Book Back QuestionsTnpsc

நிலக்கோளம் – II புவிப் புறச்செயல்பாடுகள் Book Back Questions 9th Social Science Lesson 13

9th Social Science Lesson 13

13] நிலக்கோளம் – II புவிப் புறச்செயல்பாடுகள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

உடைந்த பாறைகள் வானிலைச் சிதைவுக்கு உட்பட்டு மண்ணாக மாறுகிறது. சிதைவடைந்த நுண்ணிய பாறைத் துகள்கள் மற்றும் சிதைந்த உயிரினங்களின் (Humus) கலவையே மண்ணாகும்.

உலகிலேயே மிக அதிக உயரமான நீர்வீழ்ச்சி ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா). இதன் உயரம் 979 மீட்டர்.

துணை ஆறு (Tributary): முதன்மை ஆற்றுடன் இணையும் அனைத்து சிற்றாறுகளும் துணை ஆறுகள் ஆகும். (உம். ) பவானி ஆறு.

கிளை ஆறு (Distributary): முதன்மை ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் ஆறுகள். (உ. ம்) கொள்ளிடம் ஆறு.

கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகளினால் உருவாக்கப்பட்ட டெல்டா சுந்தரவன டெல்டா ஆகும். இது உலகிலேயே மிகப்பெரிய டெல்டாப் பகுதி ஆகும்.

அமெரிக்காவில் உள்ள வியாமிங்கின் எல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் காணப்படும் (Yellow stone national park) ஓல்டு பெய்த்புல் (Old faithful) வெப்ப நீருற்று உலகின் மிகவும் அறியப்பட்ட வெப்ப நீருற்றாகும்.

பிஹாரிலுள்ள கன்வர் ஏரி. ஆசியாவில் உள்ள மிகப்பெரிய நன்னீர் குருட்டு ஆறு ஆகும். அமெரிக்காவில் அர்க்கன்சாஸ் பகுதியில் உள்ள சிக்காட் ஏரி உலகிலேயே பெரிய குருட்டு ஆறு ஆகும்.

இந்தியாவில் உள்ள சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றங்கள்: மேற்கு பீஹார் – குப்ததாம் குகைகள். உத்தரகாண்ட் – ராபர்ட் குகை மற்றும் தப்கேஷ்வர் கோவில். மத்தியப்பிரதேசம் – பச்மாரி மலைகள் பாண்டவர் குகைகள். சத்தீஸ்கர் (பஸ்தர்) – குடும்சர் குகைகள். ஆந்திர பிரதேசம் (விசாகப்பட்டினம்) – போரா குகைகள்.

உலகின் மிக ஆழமான உறிஞ்சு துளை, சீனாவின் 2172 அடி ஆழத்தில் காணப்படும் சைனோசை ஜியான்காங் (Xianozhai tienkang) ஆகும். அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸில் 15000ற்கும் மேற்பட்ட உறிஞ்சு துளைகள் உள்ளன.

குகைகளின் காணப்படும் பூச்சி இனங்கள் பார்வை திறனை இழந்து விடுவதால் அதன் நீளமான உணர் கொம்புகள் பார்வைத் திறனை ஈடு செய்கின்றன.

சீனாவில் உள்ள காற்றடி வண்டல் பீடபூமி தான் மிக கனமான காற்றடி வண்டல் படிவாகும். இதன் உயரம் சுமார் 335 மீட்டர் ஆகும்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பாறைகளின் சிதைவுறுதல் அழிதலும் ————— என்று அழைக்கப்படுகிறது.

(அ) வானிலைச் சிதைவு

(ஆ) அரித்தல்

(இ) கடத்துதல்

(ஈ) படியவைத்தல்

2. இயற்கைக் காரணிகளால் நிலம் சமப்படுத்தப்படுதலை ————– என்று அழைக்கின்றோம்.

(அ) படிவுகளால் நிரப்படுதல்

(ஆ) அரிப்பினால் சமப்படுத்துதல்

(இ) நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்

(ஈ) ஏதுமில்லை

3. —————- ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்.

(அ) துள்ளல்

(ஆ) வண்டல் விசிறி

(இ) டெல்டா

(ஈ) மலை இடுக்கு

4. சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம் —————–

(அ) பனியாறு

(ஆ) காற்று

(இ) கடல் அலைகள்

(ஈ) நிலத்தடி நீர்

5. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களில் எது பனியாறுகளின் படியவைத்தலால் உருவாக்கப்படவில்லை.

(அ) சர்க்

(ஆ) மொரைன்

(இ) டிரம்லின்

(ஈ) எஸ்கர்

6. காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் மென்படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம் ———–ஆகும்.

(அ) காற்றடி வண்டல்

(ஆ) பர்கான்

(இ) ஹமாடா

(ஈ) மணல் சிற்றலைகள்

7. கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ————–

(அ) கடல் அலை அரித்தல்

(ஆ) ஆற்று நீர் அரித்தல்

(இ) பனியாறு அரித்தல்

(ஈ) காற்றின் படியவைத்தல்

8. ———-ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன.

(அ) காற்று

(ஆ) பனியாறு

(இ) ஆறு

(ஈ) நிலத்தடி நீர்

9. கீழ்க்கண்டவற்றுள் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம்?

(அ) ஆசியா

(ஆ) தக்காண பீடபூமி

(இ) குலு பள்ளத்தாக்கு

(ஈ) மெரினா கடற்கரை

II. பொருத்துக:

1. கிளையாறு – அ] பனியாற்றின் செயல்பாடு

2. காளான் பாறை – ஆ] கடல் அலைச்செயல்

3. எஸ்கர் – இ] ஆற்றின் மூப்பு நிலை

4. கல் விழுது – ஈ] ஏயோலியன்

5. ஓங்கல் – உ] சுண்ணாம்புப் பாறை

III. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. (i) “I” வடிவ பள்ளத்தாக்கு ஆறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.

(ii) ”U” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.

(iii) “V” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.

(அ) 1, 2 மற்றும் 3ம் சரி

(ஆ) 1, 2 சரி

(இ) 1 மற்றும் 3ம் சரி

(ஈ) 2 மட்டும் சரி

2. கூற்று I: ஆறுகள் சமன்படுத்தலின் முக்கிய காரணியாகும்.

கூற்று II: ஆறுகள் ஓடும் சரிவுகளை பொருத்து அதன் செயல்பாடு இருக்கும்.

(அ) வாக்கியம் I தவறு II சரி

(ஆ) வாக்கியம் I மற்றும் II தவறு

(இ) வாக்கியம் I சரி வாக்கியம் II தவறு

(ஈ) வாக்கியம் I மற்றும் II சரி

3. கூற்று: சுண்ணாம்பு பாறை பகுதிகளில் நிலத்தடி நீர் குறைவாக இருக்கும்.

காரணம்: நீர் சுண்ணாம்பு பாறையில் உட்புகாது.

(அ) கூற்று சரி, காரணம் தவறு

(ஆ) கூற்று தவறு. காரணம் சரி

(இ) கூற்று மற்றும் காரணம் தவறு

(ஈ) கூற்று மற்றும் காரணம் சரி

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. வானிலைச் சிதைவு, 2. நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல், 3. டெல்டா, 4. நிலத்தடி நீர், 5. சர்க், 6. காற்றடி வண்டல், 7. கடல் அலை அரித்தல், 8. பனியாறு, 9. தக்காண பீடபூமி

II. பொருத்துக:

1. இ, 2. ஈ, 3. அ, 4. உ, 5. ஆ

III. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. 1, 2 சரி, 2. வாக்கியம் I மற்றும் II சரி, 3. கூற்று சரி, காரணம் தவறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!