Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

வங்கியியல் 12th Economics Lesson 6 Questions in Tamil

12th Economics Lesson 6 Questions in Tamil

6] வங்கியியல்

1) நவீன வாணிபத்தின் முதுகெலும்பாக இருப்பது?

A) வங்கித்துறை

B) விவசாயத்துறை

C) சுரங்கத்துறை

D) நீதித்துறை

(குறிப்பு – பொருளாதார நடவடிக்கைகளான வியாபாரம், வாணிபம், விவசாயம் ஆகியவற்றிற்கு தேவைப்படும் நிதி உயிர்வாழ இரத்தம் தேவைப்படுவதை போன்றது. வங்கிகள் வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல், கடன்களை வழங்குதல் ஆகிய அடிப்படை நிதிநடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.)

2) உலகின் முதல் மைய வங்கி எந்த நாட்டில் தொடங்கப்பட்டது?

A) ஸ்வீடன்

B) ஜெர்மனி

C) பிரான்ஸ்

D) இங்கிலாந்து

(குறிப்பு – 1656ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு தனியார் வங்கியில் இருந்து தோன்றியதுதான் உலகின் முதல் மைய வங்கியான ஸ்வீடன் நாட்டு ரிக்ஸ் வங்கி ஆகும்.)

3) ரிக்ஸ் வங்கி எந்த ஆண்டு பணத்தை வெளியிடுவதற்கான முழு உரிமையைப் பெற்றது?

A) 1893 ஆம் ஆண்டு

B) 1895 ஆம் ஆண்டு

C) 1897 ஆம் ஆண்டு

D) 1899 ஆம் ஆண்டு

(குறிப்பு – 1897ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டு மைய வங்கியான ரிக்ஸ் வங்கி பணத்தை வெளியிடுவதற்கான முழு உரிமையைப் பெற்றது.)

4) வங்கி கலையின் அடிப்படையில் படத்தை வெளியிட்ட முதல் மைய வங்கி எது?

A) இங்கிலாந்து வங்கி

B) ஜெர்மனி வங்கி

C) ஸ்வீடன் வங்கி

D) இவை ஏதும் இல்லை

(குறிப்பு – வங்கி கலையின் அடிப்படையில் 1864 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு பணத்தை வெளியிட்ட முதல் மைய வங்கி இங்கிலாந்து வங்கியாகும்.(BANK OF ENGLAND))

5) 1920ஆம் ஆண்டு, பன்னாட்டு நிதியம் மாநாடு எங்கு கூட்டப்பட்டது?

A) சான்பிரான்சிஸ்கோ

B) ரோம்

C) பிரஸ்ஸல்ஸ்

D) பாரிஸ்

(குறிப்பு – 1920ஆம் ஆண்டு, பிரஸ்ஸல்ஸ் நகரில் கூட்டப்பட்ட பன்னாட்டு நிதியம் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 1921 முதல் 1954 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் பெரும்பாலான நாடுகளில் மைய வங்கி அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.)

6) பொருத்துக

I. தென்னாப்பிரிக்க ரிசர்வ் வங்கி – a) 1950

II. சீன மைய வங்கி – b) 1934

III. நியூசிலாந்து ரிசர்வ் வங்கி – c) 1928

IV. சிலோன் மைய வங்கி – d) 1921

A) I-d, II-c, III-b, IV-a

B) I-b, II-a, III-d, IV-c

C) I-c, II-d, III-b, IV-a

D) I-a, II-c, III-b, IV-d

(குறிப்பு – 1921ம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில், பெரும்பாலான நாடுகளில் மைய வங்கி அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. தென்ஆப்பிரிக்க ரிசர்வ் வங்கி(1921), சீன மைய வங்கி (1928), நியூசிலாந்து ரிசர்வ் வங்கி (1934), சிலோன் மைய வங்கி(1950), இஸ்ரேல் மைய வங்கி(1954) போன்றவை அந்தந்த நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட மைய வங்கிகளில் சில ஆகும்.)

7) இந்தியாவின் முதல் வங்கியான, ஹிந்துஸ்தான் வங்கி எப்போது தொடங்கப்பட்டது?

A) 1750 ஆம் ஆண்டு

B) 1760 ஆம் ஆண்டு

C) 1770 ஆம் ஆண்டு

D) 1780 ஆம் ஆண்டு

(குறிப்பு – ஹிந்துஸ்தான் வங்கி (Bank of Hindhusthan) இந்தியாவின் முதல் வங்கி ஆகும். இது ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலனி ஆட்சியின் போது தொடங்கப்பட்டது(1770ஆம் ஆண்டு). இந்தியாவில் உள்ள வங்கிகள் அமைப்பு பிரசிடென்சி வங்கிகளால் கட்டுப்படுத்தப்பட்டும் ஆதிக்கம் செலுத்தப்பட்டும் வந்தது.)

8) கீழ்க்காணும் வங்கிகளுள் எது பிரசிடென்சி வங்கி அல்ல?

A) வங்காள வங்கி

B) மும்பை வங்கி

C) சென்னை வங்கி

D) அலகாபாத் வங்கி

(குறிப்பு – ஆங்கிலேயர் காலத்தில் மூன்று பிரசிடென்சி வங்கிகள் இருந்தன அவை வங்காள வங்கி(Bank of Bengal),மும்பை வங்கி (Bank of Bombay)மற்றும் சென்னை வங்கி (Bank of Madras)ஆகும்.)

9) பொருத்துக

I. ஹிந்துஸ்தான் வங்கி – a) 1840

II. வங்காள வங்கி – b) 1809

III. மும்பை வங்கி – c) 1770

IV. சென்னை வங்கி – d) 1843

A) I-c, II-b, III-a, IV-d

B) I-b, II-a, III-d, IV-c

C) I-c, II-d, III-b, IV-a

D) I-a, II-c, III-b, IV-d

(குறிப்பு – ஹிந்துஸ்தான் வங்கி (Bank of Hindhusthan) இந்தியாவின் முதல் வங்கி ஆகும். இது ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலனி ஆட்சியின் போது தொடங்கப்பட்டது.ஆங்கிலேயர் காலத்தில் மூன்று பிரசிடென்சி வங்கிகள் இருந்தன. அவை வங்காள வங்கி(Bank of Bengal),மும்பை வங்கி (Bank of Bombay)மற்றும் சென்னை வங்கி (Bank of Madras)ஆகும்.)

10) இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

A) 1933 இல்

B) 1935 இல்

C) 1936 இல்

D) 1937 இல்

(குறிப்பு – இந்திய ரிசர்வ் வங்கி 1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India). 1935இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும். 1949இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும். நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, இவ்வங்கி நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்கியும் வருகிறது)

11) இந்தியாவின் பிரசிடென்சி வங்கிகள் எந்த ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்டன?

A) 1921 ஆம் ஆண்டு

B) 1922 ஆம் ஆண்டு

C) 1923 ஆம் ஆண்டு

D) 1924 ஆம் ஆண்டு

(குறிப்பு – ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் மூன்று பிரசிடென்சி வங்கிகள் இருந்தன. அவை வங்காள வங்கி, மும்பை வங்கி மற்றும் சென்னை வங்கி என்பன ஆகும். இந்த மூன்று பிரசிடென்சி வங்கிகளும் 1921 ஆம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்டது.)

12) 1921ஆம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட பிரசிடென்சி வங்கிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

A) இந்திய இம்பீரியல் வங்கி

B) இந்திய வங்கி

C) இந்திய ஸ்டேட் வங்கி

D) இந்திய யூனியன் வங்கி

(குறிப்பு – ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் மூன்று பிரசிடென்சி வங்கிகள் இருந்தன. அவை வங்காள வங்கி, மும்பை வங்கி மற்றும் சென்னை வங்கி என்பன ஆகும். இந்த 1957ஆம் ஆண்டுமூன்று பிரசிடென்சி வங்கிகளும் 1921 ஆம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்டது. அவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட வங்கி, இந்திய இம்பீரியல் வங்கி (Imperial Bank of India)என்று அழைக்கப்பட்டது.)

13) இந்திய இம்பீரியல் வங்கி இந்திய ஸ்டேட் வங்கி என எந்த ஆண்டு மாற்றப்பட்டது?

A) 1951 ஆம் ஆண்டு

B) 1953 ஆம் ஆண்டு

C) 1955 ஆம் ஆண்டு

D) 1957 ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்திய இம்பீரியல் வங்கி(Imperial Bank of India), 1955 ஆம் ஆண்டு இந்திய ஸ்டேட் வங்கி(State Bank of India) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.)

14) வணிக வங்கிகள் (Commercial Banks) குறித்த கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – வணிக வங்கிகள் மக்களிடமிருந்து வைப்புகளை பெற்று பேர் அளவில் உற்பத்தி செய்வோர், பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் அளிக்கும் ஒரு நிதி அமைப்பு ஆகும்.

கூற்று 2 – நீர்மை தன்மையை தக்கவைக்கும் பொருட்டு வணிக வங்கிகள் பெரும்பாலும் நீண்ட கால கடன்களை அளிப்பதில்லை.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – வணிக வங்கிகள் மக்களிடமிருந்து வைப்புகளை பெற்று பேர் அளவில் உற்பத்தி செய்வோர், பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் அளிக்கும் ஒரு நிதி அமைப்பு ஆகும்.நீர்மை தன்மையை தக்கவைக்கும் பொருட்டு வணிக வங்கிகள் பெரும்பாலும் நீண்ட கால கடன்களை அளிப்பதில்லை. வணிக வங்கியின் பணிகள் ஆவன முதன்மைப் பணி, இரண்டாம் நிலைப் பணி மற்றும் இதர பணிகள் என மூன்று வகைப்படுத்தப்படுகிறது.)

15) வணிக வங்கிகள் குறித்த கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – வணிக வங்கிகள் லாப நோக்கம் உடையவை

கூற்று 2 – வணிக வங்கிகளின் பணிகள், முதன்மை பணிகள் மற்றும் இரண்டாம் நிலை பணிகள் என இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

கூற்று 3 – வணிக வங்கிகள் வைப்புகளைப் பெற்று முதலீட்டுக்கான கடன்களை அளிக்கின்றன.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – வணிக வங்கிகள் லாப நோக்கம் உடையவை.வணிக வங்கிகளின் பணிகள், முதன்மை பணிகள் மற்றும் இரண்டாம் நிலை பணிகள் என இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.வணிக வங்கிகள் வைப்புகளைப் பெற்று முதலீட்டுக்கான கடன்களை அளிக்கின்றன).

16) வணிக வங்கிகளின் முதன்மைப் பணி ஆவன?

I. வைப்புகளை பெறுதல்

II. கடன் வழங்குதல்

III. நிதி இடமாற்றுதல்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – வங்கிகளின் முதன்மை பணி ஆவன வைப்புகளை பெறுதல் மற்றும் கடன்கள் வழங்குதல் ஆகும். வைப்புக்களை ஏற்றுக்கொள்ளுதல் என்பது கேட்பு வைப்புகள்(Demanding Deposits), கால வைப்புகள் (Time Deposits) என இருவகைப்படுகிறது.)

17) வணிக வங்கியின் இரண்டாம் நிலை பணிகள் அல்லாதது எது?

A) முகமை பணிகள்

B) பொது பயன்பாட்டு பணிகள்

C) நிதி இடமாற்றுதல்

D) கடன் வழங்குதல்

(குறிப்பு – வணிக வங்கிகளின் இரண்டாம் நிலை பணிகளாக கருதப்படுபவை முகமைப்பணிகள், பொது பயன்பாட்டு பணிகள், நிதிகளை இடமாற்றுதல் மற்றும் கடன் உற்பத்தி செய்தல் என்பன ஆகும்.)

18) வணிக வங்கிகளில் கேட்பு வைப்புகள் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – வங்கிகளில் வைப்புகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர் முன்னறிவிப்பின்றி எப்போது வேண்டுமானாலும் பணத்தை தனது கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவது கேட்பு வைப்புகள் ஆகும்.

கூற்று 2 – பணம் பெறும் படிவம், காசோலை அல்லது தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் மூலம் எப்போது பணம் தேவைப்படுகிறதோ அப்போது தனது பணத்தை வைப்புகளில் இருந்து எடுத்துக்கொள்ளலாம்.

கூற்று 3 – இந்த வகை கணக்குகள் சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு என இருவகையில் நடைமுறையில் உள்ளது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – கேட்பு வைப்புகள் (Demanding Deposits) என்பது வங்கிகளில் வைப்புகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர் முன்னறிவிப்பின்றி எப்போது வேண்டுமானாலும் பணத்தை தனது கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவது கேட்பு வைப்புகள் ஆகும்.பணம் பெறும் படிவம்(Challans), காசோலை (Cheque)அல்லது தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (ATM) மூலம் எப்போது பணம் தேவைப்படுகிறதோ அப்போது தனது பணத்தை வைப்புகளில் இருந்து எடுத்துக்கொள்ளலாம். இந்த வகை கணக்குகள் சேமிப்பு வங்கி கணக்கு (Savings Accounts) மற்றும் நடப்புக் கணக்கு (Current Accounts) என இருவகையில் நடைமுறையில் உள்ளது.)

19) கீழ்க்கண்டவற்றுள் எது கால வைப்புகள் அல்ல?

I. நடப்பு கணக்கு

II. நிலை வைப்பு

III. தொடர் வைப்பு

A) I மட்டும்

B) II மட்டும்

C) III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – கால வைப்புகள் (Time Deposits) என்பது ஒரு குறிப்பிட்ட காலவரையறை வங்கிகளிடமிருந்து மீள பெறப்படாமல் இருக்கும் வைப்புகள் ஆகும். வங்கிகள் காலவைப்புகளுக்கு கூடுதலான வட்டியை வழங்குகின்றன. நிலை வைப்பு (Fixed Deposit ) மற்றும் தொடர் வைப்பு (Recurring Deposit) ஆகியன கால வைப்பு வகைகளில் முக்கிய வகைகள் ஆகும்.)

20) வணிக வங்கிகள் கீழ்காணும் எந்த முறைகளில் கடன் வழங்குகின்றன?

I. ரொக்க கடன்

II. மாற்றுச் சீட்டு தள்ளுபடி

III. மிகைப்பற்று

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – கடன் வழங்குதல் (Lending Loans) என்பது வணிக வங்கிகளின் முதன்மை பணிகளில் ஒன்றாகும். வணிக வங்கிகள் தனி நபர்கள் மற்றும் வாணிபத்திற்காக கடன்களை வழங்குகின்றன. வணிக வங்கிகள் ரொக்க கடன், மாற்றுச்சீட்டு தள்ளுபடி, மிகைப்பற்று ஆகிய முறைகளில் கடன்களை வழங்குகின்றன.)

21) கீழ்கண்டவற்றுள் எது வணிக வங்கிகளின் முகமை பணி அல்லாதது ஆகும்?

A) காசோலைகளை பணமாக்குதல்

B) செலவுகளை செலுத்துதல்

C) வருமானத்தை பெறுதல்

D) பயண காசோலைகளை வழங்குதல்

(குறிப்பு – வங்கி வாடிக்கையாளர்களுக்கு முகவராக (Agent) இருந்து செய்யும் பணிகள், முகமை பணிகள் என அழைக்கப்படுகிறது.அவை, காசோலைகளை பணமாக்குதல், வருமானத்தை பெறுதல் மற்றும் செலவுகளை செலுத்துதல் என்பன ஆகும்.)

22) கீழ்க்கண்டவற்றுள் எது வணிக வங்கிகளின் முகமை பணி ஆகும்?

I. வாடிக்கையாளர்களுக்காக அவர்களுக்கு வரும் காசோலைகள், மாற்று சீட்டுகள் போன்றவற்றை தீர்வகத்தின் மூலம் வசூல் செய்து கொடுப்பது.

II. வாடிக்கையாளர்களுக்கு வர வேண்டிய லாப ஈவு, ஓய்வூதியம், சம்பளம், வாடகை, வட்டி ஆகியவற்றை வசூலித்து தருதல்.

III. தொலைபேசி கட்டணம், காப்பீட்டு பிரிமியம், கல்வி கட்டணம், வாடகை செலுத்துதல் போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு செய்து தருதல்.

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு முகவராக இருந்து செய்யும் பணிகள், முதன்மைப் பணிகள் என அழைக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்காக அவர்களுக்கு வரும் காசோலைகள், மாற்று சீட்டுகள் போன்றவற்றை தீர்வகத்தின் மூலம் வசூல் செய்து கொடுப்பது என்பன காசோலைகளை பணமாக்குதல் பணி ஆகும்.வாடிக்கையாளர்களுக்கு வர வேண்டிய லாப ஈவு, ஓய்வூதியம், சம்பளம், வாடகை, வட்டி ஆகியவற்றை வசூலித்து தருதல் மற்றும் தொலைபேசி கட்டணம், காப்பீட்டு பிரிமியம், கல்வி கட்டணம், வாடகை செலுத்துதல் போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு செய்து தருதல் போன்றவைகள் வணிக வங்கிகளின் முகமை பணிகள் ஆகும்,. )

23) வணிக வங்கிகளின் பொது பயன்பாட்டு பணிகள் அல்லாதது எது?

A) பாதுகாப்பு பெட்டக வசதி செய்து தருதல்

B) வாடிக்கையாளர்களின் செலவுகளை செலுத்துதல்.

C) பயண காசோலைகளை வழங்குதல்

D) அன்னிய செலவாணிகளை கையாளுதல்.

(குறிப்பு – பொதுப் பயன்பாட்டு பணிகள் என்பது வங்கிகள் தன் வாடிக்கையாளர்களுக்காக சில கூடுதல் பயன்பாடுகளை உருவாக்கும் நோக்கில் செய்யும் பணிகள் ஆகும். அவை பாதுகாப்பு பெட்டக வசதி செய்து தருதல், பயண காசோலைகளை வழங்குதல், அன்னிய செலாவணியை கையாளுதல் போன்றவை ஆகும்)

24) கீழ்கண்டவற்றுள் எது வங்கிகளின் பொது பயன்பாட்டு பணிகள் ஆகும்?

I. கடன் உறுதி அளிப்பு கடிதம் அளித்தல்

II. பத்திரங்களுக்கு எழுத்து உறுதி அளித்தல்

III. மின்னணு வங்கி செயல்பாடு

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – கடன் உறுதி அளிப்பு கடிதம் (Letter of Credit ) என்பது வாடிக்கையாளரின் கடன் நம்பகத்தன்மையை சான்று அளிக்கும் விதமாக வங்கிகள் வழங்குவது ஆகும். வணிக வங்கிகள் பத்திரங்களுக்கு எழுத்துறுதி (Under writing of Securities )வழங்கும் பணியை செய்கிறது. பொதுமக்கள் வங்கிகளின் மீது முழு நம்பிக்கை வைத்து இருப்பதால், அவைகள் எழுதி வழங்கிய பத்திரங்களை வாங்குவதில் தயக்கம் ஏதும் இருக்காது.)

25) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. வங்கி ஒருவருக்கு ஐந்து லட்சம் கடன் வழங்கும்போது கடன் பெறுபவர் பெயரில் உள்ள கேட்பு வைப்பு கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

II. இங்கு பணம் ரொக்கமாக செலுத்தப்படுவதில்லை. எனவே அதிகமாக பணம் அச்சடிக்கபடாமல் பண அளிப்பு அதிகரிக்கின்றது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – வணிக வங்கியின் முக்கிய பணிகளில் ஒன்று பணப்புழக்கத்தை அதிகரிப்பதன் மூலம் பண அளிப்பை அதிகரித்தல் ஆகும். உதாரணமாக வங்கி ஒருவருக்கு 5 லட்சம் கடன் வழங்கும்போது கடன் பெறுபவர் பெயரில் உள்ள கேட்பு கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இங்கே பணம் ரொக்கமாக செலுத்தவில்லை என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே அதிகமாக பணம் அச்சடிக்கபடாமல் பண அளிப்பு அதிகரிக்கின்றது.)

26) கடன் உருவாக்கம் என்பது?

I. கடன்களை அதிகரித்தல்

II. முன் பண அளிப்பை அதிகரித்தல்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – கடன் உருவாக்கம் வணிக வங்கிகளின் பணிகளில் மிகச்சிறந்த ஒன்றாகும். இது பண அளிப்பினை அதிகரிக்கும் பணியை ஒட்டி அமைந்ததாகும். கடன் உருவாக்கம் என்பது கடன்களையும், முன்பண அளிப்பையும் அதிகரிக்கும் ஒரு செயலாகும். மொத்த பண அளிப்பில் கடன் பணத்தின் அளவினை அதிகரிப்பது கடன் உருவாக்கம் ஆகும்.)

27) வணிக வங்கிகள் கீழ்க்காணும் எந்த துறைகளின் புள்ளிவிபரங்களை வெளியிடுகின்றன?

I. வணிகம்

II. தொழில்

III. விவசாயம்

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – இந்திய ரிசர்வ் வங்கியை போன்றே வணிக வங்கிகளும் வணிகம், தொழில், விவசாயம், நிதி போன்ற அடிப்படை துறைகளின் புள்ளி விபரங்களை வெளியிடுகின்றன. இவைகளின் அடிப்படையில் தனது வாடிக்கையாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தங்களது ஆலோசனைகளை வணிக வங்கிகள் வழங்குகின்றது.)

28) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – வங்கி கடன் என்பது வாடிக்கையாளர்களின் வைப்புகளிலிருந்து தேவைப்படுவோருக்கு அவர்களின் விண்ணப்பம் மற்றும் ஒப்பந்தத்தின் பேரில் கடன் மற்றும் முன்பணம் கொடுப்பதாகும்.

கூற்று 2 – வங்கிகள் வழங்கும் கடன்கள் பொருளாதாரத்தில் நிகர அளிப்பினை அதிகப்படுத்தும்.

கூற்று 3 – வங்கிகளின் கடன் அளிப்பு பணத்தை உருவாக்கும்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுக்களும் சரி

(குறிப்பு – வங்கிகளின் கடன் உருவாக்கம் என்பது ஒரு முக்கிய செயலாகும். வங்கி கடன் என்பது வாடிக்கையாளர்களின் வைப்புகளிலிருந்து தேவைப்படுவோருக்கு அவர்களின் விண்ணப்பம் மற்றும் ஒப்பந்தத்தின் பேரில் கடன் மற்றும் பணம் கொடுப்பது ஆகும். வங்கிகள் வழங்கும் கடன் பொருளாதாரத்தில் பண அளிப்பினை அதிகப்படுத்தும். சுருக்கமாக சொன்னால் வங்கிகளின் கடன் அளிப்பு பணத்தை உருவாக்கும். அதே கடன் வாங்கியோரால் திருப்பி செலுத்தப்படும் பொழுது கூடுதலாக உருவான பணம் மறைந்து போகும்.)

29) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – வணிக வங்கிகள் கேட்பு வைப்புகளின் அளவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும்.

கூற்று 2 – வணிக வங்கிகளால் அதிக அளவு கடன்களை அதிகரிக்க முடியும்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – வணிக வங்கிகள் கேட்பு வைப்புகளின் அளவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். அதிக அளவு கடன்களை அதிகரிக்க முடியும். வணிக வங்கிகள் தங்களின் கடன் அல்லது முன்பணம் அளிக்கும் முறை மூலமாக அல்லது சொத்துக்களை வாங்கும் தன்மைகள் மூலமாகவும் தேவை வைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும்.)

30) ஒரு வாடிக்கையாளர் தனது ரொக்கப் பணத்தை வங்கியில் செலுத்துகிறார் எனில் அவரது பெயரில் பற்று வைக்கப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

I. முதல்நிலை வைப்புகள்

II. செயல்படும் வைப்புகள்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு வாடிக்கையாளர் தனது ரொக்கப் பணத்தை வங்கியில் செலுத்துகிறார் எனில் அவரது பெயரில் பற்று வைக்கப்படும். இது முதல் நிலை வைப்பு (Primary Deposit ) அல்லது செயல்படா வைப்பு (Passive Deposit ) என்று அழைக்கப்படுகிறது).

31) ஒருவருக்கு வழங்கப்படும் கடன், ரொக்கமாக கையில் கொடுக்கப்படாமல் அவர் கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு செலுத்தப்படும் தொகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

I. வைப்பு

II. செயல்படும் வைப்பு

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒருவருக்கு வழங்கப்படும் கடன் கையில் ரொக்கமாகக் கொடுக்கப்படாமல் அவர் கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு செலுத்தப்படும் தொகை, பெறப்படும் வைப்பு (Derived deposits) அல்லது செயல்படும் வைப்பு(Active Deposits) என அழைக்கப்படுகிறது.)

32) கீழ்க்காணும் எதன் அடிப்படையில் வங்கிகள் கடன்களையும், முன்பணம்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது?

A) வயது

B) முதன்மை வைப்பு

C) வருமானம்

D) அதிகாரம்

(குறிப்பு – முதன்மை வைப்புகளை கொண்டு வங்கிகள் கடன்களும், முன்பணங்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. இதற்கான முயற்சிகளை வாடிக்கையாளர்களை செய்கின்றனர். இதில் வங்கிகளின் பங்கு செயலற்றது. எனவே இந்த வைப்புகள் செயலற்ற வைப்புகள் என அழைக்கப்படுகிறது.)

33) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – வங்கிகள் ரொக்க கையிருப்பு விகிதத்தை விட அதிகமாக ரொக்கப் பணம் வைத்திருக்க மாட்டார்கள்.

கூற்று 2 – வங்கியிலிருந்து எல்லா மக்களும் ஒரே நேரத்தில் பணத்தை எடுக்க மாட்டார்கள். அதனால் குறைந்த பட்ச ரொக்க கையிருப்பு காலி ஆகி விடாது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – கடன் உருவாக்கம் என்பது கடன் மற்றும் முன் பண பெருக்கத்தினை குறிக்கும். வழங்கப்படும் ஒவ்வொரு கடனும் புதியவைப்பினை உருவாக்குகின்றது. முதல்நிலை வைப்புகளை பெறும் பொழுது அப்பணம் முழுமையுமே வணிக வங்கிகள் கடனாக அளித்திட முடியாது. மைய வங்கி அறிவுறுத்தி இருக்கும் குறைந்த பட்ச விகித அளவுக்கு குறையாமல் வணிக வங்கிகள் ரொக்கயிருப்பாக வைத்திருக்க வேண்டும்).

34) ஒரு வங்கியின் மொத்த ரொக்க இருப்பு ரூ 1 லட்சம் எனில், மைய வங்கி அறிவுறுத்தலின்படி 20 சதவிகித குறைந்தபட்ச ரொக்க இருப்பு போக கடன் கொடுக்க தயார் நிலையில் இருக்கும் பணத்தின் மதிப்பு என்ன?

A) ரூ 50 ஆயிரம்

B) ரூ 65 ஆயிரம்

C) ரூ 80 ஆயிரம்

D) ரூ 90 ஆயிரம்

(குறிப்பு – ஒரு வங்கியின் மொத்த ரொக்க இருப்பு தொகை ஆனது ரூ 1 லட்சம் என்றால், மைய வங்கியின் அறிவுறுத்தலின்படி 20 சதவிகித குறைந்தபட்ச ரொக்க இருப்பு ரூ 20 ஆயிரமாகும். எனவே அந்த வங்கியின் கடன் கொடுக்க தயாராக உள்ள பண மதிப்பானது ரூ 80 ஆயிரம் ஆகும். அதற்குமேல் அந்த வங்கியில் கடன் கொடுக்க முடியாது.)

35) கீழ்க்கண்டவற்றுள் எதனில் வணிக வங்கிகளின் பங்கு உள்ளது?

I. மூலதனத் திரட்சி

II. கடன் உருவாக்கம்

III. கடன்களை பணமாக மாற்றுதல்

IV. அரசுக்கு நிதி அளித்தல்

V. வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.

A) I, II, III இல் மட்டும்

B) II, III, IV இல் மட்டும்

C) III, IV, V இல் மட்டும்

D) இவை அனைத்திலும்

(குறிப்பு – வணிக வங்கிகளின் பங்கு கீழ்க்கண்டவற்றுள் உள்ளது. மூலதனத் திரட்சி, கடன் உருவாக்கம், நிதியை முறைப்படுத்துதல், சரியான வகை தொழில்களை ஊக்கப்படுத்துதல், கடன்களை பணமாக மாற்றுதல், அரசுக்கு நிதி அளித்தல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துதல்.)

36) கீழ்க்கண்டவற்றுள் எது மூலதனத் திரட்சி என்பதன் சரியான பொருளாகும்?

I. வணிக வங்கிகள் பொது மக்களின் சேமிப்புகளை வைப்புகளாக திரட்டி அவைகளை உற்பத்தி நோக்கத்திற்காக கடன்களாக வழங்குதல்.

II. அதிக உற்பத்தித் திறன் கொண்ட துறைகளுக்கு கூடுதலான முதலீட்டிற்கான கடனை வழங்குதல்.

III. அரசுக்குத் தேவையான நிதியை வழங்குதல்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததான மூலதன திரட்சியில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வங்கியானது தனது வங்கி பிரிவுகளின் கீழ் பரவலாக செயல்பட்டு, பொது மக்களின் சேமிப்பினை வைப்புகளாக திரட்டி அவைகளை உற்பத்தி நோக்கத்திற்காக கடன்களாக வழங்குகின்றன. இதுவே மூலதனத் திரட்சி என அழைக்கப்படுகிறது.)

37) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – வங்கிகள் உற்பத்தி நோக்கில் பணத்தினை முதலீடு செய்கிறது.

கூற்று 2 – வங்கிகள் ஒரு துறையில் செய்யப்பட்ட முதலீட்டின் உற்பத்தி திறன் குறைவாக இருந்தால் அத்துறைக்கு வழங்கப்படும் முதலீட்டு கடனை குறைத்துக் கொண்டு, அதிக உற்பத்தித் திறன் கொண்ட துறைகளுக்கு கூடுதலான முதலீட்டுக்கான கடனை மடைமாற்றம் செய்கிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – வங்கிகள் உற்பத்தி நோக்கில் பணத்தினை முதலீடு செய்கிறது. வெறுமனே வங்கிகள் மூலதன ஆக்கத்தை மட்டும் செய்யவில்லை. வங்கிகள் ஒரு துறையில் செய்யப்பட்ட முதலீட்டின் உற்பத்தி திறன் குறைவாக இருந்தால் அத்துறைக்கு வழங்கப்படும் முதலீட்டு கடனை குறைத்துக் கொண்டு, அதிக உற்பத்தித் திறன் கொண்ட துறைகளுக்கு கூடுதலான முதலீட்டுக்கான கடனை மடைமாற்றம் செய்கிறது. இதனால் பொருளாதாரத்தில் முதலீட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி திறன் கூடுகிறது.)

38) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – வங்கிகள் சரியான தொழிலையும் சரியான நபர்களையும் தேர்ந்தெடுத்து கடன் வழங்குகிறது.

கூற்று 2 – வங்கிகளால் தொழில் பெருக்கம் ஏற்படுகிறது.

கூற்று 3 – வங்கிகளால் தேசிய வருவாய் உயர்கிறது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – வங்கிகள் சரியான தொழிலையும் சரியான நபர்களை தேர்ந்தெடுத்து கடன் வழங்குவதால் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் உதவுகின்றன. எந்த பொருளுக்கு அதிக தேவை உள்ளதோ அந்த பொருளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு கடன்களையும், முன்பணங்களையும் வழங்குகிறது. ஆகவே உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தி முறைகளில் நவீனத்துவத்தை புகுத்தி நாட்டின் தேசிய வருவாய் உயர்வதற்கு வழி செய்கின்றனர்.)

39) இந்திய ரிசர்வ் வங்கி 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் தனது உபரிநிதியிலிருந்து மத்திய அரசுக்கு எத்தனை ஆயிரம் கோடி வழங்கியுள்ளது?

A) ரூ 62,000 கோடி

B) ரூ 64,000 கோடி

C) ரூ 66,000 கோடி

D) ரூ 68,000 கோடி

(குறிப்பு – குறை வளர்ச்சி நாடுகளில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் பணியை அரசு மேற்கொள்கிறது. இதற்கு அதிக அளவு நிதி அரசிற்கு தேவைப்படுகிறது. வணிக வங்கிகள் அரசிற்கு நீண்ட கால கடன்களை மற்றும் குறுகிய கால கடன்களை அரசு பத்திரங்களை ஏற்பதன் வாயிலாக வழங்குகிறது.இந்திய ரிசர்வ் வங்கி 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் தனது உபரிநிதியிலிருந்து மத்திய அரசுக்கு ரூ 68,000 கோடி வழங்கியுள்ளது.)

40) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – வங்கிகள் தேசியமயமாக்கல் க்கு பின்னர் வங்கித்துறை பெருமளவு வளர்ந்துள்ளது.

கூற்று 2 – நிறைய எண்ணிக்கையில் வங்கிகிளைகள் திறக்கப்பட்டு கடன் பெருக்கத்தை செய்வதால் வேலைவாய்ப்புகள் உருவாகிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அண்மைக்காலமாக வணிக வங்கிகள் தொழில் முனைவினை ஊக்கப்படுத்தி வருகிறது. தொழில் முனைவு உருவாக்குவது மிகவும் சிக்கலான ஒரு நடைமுறை ஆகும். திட்ட எண்ணங்கள் உருவாகுவது, கண்டறிந்த திட்டங்களில் உள்ளூர் சூழ்நிலையுடன் ஒத்துப்போகும் சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது, நன்கு தயாரிக்கப்பட்ட திட்டத்தை மேற்கொள்ள தொழில்முனைவோரை ஊக்கப்படுத்துவது, மற்றும் தொழில்நுட்ப மேலாண்மை தொடர்பான ஆலோசனைகளை வழங்குவது என்ற தொழில்முனைவு மேம்பாட்டு நிலைகளாகும். இவை போன்ற செயல்களால் வங்கிகள் வேலை வாய்ப்பினை உருவாக்குகின்றன.)

41) வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ஒரு வங்கி அல்லாத நிதி நிறுவனம் என்பது ஒரு முழு வங்கிக்கான உரிமம் கொண்டதாகும்.

கூற்று 2 – ஒரு வங்கி அல்லாத நிதி நிறுவனம் என்பது மைய வங்கியால் கண்காணிக்கப்படுகிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – ஒரு வங்கி அல்லாத நிதி நிறுவனம் ( Non banking Institution – NBFI) அல்லது வங்கியல்லா நிதி நிறுமம் (Non banking Financial Company – NBFC) என்பது ஒரு நிதி நிறுவனம் ஆகும். அது முழு வங்கிக்கான உரிமம் கொண்டதும் அல்ல மற்றும் மைய வங்கியால் கண்காணிக்கப்படுவதும் அல்ல.)

42) ஒரு வங்கி எல்லா நிதி நிறுவனம் என்பது எத்தனை வகைப்படும்?

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

(குறிப்பு – வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் முழுமையான வங்கி பணிகளை செய்யாமல் மற்ற நிதி பரிமாற்றங்களை மேற்கொள்கிறது. அவைகள் வைப்புகளை பெற்றுக் கொண்டு கடன்களை வழங்குகின்றது. மக்களின் சேமிப்பை திரட்டி முதலீட்டு நடவடிக்கைகளுக்கு நிதி உதவி அளிக்கின்றது. ஒரு வங்கியல்லாத நிதி நிறுவனம் இருவகைப்படும்.)

43) ஒரு வங்கியல்லாத நிதி நிறுவனத்தின் இரண்டாம் வகைகளுள் அல்லாதது கீழ்கண்டவற்றுள் எது?

A) நிதி நிறுவனங்கள்

B) நிதி கழகங்கள்

C) பங்குசந்தைகள்

D) முதலீட்டு அமைப்புகள்

(குறிப்பு – ஒரு வங்கியல்லாத நிதி நிறுவனம் இருவகைப்படும். பங்குச்சந்தை என்பது முதல் வகை. நிதி நிறுவனங்கள், நிதி கழகங்கள், சீட்டு நிறுவனங்கள், கட்டிட சங்கங்கள், முதல்நிலை பங்கு வெளியீட்டு நிறுவனங்கள், முதலீட்டு அமைப்புகள், யூனிட் டிரஸ்ட் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் என்பன இரண்டாம் வகையில் அடங்கும்.)

44) மைய வங்கி என்பது கீழ்க்காணும் எந்த பணிகளை செய்கிறது?

I. பண மேலாண்மை

II. பண அளிப்பு மேலாண்மை

III. வட்டிவிகிதம் மேலாண்மை

A) I, II ஐ மட்டும்

B) I, III ஐ மட்டும்

C) II, III ஐ மட்டும்

D) இம்மூன்றையும்

(குறிப்பு – (Central Bank) மைய வங்கி, ரிசர்வ் வங்கி அல்லது பணவியல் அதிகார அமைப்பு என்பது அரசின் பணம், பண அளிப்பு மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் ஒரு நிதி நிறுவனம் ஆகும். மேலும் நாட்டில் உள்ள வணிக வங்கிகளை மேற்பார்வையிடுவது இதன் முக்கிய பணியாகும்.)

45) இந்திய ரிசர்வ் வங்கி எந்த சட்டத்தின்படி உருவானது?

A) இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1933இன்படி

B) இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934இன்படி

C) இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1935இன்படி

D) இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1936இன்படி

(குறிப்பு – ஒரு நாட்டின் மைய வங்கி அந்த நாட்டின் தலைமை வங்கியாகும். இந்தியாவின் மைய வங்கி இந்திய ரிசர்வ் வங்கி என்று அழைக்கப்படுகிறது. இது பணவியல் கொள்கை மூலம் பணவியல் மேலாண்மை செய்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியானது, இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934 இன் படி, ஏப்ரல் ஒன்றாம் தேதி 1935 ஆம் ஆண்டு முதல் தனது பணியினைத் துவங்கியது.)

46) துவக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் மூலதன மதிப்பு எவ்வளவாக இருந்தது?

A) ரூ 50 கோடி

B) ரூ 100 கோடி

C) ரூ 150 கோடி

D) ரூ 200 கோடி

(குறிப்பு – துவக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் மூலதனம் ரூபாய் 100 கோடி மதிப்பு கொண்ட சம பங்குகளாக பிரிக்கப்பட்டு தனியார் வசம் இருந்தது.)

47) இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு நாட்டுடமை ஆக்கப்பட்டது?

A) 1947 இல்

B) 1948 இல்

C) 1949 இல்

D) 1950 இல்

(குறிப்பு – இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய சுதந்திரத்திற்கு பின்னர், ஜனவரி 1, 1949 ஆம் ஆண்டு அன்று நாட்டுடைமை ஆக்கப்பட்டது. )

48) எந்த ஆண்டு முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகம் மும்பைக்கு மாற்றப்பட்டது?

A) 1935 முதல்

B) 1937 முதல்

C) 1939 முதல்

D) 1941 முதல்

(குறிப்பு – இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகம் 1937 ஆம் ஆண்டு வரை கொல்கத்தாவில் இருந்தது. 1937 ஆம் ஆண்டு முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகம் மும்பைக்கு மாற்றப்பட்டது.)

49) இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் யார்?

A) ஓஸ்போர்ன் ஸ்மித்

B) வில்லியம் ஓஸ்போர்ன்

C) ஹென்றி ஓஸ்போர்ன்

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் ஓஸ்போர்ன் ஸ்மித் என்பவர் ஆவார்.(Sir Osborne Arkell Smith) இவர் 1935 ஏப்பிரல் மாதம் முதல் தேதி முதல் 1937 ஜூன் 30 வரை ஆளுநர் பதவியில் இருந்தார்.)

50) இந்திய ரிசர்வ் வங்கி எத்தனை துணை ஆளுநர்களை கொண்டது?

A) மூன்று

B) நான்கு

C) ஐந்து

D) ஆறு

(குறிப்பு – இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் மற்றும் நான்கு துணை ஆளுநர்கள் கொண்டதாகும். மேலும் மைய அரசால் நியமிக்கப்படும் மைய நிர்வாக குழு உறுப்பினர்கள் இதில் அடங்குவர். இந்திய ரிசர்வ் வங்கியானது, மைய வங்கி அல்லது மற்ற இந்திய வங்கிகளின் நெறியாளர் என அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் கடைசி நிலை கடன் ஈவோன் ஆகும்)

51) கீழ்கண்டவற்றுள் எது இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள் ஆகும்?

I. பண அதிகார அமைப்பு

II. காகித பணம் வெளியீடு

III. வங்கி உரிமங்கள் வழங்குதல்

IV. அன்னியச் செலாவணியை பாதுகாத்தல்.

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள் ஆவன, பண அதிகார அமைப்பு(Monetary Authority), காகித பணம் வெளியீடு, வங்கி உரிமங்கள் வழங்குதல், அரசுக்கான வங்கியாக செயல்படுதல், இந்திய வங்கி அமைப்புகளை நெறிப்படுத்துதல், அன்னிய செலாவணியை பாதுகாத்தல், கடன் அளிப்பை நெறிப்படுத்துதல் போன்றவை ஆகும்.)

52) கீழ்காணும் எந்த நூற்றாண்டில் காகித பணம் வெளியிடும் முறை துவங்கியது?

A) 16 ஆம் நூற்றாண்டு முதல்

B) 17 ஆம் நூற்றாண்டு முதல்

C) 18 ஆம் நூற்றாண்டு முதல்

D) 19 ஆம் நூற்றாண்டு முதல்

(குறிப்பு – பதினெட்டாம் நூற்றாண்டில் காகித பணம் வெளியிடும் முறை துவங்கியது. தனியார் வங்கிகளான வங்காள வங்கி, மும்பை வங்கி மற்றும் சென்னை வங்கிகள் முதலில் காகிதப் பணத்தை அச்சடித்தன.)

53) ஷெர் ஷா சூரி ரூ.1க்கு எத்தனை செம்பு நாணயங்கள் என்ற விகிதத்தில் முதல் ரூபாய் வெளியிட்டார்?

A) 25 செம்பு நாணயங்கள்

B) 30 செம்பு நாணயங்கள்

C) 35 செம்பு நாணயங்கள்

D) 40 செம்பு நாணயங்கள்

(குறிப்பு – ஷெர் ஷா சூரி (Sher shah Suri) என்பவரால் ரூபாய் ஒன்றுக்கு 40 செம்பு நாணயங்கள் என்ற விகிதத்தில் முதல் ரூபாய் வெளியிடப்பட்டுள்ளது. சமஸ்கிருத சொல்லான ரௌபியா (Raupya) என்ற வார்த்தையிலிருந்து ரூபாய் என்ற வார்த்தை தோன்றியது.)

54) இந்தியாவின் ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் அதன் மதிப்பு எத்தனை மொழிகளில் எழுதப்பட்டுள்ளது?

A) 15 மொழிகளில்

B) 16 மொழிகளில்

C) 17 மொழிகளில்

D) 18 மொழிகளில்

(குறிப்பு – இந்தியாவின் பன்முகத் தன்மையை விளக்கும் விதமாக ஒவ்வொரு ரூபாய் நோட்டின் மதிப்பு 17 மொழிகளில் எழுதப்பட்டு இருக்கும். முன்பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டிருக்கும். பின்பக்கம் மற்ற 15 மொழிகளில் எழுதப்பட்டு இருக்கும்.)

55) இந்திய ரிசர்வ் வங்கி, பண அதிகார அமைப்பு எனும் பெயரில் செய்யும் பணிகள் என்ன?

I. அந்நிய செலாவணி பரிவர்த்தனை விகிதத்தை நிலைப்படுத்துதல்

II. சாதகமான செலுத்துநிலையை பேணுதல்

III. நிதி நிலைத்தன்மையை ஏற்படுத்துதல்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – இந்திய ரிசர்வ் வங்கியானது பண அதிகார அமைப்பு எனும் பெயரில் இந்தியாவில் பல அளிப்பினை கட்டுப்படுத்துவதன் மூலம் அன்னிய செலாவணி பரிவர்த்தனை விகிதத்தை நிலைப்படுத்துதல், சாதகமான செலுத்து நிலையை பேணுதல், நிதி நிலைத்தன்மையை ஏற்படுத்துதல், பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் வங்கியமைப்பை உறுதியாக்குதல் ஆகியவற்றை செய்கிறது.)

56) இந்தியாவில் எந்த ரூபாய்க்கான காகித பணத்தை ரிசர்வ் வங்கி வெளியிடுவதில்லை?

A) ரூ 1

B) ரூ 10

C) ரூ 50

D) ரூ 100

(குறிப்பு – இந்தியாவில் நாணயங்கள் மற்றும் ஒரு ரூபாய் காகித பணத்தை தவிர அனைத்து வகையான காகித பணத்தை வெளியிடுவதில் முற்றுரிமை பெற்ற நிறுவனம் ரிசர்வ் வங்கி ஆகும். மேலும் பண மற்றும் கடன் அளவுகளை இது மேலாண்மை செய்கிறது. புழக்கத்திலுள்ள போலியான பணத்தினை கட்டுப்படுத்தும் பொறுப்பும் மைய வங்கிக்கு உண்டு.)

57) கீழ்க்காணும் எந்த பிரிவின் படி, ஒவ்வொரு வணிக வங்கியும் இந்திய மைய வங்கியிடம் உரிமம் பெறவேண்டியது அவசியம் ஆகும்?

A) வங்கிகள் முறைப்படுத்துதல் சட்டம், பிரிவு 20 இன்படி

B) வங்கிகள் முறைப்படுத்துதல் சட்டம், பிரிவு 21 இன்படி

C) வங்கிகள் முறைப்படுத்துதல் சட்டம், பிரிவு 22 இன்படி

D) வங்கிகள் முறைப்படுத்துதல் சட்டம், பிரிவு 23 இன்படி

(குறிப்பு – வங்கிகள் முறைப்படுத்துதல் சட்டம் பிரிவு 22 இன் படி, ஒவ்வொரு வணிக வங்கியும் இந்தியாவில் வங்கித்தொழில் செய்ய மைய வங்கியிடம் உரிமம் பெற வேண்டியது அவசியமாகும். இந்த பணியையும் இந்திய ரிசர்வ் வங்கி செய்கிறது.)

58) இந்திய ரிசர்வ் வங்கி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. இந்திய ரிசர்வ் வங்கி அரசுகளுக்கு குறுகிய கால கடன்களை தருகிறது.

II. இந்திய ரிசர்வ் வங்கி அரசு கடன் தொடர்பான தொடர்பான சேவைகள் மற்றும் அரசு கடன் பத்திரங்களை உருவாக்கி விற்பனை செய்கிறது.

கூற்று 3 – இந்திய ரிசர்வ் வங்கி அரசுக்கு வங்கி மற்றும் நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – இந்திய ரிசர்வ் வங்கி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கான வங்கி ஆகும். இது அரசுகளுக்கு குறுகிய கால கடன்களை தருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி அரசு கடன்கள், அரசு கடன் தொடர்பான சேவைகள், அரசு கடன் பத்திரங்களை உருவாக்கி விற்பனை செய்தல் ஆகிய பணிகளை செய்கிறது. மேலும் அரசுக்கு வங்கி மற்றும் நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறது.)

59) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கியாகும்.

கூற்று 2 – வணிக வங்கிகளுக்கு தீர்க்க இயலாத நிதிச் சிக்கல்கள் ஏற்படும்போது இந்திய ரிசர்வ் வங்கி ஈட்டுக்கடனை வழங்குகிறது.

கூற்று 3 – இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளின் வைப்புகளை ஏற்கிறது மற்றும் மாற்றுச் சீட்டுக்களை மறு தள்ளுபடி செய்கிறது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கியாகும். இது வங்கிகளுக்கு வேண்டிய கடன்களை அளிக்கிறது. வங்கிகளின் வைப்புகளை ஏற்கிறது, மாற்று சீட்டுகளை மறு தள்ளுபடி செய்கிறது. அதனால் இது வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுகிறது. மேலும் வணிக வங்கிகளுக்கு தீர்க்க இயலாத நிதிச் சிக்கல்கள் ஏற்படும் பொழுது, அந்த சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஈட்டு கடன் அளித்து உதவுகிறது.)

60) வணிக வங்கிகளுக்கு இடையே ஆகும் பரிவர்த்தனைகளை எத்தனை தீர்வகங்களை கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி சமன் செய்கிறது?

A) 12 தீர்வகங்கள் மூலம்

B) 13 தீர்வகங்கள் மூலம்

C) 14 தீர்வகங்கள் மூலம்

D) 15 தீர்வகங்கள் மூலம்

(குறிப்பு – வணிக வங்கிகளுக்கு இடையே நடக்கும் பரிவர்த்தனைகளை தனது 14 தீர்வகங்களை கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி சமன் செய்கின்றது. பரிவர்த்தனை கருவிகளை பரிமாறிக்கொள்ள உதவுவதுடன், பரிவர்த்தனை தொடர்பான அறிவுறுத்தல்களையும் வழங்குகிறது.)

61) அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

A) 1996 ஆம் ஆண்டு

B) 1997 ஆம் ஆண்டு

C) 1998 ஆம் ஆண்டு

D) 1999 ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்திய ரிசர்வ் வங்கி அன்னியச் செலாவணியின் பாதுகாவலனாக திகழ்கிறது. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் (Foreign Exchange Management Act-FEMA) 1999இன்படி, RBI அன்னிய செலாவணி மேலாண்மையும், நிர்வகிப்பினையும் மேற்கொள்கிறது. அன்னிய பணத்திற்கு எதிரான இந்திய ரூபாயின் பரிமாற்ற விகிதத்தை நிலைப்படுத்துவதற்காக, வெளிநாட்டு பணங்களை அவ்வப்போது வாங்கி விற்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.)

62) கீழ்க்காணும் எந்த குறியீடுகளை இந்திய ரிசர்வ் வங்கி கண்காணிக்கிறது?

I. தேசிய வருவாய்

II. வேலைவாய்ப்பு

III. சேமிப்பு மற்றும் முதலீடு

A) I ஐ மட்டும்

B) II ஐ மட்டும்

C) III ஐ மட்டும்

D) இவை அனைத்தையும்

(குறிப்பு – பணவியல் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்தி விரும்பத்தகுந்த பாதையில் இந்திய ரிசர்வ் வங்கி கொண்டு செல்கிறது. மேலும் தேசிய வருவாய், வேலைவாய்ப்பு, செலவு, சேமிப்பு, முதலீடு போன்ற முக்கிய குறியீடுகளை தொடர்ந்து கண்காணித்து நெறிப்படுத்துகிறது.)

63) செலுத்துதல் மற்றும் தீர்வு சட்டம் (The Payment and Settlement System Act )எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

A) 2003 இல்

B) 2005 இல்

C) 2007 இல்

D) 2009 இல்

(குறிப்பு – 2007 ஆம் ஆண்டு செலுத்துதல் மற்றும் தீர்வு சட்டம்(The Payment and Settlement System Act) இந்திய ரிசர்வ் வங்கிக்கு நாட்டின் செலுத்துதல் மற்றும் தீர்வு செய்வதற்கான மேற்பார்வையிடும் அதிகாரத்தை வழங்கியுள்ளது. ஆகவே ரிசர்வ் வங்கி பாதுகாப்பான மற்றும் திறமையான செலுத்துதல் மற்றும் தீர்வுகளை மேற்பார்வையிடுவதன் மூலம் மேம்பாட்டிற்கு வழிவகுக்கின்றது.)

64) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இந்திய ரிசர்வ் வங்கி சிறந்த வங்கி அமைப்பினை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

கூற்று 2 – இந்திய ரிசர்வ் வங்கி சிறந்த உற்பத்தி திறன் கொண்ட துறைகளுக்கு கடன்கள் வழங்கப்படுவதை உறுதி செய்கின்றது.

கூற்று 3 – தேசிய குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு பரந்த மேம்பாட்டு பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்கின்றது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – இந்திய ரிசர்வ் வங்கி சிறந்த வங்கி அமைப்பினை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.இந்திய ரிசர்வ் வங்கி சிறந்த உற்பத்தி திறன் கொண்ட துறைகளுக்கு கடன்கள் வழங்கப்படுவதை உறுதி செய்கின்றது.தேசிய குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு பரந்த மேம்பாட்டு பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்கின்றது. மேலும் நாட்டின் நிதிகட்டமைப்பினை ஏற்படுத்தும் நிறுவனங்களையும் அமைகின்றது.)

65) இந்திய ரிசர்வ் வங்கி பணவியல் மற்றும் இதர தகவல்களை எவ்வாறு வெளியிடுகிறது?

I. மாத புள்ளி விவரங்களாக

II. காலாண்டு புள்ளி விவரங்களாக

III. அரையாண்டு புள்ளி விவரங்களாக

IV. ஆண்டு புள்ளி விவரங்களாக

A) I மட்டும் சரி

B) IV மட்டும் சரி

C) II, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – பணம், வங்கி மற்றும் முக்கிய பொருளாதார புள்ளி விவரங்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. மேலும் இந்தியாவின் பொருளாதார கொள்கைகளை திறனாய்வு செய்கிறது. புள்ளி விவரங்களை திரட்டி வரிசைப்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி வெளியீடு (Reserve Bank of India Bullettin ) மூலம் மாத, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு விவரங்களை வெளியிடுகிறது.)

66) சர்வதேச பண நிதியத்தின் இந்திய உறுப்பினராக விளங்குவது எது?

A) இந்திய ரிசர்வ் வங்கி

B) இந்திய வணிக வங்கிகள்

C) இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – சர்வதேச பண நிதியத்தின் இந்திய உறுப்பினர் பிரதிநிதியாக இந்திய ரிசர்வ் வங்கி விளங்குகிறது. நிதியத்திலிருந்து பெறப்படும் அந்நிய செலாவணியை மேலாண்மை செய்வதும், அதிகாரமளிக்கப்பட்ட அன்னிய செலாவணி விற்பனையாளர்களான வணிக வங்கிகளை நெறிப்படுத்தும் செயலையும் இந்திய ரிசர்வ் வங்கி செய்கிறது.)

67) இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு வங்கிகள்குறை தீர்ப்பாயத்தினை அறிமுகப்படுத்தியது?

A) 1994 ஆம் ஆண்டு

B) 1995 ஆம் ஆண்டு

C) 1996 ஆம் ஆண்டு

D) 1997 ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்திய ரிசர்வ் வங்கி 1995ஆம் ஆண்டு வங்கி குறை தீர்ப்பாயத்தினை (Banking ombudsman) அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்கீழ் வங்கிகள் தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு வரும் அனைத்து புகார்கள் மற்றும் மேல் முறையீடுகளை வங்கி குறை தீர்ப்பாயம் களைகின்றது.)

68) கீழ்க்காணும் எந்த அமைப்பினை இந்திய ரிசர்வ் வங்கி அமைந்துள்ளது?

A) இந்திய வங்கி நெறிமுறை மற்றும் மதிப்பீடுகள் வாரியம்

B) இந்திய வங்கி நிதிமுறை வாரியம்

C) இந்திய வங்கிகள் வாரியம்

D) இவை ஏதும் அல்ல

(குறிப்பு – வங்கிகளின் திறனை அளவிடும் விதமாக உலக அளவில் ஏற்பட்டுள்ள நெறிமுறைகள் மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கியானது இந்தியன் வங்கி நெறிமுறை மற்றும் மதிப்பீடுகள் வாரியத்தை (Banking Codes and Standards Board of India – BCSBI) அமைத்துள்ளது.

69) வங்கி நெறிமுறைகள் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

A) 1945 ஆம் ஆண்டு

B) 1947 ஆம் ஆண்டு

C) 1949 ஆம் ஆண்டு

D) 1951 ஆம் ஆண்டு

(குறிப்பு – வங்கி நெறிமுறை சட்டம் 1949 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. கடன் கட்டுப்பாட்டு நுட்பம் என்பது மைய வங்கியின் பணவியல் மேலாண்மையின் முக்கிய நோக்கம் ஆகும். கடன் கட்டுப்பாட்டு முறைகள் 1934 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் மற்றும் 1949ம் ஆண்டின் வங்கி நெறிமுறை சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை பெறுகிறது.)

70) கீழ்க்கண்டவற்றுள் எது கடன் அளவு கட்டுப்பாட்டு முறைகள் ஆகும்?

I. வங்கி விகித கொள்கை

II. வெளிச்சந்தை நடவடிக்கைகள்

III. மாறும் குறைந்த பட்ச வங்கி ரொக்க இருப்பு விகிதம்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – கடன் கட்டுப்பாட்டு முறைகள் என்பது கடன் அளவு கட்டுப்பாட்டு முறைகள் மற்றும் கடன் தன்மை கட்டுப்பாட்டு முறைகள் என இருவகைப்படுத்தப்பட்டுள்ளன. கடன் அளவு கட்டுப்பாட்டு முறைகள் என்பது வங்கி விகித கொள்கை, வெளி சந்தை நடவடிக்கைகள், மாறும் குறைந்தபட்ச வங்கி ரொக்க இருப்பு விகிதம் போன்றவை ஆகும்.)

71) வங்கி விகித கொள்கை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) தள்ளுபடி விகித கொள்கை

B) மாறும் விகித கொள்கை

C) வட்டி விகித கொள்கை

D) வரி விகித கொள்கை

(குறிப்பு – வங்கி விகித கொள்கை என்பது தள்ளுபடி விகித கொள்கை(Discount Rate Policy) என்றும் அழைக்கப்படுகிறது. மைய வங்கியானது எந்த விகிதத்தில் முதல்நிலை மாற்று சீட்டுகள் மற்றும் பிணையங்கள் தள்ளுபடி செய்கிறது என்பதே வங்கி விகித கொள்கை ஆகும்.)

72) பணவீக்க காலத்தில் கீழ்காணும் எது நிகழும்?

I. மைய வங்கியின் தள்ளுபடி விகிதம் அதிகரிக்கும்

II. மைய வங்கியின் தள்ளுபடி விகிதம் குறையும்

III. நடப்பு வட்டி விகிதம் அதிகரிக்கும்

IV. நடப்பு வட்டி விகிதம் குறையும்

A) I மட்டும் நிகழும்

B) II மட்டும் நிகழும்

C) I, III மட்டும் நிகழும்

D) II, IV மட்டும் நிகழும்

(குறிப்பு – பணவீக்க காலத்தில் வங்கி விகிதம் அதாவது மைய வங்கியின் தள்ளுபடி விகிதம் அதிகரிக்கபடுவதால் நடப்பு வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டு கடன் அளவு குறைக்கப்படும்.)

73) பணவாட்ட காலத்தில் கீழ்காணும் எது நிகழும்?

I. மைய வங்கியின் தள்ளுபடி விகிதம் அதிகரிக்கும்

II. மைய வங்கியின் தள்ளுபடி விகிதம் குறையும்

III. கடன் அளவு அதிகரிக்கும்

IV. கடன் அளவு குறையும்

A) I மட்டும் நிகழும்

B) II மட்டும் நிகழும்

C) II, III மட்டும் நிகழும்

D) I, IV மட்டும் நிகழும்

(குறிப்பு – வனவாச காலத்தில் எதிர்மறையாக வங்கி தள்ளுபடி விகிதம் குறையும். இது நடப்பு சந்தை வட்டி விகிதத்தை குறைக்கும். இதனால் உந்தப்பட்டு நிறைய கடன்கள் உருவாகும். இதனால் கடன் அளிப்பு அதிகரித்து பணவாட்டம் சரி செய்யப்படும்.)

74) வணிக வங்கிகளும் தனிநபர்களும் வெளியிடும் கடன் பத்திரங்களை வாங்கும் பொழுது கீழ்காணும் எது நிகழும்?

I. சுழற்சியில் உள்ள பணம் குறையும்

II. கடன் பணம் குறையும்

III. பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்.

A) I மட்டும்

B) II மட்டும்

C) III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – மைய வங்கி அரசின் கடன் பத்திரங்களை மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களின் தகுதி படைத்த பத்திரங்களையும் விற்பனை செய்வதும், திரும்பப் பெறும். வணிக வங்கிகளும் தனிநபர்களும் வெளியிடும் கடன் பத்திரங்களை வாங்கும் பொழுது பொருளாதாரத்தில் சுழற்சியில் உள்ள பணமும், கடன் பணமும் குறையும். இதனால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்.)

75) வணிக வங்கிகளிடம் வந்து சேரும் கேட்பு மற்றும் கால வைப்புகளில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை மையவங்கியில் இருப்பு வைக்க வேண்டும் என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) ரொக்க இருப்பு

B) ரொக்க இருப்பு விகிதம்

C) ரொக்கம்

D) எல்லாமே தவறு

(குறிப்பு – வணிக வங்கிகளிடம் வந்து சேரும் கேட்பு மற்றும் கால வைப்புகளில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை மையவங்கியில் இருப்பு வைக்க வேண்டும். இது மைய வங்கி சட்டத்தின்படி பின்பற்ற வேண்டியது ஆகும். இதுவே ரொக்க இருப்பு விகிதம் என்று அழைக்கப்படுகிறது.)

76) கீழ்கண்டவற்றுள் எது ரொக்க இருப்பு விகிதத்துடன் எதிர்மறை தொடர்பு கொண்டது?

A) வணிக வங்கிகள் வழங்கும் கடன் அளவு

B) தொடக்க செலவு விகிதம்

C) ரொக்க செலவு விகிதம்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – ரொக்க இருப்பு விகிதத்திர்க்கும், வணிக வங்கிகள் வழங்கும் கடன் அளவிற்கும் எதிர்மறை தொடர்பு உள்ளது. வணிக வங்கிகளிடம் கூடுதலான பணம் உள்ள சூழ்நிலையில் அவைகள் தேவைக்கு அதிகமான கடன் பணத்தை உருவாக்க வாய்ப்பு இருக்கிறது. இது பொருளாதாரத்தில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும்.)

77) ரொக்க இருப்பு விகிதம் என்பதை முதன் முதலில் வகுத்தவர் யார்?

A) கீன்ஸ்

B) கீட்ஸ்

C) கிப்ஸ்

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – மாறும் ரொக்க இருப்பு விகிதம் என்பது பணவியல் கொள்கையின் ஒரு கருவி. இதனை முதன்முதலாக கீன்ஸ் பரிந்துரைத்தார்.)

78) மாறும் ரொக்க இருப்பு விகிதம் என்பதை முதன்முதலில் அறிமுகம் செய்த மைய வங்கி எது?

A) இந்திய ரிசர்வ் வங்கி

B) பெடரல் ரிசர்வ் சிஸ்டம்

C) சீன மைய வங்கி

D) நியூசிலாந்து ரிசர்வ் வங்கி

(குறிப்பு – மாறும் ரொக்க விகிதம் என்பதை முதன்முதலில் அறிமுகம் செய்தது, அமெரிக்க மைய வங்கியான, பெடரல் ரிசர்வ் சிஸ்டம் (Federal Reserve System) ஆகும்.)

79) சட்டப்பூர்வ நீர்மை விகிதம் என்பது கீழ்க்கண்டவற்றுள் எந்த சொத்துக்கள் ஆகும்?

A) ரொக்கம்

B) தங்கம்

C) ஒப்புதல் பெற்ற பத்திரங்கள்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – சட்டப்பூர்வ நீர்மை விகிதம் என்பது, வங்கிகள் தன்னகத்தே எப்பொழுதும் வைத்திருக்க வேண்டிய ரொக்கம், தங்கம் மற்றும் ஒப்புதல் பெற்ற பத்திரங்கள் உள்ளடக்கிய நீர்மை தன்மை கொண்ட சொத்துக்கள் ஆகும். இது கேட்டு வைப்பு மற்றும் கால வைப்பு போன்ற வங்கியின் பொறுப்புகளின் ஒரு குறிப்பிட்ட சதவீத அளவிற்கு இருக்க வேண்டும்.)

80) கடன் தன்மை கட்டுப்பாட்டு முறைகளுள் கீழ்காணும் எவை பயன்படுத்தப்படுகின்றன?

I. கடன் பங்கீடு

II. நேரடி நடவடிக்கைகள்

III. நெறிமுறை தூண்டல்

IV. விளம்பரப்படுத்துதல்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – கடன் தன்மை கட்டுப்பாட்டு முறை அல்லது தெரிந்தெடுத்த கடன் கட்டுப்பாட்டு முறைகள் (Selective Credit Control Methods) என்பது தெரிந்தெடுத்த துறைகளில், தொழில்கள் வணிகங்கள் அல்லது பயன்களில் மட்டும் கடன் கட்டுப்பாட்டினை கொண்டு வருவதாகும்.)

81) கடன் பங்கீடு (Rationing of Credit) முதன் முதலில் எந்த வங்கியில் அறிமுகம் செய்யப்பட்டது?

A) நியூசிலாந்து ரிசர்வ் வங்கி

B) சிலோன் மைய வங்கி

C) சீன மைய வங்கி

D) இங்கிலாந்து வங்கி

(குறிப்பு – கடன் பங்கீடு என்பது ஒரு பழமையான கடன் கட்டுப்பாட்டு முறையாகும்.முதன் முறையாக பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் மைய வங்கியான இங்கிலாந்து வங்கியில் (Bank of England) இம்முறை பயன்படுத்தப்பட்டது. வணிக வங்கிகள் வழங்கும் கடன்கள் பல்வேறு நோக்கங்களுக்காக வழங்கப்படுகிறது. நாட்டின் பண அளிப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதன் நோக்கங்களை பட்டியலிட்டு வரையறை செய்வதன் மூலம் கடன் கட்டுப்பாட்டினை ஏற்படுத்துவது ஆகும்.)

82) கடன் பங்கீட்டின் வகைகள் அல்லாதது எது?

I. மாறும் தொகுப்பு வரையறை

II. மாறும் மூலதன சொத்து விகிதம்

III. வட்டி விகித வரையறை

A) I மட்டும் அல்ல

B) II மட்டும் அல்ல

C) III மட்டும் அல்ல

D) எதுவுமே அல்ல

(குறிப்பு – கடன் பங்கீட்டு (Rationing of Credit)முறை இரண்டு வகையானது.1)மாறும் தொகுப்பு வரையறை (Variable Portfolio Ceiling) மற்றும் 2) மாறும் மூலதன சொத்து விகிதம் (Variable Capital Asset Ratio) என்பன ஆகும்.)

83) ஒவ்வொரு வங்கியும் எவ்வளவு அதிகபட்ச கடன் மற்றும் முன் பணம் கொடுக்கலாம் என்பதனை மைய வங்கி வரையறுப்பதன் பெயர் என்ன?

A) மாறும் தொகுப்பு வரையறை

B) மாறும் மூலதன சொத்து விகிதம்

C) வட்டி விகித வரையறை

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – மாறும் தொகுப்பு வரையறையானது ஒவ்வொரு வணிக வங்கியும் எவ்வளவு அதிகபட்ச கடன் மற்றும் முன்பணம் கொடுக்கலாம் என்பதனை வரையறுப்பது ஆகும். மாறும் மூலதன சொத்து விகிதம் என்பது வணிக வங்கிகள் தங்களது சொத்து மதிப்பில் எந்த அளவு மூலதனமாக வைத்து கொள்ளலாம் என்பதனை வரையறை செய்வதாகும்.)

84) நேரடி நடவடிக்கைகள்(Direct Actions) என்பது கீழ்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியதாகும்?

I. வணிக வங்கிகள் தள்ளுபடிக்காக கொண்டுவரும் மாற்றுச்சீட்டு உள்ளிட்ட அனைத்து பிணையங்களையும் ஒட்டுமொத்தமாக மைய வங்கி மறுப்பது.

II. மூலதனம் மற்றும் இருப்புகளை தாண்டி மொத்த கடன் அளவை கொண்டுள்ள வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டினை மைய வங்கி மறுப்பது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – நேரடி நடவடிக்கைகள் (Direct Actions)எனப்படுவது, 1) வணிக வங்கிகள் தள்ளுபடிக்காக கொண்டுவரும் மாற்றுச்சீட்டு உள்ளிட்ட அனைத்து பிணையங்களையும் ஒட்டுமொத்தமாக மைய வங்கி மறுப்பது, மூலதனம் மற்றும் இருப்புகளை தாண்டி மொத்த கடன் அளவை கொண்டுள்ள வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டினை மைய வங்கி மறுப்பது, அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மைய வங்கியில் கடன் பெறும் வணிக வங்கிகளுக்கு இயல்பான வட்டியுடன் அபராத வட்டி விகிதத்தை விதிப்பது போன்றவை ஆகும்.)

85) வணிக வங்கிகளின் கடன் அளவை கட்டுப்படுத்த மைய வங்கி அடிக்கடி கையாளும் முறையானது கீழ்க்கண்டவற்றுள் எது?

A) கடன் பங்கீடு

B) நேரடி நடவடிக்கை

C) நெறிமுறை தூண்டல்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – வணிக வங்கிகளின் கடன் அளவை கட்டுப்படுத்த மைய வங்கி அடிக்கடி கையாளும் ஒரு முறை நெறிமுறை தூண்டல் என்பதாகும். இந்த முறையின் கீழ் அறிவுரைகளையும் வேண்டுகோளையும் வைப்பதன் மூலம் வணிக நெறிமுறையை போதித்து வணிக வங்கிகள் வழங்கும் கடன்களை கட்டுப்படுத்துகிறது.)

86) பணத்தின் அளிப்பை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கியால் மேற்கொள்ளப்படும் கருவிகள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. ரெப்போ விகிதம் (RR)

II. மீள் ரெப்போ விகிதம் (RRR)

A) I மட்டும்

B) II மட்டும்

C) இரண்டும் சரி

D) இரண்டும் அல்ல

(குறிப்பு – பணத்தின் அளிப்பை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கியால் மேற்கொள்ளப்படும் கருவிகளே ரெப்போ விகிதம் (RR) மற்றும் மீள் ரெப்போ விகிதங்கள்(RRR) ஆகும். ரெப்போ விகிதம் எப்பொழுதும் மீள் ரெப்போ விகிதத்தை விட அதிகமாகவே இருக்கும்.)

87) ரெப்போ விகிதம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மைய வங்கியால் குறுகிய கால கடன் வழங்கும் பொழுது விதிக்கும் வட்டி விகிதமே ரெபோ விகிதம் ஆகும்.

II. இம்முறையில் பத்திரங்களை ஈடாக வைத்து இந்திய ரிசர்வ் வங்கியில் கடன்களை வங்கிகள் பெறுகின்றன.

III. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெபோ விகிதத்தை அதிகரிக்க வேண்டும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – வணிக வங்கிகளுக்கு மைய வங்கி குறுகிய கால கடன் வழங்கும் பொழுது விதிக்கும் வட்டி விகிதமே ரெப்போ விகிதம் எனப்படுகிறது. இவ் வங்கிகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும் பொழுது அவைகள் பத்திரங்களை ஈடாக வைத்து இந்திய ரிசர்வ் வங்கியில் கடன்களை பெறுகிறது. அந்நிலையில் விதிக்கப்படும் வட்டி விகிதமே ரெப்போ விகிதம் எனப்படுகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெபோ விகிதத்தை அதிகரிப்பதன் மூலம், கடன் வாங்குவதற்கான செலவை அதிகப்படுத்தி, கடன் வாங்குவதை குறைகிறது.)

88) மீள் ரெப்போ விகிதம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. வணிக வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்க விரும்பும் வட்டி விகிதமே மீள் ரெப்போ விகிதம் எனப்படுகிறது.

II. மீள் ரெப்போ விகிதத்தை உயர்த்தினால் அது வணிக வங்கிகளுக்கு லாபகரமான வட்டி விகிதம் ஆகி அவைகளிடம் உள்ள பணத்தை ரிசர்வ் வங்கியிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு.

(குறிப்பு – வணிக வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்க விரும்பும் வட்டி விகிதமே மீள் ரெப்போ விகிதம் எனப்படுகிறது.மீள் ரெப்போ விகிதத்தை உயர்த்தினால் அது வணிக வங்கிகளுக்கு லாபகரமான வட்டி விகிதம் ஆகி அவைகளிடம் உள்ள பணத்தை ரிசர்வ் வங்கியிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. இதனால் அந்த பணத்திற்கு உயர் பாதுகாப்பு கிடைக்கிறது இதனால் வணிக வங்கிகள் தனது வாடிக்கையாளருக்கு கடன் கொடுப்பது குறைகிறது.)

89) கீழ்க்காணும் எந்த துறைக்காக தனியான கடன் வழங்கும் துறையை இந்திய ரிசர்வ் வங்கி துவங்கியது?

A) விவசாயம்

B) நீர் மேலாண்மை

C) பொருளாதாரம்

D) நவீன அறிவியல்

(குறிப்பு – இந்திய ரிசர்வ் வங்கி விவசாயதுறைக்கான நிதியளிப்பில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் முறைசார் நிறுவனங்களின் கடன் வசதி பற்றாக்குறை போன்ற காரணங்களால் ரிசர்வ் வங்கியின் பொறுப்பு இதில் அதிகமாகிறது.தனது பங்கின் முக்கியத்துவம் கருதி இந்திய ரிசர்வ் வங்கி விவசாயத்திற்கு என தனியான விவசாயகடன்(Agriculture Credit Department) துறையை துவங்கியது.)

90) கீழ்க்காணும் எது விவசாயக்கடன் துறையின் பணிகள் ஆகும்?

I. நிபுணத்துவம் பெற்ற அலுவலரை நியமித்து விவசாய கடன் தொடர்பான அனைத்து வினாக்களையும் ஆய்வு செய்வது.

II. விவசாய கடன் கேட்டு வருவோர் அனைவருக்கும் விவசாய கடன் வழங்குவது.

III. மைய அரசு, மாநில அரசு, மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் இதர வங்கி நடவடிக்கைகளில் நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசனைகளை வழங்குவது.

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – விவசாயக்கடன் துறையின் பணிகள் ஆவன, 1) நிபுணத்துவம் பெற்ற அலுவலரை நியமித்து விவசாய கடன் தொடர்பான அனைத்து வினாக்களையும் ஆய்வு செய்வது, 2) மைய அரசு, மாநில அரசு, மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் இதர வங்கி நடவடிக்கைகளில் நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசனைகளை வழங்குவது, 3) ஊரக துறைக்கு தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலமாக விவசாய கடன் வழங்குவது மேலும் அவைகளை ஒருங்கிணைப்பது போன்றவைகள் ஆகும்)

91) இந்திய ரிசர்வ் வங்கி விவசாய கடன்களை கீழ்க்காணும் எந்த வங்கியின் வழியாக வழங்குவதில்லை?

A) மாநில கூட்டுறவு வங்கிகள்

B) மத்திய கூட்டுறவு வங்கிகள்

C) துவக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்

D) தொழில் கூட்டுறவு வங்கிகள்

(குறிப்பு – விவசாய மேம்பாட்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் பங்கு மிகவும் பெரியது. இது நேரடியாக விவசாயிகளுக்கான கடன் வழங்காமல் ஊரக கடன் வழங்குவதில் தேர்ச்சி பெற்ற நிறுவனங்கள் மூலமாக மறு கடனாக வழங்கிவந்தது. இந்திய ரிசர்வ் வங்கி தனக்குக் கீழாக மாநில கூட்டுறவு வங்கிகள் மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் எனும் மூன்றடுக்கு முறை வழியாக விவசாயத்திற்கான கடனை வழங்கி வந்தது.)

92) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இந்திய ரிசர்வ் வங்கி பருவகால விவசாய பணிகள் மற்றும் விவசாய பொருள் சந்தையிடல் தொடர்பாக குறுகிய கடன்களை அல்லது பயிர் கடன்களை வழங்குகிறது.

கூற்று 2 – இந்திய ரிசர்வ் வங்கி மாநில கூட்டுறவு வங்கிகள் அரசு பத்திரங்கள் மற்றும் நிலவள வங்கிகளின் கடன் பத்திரங்களை ஈடாக ஏற்று 20 மாத கடனை வழங்கி வந்தது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – இந்திய ரிசர்வ் வங்கி பருவகால விவசாய பணிகள் மற்றும் விவசாய பொருள் சந்தையிடல் தொடர்பாக குறுகிய கால கடன்களை அல்லது பயிர் கடன்களை (Shortterm loans or Crop loans) வழங்கி வந்தது. இதற்காக மாநில கூட்டுறவு வங்கிகள் அரசு பத்திரங்கள் மற்றும் நிலவள வங்கிகள் கடன் பத்திரங்களை ஈடாக ஏற்று 15 மாத கடனை ரிசர்வ் வங்கி வழங்கி வந்தது.)

93) இந்திய ரிசர்வ் வங்கி கீழ்க்காணும் எந்த நோக்கங்களுக்காக 15 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரையிலான மத்திய கால கடன்களை வழங்குகிறது?

A) பாசன வசதி ஏற்படுத்துதல்

B) நிலத்தினை தரம் மேம்படுத்துதல்

C) இயந்திரங்கள் வாங்குதல்

D) இவை அனைத்திற்கும்

(குறிப்பு – இந்திய ரிசர்வ் வங்கி நிலத்தினை தரம் மேம்படுத்துதல், பாசன வசதி ஏற்படுத்துதல், இயந்திரங்கள் வாங்குதல் ஆகிய நோக்கங்களுக்காக 15 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரையிலான மத்தியகால கடன்களையும் (Medium term loan) வழங்கி வந்தது. மேலும் நிலத்தினை முற்றிலுமாக மாற்றுவது மற்றும் பழைய கடன்களை திரும்ப செலுத்த உதவும் வகையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால கடன்களையும்(Long term loans) வழங்கி வந்தது.)

94) எந்த ஆண்டு முதல் விவசாய கடன் சம்பந்தமான அனைத்து பொருட்களையும் நபார்டு வங்கி ஏற்றுக்கொண்டது?

A) 1980 முதல்

B) 1982 முதல்

C) 1984 முதல்

D) 1986 முதல்

(குறிப்பு – 1982 ஆம் ஆண்டு முதல் விவசாய கடன் சம்பந்தமான அனைத்து பொறுப்புகளையும் நபார்டு வங்கி (NABARD) இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து பெற்றுக் கொண்டது. அதிலிருந்து ஊரக கடன் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நபார்டு வங்கி மேற்கொண்டு வருகிறது.)

95) விவசாய மறு கடன் மேம்பாட்டுக்கழகம் எப்போது தொடங்கப்பட்டது?

A) ஜூலை 1, 1960 இல்

B) ஜூலை 1, 1961 இல்

C) ஜூலை 1, 1962 இல்

D) ஜூலை 1, 1963 இல்

(குறிப்பு – இந்திய விவசாயிகளுக்கு மத்திய மற்றும் நீண்ட கால கடன்களை அதிகம் தேவை இருந்தபோதிலும் அதைப் பெறுவதில் சிக்கல்கள் இருந்தன இந்த வகை கணங்களை அளிக்கும் ஒரே அமைப்பு ரீதியான நிறுவனம் நிலவள வங்கிகள் (Land Development Banks)ஆகும். இந்த வகை பிரச்சனைகளுக்கு தீர்வு காண பாராளுமன்ற சட்டத்தின் அடிப்படையில் ஜூலை 1, 1963ஆம் ஆண்டு விவசாயம் மறுக்கடன் மேம்பாட்டு கழகம் ஆரம்பிக்கப்பட்டது.)

96) விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மத்திய நிலவள வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் பட்டியல் வங்கிகள் போன்ற தகுதி வாய்ந்த அமைப்புகளுக்கு தேவையான நிதியினை விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் வழங்குகிறது.

II. விவசாயம் மறுகடன் மேம்பாட்டுக்கழகம் 1962 இல் தோற்றுவிக்கப்பட்டது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – விவசாய மறிகடல் மேம்பாட்டு கழகத்தின் நோக்கங்கள் ஆவன, 1)மத்திய நிலவள வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் பட்டியல் வங்கிகள் போன்ற தகுதி வாய்ந்த அமைப்புகளுக்கு தேவையான நிதியினை விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் வழங்குகிறது, 2) இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய நிலவள வங்கிகள் மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் பட்டியல் வங்கிகள் வெளியிடும் கடன் பத்திரங்களை வாங்கி அதன் மூலம் நிதி அளிப்பினை செய்வதாகும்.)

97) கீழ்க்காணும் எந்த வங்கி கிராமின் வங்கிகள் என்று அழைக்கப்படுகிறது?

A) மத்திய நிலவள வங்கி

B) கூட்டுறவு வங்கி

C) வட்டார ஊரக வங்கி

D) மாநில கூட்டுறவு வங்கி

(குறிப்பு – ஊரக நிதி வழங்கும் நிறுவனங்களில் அடுத்த முக்கியமான வங்கி அமைப்பு வட்டார ஊரக வங்கிகள் ஆகும். இது கிராமின் வங்கிகள் (Gramin Banks) என்று அழைக்கப்படுகிறது.)

98) கிராமின் வங்கிகள் தோன்ற காரணமாக இருந்த இந்திய பிரதமர் யார்?

A) ராஜீவ் காந்தி

B) இந்திரா காந்தி

C) அடல் பிகாரி வாஜ்பாய்

D) வி.பி.சிங்

(குறிப்பு – மறைந்த இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களின் 20 அம்ச பொருளாதார திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களை தொடர் கடன் சூழ்நிலைகளிலிருந்து விடுவிப்பது ஆகும். எனவே வட்டார ஊரக வங்கிகள் தோற்றுவிக்கப்பட்டது.).

99) வட்டார ஊரக வங்கிகள் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன?

A) 1971 ஆம் ஆண்டு

B) 1972 ஆம் ஆண்டு

C) 1973 ஆம் ஆண்டு

D) 1975 ஆம் ஆண்டு

(குறிப்பு – மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிகாலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட புதிய பொருளாதார திட்டத்தினை தொடர்ந்து வட்டார ஊரக வங்கிகள் 1975 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. இவைகளுக்கான மூலதனம் 50% மைய அரசாலும், 15 சதவீதம் மாநில அரசாலும், 35% நடத்துகின்ற வணிக வங்கிகளாலும் அளிக்கப்பட்டது.)

100) வட்டார ஊரக வங்கிகளின் நோக்கம் கீழ்க்கண்டவர்களுள் யாருக்கு கடன் வழங்குவதாகும்?

A) நிலமற்ற விவசாய தொழிலாளர்கள்

B) சிறு குறு விவசாயிகள்

C) கைவினைஞர்கள்

D) இவர்கள் அனைவர்க்கும்

(குறிப்பு – வட்டார ஊரக வங்கியின் நோக்கம் விவசாயிகளுக்கு, குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் சிறுதொழில் முனைவோருக்கு கடன் வழங்குவதன் மூலம் ஊரக பகுதியில் விவசாயம், வர்த்தகம், தொழில் மற்றும் இதர உற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்துவது ஆகும்.)

101) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. வணிக வங்கிகள் தனது அலுவலர்களை அயற்பணியாளர்களாக வட்டாரவங்கிகளுக்கு அனுப்புகிறது.

II. வணிக வங்கிகள் வட்டார ஊரக வங்கி பணியாளர்களுக்கு ஆகும் பயிற்சி செலவுகளை ஏற்றுக்கொள்கிறது.

III. வட்டார ஊரக வங்கிகள் 4 சதவீத தொகை இருப்பினை வைத்துக்கொள்ள அனுமதி உண்டு.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ஆரம்பத்தில் பங்கு மூலதனத்தை வழங்கிய வணிக வங்கிகள் அவைகளுக்கான மேலாண்மை மற்றும் நிதி தொடர்பான உதவிகளை மற்றும் குறைந்த அளவாக 8.5 சதவீத வட்டியில் கடன்களையும் வழங்கி வந்தன.மேலும் வணிக வங்கிகள் தனது அலுவலர்களை அயற்பணியாளர்களாக வங்கிகளுக்கு அனுப்புவது மற்றும் வட்டார ஊரக வங்கி பணியாளர்களுக்கு ஆகும் பயிற்சி செலவுகளை ஏற்றுக் கொள்வது ஆகிய சலுகைகளை வழங்குகிறது.)

102) வட்டார ஊரக வங்கிகளுக்கான சட்ட பூர்வ நீர்மை இருப்பு எத்தனை சதவீதம் ஆகும்?

A) 20 சதவீதம்

B) 25 சதவீதம்

C) 30 சதவீதம்

D) 35 சதவீதம்

(குறிப்பு – வட்டார ஊரக வங்கிகள் 3 சதவிகித ரொக்க இருப்பினையும், 25 சதவிகித சட்டபூர்வ நீர்மை இருப்பினை வைத்திருக்கவும் அனுமதிக்கப்படுகிறது. நபார்டு வங்கி மூலம் இவைகளுக்கு மறு கடன்களையும் வழங்கி வருகின்றன.)

103) விவசாயம் மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

A) 1981 ஆம் ஆண்டு

B) 1982 ஆம் ஆண்டு

C) 1983 ஆம் ஆண்டு

D) 1984 ஆம் ஆண்டு

(குறிப்பு – துவக்க காலத்திலிருந்தே மத்திய ரிசர்வ் வங்கி விவசாய கடன்கள் வழங்க தனித் துறையை ஏற்படுத்தியது. பின்னர் விவசாய மேம்பாட்டு கழகம் என்ற அமைப்பு இருந்த போதிலும், இந்திய ரிசர்வ் வங்கி விவசாய முன்னேற்றத்தை விரிவு செய்து கிராம முன்னேற்றத்திற்காக கடன்களை விரிவுபடுத்தும் நோக்கில், விவசாயம் மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கியை (National Bank for Agriculture and Rural Development – NABARD) 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தோற்றுவித்தது.)

104) நபார்டு வங்கி வழங்கும் மூன்றடுக்கு கூட்டுறவு கடன் முறையில் கீழ்க்கண்ட வங்கிகளில் எது இல்லை?

A) மாநில கூட்டுறவு வங்கி

B) மத்திய கூட்டுறவு வங்கி

C) கிராம கூட்டுறவு வங்கி

D) துவக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம்

(குறிப்பு – விவசாயம் மற்றும் ஊரக மேம்பாட்டு இற்கான தேசிய வங்கி சுருக்கமாக நபார்டு (NABARD) வங்கி என அழைக்கப்படுகிறது. விவசாய மறு கடன் மேம்பாட்டு கழகத்தின் பணிகள் முழுமையும், வட்டார ஊரக வங்கிகளின் கடன் பணிகளையும் தானே ஏற்று செய்து வருகிறது. அதன் பிறகு அனைத்து விவசாய கடன்களுக்கான தலைமை அமைப்பாக நபார்டு வங்கி செயல்பட்டு வருகிறது.)

105) நபார்டு வங்கியின் தலைவராக உள்ளவர் யார்?

A) இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்

B) இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்

C) மத்திய நிதி அமைச்சர்

D) மத்திய நிதி குழு தலைவர்

(குறிப்பு – நபார்டு வங்கி மேலாண்மை பொருத்தவரை இந்திய அரசின் மைய இயக்குனர் குழுவில் இருந்து நபார்டு வங்கியின் இயக்குனர் குழுவுக்கு மூவரை பரிந்துரைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் நபார்டு வங்கியின் தலைவராக இருப்பார்.)

106) நபார்டு வங்கியின் மூலதனம் கீழ்கண்டவற்றுள் எது?

A) இந்திய ரிசர்வ் வங்கி 25%, இந்திய அரசு 75%

B) இந்திய ரிசர்வ் வங்கி 50%, இந்திய அரசு 50%

C) இந்திய ரிசர்வ் வங்கி 75%, இந்திய அரசு 25%

D) எல்லாமே தவறு

(குறிப்பு – நபார்டு வங்கியின் மூலதனம் இந்திய அரசு வங்கி மற்றும் இந்திய அரசு ஆகியவை சரி பகுதியாக வழங்கியுள்ளது. அதாவது இந்திய ரிசர்வ் வங்கி 50%, இந்திய அரசு 50% நபார்டு வங்கிக்கு மூலதனமாக வழங்கியுள்ளது.)

107) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கியும் அதன் துணை அமைப்புகளும் விவசாய மற்றும் ஊரக முன்னேற்றத்திற்காக எந்தெந்த பணிகளை ஆற்றி வந்ததோ பணிகள் அனைத்தையும் நபார்டு வங்கி மேற்கொண்டு வருகின்றன.

கூற்று 2 – நபார்டு வங்கி கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்களின் பங்கு முதலீட்டை வழங்கும் பொருட்டு மாநில அரசுகளுக்கு 20 ஆண்டு நீண்ட கால கடன்களை வழங்குகிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கியும் அதன் துணை அமைப்புகளும் விவசாய மற்றும் ஊரக முன்னேற்றத்திற்காக எந்தெந்த பணிகளை ஆற்றி வந்ததோ பணிகள் அனைத்தையும் நபார்டு வங்கி மேற்கொண்டு வருகின்றன. நபார்டு வங்கியானது மாநில கூட்டுறவு வங்கிகள், வட்டார ஊரக வங்கிகள், நிலவள வங்கிகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட இதர நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு குறுகிய கால மத்திய கால மற்றும் நீண்ட கால கடன்களை வழங்குகிறது.நபார்டு வங்கி கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்களின் பங்கு முதலீட்டை வழங்கும் பொருட்டு மாநில அரசுகளுக்கு 20 ஆண்டு நீண்ட கால கடன்களை வழங்குகிறது.

108) நபார்டு வங்கி கீழ்க்காணும் எந்த தொழில் நடவடிக்கைகளுக்கு மறு கடனை வழங்குகிறது?

I. விவசாயம்

II. சிறு தொழில்கள்

III. குடிசை மற்றும் கிராம தொழில்கள்

A) I க்கு மட்டும்

B) II, III க்கு மட்டும்

C) I, III க்கு மட்டும்

D) இவை அனைத்திற்கும்

(குறிப்பு – நபார்டு வங்கி ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அனைத்து வகையான உற்பத்தி மற்றும் முதலீட்டுக்காக விவசாயம், சிறுதொழில்கள், குடிசை மற்றும் கிராமத் தொழில்கள், கைவினைத் தொழில்கள் மற்றும் இதர தொழில் நடவடிக்கைகளுக்கான மறுக்கடனை வழங்குகிறது.)

109) கீழ்காணும் எந்த மக்கள் நலன் சார்ந்த அலுவல்களை ஒருங்கிணைத்து செயலாற்றும் நடவடிக்கைகளை நபார்டு வங்கி மேற்கொண்டுள்ளது?

I. திட்டக்குழு

II. மைய அரசு

III. மாநில அரசு

A) I மட்டும்

B) II மட்டும்

C) III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – மைய அரசு, மாநில அரசுகள், திட்டக் குழு (நிதி ஆயோக்) மற்றும் மைய மாநில அரசுகளின் சிறு தொழில், குடிசை மற்றும் கிராமத் தொழில்கள், கைவினைத் தொழில்கள், இதர மிக சிறு தொழில்களுக்கு உதவும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து செயலாற்றும் நடவடிக்கைகளை நபார்டு வங்கி மேற்கொண்டுள்ளது.)

110) நபார்டு வங்கி கீழ்க்காணும் எந்த கூட்டுறவு வங்கி தவிர்த்து பிற கூட்டுறவு வங்கிகளை ஆய்வு செய்யும் பணிகளை செய்கிறது?

I. வட்டார ஊரக வங்கிகள்

II. துவக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்

A) I மட்டும்

B) II மட்டும்

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – நபார்டு வங்கியானது, வட்டார வட்டார ஊரக வங்கிகள் மற்றும் துவக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை தவிர்த்து அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் ஆய்வு செய்யும் பணிகளை செய்கிறது. வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான ஆய்வுகளை மேம்படுத்தும் விதமாக ஆய்வு மற்றும் வளர்ச்சி நிதியை பராமரிக்கிறது.)

111) தொழில் துறைக்கான நிதி மற்றும் மேம்பாட்டிற்காக இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் கீழ்க்கண்டவற்றுள் எது?

A) இந்திய தொழில் நிதிக் கழகம்

B) இந்திய தொழில் கடன் மற்றும் முதலீட்டுக் கழகம்

C) இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி

D) இவை அனைத்தும்

(குறிப்பு – தொழில் நிதியினை வணிக வங்கிகள் வழங்கினாலும் அதன் கடன் அளவு கடந்த கால அளவும் குறைவாகவே இருந்து வந்தது. வங்கிகள் பெரும்பாலும் பொதுமக்களிடம் குறுகிய கால வைப்புகளை பெறுவதால் அவைகள் பெரும்பாலும் குறுகிய கால கடன் களை அளிக்க மட்டுமே முன் வந்து கொண்டிருந்தன.ஆகவே தொழில்துறைக்கான நீண்ட கால கடன் பெறுவதற்கான ஆதாரங்கள் தேவைபட்டது.தொழில் துறைக்கான நிதி மற்றும் மேம்பாட்டிற்காக மேற்கண்ட நிறுவனங்கள் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டன.)

112) இந்திய அளவில் தொழில் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுள் முதன்மையாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் எது?

A) இந்திய தொழில் நிதிக் கழகம்

B) இந்திய தொழில் கடன் மற்றும் முதலீட்டுக் கழகம்

C) இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – தொழில் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவன சங்கிலி தொடரில் முதன்மையாக ஆரம்பிக்கப்பட்டது, இந்திய தொழில் நிதிக் கழகம் ஆகும். பொதுத்துறை, தனியார் துறை, இணை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் தொழில் துறையில் ஈடுபடவோ அல்லது விரிவுபடுத்தவோ இந்திய தொழில் நிதி கழகம் (IFCI)நிதி உதவி அளிக்கிறது.)

113) இந்திய தொழில் நிதிக் கழகம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

A) 1946ஆம் ஆண்டு

B) 1947ஆம் ஆண்டு

C) 1948ஆம் ஆண்டு

D) 1949ஆம் ஆண்டு

(குறிப்பு – தொழில் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவன சங்கிலி தொடரில் முதன்மையாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இந்திய தொழில் நிதிக் கழகம் (IFCI) ஆகும். பாராளுமன்ற சட்டப்படி இது 1948ம் ஆண்டு ஜூலை ஒன்றாம் நாள் அமைக்கப்பட்டது.)

114) இந்திய தொழில் நிதிக் கழகம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இந்திய தொழில் நிதி கழகம் இந்திய ரூபாய் மற்றும் வெளிநாட்டு பணத்தில் நீண்ட கால கடன்களை வழங்குகிறது.

கூற்று 2 – வெளியிடப்பட்ட சமவுரிமை பங்குகள், முன்னுரிமை பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களுக்கு இந்திய தொழில்நிதி கழகம் ஒப்புதல் அளிக்கிறது.

கூற்று 3 – இறக்குமதி செய்யப்படும் மற்றும் இந்தியாவிலிருந்து வாங்கப்படும் தொழில்துறை இயந்திரங்களுக்கான பணத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து அந்நாட்டின் பலத்தில் வாங்கப்படும் கடன்களுக்கான உத்தரவாதத்தையும் இந்திய தொழில் நிதி கழகம் அளிக்கிறது. மேலும் இந்திய தொழில் நிதி கழகமானது சம உரிமை பங்குகள் முன்னுரிமை பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை வாங்குகிறது.)

115) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – மைய அரசால் தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்கள் என்று அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில், தொழில் தொடங்க நிதியினை குறைந்த வட்டி விகிதங்களில் இந்திய தொழில்நிதிக் கழகம் வழங்குகிறது.

கூற்று 2 – பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் தொழில் துறையில் ஈடுபடவோ அல்லது விரிவுபடுத்தவோ இந்திய தொழில்நிதிக் கழகம் நிதி உதவி செய்கிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் தொழில் துறையில் ஈடுபடவோ அல்லது விரிவுபடுத்தவோ இந்திய தொழில்நிதிக் கழகம் நிதி உதவி செய்கிறது. இத்தகைய நிதி உதவிகள் புதிய தொழில் திட்டங்களை ஏற்படுத்தவோ, விரிவாக்கம் செய்யவோ, பரவலாக்கம் செய்யவோ அல்லது ஏற்கனவே உள்ள இயந்திரங்களை புனரமைப்பு செய்யவும் நவீனப்படுத்தவும் அளிக்கப்படுகிறது.)

116) இந்திய தொழில் நிதிக் கழகம் தனக்கான நிதியை கீழ்காணும் எந்த வழியில் பெறுகிறது?

I. கடன் பத்திரங்களை சந்தையில் வெளியிடுவதன் மூலம்

II. இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி மற்றும் மைய அரசிடம் கடனாக பெறுவதன் மூலம்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் அல்ல

(குறிப்பு – இந்திய தொழில் நிதிக் கழகம் தனக்கான நிதியை பின்வரும் வழிகளில் பெறுகிறது.1) கடன் பத்திரங்களை சந்தையில் வெளியிடுவதன் மூலம், 2) இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி மற்றும் மைய அரசிடம் கடனாக பெறுவதன் மூலம், 3) பாதுகாப்பான வெளிநாட்டுக் கடனை வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு மூலதன சந்தையில் இருந்து பெறுகிறது.)

117) இந்திய தொழில் கடன் மற்றும் முதலீட்டுக் கழகம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

A) 1951ஆம் ஆண்டு

B) 1953ஆம் ஆண்டு

C) 1955ஆம் ஆண்டு

D) 1957ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்திய தொழில் கடன் மற்றும் முதலீட்டு கழகம் 1955 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் நாள் ஒரு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. உலக வங்கியில் இருந்து பெறப்படும் இந்திய தொழில் கடன்களை முறைப்படுத்தி அளிப்பதும், மூலதனச் சந்தையை கட்டமைப்பதும் இக்கழகத்தின் நோக்கமாகும்.)

118) இந்திய தொழில் கடன் மற்றும் முதலீட்டுக் கழகம் தோன்றியதில் தொடர்பு இல்லாதவர்கள் யார்?

A) இந்திய அரசு

B) உலக வங்கி

C) அமெரிக்க அரசு

D) ரஷ்ய அரசு

(குறிப்பு – இந்திய அரசு, உலக வங்கி மற்றும் அமெரிக்க அரசு ஆகியவற்றால் நியமிக்கப்பட்ட மூவர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்திய தொழிற்கடன் மற்றும் முதலீட்டு கழகம்(Industrial Credit and Investment Corporation of India – ICICI) 1955 ஆம் ஆண்டு ஒரு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது.

119) இந்திய தொழில் கடன் டு முதலீட்டு கழகத்தின் பணிகள் எது?

I. தொழில் நிறுவனங்களுக்கு உதவுதல்

II. அந்நிய செலாவணி கடன்கள் வழங்குதல்

III. கடன் பெற சான்று வழங்குதல்

IV. வீட்டுவசதி கடன்கள் வழங்குதல்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – ஐசிஐசிஐ (ICICI) வங்கியின்பணிகளாவன தொழில் நிறுவனங்களுக்கு உதவுதல் அன்னிய செலாவணி கடன்கள் வழங்குதல், வர்த்தக வங்கிபணிகள், கடன் பெற சான்று வழங்கல், திட்டங்களை நிறைவேற்ற ஏற்பாடு செய்தல், வீட்டு வசதி கடன் வழங்குதல் மற்றும் குத்தகை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவை ஆகும்.)

120) துவக்கத்தில் இந்திய தொழில் கடன் மற்றும் முதலீட்டு கழகத்தின் மூலதனம் யாரிடம் இருந்தது?

A) தனியார் நிறுவனங்கள்

B) தனியார் அமைப்புகள்

C) பொதுமக்கள்

D) இவர்கள் அனைவரிடத்திலும்

(குறிப்பு – ஆரம்ப காலகட்டத்தில், இந்திய தொழில் கடன் மற்றும் முதலீட்டு கழகத்தின் மூலம் தனியார் நிறுவனங்கள் தனியார் அமைப்புகள் மற்றும் பொது மக்களிடம் இருந்தது. ஆனால் தற்பொழுது இந்திய தொழில் கடன் மற்றும் முதலீட்டு கழகம் தேசியமயமாக்கப்பட்டு விட்டது.)

121) கீழ்க்காணும் எந்த கழகத்தின் கடனானது, வழங்கப்பட்ட கடன்களில் 50 சதவீதம் வெளிநாட்டு பலமாகவே வழங்கப்பட்டுள்ளது?

A) இந்திய தொழில் நிதிக் கழகம்

B) இந்திய தொழில் கடன் மற்றும் முதலீட்டுக் கழகம்

C) இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – இந்திய தொழில் கடன் மற்றும் முதலீட்டு கழகத்தின் முக்கிய இயல்புகளில் ஒன்று வெளிநாட்டு கடன் பத்திரத்தை பெற்று தொழில் வளர்ச்சிக்கு உதவுவது ஆகும். இதன் துவக்கத்திலிருந்து வழங்கப்பட்ட கடன்களில் 50% வெளிநாட்டு பணமாகவே வழங்கப்பட்டுள்ளது. இந்த கழகம் வெளிநாடுகளிலிருந்து நிதி வசதியை பெறுவதால் இது சாத்தியமாகிறது.)

122) தொழில் கடன்கள் வழங்கும் பல்வேறு நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் ஒரு தலைமை நிறுவனமாக உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது எது?

A) இந்திய தொழில் நிதிக் கழகம்

B) இந்திய தொழில் கடன் மற்றும் முதலீட்டுக் கழகம்

C) இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – வங்கிகள் உள்ளிட்ட தொழில் கடன்கள் வழங்கும் பல்வேறு நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் ஒரு தலைமை நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும் என்ற முதன்மை நோக்கத்தின் அடிப்படையில் இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி (Industrial Development Bank of India) துவங்கப்பட்டது.)

123) கீழ்க்காணும் எந்த ஆண்டு முதல் இந்திய தொழில் கடன் மற்றும் முதலீட்டு கழகம் தனக்கான நிதியை பன்னாட்டு மூலதன சந்தையில் இருந்து பெறுகிறது?

A) 1971 முதல்

B) 1972 முதல்

C) 1973 முதல்

D) 1974 முதல்

(குறிப்பு – உலக வங்கி இந்திய தொழில் கடன் மற்றும் முதலீட்டு கழகத்திற்கு கடன் வழங்குவதில் தனிப்பெரும் நிறுவனமாக உள்ளது.1973 ஆம் ஆண்டு முதல் இது தனக்கான நிதியை பன்னாட்டு மூலதன சந்தையில் இருந்து பெறுகிறது. பெரும்பாலான இந்திய ரூபாய்கள் திரட்டப்படும் நிதி கடன் பத்திரங்கள் மூலம் மூலதன சந்தையில் இருந்து திரட்டப்படுகிறது.)

124) எந்த ஆண்டு வரை இந்திய தொழில் மேம்பாட்டு கழகம் இந்திய ரிசர்வ் வங்கியின் முழு துணை அமைப்பாக இருந்தது?

A) பிப்ரவரி 15, 1974 வரை

B) பிப்ரவரி 15, 1975 வரை

C) பிப்ரவரி 15, 1976 வரை

D) பிப்ரவரி 15, 1977 வரை

(குறிப்பு – இந்திய தொழில் மேம்பாட்டு கழகமானது, பிப்ரவரி 15, 1976 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் முழு துணை அமைப்பாக இருந்தது. பின்னர் இது பிரிக்கப்பட்டு அதே ஆண்டின் பிப்ரவரி 16 முதல் இந்திய அரசிற்கு சொந்தமான தன்னாட்சி பெற்ற ஒரு கழகமாக மாறியது.)

125) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி மற்ற தொழில் நிறுவனங்களுக்கு நிதி அளிக்கிறது.

கூற்று 2 – இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாகவோ அல்லது மற்ற நிதியளிக்கும் நிறுவனங்களுடன் இணைந்து நேரடியாகவோ கடன் வழங்குகிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் முக்கிய பணிகள் இரு பிரிவுகளாக தொகுக்கப்பட்டுள்ளன. 1) மற்ற தொழில் நிதி நிறுவனங்களுக்கு நிதி அளிப்பது, 2) தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாகவோ அல்லது மற்ற நிதியளிக்கும் நிறுவனங்களுடன் இணைந்து நேரடியாக கடன் வழங்குவது போன்றவை இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் முக்கிய பணிகளாகும்.)

126) வளர்ச்சி உதவி நிதி என்ற ஒரு சிறப்பு நிதியை கீழ்க்காணும் எந்த வங்கி உருவாக்கியுள்ளது?

A) இந்திய ரிசர்வ் வங்கி

B) இந்திய தொழில் கடன் மற்றும் முதலீட்டுக் கழகம்

C) இந்திய தொழில் நிதிக் கழகம்

D) இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி

(குறிப்பு – இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் சிறப்பு செயல்பாடாக வளர்ச்சி உதவி நிதி (Development Assistant Fund ) என்ற ஒரு சிறப்பு நிதியை உருவாகியுள்ளது. இந்த நிதி அதிக முதலீட்டையும், குறைந்த எதிர்பார்க்கப்படும் வருவாயையும் கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் நோக்கத்தில் ஏற்பட்டதாகும்.)

127) ஏற்றுமதி இறக்குமதி வங்கி (EXIM-Bank)எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

A) 1980 ஆம் ஆண்டு

B) 1981 ஆம் ஆண்டு

C) 1982 ஆம் ஆண்டு

D) 1983 ஆம் ஆண்டு

(குறிப்பு – மார்ச், 1982ஆம் ஆண்டு ஏற்றுமதி இறக்குமதி வங்கி(Export Import bank – EXIM) துவங்கப்படும் வரை ஏற்றுமதிக்கான நிதி உதவியையும் இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி (IDBI) வழங்கி வந்தது.)

128) மாநில தொழில் நிதி கழக சட்டம் எந்த ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்டது?

A) 1950 ஆம் ஆண்டு

B) 1951 ஆம் ஆண்டு

C) 1952 ஆம் ஆண்டு

D) 1953 ஆம் ஆண்டு

(குறிப்பு – 1951ஆம் ஆண்டு இந்திய அரசால் இயற்றப்பட்ட மாநில தொழில் நிதி கழக சட்டத்தின்படி பல்வேறு மாநிலங்களில் மாநில தொழில் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அந்தந்த மாநிலங்களில் சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு ஏற்படுத்துவது இந்த கழகங்களின் நோக்கமாகும்)

129) கீழ்காணும் எந்த தொகைக்குள் பங்கு மூலதனத்தையும், இருப்புகளையும் கொண்ட நிறுவனங்களுக்கு மாநில தொழில் நிதி கழகங்கள் கடன் மற்றும் உதவிகளை வழங்குகிறது?

A) ரூ 1 கோடிக்குள்

B) ரூ 2 கோடிக்குள்

C) ரூ 3 கோடிக்குள்

D) ரூ 4 கோடிக்குள்

(குறிப்பு – ஒரு கோடி ரூபாய்க்குள் பங்கு மூலதனத்தையும், இருப்புகளையும் கொண்ட நிறுவனங்களுக்கு மாநில தொழில் நிதி கழகங்கள் கடன்கள் மற்றும் உதவிகளை வழங்குகின்றது. மாநில தொழில் நிதி கழகங்கள் வரி நிதியாக இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியிடமிருந்து கடன் பெறுகிறது)

130) மாநில தொழில் நிதி கழகங்களால் அதிகபட்சம் எத்தனை ரூபாய் கடனாக வழங்கப்படுகிறது?

A) அதிகபட்சம் ரூ 20 லட்சம்

B) அதிகபட்சம் ரூ 30 லட்சம்

C) அதிகபட்சம் ரூ 45 லட்சம்

D) அதிகபட்சம் ரூ 60 லட்சம்

(குறிப்பு – ஒரு கோடி ரூபாய்க்குள் பங்கு மூலதனத்தையும், இருப்புகளையும் கொண்ட நிறுவனங்களுக்கு மாநில தொழில் நிதி கழகங்கள் கடன்கள் மற்றும் உதவிகளை வழங்குகின்றது. அதிகபட்சமாக ஒரு தொழில் நிறுவனத்திற்கு ரூபாய் 60 லட்சம் நிதியாக வழங்கப்படுகிறது. மாநிலத் தொழில் நிதி கழகங்கள், கடன் பத்திரங்களை விற்பதன் மூலம் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியிடமிருந்து தற்காலிக கடன்களை பெறுகிறது.)

131) கீழ்க்கண்டவற்றுள் எது மாநில அரசுகளினால் அமைக்கப்படுவது ஆகும்?

A) மாநில கூட்டுறவு வங்கி

B) மாநில தொழில் மேம்பாட்டு கழகம்

C) மாநில தொழில்துறை வங்கி

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் (Small Industrial Development Corporation -SIDCO)மாநில அரசுகளினால் அமைக்கப்படுவது ஆகும். இக்கழகம் அந்தந்த மாநில அரசுகளுக்கே உரிமையானதாகும். தொழில் நிறுவனங்களுக்கான கடன்களை அளிப்பதோடு மாநிலத்தில் தொழில் மயமாதல் தூண்டுவதும் ஆகும்.)

132) மாநில தொழில் மேம்பாட்டு கழகம் கீழ்காணும் எந்த வகையில் நிதி உதவி அளிக்கிறது?

I. கடன்கள்

II. ஒப்புறுதியளித்தல்

III. பங்குகள் மற்றும் கடன் பத்திரம் வாங்குதல்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்துக்கும்

(குறிப்பு – மாநில தொழில் மேம்பாட்டு கழகம் தொழில் நிறுவனங்களுக்கு கடன்கள், ஒப்புறுதி அளித்தல் மற்றும் நேரடியாக பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் வாங்குதல் மூலம் நிதி வசதி அளிக்கிறது. கூடுதலாக தொழில்நுட்ப விசாரணைகள், திட்டத்தினை கண்டறிதல், திட்ட சாத்தியக்கூறுகளை ஆராய்தல், தெரிந்தெடுத்தல் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி வழங்குதல் என பல மேம்பாட்டு பணிகளையும் மேற்கொள்கிறது.)

133) மாநில தொழில் மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் இணைந்து செயல்படுத்தும் கூட்டு திட்டங்களில், கழகத்தின் சார்பாக எத்தனை சதவீதம் முதலீடு செய்யப்படுகிறது?

A) 20 சதவீதம்

B) 22 சதவீதம்

C) 24 சதவீதம்

D) 26 சதவீதம்

(குறிப்பு – தனியார் பங்கேற்பு அனுமதிக்கும் கூட்டு திட்டங்களையும் மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் ஊக்குவிக்கிறது. இவ்வகையான கூட்டு திட்டங்களில் முதலீடு கழகத்தின் சார்பில் 26% தனியாரின் 25 சதவிகிதம் மற்றும் பொதுமக்களின் 49 சதவிகிதம் ஆகியன பங்களிப்பாக இருக்கும். பல்வகை அடிப்படை வசதிகளை கொண்ட தொழிற்பேட்டைகளை அமைப்பது மற்றும் புதிய தொழில் மையங்களை அமைப்பது என இக்கழகத்தின் பணிகள் விரிவடைகின்றன.)

134) மாநில அரசுகளின் மானியங்களை நிர்வகிப்பது எது?

A) மாநில தொழில் மேம்பாட்டு கழகம்

B) இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி

C) இந்திய தொழில் கடன் மற்றும் முதலீட்டுக் கழகம்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – மாநில தொழில் மேம்பாட்டு கழகம் மாநில அரசுகளின் மானியங்களை நிர்வகிக்கிறது. மேலும் மாநில தொழில் மேம்பாட்டு கழகங்கள் இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியிலிருந்து மறுநிதியினை பெறுகிறது. பங்கு கடன் பத்திரங்கள் மூலம் கடன் பெறுவது, வைப்புக்களை ஏற்பது போன்ற பணிகளையும் இது மேற்கொள்கிறது.)

135) பணவியல் கொள்கை என்பது கீழ்க்காணும் எதனை மேலாண்மை செய்யும் நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ளது?

I. பண அளிப்பு

II. வட்டிவிகிதம்

A) I மட்டும்

B) II மட்டும்

C) இரண்டையும்

D) இரண்டும் அல்ல

(குறிப்பு – பண அளிப்பு மற்றும் வட்டி விகிதத்தை மேலாண்மை செய்யும் நோக்கோடு உருவாக்கப்படும் பேரினப் பொருளியல் கொள்கையே பணவியல் கொள்கை எனப்படுகிறது. பேரினப் பொருளியல் கொள்கைகளான பணவீக்கம், நுகர்ச்சி, வளர்ச்சி மற்றும் நீர்மை தன்மை போன்றவற்றை அடைய மேற்கொள்ளும் தேவை சார்ந்த பொருளியல் கொள்கையாகும்.

136) பணவியல் கொள்கையை வகுத்தவர் யார்?

A) ஜார்ஜ் எலியட்

B) மில்டன் ஃபிரைட்மேன்

C) வில்லியம் ஜேக்கப்

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – 1976 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற மில்டன் ஃபிரைட்மேன் என்பவரால் பணவியல் கொள்கையை முன்னெடுத்துச் செல்லப்பட்டது. அவர் ஒரு பணவியலாளராக இருந்தும், 1929 துவங்கி 1930களில் நிலவிய உலகப்பெரும் மந்ததுக்கு காரணம் அமெரிக்க மைய வங்கியான பெடரல் ரிசர்வ் சிஸ்டத்தின் பணவியல் கொள்கையில் ஏற்பட்ட குளறுபடிகள்தான் என்பதை கூறினார்.)

137) விரிவாக்க பணக்கொள்கை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) தீர்க்கமான பணக்கொள்கை

B) மலிவு பணக்கொள்கை

C) குறுகிய பணக்கொள்கை

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – விரிவாக்க பணக் கொள்கை என்பது (Expansionary Monetary Policy) மலிவு பணக் கொள்கையாகும் (Cheap Money Policy). இதில் பணவியல் அதிகார அமைப்பான மைய வங்கி அதன் கருவிகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை நிலைப்படுத்துகிறது.நடப்பு குறுகிய கால வட்டி விகிதத்தை விட குறைவான வட்டி விகிதத்தையும் வழக்கத்தை விட வேகமான பண அளிப்பையும் ஏற்படுத்துவது விரிவாக்க கொள்கையாகும்.)

138) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – சுருக்க பணக்கொள்கை, அருமை பணக் கொள்கை என அழைக்கப்படுகிறது.

கூற்று 2 – சுருக்க பண கொள்கை என்பது குறுகிய கால வட்டி விகிதம் நடப்பு வட்டி விகிதத்தை விட அதிகபடுத்துவது, பண அளிப்பினை குறைப்பது அல்லது சுருக்குவது ஆகும்.

கூற்று 3 – சுருக்க பல கொள்கையின் மூலம் பொருளாதாரத்தின் குறுகிய கால வளர்ச்சியை குறைத்து பணவீக்கத்தை குறைக்கிறது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – சுருக்கப்பட்ட கொள்கை (Contractionary Monetary Policy)வேலைவாய்ப்பின்மையை அதிகரித்து, நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்கள் கடன் வாங்குவதையும் செலவு செய்வதையும் குறைப்பதன் மூலம் பொருளாதாரத்தை பின்னோக்கி திரும்புவது ஆகும்.)

139) மலிவு பணக் கொள்கை பற்றிய கீழ்காணும் நிலைகளுள் எது தவறானது?

A) கடன் பெறுதல் கடினம்

B) நுகர்வோர் அதிகம் நுகர்வர்

C) வியாபாரம் விசாலமாகும்

D) அதிக மக்கள் வேலை பெறுவார்கள்

(குறிப்பு – பணக் கொள்கையின் இரண்டு நிலைகள் ஆவன, பணவீக்கம் மற்றும் மந்த நிலை ஆகும். இதில் பணவீக்கம் என்பது மலிவுபணக் கொள்கையுடன் தொடர்புடையது. மலிவு பணக்கொள்கை பின்வரும் இயல்புகளைக் கொண்டது. கடன் பெறுதல் எளிது, நுகர்வோர் அதிகம் நுகர்வர், வியாபாரம் விசாலமாகும், அதிக மக்கள் வேலை பெறுவார்கள் மற்றும் மக்கள் அதிகம் செலவு செய்வார்கள்.)

140) அருமை பணக் கொள்கையின் இயல்புகளுள் அல்லாதது எது?

A) நுகர்வோர் அதிகமாக நுகர்வர்

B) வியாபார விரிவாக்கம் தள்ளிப்போகும்

C) வேலையின்மை அதிகரிக்கும்

D) உற்பத்தி குறையும்

(குறிப்பு – அருமை பண கொள்கையின் இயல்புகள் ஆவன, கடன் பெறுதல் கடினம், நுகர்வோர் குறைவாக நுகர்வர், வியாபார விரிவாக்கம் தள்ளிப்போகும், வேலையின்மை அதிகரிக்கும் மற்றும் உற்பத்தி குறையும்.)

141) கீழ்க்காணும் பணவியல் கொள்கையின் குறிக்கோள்களுள் தவறானது எது?

A) பரிவர்த்தனை விகிதத்தில் நிலைத்தன்மை

B) பணத்தின் நடுநிலைத் தன்மை

C) குறைவான வேலைவாய்ப்பு

D) பொருளாதார வளர்ச்சி

(குறிப்பு – பணவியல் கொள்கையின் குறிப்பிடப்பட்ட குறிக்கோளாக கருதப்படுபவை, பணத்தின் நடுநிலைத் தன்மை, பரிவர்த்தனை விகிதத்தில் நிலைத்தன்மை,விலையை நிலைப்படுத்துதல், முழு வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் செலுத்து சமநிலையில் சமநிலையைப் பேணுதல்.)

142) பணத்தின் நடுநிலை தன்மை பற்றி விவரித்த நிபுணர்களுள் அல்லாதவர் கீழ்கண்டவரில் யார்?

A) விக்ஸ்டெட்

B) ஹேயக்

C) வில்லியம்சன்

D) ராபர்ட்சன்

(குறிப்பு – பொருளியர்களான விக்ஸ்டெட், ஹேயக் மாறும் ராபர்ட்சன் ஆகியோர் பணத்தின் நடுநிலை பற்றி விவரித்த முக்கிய நிபுணர்கள் ஆவார்கள். அவர்கள் பணவியல் அதிகார அமைப்பு பொருளாதாரத்தில் பணம் நடுநிலைத்தன்மை நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினர்.)

143) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – எப்பொழுது ஒரு நாட்டின் செலுத்து சமநிலையில் சமனற்ற நிலை தோன்றுகிறதோ அப்பொழுது தங்க நகர்வின் காரணமாக அது தானாகவே சரிசெய்து கொள்ளும்.

கூற்று 2 – எப்பொழுது தங்க உள்வருகிறதோ அப்பொழுது பணமும் கடனும் விரிவடைகிறது. எப்பொழுது தங்கம் வெளி செல்கிறதோ அப்பொழுது பணமும் கடனும் சுருங்குகிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – பரிவர்த்தனை விகித நிலைத்தன்மை என்பது பணவியல் கொள்கையின் பாரம்பரியமான நோக்கமாகும். பல்வேறு நாடுகளில் பொன் திட்டம் அமலில் இருந்த காலத்தில் இது ஒரு முக்கிய நோக்கமாக இருந்தது. எப்பொழுது ஒரு நாட்டின் செலுத்து சமநிலையில் சமனற்ற நிலை தோன்றுகிறதோ அப்பொழுது தங்க நகர்வின் காரணமாக அது தானாகவே சரிசெய்து கொள்ளும்.)

144) விலை நிலைத்தன்மை ஏற்படுத்துவது பணவியல் கொள்கையின் முக்கிய நோக்கம் என்று கூறிய பொருளியலாளர்கள் யார்?

I. காஸல்

II. கீன்ஸ்

III. ஹேயக்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – பொருளியலாளர்கள் காஸல், கீன்ஸ் போன்றவர்கள் விலை நிலைத்தன்மை ஏற்படுத்துவது பணவியல் கொள்கையின் முக்கிய நோக்கம் என்கின்றனர். விலை நிலைத்தன்மை பொது மக்களிடம் பொதுவான நம்பிக்கையை ஏற்படுத்தும். மேலும் இது வணிக நடவடிக்கையில் அதிகரித்து ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்.)

145) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – விலை நிலைத்தன்மை மக்களிடையே சமமான வருவாய் மற்றும் சொத்து பங்கீடுகளை செய்யும்.

கூற்று 2 – விலை நிலைத்தன்மையின் தொடர் விளைவாக வளர்ச்சிக்கான பொது அலையும் சமுதாய நலனும் நிறுவப்படும்.

கூற்று 3 – விலை நிலைத்தன்மை என்பது விலை மாறாமல் நிலையாக இருப்பதோ அல்லது விலை தேக்கம் அடைந்து இருப்பது அல்ல.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – விலை நிலைத்தன்மை என்பது விலை மாறாமல் நிலையாக இருப்பதோ(Price Rigidity) அல்லது விலை தேக்கமடைந்து(Price Stagnation) இருப்பதோ அல்ல. ஒரு மிதமான விலையேற்றம் என்பது பொருளாதார வளர்ச்சியின் ஊக்க சக்தியாக இருக்கும். இந்த மிதமான விலையேற்றம் என்பது கிட்டதட்ட நிலையான விலையின் பெரும்பாலான பண்புகளையும் தன்னகத்தே கொண்டதாக இருக்கும்.)

146) கீன்ஸின் ” வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணத்திற்கான பொதுக் கோட்பாடு” என்னும் நூல் எந்த ஆண்டு வெளியானது?

A) 1935 ஆம் ஆண்டு

B) 1936 ஆம் ஆண்டு

C) 1937 ஆம் ஆண்டு

D) 1938 ஆம் ஆண்டு

(குறிப்பு – உலகப் பெரு மந்தத்தின் பொழுது வேலைவாய்ப்பின்மை மிக வேகமாக அதிகரித்தது. இது சமுதாய அளவில் அபாயகரமானதும், பொருளாதார அளவில் வீணடிப்பையும், அறநெறியளவில் வருந்தத்தக்கதாகவும் இருந்தது. ஆகவே முழு வேலை வாய்ப்பு என்பது பணவியல் கொள்கையின் முக்கிய குறிக்கோளாக மாறியது.)

147) பொருளாதார வளர்ச்சி என்பது நீண்டகாலத்தில்________________ அதிகரித்துச் செல்லும் நடவடிக்கையாகும்.

A) உண்மை தலா வருவாய்

B) தனிநபர் வருவாய்

C) தேசிய வருவாய்

D) மாநில வருவாய்

(குறிப்பு – பொருளாதார வளர்ச்சி என்பது நீண்ட காலத்தில் உண்மை தலா வருவாய் (Real per capita income) அதிகரித்து செல்லும் நடவடிக்கை ஆகும். இது மனித விருப்பத்தை நிறைவு செய்யும் பொருள் உற்பத்தியின் அளவு அதிகரிப்பதை உணர்த்துவது ஆகும். ஆகவே சமநிலை பணஅளவு, உற்பத்தி அளவுகள், சாதகமான சேமிப்பு முதலீடு ஆகிய சூழ்நிலைகளை பராமரித்து அதன் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது பணவியல் கொள்கையின் குறிக்கோளாக அமைகிறது.)

148) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – மின்னணு வங்கியானது நிகழ்நிலை வங்கி முறை என அழைக்கப்படுகிறது..

கூற்று 2 – மின்னணு வங்கி முறையில் ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தங்களது பல்வேறு நிதி பரிவர்த்தனைகளை வங்கி அல்லது நிறுவனத்திற்கு நேரில் செல்லாமல் இணையதளத்திலேயே நிகழ்த்துவது ஆகும்.

கூற்று 3 – பாரம்பரியமான கிளை வங்கி முறை போல் அல்லாது இவ்வங்கி முறையில் மையப்படுத்தப்பட்ட வங்கிகளுக்குள் இணைப்பினை ஏற்படுத்தி பரிவர்த்தனைகள் மற்றும் இதர வங்கி நடவடிக்கைகள் நடைபெறுகிறது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – மின்னணு வங்கியானது (E-banking) நிகழ்நிலை வங்கி முறை(Online Banking) அல்லது இணைய வங்கி முறை (Internet banking)என்றும் அழைக்கப்படுகிறது.மின்னணு வங்கி முறையில் ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தங்களது பல்வேறு நிதி பரிவர்த்தனைகளை வங்கி அல்லது நிறுவனத்திற்கு நேரில் செல்லாமல் இணையதளத்திலேயே நிகழ்த்துவது ஆகும்.)

149) கீழ்கண்டவற்றுள் எந்த முறையை பயன்படுத்தி ஒரு வாடிக்கையாளர் தனது கணக்கில் இருக்கும் பணத்தை மற்றொரு வாடிக்கையாளருக்கு விரைவாக அனுப்ப முடியும்?

I. நிகழ்நேர பெருந்திரள் தீர்வுகள் (RTGS)

II. தேசிய மின்னணுவழி பணப் பரிவர்த்தனை(NEFT)

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – விரைவாக பணத்தை அனுப்பும் பண பரிமாற்றங்கள் இருவகைப்படும். அவை நிகழ்நேர பெருந்திரள் தீர்வுகள்(Real Time Gross Settlements – RTGS) மற்றும் தேசிய மின்னணு வழி பணபரிவர்த்தனை(National Electronic Funds Transfer-NEFT) என்பன ஆகும். இம் முறைகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனைகாக காத்திருக்கும் நேரம் ஏதும் இல்லாமல் நிகழ்நேரத்திலேயே கணக்கீடு ஏதுமின்றி நடைபெறுகிறது.)

151) தேசிய மின்னணுவழி பணப் பரிவர்த்தனை(NEFT) எத்தனை மணி நேரத்திற்கு ஒரு முறை மேற்கொள்ள முடியும்?

A) அரை மணி நேரத்திற்கு ஒரு முறை

B) ஒருமணி நேரத்திற்கு ஒரு முறை

C) இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை

D) மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை

(குறிப்பு – தேசிய மின்னணு வழி பண பரிவர்த்தனை(National Electronic Funds Transfer-NEFT) என்பது வலைதள இணைப்பின் மூலமாக ஏதேனும் ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் மூலம் மற்றொரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கணக்கு வைத்திருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பணம் பெற்றுக் கொள்ளும் முறையாகும். இந்த முறை மூலம் அரைமணிக்கு ஒரு முறையான தொகுப்பாக பண பரிவர்த்தனையை மேற்கொள்கிறது. அனைத்து வங்கி வேலை நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மொத்தம் 23 தொகுப்புகளாக பண பரிவர்த்தனை நடைபெறுகிறது.)

152) NEFT முறையில் பணத்தை பெறுபவர் கீழ்காணும் எந்த நேரத்திற்குள் பெற்றுக்கொள்ள முடியும்?

A) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை

B) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை

C) காலை 9 மணி முதல் மாலை 6.30மணி வரை

D) காலை 8 மணி முதல் மாலை 6.30மணி வரை

(குறிப்பு – அனைத்து வங்கி வேலை நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மொத்தம் 23 தொகுப்புகளாக பண பரிவர்த்தனை நடைபெறுகிறது. இதில் பண பரிவர்த்தனை நடைபெற்ற அதே நாளில் பணத்தை பெறுபவர் காலை 8 மணி முதல் மாலை ஆறு முப்பது வரையிலான தொகுப்பில் பெற்றுக் கொள்ளலாம் ஆனால் மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் இரவு 7 மணி வரையிலான நேரத்தில் பரிமாற்றம் நிகழ்ந்தால், அதே வேலைநாளிலோ அல்லது அடுத்த வேலைநாளிலோ முடிவுரும்.)

153) நிகழ்நேர பெருந்திரள் தீர்வுகள்(RTGS) என்னும் பண பரிவர்த்தனை முறையில் குறைந்தபட்ச அனுப்பும் தொகை எவ்வளவாக இருக்க வேண்டும்?

A) ரூ 50 ஆயிரம்

B) ரூ 1 லட்சம்

C) ரூ 1.5 லட்சம்

D) ரூ 2 லட்சம்

(குறிப்பு – நிகழ்நேர பெருந்திரள் தீர்வுகள் (RTGS) என்னும் பணபரிவர்த்தனை முறையின் மூலம் செய்யும் பண பரிவர்த்தனையில் குறைந்தபட்ச அனுப்பும் தொகை ரூபாய் 2 லட்சமாக இருக்க வேண்டும். இது நிகழ் நேரத்தில் பரிமாற்றம் செய்யும் முறையாகும் எனவே விரைவாக செயல்படும். காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த முறையை பயன்படுத்தி பணபரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்)

154) தானியங்கி பணம் வழங்கும் இயந்திர முறை எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?

A) 1965 ஆம் ஆண்டு

B) 1966 ஆம் ஆண்டு

C) 1967 ஆம் ஆண்டு

D) 1968 ஆம் ஆண்டு

(குறிப்பு – தானியங்கி பணம் வழங்கும் இயந்திர முறை(Automated Teller Machine – ATM) 1967ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த தலைமுறை தானியங்கி பணம் வழங்கும் முறை நேரடி தொடர்பினை தவிர்ப்பதாக இருக்கும். இந்த நேரடி தொடர்பற்ற ATM முறை ஸ்மார்ட் கைப்பேசி வசதியில் உள்ள ஆப்பிள் பே, கூகுள் வாலட் போன்ற பணப்பரிவர்த்தனை முறைகளை போன்றது ஆகும்.)

155) இந்தியாவில் பயோமெட்ரிக் முறையில் அறிந்து பணம் வழங்கும் முறைகள் எந்த வங்கி ஏடிஎம்களில் பயன்படுத்தப்படுகிறது?

A) பரோடா வங்கி

B) இந்தியன் வங்கி

C) கத்தார் தேசிய வங்கி

D) பஞ்சாப் தேசிய வங்கி

(குறிப்பு – சில வெளிநாடுகளில் நேரடி தொடர்பற்ற ஏடிஎம் முறைகள் கிடைக்கின்றன. இந்தியாவில் பயோமெட்ரிக் முறையில் அறிந்து பணம் வழங்கும் முறைகள் கத்தார் தேசிய வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பயன்படுத்தப்படுகிறது. இம்முறைகள் ஏடிஎம்களில் நடைபெறும் பாதுகாப்பற்ற பரிவர்த்தனையின் சிக்கல்களை தவிர்ப்பதாக அமைகிறது.)

156) பணம் வழங்கும் வங்கி (Payment Bank) என்னும் முறை எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?

A) 2013 ஆம் ஆண்டு

B) 2014 ஆம் ஆண்டு

C) 2015 ஆம் ஆண்டு

D) 2016 ஆம் ஆண்டு

(குறிப்பு – பே.டி.எம் என்பது இந்திய மின்னணு வர்த்தக பணம் வழங்கும் முறை ஆகும். பணம் வழங்கும் வங்கி(Payment Bank) என்பதன் விரிவாக்கம் தான் பே.டி.எம் (Paytm). இது ஆகஸ்ட் 2015 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்று ஆரம்பிக்கப்பட்டதாகும்.)

157) Paytm என்பது கீழ்க்கண்டவர்களில் யாருடைய 51 சதவீத பங்கை கொண்டது?

A) விஜய் ரெட்டி

B) விஜய் சர்மா கேல்கர்

C) விஜய ராவ்

D) விஜய் ஷர்மா ஷங்கர்

(குறிப்பு – பணம் வழங்கும் வங்கி(Paytm) என்பது விஜய் சர்மா கேல்கர் என்பவரின் 51 சதவீத பங்குகள், one97 கம்யூனிகேஷன்ஸ் (one97 communications ) நிறுவனத்தின் 39 சதவீத பங்குகள் மற்றும் one97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தனி நிறுவனம் ஆகும்.)

158) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1- பற்று அட்டை (Debit Card) என்பது வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை தானியங்கி இயந்திரத்தின் மூலம் பணம் எடுப்பது, பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்களை வழங்குவது போன்ற பண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் அட்டை ஆகும்.

கூற்று 2 – கடன் அட்டை(Credit Card) என்பது அந்த அட்டையை வழங்கிய நிறுவனத்தில் உறுதியளித்த நபர்களால் பெறப்படும் அட்டை ஆகும்.

கூற்று 3 – கடன் அட்டையை கொண்டு பொருட்கள் மற்றும் பணிகளுக்கான கட்டணங்களை செலுத்தலாம். அவ்வாறு செலுத்தப்பட்ட தொகையுடன் ஒத்துக்கொள்ளப்பட்ட கட்டணத்தையும் சேர்த்து பின்னர் கடன் வழங்கிய நிறுவனத்திற்கு அவர் செலுத்த வேண்டும்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – பற்று அட்டை (Debit Card) என்பது வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை தானியங்கி இயந்திரத்தின் மூலம் பணம் எடுப்பது, பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்களை வழங்குவது போன்ற பண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் அட்டை ஆகும்.கடன் அட்டை(Credit Card) என்பது அந்த அட்டையை வழங்கிய நிறுவனத்தில் உறுதியளித்த நபர்களால் பெறப்படும் அட்டை ஆகும். கடன் அட்டை முறை என்பது கடன் வழங்கும் முறையின் ஒரு நீட்சி ஆகும்.)

159) கடன் வாங்குபவர் தொடர்ந்து ____________வட்டியோ அல்லது கடன் தொகையின் பகுதியையோ செலுத்தாமல் இருந்தால் அது செயல்படாத சொத்து எனப்படுகிறது.

A) 50 நாட்கள்

B) 60 நாட்கள்

C) 75 நாட்கள்

D) 90 நாட்கள்

(குறிப்பு – கடன் வாங்குபவர் தொடர்ந்து 90 நாட்களில் வட்டியோ அல்லது கடன் தொகையின் பகுதியையோ செலுத்தாமல் இருந்தால் அதை செயல்படாத சொத்து (Non-Performiஎன்கிறோம். இவ்வகையான செயல்படா சொத்துக்கள் நிதி நிறுவனங்களுக்கு மிகப்பெரும் பிரச்சனையாக இருக்கும். ஏனெனில் அவைகள் தங்கள் வருமானத்திற்கு கடனுக்கான வட்டியை சார்ந்து இருக்கும்.)

160) எந்த ஆண்டு மைய அரசின் அமைச்சரவைகுழு கூடி இந்திய ஸ்டேட் வங்கி குழுவின் 5 இணை வங்கிகளை இணைப்பதற்கான முடிவை எடுத்தது?

A) 2012 இல்

B) 2015 இல்

C) 2017 இல்

D) 2018 இல்

(குறிப்பு – 2017 ஆம் ஆண்டு மைய அரசின் அமைச்சரவை குழு கூடி இந்திய ஸ்டேட் வங்கி குழுவின் ஐந்து இணை வங்கிகளை இணைப்பதற்கான முடிவை எடுத்தது. இதற்காக சட்ட மசோதா பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.)

161) ஐந்து இணை வங்கிகளுடன் பாரத மகிளா வங்கியும் இணைக்கப்பட்டு பாரத ஸ்டேட் வங்கியாக எந்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது?

A) ஏப்ரல் 1, 2014 முதல்

B) ஏப்ரல் 1, 2015 முதல்

C) ஏப்ரல் 1, 2016 முதல்

D) ஏப்ரல் 1, 2017 முதல்

(குறிப்பு – 2017 ஆம் ஆண்டு மைய அரசின் அமைச்சரவை குழு கூடி இந்திய ஸ்டேட் வங்கி குழுவின் ஐந்து இணை வங்கிகளை இணைப்பதற்கான முடிவை எடுத்தது. இதற்காக சட்ட மசோதா பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஐந்து இணை வங்கிகளுடன் பாரத மகிளா வங்கியும் இணைக்கப்பட்டு பாரத ஸ்டேட் வங்கியாக ஏப்ரல் 1, 2017 முதல் செயல்படத் துவங்கியது.)

162) பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்ட இணை வங்கி அல்லாதது எது?

A) பைக்கனர் ஸ்டேட் வங்கி

B) பாட்டியாலா ஸ்டேட் வங்கி

C) கான்பூர் ஸ்டேட் வங்கி

D) மைசூர் ஸ்டேட் வங்கி

(குறிப்பு – 2017 ஆம் ஆண்டு 5 இணை வங்கிகளும், பாரதிய மகிளா வங்கியும் இணைக்கப்பட்டு பாரத ஸ்டேட் வங்கியாக செயல்பட தொடங்கியது. அந்த ஐந்து இணை வங்கிகள் ஆவன, பைக்கனர் ஸ்டேட் வங்கி, ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி மற்றும் திருவாங்கூர் ஸ்டேட் வங்கி என்பன ஆகும்)

163) வங்கிகள் இணைப்பிற்கு பிறகு பாரத ஸ்டேட் வங்கியின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை எவ்வளவு ஆக உயர்ந்தது?

A) 30 கோடியாக

B) 33 கோடியாக

C) 35 கோடியாக

D) 37 கோடியாக

(குறிப்பு – ஐந்து வங்கிகளுடன் இந்தூர் ஸ்டேட் வங்கி, சௌராஷ்டிரா ஸ்டேட் வங்கி ஆகிய இரு வங்கிகள் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தன. இந்த வங்கிகள் இணைப்பிற்கு பிறகு பாரத ஸ்டேட் வங்கியின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 37 கோடியாகவும், கிளைகளின் எண்ணிக்கை 24 ஆயிரமாகவும், தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்களின் எண்ணிக்கை 60 ஆயிரம் ஆகவும் இருக்கிறது.)

164) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – பண சந்தை(Money Market) என்பது அதிக நீர்மை தன்மையை கொண்டது.

கூற்று 2 – பண சந்தை என்பது குறுகிய காலத்தில் முதிர்ச்சியுறுவதுமான நிதி கருவிகளை கையாளுவது ஆகும்.

கூற்று 3 – ஒரு நாள் முதற்கொண்டு ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் நிதி கருவிகள் இச்சந்தையில் கையாளப்படுகிறது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – அதிக நீர்மை தன்மையை கொண்டதும், குறுகிய காலத்தில் முதிர்ச்சியுறுவதுமான நிதி கருவிகளைக் கையாளும் சந்தையே பணச்சந்தை எனப்படுகிறது. ஒரு நாள் முதற்கொண்டு ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் நிதி கருவிகள் இச்சந்தையில் கையாளப்படுகிறது. இங்கு கையாளப்படும் நிதி கருவிகள் அரசு பத்திரங்கள், வணிகப் பத்திரங்கள், அழைப்பு பணம், வைப்புச் சான்றுகள், வங்கியாளர் ஏற்புகள், மாற்று சீட்டுகள், மறு வாங்கல் ஒப்பந்தங்கள், கருவூல உறுதிச் சீட்டுகள், அன்னிய செலாவணி போன்றவை ஆகும்)

165) கீழ்க்காணும் எந்த வங்கிகள் குறுகிய கால நிதியை பண சந்தையில் அளிக்கின்றது?

I. இந்திய ரிசர்வ் வங்கி

II. வணிக வங்கிகள்

III. மேம்பாட்டு வங்கிகள்

IV. வட்டார வங்கிகள்

V. வெளிநாட்டு வங்கிகள்

A) I, II, III, IV மட்டும்

B) II, III, IV, V மட்டும்

C) I, V மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – இந்திய ரிசர்வ் வங்கி வணிக வங்கிகள், மேம்பாட்டு வங்கிகள் வட்டார வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் இதர அமைப்பு சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவை குறுகிய கால நிதியை பணசந்தையில் அளிக்கின்றது.)

166) நீண்ட கால நிதி கருவிகளை வாணிபம் செய்யும் சந்தை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) முதலீட்டுச் சந்தை

B) மூலதனச் சந்தை

C) பணச்சந்தை

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – நீண்ட கால நிதி கருவிகளை வாணிபம் செய்யும் சந்தை மூலதன சந்தை (Capital Market) எனப்படுகிறது. உற்பத்தி நோக்கில் நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு தேவைப்படும் நிதியை திரட்டும் இடமாக மூலதன சந்தை இருக்கிறது. மூலதன சந்தையில் பயன்படுத்தப்படும் பாரம்பரியமான நிதி கருவிகள் கடன் பத்திரங்களும், சம பங்குகளும் ஆகும்.)

167) மூலதன சந்தையின் உறுப்பினர்களை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?

A) இரண்டு வகைகளாக

B) மூன்று வகைகளாக

C) நான்கு வகைகளாக

D) ஐந்து வகைகளாக

(குறிப்பு – மூலதன சந்தையில் தனி முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், நிதி கழகங்கள், வங்கிகள், அரசு, பங்கு சந்தைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களை அளிப்பவர்கள் கடன் பெறுபவர்கள் மற்றும் வசதி செய்யும் நிறுவனங்கள் என மூன்று வகையாக பிரிக்கலாம்.)

168) இந்தியாவில் பணமதிப்பு நீக்கம் எந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது?

A) 2015 ஆம் ஆண்டு

B) 2016 ஆம் ஆண்டு

C) 2017 ஆம் ஆண்டு

D) 2018 ஆம் ஆண்டு

(குறிப்பு – பணமதிப்பு நீக்கம் என்பது அரசின் சட்டப்பூர்வமான தொகுப்பிலிருந்து குறிப்பிட்ட அலகிலான பணத்தின் மதிப்பை செல்லாது என அறிவிக்கும் செயலாகும். அந்தப் பணம் பணம் சுழற்சியிலிருந்து நீக்கப்பட்டு அந்த இடத்தில் வேறு வடிவிலான பணம் இடம்பெறும். இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 மதிப்பிலான பணங்கள் செல்லாது என அறிவித்தார்.)

169) பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்கள் ஆவன எது?

I. கருப்புப் பணத்தை ஒழிப்பது

II. லஞ்சத்தை தடுப்பது

III. தீவிரவாதத்திற்கு பணம் செல்வதை தடுப்பது.

A) I மட்டும்

B) II மட்டும்

C) III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்கள் ஆவன, கருப்புப் பணத்தை ஒழிப்பது, லஞ்சத்தை தடுப்பது, தீவிரவாதத்திற்கு பணம் செல்வதை தடுப்பது மற்றும் கள்ள பணத்தினை தடுப்பது போன்றவைகள் ஆகும்.)

170) வங்கி கடன் என்பது எதைக் குறிக்கிறது?

A) கடன் பணம் மட்டும்

B) முன் பணம் மட்டும்

C) கடன் பணம் மற்றும் முன்பணம்

D) கடன் பெறுதல்

(குறிப்பு – வங்கி கடன் என்பது கடன் பணம் மற்றும் முன் பணம் பெறுவதை குறிக்கிறது. வங்கி கடன் என்பது வாடிக்கையாளர்களின் அமைப்புகளிலிருந்து தேவைப்படுவோருக்கு அவர்களின் விண்ணப்பம் மற்றும் ஒப்பந்தத்தின் பேரில் கடன் மற்றும் முன் பணம் கொடுப்பது ஆகும்.)

171) 2016ஆம் ஆண்டு பணமதிப்பு நீக்கம் கீழ்க்காணும் எந்த பணத்திற்கு ஏற்படுத்தப்பட்டது?

A) ரூ 500 மட்டும்

B) ரூ 1000 மட்டும்

C) ரூ 500 மற்றும் ரூ 1000

D) ரூ 100, ரூ 500 மற்றும் ரூ 1000

(குறிப்பு – 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரூபாய் 500 மற்றும் 1000 மதிப்பிலான காகித பணம் செல்லாது என அறிவித்தார். அவ்வாறு மதிப்பு நீக்கப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பில் 99% இந்திய ரிசர்வ் வங்கிக்கு திரும்பியது.)

172) நிகழ்நிலை வங்கியகம் என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) இ-வங்கி

B) இணைய வங்கி

C) ஆர்.டி.ஜி.எஸ் (RTGS)

D) நெப்ட் (NEFT)

(குறிப்பு – நிகழ்நேர பெருந்திரள் தீர்வுகள்(Real Time Gross Settlements – RTGS) என்பது பரிவர்த்தனைகாக காத்திருக்கும் நேரம் ஏதுமில்லாமல் நிகழ் நேரத்திலேயே கணக்கீடு ஏதுமின்றி நடைபெறுகிறது. இதன் குறைந்தபட்ச அனுப்பும் தொகை ரூபாய் இரண்டு லட்சம் ஆகும்.)

173) நெறிமுறை தூண்டல் என்பது?

A) உத்தமநிலைப்படுத்துதல்

B) உச்ச நிலைப்படுத்துதல்

C) தூண்டுதல் நடவடிக்கை

D) குறைவு நிலைப்படுத்துதல்

(குறிப்பு – நெறிமுறை தூண்டல் (Moral Suasion) என்பது வணிக வங்கிகளின் கடன் அளவை கட்டுப்படுத்த மைய வங்கி அடிக்கடி கையாளும் ஒரு முறை ஆகும். இந்த முறையின் கீழ் அறிவுரைகளையும் வேண்டுகோளையும் வைப்பதன் மூலம் வணிக நெறிமுறைகளை போதித்து வணிக வங்கிகள் வழங்கும் கடன் கட்டுப்படுத்துகிறது)

174) கீழ்க்கண்டவற்றில் எது பணவியல் கொள்கையை வடிவமைக்கிறது?

A) கூட்டுறவு வங்கிகள்

B) வெளிநாட்டு வங்கிகள்

C) மைய வங்கி

D) வணிக வங்கிகள்

(குறிப்பு – 1929 துவங்கி 1930களில் நிலவிய உலகப்பெருமந்தத்திற்கான காரணம் அமெரிக்க மைய வங்கியான பெடரல் ரிசர்வ் சிஸ்டத்தின் பணவியல் கொள்கையில் ஏற்பட்ட குளறுபடிகள் தான் என்பதை, 1976ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற மில்டன் ஃபிரைட்மேன் என்பவர் தனது ” அமெரிக்க ஐக்கிய அரசுகளின் பணவியல் வரலாறு, 1986-1960″(Monetary History of the United States) என்ற நூலில் மிக தைரியமாக கூறியிருக்கிறார்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!