MCQ Questions

சுற்றுச்சூழல் பொருளியல் 12th Economics Lesson 8 Questions in Tamil

12th Economics Lesson 8 Questions in Tamil

8] சுற்றுச்சூழல் பொருளியல்

“சுற்றுச்சூழல் பிரச்சனைகள் உண்மையாகவே சமுதாயப் பிரச்சனைகள்…. அவைகளின் துவக்கத்திற்கு மக்களே காரணமாகவும் முடிவில் பாதிக்கப்படுவதும் மக்களே.” என்று கூறியவர்

A) J.R. ஹிக்ஸ்

B) சாமுவேல்சன்

C) சர் எட்மண்டு ஹிலரி

D) மில்டன் பிரெடுமேன்

மனிதனின் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இயற்கைச்சூழலுக்கும் இடையேயான தொடர்பினைப் பற்றி படிக்கும் ஒரு இயல்

A) சுற்றுச்சூழல் அறிவியல்

B) சூழலியல்

C) சுற்றுச்சூழல் பொருளியல்

D) இயற்கை பொருளியல்

(குறிப்பு: இயற்கை வளங்களை உயர்திறனுடன் பங்கீடு செய்வது தொடர்பான பொருளியலின் ஒரு பகுதியே சுற்றுச்சூழல் பொருளியல். பொருளாதார நடவடிக்கைகளுக்கான நேரடி மதிப்பினையும், இடுபொருட்களையும் சுற்றுச்சூழல் வழங்குவதால் அவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளாகும்.)

சுற்றுச்சூழல் பொருளியல் கீழ்க்கண்ட எவற்றினை உள்ளடக்கியது?

1. இயற்கை வள மதிப்பீடு 2. பாதுகாப்பு

3. மாசுக் கட்டுப்பாடு 4. கழிவுகள் மேலாண்மை

5. மறுசுழற்ச்சி 6. நீடித்த வளர்ச்சி

A) அனைத்தும்

B) 1, 3, 4, 5

C) 2, 3, 4, 5, 6

D) 1, 2, 4, 5, 6

(குறிப்பு: சுற்றுச்சூழல் பொருளியலின் முக்கிய குறிக்கோள் இயற்கை வளங்களை மிகச்சிறந்த முறையில் பங்கீடு செய்வதற்கான கருவிகளையும், கொள்கைகளையும் கண்டறிந்து அவ்வளங்களை நோக்கி சந்தையினை திரும்ப வைப்பது ஆகும்.)

சுற்றுச்சூழல் என்ற சொல் ______________ மொழி சொல்லிலிருந்து தோன்றியது.

A) இலத்தீன்

B) ஆங்கிலம்

C) பிரெஞ்ச்

D) ஜப்பானிய

(குறிப்பு: சுற்றியிருப்பவைகள் என்ற பொருள்படும் “Environia” எனும் பிரஞ்ச் சொல்லிலிருந்து தோன்றியது சுற்றுச்சூழல். சுற்றுச்சூழல் என்பது, நம்மை சுற்றியுள்ள அனைத்து நிலைமைகள், சூழ்நிலைகள், உயிர்கள் அல்லது உயிர் தொகுப்பு ஆகியவைகளை குறிப்பிடுவது ஆகும். மேலும் இது, இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் காரணிகளை உள்ளடக்கிய உயிர்தொகுப்பு அல்லது உயிர்ச்சூழல் சமூக அமைப்பினை தீர்மானிப்பதும், உயிர்வாழ்வதும் ஆகும்.)

கூற்று 1: சுற்றுப்புறச் சூழலின் பிரச்சனைகள் மற்றும் கொள்கைகளின் நிதித்தாக்கத்தைப் பற்றி ஆராயும் பொருளியலின் ஒரு பகுதியே சுற்றுச்சூழல் பொருளாதாரம் எனப்படும்.

கூற்று 2: செலவுகள் மற்றும் நன்மைகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு பொருளாதார நடவடிக்கைகளையும் சுற்றுச்சூழலையும் சமன் செய்வதே சுற்றுச்சூழல் பொருளாதாரத்தின் நோக்கமாகும்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் உயிரினங்கள் மற்றும் உயிரற்றவைகள் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பு _____________ எனப்படுகிறது.

A) இயற்கைச்சூழல்

B) சூழல் அமைப்பு

C) சூழலியல்

D) சமூகவியல்

(குறிப்பு: சூழல் அமைப்பு உயிர்க்கோளத்தின் அடிப்படையாகும். மேலும் அதுவே பூமியின் நலத்தை தீர்மானிப்பதாகும். சுருக்கமாக கூறின் உயிர்ச் சமூகமும், உயிரற்றவைகளும் கொண்டுள்ள தொடர்பே சூழல் அமைப்பு எனப்படுகிறது.

பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான தொடர்பினை விளக்க “பொருள்சார் சமநிலை அணுகுமுறை”யை வகுத்தளித்தவர்கள்

1. ஆலன் நீஸ் 2. சாமுவேல்சன்

3. R.V. அய்யர்ஸ் 4. J.R. ஹிக்ஸ்

A) 1, 2 B) 2, 3 C) 1, 3 D) 1, 4

_______________விதியை ஆதாரமாகக் கொண்டு பொருள்சார் சமநிலை அணுகு முறை, சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்திற்குமான தொடர்பினை விளக்குகிறது.

A) பொருள் மற்றும் ஆற்றல் பாதுகாப்பிற்கான வெப்பஇயக்கவியல் முதல் விதி

B) பொருள் மற்றும் ஆற்றல் பாதுகாப்பிற்கான வெப்பஇயக்கவியல் இரண்டாம் விதி

C) பொருள் மற்றும் ஆற்றல் பாதுகாப்பிற்கான வெப்பஇயக்கவியல் மூன்றாம் விதி

D) பொருள் மற்றும் ஆற்றல் பாதுகாப்பிற்கான வெப்பஇயக்கவியல் நான்காம் விதி

(குறிப்பு: “உற்பத்தி முறைக்குள் உள்நுழையும் எந்தவொன்றும் பிறகு வெளியேறித்தான் ஆக வேண்டும்” என்பதனை இயற்பியலின் பொருள் மற்றும் ஆற்றல் பாதுகாப்பிற்கான வெப்ப இயக்கவியல் முதல் விதி வலியுறுத்துகிறது. இவ்விதியை ஆதாரமாகக் கொண்டு சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்திற்குமான தொடர்பினை விளக்குவதுதான் பொருள்சார் சமநிலை அணுகுமுறையாகும்.)

கீழ்க்கண்டவற்றுள் சரியான சமன்பாடு எது?

A) M = G + Rc – Rp + Rrp + Rrc = Rdc + Rdc

B) M = G – Rc – Rp – Rrp + Rrc = Rdp + Rdc

C) M = G – Rc – Rp – Rrp – Rrc = Rdc + Rdc

D) M = G – Rc – Rp + Rrp + Rrc = Rdp + Rdc

(குறிப்பு: இயற்கை உலகிலிருந்து பெறப்படும் மூலப்பொருட்களும் சக்தியும் (M) = பொருளாதார நடவடிக்கைகள் உற்பத்தியில் பணிகளும் (G) – நுகர்ச்சி மற்றும் உற்பத்தியில் ஏற்படும் கழிவுகள் (Rc + Rp) + மறு சுழற்சி செய்யப்பட்ட உற்பத்தி மற்றும் நுகர்ச்சிக் கழிவுகள் (Rrp + Rrc) = இயற்கை உலகில் இறுதியாக விடப்படும் உற்பத்தி மற்றும் நுகர்ச்சிக் கழிவுகள் (Rdp + Rdc))

கீழ்கண்டவற்றுள் சுற்றுச்சூழல் பொருட்கள் எவை?

1. தூய்மை காற்று

2. பொது பூங்காக்கள்

3. பசுமையான போக்குவரத்து

4. மலைகள்

5. தொழிற்சாலைகள்

A) அனைத்தும் B) 1, 2, 3, 4 C) 2, 3, 4, 5 D) 1, 3, 4, 5

(குறிப்பு: சுற்றுச்சூழல் பொருட்கள் என்பவை சந்தையிடா பொருட்களான தூய்மை காற்று, பசுமையான போக்குவரத்து உள்கட்டமைப்பு, பொது பூங்காக்கள், ஆறுகள், மலைகள், பசுமை, வழிகள், கடற்கரை போன்றவைகளாகும். தனியார் சொத்துரிமை இல்லாத, பொதுவாக அனைவராலும் பயன்படுத்தும் இப்பொருட்களை இலாபக் குறிக்கோள்காரர்களின் சுரண்டலிலிருந்து பாதுகாப்பது மனித நல்வாழ்வுக்கான அடிப்படையாகும்.)

சுற்றுச்சூழல் பண்புகள் ஒவ்வொன்றின் அளவும் எவ்வளவு இருக்க வேண்டும் என்ற தொகுப்பின் குறியீட்டெண் _____________ எனப்படும்.

A) சிதறிய விளைவுகள்

B) புற விளைவுகள்

C) சுற்றுச்சூழல் தரம்

D) இயற்கை தரம்

(குறிப்பு: சுற்றுச்சூழல் தரம் பொதுவாகவும் நிர்ணயிக்கப்படலாம் அல்லது குறிப்பிட்ட பகுதிக்கான சூழ்நிலையின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படலாம். மனிதன் மற்றும் இதர உயிரினங்களின் மீது பாதிப்பை ஏற்படுத்துவதால் சுற்றுச்சூழல் தரம் (நிர்ணயம்) என்பது மிக கவனத்துடன் கையாளப்பட வேண்டிய ஒன்றாகிறது.)

சுற்றுச்சூழல் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

A) சுற்றுச்சூழல் என்பது ஒரு பொதுப்பொருளாகும்.

B) எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் சுற்றுச்சூழலை பயன்படுத்துவதிலிருந்து விலக்கி வைக்க முடியாது.

C) ஒருவர் சுற்றுச்சூழலை பயன்படுத்துவதால், மற்றவர்களுக்கு கிடைக்கும் அளவு குறைந்து போகாது.

D) இயற்கை வளங்களின் குறைவும் தேசிய வருமானத்தில் இயற்கை வளங்களின் பங்களிப்பும் தற்பொழுதுள்ள தேசிய வருவாய் கணக்கீட்டில் அளவிடப்படுகின்றன.

(குறிப்பு: சுற்றுச்சூழல் என்னும் பொதுப்பொருளை பயன்படுத்துவதற்கான இறுதிநிலைச் செலவு கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகும். இத்தகைய வளங்கள் குறைந்து கொண்டே செல்கின்றன. இயற்கை வளங்களின் குறைவும் தேசிய வருமானத்தில் இயற்கை வளங்களின் பங்களிப்பும் தற்பொழுதுள்ள தேசிய வருவாய் கணக்கீட்டில் அளவிடப்படுவதில்லை.)

பொருட்கள் மற்றும் பணிகளை உற்பத்தி அல்லது நுகர்வு செய்யும் போது சரியான இழப்பீடு வழங்கப்படாத மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் பாதிப்புகளை___________ என்கிறோம்.

A) எதிர்மறை விளைவுகள்

B) அக விளைவுகள்

C) புற விளைவுகள்

D) நேர்மறை விளைவுகள்

(குறிப்பு: புற விளைவு அல்லது மிகை வழிதல் விளைவு என்பது ஒருவருடைய நுகர்ச்சி அல்லது உற்பத்தி, சம்பந்தமில்லாத மூன்றாம் தரப்பிலான மற்றொருவருடைய நுகர்ச்சி அல்லது உற்பத்தியினை பாதகமாக பாதிப்பதாகும்.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு. (புற விளைவுகள்)

1. புற விளைவுகள் அங்காடிகளுக்கு உள்ளே நடைபெறுகின்றது.

2. உற்பத்தி அல்லது நுகர்ச்சியில் ஈடுபட்டுள்ள மக்களை நேரடியாக பாதிப்பதில்லை.

3. எனவே புற விளைவுகள் “சிதறிய விளைவுகள்” எனப்படுகின்றது.

A) அனைத்தும் சரி

B) 2, 3 சரி

C) 1, 2 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: புற விளைவுகள் அங்காடிகளுக்கு வெளியே நடைபெறுகின்றது.)

ஒரு நகரில் உள்ள சிலர் ஏற்பாடு செய்கின்ற தனியார் பாதுகாப்பு அப்பகுதியில் குடியிருக்கும் மற்றவர்களுக்கும் செலவில்லாமல் பாதுகாப்பை ஏற்படுத்துவது எவ்வகை விளைவு

A) நேர்மறை நுகர்ச்சிப் புறவிளைவு

B) எதிர்மறை நுகர்ச்சிப் புறவிளைவு

C) நேர்மறை உற்பத்தி புறவிளைவு

D) எதிர்மறை உற்பத்தி புறவிளைவு

(குறிப்பு: ஒருவருடைய நுகர்ச்சிச் சார்பு மற்றொருவருடைய நுகர்ச்சிச் சார்பில் சாதகமான விளைவினை ஏற்படுத்துவது நேர்மறை நுகர்ச்சிப் புறவிளைவு எனப்படும்.)

ஒருவருடைய நுகர்ச்சி சார்பு மற்றொருவருடைய நுகர்ச்சி சார்பில் எதிர்மறை விளைவினை ஏற்படுத்துவதை ______________ என்கிறோம்.

A) நேர்மறை நுகர்ச்சிப் புறவிளைவு

B) எதிர்மறை நுகர்ச்சிப் புறவிளைவு

C) நேர்மறை உற்பத்தி புறவிளைவு

D) எதிர்மறை உற்பத்தி புறவிளைவு

(குறிப்பு: ஒருவர் தனது வீட்டில் ஒலிபெருக்கி மூலம் பாடலை அதிக சத்தத்தில் பாடவிடுகிறார். அது அவருக்கு பயன்பாட்டினை தருகிறது. ஆனால், அருகிலுள்ள வீட்டில் உள்ள மற்றொருவருக்கு அந்த ஒலி மாசு தொந்தரவினை ஏற்படுத்துகிறது எனில், அது எதிர்மறை நுகர்ச்சி புறவிளைவு எனப்படுகிறது. அதனால் இரண்டாமவருக்கு பயன்பாட்டு இழப்பு ஏற்படுகிறது.)

ஒருவர் தேனீ வளர்ப்புத் தொழிலை செய்து வருமானம் ஈட்டி வருகிறார். அருகிலுள்ள மற்றொரு விவசாயி தனது பண்ணையில் பழமரங்களை வளர்த்து வருகிறார். தேனீக்களினால் ஏற்படும் மகரந்தச் சேர்க்கையின் காரணமாக இரண்டாமவருக்கு அதிகமான பழவிளைச்சலையும், வருமானத்தையும் பெறுவது

A) நேர்மறை நுகர்ச்சிப் புறவிளைவு

B) எதிர்மறை நுகர்ச்சிப் புறவிளைவு

C) நேர்மறை உற்பத்தி புறவிளைவு

D) எதிர்மறை உற்பத்தி புறவிளைவு

(குறிப்பு: ஒருவருடைய உற்பத்திச் சார்பு மற்றொருவருடைய உற்பத்தி சார்பில் சாதகமான விளைவினை ஏற்படுத்தினால் அது நேர்மறை உற்பத்தி புறவிளைவு என்கிறோம்.)

ஒரு சிமெண்ட் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் காற்று மாசுபாட்டினால், அருகிலுள்ள விவசாயியின் நெல்விளைச்சல் பாதிக்கப்படுவது

A) நேர்மறை நுகர்ச்சிப் புறவிளைவு

B) எதிர்மறை நுகர்ச்சிப் புறவிளைவு

C) நேர்மறை உற்பத்தி புறவிளைவு

D) எதிர்மறை உற்பத்தி புறவிளைவு

(குறிப்பு: ஒருவருடைய உற்பத்திச் சார்பு, அடுத்தவருடைய உற்பத்திச் சார்பினில் பாதகமான விளைவினை ஏற்படுத்தினால் அதை எதிர்மறை புறவிளைவு என்கிறோம்.)

கூற்று 1: எதிர்மறை உற்பத்தி புறவிளைவுகள் தொழிற்சாலைகளால் ஏற்படுத்தப்படும் மாசுக்களினால் மற்றவர்களுக்கு ஏற்படும் செலவைக் குறிக்கும்.

கூற்று 2: இத்தகைய செலவுகள் குறிப்பிடத்தக்கவையா? அவற்றை துல்லியமாக அளவிட முடியுமா? என்பவற்றை எதிர்மறை உற்பத்தி புறவிளைவுகளைப் பற்றி ஆராய்கின்றபோது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: எதிர்மறை உற்பத்தி புறவிளைவுகள்

தொழிற்சாலைகளினால் காற்று மாசுபடுதல்

உரத்தொழிற்சாலையின் மாசுக்கள்

ஒலி மாசுக்கள்

தொழிற்சாலைக் கழிவுகள்

கெட்டுப்போன மீன் கழிவுகள்

மீத்தேன் வாயு வெளியீடு)

மாசுபடுதல் _____________ வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

A) 3 B) 4 C) 5 D) 6

(குறிப்பு: நான்கு வகை மாசுபடுதல்

காற்று மாசுபடுதல்

நீர் மாசுபடுதல்

ஒலி மாசுபடுதல்

மண் மாசுபடுதல்)

“சுற்றுச்சூழல் சொத்து, தாவரங்கள், உயிரிகள் மற்றும் மனித இனம் ஆகியவற்றிற்கு ஊறு விளைவிக்குமளவுக்கு காற்றுமண்டலத்தில் திட, திரவ அல்லது காற்று வடிவப் பொருள் கலந்திருப்பதையே காற்று மாசுபடுதல்” என எந்த சட்டம் காற்று மாசுபடுதலை வரையறுக்கிறது

A) காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் சட்டம் 1978

B) காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் சட்டம் 1980

C) காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் சட்டம் 1981

D) காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் சட்டம் 1992

கீழ்க்கண்டவற்றுள் காற்று மாசுபடுதலின் வகைகள் எவை?

1. கிராமப்புற காற்று மாசு

2. நகர்ப்புற காற்று மாசு

3. உட்புற காற்று மாசு

4. வெளிப்புற காற்று மாசு

A) அனைத்தும் B) 1, 2 C) 3, 4 D) 1, 2, 4

மனிதர்களின் வசிப்பிடத்திற்குள் தீங்கு விளைவிக்கக்கூடிய அசுத்தங்கள் காற்றில் கலந்திருப்பதை ____________ மாசு என்கிறோம்.

A) உட்புற காற்று மாசு

B) வெளிப்புற காற்று மாசு

C) வசிப்பிட காற்று மாசு

D) நகர்ப்புற காற்று மாசு

(குறிப்பு: திட எரிபொருட்களைக் கொண்டு சமையல் செய்கின்றபோது உட்புற காற்று மாசு அடைகின்றது.)

காற்றுமண்டலத்தில் திட, திரவ, அல்லது காற்று வடிவ அசுத்தங்கள் கலந்திருப்பது _______________ எனப்படுகிறது.

A) உட்புற காற்று மாசு

B) வெளிப்புற காற்று மாசு

C) வசிப்பிட காற்று மாசு

D) நகர்ப்புற காற்று மாசு

(குறிப்பு: தொழிற்சாலைகளாலும் மோட்டார் வாகனங்களாலும் வெளிப்புறக்காற்று மாசு அடைகின்றது.)

வாகனங்கள் _____________ கலந்த புகையை வெளியிடுவதால் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து சுற்றுச்சூழல் அசுத்தமடைகிறது.

A) ஓசோன்

B) பனி

C) கரியமில வாயு

D) ஹட்ஜன்

மின்சாரத் திட்டங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் போன்றவை _____________ ஐ வெளியிட்டு காற்று மண்டலத்தில் அசுத்தமான கழிவுகளை கலப்பதால் அமிலமழை ஏற்படுகிறது.

A) கார்பன் டை ஆக்சைடு

B) சல்பர் டை ஆக்சைடு

C) ஹைட்ரஜன் ஆக்சைடு

D) சல்பர் ஆக்சைடு

கீழ்க்கண்டவற்றுள் காற்று மாசுபடுதலுக்கான காரணங்கள் எவை?

1. வாகனங்கள் வெளியிடும் புகை

2. புதை படிவ எரிபொருளில் மின்சாரத் திட்டங்கள்

3. தொழிற்சாலை வெளியேற்றும் புகை

4. கட்டிடக் கட்டுமானம் மற்றும் வேளாண்மை நடவடிக்கைகள்

5. இயற்கை காரணங்கள்

6. வீட்டு நடவடிக்கைகள்

A) அனைத்தும் B) 1, 2, 3, 4

C) 1, 3, 4, 5 D) 1, 3, 4, 5, 6

(குறிப்பு:

இயற்கை காரணங்கள்: பூமி தன்னைத்தானே மாசுபடுத்திக் கொள்கிறது. எரிமலை, காட்டுத்தீ, தூசுப்புயல் போன்றவையும் காற்றில் மாசு கலக்க வழி செய்கின்றன.

வீட்டு நடவடிக்கைகள்: சமையலுக்கு பயன்படும் விறகு, கொசு கொல்லி, எலிக் கொல்லி, விளக்குகள் மற்றும் வாசனை திரவியங்கள் ஆகியவையும் காற்றில் நச்சு கலக்க காரணமாகிறது.

கட்டுமானம் மற்றும் வேளாண்மை நடவடிக்கைகள்: பழைய கட்டிடங்களை இடிப்பதாலும் புதியக் கட்டுமானத்தில் சிமெண்ட் பயன்படுத்தும் பொழுதும் காற்றில் அசுத்தமான பொருட்கள் கலக்கின்றன. விவசாயத்தில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தும் பொழுது காற்று மாசுபடுகிறது.)

கீழ்க்கண்டவற்றுள் காற்று மாசின் விளைவுகளாக கருதப்படுபவை எவை?

1. புவி வெப்பமடைதல்

2. அமில மழை

3. வன விலங்குகள் எண்ணிக்கை குறைதல்

4. ஓசோன் மண்டலம் பலவீனமடைதல்

5. மனித இன சுகாதாரம் கெடுதல்

6. தூர்ந்து போதல்

A) 1, 2, 4, 5 B) 2, 3, 4, 5 C) 1, 2, 4, 5 D) அனைத்தும்

(குறிப்பு:

தூர்ந்துபோதல் (Eutrophication): காற்றில் அதிக அளவில் கலந்துள்ள நைட்ரஜன் போன்ற நச்சுக்காற்று தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் மீன்களை பெருமளவில் பாதிக்கிறது.

புவி வெப்பமடைதல்: காற்று மாசு வளிமண்டல வெப்ப அளவை உயர்த்துகிறது. இதனால் துருவப்பகுதி பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் உயருகிறது. இதனால் நிலப்பகுதி கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. உயிரினங்கள் இடம்மாறவும், அழியவும் செய்கின்றன.

ஓசோன் மண்டலம் பலவீனமடைதல்: வளிமண்டல அசுத்தம் ஓசோன் படலத்தைக் குறைக்கிறது. ஓசோன் படலம் சூரியனின் புற ஊதாக்கதிர் தாக்கத்திலிருந்து மக்களை காக்கிறது. இது குறைவதால் புற ஊதாக் கதிர்கள் நம்மை தாக்கும் அபாயம் ஏற்படும்.)

உலக அளவில் ஒவ்வொரு நாளும் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின்________________ சதவீதம் பேர் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மோசமான இடர்ப்பாடுக்கு உள்ளாகின்றனர்.

A) 85 B) 88 C) 91 D) 93

(குறிப்பு: உலக அளவில் ஒவ்வொரு நாளும் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் 93 சதவீதம் பேர் (1.8 பில்லியன்) மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மோசமான இடர்ப்பாடுக்கு உள்ளாகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.)

காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்தும் வழிகளில் தவறானது எது?

A) மக்கள் வசிக்காத இடங்களில் ஆலைகளை அமைத்தல்

B) ஆலைகளின் புகைப்போக்கித் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல்

C) அதிகமான செடிகளையும், மரங்களையும் நடுதல்

D) மரபுசாரா எரிபொருள் ஆற்றல்களை பயன்படுத்துவதை தடுத்தல்

(குறிப்பு: மரபுசாரா எரிபொருள் ஆற்றல்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், பொது போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலம் காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்தலாம்.)

கூற்று 1: இயற்கை சூழலில் தீங்குவிளைவிக்கக்கூடிய அசுத்தங்கள் சேருவதையே மாசுபடுதல் என்கிறோம்.

கூற்று 2: உயிரினங்களுக்கு ஆபத்தான, உயிரினங்களின் உடல் நலனைக் கெடுக்கிற பொருள்களையோ, சக்திகளையோ மனிதன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நீர் நிலைகளுக்குள் செலுத்துதல் நீர் மாசுபடுத்துதல் ஆகும்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

கீழ்க்கண்டவற்றுள் நீர் மாசுக்களின் வகைகள் எவை?

1. நில மேற்பரப்பு நீர் மாசுபடுதல்

2. நிலத்தடி நீர் மாசுபடுதல்

3. நுண்ணுயிரியல் மாசுபடுதல்

4. ஆக்ஸிஜன் குறைபாடு மாசுபடுதல்

5. குடிநீர் மாசுபடுதல்

A) அனைத்தும் B) 1, 2, 3, 4 C) 2, 3, 4, 5 D) 1, 2, 4, 5

பூமியின் மேற்பரப்பில் இருக்கின்ற நீர் நிலைகள் ஆறுகள், குளங்கள், கடல் போன்றவை மாசுபடுவது ______________ எனப்படும்.

A) நில மேற்பரப்பு நீர் மாசுபடுதல்

B) நிலத்தடி நீர் மாசுபடுதல்

C) நுண்ணுயிரியல் மாசுபடுதல்

D) ஆக்ஸிஜன் குறைபாடு மாசுபடுதல்

(குறிப்பு: ஆபத்து விளைவிக்கும் பொருட்களை நீர்நிலைகளில் கொட்டுவதால் நில மேற்பரப்பு நீர் மாசு அடைகின்றது.)

பூமிக்கு அடியில் உள்ள நீர் மாசு, நிலத்தடி வாயு, எண்ணெய் பொருள்கள், வேதியியல் பொருள்கள் ஆகியவை நிலத்தடி நீரைச் சென்று சேர்தல் ____________ வகை மாசுபாடுதல் ஆகும்.

A) நில மேற்பரப்பு நீர் மாசுபடுதல்

B) நிலத்தடி நீர் மாசுபடுதல்

C) நுண்ணுயிரியல் மாசுபடுதல்

D) ஆக்ஸிஜன் குறைபாடு மாசுபடுதல்

(குறிப்பு: பூமிக்கு மேலே கெட்டுப்போன திரவங்களும், சாக்கடைகளும் நிலத்தடி நீரின் தன்மையைக் கெடுக்கின்றன.)

சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. வைரஸ் பாக்டீரியா போன்றவை நீரின் தன்மையைக் கெடுக்கின்றன. இந்த நீர் நீர்வாழ் உயிரினங்களையும், மனிதர்களையும் பாதிக்கின்றது. இவ்வகை மாசுபடுதல் நுண்ணுயிரியல் மாசுபடுதல் எனப்படும்.

2. நீரில் உள்ள ஆக்ஸிஜன் குறைவதால் அல்லது இல்லாமல் போவதால், நன்மையான நுண்ணுயிர் கிருமிகள் இறந்து ஆபத்தான நுண்ணுயிர்க்கிருமிகள் வளர்கின்றன.

3. ஆபத்தான நுண்ணுயிர்க் கிருமிகள் அம்மோனியா, சல்பைடு போன்ற நச்சுப்பொருட்களை வெளியிடுவதால் மனிதகுலம், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்படைகின்றன. இவ்வகை மாசுபடுதல் ஆக்ஸிஜன் குறைபாடு மாசுபடுதல் எனப்படும்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

நீர் மாசுபடுதலுக்கான காரணங்களில் தவறானது எது?

A) திடக் கழிவுகள் குவித்தல்

B) ஆலைக் கழிவுகளைக் கொட்டுதல்

C) புவி வெப்பமடைதல்

D) கட்டுமானப் பணிகள்

(குறிப்பு: நீர் மாசுபடுதலுக்கான காரணங்கள்

கழிவு நீர் மற்றும் தேவையற்ற நீர் வெளியேற்றம்

திடக் கழிவுகள் குவித்தல்

ஆலைக் கழிவுகளைக் கொட்டுதல்

எண்ணெய் சிந்துதல்

அமில மழை

புவி வெப்பமடைதல்

நீர்நிலைகளில் பிராண வாயு குறைதல்)

நீர்நிலைகள் மாசுபடும் போது தண்ணீரில் _____________ன் அளவு அதிகரிக்கிறது.

A) ஆக்சிஜன்

B) குளோரின்

C) புளூரின்

D) நைட்ரஜன்

(குறிப்பு: நீர்நிலைகள் மாசுபடும் போது தண்ணீரில் அதிக அளவு நைட்ரஜனும் குறைந்த அளவு பிராணவாயுவும் இருக்கும். இதனால் நீர்நிலைகளில் பாசிபடர்ந்து காணப்படும். பிராண வாயுக் குறைபாட்டால் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.)

அமில மழை ______________ விளைவுகளில் ஒன்று.

A) காற்று மாசு

B) நீர் மாசு

C) நில மாசு

D) ஒலி மாசு

(குறிப்பு: காற்று மாசுவினால் அமில மழை ஏற்பட்டு நீர்மாசு ஏற்படுகிறது. காற்று மாசுவில் உள்ள அமிலத் துகள்கள் தண்ணீர் ஆவியுடன் கலந்து அமில மழையை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.)

பின்வரும் எந்த ஒன்று புற ஊதாக் கதிர்களிலிருந்து மனிதர்களை பாதுகாக்கிறது?

A) UV – A

B) UV – C

C) ஓசோன் படலம்

D) மேற்சொன்ன எதுவுமில்லை

கூற்று 1: மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் மாசுப்பொருட்களான, ஆஸ்பெஸ்ட்டாஸ், காரீயம், பாதரசம், கிரிஸ் எண்ணெய் மற்றும் பெட்ரோலியக் கழிவுகள் போன்றவை ஆலைக்கழிவுகளில் அதிகம் உள்ளது.

கூற்று 2: நீர் மாசுவின் காரணமாக காரீயம், காட்மியம் போன்ற மாசுக்காரணிகள் கலந்த உணவை சிறிய பறவைகள், அவற்றை உண்ட மீன்கள், அவற்றை உண்ட மனிதர்கள் என அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

கீழ்க்கண்டவற்றுள் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் எவை?

1. ஹெபாடிட்டிஸ் A 2. டைபாய்டு

3. மலேரியா 4. டெங்கு காய்ச்சல்

5. பெரி பெரி

A) அனைத்தும்

B) 1, 2, 3, 4

C) 2, 3, 4, 5

D) 1, 2, 4, 5

(குறிப்பு: சுத்திகரிக்கப்படாத அல்லது சரியாக சுத்திகரிக்கப்படாத கழிவுகள் நீர்நிலைகளில் கலக்கும் போது வாழ்வியல் நிலைகளைப் பேரளவு பாதிக்கின்றன. திறந்த வெளியில் மலம் கழித்தல், திடக் கழிவுகளைக் கொட்டுதல், சாக்கடை நீரைக் கலத்தல் ஆகியவற்றின் மூலமாக தண்ணீர் மூலம் பரவும் நோய்களான ஹெபாடிட்டிஸ் A, டைபாய்டு, மலேரியா, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் மற்றும் புழுத்தொற்றுக்கள் ஏற்படுகின்றன.)

சூழலியல் என்பது எந்த ஒன்றின் சிறிய பகுதி?

A) அயனோஸ்பியர்

B) லித்தோஸ்பியர்

C) பையொஸ்பியர்

D) மெஸ்ஸோஸ்பியர்

கீழ்க்கண்டவற்றுள் நீர் மாசுவினைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எவை?

1. ஒருங்கிணைந்த நீர்நிர்வாக நடவடிக்கையை மேற்கொள்ளல்.

2. தேங்கு நீர்க் குளங்களும் முறையான வடிகால் வசதியும் ஏற்படுத்துதல்.

3. வடிநீர்க் கால்வாய்களை பராமரித்தல்.

4. கழிவு மற்றும் சாக்கடை நீரை சுத்தப்படுத்தும் அமைப்புகளை நிறுவுதல்.

5. தொடர்ந்து நீர் ஆதாரங்கள் மற்றும் கழிவு நீரைக் கண்காணித்தல்.

6. சட்ட விரோதமாக நீர்நிலைகளில் கழிவுகளைக் கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தல்.

A) அனைத்தும்

B) 1, 2, 3, 4, 6

C) 2, 3, 4, 5, 6

D) 1, 2, 4, 5

“மனித உடல் நலத்திற்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் ஒவ்வாத அளவுக்கு அதிகமான சத்தத்தை எழுப்புவது ஒலி மாசுவாகும். இது அதிகமாக தொழிற்சாலைகளால் உருவாக்கப்படலாம். வானூர்திகள், போக்குவரத்து வாகனங்கள், புகை வண்டிகள் மற்றும் திறந்தவெளி கட்டுமானங்களிலும் காணப்படலாம்.” என்று ஒலி மாசு பற்றி கூறியவர்

A) ஜெரி. A. நாதர்சன், ரிச்சர்டு. E. பெர்க்

B) ரிச்சர்டு. E. பெர்க், கார்ல் பியர்ஸன்

C) ஜெரி. A. நாதர்சன், சர் எட்மண்டு ஹிலரி

D) கார்ல் பியர்ஸன், சர் எட்மண்டு ஹிலரி

மனிதனால் தோற்றுவிக்கப்படும் ஒலி மாசுக்களில் தவறானது எது?

A) கப்பல் மற்றும் ஆகாய விமானங்கள் இயக்குதல்

B) பூமிக்கடியில் ஆய்வு செய்தல்

C) ஆழ்துளைகள் ஏற்படுத்துதல்

D) வளிமண்டல ஒலி

(குறிப்பு: இடி இடித்தலும் மின்னல் வெட்டுவதும் மற்றும் இதுபோன்ற மின் பாதிப்புக்களால் வளிமண்டலத்தில் ஒலி மாசு ஏற்படுகிறது.)

கீழ்க்கண்டவற்றுள் ஒலி மாசுவிற்கான காரணங்களாக கருதப்படுபவை எவை?

1. மோசமான நகர்ப்புறத் திட்டமிடல்

2. மோட்டார் வாகனங்களின் இரைச்சல்

3. வெடிகள்

4. தொழிற்சாலை இயந்திரங்கள்

5. அமில மழை

A) அனைத்தும் B) 1, 2, 3, 4 C) 1, 3, 4, 5 D) 1, 2, 4, 5

(குறிப்பு:

மோசமான நகர்ப்புறத் திட்டமிடல்: முறையற்ற நகர்ப்புறத்திட்டம் நகர்ப்புற பயணிகளுக்கு அதிக அளவு ஒலிமாசுவினை ஏற்படுத்துகின்றது.

மோட்டார் வாகனங்களின் இரைச்சல: நகர்ப்புறங்களில் மோட்டார் வாகனங்கள் ஏற்படுத்தும் இரைச்சல் காரணமாக மக்கள் தற்காலிக காதுகேளா நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

வெடிகள்: சில நிகழ்ச்சிகளில் அதிகமான அளவு பட்டாசுகள், வெடிகள் வெடிக்கப்படுகின்றது. பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு ஒலியை ஏற்படுத்துகின்றது. சில சமயங்களில் சிறுவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் செவிட்டுத் தன்மையை ஏற்படுத்துகின்றது.

தொழிற்சாலை இயந்திரங்கள்: தொடர்ந்து இயந்திரங்கள் இயக்கப்படும் போது ஏற்படுகின்ற இரைச்சல் கடின துளைக் கருவிகளை இயக்கும் போது ஏற்படுகின்ற இரைச்சல் போன்றவை தொழிலளர்களுக்கு தாங்க முடியாத தொந்தரவாக அமைகின்றது.)

கீழ்க்கண்டவற்றுள் ஒலி மாசுவினால் ஏற்படும் விளைவுகள் எவை?

1. கேட்கும் திறன் இழப்பு

2. உளரீதியான, மனரீதியான பாதிப்புகள்

3. இதய பாதிப்புகள்

4. விலங்கினங்களுக்கு தீமை ஏற்படுத்தும்

5. வன உயிரினங்களுக்கு தீமை ஏற்படுத்தும்

A) அனைத்தும் B) 1, 2, 4, 5 C) 2, 3, 4, 5 D) 1, 3, 4, 5

(குறிப்பு:

கேட்கும் திறன் இழப்பு: தொடர்ந்து அதிக அளவு இரைச்சலில் இருந்தால் சத்தத்தின் காரணமாக கேட்கும் திறன் பாதிக்கப்படும். வயதானோருக்கு தொழில் ரீதியான இரைச்சலால் செவியின் கேட்கும் திறன் குறையும்.

உளரீதியான, மனரீதியான பாதிப்புகள்: தேவையில்லா இரைச்சல் உள, மன நலன்களைப் பாதிக்கின்றது. இதன் காரணமாக, மிகை அழுத்தம், கோபம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றது.

இதய பாதிப்புகள்: அதிக அளவு இரைச்சலில் இருப்பது இருதய நோய்களுக்கும் அதிக ரத்த அழுத்தத்திற்கும் வழிவகுக்கும்.

விலங்கினங்களுக்கு தீமை ஏற்படுத்தும்: அதிக அளவு இரைச்சல் விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள் ஆகியவற்றிற்கு அதிக அளவு தீங்கிழைத்து மரணம் நிகழவும் காரணமாக அமைகின்றது.

வன உயிரினங்களுக்கு தீமை: அதிக அளவு இரைச்சல் வன உயிரினங்களுக்கு சுரப்பிகளின் சமமின்மை, அதிக அழுத்தம், பதற்றம் போன்றவற்றை ஏற்படுத்துகின்றது.)

ஒலி மாசுவினை கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகளில் தவறானது எது?

A) ஒலித்தடைகளை ஏற்படுத்துதல்

B) தரைப் போக்குவரத்திற்கு புதிய சாலைகள் ஏற்படுத்துவதை தடை செய்தல்

C) வேலை செய்யும் இடங்களில் ஒலித் தடுப்பானை நிறுவுதல்

D) ஒலி பெருக்கிகளைக் கட்டுப்படுத்துதல்

(குறிப்பு: ஒலி மாசுவினை கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகள்

தரைப் போக்குவரத்திற்கு புதிய சாலைகள் ஏற்படுத்துதல்

போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாடு

கனரக வாகனங்கள் செல்லும் நேரத்தைக் கட்டுப்படுத்துதல்.)

“கழிவுகளை கொட்டுவதால் நிலம் தரக்குறைவானதாக மாறும். சுற்றுச்சூழலில் கொட்டப்படும் பல திட, திரவ, வாயுப் பொருட்கள் நிலத்தின் தன்மையைக் கெடுத்து விடுதல் நிலமாசு ஆகும்.” என்று எந்த விதி கூறுகிறது?

A) சுற்றுச்சூழல் செயல்பாடுகளின் பாதுகாப்பு விதி 1992

B) சுற்றுச்சூழல் செயல்பாடுகளின் பாதுகாப்பு விதி 1995

C) சுற்றுச்சூழல் செயல்பாடுகளின் பாதுகாப்பு விதி 1997

D) சுற்றுச்சூழல் செயல்பாடுகளின் பாதுகாப்பு விதி 1999

கீழ்க்கண்டவற்றுள் நில மாசுவிற்கான காரணங்கள் எவை?

1. காடுகளை அழித்தல்

2. விவசாய நடவடிக்கைகள்

3. சுரங்கத் தொழில்கள்

4. மண்ணில் புதைத்தல்

5. தொழில்மயமாதல்

6. கட்டுமானப் பணிகள்

7. அணுமின் விரயங்கள்

A) அனைத்தும்

B) 1, 2, 3, 4, 7

C) 1, 2, 3, 4, 6,7

D) 2, 3, 4, 5, 7

(குறிப்பு:

அணுமின் விரயங்கள்: அணுமின் நிலையங்களிலுள்ள கழிவுகளான கதிர்வீச்சுப் பொருட்கள், நச்சுத்தன்மை கொண்ட தீமை விளைவிக்கும் வேதிப்பொருட்கள் மனித நலத்தைப் பாதிக்கின்றது. இப்பாதிப்பைத் தவிர்க்க இவை பூமிக்கடியில் பாதுகாப்பறைகளில் வைக்கப்படுகின்றது. இதன் மூலமும் நிலம் மாசுபடக்கூடும்.)

நில மாசுவினால் ஏற்படும் விளைவுகள் எவை?

1. மண் மாசுபடுதல்

2. உடல் ஆரோக்கிய கேடு

3. காற்று மாசுபாடு

4. விலங்குகள் மீதான பாதிப்பு

5. கேட்கும் திறன் இழப்பு

A) 1, 2, 3, 4 B) 2, 3, 4, 5 C) 1, 3, 4, 5 D) 1, 2, 4, 5

(குறிப்பு:

மண் மாசுபடுதல்: நில மாசுபாட்டில் மிகவும் மோசமானது நிலத்தின் மேல் பகுதியான மண் மாசுபடுதலாகும். ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடே இதற்கு முக்கிய காரணமாகும்.

காற்று மாசுபாடு: கழிவு பொருட்களை பூமிக்குள் புதைப்பது அல்லது எரியூட்டுவது காரணமாக காற்று மாசுபாடு ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது.

விலங்குகள் மீதான பாதிப்பு: நிலத்தின் மீது மனிதர்களின் தொடர் நடவடிக்கைகளால் நிலம் மாசுபட்டு வன வாழ் உயிரினங்களை மிகத் தொலைவில் நகரச் செய்துள்ளது. வாழ தோதுவான நிலை இல்லாததால் பெரும்பாலான வனவாழ் உயிரினங்கள் அழிவுநிலைக்குத் தள்ளப்பட்டன.)

நில மாசுவினை கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகளில் தவறானது எது?

A) மக்களுக்கு குறைத்தல், மறுசுழற்சி, மறுபயன்படுத்துதல் பற்றி உரிய அறிவினைப் புகட்டுவது.

B) இயற்கையாகவே அழிந்து, மண்ணுக்கு சேதம் விளைவிக்காத பொருள்களைப் பயன்படுத்துவது.

C) பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்துதல்

D) மிகக் குறைவான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துதல்

(குறிப்பு: நில மாசுவுக்கு தீர்வுகள்

பூச்சிக்கொல்லி மருந்துகளை குறைந்த அளவில் பயன்படுத்துதல்.

பலவகைப் பயிர்களைப் பயிரிட்டு மண் வளம் காத்தல். பயிர்ச் சுழற்சி முறை மண்ணின் வளத்தைக் கூட்டும் என்கிறார்கள்.

தேவையில்லாத குப்பைகளை எரித்தோ அல்லது புதைத்தோ அப்புறப்படுத்துதல்.)

உலகின் சராசரி வெப்பநிலை கடந்த 100 ஆண்டுகளில் _____________ அளவு கூடியுள்ளதாக சொல்லப்படுகிறது.

1. 1.4 °C 2. 1.4 °F 3. 0.75 °C 4. 0.75 °F

A) 1, 2 B) 2, 3 C) 1, 3 D) 1, 4

(குறிப்பு: 0.75°C வெப்பநிலையில் 3ல் 2 பங்கு 1975க்கு பின் வந்த குறுகிய காலத்திலேயே கூடியதாகும். நிலம் மற்றும் நீர் உள்ளடக்கிய பூமி மற்றும் வளிமண்டலத்தில் தற்போது அதிகரிக்கும் வெப்ப நிலையையே புவி வெப்பமயமாதல் என்கிறோம்.)

கீழ்க்கண்ட எந்த வாயுக்களின் அளவு வளிமண்டலத்தில் அதிகரிப்பதால் பசுமைக்குடில் விளைவு ஏற்படுகிறது?

1. கரியமில வாயு 2. மீத்தேன்

3. குளோரோபுளோரோ கார்பன் 4. நைட்ரஸ் ஆக்ஸைடு

5. ஆக்ஸிஜன்

A) அனைத்தும் B) 1, 2, 3, 4 C) 1, 2, 4, 5 D) 1, 3, 4, 5

(குறிப்பு: கரியமில வாயு, மீத்தேன், குளோரோபுளோரோ கார்பன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற பசுமைக்குடில் வாயுக்களின் அளவு வளிமண்டலத்தில் அதிகரிப்பதால் புவியின் வெப்பம் அதிகரிக்கிறது. இதை பசுமைக்குடில் விளைவு என்பர்.)

புவி வெப்பம் அதிகரிக்க கரியமில வாயு ___________சதவீதம் காரணமாக உள்ளது.

A) 25% B) 50% C) 80% D) 90%

(குறிப்பு: உயிரிப் பொருட்கள், விறகு ஆகியவற்றை எரிப்பதாலும் காடுகள், மரங்களை அழிப்பதாலும் கரியமில வாயுவின் அளவு அதிகரிக்கின்றது.)

தொழிற்புரட்சிக்கு முன் வளிமண்டலத்தில் இருந்த கரியமில வாயுவின் அளவு

A) 140 ppm

B) 200 ppm

C) 280 ppm

D) 402 ppm

(குறிப்பு: தொழில்புரட்சிக்கு பின் 2016ஆம் ஆண்டு வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் அளவு 402 ppm. அதாவது 40 விழுக்காடு அளவிற்கு புவிவெப்பம் அதிகரித்துள்ளது.)

“உயிர்சார்” என்ற வார்த்தையின் பொருள் என்ன?

A) உயிர் வாழ்வன

B) உயிரற்றவை

C) பருப்பொருள்

D) மேற்சொன்ன எதுவுமில்லை

வளிமண்டலத்தில் ______________ன் அளவு வளர்ந்து கொண்டு செல்வதால் காலநிலை மாற்றம் ஏற்படுகிறது.

A) செயற்கை கோள்கள்

B) ஓசோன்

C) புகை

D) பசுமைக்குடில் வாயுக்கள்

(குறிப்பு: வளிமண்டலத்தில் பசுமைக் குடில் வாயுக்களின் அளவுகள் வளர்ந்துகொண்டே செல்வதால் நீண்ட காலத்தில் ஏற்படும் பருவநிலை மாறுபாடுகளே காலநிலை மாற்றம் எனப்படும்.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு. (அமில மழை)

1. தொழிற்சாலைகள், வாகனங்கள் கொதிப்பான்கள் போன்றவை வெளியிடும் வாயுக்கள் வளிமண்டலத்தில் உள்ள நீர்த்துகள்களோடு இணையும் போது அமில மழை ஏற்படுகின்றது.

2. இந்த வாயுக்கள் நைட்ரஜன் ஆக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு மற்றும் சல்பர் டிரை ஆக்ஸைடு, தண்ணீரோடு கலக்கின்ற போது சல்பரஸ் அமிலம், நைட்ரிக் அமிலம், சல்பியூரிக் அமிலம் போன்றவையாக மாறுகின்றது.

3. இந்நிகழ்வுகள் எரிமலை வெடித்துச் சிதறும் போதும் எரிகுழம்புகளைக் கக்கும் போதும் இயற்கையிலேயும் ஏற்படும்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: தாவரங்கள், நீர்வாழ் உயிரினங்கள், கட்டமைப்புக்கள் அதிக அளவில் அமில மழையால் பாதிக்கப்படுகிறது.)

கீழ்க்கண்டவற்றுள் மின்னணுக் கழிவுகள் அல்லாதது எது?

A) காற்று சீரமைப்பிகள்

B) கேட்கும் கருவிகள்

C) கைபேசிகள்

D) கட்டுமானத்துறை கழிவுகள்

கூற்று 1: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் E – கழிவுகள் என்று பொதுவாக அழைக்கப்படும் மின்னணுக் கழிவுகள் ஏற்படுகின்றன.

கூற்று 2: தொலைசாதனம், கணினிகள், கேட்கும் கருவிகள், தொலைபேசி, VCR, DVD, தொலைநகல், நகலெடுக்கும் இயந்திரங்கள், கம்பியில்லா கருவிகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை கழிக்கும் போதோ அல்லது மறுசுழற்சி செய்யும்போதோ E கழிவுகள் தோன்றும்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

கீழ்க்கண்டவற்றுள் திடக்கழிவின் வகைகள் எவை?

1. வீட்டுக் கழிவுகள் 2. இறந்த பிராணிகள்

3. மருத்துவமனைக் கழிவுகள் 4. கட்டுமானத்துறை கழிவுகள்

5. விவசாயக் கழிவுகள் 6. தொழிற்சாலைக் கழிவுகள்

A) 1, 3, 4, 5, 6

B) 2, 3, 4, 5, 6

C) 1, 2, 4, 5, 6

D) அனைத்தும்

(குறிப்பு: மனித நடவடிக்கைகளில் பயனில்லாத தேவையற்ற பொருட்களைக் கழிப்பதே திடக் கழிவுகள் ஆகும். அவை திடப்பொருட்களாகவோ, பகுதி திடப்பொருட்களாகவோ அல்லது திரவமாகவோ இருக்கும்.)

“இயற்கை வளத்தின் அளவு எக்காலத்திலும் குறையாமல் இருக்க வேண்டும்” என்று நீடித்த நிலையான மேம்பாட்டிற்கு இலக்கணம் வகுத்தவர்கள்

1. பியர்ஸ் 2. மார்கண்டேயா

3. பார்பியர் 4. ஆலன் நீஸ்

A) 1, 2, 3 B) 1, 2, 4 C) 2, 3, 4 D) 1, 3, 4

(குறிப்பு: இப்போதுள்ள சந்ததியினருக்கு மட்டுமின்றி, எதிர்காலச் சந்ததியினருடன் வாழ்வதற்குத் தேவையான வளத்தை வைத்துவிட்டு அடைகின்ற மேம்பாடே நீடித்த நிலையான மேம்பாடு எனப்படும்.)

“வருங்காலத் தலைமுறையினர் தங்கள் தேவைகளை நிறைவேற்ற எந்த ஒரு தடையும் இல்லாத நிலையில் தற்பொழுது உள்ள மக்களின் தேவையை நிறைவேற்றுதலே நீடித்த நிலையான மேம்பாடு.” என்று எந்த அமைப்பு கூறியுள்ளது

A) உலக சுகாதார நிறுவனம்

B) சுற்றுப்புறச் சூழல் மற்றும் மேம்பாட்டிற்கான உலக அமைப்பு (1987)

C) யுனெஸ்கோ

D) ஐக்கிய நாடுகள் சபை

நீடித்த நிலையான வளர்ச்சி என்பது கீழ்க்கண்ட எந்த குறிக்கோள்களையும் சேர்த்து சாதிப்பது?

1. பொருளாதார வளர்ச்சி 2. சமூகச் சேர்ப்பு

3. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி 4. சுற்றுப்புறப் பாதுகாப்பு

A) 1, 2, 3 B) 1, 2, 4 C) 2, 3, 4 D) 1, 3, 4

2030க்குள் 17 குறிக்கோள்களைச் சாதிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை (UNO) ____________ இணைந்துபோகிற கொள்கைகளை நிறுவியிக்கிறது.

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: UNOன் மூன்று கொள்கைகள் – உலகப்பொதுமை (Universality), ஒருங்கிணைப்பு (Integration), மாற்றம் (Transformation).

நீடித்த நிலையான மேம்பாட்டிற்கான உலகளாவிய இலக்குகள் எத்தனை?

A) 3 B) 12 C) 17 D) 21

உவர் நிலங்கள் கீழ்க்கண்ட எந்த மாநிலங்களில் காணப்படுகிறது?

1. பஞ்சாப் 2. ஹரியானா 3. மேகாலயா

4. உத்திரப்பிரதேசம் 5. அஸ்லாம்

A) 1, 2, 3 B) 1, 2, 4 C) 2, 3, 4 D) 1, 3, 5

(குறிப்பு: சத்தீஸ்கார், ராஜஸ்தான், ஆந்திரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஒரு சில பகுதிகளிலும் உவர் நிலங்கள் காணப்படுகிறது.)

காரநிலம் அதிகமாக காணப்படும் சமவெளி எது?

A) சிந்து-கங்கை

B) வட இந்திய

C) கங்கை

D) மேற்கூறிய அனைத்தும்

(குறிப்பு: பாசன வசதி பெற்ற நிலங்கள் மற்றும் வறண்ட பகுதிகளில் உள்ள கிட்டத்தட்ட 50 சதவீத நிலங்களில் ஓரளவு உவர் பிரச்சனை உள்ளது. பயிரின் வேர்ப் பகுதிகளில் அதிக அளவு உப்பு/அமிலம் படிந்து நிலத்தின் உற்பத்தித் திறனை பகுதியாகவோ அல்லது முழு அளவாகவோ பாதிக்கின்றது. இத்தகைய நிலங்கள் பிரச்சனை (உவர், உப்பு மற்றும் அமிலம்) நிலங்கள் எனப்படுகிறது.)

பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுபவை எவை?

A) ஆறுகள்

B) மலைகள்

C) மரங்கள்

D) நீர்

(குறிப்பு: மரங்கள் உயிரிக் காற்றை அளித்து காற்றின் பண்பை உயர்த்துகின்றது. தண்ணீர், மண்வளம் ஆகியவற்றைப் பாதுகாத்து வனவிலங்குகளுக்கு உதவியாக உள்ளது. மரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது கரியமில வாயுவைக் கிரகித்து நாம் சுவாசிக்கும் உயிரிக் காற்றை வெளியிடுகின்றது. எனவே மரங்கள் பூமியின் நுரையீரல் எனப்படுகிறது.)

இயற்கை பண்ணை முறை குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.

1. கால்நடை சாணம், இயற்கைக் கழிவுகள் ஆகியவற்றை உரமாகவும் பயிர்ப்பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தியும் பருப்பு வகைகள் போன்றவற்றைப் பயிரிட்டு பயிர்ச் சுழற்சி முறையையும் பயன்படுத்தி செய்யப்படும் வேளாண்மை இயற்கை பண்ணை முறை எனப்படும்.

2. இதில் ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்படுவதில்லை.

3. விவசாய சூழல் அமைப்பில் உள்ள நிலத்தின் தன்மை, பயிர்கள், கால்நடைகள் மற்றும் மக்களைக் கருத்தில் கொண்டு உத்தம அளவு உற்பத்தி செய்யும் உள்ளடக்கிய அமைப்பு முறையே இயற்கைப் பண்ணைகளாகும்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

உயிரினங்களுக்கிடையேயான பரஸ்பர உறவும், அவைகளின் சுற்றுச்சூழலையும் பற்றி படிக்கும் இயல்

A) இயற்கையியல்

B) உயிரியல்

C) சூழலியல்

D) பூலோகவியல்

ஒரு பகுதியின் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் தொகுப்பும், அவற்றிற்கிடையேயான தொடர்பும் _____________ எனப்படும்.

A) புற விளைவு

B) இயற்கை

C) மாசுபாடு

D) சூழல் மண்டலம்

(குறிப்பு: சூழல்மண்டலம், சூழல் அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!