Book Back QuestionsTnpsc

பணம் மற்றும் கடன் Book Back Questions 9th Social Science Lesson 28

9th Social Science Lesson 28

28] பணம் மற்றும் கடன்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

தனது அரசாட்சியில், ஷெர்ஷா சூரி (1540-1546) குடிமக்களுக்கும், இராணுவத்திற்குமான ஒரு புதிய நிர்வாக முறையை அமைத்தார். அவர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 178 கிராம் எடை கொண்ட வெள்ளி நாணம் “ருபியா” என்றழைக்கப்பட்டது. அந்நாணயம் முகலாயர், மராத்தியர் மற்றும் ஆங்கிலேயர் காலம் வரை புழக்கத்தில் இருந்தது.

டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் “பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்” (The Problem of the rupee and its Solution) என்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் அடிப்படையில் தான் இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படைச் சட்டம் 1934-ல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பணம் எவ்வாறு அச்சிடப்படுகிறது? இந்தியாவில் 1917-ல்தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன. 1935-ல் பணப் பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது. அதன் பிறகு 500 ரூபாய் நோட்டு பணத்தை அறிமுகப்படுத்தியது. 1940-ல் மீண்டும் இந்தியாவில் 1917-ல் தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன. 1935-ல் பணப் பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது. அதன் பிறகு 500 ரூபாய் நோட்டு பணத்தை அறிமுகப்படுத்தியது. 1940-ல் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. 1947-ம் ஆண்டு வரை ஆறாம் ஜார்ஜின் உருவம் பொறித்த பணமே புழக்கத்தில் இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசால் நோட்டுகள் வெளியிடப்பட்டன. இந்தியாவில் 1917-ல் தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ருபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன. 1935-ல் பணப் பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது. அதன் பிறகு 500 ரூபாய் நோட்டு பணத்தை அறிமுகப்படுத்தியது. 1940-ல் மீண்டும் இந்தியாவில் 1917-ல் தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன. 1935-ல் பணப் பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது. அதன் பிறகு 500 ரூபாய் நோட்டு பணத்தை அறிமுகப்படுத்தியது. 1940-ல் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. 1947-ம் ஆண்டு வரை ஆறாம் ஜார்ஜின் உருவம் பொறித்த பணமே புழக்கத்தில் இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசால் நோட்டுகள் வெளியிடப்பட்டன. ஆங்கிலேய அரசு, 1925ல் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்கில் ஒரு அச்சகத்தை அமைத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க தொடங்கியது. மத்தியப் பிரதேசத்திலுள்ள தேவாஸில் 1974-ல் ஓர் அச்சகம் தொடங்கப்பட்டது. இந்த இரு அச்சகங்களைத் (Security Printing and Minting Corporation of India Ltd. ) தவிர, 1990களில் கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரிலும், மேற்கு வங்காளத்திலுள்ள சல்பானியிலும் ரூபாய் மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அச்சடிக்க மேலும் இரு அச்சகங்களை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியது.

எவ்வளவு பணம் அச்சடிக்க வேண்டும் என்தையும், எப்படிப் பாதுகாப்பாக உரிய இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் இந்திய ரிசர்வ் வங்கியே முடிவு செய்கிறது. பத்தாயிரம் ரூபாய் மதிப்புடைய நோட்டுகள் அச்சடிக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இருந்தாலும், தற்போது அதிகபட்சம் இரண்டாயிரம் ரூபாய் மதிப்பு வரையிலான பணத்தை மட்டுமே அச்சடிக்கிறது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பண்டைய காலத்தில் பண்டமாற்றத்திற்கு பதிலாக பொது மதிப்பீடாக பயன்படுத்தப்பட்ட உலோகம் —————- (தங்கம்/இரும்பு).

2. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையிடம் இருக்கும் இடம் ——————- (சென்னை/மும்பை).

3. சர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறை ————— (அமெரிக்க டாலர்/பவுண்டு).

4. ஜப்பான் நாட்டின் பணம் —————– என்று அழைக்கப்படுகிறது. (யென்/யுவான்).

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ——————— வணிகத்தின் முதல் வடிவம்.

2. பண விநியோகம் —————- பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

3. இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் அச்சகம் தொடங்கப்பட்ட இடம் ——————-

4. பணப்பரிமாற்றத்தை முறைப்படுத்துகின்ற பொறுப்பு —————-க்கு உள்ளது.

5. டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் அவர்களின் பணம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை ————–

III. பொருத்துக:

1. அமெரிக்க டாலர் – அ] தானியங்கி இயந்திரம்

2. நாணய சுழற்சி – ஆ] பணத்தின் மாற்று

3. ஏ. டி. எம். – இ] சர்வதேச அங்கீகாரம் பெற்ற பணம்

4. உப்பு – ஈ] சவுதி அரேபியா

5. ரியால் – உ] 85%

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

அ) 1. நாகரிகம் வளர்ச்சியடைந்த இடங்களில் பண்டமாற்றுமுறை செழித்தோங்கியது.

2. இதுவே வணிகத்தின் முதல் வடிவம்.

(அ) 1 சரி, 2 தவறு

(ஆ) இரண்டும் சரி

(இ) இரண்டும் தவறு

(ஈ) 1 தவறு, 2 சரி

ஆ) 1. உலக நாடுகளில் பெரும்பான்மையான பணப்பரிமாற்றங்கள் அமெரிக்க டாலர் மதிப்பிலேயே நடைபெறுகிறது.

2. உலக வணிகத்தை அமெரிக்கா மட்டுமே நடத்துகிறது.

(அ) இரண்டு கூற்றுகளும் சரி

(ஆ) இரண்டு கூற்றுகளும் தவறு

(இ) 1 சரி, 2 தவறு

(ஈ) 1 தவறு, 2 சரி

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. தங்கம், 2. மும்பை, 3. அமெரிக்க டாலர், 4. யென்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பண்டமாற்று செய்யப்பட்ட பொருள்கள், 2. நாசிக், 3. RBI, 4. பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்

III. பொருத்துக:

1. இ, 2. உ, 3. அ, 4. ஆ, 5. ஈ

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. இரண்டும் சரி, 2. 1 சரி, 2 தவறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!