதமாக இதை காங்கிரஸ் செயற்குழு ஏற்றுக்கொண்டது. இந்த முடிவை தொண்டர்கள் எதிர்த்த நிலையில் காந்தியடிகள் மீது நம்பிக்கை கொண்ட இதர தொண்டர்கள் இது ஒரு தந்திரமான முடிவு என்று கருதினர். கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற காந்தியடிகள் பற்றி ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ் கடுமையாக விமர்சனம் செய்தனர். இப்படியாக ஒத்துழையாமை இயக்கம் முடிவுக்கு வந்தது.)

40) துருக்கி மக்கள் யாருடைய தலைமையில் கிளர்ந்தெழுந்து சுல்தானிடமிருந்து அரசியல் அதிகாரத்தைப் பறித்து கலிபா நடைமுறையை ரத்து செய்தனர்?

A) முஸ்தபா அல் பகதூர்

B) முஸ்தபா கமால் பாட்ஷா

C) முஸ்தபா கமால் அக்மல்

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – துருக்கி மக்கள் முஸ்தபா கமால் பாட்சா தலைமையில் கிளர்ந்தெழுந்து சுல்தானிடமிருந்து அரசியல் அதிகாரத்தைப் பறித்து கலிபா என்ற நடைமுறையை ரத்து செய்துவிட்டு, மதமும் அரசியலும் இணைந்து பயணிக்க முடியாது என்று அறிவித்த நிலையில், கிலாபத் இயக்கம் தேவையற்று போனது. இவ்வாறு கிலாபத் இயக்கம் முடிவுக்கு வந்தது.)

41) சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் (Pro-Changers) குழு என்றழைக்கப்பட்ட குழுவில் தமிழகத்தில் இருந்து இணைந்தவர் யார்?

A) சத்தியமூர்த்தி

B) கக்கன்

C) பெரியார்

D) காமராஜர்

(குறிப்பு – ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெற்ற பிறகு அடுத்தது என்ன என்ற கேள்வி எழுந்தது. சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு ஆகியோர் புதிய வழியில் செயல்பாட்டை அறிவித்தனர். தீவிர அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அதில் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது அடக்கம் என்றும் அவர்கள் விரும்பினார்கள். சீர்திருத்தம் பெற்ற சட்டப்பேரவையை கைப்பற்றி தேசியவாத உணர்வு ஊட்டி அதன் செயல்பாடுகளை முடக்கும் ஆற்றலை தேசியவாதிகள் செயல்படுத்தினர். சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டும் என்று இந்த குழு அழைக்கப்பட்டது.தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி இந்த குழுவில் இணைந்தார்)

42) சட்டப்பேரவையின் நுழைவை எதிர்த்த மற்றொரு குழுவிற்கு தலைமை ஏற்றவர்களில் அல்லாதவர் கீழ்க்கண்டவற்றில் யார்?

A) ராஜாஜி

B) சர்தார் வல்லபாய் பட்டேல்

C) இராஜேந்திர பிரசாத்

D) கோபால கிருஷ்ண கோகலே

(குறிப்பு – சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் குழுவிற்கு மாற்றாக சட்டப்பேரவை நுழைவை எதிர்த்த மற்றொரு குழு காந்தியடிகளின் வழியை பின்பற்றி மக்களை ஒன்று திரட்டும் பணிகளில் ஆர்வம் காட்டியது. இந்த குழுவுக்கு ராஜாஜி, வல்லபாய் பட்டேல், ராஜேந்திர பிரசாத் ஆகியோர் தலைமை ஏற்றனர். எந்த மாற்றமும் தேவையில்லை என்று இந்த அணி வலியுறுத்தியது. இவர்கள் மாற்றம் விரும்பாதோர் என்று அழைக்கப்பட்டனர்)

43) மத்திய சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தல்களில் சுயராஜ்ஜியக் கட்சி 101 இடங்களில் போட்டியிட்டு எத்தனை இடங்களை கைப்பற்றியது?

A) 40 இடங்கள்

B) 41 இடங்கள்

C) 42 இடங்கள்

D) 43 இடங்கள்

(குறிப்பு – மாற்றம் வேண்டுவோர் சுயராஜ்ய கட்சியை காங்கிரசில் ஒரு பகுதியாக தொடங்கினார்கள். இரண்டு குழுக்களுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்தப்பட்டு காங்கிரஸ் திட்டங்களில் இரண்டு குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டு காந்தியடிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், அவரது தலைமையின் கீழ் ஒரு குழுவுக்கு மற்றொரு குழுவின் செயல்பாடுகள் துணை செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. மத்திய சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் சுயராஜ்ய கட்சி சிறப்பாக பங்கேற்று 101 இடங்களில் 42 இடங்களை கைப்பற்றியது. மற்ற உறுப்பினர்களின் ஆதரவோடு காலனி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோத சட்டங்களை தீவிரமாக இருக்க முடிந்தது)

44) காந்தியடிகள் 21 நாள்கள் உண்ணாவிரதத்தினை கீழ்காணும் எந்த நோக்கத்திற்காக மேற்கொண்டார்?

A) சௌரி சௌரா சம்பவத்தை கண்டித்து

B) கிலாபத் இயக்கத்தினை ஆதரித்து

C) மதவாத போக்கினை கண்டித்து

D) ஆங்கிலேய ஆட்சியை கண்டித்து

(குறிப்பு – மாற்றம் விரும்புவோரும், மாற்றம் விரும்பாதோர் குழுவும் காலம் செல்ல செல்ல அவர்களது முயற்சிகளும் ஊக்கமும் குறைந்து சுயநினைவுடன் அல்லது சுய நினைவின்றி அரசு நியமித்த பல குழுக்களில் உறுப்பினர்களாக சேர்க்கபட்டதை ஏற்றனர். தேசிய அளவில் மக்கள் போராட்டம் நடைபெறாத நிலையில் பிரிவினைவாத சிந்தனைப்போக்கு அவர்களை ஆட்டிப் படைத்தது. காந்தியடிகள் வேதனை அடைந்தார். மதவாதபோக்கு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் காந்தியடிகள் 21 நாட்கள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்)

45) இடதுசாரி சிந்தனையை பரப்புவதில் முக்கிய பங்காற்றியவர்கள் கீழ்க்கண்டவரில் யார்?

I. மகாத்மா காந்தி

II. ஜவஹர்லால் நேரு

III. சுபாஷ் சந்திரபோஸ்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) II மட்டும்

D) III மட்டும்

(குறிப்பு – இடதுசாரிகள் தொழிலாளர் மற்றும் விவசாய இயக்கங்களை தொடங்கினார்கள். காலனி ஆதிக்க வாதம் மற்றும் முதலாளித்துவத்தை விமர்சனம் செய்யும் மார்க்சீய சித்தாந்தம் வேரூன்றியது. தொழிற்சங்கங்கள் தவிர மாணவர்களையும், இளைஞர்களையும் ஒருங்கிணைப்பதில் அது பெரும் பங்காற்றியது. இடதுசாரி சித்தாந்தத்தை பரப்புவதில் ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் இடதுசாரி சித்தாந்தங்களையும் பரப்புவதற்கு தங்கள் பங்களிப்பை வழங்கினார்கள். காலனி ஆதிக்க சுரண்டல் மற்றும் உள்நாட்டு முதலாளிகள் நடத்திய சுரண்டலுக்கும் எதிராக சண்டையிட வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்)

46) காக்கோரி சதித்திட்ட வழக்கில் கீழ்கண்டவரில் யாருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது?

I. பகத் சிங்

II. ராம்பிரசாத் பிஸ்மில்

III. அஷ்ஃபக்குல்லா

IV.சந்திர சேகர ஆசாத்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) III, IV மட்டும்

D) I, IV மட்டும்

(குறிப்பு – இடதுசாரி இயக்கங்கள் தோன்றிய காலகட்டத்தில் பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், ராஜகுரு சுகதேவ் ஆகியோர் முக்கிய பணியாற்றினார். நவஜவான் பாரத், இந்துஸ்தான் குடியரசு அமைப்பு ஆகியன தொடங்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இளம் ஆடவர் மற்றும் பெண்கள் காலனி ஆட்சிக்கு எதிரானவர்களாகவும், புரட்சியாளர்களாகவும் மாறினார்கள். இந்தியா முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர் மாநாடுகள் நடத்தப்பட்டன. இதனிடையே ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்பகுல்லா ஆகிய இருவருக்கும் மரண தண்டனையும், 17 பேருக்கு நீண்டகால சிறை தண்டனையும் காகோரி வழக்கில் வழங்கப்பட்டன)

47) மத்திய சட்டப்பேரவை அரங்கிற்குள் எந்த ஆண்டு பகத்சிங்கும், படுகேஸ்வர் தத்தும் வெடிகுண்டு வீசினர்?

A) 1929ஆம் ஆண்டு

B) 1930ஆம் ஆண்டு

C) 1931ஆம் ஆண்டு

D) 1932ஆம் ஆண்டு

(குறிப்பு – பகத்சிங் சந்திரசேகர் ஆசாத் ராஜகுரு ஆகியோர் லாலா லஜபதிராய் கொல்லப்பட்டது மற்றும் காவல்துறை அராஜகத்தை எதிர்த்து பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி சர்சை கொன்று விட்டனர் இந்த அதிகாரி லாகூரில் நடத்தப்பட்ட தடியடி தலைமை தாங்கியவர் என்று என்பது குறிப்பிடத்தக்கது மத்திய சட்ட பேரவை 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் நாள் பகத்சிங் குண்டு வீசினர்.)

48) 1927 ஆம் ஆண்டு காங்கிரஸ் வருடாந்திர மாநாடு எந்த இடத்தில் நடைபெற்றது?

A) சென்னை

B) பம்பாய்

C) கல்கத்தா

D) நாக்பூர்

(குறிப்பு – 1929-1930 ஆம் ஆண்டில் அரசியல் சாசன சீர்திருத்தங்களின் முதல் தவணையை பிரிட்டிஷார் பரிசீலித்து அறிவிக்க வேண்டியிருந்தது.இதன் ஆயத்தத்தில் சட்டப் உருவாக்க குழுவான சைமன் குழு நிறுவப்பட்டது. அதன் தலைவரான சைமனின் பெயரில் இந்த குழு அமைந்தது. வெள்ளையர்கள் மட்டுமே இந்த குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். அது இந்தியர்களுக்கு அவமானமாக கருதப்பட்டது. 1927ஆம் ஆண்டில் நடந்த காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் இந்த குழுவை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது. இந்து மகாசபையும், முஸ்லிம் லீக் சமூக அமைப்பும் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தன.)

49) 1929ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் கீழ்க்கண்டவரில் யார்?

A) மோதிலால் நேரு

B) ஜவஹர்லால் நேரு

C) சுபாஷ் சந்திரபோஸ்

D) சர்தார் வல்லபாய் பட்டேல்

(குறிப்பு – டிசம்பர் மாதம் 1928ஆம் ஆண்டில் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் மாநாட்டின் போது இடதுசாரிகளை சாந்தப்படுத்தும் முயற்சியாக 1929 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் அடுத்த மாநாட்டிற்கு ஜவஹர்லால் நேரு தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. 1928 ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்த மோதிலால் நேருவை தொடர்ந்து, அவரது மகன் ஜவஹர்லால் நேரு 1929 இல் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார்)

50) கீழ்க்காணும் எந்த நாளில் லாகூரில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது?

A) 1929, டிசம்பர் 15

B) 1929, டிசம்பர் 20

C) 1929, டிசம்பர் 25

D) 1929, டிசம்பர் 31

(குறிப்பு – இந்திய விடுதலை மற்றும் காங்கிரஸ் வரலாற்றில் காங்கிரஸ் கட்சியின் லாகூர் மாநாடு சிறப்பு வாய்ந்ததாகும். முழுமையான சுதந்திரம் அடைவது என்பதை குறிக்கோளாக காங்கிரஸ் கட்சி இம்மாநாட்டில் அறிவித்தது. 1929ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் நாள் நாகூரில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் நாளை விடுதலை நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. சட்டமறுப்பு இயக்கம் காந்தியடிகளின் தலைமையில் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது)

51) மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தின் தண்டியாத்திரையின் போது அவருடன் பயணித்த தொண்டர்களின் எண்ணிக்கை கீழ்க்கண்டவற்றுள் எது?

A) 74 தொண்டர்கள்

B) 78 தொண்டர்கள்

C) 80 தொண்டர்கள்

D) 82 தொண்டர்கள்

(குறிப்பு – அனைவருக்கும் அவசியமான பொருளான உப்பு மீது அநியாயமாக விதிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம் இது ஆகும். காலனி ஆதிக்க அரசு உப்புக்கு வரி விதித்தது. அதன் மீது ஆளுமை செலுத்தி வந்தது. காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்திலிருந்து குஜராத் கடற்கரையோரம் உள்ள தண்டி வரை 375 கிலோ மீட்டர் தொலைவுக்கு தண்டி யாத்திரை நடைபெற்றது. அனைத்து பகுதிகளில் அந்தந்த சமூகங்களில் சேர்ந்த 78 தொண்டர்களுடன் காலனி ஆதிக்க அரசுக்கு முன்னரே அறிவித்த பிறகு, காந்தியடிகள் யாத்திரையாக நடந்து தண்டியை இருபத்தைந்தாவது நாளில் அதாவது 1930 ஏப்ரல் 6 ஆம் தேதி அடைந்தார்.)

52) தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகம் யாத்திரைக்கு தலைமை ஏற்றவர் யார்?

A) ராஜாஜி

B) ஈவேரா பெரியார்

C) காமராஜர்

D) சத்தியமூர்த்தி

(குறிப்பு – தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வேதாரண்யம் நோக்கி நடந்தது.திருச்சிராப்பள்ளியில் தொடங்கி 150 மைல்கள் தொலைவில் தஞ்சாவூர் மாவட்டத்தின் கரையோர கிராம மக்கள் வேதாரண்யம் வரை நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போதுதான் ராஜாஜி நியமிக்கப்பட்டிருந்தார். 1930 ஆம் ஆண்டு, ஏப்ரல் 13க்கு ஆரம்பித்த இந்த நடைபயணம் ஏப்ரல் 28-ஆம் நாள் முடிவடைந்தது)

53) வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தின் போது தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர் கீழ்கண்டவர்களில் யார்?

A) தாம்சன்

B) வில்லியம்

C) தார்ன்

D) ஹென்றி

(குறிப்பு – வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் நடைபயணத்தில் ஈடுபடுவோருக்கு அடைக்கலம் தந்தால், கடும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைவராக இருந்த ஜெ.ஏ.தார்ன் என்பவர் எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட தொண்டர்களை மக்கள் இன்முகத்துடன் வரவேற்று உண்ண உணவும், இளைப்பாற இடமும் கொடுத்தனர். யாரெல்லாம் உணவும் உறைவிடமும் கொடுக்கும் தைரியத்துடன் முனைந்தார்களோ அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன)

54) காந்தி-இர்வின் ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது?

A) மார்ச் 1, 1929 இல்

B) மார்ச் 3, 1930 இல்

C) மார்ச் 5, 1931இல்

D) மார்ச் 7, 1932 இல்

(குறிப்பு – சைமன் அறிக்கையை சட்டபூர்வமாகவும், நம்பிக்கைக்கு உரியதாகவும் வைக்கும் நோக்கில் இந்திய கருத்தை உருவாக்கும் வல்லமை உடைய பலதரப்பட்ட தலைவர்களுடன் லண்டனில் ஒரு வட்ட மேசை மாநாடு கூட்ட இருப்பதாக அரசு அறிவித்தது. ஆனால் சுதந்திரம் பெற்றே ஆக வேண்டும் என்ற கருத்தில் இந்த வட்ட மேசை மாநாட்டை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ் அறிவித்தது. காங்கிரஸ் பங்கேற்க விட்டால் மாநாட்டை அரசு நடத்துவது பயனற்றுப் போகும் என்று அனைவரும் அறிந்திருந்தனர். காங்கிரசுடன் பேச்சுக்கள் தொடங்கின.1931ம் ஆண்டு மார்ச் 5ஆம் நாள் காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது)

55) காந்தி-இர்வின் ஒப்பந்தம் கீழ்க்காணும் எந்த இயக்கத்தின் முடிவை குறிப்பதாக அமைந்தது?

A) ஒத்துழையாமை இயக்கம்

B) உப்பு சத்தியாகிரக இயக்கம்

C) சட்டமறுப்பு இயக்கம்

D) சுயராஜ்ய இயக்கம்

(குறிப்பு – 1931 ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் நாள் காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில் சட்ட மறுப்பு இயக்கத்தின் முடிவை குறிப்பதாக அமைந்தது. உலகம் தழுவிய விளம்பரத்தை அந்த இயக்கம் தந்தது.அரசு பிரதிநிதி (வைசிராய்) இர்வின் இதனை வைத்து முடித்து வைக்க விரும்பினார். 1931-ம் ஆண்டில் காந்தி அடிகள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்)

56) இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காங்கிரசின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர் யார்?

A) கோபால கிருஷ்ண கோகலே

B) சி ராஜகோபாலாச்சாரியார்

C) மகாத்மா காந்தி

D) மௌலானா அபுல் கலாம் ஆசாத்

(குறிப்பு – காங்கிரசின் ஒரே ஒரு பிரதிநிதியாக லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் கலந்து கொண்டார். உப்பை சுய பயன்பாட்டுக்கு பயன்படுத்த மக்களை அனுமதிப்பது, வன்முறையில் ஈடுபடாத அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, சாராயம் மற்றும் அந்நிய துணிகளை விற்கும் கடைகளின் முன் ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதிப்பது ஆகியவற்றுக்கு அரசு இணக்கம் தெரிவித்தது. காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை கராச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாடு ஏற்றுக்கொண்டது. பகத்சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைக்க வைசிராய் மறுத்துவிட்டார்)

57) சட்டமறுப்பு இயக்கம் அதிகாரப்பூர்வமாக எந்த ஆண்டு முற்றிலும் முடிவுக்கு வந்தது?

A) 1931ஆம் ஆண்டு

B) 1934ஆம் ஆண்டு

C) 1935ஆம் ஆண்டு

D) 1936ஆம் ஆண்டு

(குறிப்பு – சட்டமறுப்பு இயக்கத்தின் போது நேரு, கான் அப்துல் கபார்கான் இறுதியில் காந்தியடிகள் என அனைத்து முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். சுமார் ஒரு லட்சம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு, தேசியவாதம் தொடர்பான பிரசுரங்கள் அனைத்தும் சட்டத்திற்குப் புறம்பானவை என அறிவிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போராட்டத்தில் பங்கேற்ற நிராயுதபாணிகளான மக்கள் மீது தீவிர வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட காலகட்டம் ஆகும். இந்த இயக்கம் மெதுவாக மந்த நிலை அடைந்து 1933இல் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டு, பின்னர் 1934 ஆம் ஆண்டில் முற்றிலும் முடிவுக்கு வந்தது.)

58) டாக்டர் அம்பேத்கார் எல்பின்ஸ்டன் கல்லூரியில் பயின்று எந்த ஆண்டு பட்டதாரி ஆனார்?

A) 1910இல்

B) 1911இல்

C) 1912இல்

D) 1913இல்

(குறிப்பு – 1920களில் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களின் மையப்புள்ளியாக டாக்டர் அம்பேத்கர் விளங்கினார் நாட்டின் மையப்பகுதியில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சாதியாகக் கருதப்பட்ட மகர் சாதியில் ராணுவ வீரரின் மகனாக பிறந்த டாக்டர் அம்பேத்கர், எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்து கல்வி உதவித்தொகை பெற்று 1912 ஆம் ஆண்டில் பட்டதாரி ஆனார். பரோடா அரசரின் கல்வி உதவி தொகை பெற்று, அவர் அமெரிக்கா சென்று பட்டமேற்படிப்பு பட்டத்தையும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்)

59) அம்பேத்கர் சட்டம் மற்றும் பொருளாதாரம் படிப்புகளை எந்த இடத்தில் பயின்றார்?

A) அமெரிக்கா

B) இந்தியா

C) லண்டன்

D) பரோடா

(குறிப்பு – சட்டம் மற்றும் பொருளாதாரம் படிப்புகளுக்காக அம்பேத்கர் லண்டன் சென்றார். அம்பேத்கரின் அறிவாற்றல் பலரது கவனத்தை ஈர்த்தது. 1916ஆம் ஆண்டில் மானுடவியல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு இந்தியாவின் சாதிகள் (Castes in India) என்ற தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்தார். இந்த கட்டுரை பின்னர் அரிய இந்திய புத்தகம் (Indian Antiquary)என்ற தொகுப்பில் பதிப்பிக்கப்பட்டது)

60) தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் மற்றும் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வாதிட்டவர் கீழ்கண்டவர்களில் யார்?

A) மகாத்மா காந்தி

B) முகமது அலி ஜின்னா

C) அம்பேத்கர்

D) ஜவஹர்லால் நேரு

(குறிப்பு – இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே திறமையுடையோரை தேடி வந்த பிரிட்டிஷ் அரசு, இந்திய வாக்காளர்களுக்கு வாக்குரிமை பெற வயது மற்றும் தகுதி பற்றி தகவல் சேகரித்து வந்த சவுத்பொரோகுழுவுடன் கலந்துரையாட வருமாறு அவருக்கு அம்பேத்கருக்கு அழைப்பு விடுத்தது. இந்த கலந்துரையாடலின் போது தான் அம்பேத்கர் முதன்முறையாக தனித்தொகுதிகள் பற்றி பேசினார். தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் மற்றும் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர் வாதிட்டார்)

61) மூக் நாயக் ( வாய் பேச முடியாதவர்களின் தலைவர்) என்ற பத்திரிகையை தொடங்கியவர் யார்?

A) கோபால கிருஷ்ண கோகலே

B) முகமது அலி ஜின்னா

C) டாக்டர் அம்பேத்கர்

D) மவுலானா அபுல் கலாம் ஆசாத்

(குறிப்பு – அம்பேத்கர் புதிய பத்திரிகைகள் மற்றும் அமைப்புகளை தோற்றுவித்தார் நாயக் (வாய் பேச முடியாதவர் களின் தலைவர் )என்ற பத்திரிகை தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காகவும், பஹிஷ்கிரித் ஹிடாகரினி சபை( தனித்து விடப்பட்ட அவர்களின் நலனுக்காக அமைப்பு) என்ற அமைப்பை தனது செயல்பாடுகளுக்கும் அம்பேத்கர் தொடங்கினார்.)

62) டாக்டர் அம்பேத்கர் கீழ்க்காணும் எந்த மாநில சட்டப்பேரவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?

A) மகாராஷ்டிரம்

B) மத்திய பிரதேசம்

C) பீகார்

D) உத்தரப் பிரதேசம்

(குறிப்பு – பம்பாய் சட்டப்பேரவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அம்பேத்கர், தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் மீது விதிக்கப்பட்ட திறன்குறைபாடுகளைக் களைவதற்காக அயராது பாடுபட்டார். ஊருணிகள் மற்றும் கிணறுகளில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தர வேண்டிய அடிப்படை உரிமைகளை மீட்டுத்தர மஹத் சத்தியாகிரகம் என்ற அமைப்பைத் தொடங்கினார்)

63) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – சுதந்திர இந்தியாவில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்காலம் குறித்து அம்பேத்கர் பெரிதும் கவலை அடைந்தார். காங்கிரசின் கட்டுப்பாட்டில் சாதி இந்துக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என அவர் கவலை அடைந்தார்.

கூற்று 2 – அனைத்து கட்சி மாநாடுகள் சைமன் குழு வட்டமேசை மாநாடு என அனைத்து இடங்களிலும் தனித்தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையை அம்பேத்கர் வலியுறுத்தினார்.

கூற்று 3 – தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் தருவது தேசிய இயக்கத்தை மேலும் வலுவிழக்கச் செய்யும் என்று காங்கிரசும், காந்தியடிகளும் கவலைப்பட்டனர்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் தருவது தேசிய இயக்கத்தை மேலும் வலுவிழக்கச் செய்யும் என்று காங்கிரசும், காந்தியடிகளும் கவலைப்பட்டனர். முஸ்லிம்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்கு தனித் தொகுதிகள் மற்றும் இதர சிறப்புகள் ஆகியன பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வழி அமைக்கும் என்று அவர்கள் வருத்தப்பட்டனர். தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களை இந்துகளில் இருந்து அரசியல் ரீதியாக பிரிப்பது சமூக பாதிப்புகளை உருவாக்கும் என்று காந்தியடிகள் அச்சப்பட்டார்)

64) எந்த ஆண்டு வகுப்புவாரி தொகுதி ஒதுக்கீடு குறித்து பிரிட்டிஷ் அரசு அறிவித்தது?

A) 1931 இல்

B) 1932 இல்

C) 1933 இல்

D) 1934 இல்

(குறிப்பு – லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் செல்வதற்கு முன், அவர்களிடையே தனித்தொகுதிகள் பற்றிய கருத்தில் நடந்த பேச்சு தோல்வி அடைந்தன.வட்டமேசை மாநாட்டின் போது இரு தலைவர்களிடையே இதே கருத்து குறித்து விவாதம் நடந்தது. பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு இதில் தலையிட்டு முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று இந்த கருத்தின் முடிவு எட்டப்படாமல் இருந்தது. ஆகஸ்ட் மாதம் 1932 ஆம் ஆண்டு வகுப்புவாரி தொகுதி ஒதுக்கீடு குறித்து பிரிட்டிஷ் அரசு அறிவித்தது)

65) மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கர் இடையே பூனா ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்தானது?

A) 1932, மே

B) 1932, ஜூன்

C) 1932, ஆகஸ்ட்

D) 1932, செப்டம்பர்

(குறிப்பு – தீண்டத்தகாதவருக்கு தனித்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதை தனது வாழ்நாள் முழுவதும் எதிர்க்கப்போவதாக மிகவும் வருத்தத்துடன் காந்தியடிகள் தெரிவித்தார். தான் அடைக்கப்பட்ட எரவாடா சிறையில் அவர் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முயன்றார்.காந்தியடிகளின் உயிரை காப்பாற்றும் அழுத்தம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது. எனவே வகுப்புவாரி தொகுதி ஒதுக்கீடு திருத்தப்பட்டது. அம்பேத்கர் மற்றும் காந்தியடிகள் இடையே ஏற்பட்ட புதிய ஒப்பந்தம் பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது)

66) அம்பேத்கர் எத்தனை கட்சிகளை ஆரம்பித்தார்?

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

(குறிப்பு – அம்பேத்கர் இரண்டு கட்சிகளை ஆரம்பித்தார். சுதந்திரத் தொழிலாளர் கட்சியை 1937 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். பட்டியலினத்தவர் கூட்டமைப்பை 1942 ஆம் ஆண்டில் அவர் தொடங்கினார் அவரது போராட்டங்களை அங்கீகரித்த காலனி அரசு தனது ஆதரவை சமன்படுத்த அம்பேத்கரின் சேவைகளை பயன்படுத்தியது)

67) எந்த ஆண்டு பாதுகாப்புத்துறை ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக அம்பேத்கர் நியமிக்கப்பட்டார்?

A) 1940ஆம் ஆண்டு

B) 1942ஆம் ஆண்டு

C) 1943ஆம் ஆண்டு

D) 1944ஆம் ஆண்டு

(குறிப்பு – 1942 ஆம் ஆண்டு பாதுகாப்புத்துறை ஆலோசனை குழுவின் உறுப்பினராக அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு பிறகு அரச பிரதிநிதியின் (வைசிராய்) அமைச்சரவையில் அமைச்சராக இடம் பிடித்தார். நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவைக்கு மகுடம் சூட்டும் விதமாக, சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசன வரைவு குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரம் பெற்ற பிறகு நேரு அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற அழைக்கப்பட்டார்)

68) பொருத்துக

I. சௌரி சௌரா – a) விவசாயிகள் சத்தியாகிரகம்

II. தண்டி – b) அவுரி விவசாயிகள் இயக்கம்

III. சம்பரான் – c) ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தம்

IV. கேதா – d) சட்டமறுப்பு இயக்கம்

A) I-c, II-d, IIi-b, IV-a

B) I-d, II-b, III-a, IV-c

C) I-c, II-a, III-b, IV-a

D) I-b, II-a, III-c, IV-d

(குறிப்பு – ஜாலியன் வாலாபாக் படுகொலை பஞ்சாபிலும் நிகழ்ந்தது.சௌரி சௌரா சம்பவம் ஒத்துழையாமை இயக்க நிறுத்ததிற்கு வழிவகுத்தது.தண்டி, உப்பு சத்யாகிரக இயக்கத்திற்கும், சட்டமறுப்பு இயக்கத்திற்கும் வழிவகுத்தது. பீகார் மாநிலத்தில் உள்ள சம்பரான் அவுரி விவசாயிகள் இயக்கத்திற்கும், குஜராத் மாவட்டத்தில் உள்ள கேதா விவசாயிகள் சத்யாகிரகத்திற்கும் வழி செய்தது.)

69) 1923 ஆம் ஆண்டு மோதிலால் நேரு மற்றும் சிஆர் தாஸ் ஆகிய இருவரால் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் என்ன?

A) சுயராஜ்யக் கட்சி

B) கம்யூனிஸ்ட் கட்சி

C) சுதந்திர தொழிலாளர் கட்சி

D) சுதந்திரா கட்சி

(குறிப்பு – 1923ஆம் ஆண்டில் மோதிலால் நேரு மற்றும் சிஆர் தாஸ் ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் சுயராஜ்ய கட்சி என்பது ஆகும். ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெற்ற பிறகு அடுத்தது என்ன என்ற கேள்வி எழுந்தது. அப்போது சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு ஆகியோர் புதிய வழியில் செயல்பாட்டை ஆரம்பித்தனர். தீவிர அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்றும், அதில் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது அடக்கம் என்றும் அவர்கள் விரும்பினார்கள்)

70) கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார்?

A) ராஜாஜி

B) சித்தரஞ்சன் தாஸ்

C) மோதிலால் நேரு

D) சத்தியமூர்த்தி

(குறிப்பு – 1923 ஆம் ஆண்டு சுயராஜ்ய கட்சியை மோதிலால் நேரு மற்றும் சித்தரஞ்சன் தாஸ் ஆகிய இருவரும் இணைந்து தோற்றுவித்தனர்.சீர்திருத்தம் பெற்ற சட்டப்பேரவையை கைப்பற்றி தேசியவாத உணர்வு ஊட்டி அதன் செயல்பாடுகளை முடக்கும் ஆற்றலை இந்த தேசியவாதிகள் வெளிப்படுத்தினர். சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் (Pro-Changers) என்று இந்த குழு அழைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி இந்த குழுவில் இணைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!