Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

மனிதர்களின் பரிணாம வளர்ச்சி 6th Social Science Lesson 2 Questions in Tamil

6th Social Science Lesson 2 Questions in Tamil

2. மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

1. வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பற்றி படிப்பது __________ ஆகும்.

A) கல்வெட்டியல்

B) மானுடவியல்

C) தொல்லியல்

D) அகழ்வாராய்ச்சியியல்

விடை மற்றும் விளக்கம்

விடை: C) தொல்லியல்

(குறிப்பு: தொல்லியல் ஆய்விற்கு முக்கிய ஆதாரமாக அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் உதவுகின்றன.)

2. மானுடவியலாளர்களால் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதக் காலடித்தடங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை?

A) 2.5 மில்லியன்

B) 2.5 பில்லியன்

C) 3.5 மில்லியன்

D) 3.5 பில்லியன்

விடை மற்றும் விளக்கம்

விடை: C) 3.5 மில்லியன்

(குறிப்பு: கல்படுகைகளில் பதிந்திருந்த அந்தத் தடங்கள் அதுவரை மண்ணில புதைந்து கிடந்தன. அவற்றை கதிரியக்கக் கார்பன் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அவை 3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று மானுடவியலாளர்கள் கண்டறிந்தனர்.)

3. மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியும் படிப்பது

A) கல்வெட்டியல்

B) மானுடவியல்

C) தொல்லியல்

D) அகழ்வாராய்ச்சியியல்

விடை மற்றும் விளக்கம்

விடை: B) மானுடவியல்

(குறிப்பு: மானுடவியல் ஆய்வாளர்கள், மனித குலத்தின் வளர்ச்சியையும், நடத்தையையும் ஆராய்ந்து மனிதனின் கலாச்சார மற்றும் சமூக நிகழ்வுகள் பற்றிய முழு விளக்கத்தையும் அடைவதற்கு முயல்கின்றனர்.)

4. மானுடவியல் (anthropology) என்னும் சொல் ______மொழி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.

A) ஆங்கிலம்

B) இலத்தின்

C) கிரேக்கம்

D) பிரெஞ்சு

விடை மற்றும் விளக்கம்

விடை: C) கிரேக்கம்

(குறிப்பு: மானுடவியல் (anthropology) என்னும் சொல் இரண்டு கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. Anthropos என்பதன் பொருள் மனிதன். Logos என்பதன் பொருள் எண்ணங்கள் அல்லது காரணம்.)

5. பிரான்சில் உள்ள லாஸ்காஸ் என்னுமிடத்தில் உள்ள குகைகனில் ________ மனிதர்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.

A) நியாண்டர்தால்

B) ஆஸ்ட்ரலோபிதிகஸ்

C) ஹோமோ எரக்டஸ்

D) குரோமேக்னான்ஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: D) குரோமேக்னான்ஸ்

(குறிப்பு: குகைகளில் வாழ கற்றுக் கொண்ட குரோமேக்னான்ஸ் மனிதர்களிடம் இறந்தவர்களை புதைக்கும் பழக்கம் இருந்தது.)

6. மனிதர்களின் பரிணாம வளர்ச்சியை கீழ்க்கண்ட எவற்றின் மூலம் அறிவியல் நோக்கில் பயில முடியும்?

1. கல்வெட்டியல் 2. தொல்லியல்

3. மானுடவியல் 4. நாணயவியல்

A) 1, 2

B) 1, 4

C) 2, 3

D) 2, 4

விடை மற்றும் விளக்கம்

விடை: C) 2, 3

7. மனித இனம் மாறுதல் அடைந்து, ஒரு மேம்பட்ட கட்டத்தை நோக்கி வளர்ச்சி அடைவதே__________ ஆகும்.

A) இடப்பெயர்ச்சி

B) மானுடம்

C) பரிணாமம்

D) மனித வளர்ச்சி

விடை மற்றும் விளக்கம்

விடை: C) பரிணாமம்

(குறிப்பு: தற்கால மனிதனின் பரிணாம வளர்ச்சி

• நிமிர்ந்த நிலை மற்றும் இரு கால்களைப் பயன்படுத்தி நடப்பது.

• பொருள்களை இறுகப் பற்றுவதற்கு வசதியாக கட்டை விரலில் ஏற்பட்ட மாற்றங்கள்

• மூளையின் வளர்ச்சி )

8. கூற்று: மனிதர்கள் காலத்துக்கு ஏற்றவாறு பல மில்லியன் ஆண்டுகளாக தங்களைத் தகவமைத்துக் கொண்டு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளனர்.

காரணம்: இயற்கையில் ஏதேனும் ஒரு திடீர் மாற்றம் நிகழும்போது, உயிரினங்கள் அந்த மாற்றத்திற்கு ஏற்பத் தங்களை தகவமைத்துக் கொண்டு உயிர் பிழைக்கின்றன.

A) கூற்று, காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்

B) கூற்று சரி, காரணம் தவறு

C) கூற்று தவறு, காரணம் சரி

D) கூற்று, காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல.

விடை மற்றும் விளக்கம்

விடை: A) கூற்று, காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்

(குறிப்பு: கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்த ஹோமோசெப்பியன்ஸ் உலகின் வெவ்வேறு பகுதிகளில் குடியேறினார்கள். அவர்கள் வாழ்ந்த சூழலுக்கு தக்கபடி அவர்களின் வாழ்க்கை முறை மாறுபட்டது. வானிலை, காலநிலை மற்றும் இயல்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களின் உடலமைப்பும் தோல் நிறமும் வேறுபட்டன.)

9. தவறான இணையைத் தேர்ந்தெடு (மனிதர்களும் அவர்களது வாழ்விடங்களும்)

A) ஆஸ்ட்ரலோபிதிகஸ் – கிழக்கு ஆப்பிரிக்கா

B) ஹோமோ ஹெபிலிஸ் – தென்ஆப்பிரிக்கா

C) நியாண்டர்தால் – பிரான்ஸ்

D) ஹோமோ ஏரக்டஸ் – ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா

விடை மற்றும் விளக்கம்

விடை: C) நியாண்டர்தால் – பிரான்ஸ்

(குறிப்பு: நியாண்டர்தால் – யூரோசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா))

10. பொருத்துக.

மனிதர்கள் வாழ்விடங்கள்

1. குரோ-மக்னான்ஸ் – i) சீனா

2. பீகிங் மனிதன் – ii) பிரான்ஸ்

3. ஹோமோ சேப்பியன்ஸ் – iii) லண்டன்

4. ஹைடல்பர்க் மனிதன் – iv) ஆப்பிரிக்கா

A) i iii iv ii

B) ii iii i iv

C) ii i iii iv

D) ii i iv iii

விடை மற்றும் விளக்கம்

விடை: D) ii i iv iii

11. ஆதிகாலத்தில் மனிதர்களின் முதன்மையான தொழில் __________.

A) விவசாயம்

B) மீன்பிடித்தல்

C) வேட்டையாடுதல்

D) கிழங்கு அகழ்தல், பழம் பறிப்பது

விடை மற்றும் விளக்கம்

விடை: C) வேட்டையாடுதல்

(குறிப்பு: ஆயுதங்கள் செய்ய சிக்கி முக்கிக் கல் மிகவும் ஏற்றதாக இருந்தது. அதன் வலிமையும் தாங்கும் திறனுமே இதற்குக் காரணம்.)

12. கற்கருவிகளை உருவாக்கியதற்கு அடுத்த கட்டமாக நம் முன்னோர்கள் _________ ஐ கண்டறிந்தார்கள்.

A) சக்கரம்

B) இரும்பு

C) நெருப்பு

D) தாமிரம்

விடை மற்றும் விளக்கம்

விடை: C) நெருப்பு

(குறிப்பு: மனிதர்கள் நெருப்பை உருவாக்க சிக்கி முக்கிக் கல்லைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் காட்டு விலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும் சமைக்கவும் இரவில் ஒளியை உருவாக்கவும் நெருப்பு பயன்பட்டது.)

13. தீப்பெட்டியைப் பயன்படுத்தாமல் நெருப்பை உருவாக்கும் பழக்கம் __________ மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இன்றைக்கும் உள்ளது.

A) விழுப்புரம்

B) கோயம்புத்தூர்

C) நீலகிரி

D) கன்னியாகுமரி

விடை மற்றும் விளக்கம்

விடை: C) நீலகிரி

14. ________ உருவாக்கம் மனித வரலாற்றில் ஒரு முதல்தரமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.

A) சக்கரம்

B) இரும்பு

C) நெருப்பு

D) ஆயுதங்கள்

விடை மற்றும் விளக்கம்

விடை: A) சக்கரம்

(குறிப்பு: மலைகளிலிருந்து கற்கள் உருண்டு வருவதைப் பார்த்த போது, சக்கரத்தை உருவாக்குவதற்கான சிந்தனையை பெற்றனர். மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம்.)

15. மனித சமூகத்தின் முதல் கலை_______.

A) ஆயுதங்கள் செய்தல்

B) பானை செய்தல்

C) விவசாயம்

D) பாறை ஓவியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: D) பாறை ஓவியம்

(குறிப்பு: வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். அவர்கள் அன்றாட நிகழ்வுகளை ஒவியங்களில் சித்தரித்தார்கள். பெரும்பாலும் விலங்குகளின் ஓவியங்ளே வரையப்பட்டன.)

16. தவறான இணையைத் தேர்ந்தெடு.(தமிழ்நாட்டில் உள்ள தொல் பழங்கால பாறை ஓவியங்கள்)

A) கீழ்வலை – விழுப்புரம்

B) மாவடைப்பு – கோவை

C) குமுதிபதி – மதுரை

D) பொறிவரை – நீலகிரி

விடை மற்றும் விளக்கம்

விடை: C) குமுதிபதி – மதுரை

(குறிப்பு: குமுதிபதி – கோவை, உசிலம்பட்டி – மதுரை பொறிவரை -கரிக்கையூர், நீலகீரி ஆகிய இடங்களில் தொல் பழங்கால பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.)

17. கூற்று 1: இந்தியாவில் 750 குகைகளில் ஏறத்தாழ 500 குகைகளில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.

கூற்று 2: ஆண்களும் பெண்களும் வேட்டையாடுவதையும் நடனமாடுவதையும் குழந்தைகள் விளையாடுவதையும் இந்த ஓவியங்கள் சித்தரிக்கின்றன.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

விடை மற்றும் விளக்கம்

விடை: C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

(குறிப்பு: மொழி தோன்றுவதற்கு முன்னால், மனிதர்கள் ஒலியாகவும் அசைவுகளாகவும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தினார்கள். பாறை ஓவியங்களில் அவற்றை வெளிப்படுத்தினார்கள்.)

18. கீழ்க்கண்ட எந்த கண்டுபிடிப்பால் விவசாயம் எளிதாக மாறியது ?

A) விதைகள்

B) சக்கரம்

C) நெருப்பு

D) கலப்பை

விடை மற்றும் விளக்கம்

விடை: D) கலப்பை

(குறிப்பு: எருதுகள் உழுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. இவை விவசாய வேலைகளை மேலும் எளிதாக்கின.)

19. பரிணாமத்தின் வழிமுறை _________.

A) நேரடியானது.

B) மறைமுகமானது

C) படிப்படியானது

D) விரைவானது

விடை மற்றும் விளக்கம்

விடை: C) படிப்படியானது

20. கூற்று 1: நம் முன்னோர்கள் குழுக்களாக மரம், குகை அல்லது மலையடிவாரத்தில் தங்கினார்கள்.

கூற்று 2: ஒவ்வொரு குழுவிலும் 30 முதல் 40 பேர் இருந்தார்கள்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

விடை மற்றும் விளக்கம்

விடை: C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

(குறிப்பு: பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோர்கள் அலைந்து திரிபவர்களாகவே இருந்தனர்.)

21. இறுகப்பற்றுவதற்கு வசதியாகப் பெரிய கால் விரல்களையும், முன்பக்கம் நீட்டிக்கொண்டிருந்த தாடை நீட்சி சற்று குறைந்தும் காணப்பட்ட மனிதன்

A) ஹோமோ எரக்டஸ்

B) ஹோமோ ஹெபிலிஸ்

C) ஹோமோ சேப்பியன்ஸ்

D) குரோமேக்னான்ஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: B) ஹோமோ ஹெபிலிஸ்

(குறிப்பு: ஹோமோஹெபிலிஸ் தொடக்க கால மனிதன். கருவிகளை உருவாக்கினான்.)

22. மனித மற்றும் குரங்கின் பண்புகளுடன் காணப்பட்டு நடக்கக் கற்றுக் கொண்ட மனிதன்________.

A) நியாண்டர்தால்

B) குரோமேக்னான்ஸ்

C) ஆஸ்ட்ரலோபிதிகஸ்

D) ஹோமோ எரக்டஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: C) ஆஸ்ட்ரலோபிதிகஸ்

(குறிப்பு: ஆஸ்ட்ரலோபிதிகஸ் தொடக்க கால மனிதன். கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றினான்.)

23. தற்கால மனிதர்களை விட சிறிய மூளை உடைய மனிதர்கள்_________.

A) ஹோமோ எரக்டஸ்

B) ஹோமோ ஹெபிலிஸ்

C) ஹோமோ சேப்பியன்ஸ்

D) குரோமேக்னான்ஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: A) ஹோமோ எரக்டஸ்

(குறிப்பு: ஹோமோ எரக்டஸ் – ஜாவா மனிதன் முழுமையான மனிதர்கள் அல்ல. நேராக நிமிர்ந்த மனிதன் நெருப்பின் பயனை அறிந்திருந்தான்.)

24. ஆப்பிரிக்கர்களிடம் இருந்து வேறுபட்டு கரடு முரடான கருவிகளை கொண்டிருந்த வேட்டையாடும் திறனில் பின்தங்கியிருந்த மனிதன்

A) ஹோமோசேப்பியன்ஸ்

B) நியாண்டர்தால்

C) குரோமேக்னான்ஸ்

D) ஆஸ்ட்ரலோபிதிகஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: B) நியாண்டர்தால்

(குறிப்பு: நியாண்டர்தால் – இறந்தவர்களை புதைத்தனர். சான்றுகள் ஜெர்மனியில் கிடைக்கப்பெற்றுள்ளன. முழுமையான மனிதர்கள் அல்ல.)

25. சுயமாக சிந்திக்கும் திறனுடைய, வேட்டையாடும் மற்றும் உணவு சேகரிக்கும் சமுகமாக வாழ்ந்த மனிதன்

A) ஹோமோ எரக்டஸ்

B) ஹோமோ ஹெபிலிஸ்

C) ஹோமோ சேப்பியன்ஸ்

D) குரோமேக்னான்ஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: C) ஹோமோ சேப்பியன்ஸ்

(குறிப்பு: ஹோமோசேப்பியன்ஸ் – ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் குடியேறினான்.)

26. கற்கருவிகளுடன், எலும்பாலான கருவிகளையும், குத்தீட்டியும் நெம்புகோல் வகை கருவிகளையும் பயன்படுத்திய மனிதன்

A) ஹோமோசேப்பியன்ஸ்

B) நியாண்டர்தால்

C) குரோமேக்னான்ஸ்

D) ஆஸ்ட்ரலோபிதிகஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: C) குரோமேக்னான்ஸ்

(குறிப்பு: குரோமேக்னான்ஸ் – மனித வாழ்வின் தொடக்கம். நவீன மனிதன்.)

27. தவறான இணையைத் தேர்ந்தெடு.

A) ஆஸ்ட்ரலோபிதிகஸ் – 4 ல் இருந்து 2 மில்லியன் ஆண்டுகளுக்குள்

B) ஹோமோ எரக்டஸ் – 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்

C) ஹோமோ ஹெபிலிஸ் – 3.2 ல் இருந்து 2.5 மில்லியன் ஆண்டுகளுக்குள்

D) நியாண்டர்தால் – 130000 முதல் 40000 ஆண்டுகளுக்குள்

விடை மற்றும் விளக்கம்

விடை: C) ஹோமோ ஹெபிலிஸ் – 3.2 ல் இருந்து 2.5 மில்லியன் ஆண்டுகளுக்குள்

(குறிப்பு : ஹோமோ ஹேபிலிஸ் – 2.3 ல் இருந்து 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஹோமோசேப்பியன்ஸ் – 300000 ஆண்டுகளுக்கு முன்)

28. கிழக்கு ஆப்பிரிக்காவில் 50000 ஆண்டுகளுக்கு முன் மேற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஐரோப்பாவில் 40000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன்

A) ஹோமோசேப்பியன்ஸ்

B) நியாண்டர்தால்

C) குரோமேக்னான்ஸ்

D) ஆஸ்ட்ரலோபிதிகஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: C) குரோமேக்னான்ஸ்

29. _________ ஆண்டுகளுக்கு முன் நாகரிகத்தின் தோற்றம் ஏற்பட்டது.

A) 3000

B) 5000

C) 8000

D) 8500

விடை மற்றும் விளக்கம்

விடை: B) 5000

30. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

A) 460 கோடி ஆண்டுகளுக்கு முன் புவி தோற்றம்

B) 10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் நடந்தான்.

C) 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் புவி எங்கும் பரவினர்.

D) 8000 ஆண்டுகளுக்கு முன் வேளாண்மை தொடங்கியது.

விடை மற்றும் விளக்கம்

விடை: B) 10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் நடந்தான்.

(குறிப்பு: 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் நடந்தான்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!