Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

நீரியல் சுழற்சி Book Back Questions 8th Social Science Lesson 11

8th Social Science Lesson 11

11] நீரியல் சுழற்சி

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஆவியாதல் விகிதம் அதிகரித்தலானது: 1. காற்றின் வேகம் அதிகரிக்கும் பொழுது, 2. வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது, 3. ஈரப்பதம் குறையும் பொழுது, 4. பூமியில் நீர் நிலைகள் அதிகரிக்கும் பொழுது.

நீர் சுருங்குதல் என்பது நீராவி காற்றில் செறிந்து பூரித நிலையை அடைவது. வெப்பக்காற்று குளிர்ந்த காற்றை விட அதிக நீராவியைத் தக்க வைத்துக் கொள்ளும். வெப்ப நிலை குறையும் பொழுது காற்று பூரித நிலையை அடைகிறது.

நீரியலை அளக்க உதவும் அலகுகள்: ஆவியாதல்-அங்குலம் அல்லது செ. மீ. மழைநீர் ஊடுருவல்-அங்குலம் அல்லது செ. மீ/மணி. மழை பொழிவு-அங்குலம்/மி. மி. /செ. மீ. புவி மேற்பரப்பில் நீர் ஓடலின் கனஅளவு-கன அடி/விநாடி. மழை வழிவின் கனஅளவு-கன அடி. மழை நீரின் கொள்ளளவு-கன அடி/ஏக்கர் அடி.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. நீர் கடலிலிருந்து, வளிமண்டலத்திற்கும், வளிமண்டலத்திலிருந்து நிலத்திற்கும், மீண்டும் நிலத்திலிருந்து கடலுக்குச் செல்லும் முறைக்கு __________ என்று பெயர்.

(அ) ஆற்றின் சுழற்சி

(ஆ) நீரின் சுழற்சி

(இ) பாறைச் சுழற்சி

(ஈ) வாழ்க்கைச் சுழற்சி

2. புவியின் உள்ள நன்னீரின் சதவிகிதம் ____________

(அ) 71%

(ஆ) 97%

(இ) 2. 8%

(ஈ) 0. 6%

3. நீர், நீராவியிலிருந்து நீராக மாறும் முறைக்கு __________ என்று பெயர்.

(அ) ஆவி சுருங்குதல்

(ஆ) ஆவியாதல்

(இ) பதங்கமாதல்

(ஈ) மழை

4. நீர், மண்ணின் இரண்டாவது அடுக்கிலிருந்து அல்லது புவியின் மேற்பரப்பு வழியாக ஆறுகளிலும், ஓடைகளிலும், ஏரிகளிலும், பெருங்கடலுக்குச் செல்லும் முறைக்கு _____________

(அ) ஆவி சுருங்குதல்

(ஆ) ஆவியாதல்

(இ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்

(ஈ) நீர் வழிந்தோடல்

5. நீர் தாவரங்களின் இலைகளிலிருந்து நீராவியாக மாறுவதற்கு ___________ என்று அழைக்கின்றனர்.

(அ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்

(ஆ) நீர் சுருங்குதல்

(இ) நீராவி சுருங்குதல்

(ஈ) பொழிவு

6. குடிப்பதற்கு உகந்த நீரை ____________ என்று அழைப்பர்.

(அ) நிலத்தடி நீர்

(ஆ) மேற்பரப்பு நீர்

(இ) நன்னீர்

(ஈ) ஆர்ட்டீசியன் நீர்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவு ____________ என்று அழைக்கப்படுகிறது.

2. நீர்ச்சுழற்சியில் __________ நிலைகள் உள்ளன.

3. வளிமண்டலத்திற்கு புவியை நோக்கி விழும் எல்லா வகையான நீருக்கும் ____________ என்று பெயர்.

4. மழைத்துளியின் அளவு 0. 5 மீ குறைவாக இருந்தால், அம்மழை பொழிவின் பெயர் __________

5. மூடுபனி ____________ ஐ விட அதிக அடர்த்தி கொண்டது.

பொருத்துக:

1. தாவரங்கள் – மேகங்கள்

2. நீர் சுருங்குதல் – கல்மழை

3. பனித்துளி மற்றும் மழைத்துளி – புவியின் மேற்பரப்பு

4. நீர் ஊடுருவுதல் – நீர் உட்கசிந்து வெளியிடுதல்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. நீராவியாதல் என்பது

(i) நீராவி நீராக மாறும் செயலாக்கம்

(ii) நீர் நீராவியாக மாறும் செயலாக்கம்

(iii) நீர் 100oC வெப்ப நிலையில் கொதிக்கிறது. ஆனால் 0oC வெப்ப நிலையில் ஆவியாக ஆரம்பிக்கிறது.

(iv) ஆவியாதல் மேகங்கள் உருவாக காரணமாக அமைகிறது.

(அ) i, iv சரி

(ஆ) ii சரி

(இ) ii, iii சரி

(ஈ) அனைத்தும் சரி

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. 212oF வெப்ப நிலையில் நீர் கொதிக்கிறது. ஆனால் 32oF வெப்ப நிலையில் ஆவியாக ஆரம்பிக்கிறது.

2. மூடுபனி எனப்படுவது காற்றில் தொங்கு நிலையில் மிதக்கும் நுண்ணிய நீர் துளிகளைப் பெற்றிருப்பதில்லை.

3. அடிப்பரப்பு நீர் வழிந்தோடல் பொதுவாக இடைநீர் ஓட்டம் எனக் குறிப்பிடப்படுகிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. நீரின் சுழற்சி 2. (2. 8%) 3. ஆவி சுருங்குதல் 4. நீர் வழிந்தோடல்

5. நீர் உட்கசிந்து வெளியிடுதல் 6. நன்னீர்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. ஈரப்பதம் 2. மூன்று 3. மழை 4. தூறல் 5. அடர் மூடு பனி

பொருத்துக: (விடைகள்)

1. தாவரங்கள் – நீர் உட்கசிந்து வெளியிடுதல்

2. நீர் சுருங்குதல் – மேகங்கள்

3. பனித்துளி மற்றும் மழைத்துளி – கல்மழை

4. நீர் ஊடுருவுதல் – புவியின் மேற்பரப்பு

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்: (விடை)

1. ii iii சரி

சரியா / தவறா எனக் குறிப்பிடுக:

1. சரி

2. தவறு

சரியான விடை: மூடுபனி எனப்படுவது காற்றில் தொங்கு நிலையில் மிதக்கும் நுண்ணிய நீர்த் துளிகளைப் பெற்றிருக்கின்றன.

3. சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!