Book Back QuestionsTnpsc

பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Book Back Questions 6th Social Science Lesson 22

6th Social Science Lesson 22

22] பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

பேரிடர்: இயற்கை பேரிடர், மனிதனால் உண்டாகும் பேரிடர்கள்.

இயற்கை பேரிடர்: நிலநடுக்கம், எரிமலை, சுனாமி, சூறாவளி, வெள்ளம், நிலச்சரிவு, பனிச்சரிவு. இடி மற்றும் மின்னல்

மனிதனால் உண்டாகும் பேரிடர்கள்: நெருப்பு, கட்டிடங்கள் இடிந்து போதல், தொழிற்சாலை விபத்துகள், போக்குவரத்து விபத்துகள், தீவிரவாதம், கூட்ட நெரிசல்.

சென்னை வெள்ளம் 2015: இந்தியாவின் பெரும் நகரங்களில் ஒன்றான சென்னை இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இஃது ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவக்காற்றாலும், வெப்ப மண்டல புயலாலும் பெரும் தாக்கத்திற்கு உள்ளாகின்றது. 2015ஆம் ஆண்டு, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பெய்த பெரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகள் பேரழிவைச் சந்தித்தன. இதில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் பெருமளவில் பொருட்சேதமும் ஏற்பட்டது. மனித உயிர்களைக் காப்பாற்றவும் மக்களின் துயர் துடைக்கவும் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!