Book Back QuestionsTnpsc

புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் Book Back Questions 7th Social Science Lesson 18

7th Social Science Lesson 18

18] புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

உங்களுக்குத் தெரியுமா?

வைணவ அடியார்கள் (12 ஆழ்வார்கள்): முதல் மூன்று ஆழ்வார்கள்: பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார். ஏனைய ஆழ்வார்கள்: திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், திருப்பண் ஆழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், ஆண்டாள்.

சைவ அடியார்கள் (63 நாயன்மார்கள்): மரபுவழிக் கதையின்படி நாயன்மார்கள் 63 பேராவர். அவர்களில் ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் (மும்மூர்த்திகள் என அழைக்கப்படுபவர்கள்) ஆகியோர் தென்னிந்தியக் கோவில்களில் சிலை வழிபாடு செய்யப்படுகின்றனர். நாயன்மார்களின் பாடல்கள் அனைத்தையும் நம்பி ஆண்டார் நம்பி (கி. பி. 1000) என்பார் தொகுத்ததாகக் கூறப்படுகிறது. அதுவே சைவப்புனித நூல்களான திருமுறையின் அடிப்படையாக உள்ளது. திருமுறை 12 நூல்களைக் கொண்டுள்ளது. அவற்றில் 11 நூல்கள் நம்பி ஆண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டவையாகும். சேக்கிழாரின் பெரிய புராணம் 12வது நூலாகும்.

பதினேழாம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் வாழ்ந்த துக்காராம் கவிஞரும் திருத்தொண்டருமாவார். விஷ்ணுவின் அவதாரமான விதோபா குறித்து அவர் இயற்றிய ஆன்மீகப் பாடல்களுக்காகவே (அபங்கா அல்லது கீர்த்தனைகள்) அவர் நன்கு அறியப்பட்டிருந்தார். மகாராஷ்டிராவில் சோலாப்பூர் மாவட்டத்திலுள்ள பந்தர்பூர் அல்லது பண்டரிபுரத்தில் விதோபா/பாண்டு ரங்கா கோவில் உள்ளது. வங்காளத்திற்கு சைதன்ய தேவா எவ்விதமோ அதைப் போன்றே மகாராஷ்டிராவுக்கு துக்காராம் விளங்குகிறார்.

சூபியிஸம் சூபி எனும் சொல் ‘சுப்’ எனும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். அதன் பொருள் கம்பளி ஆகும். சூபிக்கள் சொர சொரப்பான முரட்டுக் கம்பளியாலான உடைகளை அணிந்ததால் சூபிக்கள் என அழைக்கப்பட்டனர். சூபியிஸம் அடிப்படையில் இஸ்லாமியத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மீது இந்து, பௌத்த (மகாயான) சமயக் கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தது. உலேமாக்களின் கடுமையான ஒழுக்க விதிகளை சூபியிஸம் மறுத்தது. மடாலய வாழ்க்கையை ஒத்த துறவு வாழ்வை மேற்கொண்ட சூபிக்கள் சமுதாயத்திற்கு வெளியே செயல்பட்டனர்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கீழ்க்காண்பவருள் யார் தன்னை தாய் யசோதாவாக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனின் மேல் பாடல்களைப் புனைந்துள்ளார்?

(அ) பொய்கை ஆழ்வார்

(ஆ) பெரியாழ்வார்

(இ) நம்மாழ்வார்

(ஈ) ஆண்டாள்

2. அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்?

(அ) ராமானுஜர்

(ஆ) இராமாநந்தர்

(இ) நம்மாழ்வார்

(ஈ) ஆதி சங்கரர்

3. பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக வட இந்தியாவில் பரவச் செய்தவர் யார்?

(அ) வல்லபாச்சாரியார்

(ஆ) இராமானுஜர்

(இ) இராமாநந்தா

(ஈ) சூர்தாஸ்

4. சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்?

(அ) மொய்னுதீன் சிஸ்டி

(ஆ) சுரவார்டி

(இ) அமீர் குஸ்ரு

(ஈ) நிஜாமுதின் அவுலியா

5. சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரைக் கருதுகின்றனர்?

(அ) லேனா

(ஆ) குரு அமீர் சிங்

(இ) குரு நானக்

(ஈ) குரு கோவிந் சிங்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பெரியாழ்வாரின் தொடக்க காலப் பெயர் ———

2. சீக்கியர்களின் புனித நூல் ——-ஆகும்.

3. மீராபாய் ——– என்பாரின் சீடராவார்

4. —— என்பாரின் தத்துவம் விசிஷ்டாத்வைதம் என அறியப்படுகிறது

5. தர்பார் சாகிப் குருத்வாரா பாகிஸ்தானின் —– என்ற இடத்தில் அமைந்துள்ளது.

III. பொருத்துக:

1. பாகல் – அ) கபீர்

2. இராமசரிதமானஸ் – ஆ) இராமானுஜர்

3. ஸ்ரீவைஷ்ணவம் – இ) அப்துல் வகித் அபுநஜிப்

4. கிரந்தவளி – ஈ) குரு கோவிந் சிங்

5. சுரவார்டி – உ) துளசிதாசர்

IV. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஆண்டாள் – திருவில்லிபுத்தூர்

2. துக்காராம் – வங்காளம்

3. சைதன்யதேவா – மகாராஷ்டிரா

4. பிரம்ம சூத்திரம் – வல்லபாச்சாரியார்

5. குருத்வாராக்கள் – சீக்கியர்கள்

2. கூற்று: குரு கோவிந் சிங்கிற்குப் பின்னர் புனித நூலான குரு கிரந்த் சாகிப் குருவாகக் கருதப்பட்டது

காரணம்: குரு கிரந்த் சாகிப் நூலைத் தொகுத்தவர் குரு கோவிந் சிங்

(அ) காரணம், கூற்றின் சரியான விளக்கமல்ல

(ஆ) காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது

(இ) கூற்று சரி, காரணம் தவறு

(ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு

3. பொருந்தாததை வட்டமிடுக:

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார்

V. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. இஸ்லாமியப் பண்பாடு பரவ சூபியிஸம் காரணமாயிற்று

2. இடைக்காலத்தின் தொடக்கத்தில் நன்கறியப்பட்டிருந்த சிஸ்டி அமைப்பைச் சார்ந்த சூபி, நிஜாமுதீன் அவுலியா என்பவராவார்

3. குருநானக், சீக்கியர்களின் முதல் குருவாகக் கருதப்படுகிறார்

4. கடவுளை உய்த்துணர உணர்சிகரமான பக்தியும் தீவிர தியானமுமே சாத்தியம் என சூபிக்கள் நம்பினர்

5. அடிப்படை தமிழ் சைவப் புனித நூல்கள் 12 ஆகும்.

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பெரியாழ்வார், 2. ஆதி சங்கரர், 3. இராமாநந்தர், 4. மொய்னுதீன் சிஸ்டி, 5. குரு நானக்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. விஷ்ணு சித்தர், 2. குருகிரந்த்சாகிப், 3. ரவிதாஸ், 4. இராமுனுஜர், 5. கர்தார்ப்பூர்

III. பொருத்துக:

1. ஈ, 2. உ, 3. ஆ, 4. அ, 5. இ

IV. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஆண்டாள் – திருவில்லிபுத்தூர், குருத்வாராக்கள் – சீக்கியர்கள், 2. கூற்று சரி, காரணம் தவறு, 3. ஆண்டாள்

V. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. தவறு, 2. சரி, 3. சரி, 4. சரி, 5. சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!