பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல் Book Back Questions 9th Social Science Lesson 19
9th Social Science Lesson 19
19] பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
Book Back Questions with Answer and Do You Know Box Content
உங்களுக்குத் தெரியுமா?
ஜப்பான் முழுவதும் நிலநடுக்க பகுதியில் அமைந்துள்ளது. இது உலகிலேயே மிக அதிக அடர்த்தியான நிலநடுக்க பகுதிகளைக் கொண்டுள்ளது. எந்த நாடு உண்மையிலேயே அதிக நிலநடுக்கங்களைக் கொண்டுள்ளது? இந்தோனேசியா அதிக நிலநடுக்கப் பகுதிகளைக் கொண்டுள்ளது. ஜப்பானை விட அதிக பரப்பளவைக் கொண்டுள்ளதால் இந்தோனேசியாவில் தான் உலகிலேயே அதிக நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அதிக நிலநடுக்கங்களைக் கொண்டுள்ள நாடுகள் டோங்கா, பிஜி மற்றும் இந்தோனேசியா ஆகும். ஏனெனில் அவை உலகின் மிக தீவிர நில அதிர்வுப் பகுதிகளில் அமைந்துள்ளன.
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. கீழ்க்காண்பனவற்றில் ஒன்று பேரிடரைப் பொருத்தமட்டில் முதன்மை மீட்பு குழு இல்லை.
(அ) காவலர்கள்
(ஆ) தீயணைப்புப் படையினர்
(இ) காப்பீட்டு முகவர்கள்
(ஈ) அவசர மருத்துவக் குழு
2. “விழு! மூடிக்கொள்! பிடித்துகொள்!” என்பது எதற்கான ஒத்திகை?
(அ) தீ
(ஆ) நிலநடுக்கம்
(இ) சுனாமி
(ஈ) கலவரம்
3. தீவிபத்து ஏற்படும் போது நீங்கள் அழைக்கும் எண்.
(அ) 114
(ஆ) 112
(இ) 115
(ஈ) 118
4. கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது தவறு?
(அ) தீ விபத்திலிருந்து தப்பிக்க “நில்! விழு! உருள்!”
(ஆ) “விழு! மூடிக்கொள்! பிடித்துக்கொள்!” என்பது நிலநடுக்க தயார் நிலை
(இ) “கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள்” என்பது வெள்ளப் பெருக்குக்கான தயார்நிலை
(ஈ) துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டால் தரையில் கிடைமட்டமாகப் படுத்துக்கொண்டு தலையையும் கழுத்தையும் மூடிக்கொள்ளவும்
5. கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது நிலநடுக்கத்தை எதிர் கொள்வதோடு தொடர்புடையது?
(அ) காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.
(ஆ) கடல் மட்டத்திலிருந்து உங்கள் தெரு எவ்வளவு உயரத்தில் உள்ளது மற்றும் கடலோரத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது எனத் தெரிந்து கொள்ளவும்.
(இ) கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.
(ஈ) கதவைத் திறப்பதற்கு முன்பு புறங்கையால் கதவைத் தொட்டு வெப்பமாக உணர்ந்தால் கதவைத் திறக்க வேண்டாம்.
விடைகள்:
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. காப்பீட்டு முகவர்கள், 2. நிலநடுக்கம், 3. 112, 4. “கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள்” என்பது வெள்ளப் பெருக்குக்கான தயார்நிலை, 5. கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்