Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

பெண்கள் மேம்பாடு Book Back Questions 7th Social Science Lesson 24

7th Social Science Lesson 24

24] பெண்கள் மேம்பாடு

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

மேம்பாட்டிற்கான முக்கிய காரணிகள்: 1. கல்வி: ஒருவருக்கு அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் திறன் மற்றும் தனித்தன்மை வாய்ந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது. 2. பாலினப்பாகுபாடு: பாலினப்பாகுபாடு பார்க்கும் சமூகம் எக்காலத்திலும் முன்னேறுவதற்கான வாய்ப்பு அரிது. 3. சாதி, இன, சமய பாகுபாடுகளை அடிப்டையாகக் கொண்ட சமூகம், முன்னேற்றம் அடையாது.

நமது எதிர்காலம் பெண்களை உதாசீனப்படுத்துவோர் கையிலில்லை. அது நமது மகன்களைப் போல் பள்ளிக்குக் கல்வி கற்கச் செல்லும் நமது மகள்களின் கனவுகளில் உள்ளது. அவர்களே, இவ்வுலகத்தில் தாங்கி நிற்கும் வல்லமைக் கொண்டவர் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா ஐக்கிய நாடுகளின் பொது சபையில், 2012ஆம் ஆண்டு உரையாற்றும் போது கூறினார்.

சாவித்ரிபாய் புலே, பாரம்பரியத்தை உடைத்த முதல் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர் ஆவார். பெண்கள் கல்வியை பற்றி பேசும் போதெல்லாம் நினைவில் வருபவர், இந்தியாவில் பெண் கல்வியை செயல்வடிவமாக்கிய ஜோதிராவ்புலே, சாவித்ரிபாயின் கணவர் ஆவார். இவர்கள் இருவரும் பெண்களுக்கான முதல் பள்ளியை 1848ஆம் ஆண்டு தொடங்கினர்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பின்வருவனவற்றில் எது பாலின சமத்துவமின்மை அல்ல?

(அ) மோசமான பேறுகால ஆரோக்கியம்

(ஆ) ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை

(இ) எச். ஐ. வி எய்ட்ஸ் பரவுதல்

(ஈ) பெண்களின் குறைந்த எழுத்தறிவு விகிதம்

2. பாலின சமத்துவம் என்பது எது தொடர்புடைய பிரச்சனை

(அ) பெண் குழந்தைகள்; பெண்களின் பிரச்சனை

(ஆ) அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்

(இ) மூன்றாம் உலக நாடுகள் மட்டும்

(ஈ) வளர்ந்த நாடுகள் மட்டும்

3. பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பின்வரும் எந்த உத்திகள் உதவுகின்றது?

(அ) பாகுபாடுகளுக்கு எதிரான சவால்களுக்கு பெண்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.

(ஆ) பெண்களுக்கான அதிகமான வருமான ஆதாரங்கள்

(இ) மேம்பட்ட கல்விக்கான அணுகுமுறை

(ஈ) மேலே உள்ள அனைத்தும்

4. வளரும் நாடுகளில் சிறுவர்களைவிட பெண்குழந்தைகள் இடைநிலைக் கல்வியை தவற விடுவது ஏன்?

(அ) பள்ளிக் கல்வி கட்டணம் உயர்வு காரணமாக, சிறுவர்கள் மட்டும் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள்

(ஆ) பெண் குழந்தைகள் வீட்டு வேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

(இ) குழந்தைத் திருமணம் அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது.

(ஈ) மேலே உள்ள அனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இந்தியாவில் பெண்கள் கல்வியை செயல் வடிவாக்கிய ஜோதிராவ் புலே நினைவில் வைக்கப்படுகிறார் அவர், தனது மனைவியுடன் ———— 1848இல் சிறுமிகளுக்கான முதல் பள்ளியைத் தொடங்கினார்.

2. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் ——

3. முதல் பெண் காவல் துறை இயக்குநர் (DGP) ———- ஆவார்.

4. புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய பெண் ——–

III. பொருத்துக:

1. சிரிமாவோ பண்டாரநாயக – அ) இங்கிலாந்து

2. வாலென்டினா தெரோஷ்கோவா – ஆ) ஜப்பான்

3. ஜன்கோ தபே – இ) இலங்கை

4. சார்லோட் கூப்பர் – ஈ) சோவியத் ஓன்றியம்

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

கூற்று (கூ): இப்போது அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகள் அனைத்திலும் பெண்கள் ஒருங்கிணைகிறார்கள்.

காரணம் (கா): சமூகத்தின் அனைத்து மோதல்களிலும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல

(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

(ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி

2. கூற்று (கூ): பெண்களுக்கு எதிரான வன்முறை சாதி, மதம், வர்க்கம், வயது மற்றும் கல்வியை கடந்து நடைபெறுகிறது.

காரணம் (கா): வீட்டு வன்முறைகள், கருக்கலைப்பு, பெண் சிசுக் கொலை, வரதட்சணை கொலை, திருமணம் மூலம் கொடுமை, சிறுவருக்கு நிகழும் கொடுமைகள் என வெளிப்படுகிறது.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல

(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

(ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை, 2. அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம், 3. மேலே உள்ள அனைத்தும், 4. பெண் குழந்தைகள் வீட்டு வேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. சாவித்திரிப்பாய் பூலே, 2. சுஷ்மா ஸ்வராஜ், 3. காஞ்சன் சௌத்ரி பட்டாச்சரியா, 4. அருந்ததி ராய்

III. பொருத்துக:

1. இ, 2. ஈ, 3. ஆ, 4. அ

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும், 2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!