Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை Book Back Questions 8th Science Lesson 21

8th Science Lesson 21

21] பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

வாழை மற்றும் மாங்கனி உற்பத்தியில் இந்தியா உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது. கோதுமை, மற்றும் நெல் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இளம் நாற்றுகளைப் பிடுங்கி வளர்நிலப் பகுதியில் ஊன்றும் செயல் நாற்று நடுதல் எனப்படும். இவை அறுவடை வரை அங்கு வளர்க்கப்படுகின்றன. இளம் வளர் தாவரங்கள், நாற்றுகள் அல்லது தாவர உடலப் பெருக்கத்தின் மூலம் உருவான நகல்கள் இதற்குப் பயன்படுகின்றன.

2050ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 9 பில்லியனாக இருக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால், நன்னீர் வளத்தில் 70 விழுக்காடு விவசாயத்திற்கே பயன்படுகிறது. எனவே, நமது தலைமுறையினருக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் நீரின் பயன்பாடு திறன்மிக்கதாக இருக்க வேண்டும். சொட்டு நீர்ப்பாசனமே இதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உலகெங்கும் 30,000க்கும் மேற்பட்ட களை வகைகள் காணப்படுகின்றன. அவற்றுள் 8000 வகைகள் பயிர்களுக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்துகின்றன. ஒரே வகையான களை நீக்கும் முறையைப் பயன்படுத்துவதால் களைகள் அவற்றை மேற்கொள்ளும் திறனைப் பெற்றுக் கொள்கின்றன. எனவே, பல்வேறு களை நீக்கும் முறைகளை இணைத்து அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்

இந்திய உணவுக் கழகம் (FCI) 1965ஆம் ஆண்டு ஜனவரி 14ல் சென்னையில் ஏற்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் உணவு தானியங்களை வழங்குதல், தேசிய உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் வழங்கப்பட வேண்டிய மற்றும் வைப்பில் வைத்திருக்க வேண்டிய உணவு தானியத்தை நிர்வகித்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கமாகும். தற்போது இதன் தலைமையகம் புதுடில்லியில் உள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஆச்சார்யா ஜெகதீஸ் சந்திர போஸ் இந்திய தாவரவியல் தோட்டம் ஆரம்பத்தில் ராயல் தாவரவியல் தோட்டம் என்று அழைக்கப்பட்டது. இந்தத் தோட்டம் பல்வேறு வகையான அரிதான தாவரங்களையும், 12000க்கும் மேற்பட்ட மாதிரித் தாவரங்களையும் கொண்டுள்ளது. இது 109 ஹெக்டேர் நிலப்பரப்பு அளவுடையது.

லெகுமினோஸ் தாவரங்கள் தமது வேர் முடிச்சுகளில் காணப்படும் ரைசோபியம் பாக்டீரியாக்களுடன் கூட்டுயிர் வாழ்க்கை வாழ்கின்றன. இந்தத் தாவரங்கள் வளிமண்டலத்தில் காணப்படும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் திறன் பெற்றவை. இத்தாவரத்தின் கனிகள் லெகூம்கள் எனப்படுகின்றன. குதிரை மசால், குளோவர், பட்டாணி, அவரை, மைசூர் பருப்பு, லுப்பின்ஸ், காரோப் சோயா, வேர்க்கடலை போன்றவை இவற்றிற்கு உதாரணமாகும். இந்த வகைத் தாவரங்கள் மண்ணில் நைட்ரஜனின் அளவை அதிகரிப்பதற்காக பயிர்ச் சுழற்சியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

இலை வழி ஊட்டமளித்தல் மூலம் வழங்கப்படும் ஊட்டப் பொருள்களுக்கேற்ற துலங்கல் தாவரங்களில் விரைவாக வெளிப்படுகிறது. வேரின் மூலமாக தாவரங்களுக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை விட வேரின் மூலம் கிடைக்கும் ஊட்டசத்துக்கள் அதிகம். வேரின் மூலம் தாவரங்களுக்கு உணவளிக்க முடியாத போது இலைவழி ஊட்டமளித்தல் பயனள்ளதாக உள்ளது.

கரும் பொறிவண்டு பழ மரங்களில் காணப்படும் ஒரு வகைப் பூச்சியாகும். இது, அம்மரத்தில் காணப்படும் சிவப்பு சிலந்திப் பூச்சிகளை உண்கிறது. ஒரு ஆண்டில் ஆயிரத்திற்கு அதிகமான பூச்சிகளை இது உண்கின்றது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மண்ணில் விதைகளை இடும் செயல்முறையின் பெயர் _______________

அ) உழுதல்

ஆ) விதைத்தல்

இ) பயிர்பபெருக்கம்

ஈ) பயிர்ச்சுழற்சி

2. மண் பரப்பில் பாய்ந்து மண்ணினுள் ஊடுருவும் முறை ___________

அ) நீர்ப் பாசனம்

ஆ) பரப்பு நீர்ப்பாசனம்

இ) தெளிப்பு நீர்ப்பாசனம்

ஈ) சொட்டு நீர்ப்பாசனம்

3. பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளையும், சிறு பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் உயிரினங்கள்

அ) உயிரி-பூச்சிக்கொல்லிகள்

ஆ) உயிரி-உரங்கள்

இ) மண்புழுக்கள்

ஈ) வேம்பு இலைகள்

4. திறன் மிக்க நுண்ணுயிரிகளின் தயாரிப்பு எதில் பயன்படுவது இல்லை?

அ) விதை நேர்த்தி செய்தல்

ஆ) இலைத் தெளிப்பு

இ) மண் நேர்த்தி செய்தல்

ஈ) உயிரி-கொன்றுண்ணிகள்

5. பின்வருவனவற்றுள் பஞ்சகவ்யாவில் இல்லாதது எது?

அ) பசுவின் சாணம்

ஆ) பசுவின் சிறுநீர்

இ) தயிர்

ஈ) சர்க்கரை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஓர் இடத்தில் வளரக்கூடிய பயிர்களைப் பிடுங்கி வேறொரு வளரிடத்தில் நடவு செய்யும் முறை ___________ ஆகும்.

2. விரும்பாத இடத்தில் வளரும் தாவரத்தின் பெயர் _______________

3. களைகளைக் கொல்வதற்கு அல்லது அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்குப் பயன்படும் வேதிப் பொருளின் பெயர் __________

4. ______________ விதைகள் தனது தனித்துவப் பண்புகளை அதன் வழித்தோன்றலுக்குக் கடத்துகின்றன.

5. _______________ மையங்கள் ICAR மற்றும் விவசாயிகளுக்கிடையேயான இறுதி இணைப்பாகச் செயல்படுகின்றன.

6. அதிக விளைச்சலைத் தரக்கூடிய பெரும்பயிர் வகைகள் _____________ஆல் உருவாக்கப்பட்டுள்ளன.

III. பொருத்துக:

1. உயிரி-பூச்சிக் கொல்லிகள் – அ] வேப்பிலைகள்

2. உயிரி கொன்றுண்ணிகள் – ஆ] பேசில்லஸ் துரின்ஜியென்சிஸ்

3. உயிரி-உரங்கள் – இ] வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துகிறது

4. உயிரி-சுட்டிக்காட்டிகள் – ஈ] மண் வளத்தை மேம்படுத்தல்

5. உயிரி-பூச்சி விரட்டிகள் – உ] சூழ்நிலையின் தரம்

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. விதைத்தல், 2. பரப்பு நீர்ப்பாசனம், 3. உயிரி-பூச்சிக்கொல்லிகள், 4. விதை நேர்த்தி செய்தல், 5. சர்க்கரை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. நாற்று நடுதல், 2. களை, 3. களைக்கொல்லி, 4. பாரம்பரிய விதைகள், 5. க்ருஷி விஞ்ஞான கேந்திரா, 6. ICRT

III. பொருத்துக:

1. ஆ, 2. இ, 3. ஈ, 4. உ, 5.அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!