மாநில அரசு Book Back Questions 10th Social Science Lesson 20
10th Social Science Lesson 20
20] மாநில அரசு
Book Back Questions with Answer and Do You Know Box Content
உங்களுக்குத் தெரியுமா?
தமிழகத்தில் சட்ட மன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையின் படி (234 உறுப்பினர்கள்) அமைச்சர்களின் எண்ணிக்கை 36 வரை இருக்கலாம். அதாவது 234இல் 15 விழுக்காடு.
1986இல் இயற்றப்பட்ட தமிழ்நாடு சட்ட மேலவை (நீக்கம்) மசோதா மூலம் தமிழ்நாட்டில் சட்ட மேலவை நீக்கப்பட்டது. இச்சட்டம் 1986 நவம்பர் முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது.
1862ஆம் ஆண்டு ஜீன் 26ஆம் நாளில் விக்டோரியா மகாராணி வழங்கிய காப்புரிமை கடிதத்தின் மூலம் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய மாகாணங்களில் உயர் நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவற்றில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற வளாகம் உலகிலேயே இலண்டனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய நீதித்துறை வளாகமாகும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. மாநில ஆளுநரை நியமிப்பவர்
(அ) பிரதமர்
(ஆ) முதலமைச்சர்
(இ) குடியரசுத் தலைவர்
(ஈ) தலைமை நீதிபதி
2. மாநில சபாநாயகர் ஒரு ___________
(அ) மாநிலத் தலைவர்
(ஆ) அரசின் தலைவர்
(இ) குடியரசுத் தலைவரின் முகவர்
(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
3. கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரமல்ல
(அ) சட்டமன்றம்
(ஆ) நிர்வாகம்
(இ) நீதித்துறை
(ஈ) தூதரகம்
4. ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?
(அ) குடியரசுத் தலைவர்
(ஆ) ஆளுநர்
(இ) முதலமைச்சர்
(ஈ) சட்டமன்ற சபாநாயகர்
5. ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை?
(அ) முதலமைச்சர்
(ஆ) அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் தலைவர்
(இ) மாநில தலைமை வழக்குரைஞர்
(ஈ) உயர் நீதிமன்ற நீதிபதிகள்
6. அமைச்சரவையின் தலைவர்
(அ) முதலமைச்சர்
(ஆ) ஆளுநர்
(இ) சபாநாயகர்
(ஈ) பிரதம அமைச்சர்
7. மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது
(அ) 25 வயது
(ஆ) 21 வயது
(இ) 30 வயது
(ஈ) 35 வயது
8. கீழ்க்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை?
(அ) ஆந்திரப் பிரதேசம்
(ஆ) தெலுங்கானா
(இ) தமிழ்நாடு
(ஈ) உத்தரப் பிரதேசம்
9. இந்தியாவில் முதன்முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்
(அ) கொல்கத்தா, மும்பை, சென்னை
(ஆ) டெல்லி மற்றும் கொல்கத்தா
(இ) டெல்லி, கொல்கத்தா, சென்னை
(ஈ) கொல்கத்தா, சென்னை, டெல்லி
10. கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர் நீதிமன்றத்தைப் பெற்றுள்ளன?
(அ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்
(ஆ) கேரளா மற்றும் ஆந்திரப்பிரதேசம்
(இ) பஞ்சாப் மற்றும் ஹரியானா
(ஈ) மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை _____________ இடம் கொடுக்கிறார்.
2. சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) __________ ஆல் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
3. ____________ மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக யெசல்படுகிறார்
4. அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ____________ஆல் மட்டுமே பணிநீக்கம் செய்ய முடியும்.
பொருத்துக:
1. ஆளுநர் – அரசாங்கத்தின் தலைவர்
2. முதலமைச்சர் – மாநில அரசின் தலைவர்
3. அமைச்சரவை – தீர்ப்பாயங்கள்
4. மேலவை உறுப்பினர் – சட்டமன்றத்திற்குப் பொறுப்பானவர்கள்
5. ஆயுதப் படையினர் – மானியங்களுக்கு வாக்களிக்க முடியாது
பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:
1. கூற்று: மாநில சட்டமன்றத்திற்கு சட்ட அதிகார வரம்பு உண்டு.
காரணம்: குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே மாநிலப் பட்டியலிலுள்ள சில மசோதாக்களைச் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யலாம்.
(அ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
(ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
(இ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்
(ஈ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)
1. குடியரசுத் தலைவர் 2. மேற்கண்ட எதுவுமில்லை 3. தூதரகம் 4. ஆளுநர்
5. உயர்நீதிமன்ற நீதிபதிகள் 6. முதலமைச்சர் 7. (30 வது) 8. தமிழ்நாடு
9. கல்கத்தா, பம்பாய், சென்னை 10. பஞ்சாப் மற்றும் ஹரியானா
கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)
1. குடியரசுத் தலைவர் 2. மக்கள் 3. ஆளுநர் 4. குடியரசுத் தலைவர்
பொருத்துக: (விடைகள்)
1. ஆளுநர் – மாநில அரசின் தலைவர்
2. முதலமைச்சர் – அரசாங்கத்தின் தலைவர்
3. அமைச்சரவை – சட்டமன்றத்திற்குப் பொறுப்பானவர்கள்
4. மேலவை உறுப்பினர் – மானியங்களுக்கு வாக்களிக்க முடியாது
5. ஆயுதப் படையினர் – தீர்ப்பாயங்கள்
பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:
1. கூற்று சரி ஆனால் காரணம் தவறு