Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

தொழில்கள் 12th Geography Lesson 4 Questions in Tamil

12th Geography Lesson 4 Questions in Tamil

4] தொழில்கள்

1) முதன் முதலாக ஓட்டுனர் உதவி இன்றி தானே இயங்கும் கார் எந்த ஆண்டு உருவானது?

A) 2011 ஆம் ஆண்டு

B) 2012 ஆம் ஆண்டு

C) 2013 ஆம் ஆண்டு

D) 2014 ஆம் ஆண்டு

(குறிப்பு – கூகுள் நிறுவனம் 2009ம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் “டொயோட்டோ பிரியஸ்” (Toyota Prius) நிறுவனத்துடன் இணைந்து தானாக இயங்கும் காரை தயாரிக்க முயற்சி செய்துள்ளது. புதிய முயற்சியாக 2014 ஆம் ஆண்டு ஓட்டுனர் உதவி இன்றி தானே இயங்கும் கார் போன்ற முன்மாதிரிகள் உருவானது.)

2) பொருளாதார நடவடிக்கை என்பது?

A) பொருட்களை தயாரித்தல்

B) பொருட்களை வழங்குதல்

C) பொருட்களை வாங்குதல்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – பொருளாதார நடவடிக்கை என்பது பொருட்களை தயாரித்தல், வழங்குதல், வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். ஒரு சமுதாயத்தில் உள்ள அனைத்து நிலைகளிலும் பொருளாதார நடவடிக்கைகள் காணப்படுகின்றன)

3) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – பொருளாதார நடவடிக்கைகள் முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம்நிலை தொழில்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கூற்று 2 – மூன்றாம் நிலை தொழில் மேலும் இரு உட்பிரிவாக நான்காம்நிலை மற்றும் ஐந்தாம் நிலை தொழில் என பிரிக்கப்பட்டுள்ளது

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – மனிதர்கள் பல வகையான பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். பொதுவாக அனைத்து விதமான பொருளாதார நடவடிக்கைகளும் விரிவாக முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை தொழில்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாம் நிலை தொழில்கள் மேலும் இரு பிரிவாக நான்காம் மற்றும் ஐந்தாம் நிலை தொழில் என பிரிக்கப்பட்டுள்ளது.)

4) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – தன்நிறைவு பொருளாதாரம் என்பது சுய தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு மட்டுமே உற்பத்தி செய்ய இயலும் நிலை ஆகும்.

கூற்று 2 – வணிக பொருளாதாரம் என்பது விற்பனைக்காக மட்டுமே உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகும்.

கூற்று 3 – திட்டமிட்ட பொருளாதாரம் என்பது அரசாங்க நிறுவனங்களின் கட்டுப்பாட்டுடன் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகும்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – தன்நிறைவு பொருளாதாரம் என்பது சுய தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு மட்டுமே உற்பத்தி செய்ய இயலும் நிலை ஆகும்.வணிக பொருளாதாரம் என்பது விற்பனைக்காக மட்டுமே உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகும். இதில் பொருட்களின் உற்பத்தி மற்றும் வழங்கலை சந்தையில் காணப்படும் போட்டியே நிர்ணயிக்கும் காரணியாக உள்ளது.திட்டமிட்ட பொருளாதாரம் என்பது அரசாங்க நிறுவனங்களின் கட்டுப்பாட்டுடன் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகும்.)

5) கீழ்காணும் எந்தத் தொழில் முதல்நிலை தொழில் என கருதப்படுகிறது?

I. உணவு சேகரித்தல்

II. மேய்ச்சல், மீன் பிடித்தல்

III. சுரங்க தொழில்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – இயற்கையில் இருந்து நேரடியாக வளங்களை பெற்று மனிதர்கள் தங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்து கொள்ளும் தொழிலை முதல் நிலை தொழில் என்கிறோம். வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், மீன்பிடித்தல், மேய்ச்சல், சுரங்கத்தொழில், வேளாண்மை ஆகியவை முதல்நிலை தொழில்கள் ஆகும்)

6) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – உலகின் மொத்த மக்கள் தொகையில் 0.0001 சதவிகித மக்கள் மட்டுமே வேட்டையாடுபவர்களாகவும் மற்றும் உணவு சேகரிப்பவர்களாகவும் உள்ளனர்.

கூற்று 2 – வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல் உலகின் பழமையான தொழில்களாகும்.

கூற்று 3 – பண்டைய மக்கள் விலங்குகளை வேட்டையாடுதல் மற்றும் தாவரங்களை சேகரித்தல் மூலம் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர். உலகின் சில பகுதிகளில் இந்த முறை இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – 12,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதர்கள் வேட்டையாடுபவர்களாகவும், உணவு சேகரிப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல் உலகின் பழமையான தொழில்களாகும். பண்டைய மக்கள் விலங்குகளை வேட்டையாடுதல் மற்றும் தாவரங்களை சேகரித்தல் மூலம் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர். உலகின் சில பகுதிகளில் இந்த முறை இன்றும் பயன்பாட்டில் உள்ளது.)

7) உலகில் உணவு சேகரித்தல் தொழிலை மேற்கொள்பவர்கள் கீழ்காணும் எந்த பகுதியில் வாழ்பவர்கள் ஆவர்?

I. அமேசான் பள்ளத்தாக்கில் வாழ்வோர்

II. தெற்கு சிலி பகுதியினர்

III. யுரேஷியாவின் வடக்கு பகுதியினர்

IV. கனடாவின் வடக்கு பகுதியினர்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – உணவு சேகரித்தல் கனடாவின் வடக்கு பகுதி, யுரேஷியாவின் வடக்கு பகுதி மற்றும் தெற்கு சிலி போன்ற உயரமான பகுதிகளிலும் மற்றும் அமேசான் பள்ளத்தாக்கு, அயனமண்டல ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவின் வடக்கு எல்லை ஓரங்கள் போன்ற தாழ்வான பகுதிகளிலும் காணப்படுகிறது.)

8) கீழ்க்கண்டவர்களில் நாடோடிகள் எனப்படுபவர்கள் யார்?

I. தென்னிந்தியாவின் பாலியன்கள்

II. ஆர்டிக் பிரதேசத்தின் இன்யூட்கள்

III. கலகாரி பாலைவனத்தின் பிக்மிக்கள்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – தற்போது உணவு சேகரிப்பவர்களும், வேட்டையாடுபவர்களும் ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறார்கள்.ஆர்டிக் பிரதேசத்தின் இன்யூட்கள், கலகாரி பாலைவனத்தின் பிக்மிக்கள், பின்டுப்பி, அபோரிஜின்ஸ், ஆஸ்திரேலிய பழங்குடியினர் மற்றும் தென்னிந்தியாவின் பாலியன்கள் ஆகியோர் நாடோடிகள் ஆவர்.)

9) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – விலங்கின உற்பத்திப் பொருட்களுக்காக ஆடு, மாடு, செம்மறி ஆடுகள் போன்ற விலங்குகளை வளர்ப்பது மேய்ச்சல் தொழில் என அழைக்கப்படுகிறது.

II. மேய்ச்சல் தொழிலானது விரிவாக இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – விலங்கின உற்பத்திப் பொருட்களுக்காக ஆடு, மாடு, செம்மறி ஆடுகள் போன்ற விலங்குகளை வளர்ப்பது மேய்ச்சல் தொழில் என அழைக்கப்படுகிறது. கால்நடைகளை வளர்ப்பது என்பது நாடோடிகளால் பாரம்பரிய முறையிலும், வணிகரீதியாக அறிவியல் முறையிலும் நடைபெறுகிறது. எனவே மேய்ச்சல் தொழிலானது பழங்குடியினரின் மந்தை மேய்ச்சல் மற்றும் வர்த்தகரீதியான கால்நடை வளர்ப்பு எனும் இருபெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.)

10) பழங்குடியினரின் மந்தை மேய்ச்சல் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இது ஒரு பழமையான தன்னிறைவு வாழ்வு முறை ஆகும்.

கூற்று 2 – இந்த முறையில் மேய்ச்சல்காரர்கள் தங்களது உணவு, உடை, இருப்பிடம், கருவிகள் மற்றும் போக்குவரத்து ஆகிய தேவைகளுக்கு தாங்கள் வளர்க்கும் விலங்குகளை முழுவதுமாக சார்ந்திருப்பார்கள்.

கூற்று 3 – இவர்கள் நீர்நிலைகள் மற்றும் மேய்ச்சல் நிலங்களை தேடி தங்களது மந்தைகளோடு ஒரு இடம் விட்டு இடம் நகர்ந்து செல்வார்கள்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – பழங்குடியினரின் மந்தை மேய்ச்சல் என்பது ஒரு பழமையான தன்னிறைவு வாழ்வு முறை ஆகும். இவர்கள் நிலையாக ஓரிடத்தில் தங்குவது கிடையாது. வளர்ந்து வரும் நாடுகளில் காணப்படும் சிறிய விவசாய நிலங்களில் பொதுவாக நாடோடி மேய்ச்சல் தொழில் காணப்படுகிறது)

11) பழங்குடியினரின் மந்தை மேய்ச்சல் கீழ்காணும் எந்த பகுதிகளில் காணப்படுகிறது?

A) மேற்கு ஆசியா

B) வடக்கு ஆப்பிரிக்கா

C) மேற்கு ஆப்பிரிக்கா

D) இவை அனைத்திலும்

(குறிப்பு – பழங்குடியினரின் மந்தை மேய்ச்சல் அதிகமாக மத்திய மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளிலும், ஆப்பிரிக்காவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலும் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும், தூந்திர பகுதிகளிலும் காணப்படுகிறது.)

12) கால்நடைகளுடன் இடம்பெயர்தல் முறை பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. கால்நடைகளுடன் இடம் பெயர்தல் என்னும் மேய்ச்சல் தொழிலில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்திலும், குளிர் காலத்திலும் தங்கள் மந்தையுடன் நிலையான புல்வெளிகளை நோக்கி நகருகின்றனர்.

II. கோடைக்காலத்தில் உயரமான பகுதிகளை நோக்கியும், குளிர்காலத்தில் பள்ளத்தாக்கு பகுதிகளையும் நோக்கி இவர்கள் இடம் பெயர்வர்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – கால்நடைகளுடன் இடம் பெயர்தல் என்னும் மேய்ச்சல் தொழிலில் ஈடுபடுபவர்கள், கோடைக்காலத்தில் உயரமான பகுதிகளை நோக்கியும், குளிர்காலத்தில் பள்ளத்தாக்கு பகுதிகளையும் நோக்கி இவர்கள் இடம் பெயர்வர்.)

13) கால்நடைகளுடன் இடம்பெயர்தல் என்னும் முறையைப் பின்பற்றும் பழங்குடியினர் யார்?

I. குஜ்ஜார்கள்

II. பாக்கர்வாலாக்கள்

III. போட்டியாக்கள்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவர்கள் அனைவரும்

(குறிப்பு – இமயமலைப் பகுதியில் வாழும் குஜ்ஜார்கள், பாக்கர்வாலாக்கள், போட்டியாக்கள், காடீஸ் போன்ற பழங்குடியினர் தங்கள் கால்நடைகளுடன் கோடை காலத்தில் மலையை நோக்கியும், குளிர்காலத்தில் பள்ளத்தாக்கு பகுதியை நோக்கியும் இடம் பெயர்கின்றனர். தூந்திர பகுதியில் கால்நடை மேய்ப்பவர்கள் கோடை காலத்தில் வடக்கு நோக்கியும், குளிர்காலத்தில் தெற்கு நோக்கியும் இடம் பெயர்கின்றனர்.)

14) கீழ்க்கண்டவற்றுள் எது வணிக விவசாயத்தின் துணைப்பிரிவு அல்ல?

A) பரந்த விவசாயம்

B) தீவிர விவசாயம்

C) கலப்பு விவசாயம்

D) தோட்டப்பயிர் விவசாயம்

(குறிப்பு – விவசாயம் இரண்டு வகைப்படுத்தப்படுகிறது.அவை தன்னிறைவு விவசாயம் மற்றும் வணிக விவசாயம் என்பன ஆகும். தன்னிறைவு விவசாயம் என்பது தீவிர விவசாயம் மற்றும் பழமையான விவசாயம் என இரு உட்பிரிவுகளை கொண்டது. வணிக விவசாயம் என்பது பரந்த விவசாயம், கலப்பு விவசாயம் மற்றும் தோட்டப் பயிர் விவசாயம் என்னும் உட்பிரிவுகளை கொண்டது.)

15) ஆப்பிரிக்காவின் அயன மண்டலப் பகுதிகளில் பின்பற்றப்படும் வேளாண்மை முறை எது?

A) இடம் பெயரும் வேளாண்மை

B) தன்னிறைவு வேளாண்மை

C) தீவிர வேளாண்மை

D) பரந்த வேளாண்மை

(குறிப்பு – மலைப்பகுதி மற்றும் வனப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் பின்பற்றும் விவசாய முறை இடம் பெயரும் வேளாண்மை என்பதாகும். இந்த முறையானது குறிப்பாக ஆப்பிரிக்காவின் அயனமண்டலப்பகுதிகளில் பின்பற்றப்படுகிறது. இந்த முறை வேளாண்மையில் ஒரு பரந்த நிலப் பகுதியின் ஒரு சிறு பகுதியில் காணப்படும் தாவரங்கள் மற்றும் பயிர்கள் அழிக்கப்பட்டு, பிறகு அப்பகுதி சில ஆண்டுகள் விவசாயம் எதுவும் செய்யாமல் அப்படியே விடப்படுகிறது.)

16) விவசாயிகள் தங்கள் குடும்பங்களுக்கும் தங்களுக்கும் தேவையான வேளாண் பொருட்களை மட்டும் உற்பத்தி செய்து கொள்வது?

A) இடம் பெயரும் வேளாண்மை

B) தன்னிறைவு வேளாண்மை

C) தீவிர வேளாண்மை

D) பரந்த வேளாண்மை

(குறிப்பு – தன்னிறைவு வேளாண்மை என்பது விவசாயிகள் தங்கள் குடும்பங்களுக்குத் தேவையான பொருட்களை மட்டும் உற்பத்தி செய்து கொள்வது ஆகும். அதில் ஒரு பகுதி மட்டும் விற்பனைக்காக ஒதுக்குவர். இம்முறையில் மிகவும் பழமையான பாரம்பரிய விவசாய முறைகள் மட்டுமே பின்பற்றப்படுகிறது.)

17) கீழ்க்காணும் எந்த வேளாண் முறையில் ஒரு சிறிய நிலப்பரப்பு ஒரு ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை சாகுபடி செய்யப்படுகிறது?

A) இடம் பெயரும் வேளாண்மை

B) தன்னிறைவு வேளாண்மை

C) தீவிர வேளாண்மை

D) பரந்த வேளாண்மை

(குறிப்பு – விவசாய நிலம் தீவிரமாக வேளாண்மைக்காக பயன்படுத்தும் வகையை தீவிர விவசாய முறை என்கிறோம். இம்முறையில் விவசாயிகள் பெரும்பாலும் குறுகியகாலப் பயிர்களை பயிரிடுகின்றனர். இதன் காரணமாக ஒரு சிறிய நிலப்பரப்பு ஒரே ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை சாகுபடி செய்யப்படுகிறது.)

18) குறைவாக விளை நிலம் உள்ள இடங்களில் செய்யப்படும் வேளாண்மை கீழ்க்கண்டவற்றுள் எது?

A) இடம் பெயரும் வேளாண்மை

B) தன்னிறைவு வேளாண்மை

C) தீவிர வேளாண்மை

D) பரந்த வேளாண்மை

(குறிப்பு – விவசாய நிலம் தீவிரமாக வேளாண்மைக்காக பயன்படுத்தும் வகையை தீவிர விவசாய முறை என்கிறோம். இம்முறையில் விவசாயிகள் பெரும்பாலும் குறுகியகாலப் பயிர்களை பயிரிடுகின்றனர். இதன் காரணமாக ஒரு சிறிய நிலப்பரப்பு ஒரே ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக எந்த விளைநிலம் குறைவாக உள்ளதோ அங்கு தீவிர வேளாண்மை முறை பின்பற்றப்படுகிறது.)

19) வேளாண்மை பெயர்களையும் அது பின்பற்றப்படும் பகுதிகளையும் பொருத்துக.

I. ஜீமிங் – a) மத்திய அமெரிக்கா

II. லடாங் – b) பிலிப்பைன்ஸ்

III. செங்கின் – c) வட கிழக்கு இந்திய மாநிலங்கள்

IV. மில்பா – d) மலேசியா

A) I-c, II-d, III-b, IV-a

B) I-d, II-b, III-a, IV-c

C) I-c, II-b, III-a, IV-d

D) I-a, II-d, III-c, IV-b

(குறிப்பு – ஜீமிங் அல்லது பீவர் என்பது வடகிழக்கு இந்திய மாநிலங்களிலும், லடாங் என்பது மலேசியாவிலும், செங்கின் அல்லது கைங்கின் என்பது பிலிப்பைன்ஸ் நாட்டிலும், மில்பா மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிலும் பின்பற்றப்படுகிறது.)

20) வேளாண்மை பெயர்களையும் அது பின்பற்றப்படும் பகுதிகளையும் பொருத்துக.

I. கொனுக்கோ – a) வியட்நாம்

II. ரோக்கா – b) வெனிசுலா

III. மசோல் – c) பிரேசில்

IV. ரே – d) காங்கோ

A) I-b, II-c, III-d, IV-a

B) I-d, II-b, III-a, IV-c

C) I-c, II-b, III-a, IV-d

D) I-a, II-d, III-c, IV-b

(குறிப்பு – கொனுக்கோ என்பது வெனிசுலா நாட்டிலும், ரோக்கா என்பது பிரேசில் நாட்டிலும், மசோல் என்பது காங்கோ நாட்டிலும், ரே என்பது வியட்நாம் நாட்டிலும் பின்பற்றப்படும் விவசாய முறையின் பெயர் ஆகும்.)

21) வேளாண்மை பெயர்களையும் அது பின்பற்றப்படும் பகுதிகளையும் பொருத்துக.

I. ரே – a) மியான்மர்

II. ஹீமா – b) வியட்நாம்

III. தாங்கியா – c) இலங்கை

IV. சென் – d) இந்தோனேஷியா

A) I-b, II-d, III-a, IV-c

B) I-d, II-b, III-a, IV-c

C) I-c, II-b, III-a, IV-d

D) I-a, II-d, III-c, IV-b

(குறிப்பு – ரே என்பது வியட்னாம் நாட்டிலும், ஹீமா என்பது இந்தோனேஷியா நாட்டிலும், தாங்கியா என்பது மியான்மர் நாட்டிலும், சென் என்பது இலங்கை நாட்டிலும் பின்பற்றப்படும் வேளாண்முறைகளாகும்)

22) லாபம் கருதி பயிர்கள் வளர்க்கப்படும் வேளாண்மைமுறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) இடம் பெயரும் வேளாண்மை

B) தன்னிறைவு வேளாண்மை

C) தோட்டப்பயிர் வேளாண்மை.

D) பரந்த வேளாண்மை

(குறிப்பு – தோட்டப் பயிர் விவசாயம் என்பது வணிக விவசாயத்தின் ஒரு வடிவம் ஆகும். இதில் லாபம் கருதி பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. இம்முறை விவசாயத்திற்கு பரந்த நிலப்பகுதி தேவைப்படுகிறது.ஆண்டு வெப்ப அளவும், மழையளவும் அதிகம் கொண்டுள்ள நாடுகளில் தோட்டப்பயிர் விவசாயம் நடைபெறுகிறது.)

23) கீழ்க்கண்டவற்றுள் எது தோட்டப்பயிர் அல்ல?

A) கரும்பு

B) வாழைப்பழம்

C) ரப்பர்

D) பருத்தி

(குறிப்பு – ஆண்டு வெப்ப அளவும், மழை அளவும் அதிகம் கொண்டுள்ள நாடுகளில் தோட்டப் பயிர் விவசாயம் அதிகம் நடைபெறுகின்றது. குறிப்பாக அயன மண்டல நாடுகளில் தோட்டப் பயிர் விவசாயம் வேளாண்மை அதிகம் நடைபெறுகிறது.தேயிலை, காப்பி, கொக்கோ, ரப்பர், எண்ணை, பனை, கரும்பு, வாழைப்பழம் மற்றும் அன்னாசிப்பழம் ஆகியவை தோட்டப் பயிர்கள் என அழைக்கப்படுகின்றன.)

24) சாகுபடி அளவு அதிகமாக உள்ள இடங்களில் செய்யும் வேளாண்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) இடம் பெயரும் வேளாண்மை

B) தன்னிறைவு வேளாண்மை

C) தோட்டப்பயிர் வேளாண்மை.

D) பரந்த வேளாண்மை

(குறிப்பு – எங்கேயெல்லாம் சாகுபடி நில அளவு அதிகமாக காணப்படுகின்றனவோ அந்தப் பிரதேசங்களில் பரந்த விவசாயம் காணப்படுகின்றது. அரை வறண்ட பகுதிகளிலும், மத்திய அச்சங்களின் உட்பகுதிகளிலும் இந்த விவசாய முறை காணப்படுகின்றது. கோதுமை இந்த விவசாயத்தின் முக்கிய பயிராகும்.இம்முறையில் அனைத்து நடவடிக்கைகளும் எந்திரமயமாக்கப்பட்டுள்ளது.)

25) பல்வேறு விவசாய நடவடிக்கைகளை கலந்து செய்யும் வேளாண்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) இடம் பெயரும் வேளாண்மை

B) கலப்பு வேளாண்மை

C) தோட்டப்பயிர் வேளாண்மை.

D) பரந்த வேளாண்மை

(குறிப்பு – கலப்பு வேளாண்மை முறையில் விவசாயிகள் பல்வேறு விவசாய நடவடிக்கைகளை கலந்து நடைமுறைப்படுத்துகின்றனர். அதாவது பயிர் சாகுபடி, மீன் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை இணைத்து செயல்படுவதாகும். இதன் நோக்கம் பல வழிகளில் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கச் செய்வதாகும். மேலும் நிலம் மற்றும் தொழிலாளர் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஆண்டுமுழுவதும் ஒன்றுக்கு ஒன்று உதவிகரமாக உள்ளது.)

26) பொருத்துக

I. போமோலஜி – a) பூக்கள் வளர்ப்பு

II. ஃபோலரி கல்ச்சர் – b) பட்டுப்புழு வளர்த்தல்

III. செரிக்கல்ச்சர் – c) திராட்சை சாகுபடி

IV. விட்டி கல்ச்சர் – d) பழங்கள் சாகுபடி

A) I-d, II-a, III-b, IV-c

B) I-d, II-b, III-a, IV-c

C) I-c, II-b, III-a, IV-d

D) I-a, II-d, III-c, IV-b

(குறிப்பு – போமோலஜி என்பது பழங்கள் சாகுபடி பற்றிய படிப்பாகும், ஒலரி கல்ச்சர் என்பது காய்கறி வளர்ப்பு பற்றிய அறிவியலாகும், ஃபோலரி கல்ச்சர் என்பது பூக்கள் வளர்க்கும் கலை ஆகும், செரி கல்ச்சர் என்பது பட்டுப்புழு வளர்த்தல் ஆகும், விட்டி கல்ச்சர் என்பது திராட்சை சாகுபடி பற்றிய படிப்பாகும்.)

27) மத்திய தரைக்கடல் வேளாண்மை கீழ்காணும் எந்த இடங்களில் பின்பற்றப்படுகிறது?

I. துனிசியாவில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வரையிலும்

II. தெற்கு கலிபோர்னியா, மத்திய சிலி போன்ற பகுதிகளில்

III. தென்னாபிரிக்காவின் தென் மேற்கு பகுதியில்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – மத்திய தரைக்கடல் வேளாண்மை விவசாய முறை ஒரு சிறப்பான வணிக வழி விவசாய முறை ஆகும். மத்திய தரைக்கடலின் இருபக்கங்களிலும் உள்ள நாடுகளிலும் ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்காவின், துனிசியாவில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வரையிலும், தெற்கு கலிபோர்னியா, மத்திய சிலி, தென் ஆப்பிரிக்காவின் தென்மேற்கு பகுதியிலும், ஆஸ்திரேலியாவின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளும் பின்பற்றப்படுகிறது.)

28) சிட்ரஸ் வகை பழங்கள் மற்றும் திராட்சை சாகுபடிக்கு பெயர்பெற்ற வேளாண்மை முறை எது?

A) இடம் பெயரும் வேளாண்மை

B) கலப்பு வேளாண்மை

C) தோட்டப்பயிர் வேளாண்மை.

D) மத்திய தரைக்கடல் வேளாண்மை

(குறிப்பு – மத்திய தரைக்கடல் வேளாண்மை விவசாய முறை ஒரு சிறப்பான வணிக வழி விவசாய முறை ஆகும். மத்திய தரைக்கடலின் இருபக்கங்களிலும் உள்ள நாடுகளிலும் ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்காவின், துனிசியாவில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வரையிலும், தெற்கு கலிபோர்னியா, மத்திய சிலி, தென் ஆப்பிரிக்காவின் தென்மேற்கு பகுதியிலும், ஆஸ்திரேலியாவின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளும் பின்பற்றப்படுகிறது. சிட்ரஸ் வகை பழங்களுக்கு இப்பகுதி பெரும் பெயர் பெற்றது. திராட்சை சாகுபடி இப்பகுதியின் தனிச்சிறப்பாகும்.)

29) மத்திய தரைக்கடல் வேளாண்மை பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – பல்வேறு நறுமணங்களில் கிடைக்கும் உலகின் புகழ்வாய்ந்த திராட்சைரசம் இப்பகுதியில் பயிராகும் உயர்தர திராட்சை பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

கூற்று 2 – மத்திய தரைக்கடல் பகுதியில் ஆலிவ் பழங்களும், அத்திப் பழங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கூற்று 3 – ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா சந்தைகளில் அதிகமாக தேவைப்படும் விலைமதிப்புள்ள பழங்களும், காய்கறிகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – திராட்சை சாகுபடி மத்தியதரைக்கடல் பகுதியில் ஒரு சிறப்பு அம்சமாகும். பல்வேறு நறுமணங்களில் கிடைக்கும் உலகின் புகழ்வாய்ந்த திராட்சைரசம் இப்பகுதியில் பயிராகும் உயர்தர திராட்சை பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.மத்திய தரைக்கடல் பகுதியில் ஆலிவ் பழங்களும், அத்திப் பழங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா சந்தைகளில் அதிகமாக தேவைப்படும் விலைமதிப்புள்ள பழங்களும், காய்கறிகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.)

30) சரக்கு வண்டி விவசாயம் என்று அழைக்கப்படுவது எது?

A) இடம் பெயரும் வேளாண்மை

B) கலப்பு வேளாண்மை

C) தோட்டப்பயிர் வேளாண்மை.

D) தோட்டக்கலை

(குறிப்பு – பூக்களும் காய்கறிகளும் தனித்தன்மையுடன் உற்பத்தி செய்யப்படுவதை தோட்டக்கலை விவசாயம் (Horticulture) என்கிறோம். இது சரக்கு வண்டி விவசாயம் (Truck Farming) என்றும் அழைக்கப்படுகிறது. தோட்டக்கலை விவசாயத்தில் சாகுபடி நிலம் சிறிய பண்ணைகளாக, செலவு குறைவான மற்றும் திறன் வாய்ந்த போக்குவரத்துடன் கூடிய சந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கும்.)

31) தோட்டக்கலை விவசாயம் நடைபெறும் முக்கிய பகுதிகளாவன கீழ்க்கண்டவற்றுள் எது?

I. மேற்கு ஐரோப்பா

II. வடகிழக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள்

III. மத்திய தரைக்கடல் நாடுகள்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – தோட்டக்கலை விவசாயத்தில் சாகுபடி நிலம் சிறிய பண்ணைகளாக, செலவு குறைவான மற்றும் திறன் வாய்ந்த போக்குவரத்து கூடிய சந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இது தொழிலாளர்களும், மூலதனமும் அதிகமாக தேவைப்படும் பயிர் சாகுபடி முறைகள் ஆகும். மேற்கு ஐரோப்பா, வட கிழக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகள் ஆகியவை தோட்டக்கலை விவசாயம் நடைபெறும் முக்கிய பகுதிகளாகும்.)

32) வான்தூனன் (Von Thunen) வேளாண் மாதிரி எந்த ஆண்டு வெளியானது?

A) 1822 ஆம் ஆண்டு

B) 1824 ஆம் ஆண்டு

C) 1826 ஆம் ஆண்டு

D) 1828 ஆம் ஆண்டு

(குறிப்பு – விவசாயி நில உரிமையாளர் மற்றும் பொருளாதார நிபுணரான வான்தூனன் 1826ஆம் ஆண்டு வெளியிட்ட அவரது நூலான ஐசோலேட்டட் ஸ்டேட் (ISOLATED STATE) தனித்த பகுதி என்ற நூலில் இந்த வேளாண் கோட்பாடு விவரிக்கப்பட்டுள்ளது. தொழில் புரட்சிக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த கோட்பாடு பல அனுமானங்களை கொண்டுள்ளது)

33) வான்தூனனின் தனித்தபகுதி (Isolated State) வேளாண் மாதிரி, கொண்டுள்ள அனுமானங்களில் எது தவறானது?

A) இது தனித்த நிலை ஆக்கிரமிப்பற்ற காடுகளால் சூழப்பட்டு காணப்படுகிறது.

B) இப்பகுதி முழுவதும் ஒரே சீரான மண்ணின் தன்மையும், காலநிலையும் கொண்டுள்ளது.

C) விவசாயிகள் குறைந்தபட்ச லாபத்திற்காக செயல்படுகிறார்கள்.

D) இந்த நிலப் பகுதி முழுவதும் ஆறுகளாலோ, மலைகளாலோ குறுக்கிடாத சமமான புவிப்பரப்பை கொண்டுள்ளது.

(குறிப்பு – விவசாயி நில உரிமையாளர் மற்றும் பொருளாதார நிபுணரான வான்தூனன் 1826ஆம் ஆண்டு வெளியிட்ட அவரது நூலான ஐசோலேட்டட் ஸ்டேட் (ISOLATED STATE) தனித்த பகுதி என்ற நூலில் இந்த வேளாண் கோட்பாடு விவரிக்கப்பட்டுள்ளது. நகரமானது தனித்த நிலையில் மத்திய பகுதியில் எல்லா விதத்திலும் தன்னிறைவு, பெற்றதாகவும் வெளிப்புற செல்வாக்கும் இல்லாததாகவும் இருக்கிறது. இது தனித்த நிலை ஆக்கிரமிப்பு அற்ற காடுகளால் சூழப்பட்டு காணப்படுகிறது. இப்பகுதி இப்பகுதி முழுவதும் ஒரே சீரான மண்ணின் தன்மையும் காலநிலையையும் கொண்டுள்ளது.)

34) வான்தூனனின் வேளாண் மாதிரி எத்தனை வளையங்களை கொண்டது?

A) ஐந்து வளையங்கள்

B) நான்கு வளையங்கள்

C) மூன்று வளையங்கள்

D) இரண்டு வளையங்கள்

(குறிப்பு – வான்தூனனின் வேளாண் மாதிரி பால் பண்ணை, காடுகள், தானியங்கள் மற்றும் களப்பயிர்கள் மற்றும் பண்ணை மற்றும் கால்நடை ஆகிய நான்கு வளையங்களை கொண்டது.)

35) வான் தூனனின் கீழ்க்காணும் எந்த வளையத்தில் பால் பண்ணையும், தீவிர விவசாய முறையும் காணப்படும்?

A) முதல் வளையம்

B) இரண்டாம் வளையம்

C) மூன்றாம் வளையம்

D) நான்காம் வளையம்

(குறிப்பு – முதல் வளையம் என்பது பால் பண்ணையும், தீவிர விவசாய முறையும் காணப்படும் இந்த வளையம் நகரமையத்தை சுற்றி காணப்படுகிறது. ஏனெனில் காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் பால் பொருட்கள் சந்தையில் உடனடியாக சென்றடைய வேண்டியது முக்கியமானதாகும். எனவே நகரத்திற்கு மிக அருகில் அவை உற்பத்தி செய்யப்பட வேண்டும்.)

36) கீழ்க்காணும் எந்த வளையப் பகுதியில் நிலத்தின் விலை அதிகமாக இருக்கும்?

A) முதல் வளையம்

B) இரண்டாம் வளையம்

C) மூன்றாம் வளையம்

D) நான்காம் வளையம்

(குறிப்பு – முதல் வளைய பகுதி நகரத்திற்கு மிக அருகில் இருக்க வேண்டும்.முதல் வளையப் பகுதியில் நிலத்தின் விலை அதிகமாக இருக்கும். எனவே இங்கு உற்பத்தியாகும் விவசாய பொருட்களும் அதிக விலை மதிப்புள்ளதாக இருக்கும்.அதனால் அவற்றின் வருமானமும் அதிகபட்சமாக இருக்கும்.)

37) எரிபொருள் தேவைக்காகவும் கட்டிட வேலைக்காகவும் மரங்கள் கீழ்காணும் எந்த வளையபகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்றன?

A) முதல் வளையம்

B) இரண்டாம் வளையம்

C) மூன்றாம் வளையம்

D) நான்காம் வளையம்

(குறிப்பு – எரிபொருள் தேவைக்காகவும், கட்டிட வேலைக்காகவும் மரங்கள் இரண்டாவது வளையபகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெப்பமூட்டுவதற்கும் மரங்கள் முக்கிய எரிபொருளாக இருந்தது. மரங்கள் அதிக எடை கொண்டதாக இருப்பதாலும், அதை எடுத்துச் செல்வது கடினமாக இருப்பதாலும் இவை நகரத்திற்கு மிக அருகில் அமைந்து இருப்பது நல்லது.)

38) பரந்த அளவில் கோதுமை சாகுபடி செய்யப்படும் வளைய பகுதி எது?

A) முதல் வளையம்

B) இரண்டாம் வளையம்

C) மூன்றாம் வளையம்

D) நான்காம் வளையம்

(குறிப்பு – மூன்றாம் வளைய பகுதியில் பரந்த அளவில் ரொட்டிக்காக பயிர் செய்யப்படும் கோதுமை சாகுபடி செய்யப்படுகிறது. பால் பொருட்களைக் காட்டிலும் நீண்ட நாள் கெடாமல் இருப்பதாலும், எரிபொருளை காட்டிலும் எடை குறைவாக இருப்பதாலும் போக்குவரத்து செலவைக் குறைப்பதற்காக இவை நகர்ப்பகுதியை விட்டு தொலைவில் அமைந்திருக்கலாம்.)

39) பண்ணை நிலங்கள் அமைந்திருக்கக் கூடிய வளைய பகுதி எது?

A) முதல் வளையம்

B) இரண்டாம் வளையம்

C) மூன்றாம் வளையம்

D) நான்காம் வளையம்

(குறிப்பு – நகரத்தை சுற்றி கடைசியாக காணப்படும் நான்காம் வளையப் பகுதியில் பண்ணை நிலம் எனப்படும் மேய்ச்சல் நிலங்கள் காணப்படுகின்றன. நகரத்தில் இருந்து விலகி வெகு தொலைவில் கூட விலங்கினங்களை வளர்க்கலாம். ஏனென்றால் கால்நடைகள் போக்குவரத்திற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.)

40) கீழ்க்காணும் நான்கு வளைய பகுதிகளில் நகர மையத்தில் இருந்து வெகு தொலைவில் அமையக்கூடிய வளைய பகுதி எது?

A) முதல் வளையம்

B) இரண்டாம் வளையம்

C) மூன்றாம் வளையம்

D) நான்காம் வளையம்

(குறிப்பு – முதலாம் வளைய பகுதி பால் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடியது. இரண்டாம் வளைய பகுதி எரி பொருளை உற்பத்தி செய்யக்கூடியது. மூன்றாம் வளைய பகுதி கோதுமையை உற்பத்தி செய்யக்கூடியது. நான்காம் வளைய பகுதி கால்நடை விலங்கினங்களை வளர்க்கக் கூடியது. எனவே நான்காம் வளைய பகுதி நகர மையத்தில் இருந்து வெகு தொலைவில் அமையக் கூடியது ஆகும்.)

41) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – வான் தூனனின் கோட்பாட்டின்படி நகரத்தின் மையத்தை நோக்கி செல்ல செல்ல நிலத்தின் விலை அதிகரிக்கிறது.

கூற்று 2 – வான் தூனனின் கோட்பாடு நிலத்தின் மதிப்பிற்கும் போக்குவரத்து செலவிற்கும் இடையில் நடுநிலைமையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – தொழிற்சாலைகள் தொடங்குவதற்கும், சாலைகள் இருப்புப் பாதைகள் அமைப்பதற்கும் முன்பாக வான் தூனனின் கோட்பாடு உருவாக்கப்பட்டிருந்தாலும் இன்றுவரை புவியியலில் அது ஒரு முக்கியமான கோட்பாடாக கருதப்படுகிறது. ஏனெனில் இக்கோட்பாடு நிலத்தின் மதிப்பிற்க்கும், போக்குவரத்து செலவிற்கும் இடையில் நடுநிலைமையை மிக சிறப்பாக வெளிப்படுத்துகிறது.வான் தூனனின் கோட்பாட்டின்படி நகரத்தின் மையத்தை நோக்கி செல்ல செல்ல நிலத்தின் விலை அதிகரிக்கிறது.)

42) புவியிலிருந்து உலோகங்களை வெட்டி எடுக்கும் செயல்முறையை எவ்வாறு அழைக்கிறோம்?

A) கனிமத்தொழில்

B) சுரங்கத்தொழில்

C) உலோகத்தொழில்

D) எல்லாமே தவறு

(குறிப்பு – புவியிலிருந்து உலோகங்களை வெட்டி எடுக்கும் செயல்முறையை சுரங்கத்தொழில் என்கிறோம். மனித வளர்ச்சியின் வரலாற்றில் உலோகங்களின் கண்டுபிடிப்பு பல நிலைகளில் செம்பு காலம், வெண்கலக் காலம் மற்றும் இரும்பு காலம் என்று பிரதிபலித்தது. பண்டைய காலத்தில் கருவிகள் பாத்திரங்கள் மற்றும் ஆயுதங்கள் தயாரிக்க உலோகங்கள் பெரிதும் உதவின.)

43) கீழ்காணும் எந்தவகை சுரங்கங்கள் ஆயிரம்மீட்டர் வரை ஆழம் உடையது?

A) திறந்தவெளி சுரங்கங்கள்

B) மேற்பரப்பு சுரங்கங்கள்

C) நிலத்தடி சுரங்கங்கள்

D) கரைசல்முறை சுரங்கங்கள்

(குறிப்பு – திறந்தவெளி அல்லது திறந்த குழி சுரங்கங்கள்( Open Pit or Open Cast Mining) திறந்தவெளியில் சுரங்க முறையானது புவிபரப்புக்கு அருகில் உலோக தாது கிடைக்கும் இடங்களில் காணப்படுகிறது. இந்த குவாரிகள் ஆயிரம் மீட்டர் வரை ஆழம் உடையது. இதில் சுரங்கத்திற்காக பூமிக்கு அடியில் குகைகள் அமைக்க வேண்டி இருக்காது.)

44) கீழ்காணும் எந்தவகை சுரங்கங்கள் 70% வளமற்ற நிலத்தையும், கழிவு பாறைகளையும் ஏற்படுத்துகிறது?

A) திறந்தவெளி சுரங்கங்கள்

B) மேற்பரப்பு சுரங்கங்கள்

C) நிலத்தடி சுரங்கங்கள்

D) கரைசல்முறை சுரங்கங்கள்

(குறிப்பு – மேற்பரப்பு சுரங்கங்கள்( Surface Mining) என்னும் செயல் முறையில் புவிப் பரப்பின் மீது காணப்படும் உலோக தாதுவை வெட்டி எடுக்கின்றனர். தேவையற்ற மண் அப்புறப்படுத்தப்பட்டு கீழே உள்ள தாது பிரித்தெடுக்கப்படுகிறது. புவிப்பரப்பு சுரங்கங்கள் 70% வளமற்ற நிலத்தையும், கழிவு பாறைகளையும் ஏற்படுத்துகிறது.)

45) தண்டு வடிவ சுரங்கங்கள் என்று அழைக்கப்படுவது எது?

A) திறந்தவெளி சுரங்கங்கள்

B) மேற்பரப்பு சுரங்கங்கள்

C) நிலத்தடி சுரங்கங்கள்

D) கரைசல்முறை சுரங்கங்கள்

(குறிப்பு – புவிக்கு அடியில் உள்ள உலோக தாது பொருட்களை வெட்டியெடுக்க அப்படிவுகள் உள்ள இடத்தை அடைவதற்கு வெட்டப்படும் சுரங்ககுழிகளின் வலையமைப்பை நிலத்தடி சுரங்கங்கள் (Under Ground or Subsurface Mining) என்கிறோம். மற்ற சுரங்க முறைகளோடு ஒப்பிட்டால் இந்த வகை சுரங்கங்களால் சுற்றுச்சூழல் பாதிப்படைவது குறைவு.)

46) கீழ்க்காணும் எந்த சுரங்கங்களில் பணிபுரிவோருக்கு அதிக ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்?

A) திறந்தவெளி சுரங்கங்கள்

B) மேற்பரப்பு சுரங்கங்கள்

C) நிலத்தடி சுரங்கங்கள்

D) கரைசல்முறை சுரங்கங்கள்

(குறிப்பு – மற்றவர்கள் சுரங்க முறைகளோடு ஒப்பிட்டால் நிலத்தடி சுரங்கம் அல்லது தண்டு வடிவ சுரங்கங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவு. ஆனால் இந்த சுரங்கங்களில் பணிபுரிவோருக்கு அதிக ஆபத்து ஏற்படலாம். நவீன நடைமுறையில் நிலத்தடி சுரங்கங்களில் ஆக்ஸிஜன் அளவு மற்றும் வாயுக்களின் நச்சுத்தன்மை ஆகியவை முன்கூட்டியே கணிக்கப்படுகின்றன. மேலும் காற்று சுவாச கருவிகள் அமைப்பது மற்றும் சுரங்க பாதுகாப்பு நெறிமுறைகள் பணியிட பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றன.)

47) யுரேனிய படிவுகள் காணப்படும் இடங்களில் பின்பற்றப்படும் சுரங்க முறை எது?

A) திறந்தவெளி சுரங்கங்கள்

B) மேற்பரப்பு சுரங்கங்கள்

C) நிலத்தடி சுரங்கங்கள்

D) கரைசல்முறை சுரங்கங்கள்

(குறிப்பு – கரைசல் முறை சுரங்கங்கள்(In-Siter Mining) என்பவை மிக அரிதாக பயன்படுத்தப்படும் சுரங்க முறையாகும். இம்முறை சுரங்கங்களில் தாது படிவின் மீது ஒரு கரைசல் குழாய் மூலம் செலுத்தப்படுகிறது. அந்தக் கரைசலில் தாது படிவம் கரைந்து மற்றொரு குழாய் மூலம் வெளியேற்றப்படுகிறது. பெரும்பாலும் இம்முறை யுரேனிய படிவுகள் காணப்படும் இடங்களில் பின்பற்றப்படுகிறது.)

48) உற்பத்தி மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் கீழ்காணும் எந்த நிலை தொழிலில் அடங்கும்?

A) முதல் நிலை தொழில்

B) இரண்டாம் நிலை தொழில்

C) மூன்றாம் நிலை தொழில்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – இரண்டாம் நிலை தொழில் என்பது முதல் நிலை தொழிலில் இருந்து பெறப்படும் மூலப் பொருட்களை நுகர்வோர் பொருட்கள் ஆக மாற்றுவது ஆகும். எனவே உற்பத்தி மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் இரண்டாம்நிலை தொழிலில் அடங்கும்.)

49) மதிப்புக்கூட்டு துறை என அழைக்கப்படும் நிலை தொழில் எது?

A) முதல் நிலை தொழில்

B) இரண்டாம் நிலை தொழில்

C) மூன்றாம் நிலை தொழில்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – இரண்டாம் நிலை தொழில்(Secondary Activities) , மூலப் பொருட்களின் மதிப்பை கூட்டுவதால் இதனை மதிப்பு கூட்டும் துறை எனலாம். தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை நுகர்பொருட்கள் ஆக மாற்றுவதற்கு அதிக அளவு எரிசக்தி மற்றும் எந்திரங்களும் தேவைப்படுகிறது. இரண்டாம் நிலை தொழில்கள் முதல் நிலை தொழிலையும், மூன்றாம் நிலை தொழிலையும் ஊக்குவிக்கும் தன்மை உடையவை ஆகும்.)

50) தொழிலக அமைவிடத்தை நிர்ணயிக்கும் காரணி எது?

A) மூலப் பொருட்களின் இருப்பு மற்றும் அதன் அருகாமை

B) எரிசக்தி

C) போக்குவரத்து செலவு

D) இவை அனைத்தும்

(குறிப்பு – தொழிலக அமைவிடத்தை நிர்ணயிக்கும் காரணிகள்(Factors Affecting Location of Industries) ஆவன, மூலப் பொருட்களின் இருப்பு மற்றும் அதன் அருகாமை(Availability of Raw Materials), எரிசக்தி(Availability of Power), போக்குவரத்து செலவு(Transport cost), சந்தைக்கு அருகாமை(Nearness to the Markets), அரசாங்க கொள்கைகள்(Government Policies), மூலதனம்(Availability of Capital) என்பன ஆகும்)

51) கீழ்கண்டவற்றுள் எது தொழிலக அமைவிடத்தை நிர்ணயிக்கும் காரணி அல்ல?

A) மூலப் பொருட்களின் இருப்பு மற்றும் அதன் அருகாமை(Availability of Raw Materials)

B) எரிசக்தி(Availability of Power)

C) அரசாங்க கொள்கைகள்(Government Policies)

D) தொழிலாளர்களின் சம்பளம் ( Salary to Labours)

(குறிப்பு – தொழிலக அமைவிடத்தை நிர்ணயிக்கும் காரணிகள்(Factors Affecting Location of Industries) ஆவன, மூலப் பொருட்களின் இருப்பு மற்றும் அதன் அருகாமை(Availability of Raw Materials), எரிசக்தி(Availability of Power), போக்குவரத்து செலவு(Transport cost), சந்தைக்கு அருகாமை (Nearness to the Markets), அரசாங்க கொள்கைகள் (Government Policies), மூலதனம்(Availability of Capital) என்பன ஆகும்)

52) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – மூலப்பொருள்கள் அதிகமாகவும் மற்றும் விலை குறைவாகவும் கிடைக்கும் இடங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன.

கூற்று 2 – அலுமினிய தொழிற்சாலைகள் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கு அருகாமையில் அமைக்கப்படுகின்றன.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – மூலப்பொருட்களின் இருப்பும் அதன் அருகாமையும் தொழிலகம் அமைக்கும் இடத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் முதன்மையான காரணிகளாக விளங்குகின்றன. மூலப் பொருட்கள் அதிகமாகவும் மற்றும் விலை குறைவாகவும் கிடைக்கும் இடங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளை மின்சாரம் கிடைக்கும் இடங்களில் அமைத்துக்கொள்ளலாம். அலுமினிய தொழிற்சாலைகள் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கு அருகாமையில் அமைக்கப்படுகின்றன.)

53) விசாகப்பட்டினத்தில் எண்ணெய் சுத்தகரிப்பு தொழிற்சாலை அமைந்துள்ள காரணம் என்ன?

I. விசாகப்பட்டினம் துறைமுகம் வழியே எண்ணெய் அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

II. விசாகப்பட்டினம் தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருள் அதன் அருகாமையில் கிடைப்பதால்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மூலப்பொருட்களின் இருப்பும் அதன் அருகாமையும் தொழிலகம் அமைக்கும் இடத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் முதன்மையான காரணிகளாக விளங்குகின்றன. மூலப் பொருட்கள் அதிகமாகவும் மற்றும் விலை குறைவாகவும் கிடைக்கும் இடங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன. உதாரணமாக விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையை கூறலாம். ஏனெனில் விசாகப்பட்டினம் தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருள் அதன் அருகாமையில் கிடைக்கிறது.)

54) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – எந்த பகுதியில் போக்குவரத்து செலவு குறைவாக உள்ளதோ அங்கு தொழிற்சாலைகளை தொடங்குவது நல்ல முடிவாகும்.

கூற்று 2 – அதிக எடை மற்றும் அதிக இடத்தையும் அடைத்துக் கொள்ளும் மூலப் பொருட்களை எடுத்துச் செல்ல போக்குவரத்து செலவு அதிகமாகும்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – தொழிலக அமைவிட காரணிகளை நிர்ணயிப்பதில் போக்குவரத்து செலவு முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிற் சாலைகளில் போக்குவரத்து செலவு என்பது மூலப்பொருட்களை தொழிற்சாலைக்கு கொண்டு வருவது மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதற்குமான செலவினை குறைக்கும்.)

55) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ஒரு தொழிற்சாலை அமைப்பதை நிர்ணயிப்பதில் சந்தைக்கு அருகாமை என்பது ஒரு முதன்மைக் காரணி ஆகும்.

கூற்று 2 – தொழிற்சாலை அமைப்பதை, அதிக அளவு தொழிலாளர்கள் காணப்படும் பகுதி முடிவு செய்கிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – நவீன காலத்தில் ஒரு தொழிற்சாலை அமைப்பதை நிர்ணயிப்பதில் சந்தைக்கு அருகாமை என்பது ஒரு முதன்மைக் காரணியாக உள்ளது. இதில் பல சாதகமான நன்மைகள் உள்ளன. தொழிலகங்களில் உற்பத்தி தொடர்பான பணிகளுக்கு அதிக அளவு தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். தொழிலதிபர்களும் பெரும்பாலும் தொழிலாளர்கள் அதிகம் காணப்படும் பகுதிகளிலேயே தங்கள் தொழிற்சாலைகள் அமைவதை விரும்புகின்றனர்.)

56) மும்பைக்கு அருகில் காணப்படும் அதிக அளவு பருத்தி நெசவாலைகள் கீழ்க்காணும் எந்த காரணத்தால் அமைந்துள்ளது?

A) போக்குவரத்து செலவு குறைவு

B) தொழிலாளர்களின் இருப்பு

C) மூலதனம் குறைவு

D) அரசாங்க கொள்கைகள்

(குறிப்பு – தொழிலகங்களில் உற்பத்தி தொடர்பான பணிகளுக்கு அதிக அளவு தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். தொழிலதிபர்களும் பெரும்பாலும் தொழிலாளர்கள் அதிகம் காணப்படும் பகுதிகளிலேயே தங்கள் தொழிற்சாலைகள் அமைவதை விரும்புகின்றனர். எடுத்துக்காட்டாக மும்பைக்கு அருகில் காணப்படும் அதிக அளவு பருத்தி நெசவாலைகள் அங்கு செறிந்து காணப்படும் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டவை ஆகும்.)

57) ஒரு தொழிலகம் அமைப்பதற்கு அரசாங்கம் கீழ்க்காணும் எந்த வசதிகளை செய்து தருகிறது?

I. நிதி உதவி

II. நிலம்

III. நீர்

IV. போக்குவரத்து

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – அரசாங்கத்தின் கொள்கைகளும் தொழிலக அமைவிடத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் முக்கியமானது ஆகும். பின்தங்கிய பகுதிகளில் ஒரு தொழிலகம் அமைப்பதற்கு தேவையான நிதி உதவி நிலம் நீர் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை அரசாங்கம் அளிப்பதன் மூலம் அப்பகுதியின் முன்னேற்றத்திற்கு உதவுகிறது.)

58) ஒரு தொழிலகம் அமைப்பதற்கு அரசாங்கம் கீழ்க்காணும் எந்த வசதிகளை செய்து தருகிறது?

I. சந்தைக்கான ஆலோசனைகள்

II. வரிச்சலுகை

III. ஏற்றுமதி-இறக்குமதி வசதிகள்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – அரசாங்கத்தின் கொள்கைகளும் தொழிலக அமைவிடத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் முக்கியமானதாகும். சந்தைக்கான ஆலோசனைகள், வரி சலுகைகள், ஏற்றுமதி-இறக்குமதி வசதிகளை அளிப்பதில் அரசாங்கம் ஒரு தொழிலகத்திற்கு பெரிதும் உதவுகின்றது.)

59) குறைந்த செலவு கொள்கையை வலியுறுத்தும் கோட்பாட்டினை வகுத்தவர் யார்?

A) வான் தூனன்

B) வெபர்

C) வில்லியம் ஷா

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – வெபர் தனது தொழிலக அமைவிட கோட்பாட்டில் குறைந்த செலவு கொள்கையை வலியுறுத்துகிறார். இவரது கோட்பாடு போக்குவரத்து செலவு மற்றும் சில நிபந்தனைகளையும் அனுமானங்களின் அடிப்படையில் கொண்டுள்ளது. அவரின் அனுமானங்கள் சில, சில மூலப் பொருட்கள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கிடைக்கக்கூடியவை.ஆனால் நீர் போன்றவை எங்கும் காணக் கூடியது. சந்தை ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் காணப்படும் போன்றவைகள் ஆகும்.)

60) வெபரின் தொழிலக அமைவிட கோட்பாட்டின் (Weber’s Theory of Location) கீழ்காணும் அனுமானங்களில் எது தவறானது?

A) சந்தை சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் காணப்படும்.

B) சில மூலப்பொருட்கள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கிடைக்கக்கூடியவை. ஆனால் நீர் போன்றவை எங்கும் காணக் கூடியது.

C) உற்பத்தி பொருட்களுக்கு சந்தையில் குறைவான போட்டி காணப்படுகிறது.

D) போக்குவரத்து செலவு மூலப்பொருட்களின் எடையையும், தூரத்தையும் அடிப்படையாகக்கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.

(குறிப்பு – வெபரின் அனுமானங்கள் ஆவன, சில மூலப்பொருட்கள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கிடைக்கக்கூடியவை. ஆனால் நீர் போன்றவை எங்கும் காணக் கூடியது, சந்தை சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் காணப்படும், போக்குவரத்து செலவு மூலப்பொருட்களின் எடையையும், தூரத்தையும் அடிப்படையாகக்கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது, உற்பத்தி பொருட்களுக்கு சந்தையில் நிறைவான போட்டி காணப்படுகிறது என்பனவாகும்.)

61) குறைந்த செலவில் அதிக லாபம் என்ற கருத்தை வகுத்தவர் யார்?

A) வான் தூனன்

B) வெபர்

C) வில்லியம் ஷா

D) கீன்ஸ்

(குறிப்பு – குறைந்த செலவில் அதிக லாபம் என்ற கருத்தை தனது தொழிலக அமைவிட கோட்பாட்டில் வெபர் கூறுகிறார். இக்கோட்பாடு ஒரு முக்கோண வடிவத்தின் மூலம் விளக்கப்படுகிறது. முக்கோணத்தின் அடி கோட்டின் இரு முனைகளும் மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்கள் ஆகும். முக்கோணத்தின் உச்சி முனை சந்தை ஆகும்.)

62) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – சில தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உற்பத்தி பொருட்களின் எடை மூலப்பொருட்களின் எடையைக் காட்டிலும் குறைவாக இருக்கும்.

கூற்று 2 – எடை இழக்கும் கச்சாப் பொருட்கள் எனப்படுபவை தொழிற்சாலைக்கு கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவு, அதனை உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சந்தைக்கு கொண்டு சேர்ப்பதற்கான செலவைக் காட்டிலும் அதிகம்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – வெபரின் கோட்பாட்டின் பின்னாலுள்ள தர்க்கம் என்னவெனில், சில தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உற்பத்தி பொருட்களின் எடை மூலப்பொருட்களின் எடையைக் காட்டிலும் குறைவாக இருக்கும். அவை எடை இழக்கும் கச்சாப் பொருள்கள் என அழைக்கப்படுகிறது. அதனால் இந்த வகை மூலப்பொருள்களை தொழிற்சாலைக்கு கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவு, அதனை உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சந்தைக்கு கொண்டு சேர்ப்பதற்கான செலவைக் காட்டிலும் அதிகம். ஏனெனில் இத்தகைய மூலப் பொருள்களில் உள்ள அதிக கழிவுகளை தொழிற்சாலைகளிலேயே பிரித்து எடுக்க வேண்டியுள்ளது.)

63) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ஒரு தொழிலகம் மூலப் பொருட்கள் கிடைக்கும் இடத்திற்கு மத்தியில் அமையும் பொழுது போக்குவரத்து செலவு கணிசமான அளவு குறைகிறது.

கூற்று 2 – ஒரு தொழிலகம் மூலப் பொருட்கள் கிடைக்கும் இடத்திற்கு மத்தியில் அமையும் பொழுது உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச்செல்லும் செலவு குறைவாக உள்ளது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – ஒரு தொழிலகம் மூலப் பொருட்கள் கிடைக்கும் இடத்திற்கு மத்தியில் அமையும் பொழுது போக்குவரத்து செலவு கணிசமான அளவு குறைகிறது.அதேபோல ஒரு தொழிலகம் மூலப் பொருட்கள் கிடைக்கும் இடத்திற்கு மத்தியில் அமையும் பொழுது உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச்செல்லும் செலவு குறைவாக உள்ளது. இதுதான் உச்சபட்ச வருவாய் தரக்கூடிய தொழிலக அமைவிடம் என்று வெபர் கருதுகிறார்.)

64) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – கச்சாப் பொருள்கள் எடை குறைவாக இருந்தால் அதனை தொழிலகத்திற்கு எடுத்து செல்லும் போக்குவரத்து செலவு குறைகிறது.

கூற்று 2 – உற்பத்தி செய்யப்பட்டபின் பொருட்களின் எடை அதிகரிக்கும் தன்மை உடையது என்றால் அத்தகைய தொழிற்சாலைகள் சந்தைக்கு அருகில் அமைவது, போக்குவரத்து செலவை குறைக்கும்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – கச்சாப் பொருள்கள் எடை குறைவாக இருந்தால் அதனை தொழிலகத்திற்கு எடுத்து செல்லும் போக்குவரத்து செலவு குறைகிறது.ஆனால், உற்பத்தி செய்யப்பட்டபின் பொருட்களின் எடை அதிகரிக்கும் தன்மை உடையது என்றால் அத்தகைய தொழிற்சாலைகள் சந்தைக்கு அருகில் அமைவது, போக்குவரத்து செலவை குறைக்கும். எனவே போக்குவரத்து செலவினை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்படும் வெபரின் இந்த தொழிலுக்கு அமைவிட கோட்பாடு மற்றும் கோட்பாடுகளை விட சிறந்ததாக கருதப்படுகிறது.)

65) தொழிற்சாலைகள் கனரக மற்றும் எடை குறைவான தொழிற்சாலைகள் என கீழ்காணும் எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது?

A) தொழிலாளர்களின் அடிப்படையில்

B) மூலப்பொருட்கள் அடிப்படையில்

C) முதலீட்டாளர்கள் அடிப்படையில்

D) மூலப்பொருட்களின் ஆதார அடிப்படையில்

(குறிப்பு – தொழிற்சாலைகள் நான்கு வகையான காரணங்களால் வகைப்படுத்தப்படுகிறது.அவை தொழிலாளர்கள், மூலப்பொருள்கள், முதலீட்டாளர்கள் மற்றும் மூலப்பொருள்களின் ஆதாரம் என்பன ஆகும்.)

66) பெரிய அளவு, சிறிய அளவு, நடுத்தர அளவு என்று தொழிற்சாலைகள் கீழ்க்காணும் எந்த காரணங்களால் வகைப்படுத்தப்படுகிறது?

A) தொழிலாளர்களின் அடிப்படையில்

B) மூலப்பொருட்கள் அடிப்படையில்

C) முதலீட்டாளர்கள் அடிப்படையில்

D) மூலப்பொருட்களின் ஆதார அடிப்படையில்

(குறிப்பு – தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், பெரிய அளவு தொழிற்சாலைகள், சிறிய அளவு தொழிற்சாலைகள் மற்றும் நடுத்தர அளவு தொழிற்சாலைகள் என வகைப்படுத்தப்படுகின்றன.)

67) தொழிற்சாலைகள் முதலீட்டாளர்கள் அடிப்படையில் வகைப்படுத்தப்படுவனவற்றுள் கீழ்க்கண்டவற்றில் எது சரி?

I. தனியார் துறை

II. பொதுத்துறை

III. கூட்டுறவு துறை

IV. பன்னாட்டு நிறுவனங்கள்

A) I, II மட்டும் சரி

B) I, II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – தொழிற்சாலைகள் முதலீட்டாளர்களின் அடிப்படையில், தனியார்துறை தொழிற்சாலைகள், பொதுத் துறை தொழிற்சாலைகள், தனியார் துறை மற்றும் பொதுத்துறை இணைந்துள்ள தொழிற்சாலைகள், கூட்டுறவு தொழிற்சாலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.)

68) தொழிற்சாலைகள் மூலப்பொருட்களின் ஆதார அடிப்படையில் கீழ்காணும் எந்தவகையில் வகைப்படுத்தப்படுகிறது?

I. வேளாண் பொருட்கள்

II. கனிமங்கள்

III. ரசாயனங்கள்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – தொழிற்சாலைகள் மூலப்பொருட்களின் ஆதார அடிப்படையில் வேளாண் பொருட்கள் மற்றும் கனிமங்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.)

69) தொழிற்சாலைகளின் வகைகளை பொருத்துக.

I. தொழிலாளர்கள் அடிப்படையில் – a) வேளாண் பொருட்கள்

II. மூலப்பொருட்கள் அடிப்படையில் – b) கூட்டுறவு துறை

III. முதலீட்டாளர்கள் அடிப்படையில் – c) நடுத்தர அளவு

IV. மூலப்பொருட்களின் ஆதார அடிப்படையில் – d) கனரக

A) I-c, II-d, III-b, IV-a

B) I-b, II-a, III-d, IV-c

C) I-c, II-a, III-b, IV-d

D) I-d, II-a, III-c, IV-b

(குறிப்பு – தொழிற்சாலைகள் முதலீட்டாளர்களின் அடிப்படையில் சிறிய அளவு, பெரிய அளவு மற்றும் நடுத்தர அளவு என வகைப்படுத்தப்படுகிறது. மூலப்பொருட்களின் அடிப்படையில் கனரக மற்றும் எடை குறைவான தொழிற்சாலைகள் என வகைப்படுத்தப்படுகிறது. முதலீட்டாளர்களின் அடிப்படையில் தனியார் துறை, பொதுத்துறை, கூட்டுறவுத்துறை, பன்னாட்டு நிறுவனங்கள் என வகைப்படுத்தப்படுகிறது. மூலப்பொருட்களின் மூலாதார அடிப்படையில் வேளாண் பொருட்கள் மற்றும் கனிமங்கள் என வகைப்படுத்தப்படுகிறது.)

70) பருத்தி மற்றும் சணல் தொழிற்சாலைகள் கீழ்காணும் எந்த வகை தொழிற்சாலைகள் ஆகும்?

A) பெரிய அளவு தொழிற்சாலைகள்

B) சிறிய அளவு தொழிற்சாலைகள்

C) நடுத்தர அளவு தொழிற்சாலைகள்

D) கனரக தொழிற்சாலைகள்

(குறிப்பு – அதிக அளவு தொழிலாளர்களையும், அதிக அளவு மூலதனத்தையும் கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள் பெரிய அளவு தொழிற்சாலைகள் எனப்படும். பருத்தி மற்றும் சணல் தொழிற்சாலைகள் பெரிய அளவு தொழிற்சாலைகளுக்கான எடுத்துக்காட்டு ஆகும், )

71) மிதிவண்டி மற்றும் வானொலி போன்ற தொழிற்சாலைகள் எந்த வகையில் அடங்கும்?

A) பெரிய அளவு தொழிற்சாலைகள்

B) சிறிய அளவு தொழிற்சாலைகள்

C) நடுத்தர அளவு தொழிற்சாலைகள்

D) கூட்டுறவு துறை தொழிற்சாலைகள்

(குறிப்பு – மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ தொழிலாளர் எண்ணிக்கை இல்லாமல் இயங்குபவை நடுத்தர அளவு தொழிற்சாலைகள் ஆகும். அதே போல் இதன் முதலீடும் மிதமானதாக இருக்கும். மிதிவண்டி, வானொலி, தொலைக்காட்சிபெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகள் இந்த வகையில் அடங்கும்.)

72) தீப்பெட்டி நெசவு செய்தல் போன்றவை எந்தவகை தொழிற்சாலைகளின் கீழ் அடங்கும்?

A) பெரிய அளவு தொழிற்சாலைகள்

B) சிறிய அளவு தொழிற்சாலைகள்

C) நடுத்தர அளவு தொழிற்சாலைகள்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – சிறிய அளவு முதலீடும் குறைவான எண்ணிக்கையில் தொழிலாளர்களையும் கொண்டு இயங்குபவை சிறிய அளவு தொழிற்சாலைகள் ஆகும். திருகு மற்றும் ஆணி தயாரிக்கும் தொழிற்சாலைகள், கயிறு, நெகிழி, சாயத் தொழிற்சாலைகள், தீப்பெட்டி போன்றவை சிறிய அளவு தொழிற்சாலைகளின் கீழ் வருகின்றன.)

73) மண்பாண்டம் தயாரித்தல் என்பதைக் கீழ்க்காணும் எந்த தொழிற்சாலைகளின் வகைகளுள் அடங்கும்?

A) பெரிய அளவு தொழிற்சாலை

B) குடிசை தொழில்

C) வேளாண் பொருள் தொழிற்சாலை

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – குடும்ப உறுப்பினர்களோ அல்லது தனி மனிதர்களோ வீட்டில் இருந்தபடியே தங்களது சொந்தமான கருவிகளின் உதவியுடன் பொருட்களை தயாரிக்கும் முறையை குடிசைத்தொழில் என்கிறோம். இவை மிக சிறியவைகளாகவும், முறைசாரா அமைப்பாகவும் இருக்கும். நெசவு தொழில் மற்றும் மண்பாண்டம் தயாரித்தல் இதற்கு உதாரணம் ஆகும்.)

74) இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலைகள் கீழ்க்காணும் எவற்றுக்கு உதாரணமாகும்?

A) கனரக தொழிற்சாலை

B) தனியார்துறை தொழிற்சாலை

C) சிறிய அளவு தொழிற்சாலை

D) பன்னாட்டு நிறுவனத் தொழிற்சாலை

(குறிப்பு – அதிக எடையும் அதிக அளவிலான மூலப்பொருள்களும் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையும் கொண்டவை பெரிய அளவு தொழிற்சாலைகள் எனப்படும். இரும்பு எஃகு தொழிற்சாலைகள் இதற்கான சிறந்த உதாரணம் ஆகும். சிறிய அளவு தொழிற்சாலைகள் எடை குறைவான மூலப் பொருட்களை பயன்படுத்தி எடை குறைவான பொருட்களை உற்பத்தி செய்யக்கூடியவை ஆகும். உதாரணம் மின்விசிறி, தையல் எந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஆகும்.)

75) பொருத்துக.

I. தனியார்துறை தொழிற்சாலைகள் – a) இந்திய எண்ணெய் நிறுவனம்

II. பொதுத்துறை தொழிற்சாலைகள் – b) சர்க்கரை ஆலைகள்

III. கலப்பு துறை தொழிற்சாலைகள் – c) பஜாஜ் ஆட்டோ

IV. கூட்டுறவு சங்க தொழிற்சாலைகள் – d) துர்காபூர் இரும்பு உருக்காலை

A) I-c, II-d, III-a, IV-b

B) I-b, II-a, III-d, IV-c

C) I-c, II-a, III-b, IV-d

D) I-d, II-a, III-c, IV-b

(குறிப்பு – முதலீட்டாளர்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள் தனியார் துறை தொழிற்சாலைகள், பொதுத்துறை தொழிற்சாலைகள், கலப்பு தொழிற்சாலைகள், கூட்டுறவு சங்க தொழிற்சாலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.)

76) பொருத்துக.

I. தனியார்துறை தொழிற்சாலைகள் – a) பாரத மிகுமின் நிறுவனம் (BHEL)

II. பொதுத்துறை தொழிற்சாலைகள் – b) டிஸ்கோ(TISCO)

III. கலப்பு துறை தொழிற்சாலைகள் – c) சர்க்கரை ஆலைகள்

IV. கூட்டுறவு சங்க தொழிற்சாலைகள் – d) குஜராத் வெடியுப்பு லிமிடெட்

A) I-b, II-a, III-d, IV-c

B) I-b, II-d, III-c, IV-a

C) I-c, II-a, III-b, IV-d

D) I-d, II-a, III-c, IV-b

(குறிப்பு – முதலீட்டாளர்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள் தனியார் துறை தொழிற்சாலைகள், பொதுத்துறை தொழிற்சாலைகள், கலப்பு தொழிற்சாலைகள், கூட்டுறவு சங்க தொழிற்சாலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.)

77) பொருத்துக

I. சிறிய அளவு தொழிற்சாலைகள் – a) மண்பாண்டம் செய்தல்

II. பெரிய அளவு தொழிற்சாலைகள் – b) சாயத் தொழிற்சாலை

III. நடுத்தர அளவு தொழிற்சாலைகள் – c) மிதிவண்டி தொழிற்சாலை

IV. குடிசைத்தொழில் – d) பருத்தி மற்றும் சணல் தொழிற்சாலை

A) I-b, II-d, III-c, IV-a

B) I-b, II-d, III-a, IV-c

C) I-c, II-a, III-b, IV-d

D) I-d, II-a, III-c, IV-b

(குறிப்பு – பருத்தி மற்றும் சணல் தொழிற்சாலைகள் பெரிய அளவு தொழிற்சாலைகளுக்கான எடுத்துக்காட்டாகும். மிதிவண்டி தொழிற்சாலை நடுத்தர அளவு தொழிற்சாலைக்கான எடுத்துக்காட்டாகும். சாய தொழிற்சாலை, சிறிய அளவு தொழிற்சாலைக்கான எடுத்துக்காட்டு ஆகும். மண்பாண்டம் செய்தல் குடிசை தொழிலுக்கான எடுத்துக்காட்டாகும்.)

78) கீழ்க்கண்டவற்றுள் எது வேளாண் பொருள்சார் தொழிற்சாலை அல்ல?

A) பருத்தி நெசவு தொழிற்சாலைகள்

B) தாவர எண்ணெய் தயாரித்தல்

C) சணல் தொழிற்சாலைகள்

D) தோல் தொழிற்சாலைகள்

(குறிப்பு – வேளாண் பொருள் சார் தொழிற்சாலைகள் என்பன, தனது உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள்களை விவசாயத்தில் இருந்து பெற்றுக் கொள்கின்றன. பருத்தி நெசவு தொழிற்சாலைகள், சணல் தொழிற்சாலைகள், சர்க்கரை ஆலைகள், தாவர எண்ணெய் தயாரித்தல் ஆகியவை இதற்கு உதாரணமாகும்.)

79) கீழ்கண்டவற்றுள் எது கனிமம்சார் தொழிற்சாலை அல்ல?

A) இரும்பு எஃகு தொழிற்சாலை

B) அலுமினிய தொழிற்சாலை

C) எலும்பு மற்றும் கொம்புகள் தொழிற்சாலை

D) சிமெண்ட் தொழிற்சாலை

(குறிப்பு – கனிமம் சார் தொழிற்சாலைகள் என்பன பிரதானமாக கனிமங்களில் இருந்து தனது மூலப்பொருள்களை பெற்று இயங்கக்கூடிய தொழிற்சாலைகள் ஆகும். சிமெண்ட் தொழிற்சாலை, இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை, அலுமினிய தொழிற்சாலை போன்றவைகள் இதற்கு உதாரணமாகும்)

80) காடுகளில் கிடைக்கும் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலைகளுள் அல்லாதது எது?

A) காகித தொழிற்சாலை

B) அரக்கு தொழிற்சாலை

C) கூடை தயாரிக்கும் தொழிற்சாலை

D) பால்பண்ணை பொருட்கள் தொழிற்சாலை.

(குறிப்பு – காடுகளில் கிடைக்கும் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலைகளுக்கு எடுத்துக்காட்டு காகிதம், அட்டை, மரப்பிசின், கோந்து, பட்டை, மரப்பாத்திரங்கள், கூடை ஆகியவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஆகும்.)

81) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – அடிப்படை தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் தொழிற்சாலைக்கு தேவையான மூலப் பொருட்களாக இருக்கும்.

கூற்று 2 – தொலைக்காட்சிப் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை அடிப்படை தொழிற்சாலைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – தயாரிக்கப்படும் பொருள்களை அடிப்படையாகக்கொண்டு, தொழிற்சாலைகளை அடிப்படை தொழிற்சாலைகள் மற்றும் நுகர்வோர் தொழிற்சாலைகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. அடிப்படை தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருள்கள் மற்றொரு தொழிற்சாலைக்கு தேவையான மூலப் பொருள்களாக இருக்கும். உதாரணமாக இரும்பு எக்கு தொழிற்சாலையில் தயாராகும் எந்திரங்கள்தான் ஜவுளிதொழிற்சாலைகளுக்கு மூலப்பொருளாக அமையும். நுகர்வோரின் நேரடி பயன்பாட்டிற்கான பொருட்களை உற்பத்தி செய்வது நுகர்வோர் தொழிற்சாலை எனப்படும்.)

82) சேவைத் தொழில் அல்லது சேவை துறை என அழைக்கப்படுவது எது?

A) முதல் நிலை தொழில்

B) இரண்டாம் நிலை தொழில்

C) மூன்றாம் நிலை தொழில்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – மூன்றாம் நிலை தொழில்கள் நுகர்வோருக்கான சேவையை வழங்குகின்றன. ஆகையினால் இது சேவைத் தொழில் அல்லது சேவை துறை என அழைக்கப்படுகின்றன. ஈடான ஊதியம் பெறுகின்ற தனி திறனுடன் கூடிய அனைத்து சேவைகளும் மூன்றாம் நிலை தொழில்கள் ஆகும்.)

83) கீழ்க்கண்டவற்றுள் எது மூன்றாம் நிலை தொழில் ஆகும்?

I. மருத்துவம்

II. கல்வி

III. சட்டம்

IV. ஆட்சிப்பணி

A) I, II மட்டும்

B) I, II, III மட்டும்

C) II, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – ஈடான ஊதியம் பெறுகின்ற தனி திறனுடன் கூடிய அனைத்து சேவைகளும் மூன்றாம் நிலை தொழில்கள் ஆகும். மருத்துவம், கல்வி, சட்டம், ஆட்சிப் பணி மற்றும் பொழுதுபோக்கு முதலியவை உயரிய வல்லுநர் திறன் தேவைப்படும் துறைகளாகும்.இப்பணிகளுக்கு தத்துவ அறிவும், செய்முறை பயிற்சியும் தேவை. இவை மூன்றாம்நிலை தொழில்களாகும்.)

84) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – பெரும்பாலான மூன்றாம் நிலை தொழில்கள் உயர் திறன் உடைய பணியாளர்கள், தொழில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் ஆலோசகர்களால் செயல்படுத்தப்படுகிறது.

கூற்று 2 – மூன்றாம் நிலை தொழில்கள் பொருள்களின் உற்பத்தியை விட சேவைகளின் வர்த்தகரீதியான வெளியீடுகளை கொண்டுள்ளது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – மூன்றாம் நிலை தொழில்கள் பொருள்களின் உற்பத்தியை விட சேவைகளின் வர்த்தகரீதியான வெளியீடுகளை கொண்டுள்ளது. சேவை வழங்கிய அதன் நிபுணத்துவம் சிறப்பு திறன்களை அதிக அளவில் சார்ந்துள்ளது. அது தொழிலாளர்களின் அனுபவம் அறிவு ஆகியவற்றை சார்ந்துள்ளது. மாறாக உற்பத்தி நுணுக்கம், எந்திரங்கள் மற்றும் தொழிற்சாலையின் செயல்பாடுகளை அல்ல.)

85) கீழ்க்கண்டவற்றுள் எது நான்காம் நிலை தொழிலுக்கு எடுத்துக்காட்டு அல்ல?

A) அறிவியல் ஆராய்ச்சி

B) கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம்

C) நூலகம்

D) மருத்துவம்

(குறிப்பு – மூன்றாம் நிலை தொழில்கள் மேலும் நான்காம் நிலை தொழில்கள் மற்றும் ஐந்தாம் நிலை தொழில்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. நான்காம் நிலை தொழில்கள் அறிவார்ந்த நடவடிக்கைகளை உள்ளடக்கியது. உதாரணத்திற்கு நூலகம், அறிவியல் ஆராய்ச்சி,. கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்றவை நான்காம் நிலை தொழில்கள் ஆகும்.)

86) தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் எந்த நிலை தொழிலில் உள்ளவர்களாவர்?

A) இரண்டாம் நிலை தொழில்

B) மூன்றாம் நிலை தொழில்

C) நான்காம் நிலை தொழில்

D) ஐந்தாம் நிலைத் தொழில்

(குறிப்பு – ஐந்தாம் நிலை தொழிலில் பணியாற்றும் பணியாளர்களை பொதுவாக தங்க கழுத்துப்பட்டை (Golden Collar) பணியாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தற்போது உள்ள துறைகளின் சேவைகள், அவற்றின் தொழில்நுட்பத்தின் மதிப்பீடு அல்லது புதிய யோசனைகள், புதிய சேவைகள் அளிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர்.)

87) ஐந்தாம் நிலை தொழில்கள் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ஐந்தாம் நிலை தொழிலில் ஈடுபடும் பிரிவினர் அதிக ஊதியம் பெற்ற நிபுணர்களாக, ஆராய்ச்சி அறிவியலாளர்கள், அரசுத்துறை அதிகாரிகளாக இருப்பார்கள்.

கூற்று 2 – ஐந்தாம் நிலை தொழிலாளர்கள் உயர்பதவிகளில் அதிக அதிகாரங்களுடன் நியமிக்கப்படுகிறார்கள்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – ஐந்தாம் நிலை தொழிலில் பணியாற்றும் பணியாளர்களை பொதுவாக தங்க கழுத்துப்பட்டை (Golden Collar) பணியாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தற்போது உள்ள துறைகளின் சேவைகள், அவற்றின் தொழில்நுட்பத்தின் மதிப்பீடு அல்லது புதிய யோசனைகள், புதிய சேவைகள் அளிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர். இவர்கள் எடுக்கும் முடிவுகள் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கானதாக இருக்கும்.)

88) ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளை எத்தனை பெரும் பிரிவாக பிரித்துள்ளது?

A) இரண்டு பெரும் பிரிவுகளாக

B) மூன்று பெரும் பிரிவுகளாக

C) நான்கு பெரும் பிரிவுகளாக

D) ஐந்து பெரும் பிரிவுகளாக

(குறிப்பு – ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளை மூன்று பெரும் பிரிவுகளாக பிரித்துள்ளது. அவை 1) வளர்ச்சியடைந்த நாடுகள், 2) பொருளாதார மாற்ற நிலையில் உள்ள நாடுகள் மற்றும் 3) வளரும் நாடுகள் என்பன ஆகும்.)

89) தென் கிழக்கு ஐரோப்பா, காமன்வெல்த் நாடுகள் என்பது கீழ்க்காணும் எந்த பிரிவினுள் அடங்கும்?

A) வளர்ச்சி அடைந்த நாடுகள்

B) வளரும் நாடுகள்

C) பொருளாதார மாற்ற நிலையில் உள்ள நாடுகள்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளை மூன்று பெரும் பிரிவுகளாக பிரித்துள்ளது. அவை 1) வளர்ச்சியடைந்த நாடுகள், 2) பொருளாதார மாற்ற நிலையில் உள்ள நாடுகள் ( தென் கிழக்கு ஐரோப்பா காமன்வெல்த் நாடுகள் மற்றும் ஜியார்ஜியா ) மற்றும் 3) வளரும் நாடுகள் என்பன ஆகும்.)

90) உலக நாடுகளை வகைப்படுத்துவதற்கு கீழ்காணும் எவை அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது?

I. மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP)

II. மொத்த தேசிய உற்பத்தி(GNP)

III. தனிநபர் வருமானம்

IV. தொழில்மயமாதல்

A) I, II மட்டும்

B) I, II, III மட்டும்

C) III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – உலக நாடுகளை வகைபடுத்துவதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி, மொத்த தேசிய உற்பத்தி, தனிநபர் வருமானம், தொழில்மயமாதல், வாழ்க்கை தரம் ஆகியவை பொருளாதார நிலையின் அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையானது வளர்ச்சி அடைந்த நாடுகள் என்பது இறையாண்மை உடைய ஒரு அரசாங்கத்தையும், மிக வளர்ச்சியடைந்த முன்னேறிய பொருளாதாரத்தையும், தொழில்நுட்பத் திறன் உடைய உட்கட்டமைப்பை கொண்டிருக்கும் என்று கூறுகிறது.)

91) வளர்ச்சி அடைந்த நாடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) தொழில் வளர்ச்சி அடைந்த நாடு

B) அதிக வளர்ச்சி அடைந்த நாடு

C) அதிக வளர்ந்துவிட்ட பொருளாதாரத்தை கொண்ட நாடு

D) இவை அனைத்தும் சரி

(குறிப்பு – ஐக்கிய நாடுகள் சபையானது வளர்ச்சி அடைந்த நாடுகள் என்பது இறையாண்மை உடைய ஒரு அரசாங்கத்தையும், மிக வளர்ச்சியடைந்த முன்னேறிய பொருளாதாரத்தையும், தொழில்நுட்பத் திறன் உடைய உட்கட்டமைப்பை கொண்டிருக்கும் என்று கூறுகிறது. பொதுவாக வளர்ச்சி அடைந்த நாடுகள் என்பது, தொழில் வளர்ச்சி அடைந்த நாடு, அதிக வளர்ச்சி அடைந்த நாடு அல்லது அதிக வளர்ந்துவிட்ட பொருளாதாரத்தை கொண்ட நாடுகள்(MEDC) என்று அழைக்கப்படுகின்றன. இந்த நாடுகளை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது நன்கு வளர்ந்த பொருளாதாரத்தையும் தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டமைப்பையும் கொண்டிருக்கின்றன)

92) 2015ஆம் ஆண்டில் உலக மொத்த உற்பத்தியில் (GDP) வளர்ச்சி அடைந்த நாடுகளின் பங்களிப்பு எத்தனை சதவீதம் ஆகும்?

A) 50 சதவீதம்

B) 60 சதவீதம்

C) 70 சதவீதம்

D) 80 சதவீதம்

(குறிப்பு – வளர்ச்சி அடைந்த நாடுகள் அனைத்துமே தொழில் மேம்பாடு அடைந்த நாடுகள் ஆகும்.இதன் பொருள் சேவைத்துறை தான், தொழில் துறையைக் காட்டிலும் அதிக வருவாயை தருகின்றன என்பதாகும். 2015ஆம் ஆண்டில் உலக மொத்த உற்பத்தியில்(GDP) வளர்ச்சியடைந்த நாடுகள் 60 சதவீதம் பங்கு வகிக்கின்றன.)

93) பன்னாட்டு நிதியத்தின் கூற்றுப்படி கீழ்க்கண்டவற்றுள் எது வளர்ச்சியடைந்த நாடு அல்ல?

A) ஜப்பான்

B) தென்கொரியா

C) இந்தியா

D) ஜெர்மனி

(குறிப்பு – பன்னாட்டு நிதியத்தின் கூற்றுப்படி உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது வாங்கும் திறன் சமநிலையை (PPP) அடிப்படையாகக் கொண்டவை. அந்தப் பத்து நாடுகள் ஆவன, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, ஐக்கிய அரசு மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய நாடுகள் ஆகும்.)

94) பொருளாதார மாற்ற நிலையில் உள்ள நாடுகள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – மூலாதார மாற்றம் அடைந்து வரும் நாடுகள் என்பவை மையப்படுத்தப்பட்ட, திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தில் இருந்து சந்தை பொருளாதாரத்திற்கு மாறி வரும் நாடுகளை குறிக்கும்..

கூற்று 2 – பொருளாதார மாற்ற நிலையில் உள்ள நாடுகள் தங்களது பொருளாதார கட்டமைப்பை, சந்தையை அடிப்படையைக் கொண்ட நிறுவனங்களாக மாற்றும் நோக்கம் உடையவை.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – பொருளாதாரம் மாற்றநிலைக்கான பொருளாதாரா நடவடிக்கைகளை முந்தைய சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் மூன்றாம் உலக நாடுகள் சிலவற்றில் காணலாம். இதன் சமூக பொருளாதார விளைவுகள் பற்றிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.)

95) வளர்ச்சி குன்றிய நாடு எனப்படுவது கீழ்க்காணும் எந்த பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்?

I. தொடர்ந்து ஒரு நாட்டில் மூன்று ஆண்டிற்கு மேல் தனிநபர் வருமானம் குறைந்து காணப்படுவது.

II. மனிதவள குறைபாடு

III. பொருளாதார ரீதியாக பாதிப்படைதல்.

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வுப்படி மிகக்குறைந்த சமுதாய பொருளாதார வளர்ச்சியுடைய நாடுகளின் பட்டியலில் மிகக் குறைந்த மனிதவள மேம்பாடு உடைய அனைத்து நாடுகளும் காணப்படுகின்றன. ஒரு நாடு குறிப்பிட்ட மூன்று பண்புகளை பெற்றிருந்தால் அது வளர்ச்சி குன்றிய நாடு என அழைக்கப்படுகிறது.)

96) 2018 ஆம் ஆண்டின் கணக்குப்படி ஒரு நாட்டின் தனி நபர் வருமானம் ஆண்டிற்கு ___________________ இருந்தால் அந்த நாடு வளர்ச்சி குன்றிய நாடு எனக் கருதப்படும்.

A) 825 அமெரிக்க டாலருக்கு குறைவாக

B) 925 அமெரிக்க டாலருக்கு குறைவாக

C) 1025 அமெரிக்க டாலருக்கு குறைவாக

D) 1125 அமெரிக்க டாலருக்கு குறைவாக

(குறிப்பு – தொடர்ந்து ஒரு நாட்டில் மூன்று ஆண்டிற்கு மேல் தனிநபர் வருமானம் குறைந்து காணப்படுவது மற்றும் 2018 ஆம் ஆண்டின் கணக்குப்படி ஒரு நாட்டில் தனிநபர் வருமானம் ஆண்டிற்கு 1025 அமெரிக்க டாலருக்கு குறைவாக இருந்தால், நாடு வளர்ச்சி குன்றிய நாடு என அழைக்கப்படும்.)

97) உலக வங்கியின் சமீபத்திய புள்ளி விவரத்தின் படி எந்த நாடு பொருளாதாரத்தில் உலகின் மிகப்பெரிய நாடு ஆகும்?

A) சீனா

B) ரஷ்யா

C) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

D) கனடா

(குறிப்பு – உலக வங்கியின் சமீபத்திய புள்ளி விவரத்தின் படி அமெரிக்க ஐக்கிய நாடுகள் தான் பொருளாதாரத்தில் உலகின் மிகப்பெரிய நாடு ஆகும். 18 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உலகப் பொருளாதாரத்தின் கால்பங்கு இடத்தை அமெரிக்க ஐக்கிய நாடுகள் பெற்றுள்ளது.)

98) உலகப் பொருளாதாரத்தின் பங்களிப்பினை அதன் நாடுகளுடன் பொருத்துக.

I. சீனா – a) 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்

II. ஜெர்மனி – b) 11 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்

III. இந்தியா – c) 4.4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்

IV. ஜப்பான் – d) 2.2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்

A) I-b, II-d, III-c, IV-a

B) I-b, II-d, III-a, IV-c

C) I-c, II-a, III-b, IV-d

D) I-d, II-a, III-c, IV-b

(குறிப்பு – அமெரிக்க ஐக்கிய நாடுகள்(24.3%), சீனா(14.8%), ஜப்பான்(6%) ஆகியவை உலகப் பொருளாதாரத்தின் முதல் மூன்று இடங்களுக்கான பங்களிப்பை அளிக்கிறது. ஜெர்மனி 2.2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் நான்காம் இடத்தில் உள்ளது.)

99) உலக அளவில் பொருளாதார அடிப்படையில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

A) 5 ஆம் இடம்

B) 6 ஆம் இடம்

C) 7 ஆம் இடம்

D) 8 ஆம் இடம்

(குறிப்பு – உலக பொருளாதாரத்தில் 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் தொகையுடன் இந்தியா ஏழாம் இடத்தில் உள்ளது. இத்தாலி, பிரேசில் ஆகியவை முறையே எட்டு மற்றும் ஒன்பதாம் இடத்தை வகிக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் பொருளாதார நிலை மூன்றாமிடம் முதல் பத்தாம் இடம் வரை காணப்படும் நாடுகளின் பொருளாதார நிலையின் கூடுதலைவிட அதிகமாக உள்ளது)

100) சீனா ஆண்டிற்கு எத்தனை ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை கையாளுகிறது?

A) 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள்

B) 6 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள்

C) 7 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள்

D) 8 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள்

(குறிப்பு – சீனா ஆண்டிற்கு 7 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை கையாளுகிறது. சர்வதேச நிதியத்தின் (IMF) ஆய்வின்படி சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2016 ஆம் ஆண்டில் 6.7% ஆக அதிகரித்துள்ளது. அக்காலகட்டத்தில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 1.6% ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.)

101) 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருந்தது?

A) 6.5%

B) 6.6%

C) 6.7%

D) 6.8%

(குறிப்பு – சீனா தனது மிக வேகமான பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவை முந்தி சென்றுள்ளது. 2016ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% ஆக இருந்தது. எனினும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.7% ஆக இருந்தது.)

102) உலகப் பொருளாதாரத்தில் ஆசிய குழுமம் எத்தனை சதவீதம் பெற்றுள்ளது?

A) 31.75%

B) 33.84%

C) 27.95%

D) 21.37%

(குறிப்பு – கண்டங்கள் வழியில் கணக்கிடும் பொழுது, ஆசிய குழுமம் அனைத்தையும் விட பெரியதாக பொருளாதார பங்களிப்பைக் கொண்டுள்ளது. ஆசிய குழுமம் உலக மொத்த உற்பத்தியில் மூன்று பங்கினைக் கொண்டுள்ளது. அதாவது மொத்த உலக உற்பத்தியில் 33.84% பங்களிப்பை கொண்டுள்ளது. வடஅமெரிக்க கண்டம் 27.95% பங்களிப்பைக் கொண்டுள்ளது.)

103) உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களில் இல்லாத நாடு எது?

A) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

B) பிரான்ஸ்

C) ஜெர்மனி

D) சீனா

(குறிப்பு – உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தின் அடிப்படையில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகள் ஆவன முறையே, அமெரிக்க ஐக்கிய நாடுகள், சீனா, ஜப்பான், ஜெர்மனி, ஐக்கிய அரசு, பிரான்ஸ், இந்தியா, இத்தாலி, பிரேசில் மற்றும் கனடா ஆகும்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!