Book Back QuestionsTnpsc

நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் Book Back Questions 9th Science Lesson 10

9th Science Lesson 10

10] நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

நாம் பார்க்கும் அல்லது உணரும் அனைத்தும் பருப்பொருள்கள் அல்ல. எடுத்துக்காட்டாக, சூரிய ஒளி, ஒலி, விசை மற்றும் ஆற்றல் ஆகியன நிறையற்றவை மற்றும் இடத்தை அடைப்பவை இல்லை. எனவே, இவை பருபொருள்கள் ஆகாது.

நவீன ஆவர்த்தன அட்டவணையில் நமக்குத் தெரிந்து இதுவரை உள்ள 118 தனிமங்களில், 92 தனிமங்கள் இயற்கையில் காணப்படுகின்றன, மற்ற 26 தனிமங்கள் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டவை. ஆனால், இத்தகைய 118 தனிமங்களிலிருந்து, கோடிக்கணக்கான சேர்மங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, அவற்றில் சில இயற்கையானவை மற்றும் சில செயற்கையானவை. இது வியக்கத்தக்கதல்லவா?

அணு: வேதிவினையில் ஈடுபடும் ஒரு தனிமத்தின் மிகச்சிறிய துகள் அணுவாகும். இது தனித்தோ சேர்ந்தோ காணப்படும்.

மூலக்கூறு: ஒரு தனிமம் அல்லது ஒரு சேர்மத்தின் மிகச்சிறிய துகள் மூலக்கூறாகும். இது தனித்துக் காணப்படும். இது பொருட்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

எடுத்துக்காட்டுகள்: ஹைட்ரஜன் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் (H2) அணுக்கள் உள்ளன. நீர் (H2O) மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்சிஜன் அணுவும் உள்ளன.

பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் பொட்டாசியத்தின் சேர்மங்கள் உரம் தயாரிக்கப் பயன்படுகின்றன. சிலிக்கன் சேர்மங்கள் கணிப்பொறி துறையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஃப்ளோரின் சேர்மங்கள் நம் பற்களை வலுப்படுத்த உதவும் பற்பசையில் பயன்படுத்தப்படுகின்றன.

LPG – திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு: இது மிக எளிதில் தீப்பற்றக் கூடிய ஹைட்ரோகார்பன் வாயுவாகும்; புரோப்பேன் மற்றும் பியூட்டேன் வாயுக்களின் கலவையைக் கொண்டுள்ளது; அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு திரவமாக்கப்படும். இது, வெப்பப்படுத்தவும், உணவு சமைக்கவும், வாகன எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இரத்தம் ஒரு கலவை. ஏனெனில், இதில் இரத்தத்தட்டுக்கள், சிவப்பு மற்றும் வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் பிளாஸ்மா போன்ற பல்வேறு கூறுகள் கலந்துள்ளன.

கழிவறைகளில் காற்று தூய்மையாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் உள்ள திண்மம் மெதுவாக பதங்கமாகி நறுமணமுள்ள வாயுவை ஒரு குறிப்பிட்ட காலம் வரை வெளியிடுவதன் மூலம் கழிவறையை நறுமணத்துடன் வைக்கின்றது. நாஃப்தலீனை உள்ளடக்கிய அந்துருண்டை, பூச்சிகளை விரட்டப் பயன்படுகிறது. இதில் உ ள்ள நாஃப்தலீன் பதங்கமாகி வாயுவாக மாறுகிறது. இதே போன்று, இந்தியர்களின் வீடுகளில் பயன்படும் கற்பூரம் பதங்கமாதலுக்குட்பட்டு நறுமணத்தைத் தரவல்லது.

கரைப்பான் சாறு இறக்கல் என்பது பன்னெடுங்காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் முறை ஆகும். வாசனைத் திரவியங்கள் தயாரித்தல் மற்றும் பல்வேறு மூலங்களிலிருந்து சாயங்கள் தயாரித்தலில் இது பயன்படுகிறது.

உண்மைக் கரைசல்கள், தொங்கல்கள் மற்றும் கூழ்மங்கள் ஆகியவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகள் என்ன? முக்கியமான வேறுபாடு அவற்றின் துகள்களின் உருவ அளவு ஆகும். அவற்றின் உருவ அளவை மாற்றுவதன் மூலம், இக்கரைசல்கள் ஒன்றை மற்றொன்றாக மாற்றுவதும் சாத்தியமாகும்.

வாகனத்தின் முகப்பு விளக்கிலிருந்து வரும் ஒளி, ஒளிக்கற்றையாகத் தோன்றுவது டிண்டால் விளைவினால் ஆகும். வானம் நீலநிறமாகத் தோன்றுவதும் டிண்டால் விளைவினால் ஆகும்.

ஈரமான சாலையில் வண்ணமான திட்டுகள் காணப்படுவதைப் பார்த்திருக்கிறீர்களா? சாலையின் மேல் உள்ள நீரில் எண்ணெய்த் துளிகள் மிதக்கின்றன மற்றும் வண்ணத் திட்டுக்களை உருவாக்குகின்றன. இது ஏன் என்பதைக் கண்டுபிடி.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மிக அதிக வேகத்தில் சுழலச் செய்து, கனமான பொருட்களிலிருந்து லேசான பொருட்களைப் பிரித்தெடுக்கும் முறை _____________

(அ) வடிகட்டல்

(ஆ) வண்டல்

(இ) சாய்த்து வடித்தல்

(ஈ) மைய விலக்கம்

2. பின்வருவனவற்றுள் ___________ ஒரு கலவை

(அ) சாதாரண உப்பு

(ஆ) தூய வெள்ளி

(இ) கார்பன் டை ஆக்ஸைடு

(ஈ) சாறு

3. ஒரு துளி மையினை நாம் நீரில் கலக்கும்போது நமக்குக் கிடைப்பது _____________

(அ) பலபடித்தான கலவை

(ஆ) சேர்மம்

(இ) ஒருபடித்தான கலவை

(ஈ) தொங்கல்

4. கரைப்பானைக் கொண்டு சாறு இறக்குதல் முறையில் ___________ அவசியம்.

(அ) பிரிபுனல்

(ஆ) வடிதாள்

(இ) மைய விலக்கு இயந்திரம்

(ஈ) சல்லடை

5. __________ மாதிரி முழுவதும் ஒரே பண்புகளைக் கொண்டுள்ளது.

(அ) தூய பொருள்

(ஆ) கலவை

(இ) கூழ்மம்

(ஈ) தொங்கல்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. _________ கலவையின் இயைபுப் பொருள்களுக்கு வேறுபடுத்தக்கூடிய எல்லைக்கோடு இல்லை.

2. பதங்கமாகும் பொருளுக்கு எடுத்துக்காட்டு ____________

3. நீரிலிருந்து ஆல்கஹால் ____________ மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது.

4. பெட்ரோலிய சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படும் பிரித்தெடுத்தல் முறை ___________

5. வண்ணப்பிரிகை முறை _____________ தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. எண்ணெய் மற்றும் தண்ணீர் இரண்டும் ஒன்றில் ஒன்று கலவாதது.

2. வேதிமுறையில் ஒரு சேர்மத்தை தனிமங்களாகப் பிரிக்க முடியாது.

3. திரவ-திரவ கூழ்மங்கள் களிம்பு எனப்படும்.

4. மோர் ஒரு பலபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டாகும்.

5. ஆஸ்பிரின் தனது நிறையில் 60% கார்பன், 4.5% ஹைட்ரஜன் மற்றும் 35.5% ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது. ஆஸ்பிரின் ஒரு கலவை

பொருத்துக:

1. தனிமம் – அசையாமல் வைக்கும்போது கீழே படிகிறது

2. சேர்மம் – தூய்மையற்ற பொருள்

3. கூழ்மம் – மூலக்கூறுகளால் உருவானது

4. தொங்கல் – தூய்மையான பொருள்

5. கலவை – அணுக்களால் உருவானது

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. மைய விலக்கம் 2. சாறு 3. ஒருப்படித்தான கலவை 4. பிரிபுனல் 5. தூயபொருள்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. ஒரு படித்தான 2. உலர் பனிக்கட்டி/உறைந்த co2/கற்பூரம் 3. பின்னக் காய்ச்சி வடித்தல் 4. பின்னக் காய்ச்சி வடித்தல்

5. வெவ்வேறு கரைதிறன்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக)

1. சரி

2. தவறு

சரியான விடை: வேதியியல் முறையில் தனிமங்களாகப் பிரிக்க இயலாது.

3. தவறு

சரியான விடை: திண்ம திரவ கூழ்மங்கள் களிம்பு எனப்படுகின்றன.

4. சரி

5. தவறு

சரியான விடை: ஆஸ்பிரின் நிறையில் 60% கார்பன், 40.5% ஹைட்ரஜன் மற்றும் 35.5% ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது ஆஸ்பிரின் ஒரு சேர்மம்.

பொருத்தக: (விடைகள்)

1. தனிமம் – தூய்மையான பொருள்

2. சேர்மம் – அணுக்களால் உருவானது

3. கூழ்மம் – மூலக்கூறுகளால் உருவானது

4. தொங்கல் – அசையாமல் வைக்கும்போது கீழே படிகிறது

5. கலவை – தூய்மையற்ற பொருள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!