Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

நுண்ணுயிரிகளின் உலகம் Book Back Questions 9th Science Lesson 22

9th Science Lesson 22

22] நுண்ணுயிரிகளின் உலகம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஆன்டன் வான் லூவன்ஹீக் என்ற நுண்ணுயிரியலாளர் முதன் முதலில் நுண்ணோக்கியை வடிவமைத்தார். அவர் 1647ஆம் ஆண்டில் தனது பல்லிலிருந்து சிதைவுற்ற பகுதியை எடுத்து அதை நுண்ணோக்கியின் உதவியுடன் உற்று நோக்கினார். அதில் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருக்கும் கண்களால் நேரடியாக காண இயலாத நுண்ணிய உயிரிகள் அதிகளவு இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

வைரஸிலுள்ள புரத உறையற்ற தீங்களிக்கும் ஆர்.என்.ஏ.வே வீராய்டு எனப்படும். இவை தாவர செல்களில் உட்புகுந்து அத்தாவரங்களுக்கு நோயினை உண்டாக்குகின்றன.

உலக சுகாதார தினம் – ஏப்ரல் 7

உலக மலேரியா தினம் – ஏப்ரல் 25

உலக எய்ட்ஸ் தினம் – டிசம்பர் 1

உலக காச நோய் எதிர்ப்பு தினம் – மார்ச் 24.

பாக்டீரியாவியலின் தந்தை என்று அழைக்கப்படும் இராபர்ட் கோஃ என்பவர் ஜெர்மானிய மருத்துவராவார். இவர் முதன் முதலில் நுண்கிருமிகள் எப்படி நோய்களைத் தோற்றுவிக்கின்றன என்பதை கற்றவராவார். 1876ஆம் ஆண்டு செம்மறி ஆடுகளில் காணப்பட்ட ஆந்த்ராக்ஸ் என்ற நோயானது பேசில்லஸ் ஆந்தராசிஸ் என்ற உயிரியால் உருவாகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

சர் ரொனால்ட் ராஸ் என்பவர் இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் மருத்துவராவார். இவர் மலேரியாவைப் பற்றிய தனது ஆய்விற்கு புகழ் பெற்றவர். இவர் இந்திய மருத்துவத் துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றினார். தனது ஆராய்ச்சியின் விளைவாக, மலேரியா ஒட்டுண்ணியின் வளரும் நிலைகளானது கொசுவின் இரைப்பை – குடல்வழிப் பகுதியில் நடைபெறுகிறது எனவும், எனவே மலேரியாவானது கொசுவினால்தான் பரவுகிறது எனவும் நிரூபித்தார். உடலியல் அல்லது மருத்துவத் துறைகளில், மலேரியா பரவும் விதம் பற்றிய தனது கண்டுபிடிப்புகாக 1902ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றார்.

பப்பாளி இலைகளின் கொழுத்திலிருந்து எடுக்கப்பட்டு வடிகட்டப்பட்ட திரவம் மற்றும் நிலவேம்பு கசாயம் ஆகியவை இந்நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது. இது இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக அறியப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பன்றிக்காய்ச்சலானது கண்டறியப்பட்டது. இந்நோய் பல மில்லியன் மக்களைத் தாக்கியது. எனவே ஜீன் 2009ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation – WHO) பன்றிக் காய்ச்சல் நோயை பெரும் கொள்ளை நோய் (Pandeic) என அறிவித்தது. 2015ஆம் ஆண்டு, இந்தியாவில் 31,000 மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு அதில் 1900 பேர் இறந்து போனதாக தகவல்கள் உள்ளன.

பறவை இன்ஃபுளுயன்சா வைரஸ் எனப்படும் H5N1 வைரஸ் 1996ஆம் ஆண்டு தோன்றியது. இந்த வைரஸால் முதன் முதலில் தெற்கு சீனா மற்றும் ஹாங்காங்கில் நோய் தோன்றியதாகக் கண்டறியப்பட்டது. எச்5என்1 என்ற வைரஸானது 1997ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் முதலாவதாக மனிதனில் கண்டுபிடிக்கப்பட்டது. முதன் முதலில் இந்நோயின் வெளிப்பாடு 2003ஆம் ஆண்டு டிசம்பரில் அறியப்பட்டது.

எச்.ஐ.வி நோயானது முதன் முதலில் அமெரிக்காவில் ஹட்டாய் என்ற இடத்தில் 1981ஆம் ஆண்டு கண்டுணரப்பட்டது. 1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் தமிழ் நாட்டில்தான் முதலாவது எய்ட்ஸ் பாதிப்பு ஆதாரத்துடன் தெளிவாகக் கண்டறியப்பட்டது. இந்த எய்ட்ஸ் பாதிப்பிற்கு எய்ட்ஸ் தடுப்பூசி ஆர்.வி. 144 என்ற மருந்தானது தாய்லாந்து நாட்டில் 2003ஆம் ஆண்டு சோதனைக்காக வழங்கப்பட்டது. இதனுடைய ஆய்வறிக்கை 2011ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

தடுப்பூசியிடுதல் நிகழ்வை எட்வர்டு ஜென்னர் என்பவர் அறிமுகப்படுத்தினார். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கையின்படி, மனித குலத்தினிடையே இருந்த பெரியம்மையானது ஜென்னரின் தடுப்பூசி மூலம் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டது.

லூயிஸ் பாய்ஸ்டர் என்பவர் 18ஆம் நூற்றாண்டின் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த வேதியியலாளர் மற்றும் நுண்ணுயிரியலாளர் ஆவார். இவர் நோய்த் தடுப்பு மருந்தளித்தல் மற்றும் பாஸ்டுரைசேஷன் என்ற நிகழ்விற்கு பெயர் பெற்றவர். இவர் காலரா, ஆந்த்ராக்ஸ் மற்றும் பிற நோய்களுக்கு மருந்தை உருவாக்கினார்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கீழ்காண்பனவற்றுள் காற்றினால் பரப்பப்படுவது.

(அ) காசநோய்

(ஆ) மூளைக்காய்ச்சல்

(இ) டைபாய்டு

(ஈ) காலரா

2. மறைமுக விதத்தில் நோய் பரவும் வழிமுறை

(அ) தும்மல்

(ஆ) இருமல்

(இ) கடத்திகள்

(ஈ) துளிர் தொற்று முறை

3. டிப்தீரியா எதைத் தாக்குகிறது?

(அ) நுரையீரல்

(ஆ) தொண்டை

(இ) இரத்தம்

(ஈ) கல்லீரல்

4. காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு

(அ) எலும்பு மஜ்ஜை

(ஆ) குடல்

(இ) மண்ணீரல்

(ஈ) நுரையீரல்

5. மூக்கின் வழியாக உடலினை அடையும் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் __________ தாக்கும்.

(அ) குடலினை

(ஆ) நுரையீரலினை

(இ) கல்லீரலினை

(ஈ) நிணநீர் முனைகளை

6. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் உறுப்பு

(அ) கல்லீரல்

(ஆ) நுரையீரல்

(இ) சிறுநீரகம்

(ஈ) மூளை

7. குழந்தை நிலையில் வாதத்தினைத் தரும் போலியோமைலிடிஸ் வைரஸானது இவ்வழியாக உடலினுள் செல்கிறது.

(அ) தோல்

(ஆ) வாய் மற்றும் மூக்கு

(இ) காதுகள்

(ஈ) கண்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ___________ கரிமப் பொருட்கள் மற்றும் விலங்குக் கழிவுகளை அம்மோனியாவாக மாற்றுகின்றன.

2. டைபாய்டு காய்ச்சல் ___________ ஆல் ஏற்படுத்தப்படுகிறது.

3. எச்1. எச்.1 (H1 N1) வைரஸ் ____________ ஐ உருவாக்குகிறது.

4. டெங்கு என்ற வைரஸ் நோய் ஏற்படுவதற்கு __________ ஒரு கடத்தியாக செயலாற்றுகிறது.

5. __________ என்ற தடுப்பூசி காசநோய்க்கு போதுமான பாதுகாப்பினை வழங்குகிறது.

6. காலரா __________ ஆல் ஏற்படுகிறது; மற்றும் மலேரியா __________ ஆல் ஏற்படுகிறது.

விரிவுபடுத்தி எழுதுக:

1. ORS 2. WHO 3. HIV 4.BCG 5. DPT

கீழ்காண்பனவற்றுள் தனித்திருப்பதை தெரிந்தெடு:

1. எய்ட்ஸ், ரெட்ரோ வைரஸ், லிம்போசைட்ஸ், பி.சி.ஜி.

2. பாக்டீரிய நோய், ரேபிஸ், காலரா, சாதாரண சளி மற்றும் இன்ஃபுளுயன்சா

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. ரைசோபியமானது, பருப்பு வகைத் தாவரங்களில் காணப்படும் வேர் முடிச்சுகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்துபவையோடு தொடர்புடையது.

2. தொற்றாத வகை நோய்கள் ஒரு மனிதனிடம் இருந்து வளர்ந்து பிறருக்கு பரவுவதாகும்.

3. 1796ஆம் ஆண்டு ஜென்னர் என்பவர் நோய்த் தடுப்பு உருவாக்குதல் என்ற நிகழ்வினைக் கண்டறிந்தார்.

4. ஹெப்பாடைட்டிஸ் ‘பி’, ஹெப்பாடைட்டிஸ் ‘ஏ’ வைக்காட்டிலும் அபாயகரமானது.

பொருத்துக:

1. பன்றிக்காய்ச்சல் – மனித பாப்பிலோமா வைரஸ்

2. பிறப்புறுப்பு பாலுண்ணிகள் – ஹெச்.ஐ.வி. (HIV)

3. எய்ட்ஸ் – மைக்கோபாக்டீரியம்

4. காசநோய் – இன்ஃபுளுயன்சா வைரஸ் எச்1 என்1 (H1N1)

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை

(இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு

(ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி

1. கூற்று: சின்னமை நோய் உடலில் வடுக்களாலும் தடங்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது.

காரணம்: சின்னம்மையானது முகத்தில் அரிப்பினை ஏற்படுத்தி உடலில் அனைத்து இடங்களிலும் பரவக்கூடியது.

2. கூற்று: எதிர் உயிர்பொருட்களை உட்கொள்வதால் டெங்கு நோயைக் குணமாக்கலாம்.

காரணம்: நோய் எதிர் உயிர் பொருட்கள் வைரஸ்கள் பெருகுவதைத் தடுக்கின்றன.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. காசநோய் 2. கடத்திகள் 3. தொண்டை 4. நுரையீரல் 5. நுரையீரலினை 6. கல்லீரல் 7. வாய் மற்றும் மூக்கு

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. பூஞ்சைகள் 2. சால்மோனெல்லா டைஃபி 3. பன்றிக்காய்ச்சல் 4. ஏடிஸ் எய்ஜிப்டி கொசு 5. பேசில்லஸ் கால்மெட்டெ குயிரின்

6. விப்ரியோ காலரே, பிளாஸ்மோடியம் என்ற புரோட்டோசோவா ஒட்டுண்ணி

விரிவுப்படுத்தி எழுதுக:

1. ORS – Oral Rehydration Solution (வாய்வழி நீர்ச் சத்தினை தரும் நீர்மத்தினை உட்கொள்ளல்)

2. WHO – World Health Organisation (உலக சுகாதார நிறுவனம்)

3. HIV – Human Immunodeficiency Virus (மனித நோய் எதிர்ப்பு குறைவுபடுத்தும் வைரஸ்)

4. BCG – Bacillus Calmette Guerin (பேசிலஸ் கால்மெட் குய்ரின்)

5. DPT – Diphtheria Pertussis Tetanus (Triple Vaccine) (டிப்தீரியா, பெர்டுசிஸ், டெட்டானஸ் (மூன்று நோய் தடுப்பு மருந்து))

கீழ்க்காண்பனவற்றுள் தனித்திருப்பதை தெரிந்தெடு

1. பி.சி.ஜி

2. காலரா

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக)

1. சரி

2. தவறு

சரியான விடை: தொற்றாத வகை நோய்கள் ஒரு மனிதனிதடமிருந்து வளர்ந்து பிறருக்கு பரவாது.

3. சரி

4. சரி

பொருத்துக:

1. பன்றிக்காய்ச்சல் – இன்ஃபுளுயன்சா வைரஸ் எச் 1 என்1

2. பிறப்புறுப்பு பாலுண்ணிகள் – மனித பாப்பிலோமா வைரஸ்

3. எய்ட்ஸ் – ஹெச்.ஐ.வி

4. காசநோய் – மைக்கோபாக்டீரியம்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. கூற்று மற்றும் சாரணம் இரண்டும் சரி மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

2. கூற்று தவறு ஆனால் காரணம் சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!