Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

சுற்றுச்சூழல் மேலாண்மை Book Back Questions 10th Science Lesson 22

10th Science Lesson 22

22] சுற்றுச்சூழல் மேலாண்மை

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சிப்கோ இயக்கம்: 1973ஆம் ஆண்டில் அகிம்சா வழியில் மரங்களையும் காடுகளையும் பாதுகாப்பதற்காக துவக்கப்பட்ட இயக்கம். “சிப்போ” என்னும் வார்த்தைக்கு பொருள் தழுவுதல் என்பதாகும். மரங்களை வெட்ட விடாமல் கிராம மக்கள் அவற்றை வட்டமாக சூழ்ந்துகொண்டு கட்டித் தழுவியபடி நின்றதால் இப்பெயர் அமைந்தது. உத்திரப்பிரதேச (தற்போதைய உத்தரகாண்ட்) மாநிலத்தில் உள்ள சாமோலி என்னும் ஊரில் இவ்வியக்கம் தோன்றியது. இமயமலைப் பகுதிகளில் உள்ள காடுகளை 15 ஆண்டுகள் அழிக்கக் கூடாது என்ற தடை உத்தரவை பெற்று 1980ஆம் ஆண்டு இவ்வியக்கம் மிகப்பெரும் வெற்றியை அடைந்தது.

ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா, 1936ம் ஆண்டு உத்தராகான்ட் மாநிலத்தில் துவங்கப்பட்ட இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா. இந்தியாவில் தற்போது 15 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன. தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி பகுதி, ஒரு பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோளக் காப்பக பகுதியாகும்.

தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், வெங்கடாச்சலபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ராதிகா ராமசாமி என்பவர் “இந்தியாவின் முதல் பெண் வன உயிரி புகைப்படக் கலைஞர்” என்று சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளார். இவர் பறவை இனங்களை புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரது புகைப்படத் தொகுப்பு “வன உயிரினங்களின் சிறந்த தருணங்கள்” என்னும் தலைப்பில் நவம்பர் 2014ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட வன உயிரி பாதுகாப்புக்கான நடவடிக்கைகள்: புலிகள் பாதுகாப்பு திட்டம 1973அம் ஆண்டிலும், யானைகள் பாதுகாப்புத் திட்டம் 1992ம் ஆண்டிலும் துவங்கப்பட்டது. 1976ம் ஆண்டில் முதலைகள் பாதுகாப்புத் திட்டம் துவங்கப்பட்டது. 1999ம் ஆண்டில் கடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம் துவங்கப்பட்டது. அசாம் மாநிலத்திலுள்ள காண்டாமிருகங்களை பாதுகாக்க “இந்திய காண்டாமிருகங்கள் பாதுகாப்பு 2020” என்னும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த பட்சம் 3000 ஒற்றைக் கொம்புடைய காண்டாமிருகங்களையாவது 2020ம் ஆண்டுக்குள் பாதுகாத்திட குறிக்கோள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக உலக அளவில் கச்சா எண்ணெய் பயன்படுத்தும் மூன்றாவது பெரிய நாடு இந்தியாவாகும்.

தாஜ்மஹால்: உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ளது. இது வெண்மை நிற பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான மதுரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தாஜ்மஹாலுக்கு அருகில் அமைந்துள்ளது. இதிலிருந்து உற்பத்தியாகும் சல்ஃபர் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் இப்பகுதியில் உள்ள தாஜ்மஹாலின் வெண்ணிற பளிங்கு கற்களில் மேல் படிந்து அக்கற்களை மஞ்சள் நிறமாக மாற்றியுள்ளது. தாஜ்மகாலை சிதைவிலிருந்து பாதுகாக்க தற்போது இந்திய அரசானது வெளியேற்றும் புகைகளுக்கு குறிப்பிட்ட வரையறை அளவினை விதித்துள்ளது.

100 சூரிய வெப்ப சூடேற்றிகள் மூலம் ஒரு ஆண்டுக்கு 1500 யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும்.

உலகின் மிக உயரமானதும், மிகப் பெரியதுமான காற்றாலை ஹவாய் பகுதியில் அமைந்துள்ளது. ஒரு காற்றாலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தினை 300 வீடுகள் பயன்படுத்த முடியும்.

ஷேல் வாயுக்கள் எடுப்பதற்காக இந்தியாவில் ஆறு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை கேம்பே (குஜராத்), அஸ்ஸாம் -அரக்கான் (வட கிழக்குப்பகுதி), கோண்ட்வானா (மத்திய இந்தியா), கிருஷ்ணா கோதாவரி (கிழக்கு கடற்கரைப் பகுதி), காவேரி மற்றும் இந்தோ-கங்கைப் வடிநிலப்பகுதி.

2ம் நூற்றாண்டில் (பொ.ஆ) சோழ வம்சத்தைச் சேர்ந்த கரிகால் சோழ மன்னரால் கட்டப்பட்ட கல்லணையானது மிகவும் பழமையானது. இது உலகின் நான்காவது பழமையான அணையாகும். இந்த அணை இன்றும் தமிழக மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது. இவ்வணை திருச்சிராப்பள்ளி நகருக்கு 20 கி.மீ. அருகில், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

மின்னணுக் கழிவுகளால் ஆரோக்கியத்திற்கு உண்டாகும் பாதிப்புகள்:

ஈயம்: மனிதரில் மைய நரம்பு மண்டலத்தையும் பக்க நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.

குரோமியம்: மூச்சுத்திணறல் ஆஸ்துமா

கேட்மியம்: சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் படிந்து அதன் பணிகளை பாதிக்கிறது. நரம்புகளை பாதிக்கின்றது.

பாதரசம்: மூளை மற்றும் சுவாச மண்டலத்தை பாதிக்கிறது.

பாலிவினைல் குளோரைடு (PVC) உள்ளிட்ட நெகிழிகள்: எரிப்பதால் உண்டாகும் டையாக்சின்கள் இனப்பெருக்க மண்டலத்தின் வளர்ச்சியையும், பணியையும் பாதிக்கிறது.

மின்னணுக் கழிவுகள் கீழ்க்கண்டவற்றை உள்ளக்கியது. கணினிப் பொருட்கள்-66%. தொலைத் தொடர்பு சாதனங்கள்-12%. மின்னணு சாதனங்கள்-5%. உயிரி மருத்துவ சாதனங்கள்-7%. பிற சாதனங்கள்/உபகரணங்கள்-6%

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. காடுகள் அழிப்பினால் மழை பொழிவு _____________

2. மண்ணின மேல் அடுக்கு மண் துகள்கள் அகற்றப்படுவது _____________

3. சிப்கோ இயக்கம் ____________ எதிராக ஆரம்பிக்கப்பட்டது.

4. _____________ என்பது தமிழ்நாட்டிலுள்ள உயிர்க்கோள பாதுகாப்பு மையமாகும்.

5. ஓத ஆற்றல் ______________ வகை ஆற்றலாகும்.

6. கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை _____________ எரிபொருட்கள் ஆகும்.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. உயிரி வாயு ஒரு புதைபடிவ எரிபொருளாகும்.

2. மரம் நடுவதால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.

3. வாழிடங்களை அழிப்பது வன உயிரிகளின் இழப்புக்குக் காரணமாகும்.

4. அணு ஆற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றலாகும்.

5. அதிகப்படியான கால்நடை மேய்ச்சல், மண்ணரிப்பைத் தடுக்கும்.

6. வன உயிர்களை வேட்டையாடுதல் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.

7. தேசியப் பூங்கா ஒரு பாதுகாக்கப்பட்டப் பகுதியாகும்.

8. வன உயிரி பாதுகாப்புச் சட்டம் 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

பொருத்துக:

1. மண்ணரிப்பு – ஆற்றல் சேமிப்பு

2. உயிரி வாயு – அமில மழை

3. இயற்கை வாயு – தாவரப்பரப்பு நீக்கம்

4. பசுமை இல்ல வாயு – புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

5. CFL பல்புகள் – CO2

6. காற்று – புதுப்பிக்க இயலாத ஆற்றல்

7. திடக்கழிவு – காரீயம் மற்றும் கன உலோகங்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கீழுள்ளவற்றுள் எது/எவை புதைபடிவ எரிபொருட்கள்

i.தார் ii) கரி iii)பெட்ரோலியம்

(அ) i மட்டும்

(ஆ) i மற்றும் ii

(இ) ii மற்றும் iii

(ஈ) i, ii மற்றும் iii

2. கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக கீழுள்ளவற்றுள் எவற்றினை நீவிர் பயன்படுத்துவீர்?

(அ) கழிவுகள் உருவாகும் அளவைக் குறைத்தல்.

(ஆ) கழிவுகளை மறு பயன்பாட்டு முறையில் பயன்படுத்துதல்.

(இ) கழிவுகளை மறுசுழற்சி செய்தல்.

(ஈ) மேலே உள்ளவை அனைத்தும்

3. வாகனங்கள் வெளியேற்றும் புகையில் உள்ள வாயுக்கள்

i. கார்பன் மோனாக்சைடு ii. சல்பர் டை ஆக்சைடு iii. நைட்ரஜன் ஆக்ஸைடுகள்

(அ) i மற்றும் ii

(ஆ) i மற்றும் iii

(இ) ii மற்றும் iii

(ஈ) i, ii மற்றும் iii

4. மண்ணரிப்பைத் தடுக்கப் பயன்படுவது

(அ) காடுகள் அழிப்பு

(ஆ) காடுகள்/மரம் வளர்ப்பு

(இ) அதிகமாக வளர்த்தல்

(ஈ) தாவரப் பரப்பு நீக்கம்

5. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்

(அ) பெட்ரோலியம்

(ஆ) கரி

(இ) அணுக்கரு ஆற்றல்

(ஈ) மரங்கள்

6. கீழுள்ளவற்றுள் மண்ணரிப்பு அதிகமாக காணப்படும் இடம்

(அ) மழைப்பொழிவு இல்லாத இடம்

(ஆ) குறைவான மழை பொழிவு உள்ள இடம்

(இ) அதிகமான மழைப்பொழிவு உள்ள இடம்

(ஈ) இவற்றில் எதுவுமில்லை.

7. கீழுள்ளவற்றுள் தீர்ந்து போகாத வளம்/வளங்கள்

(அ) காற்றாற்றல்

(ஆ) மண்வளம்

(இ) வன உயிரி

(ஈ) மேலே உள்ள அனைத்தும்

8. கிராமங்களில் கிடைக்கும் பொதுவான ஆற்றல் மூலம்/மூலங்கள்

(அ) மின்சாரம்

(ஆ) கரி

(இ) உயிரி வாயு

(ஈ) மரக்கட்டைகள் மற்றும் விலங்குகளின் கழிவு

9. பசுமை இல்ல விளைவு என குறிப்பிடப்படுவது

(அ) பூமி குளிர்தல்

(ஆ) புற ஊதாக் கதிர்கள் வெளி செல்லாமல் இருத்தல்.

(இ) தாவரங்கள் பயிர் செய்தல்

(ஈ) பூமி வெப்பமாதல்

10. மிக மலிவான வழக்கமான வர்த்தக ரீதியிலான தீர்ந்து போகாத ஆற்றல் மூலம்.

(அ) நீர் ஆற்றல்

(ஆ) சூரிய ஆற்றல்

(இ) காற்றாற்றல்

(ஈ) வெப்ப ஆற்றல்.

11. புவி வெப்பமாதலின் காரணமாக ஏற்படக்கூடிய விளைவு

(அ) கடல் மட்டம் உயர்தல்

(ஆ) பனிப்பாறைகள் உருகுதல்

(இ) தீவுக்கூட்டங்கள் மூழ்குதல்

(ஈ) மேலே கூறிய அனைத்தும்

12. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் காற்றாற்றல் குறித்த தவறான கூற்று எது?

(அ) காற்றாற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

(ஆ) காற்றாலையின் இறக்கைகள் மின்மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன.

(இ) காற்றாற்றல் மாசு ஏற்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படுகிறது.

(ஈ) காற்றாற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டினைக் குறைக்கலாம்.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் தருகிறது.

(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

(இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.

(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

1. கூற்று: மழை நீர் சேமிப்பு என்பது மழை நீரை சேமித்து பாதுகாப்பதாகும்.

காரணம்: மழை நீரை நிலத்தடியில் கசியவிட்டு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம்.

2. கூற்று: CFL பல்புகள் மட்டுமே பயன்படுத்துவதன் மூலம் மின்னாற்றலை சேமிக்க முடியும்.

காரணம்: CFL பல்புகள் சாதாரண பல்புகளை விட விலை அதிகமானவை. எனவே சாதாரண பல்புகளை பயன்படுத்துவதன் மூலம் நமது பணத்தையும் சேமிக்கலாம்.

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. குறையும், 2. மண் அரிப்பு, 3. மரம் வெட்டுதல், 4. நீலகிரி, 5. மரபுசாரா / மாற்று ஆற்றல் 6. புதை படிவ, 7. நிலக்கரி,

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறானதைத் திருத்தி எழுதுக:

1. தவறு

சரியான விடை: இயற்கை வாயு ஒரு புதைபடிவ எரிபொருளாகும்.

2. சரி

3. சரி

4. தவறு

சரியான விடை: அணு ஆற்றல் ஒரு புதுப்பிக்க இயலாத ஆற்றலாகும்.

5. தவறு

சரியான விடை: அதிகப்படியான கால்நடை மேய்ச்சல் மண்ணரிப்பை அதிகரிக்கும்.

6. தவறு

சரியான விடை: வன உயிர்களை வேட்டையாடுதல் சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

7. சரி

8. சரி

பொருத்துக: (விடைகள்)

1. மண்ணரிப்பு – தாவரப் பரப்பு நீக்கம்

2. உயிரி வாயு – CO2

3. இயற்கை வாயு – புதுப்பிக்க இயலாத ஆற்றல்

4. பசமை இல்ல வாயு – அமில மழை

5. CFL பல்புகள் – ஆற்றல் சேமிப்பு

6. காற்று – புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

7. திடக்கழிவு – காரீயம் மற்றும் கன உலோகங்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. i ii மற்றும் iii, 2. மேலே உள்ளவை அனைத்தும், 3. i ii மற்றும் iii, 4. காடுகள் / மரம் வளர்ப்பு, 5. மரங்கள், 6. அதிகமான மழைப்பொழிவு உள்ள இடம், 7. காற்றாற்றல் 8. மரக்கட்டைகள் மற்றும் விலங்குகளின் கழிவு, 9. பூமி வெப்பமாதல், 10. நீர் ஆற்றல், 11. மேலே கூறிய அனைத்தும், 12. காற்றாலையின் இறக்கைகள் மின்மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் தருகிறது.

2. கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!