தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Book Back Questions 6th Social Science Lesson 4
6th Social Science Lesson 4
4] தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
Book Back Questions with Answer and Do You Know Box Content
உங்களுக்குத் தெரியுமா?
உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் மெசபடோமியா நாகரிகம். இது 6500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
தூங்கா நகரம்: நாளங்காடி, அல்லங்காடி என்ற இரண்டு வகை அங்காடிகள் மதுரையில் இருந்தன. நாளங்காடி என்பது பகல் பொழுதியலான அங்காடியாகும். அல்லங்காடி என்பது இரவு நேரத்து அங்காடியாகும். இரவு-பகல் வேறுபாடு இல்லாமல் உயிர்ப்புள்ள நகரமாக மதுரை விளங்கியதால் தூங்கா நகரம் என்று அழைக்கப்பட்டது.
பெண்கள் எந்த விதப் பயமும் இன்றி இரவு நேரத்தில் அல்லங்காடியில் பொருள்களை வாங்கிச் சென்றனர். அந்த அளவிற்குப் பாதுகாப்பானதாக மதுரை நகர் விளங்கியது.
புகார்- துறைமுக நகரம், மதுரை-வணிக நகரம், காஞ்சி-கல்வி நகரம் ஆகும்.
சேர நாடு-கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி மற்றும் இன்றைய கேரள மாநிலத்தின் பகுதிகள்.
சோழநாடு-தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள்.
பாண்டிய நாடு-மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள்.
தொண்டை நாடு-காஞ்சிபுரம், திருவள்ளுர், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப்பகுதி.
சோழ நாடு-சோறுடைத்து, பாண்டிய நாடு-முத்துடைத்து, சேர நாடு-வேழமுடைத்து, தொண்டை நாடு-சான்றோருடைத்து.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. 6500 ஆண்டுகளுக்கும் பழமையான நாகரிகத்தின் நகரம்
(அ) ஈராக்
(ஆ) சிந்துவெளி
(இ) தமிழகம்
(ஈ) தொண்டை மண்டலம்
2. இவற்றுள் எது தமிழக நகரம்?
(அ) ஈராக்
(ஆ) ஹரப்பா
(இ) மொகஞ்ச-தாரோ
(ஈ) காஞ்சிபுரம்
3. வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்
(அ) பூம்புகார்
(ஆ) தொண்டி
(இ) கொற்கை
(ஈ) காஞ்சிபுரம்
4. தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது.
i) கல்லணை ii) காஞ்சிபுர ஏரிகள் iii) பராக்கிரம பாண்டியன் ஏரி iv) காவிரி ஆறு
(அ) i மட்டும் சரி
(ஆ) ii மட்டும் சரி
(இ) iii மட்டும் சரி
(ஈ) i மற்றும் ii சரி
5. பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?
(அ) மதுரை
(ஆ) காஞ்சிபுரம்
(இ) பூம்புகார்
(ஈ) சென்னை
6. கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்
(அ) மதுரை
(ஆ) காஞ்சிபுரம்
(இ) பூம்புகார்
(ஈ) ஹரப்பா
கூற்றுக்கான காரணத்தை ஆராய்ந்து சரியான விடையைத்தேர்ந்தெடு:
1. கூற்று: பூம்புகார் நகரத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியும், இறக்குமதியும் நடைபெற்றது.
காரணம்: வங்காள விரிகுடா கடல் போக்குவரத்திற்கு ஏதுவாக அமைந்ததால் அண்டைய நாடுகளுடன் வணிகம் சிறப்புற்றிருந்தது.
(அ) கூற்று சரி; காரணம் தவறு.
(ஆ) கூற்று சரி; கூற்றுக்கான காரணமும் சரி.
(இ) கூற்று தவறு; காரணம் சரி
(ஈ) கூற்று தவறு; காரணம் தவறு
2. i) திருநாவுக்கரசர், “கல்வியில் கரையில” எனக் குறிப்பிட்ட நகரம் காஞ்சிபுரம்.
ii) இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்று என யுவான்சுவாங் குறிப்பிட்டது காஞ்சிபுரம்.
iii) நகரங்களுள் சிறந்தது காஞ்சிபுரம் என காளிதாசர் குறிப்பிட்டுள்ளார்.
(அ) i மட்டும் சரி
(ஆ) ii மட்டும் சரி
(இ) iii மட்டும் சரி
(ஈ) அனைத்தும் சரி
3. சரியான தொடரைக் கண்டறிக:
(அ) நாளங்காடி என்பது இரவு நேரக் கடை.
(ஆ) அல்லங்காடி என்பது பகல் நேரக் கடை
(இ) ரோமானிய நாட்டு நாணயம் தயாரித்த தொழிற்சாலை கிடைத்தது பூம்புகார்.
(ஈ) கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
4. தவறான தொடரைக் கண்டறிக:
(அ) மெகஸ்தனிஸ் தன்னுடைய பயணக் குறிப்புகளில் மதுரையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
(ஆ) யுவான் சுவாங் தமிழ்நாட்டு நகரான காஞ்சிபுரத்திற்கு வந்தார்.
(இ) கோவலனும், கண்ணகியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்.
(ஈ) ஈராக் நகரம் பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
5. சரியான இணையைக் கண்டறிக:
(அ) கூடல் நகர் – பூம்புகார்
(ஆ) தூங்கா நகரம் – ஹரப்பா
(இ) கல்வி நகரம் – மதுரை
(ஈ) கோயில்களின் நகரம் – காஞ்சிபுரம்
தவறான இணையைக் கண்டறிக:
(அ) வட மலை – தங்கம்
(ஆ) மேற்கு மலை – சந்தனம்
(இ) தென்கடல் – முத்து
(ஈ) கீழ்கடல் – அகில்
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டியவர் ___________
2. கோயில்களின் நகரம் என அழைக்கப்படுவது ____________
3. மாசாத்துவன் எனும் பெயர் தரும் பொருள் ___________
சரியா, தவறா எனக் கூறுக:
1. பூம்புகாரில் நடைபெற்ற அண்டைநாட்டு வணிகத்தின் மூலமாகப் பண்பாட்டுப் பரிமாற்றம் நடைபெற்றது.
2. மதுரையில் அல்லங்காடியில் பெண்கள் பயமின்றி இரவு நேரங்களில் பொருட்கள் வாங்கிச் சென்றனர்.
3. பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன.
4. போதிதர்மர் காஞ்சிபுரத்தைச் சார்ந்தவர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)
1. ஈராக் 2. காஞ்சிபுரம் 3. மதுரை
4. அ மற்றும் ஆ சரி 5. சென்னை 6. மதுரை
கூற்றுக்கான காரணத்தை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. கூற்று சரி, கூற்றுக்கான காரணமும் சரி
2. அனைத்தும் சரி
3. கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
4. ஈராக் நகரம் பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
5. சரியான இணை:
ஈ) கோயில் நகரம் – காஞ்சிபுரம்
6. தவறான இணை:
ஈ) கீழ்கடல் – அகில்
கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)
1. இராஜசிம்மன் 2. காஞ்சிபுரம் 3. பெருவணிகன்
சரியா? தவறா? (விடை)
1. சரி
2. சரி
3. சரி
4. சரி