Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Science Questions

10th Std Science Lesson Wise Questions in Tamil – Part 2

10th Science Lesson 8 Questions in Tamil

8] தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

1) கீழ்க்காண்பனவற்றில் எது அறைவெப்பநிலையில் திட நிலையில் காணப்படாது?

A) மெர்குரி

B) சோடியம்

C) பொட்டாசியம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: பொதுவாக எல்லா உலோகங்களும், அறை வெப்பநிலையில் திட நிலையில் உள்ளவை.(மெர்குரி மற்றும் காலியம் தவிர) .

2) எந்த ஆண்டு ஹென்றி மோஸ்லே என்ற பிரிட்டன் விஞ்ஞானி ஆவர்த்தன வரிசைப்படுத்துதலுக்கு, அணு எண் என்பது சிறந்த அடிப்படை என்ற உண்மையைக் கண்டறிந்தார்?

A) 1911

B) 1912

C) 1915

D) 1917

விளக்கம்: மெண்டலீப் மற்றும் அவரோடு இருந்தவர்களுக்கு அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை அடிப்படை பண்பாக இருக்கிறது என்பது அறியக்கூடாததாய் இருந்தது. 1912ஆம் ஆண்டு ஹென்றி மோஸ்லே என்ற பிரிட்டன் விஞ்ஞானி ஆவர்த்தன வரிசைப்படுத்துதலுக்கு, அணு எண் என்பது சிறந்த அடிப்படை என்ற உண்மையைக் கண்டறிந்தார்.

3) அணுஎண் என்பதற்கு கீழ்க்கண்ட எது பொருத்தமானதாகும்?

A) புரோட்டான்களின் எண்ணிக்கை

B) நியூட்ரான்களின் எண்ணிக்கை

C) புரோட்டன் மற்றும் நியூட்டான்களின் எண்ணிக்கை

D) புரோட்டான் அல்லது எலட்ரான்களின் எண்ணிக்கை

விளக்கம்: அணு எண் என்பது ஒரு அணுவில் உள்ள புரோட்டாகளின் எண்ணிக்கையையோ, அல்லது எலக்ட்ரான்களின் எண்ணிக்கையையோ குறிக்கும்.

4) தனிமங்களின் இயற்பியல் அல்லது வேதியியல் பண்புகள் அவற்றின் எதைச் சார்ந்து அமையும்?

A) நிறை எண்

B) அணு எண்

C) நியூட்ரான்களின் எண்ணிக்கை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: தனிமங்களின் இயற்பயில் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு எண்களைச் சார்ந்து அமையும்.

5) நவீன ஆவர்த்தன அட்டவணை பற்றிய கூற்றுகளில் சரியானது எது?

A) தனிமங்கள் அணு எண் அதிகரிப்பிற்கு ஏற்றாற்போல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

B) தனிமங்கள் நிறை எண் அதிகரிப்பிற்கு ஏற்றாற்போல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

C) தனிமங்கள் அணு எண் அல்லது நிறைஎண் அதிகரிப்பிற்கு ஏற்றாற்போல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

D) தனிமங்கள் அணுஎண் மற்றும் நிறைஎண் அதிகரிப்பிற்கு ஏற்றாற்போல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

விளக்கம்: நவீன ஆவர்த்தன விதியின் படி, தனிமங்கள், அணு எண் அதிகரிப்பிற்கு ஏற்றாற்போல் நவீன அட்டவணையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

6) ஆவர்த்தன அட்டவணையில் எத்தனை தொடர்கள் உள்ளன?

A) 10

B) 9

C) 18

D) 7

விளக்கம்: வேதியில் தனிமங்கள் தங்கள் பண்புகளை உணர்த்தும் வகையில், தொடர்களாகவும், தொகுதிகளாவும், நவீன ஆவர்த்தன அட்டவணையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நவீன ஆவர்த்தன அட்டவணையில் 118 தனிமங்கள் உள்ளன. தனிமங்களின் கிடைமட்ட வரிசைகள் தொடர்களாகும். ஆவர்த்தன அட்டவணையில் மொத்தம் 7 தொடர்கள் உள்ளன.

7) ஆவர்த்தன அட்டவணையில் மொத்தம் எத்தனை தொகுதிகள் உள்ளன?

A) 7

B) 10

C) 18

D) 14

விளக்கம்: ஆவர்த்தன அட்டவணையில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்ட தனிமங்கள், தொகுதிகள் எனப்படும். அட்டவணையில் மொத்தம் 18 தொகுதிகள் உள்ளன.

8) நவீன தனிம வரிசை அட்டவணையில் மிகச்சிறிய தொடர் எது?

A) இரண்டாவது

B) நான்காவது

C) முதலாவது

D) ஏழாவது

விளக்கம்: கிடைமட்ட வரிசைகள் தொடர்கள் ஆகும். நவீன ஆவர்த்தன அட்டவணையில், மொத்தம் 7 தொடர்கள் உள்ளன. இதில் முதல் தொடர் மிகச்சிறிய தொடராகும்.

9) எந்த தொகுதியில் மந்த வாயுக்கள் இடம்பெற்றுள்ளது?

A) 14

B) 17

C) 15

D) 18

விளக்கம்: ஆவர்த்தன அட்டவணையில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்ட தனிமங்கள், தொகுதிகள் எனப்படும். அட்டவணையில் மொத்தம் 18 தொகுதிகள் உள்ளன. இதில் 18-வது தொகுதியில் மந்த வாயுக்கள் இடம்பெற்றுள்ளன.

10) இடைநிலை உலோகங்கள் இடம்பெற்றுள்ள தொகுதி எது?

A) 1-2

B) 3-12

C) 13-15

D) 16-18

விளக்கம்: ஆவர்த்தன அட்டவணையில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்ட தனிமங்கள், தொகுதிகள் எனப்படும். அட்டவணையில் மொத்தம் 18 தொகுதிகள் உள்ளன. இதில் 3-12 வரையில் இடம்பெற்றவை இடைநிலை உலோகங்கள் என்று அழைக்கப்படுகிறது

11) கால்கோஜன் குடும்பம் என்று அழைக்கப்படும் குடும்பம் எது?

A) நைட்ரஜன் குடும்பம்

B) ஆக்ஸிஜன் குடும்பம்

C) கார்பன் குடும்பம்

D) போரான் குடும்பம்

விளக்கம்: ஆவர்த்தன அட்டவணையில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்ட தனிமங்கள், தொகுதிகள் எனப்படும். அட்டவணையில் மொத்தம் 18 தொகுதிகள் உள்ளன. இதில் 16-வது குடும்பம் ஆக்ஸிஜன் குடும்பம் ஆகும். இதுவே கால்கோஜன் குடும்பம் என்று அழைக்கப்படுகிறது.

12) பொருத்துக.

அ. முதல் தொகுதி – 1. காரமண் உலோகம்

ஆ. இரண்டாவது தொகுதி – 2. இடைநிலை உலோகம்

இ. 3-12 தொகுதிகள் – 3. போரான் குடும்பம்

ஈ. 13-வது தொகுதி – 4. கார உலோகம்

A) 1, 3, 4, 2

B) 4, 1, 3, 2

C) 1, 4, 2, 3

D) 4, 1, 2, 3

விளக்கம்: முதல் தொகுதி – கார உலோகம்

இரண்டாவது தொகுதி – காரமண் உலோகம்

3-12 தொகுதிகள் – இடைநிலை உலோகம்

13-வது தொகுதி – போரான் குடும்பம்

13) நான்காம் தொடரில் எத்தனை சாதாரண தனிமங்கள் உள்ளன?

A) 18

B) 10

C) 8

D) 12

விளக்கம்: நான்காம் தொடரில் அணு எண் 19 லிருந்து 36 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு நீண்ட தொடராகும். இதில் 8 சாதாரண தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் உள்ளன.

14) கீழ்க்காணும் எது வெட்டும் கருவிகள் தயாரிக்கப் பயன்படுகின்றன?

A) டியாரலுமின்

B) மெக்னலியம்

C) துருப்பிடிக்காத இரும்பு

D) ஜிங்க்

விளக்கம்: 1. டியுராலுமின்: விமானத்தின் பகுதிகள், ப்ரஷர் குக்கர்கள்.

2. மெக்னலியம்: விமானத்தின் பகுதிகள், அறிவியல் உபகரணங்கள்

3. துருப்பிடிக்காத இரும்பு: பாத்திரங்கள் வெட்டும் கருவிகள், வாகன உதிரிபாகங்கள்.

15) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) முதலாம் தொடர் – 2 தனிமம்

B) ஏழாம் தொடர் – 32 தனிமம்

C) நான்காம் தொடர் – 18 தனிமம்

D) இரண்டாம் தொடர் – 14 தனிமம்

விளக்கம்: முதலாம் தொடர் – 2 தனிமம்

ஏழாம் தொடர் – 32 தனிமம்

நான்காம் தொடர் – 18 தனிமம்

இரண்டாம் தொடர் – 8 தனிமம்

16) நவீன ஆவர்த்தன அட்டவணையின் ஐந்தாவது தொடரில் எத்தனை இடைநிலைத் தனிமங்கள் இடம்பெற்றுள்ளன?

A) 2

B) 8

C) 10

D) 18

விளக்கம்: ஆவர்த்தன அட்டவணையில் ஐந்தாம் தொடரில் அணு எண் 37 லிருந்து 54 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு நீண்ட தொடராகும். இதில் 18 தனிமங்கள் உள்ளன. இவற்றில் 8 சாதாரண தனிமங்களும், 10 இடைநிலைத் தனிமங்களும் உள்ளன.

17) கூற்று: தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு எண்களைச் சார்ந்து அமையும் என்று ஆவர்த்தன விதி வரையறுக்கப்படுகிறது

காரணம்: ஒரு அணுவில் உள்ள புரோட்டானின் எண்ணிக்கை அல்லது எலக்ட்ரானின் எண்ணிக்கையே அதன் அணு எண் எனப்படும்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: அணு எண் என்பது ஒரு அணுவில் உள்ள புரோட்டகளின் எண்ணிக்கையையோ, அல்லது எலக்ட்ரான்களின் எண்ணிக்கையையோ குறிக்கும். ஆகவே ஆவர்த்தன விதியைக் கீழ்க்கண்டவாறு மேம்படுத்தி அறியலாம். “தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு எண்களைச் சார்ந்து அமையும்”.

18) பொருத்துக.

அ. வார்ப்பிரும்பு – 1. ஸ்டவ்கள், கழிவு நீர்க் குழாய்கள், ரேடியேட்டர்கள், கழிவு நீர் சாக்கடை மூடிகள், இரும்பு வேலிகள்

ஆ. எஃகு – 2. கட்டிடக் கட்டுமானங்கள், எந்திரங்கள், மின்கடத்து கம்பிகள், டி.வி. கோபுரங்கள் மற்றும் உலோகக் கலவைகள்

இ. தேனிரும்பு – 3. கம்பிச்சுருள், மின்காந்தங்கள், நங்கூரம்

A) 1, 3, 2

B) 1, 2, 3

C) 2, 3, 1

D) 3, 1, 2

விளக்கம்:

வார்ப்பிரும்பு – 1. ஸ்டவ்கள், கழிவு நீர்க் குழாய்கள், ரேடியேட்டர்கள், கழிவு நீர் சாக்கடை மூடிகள், இரும்பு வேலிகள்

எஃகு – 2. கட்டிடக் கட்டுமானங்கள், எந்திரங்கள், மின்கடத்து கம்பிகள், டி.வி. கோபுரங்கள் மற்றும் உலோகக் கலவைகள்

தேனிரும்பு – 3. கம்பிச்சுருள், மின்காந்தங்கள், நங்கூரம்

19) நவீன ஆவர்த்தன அட்டவணையில் நீண்ட தொடர் எது?

A) முதல் தொடர்

B) இரண்டாம் தொடர்

C) மூன்றாம் தொடர்

D) நான்காம் தொடர்

விளக்கம்: அணு எண் 19லிருந்து 36 வரை கொண்ட தனிமங்கள் இடம்பெற்ற நான்காம் தொடர் ஒரு நீண்ட தொடராகும்.

20) ஆறாம் தொடரில் எத்தனை இடைநிலைத் தனிமங்கள் உள்ளன?

A) 8

B) 10

C) 14

D) 18

விளக்கம்: ஆறாம் தொடர் (அணு எண் 55 லிருந்து 86 வரை) . இது மிக நீண்ட தொடராகும். இதில் ‘Cs’ லிருந்து, ‘Rn’ வரை 32 தனிமங்கள் உள்ளன. இவற்றுள் 8 சாதாரண தனிமங்கள், 10 இடைநிலைத் தனிமங்கள் மற்றும் 14 உள் இடைநிலைத் தனிமங்கள் (லாந்தனைடுகள்) இடம்பெற்றுள்ளன.

21) உலோகக் கலவையை உருவாக்குவதற்கான காரணங்களில் பொருந்தாதது எது?

A) நிறம் மற்றும் வடிவங்களை மாற்றியமைக்க

B) வேதிப்பண்புகளை மாற்றியமைக்க

C) உருகுநிலையைக் குறைக்க

D) கடினத்தன்மையை அதிகரிக்க

விளக்கம்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களும், அலோகங்களும் சேர்ந்த ஒரு படித்தான கலவையே உலோகக்கலவை ஆகும்.

உலோகக்கலவை உருவாக்குவதற்கான காரணங்கள்:

1. நிறம் மற்றும் வடிவங்களை மாற்றியமைக்க

2. வேதிப்பண்புகளை மாற்றியமைக்க

3. உருகுநிலையைக் குறைக்க

4. கடினத்தன்மை மற்றும் இழுவிசையை அதிகரிக்க

5. மின்தடையை அதிகரிக்க

22) தனிம வரிசை அட்டவணையில் ஏழாவது தொடரில் 32 தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் எத்தனை தனிமங்கள் அட்டவணையில் IUPACஆல் உட்படுத்தப்பட்டன?

A) 4

B) 6

C) 2

D) 18

விளக்கம்: ஏழாம் தொடர் (அணு எண் 87 லிருந்து, 118 வரை) ஆறாம் தொடரைப் போல், இதுவும் 32 தனிமங்கள் கொண்டது. சமீபத்தில், நான்கு தனிமங்கள் அட்டவணையில் IUPAC ஆல் உட்படுத்தப்பட்டன.

23) தங்கம் மிகவும் மென்மையான உலோகம் ஆகும். அதனோடு எதை சேர்க்கும்போது அது வலிமையும், பயன்பாடும் அதரிக்கிறது?

A) சில்வர்

B) காப்பர்

C) செம்பு

D) ஈயம்

விளக்கம்: உலோகக் கலவையின் பண்புகள், அதன் உள் அடங்கிய உலோகத்தின் பண்புகளிலிருந்து மாறுபடும். உலோகத்தின் தூய தங்கம் மிக மென்மையான உலோகம். அதோடு சிறிதளவு காப்பரைச் சேர்க்கும் போது, வலிமையும், பயன்பாடும் அதிகரிக்கின்றது.

24) சில்வர் டின் இரசக்கலவை கீழ்க்காணும் எதற்குப் பயன்படுகிறது?

A) பற்குழிகளை அடைக்க

B) புற்றுநோயைக் குணப்படுத்த

C) இதய நோய்களை சரிசெய்ய

D) கல்லீரல் நோய்களை சரிசெய்ய

விளக்கம்: இரசக்கலவை என்பது பாதரசத்துடன், உலோகம் சேர்ந்த கலவையாகும். எலக்ட்ரான்களும், நேர்மின்சுமை கொண்ட உலோக அயனிகளுக்கும் இடைப்பட்ட நிலைமின் கவர்ச்சி விசையால், விளையும் உலோகப் பிணைப்பின் மூலம் இக்கலவைகள் உருவாகின்றன. எ.கா. சில்வர் டின் ரசக்கலவை. இது பற்குழிகள் அடைக்கப்பயன்படுகின்றன.

25) நவீன ஆவர்த்தன அட்டவணையின் ஐந்தாவது தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன?

A) 8

B) 18

C) 32

D) 2

விளக்கம்: ஆவர்த்தன அட்டவணையில் ஐந்தாம் தொடரில் அணு எண் 37 லிருந்து 54 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு நீண்ட தொடராகும். இதில் 18 தனிமங்கள் உள்ளன. இவற்றில் 8 சாதாரண தனிமங்களும், 10 இடைநிலைத் தனிமங்களும் உள்ளன.

26) இரும்பின் பங்கைப் பொறுத்து உலோகக் கலவையை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

A) 2

B) 4

C) 3

D) 5

விளக்கம்: இரும்பின் பங்கைப் பொறுத்து உலோகக் கலவையை இரண்டாகப் பிரிக்கலாம்.

அவை:1. ஃபெரஸ் உலோகக்கலவை: இதில் இரும்பு முக்கியப் பங்களிக்கிறது எ.கா. துருப்பிடிக்காத இரும்பு, நிக்கல், இரும்பு கலவை.

2. ஃபெரஸ் இல்லா உலோகக்கலவை: இதில் இரும்பின் முக்கிய பங்கு இல்லை. எ.கா. அலுமினியக் கலவை, காப்பர் கலவை

27) ஆவர்த்தன அட்டவணையில் ஆறாம் தொகுதி பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

A) சாதாரண தனிமங்கள் – 8

B) இடை நிலைத் தனிமங்கள் – 18

C) உள் இடைநிலைத் தனிமங்கள் – 14

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ஆறாம் தொடர் (அணு எண் 55 லிருந்து 86 வரை) இது மிக நீண்ட தொடராகும். இதில் ‘Cs’ லிருந்து ‘Rn’ வரை 32 தனிமங்கள் உள்ளன. இவற்றுள் 8 சாதாரண தனிமங்கள், 10 இடைநிலைத் தனிமங்கள் மற்றும் 14 உள் இடைநிலைத் தனிமங்கள்(லாந்தனைடுகள்) என ஆகும்.

28) கீழ்க்காண்பனவற்றில் எது அதிக வினைபடும் உலோகம் அல்ல?

A) சோடியம்

B) கால்சியம்

C) மெக்னீசியம்

D) ஜிங்க்

விளக்கம்: அதிக வினைபடம் உலோகங்கள்: Na, K, Ca, Mg, Al

சாதாரணமாக வினைபடும் உலோகங்கள்: Zn, Fe, pb, Cu

குறைவாக வினைபடும் உலோகங்கள்: Ag, Hg

29) பொருத்துக.

அ. வார்ப்பிரும்பு – 1. 2-4.5 சதவீதம் கார்பன்

ஆ. எஃகு – 2. 0.25 சதவீதத்திற்கு கீழ் கார்பன்

இ. தேனிரும்பு – 3. 0.25-2 சதவீதம் கார்பன்

A) 1, 3, 2

B) 1, 2, 3

C) 2, 1, 3

D) 2, 3, 1

விளக்கம்: வார்ப்பிரும்பு – 2-4.5 சதவீதம் கார்பன்

எஃகு – 0.25-2 சதவீதம் கார்பன்

தேனிரும்பு – 0.25 சதவீதத்திற்கு கீழ் கார்பன்

30) கீழ்க்காணும் எது விமான பகுதி தயாரிப்புடன் தொடர்புடையது அல்ல?

A) டியாரலுமின்

B) மெக்னலியம்

C) துருப்பிடிக்காத இரும்பு

D) ஜிங்க்

விளக்கம்: டியுராலுமின்: விமானத்தின் பகுதிகள், ப்ரஷர் குக்கர்கள்.

மெக்னலியம்: விமானத்தின் பகுதிகள், அறிவியல் உபகரணங்கள்

துருப்பிடிக்காத இரும்பு: பாத்திரங்கள், வெட்டும் கருவிகள், வாகன உதிரிபாகங்கள்

31) மந்த வாயுக்களின் எலக்ட்ரான் நாட்டம் என்ன?

A) 2

B) 4

C) 8

D) 0

விளக்கம்: மந்த வாயுக்கள் எலக்ட்ரான்களை ஏற்கும் தன்மையற்றவை. ஏனெனில், அவற்றின் வெளிமட்டத்தில் உள்ள s மற்றும் p ஆர்பிட்டால்கள் முழுமையாக எலக்ட்ரான்களால் நிரம்பி உள்ளவை. அதனால் மேலும் ஒரு எலக்ட்ரானை சேர்ப்பது இயலாது. எனவே இவற்றின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜிய மதிப்பை பெறுகின்றன.

32) இரசக்கலவை என்பது___________உடன் உலோகம் சேர்ந்த கலவையாகும்?

A) அலுமினியம்

B) பாதரசம்

C) பொட்டாசியம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: இரசக்கலவை என்பது பாதரசத்துடன், உலோகம் சேர்ந்த கலவையாகும். எலக்ட்ரான்களும், நேர்மின்சுமை கொண்ட உலோக அயனிகளுக்கும் இடைப்பட்ட நிலைமின் கவர்ச்சி விசையால், விளையும் உலோகப் பிணைப்பின் மூலம் இக்கலவைகள் உருவாகின்றன. எ.கா. சில்வர் டின் ரசக்கலவை. இது பற்குழிகள் அடைக்கப்பயன்பகின்றன.

33) கூற்று: ஆவர்த்தன அட்டவணையில் முதல் தொடர் மிகச்சிறிய தொடர் என்று அழைக்கப்படுகிறது.

காரணம்: இதில் இரண்டு தனிமங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை விளக்கம்: தனிமங்களின் கிடைமட்ட வரிசைகள் தொடர்களாகும். ஆவர்த்தன அட்டவணையில் மொத்தம் 7 தொடர்கள் உள்ளன. இதில் முதலாம் தொடர் அணு எண் 1 மற்றும் 2 உடைய ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் தனிமங்களை மட்டுமே பெற்றுள்ளன. எனவே இது மிகச்சிறிய தொடராகும்.

34) நவீன தனிம வரிசை அட்டவணையில் 2-வது தொகுதியில் கீழ்க்கண்ட எது இடம்பெற்றுள்ளது?

A) கார உலோகம்

B) கார்பன் குடும்பம்

C) நைட்ரஜன் குடும்பம்

D) காரமண் உலோகம்

விளக்கம்: ஆவர்த்தன அட்டவணையில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்ட தனிமங்கள், தொகுதிகள் எனப்படும். அட்டவணையில் மொத்தம் 18 தொகுதிகள் உள்ளன. இதில் இரண்டாவது தொகுதியில் காரமண் உலோகங்கள் இடம்பெற்றுள்ளன.

35) பொருத்தமற்ற ஒன்றை தெரிவு செய்க.

A) டியுராலுமின் – ப்ரஷர் குக்கர்

B) மெக்னலியம் – அறிவியல் உபகரணங்கள்

C) துருப்பிடிக்காத இரும்பு – பாத்திரங்கள்

D) நிக்கல் இரும்பு – வெட்டும் கருவிகள்

விளக்கம்: டியுராலுமின் – விமானத்தின் பகுதிகள், ப்ராஷர் குக்கர்கள்

மெக்னலியம் – விமானத்தின் பகுதிகள், அறிவியல் உபகரணங்கள்

துருப்பிடிக்காத இரும்பு – பாத்திரங்கள், வெட்டும் கருவிகள், வாகன உதிரிபாகங்கள்

நிக்கல் இரும்பு – கம்பிகள், விமானத்தின் உதிரிப்பாகங்கள், உந்திகள்

36) பித்தளை என்ற உலோகக் கரைசலில்____________ என்பது கரைபொருள் ______________என்பது கரைப்பான் ஆகும்.

A) ஜிங்க், காப்பர்

B) காப்பர், ஜிங்க்

C) ஜிங்க், காட்மியம்

D) காப்பர், காட்மியம்

விளக்கம்: பித்தளை என்ற உலோகக் கரைசலில் ஜிங்க் என்பது கரைபொருள். காப்பர் என்பது கரைப்பான்.

37) லாந்தனைடுகள் எனப்படும் உள்இடைநிலைத் தனிமங்கள் எந்த தொடரில் காணப்படுகிறது?

A) நான்காம் தொடர்

B) ஆறாம் தொடர்

C) ஏழாம் தொடர்

D) ஐந்தாம் தொடர்

விளக்கம்: ஆறாம் தொடர்(அணு எண் 55 லிருந்து 86 வரை) . இது மிக நீண்ட தொடராகும். இதில் ‘Cs’ லிருந்து, ‘Rn’ வரை 32 தனிமங்கள் உள்ளன. இவற்றுள் 8 சாதாரண தனிமங்கள், 10 இடைநிலைத் தனிமங்கள் மற்றும் 14 உள் இடைநிலைத் தனிமங்கள் (லாந்தனைடுகள்) இடம்பெற்றுள்ளன.ள

38) கேத்தோடு பாதுகாப்பு என்பது உலோக அரிமானத்தை தடுக்கும் ஒரு முறையாகும். இதில் பாதுகாக்க வேண்டிய உலோகத்தை______________ ஆக கொண்டு மின் முலாம் பூசுவர்.

A) ஆனோடு

B) கேத்தோடு

C) தியாக உலோகம்

D) மேற்காணும் எதுவுமில்லை.

விளக்கம்: கேத்தோடு பாதுகாப்பு: எளிதில் அரிமானம் அடையும் உலோகத்தை ஆனோடாகவும், பாதுகாக்க வேண்டிய உலோகத்தை கேத்தோடாகவும் கொண்டு, மின் வேதி வினைக்கு உட்படுத்தும் நிகழ்வு கேத்தோடு பாதுகாத்தல் ஆகும். இவ்வினையில் எளிதில் அரிபடும் உலோகம் தியாக உலோகம் எனப்படும்.

39) கீழ்க்காண்பவனவற்றில் சரியான தொடரைக் கண்டுபிடி.

A) அணு எண் 17 கொண்ட தனிமம் மூன்றாம் தொகுதியில் இடம்பெற்றிருக்காது

B) இரண்டாம் தொடரில் ஆர்கான் என்ற தனிமம் இடம்பெற்றுள்ளது

C) 15-வது தொகுதி நைட்ரஜன் குடும்பம் ஆகும்.

D) 3 முதல் 12 வரையிலான தொடர்கள் இடைநிலை உலோகங்கள் கொண்டவை ஆகும்.

விளக்கம்: அணு எண் 17 கொண்ட தனிமம் மூன்றாம் தொகுதியில் இடம்பெற்றிருக்கும்.

மூன்றாம் தொடரில் ஆர்கான் என்ற தனிமம் இடம்பெற்றுள்ளது

15-வது தொகுதி நைட்ரஜன் குடும்பம் ஆகும்.

3 முதல் 12 வரையிலான தொகுதியில் இடைநிலை உலோகங்கள் கொண்டவை ஆகும்.

40) ஆவர்த்தன அட்டவணையில் ஐந்தாவது தொடரில் எத்தனை இடைநிலைத் தனிமங்கள் இடம்பெற்றுள்ளன?

A) 8

B) 10

C) 18

D) 14

விளக்கம்: ஆவர்த்தன அட்டவணையில் ஐந்தாம் தொடரில் அணு எண் 37 லிருந்து 54 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு நீண்ட தொடராகும். இதில் 18 தனிமங்கள் உள்ளன. இவற்றில் 8 சாதாரண தனிமங்களும், 10 இடைநிலைத் தனிமங்களும் உள்ளன.

41) ஆவர்த்தன அட்டவணையின் நீண்ட தொடரில் எத்தனை இடைநிலை தனிமங்கள் உள்ளன?

A) 18

B) 10

C) 8

D) 12

விளக்கம்: நான்காம் தொடரில் அணு எண் 19 லிருந்து 36 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு நீண்ட தொடராகும். இதில் 8 சாதாரண தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் உள்ளன.

42) துரு என்பது கீழ்க்கண்ட எதைக் குறிக்கிறது?

A) நீரேறிய பெரக் ஆக்ஸைடு

B) நீரேறிய பெரிக் ஆக்ஸைடு

C) நீரேறிய பெரஸ் ஆக்ஜைடு

D) நீரேறிய பெட்ராஸ் ஆக்ஸைடு

விளக்கம்: துரு என்பது நீரேறிய ஃபெரிக் ஆக்சைடு என வேதியில் முறையில் அழைக்கப்படும். துருப்பிடித்தல் ஆனது, இரும்பின் புறப்பரப்பில், செம்பழுப்பு நிற நீரேறிய ஃபெரிக் ஆக்சைடை உருவாக்குகிறது

43) அறிவியல் உபகரணங்கள் தயாரிக்கப்பயன்படுவது எது?

A) டியுராலுமின்

B) மெக்னலியம்

C) வெண்கலம்

D) பித்தளை

விளக்கம்: மெக்னலியம்: விமானத்தின் பகுதிகள், அறிவியல் உபகரணங்கள்

44) ஆவர்த்தன அட்டவணையில் ஹீலியம் எந்த தொடரில் இடம்பெற்றுள்ளது?

A) முதல் தொடர்

B) இரண்டாம் தொடர்

C) மூன்றாம் தொடர்

D) ஏழாம் தொடர்

விளக்கம்: தனிமங்களின் கிடைமட்ட வரிசைகள் தொடர்களாகும். ஆவர்த்தன அட்டவணையில் மொத்தம் 7 தொடர்கள் உள்ளன. இதில் முதல் தொடரில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் மட்டும் உள்ளது.

45) அனேக உலோகங்கள், கடின தன்மையையும் வலிமையையும் பெற்றவை. ஆனால் கீழ்காணும் ஒன்று இதற்கு பொருந்தாது?

A) மெர்குரி

B) காலியம்

C) சோடியம்

D) மெக்னீசியம்

விளக்கம்: அனேக உலோகங்கள், கடின தன்மையையும் வலிமையையும் பெற்றவை. (சோடியம், பொட்டாசியம் தவிர. இவை கத்தியால் வெட்ட இயலும். மென்மை பெற்றவை) .

46) நவீன தனிம வரிசை அட்டவணையில் இரண்டாவது தொகுதியில் கீழ்க்கண்ட எது இடம்பெற்றுள்ளது?

A) கார உலோகம்

B) கார்பன் குடும்பம்

C) நைட்ரஜன் குடும்பம்

D) காரமண் உலோகம்

விளக்கம்: ஆவர்த்தன அட்டவணையில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்ட தனிமங்கள், தொகுதிகள் எனப்படும். அட்டவணையில் மொத்தம் 18 தொகுதிகள் உள்ளன. இதில் இரண்டாவது தொகுதியில் கார உலோகங்கள் இடம்பெற்றுள்ளன.

47) ஆவர்த்தன அட்டவணையில் நான்காவது தொடர் பற்றிய கூற்றுகளில் தவறான கூற்றை தெரிவு செய்க.

A) அணு எண் 19 லிருந்து 36 வரையுள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன.

B) இது ஒரு சிறிய தொடராகும்

C) 18 தனிமங்களைக் கொண்ட தொடர்

D) 8 சாதாரண தனிமங்கள் மற்றும் 10 இடைநிலைத் தனிமங்கள் இடம்பெற்றுள்ளன

விளக்கம்: அணு எண் 19 லிருந்து 36 வரையுள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு நீண்ட தொடராகும். 18 தனிமங்களைக் கொண்ட தொடர். 8 சாதாரண தனிமங்கள் மற்றும் 10 இடைநிலைத் தனிமங்கள் இடம்பெற்றுள்ளன

48) உலோகக் கலவையை உருவாக்குவதற்கான காரணங்களில் பொருந்தாதது எது?

A) இழுவிசையை அதிகரிகரிக்க

B) கடினத்தன்மையை அதிகரிக்க

C) மின்தடையை குறைக்க

D) உருகுநிலையை குறைக்க

விளக்கம்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களும், அலோகங்களும் சேர்ந்த ஒரு படித்தான கலவையே உலோகக்கலவை ஆகும்.

உலோகக்கலவை உருவாக்குவதற்கான காரணங்கள்:

1. நிறம் மற்றும் வடிவங்களை மாற்றியமைக்க

2. வேதிப்பண்புகளை மாற்றியமைக்க

3. உருகுநிலையைக் குறைக்க

4. கடினத்தன்மை மற்றும் இழுவிசையை அதிகரிக்க

5. மின்தடையை அதிகரிக்க

49) ஜிங்க் மற்றும் காப்பரை உருக்கிச் சேர்த்தல் மூலம் பெறப்படுவது எது?

A) இரும்பு

B) பித்தளை

C) காட்மியம்

D) வெண்கலம்

விளக்கம்: ஜிங்க் மற்றும் காப்பரை உருக்கிச் சேர்த்தல் மூலம் பெறப்படுவது பித்தளை ஆகும்.

50) ஆறாம் தொடரில் எத்தனை சாதாரணத் தனிமங்கள் உள்ளன?

A) 10

B) 14

C) 18

D) 8

விளக்கம்: ஆறாம் தொடர் (அணு எண் 55 லிருந்து 86 வரை) . இது மிக நீண்ட தொடராகும். இதில் ‘Cs’ லிருந்து, ‘Rn’ வரை 32 தனிமங்கள் உள்ளன. இவற்றுள் 8 சாதாரண தனிமங்கள், 10 இடைநிலைத் தனிமங்கள் மற்றும் 14 உள் இடைநிலைத் தனிமங்கள்(லாந்தனைடுகள்) இடம் பெற்றுள்ளன.

51) துருப்பிடிக்காத இரும்பிற்கு பொருந்தாதது எது?

A) பாத்திரங்கள் தயாரிக்க

B) வெட்டும் கருவிகள் தயாரிக்க

C) வாகன உதிரிபாகங்கள் தயாரிக்க

D) உந்திகள் தயாரிக்க

விளக்கம்: துருப்பிடிக்காத இரும்பு: பாத்திரங்கள், வெட்டும் கருவிகள், வாகன உதிரிபாகங்கள்

நிக்கல் இரும்பு: கம்பிகள் விமானத்தின் உதிரிப்பாகங்கள், உந்திகள்

52) ஆவர்த்தன அட்டவணையில் மொத்தம் 18 தொகுதிகள் உள்ளன. இதில் ஹேலஜன்கள் இடம்பெற்றுள்ள தொகுதி எது?

A) 18

B) 17

C) 15

D) 13

விளக்கம்: ஆவர்த்தன அட்டவணையில் உள்ள 18 தொகுதிகளில் 17-வது தொகுதியில் ஹேலஜன்கள் இடம்பெற்றுள்ளன.

53) கூற்று: மந்த வாயுக்களின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம் ஆகும்

காரணம்: இவற்றில் வெளி ஆர்பிட்டில் முழுமையாக எலக்ட்ரான்கள் நிரம்பி இருக்கும்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை விளக்கம்: மந்த வாயுக்கள் எலக்ட்ரான்களை ஏற்கும் தன்மையற்றவை. ஏனெனில், அவற்றின் வெளிமட்டத்தில் உள்ள s மற்றும் p ஆர்பிட்கள் முழுமையாக எலக்ட்ரான்களால் நிரம்பி உள்ளவை. அதனால் மேலும் ஒரு எலக்ட்ரானை சேர்ப்பது இயலாது. எனவே இவற்றின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜிய மதிப்பை பெறுகின்றன.

54) தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) பித்தளை – காப்பர் கலவை (இரும்பு அற்றது)

B) டியுராலுமின் – அலுமினியக் கலவை (இரும்பு உள்ளது)

C) வெண்கலம் – காப்பர் கலவை (இரும்பு அற்றது)

D) மெக்னலியம் – அலுமினியக் கலவை (இரும்பு அற்றது)

விளக்கம்: காப்பர் கலவை (இரும்பு அற்றது) – 1. பித்தளை 2. வெண்கலம்

அலுமினியக் கலவை (இரும்பு அற்றது) – 1. டியுராலுமின் 2. மெக்னலியம்

55) உலோகத்தின் புறப்பரப்பை, மின் வேதிவினைகளின் மூலம், அரிமான எதிர்ப்புள்ளதாய் மாற்றும் நிகழ்வு____________எனப்படும்.

A) நாகமுலாம் பூசுதல்

B) மின்முலாம் பூசுதல்

C) ஆனோடாக்கல்

D) கேத்தோடு பாதுகாப்பு

விளக்கம்: உலோகத்தின் புறப்பரப்பை, மின் வேதிவினைகளின் மூலம், அரிமான எதிர்ப்புள்ளதாய் மாற்றும் நிகழ்வு ஆனோடாக்கல் எனப்படும். அலுமினியம் இந்த முறைக்கு பயன்படுகிறது.

56) இந்தியாவின் முதல் கடல் பாலம் எப்போது திறக்கப்பட்டது?

A) 1924

B) 1914

C) 1934

D) 1904

விளக்கம்: இராமேஸ்வரத்தின் பாம்பன் தீவையும், இந்தியாவின் பெரும் நிலப்பரப்பையும் இணைக்கும் ரயில் பாலமே பாம்பன் பாலமாகும். இது 1914ல் இந்தியாவில் திறக்கப்பட்ட முதல் கடல்பாலம் என்ற பெருமை இதற்கு உண்டு.

57) இந்தியாவின் முதல் நீளமான கடற்பாலம் எப்போது திறக்கப்பட்டது?

A) 2000

B) 2005

C) 2010

D) 1995

விளக்கம்: 2010-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட பந்த்ராவலி என்ற கடற்பாலம் நீளமானது.

58) அலுமினியத்திற்கு அடுத்து மிக அதிகமான காணப்படும் உலோகம் எது?

A) பித்தளை

B) இரும்பு

C) தங்கம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: அலுமினியத்திற்கு அடுத்து, மிக அதிகமாக காணப்படும் உலோகம் இரும்பு ஆகும். இயற்கையில், இது ஆக்ஸைடு, சல்பைடு மற்றும் கார்பனேட்டுகளாக கிடைக்கின்றன.

59) கீழ்க்காண்பனவற்றில் எது சாதாரணமாக வினைபடும் உலோகம்?

A) சோடியம்

B) கால்சியம்

C) மெக்னீசியம்

D) ஜிங்க்

விளக்கம்: அதிக வினைபடும் உலோகங்கள்: Na, K, Ca, Mg, Al

சாதாரணமாக வினைபடும் உலோகங்கள்: Zn, Fe, pb, Cu

குறைவாக வினைபடும் உலோகங்கள்: Au, Hg

60) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க

A) தொகுதி 1 – காரமண் உலோகங்கள்

B) தொகுதி 15 – நைட்ரஜன் குடும்பம்

C) தொகுதி 18 – மந்த வாயுக்கள்

D) தொகுதி 3-12 – இடைநிலை உலோகங்கள்

விளக்கம்: தொகுதி 1 – கார உலோகங்கள்

தொகுதி 15 – நைட்ரஜன் குடும்பம்

தொகுதி 18 – மந்த வாயுக்கள்

தொகுதி 3-12 – இடைநிலை உலோகங்கள்

61) இரும்பின் முக்கிய தாது எது?

A) மேக்னடைட்

B) ஹேமடைட்

C) சிட்ரைட்

D) இரும்பு பைரைட்

விளக்கம்: அலுமினியத்திற்கு அடுத்து, மிக அதிகமாக காணப்படும் உலோகம் இரும்பு ஆகும். இயற்கையில், இது ஆக்ஸைடு, சல்பைடு மற்றும் கார்பனேட்டுகளாக கிடைக்கின்றன. இரும்பின் தாதுக்கள்:

1. ஹேமடைட்

2. மேக்னடைட்

3. இரும்பு பைரைட்.

இதில் ஹேமடைட் என்பது இரும்பின் முக்கிய தாது ஆகும்.

62) கூற்றுகளை ஆராய்க.

1. தனிம வரிசை அட்டவணையின் தொடரில் இடது புறத்திலிருந்து வலதுபுறமாக செல்கையில், தனிமங்களின் அணு ஆரங்கள் அதிகரிக்கும்

2. தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்கும்போது அணு ஆரங்கள் குறையும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: தனிம வரிசை அட்டவணையில் உள்ள தனிமங்களின் அணு ஆரங்களைப் பார்க்கும் போது, இருவேறு நிகழ்வுகள் தெளிவாகும். தொடரில், இடது புறத்திலிருந்து வலதுபுறமாக செல்கையில், தனிமங்களின் அணு ஆரங்கள் குறையும். ஆனால் தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்கும்போது அணு ஆரங்கள் அதிகரிக்கும்.

63) நவீன தனிம வரிசை அட்டவணையில் 14-வது தொகுதியில் கீழ்க்கண்ட எது இடம்பெற்றுள்ளது?

A) கார உலோகம்

B) கார்பன் குடும்பம்

C) நைட்ரஜன் குடும்பம்

D) காரமண் உலோகம்

விளக்கம்: ஆவர்த்தன அட்டவணையில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்ட தனிமங்கள், தொகுதிகள் எனப்படும். அட்டவணையில் மொத்தம் 18 தொகுதிகள் உள்ளன. இதில் 14-வது தொகுதியில் கார்பன் குடும்பம் இடம்பெற்றுள்ளன.

64) கூற்று: மந்த வாயுக்கள் எலக்ட்ரான்களை ஏற்கும் தன்மையற்றவை.

காரணம்: மந்த வாயுக்களில் வெளிமட்டத்தில் உள்ள s மற்றும் p ஆர்பிட் முழுமையாக எலக்ட்ரான்களால் நிரம்பி இருக்கும்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை விளக்கம்: மந்த வாயுக்கள் எலக்ட்ரான்களை ஏற்கும் தன்மையற்றவை. ஏனெனில், அவற்றின் வெளிமட்டதில் உள்ள s மற்றும் p ஆர்பிட்டால்கள் முழுமையாக எலக்ட்ரான்களால் நிரம்பி உள்ளன.

65) ஆறாம் தொடர் பற்றிய கூற்றுகளில் சரியான ஒன்றை தெரிவு செய்க.

A) இதில் அணு எண் 55 லிருந்து 85 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன

B) இதில் மொத்தம் 18 தனிமங்கள் உள்ளன

C) இதில் 8 சாதாரண தனிமங்கள் மற்றும் 10 இடைநிலைத் தனிமங்கள் இடம்பெற்றுள்ளன.

D) இதில் 18 உள்இடைநிலைத் தனிமங்கள் இடம்பெற்றுள்ளன.

விளக்கம்: ஆறாம் தொடர் (அணு எண் 55 லிருந்து 86 வரை) . இது மிக நீண்ட தொடராகும். இதில் ‘Cs’ லிருந்து, ‘Rn’ வரை 32 தனிமங்கள் உள்ளன. இவற்றுள் 8 சாதாரண தனிமங்கள், 10 இடைநிலைத் தனிமங்கள் மற்றும் 14 உள் இடைநிலைத் தனிமங்கள் (லாந்தனைடுகள்) இடம்பெற்றுள்ளன.

66) தனிமவரிசை அட்டவணையில் உள்ள தனிமங்களின் பண்புகள், குறிப்பிட்ட சீரான இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரே மாதிரியிருக்கும் நிகழ்வு __________ எனப்படும்.

A) ஆவர்த்தன பண்பு

B) வினையுறாத் தன்மை

C) எலக்ட்ரான் பண்பு

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: தனிமங்களின் எலக்ட்ரான் அமைப்பு, சீராக நிகழும் இயல் மற்றும் வேதியியல் பண்புகளை விளக்க உதவுகின்றன. தனிமவரிசை அட்டவணையில் உள்ள தனிமங்களின் பண்புகள், குறிப்பிட்ட சீரான இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரே மாதிரியிருக்கும் நிகழ்வு ஆவர்த்தன பண்பு எனப்படும்.

67) கூற்று: ஆவர்த்தன அட்டவணையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் தொடர் சிறிய தொடர் என்று அழைக்கப்படுகிறது.

காரணம்: இதில் இரண்டு தனிமங்கள் மட்டுமே உள்ளன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை விளக்கம்: ஆவர்த்தன அட்டவணையில் மொத்தம் 7 தொடர்கள் உள்ளன. இதில் இரண்டாம் மற்றும் மூன்றாம் தொடர்கள் சிறிய தொடர்கள் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதில் 8 தனிமங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

68) கூற்றுகளை ஆராய்க.

1. ஒத்த தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒத்த எலக்ட்ரான் அமைப்புகளைப் பெற்று, ஒத்த வேதிப்பண்புகளோடு திகழும்.

2. பூஜ்ஜியத் தொகுதி தனிமங்கள் வினையுறா தன்மையைப் பெற்றிருப்பதில்லை.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஒத்த தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒத்த எலக்ட்ரான் அமைப்புகளைப் பெற்று, ஒத்த வேதிப்பண்புகளோடு திகழும்.

2. பூஜ்ஜியத் தொகுதி தனிமங்கள் வினையுறா தன்மையைப் பெற்றிருக்கும்

69) நவீன ஆவர்த்தன அட்டவணையில் ஐந்தாவது தொடர் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) இதில் அணு எண் 37 லிருந்து 54 வரை பெற்ற தனிமங்கள் உள்ளன

B) இதில் மொத்தம் 18 தனிமங்கள் உள்ளன

C) இதில் 8 சாதாரண தனிமங்களும், 10 இடைநிலைத் தனிமங்களும் உள்ளன.

D) இதில் ‘Cs’ லிருந்து ‘Rn’ வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன.

விளக்கம்: ஆவர்த்தன அட்டவணையில் ஐந்தாம் தொடரில் அணு எண் 37 லிருந்து 54 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு நீண்ட தொடராகும். இதில் 18 தனிமங்கள் உள்ளன. இவற்றில் 8 சாதாரண தனிமங்களும், 10 இடைநிலைத் தனிமங்களும் உள்ளன.

70) லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள் எந்த தொகுதியில் உள்ளன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தொகுதி 3-ன் அங்கமாகத் திகழும் லாந்தனைடு மற்றும் ஆக்டிணைடுகள் உள் இடைநிலைத் தனிமங்கள் என அழைக்கப்படும்

71) கூற்று: பூஜ்ஜிய தொகுதி தனிமங்கள் வினையுறா தன்மையைப் பெற்றிருக்கும்

காரணம்: பூஜ்ஜியத் தொகுதித் தனிமங்கள், நிலையான எலக்ட்ரான் அமைப்பை வெளிக்கூட்டில் பெற்றிருக்கும்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை விளக்கம்: பூஜ்ஜியத் தொகுதி தனிமங்கள், நிலையான எலக்ட்ரான் அமைப்பை வெளிக்கூட்டில் பெற்றிருப்பதால், வினையுறா தன்மையைப் பெற்றிருக்கும்.

72) கீழ்க்காணும் தொடர்களில் சரியான தொடரை தேர்வு செய்க.

1. ஏழாம் தொடரில் அணு எண் 86 கொண்ட தனிமம் இடம்பெற்றுள்ளது.

2. ஐந்தாம் தொடரில் 8 இடைநிலைத் தனிமங்கள் உள்ளன

3. ஆறாம் தொடரில் 32 தனிமங்கள் இடம்பெறவில்லை

4. Xe என்ற தனிமம் ஐந்தாம் தொடரில் இடம்பெற்றுள்ளது

A) 1, 2

B) 2, 3

C) 3, 4

D) 4 மட்டும்

விளக்கம்: 1. ஏழாம் தொடரில் அணு எண் 87 கொண்ட தனிமம் இடம்பெற்றுள்ளது.

2. ஐந்தாம் தொடரில் 10 இடைநிலைத் தனிமங்கள் உள்ளன

3. ஆறாம் தொடரில் 32 தனிமங்கள் இடம்பெற்றுள்ளது

4. Xe என்ற தனிமம் ஐந்தாம் தொடரில் இடம்பெற்றுள்ளது

73) தவறாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) தொகுதி 13 – போரான் குடும்பம்

B) தொகுதி 17 – ஹேலஜன்கள்

C) தொகுதி 14 – கார்பன் குடும்பம்

D) தொகுதி 15 – கால்கோஜன் குடும்பம்

விளக்கம்: தொகுதி 13 – போரான் குடும்பம்

தொகுதி 17 – ஹேலஜன்கள்

தொகுதி 14 – கார்பன் குடும்பம்

தொகுதி 15 – நைட்ரஜன் குடும்பம்

தொகுதி 16 – கால்கோஜன் குடும்பம்

74) கீழ்க்கண்டவற்றில் எது தவறானது?

A) தொடர் ஒன்று – மிகச்சிறிய தொடர்

B) தொடர் இரண்டு – சிறிய தொடர்

C) தொடர் மூன்று – சிறிய தொடர்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: தொடர் 1 – மிகச்சிறிய தொடர்

தொடர் 2 – சிறியத் தொடர்

தொடர் 3 – சிறியத் தொடர்

தொடர் 4 – நீண்ட தொடர்

75) மின் காந்தங்கள் செய்யப் பயன்படும் இரும்பின் வகை எது?

A) வார்ப்பிரும்பு

B) தேனிரும்பு

C) எஃகு

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: தேனிரும்பு என்பது 0.25 சதவீதத்திற்கும் குறைவான கார்பன் உடைய இரும்பு ஆகும். இது கம்பிச் சுருள், மின்காந்தங்கள் மற்றும் நங்கூரம் இவற்றைச் செய்யப் பயன்படுகிறது.

76) ஹென்றி மோஸ்லே என்ற விஞ்ஞானி எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

A) பிரெஞ்சு

B) பிரிட்டன்

C) அமெரிக்கா

D) இத்தாலி

விளக்கம்: ஹென்றி மோஸ்லே என்பவர் பிரிட்டன் விஞ்ஞானி ஆவார். இவர் 1912-ஆம் ஆண்டு ஆவர்த்தன் வரிசைப்படுத்தலுக்கு, அணு எண் என்பது சிறந்த அடிப்படை என்ற உண்மையைக் கண்டறிந்தார்.

77) கீழ்க்காணும் எது ப்ரஷர் குக்கர்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன?

A) டியாரலுமின்

B) மெக்னலியம்

C) துருப்பிடிக்காத இரும்பு

D) ஜிங்க்

விளக்கம்: டியுராலுமின்: விமானத்தின் பகுதிகள், ப்ரஷர் குக்கர்கள்.

மெக்னலியம்: விமானத்தின் பகுதிகள், அறிவியல் உபகரணங்கள்

துருப்பிடிக்காத இரும்பு: பாத்திரங்கள் வெட்டும் கருவிகள், வாகன உதிரிபாகங்கள்.

78) நவீன தனிம வரிசை அட்டவணையில் 13-வது தொகுதியில் கீழ்க்கண்ட எது இடம்பெற்றுள்ளது?

A) கார உலோகம்

B) போரான் குடும்பம்

C) நைட்ரஜன் குடும்பம்

D) காரமண் உலோகம்

விளக்கம்: ஆவர்த்தன அட்டவணையில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்ட தனிமங்கள், தொகுதிகள் எனப்படும். அட்டவணையில் மொத்தம் 18 தொகுதிகள் உள்ளன. இதில் 13-வது தொகுதியில் போரான் இடம்பெற்றுள்ளன.

79) ஏழாம் தொடர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இதில் அணு எண் 87லிருந்து 118 வரை பெற்ற தனிமங்கள் இடம்பெற்றுள்ளன.

2. இதில் 32 தனிமங்கள் இடம்பெற்றுள்ளன.

3. சமீபத்தில் நான்கு தனிமங்கள் அட்டவணையில் IUPAC ஆல் உட்படுத்தப்பட்டன.

A) 1 மட்டும் சரி

B) 1, 3 சரி

C) 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: ஏழாம் தொடர் (அணு எண் 87 லிருந்து, 118 வரை) ஆறாம் தொடரைப் போல, இதுவும் 32 தனிமங்கள் கொண்டது. சமீபத்தில், நான்கு தனிமங்கள் அட்டவணையில் IUPAC ஆல் உட்படுத்தப்பட்டன.

80) கீழ்க்காணும் எது விமான பகுதி தயாரிப்புடன் தொடர்புடையது அல்ல?

A) டியாரலுமின்

B) மெக்னலியம்

C) துருப்பிடிக்காத இரும்பு

D) ஜிங்க்

விளக்கம்: டியுராலுமின்: விமானத்தின் பகுதிகள், ப்ரஷர் குக்கர்கள்.

மெக்னலியம்: விமானத்தின் பகுதிகள், அறிவியல் உபகரணங்கள்

துருப்பிடிக்காத இரும்பு: பாத்திரங்கள் வெட்டும் கருவிகள், வாகன உதிரிபாகங்கள்.

81) ஆனோடாக்கல் முறைக்கு பயன்படும் உலோகம் எது?

A) துத்தநாகம்

B) அலுமினியம்

C) பித்தளை

D) இரும்பு

விளக்கம்: உலோகத்தின் புறப்பரப்பை, மின் வேதிவினைகளின் மூலம், அரிமான எதிர்ப்புள்ளதாய் மாற்றும் நிகழ்வு ஆனோடாக்கல் எனப்படும். அலுமினியம் இந்த முறைக்கு பயன்படுகிறது.

82) உலோகத்தின் மீது பாதுகாப்புக் கலவை பூசுதல் அரிமானத்தை தடுக்கும். இது எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: உலோகத்தின் மீது பாதுகாப்புக் கலவை பூசுதல் அரிமானத்தை தடுக்கும். இது நான்கு வகைப்படும். அவை,

1. நாகமுலாம் பூசுதல்

2. மின்முலாம் பூசுதல்

3. ஆனோடாக்கல்

4. கேத்தோடு பாதுகாப்பு

83) கூற்றுகளை ஆராய்க.

1. இந்தியாவின் முதல் கடற்பாலம் – பாம்பன்

2. இந்தியாவின் மிகநீளமான கடற்பாலம் – பாம்பன்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: இமேஸ்வரத்தின் பாம்பன் தீவையும், இந்தியாவின் பெரும் நிலப்பரப்பையும் இணைக்கும் ரயில் பாலமே பாம்பன் பாலமாகும். 1914ல் இந்தியாவில் திறக்கப்பட்ட முதல் கடற்பாலம் என்ற பெருமை இதற்கு உண்டு. 2010ஆம் ஆண்டு திறக்கப்பட்ட பந்த்ராவலி என்ற கடற்பாலம் நீளமானது.

84) தனிமங்களின் ஆவர்த்தன பண்பு கீழ்க்காணும் எதை காட்டவில்லை?

A) அணு ஆரம்

B) அயனி ஆரம்

C) அயனியாக்கும் ஆற்றல்

D) நியூட்ரான் நாட்டம்

விளக்கம்: தனிமங்களின் எலக்ட்ரான் அமைப்பு, சீராக நிகழும் இயல் மற்றும் வேதியியல் பண்புகளை விளக்க உதவுகின்றன. தனிமவரிசை அட்டவணையில் உள்ள தனிமங்களின் பண்புகள், குறிப்பிட்ட சீரான இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் ஒரே மாதிரியிருக்கும் நிகழ்வு ஆவர்த்தன பண்பு எனப்படும். அணு ஆரம், அயனி ஆரம், அயனியாக்கும் ஆற்றல், எலக்ட்ரான், கவர்த்தன்மை, எலக்ட்ரான் நாட்டம் ஆகியன ஆவர்த்தன பண்பை காட்டுகின்றன.

85) அணு ஆரம் என்பது கீழ்க்கண்ட எதைக் குறிக்கிறது?

A) அணுக்கருவின் மையத்திற்கும், அதன் முதல் வெளிக்கூட்டிற்கும் இடையே உள்ள தூரம் ஆகும்

B) அணுக்கருவின் மையத்திற்கும், அதன் இணைதிற எலக்ட்ரான் உள்ள வெளிக்கூட்டிற்கும் இடையேயான தூரம் ஆகும்

C) உட்கருவிலுள்ள நியூட்ரானுக்கும், அதன் வெளிக்கூட்டிற்கும் இடையே உள்ள தூரம் ஆகும்.

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ஒரு அணுவின் ஆரம் என்பது அதன் அணுக்கருவின் மையத்திற்கும், இணைதிற எலக்ட்ரான் உள்ள வெளிக்கூட்டிற்கும் இடையேயான தூரம் என வரயறுக்கப்படும் .

86) கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு தனித்த அணுவின் ஆரத்தை அளவிட முடியும்.

2. பூஜ்ஜியத் தொகுதி தனிமங்கள் நிலையான எலக்ட்ரான் அமைப்பை வெளிக்கூட்டில் பெற்றிருக்கும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: ஒரு தனித்த அணுவின் ஆரத்தை, நேரடியாக அளவிட முடியாது. பூஜ்ஜியத் தொகுதித் தனிமங்கள், நிலையான எலக்ட்ரான் அமைப்பை வெளிக்கூட்டில் பெற்றிருப்பதால், வினையுறா தன்மையைப் பெற்றிருக்கும்.

87) கீழ்க்காணும் எதைத் தவிர, வழக்கமாக அணு ஆரம் என்பது தொடர்புடைய அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பின் தன்மையை பொறுத்து, சகப்பிணைப்பு ஆரம் அல்லது உலோக ஆரம் என்றழைக்கப்படும்?

A) ஹைட்ரஜன்

B) மந்த வாயுக்கள்

C) அலோகங்கள்

D) உலோகங்கள்

விளக்கம்: மந்த வாயுக்கள் தவிர, வழக்கமாக அணு ஆரம் என்பது தொடர்புடைய அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பின் தன்மையை பொறுத்து, சகப்பிணைப்பு ஆரம் அல்லது உலோக ஆரம் என்றழைக்கப்படும்.

88) கீழ்காண்பனவற்றுள் எது உலோக ஆரம் என வரையறுக்கப்படுகிறது?

A) அருகருகே உள்ள இரண்டு உலோக அணுக்களின் உட்கருக்களுக்கு இடையே உள்ள தூரம்

B) அருகருகே உள்ள இரண்டு உலோக அணுக்களின் இணைதிறன் எலக்ட்ரான் உள்ள வெளிக்கூட்டிற்கு இடையேயுள்ள தூரம்

C) அருகருகே உள்ள இரண்டு உலோக அணுக்களின் முதல் எலக்ட்ரான் சுற்றுவட்டப்பாதைகளுக்கு இடைப்பட்ட தூரம் ஆகும்.

D) அருகருகே உள்ள இரண்டு உலோக அணுக்களின் உட்கருக்களுக்கு இடையே உள்ள தூரத்தின் பாதியே உலோக ஆரம் எனப்படும்.

விளக்கம்: மந்த வாயுக்கள் தவிர, வழக்கமாக அணு ஆரம் என்பது தொடர்புடைய அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பின் தன்மையைப் பொறுத்து, சகப்பிணைப்பு ஆரம் அல்லது உலோக ஆரம் என்றழைக்கப்படும். அருகருகே உள்ள இரண்டு உலோக அணுக்களின் உட்கருக்களுக்கு இடையே உள்ள தூரத்தின் பாதியே உலோக ஆரம் எனப்படும்.

89) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) ஹைட்ரஜன் முதல் தொடரில் இடம்பெற்றுள்ளது.

B) ஆர்கான் இரண்டாம் தொடரில் இடம்பெற்றுள்ளது.

C) ஏழாம் தொடரில் சமீபத்தில் 4 தனிமங்கள் அட்டவணையில் உட்படுத்தப்பட்டன

D) லாந்தனைடுகள் ஆறாம் தொடரில் இடம்பெற்றுள்ளன

விளக்கம்: ஹைட்ரஜன் முதல் தொடரில் இடம்பெற்றுள்ளது.

ஆர்கான் மூன்றாம் தொடரில் இடம்பெற்றுள்ளது.

ஏழாம் தொடரில் சமீபத்தில் 4 தனிமங்கள் அட்டவணையில் உட்படுத்தப்பட்டன

லாந்தனைடுகள் ஆறாம் தொடரில் இடம்பெற்றுள்ளன

90) இரும்பின் மீது துத்தநாகம் முலாம் பூசுவதற்கு____________என்று பெயர்

A) நாகமுலாம் பூசுதல்

B) மின்முலாம் பூசுதல்

C) ஆனோடாக்கல்

D) கேத்தோடு பாதுகாப்பு

விளக்கம்: இரும்பின் மீது துத்தநாக மின் முலாம் பூசுவதற்கு நாகமுலாம் பூசுதல் என்று பெயர்.

91) உலோகமற்ற தனிமங்களில் உள்ள அணு ஆரம் எவ்வாறு அழைக்கப்படும்?

A) அலோக ஆரம்

B) ஈதல் சகப்பிணைப்பு ஆரம்

C) சகப்பிணைப்பு ஆரம்

D) உலோகமற்ற ஆரம்

விளக்கம்: உலோகமற்ற தனிமங்களில், உள்ள அணு ஆரம் சகப்பிணைப்பு ஆரம் என்றழைக்கப்படும்.

92) தனிம வரிசை அட்டவணையில் உள்ள தனிமங்களின் ஆரங்களைப் பார்க்கும் போது, தெடரில் வலது புறத்திலிருந்து இடதுபுறமாக செல்ல தனிமங்களின் அணு ஆரங்கள்______________ஆக இருக்கும்?

A) அதிகரிக்கும்

B) குறையும்

C) மாறுபடாது

D) கூற இயலாது

விளக்கம்: தனிம வரிசை அட்டவணையில் உள்ள தனிமங்களின் அணு ஆரங்களைப் பார்க்கும் போது, இருவேறு நிகழ்வுகள் தெளிவாகும். தொடரில், இடது புறத்திலிருந்து வலது புறமாக செல்கையில், தனிமங்களின் அணு ஆரங்கள் குறையும். வலது புறத்திலிருந்து இடது செல்கையில், தனிமங்களின் அணு ஆரங்கள் அதிகரிக்கும்.

93) தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்கும்போது அணு ஆரங்கள்___________ஆக இருக்கும்?

A) அதிகரிக்கும்

B) குறையும்

C) மாறாது

D) வரையறுக்க இயலாது

விளக்கம்: தனிம வரிசை அட்டவணையில் உள்ள தனிமங்களின் அணு ஆரங்களைப் பார்க்கும் போது, இருவேறு நிகழ்வுகள் தெளிவாகும். தொடரில், இடது புறத்திலிருந்து வலதுபுறமாக செல்கையில், தனிமங்களின் அணு ஆரங்கள் குறையும். ஆனால் தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்கும்போது அணு ஆரங்கள் அதிகரிக்கும்.

94) நேர்மின் அயனியானது அதன் தொடர்புடைய அணுவைவிட உருவளவில்_____________ஆக இருக்கும்?

A) பெரியதாக

B) சிறியதாக

C) மாறாமல்

D) கூற இயலாது

விளக்கம்: கரைசல்களின் இயல்புகளையும், அயனித்திண்மங்களின் வடிவமைப்புகளையும், தீர்மானிக்க, அயனிகளின் உருவளவு முக்கியமாகும். நேர்மின் அயனியானது அதன் தொடர்புடைய அணுவைவிட உருவளவில் சிறியதாக இருக்கும்.

95) கூற்று: தனிம வரிசை அட்டவணையின் தொகுதியில் அயனி ஆரங்கள் மேலிருந்து கீழாக செல்லும் போது அதிகரிக்கும்.

காரணம்: உட்கருவானது எதிர்மின் சுமையுடைய அயனிகளில் உள்ள வெளிக்கூட்டு எலக்ட்ரான்களில் காட்டும் ஈர்ப்பு விசையானது அதே தனிமத்தின் நடுநிலை அணுவில் காட்டுவதை விட குறைவு

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை விளக்கம்: உட்கருவானது எதிர்மின் சுமையுடைய அயனிகளில் உள்ள வெளிக்கூடு எலக்ட்ரான்களில் காட்டும் ஈர்ப்பு விசையானது அதே தனிமத்தின் நடுநிலை அணுவில் காட்டுவதை விட குறைவு. ஆகவே அணு ஆரத்தில் கண்டது போல, அயனி ஆரங்களும் தொடரில் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக செல்லும்போது குறையும். தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும் போது அதிகரித்தும் காணப்படும்.

96) கீழ்க்காண்பனவற்றில் எதில் 8 சாதாரண தனிமங்கள் இடம்பெறவில்லை?

A) நான்காம் தொடர்

B) ஐந்தாம் தொடர்

C) முதல் தொடர்

D) ஆறாம் தொடர்

விளக்கம்: முதல் தொடரில் 8 சாதாரண தனிமங்கள் இடம்பெறவில்லை. இதில் மொத்தம் இரண்டு தனிமங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

1. ஹைட்ரஜன்

2. ஹீலியம்.

97) கூற்று: பூஜ்ஜியத் தொகுதித் தனிமங்கள் வினையுறாத் தன்மையைப் பெற்றிருக்கும்.

காரணம்: பூஜ்ஜியத் தொகுதித் தனிமங்கள், நிலையற்ற எலக்ட்ரான் அமைப்பை வெளிக்கூட்டில் பெற்றிருக்கும்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை விளக்கம்: பூஜ்ஜியத் தொகுதித் தனிமங்கள், நிலையான எலக்ட்ரான் அமைப்பை வெளிக்கூட்டில் பெற்றிருப்பதால், வினையுறா தன்மையைப் பெற்றிருக்கும்

98) கூற்று: லித்தியம் மற்றும் சோடியம் தம் தொடர்புடைய அணுக்களைவிட உருவில் சிறியதாக இருக்கும்

காரணம்: உட்கருவிற்கும், மீதமுள்ள உள் ஆற்றல் மட்ட எலக்ட்ரான்களுக்கும் இடையே உள்ள குறைந்த கவர்ச்சி விசை

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை விளக்கம்: லித்தியம் மற்றும் சோடியம் தங்களது வெளி ஆற்றல் மட்டத்தில் உள்ள ஓர் எலக்ட்ரானை இழந்து நேர்மின் அயனிகளாகின்றன. இவ்வயனிகள், தம் தொடர்புடைய அணுக்களைவிட உருவில் சிறிதாக இருக்கக் காரணம், உட்கருவிற்கும், மீதமுள்ள உள் ஆற்றல் மட்ட எலக்ட்ரான்களுக்கும் இடையே உள்ள அதிக கவர்ச்சி விசையே காரணம் ஆகும்.

99) கூற்று: மந்த வாயுக்கள் எலக்ட்ரானை ஏற்கும் தன்மையற்றவை

காரணம்: அவற்றின் வெளிமட்டத்தில் உள்ள s மற்றும் p ஆர்பிட்டால்கள் முழுமையாக எலக்ட்ரான்களால் நிரம்பி உள்ளன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை விளக்கம்: மந்த வாயுக்கள் எலக்ட்ரான்களை ஏற்கும் தன்மையற்றவை. ஏனெனில், அவற்றின் வெளிமட்டத்தில் உள்ள s மற்றும் p ஆர்பிட்டால்கள் முழுமையாக எலக்ட்ரான்களால் நிரம்பி உள்ளன.

100) கூற்று: தனிம வரிசைத் தொடரில் இடது புறத்திலிருந்து வலதுபுறமாக செல்கையில் அயனியாக்கும் ஆற்றல் அதிகரிக்கின்றது.

காரணம்: தொடரில் அணு ஆரம் இடது புறத்திலிருந்து வலது புறமாக செல்கையில் குறைகிறது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை விளக்கம்: தொடரில் அணு ஆரம் இடது புறத்திலிருந்து வலது புறமாக செல்கையில் குறைவதால், எலக்ட்ரானை நீக்க, அதிக ஆற்றல் தேவைப்படும். ஆகவே, தொடரில், இடது புறத்திலிருந்து வலதுபுறம் செல்கையில், அயனி ஆக்கும் ஆற்றல் அதிகரிக்கின்றது.

101) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) ஹேமடைட்

B) பாக்சைட்

C) காப்பர் பைரைட்

D) கொரண்டம்

விளக்கம்: மேற்காண்பனவற்றில் தவறான ஒன்று கொரண்டம் ஆகும்.

அலுமினியத்தின் முக்கியத் தாது – பாக்சைட்

தாமிரத்தின் முக்கியத் தாது – காப்பர் பைரைட்

இரும்பின் முக்கியத் தாது – ஹேமடைட்

102) HCl மூலக்கூறில் எந்த தனிமத்திற்கு எலக்ட்ரான் கவர்த்தன்மை அதிகம்?

A) ஹைட்ரஜன்

B) குளோரின்

C) இரண்டும்

D) இரண்டுமில்லை

விளக்கம்: ஹைட்ரஜன் மற்றும் குளோரின் அணுக்கள் ஒரு எலக்ட்ரானை பங்கிட்டு சகப்பிணைப்பிணை உருவாக்கும். குளோரின் அணுவிற்கு எலக்ட்ரான் கவர்த்தன்மை அதிகம். அதனால், பங்கீட்டு எலக்ட்ரான்களை ஹைட்ரஜனை விட, குளோரின் அணு தன்னை நோக்கி இழுத்துக் கொள்ளும்.

103) தாமிரத்தின் பயன்களில் பொருந்தாததை தேர்வு செய்க.

A) தங்கம் மற்றும் வெள்ளியோடு கலந்து, உலோகக்கலவையாக்கி நாணயங்கள் மற்றும் அணிகலன்கள் உருவாக்கப் பயன்படுகிறது

B) மின்முலாம் பூசப் பயன்படுகிறது.

C) கலோரி மீட்டர், பாத்திரங்கள், நாணங்கள் போன்றவற்றை உருவாக்கப் பயன்படுகிறது.

D) விமானம் மற்றும் தொழில் இயந்திரங்களின் பாகங்களைச் செய்யப் பயன்படுகிறது.

விளக்கம்: தாமிரத்தின் பயன்கள்:

1. மின் கம்பிகளையும், மின் உபகரணங்களையும் உருவாக்கப் பயன்படுகிறது.

2. கலோரிமீட்டர், பாத்திரங்கள், நாணயங்கள் போன்றவற்றை உருவாக்கப் பயன்படுகிறது.

3. மின்முலாம் பூசப் பயன்படுகிறது.

4. தங்கம் மற்றும் வெள்ளியோடு கலந்து, உலோகக்கலவையாக்கி நாணயங்கள் மற்றும் அணிகலன்கள் உருவாக்கப் பயன்படுகிறது.

அலுமினியத்தின் பயன்கள்:

1. வீட்டுப்பாத்திரங்கள் செய்யப்பயன்படுகிறது.

2. மின்கம்பி செய்யப் பயன்படுகிறது.

3. விமானம் மற்றும் தொழில் இயந்திரங்களின் பாகங்களைச் செய்யப்பயன்படுகிறது

104) மந்த வாயுக்களின் எலக்ட்ரான் நாட்டம்?

A) 2

B) 1

C) 0

D) கூற இயலாது

விளக்கம்: மந்த வாயுக்கள் எலக்ட்ரான்களை ஏற்கும் தன்மையற்றவை. ஏனெனில், அவற்றின் வெளிமட்டத்தில் உள்ள s மற்றும் p ஆர்பிட்டால்கள் முழுமையாக எலக்ட்ரான்களால் நிரம்பி உள்ளன. அதனால் மேலும் ஒரு எலக்ட்ரானை சேர்ப்பது இயலாது. எனவே, இவற்றின் நாட்டம் பூஜ்ஜிய மதிப்பை பெறுகின்றன.

105) புவித் தோட்டிலிருந்து தாதுக்களை பிரிக்கும் முறை எது?

A) சுரங்க உற்பத்தி

B) காந்த முறை பிரிப்பு

C) உருக்கிப் பிரித்தல்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: புவித் தோட்டிலிருந்து, தாதுக்களைப் பிரிக்கும் முறையே சுரங்க உற்பத்தி எனப்படும்.

106) ஒரு அணுவானது எலக்ட்ரானை இழக்கும்போது___________அயனியாக மாறும்?

A) எதிர்மின் அயனி

B) நேர்மின் அயனி

C) சமநிலை அயனி

D) நிலைமின் அயனி

விளக்கம்: ஒரு அணுவானது எலக்ட்ரானை இழந்தோ, ஏற்றோ அயனியாக மாறும். எலக்ட்ரானை இழக்கும் அணு, நேர்மின் சுமை பெற்று, நேர்மின் அயனி என்றழைக்கப்படும்.

107) கூற்றுகளை ஆராய்க.

1. ஒத்த தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒத்த எலக்ட்ரான் அமைப்புகளைப் பெற்று, ஒத்த வேதிப்பண்புகளோடு திகழும்.

2. இயல் பண்புகளான, உருகுநிலை, கொதிநிலை மற்றும் அடர்த்தி ஆகியன சீராக மாறுபடுவதில்லை

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஒத்த தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒத்த எலக்ட்ரான் அமைப்புகளைப் பெற்று, ஒத்த வேதிப்பண்புகளோடு திகழும்.

2. இயல் பண்புகளான, உருகுநிலை, கொதிநிலை மற்றும் அடர்த்தி ஆகியன சீராக மாறுபடும்

108) கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு அணுவின் ஆரம் என்பது அதன் அணுக்கருவின் மையத்திற்கும், இணைதிற எலக்ட்ரான் உள்ள வெளிக்கூட்டிற்கும் இடையேயான தூரம் என வரையறுக்கப்படும்.

2. ஒரு தனித்த அணுவின் ஆரத்தை, நேரடியாக அளவிட முடியாது.

3. மந்த வாயுக்கள் தவிர, வழக்கமாக அணு ஆரம் என்பது தொடர்புடைய அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பின் தன்மையைப் பொறுத்து, சகப்பிணைப்பு ஆரம் அல்லது உலோக ஆரம் என்றழைக்கப்படும்.

4. அருகருகே உள்ள இரண்டு உலோக அணுக்களின் உட்கருக்களுக்கு இடையே உள்ள தூரத்தின் பாதியே உலோக ஆரம் எனப்படும்.

A) 1, 2 சரி

B) 2, 3, 4 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. ஒரு அணுவின் ஆரம் என்பது அதன் அணுக்கருவின் மையத்திற்கும், இணைதிற எலக்ட்ரான் உள்ள வெளிக்கூட்டிற்கும் இடையேயான தூரம் என வரையறுக்கப்படும்.

2. ஒரு தனித்த அணுவின் ஆரத்தை, நேரடியாக அளவிட முடியாது.

3. மந்த வாயுக்கள் தவிர, வழக்கமாக அணு ஆரம் என்பது தொடர்புடைய அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பின் தன்மையைப் பொறுத்து, சகப்பிணைப்பு ஆரம் அல்லது உலோக ஆரம் என்றழைக்கப்படும்.

4. அருகருகே உள்ள இரண்டு உலோக அணுக்களின் உட்கருக்களுக்கு இடையே உள்ள தூரத்தின் பாதியே உலோக ஆரம் எனப்படும்.

109) ஒரு அயனியின் கருமையத்திற்கும், அவ்வயனியின் எலக்ட்ரான் திரள் முகில் மீது அதன் கருவால் கவர்ச்சி விசை செலுத்த இயலும் தூரத்திற்கும் இடையேயான தொலைவு________________எனப்படும்?

A) அணு ஆரம்

B) உலோக ஆரம்

C) அயனி ஆராம்

D) சகப்பிணைப்பு ஆரம்

விளக்கம்: ஒரு அயனியின் கருமையத்திற்கும், அவ்வயனியின் எலக்ட்ரான் திரள் முகில் மீது அதன் கருவால் கவர்ச்சி விசை செலுத்த இயலும் தூரத்திற்கும் இடையேயான தொலைவு அயனி ஆரம் எனப்படும்.

110) சரியான படிநிலையை தேர்வு செய்க.

A) பாக்சைட்🡪அலுமினியம் ஹைட்ராக்சைடு🡪சோடியம் மெட்டா அலுமினேட்🡪அலுமினா

B) பாக்சைட்🡪சோடியம் மெட்டா அலுமினேட்🡪அலுமினியம் ஹைட்ராக்சைடு🡪அலுமினா

C) பாக்சைட்🡪சோடியம் மெட்டா அலுமினேட்🡪அலுமினா🡪அலுமினியம் ஹைட்ராக்சைடு

D) சோடியம் மெட்டா அலுமினேட்🡪பாக்சைட்🡪அலுமினா🡪அலுமினியம் ஹைட்ராக்சைடு

விளக்கம்: பாக்சைட் என்பது அலுமினியத்தின் முக்கியத் தாது ஆகும். இதை குறிப்பிட்ட அழுத்தத்தில் வினைப்படுத்தும் போது, சோடியம் மெட்டா அலுமினேட் உருவாகிறது. இதை நீரினால் நீர்க்கச் செய்வதால், அலுமினியம் ஹைட்ராக்சைடு வீழ்படிவு உருவாகிறது. இவ்வீழ்படிவை வடிகட்டி, நன்கு கழுவி பின் 100 டிகிரி வெப்பநிலையில் உலர்த்திட, அலுமினா உருவாகிறது.

111) உலோகத் தாதுப்பொருட்களோடு கலந்துள்ள மண் மற்றும் பாறைத் தூள் மாசுக்கள்______________எனப்படும்?

A) காங்கு

B) கசடு

C) இளக்கி

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: உலோகத் தாதுப் பொருட்களோடு கலந்துள்ள மண் மற்றும் பாறைத் தூள் மாசுக்கள் காங்கு அல்லது தாதுக்கூளம் எனப்படும்.

112) தனிம வரிசை அட்டவணையின் தொடரில், இடது புறத்திலிருந்து வலதுபுறமாக செல்கையில் ஆற்றல் மட்டம்____________ ஆக இருக்கும்?

A) மாறும்

B) மாறாது

C) கூற இயலாது

D) மேற்காண் எதுவுமில்லை

விளக்கம்: தனிம வரிசை அட்டவணையின் தொடரில், இடது புறத்திலிருந்து வலதுபுறமாக செல்கையில், ஆற்றல் மட்டம் மாறுவதில்லை.

113) ஒரு அணுவானது கீழ்க்கண்ட எதன் மூலம் அயனியாக மாறும்?

A) எலக்ட்ரானை இழந்து

B) எலக்ட்ரானை ஏற்று

C) எலக்ட்ரானை இழந்து அல்லது ஏற்று

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ஒரு அணுவானது எலக்ட்ரானை இழந்தோ, ஏற்றோ அயனியாக மாறும்.

114) கழிவு நீர் குழாய்கள், கழிவு நீர் சாக்கடை மூடிகள் செய்யப் பயன்படும் இரும்பு எது?

A) வார்ப்பிரும்பு

B) தேனிரும்பு

C) எஃகு

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: வார்ப்பிரும்பு – 2-4.5 சதவீதம் கார்பன் உடைய இரும்பு. ஸ்டவ்கள், கழிவு நீர்க் குழாய்கள், ரேடியேட்டர்கள், கழிவு நீர் சாக்கடை மூடிகள் இரும்பு வேலிகள் ஆகியவற்றை உருவாக்கப் பயன்படுகிறது.

115) பாக்சைட் என்பது கீழ்க்காணும் எதன் தாது?

A) இரும்பு

B) செம்பு

C) அலுமனியம்

D) பித்தளை

விளக்கம்: பாக்சைட் என்பது அலுமினியத்தின் தாது ஆகும். களிமண் என்பது அலுமினியத்தின் கனிமம் ஆகும்.

116) எலக்ட்ரான் நாட்டம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. அயனியாக்கும் ஆற்றலைப் போல, எலக்ட்ரான் நாட்டமும் தொடரில் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக செல்ல குறையும்.

2. தொகுதியில் மேலிருந்து கீழாக செல்ல குறைந்து காணப்படும்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை விளக்கம்: ஒரு தனித்த நடுநிலை உடைய வாயுநிலை அணு ஒன்றின் இணைதிறன் கூட்டில், ஒரு எலக்ட்ரானை சேர்த்து, அதன் எதிர் மின் சுமையுடைய அயனியை உருவாக்கும் போது வெளிப்படும் ஆற்றல் எலக்ட்ரான் நாட்டம் எனப்படும். அயனியாக்கும் ஆற்றலைப் போல, எலக்ட்ரான் நாட்டமும் தொடரில் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக அதிகரித்தும், தொகுதியில் மேலிருந்து கீழாக குறைந்தும் காணப்படும்.

117) தாதுக்களில் உள்ள மாசுக்களை (காங்கு) உருகிடும் சேர்மமாக மாற்றி, அதை நீக்கிட தாதுவுடன் சேரக்கும் பொருளே______________எனப்படும்?

A) இளக்கி

B) காங்கு

C) கசடு

D) தாதுக்ககூளம்

விளக்கம்: தாதுவுடன் உள்ள மாசுக்களை (காங்கு) உருகிடும் சேர்மமாக மாற்றி, அதை நீக்கிட தாதுவுடன் சேர்க்கும் பொருளே இளக்கி எனப்படும்.

118) அலுமினியம் கீழ்க்காணும் எதனுடன் வினைபுரிந்து அலுமினேட்டுகளை உருவாக்குகிறது?

A) காற்று

B) நீர்

C) காரங்கள்

D) அமிலங்கள்

விளக்கம்: காரங்களுடன் வினைபுரிந்து அலுமினியம் அலுமினேட்டுகளை உருவாக்குகிறது.

119) கூற்றுகளை ஆராய்க.

1. உலோகமற்ற தனிமங்களில், உள்ள அணு ஆரம் சகப்பிணைப்பு ஆரம் என்றழைக்கப்படும்.

2. இரட்டை சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள இரண்டு ஒத்த அணுக்களின் அணுக்களுக்கு இடையே ஆன தொலைவின் பாதியளவு சகப்பிணைப்பு ஆரம் எனப்படும்.

3. தனிம வரிசை அட்டவணையின் தொடரில், இடது புறத்திலிருந்து வலதுபுறமாக செல்கையில், தனிமங்களின் அணு ஆரங்கள் அதிகரிக்கும்.

4. தனிம வரிசை அட்டவணையின் தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்கும்போது அணு ஆரங்கள் குறையும்.

A) 1 மட்டும் சரி

B) 1, 2 சரி

C) 1, 4 சரி

D) 2, 3 சரி

விளக்கம்: 1. உலோகமற்ற தனிமங்களில், உள்ள அணு ஆரம் சகப்பிணைப்பு ஆரம் என்றழைக்கப்படும்.

2. ஒற்றை சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள இரண்டு ஒத்த அணுக்களின் அணுக்களுக்கு இடையே ஆன தொலைவின் பாதியளவு சகப்பிணைப்பு ஆரம் எனப்படும்.

3. தனிம வரிசை அட்டவணையின் தொடரில், இடது புறத்திலிருந்து வலதுபுறமாக செல்கையில், தனிமங்களின் அணு ஆரங்கள் குறையும்.

4. தனிம வரிசை அட்டவணையின் தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்கும்போது அணு ஆரங்கள் அதிகரிக்கும்.

120) தண்ணீரை விட அடர்த்தி குறைந்த உலோகம் எது?

A) மெர்குரி

B) தங்கம்

C) பொட்டாசியம்

D) தாமிரம்

விளக்கம்: உலோகங்கள் அதிக அடர்த்தி பெற்றவை. (சோடியம், பொட்டாசியம் தவிர. இவை தண்ணீரை விட அடர்த்தி குறைந்தவை) .

121) கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு அணுவின் ஆரம் என்பது அதன் அணுக்கருவின் மையத்திற்கும், இணைதிற எலக்ட்ரான் உள்ள வெளிக்கூட்டிற்கும் இடையேயான தூரத்தில் பாதியாகும்.

2. ஒரு தனித்த அணுவின் ஆரத்தை, நேரடியாக அளவிட முடியும்.

3. மந்த வாயுக்களைத் தவிர, வழக்கமாக அணு ஆரம் என்பது தொடர்புடைய அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பின் தன்மையை பொறுத்து, ஈதல் சகப்பிணைப்பு ஆரம் அல்லது அலோக ஆரம் என்றழைக்கப்படும்.

4. அருகருகே உள்ள இரண்டு உலோக அணுக்களின் உட்கருக்களுக்கு இடையே உள்ள தூரமே உலோக ஆரம் எனப்படும்

A) 1, 2 சரி

B) 2, 3, 4 சரி

C) 3, 4 சரி

D) அனைத்தும் தவறு

விளக்கம்: 1. ஒரு அணுவின் ஆரம் என்பது அதன் அணுக்கருவின் மையத்திற்கும், இணைதிற எலக்ட்ரான் உள்ள வெளிக்கூட்டிற்கும் இடையேயான தூரம் என வரையறுக்கப்படும்.

2. ஒரு தனித்த அணுவின் ஆரத்தை, நேரடியாக அளவிட முடியாது.

3. மந்த வாயுக்களைத் தவிர, வழக்கமாக அணு ஆரம் என்பது தொடர்புடைய அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பின் தன்மையை பொறுத்து, சகப்பிணைப்பு ஆரம் அல்லது உலோக ஆரம் என்றழைக்கப்படும்.

4. அருகருகே உள்ள இரண்டு உலோக அணுக்களின் உட்கருக்களுக்கு இடையே உள்ள தூரத்தில் பாதியே உலோக ஆரம் எனப்படும்.

122) அயனியாக்கும் ஆற்றலின் அலகு என்ன?

A) கிலோ ஜுல்/மோல்

B) ஜுல்/மோல்

C) மோல்/கிலோ ஜுல்

D) கிலோ ஜுல் மோல்

விளக்கம்: அடி ஆற்றல் நிலையில் உள்ள நடுநிலைத் தன்மை உடைய தனித்த வாயு நிலை அணு ஒன்றின் இணைதிறன் கூட்டிலிருந்து இலகுவாகப் பிணைக்கப்பட்டுள்ள ஒரு எலக்ட்ரானை நீக்கி நேர்மின் அயனியாக மாற்றுவதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றல், அயனியாக்கும் ஆற்றல் எனப்படும். இதை அயனியாக்கும் என்தால்பி என்றும் அழைக்கலாம். இதன் அலகு கிலோ ஜுல்/மோல். அயனியாக்கும் ஆற்றல் அதிகரிக்கும்போது, எலக்ட்ரானை நீக்குவது கடினமாகின்றது.

123) கூற்றுகளை ஆராய்க.

1. உலோகத் தாதுப் பொருட்களோடு கலந்துள்ள மண் மற்றும் பாறைத் தூள் மாசுக்கள் காங்கு அல்லது தாதுக்கூளம் எனப்படும்.

2. உலோகதத்தைப் பிரித்தலில், இளக்கி தாதுக் கூளத்துடன் வினைபுரிந்து உருவாக்கும் விளைபொருளே கசடு எனப்படும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. உலோகத் தாதுப் பொருட்களோடு கலந்துள்ள மண் மற்றும் பாறைத் தூள் மாசுக்கள் காங்கு அல்லது தாதுக்கூளம் எனப்படும்.

2. உலோகதத்தைப் பிரித்தலில், இளக்கி தாதுக் கூளத்துடன் வினைபுரிந்து உருவாக்கும் விளைபொருளே கசடு எனப்படும்.

124) அலுமினியத்தின் உருகுநிலை எத்தனை டிகிரி செல்சியஸ்?

A) 610

B) 650

C) 660

D) 670

விளக்கம்: அலுமினியத்தின் பண்புகள்:

இது வெள்ளியைப் போன்ற மென்மையான உலோகம்

இது லேசான, அடர்த்தி குறைந்த உலோகம்

தகடாக அடிக்கலாம், கம்பியாக நீட்டலாம்

இதன் உருகுநிலை 660 டிகிரி செல்சியஸ்

இது வெப்பத்தையும், மின்சாரத்தையும் நன்கு கடத்தும்.

பளப்பான ஒளிரும் தோற்றம் கொண்டதாக மாற்ற இயலும்.

125) ஒரு தனித்த நடுநிலை உடைய வாயுநிலை அணு ஒன்றின் இணைதிறன் கூட்டில், ஒரு எலக்ட்ரானை சேர்த்து, அதன் எதிர் மின் சுமையுடைய அயனியை உருவாக்கும் போது வெளிப்படும் ஆற்றல்______________எனப்படும்?

A) அயனியாக்கும் ஆற்றல்

B) எலக்ட்ரான் கவர்தன்மை

C) எலக்ட்ரான் நாட்டம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ஒரு தனித்த நடுநிலை உடைய வாயுநிலை அணு ஒன்றின் இணைதிறன் கூட்டில், ஒரு எலக்ட்ரானை சேர்த்து, அதன் எதிர் மின் சுமையுடைய அயனியை உருவாக்கும் போது வெளிப்படும் ஆற்றல் எலக்ட்ரான் நாட்டம் எனப்படும்.

126) கூற்றுகளை ஆராய்க.

1. நேர்மின் சுமை அதிகரிக்கும் போது நேர்மின் அயனியின் உருவளவு அதிகரிக்கும்.

2. எதிர்மின் சுவை அதிகரிக்கும் போது எதிர்மின் அயனியின் உருவளவு குறையும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. நேர்மின் சுமை அதிகரிக்கும் போது நேர்மின் அயனியின் உருவளவு குறையும்.

2. எதிர்மின் சுமை அதிகரிக்கும் போது எதிர்மின் அயனியின் உருவளவு அதிகரிக்கும்.

127) தாதுவுடன் உள்ள மாசுக்களை (காங்கு) உருகிடும் சேர்மமாக மாற்றி, அதை நீக்கிட தாதுவுடன் சேர்க்கும் பொருளே இளக்கி எனப்படும். கீழ்க்காண்பனவற்றுள் எது அமிலத்தன்மை வாய்ந்த இளக்கி?

A) CaO

B) CaO2

C) SiO

D) SiO2

விளக்கம்: தாதுவுடன் உள்ள மாசுக்களை (காங்கு) உருகிடும் சேர்மமாக மாற்றி, அதை நீக்கிட தாதுவுடன் சேர்க்கும் பொருளே இளக்கி எனப்படும். இதில் SiO2 என்பது அமிலத்தன்மை வாய்ந்த இளக்கி ஆகும்.

128) கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு அயனியின் கருமையத்திற்கும், அவ்வயனியில் எலக்ட்ரான் திரள் முகில் மீது அதன் கருவால் கவர்ச்சி விசை செலுத்த இயலும் தூரத்திற்கும் இடையேயான தொலைவு அயனி ஆரம் என வரையறுக்கப்படும்.

2. ஒரு அணுவானது எலக்ட்ரான் இழந்தோ, ஏற்றோ அயனியாக மாறும்.

3. எலக்ட்ரான் இழக்கும் அணு, எதிர்மின் அயனியாக மாறும்.

4. எலக்ட்ரான் ஏற்கும் அணு நேர்மின் அயனியாக மாறும்.

A) 1, 2 சரி

B) 3, 4 சரி

C) 2, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. ஒரு அயனியின் கருமையத்திற்கும், அவ்வயனியில் எலக்ட்ரான் திரள் முகில் மீது அதன் கருவால் கவர்ச்சி விசை செலுத்த இயலும் தூரத்திற்கும் இடையேயான தொலைவு அயனி ஆரம் என வரையறுக்கப்படும்.

2. ஒரு அணுவானது எலக்ட்ரான் இழந்தோ, ஏற்றோ அயனியாக மாறும்.

3. எலக்ட்ரான் இழக்கும் அணு, நேர்மின் அயனியாக மாறும்.

4. எலக்ட்ரான் ஏற்கும் அணு எதிர்மின் அயனியாக மாறும்.

129) நேர்மின் அயனியாது அதன் தொடர்புடைய அணுவைவிட உருவளவில்______________ஆக இருக்கும்?

A) பெரியதாக

B) சிறியதாக

C) மாறாமல்

D) கூற இயலாது

விளக்கம்: கரைசல்களின் இயல்புகளையும், அயனித்திண்மங்களின் வடிவமைப்புகளையும், தீர்மானிக்க, அயனிகளின் உருவளவு முக்கியமாகும். நேர்மின் அயனியானது அதன் தொடர்புடைய அணுவைவிட உருவளவில் சிறியதாக இருக்கும்.

130) தாதுக்களில் உள்ள மாசுக்கள் நீக்க கீழ்க்காணும் எந்த செயல்பாடு பயன்படுகிறது?

A) தாதுக்களை அடர்ப்பித்தல்

B) உலோகத்தை உருவாக்கல்

C) உலோகத்தை தூய்மையாக்கல்

D) உலோகத்தை சுத்தப்படுத்துதல்

விளக்கம்: உலோகவியலின் செயல்பாடுகள் மூன்று படிகளைக் கொண்டது. அவை,

1. தாதுக்களை அடர்ப்பித்தல் – இம்முறையின் மூலம், தாதுக்களில் உள்ள மாசுக்கள் நீக்கப்படுகின்றன.

2. உலோகத்தை உருவாக்கல் – இம்முறையில், தாதுவில் இருந்து உலோகம் பிரித்தெடுக்கப்படுகிறது.

3. உலோகத்தை தூய்மையாக்கல் – இம்முறையில் உலோகமானது தூய்மை செய்யப்படுகிறது.

131) இரு அணுக்களுக்கு இடையே உள்ள எலக்ட்ரான் கவர்த்தன்மை வித்தியாசம் 1.7 ஆக இருந்தால் அப்பிணைப்பு __________ சதவீதம் அயனித்தன்மையும், __________ சதவீதம் சகப்பிணைப்புத் தன்மையையும் பெற்றிருக்கும்?

A) 30, 70

B) 20, 80

C) 40, 60

D) 50, 50

விளக்கம்: இரு அணுக்களுக்கு இடையே உள்ள எலக்ட்ரான் கவர்த்தன்மை வித்தியாசம் 1.7 இருந்தால் அப்பிணைப்பு 50 சதவீதம் அயனித்தன்மையும், 50 சதவீதம் சகப்பிணைப்புத் தன்மையையும் பெற்றிருக்கும்.

132) அடி ஆற்றல் நிலையில் உள்ள நடுநிலைத் தன்மை உடைய தனித்த வாயு நிலை அணு ஒன்றின் இணைதிறன் கூட்டிலிருந்து இலகுவாகப் பிணைக்கப்பட்டுள்ள ஒரு எலக்ட்ரானை நீக்கி நேர்மின் அயனியாக மாற்றுவதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றல்_______________எனப்படும்?

A) அயனியாக்கும் ஆற்றல்

B) எலக்ட்ரான் கவர்த்தன்மை ஆற்றல்

C) எலக்ட்ரான் நீக்கும் ஆற்றல்

D) அயனி ஆற்றல்

விளக்கம்: அடி ஆற்றல் நிலையில் உள்ள நடுநிலைத் தன்மை உடைய தனித்த வாயு நிலை அணு ஒன்றின் இணைதிறன் கூட்டிலிருந்து இலகுவாகப் பிணைக்கப்பட்டுள்ள ஒரு எலக்ட்ரானை நீக்கி நேர்மின் அயனியாக மாற்றுவதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றல், அயனியாக்கும் ஆற்றல் எனப்படும். இதை அயனியாக்கும் என்தால்பி என்றும் அழைக்கலாம். இதன் அலகு கிலோ ஜுல்/மோல். அயனியாக்கும் ஆற்றல் அதிகரிக்கும்போது, எலக்ட்ரானை நீக்குவது கடினமாகின்றது.

133) கனிமம் என்ற சொல்லிற்கு பொருத்தமானதை தேர்வு செய்க.

A) தனி சேர்மமாக இருக்கும்

B) சேர்மங்களின் கலவையாக இருக்கும்

C) தனி சேர்மமாகவோ அல்லது வெவ்வேறு சேர்மங்களைச் சேர்த்து அடக்கிய கூட்டுக் கலவையாகவோ இருக்கும்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ஒரு கனிமம் என்பது தனி சேர்மமாகவோ அல்லது வெவ்வேறு சேர்மங்களைச் சேர்த்து அடக்கிய கூட்டுக் கலவையாகவோ புவியில் காணப்படும்.

134) ஆவர்த்தன பண்பின் தொடர் பற்றிய கூற்றுகளில் தவறானதை தேர்வு செய்க.

A) அணு ஆரம் – குறைகிறது

B) அயனியாக்கும் ஆற்றல் – அதிகரிக்கிறது

C) எலக்ட்ரான் நாட்டம் – அதிகரிக்கிறது

D) அயனி ஆரம் – அதிகரிக்கிறது

விளக்கம்:

ஆவர்த்தன பண்பு தொடரில் மாற்றம்.

அணு ஆரம் – குறைகிறது

அயனி ஆற்றல் – குறைகிறது

அயனியாக்கும் ஆற்றல் – அதிகரிக்கிறது

எலக்ட்ரான் நாட்டம் – அதிகரிக்கிறது

எலக்ட்ரான் கவர்த்தன்மை – அதிகரிக்கிறது.

135) கீழ்க்கண்டவற்றில் எது அலுமினியத்தின் கனிமம் ஆகும்?

A) களிமண்

B) ஹேமடைட்

C) சிட்ரைட்

D) லிமோனைட்

விளக்கம்: களிமண்ணும், பாக்சைட்டும் அலுமினியத்தின் கனிமங்களாகும். ஆனால், பாக்சைட்டிலிருந்து அலுமினியம் இலாபகரமாக பிரித்தெடுக்க முடிவதால், பாக்சைட் அலுமினியத்தின் தாது என்றும், களிமண் அதன் கனிமம் என்றும் அழைக்கப்படும்.

136) கூற்று: தனிம வரிசை அட்டவணையின் தொடரில் அயனி ஆரங்கள் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக செல்லும் போது அதிகரிக்கும்.

காரணம்: உட்கருவானது எதிர்மின் சுமையுடைய அயனிகளில் உள்ள வெளிக்கூட்டு எலக்ட்ரான்களில் காட்டும் ஈர்ப்பு விசையானது அதே தனிமத்தின் நடுநிலை அணுவில் காட்டுவதை விட குறைவு

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை விளக்கம்: உட்கருவானது எதிர்மின் சுமையுடைய அயனிகளில் உள்ள வெளிக்கூடு எலக்ட்ரான்களில் காட்டும் ஈர்ப்பு விசையானது அதே தனிமத்தின் நடுநிலை அணுவில் காட்டுவதை விட குறைவு. ஆகவே அணு ஆரத்தில் கண்டது போல, அயனி ஆரங்களும் தொடரில் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக செல்லும்போது குறையும்.

137) எந்த கனிமத்திலிருந்து, உலோகமானது எளிதில், சிக்கனமாக, பெரிய அளவில் பிரித்தெடுக்க முடிகிறதோ, அது________________எனப்படும்?

A) தாது

B) உப்பு

C) உலோகம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: எந்த கனிமத்திலிருந்து, உலோகமானது எளிதில், சிக்கனமாக, பெரிய அளவில் பிரித்தெடுக்க முடிகிறதோ, அதுவே தாது எனப்படும்.

138) பொருத்துக.

அ. 14-வது தொகுதி – 1. கால்கோஜன் குடும்பம்

ஆ. 15-வது தொகுதி – 2. ஹேலஜன்கள்

இ. 16-வது தொகுதி – 3. நைட்ரஜன் குடும்பம்

ஈ. 17-வது தொகுதி – 4. கார்பன் குடும்பம்

A) 4, 2, 3, 1

B) 4, 3, 2, 1

C) 4, 3, 1, 2

D) 2, 4, 3, 1

விளக்கம்: 14-வது தொகுதி – கார்பன் குடும்பம்

15-வது தொகுதி – நைட்ரஜன் குடும்பம்

16-வது தொகுதி – கால்கோஜன் குடும்பம்

17-வது தொகுதி – ஹேலஜன்கள்

139) தாதுவுடன் உள்ள மாசுக்களை (காங்கு) உருகிடும் சேர்மமாக மாற்றி, அதை நீக்கிட தாதுவுடன் சேர்க்கும் பொருளே இளக்கி எனப்படும். கீழ்க்காண்பனவற்றுள் எது காரத்தன்மை வாய்ந்த இளக்கி?

A) CaO

B) CaO2

C) SiO

D) SiO2

விளக்கம்: தாதுவுடன் உள்ள மாசுக்களை (காங்கு) உருகிடும் சேர்மமாக மாற்றி, அதை நீக்கிட தாதுவுடன் சேர்க்கும் பொருளே இளக்கி எனப்படும். இதில் CaO என்பது காரத்தன்மை வாய்ந்த இளக்கி ஆகும்.

140) உலோகத்தைப் பிரித்தலில், இளக்கி தாதுக் கூளத்துடன் வினைபுரிந்து உருவாக்கும் விளைபொருள்______________-எனப்படும்?

A) தாது

B) இளக்கி

C) கசடு

D) காங்கு

விளக்கம்: உலோகத்தைப் பிரித்தலில், இளக்கி தாதுக் கூளத்துடன் வினைபுரிந்து உருவாக்கும் விளைபொருளே கசடு எனப்படும்.

141) தாதுக்களின் இயல்பைப்பொறுத்து, அவற்றிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கும் முறையானது எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தாதுக்களின் இயல்பைப் பொறுத்து, அவற்றிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கும் முறையானது நான்கு வகைப்படும். அவை,

1. புவியீர்ப்பு முறையில் பிரித்தல்

2. காந்தமுறை பிரிப்பு

3. நுரைமிதப்பு முறை

4. வேதிமுறை

142) வறுத்த உலோக ஆக்சைடை, உலோகமாக உருகிய நிலையில், மாற்றும் ஒரு ஒடுக்கவினையே________________எனப்படும்?

A) உருக்கிப்பிரித்தல்

B) தெளியவைத்தல்

C) வடிகட்டுதல்

D) காந்தமுறைப்பிரித்தல்

விளக்கம்: வறுத்த உலோக ஆக்சைடை, உலோகமாக உருகிய நிலையில், மாற்றும் ஒரு ஒடுக்கவினையே உருக்கிப்பிரித்தல் ஆகும். இம்முறையில் காங்கு எனப்படும் மாசுக்கள், சேர்க்கப்பட்ட இளக்கியால் கசடாக நீக்கப்படுகின்றன.

143) கூற்று: ரோமானியர்களால் குப்ரம் என்று அழைக்கப்பட்ட உலோகம் – தாமிரம்

காரணம்: சைப்ரஸ் என்னும் தீவிலிருந்து எடுக்கபட்டது

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: ரோமானியர்களால், குப்ரம் என்று அழைக்கப்பட்ட உலோகம் தாமிரம் ஆகும். ஏனெனில் சைப்ரஸ் என்னும் தீவிலிருந்து எடுக்கப்பட்டதால் அவ்வாறு அழைக்கப்பட்டது. இது தனித்தும், சேர்ந்தும் காணப்படும்.

144) அலுமினியத்தின் முக்கியத்தாது பாக்சைட் ஆகும். இது கீழ்க்காணும் எம்முறையின் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது?

A) புவிஈர்ப்பு முறை பிரிப்பு

B) காந்த முறை பிரிப்பு

C) நுரை மிதப்பு முறை

D) வேதிமுறை

விளக்கம்: மிக தூய நிலையில் உள்ள தாதுக்களை அடர்பித்தலுக்கு வேதிமுறை பயன்படுத்தப்படுகிறது. தாதுவானது தகுந்த வேதிப்பொருளுடன் வினைபுரிய செய்து கரையச் செய்வதன் மூலம், கரையாத மாசுக்கள் வடிகட்டலின் மூலம் பிரித்தெடுக்கப்படுகின்றன. வடிநீர் தகுந்த வேதிப்பொருளுடன் சேர்க்கப்பட்டு, வினைபுரிந்து தாது வீழ்படிவாக மாறுகின்றது. எ.கா. பாக்சைட்(அலுமினியத்தின் முக்கிய தாது)

145) கூற்று: தனிம வரிசை அட்டவணையின் தொகுதியில், மேலிருந்து கீழாக இறங்குகையில் எலக்ட்ரான் கவர்த்தன்மை குறைகிறது.

காரணம்: ஆற்றல் மட்டத்தின் எண்ணிக்கை அதிகமாகிறது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: தனிம வரிசை அட்டவணையின் தொகுதியில், மேலிருந்து கீழாக இறங்குகையில் எலக்ட்ரான் கவர்த்தன்மை குறைகிறது. ஏனெனில், ஆற்றல் மட்டத்தின் எண்ணிக்கை அதிகமாகிறது.

146) இரு அணுக்களுக்கு இடையே உள்ள எலக்ட்ரான் கவர்த்தன்மை வித்தியாசம் எவ்வளவு இருந்தால் அப்பிணைப்பு 50 சதவீதம் அயனித்தன்மையும், 50 சதவீதம் சகப்பிணைப்புத் தன்மையையும் பெற்றிருக்கும்?

A) 1.5

B) 1.7

C) 2.0

D) 3.5

விளக்கம்: இரு அணுக்களுக்கு இடையே உள்ள எலக்ட்ரான் கவர்த்தன்மை வித்தியாசம் 1.7 இருந்தால் அப்பிணைப்பு 50 சதவீதம் அயனித்தன்மையும், 50 சதவீதம் சகப்பிணைப்புத் தன்மையையும் பெற்றிருக்கும்

147) கூற்றுகளை ஆராய்க.

1. தாதுவுடன் உள்ள மாசுக்களை (காங்கு) உருகிடும் சேர்மமாக மாற்றி, அதை நீக்கி தாதுவுடன் சேர்க்கும் பொருளே இளக்கி எனப்படும்.

2. புவித்தோட்டிலிருந்து, தாதுக்களைப் பிரிக்கும் முறையே சுரங்க உற்பத்தி எனப்படும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தாதுவுடன் உள்ள மாசுக்களை (காங்கு) உருகிடும் சேர்மமாக மாற்றி, அதை நீக்கி தாதுவுடன் சேர்க்கும் பொருளே இளக்கி எனப்படும்.

2. புவித்தோட்டிலிருந்து, தாதுக்களைப் பிரிக்கும் முறையே சுரங்க உற்பத்தி எனப்படும்

148) உலோகவியல் செயல்பாடுகளின் படிகளில் பொருந்தாதது எது?

A) தாதுக்களை அடர்ப்பித்தல்

B) உலோகத்தை உருவாக்கல்

C) உலோகத்தை தூய்மையாக்கல்

D) உலோகத்தை வடிகட்டுதல்

விளக்கம்: உலோகவியலின் செயல்பாடுகள் மூன்று படிகளைக் கொண்டது. அவை,

1. தாதுக்களை அடர்ப்பித்தல் – இம்முறையின் மூலம், தாதுக்களில் உள்ள மாசுக்கள் நீக்கப்படுகின்றன.

2. உலோகத்தை உருவாக்கல் – இம்முறையில், தாதுவில் இருந்து உலோகம் பிரித்தெடுக்கப்படுகிறது.

3. உலோகத்தை தூய்மையாக்கல் – இம்முறையில் உலோகமானது தூய்மை செய்யப்படுகிறது.

149) எலக்ட்ரான் கவர்த்தன்மையை கணக்கிடுவதில் யாருடைய அளவீடு பெரும் பங்களிக்கின்றது?

A) ஹென்றி

B) மெண்டலீப்

C) ராண்ட்ஜன்

D) பாலிங்

விளக்கம்: எலக்ட்ரான் கவர்த்தன்மையானது, பிணைப்பு ஆற்றல், அயனியாக்கும் ஆற்றல், எலக்ட்ரான் நாட்டம் ஆகியவற்றைச் சார்ந்து அமையும். எலக்ட்ரான் கவர்த்தன்மையை கணக்கிடுவதில், பாலிங் அளவீடு பெரும் பங்களிக்கின்றது.

150) கீழ்க்காண்பனவற்றில் எது அறைவெப்பநிலையில் திட நிலையில் காணப்படாது?

A) காலியம்

B) சோடியம்

C) பொட்டாசியம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: பொதுவாக எல்லா உலோகங்களும், அறை வெப்பநிலையில் திட நிலையில் உள்ளவை.(மெர்குரி மற்றும் காலியம் தவிர) .

151) கீழ்க்காண்பனவற்றில் எது ஹேலைடு தாது?

A) மார்பிள்

B) மாக்னசைட்

C) சிட்ரைட்

D) ஃப்ளுர்ஸ்பார்

விளக்கம்: கார்பனேட் தாது: மார்பிள், மாக்னசைட், சிட்ரைட்

ஹேலைடு தாது: கிரையோலைட், ஃப்ளுர்ஸ்பார், பாறை உப்பு

152) ஆவர்த்தன பண்பின் தொடர் பற்றிய கூற்றுகளில் தவறானதை தேர்வு செய்க.

A) எலக்ட்ரான் கவர்த்தன்மை – குறைகிறது

B) அயனியாக்கும் ஆற்றல் – அதிகரிக்கிறது

C) எலக்ட்ரான் நாட்டம் – அதிகரிக்கிறது

D) அயனி ஆரம் – குறைகிறது

விளக்கம்:

ஆவர்த்தன பண்பு தொடரில் மாற்றம்.

அணு ஆரம் – குறைகிறது

அயனி ஆற்றல் – குறைகிறது

அயனியாக்கும் ஆற்றல் – அதிகரிக்கிறது

எலக்ட்ரான் நாட்டம் – அதிகரிக்கிறது

எலக்ட்ரான் கவர்த்தன்மை – அதிகரிக்கிறது.

153) ஆக்சைடு தாது கீழ்க்காணும் எம்முறையில் தூய்மைப்படுத்தப்படுகின்றன?

A) புவிஈர்ப்பு முறையில் பிரித்தல்

B) காந்த முறை பிரிப்பு

C) நுரைமிதப்பு முறை

D) வேதிமுறை

விளக்கம்: தாதுக்களுக்கும், தாதுக்கூளங்களுக்கும், இடையில் உள்ள அடர்த்தி வேறுபாடு இம்முறையின் அடிப்படையாகும். ஆக்சைடு தாதுக்கள் புவியீர்ப்பு முறையில் பிரித்தல் என்ற முறையில் தூய்மையாக்கப்படுகின்றன. எ.கா. ஹேமடைட் (இரும்பின் தாது) .

154) தாதுக்களின் இயல்பைப்பொறுத்து, அவற்றிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கும் முறையானது நான்கு வகைப்படும். அவற்றில் பொருந்தாது எது?

A) புவிஈர்ப்பு முறை பிரித்தல்

B) காந்த முறை பிரிப்பு

C) நுரைமிதப்பு முறை

D) உருக்கிப் பிரித்தல்

விளக்கம்: தாதுக்களின் இயல்பைப் பொறுத்து, அவற்றிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கும் முறையானது நான்கு வகைப்படும். அவை,

1. புவியீர்ப்பு முறையில் பிரித்தல்

2. காந்தமுறை பிரிப்பு

3. நுரைமிதப்பு முறை

4. வேதிமுறை

155) நன்கு தூளாக்கப்பட்ட தாது, அதிர்வடையும் சாய் தளத்தின்மேல் கொட்டப்படும். பிறகு நீர் அதன் மேல் பீய்ச்சி அடிக்கப்படும். இதனால், அடர்த்தி மிகு தாது துகள்கள் கீழே தங்கி விட லேசான தாதுக்கூளங்கள், தண்ணீரால் கழுவி நீக்கப்படும் முறையுன் தொடர்புடைய தாது பிரிக்கும் முறை எது?

A) புவிஈர்ப்பு முறையில் பிரித்தல்

B) காந்த முறை பிரிப்பு

C) நுரைமிதப்பு முறை

D) வேதிமுறை

விளக்கம்: நன்கு தூளாக்கப்பட்ட தாது, அதிர்வடையும் சாய் தளத்தின்மேல் கொட்டப்படும். பிறகு நீர் அதன் மேல் பீய்ச்சி அடிக்கப்படும். இதனால், அடர்த்தி மிகு தாது துகள்கள் கீழே தங்கி விட லேசான தாதுக்கூளங்கள், தண்ணீரால் கழுவி நீக்கப்படும் முறையுன் தொடர்புடைய தாது பிரிக்கும் முறை புவியீர்ப்பு முறை ஆகும்.

156) எஃகு இரும்பில் கார்பனின் சதவீதம் எவ்வளவு காணப்படும்?

A) 2-4

B) 2-4.5

C) 0.25-2

D) 0.25க்கு கீழ்

விளக்கம்: கார்பனைப் பொறுத்து இரும்பு மூன்று வகைப்படும். அவை,

1. வார்ப்பிரும்பு – 2-4 சதவீதம்

2. எஃகு – 0.25-2 சதவீதம்

3. தேனிரும்பு – 0.25 சதவீதத்திற்கும் கீழ்

157) வழக்கமாக. உலோகங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிலையைப் பெற்றிருக்கும். அதிக வெப்பநிலையில், அவை ஆவியாகும். இதற்கு பொருத்தமானது எது?

A) தங்கம்

B) காலியம்

C) காலியம்

D) பொட்டாசியம்

விளக்கம்: வழக்கமாக. உலோகங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிலையைப் பெற்றிருக்கும். அதிக வெப்பநிலையில், அவை ஆவியாகும் (காலியம், மெர்குரி, சோடியம், பொட்டாசியம் தவிர) .

158) இரு அணுக்களுக்கு இடையே உள்ள எலக்ட்ரான் கவர்த்தன்மை வித்தியாசம் 1.7ஐ விட அதிகமெனில் அப்பிணைப்பு ______________பிணைப்பாகும்?

A) அயனிப் பிணைப்பு

B) சகப்பிணைப்பு

C) ஈதல் சகப்பிணைப்பு

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: இரு அணுக்களுக்கு இடையே உள்ள எலக்ட்ரான் கவர்த்தன்மை வித்தியாசம் 1.7 இருந்தால் அப்பிணைப்பு 50 சதவீதம் அயனித்தன்மையும், 50 சதவீதம் சகப்பிணைப்புத் தன்மையையும் பெற்றிருக்கும். இரு அணுக்களுக்கு இடையே உள்ள எலக்ட்ரான் கவர்த்தன்மை வித்தியாசம் 1.7ஐ விட அதிகமெனில் அப்பிணைப்பு அயனிப்பிணைப்பாகும்.

159) தண்ணீரை விட அடர்த்தி குறைந்த உலோகம் எது?

A) மெர்குரி

B) தங்கம்

C) சோடியம்

D) தாமிரம்

விளக்கம்: உலோகங்கள் அதிக அடர்த்தி பெற்றவை. (சோடியம், பொட்டாசியம் தவிர. இவை தண்ணீரை விட அடர்த்தி குறைந்தவை) .

160) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) அலுமினியத்தின் தாது – வேதிமுறை

B) வெள்ளியத்தின் தாது – காந்த முறை பிரிப்பு

C) இரும்பின் தாது – புவியீர்ப்பு முறை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: அலுமினியத்தின் தாது – வேதிமுறை

வெள்ளியத்தின் தாது – காந்த முறை பிரிப்பு

இரும்பின் தாது – புவியீர்ப்பு முறை

ஜிங்க் ப்ளன்ட் – நுரைமிதப்பு முறை

161) கூற்று: தனிம வரிசை அட்டவணையின் தொடரில், இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்லும் போது எலக்ட்ரான் கவர்த்தன்மை அதிகரிக்கும்.

காரணம்: அணுக்கரு மின்சுமை அதிகரிக்கும்போது, எலக்ட்ரான் கவர்ச்சி விசை குறையும்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: தனிம வரிசை அட்டவணையின் தொடரில், இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்லும் போது எலக்ட்ரான் கவர்த்தன்மை அதிகரிக்கும். ஏனெனில் அணுக்கரு மின்சுமை அதிகரிக்கும்போது, எலக்ட்ரான் கவர்ச்சி விசை அதிகரிக்கும்.

162) ஆவர்த்தன பண்பின் தொகுதி பற்றிய கூற்றுகளில் தவறானதை தேர்வு செய்க.

A) அணு ஆரம் – அதிகரிக்கிறது

B) அயனியாக்கும் ஆற்றல் – குறைகிறது

C) எலக்ட்ரான் நாட்டம் – அதிகரிக்கிறது

D) அயனி ஆற்றல் – அதிகரிக்கிறது

விளக்கம்: ஆவர்த்தன பண்பு தொகுதியில் மாற்றம்.

அணு ஆரம் – அதிகரிக்கிறது

அயனி ஆற்றல் – அதிகரிக்கிறது

அயனியாக்கும் ஆற்றல் – குறைகிறது

எலக்ட்ரான் நாட்டம் – குறைகிறது

எலக்ட்ரான் கவர்த்தன்மை – குறைகிறது.

163) கீழ்க்காண்பனவற்றில் எது ஆக்சைடு தாது அல்ல?

A) பாக்சைட்

B) குப்ரைட்

C) ஹேமடைட்

D) ஜிங்க் ப்ளன்ட்

விளக்கம்: ஆக்ஸைடு தாதுக்கள்: பாக்சைட், குப்ரைட், ஹேமடைட்.

சல்பைடு தாதுக்கள்: கலீனா, இரும்பு பைரைட், ஜிங்க் ப்ளன்ட்

164) ஹேமடைட் என்பது இரும்பின் தாது ஆகும். இது கீழ்க்காணும் எம்முறையுடன் தொடர்புடையது?

A) புவிஈர்ப்பு முறையில் பிரித்தல்

B) காந்த முறை பிரிப்பு

C) நுரைமிதப்பு முறை

D) வேதிமுறை

விளக்கம்: புவிஈர்ப்பு முறையில் பிரித்தல்: தாதுக்களுக்கும், தாதுக் கூளங்களுக்கும், இடையில் உள்ள அடர்த்தி வேறுபாடு இம்முறையின் அடிப்படையாகும். ஆக்சைடு தாதுக்கள் இம்முறையினால் தூய்மையாக்கப்படுகின்றன. எ.கா. ஹேமடைட் (இரும்பின் தாது)

165) மிக தூய நிலையில் உள்ள தாதுக்களை அடர்பித்தலுக்கு______________முறை பயன்படுத்தப்படுகிறது?

A) புவிஈர்ப்பு முறை பிரிப்பு

B) காந்த முறை பிரிப்பு

C) நுரை மிதப்பு முறை

D) வேதிமுறை

விளக்கம்: மிக தூய நிலையில் உள்ள தாதுக்களை அடர்பித்தலுக்கு வேதிமுறை பயன்படுத்தப்படுகிறது. தாதுவானது தகுந்த வேதிப்பொருளுடன் வினைபுரிய செய்து கரையச் செய்வதன் மூலம், கரையாத மாசுக்கள் வடிகட்டலின் மூலம் பிரித்தெடுக்கப்படுகின்றன. வடிநீர் தகுந்த வேதிப்பொருளுடன் சேர்க்கப்பட்டு, வினைபுரிந்து தாது வீழ்படிவாக மாறுகின்றது. எ.கா. பாக்சைட் (அலுமினியத்தின் முக்கிய தாது)

166) கூற்று: தனிம வரிசை அட்டவணையில், தொடரில் இடது புறத்திலிருந்து வலதுபுறமாக செல்கையில், அணு ஆரங்கள் குறையும்.

காரணம்: புரோட்டான்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதற்கேற்ப எலக்ட்ரான்கள் மீதுள்ள கவர்ச்சி விசை அதிகரிக்கிறது

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: தனிம வரிசை அட்டவணையில் இடது புறத்திலிருந்த வலது புறமாக செல்கையில் அணு ஆரங்கள் குறையும். புரோட்டான்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும். அதிகரிக்கும் நேர்மின் சுமைக்கு ஏற்ப எலக்ட்ரான்கள் மீதுள்ள கவர்ச்சி விசை அதிகரிப்பதால் அணுவின் உருவஅளவு குறைகிறது.

167) உலோகங்கள் வெப்பத்தையும், மின்சாரத்தையும் எளிதில் கடத்தும் தன்மையன. இதற்கு பொருந்தாதது எது?

A) வெள்ளி

B) தாமிரம்

C) டங்ஸ்டன்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: உலோகங்கள் வெப்பத்தையும், மின்சாரத்தையும் எளிதில் கடத்தும் தன்மையன. எ.கா. தாமிரம், வெள்ளி (டங்கஸ்டன் தவிர) .

168) உலோக மூலக்கூறுகள், ஆவிநிலையில், ______________அணுக்கட்டு எண்ணைப் பெற்றுள்ளன?

A) ஒன்று

B) இரண்டு

C) மூன்று

D) நான்கு

விளக்கம்: உலோக மூலக்கூறுகள், ஆவிநிலையில், ஒற்றை அணுக்கட்டு எண்ணைப் பெற்றுள்ளன.

169) உலோக ஆக்ஸைடுகள் பொதுவாக________________தன்மையுடையன?

A) அமிலத்தன்மை

B) காரத்தன்மை

C) உப்புத்தன்மை

D) நடுநிலைத்தன்மை

விளக்கம்: உலோக ஆக்ஸைடுகள் பொதுவாக காரத்தன்மை உடையன.

170) கூற்றுகளை ஆராய்க.

1. எல்லா உலோகங்களும், அறை வெப்பநிலையில் திரவ நிலையில் உள்ளவை.

2. உலோகங்கள் அதிக பளபளப்பானவை.

3. அனேக உலோகங்கள், கடின தன்மையையும், வலிமையையும் பெற்றவை.

4. வழக்கமாக, உலோகங்கள் குறைவான உருகுநிலை மற்றும் அதிக கொதிநிலையைப் பெற்றிருக்கும்.

A) 1, 2, 3 சரி

B) 1, 4 சரி

C) 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. எல்லா உலோகங்களும், அறை வெப்பநிலையில் திட நிலையில் உள்ளவை.

2. உலோகங்கள் அதிக பளபளப்பானவை.

3. அனேக உலோகங்கள், கடின தன்மையையும், வலிமையையும் பெற்றவை.

4. வழக்கமாக, உலோகங்கள் அதிக உருகுநிலை மற்றும் அதிக கொதிநிலையைப் பெற்றிருக்கும்.

171) உலோகங்களின் வேதியியல் பண்பு பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. உலோக அணுக்கள் பொதுவாக 1, 2 அல்லது 3 எலக்ட்ரான்களை வெளிக்கூட்டில் பெற்றுள்ளன.

2. உலோகங்கள் எலக்ட்ரான்களை இழந்து நேர்மின் அயனிகளாக மாறும் தன்மை உடையவை. அதனால் அவை நேர்மின்சுமை பெறும்.

3. உலோகங்களின் சேர்மங்கள் மின்னாற்பகுத்தல் வினையின் போது, உலோக அயனிகள் எதிர்மின்வாய் வந்தடையும்.

4. உலோக மூலக்கூறுகள், ஆவிநிலையில், ஒற்றை அணுக்கட்டு எண்ணைப் பெற்றுள்ளன.

A) 1, 2 சரி

B) 1, 2, 3 சரி

C) 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. உலோக அணுக்கள் பொதுவாக 1, 2 அல்லது 3 எலக்ட்ரான்களை வெளிக்கூட்டில் பெற்றுள்ளன.

2. உலோகங்கள் எலக்ட்ரான்களை இழந்து நேர்மின் அயனிகளாக மாறும் தன்மை உடையவை. அதனால் அவை நேர்மின்சுமை பெறும்.

3. உலோகங்களின் சேர்மங்கள் மின்னாற்பகுத்தல் வினையின் போது, உலோக அயனிகள் எதிர்மின்வாய் வந்தடையும்.

4. உலோக மூலக்கூறுகள், ஆவிநிலையில், ஒற்றை அணுக்கட்டு எண்ணைப் பெற்றுள்ளன.

172) வெள்ளியத்தின் தாது எது?

A) ஹேமடைட்

B) பாக்சைட்

C) டின்ஸ்டோன்

D) குப்ரைட்

விளக்கம்: காந்த முறை பிரிப்பு: தாதுக்களின் காந்தத்தன்மை, பிரித்தலின் அடிப்படையாக அமைகிறது. தாதுவோ அல்லது தாதுக்கூளமோ காந்தத் தன்மை பெற்றிருப்பின், இம்முறை செயல்படுத்தப்படும். எ.கா. டின்ஸ்டோன். இது வெள்ளீயத்தின் தாது ஆகும்.

173) லேசான துகள்களான சல்பைடு தாதுக்கள் கீழ்க்காணும் எம்முறையில் பிரிக்கப்படுகின்றன?

A) புவியீர்ப்பு முறையில் பிரித்தல்

B) காந்த முறை பிரிப்பு

C) நுரை மிதப்பு முறை

D) வேதிமுறை

விளக்கம்: நுரை மிதப்பு முறை: பைன் ஆயிலின் மூலம் தாதுக்களையும், நீரின் மூலம் தாதுக்கூளங்களையும் எந்த அளவிற்கு எளிதில் ஈரப்பதம் ஏற்ற முடியுமோ, அதுவே, இம்முறையின் தத்துவமாகும். லேசனா தாதுக்களான, சல்பைடு தாதுக்கள் இம்முறையில் அடர்பிக்கப்படுகின்றன.

174) ஆவர்த்தன பண்பின் தொகுதி பற்றிய கூற்றுகளில் தவறானதை தேர்வு செய்க.

A) அணு ஆரம் – அதிகரிக்கிறது

B) அயனியாக்கும் ஆற்றல் – குறைகிறது

C) எலக்ட்ரான் கவர்த்தன்மை – அதிகரிக்கிறது

D) அயனி ஆரம் – அதிகரிக்கிறது

விளக்கம்:

ஆவர்த்தன பண்பு தொகுதியில் மாற்றம்.

அணு ஆரம் – அதிகரிக்கிறது

அயனி ஆற்றல் – அதிகரிக்கிறது

அயனியாக்கும் ஆற்றல் – குறைகிறது

எலக்ட்ரான் நாட்டம் – குறைகிறது

எலக்ட்ரான் கவர்த்தன்மை – குறைகிறது.

175) ஹேமடைட் என்பது கீழ்க்காண்பனவற்றில் எதன் தாது ஆகும்?

A) மெக்னீசியம்

B) அலுமினியம்

C) இரும்பு

D) செம்பு

விளக்கம்: ஹேமடைட் என்பது இரும்பின் முக்கியமான தாது ஆகும்.

176) கீழ்க்காண்பனவற்றில் எது சல்பைடு தாது அல்ல?

A) கலீனா

B) குப்ரைட்

C) இரும்பு பைரைட்

D) ஜிங்க் ப்ளன்ட்

விளக்கம்: ஆக்ஸைடு தாதுக்கள்: பாக்சைட், குப்ரைட், ஹேமடைட்.

சல்பைடு தாதுக்கள்: கலீனா, இரும்பு பைரைட், ஜிங்க் ப்ளன்ட்

177) உலோக ஆக்சைடுகள் உலோகமாக____________உதவியுடன் வேதி ஒடுக்கம் அடைகிறது?

A) பொட்டாசியம்

B) அலுமினியம்

C) ஹைட்ரஜன்

D) கார்பன்

விளக்கம்: உலோக ஆக்சைடு உலோகமாக கார்பன் உதவியுடன் வேதி ஒடுக்கம் அடைகிறது.

178) கூற்றுகளை ஆராய்க.

1. உலோகங்கள் அதிக அடர்த்தி பெற்றவை.

2. உலோகங்கள் கம்பியாக நீளும் தன்மை பெற்றவை. அவற்றை உடைக்காமல், கம்பியாக நீட்ட முடியும்.

3. உலோகங்கள் தகடாகும் தன்மை பெற்றவை அல்ல.

4. சோடியம், பொட்டாசியம் தவிர, அனைத்து உலோகங்களும் தண்ணீரை விட அடர்த்தி குறைந்தவை.

A) 1, 2 தவறு

B) 2, 3 தவறு

C) 3, 4 தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: 1. உலோகங்கள் அதிக அடர்த்தி பெற்றவை.

2. உலோகங்கள் கம்பியாக நீளும் தன்மை பெற்றவை. அவற்றை உடைக்காமல், கம்பியாக நீட்ட முடியும்.

3. உலோகங்கள் தகடாகும் தன்மை பெற்றவை. அவற்றை எந்த பிளவும் படாமல், அடித்தடித்து தகடாக மாற்ற முடியும்.

4. சோடியம், பொட்டாசியம் தவிர, அனைத்து உலோகங்களும் தண்ணீரை விட அடர்த்தி மிகுந்தவை.

179) நவீன தனிம வரிசை அட்டவணையில் உள்ள நீண்ட தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன?

A) 18

B) 22

C) 14

D) 24

விளக்கம்: நவீன தனிம வரிசை அட்டவணையில் அணு எண் 19 லிருந்து 36 வரை கொண்ட தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு நீண்ட தொடராகும். இதில் 18 தனிமங்கள இடம்பெற்றுள்ளன.

180) கீழ்க்காணும் எதனுடன் வினைபுரிந்து காப்பர், நைட்ரிக் ஆக்ஸைடு வாயுவை வெளியேற்றுகின்றது?

A) HCl

B) H2SO4

C) HNO3

D) குளோரின்

விளக்கம்: காப்பர், காற்றில்லா சூழ்நிலையில், நீர்த்த HCl மற்றும் H2SO4 அமிலங்களுடன் வினை புரியாது. ஆனால் காற்றின் முன்னிலையில் அமிலத்தில் கரைகின்றது. நீர்த்த HNO3 உடன் வினைபுரிந்து நைட்ரிக் ஆக்ஸைடு வாயுவை வெளியேற்றுகின்றது.

181) கீழ்க்காண்பனவற்றில் எது கார்பனேட் தாது அல்ல?

A) மார்பிள்

B) மாக்னசைட்

C) சிட்ரைட்

D) ஃப்ளுர்ஸ்பார்

விளக்கம்: கார்பனேட் தாது: மார்பிள், மாக்னசைட், சிட்ரைட்

ஹேலைடு தாது: கிரையோலைட், ஃப்ளுர்ஸ்பார், பாறை உப்பு

182) கூற்றுகளை ஆராய்க.

1. தாதுக்களுக்கும், தாதுக் கூளங்களுக்கும் இடையில் உள்ள அடர்த்தி வேறுபாடு புவியீர்ப்பு முறை பிரித்தலின் அடிப்படையாகும்.

2. ஆக்சைடு தாதுக்கள் புவியீர்ப்பு முறை பிரித்தல் மூலம் தூய்மையாக்கப்படுகின்றன.

3. இரும்பின் தாது ஹேமடைட் ஆகும்.

4. எக்கனிமத்திலிருந்து, உலோகமானது எளிதில், சிக்கனமாக, பெரிய அளவில் பிரித்தெடுக்க முடிகிறதோ அதுவே தாது எனப்படும்

A) 2, 3சரி

B) 1, 2, 3 சரி

C) 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. தாதுக்களுக்கும், தாதுக் கூளங்களுக்கும் இடையில் உள்ள அடர்த்தி வேறுபாடு புவியீர்ப்பு முறை பிரித்தலின் அடிப்படையாகும்.

2. ஆக்சைடு தாதுக்கள் புவியீர்ப்பு முறை பிரித்தல் மூலம் தூய்மையாக்கப்படுகின்றன.

3. இரும்பின் தாது ஹேமடைட் ஆகும்.

4. எக்கனிமத்திலிருந்து, உலோகமானது எளிதில், சிக்கனமாக, பெரிய அளவில் பிரித்தெடுக்க முடிகிறதோ அதுவே தாது எனப்படும்

183) கூற்றுகளை ஆராய்க.

1. உலோக ஆக்சைடு உலோகமாக மின்னாற் பகுப்பின் மூலம் ஒடுக்கம் அடைகிறது.

2. செஞ்சூடேற்றி சிதைவுறுதலால் உலோக ஆக்சைடு உலோகமாக ஒடுக்கம் அடைகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. உலோக ஆக்சைடு உலோகமாக மின்னாற் பகுப்பின் மூலம் ஒடுக்கம் அடைகிறது.

2. செஞ்சூடேற்றி சிதைவுறுதலால் உலோக ஆக்சைடு உலோகமாக ஒடுக்கம் அடைகிறது.

184) தவறான கூற்றைத் தெரிவு செய்க.

A) உலோகங்கள் எலக்ட்ரானை இழந்து நேர்மின் அயனிகளாக மாறும் தன்மை உடையவை. அதனால் அவை நேர்மின் சுமை பெறும்.

B) உலோக அணுக்கள் பொதுவாக 1, 2 அல்லது 3 எலக்ட்ரான்களை வெளிக்கூட்டில் பெற்றுள்ளன.

C) வழக்கமாக உலோகங்கள் திரவ கரைப்பானில் கரையும்

D) உலோகங்கள் வெப்பத்தையும், மின்சாரத்தையும் எளிதில் கடத்தும் தன்மையன. எ.கா. வெள்ளி, தாமிரம் (டங்ஸ்டன் தவிர)

விளக்கம்: உலோகங்கள் எலக்ட்ரானை இழந்து நேர்மின் அயனிகளாக மாறும் தன்மை உடையவை. அதனால் அவை நேர்மின் சுமை பெறும்.

உலோக அணுக்கள் பொதுவாக 1, 2 அல்லது 3 எலக்ட்ரான்களை வெளிக்கூட்டில் பெற்றுள்ளன.

வழக்கமாக உலோகங்கள் திரவ கரைப்பானில் கரைவதில்லை

உலோகங்கள் வெப்பத்தையும், மின்சாரத்தையும் எளிதில் கடத்தும் தன்மையன. எ.கா. வெள்ளி, தாமிரம்(டங்ஸ்டன் தவிர)

185) அலுமினியத்தின் முக்கியத் தாதுக்களில் பொருந்தாதது எது?

A) பாக்சைட்

B) கிரையோலைட்

C) கொரண்டம்

D) குப்ரைட்

விளக்கம்: புவித்தோட்டில் மிகச் செறிந்து காணப்படும் உலோகம் அலுமினியம் ஆகும். இதன் வினைபடும் திறன் அதிகம். அதனால் சேர்ந்த நிலையில் இது காணப்படும். இதன் முக்கியத் தாதுக்கள்:

1. பாக்சைட்

2. கிரையோலைட்

3. கொரண்டம்

186) பாக்சைட்டை அலுமினாவாக மாற்றம் செய்தல்____________முறை எனப்படும்?

A) பேயர் முறை

B) ஹேபர் முறை

C) ஹால் முறை

D) பாஸ்டியர் முறை

விளக்கம்: பாக்சைட்டை அலுமினாவாக மாற்றம் செய்தல் பேயர் முறை எனப்படும். பாக்சைட் என்பது அலுமினியத்தின் முக்கியத் தாது ஆகும். இதை குறிப்பிட்ட அழுத்தத்தில் வினைப்படுத்தும் போது, சோடியம் மெட்டா அலுமினேட் உருவாகிறது. இதை நீரினால் நீர்க்கச் செய்வதால், அலுமினியம் ஹைட்ராக்சைடு வீழ்படிவு உருவாகிறது. இவ்வீழ்படிவை வடிகட்டி, நன்கு கழுவி பின் 100 டிகிரி வெப்பநிலையில் உலர்த்திட, அலுமினா உருவாகிறது.

187) எதிர்மின் அயனியானது அதன் தொடர்புடைய அணுவைவிட உருவளவில்_____________ஆக இருக்கும்?

A) பெரியதாக

B) சிறியதாக

C) மாறாமல்

D) கூற இயலாது

விளக்கம்: கரைசல்களின் இயல்புகளையும், அயனித்திண்மங்களின் வடிவமைப்புகளையும், தீர்மானிக்க, அயனிகளின் உருவளவு முக்கியமாகும். எதிர்மின் அயனியானது அதன் தொடர்புடைய அணுவைவிட உருவளவில் பெரியதாக இருக்கும்.

188) அலுமினாவை மின்னாற்பகுத்தல் மூலம் ஒடுக்கம் செய்யும் முறை எது?

A) பேயர் முறை

B) ஹேபர் முறை

C) ஹால் முறை

D) பாஸ்டியர் முறை

விளக்கம்: அலுமினாவை, மின்னாற்பகுத்தல் மூலம் ஒடுக்கம் செய்தல் ஹால் முறை ஆகும். மின்னாற்பகுப்பு கலனில் உருகிய அலுமினாவை, மின்னாற் பகுப்பு முறையில் ஒடுக்கிட, அலுமினியம் கிடைக்கிறது.

189) அலுமினியத்தின் பண்புகளில் பொருந்தாதது எது?

A) இது வெள்ளியைப் போன்ற மென்மையான உலோகம்

B) இது லேசான, அடர்த்தி குறைந்த உலோகம்

C) தகடாக அடிக்கலாம், கம்பியாக நீட்டலாம்

D) இதன் உருகுநிலை 670 டிகிரி செல்சியஸ்

விளக்கம்: இது வெள்ளியைப் போன்ற மென்மையான உலோகம்

இது லேசான, அடர்த்தி குறைந்த உலோகம்

தகடாக அடிக்கலாம், கம்பியாக நீட்டலாம்

இதன் உருகுநிலை 660 டிகிரி செல்சியஸ்

190) ஒரு அணுவானது எலக்ட்ரானை ஏற்கும் போது__________அயனியாக மாறும்?

A) எதிர்மின் அயனி

B) நேர்மின் அயனி

C) சமநிலை அயனி

D) நிலைமின் அயனி

விளக்கம்: ஒரு அணுவானது எலக்ட்ரானை இழந்தோ, ஏற்றோ அயனியாக மாறும். எலக்ட்ரானை ஏற்கும் அணு, எதிர்மின் சுமை பெற்று, எதிர்மின் அயனி என்றழைக்கப்படும்.

191) அலுமினியம் பற்றிய கூற்றகளை ஆராய்க.

1. அலுமினியம் உலர்ந்த காற்றுடன் வினைபுரியும்

2. இது வெப்பத்தை நன்கு கடத்தும்

3. இது மின்சாரத்தை நன்கு கடத்தாது.

4. ரோமானியர்களால் இவ்வுலோகம் குப்ரம் என்றழைக்கப்பட்டது.

A) 4 மட்டும் தவறு

B) 3, 4 தவறு

C) 2 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. அலுமினியம் உலர்ந்த காற்றுடன் வினைபுரியாது

2. இது வெப்பத்தை நன்கு கடத்தும்

3. இது மின்சாரத்தை நன்கு கடத்தும்

4. ரோமானியர்களால் குப்ரம் என்றழைக்கப்பட்ட உலோகம் – தாமிரம்.

192) தாதுக்களுக்கும், தாதுக் கூளங்களுக்கும் இடையில் உள்ள அடத்தி வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு தாதுக்களைப் பிரித்தெடுக்கும் முறை எது?

A) புவிஈர்ப்பு முறையில் பிரித்தல்

B) காந்த முறை பிரிப்பு

C) நுரைமிதப்பு முறை

D) வேதிமுறை

விளக்கம்: தாதுக்களுக்கும், தாதுக் கூளங்களுக்கும் இடையில் உள்ள அடத்தி வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு தாதுக்களைப் பிரிக்கும் முறை புவிஈர்ப்பு முறையில் பிரித்தலாகும்.

193) கூற்றுகளை ஆராய்க.

1. அனேக உலோகங்கள், கடினத் தன்மையுயைம், வலிமையையும் பெற்றவை அல்ல.

2. வழக்கமாக, உலோகங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலையைப் பெற்றிருக்கும்.

3. பொதுவாக உலோகங்கள் அதிக வெப்பநிலையில் ஆவியாகும் தன்மை பெற்றவை அல்ல.

4. உலோகங்களின் சேர்மங்கள் மின்னாற்பகுத்தல் வினையின் போது, உலோக அயனிகள் எதிர்மின்வாய் வந்தடையும்.

A) 1, 3 தவறு

B) 2, 4 தவறு

C) 1, 2 தவறு

D) 3, 4 தவறு

விளக்கம்: 1. அனேக உலோகங்கள், கடினத் தன்மையுiயும், வலிமையையும் பெற்றவை.

2. வழக்கமாக, உலோகங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலையைப் பெற்றிருக்கும்.

3. பொதுவாக உலோகங்கள் அதிக வெப்பநிலையில் ஆவியாகும் தன்மை பெற்றவை.

4. உலோகங்களின் சேர்மங்கள் மின்னாற்பகுத்தல் வினையின் போது, உலோக அயனிகள் எதிர்மின்வாய் வந்தடையும்.

194) அலுமினியம் உலர்ந்த காற்றுடன் வினைபுரியாது. மாறாக எத்தனை டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இது காற்றுடன் வினைபுரியும்?

A) 660

B) 720

C) 800

D) 1400

விளக்கம்: உலர்ந்த காற்றுடன் அலுமினியம் வினைபுரியாது. 800டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அலுமினியம் காற்றுடன் வினைபுரிந்து ஆக்சைடு மற்றும் நைட்ரைடுகளை உருவாக்கும்.

195) அலுமினியம் கீழ்க்காணும் எதனுடன் வினைபுரிந்து ஆக்சைடு மற்றும் நைட்ரஜனைத் தருகிறது?

A) காற்று

B) நீர்

C) நீராவி

D) அமிலங்கள்

விளக்கம்: அலுமினியம் நீருடன் வினைபுரியாது. ஆனால் நீராவியுடன் செஞ்சூடேற்றிய அலுமினியம், வினைபுரிந்து அலுமினியம் ஆக்சைடையும், ஹைட்ரஜனையும் உருவாக்குகிறது.

196) இரு அணுக்களுக்கு இடையே உள்ள எலக்ட்ரான் கவர்த்தன்மை வித்தியாசம் 1.7ஐ விட குறைவாயின் அப்பிணைப்பு________________பிணைப்பாகும்?

A) அயனிப் பிணைப்பு

B) சகப்பிணைப்பு

C) ஈதல் சகப்பிணைப்பு

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: இரு அணுக்களுக்கு இடையே உள்ள எலக்ட்ரான் கவர்த்தன்மை வித்தியாசம் 1.7 இருந்தால் அப்பிணைப்பு 50 சதவீதம் அயனித்தன்மையும், 50 சதவீதம் சகப்பிணைப்புத் தன்மையையும் பெற்றிருக்கும். இரு அணுக்களுக்கு இடையே உள்ள எலக்ட்ரான் கவர்த்தன்மை வித்தியாசம் 1.7ஐ விட குறைவாயின் அப்பிணைப்பு சகப்பிணைப்பாகும்.

197) கீழ்க்காண்பனவற்றில் எது காப்பரின் முக்கியத் தாது அல்ல?

A) காப்பர் பைரைட்

B) குப்ரைட்

C) ரூபி காப்பர்

D) கொரண்டம்

விளக்கம்: காப்பரின் முக்கியத் தாதுக்கள்: காப்பர் பைரைட், குப்ரைட் அல்லது ரூபி காப்பர், காப்பர் கிளான்ஸ். கிரையோலைட் என்பது அலுமினியத்தின் தாது ஆகும்.

198) கீழ்க்காண்பனவற்றில் எது குறைவாக வினைபடும் உலோகம்?

A) சோடியம்

B) மெர்குரி

C) மெக்னீசியம்

D) ஜிங்க்

விளக்கம்: அதிக வினைபடும் உலோகங்கள்: Na, K, Ca, Mg, Al

சாதாரணமாக வினைபடும் உலோகங்கள்: Zn, Fe, pb, Cu

குறைவாக வினைபடும் உலோகங்கள்: Ag, Hg.

199) சோடியம் முதல் ஆர்கான் வரையிலான எட்டு தனிமங்களை கொண்ட தொடர் எது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: சோடியம் முதல் ஆர்கான் வரையில் எட்டு தனிமங்களை கொண்ட தொடர் மூன்றாம் தொடராகும். இது ஒரு சிறிய தொடராகும். ஆவர்த்தன அட்டவணையில் மொத்தம் 7 தொடர்கள் உள்ளன.

200) இரும்பின் தாதுக்களில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) ஹேமடைட்

B) மேக்னடைட்

C) இரும்பு பைரைட்

D) லிக்னைட்

விளக்கம்: இரும்பின் தாதுக்கள்: ஹேமடைட், மேக்னடைட், இரும்பு பைரைட். இதில் இரும்பின் முக்கிய தாது ஹேமடைட் ஆகும். லிக்னைட் என்பது நிலக்கரியின் பெயர் ஆகும்.

201) கீழ்க்காணும் எந்த காப்பர் தாதுவிலிருந்து 76 சதவீதம் தாமிரம் பெறப்படுகின்றது?

A) காப்பர் பைரைட்

B) குப்ரைட்

C) காப்பர் கிளான்ஸ்

D) ரூபி காப்பர்

விளக்கம்: காப்பரின் முக்கியத் தாது காப்பர் பைரைட் ஆகும். 76 சதவீதம் தாமிரம் இத்தாதுவில் இருந்து பெறப்படுகின்றது.

202) காப்பரின் உருகுநிலை எத்தனை டிகிரி செல்சியஸ்?

A) 1400

B) 1356

C) 1367

D) 1267

விளக்கம்: தாமிரம்: இது செம்பழுப்பு நிறமுள்ள உலோகம் ஆகும். பளபளப்பும், அதிக அடர்த்தியும் கொண்டது. இதன் உருகுநிலை 1356 டிகிரி செல்சியஸ் ஆகும். 2

203) கூற்றுகளை ஆராய்க.

1. காற்றில்லா சூழ்நிலையில், காப்பர் அமிலத்தில் கரைகின்றது.

2. நீர்த்த HCl மற்றும் H2SO4 அமிலங்களுடன் வினைபுரிந்து நைட்ரிக் ஆக்ஸைடு வாயுவை வெளியேற்றுகின்றது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: காப்பர், காற்றில்லா சூழ்நிலையில், நீர்த்த HCl மற்றும் H2SO4 அமிலங்களுடன் வினை புரியாது. ஆனால் காற்றின் முன்னிலையில் அமிலத்தில் கரைகின்றது. நீர்த்த HNO3 உடன் வினைபுரிந்து நைட்ரிக் ஆக்ஸைடு வாயுவை வெளியேற்றுகின்றது.

204) அலுமினியம் கீழ்க்காணும் எதனுடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை (H2) -ஐ தருகிறது?

A) கந்தக அமிலம்

B) ஹைட்ரோ குளோரிக் அமிலம்

C) நைட்ரிக் அமிலம்

D) சல்ப்யூரிக் அமிலம்

விளக்கம்: நீர்த்த மற்றும் அடர் HCl அமிலங்களுடன் அலுமினியம் வினைபுரிந்து H2 வாயுவை வெளியிடுகிறது.

205) கூற்றுகளை ஆராய்க.

1. தாமிரம் குளோரினுடன் வினைபுரிந்து காப்பர் குளோரைடை தருகின்றது.

2. தாமிரம் காரத்தினால் எந்த பாதிப்பும் அடைவதில்லை.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தாமிரம் குளோரினுடன் வினைபுரிந்து காப்பர் குளோரைடை தருகின்றது.

2. தாமிரம் காரத்தினால் எந்த பாதிப்பும் அடைவதில்லை.

206) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) அதிக வினைபடும் உலோகங்கள்: Na, K, Ca.Mg.Al.

B) சாதாரணமாக வினைபடும் உலோகங்கள்: Zn, Fe, bp, Cu.

C) குறைவாக வினைபடும் உலோகங்கள்: Ag, Hg.

D) எதுவுமில்லை

விளக்கம்: அதிக வினைபடும் உலோகங்கள்: Na, K, Ca.Mg.Al.

சாதாரணமாக வினைபடும் உலோகங்கள்: Zn, Fe, bp, Cu.

குறைவாக வினைபடும் உலோகங்கள்: Ag, Hg.

207) அலுமினியத்தின் பயன்களில் பொருந்தாததை தேர்வு செய்க.

A) வீட்டுப்பாத்திரங்கள் செய்யப்பயன்படுகிறது

B) மின்முலாம் பூசப் பயன்படுகிறது.

C) மின்கம்பி செய்யப் பயன்படுகிறது.

D) விமானம் மற்றும் தொழில் இயந்திரங்களின் பாகங்களைச் செய்யப் பயன்படுகிறது.

விளக்கம்: தாமிரத்தின் பயன்கள்:

1. மின் கம்பிகளையும், மின் உபகரணங்களையும் உருவாக்கப் பயன்படுகிறது. 2. கலோரிமீட்டர், பாத்திரங்கள், நாணயங்கள் போன்றவற்றை உருவாக்கப் பயன்படுகிறது.

3. மின்முலாம் பூசப் பயன்படுகிறது.

4. தங்கம் மற்றும் வெள்ளியோடு கலந்து, உலோகக்கலவையாக்கி நாணயங்கள் மற்றும் அணிகலன்கள் உருவாக்கப் பயன்படுகிறது.

அலுமினியத்தின் பயன்கள்:

1. வீட்டுப்பாத்திரங்கள் செய்யப்பயன்படுகிறது.

2. மின்கம்பி செய்யப் பயன்படுகிறது.

3. விமானம் மற்றும் தொழில் இயந்திரங்களின் பாகங்களைச் செய்யப்பயன்படுகிறது

208) கூற்று: தனிம வரிசை அட்டவணையில் உள்ள தனிமங்களின் அணு ஆரங்களைப் பார்க்கும் போது, தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்கும்போது அணு ஆரங்கள் அதிகரிக்கும்.

காரணம்: தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்கும்போது, வெளிக்கூடு எண் அதிகரிக்கும்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: தனிம வரிசை அட்டவணையில், தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்கும்போது அணு ஆரங்கள் அதிகரிக்கும். தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்கும்போது, வெளிக்கூடு எண் அதிகரிக்கும். இதனால், வெளிக்கூட்டிற்கும் ஆற்றல் மட்டத்திற்கும் அணுக்கருவிற்கும் இடைப்பட்ட தூரம் அதிகரித்து கவர்ச்சி விசை குறைந்து, உருவளவு பெரிதாகக் காணப்படும்.

209) அலுமினியத்திற்கு அடுத்து மிக அதிகமாக காணப்படும் உலோகம் எது?

A) காப்பர்

B) செம்பு

C) இரும்பு

D) தங்கம்

விளக்கம்: அலுமினியத்திற்கு அடுத்து, மிக அதிகமாக காணப்படும் உலோகம் இரும்பு ஆகும். இயற்கையில், இது ஆக்சைடு, சல்பைடு மற்றும் கார்பனேட்டுகளாக கிடைக்கின்றன.

210) அலுமினியம் நீர்த்த சல்ப்யூரிக் அமிலுத்துடன்_______________வாயுவையும், அடர் சல்ப்யூரிக் அமிலத்துடன்____________வாயுவையும் வெளியிடுகிறது.

A) ஹைட்ரஜன், சல்பர்-டை-ஆக்ஸைடு

B) சல்பர்-டை-ஆக்ஸைடு, ஹைட்ரஜன்

C) சல்பர்-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன்

D) நைட்ரஜன், சல்பர்-டை-ஆக்ஸைடு

விளக்கம்: அலுமினியம் நீர்த்த சல்ப்யூரிக் அமிலத்துடன் ஹைட்ரஜன் வாயுவையும், அடர் சல்ப்யூரிக் அமிலத்துடன் சல்பர்-டை-ஆக்சைடு வாயுவையும் வெளியிடுகிறது.

211) காப்பரின் முக்கியத் தாது எது?

A) காப்பர் பைரைட்

B) குப்ரைட்

C) காப்பர் கிளான்ஸ்

D) ரூபி காப்பர்

விளக்கம்: காப்பரின் முக்கியத் தாது காப்பர் பைரைட் ஆகும். 76 சதவீதம் தாமிரம் இத்தாதுவில் இருந்து பெறப்படுகின்றது.

212) கூற்றுகளை ஆராய்க.

1. பொதுவாக எல்லா உலோகங்களும் அறை வெப்பநிலையில், திட நிலையில் உள்ளன.

2. உலோக ஆக்சைடுகள் பொதுவாக அமிலத்தன்மை உடையன.

3. உலோக மூலக்கூறுகள், ஆவிநிலையில், ஒற்றை அணுக்கட்டு எண்ணைப் பெற்றுள்ளன.

4. உலோகங்கள் அதிக பளபளப்புத் தன்மை அற்றவை

A) 2, 3 சரி

B) 1, 3 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. பொதுவாக எல்லா உலோகங்களும் அறை வெப்பநிலையில், திட நிலையில் உள்ளன.

2. உலோக ஆக்சைடுகள் பொதுவாக காரத்தன்மை உடையன.

3. உலோக மூலக்கூறுகள், ஆவிநிலையில், ஒற்றை அணுக்கட்டு எண்ணைப் பெற்றுள்ளன.

4. உலோகங்கள் அதிக பளபளப்புத் தன்மை உடையவை

213) கீழ்க்காண்பனவற்றில் இரும்பின் முக்கியத் தாது எது?

A) ஹேமடைட்

B) மேக்னடைட்

C) இரும்பு பைரைட்

D) பாக்சைட்

விளக்கம்: அலுமினியத்திற்கு அடுத்து, மிக அதிகமாக காணப்படும் உலோகம் இரும்பு ஆகும். இயற்கையில், இது ஆக்சைடு, சல்பைடு மற்றும் கார்பனேட்டுகளாக கிடைக்கின்றன. இரும்பின் தாதுக்கள்: ஹேமடைட், மேக்னடைட், இரும்பு பைரைட். இதில் இரும்பின் முக்கிய தாது ஹேமடைட் ஆகும்.

214) எலக்ட்ரான் நாட்டத்தின் அலகு என்ன?

A) கிலோ ஜுல்/மோல்

B) ஜுல்/மோல்

C) மோல்/கிலோ ஜுல்

D) கிலோ ஜுல் மோல்

விளக்கம்: ஒரு தனித்த நடுநிலை உடைய வாயுநிலை அணு ஒன்றின் இணைதிறன் கூட்டில், ஒரு எலக்ட்ரானை சேர்த்து, அதன் எதிர் மின் சுமையுடைய அயனியை உருவாக்கும் போது வெளிப்படும் ஆற்றல் எலக்ட்ரான் நாட்டம் எனப்படும். அயனியாக்கும் ஆற்றலைப் போல, எலக்ட்ரான் நாட்டமும் தொடரில் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக அதிகரித்தும், தொகுதியில் மேலிருந்து கீழாக குறைந்தும் காணப்படும். இதன் அலகு கிலோ ஜுல்/மோல் ஆகும்.

215) கார்பனைப் பொறுத்து இரும்பு எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: கார்பனைப் பொறுத்து இரும்பு மூன்று வகைப்படும். அவை,

1. வார்ப்பிரும்பு – 2-4 சதவீதம்

2. எஃகு – 0.25-2 சதவீதம்

3. தேனிரும்பு – 0.25 சதவீதத்திற்கும் கீழ்

216) அனேக உலோகங்கள், கடின தன்மையையும் வலிமையையும் பெற்றவை. ஆனால் கீழ்காணும் ஒன்று இதற்கு பொருந்தாது?

A) மெர்குரி

B) காலியம்

C) பொட்டாசியம்

D) மெக்னீசியம்

விளக்கம்: அனேக உலோகங்கள், கடின தன்மையையும் வலிமையையும் பெற்றவை. (சோடியம், பொட்டாசியம் தவிர. இவை கத்தியால் வெட்ட இயலும். மென்மை பெற்றவை) .

217) நங்கூரம் செய்யப் பயன்படும் இரும்பின் வகை எது?

A) வார்ப்பிரும்பு

B) தேனிரும்பு

C) எஃகு

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: தேனிரும்பு என்பது 0.25 சதவீதத்திற்கும் குறைவான கார்பன் உடைய இரும்பு ஆகும். இது கம்பிச் சுருள், மின்காந்தங்கள் மற்றும் நங்கூரம் இவற்றைச் செய்யப் பயன்படுகிறது.

218) லித்தியம் முதல் நியான் வரை இடம்பெற்ற தொடர் எது?

A) 2

B) 4

C) 1

D) 3

விளக்கம்: அணு எண் 3 லிருந்து 10 வரை உடைய தனிமங்கள் இடம்பெற்ற தொடர் இரண்டாம் தொடராகும். இது ஒரு சிறிய தொடராகும். இதில் லித்தியம் முதல் நியான் வரையிலான 8 தனிமங்கள் இடம்பெற்றுள்ளன.

219) டி.வி. கோபுரங்கள் மற்றும் கட்டிடக் கட்டுமானங்கள் கட்ட பயன்படும் இரும்பின் வகை எது?

A) வார்ப்பிரும்பு

B) தேனிரும்பு

C) எஃகு

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: எஃகு – 0.25-2 சதவீதம் கார்பன் உடைய இரும்பு ஆகும். இது கட்டிடக் கட்டுமானங்கள், எந்திரங்கள், மின்கடத்து கம்பிகள், டி.வி. கோபுரங்கள் மற்றும் உலோகக் கலவைகள் ஆகியவற்றை உருவாக்கப் பயன்படுகிறது.

220) கூற்று: மந்த வாயுக்களின் எலக்ட்ரான் நாட்டம் ஒன்று ஆகும்.

காரணம்: மந்த வாயுக்கள் ஒரு எலக்ட்ரானை மட்டுமே ஏற்கும் தன்மையை பெற்றுள்ளன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: மந்த வாயுக்கள் எலக்ட்ரான்களை ஏற்கும் தன்மையற்றவை. ஏனெனில், அவற்றின் வெளிமட்டத்தில் உள்ள s மற்றும் p ஆர்பிட்டால்கள் முழுமையாக எலக்ட்ரான்களால் நிரம்பி உள்ளன. அதனால் மேலும் ஒரு எலக்ட்ரானை சேர்ப்பது இயலாது. எனவே, இவற்றின் நாட்டம் பூஜ்ஜிய மதிப்பை பெறுகின்றன.

221) 1912-ம் ஆண்டு யார் ஆவர்த்தன வரிசைப்படுத்துதலுக்கு, அணு எண் என்பது சிறந்த அடிப்படை என்ற உண்மையைக் கண்டறிந்தார்?

A) நியூலாண்டு

B) டால்டன்

C) மெண்டலீப்

D) ஹென்றி மோஸ்லே

விளக்கம்: மெண்டலீப் மற்றும் அவரோடு இருந்தவர்களுக்கு அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை அடிப்படை பண்பாக இருக்கிறது என்பது அறியக்கூடாததாய் இருந்தது. 1912ஆம் ஆண்டு ஹென்றி மோஸ்லே என்ற பிரிட்டன் விஞ்ஞானி ஆவர்த்தன வரிசைப்படுத்துதலுக்கு, அணு எண் என்பது சிறந்த அடிப்படை என்ற உண்மையைக் கண்டறிந்தார்.

222) இரும்பு தன் திறனை இழக்க காரணமான அமிலம் எது?

A) ஹைட்ரோகுளோரிக் அமிலம்

B) அடர் கந்தக அமிலம்

C) அடர் நைட்ரிக் அமிலம்

D) நீர்த்த குளோரிக் அமிலம்

விளக்கம்: அடர் நைட்ரிக் அமிலத்தில், இரும்பை அமிழ்த்தும் போது இரும்பு ஆக்சைடு படலம் உருவாவதால், இரும்பு தன் திறனை இழக்கின்றது.

223) இரும்பு பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இது ஒரு பளபளப்பான உலோகம்

2. அடர் சாம்பல் வெள்ளை நிறமுடையது.

3. இழுவிசை, தகடாக்கும் தன்மை மற்றும் கம்பியாக்கும் தன்மையைப் பெற்றிருக்கும்.

4. காந்தமாக மாற்ற இயலாது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: 1. இது ஒரு பளபளப்பான உலோகம்

2. அடர் சாம்பல் வெள்ளை நிறமுடையது.

3. இழுவிசை, தகடாக்கும் தன்மை மற்றும் கம்பியாக்கும் தன்மையைப் பெற்றிருக்கும்.

4. காந்தமாக மாற்ற இயலும்.

224) போரான் குடும்பம் எந்த தொகுதியில் இடம்பெற்றுள்ளது?

A) 2

B) 14

C) 13

D) 15

விளக்கம்: நவீன தனிம வரிசை அட்டவணையில் 18 தொகுதிகள் உள்ளன. இதில் 13-வது தொகுதியில் போரான் குடும்பம் இடம்பெற்றுள்ளது.

225) இரும்பை ஊது உலையில், உருக்கிப்பிரித்தலுக்கு, வறுக்கப்பட்ட தாது, கல்கரி, சுண்ணாம்புக்கல் இவற்றை எந்த விகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்?

A) 8:4:1

B) 2:4:8

C) 1:8:4

D) 4:8:2

விளக்கம்: ஊது உலையில் உருக்கிப் பிரித்தல்: வறுக்கப்பட்ட தாது, கல்கரி, சுண்ணாம்புக்கல் இவற்றை 8:4:1 என்ற விகிதத்தில் எடுத்துக்கொண்டு, உலையின் மேலுள்ள கிண்ணக்கூம்பு அமைப்பு வழியாக, செலுத்தப்படுகிறது.

10th Science Lesson 9 Questions in Tamil

9] கரைசல்கள்

1) கூற்றுகளை ஆராய்க.

1. தெவிட்டாத கரைசல்களின் ஒரு வகைப்பாடே செறிவுமிக்க மற்றும் நீர்த்த கரைசல் என்ற வேறுபாடு ஆகும்.

2. இது கரைப்பானில் வெவ்வேறு அளவு கரைபொருளை கொண்ட இரு கரைசல்களின் ஒப்பீட்டு செறிவைக் குறிக்கிறது.

3. கரைபொருள் அதிகம் இருப்பின் அது செறிவுமிக்க கரைசல் என்று அழைக்கப்படுகிறது.

4. கரைப்பான் அதிகம் இருப்பின் அது நீர்த்தக கரைசல் என்று அழைக்கப்படுகிறது.

A) 1, 2, 3 சரி

B) 1, 2 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. தெவிட்டாத கரைசல்களின் ஒரு வகைப்பாடே செறிவுமிக்க மற்றும் நீர்த்த கரைசல் என்ற வேறுபாடு ஆகும்.

2. கரைப்பானில் வெவ்வேறு அளவு கரைபொருளை கொண்ட இரு கரைசல்களின் ஒப்பீட்டு செறிவைக் குறிக்கிறது.

3. கரைபொருள் அதிகம் இருப்பின் அது செறிவுமிக்க கரைசல் என்று அழைக்கப்படுகிறது.

4. கரைப்பான் அதிகம் இருப்பின் அது நீர்த்தக கரைசல் என்று அழைக்கப்படுகிறது.

2) கரைசல் என்பதற்கு பொருத்தமானது எது?

A) ஒரு படித்தான கலவை

B) பலபடித்தான கலவை

C) இருபடித்தான கலவை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: உப்பானது நீரில் கரையும். ஆனால் மணலானது நீரில் கரையாது. மணலும் நீரும் கலந்த கலவையை வடிகட்டுதல் முறையின் மூலம் பிரிக்கலாம். ஆனால், உப்பும் நீரும் கலந்த கலவையை அவ்வாறு பிரிக்க இயலாது. ஏனெனில் உப்பு, நீரில் கரைந்து ஒருபடித்தான கரைசலை உருவாக்குகிறது. இத்தகைய ஒருபடித்தான கலவையை கரைசல் என்கிறோம்.

3) தவறான கூற்றை தேர்வு செய்க.

A) கடல் நீரானது இயற்கையில் காணப்படும் கரைசல் ஆகும்

B) காற்று என்பது ஒரு கரைசல் அல்ல

C) உப்பு மற்றும் நீர் என்பது ஒரு படித்தான கலவையாகும்

D) மணல் மற்றும் நீர் என்பது பல படித்தான கலவையாகும்

விளக்கம்: கடல் நீரானது இயற்கையில் காணப்படும் கரைசல்களில் ஒன்று. கடல்நீர் இல்லாமல் இப்புவியில் நாம் வாழ்வதை கற்பனை செய்துகூட பார்க்க இயலாது. கடல் நீர் பல உப்புகள் கலந்த ஒரு படித்தான கலவையாகும். அதேபோல் காற்றும் ஒரு கரைசலாகும். உப்பு மற்றும் நீர் என்பது ஒரு படித்தான கலவையாகும். மணல் மற்றும் நீர் என்பது பல படித்தான கலவையாகும்.

4) ஒரு கரைபொருளையும் ஒரு கரைப்பானையும் கொண்டிருக்கும் கரைசல்_____________எனப்படும்

A) ஒருமடிக்கரைசல்

B) இருமடிக்கரைசல்

C) மும்மடிக்கரைசல்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ஒரு கரைசல் குறைந்தபட்சம் இரண்டு கூறுகளைக் கொண்டிருக்கும்(ஒரு கரைபொருள் மற்றும் ஒரு கரைப்பான்). ஒரு கரைபொருளையும், ஒரு கரைப்பானையும் கொண்டிருக்கும் கரைசல் இருமடிக்கரைசல்(இரு கூறுகள்) எனப்படும்.

5) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.(கரைபொருள்-உதாரணம்)

A) திண்மம் – தங்கத்தில் கரைக்கப்பட்ட காப்பர்

B) திரவம் – பாதரசத்துடன் கலந்த சோடியம் கரைசல்

C) திண்மம் – நீரில் கரைக்கப்பட்ட சோடியம் குளோரைடு கரைசல்

D) திரவம் – நீரில் கரைக்கப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடு

விளக்கம்: திண்மம் – தங்கத்தில் கரைக்கப்பட்ட காப்பர்

திரவம் – பாதரசத்துடன் கலந்த சோடியம் கரைசல்

திண்மம் – நீரில் கரைக்கப்பட்ட சோடியம் குளோரைடு கரைசல்

திரவம் – நீரில் கரைக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால்

வாயு – நீரில் கரைக்கப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடு

6) கீழ்க்காண்பனவற்றில் எது உலகளாவிய கரைப்பான் அல்லது சர்வக்கரைப்பான் என்று அழைக்கப்படுகிறது?

A) ஆல்கஹால்

B) ஈதர்கள்

C) பென்சீன்

D) நீர்

விளக்கம்: நீரில் பெரும்பாலான பொருட்கள் கரைகிறது. எனவே நீர் ஒரு ‘உலகளாவிய கரைப்பான்’ அல்லது ‘சர்வக்கரைப்பான்’ என்று அழைக்கப்படுகிறது.

7) கரைப்பானில் குறிப்பிட்ட அளவு கரைபொருள் கரைகிறது. கரைப்பானில் உள்ள கரைபொருளின் அளவைப் பொருத்து கரைசல்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: கரைப்பானில் உள்ள கரைபொருளின் அளவைப் பொருத்து கரைசல்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை,

1. தெவிட்டிய கரைசல்

2. தெவிட்டாத கரைசல்

3. அதிதெவிட்டிய கரைசல்

8) ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எந்த ஒரு கரைசலில், மேலும் கரைபொருளை கரைக்க இயலாதோ, அக்கரைசல்_____________கரைசல் எனப்படும்?

A) தெவிட்டிய கரைசல்

B) அதிதெவிட்டிய கரைசல்

C) தெவிட்டாத கரைசல்

D) அதிதெவிட்டாத கரைசல்

விளக்கம்: ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எந்த ஒரு கரைசலில், மேலும் கரைபொருளை கரைக்க இயலாதோ, அக்கரைசல் தெவிட்டிய கரைசல் எனப்படும். உதாரணமாக 25டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 100 கி நீரில், 36 கி சோடியம் குளோரைடு உப்பினைக் கரைத்து தெவிட்டிய கரைசல் உருவாக்கப்படுகிறது. மேலும் கரைபொருளைச் சேர்க்கும் போது அது கரையாமல் முகவையின் அடியில் தங்கிவிடுகிறது

9) அதிதெவிட்டிய கரைசல் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், தெவிட்டிய கரைசலில் உள்ள கரைபொருளின் அளவைக் காட்டிலும் அதிகமான கரைபொருளைக் கொண்ட கரைசல் அதிதெவிட்டிய கரைசல் எனப்படும்.

2. வெப்பநிலை, அழுத்தம் போன்ற சூழ்நிலைகளை மாற்றுவதன் மூலம் கரைதிறனை மாற்ற இயலாது.

3. அதிதெவிட்டிய கரைசலானது நிலையானது.

4. கரைசல் உள்ள முகவையை சிறிதளவு அசைத்தாலும் மீண்டும் படிகங்கள் தோன்றுகிறது

A) 1, 3, 4 சரி

B) 1, 4 சரி

C) 2, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், தெவிட்டிய கரைசலில் உள்ள கரைபொருளின் அளவைக் காட்டிலும் அதிகமான கரைபொருளைக் கொண்ட கரைசல் அதிதெவிட்டிய கரைசல் எனப்படும்.

2. வெப்பநிலை, அழுத்தம் போன்ற சூழ்நிலைகளை மாற்றுவதன் மூலம் கரைதிறனை மாற்ற இயலும்.

3. அதிதெவிட்டிய கரைசலானது நிலையற்றது.

4. கரைசல் உள்ள முகவையை சிறிதளவு அசைத்தாலும் மீண்டும் படிகங்கள் தோன்றுகிறது

10) கீழ்க்காணும் எதன் கரைபொருளும் கரைப்பானும் திரவம் ஆகும்?

A) நீரில் கரைக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால்

B) நீரில் கரைக்கப்பட்ட சோடியம் குளோரைடு கரைசல்

C) நீரில் கரைக்கப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடு(சோடா நீர்)

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: நீரில் கரைக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால் கரைசலின் கரைபொருள் மற்றும் கரைப்பான் திரவம் ஆகும்.

11) கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் கரையக்கூடிய கரைபொருளின் அளவிற்கு ஓர் எல்லை உண்டு. இந்த எல்லையை அடையும் போது அதிதெவிட்டிய கரைசல் உருவாகிறது.

2. ஒரு கரைப்பானில் கரையக்கூடிய கரைபொருளின் அளவை கரைதிறன் என்ற பண்பினால் விளக்க முடியும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் கரையக்கூடிய கரைபொருளின் அளவிற்கு ஓர் எல்லை உண்டு. இந்த எல்லையை அடையும் போது அதிதெவிட்டிய கரைசல் உருவாகிறது.

2. ஒரு கரைப்பானில் கரையக்கூடிய கரைபொருளின் அளவை கரைதிறன் என்ற பண்பினால் விளக்க முடியும்.

12) ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் __________ கி கரைப்பானில் கரைந்து தெவிட்டிய கரைசலை உருவாக்க தேவையான கரைபொருளின் கிராம்களின் எண்ணிக்கை அதன் கரைதிறன் எனப்படும்.

A) 100

B) 50

C) 1000

D) 1

விளக்கம்: ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் 100 கி கரைப்பானில் கரைந்து தெவிட்டிய கரைசலை உருவாக்க தேவையான கரைபொருளின் கிராம்களின் எண்ணிக்கை அதன் கரைதிறன் எனப்படும்.

13) கூற்றுகளை ஆராய்க.

1. கடல் நீர் என்பது இயற்கையில் காணப்படும் கரைசல் ஆகும்.

2. காற்று என்பது ஒரு கரைசல் ஆகும்.

3. தாவரங்கள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை மண்ணிலிருந்து கரைசல் நிலையிலேயே எடுத்துக்கொள்கின்றன.

4. மனித உடலின் இரத்தம், நிணநீர், சிறுநீர் போன்ற பெரும்பான்மையானவை கரைசல்களே ஆகும்.

A) 1, 3, 4 சரி

B) 1, 2 சரி

C) 3, 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. கடல் நீர் என்பது இயற்கையில் காணப்படும் கரைசல் ஆகும்.

2. காற்று என்பது ஒரு கரைசல் ஆகும்.

3. தாவரங்கள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை மண்ணிலிருந்து கரைசல் நிலையிலேயே எடுத்துக்கொள்கின்றன.

4. மனித உடலின் இரத்தம், நிணநீர், சிறுநீர் போன்ற பெரும்பான்மையானவை கரைசல்களே ஆகும்.

14) கீழ்க்காணும் எந்த பொருள் w/w என்ற அலகால் குறிக்கப்படுகிறது?

A) திரவ மருந்துகள்

B) வாய்கழுவும் திரவங்கள்

C) புரைத்தடுப்பான்கள்

D) களிம்புகள்

விளக்கம்: w/w என்ற அலகால் குறிக்கப்படும் பொருட்கள்:

1. களிம்புகள்

2. அமிலநீக்கிகள்

3. சோப்புகள்.

15) உப்பும் நீரும் சேர்ந்தது __________ என்று அழைக்கப்படுகிறது?

A) ஒரு படித்தான கலவை

B) பலபடித்தான கலவை

C) இருபடித்தான கலவை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: உப்பானது நீரில் கரையும். ஆனால் மணலானது நீரில் கரையாது. மணலும் நீரும் கலந்த கலவையை வடிகட்டுதல் முறையின் மூலம் பிரிக்கலாம். ஆனால், உப்பும் நீரும் கலந்த கலவையை அவ்வாறு பிரிக்க இயலாது. ஏனெனில் உப்பு, நீரில் கரைந்து ஒருபடித்தான கரைசலை உருவாக்குகிறது. இத்தகைய ஒருபடித்தான கலவையை கரைசல் என்கிறோம்.

16) கூற்றுகளை ஆராய்க

1. கனஅளவு சதவீதம் என்பது வெப்பநிலை அதிகரிக்கும்போது குறைகிறது.

2. நிறை சதவீதம் என்பது வெப்பநிலையை சார்ந்தது அல்ல.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. கனஅளவு சதவீதம் என்பது வெப்பநிலை அதிகரிக்கும்போது குறைகிறது.

2. நிறை சதவீதம் என்பது வெப்பநிலையை சார்ந்தது ஆகும்.

17) கரைப்பானின் வகைகளை அடிப்படையாகக் கொண்டு கரைசல்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: கரைப்பானின் வகைகளை அடிப்படையாகக் கொண்டு கரைசல்களை இரண்டு வகையாகப்பிரிக்கலாம். அவை,

1. நீர்க்கரைசல்

2. நீரற்ற கரைசல்

18) செறிவு மிகுந்த கரைசலில் எது அதிகமாக இருக்கும்?

A) கரைப்பான்

B) கரைபொருள்

C) கரைப்பான் அல்லது கரைபொருள்

D) கூற இயலாது

விளக்கம்: ஒரே மாதிரியான கரைபொருளையும், கரைப்பானையும் கொண்ட இரு கரைசல்களை ஒப்பிடும்போது, எதில் அதிக அளவு கரைபொருள் உள்ளதோ(குறிப்பிட்ட அளவு கரைப்பானில்) அதனை செறிவுமிக்க கரைசல் என்றும், எதில் குறைந்த அளவு கரைபொருள் உள்ளதோ அதனை நீர்த்த கரைசல் என்றும் கூறலாம்.

19) 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 100கி நீரில் கரையும் கால்சியம் கார்பனேடின் கரைதிறன் என்ன?

A) 0.0013

B) 36

C) 48

D) 80

விளக்கம்: 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 100கி நீரில் கரையும் கால்சியம் கார்பனேடின் கரைதிறன் 0.0013 ஆகும்.

20) சரியான கூற்றை தெரிவு செய்க(கரைபொருளின் பெயர் – கரைதிறன்)

A) சோடியம் ஹைட்ராக்ஸைடு – 80

B) குளுக்கோஸ் – 94

C) சோடியம் புரோமைடு – 91

D) சோடியம் அயோடைடு – 184

விளக்கம்: சோடியம் ஹைட்ராக்ஸைடு – 80

குளுக்கோஸ் – 95

சோடியம் புரோமைடு – 91

சோடியம் அயோடைடு – 184

21) சரியான கூற்றை தேர்வு செய்க

A) கரைசல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களைக் கொண்ட ஒரு படித்தான கலவை

B) கரைசல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களைக் கொண்ட இரு படித்தான கலவை

C) கரைசல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களைக் கொண்ட பல படித்தான கலவை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: கரைசல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களைக் கொண்ட ஒரு படித்தான கலவை ஆகும். அதாவது ஒரு கரைசலில் குறைந்த அளவு(எடை) கொண்ட கூறு, கரைபொருள் என்றும் அதிக அளவு(எடை) கொண்ட பொருள் கரைப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.

22) கீழ்க்காணும் எதன் கரைபொருள் திரவம், கரைப்பான் திண்மம் ஆகும்?

A) தங்கத்தில் கரைக்கப்பட்ட காப்பர் (உலோகக் கலவைகள்)

B) பாதரசத்துடன் கலந்த சோடியம் (இரசக் கலவைகள்)

C) நீரில் கரைக்கப்பட்ட சோடியம் குளோரைடு

D) நீரில் கரைக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால்

விளக்கம்: பாதரசத்துடன் கலந்த சோடியம் (இரசக்கலவைகள்)-ன் கரைபொருள் திரவம் மற்றும் கரைப்பான் திண்மம் ஆகும்.

23) ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், தெவிட்டிய கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் அளவை விடக் குறைவான கரைபொருள் அளவைக் கொண்ட கரைசல் ____________ கரைசல் எனப்படும்?

A) அதிதெவிட்டாத கரைசல்

B) அதிதெவிட்டிய கரைசல்

C) தெவிட்டாத கரைசல்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ஒரு குறி;பிட்ட வெப்பநிலையில், தெவிட்டிய கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் அளவை விடக் குறைவான கரைபொருள் அளவைக் கொண்ட கரைசல் தெவிட்டாத கரைசல் எனப்படும். உதாரணமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 100 கி நீரில் 10 கி அல்லது 20 கி அல்லது 30 கி சோடியம் குளோரைடு உப்பினைக் கரைத்து தெவிட்டாத கரைசல் உருவாக்கப்படுகிறது.

24) ஈரம் உறிஞ்சிக் கரைசல் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) வளிமண்டல காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது அதிலுள்ள ஈரத்தை உறிஞ்சி முழுவதும் கரைகின்றன.

B) இவை அவற்றின் படிகப் பண்பை இழப்பதில்லை

C) முழுமையாக கரைந்து தெவிட்டியக் கரைசலை உருவாக்குகின்றன

D) குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக வளிமண்டல ஈரப்பதம் ஆகிய சூழ்நிலைகளில் ஈரம் உறிஞ்சிக் கரைசல் நிகழும்

விளக்கம்: சில சேர்மங்கள் சாதாரண வெப்பநிலையில், வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது அதிலுள்ள ஈரத்தை உறிஞ்சி முழுவதும் கரைகின்றன. அத்தகைய சேர்மங்கள் ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் எனப்படும். இப்பண்பிற்கு ஈரம் உறிஞ்சிக் கரைதல் என்று பெயர். ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் அவற்றின் படிகப் பண்பை இழக்கின்றன. அவை முழுமையாக கரைந்து தெவிட்டிய கரைசலை உருவாக்குகின்றன. ஈரம் உறிஞ்சிக் கரைசல் அதிகமாக நிகழும் சூழ்நிலைகள்: 1. குறைந்த வெப்பநிலை 2. அதிக வளிமண்டல ஈரப்பதம்.

25) தங்கத்தில் கரைக்கப்பட்ட காப்பரின் கரைபொருள் மற்றும் கரைப்பான் முறையே?

A) திண்மம், திரவம்

B) திண்மம், வாயு

C) திண்மம், திண்மம்

D) திரவம், திண்மம்

விளக்கம்: தங்கத்ததில் கரைக்கப்பட்ட காப்பர்(உலோகக் கலவைகள்). என்பதின் கரைபொருளும், கரைப்பானும் திண்மமாகும்.

26) பொதுவாக வெப்பநிலை அதிகரிக்கும் போது நீர்ம கரைப்பானில் திண்மப் பொருளின் கரைதிறன் ___________ ஆக இருக்கும்?

A) குறையும்

B) அதிகரிக்கும்

C) மாறாது

D) கூற இயலாது

விளக்கம்: பொதுவாக வெப்பநிலை அதிகரிக்கும் போது நீர்ம கரைப்பானில் திண்மப் பொருளின் கரைதிறன் அதிகரிக்கும். உதாரணமாக, குளிர்ந்த நீரில் கரைவதை விட சர்க்கரை, சுடுநீரில் அதிக அளவில் கரைகிறது.

27) கூற்றுகளை ஆராய்க.

1. நீர் பெரும்பான்மையான பொருட்களை கரைக்கும் தன்மையை கொண்டிருந்தாலும், சில பொருட்கள் நீரில் கரைவதில்லை.

2. நீர் ஒரு முனைவுறும் கரைப்பான் ஆகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. நீர் பெரும்பான்மையான பொருட்களை கரைக்கும் தன்மையை கொண்டிருந்தாலும், சில பொருட்கள் நீரில் கரைவதில்லை.

2. நீர் ஒரு முனைவுறும் கரைப்பான் ஆகும்.

28) திரவத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்போது வாயுவின் கரைதிறன்______________

A) குறைகிறது

B) அதிகரிக்கிறது

C) மாறாது

D) கூற இயலாது

விளக்கம்: நீரை வெப்பப்படுத்தும் போது குமிழிகள் வருகின்றன. திரவத்தின் வெப்பநிலையை அதிகரிக்கும் போது வாயுவின் கரைதிறன் குறைகிறது. ஆகையால் ஆக்ஸிஜன் குமிழிகளாக வெளியேறுகிறது.

29) மணலும் நீரும் சேர்ந்தது_____________கலவையாகும்?

A) ஒரு படித்தான கலவை

B) இரு படித்தான கலவை

C) பல படித்தான கலவை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: உப்பானது நீரில் கரையும். ஆனால் மணலானது நீரில் கரையாது. மணலும் நீரும் கலந்த கலவையை வடிகட்டுதல் முறையின் மூலம் பிரிக்கலாம். ஆனால், உப்பும் நீரும் கலந்த கலவையை அவ்வாறு பிரிக்க இயலாது. ஏனெனில் உப்பு, நீரில் கரைந்து ஒருபடித்தான கரைசலை உருவாக்குகிறது. இத்தகைய ஒருபடித்தான கலவையை கரைசல் என்கிறோம். மணலும் நீரும் சேர்ந்தது பலபடித்தான கலவையாகும்.

30) 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 100கி நீரில் கரையும் சோடியம் குளோரைடின் கரைதிறன் என்ன?

A) 0.0013

B) 36

C) 48

D) 80

விளக்கம்: 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 100கி நீரில் கரையும் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 ஆகும்.

31) கூற்று: நீர்வாழ் உயிரினங்கள் குளிர் பிரதேசங்களில் அதிகமாக வாழ்கின்றன.

காரணம்: குளிர் பிரதேசங்களில் உள்ள நீர்நிலைகளில் அதிக அளவு ஆக்ஸிஜன் கரைந்துள்ளது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: நீரை வெப்பப்படுத்தும் போது குமிழிகள் வருகின்றன. திரவத்தின் வெப்பநிலையை அதிகரிக்கும் போது வாயுவின் கரைதிறன் குறைகிறது. ஆகையால் ஆக்ஸிஜன் குமிழிகளாக வெளியேறுகிறது.

நீர்வாழ் உயிரினங்கள் குளிர் பிரதேசங்களில் அதிகமாக வாழ்கின்றன. குளிர் பிரதேசங்களில் உள்ள நீர்நிலைகளில் அதிக அளவு ஆக்ஸிஜன் கரைந்துள்ளது.

32) நிறை சதவீதம் என்பது __________ கரைபொருளையும், ____________ கரைப்பானையும் கொண்ட கரைசலின் செறிவை குறிக்க பயன்படுகிறது?

A) திரவ, திண்ம

B) திண்ம, திண்ம

C) திரவ, திரவ

D) திண்ம, திரவ

விளக்கம்: ஒரு கரைசலில் உள்ள கரைபொருளின் நிறையை சதவீதத்தில் குறித்தால் அது அக்கரைசலின் நிறை சதவீதம் எனப்படும். இது திண்ம கரைபொருளையும், திரவக் கரைப்பானையும் கொண்ட கரைசலின் செறிவை குறிக்க பயன்படுகிறது.

33) ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள் பற்றிய கூற்றுகளில் சரியானது எது?

A) சாதாரண வெப்பநிலையில், வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது அதிலுள்ள ஈரத்தை உறிஞ்சிக் கரைகிறது

B) வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது தன்னுடைய இயற்பியல் நிலையை இழப்பதில்லை

C) படிக உருவ திண்மங்களாகவோ, திரவங்களாகவோ, காணப்படுகின்றன.

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: சாதாரண வெப்பநிலையில், வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது அதிலுள்ள ஈரத்தை உறிஞ்சிக் கரைவதில்லை

வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது தன்னுடைய இயற்பியல் நிலையை இழப்பதில்லை

படிக உருவ திண்மங்களாக மட்டுமே காணப்படுகின்றன.

34) ஒரு கரைசலில் குறைந்த அளவு (எடை) கொண்ட கூறு, _____________ என்றும் அதிக அளவு (எடை) கொண்ட பொருள்________________ என்றும் அழைக்கப்படுகிறது.

A) கரைப்பான், கரைபொருள்

B) கரைபொருள், கரைப்பான்

C) கரைப்பான், கரைப்பான்

D) கரைபொருள், கரைபொருள்

விளக்கம்: கரைசல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களைக் கொண்ட ஒரு படித்தான கலவை ஆகும். அதாவது ஒரு கரைசலில் குறைந்த அளவு (எடை) கொண்ட கூறு, கரைபொருள் என்றும் அதிக அளவு(எடை) கொண்ட பொருள் கரைப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.

35) வழக்கமாக நிறைசதவீதம் என்பது கீழக்காணும் எந்த அலகால் குறிக்கப்படுகிறது?

A) W/W

B) W/V

C) V/W

D) V/V

விளக்கம்: நிறை சதவீதம் என்பது ஒரு கரைசலில் உள்ள கரைபொருளின் நிறையை சதவீதத்தில் குறித்தால் அது கரைசலின் நிறை சதவீதம் எனப்படும். இது திண்ம கரைபொருளையும், திரவக் கரைப்பானையும் கொண்ட கரைசலின் செறிவை குறிக்க பயன்படுகிறது. வழக்கமாக நிறை சதவீதம் என்பது W/W என குறிக்கப்படுகிறது. இது வெப்பநிலையைச் சார்ந்தது ஆகும்.

36) எதை அடிப்படையாக கொண்டு கரைசலை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்?

A) கரைபொருள்

B) கரைப்பான்

C) கரைப்பான் மற்றும் கரைபொருள்

D) கரைப்பான் அல்லது கரைபொருள்

விளக்கம்: கரைப்பானின் வகைகளை அடிப்படையாகக் கொண்டு கரைசல்களை இரண்டு வகையாகப்பிரிக்கலாம். அவை,

1. நீர்க்கரைசல்

2. நீரற்ற கரைசல்

37) கூற்றுகளை ஆராய்க

1. காற்று நிரப்பப்பட்ட பானங்கள், தேநீர், காபி, பழச்சாறு போன்றவை கரைசல்கள் ஆகும்.

2. நீரானது மாசுபடுவதற்கு நீரின் கரைக்கும் பண்பே காரணமாகிறது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. காற்று நிரப்பப்பட்ட பானங்கள், தேநீர், காபி, பழச்சாறு போன்றவை கரைசல்கள் ஆகும்.

2. நீரானது மாசுபடுவதற்கு நீரின் கரைக்கும் பண்பே காரணமாகிறது

38) ஒரு கரைசல் குறைந்தபட்சம் எத்தனை கூறுகளை கொண்டிருக்கும்?

A) 1

B) 3

C) 2

D) 4

விளக்கம்: ஒரு கரைசல் குறைந்தபட்சம் இரண்டு கூறுகளைக் கொண்டிருக்கும்(ஒரு கரைபொருள் மற்றும் ஒரு கரைப்பான்)

39) காற்றில் உள்ள நீராவி மேகமாக மாறுகிறது. இதில் கரைப்பான் எது?

A) வாயு

B) திண்மம்

C) திரவம்

D) கூற இயலாது

விளக்கம்: காற்றில் உள்ள நீராவி(மேகம்)-ன் கரைபொருள் திரவம். கரைப்பான் வாயு

40) பொதுவாக எந்த சேர்மங்கள் நீரில் எளிதில் கரைந்து நீர்க்கரைசலை உருவாக்குகிறது?

A) சகப்பிணைப்பு சேர்மங்கள்

B) அயனிப்பிணைப்புச் சேர்மங்கள்

C) ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்கள்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: எந்த ஒரு கரைசலில், கரைபொருளைக் கரைக்கும் கரைப்பானாக நீர் செயல்படுகிறதோ அக்கரைசல் நீர்க்கரைசல் எனப்படும். பொதுவாக சகப்பிணைப்பு சேர்மங்களை விட அயனிப்பிணைப்புச் சேர்மங்கள் நீரில் எளிதில் கரைந்து நீர்க்கரைசலை உருவாக்குகிறது. உதாரணமாக நீரில் கரைக்கப்பட்ட சர்க்கரை, நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட் போன்றவைகளாகும்.

41) ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், தெவிட்டிய கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் அளவை விட அதிகமான கரைபொருள் அளவைக் கொண்ட கரைசல் ____________ எனப்படும்?

A) அதிதெவிட்டாத கரைசல்

B) அதிதெவிட்டிய கரைசல்

C) தெவிட்டாத கரைசல்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், தெவிட்டிய கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் அளவை விட அதிகமான கரைபொருள் அளவைக் கொண்ட கரைசல் அதிதெவிட்டிய கரைசல் எனப்படும். உதாரணமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 100 கி நீரில் 40 கி சோடியம் குளோரைடு உப்பினைக் கரைத்து தெவிட்டாத கரைசல் உருவாக்கப்படுகிறது.

42) கூற்றுகளை ஆராய்க.

1. கரைசல்களை, நீர்த்த மற்றும் செறிவுமிக்க கரைசல்கள் என வேறுபடுத்துவது ஒரு பண்பு சார்ந்த குறியீடாகும்.

2. இது கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் துல்லியமான அளவைக் குறிப்பதில்லை.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: கரைசல்களை, நீர்த்த மற்றும் செறிவுமிக்க கரைசல்கள் என வேறுபடுத்துவது ஒரு பண்பு சார்ந்த குறியீடாகும். இது கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் துல்லியமான அளவைக் குறிப்பதில்லை. இந்த வேறுபாடானது நிறம், அடர்த்தி போன்ற இயற்பியல் பண்புகள் மூலம் அறியப்படுகின்றன.

43) ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் கரையக்கூடிய கரைபொருளின் அளவிற்கு எல்லை உண்டு. இந்த எல்லையை அடையும் போது ______________ கரைசல் உருவாகிறது?

A) தெவிட்டிய கரைசல்

B) அதிதெவிட்டிய கரைசல்

C) அதிதெவிட்டாத கரைசல்

D) தெவிட்டாத கரைசல்

விளக்கம்: ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் கரையக்கூடிய கரைபொருளின் அளவிற்கு எல்லை உண்டு. இந்த எல்லையை அடையும் போது தெவிட்டிய கரைசல் உருவாகிறது.

44) கரைதிறன் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு கரைப்பானில் கரையக்கூடிய கரைபொருளின் அளவை கரைதிறன் என்கிறோம்.

2. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் 100கி கரைப்பானில் கரைந்து தெவிட்டிய கரைசலை உருவாக்க தேவையான கரைபொருளின் கிராம்களின் எண்ணிக்கை அதன் கரைதிறன் எனப்படும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஒரு கரைப்பானில் கரையக்கூடிய கரைபொருளின் அளவை கரைதிறன் என்கிறோம்.

2. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் 100கி கரைப்பானில் கரைந்து தெவிட்டிய கரைசலை உருவாக்க தேவையான கரைபொருளின் கிராம்களின் எண்ணிக்கை அதன் கரைதிறன் எனப்படும்.

45) 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 100கி நீரில் கரையும் அம்மோனியாவின் கரைதிறன் என்ன?

A) 0.0013

B) 36

C) 48

D) 80

விளக்கம்: 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 100கி நீரில் கரையும் அம்மோனியாவின் கரைதிறன் 48 ஆகும்.

46) ஒரு கரைபொருளின் கரைதிறனை மூன்று முக்கிய காரணிகள் தீர்மானிக்கின்றன. அவற்றில் பொருந்தாதது எது?

A) கரைபொருள் மற்றும் கரைப்பானின் தன்மை

B) அழுத்தம்

C) ஈரப்பதம்

D) வெப்பநிலை

விளக்கம்: ஒரு கரைபொருளின் கரைதிறனை மூன்று முக்கிய காரணிகள் தீர்மானிக்கின்றன. அவை,

1. கரைபொருள் மற்றும் கரைப்பானின் தன்மை

2. வெப்பநிலை

3. அழுத்தம்

47) கூற்று: நீர் ஒரு உலகளாவிய கரைப்பான் என்று அழைக்கப்படுகிறது

காரணம்: நீரில் பெரும்பாலான பொருட்கள் கரைகிறது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: நீரில் பெரும்பாலான பொருட்கள் கரைகிறது. எனவே நீர் ஒரு ‘உலகளாவிய கரைப்பான்’ அல்லது ‘சர்வக்கரைப்பான்’ என்று அழைக்கப்படுகிறது.

48) கூற்றுகளை ஆராய்க.

1. முனைவுறும் சேர்மங்கள் முனைவுறா கரைப்பானில் கரையும்

2. முனைவுறா சேர்மங்கள் முனைவுறும் கரைப்பானில் கரையும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: முனைவுறாச் சேர்மங்கள் முனைவுறும் கரைப்பானில் கரைவதில்லை. அதுபோல முனைவுறும் சேர்மங்கள் முனைவுறாக கரைப்பானில் கரைவதில்லை.

49) கூற்றுகளை ஆராய்க.

1. வெப்பகொள் செயல்முறையில், வெப்பநிலை அதிகரிக்கும் போது கரைதிறன் குறைகிறது

2. வெப்பஉமிழ் செயல்முறையில், வெப்பநிலை அதரிகரிக்கும் போது கரைதிறன் அதிரிக்கிறது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. வெப்பகொள் செயல்முறையில், வெப்பநிலை அதிகரிக்கும் போது கரைதிறன் அதிகரிக்கிறது.

2. வெப்பஉமிழ் செயல்முறையில், வெப்பநிலை அதரிகரிக்கும் போது கரைதிறன் குறைகிறது.

50) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) சமையல் உப்பு என்பது ஒரு முனைவுறும் சேர்மம் ஆகும்.

B) நீர் என்பது ஒரு முனைவுறும் சேர்மம்

C) ஈதர் என்பது ஒரு முனைவுறா சேர்மம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: சமையல் உப்பு மற்றும் நீர் ஆகியவை முனைவுறும் சேர்மம் ஆகும். ஈதர் மற்றும் கொழுப்பு ஆகியவை முனைவுறாச் சேர்மம் ஆகும். முனைவுறும் சேர்மங்கள் முனைவுறும் சேர்மங்களில் மட்டுமே கரையும். முனைவுறா சேர்மங்கள் முனைவுறாச் சேர்மங்களில் மட்டும் கரையும்.

51) ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

A) சாதாரண வெப்பநிலையில், வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது அதிலுள்ள ஈரத்தை உறிஞ்சிக் கரைகிறது

B) வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது தன்னுடைய இயற்பியல் நிலையை இழப்பதில்லை

C) படிக உருவ திண்மங்களாகவோ, திரவங்களாகவோ, காணப்படுகின்றன.

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: சாதாரண வெப்பநிலையில், வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது அதிலுள்ள ஈரத்தை உறிஞ்சிக் கரைகிறது

வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது தன்னுடைய இயற்பியல் நிலையை இழக்கிறது

படிக உருவ திண்மங்களாகவோ, திரவங்களாகவோ காணப்படுகின்றன.

52) எதனை கரைபொருளாக கொண்ட திரவ கரைசல்களில் மட்டுமே அழுத்தத்தின் விளைவு குறிப்பிடத்தக்கதாக இருக்கும்?

A) திண்மம்

B) திரவம்

C) வாயு

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: வாயுக்களை கரைபொருளாக கொண்ட திரவ கரைசல்களில் மட்டுமே அழுத்தத்தின் விளைவு குறிப்பிடத்தக்கதாக இருக்கும். அழுத்தத்தை அதிகரிக்கும் போது ஒரு திரவத்தில் வாயுவின் கரைதிறன் அதிகரிக்கிறது.

53) கூற்றுகளை ஆராய்க.

1. நிறை சதவீதம் என்பது ஒரு கரைசலில் உள்ள கரைபொருளின் நிறையை சதவீதத்தில் குறித்தால் அது கரைசலின் நிறை சதவீதம் எனப்படும்.

2. கொடுக்கப்பட்டள்ள கரைசலில் அல்லது கரைப்பானில் கரைந்துள்ள கரைபொருளின் அளவு கரைசலின் செறிவு எனப்படும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. நிறை சதவீதம் என்பது ஒரு கரைசலில் உள்ள கரைபொருளின் நிறையை சதவீதத்தில் குறித்தால் அது கரைசலின் நிறை சதவீதம் எனப்படும்.

2. கொடுக்கப்பட்டள்ள கரைசலில் அல்லது கரைப்பானில் கரைந்துள்ள கரைபொருளின் அளவு கரைசலின் செறிவு எனப்படும்.

54) கனஅளவு சதவீதம் என்பது __________ கரைபொருள் மற்றும் __________ கரைப்பானைக் கொண்ட கரைசல்களின் செறிவைக் குறிக்கப் பயன்படுகிறது?

A) திண்மம், திண்மம்

B) திரவம், திரவம்

C) திண்மம், திரவம்

D) திரவம், திண்மம்

விளக்கம்: கனஅளவு சதவீதம் என்பது ஒரு கரைசலில் உள்ள கரைபொருளின் அளவை சதவீதத்தில் குறித்தால் அது அக்கரைசலின் கனஅளவு சதவீதம் என வரையறுக்கப்படுகிறது. இது திரவக் கரைபொருள் மற்றும் திரவக் கரைப்பானைக் கொண்ட கரைசல்களின் செறிவைக் குறிக்க பயன்படுகிறது. பொதுவாக கனஅளவு சதவீதம் என்பது v/v என குறிக்கப்படுகிறது.

55) 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 100கி நீரில் கரையும் சோடியம் ஹைட்ராக்ஸைடின் கரைதிறன் என்ன?

A) 0.0013

B) 36

C) 48

D) 80

விளக்கம்: 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 100கி நீரில் கரையும் சோடியம் ஹைட்ராக்ஸைடின் கரைதிறன் 80 ஆகும்.

56) நிறை சதவீதம் என்பது கீழ்க்காணும் எதைச் சார்ந்தது ஆகும்?

A) அழுத்தம்

B) வெப்பநிலை

C) செறிவு

D) அடர்த்தி

விளக்கம்: நிறை சதவீதம் என்பது ஒரு கரைசலில் உள்ள கரைபொருளின் நிறையை சதவீதத்தில் குறித்தால் அது கரைசலின் நிறை சதவீதம் எனப்படும். இது திண்ம கரைபொருளையும், திரவக் கரைப்பானையும் கொண்ட கரைசலின் செறிவை குறிக்க பயன்படுகிறது. வழக்கமாக நிறை சதவீதம் என்பது w/w என குறிக்கப்படுகிறது. இது வெப்பநிலையைச் சார்ந்தது ஆகும்.

57) நீர் ஒரு சர்வகரைப்பான் அல்லது உலகளாவிய கரைப்பான் என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும் நீரில் கரையாத பொருட்களை கீழ்க்காணும் எதைப் பயன்படுத்திக் கரைக்கப்படுகிறது?

A) பென்சீன்

B) ஈதர்கள்

C) ஆல்கஹால்

D) மேற்காணும் அனைத்தும்

விளக்கம்: நீரில் பெரும்பாலான பொருட்கள் கரைகிறது. எனவே நீர் ஒரு ‘உலகளாவிய கரைப்பான்’ அல்லது ‘சர்வக்கரைப்பான்’ என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும் சில பொருட்கள் நீரில் கரைவதில்லை. இவற்றைக் கரைக்க ஈதர்கள், பென்சீன்கள், ஆல்கஹால்கள் போன்ற கரைப்பான்களைப் பயன்படுத்தி கரைசல்கள் தயாரிக்கப்படுகிறது.

58) கீழ்க்காணும் எந்த பொருள் v/v என்ற அலகால் குறிக்கப்படுகிறது?

A) களிம்புகள்

B) அமிலநீக்கிகள்

C) சோப்புகள்

D) வாய்கழுவும் திரவங்கள்

விளக்கம்: v/v என்ற அலகால் குறிக்கப்படும் பொருட்கள்:

1. திரவ மருந்துகள்

2. வாய்கழுவும் திரவங்கள்

3. புரைத் தடுப்பான்கள்

4. வீட்டு உபயோகப் பொருட்கள்

5. கிருமிநாசினிகள்.

59) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (கரைபொருள் – உதாரணம்)

A) வாயு – நீரில் கரைக்கப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடு

B) வாயு – ஆக்ஸிஜன்-ஹீலியம் வாயுக்கலவை

C) திரவம் – காற்றில் உள்ள நீராவி (மேகம்)

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: வாயு – நீரில் கரைக்கப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடு

வாயு – ஆக்ஸிஜன்-ஹீலியம் வாயுக்கலவை

திரவம் – காற்றில் உள்ள நீராவி (மேகம்)

60) அயனிச் சேர்மங்களை நீரில் கரைத்து தெவிட்டிய கரைசலை உருவாக்கும் போது, அவற்றின் அயனிகள் நீர் மூலக்கூறுகளைக் கவர்ந்து, குறிப்பிட்ட வேதி விகிதத்தில் பிணைப்பினை ஏற்படுத்திக் கொள்கிறது. இந்நிகழ்வு _________ எனப்படும்?

A) நிறை சதவீதம்

B) கனஅளவு சதவீதம்

C) கரைசலின் செறிவு

D) நீரேற்றம்

விளக்கம்: அயனிச் சேர்மங்களை நீரில் கரைத்து தெவிட்டிய கரைசலை உருவாக்கும் போது, அவற்றின் அயனிகள் நீர் மூலக்கூறுகளைக் கவர்ந்து, குறிப்பிட்ட வேதி விகிதத்தில் பிணைப்பினை ஏற்படுத்திக் கொள்கிறது. இந்நிகழ்வு நீரேற்றம் எனப்படும்.

61) தவறான ஒன்றை தெரிவு செய்க(கரைபொருளின் பெயர்-கரைதிறன்)

A) கால்சியம் கார்பனேட் – 0.00013

B) சோடியம் குளோரைடு – 36

C) அம்மோனியா – 48

D) சோடியம் ஹைட்ராக்ஸைடு – 94

விளக்கம்: கால்சியம் கார்பனேட் – 0.0013

சோடியம் குளோரைடு – 36

அம்மோனியா – 48

சோடியம் ஹைட்ராக்ஸைடு – 80

62) வழக்கமாக கனஅளவு சதவீதம் என்பது கீழக்காணும் எந்த அலகால் குறிக்கப்படுகிறது?

A) W/W

B) W/V

C) V/W

D) V/V

விளக்கம்: கனஅளவு சதவீதம் என்பது ஒரு கரைசலில் உள்ள கரைபொருளின் அளவை சதவீதத்தில் குறித்தால் அது அக்கரைசலின் கனஅளவு சதவீதம் என வரையறுக்கப்படுகிறது. இது திரவக் கரைபொருள் மற்றும் திரவக் கரைப்பானைக் கொண்ட கரைசல்களின் செறிவைக் குறிக்க பயன்படுகிறது. பொதுவாக கனஅளவு சதவீதம் என்பது V/V என குறிக்கப்படுகிறது.

63) ஜிப்சத்தின் IUPAC பெயர் என்ன?

A) கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட்

B) கால்சியம் டை ஹைட்ரேட்

C) கால்சியம் கார்பனேட்

D) கால்சியம் கார்பைட்

விளக்கம்: ஜிப்சத்தின் IUPAC பெயர் கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட் என்பதாகும்.

64) மயில் துத்தம் என்று அழைக்கப்படுவது எது?

A) பச்சை விட்ரியால்

B) நீல விட்ரியால்

C) வெள்ளை விட்ரியால்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: நீல விட்ரியால் மயில் துத்தம் என்று அழைக்கப்படுகிறது. இதன் IUPAC பெயர் காப்பர்(II) சல்பேட் பென்டாஹைட்ரேட் ஆகும்.

65) மயில் துத்தத்தின் படிகமாக்கல் நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை எத்தனை?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: நீல விட்ரியல் என்று அழைக்கப்படும் மயில் துத்ததின் படிகமாக்கல் நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை ஐந்து ஆகும். நீல விட்ரியால் உப்பில் ஐந்து நீர் மூலக்கூறுகள் உள்ளன. நீலநிற காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட் படிகத்தை மெதுவாக வெப்பப்படுத்தும் போது, ஐந்து நீர் மூலக்கூறுகளை இழந்து நிறமற்ற, நீரற்ற காப்பர் சல்பேட் ஆக மாறுகிறது.

66) எப்சம் உப்பின் படிகமாக்கல் நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை எத்தனை?

A) 4

B) 5

C) 7

D) 10

விளக்கம்: எப்சம் உப்பின் படிகமாக்கல் நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை ஏழு, மெக்னீசியம் சல்பேட் ஹெப்டா ஹைட்ரேட் படிகத்தை மெதுவாக வெப்பப்படுத்தும் போது ஏழு நீர் மூலக்கூறுகளை இழந்து நீரற்ற மெக்னீசியம் சல்பேட்டாக மாறுகிறது.

67) கூற்றுகளை ஆராய்க.

1. சில சேர்மங்கள் சாதாரண வெப்பநிலையில், வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது அதிலுள்ள ஈரத்ததை உறிஞ்சம் தன்மையைப் பெற்றிருப்பதில்லை.

2. ஈரம் உறிஞ்சும் சேர்மங்களின் இயற்பியல் நிலை மாறும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சில சேர்மங்கள் சாதாரண வெப்பநிலையில், வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது அதிலுள்ள ஈரத்ததை உறிஞ்சம் தன்மையைப் பெற்றுள்ளன. இந்நிகழ்வின் போது அவற்றின் இயற்பியல் நிலை மாறும்.

68) ஒரு கரைபொருளின் கரைதிறனை எத்தனை முக்கியக் காரணிகள தீர்மானிக்கின்றன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: ஒரு கரைபொருளின் கரைதிறனை மூன்று முக்கிய காரணிகள் தீர்மானிக்கின்றன. அவை,

1. கரைபொருள் மற்றும் கரைப்பானின் தன்மை

2. வெப்பநிலை

3. அழுத்தம்

69) ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் முழுமையாக கரைந்து __________ கரைசலை உருவாக்குகின்றன?

A) தெவிட்டாத

B) தெவிட்டிய

C) அதிதெவிட்டிய

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: சில சேர்மங்கள் சாதாரண வெப்பநிலையில், வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது அதிலுள்ள ஈரத்தை உறிஞ்சி முழுவதும் கரைகின்றன. அத்தகைய சேர்மங்கள் ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் எனப்படும். இப்பண்பிற்கு ஈரம் உறிஞ்சிக் கரைதல் என்று பெயர். அவை முழுமையாக கரைந்து தெவிட்டிய கரைசலை உருவாக்குகின்றன.

70) ஈரம் உறிஞ்சிக் கரைதல் அதிகமாக நிகழும் சூழ்நிலைகள் எது?

A) குறைந்த வெப்பநிலை

B) அதிக வளிமண்டல ஈரப்பதம்

C) A மற்றும் B

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ஈரம் உறிஞ்சிக் கரைதல் அதிகமாக நிகழும் சூழ்நிலைகள்:

1. குறைந்த வெப்பநிலை

2. அதிக வளிமண்டல ஈரப்பதம்.

10th Science Lesson 10 Questions in Tamil

10] வேதிவினைகளின் வகைகள்

1. பெட்ரோல் எரியும்போது அதில் அடங்கியுள்ள ____________ கார்பன் டைஆக்சைடு மற்றும் நீராக மாற்றப்படுகின்றன.

A) ஹைட்ரோ கார்பன்

B) கார்பன்

C) அம்மோனியம் ஹைட்ராக்சைடு

D) மீத்தேன்

விளக்கம்: பெட்ரோல் எரியும்போது அதில் அடங்கியுள்ள ஹைட்ரோகார்பன்கள், கார்பன் டைஆக்சைடு மற்றும் நீராக மாற்றப்படுகின்றன.

2. கீழ்க்கண்டவற்றுள் வேதிவினை நடைபெறும் பொழுது நிகழ்வதென்ன?

1] ஒரு வேதிவினையில் ஈடுபடும் மூலக்கூறுகளின் அணுக்கள் அல்லது தனிமங்கள் மாற்றியமைக்கப்பட்டு புதிய மூலக்கூறுகள் உருவாகின்றன.

2] அணுக்களுக்கிடையேயான பிணைப்புகள் உடைந்து புதிய வேதிப்பிணைப்புகள் உருவாகின்றன.

3] பிணைப்பு உடையும் பொழுது ஆற்றல் உறிஞ்சப்படுகிறது. அதே போன்று பிணைப்பு உருவாகும் போது ஆற்றல் வெளிப்படுகிறது.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: ஒரு வேதிவினையில் ஈடுபடும் மூலக்கூறுகளின் அணுக்கள் அல்லது தனிமங்கள் மாற்றியமைக்கப்பட்டு புதிய மூலக்கூறுகள் உருவாகின்றன. அணுக்களுக்கிடையேயான பிணைப்புகள் உடைந்து புதிய வேதிப்பிணைப்புகள் உருவாகின்றன. பிணைப்பு உடையும் பொழுது ஆற்றல் உறிஞ்சப்படுகிறது. அதே போன்று பிணைப்பு உருவாகும் போது ஆற்றல் வெளிப்படுகிறது (உமிழப்படுகிறது).

3. வேதிவாய்ப்பாடுகளில் வினைபடு பொருள்கள் அம்புக்குறியின் ____________ புறமும், வினைவிளை பொருள்கள் அம்புக்குறியின் ____________ புறமும் குறிக்கப்படுகின்றன.

A) வலது, இடது

B) இடது, வலது

C) வலது, வலது

D) இடது, இடது

விளக்கம்: வேதிவாய்ப்பாடுகளில் வினையில் ஈடுபடும் தனிமங்கள் அல்லது சேர்மங்கள் (வினைபடு பொருள்கள்) அம்புக்குறியின் இடதுபுறமும் வினையில் உருவாகும் (வினைவிளை பொருள்கள்) அம்புக்குறியின் வலப்புறமும் குறிக்கப்படுகின்றன.

4. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] பொருண்மை அழியாவிதிப்படி பொருண்மையை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.

2] ஒரு வேதி வினையின் மூலம் புதிய அணுக்களை நாம் உருவாக்க இயலாது.

3] மாறாக வேதி வினை மூலம் பல்வேறு வழிகளில் அணுக்களை மாற்றியமைத்து புதிய சேர்மத்தினை உருவாக்கலாம்.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: பொருண்மை அழியாவிதிப்படி பொருண்மையை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு வேதி வினையின் மூலம் புதிய அணுக்களை நாம் உருவாக்க இயலாது. மாறாக வேதி வினை மூலம் பல்வேறு வழிகளில் அணுக்களை மாற்றியமைத்து புதிய சேர்மத்தினை உருவாக்கலாம்.

5. ஒரு வேதிச் சமன்பாட்டில் வினைபடு பொருள்களின் அணுக்களின் எண்ணிக்கையும், வினை விளை பொருள்களிலுள்ள அணுக்களின் எண்ணிக்கையும் ____________ இருக்க வேண்டும்.

A) கூடுதலாக

B) குறைவாக

C) சமமாக

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: ஒரு வேதிச் சமன்பாட்டில் வினைபடு பொருள்களின் அணுக்களின் எண்ணிக்கையும், வினை விளை பொருள்களிலுள்ள அணுக்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்க வேண்டும்.

6. CH₄(g) + 2 O2 (g) →

A) CO2 (g) + 2 H2O (g)

B) CO (g) + 2 H2O (g)

C) CO2 (g) + H2O (g)

D) CO2 (g) + 2 H2 (g)

விளக்கம்: மீத்தேன் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து கார்பன் டைஆக்சைடு மற்றும் நீரைத் தருகிறது. CH₄(g) + 2 O2 (g) → CO2 (g) + 2 H2O (g).

7. 2K(s) + 2 H2O (l) →

A) 2KOH(aq) + H2 (g)

B) 2KOH(aq) + H2 (g)

C) 2KOH(aq) + H2 (g)

D) 2KOH(aq) + H2 (g)

விளக்கம்: திண்ம பொட்டாசியம், நீருடன் வினை புரிந்து பொட்டாசியம் ஹைட்ராக்சைடையும் ஹைட்ரஜன் வாயுவையும் தருகிறது. 2K(s) + 2 H2O (l) → 2KOH(aq) + H2 (g).

8. பொருத்துக

a) s – 1] திண்மம்

b) l – 2] நீர்மம்

c) g – 3] வாயு

d) aq – 4] நீர்க்கரைசல்

a b c d

A) 3 1 2 4

B) 4 1 2 5

C) 2 4 3 1

D) 1 2 3 4

9. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வினைப்படுபொருள்கள் இணைந்து ஒரு சேர்மம் உருவாகும் வினை_________

A) சேர்க்கை வினை

B) சிதைவு வினை

C) வெப்ப சிதைவு வினை

D) ஒளி சிதைவு வினை

விளக்கம்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வினைப்படுபொருள்கள் இணைந்து ஒரு சேர்மம் உருவாகும் வினை சேர்க்கை வினை அல்லது கூடுகை வினை எனப்படும்.

10. H2 (g) + Cl2 (g) →

A) 2HCl(g)

B) HCl(g)

C) HCl

D) 2HCl

விளக்கம்: ஹைட்ரஜன் வாயு குளோரினுடன் இணைந்து ஹைட்ரஜன் குளோரைடு வாயுவை தருகிறது. H2 (g) + Cl2 (g) → 2HCl(g).

11. வினைப்படு பொருள்களின் தன்மையை பொறுத்து சேர்க்கை வினை எத்தனை வகைப்படும்?

A) 3

B) 2

C) 1

D) 4

விளக்கம்: வினைப்படு பொருள்களின் தன்மையை பொறுத்து சேர்க்கை வினை மூன்று வகைப்படும்.

12. உலோகம் மற்றும் அலோகங்களுக்கிடையே அல்லது இரண்டு அலோகங்களுக்கிடையே நடைபெறும் வினை எது?

A) தனிமம் + சேர்மம் → சேர்மம்

B) சேர்மம் + தனிமம் → தனிமம்

C) தனிமம் + தனிமம் → சேர்மம்

D) சேர்மம் + சேர்மம் → தனிமம்

விளக்கம்: இந்த வகை சேர்க்கை வினைகளில், இரண்டு தனிமங்கள் ஒன்றோடொன்று இணைந்து ஒரு சேர்மத்தை தருகின்றன. இவ்வகை வினைகள் உலோகம் மற்றும் அலோகங்களுக்கிடையே அல்லது இரண்டு அலோகங்களுக்கிடையே நடைபெறலாம்.

13. S(s) + O2 (g) →

A) SO2 (g)

B) SO2

C) O2

D) O2 (g)

விளக்கம்: சல்பர் ஆக்ஜிசனுடன் வினைபுரிந்து சல்பர் டை ஆக்ஸைடு உருவாகிறது. S(s) + O2 (g) → SO2 (g).

14. வெளிறிய பச்சை கலந்த மஞ்சள் வாயு ____________

A) குளோரின்

B) அம்மோனியா

C) மீத்தேன்

D) ஹைட்ரஜன்

விளக்கம்: வெளிறிய பச்சை கலந்த மஞ்சள் வாயு குளோரின் ஆகும்.

15. சோடியமானது குளோரினுடன் இணையும் போது உண்ணத்தகுந்த ____________ ஐ தருகிறது

A) சோடியம் ஹைட்ராக்சைடு

B) சோடியம் குளோரைடு

C) சோடியம் புளூரைடு

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: சோடியமானது குளோரினுடன் இணையும் போது உண்ணத்தகுந்த சோடியம் குளோரைடை தருகிறது.

16. 2Na(s) + Cl2 (g) →

A) 2NaCl(s)

B) NaCl

C) 2Na

D) Cl2

விளக்கம்: 2Na(s) + Cl2 (g) → 2NaCl(s).

17. ஒரு சேர்மம் மற்றொரு தனிமத்துடன் சேர்ந்து ஒரு புதிய வகை சேர்மத்தை தருவது எவ்வகை வினை?

A) தனிமம் + சேர்மம் → சேர்மம்

B) சேர்மம் + தனிமம் → சேர்மம்

C) தனிமம் + தனிமம் → சேர்மம்

D) சேர்மம் + சேர்மம் → தனிமம்

விளக்கம்: சேர்மம் + தனிமம் → சேர்மம்: இவ்வகை சேர்க்கை வினையில், ஒரு சேர்மம் மற்றொரு தனிமத்துடன் சேர்ந்து ஒரு புதிய வகை சேர்மத்தை தருகிறது.

18. PCl3(I) + Cl2 (g) →

A) PCl

B) PCl5(s)

C) Cl2

D) PCl3

விளக்கம்: PCl3(I) + Cl2 (g) → PCl5(s).

19. இரண்டு சேர்மங்கள் இணைந்து ஒரு புதிய வகை சேர்மத்தை உருவாக்கும் வினை____________

A) தனிமம் + சேர்மம் → சேர்மம்

B) சேர்மம் + தனிமம் → சேர்மம்

C) தனிமம் + தனிமம் → சேர்மம்

D) சேர்மம் + சேர்மம் → சேர்மம்

விளக்கம்: சேர்மம் + சேர்மம் → சேர்மம்: இவ்வகை சேர்க்கை வினையில், இரண்டு சேர்மங்கள் இணைந்து ஒரு புதிய வகை சேர்மத்தை உருவாக்குகின்றன.

20. தகுந்த சூழ்நிலையில் ஒரு சேர்மம் சிதைவுற்று இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எளிய மூலக்கூறுகளாக சிதைவுறும் வினை____________

A) வெப்பச் சிதைவு வினைகள்

B) ஒளி சிதைவு வினைகள்

C) சிதைவு வினைகள்

D) வெப்ப வினைகள்

விளக்கம்: தகுந்த சூழ்நிலையில் ஒரு சேர்மம் சிதைவுற்று இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எளிய மூலக்கூறுகளாக சிதைவுறும் வினை சிதைவு வினைகள் எனப்படும்.

21. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] சிதைவு வினைகள் நேர் வினையாகும்.

2] இவ்வினையின்பிணைப்புகள் உடைய ஆற்றல் தேவைப்படுகிறது.

3] சிதைவு வினைகள் இரண்டு வகைப்படும்.

A) 1, 2, 3 சரி

B) 1, 3 தவறு 2 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: சிதைவு வினைகள் சேர்க்கை வினைக்கு எதிர் வினையாகும். இவ்வினையின்பிணைப்புகள் உடைய ஆற்றல் தேவைப்படுகிறது. சிதைவு வினைகள் மூன்று வகைப்படும்.

22. கால்சியம் ஹைட்ராக்சைடு காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடுடன் வினைபுரிந்து ____________ ஐ உருவாக்குகிறது.

A) கால்சியம் ஹைட்ராக்சைடு

B) கால்சியம் கார்பனேட்

C) கால்சியம் குளோரைடு

D) கால்சியம் ஆக்ஸைடு

விளக்கம்: கால்சியம் ஹைட்ராக்சைடு காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடுடன் வினைபுரிந்து கால்சியம் கார்பனேடை உருவாக்குகிறது.

23. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] சுவற்றில் வெள்ளையடிக்க நீற்று சுண்ணாம்பு கரைசலை பயன்படுத்துகிறோம்.

2] வெள்ளையடித்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் கால்சியம் கார்பனேட் சுவற்றுக்கு மினுமினுப்புத் தன்மையை கொடுக்கிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: சுவற்றில் வெள்ளையடிக்க நீற்று சுண்ணாம்பு கரைசலை பயன்படுத்துகிறோம். வெள்ளையடித்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் கால்சியம் கார்பனேட் சுவற்றுக்கு மினுமினுப்புத் தன்மையை கொடுக்கிறது.

24. மார்பிளின் வேதிவாய்ப்பாடு ____________

A) CaCO3

B) CaCO2

C) Ca(OH)2

D) Ca(OH)

விளக்கம்: சுண்ணாம்புக்கல்லின்(மார்பிள்) வேதிவாய்ப்பாடு CaCO3

25. Ca(OH)2 (aq) + CO2 (g) →

A) CaCO3(s) + H2

B) CaCO3(s)

C) CaCO3(s) + H

D) CaCO2(s) + H2

விளக்கம்: Ca(OH)2 (aq) + CO2 (g) → CaCO3(s) + H2

26. மெர்க்குரி ஆக்ஸைடு வெப்பத்தினால் சிதைவுற்று மெர்க்குரி மற்றும் ஆக்சிஸன் வாயுவாக மாறும் வினை____________

A) வெப்பச் சிதைவு வினைகள்

B) ஒளி சிதைவு வினைகள்

C) சிதைவு வினைகள்

D) வெப்ப வினைகள்

விளக்கம்: மெர்க்குரி ஆக்ஸைடு வெப்பத்தினால் சிதைவுற்று மெர்க்குரி மற்றும் ஆக்சிஸன் வாயுவாக மாறுகிறது. வெப்பத்தை எடுத்துக்கொண்டு இவ்வினை நிகழ்வதால் இது வெப்ப சிதைவு வினை எனப்படும்.

27. வெப்ப சிதைவு வினைகளில் பிணைப்புகளை உடைப்பதற்கு வெப்பம் தரப்படுகிறது. இவ்வகை வினைகள் ____________

A) வெப்ப உமிழ் வினைகள்

B) ஒளி சிதைவு வினைகள்

C) சிதைவு வினைகள்

D) வெப்ப கொள் வினைகள்

விளக்கம்: வெப்ப சிதைவு வினைகளில் பிணைப்புகளை உடைப்பதற்கு வெப்பம் தரப்படுகிறது. இவ்வகை வினைகள் வெப்ப கொள் வினைகள் எனப்படும்.

28. 2HgO(s)  வெப்பம்

A) 2Hg(l)

B) 2Hg(l) + O2 (g)

C) Hg(l) + O2 (g)

D) Hg(l) + O2 (g)

விளக்கம்: 2HgO(s)  வெப்பம் 2Hg(l) + O2 (g).

29. CaCO3 (s)  வெப்பம்

A) CaO(s) + O2 (g)

B) CaO(s) + CO2 (g)

C) CaO(s)

D) Ca(s) + CO2 (g)

விளக்கம்: CaCO3 (s)  வெப்பம் CaO(s) + CO2 (g).

30. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] பனிக்கட்டி உருகி நீராக மாறுகிறது. எனவே உறைதல் என்பது மீள்மாற்றம்.

2] இது நிரந்தர மாற்றம்.

3] இது ஒரு இயற்பியல் மாற்றம்.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1, 3 சரி 2 தவறு

விளக்கம்: பனிக்கட்டி உருகி நீராக மாறுகிறது. எனவே உறைதல் என்பது மீள்மாற்றம். இது நிரந்தர மாற்றமல்ல. இது ஒரு இயற்பியல் மாற்றம்.

31. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] இயற்பியல் மாற்றங்கள் மீள்மாற்றங்களாகும்.

2] வேதியியல் மாற்றங்கள் நிரந்தர மாற்றம் ஆகும்.

3] சில வேதி வினைகளை மீள் வினைகளாக மாற்றலாம்.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1, 3 சரி 2 தவறு

விளக்கம்; இயற்பியல் மாற்றங்கள் மீள்மாற்றங்களாகும். வேதியியல் மாற்றங்கள் நிரந்தர மாற்றம் ஆகும். ஆனால் சில வேதி வினைகளை மீள் வினைகளாக மாற்றலாம்.

32. நமது கைப்பேசி இயங்கத் தேவையான ஆற்றலை, அதில் உள்ள ____________ வேதி வினைகள் மூலமாக உண்டாக்குகின்றன.

A) அனோடு

B) இரும்பு

C) கேதோடு

D) லித்தியம்

விளக்கம்: நமது கைப்பேசி இயங்கத் தேவையான ஆற்றலை, அதில் உள்ள லித்தியம் அயனி மின்கலன், வேதி வினைகள் மூலமாக உண்டாக்குகின்றன. இந்நிகழ்வு மின்னிறக்கம் எனப்படும்.

33. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] மீள் வினைகள் என்பவை மீண்டும் நிகழக்கூடிய வினைகளாகும்.

2] வினைவிளை பொருள்களை வினைப்படுபொருள்களாக மாற்ற முடியாது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மீள் வினைகள் என்பவை மீண்டும் நிகழக்கூடிய வினைகளாகும். வினைவிளை பொருள்களை வினைப்படுபொருள்களாக மாற்ற முடியும்.

34. நமது உடலானது ____________ முதல் ____________வரை உள்ள pH எல்லை சார்ந்து வேலை செய்கிறது.

A) 7. 1 முதல் 7.5

B) 7.0 முதல் 7. 7

C) 7.0 முதல் 7.8

D) 7.0 முதல் 7.9

விளக்கம்: நமது உடலானது 7.0 முதல் 7.8 வரை உள்ள pH எல்லை சார்ந்து வேலை செய்கிறது.

35. நமது பற்களின் மேற்பரப்பு படலமானது ____________ என்ற மிகக் கடினமான பொருளினால் ஆனது.

A) கால்சியம் ஹைட்ராக்சைடு

B) கால்சியம் பாஸ்பேட்

C) கால்சியம் குளோரைடு

D) கால்சியம் ஆக்ஸைடு

விளக்கம் : நமது பற்களின் மேற்பரப்பு படலமானது கால்சியம் பாஸ்பேட் என்ற மிகக் கடினமான பொருளினால் ஆனது.

36. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] உமிழ்நீரின் pH 5.4 க்கும் கீழே குறையும்பொழுது பற்களின் மேற்பரப்பு படலம் (எனாமல்) பாதிக்கப்படுகிறது.

2] நாம் பயன்படுத்தப்படும் பற்பசைகள் காரத்தன்மை கொண்டவை.

3] இவை கூடுதல் அமிலத்தன்மையை நடுநிலையாக்கம் செய்து பற்சிதைவைத் தடுக்கின்றன.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: உமிழ்நீரின் pH 5.5 க்கும் கீழே குறையும்பொழுது பற்களின் மேற்பரப்பு படலம் (எனாமல்) பாதிக்கப்படுகிறது. இது பற்சிதைவு எனப்படுகிறது. பொதுவாக நாம் பயன்படுத்தப்படும் பற்பசைகள் காரத்தன்மை கொண்டவை. இவை கூடுதல் அமிலத்தன்மையை நடுநிலையாக்கம் செய்து பற்சிதைவைத் தடுக்கின்றன.

37. மழைநீரின் pH மதிப்பு ____________ க்கு கீழ் செல்லும்போது அது அமில மழை எனப்படும்.

A) 5.5

B) 5.6

C) 5.7

D) 5.4

விளக்கம்: மழைநீரின் pH மதிப்பு 5.6 க்கு கீழ் செல்லும்போது அது அமில மழை எனப்படும்.

38. pH அளவுகோல் ஒரு கரைசலின் ____________ அயனிக் செறிவை அளக்க உதவும் ஒரு அளவீடாகும்.

A) ஹைட்ரஜன்

B) நைட்ரஜன்

C) ஹைட்ராக்சில்

D) ஆசிட்

விளக்கம்: pH அளவுகோல் ஒரு கரைசலின் ஹைட்ரஜன் அயனிக் செறிவை அளக்க உதவும் ஒரு அளவீடாகும்.

39. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] pH என்ற குறியீட்டில், ‘p’ என்பது ‘potenz’ என்ற கிரேக்க சொல்லைக் குறிக்கும்.

2] இது டென்மார்க் நாட்டைச் சேர்ந்த உயிரிவேதியியல் விஞ்ஞானியால் 1909 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது.

3] இது ஒரு கரைசல் அமிலமா? காரமா? அல்லது நடுநிலைத்தன்மை வாய்ந்ததா என குறிப்பிட உதவுகிறது.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: pH என்ற குறியீட்டில், ‘p’ என்பது ‘potenz’ என்ற ஜெர்மானியச் சொல்லைக் குறிக்கும். இது டென்மார்க் நாட்டைச் சேர்ந்த உயிரிவேதியியல் விஞ்ஞானியால் 1909 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது. இது ஒரு கரைசல் அமிலமா? காரமா? அல்லது நடுநிலைத்தன்மை வாய்ந்ததா என குறிப்பிட உதவுகிறது.

40. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] pH என்ற குறியீட்டில், ‘p’ என்பது ‘potenz’ என்ற சொல்லின் பொருள் அளவீடுதல் ஆகும்.

2] pH அளவீடு S.P.L சாரன்சன் என்பவரால் முன்மொழியப்பட்டது.

3] pH அளவீடு என்பது 1 முதல் 14 முடிய உள்ள எண்களைக் கொண்ட அளவீடாகும்.

A) 1, 2, 3 சரி

B) 1, 3 தவறு 2 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: pH என்ற குறியீட்டில், ‘p’ என்பது ‘potenz’ என்ற சொல்லின் பொருள் Power என்பதாகும். pH அளவீடு S.P.L சாரன்சன் என்பவரால் முன்மொழியப்பட்டது. pH அளவீடு என்பது 0 முதல் 14 முடிய உள்ள எண்களைக் கொண்ட அளவீடாகும்.

41. pH என்பதை ஹைட்ரஜன் அயனிச் செறிவின் பத்தை அடிப்படையாகக் கொண்ட மடக்கையின் ____________ மதிப்பாகும்.

A) நேர்

B) எதிர்

C) இருமடிக்கு நேர்தகவு

D) இருமடிக்கு எதிர்த்தகவு

விளக்கம்: pH என்பதை ஹைட்ரஜன் அயனிச் செறிவின் பத்தை அடிப்படையாகக் கொண்ட மடக்கையின் எதிர் மதிப்பாகும். pH = – log10 [H+].

42. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] ஒரு கரைசலின் pH மதிப்பினை pH தாள் ஒன்றின் உதவியால் கண்டறிய முடியும்.

2] இந்நிறங்காட்டி சில சாயங்களின் கலவையாகும்.

3] இது கரைசலாகவோ அல்லது நிறங்காட்டியாகவோ பயன்படுத்தப்படுகிறது.

A) 1, 2, 3 சரி

B) 1, 3 தவறு 2 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: ஒரு கரைசலின் pH மதிப்பினை நிறங்காட்டி ஒன்றின் உதவியால் கண்டறிய முடியும். இந்நிறங்காட்டி சில சாயங்களின் கலவையாகும். இது கரைசலாகவோ அல்லது தாள் வடிவிலோ பயன்படுத்தப்படுகிறது.

43. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] பள்ளி ஆய்வக அளவிலான pH அளவீட்டுக்கு pH தாளை பயன்படுத்துவது ஒரு பொதுவான முறையாகும்.

2] ஒரு pH தாள் நிறங்காட்டிகளின் கலவையால் ஆனது.

3] இது கொடுக்கப்பட்ட pH இல் குறிப்பிட்ட நிறத்தைக் காட்டுகிறது.

A) 1, 2, 3 சரி

B) 1, 3 தவறு 2 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: பள்ளி ஆய்வக அளவிலான pH அளவீட்டுக்கு pH தாளை பயன்படுத்துவது ஒரு பொதுவான முறையாகும். ஒரு pH தாள் நிறங்காட்டிகளின் கலவையால் ஆனது. இது கொடுக்கப்பட்ட pH இல் குறிப்பிட்ட நிறத்தைக் காட்டுகிறது.

44. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] நீரின் சுய அல்லது சுய அயனியாதல் என்பது இரு நீர் மூலக்கூறுகள் இணைந்து அயனிகளைச் தோற்றுவிக்கும் நிகழ்வதாகும்.

2] இந்நிகழ்வின்போது ஒரு நீர் மூலக்கூறிலிருந்து ஒரு புரோட்டான் மற்றொரு நீர் மூலக்கூறுக்கு மாற்றப்பட்டு, ஹைட்ரோனியம் அயனிகள் உருவாகின்றன.

3] புரோட்டான் மற்றொரு நீர் மூலக்கூறுடன் சேர்ந்து ஹைட்ராக்ஸைடு அயனியாக உருவாகிறது.

A) 1, 2, 3 சரி

B) 1, 3 தவறு 2 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: நீரின் சுய அல்லது சுய அயனியாதல் என்பது இரு நீர் மூலக்கூறுகள் இணைந்து அயனிகளைச் தோற்றுவிக்கும் நிகழ்வதாகும். இந்நிகழ்வின்போது ஒரு நீர் மூலக்கூறிலிருந்து ஒரு புரோட்டான் மற்றொரு நீர் மூலக்கூறுக்கு மாற்றப்பட்டு, ஹைட்ராக்ஸைடு அயனிகள் உருவாகின்றன. புரோட்டான் மற்றொரு நீர் மூலக்கூறுடன் சேர்ந்து ஹைட்ரோனியம் அயனியாக உருவாகிறது.

45. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] ஹைட்ரோனியம் அயனி ஒரு வலிமையான காரம் ஆகும்.

2] ஹைட்ராக்சில் அயனி ஒரு வலிமையான அமிலம் ஆகும்

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஹைட்ரோனியம் அயனி ஒரு வலிமையான அமிலம் ஆகும். ஹைட்ராக்சில் அயனி ஒரு வலிமையான காரம் ஆகும்.

46. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] நீரின் அயனிப் பெருக்கம் ஒரு மீளா வினையாகும்.

2] இவ்வினை விரைவில் சமநிலையை அடைகிறது.

3] எனவே உருவான அயனிகளின் செறிவு மிகக் அதிகமாகும்.

A) 1, 2, 3 சரி

B) 1, 3 தவறு 2 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: நீரின் அயனிப் பெருக்கம் ஒரு மீள் வினையாகும். மேலும் இவ்வினை விரைவில் சமநிலையை அடைகிறது. எனவே உருவான அயனிகளின் செறிவு மிகக் குறைவாகும்.

47. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] ஹைட்ராக்சில் மற்றும் ஹைட்ரோனியம் அயனியின் செறிவுகளின் பெருக்குத் தொகையே நீரின் அயனிப்பெருக்கம் எனப்படுகிறது.

2] இது KW என்றழைக்கப்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: இந்த ஹைட்ராக்சில் மற்றும் ஹைட்ரோனியம் அயனியின் செறிவுகளின் பெருக்குத் தொகையே நீரின் அயனிப்பெருக்கம் எனப்படுகிறது. இது Kw என்றழைக்கப்படுகிறது.

48. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] நீரின் அயனிப்பெருக்கம் Kw = [H3O+] [OH- ] [H3O+ ]

2] நீரின் அயனிப்பெருக்கம் Kw = [H+ ] [OH- ]

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: Kw = [H3O+] [OH- ] [H3O+ ] ஐ எளிமையாக [H+ ] என எழுதலாம். எனவே நீரின் அயனிப்பெருக்கத்தை Kw = [H+ ] [OH- ] என எழுதலாம்.

49. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] இதன் அலகு மோல்2டெசிமீ-5.

2] 25 °C இதன் மதிப்பு 1.0 x 10-14.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: நீரின் அயனிப்பெருக்கத்தின் இதன் அலகு மோல்2டெசிமீ-6. 25 °C இதன் மதிப்பு 1.00 x 10-14.

50. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] மீள்வினையில் முன்னோக்கு வினையும், பின்னோக்கு வினையும் ஒரே நேரத்தில் நடைபெறும்.

2] முன்னோக்கு வினையின் வேகமும், பின்னோக்கு வினையின் வேகமும் சமமாக இருக்கும் போது வினை விளை பொருள்கள் உருவாகாது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மீள்வினையில் முன்னோக்கு வினையும், பின்னோக்கு வினையும் ஒரே நேரத்தில் நடைபெறும். முன்னோக்கு வினையின் வேகமும், பின்னோக்கு வினையின் வேகமும் சமமாக இருக்கும் போது வினை விளை பொருள்கள் உருவாகாது. இந்த நிலைக்கு சமநிலை என்று பெயர்.

51. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] சமநிலையை அடைந்த பிறகு, வினைபடுபொருள் மற்றும் வினைவிளை பொருள்களின் அளவில் மாற்றம் ஏற்படுகிறது.

2] ஒரு வேதிவினையில் எட்டப்படும் சமநிலையே வேதிச் சமநிலை எனப்படும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: சமநிலையை அடைந்த பிறகு, வினைபடுபொருள் மற்றும் வினைவிளை பொருள்களின் அளவில் மாற்றம் ஏற்படுவது இல்லை. ஒரு வேதிவினையில் எட்டப்படும் சமநிலையே வேதிச் சமநிலை எனப்படும். முன்னோக்கு வினையின் வேகம் = பின்னோக்கு வினையின் வேகம்.

52. சமநிலையின் பண்புகளில் எவை சரியானவை?

1] வேதிச் சமநிலையில் முன்னோக்கு வினையின் வேகமும், பின்னோக்கு வினையின் வேகமும் சமமல்ல.

2] நேரத்தை பொருத்து அழுத்தம், செறிவு, நிறம், அடர்த்தி, பாகுநிலை போன்றவை மாறும்.

3] இயற்பியல் சமநிலையில், அனைத்து நிலைமைகளும் மாறாத கனளவைப் பெறுகின்றன.

A) 1, 2, 3 சரி

B) 1, 2 தவறு 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: வேதிச் சமநிலையில் முன்னோக்கு வினையின் வேகமும், பின்னோக்கு வினையின் வேகமும் சமம். நேரத்தை பொருத்து அழுத்தம், செறிவு, நிறம், அடர்த்தி, பாகுநிலை போன்றவை மாறாது. இயற்பியல் சமநிலையில், அனைத்து நிலைமைகளும் மாறாத கனளவைப் பெறுகின்றன.

53. கூற்று(A): காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்களின் பாட்டில்களை திறந்தவுடன் வாயுநிலை கார்பன் டை ஆக்சைடு வெளியேறுகிறது.

காரணம்(R): கரைக்கப்பட்ட கார்பன் டைஆக்சைடு வாயு வெளியேறும் பொருட்டு கரையா நிலைக்கு மீண்டும் திரும்புகிறது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்களின் பாட்டில்களை திறந்தவுடன் வாயுநிலை கார்பன் டை ஆக்சைடு வெளியேறுகிறது. எனவே கரைக்கப்பட்ட கார்பன் டைஆக்சைடு வாயு வெளியேறும் பொருட்டு கரையா நிலைக்கு மீண்டும் திரும்புகிறது.

54. இரும்பானது துருப்பிடித்தல் நீரில் நடைபெறுவதை விட ____________ல் வேகமாக நடைபெறும்.

A) காற்று

B) அமிலம்

C) காரம்

D) ஆக்ஜிசன்

விளக்கம்: இரும்பானது துருப்பிடித்தல் நீரில் நடைபெறுவதை விட அமிலத்தில் வேகமாக நடைபெறும்.

55. வினையின் வேகத்தை பாதிக்கக் கூடிய காரணிகள் எத்தனை வகைப்படும்?

A) 4

B) 5

C) 6

D) 3

விளக்கம்: வினையின் வேகத்தை பாதிக்கக் கூடிய முக்கிய காரணிகள் ஐந்து வகைப்படும்.

56. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] சோடியம், ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வேகமாக வினைபுரிகிறது.

2] சோடியம், அசிட்டிக் அமிலத்துடன்மெதுவாக வினை புரிகிறது.

3] ஹைட்ரோகுளோரிக் அமிலம், அசிடிக் அமிலத்தை விட வினைதிறன் மிக்கது.

A) 1, 2, 3 சரி

B) 1, 2 தவறு 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: சோடியம், ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வேகமாக வினைபுரிகிறது. ஆனால், அசிட்டிக் அமிலத்துடன்மெதுவாக வினை புரிகிறது. ஏனெனில் ஹைட்ரோகுளோரிக் அமிலம், அசிடிக் அமிலத்தை விட வினைதிறன் மிக்கது.

57. வினைபடு பொருள்களின் செறிவு அதிகரிக்கும் போது வினைவேகம் ____________

A) அதிகரிக்கிறது

B) குறைகிறது

C) மாறாது

D) நடுநிலையானது

விளக்கம்: வினைபடு பொருள்களின் செறிவு அதிகரிக்கும் போது வினைவேகம் அதிகரிக்கிறது.

58. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] குறிப்பிட்ட கன அளவு கொண்ட கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் அளவே செறிவு ஆகும்.

2] செறிவு அதிகமாக இருக்கும் போது குறிப்பிட்ட கனஅளவில் துகள்களின் குறைந்து காணப்படும்.

3] வினையின் வேகமும் குறையும்.

A) 1, 2, 3 சரி

B) 1, 2 தவறு 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: குறிப்பிட்ட கன அளவு கொண்ட கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் அளவே செறிவு ஆகும். செறிவு அதிகமாக இருக்கும் போது குறிப்பிட்ட கனஅளவில் துகள்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். எனவே வினையின் வேகமும் அதிகரிக்கும்.

59. துத்தநாக துகள்கள், ____________ ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் வேகமாக வினை புரிகின்றது.

A) 1M

B) 2M

C) 3M

D) 4M

விளக்கம்: துத்தநாக துகள்கள், 1M ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைவிட 2M ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் வேகமாக வினை புரிகின்றது.

60. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] வெப்பநிலை உயரும்போது வினையின் வேகமும் குறைகிறது.

2] வெப்பம் அதிகரிக்கும் போது வினைபடுபொருள்களின் பிணைப்புகள் எளிதில் உடைந்து வினையின் வேகம் குறைகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: வெப்பநிலை உயரும்போது வினையின் வேகமும் அதிகரிக்கும். ஏனெனில் வெப்பம் அதிகரிக்கும் போது வினைபடுபொருள்களின் பிணைப்புகள் எளிதில் உடைந்து வினையின் வேகம் அதிகரிக்கிறது.

61. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] அறை வெப்பநிலையில் கால்சியம் கார்பனேட் மெதுவாக வினைபுரியும்.

2] கால்சியம் கார்பனேடை வெப்பப்படுத்தும்போது வினையின் வேகம் குறைகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: அறை வெப்பநிலையில் கால்சியம் கார்பனேட் மெதுவாக வினைபுரியும் ஆனால் வெப்பப்படுத்தும்போது வினையின் வேகம் அதிகரிக்கும்.

62. கூற்று(A): அறை வெப்பநிலையில் வைக்கப்படும் உணவு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் உணவை விட விரைவாக கெட்டுப்போகிறது.

காரணம்(R): குளிர்சாதன பெட்டிகள் வெப்பநிலையானது அறை வெப்பநிலை விட குறைவாக இருக்கும். வினையின் வேகம் குறைவாக இருப்பதால் உணவு கெட்டுப்போகும் வேகமும் குறைவாக இருக்கும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: அறை வெப்பநிலையில் வைக்கப்படும் உணவு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் உணவை விட விரைவாக கெட்டுப்போகிறது. குளிர்சாதன பெட்டிகள் வெப்பநிலையானது அறை வெப்பநிலை விட குறைவாக இருக்கும். வினையின் வேகம் குறைவாக இருப்பதால் உணவு கெட்டுப்போகும் வேகமும் குறைவாக இருக்கும்.

63. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] வாயுநிலையிலுள்ள வினைபடு பொருள்களில் அழுத்தம் அதிகரிக்கும் போது வினையின் வேகமும் குறைகிறது.

2] அழுத்தத்தை அதிகரிக்கும்போது வினைப்படு பொருள்களின் துகள்கள் மிக அருகே வந்து அடிக்கடி மோதலில் ஈடுபடுகின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: வாயுநிலையிலுள்ள வினைபடு பொருள்களில் அழுத்தம் அதிகரிக்கும் போது வினையின் வேகமும் அதிகரிக்கும். ஏனெனில் அழுத்தத்தை அதிகரிக்கும்போது வினைப்படு பொருள்களின் துகள்கள் மிக அருகே வந்து அடிக்கடி மோதலில் ஈடுபடுகின்றன.

64. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] வினையூக்கி என்பது வினையில் நேரடியாக ஈடுபடும்.

2] வினையூக்கி அவ்வினையின் வேகத்தை அதிகரிக்கும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: வினையூக்கி என்பது வினையில் நேரடியாக ஈடுபடாது, ஆனால் அவ்வினையின் வேகத்தை அதிகரிக்கும்.

65. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] பொட்டாசியம் குளோரேட்டை சூடுபடுத்தும் போது ஆக்சிஜன் மிகக் குறைவான வேகத்தில் வெளியேறுகிறது.

2] பொட்டாசியம் குளோரேட்டை மாங்கனீசு டை ஆக்ஸைடை வினைபடு பொருளுடன் சேர்த்த பிறகு ஆக்சிஜன் வெளியேறும் வேகம் அதிகரிக்கிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பொட்டாசியம் குளோரேட்டை சூடுபடுத்தும் போது ஆக்சிஜன் மிகக் குறைவான வேகத்தில் வெளியேறுகிறது. ஆனால் மாங்கனீசு டை ஆக்ஸைடை வினைபடு பொருளுடன் சேர்த்த பிறகு ஆக்சிஜன் வெளியேறும் வேகம் அதிகரிக்கிறது.

66. வேதிவினையில் கட்டியான வினைபடு பொருள்களை விட, தூளாக்கப்பட்ட வினைபடு பொருள்கள் ____________ வினைபுரியும்.

A) மெதுவாக

B) விரைவாக

C) நடுநிலையாக

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: வேதிவினையில் கட்டியான வினைபடு பொருள்களை விட, தூளாக்கப்பட்ட வினைபடு பொருள்கள் விரைவாக வினைபுரியும்.

67. கூற்று(A): கட்டியான கால்சியம் கார்பனேட்டை விட துளாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் மிக விரைவாக வினைபுரியும்.

காரணம்(R): தூளாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட்டில் புறப்பரப்பளவு அதிகளவு இருப்பதால் வினை வேகமாக நிகழ்கிறது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: கட்டியான கால்சியம் கார்பனேட்டை விட துளாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் மிக விரைவாக வினைபுரியும். ஏனெனில் தூளாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட்டில் புறப்பரப்பளவு அதிகளவு இருப்பதால் வினை வேகமாக நிகழ்கிறது.

68. கூற்று(A): வினை வேகம் அதிகமாக இருக்கும்போது குறிப்பிட்ட நேரத்தில் அதிக அளவு விளைபொருள்கள் கிடைக்கும்.

காரணம்(R): ஒரு வேதியிலாளர்க்கு அதிக அளவு வினை விளை பொருள் பெருவதற்கு வினைவேகம் முக்கியமானதாகும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: வினை வேகம் அதிகமாக இருக்கும்போது குறிப்பிட்ட நேரத்தில் அதிக அளவு விளைபொருள்கள் கிடைக்கும். எனவே ஒரு வேதியிலாளர்க்கு அதிக அளவு வினை விளை பொருள் பெருவதற்கு வினைவேகம் முக்கியமானதாகும்.

69. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] ஒரு வினையில் வினைப்படு பொருள்களை மீண்டும் பெற இயலாத வினை மீளா வினையாகும்.

2] இவ்வினை ஒரே திசையில் மட்டும் நிகழும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஒரு வினையில் வினைப்படு பொருள்களை மீண்டும் பெற இயலாத வினை மீளா வினையாகும். இவ்வினை ஒரே திசையில் மட்டும் நிகழும்.

70. கீழ்க்கண்டவை எந்த வினை என கண்டறிக?

1] தகுந்த சூழ்நிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் நடைபெறும்.

2] முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் ஒரே நேரத்தில் நடைபெறும்.

3] வினையானது சமநிலையை அடையும்.

A) மீள் வினை

B) மீளா வினை

C) வெப்ப வினை

D) சிதைவு வினை

விளக்கம்: மீள் வினை: தகுந்த சூழ்நிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் நடைபெறும். முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் ஒரே நேரத்தில் நடைபெறும். வினையானது சமநிலையை அடையும்.

71. கீழ்க்கண்டவை எந்த வினை என கண்டறிக?

1] வினைப்படுபொருள்கள் முழுவதும் வினைவிளை பொருள்களாக மாற்ற இயலாது.

2] இவ்வினை மெதுவாக நடைபெறும்.

A) மீள் வினை

B) மீளா வினை

C) வெப்ப வினை

D) சிதைவு வினை

விளக்கம்: மீள் வினை: வினைப்படுபொருள்கள் முழுவதும் வினைவிளை பொருள்களாக மாற்ற இயலாது. இவ்வினை மெதுவாக நடைபெறும்.

72. கீழ்க்கண்டவை எந்த வினை என கண்டறிக?

1] முன்னோக்கு வினை நடைபெறும் போது பின்னோக்கு வினை நடைபெறாது. வினையானது சமநிலையை அடையாது.

2] வினைப்படு பொருள்கள் முழுவதும் வினைவிளை பொருள்களாக மாறக்கூடியது.

3] வேகமாக நடைபெறும்.

A) மீள் வினை

B) மீளா வினை

C) வெப்ப வினை

D) சிதைவு வினை

விளக்கம்: முன்னோக்கு வினை நடைபெறும் போது பின்னோக்கு வினை நடைபெறாது. வினையானது சமநிலையை அடையாது. வினைப்படு பொருள்கள் முழுவதும் வினைவிளை பொருள்களாக மாறக்கூடியது. வேகமாக நடைபெறும்.

73. ஒரே திசையில் மட்டும் நடைபெறும் வினை ____________

A) பின்னோக்கு வினை

B) முன்னோக்கு வினை

C) மீள் வினை

D) மீளா வினை

விளக்கம்: ஒரே திசையில் மட்டும் நடைபெறும் வினை முன்னோக்கு வினையாகும்.

74. ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்.

A) வெப்பம்

B) மின்னாற்றல்

C) ஒளி

D) எந்திர ஆற்றல்

விளக்கம்: ஒளியானது சிதைவு வினைகளை நிகழ்த்தும் மற்றொரு ஆற்றல் ஆகும்.

75. கார்பன் மற்றும் ஆக்சிஜன் இடையேயான ஒரு வினை பின்வருமாறு குறிக்கப்படுகிறது.

C(s) + O2 (g) → CO2 (g) இது எவ்வகை வினையாக வகைப்படுத்தப் படுகிறது.

1] சேர்க்கை வினை 2] எரிதல் வினை 3] சிதைவுறுதல் வினை 4] மீளா வினை

A) 1 மற்றும் 2

B) 1 மற்றும் 4

C) 1, 2 மற்றும் 3

D) 1, 2 மற்றும் 4

76. Na2SO4(aq) + BaCl2 (aq) → BaSO4 (s)↓ + 2 NaCl(aq) என்ற வேதிச்சமன்பாடு பின்வருனவற்றுள் எவ்வகை வினையைக் குறிக்கிறது.

A) நடுநிலையாக்கல் வினை

B) எரிதல் வினை

C) வீழ்படிவாதல் வினை

D) ஒற்றை இடப்பெயர்ச்சி வினை

விளக்கம்: இரு சேர்மங்களின் நீர்க்கரைசல்களை கலக்கும் போது அவை வினைபுரிந்து நீரில் கரையாத ஒரு விளைபொருளும், நீரில் கரையும் ஒரு விளைபொருளும் தோன்றினால் அவை வீழ்ப்படிவாக்கல் வினை எனப்படும்.

77. வேதிச் சமநிலை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?

(i) இயக்கத்தன்மை உடையது.

(ii) சமநிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளில் வினைவேகம் சமம்.

(iii) மீளா வினைகள் வேதிச் சமநிலையை அடைவதில்லை.

(iv) வினைபடு பொருள் மற்றும் வினைவிளை பொருள்களில் செறிவு வேறுபடலாம்.

A) (i), (ii) மற்றும் (iii)

B) (i), (ii) மற்றும் (iv)

C) ii), (iii) மற்றும் (iv)

D) (i), (iii) மற்றும் (iv)

விளக்கம்: இயக்கத்தன்மை உடையது. சமநிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளில் வினைவேகம் சமம். மீளா வினைகள் வேதிச் சமநிலையை அடைவதில்லை.

78. X(s) + 2HCl(aq) → X Cl2 (aq) + H2 (g) என்ற ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் X என்பது பின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது.

1] Zn

2] Ag

3] Cu

4] Mg

சரியான இணையைத் தேர்ந்தெடு.

A) 1 மற்றும் 2

B) 2 மற்றும் 3

C) 3 மற்றும் 4

D) 1 மற்றும் 4

விளக்கம்: ஒற்றை இடப்பெயர்ச்சி வினை ஒரு தனிமம் மற்றும் சேர்மத்திற்கிடையே நடைபெறுவதாகும்.

79. பின்வருவனவற்றுள் எது “தனிமம் + தனிமம் → சேர்மம் ” வகை அல்ல.

A) C(s) + O2 (g) → O2 (g)

B) 2K(s) + Br2 (l) → 2KBr(s)

C) 2CO(g) + O2 (g) → 2CO2 (g)

D) 4Fe(s) + 3O2 (g) → 2Fe2 O3 (s)

80. பின்வருவனவற்றுள் எது வீழ்படிவாதல் வினையை குறிக்கிறது.

A) A(s) + B(s) → C(s) + D(s)

B) A(s) + B(aq) → C(aq) + D(l)

C) A(aq) + B(aq) → C(s) + D(aq)

D) A(aq) + B(s) → C(aq) + D(l)

81. பொருத்துக

a) NH4 OH(aq) + CH3 COOH(aq) →CH3 COONH4(aq) + H2O(l) -1] ஒற்றை இடப்பெயர்ச்சி வினை

b) Zn(s) + CuSO4(aq) → ZnSO4(aq) + Cu(s) -2] எரிதல் வினை

c) ZnCO3(s) வெப்பம் → ZnO(s) + CO2(g) – 3] நடுநிலையாக்கல் வினை

d) C2 H4(g) + 4O2(g) → 2CO2(g) + 2H2 O(g) + வெப்பம் – 4] வெப்பச்சிதைவு வினை

a b c d

A) 3 1 4 2

B) 4 1 2 3

C) 2 4 3 1

D) 3 4 2 1

82. பொருத்துக

a) HCl (4%) – 1] 0

b) வயிற்றில் (இரைப்பை) உள்ள அமிலம் – 2] 1

c) எலுமிச்சை சாறு – 3] 2

d) வினிகர் (அசிட்டிக் அமிலம்) – 4] 3

a b c d

A) 3 1 4 2

B) 4 1 2 3

C) 2 4 3 1

D) 1 2 3 4

83. பொருத்துக

a) ஆரஞ்சு பழம் – 1] 3.5

b) சோடாநீர், திராட்சை – 2] 4.5

c) புளித்த பால் – 3] 4

d) தூய பால் – 4] 5

a b c d

A) 3 1 4 2

B) 4 1 2 3

C) 2 4 3 1

D) 1 3 2 4

84. பொருத்துக

a) மனிதனின் உமிழ்நீர் – 1] 6-8

b) தூய நீர் – 2] 7

c) தக்காளிச் சாறு – 3] 5.6

d) காஃபி – 4] 4.2

a b c d

A) 3 1 4 2

B) 1 2 4 3

C) 2 4 3 1

D) 1 3 2 4

85. பொருத்துக

a) இரத்த பிளாஸ்மா – 1] 7.4

b) முட்டை வெள்ளைக் கரு – 2] 8

c) கடல் நீர் – 3] 9

d) சமையல் சோடா – 4] 8

a b c d

A) 3 1 4 2

B) 1 2 4 3

C) 2 4 3 1

D) 1 3 2 4

86. பொருத்துக

a) அமில நீக்கி – 1] 10

b) அம்மோனியா நீர் – 2] 11

c) சுண்ணாம்பு நீர் – 3] 12

d) வடிகால் சுத்தமாக்கும் பொருள் – 4] 13

a b c d

A) 3 1 4 2

B) 1 2 3 4

C) 2 4 3 1

D) 1 3 2 4

87. பொருத்துக

a) எரிசோடா (4% NaOH) – 1] 14

b) மெக்னீசியா பால்மம் – 2] 10

c) மனித ரத்தம் – 3] 7.35 முதல் 7.45

d) மழை நீர் – 4] 7

a b c d

A) 3 1 4 2

B) 1 2 3 4

C) 2 4 3 1

D) 1 3 2 4

88. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] சில்வர் உலோகம் நைட்ரிக் அமிலத்தில் ஹைடிரஜன் வாயுவை இடப்பெயர்ச்சி செய்ய வல்லது.

2] SO3, CO2, NO2 போன்ற வாயுக்கள் கரைந்துள்ள மழைநீரின் pH மதிப்பு 7-யை விட குறைவாக இருக்கும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: சில்வர் உலோகம் நைட்ரிக் அமிலத்தில் ஹைடிரஜன் வாயுவை இடப்பெயர்ச்சி செய்யாது. SO3, CO2, NO2 போன்ற வாயுக்கள் கரைந்துள்ள மழைநீரின் pH மதிப்பு 7-யை விட குறைவாக இருக்கும்.

89. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] ஒரு மீள் வினையின்சமநிலையில் வினைவினை மற்றும் வினைபடு பொருள்களின் செறிவு சமமாக இருக்கும்.

2] ஒரு மீள்வினையின் ஏதேனும் ஒரு வினைவிளை பொருளை அவ்வப்பொழுது நீக்கும் பொழுது அவ்வினையின் விளைச்சல் அதிகரிக்கிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஒரு மீள் வினையின்சமநிலையில் வினைவினை மற்றும் வினைபடு பொருள்களின் செறிவில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஒரு மீள்வினையின் ஏதேனும் ஒரு வினைவிளை பொருளை அவ்வப்பொழுது நீக்கும் பொழுது அவ்வினையின் விளைச்சல் அதிகரிக்கிறது.

90. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] pH தாளை ஒரு கரைசலில் நனைக்கும் பொழுது மஞ்சளாக மாறுகிறது. எனவே அக்கரைசல் காரத்தன்மை கொண்டது.

2] எரிதல் வினைகள் வெப்ப உமிழ் வினைகளாகும்.

3] காப்பர் சல்பேட் கரைசலில் இருந்து லெட் காப்பரை இடப்பெயர்ச்சி செய்கிறது.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: pH கரைசல் நடுநிலையானது. எரிதல் வினைகள் வெப்ப உமிழ் வினைகளாகும். காப்பர் சல்பேட் கரைசலில் இருந்து லெட் காப்பரை இடப்பெயர்ச்சி செய்கிறது.

91. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] அமிலம் மற்றும் காரத்திற்கு இடையேயான வினை நடுநிலையாக்கல் என்று அழைக்கப்படுகிறது.

2] ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் லித்தியம் உலோகம் வினை புரியும்போது ஹைட்ரஜன் வெளியேறுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: அமிலம் மற்றும் காரத்திற்கு இடையேயான வினை நடுநிலையாக்கல் என்று அழைக்கப்படுகிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் லித்தியம் உலோகம் வினை புரியும்போது ஹைட்ரஜன் வெளியேறுகிறது.

92. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] பனிக்கட்டி உருகுதல் செயலில் நிகழும் சமநிலை இயற்பியல் சமநிலை என்று அழைக்கப்படுகிறது.

2] ஒரு பழச்சாரின் pH மதிப்பு 5.6. இதனுடன் நீர்த்தசுண்ணாம்பு சேர்க்கும் போது இதன் pH மதிப்பு குறைகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பனிக்கட்டி உருகுதல் செயலில் நிகழும் சமநிலை இயற்பியல் சமநிலை என்று அழைக்கப்படுகிறது. ஒரு பழச்சாரின் pH மதிப்பு 5.6. இதனுடன் நீர்த்தசுண்ணாம்பு சேர்க்கும் போது இதன் pH மதிப்பு அதிகமாகிறது.

93. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] மின்னாற்பகுப்பு என்பது சிதைவடைதல் வகை வினையாகும்.

2] தொகுப்பு வினைகளில் உருவாகும் வினை விளை பொருள்களின் எண்ணிக்கை இரண்டு.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்னாற்பகுப்பு என்பது சிதைவடைதல் வகை வினையாகும். தொகுப்பு வினைகளில் உருவாகும் வினை விளை பொருள்களின் எண்ணிக்கை ஒன்று ஆகும்.

94. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] வேதி எரிமலை என்பது சிதைவடைதல் வகை வினைக்கு எடுத்துக்காட்டாகும். 2] ஹைடிரஜன் (H+ ) அயனி நீரில் கரைவதால் உருவாகும் அயனி ஹைட்ரோனியம் என்று அழைக்கப்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: வேதி எரிமலை என்பது சிதைவடைதல் வகை வினைக்கு எடுத்துக்காட்டாகும். ஹைடிரஜன் (H+ ) அயனி நீரில் கரைவதால் உருவாகும் அயனி ஹைட்ரோனியம் என்று அழைக்கப்படுகிறது.

95. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] மெக்னீசிய பாலிமத்தின் pH மதிப்பு 10. இது கார தன்மை உடையது

2] ஆக்ஜிசனை சேர்க்க கூடிய வினை ஆக்ஜிசனேற்ற வினை எனப்படும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மெக்னீசிய பாலிமத்தின் pH மதிப்பு 10. இது கார தன்மை உடையது. ஆக்ஜிசனை சேர்க்க கூடிய வினை ஆக்ஜிசனேற்ற வினை எனப்படும்.

96. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] எல்லா ஒளிச்சிதைவு வினைகள் வெப்பக் கொள்வினைகள் ஆகும். ™

2] இரட்டை இடப்பெயர்ச்சி பரஸ்பர அயனிகள் பரிமாற்றத்தினால் நிகழ்கின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: எல்லா ஒளிச்சிதைவு வினைகள் வெப்பக் கொள்வினைகள் ஆகும். இரட்டை இடப்பெயர்ச்சி பரஸ்பர அயனிகள் பரிமாற்றத்தினால் நிகழ்கின்றன.

97. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] வீழ்படிவு வினைகள் கரையாத உப்பினை விளை பொருளாக தருகின்றன.

2] ஒரு மூடிய அமைப்பில் சமநிலை நடைபெற இயலும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: வீழ்படிவு வினைகள் கரையாத உப்பினை விளை பொருளாக தருகின்றன. ஒரு மூடிய அமைப்பில் சமநிலை நடைபெற இயலும்.

98. எரிதல் வினையின் வினைபடு பொருள்களில் ஒன்று ____________

A) நைட்ரஜன்

B) ஆக்ஜிசன்

C) ஹைட்ரஜன்

D) கார்பன் டை ஆக்ஸைடு

விளக்கம்: எரிதல் வினையின் வினைபடு பொருள்களில் ஒன்று ஆக்சிஜனாகும்.

99. கூற்று(A): வீடுகளில் சமைக்க LPG எனப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவைப் பயன்படுத்துகிறோம்.

காரணம்(R): LPGன் பகுதிப்பொருள்கள் ஆக்சிஜனோடு சேர்ந்து எரிவதால் வெப்பமும், தீச்சுவாலையும் உண்டாகின்றன.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: வீடுகளில் சமைக்க LPG எனப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவைப் பயன்படுத்துகிறோம். LPGன் பகுதிப்பொருள்கள் ஆக்சிஜனோடு சேர்ந்து எரிவதால் வெப்பமும், தீச்சுவாலையும் உண்டாகின்றன.

100. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] LPG என்பது புரோப்பேன், பியூட்டேன் மற்றும் புரோப்பலீன் போன்ற ஹைட்ரோகார்பன் வாயுக்களின் கலவையாகும்.

2] அனைத்து ஹைட்ரோ கார்பன்களும் ஆக்சிஜனுடன் எரிந்து கார்பன்-டை-ஆக்சைடையும் நீரையும் தருகின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: LPG என்பது புரோப்பேன், பியூட்டேன் மற்றும் புரோப்பலீன் போன்ற ஹைட்ரோகார்பன் வாயுக்களின் கலவையாகும். அனைத்து ஹைட்ரோ கார்பன்களும் ஆக்சிஜனுடன் எரிந்து கார்பன்-டை-ஆக்சைடையும் நீரையும் தருகின்றன.

101. C3H8(g)(g)+ 5 O2 (g)→

A) 3CO2 (g)+ 4H2O(g) + வெப்பம்

B) 3 CO2 (g)+ H2(g),

C) CO+ H2 (g),

D) CO2 (g)+ 4 H2

விளக்கம்: C3H8(g)(g)+ 5 O2 (g)→ 3CO2 (g)+ 4H2O(g) + வெப்பம்.

10th Science Lesson 11 Questions in Tamil

11] கார்பனும் அதன் சேர்மங்களும்

1. கரிமச் சேர்மங்களின் பொதுப்பண்புகள் யாவை?

1] கரிமச் சேர்மங்கள் சிக்கலான அமைப்பையும், அதிக மூலக்கூறு நிறையையும் கொண்டுள்ளன.

2] கரிமச் சேர்மங்கள் பொதுவாக நீரில் கரையும்.

3] கரிமச் சேர்மங்கள் எளிதில் எரியக் கூடிய தன்மை உடையவை.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 3 சரி 2 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: கரிமச் சேர்மங்கள் சிக்கலான அமைப்பையும், அதிக மூலக்கூறு நிறையையும் கொண்டுள்ளன. கரிமச் சேர்மங்கள் பொதுவாக நீரில் கரையாது. கரிமச் சேர்மங்கள் எளிதில் எரியக் கூடிய தன்மை உடையவை.

2. கரிமச் சேர்மங்களின் பொதுப்பண்புகள் யாவை?

1] பெரும்பாலான கரிமச் சேர்மங்கள் இயற்கையாகவே சகப் பிணைப்பைக் கொண்டுள்ளன.

2] இவை எளிதில் ஆவியாகும் தன்மையுடையது.

3] பல்வேறு கரிமச் சேர்மங்களை ஆய்வகத்தில் தயாரிக்கலாம்.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 3 சரி 2 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: பெரும்பாலான கரிமச் சேர்மங்கள் இயற்கையாகவே சகப் பிணைப்பைக் கொண்டுள்ளன. இவை எளிதில் ஆவியாகும் தன்மையுடையது. பல்வேறு கரிமச் சேர்மங்களை ஆய்வகத்தில் தயாரிக்கலாம்.

3. கூற்று(A): கரிமச் சேர்மங்களை கனிமச் சேர்மங்களோடு ஒப்பிடுக்கையில் குறைவாகவே வினை புரிகின்றன.

காரணம்(R): இதனால் அவற்றின் வினை வேகமும் குறைவாகவே இருக்கிறது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: கரிமச் சேர்மங்களை கனிமச் சேர்மங்களோடு ஒப்பிடுக்கையில் குறைவாகவே வினை புரிகின்றன. இதனால் அவற்றின் வினை வேகமும் குறைவாகவே இருக்கிறது.

4. கூற்று(A): கரிமச் சேர்மங்கள் மாற்றியப்பண்பை பெற்றுள்ளன.

காரணம்(R): ஒரே மூலக்வறு வாய்ப்பாட்டை பெற்றுள்ள கரிமச் சேர்மங்கள் அதனுடைய இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளில் மாறுகின்றன.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: கரிமச் சேர்மங்கள் மாற்றியப்பண்பை பெற்றுள்ளன. அதாவது ஒரே மூலக்வறு வாய்ப்பாட்டை பெற்றுள்ள கரிமச் சேர்மங்கள் அதனுடைய இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளில் மாறுகின்றன.

5. கரிமச் சேர்மங்கள் கனிமச் சேர்மங்களைவிட ____________ உருகுநிலையும் கொதிநிலையையும் கொண்டுள்ளன.

A) மிக அதிகமான

B) மிக குறைவான

C) குறைவான

D) அதிகமான

விளக்கம்: கரிமச் சேர்மங்கள் கனிமச் சேர்மங்களைவிட குறைவான உருகுநிலையும் கொதிநிலையையும் கொண்டுள்ளன.

6. அனைத்து கார்பன் அணுக்களும் ஒற்றைப்பிணைப்பில் அமைந்திருந்தால், அது ____________

A) நிறைவுறா சேர்மம்

B) நிறைவுற்ற சேர்மம்

C) அகப்பிணைப்பு சேர்மம்

D) புறப்பிணைப்பு சேர்மம்

விளக்கம்: அனைத்து கார்பன் அணுக்களும் ஒற்றைப்பிணைப்பில் அமைந்திருந்தால், அது நிறைவுற்ற சேர்மம் என்று அழைக்கப்படுகிறது.

7. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிணைப்பில் அமைந்திருந்தால், அது ____________

A) நிறைவுறா சேர்மம்

B) நிறைவுற்ற சேர்மம்

C) அகப்பிணைப்பு சேர்மம்

D) புறப்பிணைப்பு சேர்மம்

விளக்கம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிணைப்பு (இரட்டை பிணைப்பு அல்லது முப்பிணைப்பு அமைந்திருந்தால்) அது நிறைவுறா சேர்மம் என்று அழைக்கப்படுகிறது.

8. கார்பனும் ஹைட்ரஜனும் நேர்க் கோட்டு அமைப்பில் சங்கிலித் தொடரில் இணையும் அமைப்பு____________

A) வளையச் சேர்மம்

B) வளையமற்ற சேர்மம்

C) திறந்தவெளி சேர்மம்

D) நேர்கோட்டு சேர்மம்

விளக்கம்: வளையமற்ற அல்லது திறந்த அமைப்புடைய சேர்மங்கள் இவற்றில் கார்பனும் ஹைட்ரஜனும் நேர்க் கோட்டு அமைப்பில் சங்கிலித் தொடரில் இணைகின்றன.

9. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] கரிமச் சேர்மங்களின் கார்பன் சங்கிலித் தொடர் மூடியிருந்தால் அவை வளையச் சேர்மங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

2] ஒரு சங்கிலித் தொடரில் கார்பன் அணுக்கள் மட்டும் அமைந்திருந்தால் அவை கார்போ (ஓரின) வளையச் சேர்மங்கள் என அழைக்கப்படுகின்றன.

3] கார்பன் அணுக்களோடு ஆக்சிஜன், நைட்ரஜன், சல்பர் போன்ற மற்ற சில அணுக்களும் சங்கிலித் தொடரில் இணைந்திருந்தால் அவை பல்கோண வளையச் சேர்மங்கள் என அழைக்கப்படுகின்றன.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: கரிமச் சேர்மங்களின் கார்பன் சங்கிலித் தொடர் மூடியிருந்தால் அவை வளையச் சேர்மங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு சங்கிலித் தொடரில் கார்பன் அணுக்கள் மட்டும் அமைந்திருந்தால் அவை கார்போ (ஓரின) வளையச் சேர்மங்கள் என அழைக்கப்படுகின்றன. கார்பன் அணுக்களோடு ஆக்சிஜன், நைட்ரஜன், சல்பர் போன்ற மற்ற சில அணுக்களும் சங்கிலித் தொடரில் இணைந்திருந்தால் அவை பல்லின வளையச் சேர்மங்கள் என அழைக்கப்படுகின்றன.

10. நிறைவுற்ற அல்லது நிறைவுறாத, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கார்போ வளையங்களைப் பெற்றிருக்கும் சேர்மம் ____________

A) அலிசைக்கிளிக்

B) அரோமேட்டிக்

C) நிறைவுறா சேர்மம்

D) நிறைவுற்ற சேர்மம்

விளக்கம்: அலிசைக்கிளிக் சேர்மம் நிறைவுற்ற அல்லது நிறைவுறாத, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கார்போ வளையங்களைப் பெற்றிருக்கும்.

11. அரோமேட்டிக் சேர்மங்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ____________ வளையங்களை பெற்றிருக்கும்.

A) கார்போ

B) பென்சீன்

C) ஹைட்ரோ

D) பீயூட்டேன்

விளக்கம்: அரோமேட்டிக் சேர்மங்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பென்சீன் வளையங்களை பெற்றிருக்கும். (வளையத்தில் இரண்டு கார்பன் அணுக்களுக்கு இடையில் ஒன்றுவிட்ட இரட்டைப் பிணைப்பு இருக்கும்).

12. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] பல்லின வளையச் சேர்மங்கள் இரண்டு வகைப்படும்.

2] அவை அரோமேட்டிக் சேர்மங்கள் மற்றும் அலிசைக்கிளிக் சேர்மங்கள் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: கார்போ வளைய சேர்மங்கள் இரண்டு வகைப்படும். அவை அரோமேட்டிக் சேர்மங்கள் மற்றும் அலிசைக்கிளிக் சேர்மங்கள் ஆகும்.

13. கார்பன் மற்றும் ஹைட்ரஜன் மட்டுமே இணைந்து உருவாகும் சேர்மங்கள் ____________

A) அல்கேன்கள்

B) அல்கைன்கள்

c) ஹைட்ரோ கார்பன்கள்

D) அல்கீன்கள்

விளக்கம்: கார்பன் மற்றும் ஹைட்ரஜன் மட்டுமே இணைந்து உருவாகும் சேர்மங்கள் ஹைட்ரோ கார்பன்கள் ஆகும்.

14. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] அல்கேன்கள் கார்பன்களுக்கிடையே இரட்டை பிணைப்பினை பெற்றுள்ளன.

2] Cn H2n-2 என்ற பொது வாய்ப்பாட்டினைக் கொண்டுள்ளன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: அல்கேன்கள் கார்பன்களுக்கிடையே ஒற்றைப் பிணைப்பினை பெற்றுள்ளன. Cn H2n+2 என்ற பொது வாய்ப்பாட்டினைக் கொண்டுள்ளன.

15. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] அல்கீன்கள் கார்பன்களுக்கிடையே ஒற்றைப் பிணைப்பினை பெற்றுள்ளன.

2] Cn H2n+2 என்ற பொது வாய்ப்பாட்டினைக் கொண்டுள்ளன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: அல்கீன்கள் கார்பன்களுக்கிடையே இரட்டை பிணைப்பினை பெற்றுளன. Cn H2n என்ற பொது வாய்ப்பாட்டினைக் கொண்டுள்ளன.

16. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] அல்கைன்கள் பொது வாய்ப்பாட்டினைக் கொண்டு கார்பன்களுக்கிடையே முப்பிணைப்பினை பெற்றுள்ளன.

2] Cn H2n+2 என்ற பொது வாய்ப்பாட்டினைக் கொண்டுள்ளன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: அல்கைன்கள் பொது வாய்ப்பாட்டினைக் கொண்டு கார்பன்களுக்கிடையே முப்பிணைப்பினை பெற்றுள்ளன. Cn H2n-2 என்ற பொது வாய்ப்பாட்டினைக் கொண்டுள்ளன.

17. அல்கேன்கள் முதல் உறுப்பு____________

A) எத்திலீன்

B) அசிட்டிலின்

C) மீத்தேன்

D) ஈத்தேன்

விளக்கம்: n = 1 என எடுத்துக்கொள்ளும் போது அதன் அல்கேன்கள் முதல் உறுப்பான மீத்தேன் (CH4) கிடைக்கிறது.

18. அல்கீன்களின் முதல் உறுப்பு____________

A) எத்திலீன்

B) அசிட்டிலின்

C) மீத்தேன்

D) ஈத்தேன்

விளக்கம்: n = 2 என எடுத்துக்கொள்ளும் போது அதன் அல்கேன்கள் முதல் உறுப்பான எத்திலீன் C2H4 கிடைக்கிறது.

19. அல்கைன்களின் முதல் உறுப்பு____________

A) எத்திலீன்

B) அசிட்டிலின்

C) மீத்தேன்

D) ஈத்தேன்

விளக்கம்: அல்கைன்கள் முதல் உறுப்பான அசிட்டிலின் C2 H2 ஆகும்.

20. எத்திலீன் மற்றும் அசிட்டிலின் ____________ வகை கரிம சேர்மங்கள் ஆகும்.

A) அலிசைக்கிளிக்

B) அரோமேட்டிக்

C) நிறைவுறா சேர்மம்

D) நிறைவுற்ற சேர்மம்

விளக்கம்: எத்திலீன் மற்றும் அசிட்டிலின் நிறைவுறா கரிம சேர்மங்கள் ஆகும்.

21. குறைவான கார்பன் எண்ணிக்கையைக் கொண்டிருக்கும் ஹைட்ரோ கார்பன்கள் அறை வெப்பநிலையில் ____________ ஆக உள்ளன.

A) திட

B) திரவ

C) வாயு

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: குறைவான கார்பன் எண்ணிக்கையைக் கொண்டிருக்கும் ஹைட்ரோ கார்பன்கள் அறை வெப்பநிலையில் வாயுக்களாக உள்ளன.

22. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] ஹைட்ரோ கார்பன்கள் நிறம் மற்றும் மணம் இல்லாதவைகள் .

2] கார்பன் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ஹைட்ரோகார்பனின் கொதிநிலை அதிகரிக்கும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஹைட்ரோ கார்பன்கள் நிறம் மற்றும் மணம் இல்லாதவைகள் . கார்பன் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ஹைட்ரோகார்பனின் கொதிநிலை அதிகரிக்கும்.

23. ஹைட்ரோ கார்பன்கள் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து ____________மற்றும் ____________ கொடுக்கின்றன.

A) கார்பன் டை ஆக்ஸைடு, வாயு

B) கார்பன் டை ஆக்ஸைடு, நீர்

C) ஆக்ஸைடு, நீர்

D) ஆக்ஸைடு , வாயு

விளக்கம்: ஹைட்ரோ கார்பன்கள் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து இவை கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீரை கொடுக்கின்றன.

24. மற்ற ஹைட்ரோ கார்பனுடன் ஒப்பிடும்போது____________ குறைவான வினை திறன் கொண்டவை.

A) அல்கைன்கள்

B) அல்கேன்கள்

C) அல்கீன்கள்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மற்ற ஹைட்ரோ கார்பனுடன் ஒப்பிடும்போது அல்கேன்கள் குறைவான வினை திறன் கொண்டவை.

25. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] அல்கேன்கள் நிறைவுறா கரிமச் சேர்மங்கள், அல்கீன்களும் அல்கைன்களும் நிறைவுற்ற கரிமச் சேர்மங்கள் ஆகும்.

2] ஹைட்ரோ கார்பன்கள் நீரில் கரையாது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: அல்கேன்கள் நிறைவுற்ற கரிமச் சேர்மங்கள், அல்கீன்களும் அல்கைன்களும் நிறைவுறா கரிமச் சேர்மங்கள் ஆகும். ஹைட்ரோ கார்பன்கள் நீரில் கரையாது.

26. படிவரிசை சேர்மன்களின் பண்புகளில் எவை சரியானவை?

1] எல்லாச் சேர்மங்களும் ஒத்த வேதிவினைகளில் ஈடுபடுகின்றன.

2] எல்லாச் சேர்மங்களையும் ஒரே முறையில் தயாரிக்க இயலும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: எல்லாச் சேர்மங்களும் ஒத்த வேதிவினைகளில் ஈடுபடுகின்றன. எல்லாச் சேர்மங்களையும் ஒரே முறையில் தயாரிக்க இயலும்.

27. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] ஒரு படி வரிசையில் உள்ள அனைத்து சேர்மங்களும் ஒரே வகை தனிமங்களையும், வினைச்செயல் தொகுதிகளையும் பெற்றிருக்காது.

2] மூலக்கூறுநிறையின் அதிகரிப்பைப் பொறுத்து சேர்மங்களின் இயற்பண்புகள் ஒழுங்கான முறையில் மாறுகின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஒரு படி வரிசையில் உள்ள அனைத்து சேர்மங்களும் ஒரே வகை தனிமங்களையும், வினைச்செயல் தொகுதிகளையும் பெற்றிருக்கும். மூலக்கூறுநிறையின் அதிகரிப்பைப் பொறுத்து சேர்மங்களின் இயற்பண்புகள் ஒழுங்கான முறையில் மாறுகின்றன.

28. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] ஒரு படிவரிசையிலுள்ள அனைத்து சேர்மங்களையும் ஒரே பொது வாய்ப்பாட்டினால் குறிப்பிட இயலும். எ.கா அல்கேன்கள் CnH2n+2

2] ஒரு படி வரிசையில் உள்ள அடுத்தடுத்த சேர்மங்கள் மெத்திலீன் CH2. என்ற பொது வேறுபாட்டிலும் வேறுபடுகின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஒரு படிவரிசையிலுள்ள அனைத்து சேர்மங்களையும் ஒரே பொது வாய்ப்பாட்டினால் குறிப்பிட இயலும். எ.கா அல்கேன்கள் CnH2n-2.ஒரு படி வரிசையில் உள்ள அடுத்தடுத்த சேர்மங்கள் மெத்திலீன் CH2. என்ற பொது வேறுபாட்டிலும் வேறுபடுகின்றன.

29. ஒரு படி வரிசையில் உள்ள அடுத்தடுத்த சேர்மங்கள் மூலக்கூறுநிறை ____________ல் வேறுபடுகின்றன.

A) 15

B) 14

C) 16

D) 17

விளக்கம்: ஒரு படி வரிசையில் உள்ள அடுத்தடுத்த சேர்மங்கள் மூலக்கூறுநிறை 14 amu (அணுநிறை அலகிலும்) வேறுபடுகின்றன.

30. கார்பனின் கட்டமைப்பை விளக்கும் அடிப்படை அலகு ____________.

A) அடிப்படைச் சொல்

B) முன்னொட்டு

C) பின்னொட்டு

D) IUPAC சொல்

விளக்கம்: அடிப்படைச் சொல் கார்பனின் கட்டமைப்பை விளக்கும் அடிப்படை அலகு ஆகும்.

31. கீழ்க்கண்டவற்றுள் பெயரிடுதலின் கூறுகளை அடையாளம் காண்க?

1] இது சேர்மத்தின் சங்கிலி தொடரில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

2] கார்பன் சங்கிலியில் இருக்கும் கார்பன் எண்ணிக்கையை பொறுத்து கிரேக்க எண் பெயரை பயன்படுத்தி (முதல் நான்கை தவிர) வருவிக்கப்படுகிறது.

A) அடிப்படைச் சொல்

B) முன்னொட்டு

C) பின்னொட்டு

D) IUPAC சொல்

விளக்கம்: இது சேர்மத்தின் சங்கிலி தொடரில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. கார்பன் சங்கிலியில் இருக்கும் கார்பன் எண்ணிக்கையை பொறுத்து கிரேக்க எண் பெயரை பயன்படுத்தி (முதல் நான்கை தவிர) வருவிக்கப்படுகிறது.

32. கரிமச் சேர்மத்தின் பெயரின் இறுதியில் வருவது ____________.

A) அடிப்படைச் சொல்

B) முன்னொட்டு

C) பின்னொட்டு

D) IUPAC சொல்

விளக்கம்: பின்னொட்டு கரிமச் சேர்மத்தின் பெயரின் இறுதியில் வருவது.

33. பொதுவாக ஆல்கஹால் என்று குறிப்பிடுபடுவது____________.

A) மெத்தனால்

B) எத்தனால்

C) புரப்பனால்

D) பியூட்டனால்

விளக்கம்: எத்தனால் பொதுவாக ஆல்கஹால் என்று குறிப்பிடப்படுகிறது.

34. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] மெத்தனால் அனைத்து விதமான ஆல்கஹால் பானங்களிலும் உள்ளது.

2] சில இருமல் மருந்துகளிலும் மெத்தனால் உள்ளது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: எத்தனால் அனைத்து விதமான ஆல்கஹால் பானங்களிலும் சில இருமல் மருந்துகளிலும் எத்தனால் உள்ளது.

35. எத்தனால் மூலக்கூறு வாய்ப்பாடு ____________.

A) C2H5OH

B) CH5OH

C) C2H6OH

D) CH3OOH

விளக்கம்: எத்தனால் மூலக்கூறு வாய்ப்பாடு C2H5OH.

36. தொழிற்சாலைகளில் கரும்புச் சாறின் கழிவுப் பாகிலிருந்து ____________ முறையில் எத்தனால் தயாரிக்கப்படுகிறது.

A) படிக்கமாக்கல்

B) பிரித்தெடுத்தல்

C) வடிகட்டுதல்

D) நொதித்தல்

விளக்கம்: தொழிற்சாலைகளில் கரும்புச் சாறின் கழிவுப் பாகிலிருந்து நொதித்தல் முறையில் எத்தனால் தயாரிக்கப்படுகிறது.

37. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] கழிவுப்பாகு என்பது செறிவு குறைந்த கரும்புச் சர்க்கரை கரைசலிலிருந்து சர்க்கரையை படிகமாக்கும் பொழுது மீதமுள்ள ஆழ்ந்த நிறமுள்ள கூழ் போன்ற கலவையாகும்.

2] இதை நொதித்தல் முறையில் பிரித்தெடுக்க இயலாது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: கழிவுப்பாகு என்பது செறிவு மிகுந்த கரும்புச் சர்க்கரை கரைசலிலிருந்து சர்க்கரையை படிகமாக்கும் பொழுது மீதமுள்ளஆழ்ந்த நிறமுள்ள கூழ் போன்ற திரவமாகும். இதை படிகமாக்கல் முறையில் பிரித்தெடுக்க இயலாது.

38. கழிவுப்பாகில் எத்தனை சதவீதம் சுக்ரோஸ் உள்ளது?

A) 40%

B) 30%

C) 50%

D) 20%

விளக்கம்: கழிவுப்பாகில் 30% சுக்ரோஸ் உள்ளது.

39. கழிவுப்பாகிலுள்ள சர்க்கரையின் செறிவு____________ லிருந்து____________ சதவீதமாக நீரினால் நீர்க்கப்படுகிறது.

A) 8 லிருந்து 9

B) 9 லிருந்து 10

C) 8 லிருந்து 10

D) 9 லிருந்து 11

விளக்கம்: கழிவுப்பாகிலுள்ள சர்க்கரையின் செறிவு 8 லிருந்து 10 சதவீதமாக நீரினால் நீர்க்கப்படுகிறது.

40. நொதித்தலின்போது ____________க்கு தேவையான நைட்ரஜன் கலந்த உணவினைக் கழிவுப்பாகு கொண்டுள்ளது.

A) சுக்ரோஸ்

B) எத்தனால்

C) ஈஸ்ட்

D) மெத்தனால்

விளக்கம்: நொதித்தலின்போது ஈஸ்ட்டிற்க்குத் தேவையான நைட்ரஜன் கலந்த உணவினைக் கழிவுப்பாகு கொண்டுள்ளது.

41. நைட்ரஜன் அளவு குறைவாக இருப்பின், ____________ சேர்ப்பதன் மூலம் உர மூட்டப்படுகிறது.

A) ஆல்கஹால்

B) ஈஸ்ட்

C) அம்மோனியம் சல்பேட்

D) அம்மோனியம்

விளக்கம்: நைட்ரஜன் அளவு குறைவாக இருப்பின், அம்மோனியம் சல்பேட் அல்லது அம்மோனியம் பாஸ்பேட் சேர்ப்பதன் மூலம் உர மூட்டப்படுகிறது.

42. ஈஸ்ட்டிலுள்ள ____________ மற்றும் ____________ ஆகிய நொதிகள் சர்க்கரையை எத்தனாலாக மாற்றுகின்றன

A) லேக்டிக், இன்வர்டேஸ்

B) கார்பன் டை ஆக்ஸைடு, சோமாஸ்

C) சோமாஸ், இன்வர்டேஸ்,

D) இன்வர்டேஸ், சைமேஸ்

விளக்கம்: ஈஸ்ட்டிலுள்ள இன்வர்டேஸ், மற்றும் சைமேஸ் ஆகிய நொதிகள் சர்க்கரையை எத்தனாலாக மாற்றுகின்றன.

43. டிடர்ஜெண்ட் என்பவை ____________ அமிலத்தின் சோடியம் உப்பு ஆகும்.

A) கார்பாக்சிலிக் அமிலம்

B) சல்போனிக் அமிலம்

C) கார்பாக்சிலேட் அமிலம்

D) சல்பியூரிக் அமிலம்

விளக்கம்: டிடர்ஜெண்ட் என்பவை சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பு அல்லது அல்கைல் ஹைட்ரஜன் சல்பேட்டின் உப்புகள் ஆகும்.

44. பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் ஹைட்ரோ கார்பனோடு ____________ சேர்த்து டிடர்ஜெண்ட்கள் தயாரிக்கப்படுகிறது.

A) கார்பாக்சிலிக் அமிலம்

B) சல்போனிக் அமிலம்

C) கார்பாக்சிலேட் அமிலம்

D) சல்பியூரிக் அமிலம்

விளக்கம்: பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் ஹைட்ரோ கார்பனோடு சல்பியூரிக் அமிலத்தை சேர்த்து டிடர்ஜெண்ட்கள் தயாரிக்கப்படுகிறது.

45. சலவை இயந்திரங்களில் அரிப்பு ஏற்படாமல் பாதுகாக்க ____________ சேர்க்கப்படுகிறது.

A) சோடியம் சல்பேட்

B) சோடியம் சிலிக்கேட்

C) சோடியம் பெர்போரேட்

D) ஃப்ளூரெசென்ட் வெண்மை ஏற்றிகள்

விளக்கம்: சோடியம் சிலிக்கேட் : சலவை இயந்திரங்களில் அரிப்பு ஏற்படாமல் பாதுகாக்க இது சேர்க்கப்படுகிறது.

46. துணிகள் பளிச்சிடுவதற்கு ____________ சேர்க்கப்படுகிறது.

.A) சோடியம் சல்பேட்

B) சோடியம் சிலிக்கேட்

C) சோடியம் பெர்போரேட்

D) ஃப்ளூரெசென்ட் வெண்மை ஏற்றிகள்

விளக்கம்: ஃப்ளூரெசென்ட் வெண்மை ஏற்றிகள் : துணிகள் பளிச்சிடுவதற்கு இது சேர்க்கப்படுகிறது.

47. சலவையின் போது சில வகை கறைகளை நீக்க ____________ பயன்படுகிறது.

A) சோடியம் சல்பேட்

B) சோடியம் சிலிக்கேட்

C) சோடியம் பெர்போரேட்

D) ஃப்ளூரெசென்ட் வெண்மை ஏற்றிகள்

விளக்கம்: சோடியம் பெர்போரேட் : சலவையின் போது சில வகை கறைகளை நீக்க பயன்படுகிறது.

48. டிடர்ஜெண்ட் துகள் கெட்டி ஆகாமல் தடுக்க, ____________ பயன்படுகிறது.

A) சோடியம் சல்பேட்

B) சோடியம் சிலிக்கேட்

C) சோடியம் பெர்போரேட்

D) ஃப்ளூரெசென்ட் வெண்மை ஏற்றிகள்

விளக்கம்: சோடியம் சல்பேட் : டிடர்ஜெண்ட் துகள் கெட்டி ஆகாமல் தடுக்க, இது பயன்படுகிறது.

49. இரத்தம் மற்றும் காய்கறி சாறு போன்ற கறைகளை நீக்க ____________ சேர்க்கப்படுகிறது.

A) சோடியம் சல்பேட்

B) சோடியம் சிலிக்கேட்

C) சோடியம் பெர்போரேட்

D) நொதிகள்

விளக்கம்: நொதிகள் : இரத்தம் மற்றும் காய்கறி சாறு போன்ற கறைகளை நீக்க இது சேர்க்கப்படுகிறது.

50. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] ஒரு சோப்பு மூலக்கூறு வேறுபட்ட இரு வேதிப் பகுதிகளை பெற்றுள்ளன. இப்பகுதிகள் நீருடன் வேறுபட்ட முறையில் வினைபுரிகிறது.

2] ஒரு முனை சிறிய தலை போன்ற ஹைட்ரோ கார்பன் சங்கிலி தொடரையுடைய முனைவற்ற பகுதியையும், மறுமுனை பெரிய வால் போன்ற நீளமான கார்பாக்சிலேட்தொகுதி கொண்ட முனைவுள்ள பகுதியையும், பெற்றுள்ளது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஒரு சோப்பு மூலக்கூறு வேறுபட்ட இரு வேதிப் பகுதிகளை பெற்றுள்ளன. இப்பகுதிகள் நீருடன் வேறுபட்ட முறையில் வினைபுரிகிறது. ஒரு முனை சிறிய தலை போன்ற கார்பாக்சிலேட்தொகுதி கொண்ட முனைவுள்ள பகுதியையும், மறுமுனை பெரிய வால் போன்ற நீளமான ஹைட்ரோ கார்பன் சங்கிலி தொடரையுடைய முனைவற்ற பகுதியையும் பெற்றுள்ளது.

51. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] முனைவுள்ள பகுதி நீரை வெறுக்கும் பகுதியாக செயல்பட்டு ஆடைகளில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் ஆகியவற்றுடன் ஒட்டிக் கொள்கிறது.

2] முனைவற்ற பகுதி நீர் விரும்பும் பகுதியாக செயல்பட்டு நீருடன் ஒட்டிக் கொள்கிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: முனைவுள்ள பகுதி நீர் விரும்பும் பகுதியாக செயல்பட்டு நீருடன் ஒட்டிக் கொள்கிறது. முனைவற்ற பகுதி நீரை வெறுக்கும் பகுதியாக செயல்பட்டு ஆடைகளில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் ஆகியவற்றுடன் ஒட்டிக் கொள்கிறது.

52. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] நீரை வெறுக்கும் பகுதி மாசினை தன்னுள் அடக்கி கொள்கிறது.

2] நீரை விரும்பும் பகுதி மொத்த மூலக்கூறையும் நீரில் கரைய செய்கிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: நீரை வெறுக்கும் பகுதி மாசினை தன்னுள் அடக்கி கொள்கிறது. நீரை விரும்பும் பகுதி மொத்த மூலக்கூறையும் நீரில் கரைய செய்கிறது.

53. நீளச்சங்கிலி அமைப்பை உடைய ____________ அமிலங்களின் சோடியம் உப்புகளே சோப்புக்கள் ஆகும்.

A) கார்பாக்சிலிக் அமிலம்

B) சல்போனிக் அமிலம்

C) கார்பாக்சிலேட் அமிலம்

D) சல்பியூரிக் அமிலம்

விளக்கம்: நீளச்சங்கிலி அமைப்பை உடைய கார்பாக்சிலிக் அமிலங்களின் (கொழுப்பு அமிலங்கள்) சோடியம் அல்லது பொட்டாசியம் உப்புகளே சோப்புக்கள் ஆகும்.

54. சோப்பு தயாரிக்க ____________ என்ற காரத்தை பயன்படுத்துகிறார்கள்.

A) பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

B) அம்மோனியம் ஹைட்ராக்சைடு

C) கால்சியம் ஹைட்ராக்சைடு

D) சோடியம் ஹைட்ராக்சைடு

விளக்கம்: சோப்பு தயாரிக்க சோடியம் ஹைட்ராக்சைடு என்ற காரத்தை பயன்படுத்துகிறார்கள்.

55. கூற்று(A): சாதாரண சோப்பு கடின நீருடன் பயன்படுத்தப்படும் போது கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகளை வீழ் படிய செய்கிறது.

காரணம்(R): இது துணிகளின் மேற்பரப்பில் ஸ்கம் படிவை உருவாக்குகிறது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: சாதாரண சோப்பு கடின நீருடன் பயன்படுத்தப்படும் போது கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகளை வீழ் படிய செய்கிறது. இது துணிகளின் மேற்பரப்பில் ஸ்கம் படிவை உருவாக்குகிறது. எனவே சோப்பை கடின நீரில் எளிதாக பயன்படுத்த இயலாது.

56. எல்லா சமையல் எண்ணெய்களிலும் லிப்பிடுகளிலும் ____________ உள்ளது.

A) ஈதர்

B) எஸ்டர்

C) கீட்டோன்

D) ஆல்கஹால்

விளக்கம்: எல்லா சமையல் எண்ணெய்களிலும் லிப்பிடுகளிலும் எஸ்டர் உள்ளது.

57. மயக்கமூட்டி மற்றும் வலிநிவாரணியாக பயன்படுவது ____________

A) ஈதர்

B) எஸ்டர்

C) கீட்டோன்

D) ஆல்கஹால்

விளக்கம்: மயக்கமூட்டி மற்றும் வலிநிவாரணியாக ஈதர் பயன்படுகிறது.

58. கரைப்பான் மற்றும் புரைத்தடுப்பானாக பயன்படுவது____________

A) ஈதர்

B) எஸ்டர்

C) கீட்டோன்

D) ஆல்கஹால்

விளக்கம்: கரைப்பான் மற்றும் புரைத்தடுப்பானாக மற்றும் பல முக்கியமான செயற்கை பொருட்களின் மூலப்பொருட்களாக பயன்படுகிறது.

59. எத்தனாயிக் அமிலம் இயற்பியல் பண்புகளில் எவை சரியானவை?

1] எத்தனாயிக் அமிலம் நிறமற்ற, விரும்பதகாத மணமுள்ள ஒரு நீர்மம்.

2] இது கார சுவையுடையது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: எத்தனாயிக் அமிலம் நிறமற்ற, விரும்பதகாத மணமுள்ள ஒரு நீர்மம். இது புளிப்பு சுவையுடையது.

60. எத்தனாயிக் அமிலம் இயற்பியல் பண்புகளில் எவை சரியானவை?

1] இது நீருடன் எல்லா விதத்திலும் கலக்கிறது.

2] இதன் கொதிநிலை ஒத்த ஆல்கஹால், ஆல்டிஹைடுகள், கீட்டோனின் கொதிநிலையை விட குறைவு.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: இது நீருடன் எல்லா விதத்திலும் கலக்கிறது. இதனை ஒத்த ஆல்கஹால், ஆல்டிஹைடுகள், கீட்டோனின் கொதிநிலையை விட அதிகம்.

61. எத்தனாயிக் அமிலம் கொதிநிலை ____________.

A) 390 K

B) 381 K

C) 391 K

D) 392 K

விளக்கம்: எத்தனாயிக் அமிலம் கொதிநிலை 391 K ஆகும்.

62. குளிர வைக்கும் போது தூய எத்தனாயிக் அமிலம் பனிக்கட்டி போன்ற படிகங்களை உருவாக்குகிறது. எனவே இது ____________ என்று அழைக்கப்படுகிறது.

A) அசிட்டிக் அமிலம்

B) தூய அசிட்டிக் அமிலம்

C) எத்தனால்

D) தூய எத்தனால்

விளக்கம்: குளிர வைக்கும் போது தூய எத்தனாயிக் அமிலம் பனிக்கட்டி போன்ற படிகங்களை உருவாக்குகிறது. எனவே இது (கிளேசியல்) தூய அசிட்டிக் அமிலம் என்று அழைக்கப்படுகிறது.

63. எத்தனால் இயற்பியல் பண்புகளில் எவை சரியானவை?

1] எத்தனால் இனிய மணமுடைய நிறமற்ற, எரி சுவை கொண்ட ஒரு நீர்மம்.

2] இது எளிதில் ஆவியாகக் கூடியது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: எத்தனால் இனிய மணமுடைய நிறமற்ற, எரி சுவை கொண்ட ஒரு நீர்மம். இது எளிதில் ஆவியாகக் கூடியது.

64. எத்தனால் இயற்பியல் பண்புகளில் எவை சரியானவை?

1] இது நீருடன் எல்லா விகிதத்திலும் முழுவதுமாகக் கலக்கிறது.

2] இதன் கொதிநிலை 78 °C (352K). இது, அதன் ஒத்த அல்கேன்களைக் காட்டிலும் அதிகம்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: இது நீருடன் எல்லா விகிதத்திலும் முழுவதுமாகக் கலக்கிறது. இதன் கொதிநிலை 78 °C (351K). இது, அதன் ஒத்த அல்கேன்களைக் காட்டிலும் அதிகம்.

65. ஈத்தேனின் கொதிநிலை ____________

A) 183K

B) 182 K

C) 181 K

D) 184 K

விளக்கம்: ஈத்தேனின் கொதிநிலை 184 K ஆகும்.

66. பொருத்துக

a) மீத்தேன் – 1] CH4

b) ஈத்தேன் – 2] C5H12

c) புரப்பேன் – 3] C3H8

d) பியூட்டேன் – 4] C4H10

e) பென்டேண் – 5] C2H6

a b c d e

A) 3 1 2 4 5

B) 4 1 2 5 3

C) 1 5 3 4 2

D) 3 4 5 1 2

67. பொருத்துக

a) ஈத்தீன் – 1] C3H6

b) புரப்பீன் – 2] C2H4

c) பியூட்டீன் – 3] C4H8

d) பென்டீன் – 4] C5H10

a b c d

A) 3 1 2 4

B) 4 1 2 3

C) 2 1 3 4

D) 3 4 2 1

68. பொருத்துக

a) ஈத்தைன் – 1] C2H2

b) புரப்பைன் – 2] C3H4

c) பியூட்டைன் – 3] C4H6

d) பென்டைன் – 4] C5H8

a b c d

A) 3 1 2 4

B) 4 1 2 3

C) 1 2 3 4

D) 3 4 2 1

69. பொருத்துக

a) எத்தனால் – 1] CH3CH2OH

b) அசிட்டால்டிஹைடு – 2] CH3CHO

c) அசிட்டோன் – 3] CH3COCH3

d) அசிட்டிக் அமிலம் – 4] CH3COOH

e) மெத்தில் அசிட்டேட் – 5] CH3COO CH3

a b c d

A) 3 1 2 4

B) 4 1 2 3

C) 1 2 3 4

D) 3 4 2 1

70. பொருத்துக

a) ஆல்கஹால் -1] R-CHO

b) ஆல்டிஹைடு – 2] R-OH

c) கீட்டோன் – 3] R-COOR

d) ஈஸ்டர் – 4] R–CO-R

e) ஈதர் – 5] R-O-R

a b c d e

A) 3 1 2 4 5

B) 2 1 4 3 5

C) 1 5 3 4 2

D) 3 4 5 1 2

71. பொருத்துக

a) மெத்தனால் – 1] CH3OH

b) எத்தனால் – 2] CH3CH2OH

c) புரப்பனால் – 3] CH3CH2CH2OH

d) பியூட்டனால் – 4] CH3CH2CH2CH2OH

e) பென்டனால் – 5] CH3CH2CH2CH2CH2OH

a b c d e

A) 3 1 2 4 5

B) 1 2 3 4 5

C) 1 5 3 4 2

D) 3 4 5 1 2

72. பொருத்துக

a) மெத்தனேல் – 1] HCHO

b) எத்தனேல் – 2] CH3CH2 CHO

c) புரப்பனேல் – 3] CH3CHO

d) பியூட்டனேல் – 4] CH3CH2CH2CH2CHO

e) பென்டனேல் – 5] CH3CH2CH2CHO

a b c d e

A) 3 1 2 4 5

B) 1 3 2 5 4

C) 1 5 3 4 2

D) 3 4 5 1 2

73. பொருத்துக

a) மெத்தனாயிக் அமிலம் – 1] HCOOH

b) எத்தனாயிக் அமிலம் – 2] CH3COOH

c) புரப்பனாயிக் அமிலம் – 3] CH3CH2COOH

d) பியூட்டனாயிக் அமிலம் -4] CH3CH2CH2COOH

e) பென்டனாயிக் அமிலம் – 5] CH3CH2CH2 CH2COOH

a b c d e

A) 3 1 2 4 5

B) 1 2 3 4 5

C) 1 5 3 4 2

D) 3 4 5 1 2

74. கூற்று(A): நொதிகளின் மூலமாக சிக்கலான கரிமச் சேர்மங்களில் மெதுவாக வேதிவினை நிகழ்ந்து எளிய மூலக்கூறுகள் உருவாகின்றன.

காரணம்(R): இதுவே நொதித்தல் எனப்படும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: நொதிகளின் மூலமாக சிக்கலான கரிமச் சேர்மங்களில் மெதுவாக வேதிவினை நிகழ்ந்து எளிய மூலக்கூறுகள் உருவாவதே நொதித்தல் எனப்படும்.

75. கூற்று(A): ஈஸ்ட் என்பது பூஞ்சை வகுப்பைச் சார்ந்த ஒரு செல் நுண்ணுயிரி ஆகும்.

காரணம்(R): பெரிய சிக்கலான கரிம வினைகளில் பூஞ்சைகளில் உள்ள நொதியானது வினை வேக மாற்றியாக செயல்படுகிறது

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஈஸ்ட் என்பது பூஞ்சை வகுப்பைச் சார்ந்த ஒரு செல் நுண்ணுயிரி ஆகும். பெரிய சிக்கலான கரிம வினைகளில் பூஞ்சைகளில் உள்ள நொதியானது வினை வேக மாற்றியாக செயல்படுகிறது.

76. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] ஒரு சேர்மத்தின் சிறப்பு பண்புகளுக்கு காரணமான அணு அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதி அச்சேர்மத்தின் வினைசெயல் தொகுதி ஆகும்.

2] IUPAC பெயரிடுதலில் கரிமச் சேர்மத்தின் கட்டமைப்பை குறிப்பிடுவது பின்னொட்டு ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஒரு சேர்மத்தின் சிறப்பு பண்புகளுக்கு காரணமான அணு அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதி அச்சேர்மத்தின் வினைசெயல் தொகுதி ஆகும். IUPAC பெயரிடுதலில் கரிமச் சேர்மத்தின் கட்டமைப்பை குறிப்பிடுவது அடிப்படை சொல் ஆகும்.

77. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] நிறைவுறா சேர்மங்கள் புரோமின் நீரை நிறமாற்றம் அடையச் செய்யும்.

2] அடர் சல்பியூரிக் அமிலத்தைக் கொண்டு எத்தனாலை நீர் நீக்கம் செய்யும் பொழுது ஈத்தீன் கிடைக்கிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: நிறைவுறா சேர்மங்கள் புரோமின் நீரை நிறமாற்றம் அடையச் செய்யும். அடர் சல்பியூரிக் அமிலத்தைக் கொண்டு எத்தனாலை நீர் நீக்கம் செய்யும் பொழுது ஈத்தீன் கிடைக்கிறது.

78. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] 100% தூய ஆல்கஹால் எரிசாராயம் என்று அழைக்கப்படுகிறது.

2] கொழுப்பு அமிலங்களை காரத்தைக் கொண்டு நீராற்பகுத்தல் சோப்பாக்குதல் எனப்படும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: 100% தூய ஆல்கஹால் தனி ஆல்கஹால் என்று அழைக்கப்படுகிறது. கொழுப்பு அமிலங்களை காரத்தைக் கொண்டு நீராற்பகுத்தல் சோப்பாக்குதல் எனப்படும்.

79. எத்தனாயிக் அமிலம் _______________ லிட்மஸ் தாளை ________________ ஆக மாற்றுகிறது.

A) சிவப்பு, நீலம்

B) நீலம், சிவப்பு

C) பழுப்பு. சிவப்பு

D) சிவப்பு, பழுப்பு

விளக்கம்: எத்தனாயிக் அமிலம் நீல லிட்மஸ் தாளை சிவப்பு ஆக மாற்றுகிறது.

80. உயிரிய சிதைவு டிடர்ஜெண்ட்கள் ________________ சங்கிலி தொடரினை உடையவை.

A) நேரான

B) எதிரான

C) கிளையான

D) வளைவான

81. பொருத்துக

a) வினைச் செயல் தொகுதி – 1] OH பென்சீன்

b) பல்லின வளைய சேர்மங்கள் – 2] பொட்டாசியம் ஸ்டிரேட்

c) நிறைவுறா சேர்மங்கள் – 3] ஆல்கஹால்

d) சோப்பு – 4] பியூரான்

e) கார்போ வளையச் சேர்மங்கள்- 5] ஈத்தீன்

a b c d e

A) 3 4 5 2 1

B) 1 2 3 4 5

C) 1 5 3 4 2

D) 3 4 5 1 2

82. கூற்று(A): கடின நீரில் சோப்பை விட டிடர்ஜெண்ட்கள் சிறப்பாக செயல் புரிகின்றன.

காரணம்(R): டிடர்ஜெண்ட்கள் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புக்களை வீழ்படிய செய்வதில்லை.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: கடின நீரில் சோப்பை விட டிடர்ஜெண்ட்கள் சிறப்பாக செயல் புரிகின்றன. டிடர்ஜெண்ட்கள் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புக்களை வீழ்படிய செய்வதில்லை.

83. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] எத்தனாயிக் அமிலம் ஒரு வலிமை மிகுந்த அமிலம் ஆகும்.

2] ஆல்கஹாலை உட்கொள்வதால் நம் மைய நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: எத்தனாயிக் அமிலம் ஒரு வலிமை குறைந்த அமிலம் ஆகும். ஆல்கஹாலை உட்கொள்வதால் நம் மைய நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.

84. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] சிவப்பு எறும்பின் கொடுக்கில் உள்ளது பார்மிக் அமிலம் ஆகும்.

2] படிவரிசையில் உள்ள சேர்மங்கள் ஒரே வினைசெயல் தொகுதியை பெற்றுள்ளன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: சிவப்பு எறும்பின் கொடுக்கில் உள்ளது பார்மிக் அமிலம் ஆகும். படிவரிசையில் உள்ள சேர்மங்கள் ஒரே வினைசெயல் தொகுதியை பெற்றுள்ளன.

85. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] எத்தனால் ஆனது ரப்பர் பாலை கெட்டிப்படுத்த பயன்படுகிறது.

2] சோப்பின் தூய்மையாக்கும் பண்பு குறைவதற்கு காரணம் கடின நீர் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: எத்தனாயிக் அமிலம் ஆனது ரப்பர் பாலை கெட்டிப்படுத்த பயன்படுகிறது. சோப்பின் தூய்மையாக்கும் பண்பு குறைவதற்கு காரணம் கடின நீர் ஆகும்.

86. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] பென்சீன் அரோமேடிக் சேர்மத்திற்கு உதாரணம் ஆகும்.

2] பியூட்ரிக் அமிலத்தின் முதன்மையான மூலம் நெய் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பென்சீன் அரோமேடிக் சேர்மத்திற்கு உதாரணம் ஆகும். பியூட்ரிக் அமிலத்தின் முதன்மையான மூலம் வெண்ணெய் ஆகும்.

87. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] எஸ்டர்கள் பழச்சாற்றின் மனமுடையவை.

2] எத்தனாயிக் அமிலத்தின் சோடியம் உப்பை கார்பாக்சில் நீக்கத்திற்கு உட்படுத்தும் போது வெளிப்படும் வாயு மீத்தேன் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: எஸ்டர்கள் பழச்சாற்றின் மனமுடையவை. எத்தனாயிக் அமிலத்தின் சோடியம் உப்பை கார்பாக்சில் நீக்கத்திற்கு உட்படுத்தும் போது வெளிப்படும் வாயு மீத்தேன் ஆகும்.

88. நீளசங்கிலி அமைப்பை உடைய கொழுப்பு அமிலங்கள் ________________ எனப்படுகிறது.

A) வினிகர்

B) டிடர்ஜென்ட்

C) உப்பு

D) சோப்பு

விளக்கம்: நீளசங்கிலி அமைப்பை உடைய கொழுப்பு அமிலங்கள் சோப்பு எனப்படுகிறது.

89. எத்தனால் சோடியத்துடன் வினைபடும் போது உருவாகும் விளைபொருள்________________

A) சோடியம் ஈத்தாக்ஸைடு

B) சோடியம் அசிடேட்

C) சோடியம் எத்தனேட்

D) சோடியம் பாஸ்பேட்

விளக்கம்: எத்தனால் சோடியத்துடன் வினைபுரிந்து சோடியம் ஈத்தாக்ஸைடையும், ஹைட்ரஜன் வாயுவையும் தருகிறது.

90. ஹேலஜன் குடும்பத்தில் உள்ள அனைத்து தனிமங்களும் ஒரே மாதிரியான ________________பெற்றுள்ளன

A) மூலக்கூறு வாய்ப்பாடு

B) இயற்பியல் பண்புகள்

C) பொதுவான வாய்ப்பாடு

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: ஹேலஜன் குடும்பத்தில் உள்ள அனைத்து தனிமங்களும் ஒரே மாதிரியான பொதுவான வாய்ப்பாடு பெற்றுள்ளன.

91. கடின நீரில்________________ ன் உப்புகள் காணப்படுகின்றன.

A) Ca, Mg

B) Fe, Ca

C) Cu, Fe

D) Cu, Ca

விளக்கம்: கடின நீரில் Ca, Mg போன்ற உப்புகள் காணப்படுகின்றன.

92. TFM என்பது ஒரு சோப்பின் எந்த பகுதிப்பொருளை குறிக்கிறது?

A) தாது உப்பு

B) வைட்டமின்

C) கொழுப்பு அமிலம்

D) கார்போஹைட்ரேட்

விளக்கம்: TFM என்றால் மொத்த கொழுப்பு பொருட்கள் ஆகும்.

93. எரிசாராயம் கொண்டுள்ளது________________ மற்றும் ________________

A) 95.5% எத்தனால் 4.5% நீர்

B) 100% தூய ஆல்ஹகால்

C) 4.5 % எத்தனால் 95.5% நீர்

D) 50% எத்தனால் 50% நீர்

விளக்கம்: எத்தனாலின் நீர்க்கரைசல் 95.5% எத்தனாலையும் 4.5% நீரையும் பெற்றுள்ளது. இது எரிசாரயம் என அழைக்கப்படுகிறது.

94. கீழ்கண்டவற்றுள் டிடர்ஜெண்ட்டை பற்றி தவறான கூற்று எது?

A) நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு அமிலத்தின் சோடிய உப்பு

B) சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பு

C) டிடர்ஜெண்ட்டின் அயனி பகுதி SO3- Na+

D) கடின நீரிலும் சிறப்பாக செயல்படும்.

95. C2H5 OH + 3 O2→2 CO2 + 3 H2O என்பது

A) எத்தனால் ஒடுக்கம்

B) எத்தனால் எரிதல்

C) எத்தனாயிக் அமிலம் ஆக்சிஜனேற்றம்

D) எத்தனேல் ஆக்சிஜனேற்றம

விளக்கம்: எத்தனால் எளிதில் எரியக்கூடிய திரவம். ஆக்சிஜனுடன் எரிந்து கார்பன் டை ஆக்சைடையும் நீரையும் தருகிறது.

96. IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை மின்னொட்டு _________

A) ஆல்

B) ஆயிக் அமிலம்

C) ஏல்

D) அல்

விளக்கம்: IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை மின்னொட்டு ஏல் ஆகும்.

97. ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3- மெத்தில்பியூட்டன் – 1 – ஆல் இது எந்த வகைச் சேர்மம்?

A) ஆல்டிஹைடு

B) கார்பாசிலிக் அமிலம்

C) கீட்டோன்

D)ஆல்கஹால்

விளக்கம்: ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3- மெத்தில்பியூட்டன் – 1 – ஆல் இது ஆல்கஹால் வகைச் சேர்மம் ஆகும்.

98. ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு C3H6அந்தத் சேர்மத்தின் வகை

A) அல்கேன்

B) அல்கீன்

C) அல்கைன்

D)ஆல்கஹால்

விளக்கம்: ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு C3H6 அந்தத் சேர்மத்தின் வகை அல்கீன் ஆகும்.

99. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] TFM இது சோப்பின் தரத்தை குறிக்க கூடிய முக்கிய அம்சமாகும்.

2] உயர்ந்த TFM பெற்றுள்ள சோப்புகள் குளியல் சோப்பாக பயன்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: TFM இது சோப்பின் தரத்தை குறிக்க கூடிய முக்கிய அம்சமாகும். உயர்ந்த TFM பெற்றுள்ள சோப்புகள் குளியல் சோப்பாக பயன்படுகிறது.

100. கூற்று(A): சோப்பை கடின நீரில் பயன்படுத்த இயலாது

காரணம்(R): சாதாரண சோப்பு கடின நீருடன் பயன்படுத்தப்படும் போது கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகளை வீழ் படிய செய்கிறது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: சாதாரண சோப்பு கடின நீருடன் பயன்படுத்தப்படும் போது கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகளை வீழ் படிய செய்கிறது. இது துணிகளின் மேற்பரப்பில் ஸ்கம் படிவை உருவாக்குகிறது. எனவே சோப்பை கடின நீரில் எளிதாக பயன்படுத்த இயலாது.

101. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] எத்தனால் எளிதில் எரியக்கூடிய திரவம்.

2] எத்தனால் வாகனங்களிலுள்ள குளிர்விப்பானில் தண்ணீர் உறைவதைத் தடுப்பதில் பயன்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: எத்தனால் எளிதில் எரியக்கூடிய திரவம். எத்தனால் வாகனங்களிலுள்ள குளிர்விப்பானில் தண்ணீர் உறைவதைத் தடுப்பதில் பயன்படுகிறது.

102. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] பெட்ரோல் மற்றும் எத்தனால் கலந்த கலவை (எத்தனால் மற்றும் பிரிடின் கலந்தவை) தயாரிப்பதில் எத்தனால் பயன்படுகிறது.

2] இயல்புத் தன்மை இழந்த ஆல்கஹால் (ஆற்றல் ஆல்கஹால்) தயாரிப்பதில் எத்தனால் பயன்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பெட்ரோல் மற்றும் எத்தனால் கலந்த கலவை (ஆற்றல் ஆல்கஹால்), இயல்புத் தன்மை இழந்த ஆல்கஹால் (எத்தனால் மற்றும் பிரிடின் கலந்தவை) இவை தயாரிப்பதில் எத்தனால் பயன்படுகிறது.

103. பொருத்துக

a) 1 – 1] மீத்__

b) 2 – 2] ஈத் –

c) 3 – 3] புரப் –

d) 4 – 4] பியூட் –

e) 5 – 5] பென்ட்-

a b c d e

A) 1 2 3 4 5

B) 1 2 3 4 5

C) 1 5 3 4 2

D) 3 4 5 1 2

104. பொருத்துக

a) 6 – 1] ஹெக்ஸ்-

b) 7 – 2] ஹெப்ட்-

c) 8 – 3] ஆக்ட்-

d) 9 – 4] டெக் –

e) 10 – 5] நான் –

a b c d e

A) 1 2 3 5 4

B) 1 2 3 4 5

C) 1 5 3 4 2

D) 3 4 5 1 2

10th Science Lesson 12 Questions in Tamil

12] தாவர உள்ளமைப்பியல்

1. தாவர உள்ளமைப்பியலின் தந்தை

A. சாக்ஸ்

B. ராபின் ஹில்

C. நெகமய்யாக்ரூ

D. கால்வின்

விளக்கம்: தாவர உள்ளமைப்பியல் பற்றிய தொகுப்பை முதன் முதலில் வெளியிட்டவர் நெகமய்யாக்ரூ என்பவர் இவரே உள்ளமைப்பியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். தாவரத்தின் உட்புற அமைப்பைப் பற்றி படிப்ப து உள்ளமைப்பியல் (Anatomy) எனப்படும்.(Ana – as under, Tamnein = to cut)

2. ____ அடிப்படையில் திசுக்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது

A. பகுப்படையும் திறன்

B. அமைப்பு

C. பணிசெய்யும் திறன்

D. நிலைப்பு தன்மை

விளக்கம்: அமைப்பு மற்றும் தோற்றத்தில் ஒன்றுபட்ட அல்லது வேறுபட்ட ஒரு குறிப்பிட்ட பணியைச்செய்யும் செல்களின் தொகுப்பே ‘திசுக்கள்’எனப்படும். பகுப்படையும் திறனின் அடிப்படையில் திசுக்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள து. அவை 1. ஆக்குத் திசுக்கள் 2. நிலைத்தத் திசுக்கள்

3. அடிப்படை திசுத் தொகுப்பு மற்றொரு பெயர்

A. வாஸ்குலார் திசுத் தொகுப்பு

B. தளத்திசுத் தொகுப்பு

C. தோல் திசுத் தொகுப்பு

D. நிலைத்தத் திசு தொகுப்பு

விளக்கம்: சாக்ஸ் (1875) என்பவர் தாவரங்களில் உள்ள திசுத் தொகுப்புகளை மூன்று வகைகளாக வகைப்படுத்தியுள்ளார். (i) தோல் திசுத் தொகுப்பு அல்லது புறத்தோல் திசுத் தொகுப்பு (ii) அடிப்படை அல்லது தளத்திசுத் தொகுப்பு (iii) வாஸ்குலார் திசுத் தொகுப்பு

3. பொருத்துக

a. புறத்தோல் துளை 1. ஸ்டோமேட்டா

b. புறத்தோல் வளரிகள் 2. டிரைகோம்கள்

c. கியூட்டிக்கிள் 3. மெழுகுப்படலம்

d. திசுத் தொகுப்பு 4. சாக்ஸ்

a b c d

A. 3 4 2 1

B. 4 3 1 2

C. 1 2 3 4

D. 1 2 4 3

விளக்கம்: புறத்தோல் திசுத் தொகுப்பில், புறத்தோல், புறத்தோல் துளை மற்றும் புறத்தோல் வளரிகள் ஆகியவை உள்ளன. ஒரு தாவரத்தின் வெளிப்புற அடுக்கு புறத்தோலாகும். இவற்றில் பல சிறிய துளைகள் காணப்படுகின்றன. இவை புறத்தோல் துளை (ஸ்டோமேட்டா) எனப்படும். தண்டு மற்றும் இலைகளின் வெளிப்புற சுவரில் கியூட்டிக்கிள் என்ற மெழுகுப்படலம் காணப்படுகிறது. கியூட்டிக்கிள் நீராவிப்போக்கினை தடுக்கிறது. புறத்தோலில் பல செல்களாலான வளரிகள் (டிரைகோம்கள்) மற்றும் வேர்த்தூவிகள் காணப்படுகின்றன. புறத்தோல் திசுவின் பணிகள் புறத்தோல் உட்புறத் திசுக்களைப் பாதுகாக்கிறது. புறத்தோல் துளைகள் நீராவிப்போக்கு நடைபெற உதவுகின்றன. வேர்த்தூவிகள் நீர் மற்றும் கனிமங்களை உறிஞ்ச பயன்படுகின்றன.

5. அடிப்படை அல்லது தளத்திசுத்தொகுப்பில் உள்ளவை

A. புறணி, அகத்தோல்

B. பெரிசைக்கிள்

C. பித்

D. இவை அனைத்தும்

விளக்கம்: புறத்தோலும் வாஸ்குலார் திசுக்களும் நீங்கலாக உள்ள அனைத்து திசுக்களும் இத்திசுத் தொகுப்பில் அடங்கும். இதில் 1. புறணி, 2. அகத்தோல் 3. பெரிசைக்கிள், 4. பித் ஆகியவை உள்ளன.

6. ______ திசுத் தொகுப்பில் சைலம் மற்றும் புளோயம் என இரண்டு கடத்து திசுக்கள் உள்ளன.

A. வாஸ்குலார்

B. தளத்

C. தோல்

D. நிலைத்தத்

விளக்கம்: வாஸ்குலார் திசுத் தொகுப்பில் சைலம் மற்றும் புளோயம் என இரண்டு கடத்து திசுக்கள் உள்ளன. சைலம் நீர் மற்றும் கனிமங்களை தாவரத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் கடத்துகிறது. புளோயம் உணவுப் பொருள்களை தாவரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்துகிறது.

7. சைலமும் புளோயமும் அடுத்தடுத்து வெவ்வேறு ஆரங்களில் அமைந்துள்ள வாஸ்குலார்கற்றை

A. ஒன்றிணைந்தவை

B. வேர்

C. ஆரப்போக்கு அமைந்தவை

D. B மற்றும் C

விளக்கம்: மூன்று வகையான வாஸ்குலார் கற்றைகள் உள்ளன. (i) ஆரப்போக்கு அமைந்தவை (ii) ஒன்றிணைந்தவை (iii) சூழ்ந்தமைந்தவை

ஆரப்போக்கு அமைந்த வாஸ்குலார்கற்றை சைலமும் புளோயமும் அடுத்தடுத்து வெவ்வேறு ஆரங்களில் அமைந்துள்ளன. எ.கா வேர்

8. கூற்று 1: ஒன்றிணைந்த வாஸ்குலார்கற்றையில் சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் ஒரு கற்றையில் அமைந்துள்ளன.

கூற்று 2: இவற்றில் இரு வகைகள் உள்ளன. ஒருங்கமைந்தவை இருபக்க ஒருங்கமைந்தவை

A. கூற்று 1 சரி 2 தவறு

B. கூற்று 2 சரி 1 தவறு

C. இரண்டும் சரி

D. இரண்டும் தவறு

விளக்கம்: ஒருங்கமைந்தவை: சைலம் மையப்பகுதியை நோக்கியும் புளோயம் வெளிப்புறத்தை நோக்கியும் அமைந்துள்ளன. இருபக்க ஒருங்கமைந்தவை: இவ்வகை வாஸ்குலார் கற்றையில் சைலத்திற்கு வெளிப்பக்கமும் உள்பக்கமும் புளோயம் காணப்படுகிறது

9. திறந்த ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றையில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படும் மூடிய ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றையில் கேம்பியம் காணப்படாது

A. கூற்று 1 சரி 2 தவறு

B. கூற்று 2 சரி 1 தவறு

C. இரண்டும் சரி

D. இரண்டும் தவறு

விளக்கம்: சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்பட்டால் அவை திறந்த ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை என்றும் (எ.கா இருவிதையிலைத் தாவர தண்டு) கேம்பியம் காணப்படவில்லை என்றால் மூடிய ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை என்றும் அழைக்கப்படும். (எ.கா ஒருவிதையிலைத் தாவர தண்டு)

10. பொருத்துக

a. இருபக்க ஒருங்கமைந்தவை 1. எண்டார்க்

b. சைலம் சூழ் வாஸ்குலார்கற்றை 2. பெரணிகள்

c. புளோயம் சூழ் வாஸ்குலார்கற்றை 3. டிரசீனா

d. உள்நோக்கிய சைலம் 4. குகர்பிட்டா

a b c d

A. 3 4 2 1

B. 4 3 2 1

C. 1 2 3 4

D. 1 2 4 3

விளக்கம்: i) இருபக்க ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றையில் சைலத்திற்கு வெளிப்பக்கமும் உள்பக்கமும் புளோயம் காணப்படுகிறது. (எ.கா குகர்பிட்டா) ii) சூழ்ந்தமைந்த வாஸ்குலார்கற்றையில் சைலத்தைச் சூழ்ந்து புளோயமோ அல்லது புளோயத்தைச் சூழ்ந்து சைலமோ காணப்படும். 1. சைலம் சூழ் வாஸ்குலார்கற்றை – சைலம் புளோயத்தை முழுவதுமாக சூழ்ந்து காணப்படும். எ.கா டிரசீனா 2. புளோயம் சூழ் வாஸ்குலார்கற்றை -புளோயம் சைலத்தை முழுவதுமாக சூழ்ந்து காணப்படுகிறது. எ.கா பெரணிகள் உள்நோக்கிய சைலம் (எண்டார்க்) வெளிநோக்கிய சைலம் (எக்ஸார்க்)

11. கூற்று 1: புரோட்டோசைலம் மையத்தை நோக்கியும் மெட்டாசைலம் வெளிப்புறத்தை நோக்கியும் காணப்படுவது எண்டார்க் கூற்று 2: புரோட்டோசைலம் வெளிப்புறத்தை நோக்கியும் மெட்டாசைலம் மையத்தை நோக்கியும் காணப்படுவது எக்ஸார்க்

A. கூற்று 1 சரி 2 தவறு

B. கூற்று 2 சரி 1 தவறு

C. இரண்டும் சரி

D. இரண்டும் தவறு

விளக்கம்: உள்நோக்கிய சைலம் (எண்டார்க்) எ.கா தண்டு, வெளிநோக்கிய சைலம் (எக்ஸார்க்) எ.கா வேர்.

12. பொருத்துக

a. இருவிதையிலைத் தாவரவேர் 1. சோளம்

b. ஒருவிதையிலைத் தாவரவேர் 2. அவரை

c. இருவிதையிலை மேல்கீழ் வேறுபாடுகொண்ட இலை 3. புல்

d. ஒருவிதையிலை இருபுறமும் ஒத்த அமைப்புடைய இலை 4. மா

a b c d

A. 2 1 4 3

B. 4 3 2 1

C. 1 2 3 4

D. 1 2 4 3

13. கூற்று 1: ஒருவிதையிலைத் தாவரவேரின் அகத்தோலில் ஆரச்சுவர்களிலும் உட்புற கிடைமட்ட சுவர்களிலும் காஸ்பேரியன் பட்டைகள் காணப்படுகிறது. புரோட்டோசைலக் கூறுகளுக்கு எதிராக அகத்தோலில் இந்த காஸ்பேரியன் பட்டைகள் காணப்படவில்லை. இச்செல்கள் வழிச்செல்கள் என அழைக்கப்படுகிறது. கூற்று 2: இருவிதையிலைத் தாவரவேரின் அகத்தோலில் காஸ்பேரியன் பட்டைகள் மற்றும் வழிச் செல்கள் காணப்படுகின்றன.

A. கூற்று 1 சரி 2 தவறு

B. கூற்று 2 சரி 1 தவறு

C. இரண்டும் சரி

D. இரண்டும் தவறு

விளக்கம்: இருவிதையிலைத் தாவரவேரின் அகத்தோல்: புறணியின் கடைசி அடுக்கு அகத்தோலாகும். இது ஒரு வரிசையில் அமைந்த நெருக்கமான பீப்பாய் வடிவ செல்களால் ஆனது. இதன் ஆரச்சுவர்களிலும் உட்புற கிடைமட்ட சுவர்களிலும் காஸ்பேரியன் பட்டைகள் காணப்படுகிறது. புரோட்டோசைலக் கூறுகளுக்கு எதிராக அகத்தோலில் இந்த காஸ்பேரியன் பட்டைகள் காணப்படவில்லை. இச்செல்கள் வழிச்செல்கள் என அழைக்கப்படுகிறது. புறணியிலிருந்து நீர் மற்றும் இதர பொருட்கள் வழிச்செல்கள் வழியாக சைலத்தை அடைகின்றன. ஒருவிதையிலைத் தாவரவேரின் அகத்தோல்: புறணியின் கடைசியடுக்கு அகத்தோல் ஆகும். அகத்தோலில் காஸ்பேரியன் பட்டைகள் மற்றும் வழிச் செல்கள் காணப்படுகின்றன. காஸ்பேரியன் பட்டைகள் சூபரின் என்ற பொருளால் ஆன பட்டைகளாகும்.

14. ஒருவிதையிலைத் தாவரவேரின் எபிபிளமா மெல்லிய சுவருடைய ஒரு அடுக்காலான _____ செல்களால் ஆனது.

A. பாரன்கைமா

B. கோலன்கைமா

C. ஸ்க்ளீரன்கைமா

D. இவை அனைத்தும்

விளக்கம்: இருவிதையிலைத் தாவரவேரின் எபிபிளமா: வேரின் வெளிப்புற அடுக்கு எபிபிளமா அல்லது ரைசோடெர்மிஸ் எனப்படும். இதில் புறத்தோல் துளைகள் மற்றும் கியூடிக்கிள் காணப்படவில்லை. ஒரு செல்லால் ஆன வேர்த்தூவிகள் காணப்படுகிறது. இது ரைசோடெர்மிஸ் அல்லது பைலிபெரஸ் அடுக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவிதையிலைத் தாவரவேரின் (எபிபிளமா அல்லது ரைசோடெர்மிஸ்) வெளிப்புற அடுக்கு மெல்லிய சுவருடைய ஒரு அடுக்காலான பாரன்கைமா செல்களால் ஆனது. இதில் புறத்தோல்துளைகள் மற்றும் கியூட்டிக்கிள் காணப்படவில்லை. வேர்த்தூவிகள் மண்ணிலிருந்து நீர் மற்றும் கனிம உப்புக்களை உறிஞ்சுகின்றன. இவ்வடுக்கு உட்புறத்திசுக்களைப் பாதுகாக்கிறது.

15. இருவிதையிலைத் தாவரவேரின் ஒரு செல்லால் ஆன வேர்த்தூவிகள்

A. ரைசோடெர்மிஸ்

B. பைலிபெரஸ் அடுக்கு

C. A அல்லது B

D. கியூட்டிக்கிள்

விளக்கம்: இருவிதையிலைத் தாவரவேரின் ஒரு செல்லால் ஆன வேர்த்தூவிகள் காணப்படுகிறது. இது ரைசோடெர்மிஸ் அல்லது பைலிபெரஸ் அடுக்கு என்றும் அழைக்கப்படுகிறது

16. இரு/ஒரு விதையிலைத் தாவரவேரின் நீர் மற்றும் உணவுப் பொருட்களை சேமிக்கும் பகுதி

A. ஸ்டீல்

B. பித்

C. புறணி

D. வாஸ்குலார்த் தொகுப்பு

விளக்கம்: புறணி: இது பல அடுக்கு செல் இடைவெளிகளுடன் கூடிய நெருக்கமின்றி அமைந்த பாரன்கைமா செல்களால் ஆனது. இப்பகுதி நீர் மற்றும் உணவுப் பொருட்களை சேமிக்கிறது.

17. இரு/ஒரு விதையிலைத் தாவரவேரின் ஸ்டீல் இவற்றை கொண்டுள்ளது

A. பெரிசைக்கிள்

B. வாஸ்குலார்த் தொகுப்புகள்

C. பித்

D. இவை அனைத்தும்

விளக்கம்: ஸ்டீல்: அகத்தோலுக்கு உட்புறமாக காணப்படும் அனைத்து பகுதிகளும் ஸ்டீல் எனப்படுகிறது. இதில் பெரிசைக்கிள், வாஸ்குலார் கற்றைகள் மற்றும் பித் ஆகியவை அடங்கியுள்ளன.

18. இரு/ஒரு விதையிலைத் தாவரவேரில் பக்கவாட்டு வேர்கள் இதிலிருந்து தோன்றுகிறது.

A. பெரிசைக்கிள்

B. வாஸ்குலார்த் தொகுப்புகள்

C. பித்

D. ஸ்டீல்

விளக்கம்: பெரிசைக்கிள் அகத்தோலுக்கு உட்புறமாக காணப்படும் ஒரு அடுக்கு பாரன்கைமா செல்களாகும். பக்கவேர்கள் இதிலிருந்து தான் தோன்றுகின்றன.

19. இருவிதையிலைத் தாவரவேரில் சைலம்

A. வெளிநோக்கியவை, நான்குமுனை கொண்டவை

B. வெளிநோக்கியவை, பலமுனை கொண்டவை

C. உள்நோக்கியவை, பலமுனை கொண்டவை

D. உள்நோக்கியவை, நான்குமுனை கொண்டவை

விளக்கம்: வாஸ்குலார் கற்றைகள் ஆரப்போக்கு அமைவில் உள்ளன. சைலம் வெளிநோக்கியவை மற்றும் நான்குமுனை கொண்டவை. சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையே பாரன்கைமாவால் ஆன இணைப்புத்திசு உள்ளது.

20. ஒரு விதையிலைத் தாவரவேரில் வாஸ்குலார் திசுக்கள் ____ இணைப்புத்திசு கொண்டவை

A. பாரன்கைமா

B. ஸ்கிளிரன்கைமா

C. A மற்றும் B

D. A அல்லது B

விளக்கம்: வாஸ்குலார் திசுக்கள் ஆரப்போக்கு அமைவில் உள்ளன. பலமுனைகளைக் கொண்ட புரோட்டோசைல கூறுகள் காணப்படுவதால் இவை பலமுனை சைலம் எனப்படும். சைலம் வெளிநோக்கியவை. ஸ்கிளிரன்கைமாவாலான இணைப்புத்திசு உள்ளது.

21. இருவிதையிலைத் தாவரவேரில் இதன் செல்களில் தரசம் (ஸ்டார்ச்) போன்ற பொருள்கள் சேமிக்கப்பட்டுள்ளன.

A. பெரிசைக்கிள்

B. வாஸ்குலார்த் தொகுப்புகள்

C. பித்

D. ஸ்டீல்

விளக்கம்: இருவிதையிலைத் தாவரவேரின் இளம் வேர்களில் நடுவில் பித் காணப்படும். முதிர்ந்த வேர்களில் பித் காணப்படுவதில்லை. ஒருவிதையிலைத் தாவரவேரின் மையப்பகுதியில் பித் காணப்படுகிறது. இது செல் இடைவெளிகளுடைய பாரன்கைமா செல்களால் ஆனது. இந்த செல்களில் தரசம் (ஸ்டார்ச்) போன்ற பொருள்கள் சேமிக்கப்பட்டுள்ளன.

22. கூற்று 1: இருவிதையிலைத் தாவரத்தண்டின் புறத்தோலின் பணி உட்புறத்திசுவை பாதுகாப்பதாகும். கூற்று 2: ஒருவிதையிலைத் தாவரத்தண்டில் புறத்தோல் துளைகள் குறைவாக காணப்படுகின்றன. A. கூற்று 1 சரி 2 தவறு

B. கூற்று 2 சரி 1 தவறு

C. இரண்டும் சரி

D. இரண்டும் தவறு

விளக்கம்: இருவிதையிலைத் தாவரத்தண்டின் புறத்தோல்: இது வெளிப்புற அடுக்காகும். இது ஓரடுக்காலான பாரன்கைமா செல்களாலானது. இதன் வெளிப்புறத்தில் கியூடிக்கிள் படலம் காணப்படுகிறது. புறத்தோலின் பணி உட்புறத்திசுவை பாதுகாப்பதாகும். ஒரு விதையிலைத் தாவரத்தண்டின் புறத்தோல்: இது வெளிப்புற அடுக்காகும். இது ஓரடுக்கு பாரன்கைமா செல்களால் ஆனது. இதன் வெளிப்புறச் சுவரில் கியூடிக்கிள் படிந்துள்ளது. பல செல் தூவிகள் காணப்படவில்லை. புறத்தோல் துளைகள் குறைவாக காணப்படுகின்றன.

23. இருவிதையிலைத் தாவரத்தண்டின் மையப்புறணியின் பணி

A. தாவரங்களுக்கு உறுதி

B. ஒளிச்சேர்க்கை

C. காற்று பரிமாற்றம்

D. உணவு சேமித்தல்

விளக்கம்: புறணி மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. (i) புறத்தோலடித்தோல்: இது 3 முதல் 6 அடுக்குகளால் ஆன கோலன்கைமா செல்களால் ஆனது. இவ்வடுக்கு தாவரங்களுக்கு உறுதியைத் தருகிறது. (ii) மையப்புறணி: இது ஒரு சில அடுக்கு குளோரன்கைமா செல்களால் ஆனது. இதில் பசுங்கணிகங்கள் காணப்படுவதால் ஒளிச்சேர்க்கை பணியை மேற்கொள்கிறது. (iii) உட்புற புறணி: புறணியின் உட்புறப் பகுதியில் பாரன்கைமா செல்கள் சில அடுக்குகள் காணப்படுகிறது. இதன் பணி காற்று பரிமாற்றம் மற்றும் உணவு சேமித்தலாகும்.

24. ஒருவிதையிலைத் தாவரத்தண்டின் புறத்தோலடித்தோல் சில அடுக்கு ஸ்கிளிரன்கைமா செல்களால் ஆனது இது

A. தாவரங்களுக்கு உறுதி

B. ஒளிச்சேர்க்கை

C. காற்று பரிமாற்றம்

D. உணவு சேமித்தல்

விளக்கம்: புறத்தோலடித்தோல் சில அடுக்கு ஸ்கிளிரன்கைமா செல்களால் ஆனது. இப்பகுதியின் இடையிடையே குளோரன்கைமா செல்கள் உள்ளன. ஸ்கிளிரன்கைமா தாவரங்களுக்கு உறுதியளிக்கிறது.

25. இருவிதையிலைத் தாவரத்தண்டின் புறணியின் கடைசி அடுக்கு

A. அகத்தோல்

B. தரச அடுக்கு

C. ஸ்டீல்

D. A அல்லது B

விளக்கம்: புறணியின் கடைசி அடுக்கு அகத்தோலாகும். இது ஓரடுக்கு பீப்பாய் வடிவ செல்களால் ஆனது. இதில் தரசம் (ஸ்டார்ச்) காணப்படுவதால் தரச அடுக்கு எனவும் அழைக்கப்படுகிறது.

26. இருவிதையிலைத் தாவரத்தண்டில் கற்றைத் தொப்பி எனப்படுவது எது

A. ஸ்டீல்

B. பாரன்கைமா செல்

C. ஸ்கிளிரன்கைமா திட்டுக்கள்

D. வாஸ்குலார் கற்றைகள்

விளக்கம்: அகத்தோலுக்கு உட்புறமாக அமைந்த தண்டின் மையப்பகுதி ஸ்டீல் ஆகும். இதில் பெரிசைக்கிள், வாஸ்குலார் கற்றைகள் மற்றும் பித் காணப்படுகின்றன. பெரிசைக்கிள்: அகத்தோலுக்கும் வாஸ்குலார் கற்றைக்கும் இடையில் காணப்படும். பல அடுக்கு பாரன்கைமா செல்களால் ஆன பகுதியாகும். இதன் இடையிடையே ஸ்கிளிரன்கைமாவால் ஆன திட்டுக்கள் காணப்படுகின்றன இவை கற்றைத் தொப்பி என்றழைக்கப்படுகிறது.

27. கூற்று 1: இருவிதையிலைத் தாவரத்தண்டில் வாஸ்குலார் கற்றைகள் ஒன்றிணைந்தவை, ஒருங்கமைந்தவை, திறந்தவை மற்றும் உள்நோக்கு சைலம் கொண்டவை. கூற்று 2: ஒருவிதையிலைத் தாவரத்தண்டில் வாஸ்குலார் கற்றைகள் ஒன்றிணைந்த, ஒருங்கமைந்த, மூடிய மற்றும் உள்நோக்கிய சைலம் கொண்டவை. கூற்று 3: ஒருவிதையிலைத் தாவரத்தண்டில் மண்டை ஓட்டு வடிவ வாஸ்குலார் கற்றைகள் தளத்திசுவில் சிதறிக் காணப்படுகின்றன.

A. கூற்று 1, 2 சரி 3 தவறு

B. கூற்று 3 சரி 1, 2 தவறு

C. அனைத்தும் சரி

D. அனைத்தும் தவறு

விளக்கம்: இருவிதையிலைத் தாவரத்தண்டில் வாஸ்குலார் கற்றைகள் ஒன்றிணைந்தவை, ஒருங்கமைந்தவை, திறந்தவை மற்றும் உள்நோக்கு சைலம் கொண்டவை. ஒருவிதையிலைத் தாவரத்தண்டில் வாஸ்குலார்கற்றை: மண்டை ஓட்டு வடிவ வாஸ்குலார் கற்றைகள் தளத்திசுவில் சிதறிக் காணப்படுகின்றன. வாஸ்குலார் கற்றைகள் ஒன்றிணைந்த, ஒருங்கமைந்த, மூடிய மற்றும் உள்நோக்கிய சைலம் கொண்டவை. ஒவ்வொரு வாஸ்குலார் கற்றையைச் சுற்றியும் ஸ்கிளிரன்கைமாவாலான கற்றை உறை உள்ளது.

28. இதன் தளத்திசு அகத்தோல், புறணி, பெரிசைக்கிள், பித் என வேறுபட்டு காணப்படவில்லை.

A. இருவிதையிலைத் தாவரத்தண்டு

B. ஒருவிதையிலைத் தாவரத்தண்டு

C. ஒரு விதையிலைத் தாவரவேர்

D. இரு விதையிலைத் தாவரவேர்

விளக்கம்: ஒருவிதையிலைத் தாவரத்தண்டின் தளத்திசு: புறத்தோலடித்தோலுக்கு உட்புறமாக உள்ள அனைத்து பகுதிகளும் தளத்திசு எனப்படும். இவை அகத்தோல், புறணி, பெரிசைக்கிள், பித் என வேறுபட்டு காணப்படவில்லை.

29. புரோட்டோசைல இடைவெளி இதில் ஏற்படுகிறது

A. இருவிதையிலைத் தாவரத்தண்டு

B. ஒருவிதையிலைத் தாவரத்தண்டு

C. ஒரு விதையிலைத் தாவரவேர்

D. இரு விதையிலைத் தாவரவேர்

விளக்கம்: ஒருவிதையிலைத் தாவரத்தண்டு சைலக்குழாய்கள் ஆங்கில எழுத்து‘Y’ வடிவில் அமைந்துள்ளது. முதிர்ந்த வாஸ்குலார் கற்றையில் சில புரோட்டோசைலக் கூறுகள் சிதைவடைவதால் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. இதற்கு புரோட்டோசைல இடைவெளி என்று பெயர். புளோயம்: புளோயம் சல்லடைக் குழாய் கூறுகள், துணைச்செல்கள் மற்றும் பாரன்கைமாவினைக் கொண்டது. புளோயம் நார்கள் காணப்படவில்லை.

30. கூற்று 1 : ஒருவிதையிலைத் தாவரத்தண்டில் மையத்தில் பித் காணப்படவில்லை. கூற்று 2: இருவிதையிலைத் தாவரத்தண்டில் பாரன்கைமாவால் ஆன மையப்பகுதி பித் ஆகும்.

A. கூற்று 1 சரி 2 தவறு

B. கூற்று 2 சரி 1 தவறு

C. இரண்டும் சரி

D. இரண்டும் தவறு

விளக்கம்: இருவிதையிலைத் தாவரத்தண்டில் பித்: செல் இடைவெளிகளுடன் காணப்படும் பாரன்கைமாவால் ஆன மையப்பகுதி பித் ஆகும். இதன் பணி உணவுப் பொருட்களைச் சேமிப்பதாகும். ஒருவிதையிலைத் தாவரத்தண்டின் மையத்தில் பித் காணப்படவில்லை.

31. இருவிதையிலைத் தாவர இலையில் பல இலைத்துளைகள் மற்றும் ஒவ்வொரு இலைத்துளையும் பசுங்கணிகத்துடன் கூடிய இரண்டு காப்பு செல் எங்கு அமைந்துள்ளது

A. மேல்புறத்தோல்

B. கீழ்புறத்தோல்

C. A மற்றும் B

D. மேல்கீழ் புறத்தோலின் இடையில்

விளக்கம்: மேல்புறத்தோல்: ஓரடுக்கு நெருக்கமான பாரன்கைமா செல்களால் ஆனது. மேல்புறத்தோலின் வெளிப்புறத்தில் கியூடிக்கிள் படலம் உள்ளது. இலைத்துளைகள் குறைவான எண்ணிக்கையில் காணப்படுகின்றன. கீழ்புறத்தோல்: வெளிப்புறத்தில் கியூடிக்கிளுடன் ஓரடுக்கு நெருக்கமான பாரன்கைமா செல்களால் ஆன அடுக்கு காணப்படுகிறது. இதில் பல இலைத்துளைகள் உள்ளன. ஒவ்வொரு இலைத்துளையும் பசுங்கணிகத்துடன் கூடிய இரண்டு காப்பு செல்களால் சூழப்பட்டுள்ளது. இலைத்துளைகள் நீராவிப்போக்கு நடைபெற உதவி புரிகின்றன.

32. கூற்று 1: இருவிதையிலைத் தாவரவேர் இரண்டாம் நிலை வளர்ச்சி உண்டு. இரண்டாம் நிலை வளர்ச்சியின் பொழுது மட்டும் கேம்பியம் காணப்படுகிறது. இணைப்புத்திசு பாரன்கைமா கூற்று 2: ஒருவிதையிலைத் தாவரவேர் கேம்பியம் காணப்படவில்லை. இணைப்புத்திசு ஸ்கிளிரன்கைமா. இரண்டாம் நிலை வளர்ச்சி இல்லை

A. கூற்று 1 சரி 2 தவறு

B. கூற்று 2 சரி 1 தவறு

C. இரண்டும் சரி

D. இரண்டும் தவறு

விளக்கம்:

33. கூற்று 1 : இருவிதையிலைத் தாவரதண்டு இரண்டாம் நிலை வளர்ச்சி,மெடுல்லரி கதிர்கள் உண்டு.

கூற்று 2: ஒருவிதையிலைத் தாவரதண்டு இரண்டாம் நிலை வளர்ச்சி பெரும்பாலும் இல்லை மெடுல்லரி கதிர்கள் இல்லை

A. கூற்று 1 சரி 2 தவறு

B. கூற்று 2 சரி 1 தவறு

C. இரண்டும் சரி

D. இரண்டும் தவறு

விளக்கம்:

34. ஒருவிதையிலைத் தாவர இலையின் மேல்புறத்தோலில் மெல்லிய சுவருடன் பெரிதாக உள்ள செல்கள்

A. ஸ்டோமேட்டா

B. புல்லிபார்ம்

C. பாலிசேட்

D. ஸ்பாஞ்சி

விளக்கம்: புறத்தோல்: மேல்புறத்தோல் மற்றும் கீழ்ப்புறத்தோல் காணப்படுகிறது. புறத்தோலானது பாரன்கைமா செல்களால் ஆனது. இரண்டு புறத்தோலின் வெளிப்புறமும் கியூட்டிக்கிள் படலமும், புறத்தோல் துளை (ஸ்டோமேட்டா) களும் உள்ளன. மேல்புறத்தோலின் சில செல்கள் மெல்லிய சுவருடன் பெரிதாக உள்ளது. இவை புல்லிபார்ம் செல்கள் எனப்படுகின்றன.

35. இருவிதையிலைத் தாவர இலையிடைத்திசுவில் காணப்படும் செல்

A. பாலிசேட் பாரன்கைமா

B. ஸ்பாஞ்சி பாரன்கைா

C. ஸ்க்ளீரன்கைமா

D. A மற்றும் B

விளக்கம்: இலையிடைத்திசு: மேல்புறத்தோலுக்கும் கீழ்புறத்தோலுக்கும் இடையே காணப்படும் தளத்திசு இலையிடைத்திசு அல்லது மீசோபில் எனப்படும். இதில் பாலிசேட் பாரன்கைமா மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைா என இரு வகை செல்கள் உள்ளன.

36. பாலிசேட் பாரன்கைமா மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா பணி முறையே

A. ஒளிச்சேர்க்கை, வாயு பரிமாற்றம்

B. தாவரங்களுக்கு உறுதி, வாயு பரிமாற்றம்

C. தாவரங்களுக்கு உறுதி, ஒளிச்சேர்க்கை

D. ஒளிச்சேர்க்கை, தாவரங்களுக்கு உறுதி

விளக்கம்: பாலிசேட் பாரன்கைமா: மேல்புறத்தோலுக்கு கீழே காணப்படுகிறது. நெருக்கமாக அமைந்த நீளமான செல்கள், அதிக பசுங்கணிகங்களுடன் காணப்படுகிறது. இச்செல்கள் ஒளிச்சேர்க்கை பணியை மேற்கொள்கின்றன. ஸ்பாஞ்சி பாரன்கைமா: இவ்வடுக்கு பாலிசேட் பாரன்கைமாவிற்கு கீழே உள்ளது. இதில் கோளவடிவ அல்லது உருளையான அல்லது ஒழுங்கற்ற வடிவம் கொண்ட செல்கள் நெருக்கமின்றி செல் இடைவெளிகளுடன் அமைந்துள்ளன. இது வாயு பரிமாற்றத்திற்கு உதவுகிறது.

37. கூற்று 1: இருவிதையிலைத் தாவர இலையிடைத்திசுவில் பாலிசேட் மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என வேறுபாடின்றி காணப்படுகிறது. கூற்று 2: இருவிதையிலைத் தாவர இலையிடைத்திசுவில் செல் இடைவெளிகளுடன், பசுங்கணிகங்களுடன் கூடிய ஒழுங்கற்ற செல்கள் காணப்படுகின்றன

A. கூற்று 1 சரி 2 தவறு

B. கூற்று 2 சரி 1 தவறு

C. இரண்டும் சரி

D. இரண்டும் தவறு

விளக்கம்: ஒருவிதையிலைத் தாவர இலையிடைத்திசு: மேல்புறத்தோலுக்கும் கீழ்புறத்தோலுக்கும் இடையே உள்ள தளத்திசு இலையிடைத்திசு எனப்படும். இலையிடைத்திசு பாலிசேட் மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என வேறுபாடின்றி காணப்படுகிறது. செல் இடைவெளிகளுடன், பசுங்கணிகங்களுடன் கூடிய ஒழுங்கற்ற செல்கள் காணப்படுகின்றன.

38. _____ வாஸ்குலார் கற்றையில் சைலம் மேல்புறத்தோலை நோக்கியும் புளோயம் கீழ்புறத்தோலை நோக்கியும் அமைந்துள்ளது

A. ஒருவிதையிலைத் தாவர இலை

B. இருவிதையிலைத் தாவர இலை

C. A மற்றும் B

D. எதுவுமில்லை

விளக்கம்: இருவிதையிலைத் தாவர இலை: வாஸ்குலார் கற்றைகள் மைய நரம்பில் மற்றும் பிற நரம்புப் பகுதிகளில் அமைந்துள்ளது. வாஸ்குலார்கற்றைகள், ஒன்றிணைந்தவை. ஒருங்கமைந்தவை மற்றும் மூடியவை. ஒவ்வொரு வாஸ்குலார் கற்றையைச் சுற்றிலும் பாரன்கைமாவால் ஆன கற்றை உறை உள்ளது. வாஸ்குலார் கற்றையில் சைலம் மேல்புறத்தோலை நோக்கியும், புளோயம் கீழ்புறத்தோலை நோக்கியும் அமைந்துள்ளது. ஒருவிதையிலைத் தாவர இலை: வாஸ்குலார் கற்றைகள் அளவில் சிறியதும் பெரியதுமான பல வாஸ்குலார் கற்றைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு வாஸ்குலார் கற்றையைச் சுற்றிலும் பாரன்கைமா செல்களால் ஆன கற்றை உறை உள்ளது. வாஸ்குலார் கற்றை ஒன்றிணைந்தவை, ஒருங்கமைந்தவை மற்றும் மூடியவை . வாஸ்குலார் கற்றையில் சைலம் மேல்புறத்தோலை நோக்கியும் புளோயம் கீழ்புறத்தோலை நோக்கியும் அமைந்துள்ளது.

39. பொருத்துக

a. குளோரோபிளாஸ்ட் 1. பச்சை நிறமுடைய கணிகம்

b. லியூக்கோ பிளாஸ்ட் 2. வண்ணக்கணிகம்

c. குரோமோபிளாஸ்ட் 3. நிறமற்ற கணிகம்

d மேட்ரிக்ஸ் 4. ஸ்ட்ரோமா

a b c d

A. 1 2 4 3

B. 1 3 2 4

C. 2 1 3 4

D. 3 2 4 1

விளக்கம்: தாவரங்கள் மற்றும் ஆல்காக்களின் கணிகங்கள் இரட்டைச்சவ்வினால் சூழப்பட்ட நுண்ணுறுப்புகள் ஆகும். இவை உணவு உற்பத்தி மற்றும் சேமிப்பதில் ஈடுபடுகின்றன. மூன்று வகையான கணிகங்கள் உள்ளன.

40. பசுங்கணிகம் விட்டம், தடிமன் முறையே

A. 2 – 10 மைக்ரோமீட்டர், 2 – 3 மைக்ரோமீட்டர்

B. 1 – 2 மைக்ரோமீட்டர், 2 – 3 மைக்ரோமீட்டர்

C. 2 – 10 மைக்ரோமீட்டர், 1 – 2 மைக்ரோமீட்டர்

D. 0 – 10 மைக்ரோமீட்டர், 1 – 2 மைக்ரோமீட்டர்

விளக்கம்: பச்சைய நிறமிகளை (chlorophyII) கொண்டுள்ள கணிகம் பசுங்கணிகம். பசுங்கணிகம் 2 – 10 மைக்ரோமீட்டர் விட்டமும் 1 – 2 மைக்ரோமீட்டர் தடிமனும் கொண்ட ஒரு நீள் உருண்டை வடிவ செல் நுண்ணுறுப்பாகும்

41. பசுங்கணிகத்தில் புரதச் சேர்க்கைக்கு தேவையான DNA, 70S ரைபோசோம் மற்றும் பிற மூலக்கூறுகள் உள்ள இடம்

A. வெளிச்சவ்வு

B. மேட்ரிக்ஸ்

C. கிரானா

D. A மற்றும் B

விளக்கம்: பசுங்கணிகம் இடைவெளியுடன் கூடிய உள் மற்றும் வெளிச்சவ்வுகளால் சூழப்பட்டுள்ளது. ஸ்ட்ரோமா: சவ்வின் உட்புறம் மேட்ரிக்ஸ் என அழைக்கப்படும் ஸ்ட்ரோமா பகுதி உள்ளது. இதில் புரதச் சேர்க்கைக்கு தேவையான DNA, 70S ரைபோசோம் மற்றும் பிற மூலக்கூறுகள் உள்ளன.

42. பசுங்கணிகத்தில் ஸ்ட்ரோமாவில் இடைவெளியுடன் கூடிய பைபோன்ற தட்டுவடிவ அமைப்பு

A. கிரானா

B. தைலக்காய்டு

C. வெளிச்சவ்வு

D. மேட்ரிக்ஸ்

விளக்கம்: பசுங்கணிகத்தில் ஸ்ட்ரோமாவில் இடைவெளியுடன் கூடிய பைபோன்ற தட்டுவடிவ அமைப்பு காணப்படுகிறது. இதற்கு தைலக்காய்டு என்று பெயர். இவற்றில் ஒளிச்சேர்க்கை நிறமிகள் உள்ளன.

43. பசுங்கணிகத்தில் கிரானாக்கள் எதனுடன் இணைக்கப்பட்டுள்ளது

A. தைலக்காய்டு

B. மேட்ரிக்ஸ்

C. ஸ்ட்ரோமாலேமெல்லா

D. தரசம்

விளக்கம்: பசுங்கணிகத்தில் பல தைலக்காய்டுகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட நாணயம் போன்று உள்ளது. இது கிரானம் என்று அழைக்கப்படுகிறது பல கிரானாக்கள் ஒன்றோடொன்று ஸ்ட்ரோமாலேமெல்லாவால் இணைக்கப்பட்டுள்ளது.

44. பசுங்கணிகத்தின் பணிகள்

A. கொழுப்பு அமில உற்பத்தி

B. தரசம் சேமித்தல்

C. லிப்பிடுகள் சேமிப்பு

D. அனைத்தும்

விளக்கம்: பசுங்கணிகத்தின் பணிகள் 1. ஒளிச்சேர்க்கை 2. தரசம் சேமித்தல் 3. கொழுப்பு அமில உற்பத்தி 4. லிப்பிடுகள் சேமிப்பு 5. பசுங்கணிகம் உருவாக்கம்.

45. தற்சார்பு ஊட்ட உயிரினங்களான, ஆல்காக்கள், தாவரங்கள், பச்சைய நிறமிகளைக் கொண்ட பாக்டீரியங்கள் போன்றவை சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி தமக்கு வேண்டிய உணவை தாமே தயாரித்துக் கொள்ளும் நிகழ்ச்சி

A. ஒளிச்சேர்க்கை

B. லிப்பிடுகள் சேமிப்பு

C. தரசம் சேமித்தல்

D. பசுங்கணிகம் உருவாக்கம்

விளக்கம்: ஒளிச்சேர்க்கை – ஒளிச்சேர்க்கை என்பது (photo = light, synthesis = to build) தற்சார்பு ஊட்ட உயிரினங்களான, ஆல்காக்கள், தாவரங்கள், பச்சைய நிறமிகளைக் கொண்ட பாக்டீரியங்கள் போன்றவை சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி தமக்கு வேண்டிய உணவை தாமே தயாரித்துக் கொள்ளும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் நீரின் உதவியால், சூரிய ஒளியின் முன்னிலையில் பசுங்கணிகத்தில் கார்போஹைட்ரேட் தயாரிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் போது ஆக்ஸிஜன் (உயிர்வளி) வெளியேற்றப்படுகிறது

46. ஒளிச்சேர்க்கை நிறமிகள் வகைகள்

A. 1

B. 2

C. 3

D. 4

விளக்கம்: ஒளிச்சேர்க்கை நடைபெறும் இடங்கள் – பசுமையான தாவரங்களில் குறிப்பாக இலைகளில் ஒளிச்சேர்க்கையானது நடைபெறுகிறது. ஒளிச்சேர்க்கையில் ஈடுபடும் நிறமிகள் ஒளிச்சேர்க்கை நிறமிகள் எனப்படுகின்றன. இரண்டு முக்கிய நிறமிகள் உள்ளன. அவை முதன்மை நிறமிகள் மற்றும் துணை நிறிமிகள்.

47. சூரிய ஆற்றலை அதிகம் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்ட நிறமி

A. பச்சையம் b

B. பச்சையம் a

C. கரோட்டினாய்டு

D. இவை அனைத்தும்

விளக்கம்: பச்சையம் a முதன்மை நிறமியாகும். இவை சூரிய ஆற்றலை அதிகம் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டதாகும். இந்த நிறமியானது சூரிய ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றுகிறது. ஆகையால் இது வினை மையம் என்று அழைக்கப்படுகிறது. ஏனைய நிறமிகளான பச்சையம் b மற்றும் கரோட்டினாய்டு போன்றவை துணை நிறமிகள் ஆகும். இவை சூரிய ஆற்றலை கவர்ந்து முதன்மை நிறமிக்கு அனுப்பிவிடும்.முதன்மை நிறமி (வினை மையம் – பச்சையம் a) மற்றும் துணை நிறமிகள் (ஏற்பி நிறமி மூலக்கூறுகள் மையம்) இரண்டும் சேர்ந்து ஒளித்தொகுப்பு என்று அழைக்கப்படுகிறது.

48. ஒளி சார்ந்த வினை பசுங்கணிகத்தின் ____ ஒளி சாரா வினை ____ நடைபெறுகிறது.

A. கிரானாவிலும், ஸ்ட்ரோமாவிலும்

B. ஸ்ட்ரோமாவிலும், கிரானாவிலும்

C. உள் சவ்விலும், வெளிச்சவ்விலும்

D. உள் சவ்விலும், கிரானாவிலும்

விளக்கம்: ஒளிச்சேர்க்கையில் சூரிய ஒளியின் பங்கு – ஒளிச்சேர்க்கையின் முழு நிகழ்ச்சியும் பசுங்கணிகத்தின் உள்ளே நடைபெறுகிறது. ஒளி சார்ந்த வினை அல்லது ஒளி வினை பசுங்கணிகத்தின் கிரானாவிலும், ஒளி சாரா வினை அல்லது இருள்வினை பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமாவிலும் நடைபெறுகிறது.

49. ஒளி வினை யாரால் கண்டறியப்பட்டது

A. A. சாக்ஸ்

B. ராபின் ஹில்

C. நெகமய்யாக்ரூ

D. கால்வின்

விளக்கம்: ஒளிசார்ந்த வினை அல்லது ஒளி வினை ( ஹில்வினை ) இது ராபின் ஹில் (1939) என்பவரால் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இந்நிகழ்வு சூரிய ஒளியின் முன்னிலையில் தைலகாய்டு சவ்வில் நடைபெறுகிறது. ஒளிச்சேர்க்கை நிறமிகள் சூரிய ஆற்றலை ஈர்த்து ATP மற்றும் NADPH2 வை உருவாக்குகின்றன. இவை இரண்டும் இருள்வினைக்குப் பயன்படுகின்றன.

50. இருள்வினையில் CO2 எதன் உதவியுடன் கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கமடைகிறது

A. ATP

B. NADPH2

C. A மற்றும் B

D. எதுவுமில்லை

விளக்கம்: ஒளிசாரா வினை அல்லது இருள்வினை (உயிர் பொருள் உற்பத்தி நிலை ) இந்நிகழ்ச்சியின் போது ஒளிச்சார்ந்த வினையில் உண்டான ATP மற்றும் NADPH2 உதவியுடன் CO2 ஆனது கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கமடைகிறது.

51. ஒளிசாரா வினையின் போது ஒளிச்சார்ந்த வினையில் உண்டான ATP மற்றும் NADPH2 உதவியுடன் CO2 ஆனது கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கமடைகிறது. இந்நிகழ்ச்சி

A. கால்வின் சுழற்சி

B. ராபின் ஹில் சுழற்சி

C. ஒளி வினை

D. எதுவுமில்லை

விளக்கம்: வினையின் போது ஒளிச்சார்ந்த வினையில் உண்டான ATP மற்றும் NADPH2 உதவியுடன் CO2 ஆனது கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கமடைகிறது. இது பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி கால்வின் சுழற்சி எனவும் அழைக்கப்படுகிறது. இதற்கு சூரிய ஒளி தேவை இல்லை. எனவே இது இருள் வினை எனப்படும்.

52. கால்வின் நோபல் பரிசு பெற்ற வருடம்

A. 1960

B. 1963

C. 1961

D. 1941

விளக்கம்: கால்வின் சுழற்சியில் காற்றிலிருந்து CO2 ம் ஒளி வினையின் மூலம் உண்டான ATP மற்றும் NADPH2 ம் உள்நுழைகிறது. மெல்வின் கால்வின் அமெரிக்க உயிர் வேதியியலாளர் ஒளிச்சேர்க்கையின் வேதியியல் நிகழ்வுகளை கண்டறிந்தார். அதனால் இச்சுழற்சி கால்வின் சுழற்சி என பெயரிடப்பட்டது. இதற்காக இவருக்கு 1961 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

53. NADP விரிவாக்கம்

A. நிகோடினமைடு அடினைன் டை நியூக்ளியோடைடு

B. நிகோடினமைடு அடினைன் டை நீயூக்ளியோடைடு பாஸ்பேட்

C. நிகோடினமைடு அடினைன் டை நீயூக்ளியோடைடு பாஸ்பரஸ்

D. நிகோடினமைடு அடினைன் டை நீயூக்ளிக் பாஸ்பேட்

54. சுவாசித்தலின் போது குளுக்கோஸ் ஆக்ஸிகரணமடைந்து வெளியேறும் ஆற்றல் __ ல் சேமிக்கப்படுகிறது.

A. NADP

B. NAD

C. ATP

D. ADP

விளக்கம்: ஒரு செல்லானது நேரிடையாக ஆற்றலை குளுக்கோஸிலிருந்து பெற முடியாது. சுவாசித்தலின் போது குளுக்கோஸ் ஆக்ஸிகரணமடைந்து வெளியேறும் ஆற்றல் ATP யில் சேமிக்கப்படுகிறது.

55. C.N.R ராவ் அவர்கள் எந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் எரிபொருளை உற்பத்தி செய்தார்.

A. செயற்கை ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சி

B. கால்வின் சுழற்சி

C. ஹில் சுழற்சி

D. ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சி

விளக்கம்: சூரிய ஒளியைப் பயன்படுத்தி செயற்கை ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பாரத ரத்னா C.N.R ராவ் அவர்கள் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கை ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சி மூலம் ஹைட்ரஜன் எரிபொருளை உற்பத்தி செய்தார். (புதுப்பிக்கும் ஆற்றல்)

56. ஒளிச்சேர்க்கையை பாதிக்கும் உட்புறக் காரணிகள்

A. ஹார்மோன்கள்

B. வெப்ப நிலை

C. கார்போஹைட்ரேட்டின் செறிவு

D. B மற்றும் C

விளக்கம்: ஒளிச்சேர்க்கையை பாதிக்கும் உட்புறக் காரணிகள் i. நிறமிகள் ii. இலையின் வயது iii. கார்போஹைட்ரேட்டின் செறிவு iv. ஹார்மோன்கள்

57. ஒளிச்சேர்க்கையை பாதிக்கும் வெளிக்காரணிகள்

A. சூரிய ஒளி

B. CO2

C. கனிமங்கள்

D. அனைத்தும்

விளக்கம்: ஒளிச்சேர்க்கையை பாதிக்கும் வெளிக்காரணிகள் i) சூரிய ஒளி ii) கார்பன்டை ஆக்ஸைடு iii) வெப்ப நிலை iv) நீர் v) கனிமங்கள்

58. செல்லின் ஆற்றல் நாணயத்தை கண்டறிந்தவர்

A. கால்வின்

B. ராபின் ஹில்

C. கோலிக்கர்

D. டார்வின்

விளக்கம்: செல்லில் காணப்படும் இழைபோன்ற அல்லது துகள்போன்ற சைட்டோபிளாச நுண்ணுறுப்பு மைட்டோகாண்ட்ரியாவாகும். இவற்றை முதன்முதலில் 1857 ஆம் ஆண்டு கோலிக்கர் என்பவர் வரித்தசைச் செல்களில் கண்டறிந்தார். செல்லின் ஆற்றல் நாணயம் என அழைக்கப்படும். ATP மைட்டோகாண்ட்ரியாவில் உற்பத்தியாவதால் மைட்டோகாண்ட்ரியா செல்லின் ஆற்றல் நிலையம் என அழைக்கப்படுகிறது.

59. மைட்டோகாண்டரியாவில் ____ புரதம், _____ லிப்பிடுகள் ____ RNA உள்ளன

A. 60 – 70%, 25 – 30%, 5 – 7%

B. 25 – 30%, 5 – 7%, 60 – 70%

C. 60 – 70%, 5 – 7%, 25 – 30%

D. 5 – 7%, 25 – 30%, 60 – 70%

விளக்கம்: மைட்டோகாண்ட்ரியாவின் அளவு 0.5 μm to 2.0 μm வரை பல்வேறு அளவுகளில் வேறுபட்டு காணப்படுகிறது. மைட்டோகாண்டரியாவில் 60 – 70% புரதம், 25 – 30% லிப்பிடுகள் 5 – 7 % RNA,DNA மற்றும் கனிமங்களும் உள்ளன.

60. மைட்டோ காண்ட்ரியாவின் ஒவ்வொரு சவ்வும் ___ தடிமனுடையது

A. 70 – 80 A°

B. 60 – 70 A°

C. 50 – 70 A°

D. 50 – 60 A°

விளக்கம்: மைட்டோ காண்ட்ரியா உள் மற்றும் வெளிச்சவ்வுகளால் சூழப்பட்ட ஒரு நுண்ணுறுப்பாகும். ஒவ்வொரு சவ்வும் 60 – 70 A° தடிமனுடையது. வெளிச்சவ்வானது வழவழப்பானது. அனைத்து மூலக்கூறுகளையும் உட்செல்ல அனுமதிக்கும். இதில் நொதிகள்,புரதம் மற்றும் லிப்பிடுகள் காணப்படுகின்றன.

61. மைட்டோ காண்ட்ரியா சவ்வில் உள்ள _____ மூலக்கூறுகள் (புரத மூலக்கூறுகள்) வெளிமூலக்கூறுகள் செல்வதற்கு கால்வாயாக செயல்படுகிறது.

A. போரின்

B. பாஸ்பேட்

C. RNA

D. DNA

விளக்கம்: மைட்டோ காண்ட்ரியா சவ்வில் உள்ள போரின் மூலக்கூறுகள் (புரத மூலக்கூறுகள்) வெளிமூலக்கூறுகள் செல்வதற்கு கால்வாயாக செயல்படுகிறது. உட்புறச்சவ்வு பல மடிப்புகளுடன் காணப்படுகிறது. இவை ஒரு தேர்வுகடத்து சவ்வாகவும், குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே செல்ல அனுமதிக்கும். இதில் கடத்துப் புரதங்களும் நொதிகளும் உள்ளன. இதில் 80% புரதம் மற்றும் லிப்பிடுகள் உள்ளன.

62. மைட்டோ காண்ட்ரியாவின் உட்புறச்சவ்வில் காணப்படும் விரல் போன்ற நீட்சிகள்

A. கிரப்

B. கிரிஸ்டே

C. ஆக்ஸிசோம்

D. மேட்ரிக்ஸ்

விளக்கம்: கிரிஸ்டே: உட்புறச்சவ்வில் காணப்படும் விரல் போன்ற நீட்சிகள் கிரிஸ்டே எனப்படும். இந்த கிரிஸ்டாவானது பரப்பளவை அதிகரிக்கிறது மற்றும் பல நொதிகளைப் பெற்றுள்ளன.

63. ஆக்ஸிசோம் மற்றொரு பெயர்

A. கிரப்

B. கிரிஸ்டே

C. மேட்ரிக்ஸ்

D. F1 துகள்கள்

விளக்கம்: ஆக்ஸிசோம் அல்லது F1 துகள்கள் : கிரிஸ்டாவில் – பல நுண்ணிய டென்னிஸ் ராக்கட் வடிவ துகள்கள் காணப்படுகின்றன. இவை ஆக்ஸிசோம்கள் (F1 துகள்கள்) என அழைக்கப்படுகின்றன. இவை ATP உற்பத்தியில் பங்குகொள்கின்றன.

64. கிரப் சுழற்சிக்குத் தேவையான நொதிகள் தருவது

A. மேட்ரிக்ஸ்

B. கிரிஸ்டா

C. ஆக்ஸிசோம்

D. F1 துகள்கள்

விளக்கம்: மைட்டோகாண்ட்ரியாவின் மேட்ரிக்ஸ் : புரதம் மற்றும் லிப்பிடுகளைக் கொண்ட ஒரு சிக்கலான கலவையாகும். இதில் கிரப் சுழற்சிக்குத் தேவையான நொதிகள், 70S ரைபோசோம், tRNAக்கள் மற்றும் DNA ஆகியவை உள்ளன.

65. தாவர சுவாசித்தலுக்கு தேவையான ஒரு முக்கிய நுண்ணுறுப்பு

A. மைட்டோகாண்ட்ரியா

B. ரிபோசோம்

C. A மற்றும் B

D. ஆக்ஸிசோம்

விளக்கம்: மைட்டோகாண்ட்ரியா சுவாசித்தலுக்கு தேவையான ஒரு முக்கிய நுண்ணுறுப்பாகும். இதில் ஏராளமான ATPக்கள் உருவாகின்றன. எனவே இது செல்லின் ஆற்றல் மையம் அல்லது சக்தி நிலையம் என அழைக்கப்படுகிறது. செல்லின் கால்சியம் அயனிகளின் சம நிலையைப் பாதுகாக்கிறது. செல்லின் வளர்சிதை மாற்ற செயலில் பங்கு கொள்கிறது.

66. செல்லுக்குள்ளே உணவானது ஆக்ஸிகரணமடைந்து ஆற்றல் பெறும் உயிர்வேதியியல் நிகழ்ச்சி

A. வெளிச்சுவாசம்

B. செல்சுவாசம்

C. காற்று சுவாசம்

D. எதுவுமில்லை

விளக்கம்: சுவாசித்தல் என்பது உயிரினங்களுக்கும் வெளிச்சூழலுக்கும் இடையே நடைபெறும் வாயு பரிமாற்ற நிகழ்ச்சியாகும். தாவரங்கள் வளிமண்டலத்திலிருந்து ஆக்ஸிஜனை பெற்றுக்கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன. இந்த வாயு பரிமாற்றத்திற்கு வெளிச்சுவாசம் என்று பெயர். இது ஒரு இயற்பியல் நிகழ்வாகும். செல்லுக்குள்ளே உணவானது ஆக்ஸிகரணமடைந்து ஆற்றல் பெறும் உயிர்வேதியியல் நிகழ்ச்சியே செல்சுவாசம் எனப்படும்.

67. C6H12O6 + 6O2 → 6CO2 + 6H2O + ATP எவ்வகை சுவாசம்

A. வெளிச்சுவாசம்

B. செல்சுவாசம்

C. காற்று சுவாசம்

D. எதுவுமில்லை

விளக்கம்: காற்று சுவாசம்: இவ்வகை செல்சுவாசத்தில் உணவானது ஆக்ஸிஜன் உதவியால் முழுவதுமாக ஆக்ஸிகரணமடைந்து கார்பன் டை ஆக்ஸைடு, நீர் மற்றும் ஆற்றலாக மாற்றப்படுகிறது. இந்த சுவாசம் பெரும்பாலான தாவரங்கள் மற்றும் விலங்குகளில் நடைபெறுகிறது. C6H12O6 + 6O2 → 6CO2 + 6H2O + ATP

68. காற்றுச் சுவாசத்தின் போது கிளைக்காலிஸிஸ் எதில் நடைபெறுகிறது

A. சைட்டோபிளாசம்

B. மைட்டோகாண்ட்ரியா

C. A மற்றும் B

D. எதுவுமில்லை

விளக்கம்: காற்றுச் சுவாசத்தின் முதல் படிநிலை : கிளைக்காலிஸிஸ் (குளுக்கோஸ் பிளப்பு): இது ஒரு மூலக்கூறு குளுக்கோஸானது (6 கார்பன் ) இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலமாக (3 கார்பன் ) பிளக்கப்படும் நிகழ்ச்சியாகும். இது சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியானது காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவானதாகும்.

69. கிளைக்காலிஸிஸ் நிகழ்ச்சியின் முடிவில் உண்டான இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலம் முழுவதும் ஆக்ஸிகரணம் அடைந்து கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நீராக மாறும். இந்த சுழற்சிக்கு

A. ட்ரை கார்பாக்ஸிலிக் அமில சுழற்சி

B. கிரப் சுழற்சி

C. கால்வின் சுழற்சி

D. A அல்லது B

விளக்கம்: கிரப் சுழற்சி மைட்டோகாண்ட்ரியாவின் உட்கூழ்மத்தில் நடைபெறுகிறது (உட்கூழ்மம் – matrix) கிளைக்காலிஸிஸ் நிகழ்ச்சியின் முடிவில் உண்டான இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலம் முழுவதும் ஆக்ஸிகரணம் அடைந்து கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நீராக மாறும் இந்த சுழற்சிக்கு கிரப் சுழற்சி அல்லது ட்ரை கார்பாக்ஸிலிக் அமில சுழற்சி (TCA சுழற்சி) என்று பெயர்.

70. கிளைக்காலிஸிஸ் மற்றும் கிரப் சுழற்சியின் போது உண்டான NADH2 மற்றும் FADH2 வில் உள்ள ஆற்றலானது NAD+ மற்றும் FAD+ ஆக ஆக்ஸிகரணமடைகிறது. வெளியான ஆற்றல் ADP யால் எடுத்துக்கொள்ளப்பட் டு ATP ஆக உருவாகிறது. இதற்கு

A. கார்பாக்ஸிலிக் அமில சுழற்சி

B. ஆக்ஸிகரண பாஸ்பேட் சேர்ப்பு

C. எலக்ட்ரான் கடத்தல்

D. ஆக்ஸிகரண சுழற்சி

விளக்கம்: மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறச்சவ்வில் எலக்ட்ரான் கடத்து சங்கிலி என்ற எலக்ட்ரான்களை கடத்தும் அமைப்பு உள்ளது. கிளைக்காலிஸிஸ் மற்றும் கிரப் சுழற்சியின் போது உண்டான NADH2 மற்றும் FADH2 வில் உள்ள ஆற்றலானது இங்கு வெளியேற்றப்பட்டு அவை NAD+ மற்றும் FAD+ ஆக ஆக்ஸிகரணமடைகின்றன. இந்நிகழ்ச்சியின் போது வெளியான ஆற்றல் ADP யால் எடுத்துக்கொள்ளப்பட் டு ATP ஆக உருவாகிறது. இதற்கு ஆக்ஸிகரண பாஸ்பேட் சேர்ப்பு என்று அழைக்கப்படும். இந்நிகழ்க்சியின் போது வெளியேற்றப்பட்ட எலக்ட்ரானை ஆக்ஸிஜன் எடுத்துக்கொண்டு நீராக (H2O) ஒடுக்கமடைகிறது.

71. குளுக்கோஸானது எத்தனாலாக மாறும் சுவாசம்

A. காற்றில்லா சுவாசம்

B. காற்று சுவாசம்

C. ஆக்சிகரண சுவாசம்

D. எதுவுமில்லை

விளக்கம்: காற்றில்லா சுவாசம் காற்றில்லா சுழலில் அதாவது ஆக்ஸிஜன் இல்லாத சூழலில் நடைபெறும் சுவாசமாகும். இதில் குளுக்கோஸானது எத்தனாலாகவும் (ஈஸ்டினால் மதுபான நொதித்தல்) அல்லது லேக்டிக் அமிலமாகவும் (பாக்டீரியங்களால் பால் புளித்தல்) மாற்றப்படுகிறது. உடன் CO2 வெளியேறுகிறது. C6H12O6 → 2CO2 + 2C2H5OH + ஆற்றல் (ATP)

72. சுவாச ஈவு என்பது

A. வெளியிடப்படும் CO2 அளவு / எடுத்துக்கொள்ளப்படும் O2 அளவு

B. எடுத்துக்கொள்ளப்படும் O2 அளவு / வெளியிடப்படும் CO2 அளவு

C. வெளியிடப்படும் CO2 அளவு – எடுத்துக்கொள்ளப்படும் O2 அளவு

D. வெளியிடப்படும் CO2 அளவு X எடுத்துக்கொள்ளப்படும் O2 அளவு

விளக்கம்: சுவாசித்தலின் போது வெளியேற்றப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடின் அளவிற்கும் எடுத்துக்கொள்ளப்பட்ட ஆக்ஸிஜன் அளவிற்கும் இடையேயுள்ள விகிதமே சுவாச ஈவு எனப்படும்.

73. காற்று சுவாசம் நடைபெறும் படிநிலை

A. கிரப் சுழற்சி மற்றும் எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு, கிளைக்காலிஸிஸ்

B. கிளைக்காலிஸிஸ், கிரப் சுழற்சி மற்றும் எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு

C. கிரப் சுழற்சி மற்றும் எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு

D. கிரப் சுழற்சி மற்றும் கிளைக்காலிஸிஸ்

74. காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _________ பகுதியில் காணப்படுகிறது.

A. புறணி

B. பித்

C. பெரிசைக்கிள்

D. அகத்தோல்

75. உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்

A. வேர்

B. தண்டு

C. இலைகள்

D. மலர்கள்

76. சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது _________ எனப்படும்.

A. ஆரப்போக்கு அமைப்பு

B. சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை

C. ஒன்றிணைந்தவை

D. இவற்றில் எதுவுமில்லை

77. காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது

A. கார்போஹைட்ரேட்

B. எத்தில் ஆல்கஹால்

C. அசிட்டைல் கோ ஏ

D. பைருவேட்

78. ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது?

A. ATP யானது ADP யாக மாறும் போது

B. CO2 நிலை நிறுத்தப்படும் போது

C. நீர்மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது

D. இவை அனைத்திலும்

79. செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலை

A. மைட்டோகாண்ட்ரியா

B. ரிபோசோம்

C. சைட்டோபிளாசம்

D. B மற்றும் C

10th Science Lesson 13 Questions in Tamil

13] உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

1. அனிமாலியா என்பது ____________

A) தாவரவுலகம்

B) விலங்குலகம்

C) புரோட்டோசோவான்கள்

D) பூஞ்சைகள்

2. விலங்குலகம் கீழ்க்கண்ட எத்தனைப் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

விளக்கம்: விலங்குலகம் (Kingdom Animalia) என்பது முதுகுநாண் உள்ளதன் அடிப்படையில் முதுகுநாண் அற்றவை மற்றும் முதுகுநாணுள்ளவை என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.

3. ஹிருடினேரியா கிரானுலோசா என்பது கீழ்க்கண்ட எந்த உயிரினத்தின் விலங்கியல் பெயராகும்.

A) முயல்

B) தவளை

C) வீட்டு ஈ

D) இந்திய கால்நடை அட்டை

4. இந்திய கால்நடை அட்டையானது கீழ்க்கண்ட எந்த தொகுதியைச் சார்ந்தது_______

A) உருளைப்புழுக்கள்

B) தட்டைப்புழுக்கள்

C) வளைத்தசைப்புழுக்கள்

D) மேற்கண்ட எதுமில்லை

விளக்கம்: அட்டையின் விலங்கியல் பெயர் ஹிருடினேரியா கிரானுலோசா (Hirudinaria granulosa) என்பதாகும். இதன் தொகுதி வளைத்தசைப்புழுக்களைச் சார்ந்ததாகும். வளைதத்தசைப் புழுக்கள் என்பவை உறுப்பு மண்டல அளவில் ஒருங்குமைப்புடைய, கண்டங்களாகப் பரிக்கப்பட்ட, புழு போன்ற உடலமைப்புடைய விலங்குகளாகும்.

5. ஒரிக்டோலேகஸ் கியூனிகுலஸ் என்பது ஒரு______________

A) பாலுட்டி

B) முதுகுநாணற்றவை

C) முதுகுநாணுள்ளவை

D) A, C இரண்டும்

விளக்கம்: ஒரிக்டோலேகஸ் கியூனிகுலஸ் (Oryctolagues Cuniculus) – முயலின் விலங்கியல் பெயராகும். இதன் தொகுதி – முதுகுநாணுள்ளவை மற்றும் வகுப்பு – பாலூட்டிகள் ஆகும். பாலுட்டிகளே விலங்குலகத்தின் மிக உயர்ந்த வகுப்பாகும். மற்ற அனைத்து வகை விலங்குகளை விட மிகவும் மேம்பாடு அடைந்தவை இவ்வுயிரிகள் பாலூட்டிகளின் மிகச் சிறப்பானதொரு பண்பு, பெண் உயிரிகளில் காணப்படும் பால் சுரப்பிகளே. இவ்வுயிரிகள் வெப்ப இரத்த உயிரிகள் மற்றும் உடல் முழுவதும் உரோமங்களால் மூடப்பெற்றவை.

6. விலங்குலகத்தின் மிக உயர்ந்த வகுப்பு____________

A) பாலுட்டிகள்

B) வளைத்தசைப்புழுக்கள்

C) தட்டைப்புழுக்கள்

D) B, C இரண்டும்

விளக்கம்: பாலுட்டிகளே விலங்குலகத்தின் மிக உயர்ந்த வகுப்பாகும். மற்ற அனைத்து வகை விலங்குகளை விட மிகவும் மேம்பாடு அடைந்தவை இவ்வுயிரிகள் பாலூட்டிகளின் மிகச் சிறப்பானதொரு பண்பு, பெண் உயிரிகளில் காணப்படும் பால் சுரப்பிகளே. இவ்வுயிரிகள் வெப்ப இரத்த உயிரிகள் மற்றும் உடல் முழுவதும் உரோமங்களால் மூடப்பெற்றவை.

7. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தாத இணையைக் காண்க: (ஹிருடினேரியா கிரானுலோசா வின் வகைப்பாட்டு நிலைகள்)

A) தொகுதி – வளைத்தசைப்புழுக்கள்

B) வகுப்பு – ஹிருடினியா

C) வரிசை – நேத்தோப்டெலிடா

D) பேரினம் – கிரானுலோசா

விளக்கம்:

தொகுதி – வளைத்தசைப்புழுக்கள்

வகுப்பு – ஹிருடினியா

வரிசை – நேத்தோப்டெலிடா

பேரினம் – ஹிருடினேரியா

சிற்றினம் – கிரானுலோசா

8. இந்திய கால்நடை அட்டையானது கீழ்க்கண்ட எந்தப் புகுதிகளில் காணப்படுகிறது.

A) இந்தியா

B) வங்கதேசம்

C) பாகிஸ்தான்

D) மேற்க்கண்ட அனைத்தும்

விளக்கம்: ஹிருடினேரியா கிரானுலோசா (இந்திய கால்நடை அட்டை) இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், மியான்மர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

9. இந்திய கால்நடை அட்டையின் வாழ்விடப் பகுதிகளுல் அல்லாதது___________

A) நன்னீர் குளங்கள்

B) ஏரிகள்

C) சதுப்பு நிலங்கள்

D) திறந்தவெளிப் பகுதி

விளக்கம்: இந்திய கால்நடை அட்டையானது நன்னீர் குளங்கள், ஏரிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் சிற்றோடைகளில் வாழ்கிறது இவை புற ஒட்டுண்ணிகளாகவும், மீன்கள், தவளைகள், கால்நடைகள் மற்றும் மனிதனின் இரத்தத்தை உறிஞ்சும் சாங்கிவோரஸ் வகையினவாகவும் உள்ளன.

10. இந்தியக் கால்நடை அட்டையானது எவ்வளவு நீளம் வரை வளரக்கூடியது.

A) 35 மீ

B) 35 செ.மீ

C) 45 செ.மீ

D) 45 மீ

விளக்கம்: அட்டையானது மென்மையான, புழு போன்ற, நீண்ட, கண்ட அமைப்புடைய உடலைக் கொண்டது. நீளும்போது நாடா போன்றும், சுருங்கும்போது உருளை போன்றும் மாறக்கூடியது. 35 செ.மீ நீளம் வரை வளரக் கூடியது.

11. பொருத்துக: ( இந்தியக் கால் நடை அட்டை)

A) சாங்கிவோரஸ் – 1. சோமைட்டுகள்

B) முதுகுப் பகுதி – 2. ஆரஞ்சு மஞ்சள் (அ) ஆரஞ்சு சிவப்பு

C) வயிற்றுப் பகுதி – 3. ஆலிவ் பச்சை

D) உடல் கண்ட அமைப்பு – 4. இரத்த உறிஞ்சி

A) 4 3 1 2

B) 1 2 3 4

C) 4 3 2 1

D) 4 2 3 1

விளக்கம்:

A) சாங்கிவோரஸ் – 1. இரத்த உறிஞ்சி

B) முதுகுப் பகுதி – 2. ஆலிவ் பச்சை

C) வயிற்றுப் பகுதி – 3. ஆரஞ்சு மஞ்சள் (அ) ஆரஞ்சு சிவப்பு

D) உடல் கண்ட அமைப்பு – 4. சோமைட்டுகள்

12. அட்டையின் உடலில் காணப்படும் கண்டங்களின் எண்ணிக்கை_____________

A) 22 கண்டங்கள்

B) 33 கண்டங்கள்

C) 34 கண்டங்கள்

D) 44 கண்டங்கள்

விளக்கம்: மெட்டாமெரிசக் கண்ட அமைப்பு உடலில் காணப்படுகிறது. அட்டையின் உடல் 33 கண்டங்கள் அல்லது சோமைட்டுகள் என்ற பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இக்கண்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கண்டமும் மேற்கொண்டு, மேலோட்டமாக வளையங்கள் அல்லது அன்னுலையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

13. இந்தியக் கால்நடை அட்டையின் எந்த கண்டங்களுக்கிடையில் தற்காலிக கிளைடெல்லம் தோன்றுகிறது.

A) 6 முதல் 11

B) 9 முதல் 11

C) 10 முதல் 11

D) 7 முதல் 11

விளக்கம்: இந்தியக் கால்நடை அட்டையின் இனப்பெருக்க காலத்தில் கூட்டை (கக்கூன்) உருவாக்குவதற்காக 9 முதல் 11 ஆவது கண்டம் வரையில் தற்காலிக கிளைடெல்லம் உருவாகிறது.

14. கூற்று (i): இந்தியக் கால்நடை அட்டையின் உடலின் முதுகுப்புறத்தில் முதல் ஐந்து கண்டங்களில் பத்து இணை கண்கள் உள்ளன. மேலும் ஒவ்வொரு கண்டமும் பல புடைப்புகளாலான உணர்வேற்பிகளைக் கொண்டுள்ளன.

கூற்று (ii): அவற்றுள் வளைய உணற்வேற்பிகள் ஒவ்வொரு வளையத்திலும், கண்ட உணர்வேற்பிகள் ஒவ்வொரு, கண்டத்தின் இறுதி வளையத்திலும் காணப்படுகின்றன.

A) கூற்று i சரி, கூற்று ii தவறு

B) கூற்று i தவறு, கூற்று ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

விளக்கம்: இந்தியக் கால்நடை அட்டையின் உடலின் முதுகுப்புறத்தில் முதல் ஐந்து கண்டங்களில் ஐந்து இணை கண்கள் உள்ளன. மேலும் ஒவ்வொரு கண்டமும் பல புடைப்புகளாலான உணர்வேற்பிகளைக் கொண்டுள்ளன. அவற்றுள் வளைய உணற்வேற்பிகள் ஒவ்வொரு வளையத்திலும், கண்ட உணர்வேற்பிகள் ஒவ்வொரு, கண்டத்தின் முதல் வளையத்திலும் காணப்படுகின்றன.

15. இந்தியக் கால்நடை அட்டையின் வயிற்றுப்பகுதியில் அமைந்துள்ள முதல் ஐந்து கண்டங்களில் அமைந்திருப்பது___________

A) முன் ஒட்டுறிஞ்சி

B) பின் ஒட்டுறிஞ்சி

C) வாய் ஒட்டுறிஞ்சி

D) A, C இரண்டும்

விளக்கம்: அட்டையில் இரண்டு ஒட்டுறிஞ்சிகள் உள்ளன. உடலின் முன் முனையில் உள்ள ஒட்டுறிஞ்சி முன் ஒட்டுறிஞ்சி அல்லது வாய் ஒட்டுறிஞ்சி என அழைக்கப்படுகிறது. இது உடலின் வயிற்றுப்பகுதியில், முதல் ஐந்து கண்டங்களை ஆக்கிரமித்து அமைந்துள்ளது. உடலின் இறுதி ஏழு கண்டங்கள் ஒன்றிணைந்து பின் ஒட்டுறிஞ்சியை உருவாக்குகின்றன. இரு ஒட்டுறிஞ்சிகளும் ஒட்டிக்கொள்ளவும், இடப்பெயர்ச்சிக்கும் பயன்படுகின்றன. முன் ஒட்டுறிஞ்சியானது உணவுட்டத்திற்கும் உதவுகிறது.

16. இந்தியக் கால்நடை அட்டையின் முன் ஒட்டுறிஞ்சியின் பணி_________

A) சுவாசம்

B) செரித்தல்

C) உணவூட்டம்

D) இனப்பெருக்கம்

விளக்கம்: அட்டையில் இரண்டு ஒட்டுறிஞ்சிகள் உள்ளன. உடலின் முன் முனையில் உள்ள ஒட்டுறிஞ்சி முன் ஒட்டுறிஞ்சி அல்லது வாய் ஒட்டுறிஞ்சி என அழைக்கப்படுகிறது. இது உடலின் வயிற்றுப்பகுதியில், முதல் ஐந்து கண்டங்களை ஆக்கிரமித்து அமைந்துள்ளது. உடலின் இறுதி ஏழு கண்டங்கள் ஒன்றிணைந்து பின் ஒட்டுறிஞ்சியை உருவாக்குகின்றன. இரு ஒட்டுறிஞ்சிகளும் ஒட்டிக்கொள்ளவும், இடப்பெயர்ச்சிக்கும் பயன்படுகின்றன. முன் ஒட்டுறிஞ்சியானது உணவுட்டத்திற்கும் உதவுகிறது

17. இந்தியக் கால்நடை அட்டையின் இடப்பெயர்ச்சிக்கு உதவுவது___________

A) முன் ஒட்டுறிஞ்சி

B) பின் ஒட்டுறிஞ்சி

C) வாய் ஒட்டுறிஞ்சி

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: இந்தியக் கால்நடை அட்டையின் இரு ஒட்டுறிஞ்சிகளும் ஒட்டிக்கொள்ளவும், இடப்பெயர்ச்சிக்கும் பயன்படுகின்றன. முன் ஒட்டுறிஞ்சியானது உணவுட்டத்திற்கும் உதவுகிறது.

18. இந்தியக் கால்நடை அட்டையின் வயிற்றுப்பகுதியில் அமைந்துள்ள இறுதி ஏழு கண்டங்களில் அமைந்திருப்பது____________

A) முன் ஒட்டுறிஞ்சி

B) வாய் ஒட்டுறிஞ்சி

C) பின் ஒட்டுறிஞ்சி

D) A, B இரண்டும்

விளக்கம்: அட்டையில் இரண்டு ஒட்டுறிஞ்சிகள் உள்ளன. உடலின் முன் முனையில் உள்ள ஒட்டுறிஞ்சி முன் ஒட்டுறிஞ்சி அல்லது வாய் ஒட்டுறிஞ்சி என அழைக்கப்படுகிறது. இது உடலின் வயிற்றுப்பகுதியில், முதல் ஐந்து கண்டங்களை ஆக்கிரமித்து அமைந்துள்ளது. உடலின் இறுதி ஏழு கண்டங்கள் ஒன்றிணைந்து பின் ஒட்டுறிஞ்சியை உருவாக்குகின்றன.

19. பொருத்துக:

A) வாய் – 1. (11-வது உடற்கண்டம்)

B) மலத்துளை – 2. (10-வது உடற்கண்டம்)

C) ஆண் இனப்பெருக்க துளை – 3. (26-வது உடற்கண்டம்)

D) பெண் இனப்பெருக்க துளை – 4. முன் ஒட்டுறிஞ்சியின் மையம்

A) 4 3 2 1

B) 1 2 3 4

C) 4 3 1 2

D) 4 2 3 1

விளக்கம்:

A) வாய் – 1. முன் ஒட்டுறிஞ்சியின் மையம்

B) மலத்துளை – 2. (26-வது உடற்கண்டம்)

C) ஆண் இனப்பெருக்க துளை – 3. (10-வது உடற்கண்டம்)

D) பெண் இனப்பெருக்க துளை – 4. (11-வது உடற்கண்டம்)

20. இந்தியக் கால்நடை அட்டையில் நெப்ரிடியத்துளைகள் காணப்படுவது___________

A) 6 முதல் 12 வரையிலான கண்டங்களில் ஒவ்வொரு கண்டத்தின் கடைசி வளையத்தின் வயிற்றுப்பகுதியில் காணப்படுகின்றன.

B) 6 முதல் 22 வரையிலான கண்டங்களில் ஒவ்வொரு கண்டத்தின் முதல் வளையத்தின் வயிற்றுப்பகுதியில் காணப்படுகின்றன.

C) 6 முதல் 22 வரையிலான கண்டங்களில் ஒவ்வொரு கண்டத்தின் கடைசி வளையத்தின் வயிற்றுப்பகுதியில் காணப்படுகின்றன.

D) 6 முதல் 32 வரையிலான கண்டங்களில் ஒவ்வொரு கண்டத்தின் கடைசி வளையத்தின் வயிற்றுப்பகுதியில் காணப்படுகின்றன.

விளக்கம்: நெப்ரீடியங்கள் 17 இணை நெப்ரீடியத்துளைகள் மூலம் உடலின் வெளிப்பகுதியில் திறக்கின்றன. இத்துளைகள் 6 முதல் 22 வரையிலான கண்டங்களில் ஒவ்வொரு கண்டத்தின் கடைசி வளையத்தின் வயிற்றுப்பகுதியிலும் காணப்படுகின்றன.

21. பொருத்துக: ( இந்தியக் கால்நடை அட்டையின் உடற்பகுப்பு)

A) தலைப்பகுதி – 1. 9,10 மற்றும் 11 வது கண்டங்கள் வரை

B) முன் கிளைடெல்லப் பகுதி – 2. முதல் ஐந்து கண்டங்கள்

C) கிளைடெல்லப் பகுதி – 3. (12 முதல் 22 வரை)

D) நடுப்பகுதி – 4. (6,7 (ம) 8 வது கண்டங்கள் வரை)

A) 4 3 2 1

B) 1 2 3 4

C) 2 4 1 3

D) 4 2 3 1

விளக்கம்:

A) தலைப்பகுதி – 1. முதல் ஐந்து கண்டங்கள்

B) முன் கிளைடெல்லப் பகுதி – 2. (6,7 (ம) 8 வது கண்டங்கள் வரை)

C) கிளைடெல்லப் பகுதி – 3. 9,10 மற்றும் 11 வது கண்டங்கள் வரை

D) நடுப்பகுதி – 4. (12 முதல் 22 வரை)

22. கீழ்க்கண்டவற்றுள் அட்டையின் சரியற்ற உடற்பகுப்பு இணையைக் கண்டறி.

1) பின் (அ) வால் பகுதி – 23 முதல் 26 வரை

2) பின் ஒட்டுறிஞ்சிப் பகுதி – 23 முதல் 33 வரை

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

23. பொருத்துக:

A) கியூட்டிக்கள் – 1. வட்ட (ம) நீளவாட்டுத் தசைகளால் ஆனது

B) புறத்தோல் – 2. இணைப்பு திசுவாள் ஆனது

C) தோல் – 3. வெளி அடுக்கு

D) தசை அடுக்கு – 4. கீயூட்டிகிளை ஒட்டி அடியில் காணப்படுவது

A) 4 3 2 1

B) 1 2 3 4

C) 2 4 1 3

D) 3 4 2 1

விளக்கம்:

A) கியூட்டிக்கள் – 1. வெளி அடுக்கு

B) புறத்தோல் – 2. கியூட்டிகிளை ஒட்டி அடியில் காணப்படுவது

C) தோல் – 3. இணைப்பு திசுவால் ஆனது

D) தசை அடுக்கு – 4. வட்ட (ம) நீளவாட்டுத் தசைகளால் ஆனது

24. இந்தியக் கால்நடை அட்டையின் உணவுக் குழாயைச் சுற்றி, உடற்குழி முழுவதும் நிரம்பியுள்ளத் திசு_____________

A) கியூட்டிக்கள் திசு

B) இணைப்புத் திசு

C) தசைத் திசு

D) போட்ரியாய்டல் திசு

விளக்கம்: போட்ரியாய்டல் திசு – நீள் தசைகளுக்குக் கீழே உள்ளது. உணவுக் குழாயைச் சுற்றி, உடற்குழி முழுவதும் நிரம்பியுள்ளது.

25. அட்டையின் உடலின் சுருக்கம் மற்றும் நீள்தல் மூலம் நடைபெறும் இயக்கம்__________

A) வளைதல் அல்லது ஊர்தல் இயக்கம்

B) நீந்து இயக்கம்

C) நேர்க்கோட்டு இயக்கம்

D) உந்து இயக்கம்

விளக்கம்: இவ்வகை இயக்கமானது தசைகளின் சுருக்கம் மற்றும் நீள்தல் மூலம் நடைபெறுகிறது. இவ்வியக்கத்தின்போது ஒட்டிக்கொள்வதற்கு இரு ஒட்டுறிஞ்சிகளும் உதவுகின்றன.

26. அட்டையானது நீரில் ஏற்படுத்தும் இயக்கம்_________

A) வளைவு இயக்கம்

B) நீந்துதல் இயக்கம்

C) ஊர்தல் இயக்கம்

D) நீள்தல் இயக்கம்

விளக்கம்: அட்டையானது நீரில் மிகுந்த செயலாக்கத்துடன் நீந்தி, அலை இயக்கத்தை மேற்கொள்கிறது.

27. அட்டையின் சீரண மண்டலமானது கீழ்க்கண்ட எதனை உள்ளடக்கியது.

A) உணவுப் பாதை

B) சீரண சுரப்பிகள்

C) கழிவுநீக்க உறுப்பு

D) A, B இரண்டும்

விளக்கம்: அட்டையின் சீரண மண்டலமானது நீண்ட உணவுப் பாதைகயையும், சீரண சுரப்பிகளையும் கொண்டது.

28. அட்டையின் முதல் ஐந்து கண்டங்களை ஆக்கிரமித்திருப்பது________

A) கண்கள்

B) செரிமானப்பை

C) வாயும், வாய்க் குழியும்

D) மலவாய்

விளக்கம்: அட்டையின் உணவுப்பாதை வாய் முதல் மலத்துளை வரை நீண்டுள்ள நேரான குழலாகும். மூன்று ஆரத் துளையாலான வாய், முன் ஒட்டுறிஞ்சியின் மையப்பகுதியினுள் நீள்கிறது. வாய்க்குழியின் சுவரானது, ஒரு வரிசையிலமைந்த நுண்ணிய பற்களைக் கொண்ட மூன்று தாடைகளைப் பெற்றுள்ளது. உமிழ்நீர்ச் சுரப்பிகளின் திறப்புகளைக் கொண்ட பாப்பில்லாக்களும் தாடைகளில் உள்ளன. வாயும், வாய்க் குழியும் முதல் ஐந்து கண்டங்களை ஆக்கிரமித்துள்ளன.

29. இரத்தம் உறைந்துபோவதைத் தடுக்கும் ஹிருடின் என்ற பொருள் அட்டையின்_________உள்ளது.

A) இரத்தம்

B) தோல்பகுதி

C) உமிழ்நீர்

D) மேற்கண்ட எதுமில்லை

விளக்கம்: வாய்க்குழி, தலையாலான தொண்டையினுள் நீள்கிறது. தொண்டையைச் சுற்றிலும் உமிழ்நீழ்ச் சுரப்பிகள் அமைந்துள்ளன. இரத்தம் உறைந்துபோவதைத் தடுக்கும் ஹிருடின் என்ற பொருள் அட்டையின் உமிழ்நீரில் உள்ளது.

30. கூற்று : அட்டை, கால்நடைகள் மற்றும் பிற வீட்டு விலங்குகளின் இரத்தத்தை உணவாக பெறுகிறது.

காரணம் : உணவூட்டத்தின்போது அட்டை அதன் பின் ஒட்டுறிஞ்சி மூலம் விருந்தோம்பியின் உடலில் உறுதியாக ஒட்டிக்கொள்கிறது. வாய்க்கு வெளிப்புறமாக துருத்திக் கொண்டுள்ள தாடைகளின் மூலம் விருந்தோம்பியின் தோலில் மூன்று ஆர அல்லது Y- வடிவ காயத்தை ஏற்படுத்துகிறது.

A) கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

B) கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

C) கூற்று சரி, காரணம் தவறு

D) கூற்று தவறு, காரணம் சரி

31. அட்டையின் உமிழ்நீரில் உள்ள ஹிரிடின் என்பது___________

A) கொழுப்பு

B) புரதம்

C) விட்டமின்

D) தாது உப்புக்கள்

விளக்கம்: அட்டைகள் ஹிருடின் என்ற புரதத்தைச் சுரப்பதன் மூலம் இரத்த உறைவைத் தடுக்கின்றன. மேலும் விருந்தோம்பியின் உடலில் ஒரு மயக்கப்பொருளைச் செலுத்துவதன் மூலம் இவை கடிப்பதை விருந்தோம்பிகள் உணர முடிவதில்லை.

32. அட்டைகள் கீழ்க்கண்ட எதன் மூலம் அதிர்வுகளை உணர்கின்றன.

A) தோல்

B) காது

C) கண்டங்கள்

D) கால்கள்

விளக்கம்: அட்டைகளுக்கு காது இல்லை. அவை அதிர்வுகளைத் தோல் மூலம் உணர்கின்றன.

33. அட்டைகள் உணவை அடையாளம் காணப் பயன்படுவது____________

A) தோல்

B) கண்கள்

C) கண்டங்கள்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: அட்டைகள் 2 முதல் 10 சிறிய கண்கள் மூலம் உணவை அடையாளம் காண்கின்றன.

34. தமது உடல் எடையைப் போன்று ஐந்து மடங்கு அதிக இரத்தத்தை உறிஞ்சும் அளவுக்குப் பெரும் பசி கொண்ட உயிரினம்_____________

A) வளைத்தசைக்கள்

B) உருளைப்புழுக்கள்

C) இந்தியக் கால்நடை அட்டை

D) தட்டைப்புழுக்கள்

விளக்கம்: அட்டை தமது உடல் எடையைப் போன்று ஐந்து மடங்கு அதிக இரத்தத்தை உறிஞ்சும் அளவுக்குப் பெரும் பசி கொண்டவையாகும்.

35. அட்டை தனது முழு உணவையும் செரித்து, உறிஞ்சிக் கொள்ள எடுத்துக்கொள்ளும் காலம்

A) இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக

B) ஓராண்டுக்கும் குறைவாக

C) பணிரெண்டு மாதத்திற்கும் மேலாக

D) ஆறு மாதத்திற்கும் மேலாக

விளக்கம்: அட்டை தனது முழு உணவையும் செரித்து, உறிஞ்சிக் கொள்ள ஓராண்டுக்கும் மேலாகிறது.

36. பொருத்துக:

கண்ட அமைப்பு கண்டங்கள்

A) முன் ஒட்டுறிஞ்சி – 1. (1 முதல் 5 வரையான கண்டங்கள்)

B) பின் ஒட்டுறிஞ்சி – 2. (27 முதல் 33 வரையான கண்டங்கள்)

C) தொண்டை – 3. (9 முதல் 18 வரையான கண்டங்கள்)

D) தீனிப்பை – 4. (5 முதல் 8 வரையான கண்டங்கள்)

A) 4 3 2 1

B) 1 2 4 3

C) 2 4 1 3

D) 3 4 2 1

விளக்கம்:

கண்ட அமைப்பு கண்டங்கள்

A) முன் ஒட்டுறிஞ்சி – 1. (1 முதல் 5 வரையான கண்டங்கள்)

B) பின் ஒட்டுறிஞ்சி – 2. (27 முதல் 33 வரையான கண்டங்கள்)

C) தொண்டை – 3. (5 முதல் 8 வரையான கண்டங்கள்)

D) தீனிப்பை – 4. (9 முதல் 18 வரையான கண்டங்கள்)

37. பொருத்துக:

கண்ட அமைப்பு கண்டங்கள்

A) வயிறு – 1. (10 முதல் 22 வரையான கண்டங்கள்)

B) குடல் – 2. (19 வது கண்டம்)

C) மலக்குடல் – 3. (23 முதல் 26 வரையான கண்டங்கள்)

D) மலத்துளை – 4. (26 வது கண்டம்)

A) 4 3 2 1

B) 2 4 1 3

C) 2 1 3 4

D) 3 4 2 1

விளக்கம்:

கண்ட அமைப்பு கண்டங்கள்

A) வயிறு – 1. (19 வது கண்டம்)

B) குடல் – 2. (10 முதல் 22 வரையான கண்டங்கள்)

C) மலக்குடல் – 3. (23 முதல் 26 வரையான கண்டங்கள்)

D) மலத்துளை – 4. (26 வது கண்டம்)

38. அட்டையில் சுவாசமானது கீழ்க்கண்ட எதன் மூலம் நடைபெறுகிறது.

A) தோல்

B) செவி

C) செவிமடல்

D) பாதங்கள்

விளக்கம்: அட்டையில் தோல் மூலம் சுவாசம் நடைபெறுகிறது. புறத்தோல் செல்களுக்கு இடையே, மெல்லிய இரத்தக் குழல் தந்துகிகளைக் கொண்ட நெருக்கமான வலையமைப்பு காணப்படுகிறது. இத்தந்துகிகளினுள் இரத்த உடற்குழி திரவம் நிரம்பியுள்ளது.

39. அட்டையில் சுவாச வாயுக்களின் பரிமாற்றமானது கீழ்க்கண்ட எதன் மூலம் நடைபெறுகிறது.

A) தோல்

B) சுவாசம்

C) பரவல்

D) செவுல்கள்

விளக்கம்: அட்டையின் சுவாச வாயுக்களின் பரிமாற்றம் பரவல் முறையில் நிகழ்கிறது. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் தோல் மூலம் இரத்த உடற்குழி திரவத்தினுள் பரவுகிறது. அதே வழியில் கார்பன் டைஆக்ஸைடு உடலுக்கு வெளியே பரவுகிறது. கோழைச் சுரப்பு மூலம் தோலானது ஈரமாகவும், வழவழப்பாகவும் வைக்கப்படுகிறது.

40. கூற்று (i): இரத்த உடற்குழி மண்டலம் மூலம் அட்டையில் சுற்றோட்டம் நடைபெறுகிறது.

கூற்று (ii): அட்டையில் இரத்தக்குழாய்களுக்குப் பதிலாக இரத்தம் போன்ற திரவத்தால் நிரப்பப்பட்ட இந்த உடற்குழிக் கால்வாய்கள் அமைந்துள்ளன. இந்த உடற்குழி திரவமானது ஹீமோகுளோபினைக் கொண்டுள்ளது.

A) கூற்று i சரி, கூற்று ii தவறு

B) கூற்று i தவறு, கூற்று ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

41. அட்டையின் சுற்றோட்ட மண்டலம் பற்றியக் கூற்றுக்களில் பொருந்தாததைக் கண்டறி:

1) சுற்றோட்ட மண்டலத்தில் நான்கு நீண்ட கால்வாய்கள் உள்ளன. ஒரு கால்வாய் உணவுப்பாதையின் மேல் புறமாகவும், மற்றொரு கால்வாய் உணவுப் பாதையின் கீழ்ப்புறமாகவும் அமைந்துள்ளது.

2) மற்ற இரு கால்வாய்களும் உணவுப்பாதையின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இவ்விரு கால்வாய்களும் உட்புறம் வால்வுகளைக் கொண்டு, இதயம் போன்று செயல்படுகின்றன.

3) நான்கு கால்வாய்களும் கீழ்ப்புறத்தில் 25 ஆவது கண்டத்தில் ஒன்றாக இணைகின்றன.

A) 1, 2 மட்டும் தவறு

B) 3 மட்டும் தவறு

C) அனைத்தும் தவறு

D) அனைத்தும் சரி

விளக்கம்: நான்கு கால்வாய்களும் கீழ்ப்புறத்தில் 26 ஆவது கண்டத்தில் ஒன்றாக இணைகின்றன.

42. அட்டையானது கீழ்க்கண்ட எந்த நரம்பு மண்டலத்தைக் கொண்டுள்ளது.

A) மைய நரம்பு மண்டலம்

B) பக்க நரம்பு மண்டலம்

C) பரிவு நரம்பு மண்டலம்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: அட்டை, மைய, பக்கவாட்டு மற்றும் பரிவு நரம்பு மண்டலங்களைக் கொண்டுள்ளது மைய நரம்பு மண்டலம் நரம்பு வளையம் மற்றும் ஓரிணை வயிற்றுப்புற நரம்பு நாணைப் பெற்றுள்ளது. நரம்பு வளையமானது தொண்டையைச் சுற்றிலும் அமைந்துள்ளது.

43. அட்டையின் நரம்பு வளையத்தைச் சுற்றிக் காணப்படுவது___________

A) தொண்டை மேல் நரம்புத்திரள்

B) தொண்டைச் சுற்று நரம்பு இணைப்பு

C) தொண்டை கீழ் நரம்புத் திரள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: அட்டையின் நரம்பு வளையத்தைச் சுற்றிக் தொண்டை மேல் நரம்புத்திரள் தொண்டைச் சுற்று நரம்பு இணைப்பு மற்றும் தொண்டை கீழ் நரம்புத் திரள் ஆகியவற்றை உள்ளடக்கியது. தொண்டை கீழ் நரம்புத்திரள் தொண்டையின் அடிப்பகுதியில் நான்கு இணை நரம்புத் திரள்கள் இணைவால் உருவாகியுள்ளது.

44. அட்டையில் எத்தனை இணை நெப்ரீடியங்கள் உள்ளன.

A) 12 இணை நெப்ரீடியங்கள்

B) 14 இணை நெப்ரீடியங்கள்

C) 16 இணை நெப்ரீடியங்கள்

D) 17 இணை நெப்ரீடியங்கள்

விளக்கம்: அட்டையில் கழிவு நீக்கமானது நெப்ரீடியா எனப்படும் கண்டவாரயாக அமைந்த, சிறிய சுருண்ட, இணை குழல்கள் மூலம் நடைபெறுகிறது 17 இணை நெப்ரீடியங்கள் உள்ளன. இவை 6 முதல் 22 வரையான கண்டங்களில் அமைந்த நெப்ரீடியத்துளைகள் மூலம் வெளித்திறக்கின்றன.

45. அட்டையின் ஆண் இனப்பெருக்க மண்டலம் பற்றியக் கூற்றுக்களில் பொருந்தாததைக் கண்டறி:

A) 12 ஆவது கண்டம் முதல் 22 ஆவது கண்டம் வரை ஒவ்வொரு கண்டத்திலும் ஓரிணை வீதம் பதினொரு இணை விந்தகங்கள் உள்ளன.

B) அவை விந்தகப் பைகள் என்ற கோள வடிவப் பைகளாக உள்ளன.

C) ஒவ்வொரு விந்தகத்திலிருந்தும் விந்து வெளிச் செலுத்து நாளம் என்ற சிறிய குழாய் தோன்றி, அப்பகுதியிலுள்ள விந்து நாளத்துடன் இணைகிறது. இவ்விந்து நாளமானது மிக அதிக சுருள்களைப் பெற்று, விந்து முதிர்ச்சிப் பை அல்லது எபிடிடைமிஸ் ஆக மாறுகிறது.

D) விந்து நாளத்திலிருந்து பெறப்படும் விந்தணுக்களை வெளியேற்ற இப்பை பயன்படுகிறது.

விளக்கம்: விந்து நாளத்திலிருந்து பெறப்படும் விந்தணுக்களை சேமிக்க இப்பை பயன்படுகிறது.

46. அட்டையின் பெண் இனப்பெருக்க மண்டலம் பற்றிய கூற்றுக்களில் பொருந்தாததைக் கண்டறி:

A) இம் மண்டலம் அண்டகங்கள், அண்ட குழல்கள், பொது அண்ட நாளம் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்பைக் கொண்டுள்ளது.

B) அண்டகத்திலிருந்து அண்டகங்கள்(சினைசெல்கள்) விடுவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு அண்டகத்திலிருந்தும் ஒரு சிறிய அண்டக் குழல் உருவாகிறது.

C) இரு பக்க அண்டக் குழல்களும் இணைந்து ஒரு பொது அண்ட நாளமாகிறது.

D) அண்டநாளமானது பேரிச்சை வடிவ யோனியினுள் திறக்கிறது. யோனி 11 ஆவது கண்டத்தின் பின்புறத்தில் வயிற்றுப்புற மையப் பகுதியில் அமைந்துள்ளது.

விளக்கம்: அண்டநாளமானது பேரிக்காய் வடிவ யோனியினுள் திறக்கிறது. யோனி 11 ஆவது கண்டத்தின் பின்புறத்தில் வயிற்றுப்புற மையப் பகுதியில் அமைந்துள்ளது.

47. அட்டையில் நடைபெறும் கருவுறுதலானது_____________

A) புறக் கருவுறுதல்

B) வெளிக் கருவுறுதல்

C) அகக் கருவுறுதல்

D) கருவுறுதல் நடைபெறுவதில்லை

விளக்கம்: அட்டையில் அகக் கருவுறுதல் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து கக்கூன் உருவாகிறது. கக்கூன் முட்டைக் கூடு எனப்படும். இது 9,10 மற்றும் 11 ஆவது கண்டங்களைச் சுற்றி உருவாகிறது.

48. அட்டையில் நடைபெறும் கருவளர்ச்சிப் பற்றிய கருத்துக்களில் சரியானதைக் கண்டறி:

1) கரு வளர்ச்சி நேரடியானது முட்டைக் கூட்டினுள் 1 முதல் 24 கருக்கள் வளர்சின்றன.

2) முதிர்ந்த அட்டையைப் போன்ற தோற்றம் கொண்ட இளம் அட்டைகள் வெளிவருகின்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

49. கீழ்க்கண்டவற்றுள் அட்டையின் மருத்துவப் பயன்களுல் பொருந்தாததைக் காண்க.

1) அட்டைகள் இரத்த உறைவைத் தடுத்து இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்துவதில் செயல்திறன் மிக்கவை.

2) சுற்றோட்டக் குறைபாடுகளையும், இரத்த ஓட்ட மண்டலம் தொடர்பான நோய்களையும் அட்டைகள் குணப்படுத்துகின்றன.

3) அட்டையின் கழிவுப் பொருளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வேதிப்பொருள்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

A) 12 மட்டும் தவறு

B) 3 மட்டும் தவறு

C) 2 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: அட்டையின் உமிழ்நீரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வேதிப்பொருள்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

50. அட்டையின் ஒட்டுண்ணித் தகவமைப்புகள் பற்றியக் கருத்துக்களில் தவறானதைக் கண்டறி:

A) தொண்டை இரத்தத்தை உறிஞ்சப் பயன்படுகிறது.

B) உடலின் இரு முனைகளிலும் உள்ள ஒட்டுறிஞ்சிகள் அட்டையை விருந்தோம்பியுடன் உறுதியாக இணைத்துக் கொள்ளப் பயன்படும் கவ்வும் உறுப்புகளாகச் செயல்படுகின்றன.

C) அட்டையின் வாயினுள் காணப்படும் மூன்று தாடைகள் விருந்தோம்பியின் உடலில் வலியில்லாத X – வடிவ காயத்தை உருவாக்க உதவுகின்றன.

D) தீனிப்பையில் இரத்தம் சேமிக்கப்படுகிறது. இது அட்டைக்கு பல மாதங்களுக்கு ஊட்டமளிக்கிறது. இதன் காரணமாக சீரண நீரோ, நொதிகளோ அதிக அளவில் சுரக்க வேண்டிய தேவையில்லை.

விளக்கம்: அட்டையின் வாயினுள் காணப்படும் மூன்று தாடைகள் விருந்தோம்பியின் உடலில் வலியில்லாத Y – வடிவ காயத்தை உருவாக்க உதவுகின்றன.

51. நோயாளியின் உடலிலிருந்து நச்சு, அசுத்தப் பொருள்களை வெளியேற்றும் ஒரு நுட்பமான செயல்____________

A) இரத்தத்தை சேமித்தல்

B) இரத்தத்தை வடிகட்டுதல்

C) இரத்தத்தை வழிய விடுதல்

D) இரத்தத்தை வழிய விடாமல் தடுத்தல்

52. ஓரிக்டோலேகஸ் கியூனிகுலஸ் எனும் விலங்கியல் பெயர் குறிப்பது___________

A) அட்டை

B) இந்தியக் கால்நடை அட்டை

C) முயல்

D) கரடி

53. கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளதைக் கண்டறி.

1) தொகுதி – முதுகெலும்பிகள்

2) துணைத் தொகுதி – முதுகுநாணிகள்

3) வகுப்பு – பாலூட்டிகள்

4) வரிசை – லேகோமார்ஃபா

A) 1, 2 மட்டும் தவறு

B) 3, 4 மட்டும் தவறு

C) அனைத்தும் சரி

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

1) தொகுதி – முதுகுநாணிகள்

2) துணைத் தொகுதி – முதுகெலும்பிகள்

3) வகுப்பு – பாலூட்டிகள்

4) வரிசை – லேகோமார்ஃபா

54. ஓரிக்டோலேகஸ் கியூனிகுலஸ் என்பதில் சிற்றினப்பெயரைக் காண்க.

A) ஓரிக்டோலேகஸ்

B) கியூனிகுலஸ்

C) லேகோமார்ஃபா

D) ஓரிக்டோலோகாஸ்

55. கீழ்க்கண்டவற்றுள் முயலின் உணவுப் பொருள்களுல் அல்லாதது எது.

A) புல்

B) முள்ளங்கி

C) கேரட்

D) இறந்த உயிரினங்கள்

விளக்கம்: முயல் ஒரு சாந்தமான மற்றும் பயந்த சுபாவமுள்ள, விலங்காகும் இது வளையில் வாழும். தாவி இடம் பெயரக்கூடிய இவ்விலங்குகள் உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகின்றன. இவை புல் மற்றும் முள்ளங்கி, கேரட் போன்ற காய்கறிகளையும் கீரைகளையும் உண்கின்றன. இவை கூட்டமாக வாழும் இயல்புடையவை.

56. குள்ள முயலானது அழியும் அபாய நிலையிலுள்ள விலங்கு என வாஷிங்டனில் பட்டியலிடப்பட்ட ஆண்டு_____________

A) 1980

B) 1990

C) 1993

D) 1996

விளக்கம்: குள்ள முயலானது அழியும் அபாய நிலையிலுள்ள விலங்கு என 1990 இல் வாஷிங்டனில் பட்டியலிடப்பட்டது. வாழிட இழப்பால் இம்முயலின் எண்ணிக்கையும், பரவுதல் குறைந்து போனதே இதற்குக் காரணம்.

57. கொலம்பியா வடிநில குள்ள முயலினை அழியும் நிலையிலுள்ள விலங்கு என அறிவிக்கப்பட்ட ஆண்டு.

A) மார்ச் 2000

B) மார்ச் 2001

C) மார்ச் 2002

D) மார்ச் 2003

விளக்கம்: மார்ச் 2003 -ல் கொலம்பியா வடிநில குள்ள முயல் அழியும் நிலையிலுள்ள விலங்கு என அறிவிக்கப்பட்டது.

58. முயல்களின் உடல் வெது வெதுப்பாக இரக்க காரணம்_________

A) குறைந்த எடை

B) குறைந்த நீளம்

C) ரோமங்கள்

D) உருளை வடிவ உடல்

விளக்கம்: முயலானது நீண்ட சற்றே உருளை வடிவ உடலைக் கொண்டது. ஆண் மற்றும் பெண் முயல்கள் ஒரே அளவுடையவை இவை சுமார் 45 செ.மீ. நீளமும். சுமார் 2.25 கிகி எடையும் பெறும் அளவுக்கு வளர்பவை. வெள்ளை, கருப்பு மற்றும் வெள்ளை நிறம் உட்பட பல்வேறு நிறங்களில் காணப்படுகின்றன. உடலை வெது வெதுப்பாக வைத்திருக்க உரோமங்களால் மூடப்பட்டுள்ளது.

59. ஒரு முயல் மற்ற முயல்களுக்கு அபாய சைகைகளை வழங்க பயன்படுத்தும் உறுப்பு_____________

A) கண்

B) உடல்பகுதி

C) சத்தமிடுதல்

D) வால் பகுதி

60. கீழ்க்கண்டவற்றுல் முயல்களின் புறத்தோல் மாறுபாட்டுடன் பொருந்தாதது எது.

A) வியர்வைச் சுரப்பிகள்

B) எண்ணெய் சுரப்பிகள்

C) பால் சுரப்பிகள்

D) உமிழ்நீர் சுரப்பி

விளக்கம்: உடலின் வெளிப்படும் புறத்தோலால் சூழப்பட்டுள்ளது. உரோமம், வளை நகங்கள், வியர்வைச் சுரப்பிகள், எண்ணெய் சுரப்பிகள், பால் சரப்பிகள் ஆகியவை புறத்தோலின் மாறுபாடுகளாகும்.

61. முயல் குட்டிகளின் உடல் வெப்பநிலையை பராமரிப்பது_________

A) வியர்வை சுரப்பி

B) உமிழ்நீர் சுரப்பி

C) எண்ணெய் சுரப்பிகள்

D) A, C இரண்டும்

62. முயல் குட்டியின் உடலின் உட்பகுதியானது கீழ்க்கண்ட எதன் மூலம் மார்பறையாகவும், வயிற்றறையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

A) கல்லீரல்

B) நுரையீரல்

C) கணையம்

D) உதரவிதானம்

விளக்கம்: முயல் ஒரு உண்மையான உடற்குழியுடைய விலங்கு உடலின் உட்பகுதி குறுக்குத் தடுப்பான உதரவிதானம் மூலம் மார்பறையாகவும், வயிற்றறையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. உதரவிதானம் பாலூட்டிகளில் மட்டுமே காணப்படும் ஒரு சிறப்புப் பண்பாகும்.

63. முயலின் சீரண மண்டல உறுப்புகளை சரியான முறையில் வரிசைப்படுத்துக.

A) வாய்க்குழி-உணவுக்குழாய்-இரைப்பை-சிறுகுடல்-பெருங்குடல்-மலவாய்

B) உணவுக்குழாய்-வாய்க்குழி-இரைப்பை-சிறுகுடல்-பெருங்குடல்-மலவாய்

C) உணவுக்குழாய்-வாய்க்குழி-இரைப்பை-பெறுங்குடல்-சிறுங்குடல்-மலவாய்

D) வாய்க்குழி-உணவுக்குழாய்-இரைப்பை-பெருங்குடல்-சிறுகுடல்-மலவாய்

64. செல்லுலோசை செரிக்க உதவுவது__________

A) பாக்டிரியோபேஜ்

B) லாக்டோபேசில்லஸ்

C) பாக்டீரியா

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: வாய்க்குழியானது தொண்டையின் மூலம் உணவுக்குழாயாகத் தொடர்கிறது. உணவுக்குழல் இரைப்பையினுள் திறக்கிறது. இரைப்பையைத் தொடர்ந்து சிறுகுடல் அமைந்துள்ளது. மெல்லிய சுவருடைய குடல்வால் நீட்சி, சிறுகுடலும் பெருங்குடலும் சந்திக்குமிடத்தில் காணப்படுகிறது. இதில் உள்ள பாக்டீரியா, செல்லுலோசைச் செரிக்க உதவுகிறது. சிறுகுடல் பெருங்குடலாகத் தொடர்கிறது. பெருங்குடலில் கோலன் மற்றும் மலக்குடல் என்ற இரு பகுதிகள் உள்ளன. மலக்குடல் மலத்துளை மூலம் வெளித் திறக்கிறது.

65. கீழ்க்கண்டவற்றுள் சீரணச் சுரப்பிகளுல் அல்லாதது எது.

A) உமிழ்நீர்ச் சுரப்பிகள்

B) இரைப்பைச் சுரப்பிகள்

C) இனப்பெருக்கச் சுரப்பிகள்

D) சிறுகுடல் சுரப்பிகள்

விளக்கம்: உமிழ்நீர்ச் சுரப்பிகள், இரைப்பைச் சுரப்பிகள், கல்லீரல், கணையம் மற்றும் சிறுகுடல் சுரப்பிகள் போன்றவை சீரணச் சுரப்பிகளாகும். இச்சுரப்பிகள் சுரக்கம் நொதிகள் உணவுப் பாதையின் உணவின் செரிமாணத்திற்கு துணை புரியம்.

66. முயலின் பல்லமைப்புப் பற்றியக் கூற்றுக்களில் பொருந்தாததைக் காண்க.

A) பற்கள் மென்மையான, எலும்பு போன்ற அமைப்புகள். இவை உணவுப் பொருட்களை வெட்டுவதற்கும், மெல்லுவதற்கும், அரைப்பதற்கும் பயன்படுகின்றன.

B) முயல் தன் வாழ்நாளில் இரு தொகுதி பற்களைப் பெறுகிறது. இவ்வாறு ஒரு விலங்கின் வாழ்நாளில் இரு தொகுதி பற்கள் காணப்படும் நிலை ‘இரு முறை தோன்றும் பல்லமைப்பு’ எனப்படுகிறது.

C) முயலின் பற்கள் வெவ்வேறு வகையின. இத்தகைய பல்லமைப்புக்கு ‘மாறுபட்ட பல்லமைப்பு’ என்று பெயர்.

D) பாலூட்டிகளில் நான்கு வகைப் பற்கள் காணப்படுகின்றன. அவை வெட்டும் பற்கள் (I), கோரைப்பற்கள் (C), முன் கடவாய் பற்கள் (PM), பின் கடவாய் பற்கள் (M) ஆகும்.

விளக்கம்: பற்கள் கடினமான, எலும்பு போன்ற அமைப்புகள். இவை உணவுப் பொருட்களை வெட்டுவதற்கும், மெல்லுவதற்கும், அரைப்பதற்கும் பயன்படுகின்றன.

67. கீழ்க்கண்டவற்றுள் பாலுட்டிகளின் சரியான பற்சூத்திரத்தைக் காண்க.

A)

B)

C)

D)

விளக்கம்: ஒரு பாலூட்டியில் காணப்படும் பற்களைப் பற்றி சுருக்கமாக எழுதும் முறையே பல வாய்ப்பாடு ஆகும். ஒரு பாலூட்டியின் மேல் மற்றும் கீழ்த் தாடைகளின் ஒரு பக்கத்தில் மட்டும் காணப்படும் வெவ்வேறு வகைப் பற்களின் எண்ணிக்கையை இது குறிக்கிறது.

68. கீழ்க்கண்டவற்றுள் முயலின் பல் வரிசையுடன் பொருந்தாததைக் காண்க.

A) வெட்டும் பற்கள்

B) கோரைப்பற்கள்

C) முன் கடவாய்ப் பற்கள்

D) பின் கடவாய்ப் பற்கள்

69. முயலின் வெட்டும் பற்களுக்கும், முன் கடைவாய்ப் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி___________

A) டயாஸ்டீமா

B) பல் இடைவெளி

C) டென்டிடஸ்

D) A, B இரண்டும்

விளக்கம்: முயலின் வெட்டும் பற்களுக்கும், முன் கடைவாய்ப் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி டயாஸ்டீமா அல்லது பல் இடைவெளி என அழைக்கப்படுகிறது. மெல்லும் போதும், அரைக்கும்போதும் உணவைக் கையாளுவதற்கு இந்த பல் இடைவெளி பயன்படுகறிது.

70. முயலின் சவாச மண்டலம் பற்றிய தவறான கருத்தைத் தேர்வு செய்க.

A) முயலில் சுவாசம் ஈரிணை நுரையீரல்களால் நிகழ்த்தப்படுகிறது.

B) இவை மென்மையான பஞ்சு போன்ற திசுக்களால் ஆக்கப்பட்டு, மார்புக்கூட்டினுள் வைக்கப்பட்டுள்ளன.

C) மார்றையானது முதுகுப் புறத்தில் முதுகெலும்புத் தொடராலும், வயிற்றுப்புறத்தில் மார்பெலும்பாலும், பக்கவாட்டில் விலா எலும்புகளாலும் சூழப்பட்டுள்ளது.

D) மார்பறையின் கீழ்ப்பகுதியில் குவிந்த உதரவிதானம் அமைந்துள்ளது.

விளக்கம்: முயலில் சுவாசம் ஓரிணை நுரையீரல்களால் நிகழ்த்தப்படுகிறது.

71. நுரையீரலைச் சுற்றி காணப்படும் உறை___________

A) மையலின் உறை

B) பெரிகார்டியம்

C) பெரியாஸ்டியம்

D) ப்ளுரா உறை

விளக்கம்: ஒவ்வொரு நுரையீரலும் ப்ளுரா என்ற இரட்டைச் சவ்வுகளால் ஆன உறையால் சூழப்பட்டுள்ளது. வெளிப்புறக் காற்று, புற நாசித்துளைகள் வழியாக சுவாசப் பாதையில் நுழைந்து தொண்டையை அடைகிறது.

72. முயலின் சுவாச முறைப் பற்றியக் கூற்றுக்களுல் சரியானதைக் கண்டறி:

1) வெளிப்பறுக் காற்று, புற நாசித்துளைகள் வழியாக சுவாசப் பாதையில் நுழைந்து தொண்டையை அடைகிறது.

2) தொண்டையிலிருந்து குரல்வளை வழியாக மூச்சுக் குழாயினுள் காற்று நுழைகிறது. மூச்சுக் குழாயின் மேற்பகுதி அகன்று குரல் பெட்டியாக மாறியுள்ளது.

3) லேரிங்ஸ் எனப்படும் இக் குரல்பெட்டியின் சுவர் நான்கு குருத்தெலும்புத் தகடுகளால் வலுவூட்டப் பெற்றுள்ளது.

4) குரல்பெட்டியினுள் உள்ள குரல் நாண்கள் அதிர்வடைவதால் ஒலி உருவாகிறது. குரல்பெட்டி டிரக்கியா அல்லது மூச்சுக் குழாயாகத் தொடர்கிறது.

A) 1 மட்டும் சரி

B) 2, 3 மட்டும் சரி

C) 1, 3, 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

73. முயலின் சுவாச முறைப் பற்றியக் கூற்றுக்களுல் தவறானதைக் கண்டறி:

A) மூச்சுக்குழாயின் வழியே காற்று எளிதாகச் சென்று வரும் வகையில் அதன் சுவர்கள் தசைகளால் தாங்கப்படுகின்றன.

B) உணவானது குரல்வளை வழியாக மூச்சுக் குழாயினுள் செல்வதை குரல்வளை மூடி தடுக்கிறது.

C) மூச்சுக்குழாய் மார்புப் பகுதியை அடைந்ததும் இரு மூச்சுக் கிளைக் குழல்களாகப் பிரிந்து, ஒவ்வொரு கிளைக்குழலும் ஒரு நுரையீரலினுள் நுழைகிறது.

D) இம் மூச்சுக் கிளைக் குழல்கள் மூச்சு நுண்கிளைக் குழல்களாகப் பிரிந்து, காற்று நுண்ணறைகளில் முடிகிறது.

விளக்கம்: மூச்சுக்குழாயின் வழியே காற்று எளிதாகச் சென்று வரும் வகையில் அதன் சுவர்கள் குருத்தெலும்பு வளையங்களால் தாங்கப்படுகின்றன.

74. உணவானது குரல்வளை வழியாக மூச்சுக் குழாயினுள் செல்வதை தடுப்பது___________

A) குரல்வளை

B) குரல்வளை மூடி

C) மூச்சுக்குழாய்

D) காற்று நுண்ணறை

75. முயலின் சுற்றோட்ட மண்டலமானது கீழ்க்கண்ட எதனை உள்ளடக்கியது.

A) இரத்தம்

B) இரத்தக் குழாய்கள்

C) இதயம்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: முயலின் சுற்றோட்ட மண்டலம் இரத்தம், இரத்தக்குழாய்கள் மற்றும் இதயம் ஆகியவற்றைக் கொண்டது. இதயம் பேரிக்காய் வடிவத்தில் மார்பறையினுள் இரு நுரையீரல்களுக்கும் இடையில் அமைந்துள்ளது.

76. கூற்று (i): சுவாச நிகழ்வுகள் உட்சுவாசம் மற்றும் வெளிச்சுவாசம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்நிகழ்வுகள் மூலம் வாயு பரிமாற்றம் நிகழ்கிறது.

கூற்று (ii): உட்சுவாசமானது ஒரு மந்த நிகழ்வாகும். ஆனால் வெளிச்சுவாசம் ஒரு செயல்மிகு நிகழ்வாகும்.

A) கூற்று i சரி, கூற்று ii தவறு

B) கூற்று i தவறு, கூற்று ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

விளக்கம்: சுவாச நிகழ்வுகள் உட்சுவாசம் மற்றும் வெளிச்சுவாசம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்நிகழ்வுகள் மூலம் வாயு பரிமாற்றம் நிகழ்கிறது. உட்சுவாசமானது ஒரு செயல்மிகு நிகழ்வாகும். ஆனால் வெளிச்சுவாசம் ஒரு மந்த நிகழ்வாகும்.

77. முயலின் இதயமானது கீழ்க்கண்ட எந்த உறையினால் சூழப்பட்டுள்ளது.

A) ப்ளுரா உறை

B) மையலின் உறை

C) பெரியாஸ்டியம் உறை

D) பெரிகார்டியம் உறை

78. முயலின் இதயமானது கீழ்க்கண்ட எந்த வடிவத்தால் ஆனது__________

A) அவரை

B) பேரிச்சை

C) பேரிக்காய்

D) காற்புள்ளி

79. முயலின் இதயமானது எத்தனை அறைகளைக் கொண்டது.

A) மூன்று

B) நான்கு

C) இரண்டு

D) ஐந்து

விளக்கம்: இதயம் இரு ஆரிக்கிள்கள் மற்றும் இரு வெண்ட்ரிக்கிள்கள் என நான்கு அறைகளைக் கொண்டது.

80. வலது மற்றும் இடது ஆரிக்கிள்கள் கீழ்க்கண்ட எந்த சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன.

A) ஆரிக்கிள் இடைத் தடுப்புச் சுவர்

B) வெண்ட்ரிக்கள் இடைத் தடுப்புச் சுவர்

C) ஈரிதழ் வால்வு

D) மிட்ரல் வாழ்வு

81. வலது மற்றும் இடது வெண்ட்ரிக்கிள்கள் கீழ்க்கண்ட எந்த சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன.

A) ஆரிக்கிள் இடைத் தடுப்புச் சுவர்

B) வெண்ட்ரிக்கள் இடைத் தடுப்புச் சுவர்

C) ஈரிதழ் வால்வு

D) மிட்ரல் வாழ்வு

82. வலது ஆரிக்குலோ-வெண்ட்ரிக்குலார் துளையானது கீழ்க்கண்ட எந்த வால்வின் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

A) ஈரிதழ் வால்வு

B) மூவிதழ் வால்வு

C) மிட்ரல் வால்வு

D) அரைச்சந்திர வால்வு

விளக்கம்: வலது ஆரிக்கிலோ-வெண்ட்ரிக்குலார் துளை மூலம் வலது ஆரிக்கள், வலது வெண்ட்ரிக்கிளினுள் திறக்கிறது. இத்துளை மூவிதழ் வால்வினால் காக்கப்படுகிறது.

83. இடது ஆரிக்குலோ-வெண்ட்ரிக்குலார் துளையானது கீழ்க்கண்ட எந்த வால்வின் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

A) ஈரிதழ் வால்வு

B) மூவிதழ் வால்வு

C) மிட்ரல் வால்வு

D) A, C இரண்டும்

விளக்கம்: இடது ஆரிக்கிள், இடது வெண்ட்ரிக்கிளினுள் இடது ஆரிக்குலோ-வெண்ட்ரிக்குலார் துளை மூலம் திறக்கிறது. இத்துளையை ஈரிதழ் வால்வு அல்லது மிட்ரல் வால்வு காக்கிறது.

84. நுரையீரல் வளைவு மற்றும் பெருந்தமனி திறக்கும் இடங்களில் உள்ள வால்வு___________

A) ஈரிதழ் வால்வு

B) மூவிதழ் வால்வு

C) மிட்ரல் வால்வு

D) அரைச்சந்திர வால்வு

விளக்கம்: நுரையீரல் வளைவு மற்றும் பெருந்தமனி திறக்கும் இடங்களில் அரைச்சந்திர வால்வுகள் உள்ளன.

85. கீழ்க்கண்ட எதன் மூலம் உடலின் அனைத்துப்பாகங்களிலிருந்தும் ஆக்சிஜன் நீக்கம் பெற்ற இரத்தத்தை வலது ஆரிக்கிள் பெறுகிறது.

A) இரு மேற்பெருஞ்சிரைகள்

B) ஒரு கீழ்ப்பெருஞ்;சிரை

C) ஈரிதழ் வால்வு

D) A, B இரண்டும்

விளக்கம்: இரு மேற்பெருஞ்சிரைகள் (முன்கேவல் சிரைகள்) மற்றும் ஒரு கீழ்ப்பெருஞ்சிரை (பின்கேவல் சிரைகள்) மூலம் உடலின் அனைத்துப்பாகங்களிலிருந்தும் ஆக்சிஜன் நீக்கம் பெற்ற இரத்தத்தை வலது ஆரிக்கிள் பெறுகிறது.

86. கீழ்க்கண்ட எதன் மூலம் இடது ஆரிக்கிளானது நுரையீரல்களிலிருந்து ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தத்தை பெறுகிறது.

A) இரு மேற்பெருஞ்சிரைகள்

B) ஒரு கீழ்ப்பெருஞ்;சிரை

C) ஈரிதழ் வால்வு

D) நுரையீரல் சிரை

விளக்கம்: இடது ஆரிக்கிள், நுரையீரல் சிரைகள் மூலம் நுரையீரல்களிலிருந்து ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தத்தைப் பெறுகிறது. வலது வெண்ட்ரிக்களிலிருந்து நுரையீரல் வளைவு கிளம்பி, ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தை நுரையீரல்களுக்கு எடுத்துச் செல்கிறது. இடது வெண்ட்ரிக்கிளலிருந்து சிஸ்டமிக் வளைவு கிளம்பி, ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்புகிறது.

87. கூற்று (i): வலது வெண்ட்ரிக்களிலிருந்து நுரையீரல் வளைவு கிளம்பி, ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தை நுரையீரல்களுக்கு எடுத்துச் செல்கிறது.

கூற்று (ii): இடது வெண்ட்ரிக்கிளலிருந்து சிஸ்டமிக் வளைவு கிளம்பி, ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்புகிறது.

A) கூற்று i சரி, கூற்று ii தவறு

B) கூற்று i தவறு, கூற்று ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

விளக்கம்: வலது வெண்ட்ரிக்களிலிருந்து நுரையீரல் வளைவு கிளம்பி, ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தை நுரையீரல்களுக்கு எடுத்துச் செல்கிறது. இடது வெண்ட்ரிக்கிளிலிருந்து சிஸ்டமிக் வளைவு கிளம்பி, ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்புகிறது.

88. முயலின் நரம்பு மண்டலமானது கீழ்க்கண்ட எவற்றை உள்ளடக்கியது.

A) மைய நரம்பு மண்டலம் (CNS)

B) புறஅமைவு நரம்பு மண்டலம் (PNS)

C) தானியங்கு நரம்பு மண்டலம் (ANS)

D) மேற்கண்ட அனைத்தும்

89. பொருத்துக:

A) மைய நரம்ப மண்டலம் – 1. பரிவு (ம) இணைப் பரிவு மண்டலம்

B) புற அமைவு நரம்பு மண்டலம் – 2. (12 இணை மூளை நரம்புகள்)

C) தானியங்கு நரம்பு மண்டலம் – 3. மூளையும் தண்டுவடமும்

D) மூளை – 4. மண்டையோடு

A) 4 3 2 1

B) 2 4 1 3

C) 2 1 3 4

D) 3 2 1 4

விளக்கம்:

A) மைய நரம்ப மண்டலம் – 1. மூளையும் தண்டுவடமும்

B) புற அமைவு நரம்பு மண்டலம் – 2. (12 இணை மூளை நரம்புகள்)

C) தானியங்கு நரம்பு மண்டலம் – 3. பரிவு (ம) இணைப் பரிவு மண்டலம்

D) மூளை – 4. மண்டையோடு

90. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் கண்டறி.

மூளைப்பகுதி சவ்வு

A) வெளச்சவ்வு – அரக்னாய்டு

B) உட்சவ்வு – பயாமேட்டர்

C) இடைச்சுவ்வு – டியூராமேட்டர்

A) 1, 2 மட்டும் தவறு

B) 1, 3 மட்டும் தவறு

C) 2 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

A) வெளச்சவ்வு – டியூராமேட்டர்

B) உட்சவ்வு – பயாமேட்டர்

C) இடைச்சுவ்வு – அரக்னாய்டு

91. மூளையானது கீழ்க்கண்ட எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது.

A) முன்மூளை

B) நடுமூளை

C) பின்மூளை

D) மேற்கண்ட அனைத்தும்

92. கீழ்க்கண்டவற்றுள் முன் மூளையுடன் பொருந்தாதது எது.

A) ஓரிணை நுகர்ச்சிக் கதுப்புகள்

B) பெருமூளை அரைக் கோளங்கள்

C) டையன்செஃபலான்

D) பான்ஸ்

விளக்கம்: முன்மூளை ஓரிணை நுகர்ச்சிக் கதுப்புகள், பெருமூளை அரைக் கோளங்கள் மற்றும் டையன்செஃபலான் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது.

93. பெருமூளை அரைக்கோளங்கள் இரண்டும்__________என்ற குறுக்கு நரம்புப் பட்டையால் இணைக்கப்பட்டுள்ளன.

A) கார்பஸ் கலோசம்

B) பான்ஸ்

C) முகுளம்

D) வெரோலி

விளக்கம்: பெருமூளை அரைக்கோளங்கள் இரண்டும் கார்பஸ் கலோசம் என்ற குறுக்கு நரம்புப் பட்டையால் இணைக்கப்பட்டுள்ளன.

94. கீழ்க்கண்டவற்றுள் பார்வைக்கோளங்களைக் கொண்ட மூளைப்பகுதி____________

A) முன்மூளை

B) நடுமூளை

C) பின்மூளை

D) மேற்கண்ட அனைத்தும்

95. பின் மூளையானது கீழ்க்கண்ட எதனை உள்ளடக்கியது.

A) சிறுமூளை

B) பான்ஸ்

C) முகுளம்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: பின் மூளையில் சிறுமூளை, பான்ஸ் வெரோலி மற்றும் முகுளம் ஆகியவை உள்ளன.

96. முயலின் சிறுநீரக இனப்பெருக்க மண்டலம் பற்றிய கூற்றுக்களில் சரியானதைக் கண்டறி:

A) இது கழிவுநீக்க மற்றும் இனப்பெருக்க மண்டலங்களை உள்ளடக்கியது.

B) கருநிலையில் உள்ளபோது இவ்விரு மண்டலங்களும் ஒன்றினைந்து வளர்ச்சியடைகின்றன.

C) முதிர் உயிரியில் இம்மண்டலங்கள் தனித்தனியே சிறுநீரக இனப்பெருக்க மண்டலம் என்ற ஒரே மண்டலமாகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: இது கழிவுநீக்க மற்றும் இனப்பெருக்க மண்டலங்களை உள்ளடக்கியது. கருநிலையில் உள்ளபோது இவ்விரு மண்டலங்களும் தனித்தனியே வளர்ச்சியடைகின்றன. முதிர் உயிரியில் இம்மண்டலங்கள் ஒன்றினைந்து, சிறுநீரக இனப்பெருக்க மண்டலம் என்ற ஒரே மண்டலமாகிறது.

97. முயலின் கழிவுநீக்க உறுப்பான சிறுநீரகத்தின் வடிவம்_________

A) பேரிச்சை

B) பேரிக்காய்

C) அவரை

D) காற்புள்ளி

விளக்கம்: சிறுநீரகங்கள் கருஞ்சிவப்பு நிறமும், அவரை விரை வடிவமும் கொண்டு வயிற்றறையில் அமைந்துள்ளன. ஒவ்வொரு சிறுநீரகமும் பல நெஃப்ரான்களால் ஆக்கப்பட்ட மெட்டாநெஃப்ரிக் வகையைச் சேர்ந்ததாகும்.

98. கூற்று (i): முயலின் கழிவுநீக்க உறுப்பான ஒவ்வொரு சிறுநீரகமும் பல நெஃப்ரான்களால் ஆக்கப்பட்ட மெட்டாநெஃப்ரிக் வகையைச் சேர்ந்ததாகும்.

கூற்று (ii): சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து நைட்ரஜன் சாராத கழிவுப் பொருள்களைப் பிரித்தெடுத்து, யூரியா வடிவில் வெளியேற்றுகின்றன.

A) கூற்று i சரி, கூற்று ii தவறு

B) கூற்று i தவறு, கூற்று ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

விளக்கம்: முயலின் கழிவுநீக்க உறுப்பான ஒவ்வொரு சிறுநீரகமும் பல நெஃப்ரான்களால் ஆக்கப்பட்ட மெட்டாநெஃப்ரிக் வகையைச் சேர்ந்ததாகும். சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து நைட்ரஜன் சார் கழிவுப் பொருள்களைப் பிரித்தெடுத்து, யூரியா வடிவில் வெளியேற்றுகின்றன.

99. முயலின் இனப்பெருக்கத்தில் பங்குகொள்ளும் மூன்று துணைச் சுரப்பிகளில் பொருந்தாததைக் காண்க.

A) புராஸ்டேட் சுரப்பி

B) கௌப்பர் சுரப்பி

C) கழிவிடச் சுரப்பி

D) பெரினியல் சுரப்பி

விளக்கம்: இனப்பெருக்கத்தில் பங்குகொள்ளும் மூன்று துணைச் சுரப்பிகள் உள்ளன. அவை முறையே புராஸ்டேட் சுரப்பி, கௌப்பர் சுரப்பி, மற்றும் கழிவிடச் சுரப்பிகள் ஆகும்.

100. முயலின் பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படும் சிறப்பு செல்கள்__________

A) விந்தணுக்கள்

B) ஃபெலோப்பியன்

C) கிராஃபியன் பாலிக்கிள்கள்

D) மேற்கண்ட எதுமில்லை

விளக்கம்: முயலின் பெண் இனப்பெருக்க மண்டலத்தில் ஓரிணை அண்டகங்களும், தொடர்புடைய சுரப்பிகளும் உள்ளன. இவை சிறுநீரகங்களுக்குப் பின்னால் வயிற்றறையில் அமைந்துள்ளன. அண்டகங்கள் அண்ட செல்(முட்டை)களை உற்பத்தி செய்கின்றன. கிராஃபியன் பாரிக்கிள்கள் என்ற சிறப்பு செல்கள் கொத்தாக ஒவ்வொரு அண்ட செல்லையும் சூழ்ந்துள்ளது.

101. ஒவ்வொரு அண்டகமும் கீழ்க்கண்ட எந்த குழாயினுள் அண்ட செல்லை விடுவிக்கின்றது.

A) கிராஃபியன் பாலிக்கிள்

B) பெலோப்பியன் குழல்

C) அண்ட நாளம்

D) அண்டச் சுரப்பி

விளக்கம்: ஒவ்வொரு அண்டகமும் ஃபெலோப்பியன் குழல் என்ற அண்டக் குழாயினுள் அண்ட செல்லை விடுவிக்கிறது. இவ்வண்டக் குழாயின் வாய்ப் பகுதி அண்டகத்தை ஒட்டியமைந்துள்ளது. இக்குழாய் அகன்ற பகுதியான கருப்பையைத் தொடர்கிறது.

102. கூற்று (i): முயலின் கருப்பை இரு தனித்தனிப் பகுதிகளாக அமைந்து, மையத்தில் ஒன்றாக இணைந்து யோனி அல்லது பிறப்புக் கால்வாயாக மாறுகிறது.

கூற்று (ii): சிறுநீர்ப் பையும் யோனியும் இணைந்து, வெஸ்டிபியூல் அல்லது சிறுநீரக இனப்பெருக்க கால்வாய் உருவாகிறது. இக்கால்வாய் பின்னோக்கி சென்று, சிறிய பிளவு போன்ற பிறப்பிறப்பு அல்லது வல்வாவாக வெளித் திறக்கிறது.

A) கூற்று i சரி, கூற்று ii தவறு

B) கூற்று i தவறு, கூற்று ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

103. அட்டையின் இடப்பெயர்ச்சி உறுப்புகள்___________

A) முன் ஒட்டுறுப்பு

B) பின் ஒட்டுறுப்பு

C) சீட்டான்கள்

D) எதுவுமில்லை

104. அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

A) மெட்டாமியர்கள் (சோமைட்டுகள்)

B) புரோகிளாட்டிடுகள்

C) ஸ்ட்ரோபிலா

D) இவை அனைத்தும்

விளக்கம்: மெட்டாமெரிசக் கண்ட அமைப்பு உடலில் காணப்படுகிறது. அட்டையின் உடல் 33 கண்டங்கள் அல்லது சோமைட்டுகள் என்ற பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இக்கண்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கண்டமும் மேற்கொண்டு, மேலோட்டமாக வளையங்கள் அல்லது அன்னுலையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

105. அட்டையின் தொண்டைப்புற நரம்புத்திரள் எந்த உறுப்பு மண்டலத்தின் ஒரு பகுதி__________

A) கழிவுநீக்க மண்டலம்

B) நரம்பு மண்டலம்

C) சுவாச மண்டலம்

D) இனப்பெருக்க மண்டலம்

106. அட்டையின் மூளை இதற்கு மேலே உள்ளது.

A) வாய்

B) வாய்க்குழி

C) தொண்டை

D) தீனிப்பை

107. பாலூட்டிகள்________விலங்குகள்

A) குளிர் இரத்த

B) வெப்ப இரத்த

C) பாய்கிலோதெர்மிக்

D) இவை அனைத்தும்

விளக்கம்: இவ்வுயிரிகள் வெப்ப இரத்த உயிரிகள் மற்றும் உடல் முழுவதும் உரோமங்களால் மூடப்பெற்றவை.

108. இளம் உயிரிகளைப் பிரசவிக்கம் விலங்குகள்.

A) ஓவிபேரஸ்

B) விவிபேரஸ்

C) ஓவோவிவிபேரஸ்

D) அனைத்தும்

109. முயலின் தண்டுவட நரம்பகளின் எண்ணிக்கை_________

A) 27

B) 37

C) 47

D) 57

10th Science Lesson 14 Questions in Tamil

14] தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

1) பின்வருவனவற்றுள் எவை செல்கள் அவற்றின் பணிகளை செய்ய இன்றியமையாதது?

a) நீர்

b) காற்று

c) கார்பன்-டை-ஆக்ஸைடு

d) ஆக்ஸிஜன்

விளக்கம்: உயிரினங்கள் செல் எனப்படும் அமைப்பு மற்றும் செயல் அலகுகளால் ஆனவை. பலசெல் உயிரினங்களின் உடல்கள் பல கோடிக்கணக்கான செல்களால் ஆனவை. ஒவ்வொரு செல்லும் தன் பணியினை செய்யவும், தொடர்ந்து வாழவும் உணவும், ஆக்ஸிஜனும் தேவைப்படுகின்றன. உணவே ஆற்றலின் மூலமாகும்.

2) செல்கள் எதிலிருந்து ஆற்றலை பெறுகிறது?

a) ஆக்ஸிஜன்

b) குளுக்கோஸ்

c) பிரக்டோஸ்

d) சூரிய ஒளி

விளக்கம்: ஒவ்வொரு செல்லும் குளுக்கோஸை ஆக்ஸிகரணமடையச் செய்து ஆற்றலைப் பெறுகிறது. இந்த ஆற்றலைக் கொண்டு செல்கள் பிற முக்கிய பணிகளை மேற்கொள்கின்றன.

3) தாவரங்களில் வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்ட நீர் எவ்வாறு இலைகளுக்கு கடத்தப்படுகிறது?

a) புறணி செல்கள்

b) துணை செல்கள்

c) சைலம்

d) புளோயம்

விளக்கம்: தாவரங்களின் வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்ட நீர் முழுத் தாவரத்திற்கும் மற்றும் இலையின் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு அனைத்து பாகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் கனிம உப்புக்கள் தாவரங்களின் அனைத்து உறுப்புகளுக்கும் சைலம் வழியாக செல்கின்றன. இவ்வாறு பொருட்கள் மொத்தமாககடத்தும் திசுக்களின் மூலம் கடத்தப்படுவதையே தாவரங்களில் கடத்துதல் என்கிறோம்.

4) இலைகளால் தயாரிக்கப்பட்ட உணவானது எவ்வாறு தாவரத்தின் மற்ற பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது?

a) துணை செல்கள்

b) புறணி செல்கள்

c) சைலம்

d) புளோயம்

விளக்கம்: தாவரங்களின் வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்ட நீர் முழுத் தாவரத்திற்கும் மற்றும் இலையின் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு அனைத்து பாகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.இலைகள் தயாரித்த உணவுப் பொருள் தாவர உடலின் அனைத்து பகுதிகளுக்கும் புளோயம் வழியாக கடத்தப்படுகிறது.

5) சுற்றோட்ட மண்டலத்தின் செயல்படுகள் யாவை?

a) கழிவுப்பொருள்களை கடத்துதல்

b) ஹார்மோன் கடத்துதல்

c) உப்புகள் கடத்துதல்

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கு ‘கடத்துதல்’ என்று பெயர்.

உயர்வகை விலங்குகளில் ஊட்டச்சத்துக்கள், உப்புகள், ஆக்சிஜன், ஹார்மோன் மற்றும் கழிவுப்பொருள்கள் உடல் முழுவதும் கடத்தப்படுவது சுற்றோட்ட மண்டலத்தால் செயல்படுத்தப்படுகிறது.

6) சுற்றோட்ட மண்டலம் எந்த மண்டலத்தை உருவாக்குகிறது?

a) சேகரிக்கும் மண்டலம்

b) கடத்தும் மண்டலம்

c) ஆற்றல் கொடுக்கும் மண்டலம்

d) a மற்றும் b

விளக்கம்: சுற்றோட்ட திரவங்களான இரத்தம், நிணநீர், இதயம் மற்றும் இரத்த நாளங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய சுற்றோட்ட மண்டலமானது சேகரிக்கும் மற்றும் கடத்தும் மண்டலங்களை உருவாக்குகிறது.

7) பின்வருவனவற்றுள் எவை ஆற்றல் சாரா கடத்தல் நி்கழ்ச்சி?

a) செயல்மிகு கடத்துதல்

b) கடத்துதல்

c) பரவல்

d) a அல்லது c

விளக்கம்: திட, திரவ, வாயுப் பொருட்கள் செறிவு அதி்கமுள்ள பகுதியிலிருந்து செறிவு குறைவான பகுதிக்கு எவ்வித ஆற்றலின் உதவியின்றி கடததப்படும் நி்கழ்ச்சியே பரவல் எனப்படும். இது ஒர் ஆற்றல் சாரா கடத்தல் நி்கழ்ச்சியாகும்.

8) பின்வருவனவற்றுள் எவை ஆற்றல் சார்ந்த கடத்தல் நி்கழ்ச்சி?

a) செயல்மிகு கடத்துதல்

b) கடத்துதல்

c) பரவல்

d) a அல்லது c

விளக்கம்: செயல்மிகு கடத்துதல் (ஆற்றல் சார்ந்த கடத்துதல்)

ஆற்றல் சார்ந்த கடத்துதலில் ஆற்றலை பயன்படுத்தி மூலககூறுகள் செறிவு வாட்ட சரிவிற்கு எதிராக கடத்தப்படுகின்றன. இவ்வகை கடத்துதலில் கடத்து புரதங்கள் ஈடு்படுகின்றன. இவ்வகை புரதங்கள் ஆற்றலை பயன்படுத்தி செல் சவ்வின் வழியாக மூலக்கூறுகளை கடத்துவதால் உந்தி்கள் (pumps) என அழைக்கப்படுகின்றன. இவ்வகை உந்தி்கள் மூலக்கூறுகளை செறிவு குறைவான பகுதியிலிருந்து செறிவு அதிகமான பகுதிககு கடத்துகின்றன (uphill movement).

9) பின்வருவனவற்றுள் எவை ஆற்றல் சார்ந்த கடத்தல் நி்கழ்ச்சியில் பங்குபெறும்?

a) கடத்து புரதங்கள்

b) கடத்து கொழுப்புகள்

c) வைட்டமின்கள்

d) CHO

விளக்கம்: செயல்மிகு கடத்துதல் (ஆற்றல் சார்ந்த கடத்துதல்)

ஆற்றல் சார்ந்த கடத்துதலில் ஆற்றலை பயன்படுத்தி மூலககூறுகள் செறிவு வாட்ட சரிவிற்கு எதிராக கடத்தப்படுகின்றன. இவ்வகை கடத்துதலில் கடத்து புரதங்கள் ஈடு்படுகின்றன. இவ்வகை புரதங்கள் ஆற்றலை பயன்படுத்தி செல் சவ்வின் வழியாக மூலக்கூறுகளை கடத்துவதால் உந்தி்கள் (pumps) என அழைக்கப்படுகின்றன.

10) எவை ஆற்றலை பயன்படுத்தி மூலக்கூறுகளை கடத்துவதால் உந்தி்கள் என அழைக்கப்படுகின்றன?

a) கடத்து புரதங்கள்

b) கடத்து கொழுப்புகள்

c) வைட்டமின்கள்

d) CHO

விளக்கம்: செயல்மிகு கடத்துதல் (ஆற்றல் சார்ந்த கடத்துதல்)

ஆற்றல் சார்ந்த கடத்துதலில் ஆற்றலை பயன்படுத்தி மூலககூறுகள் செறிவு வாட்ட சரிவிற்கு எதிராக கடத்தப்படுகின்றன. இவ்வகை கடத்துதலில் கடத்து புரதங்கள் ஈடு்படுகின்றன. இவ்வகை புரதங்கள் ஆற்றலை பயன்படுத்தி செல் சவ்வின் வழியாக மூலக்கூறுகளை கடத்துவதால் உந்தி்கள் (pumps) என அழைக்கப்படுகின்றன.

11) எது நீர் அல்லது கரைப்பான் மூலக்கூறின் ஆற்றல் சாரா கடத்தல் நிகழ்ச்சி?

a) செயல்மிகு கடத்துதல்

b) கடத்துதல்

c) பரவல்

d) சவ்வூடு பரவல்

விளக்கம்: சவ்வூடு பரவல்(ஆஸ்மாஸிஸ்) நீர் அல்லது கரைப்பான் மூலக்கூறின் ஆற்றல் சாரா கடத்தல் நி்கழ்ச்சி ஆகும்.

12) பின்வருவனவற்றுள் ஹைபர்டானிக் கரைசல் எந்த நிகழ்வில் பயன்படுத்தப்படுகிறது?

a) செயல்மிகு கடத்துதல்

b) பிளாஸ்மா சிதைவு

c) பரவல்

d) சவ்வூடு பரவல்

விளக்கம்: ஒரு தாவர செல்லை ஹைபர்டானிக் கரைசலில் (உயர் உப்பு அடர்வு கரைசல் ) வைக்கும்போது செல்லிலிருந்து நீர் வெளியேறுவதால் புரோடோபிளாசம் செல் சுவரை விட்டு விலகி சுருங்கி விடுகி்றது. இதற்கு பிளாஸ்மா சிதைவு என்று பெயர்.

13) இளம் நாற்றுக்கள் விதைகளிலிருந்து வெளிவர உதவும் நிகழ்ச்சியின் பெயர் என்ன?

a) செயல்மிகு கடத்துதல்

b) பிளாஸ்மா சிதைவு

c) உள்ளீர்த்தல்

d) சவ்வூடு பரவல்

விளக்கம்: உயிரற்ற தாவரப் பொருட்கள் நீரில் வைக்கப்படும்போது நீரினை உறிஞசி உப்புகின்ற நி்கழ்ச்சி உள்ளீர்த்தல் எனப்படும். எடுததுக்காட்டாக உலர் விதைகள் மற்றும் உலர் திராட்சை நீரை உறிஞசி உப்பிவிடும். ஆனால் நீரில் கரையாது. உள்ளீர்த்தல் என்ற நி்கழ்ச்சி முளைக்கும் விதைகளில் நடைபெறவில்லை என்றால் இளம் நாற்றுக்கள் விதைகளிலிருந்து வெளிவர இயலாது.

14) பின்வரும் வாக்கியங்களை கவனி

கூற்று (A): வேர்த்தூவிகள் தாவரத்தின் உறிஞ்சும் பரப்பினை அதிகரிக்கின்றன.

காரணம் (R): ஒரு தாவர வேரின் நுனியில் பல கோடிக்கணக்கான வேர்த்தூவி்கள் காணப்படுகின்றன.

a) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம்

b) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம் அல்ல

c) A சரி ஆனால் R தவறு

d) A தவறு ஆனால் R சரி

விளக்கம்: ஒரு தாவர வேரின் நுனியில் பல கோடிக்கணக்கான வேர்த்தூவி்கள் காணப்படுகின்றன. இவை மண்ணிலிருந்து நீரையும், கனிமங்களையும் உறிஞ்சுகின்றன. வேரின் புறத்தோல் செல்களின் நீட்சிகளே வேர்த்தூவிகளாகும். வேர்த்தூவிகள் மென்மையானவை, மெல்லிய சுவருடையவை மற்றும் ஒரு செல்லால் ஆனவை. வேர்த்தூவிகள் தாவரத்தின் உறிஞ்சும் பரப்பினை அதிகரிக்கின்றன.

15) நீர் எவ்வாறு வேர்த்தூவியிலிருந்து சைலத்தை அடைகிறது?

a) செயல்மிகு கடத்துதல்

b) பிளாஸ்மா சிதைவு

c) உள்ளீர்த்தல்

d) சவ்வூடு பரவல்

விளக்கம்: நீரானது வேர்த்தூவியினுள் சென்றவுடன் நீரின் செறிவானது புறணிப் பகுதியை விட வேர்த்தூவியில் அதிகமாக உள்ளது. ஆகவே நீரானது சவ்வூடு பரவலின் காரணமாக வேர்த்தூவியிலிருந்து புறணி செல்கள் வழியாக அகத்தோலில் நுழைந்து சைலத்தை அடைகிறது. பின்பு சைலத்திலிருந்து நீரானது மேல்நோக்கி தண்டு மற்றும் இலைகளுக்கு கடத்தப்படுகிறது.

16) எவ்வகை கடத்துதலில் நீரானது எவ்வித சவ்வினையும் கடக்காமல் செல்கிறது?

a) செயல்மிகு கடத்துதல்

b) அப்போபிளாஸ்ட்

c) உள்ளீர்த்தல்

d) சவ்வூடு பரவல்

விளக்கம்: வேர்தூவிகள் நீரையும் கனிம உப்புக்களையும் பரவல் முறையில் உறிஞ்சுகின்றன. வேர்த்தூவியின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது வேரின் உட்புற அடுக்கிற்கு இரண்டு தனித்தனி வழிகளில் செல்கின்றன. அவை அப்போபிளாஸ்ட் வழி மற்றும் சிம்பிளாஸ்ட் வழி.

அப்போபிளாஸ்ட் வழியில் நீரானது முழுக்க முழுக்க செல்சுவர் மற்றும் செல் இடைவெளியின் வழியாகச் செல்கிறது. இவ்வகை கடத்துதலில் நீரானது எவ்வித சவ்வினையும் கடக்காமல் செல்கிறது. இந்த வகை கடத்துதல் செறிவின் அடிப்படையில் அமைந்துள்ளது.

17) எந்த முறை கடத்துதலில் நீரானது செல்லின் வழியாக செல்கிறது?

a) செயல்மிகு கடத்துதல்

b) அப்போபிளாஸ்ட்

c) சிம்பிளாஸ்ட்

d) சவ்வூடு பரவல்

விளக்கம்: வேர்தூவிகள் நீரையும் கனிம உப்புக்களையும் பரவல் முறையில் உறிஞ்சுகின்றன. வேர்த்தூவியின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது வேரின் உட்புற அடுக்கிற்கு இரண்டு தனித்தனி வழிகளில் செல்கின்றன. அவை அப்போபிளாஸ்ட் வழி மற்றும் சிம்பிளாஸ்ட் வழி.

சிம்பிளாஸ்ட் முறையில் நீரானது செல்லின் வழியாக செல்கிறது. அதாவது செல்லின் பிளாஸ்மா சவ்வில் நுழைந்து சைட்டோபிளாசத்தினை கடந்து பிளாஸ்மோடெஸ்மேட்டா வழியாக அருகிலுள்ள செல்களுக்கு செல்கிறது. செல்சவ்வின் வழியாக நீர் செல்வதால் இவ்வகை கடத்துதல் மெதுவாக நடைபெறுகிறது. சிம்பிளாஸ்ட் வகை கடத்துதல் செறிவு சரிவின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.

18) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) சிம்பிளாஸ்ட் வகை கடத்துதல் செறிவு சரிவின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.

II) செல்சவ்வின் வழியாக நீர் செல்வதால் இவ்வகை கடத்துதல் வேகமாக நடைபெறுகிறது.

a) I மற்றும் II சரி

b) I சரி II தவறு

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: சிம்பிளாஸ்ட் முறையில் நீரானது செல்லின் வழியாக செல்கிறது. அதாவது செல்லின் பிளாஸ்மா சவ்வில் நுழைந்து சைட்டோபிளாசத்தினை கடந்து பிளாஸ்மோடெஸ்மேட்டா வழியாக அருகிலுள்ள செல்களுக்கு செல்கிறது. செல்சவ்வின் வழியாக நீர் செல்வதால் இவ்வகை கடத்துதல் மெதுவாக நடைபெறுகிறது. சிம்பிளாஸ்ட் வகை கடத்துதல் செறிவு சரிவின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.

19) ஒவ்வொரு இலைத்துளையும் எத்தனை காப்புச் செல்களால் சூழப்பட்டுள்ளது?

a) ஒன்று

b) இரண்டு

c) நான்கு

d) மூன்று

விளக்கம்: தாவரத்தின் புற உறுப்புகளிலிருந்து குறிப்பாக இலையின் புறத்தோல் துளை வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவதே நீராவிப் போக்கு எனப்படும். ஒவ்வொரு இலைத்துளையும் இரண்டு காப்புச் செல்களால் சூழப்பட்டுள்ளது. இலைத்துளையானது (stomata) பகலில் திறந்தும், இரவில் மூடியும் காணப்படும். இலைத்துளையின் செயல்பாடானது காப்புச் செல்களின் விறைப்பழுத்த மாறுபாடுகளால் நடைபெறுகிறது. பகலில் காப்பு செல்களுக்குள் அருகிலுள்ள செல்களிலிருந்து நீர் புகுவதால் விறைப்புத்தன்மை அடைகிறது. அதனால் இலைத்துளை திறந்து கொள்கின்றன. இரவில் காப்பு செல்களை விட்டு நீர் வெளியேறுவதால் விறைப்பழுத்தம் குறைந்து காப்பு செல்கள் சுருங்கிவிடுகின்றன. இதனால் இலைத்துளை மூடிக் கொள்கிறது.

20) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) ஒவ்வொரு இலைத்துளையும் இரண்டிற்கும் மேற்பட்ட காப்புச் செல்களால் சூழப்பட்டுள்ளது.

II) இலைத்துளையானது பகலில் திறந்தும், இரவில் மூடியும் காணப்படும்.

a) I தவறு II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: ஒவ்வொரு இலைத்துளையும் இரண்டு காப்புச் செல்களால் சூழப்பட்டுள்ளது. இலைத்துளையானது (stomata) பகலில் திறந்தும், இரவில் மூடியும் காணப்படும். இலைத்துளையின் செயல்பாடானது காப்புச் செல்களின் விறைப்பழுத்த மாறுபாடுகளால் நடைபெறுகிறது. பகலில் காப்பு செல்களுக்குள் அருகிலுள்ள செல்களிலிருந்து நீர் புகுவதால் விறைப்புத்தன்மை அடைகிறது. அதனால் இலைத்துளை திறந்து கொள்கின்றன. இரவில் காப்பு செல்களை விட்டு நீர் வெளியேறுவதால் விறைப்பழுத்தம் குறைந்து காப்பு செல்கள் சுருங்கிவிடுகின்றன. இதனால் இலைத்துளை மூடிக் கொள்கிறது.

21) நீராவிப் போக்கு இழுவிசைக்கான காரணம் என்ன?

a) செயல்மிகு கடத்துதல்

b) அப்போபிளாஸ்ட்

c) சிம்பிளாஸ்ட்

d) சவ்வூடு பரவல்

விளக்கம்: நீராவிப் போக்கின் காரணமாக இலையிடைத் திசுவிலிருந்து (மீசோபில்) நீரானது இலைத்துளை வழியாக வெளியேறுவதால் நீரின் செறிவு இலையிடைத்திசுவில் குறைகிறது. இதனால் சவ்வூடு பரவல் மூலம் சைலத்திலிருந்து நீரானது மீண்டும் இலையிடைத் திசுக்களுக்கு செல்கிறது. இந்த வேறுபாட்டின் காரணமாக இலையில் ஒரு இழுவிசை உண்டாகிறது. இது நீராவிப் போக்கு இழுவிசை எனப்படும். இந்த இழுவிசை வேர் வரை கடத்தப்படுவதால் வேர்த்தூவியின் மூலம் மீண்டும் மீண்டும் நீர் மண்ணில் இருந்து உறிஞ்சப்பட்டு தொடர்ச்சியாக இலைக்கு செல்கிறது.

22) நீராவிப் போக்கினைப் பாதிக்கும் வெளிபுறக் காரணி எது?

a) ஈரப்பதம்

b) வெப்பநிலை

c) ஒளி

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: நீராவிப் போக்கினைப் பாதிக்கும் வெளிபுறக் காரணிகள் வெப்பநிலை, ஒளி, ஈரப்பதம் மற்றும் காற்றின் திசைவேகம். உட்புறக் காரணிகள் இலைத் துளையின் எண்ணிக்கை மற்றும் விரவல், திறந்த நிலையிலுள்ள இலைத்துளைகளின் சதவீதம், தாவரத்தில் இருக்கும் நீரின் அளவு, தாவரத்தின் அமைப்பு போன்றவை.

23) பின்வருவனவற்றுள் எது நீராவிப் போக்கினைப் பாதிக்கும் உட்புறக் காரணி அல்ல?

a) ஈரப்பதம்

b) தாவரத்தின் அமைப்பு

c) தாவரத்தில் இருக்கும் நீரின் அளவு

d) இலைத் துளையின் எண்ணிக்கை

விளக்கம்: நீராவிப் போக்கினைப் பாதிக்கும் வெளிபுறக் காரணிகள் வெப்பநிலை, ஒளி, ஈரப்பதம் மற்றும் காற்றின் திசைவேகம். உட்புறக் காரணிகள் இலைத் துளையின் எண்ணிக்கை மற்றும் விரவல், திறந்த நிலையிலுள்ள இலைத்துளைகளின் சதவீதம், தாவரத்தில் இருக்கும் நீரின் அளவு, தாவரத்தின் அமைப்பு போன்றவை.

24) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) நீராவிப் போக்கின் இழுவிசையின் காரணமாக நீரானது மேலே செல்கிறது.

II) இலைகளின் மேற்பரப்பு குளிர்ச்சியாக இருக்க நீராவிப் போக்கு உதவுகிறது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: நீராவிப் போக்கின் முக்கியத்துவம்:

நீராவிப் போக்கின் இழுவிசையின் காரணமாக நீரானது மேலே செல்கிறது.

ஒளிச்சேர்க்கைக்கு தேவையான நீர் கிடைக்கிறது.

கனிமங்கள் தாவரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல உதவுகிறது.

இலைகளின் மேற்பரப்பு குளிர்ச்சியாக இருக்க நீராவிப் போக்கு உதவுகிறது.

செல்கள் விறைப்புத் தன்மையுடன் இருக்கச் செய்கிறது. இதனால் அவற்றின் வடிவம் மாறாமலும் இருக்க உதவுகிறது.

25) __________காரணமாக நீரானது தண்டில் சிறிது உயரம் தள்ளப்படுகிறது.

a) வேர் அழுத்தம்

b) அப்போபிளாஸ்ட்

c) சிம்பிளாஸ்ட்

d) சவ்வூடு பரவல்

விளக்கம்: மண்ணிலுள்ள கனிமங்கள் வேரில் கடத்தும் திசுக்களுக்கு ஆற்றல்சார் கடத்தலின் மூலம் செல்லும் போது அதனுடன் சேர்ந்து நீரும் கடத்தப்படுகிறது. இதனால் சைலத்தின் உள்ளே அழுத்தம் அதிகமாகிறது. இந்த அழுத்தமே வேர் அழுத்தம் எனப்படும். இதன் காரணமாக நீரானது தண்டில் சிறிது உயரம் தள்ளப்படுகிறது.

26) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

கூற்று (A): பெரும்பாலான கனிமங்கள் ஆற்றல் சார்ந்த கடத்துதல் மூலமாக வேரின் புறத்தோல் சைட்டோபிளாசம் வழியாக உள் நுழைகிறது

காரணம் (R): கனிமங்கள் மண்ணில் அயனிகளாக உள்ளதால் அவை சவ்வின் வழியாக எளிதில் புக முடியாது.

a) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம்

b) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம் அல்ல

c) A சரி ஆனால் R தவறு

d) A தவறு ஆனால் R சரி

விளக்கம்: உணவூட்டத்தின் தேவைக்காக தாவரங்கள் மண்ணிலுள்ள தனிமங்களைச் சார்ந்துள்ளன. தேவையான அனைத்து தனிமங்களையும் வேர்கள் ஆற்றல்சாரா கடத்துதல் மூலம் எடுத்துக்கொள்வதில்லை. அவற்றிற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. 1.கனிமங்கள் மண்ணில் அயனிகளாக உள்ளதால் அவை சவ்வின் வழியாக எளிதில் புக முடியாது. 2.மண்ணிலுள்ள கனிமங்களின் செறிவு வேர்களின் செல்களில் உள்ள செறிவினை விடக் குறைவாக உள்ளது. ஆகவே பெரும்பாலான கனிமங்கள் ஆற்றல் சார்ந்த கடத்துதல் மூலமாக வேரின் புறத்தோல் சைட்டோபிளாசம் வழியாக உள் நுழைகிறது. இதற்கு தேவையான ஆற்றலை ATP-யின் மூலம் பெறுகிறது. பின்பு, நீராவிப் போக்கின் இழுவிசையின் காரணமாக அனைத்து பாகங்களுக்கும் கடத்தப்படுகிறது.

27) பின்வருவனவற்றுள் எது விரைவாக இடம் பெயரும் தனிமம் அல்ல?

a) பாஸ்பரஸ்

b) கால்சியம்

c) நைட்ரஜன்

d) பொட்டாசியம்

விளக்கம்: சில தாவரங்களில் மூப்படைந்த உதிரும் நிலையிலுள்ள இலைகளில் உள்ள தனிமங்கள் இளம் இலைகளுக்கு இடம் பெயர்கின்றன. இந்நிகழ்ச்சி இலையுதிர் தாவரங்களில் நடைபெறுகிறது. பாஸ்பரஸ், சல்பர், நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் ஆகியவை மிக விரைவாக இடம் பெயரும் தனிமங்களாகும். கால்சியம் எளிதில் இடம் பெயர்வதில்லை. சிறிதளவு தனிமங்கள் சைலம் மற்றும் புளோயத்தினிடையே பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

28) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) புளோயத்தில் உணவு இடம் பெயர்வது மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ நடைபெறுகிது.

II) சைலத்தில் நீரானது மேல்நோக்கி மட்டுமே இடம் பெயர்கிறது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: புளோயம் உணவினை (சுக்ரோஸ்) தோற்றுவாயிலிருந்து தேக்கிடத்திற்கு கடத்துகிறது. தோற்றுவாய்க்கும் தேக்கிடத்திற்கும் உள்ளதொடர்பு அவ்வப்போது மாறுபாடு அடையக்கூடியது. உணவு இடம் பெயர்வது மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ (இரு திசைகளில்) நடைபெறுகிது. ஆனால் சைலத்தில் நீரானது மேல் நோக்கி (ஒரு திசையில்) மட்டுமே இடம் பெயர்கிறது.

29) ஒளிச்சேர்க்கையின் மூலம் உருவான குளுக்கோஸ் __________ மாற்றப்படுகிறது.

a) சுக்ரோஸ்

b) பிரக்டோஸ்

c) காலக்டோஸ்

d) a மற்றும் b

விளக்கம்: சுக்ரோஸ் தோற்றுவாயிலிருந்து தேக்கிடத்திற்கு இடம்பெயர்வது அழுத்த மாறுபாட்டு கோட்பாட்டின்படி நடைபெறுகிறது. ஒளிச்சேர்க்கையின் மூலம் உருவான குளுக்கோஸ் சுக்ரோஸாக மாற்றப்படுகிறது. சுக்ரோஸ் முதலில் புளோயத்தின் துணை செல்களுக்கு கடத்தப்படுகிறது. பின்பு ஆற்றல்சார் கடத்தல் மூலம் சல்லடைக் குழாயினுள் செல்கிறது. இந்நிகழ்ச்சியால் புளோயத்தின் செல்கள் இதன் காரணமாக ஹைபர்டானிக் (உயர் உப்பு அடர்வு) நிலையை அடைகிறது.

30) சுக்ரோஸ் ஆற்றல்சார் கடத்தல் மூலம் சல்லடைக் குழாயினுள் செல்வதால் எந்த செல்கள் ஹைபர்டானிக் நிலையை அடைகிறது?

a) துணை செல்கள்

b) புறணி செல்கள்

c) சைலம்

d) புளோயம்

விளக்கம்: சுக்ரோஸ் தோற்றுவாயிலிருந்து தேக்கிடத்திற்கு இடம்பெயர்வது அழுத்த மாறுபாட்டு கோட்பாட்டின்படி நடைபெறுகிறது. ஒளிச்சேர்க்கையின் மூலம் உருவான குளுக்கோஸ் சுக்ரோஸாக மாற்றப்படுகிறது. சுக்ரோஸ் முதலில் புளோயத்தின் துணை செல்களுக்கு கடத்தப்படுகிறது. பின்பு ஆற்றல்சார் கடத்தல் மூலம் சல்லடைக் குழாயினுள் செல்கிறது. இந்நிகழ்ச்சியால் புளோயத்தின் செல்கள் இதன் காரணமாக ஹைபர்டானிக் (உயர் உப்பு அடர்வு) நிலையை அடைகிறது.

31) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

நீர் புளோயத்தை விட்டு வெளியேறுவதற்கான காரணம்

I)சைலத்திலிருந்து நீரானது சவ்வூடு பரவல் மூலம் சல்லடைக் குழாயினுள் செல்கிறது.

II) ஆற்றல்சார் கடத்துதல் மூலம் சுக்ரோஸானது சேமிக்கப்படும் இடத்திற்கோ அல்லது பயன்படுத்தப்படும் இடத்திற்கோ இடம் பெயர்கிறது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: சைலத்திலிருந்து நீரானது சவ்வூடு பரவல் மூலம் சல்லடைக் குழாயினுள் செல்கிறது. இதனால் ஏற்படும் சவ்வூடு பரவல் அழுத்த வேறுபாட்டின் காரணமாக புளோயத்திலிருந்து உணவானது அழுத்தம் குறைவான செல்களுக்கு கடத்தப்படுகிறது. ஆற்றல்சார் கடத்துதல் மூலம் சுக்ரோஸானது சேமிக்கப்படும் இடத்திற்கோ அல்லது பயன்படுத்தப்படும் இடத்திற்கோ இடம் பெயர்கிறது. இதன் காரணமாக சுக்ரோஸ் வெளியேறுவதால் சவ்வூடு பரவல் அழுத்தம் குறைகிறது. எனவே நீரானது புளோயத்தை விட்டு வெளியேறுகிறது.

32) தாவரங்களின் மேல்பகுதிக்கு கடத்துதல் மூலம் நீர் மற்றும் கனிமங்கள் செல்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) செயல்மிகு கடத்துதல்

b) அப்போபிளாஸ்ட்

c) சாறேற்றம்

d) சவ்வூடு பரவல்

விளக்கம்: வேர்களின் மூலம் உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் கனிமங்கள் மேல் நோக்கிய கடத்துதல் மூலம் தாவரங்களின் பிறபகுதிகளுக்கு செல்வது சாறேற்றம் எனப்படும். சாறேற்றத்தில் பல காரணிகள் ஈடுபடுகின்றன.

33) மண்ணில் உள்ள நீர் வேர்த்தூவிகளுக்கு எவ்வாறு செல்கிறது?

a) செயல்மிகு கடத்துதல்

b) அப்போபிளாஸ்ட்

c) சாறேற்றம்

d) சவ்வூடு பரவல்

விளக்கம்: மண்ணில் உள்ள நீர் வேர்த்தூவிகளுக்கு சவ்வூடு பரவலின் காரணமாகச் செல்கிறது. வேர் அழுத்தத்தின் காரணமாக நீரானது வேரிலிருந்து மேல் நோக்கி தண்டின் அடிப்பகுதிக்குச் செல்கிறது.

34) நுண்துளை ஈர்ப்பு விசையின் எவ்வாறும் அழைக்கப்படுகிறது?

a) தந்துகிக்குழாய் விசை

b) அப்போபிளாஸ்ட்

c) சாறேற்றம்

d) சவ்வூடு பரவல்

விளக்கம்: நீர் அல்லது எந்த ஒரு திரவமும் நுண்துளைக் குழாய்களில் இயற்பியல் விசையின் காரணமாக மேலேறுகிறது. இதற்கு நுண் துளை ஈர்ப்பு விசை என்று பெயர். அதே போல் தண்டிலும் நீரானது குறிப்பிட்ட உயரம் வரை நுண்துளை ஈர்ப்பு விசையின் காரணமாக கடத்தப்படுகிறது.

35) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) பல்வேறு வகையான மூலக்கூறுகளுக்கிடையே உள்ள ஈர்ப்பு விசை கூட்டிணைவு எனப்படும்.

II) நீர் மூலக்கூறுகளிடையே காணப்படும் ஈர்ப்பு விசை ஒட்டிணைவு எனப்படும்.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: கூட்டிணைவு மற்றும் ஒட்டிணைவு விசைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் காரணமாக நீரானது சைலத்தில் ஒரு தொடர்ச்சியான நீர்த்தம்பமாக உளது.

கூட்டிணைவு: நீர் மூலக்கூறுகளுக்கிடையே உள்ள ஈர்ப்பு விசை கூட்டிணைவு எனப்படும்.

ஒட்டிணைவு: பல்வேறு வகையான மூலக்கூறுகளிடையே காணப்படும் ஈர்ப்பு விசை ஒட்டிணைவு எனப்படும். நீர் மூலக்கூறுகள் சைலக்குழாயின் சுவருடன் ஒட்டிணைவின் காரணமாக பிணைந்துள்ளன.

36) அதிகப்படியான நீர் தாவர இலைகளின் விளிம்புகளில் நீராக வடியும் நிகழ்ச்சியின் பெயர் என்ன?

a) நீர்வடிதல்

b) நீரேற்றம்

c) சாறேற்றம்

d) சவ்வூடு பரவல்

விளக்கம்: அதிகாலைப் பொழுதில் புற்களின் மேல் பனித்துளிகள் போல நீர்த்துளிகளைப் பார்த்திருப்போம். தாவரங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது நீராவிப்போக்கின் வீதம் குறையும். உறிஞ்சப்படும் நீர் தாவரத்தின் வேரில் ஒரு அழுத்தத்தை உருவாக்கும். இந்த அதிகப்படியான நீர் தாவர இலைகளின் விளிம்புகளில் நீராக வடிகிறது. இதற்கு நீர் வடிதல் (guttation) எனப்படும். இவ்வாறு நீர் வடிதல் ஒரு சிறப்பான துளை வழியாக வெளியேறுகிறது. இத்துளை நீர்சுரப்பி அல்லது ஹைடதோடு எனப்படும்.

37) நீர் வடிதல் நடைபெறும் இலைபரப்பின் பெயர் என்ன?

a) நீர்சுரப்பி

b) ஹைடதோடு

c) நீர் வெளியேற்றி

d) a அல்லது b

விளக்கம்: அதிகாலைப் பொழுதில் புற்களின் மேல் பனித்துளிகள் போல நீர்த்துளிகளைப் பார்த்திருப்போம். தாவரங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது நீராவிப்போக்கின் வீதம் குறையும். உறிஞ்சப்படும் நீர் தாவரத்தின் வேரில் ஒரு அழுத்தத்தை உருவாக்கும். இந்த அதிகப்படியான நீர் தாவர இலைகளின் விளிம்புகளில் நீராக வடிகிறது. இதற்கு நீர் வடிதல் (guttation) எனப்படும். இவ்வாறு நீர் வடிதல் ஒரு சிறப்பான துளை வழியாக வெளியேறுகிறது. இத்துளை நீர்சுரப்பி அல்லது ஹைடதோடு எனப்படும்.

38) இரத்தம் _________ திசுவாக செயல்படுகிறது?

a) எபிதீலியல் திசு

b) நார் திசு

c) எபிடேலியல் திசு

d) எவையுமில்லை

விளக்கம்: இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும். மேலும் இது மனிதனின் உடல் சுற்றோட்டத்தின் முக்கிய ஊடகமாகும்.

39) இரத்தம் எத்தனை பகுதிப் பொருட்களை கொண்டுள்ளது?

a) ஒன்று

b) இரண்டு

c) மூன்று

d) நான்கு

விளக்கம்: இரத்தம் இரண்டு முக்கிய பகுதிப் பொருட்களான பிளாஸ்மா எனும் திரவப் பகுதியையும் அதனுள் மிதக்கும் ஆக்கக் கூறுகளையும் (இரத்த செல்கள்) கொண்டுள்ளது.

40) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) இரத்தம் சிறிதளவு காரத்தன்மை உடையது.

II) இரத்தம் உயிருள்ள செல் உட்பொருட்களைக் கொண்டுள்ளது.

a) I மற்றும் II சரி

b) I சரி II தவறு

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: இரத்தத்தின் 55% பிளாஸ்மா ஆகும். இது சிறிதளவு காரத்தன்மை உடையது. உயிரற்ற செல் உட்பொருட்களைக் கொண்டுள்ளது. கரிமப் பொருட்களான புரதங்கள், குளுக்கோஸ், யூரியா, நொதிகள், ஹார்மோன்கள், தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை இதில் உள்ளடங்கியுள்ளன.

41) இரத்தத்தில் காணப்படாத கரிமப்பொருட்கள் எது?

a) ஹார்மோன்கள்

b) புரதங்கள்

c) ஆக்ஸிஜன்

d) நொதிகள்

விளக்கம்: இரத்தத்தின் 55% பிளாஸ்மா ஆகும். இது சிறிதளவு காரத்தன்மை உடையது. உயிரற்ற செல் உட்பொருட்களைக் கொண்டுள்ளது. கரிமப் பொருட்களான புரதங்கள், குளுக்கோஸ், யூரியா, நொதிகள், ஹார்மோன்கள், தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை இதில் உள்ளடங்கியுள்ளன.

42) இரத்த அணுக்கள் எத்தனை வகைப்படும்?

a) ஒன்று

b) இரண்டு

c) மூன்று

d) நான்கு

விளக்கம்: இரத்த அணுக்கள் மூன்று வகைப்படும்.

1. இரத்தச் சிவப்பணுக்கள் (RBC) (அ) எரித்ரோசைட்டுகள்

2. இரத்த வெள்ளை அணுக்கள் (WBC) (அ) லியூக்கோசைட்டுகள்

3. இரத்தத் தட்டுக்கள் (அ) திராம்போசைட்டுகள்

43) மனித உடலில் அதிக அளவில் காணப்படக்கூடிய இரத்த செல்களாகும் எது?

a) திராம்போசைட்டுகள்

b) எரித்ரோசைட்டுகள்

c) லியூக்கோசைட்டுகள்

d) இரத்தத் தட்டுக்கள்

விளக்கம்: எரித்ரோசைட்டுகள்- இவை மனித உடலில் அதிக அளவில் காணப்படக்கூடிய இரத்த செல்களாகும். இவை எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாகின்றன.

44) இரத்த செல்கள் எங்கிருந்து உருவாகின்றன?

a) எலும்பின் இறுதி பாகத்தில்

b) எலும்பு மஜ்ஜை

c) எலும்பின் முதல் பாகத்தில்

d) a மற்றும் b

விளக்கம்: எரித்ரோசைட்டுகள்- இவை மனித உடலில் அதிக அளவில் காணப்படக்கூடிய இரத்த செல்களாகும். இவை எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாகின்றன.

45) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) எரித்ரோசைட்டுகள் இருபுறமும் குழிந்த தட்டு வடிவம் உடையவை.

II) பாலூட்டிகளின் முதிர்ச்சி அடைந்த இரத்த சிவப்பணுவில், செல் நுண்ணுறுப்புகள் மற்றும் உட்கரு காணப்படுவதில்லை.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: எரித்ரோசைட்டுகள் சுவாச நிறமியான ஹீமோகுளோபினை RBC கொண்டுள்ளதால் இரத்தம் சிவப்பு நிறத்துடன் காணப்படுகிறது. பாலூட்டிகளின் முதிர்ச்சி அடைந்த இரத்த சிவப்பணுவில், செல் நுண்ணுறுப்புகள் மற்றும் உட்கரு காணப்படுவதில்லை. இவை இருபுறமும் குழிந்த தட்டு வடிவம் உடையவை. இவற்றின் வாழ்நாள் 120 நாட்கள் ஆகும். RBC ஆக்சிஜனை நுரையீரலிலிருந்து திசுக்களுக்கு கடத்துவதில் பங்கேற்கிறது.

46) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) RBC பல மைட்டோகாண்ட்ரியாவை கொண்டுள்ளது.

II) எண்டோபிளாச வலைப்பின்னல் இருப்பதினால் RBC எளிதாக ஊடுருவுகிறது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: பாலூட்டிகளின் RBC-யில் உட்கரு இல்லாதிருப்பதினால் அச்செல்லானது இருபுறமும் குழிந்த அமைப்பைப் பெற்று, அதிகளவு ஆக்சிஜன் இணைவதற்கான மேற்பரப்பினைப் பெற்றுள்ளது. RBC-ல் மைட்டோகாண்ட்ரியா இல்லாதிருப்பதால் அதிக அளவு ஆக்சிஜனை திசுக்களுக்கு கடத்துவதை அனுமதிக்கிறது. எண்டோபிளாச வலைப்பின்னல் இல்லாதிருப்பதினால் மெல்லிய இரத்தத் தந்துகிகளுக்குள் அதிக மீளும் தன்மை பெற்று RBC எளிதாக ஊடுருவுகிறது.

47) லியூக்கோசைட்டுகள் உடலில் எங்கு காணப்படுகிறது?

a) நிணநீர் முடிச்சு

b) மண்ணீரல்

c) எலும்பு மஜ்ஜை

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: இரத்த வெள்ளை அணுக்கள் (WBC) (அ) லியூக்கோசைட்டுகள்

இவை நிறமற்றவை. இவற்றில் ஹீமோகுளோபின் காணப்படுவதில்லை மற்றும் உட்கரு கொண்டவை. இவை எலும்பு மஜ்ஜை, மண்ணீரல், தைமஸ் மற்றும் நிணநீர் முடிச்சு போன்றவற்றில் காணப்படுகின்றன. இவை அமீபா போன்று நகரக் கூடியவை.

48) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) லியூக்கோசைட்டுகள் வெள்ளை நிறமுடையவை.

II) இவற்றில் ஹீமோகுளோபின் காணப்படுவதில்லை மற்றும் உட்கரு கொண்டவை.

III) லியூக்கோசைட்டுகள் நகரும் தன்மை அற்றவை.

a) I மற்றும் II சரி III தவறு

b) I சரி II தவறு

c) II சரி I மற்றும் III தவறு

d) I மற்றும் II தவறு

விளக்கம்: இரத்த வெள்ளை அணுக்கள் (WBC) (அ) லியூக்கோசைட்டுகள்

இவை நிறமற்றவை. இவற்றில் ஹீமோகுளோபின் காணப்படுவதில்லை மற்றும் உட்கரு கொண்டவை. இவை எலும்பு மஜ்ஜை, மண்ணீரல், தைமஸ் மற்றும் நிணநீர் முடிச்சு போன்றவற்றில் காணப்படுகின்றன. இவை அமீபா போன்று நகரக் கூடியவை.

49) இரத்த வெள்ளை அணுக்கள் எத்தனை வகைப்படும்?

a) ஒன்று

b) இரண்டு

c) மூன்று

d) நான்கு

விளக்கம்: இரத்த வெள்ளையணுக்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன

1. துகள்களுடைய செல்கள்

2. துகள்களற்ற செல்கள்

50) பின்வருவனவற்றுள் எது துகள்களுடைய செல்கள் அல்ல?

a) மோனோசைட்டுகள்

b) நியூட்ரோஃபில்கள்

c) பேசோஃபில்கள

d) ஈசினோஃபில்கள்

விளக்கம்: துகள்களுடைய செல்கள் இவை சைட்டோபிளாசத்தில் துகள்களைக் கொண்டுள்ளன. இவற்றின் உட்கருக்கள் ஒழுங்கற்றவை அல்லது கதுப்புக்களுடையவை. இவை மூன்று வகைப்படும்

i. நியூட்ரோஃபில்கள்

ii. ஈசினோஃபில்கள்

iii. பேசோஃபில்கள்

51) பின்வருவனவற்றுள் எவற்றின் எண்ணிக்கை நோய்த்தொற்று மற்றும் வீக்கத்தின் போது அதிகரிக்கிறது?

a) மோனோசைட்டுகள்

b) நியூட்ரோஃபில்கள்

c) பேசோஃபில்கள்

d) ஈசினோஃபில்கள்

விளக்கம்: இவை அளவில் பெரியவை, இவற்றின் உட்கரு 2-7 கதுப்புகளை கொண்டுள்ளது. மொத்த வெள்ளை அணுக்களில் 60% – 65% நியூட்ரோஃபில்கள் காணப்படுகின்றன. நோய்த்தொற்று மற்றும் வீக்கத்தின் போது இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

52) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) நியூட்ரோஃபில்கள் அளவில் சிறியவை.

II) இவற்றின் உட்கரு 2-7 கதுப்புகளை கொண்டுள்ளது.

a) I மற்றும் II சரி

b) I தவறு II சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: இவை அளவில் பெரியவை, இவற்றின் உட்கரு 2-7 கதுப்புகளை கொண்டுள்ளது. மொத்த வெள்ளை அணுக்களில் 60% – 65% நியூட்ரோஃபில்கள் காணப்படுகின்றன. நோய்த்தொற்று மற்றும் வீக்கத்தின் போது இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

53) உடலில் ஒவ்வாமை ஏற்படும் போது எவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது?

a) மோனோசைட்டுகள்

b) நியூட்ரோஃபில்கள்

c) பேசோஃபில்கள

d) ஈசினோஃபில்கள்

விளக்கம்: ஈசினோஃபில்களின் உட்கரு இரு கதுப்புகளைக் கொண்டது. மொத்த வெள்ளையணுக்களில் 2% – 3% வரை இவ்வகை செல்கள் உள்ளன. உடலில் சில ஒட்டுண்ணித் தொற்று மற்றும் ஒவ்வாமை ஏற்படும் போது இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நச்சுகளை அழித்தல் மற்றும் நச்சு முறிவினை ஏற்படுத்துவது ஈசினோஃபில்களின் முக்கிய பணிகளாகும்.

54) ஈசினோஃபில்களின் முக்கிய பணி என்ன?

a) நச்சுகளை அழித்தல்

b) நச்சை வெளியேற்றுதல்

c) நச்சு முறிவினை ஏற்படுத்துவது

d) a மற்றும் c

விளக்கம்: ஈசினோஃபில்களின் உட்கரு இரு கதுப்புகளைக் கொண்டது. மொத்த வெள்ளையணுக்களில் 2% – 3% வரை இவ்வகை செல்கள் உள்ளன. உடலில் சில ஒட்டுண்ணித் தொற்று மற்றும் ஒவ்வாமை ஏற்படும் போது இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நச்சுகளை அழித்தல் மற்றும் நச்சு முறிவினை ஏற்படுத்துவது ஈசினோஃபில்களின் முக்கிய பணிகளாகும்.

55) உடலில் குறைவான அளவில் காணப்படக்கூடிய வெள்ளையணுக்கள் எது?

a) மோனோசைட்டுகள்

b) நியூட்ரோஃபில்கள்

c) பேசோஃபில்கள

d) ஈசினோஃபில்கள்

விளக்கம்: பேசோஃபில்கள் கதுப்புடைய உட்கருவை கொண்டுள்ளன. மொத்த வெள்ளையணுக்களில் 0.5% – 10% வரை இவ்வகை செல்கள் உள்ளன. வீக்கங்கள் உண்டாகும் போது வேதிப்பொருள்களை வெளியேற்றுகின்றன.

56) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) லிம்ஃபோசைட்டுகள் வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்றுதலின் போது இவை எதிர்ப்பொருளை உருவாக்குகின்றன.

II) மோனோசைட்டுகள் விழுங்கு செல்களாதலால் பாக்டீரியாவை விழுங்குகின்றன.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: துகள்களற்ற செல்கள்:

இவற்றின் சைட்டோபிளாசத்தில் துகள்கள் காணப்படுவதில்லை. இவை இரண்டு வகைப்படும்.

i. லிம்ஃபோசைட்டுகள்

ii மோனோசைட்டுகள்

(i) லிம்ஃபோசைட்கள்: மொத்த வெள்ளையணுக்களில் இவை 20% – 25% உள்ளன. வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்றுதலின் போது இவை எதிர்ப்பொருளை உருவாக்குகின்றன.

(ii) மோனோசைட்டுகள்: இவை லியூக்கோசைட்டுகளிலேயே மிகப் பெரியவை. இவை அமீபாய்டு வடிவம் கொண்டவை. மொத்த வெள்ளையணுக்களில் 5 – 6% உள்ளது. இவை விழுங்கு செல்களாதலால் பாக்டீரியாவை விழுங்குகின்றன.

57) ஒரு கன மில்லிமீட்டர் இரத்தத்தில் எத்தனை திராம்போசைட்டுகள் காணப்படுகின்றன?

a) 2,50,000 – 4,00,000

b) 2,00,000 – 4,00,000

c) 3,00,000 – 4,50,000

d) 2,00,000 – 3,50,000

விளக்கம்: இரத்த தட்டுகள் அல்லது திராம்போசைட்டுகள் இவை அளவில் சிறியவை மற்றும் நிறமற்றவை. இவற்றில் உட்கரு இல்லை. . ஒரு கன மில்லிமீட்டர் இரத்தத்தில் 2,50,000 – 4,00,000 வரை இரத்தத் தட்டுக்கள் உள்ளன. இவற்றின் வாழ்நாள் 8-10 நாட்களாகும்.

58) இரத்த தட்டுகளின் ஆயுட்காலம் எவ்வளவு?

a) 110-120 நாட்களாகும்

b) 8-10 நாட்களாகும்.

c) 10 -24 நாட்களாகும்

d) 120 நாட்களாகும்

விளக்கம்: இரத்த தட்டுகள் அல்லது திராம்போசைட்டுகள் இவை அளவில் சிறியவை மற்றும் நிறமற்றவை. இவற்றில் உட்கரு இல்லை. ஒரு கன மில்லிமீட்டர் இரத்தத்தில் 2,50,000 – 4,00,000 வரை இரத்தத் தட்டுக்கள் உள்ளன. இவற்றின் வாழ்நாள் 8-10 நாட்களாகும்.

59) பின்வருவனவற்றுள் எது காயங்கள் ஏற்படும் போது இரத்தப் போக்கை தடுக்கிறது?

a) மோனோசைட்டுகள்

b) நியூட்ரோஃபில்கள்

c) திராம்போசைட்டுகள்

d) ஈசினோஃபில்கள்

விளக்கம்: இரத்த தட்டுகள் அல்லது திராம்போசைட்டுகள் இவை அளவில் சிறியவை மற்றும் நிறமற்றவை. இரத்தம் உறைதலில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. காயங்கள் ஏற்படும் பொழுது இரத்த உறைதலை ஏற்படுத்தி இரத்தப் போக்கை தடுக்கின்றன.

60) பொருத்துக

A. அனீமியா 1] இரத்த வெள்ளையணுக்கள் குறைதல்

B. லியூக்கோசைட்டோசிஸ் 2] இரத்த வெள்ளையணுக்கள் அதிகரித்தல்

C. லியூக்கோபினியா 3] இரத்த சிவப்பணுக்கள் குறைதல்

D. திராம்போசைட்டோபினியா 4] இரத்தத் தட்டுக்கள் குறைதல்

A B C D

a) 3 1 2 4

b) 1 3 4 2

c) 3 2 1 4

d) 4 3 2 1

விளக்கம்: அனீமியா : இரத்த சிவப்பணுக்களின்எண்ணிக்கை குறைதல்

லியூக்கோசைட்டோசிஸ்: இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரித்தல்

லியூக்கோபினியா: இரத்த வெள்ளை யணுக்களின் எண்ணிக்கை குறைதல்

திராம்போசைட்டோபினியா: இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறைதல்

61) பின்வருவனவற்றுள் எது இரத்தத்தின் பணி?

a) ஹார்மோன்களைக் கடத்துதல்

b) நோய்தாக்குதலிலிருந்து பாதுகாத்தல்

c) சுவாச வாயுக்களைக் கடத்துதல்

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: இரத்தத்தின் பணிகள்

i) சுவாச வாயுக்களைக் கடத்துகிறது (ஆக்சிஜன் மற்றும் CO2)

ii) செரிமானம் அடைந்த உணவுப்பொருட்களை அனைத்து செல்களுக்கும் கடத்துகிறது.

iii) ஹார்மோன்களைக் கடத்துகிறது.

iv) நைட்ரஜன் கழிவுப்பொருட்களான, அம்மோனியா, யூரியா, யூரிக் அமிலம் போன்றவற்றைக் கடத்துகிறது.

v) நோய்தாக்குதலிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

vi) உடலின் வெப்பநிலை மற்றும் pH-ஐ ஒழுங்குபடுத்தும் தாங்கு ஊடகமாக செயல்படுகிறது.

vii) உடலின் நீர்ச் சமநிலையைப் பாரமரிக்கிறது.

62) இரத்த நாளங்கள் எத்தனை வகைப்படும்?

a) ஒன்று

b) இரண்டு

c) மூன்று

d) நான்கு

விளக்கம்: இரத்தத்தை கடத்தக்கூடிய கிளைத்த வலைப்பின்னல் அமைப்புடைய குழாய்கள் இரத்த நாளங்கள் ஆகும். இவை தமனிகள், சிரைகள் மற்றும் இரத்த நுண் நாளங்கள் (தந்துகிகள்) என மூன்று வகைப்படும்.

63) இதயத்திலிருந்து வேறு உறுப்புகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்ல எது உதவுகிறது?

a) தமனிகள்

b) சிரைகள்

c) தந்துகிகள்

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: தமனிகள் தடித்த, மீளும் தன்மை பெற்ற குழாய்கள். இவை இரத்தத்தை இதயத்திலிருந்து பல்வேறு உறுப்புகளுக்கு எடுத்துச் செல்கின்றன.

64) வேறு உறுப்புகளிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தினைக் கொண்டு வர எவை உதவுகின்றன?

a) தமனிகள்

b) சிரைகள்

c) தந்துகிகள்

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: சிரைகள் மெல்லிய சுவரால் ஆன மீள்தன்மையற்ற குழாய்கள். இவை பல்வேறு உறுப்புகளிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தினைக் கொண்டு வருகின்றன.

65) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) தமனிகள் தடித்த, மீளும் தன்மை பெற்ற குழாய்கள்.

II) சிரைகள் மெல்லிய சுவரால் ஆன மீள்தன்மையற்ற குழாய்கள்.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: தமனிகள் தடித்த, மீளும் தன்மை பெற்ற குழாய்கள். இவை இரத்தத்தை இதயத்திலிருந்து பல்வேறு உறுப்புகளுக்கு எடுத்துச் செல்கின்றன.

சிரைகள் மெல்லிய சுவரால் ஆன மீள்தன்மையற்ற குழாய்கள். இவை பல்வேறு உறுப்புகளிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தினைக் கொண்டு வருகின்றன.

66) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) நுரையீரல் தமனி மட்டும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தை நுரையீரலுக்கு எடுத்துச் செல்கிறது.

II) நுரையீரல் சிரை மட்டும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை நுரையீரலிலிருந்து இதயத்திற்கு எடுத்து வருகிறது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: தமனிகள்: நுரையீரல் தமனியைத் தவிர மற்ற அனைத்து தமனிகளும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை எடுத்துச் செல்கின்றன. நுரையீரல் தமனி மட்டும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தை நுரையீரலுக்கு எடுத்துச் செல்கிறது.

சிரைகள்: நுரையீரல் சிரையினைத் தவிர மற்ற அனைத்து சிரைகளும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை எடுத்துச் செல்கின்றன. நுரையீரல் சிரை மட்டும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை நுரையீரலிலிருந்து இதயத்திற்கு எடுத்து வருகிறது.

67) எவை இணைந்து இரத்த நுண் நாளங்களை உருவாக்குகின்றன?

a) நுண் தமனிகள்

b) ஆர்ட்டீரியோல்கள்

c) நுண் சிரைகள்

d) a அல்லது b

விளக்கம்: இரத்த நுண் நாளங்கள் (தந்துகிகள்) கிளைத்த மெல்லிய நுண் தமனிகள் (ஆர்ட்டீரியோல்கள்) இணைந்து குறுகிய இரத்த நுண் நாளங்களை உருவாக்குகின்றன. அவை மீண்டும் ஒன்றிணைந்து வெனியூல்கள் மற்றும் சிரைகளாகின்றன. இவை 8µm விட்டமுடையவை. இவை ஒற்றை அடுக்காலான எண்டோதீலிய செல்களால் ஆனவை.

68) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) தமனி இளஞ்சிவப்பு நிறத்தினை உடையது, இவை பெறும் குழாய்கள்.

II) சிரை சிவப்பு நிறத்தினை உடையது, வழங்கும் குழாய்கள்.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: வ.எண் தமனி சிரை

1. வழங்கும் குழாய்கள் பெறும் குழாய்கள்

2. இளஞ்சிவப்பு நிறத்தினை உடையது சிவப்பு நிறத்தினை உடையது.

3. உடலின் ஆழ்பகுதியில் அமைந்துள்ளது உடலின் மேற்பகுதியில் அமைந்துள்ளது.

4. அதிக அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம் குறைந்த அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம்

5. தமனியின் சுவர்கள் வலிமையான தடித்த மீளும் தன்மை உடையவை சிரையின் சுவர்கள் வலிமை குறைந்த, மிருதுவான மீள்தன்மை அற்றவை

6. நுரையீரல் தமனியை தவிர மற்ற அனைத்து தமனிகளும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன. நுரையீரல் சிரையினை தவிர மற்ற அனைத்து சிரைகளும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன.

7. உள்ளீடு வால்வுகள் கிடையாது. உள்ளீடு வால்வுகள் உண்டு.

69) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) தமனி உடலின் ஆழ்பகுதியில் அமைந்துள்ளது

II) சிரை உடலின் மேற்பகுதியில் அமைந்துள்ளது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: வ.எண் தமனி சிரை

1. வழங்கும் குழாய்கள் பெறும் குழாய்கள்

2. இளஞ்சிவப்பு நிறத்தினை உடையது சிவப்பு நிறத்தினை உடையது.

3. உடலின் ஆழ்பகுதியில் அமைந்துள்ளது உடலின் மேற்பகுதியில் அமைந்துள்ளது.

4. அதிக அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம் குறைந்த அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம்

5. தமனியின் சுவர்கள் வலிமையான தடித்த மீளும் தன்மை உடையவை சிரையின் சுவர்கள் வலிமை குறைந்த, மிருதுவான மீள்தன்மை அற்றவை

6. நுரையீரல் தமனியை தவிர மற்ற அனைத்து தமனிகளும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன. நுரையீரல் சிரையினை தவிர மற்ற அனைத்து சிரைகளும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன.

7. உள்ளீடு வால்வுகள் கிடையாது. உள்ளீடு வால்வுகள் உண்டு.

70) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) தமனி: அதிக அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம் மற்றும் உள்ளீடு வால்வுகள் கிடையாது.

II) சிரை: குறைந்த அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம் மற்றும் உள்ளீடு வால்வுகள் உண்டு.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: வ.எண் தமனி சிரை

1. வழங்கும் குழாய்கள் பெறும் குழாய்கள்

2. இளஞ்சிவப்பு நிறத்தினை உடையது சிவப்பு நிறத்தினை உடையது.

3. உடலின் ஆழ்பகுதியில் அமைந்துள்ளது உடலின் மேற்பகுதியில் அமைந்துள்ளது.

4. அதிக அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம் குறைந்த அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம்

5. தமனியின் சுவர்கள் வலிமையான தடித்த மீளும் தன்மை உடையவை சிரையின் சுவர்கள் வலிமை குறைந்த, மிருதுவான மீள்தன்மை அற்றவை

6. நுரையீரல் தமனியை தவிர மற்ற அனைத்து தமனிகளும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன. நுரையீரல் சிரையினை தவிர மற்ற அனைத்து சிரைகளும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன.

7. உள்ளீடு வால்வுகள் கிடையாது. உள்ளீடு வால்வுகள் உண்டு.

71) மூடிய இரத்த ஓட்ட மண்டலத்தினைக் கண்டறிந்தவர் யார்?

a) ஆன்டன் வான் லூவன் ஹூக்

b) வில்லியம் அடிசன்

c) வான் பார்த்

d) வில்லியம் ஹார்வி

விளக்கம்: வில்லியம் ஹார்வி (1628): நவீன உடற்செயலியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் மூடிய இரத்த ஓட்ட மண்டலத்தினைக் கண்டறிந்தார்.

72) பின்வருவனவற்றுள் எது திறந்த வகை சுற்றோட்ட மண்டலத்தினை பெறவில்லை?

a) கணுக்காலிகள்

b) மெல்லுடலிகள்

c) அசிடியன்கள்

d) முதுகெலும்பிகள்

விளக்கம்: விலங்குகள் இரண்டு வகையான சுற்றோட்ட மண்டலத்தினைக் கொண்டுள்ளன. அவையாவன

1. திறந்த வகை

2. மூடிய வகை

1. திறந்த வகை: திறந்தவகை இரத்த ஓட்டத்தில், இதயத்திலிருந்து இரத்த நாளங்களில் உள்ள குழிகளுக்குள் இரத்தம் உந்தித் தள்ளப்படுகிறது. இக்குழி இரத்த உடற்குழி எனப்படும். நுண்நாளங்கள் காணப்படுவதில்லை.

எ.கா. கணுக்காலிகள், மெல்லுடலிகள், அசிடியன்கள்.

2. மூடிய வகை: இரத்த சுற்றோட்டம் நாளங்கள் மூலம் உடல் முழுவதும் சுற்றி வருகிறது. தமனிகளிலிருந்து சிரைக்கு இரத்தம் தந்துகிகள் வழியே பாய்கின்றது.

எ.கா. முதுகெலும்பிகள்

73) பின்வருவனவற்றுள் எது மூடிய வகை சுற்றோட்ட மண்டலத்தினை பெற்றுள்ளது?

a) கணுக்காலிகள்

b) மெல்லுடலிகள்

c) அசிடியன்கள்

d) முதுகெலும்பிகள்

விளக்கம்: விலங்குகள் இரண்டு வகையான சுற்றோட்ட மண்டலத்தினைக் கொண்டுள்ளன. அவையாவன

1. திறந்த வகை

2. மூடிய வகை

1. திறந்த வகை: திறந்தவகை இரத்த ஓட்டத்தில், இதயத்திலிருந்து இரத்த நாளங்களில் உள்ள குழிகளுக்குள் இரத்தம் உந்தித் தள்ளப்படுகிறது. இக்குழி இரத்த உடற்குழி எனப்படும். நுண்நாளங்கள் காணப்படுவதில்லை.

எ.கா. கணுக்காலிகள், மெல்லுடலிகள், அசிடியன்கள்.

2. மூடிய வகை: இரத்த சுற்றோட்டம் நாளங்கள் மூலம் உடல் முழுவதும் சுற்றி வருகிறது. தமனிகளிலிருந்து சிரைக்கு இரத்தம் தந்துகிகள் வழியே பாய்கின்றது.

எ.கா. முதுகெலும்பிகள்

74) இதயம் எந்த தசைகளால் ஆனது?

a) கார்டியாக் தசை

b) எபிகார்டியம் தசை

c) மையோகார்டியம் தசை

d) என்டோகார்டியம் தசை

விளக்கம்: இரத்த நாளங்கள் வழியாக இரத்தத்தை உந்தித் தள்ளும் தசையால் ஆன விசையியக்க உறுப்பு இதயம் ஆகும். மனித இதயம் நுரையீரலுக்கு இடையில், மார்புக்குழியில், உதரவிதானத்திற்கு மேலாக சற்று இடது புறம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதயம் கார்டியாக் தசை எனும் சிறப்புத் தசையால் ஆனது.

75) இதயத்தை சூழ்ந்துள்ள உறையின் பெயர் என்ன?

a) பெரிகார்டியல்

b) எபிகார்டியம்

c) மையோகார்டியம்

d) என்டோகார்டியம்

விளக்கம்: இதயம் இரண்டு அடுக்கினால் ஆன பெரிகார்டியல் உறையால் சூழப்பட்டுள்ளது. இவ்வடுக்கின் இடைவெளியில் நிரம்பியுள்ள பெரிகார்டியல் திரவம் இதய துடிப்பின் போது ஏற்படும் உராய்வு மற்றும் இயக்கத்தினால் ஏற்படும் காயங்களில் இருந்து பாதுகாக்கும் உயவுப் பொருளாக உள்ளது.

76) மனித இதயம் எத்தனை ஆரிக்கிள்களை கொண்டுள்ளது?

a) ஒன்று

b) இரண்டு

c) மூன்று

d) நான்கு

விளக்கம்: மனித இதயம் நான்கு அறைகளைக்கொண்டது. மெல்லிய தசையால் ஆன மேல் அறைகள் இரண்டும் ஆரிக்கிள்கள் அல்லது ஏட்ரியங்கள் (ஒருமை – ஏட்ரியம்) என்றும் தடித்த தசையால் ஆன கீழ் அறைகள் இரண்டும் வெண்ட்ரிக்கிள்கள் என்றும் அழைக்கப்படும்.

77) இதய அறைகளை பிரிக்கின்ற இடைச்சுவரின் பெயர் என்ன?

a) ஆரிக்கிள்

b) செப்டம்

c) ஏட்ரியம்

d) a மற்றும் b

விளக்கம்: இதய அறைகளைப் பிரிக்கின்ற இடைச்சுவர் ‘செப்டம்‘ எனப்படும். ஆரிக்கிள்கள் மற்றும் வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையே உள்ள இடைச் சுவரினால், ஆக்சிஜன் மிகுந்த மற்றும் ஆக்சிஜன் குறைந்த இரத்தம் ஒன்றுடன் ஒன்று கலவாமல் தடுக்கப்படுகிறது.

78) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) ஆரிக்கிள்கள் மெல்லிய தசையால் ஆன மேல் அறைகள் ஆகும்.

II) வெண்ட்ரிக்கிள்கள் தடித்த தசையால் ஆன கீழ் அறைகள் ஆகும்.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: மனித இதயம் நான்கு அறைகளைக்கொண்டது. மெல்லிய தசையால் ஆன மேல் அறைகள் இரண்டும் ஆரிக்கிள்கள் அல்லது ஏட்ரியங்கள் (ஒருமை – ஏட்ரியம்) என்றும் தடித்த தசையால் ஆன கீழ் அறைகள் இரண்டும் வெண்ட்ரிக்கிள்கள் என்றும் அழைக்கப்படும்.

79) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) இரண்டு ஆரிக்கிள்களும், ஆரிக்குலார் இடைத்தடுப்பு சுவரினால் பிரிக்கப்பட்டுள்ளன.

II) இடது ஆரிக்கிளை விட வலது ஆரிக்கிள் சிறியது.

a) I மற்றும் II சரி

b) I சரி II தவறு

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: இரண்டு ஆரிக்கிள்களும், ஆரிக்குலார் இடைத்தடுப்பு சுவரினால் பிரிக்கப்பட்டுள்ளன. வலது ஆரிக்கிளை விட இடது ஆரிக்கிள் சிறியது.

80) ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை எதன் மூலம் வலது ஆரிக்கிள் பெறுகிறது?

a) மேற் பெருஞ்சிரை

b) கீழ் பெருஞ்சிரை

c) கரோனரி சைனஸ்

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: உடலின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை முக்கிய சிரைகளான மேற் பெருஞ்சிரை, கீழ் பெருஞ்சிரை மற்றும் கரோனரி சைனஸ் மூலம் வலது ஆரிக்கிள் பெறுகிறது. நுரையீரலிலிருந்து ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை நுரையீரல் சிரைகளின் மூலம் இடது ஆரிக்கிள் பெறுகின்றது. வலது மற்றும் இடது ஆரிக்கிள்கள் முறையே வலது மற்றும் இடது வெண்ட்ரிக்கிள்களுக்கு இரத்தத்தினை (உந்தித்தள்ளுகின்றன) செலுத்துகின்றன.

81) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) வலது மற்றும் இடது வெண்ட்ரிக்கிள்கள், இடை வெண்ட்ரிக்குலார் தடுப்புச் சுவரால்பிரிக்கப்பட்டுள்ளன.

II) இதயத்திலிருந்து அதிக விசையுடன் இரத்தத்தை உந்தி செலுத்துவதால் வலது, இடது வெண்ட்ரிக்கிளின் சுவர்கள் தடித்து காணப்படுகின்றன.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: இதயத்தின் கீழ் அறைகள் வெண்ட்ரிக்கிள்கள் எனப்படும். வலது மற்றும் இடது வெண்ட்ரிக்கிள்கள், இடை வெண்ட்ரிக்குலார் தடுப்புச் சுவரால்பிரிக்கப்பட்டுள்ளன. இதயத்திலிருந்து அதிக விசையுடன் இரத்தத்தை உந்தி செலுத்துவதால் வலது, இடது வெண்ட்ரிக்கிளின் சுவர்கள் தடித்து காணப்படுகின்றன.

82) எங்கிருந்து உருவாகின்ற நுரையீரல் பொதுத்தமனி இரு தமனிகளாகப் பிரிவடைகிறது?

a) வலது ஆரிக்கிள்

b) இடது ஆரிக்கிள்

c) வலது ஏட்ரியம்

d) வலது வெண்ட்ரிக்கிள்

விளக்கம்: வலது வெண்ட்ரிக்கிளிலிருந்து உருவான நுரையீரல் பொதுத்தமனி, வலது மற்றும் இடது நுரையீரல் தமனிகளாகப் பிரிவடைகிறது.

83) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) வலது மற்றும் இடது நுரையீரல் தமனிகள் முறையே வலது, இடது நுரையீரலுக்கு ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தை செலுத்துகின்றன.

II) இடது வெண்ட்ரிக்கிளானது வலது வெண்ட்ரிக்கிளைவிட சற்று பெரியதாகவும், சிறிது குறுகலாகவும் அமைந்துள்ளது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: வலது மற்றும் இடது நுரையீரல் தமனிகள் முறையே வலது, இடது நுரையீரலுக்கு ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தை செலுத்துகின்றன. இடது வெண்ட்ரிக்கிளானது வலது வெண்ட்ரிக்கிளைவிட சற்று பெரியதாகவும், சிறிது குறுகலாகவும் அமைந்துள்ளது. இதனுடைய சுவர் வலது வெண்ட்ரிக்கிளை விட மூன்று மடங்கு தடிமனானது.

84) பெருந்தமனி தோன்றும் இடம் எது?

a) வலது ஆரிக்கிள்

b) இடது ஆரிக்கிள்

c) இடது வெண்ட்ரிக்கிள்

d) வலது வெண்ட்ரிக்கிள்

விளக்கம்: இடது வெண்ட்ரிக்கிளிலிருந்து பெருந்தமனி தோன்றுகிறது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை பெருந்தமனி அளிக்கின்றது. கரோனரி தமனி இதயத்தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கிறது.

85) உடலிற்கு ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை அளிக்கும் இரத்த குழாய் எது?

a) பெருந்தமனி

b) கரோனரி தமனி

c) சிரை

d) தந்துகிகள்

விளக்கம்: உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை பெருந்தமனி அளிக்கின்றது. கரோனரி தமனி இதயத்தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கிறது.

86) இதயத்தசைகளுக்கு ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை அளிக்கும் இரத்த குழாய் எது?

a) பெருந்தமனி

b) கரோனரி தமனி

c) சிரை

d) தந்துகிகள்

விளக்கம்: உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை பெருந்தமனி அளிக்கின்றது. கரோனரி தமனி இதயத்தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கிறது.

87) இரத்தமானது பின்னோக்கி வருவதை தடுக்க எது உதவுகிறது?

a) ஆரிக்கிள்

b) செப்டம்

c) ஏட்ரியம்

d) வால்வுகள்

விளக்கம்: இதய வால்வுகள் தசையால் ஆன சிறு மடிப்புகள் ஆகும். இவை இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு உதவுகின்றன. இரத்தமானது ஒரே திசையில் செல்வதையும் மற்றும் பின்னோக்கி வருவதை தடுக்கவும் உதவுகிறது. இதயம் மூன்று விதமான வால்வுகளைக் கொண்டது.

88) இதயத்தில் எத்தனை விதமான வால்வுகள் காணப்படுகின்றன?

a) ஒன்று

b) இரண்டு

c) மூன்று

d) நான்கு

விளக்கம்: இதயம் மூன்று விதமான வால்வுகளைக் கொண்டது.

வலது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு

இடது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு

அரைச்சந்திர வால்வுகள்

89) பொருத்துக

முதுகெலும்பிகளின் இதய அறைகள்

A. இரண்டு அறைகள் : ஊர்வன

B. மூன்று அறைகள் : இருவாழ்விகள்

C. முழுமையுறா நான்கு அறைகள் : மீன்கள்

D. நான்கு அறைகள் : பறவைகள்

A B C D

a) 3 2 1 4

b) 1 3 4 2

c) 3 4 1 2

d) 4 3 2 1

விளக்கம்: முதுகெலும்பிகளின் இதய அறைகள்

இரண்டு அறைகள் : மீன்கள்

மூன்று அறைகள் : இருவாழ்விகள்

முழுமையுறா நான்கு அறைகள் : ஊர்வன

நான்கு அறைகள் : பறவைகள், பாலூட்டிகள் மற்றும் முதலை (ஊர்வன)

90) வலது ஆரிக்கிள் மற்றும் வலது வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையில் அமைந்துள்ள வால்வின் பெயர் என்ன?

a) வலது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு

b) இடது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு

c) அரைச்சந்திர வால்வுகள்

d) ஈரிதழ் வால்வு

விளக்கம்: வலது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு

இது வலது ஆரிக்கிள் மற்றும் வலது வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையில் அமைந்துள்ளது. முக்கோண வடிவிலான மூன்று மெல்லிய இதழ் தசை மடிப்புகளால் ஆனதால் இது மூவிதழ் வால்வு என்று அழைக்கப்படுகிறது. வால்வின் இதழ் முனைகள் கார்டா டென்டினே என்ற தசை நீட்சிகளால் வெண்ட்ரிக்கிளின் பாப்பில்லரித் தசைகளோடு பொருத்தப்பட்டுள்ளன.

91) பின்வருவனவற்றுள் எந்த வால்வு மூவிதழ் வால்வு என்று அழைக்கப்படுகிறது?

a) வலது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு

b) இடது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு

c) அரைச்சந்திர வால்வுகள்

d) ஈரிதழ் வால்வு

விளக்கம்: வலது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு

இது வலது ஆரிக்கிள் மற்றும் வலது வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையில் அமைந்துள்ளது. முக்கோண வடிவிலான மூன்று மெல்லிய இதழ் தசை மடிப்புகளால் ஆனதால் இது மூவிதழ் வால்வு என்று அழைக்கப்படுகிறது.

92) வால்வின் இதழ் முனைகள் எதன் மூலம் வெண்ட்ரிக்கிளின் பாப்பில்லரித் தசைகளோடு பொருத்தப்பட்டுள்ளன?

a) கார்டா டென்டினே

b) டென்டான்ஸ்

c) படெலார் லிகமன்ட்ஸ்

d) குருசியேட் லிகமன்ட்ஸ்

விளக்கம்: வலது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு

வால்வின் இதழ் முனைகள் கார்டா டென்டினே என்ற தசை நீட்சிகளால் வெண்ட்ரிக்கிளின் பாப்பில்லரித் தசைகளோடு பொருத்தப்பட்டுள்ளன.

93) இடது ஆரிக்கிள் மற்றும் இடது வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையில் அமைந்துள்ள வால்வின் பெயர் என்ன?

a) வலது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு

b) இடது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு

c) அரைச்சந்திர வால்வுகள்

d) மூவிதழ் வால்வு

விளக்கம்: இடது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு

இது இடது ஆரிக்கிள் மற்றும் இடது வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இது இரண்டு கதுப்பு போல அமைந்துள்ளதால், ஈரிதழ் வால்வு அல்லது மிட்ரல் வால்வு என்றும் அழைக்கப்படுகிறது.

94) இடது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) மிட்ரல் வால்வு

b) மூவிதழ் வால்வு

c) ஈரிதழ் வால்வு

d) a மற்றும் c

விளக்கம்: இடது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு

இது இடது ஆரிக்கிள் மற்றும் இடது வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இது இரண்டு கதுப்பு போல அமைந்துள்ளதால், ஈரிதழ் வால்வு அல்லது மிட்ரல் வால்வு என்றும் அழைக்கப்படுகிறது.

95) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க.

I) அரைச்சந்திர வால்வுகள் நுரையீரல் மற்றும் பெருந்தமனி அரைச்சந்திர வால்வுகள் எனப்படுகின்றன.

II) இதயத்திலிருந்து வெளியேறும் முக்கியத் தமனிகளில் உள்ள அரைச்சந்திர வால்வுகள் வெண்ட்ரிக்கிளுக்குள் இரத்தம் பின்னோக்கி செல்வதைத் தடுக்கின்றன.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: அரைச்சந்திர வால்வுகள்

இதயத்திலிருந்து வெளியேறும் முக்கியத் தமனிகளில் (பெருந்தமனி, நுரையீரல் தமனி) உள்ள அரைச்சந்திர வால்வுகள் வெண்ட்ரிக்கிளுக்குள் இரத்தம் பின்னோக்கி செல்வதைத் தடுக்கின்றன. அவை நுரையீரல் மற்றும் பெருந்தமனி அரைச்சந்திர வால்வுகள் எனப்படுகின்றன.

96) பின்வருவனவற்றுள் சுற்றோட்டத்தின் வகையில் இல்லாதவை எவை?

a) சிஸ்டமிக் இரத்த ஓட்டம்

b) மூளை சுற்றோட்டம்

c) கரோனரி சுற்றோட்டம்

d) நுரையீரல் இரத்த ஒட்டம்

விளக்கம்: உடலில் இரத்தம் ஆக்சிஜன் மிகுந்த மற்றும் ஆக்சிஜன் குறைந்த சுற்றோட்டங்களைக் கொண்டது. சுற்றோட்டத்தின் வகைகளாவன

i.சிஸ்டமிக் அல்லது உடல் இரத்த ஓட்டம்

ii. நுரையீரல் இரத்த ஒட்டம்

iii. கரோனரி சுற்றோட்டம்

97) இதயத்தின் இடது வெண்ட்ரிக்கிளிலிருந்து இரத்தத்தினை உடலின் பல உறுப்புகளுக்கு எடுத்து சென்று மீண்டும் இரத்தத்தினை வலது ஏட்ரியத்திற்கு கொண்டு வரும் நிகழ்வு எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

a) சிஸ்டமிக் இரத்த ஓட்டம்

b) மூளை சுற்றோட்டம்

c) கரோனரி சுற்றோட்டம்

d) நுரையீரல் இரத்த ஒட்டம்

விளக்கம்: சிஸ்டமிக் அல்லது உடல் இரத்த ஓட்டம்

இதயத்தின் இடது வெண்ட்ரிக்கிளிலிருந்து துவங்கி ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை உடலின் பல உறுப்புகளுக்கு எடுத்து சென்று மீண்டும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை வலது ஏட்ரியத்திற்கு கொண்டு வரும் சுற்றோட்டத்தினை சிஸ்டமிக் அல்லது உடல் இரத்த ஓட்டம் என்கிறோம். ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பெருந்தமனி எடுத்துச் செல்கிறது.

98) வலது வெண்டிரிக்கிளிலிருந்து நுரையீரல் வழியாக இரத்தம் மீண்டும் இடது வெண்டிரிக்கிளைச் சென்றடையும் நிகழ்வு எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

a) சிஸ்டமிக் இரத்த ஓட்டம்

b) மூளை சுற்றோட்டம்

c) கரோனரி சுற்றோட்டம்

d) நுரையீரல் இரத்த ஒட்டம்

விளக்கம்: நுரையீரல் இரத்த ஒட்டம்

வலது வெண்டிரிக்கிளிலிருந்து இரத்தம் நுரையீரல் தமனியின் மூலம் நுரையீரலை அடையும். நுரையீரலிருந்து ஆக்சிஜன் பெற்ற இரத்தம் நுரையீரல் சிரைகளின் மூலம் மீண்டும் இதயத்தின் இடது ஏட்ரியத்தை வந்தடையும். இவ்விதம், வலது வெண்டிரிக்கிளிலிருந்து நுரையீரல் வழியாக இரத்தம் மீண்டும் இடது வெண்டிரிக்கிளைச் சென்றடைவதே நுரையீரல் இரத்த ஓட்டம் எனப்படுகிறது.

99) இதயத் தசைகளுக்கு இரத்தம் செல்லுதல் எவ்வாறு அறியப்படுகிறது?

a) சிஸ்டமிக் இரத்த ஓட்டம்

b) இதய இரத்த ஒட்டம்

c) கரோனரி சுற்றோட்டம்

d) a மற்றும் b

விளக்கம்: கரோனரி சுற்றோட்டம்

இதயத் தசைகளுக்கு (கார்டியக் தசைகள்) இரத்தம் செல்லுதல் கரோனரி சுழற்சி எனப்படும். இதயத் தசைகளுக்கு ஆக்சிஜன் மிகுந்த இரத்தம் கரோனரி தமனி மூலமாக பெறப்படுகிறது. இது பெருந்தமனியின் வளைவிலிருந்து உருவாகிறது. இதயத் தசையிலிருந்து ஆக்சிஜன் குறைந்த இரத்தம் கரோனரி சைனஸ் மூலம் வலது ஏட்ரியத்தை வந்தடைகிறது.

100) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

கரோனரி சுற்றோட்டம்:

I) ஒரு முழு சுழற்சியின் போது இரத்தமானது இதயத்தின் வழியாக இருமுறை சுற்றி வருவது இரட்டை இரத்த ஓட்டம் எனப்படும்.

II) இம்முறையிலான இரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் மிகுந்த இரத்தமும், ஆக்சிஜன் குறைந்த இரத்தமும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: கரோனரி சுற்றோட்டம்

இதயத் தசைகளுக்கு (கார்டியக் தசைகள்) இரத்தம் செல்லுதல் கரோனரி சுழற்சி எனப்படும். ஒரு முழு சுழற்சியின் போது இரத்தமானது இதயத்தின் வழியாக இருமுறை சுற்றி வருவது இரட்டை இரத்த ஓட்டம் எனப்படும். இம்முறையிலான இரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் மிகுந்த இரத்தமும், ஆக்சிஜன் குறைந்த இரத்தமும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை.

ஆனால் சில விலங்கினங்களில் ஆக்சிஜன் மிகுந்த இரத்தமும் ஆக்சிஜன் குறைந்த இரத்தமும் ஒன்றுடன் ஒன்று கலந்து இதயத்தினுள் ஒரு முறை மட்டுமே சென்று வரும். இத்தகைய சுற்றோட்டம் ஒற்றை இரத்த ஓட்டம் எனப்படும். எ.கா மீன்கள், இருவாழ்விகள் மற்றும் சில ஊர்வன.

101) ஒற்றை இரத்த ஓட்டம் எதில் காணப்படுகிறது?

a) மீன்கள்

b) இருவாழ்விகள்

c) சில ஊர்வன

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: கரோனரி சுற்றோட்டம்

இதயத் தசைகளுக்கு (கார்டியக் தசைகள்) இரத்தம் செல்லுதல் கரோனரி சுழற்சி எனப்படும். ஒரு முழு சுழற்சியின் போது இரத்தமானது இதயத்தின் வழியாக இருமுறை சுற்றி வருவது இரட்டை இரத்த ஓட்டம் எனப்படும். இம்முறையிலான இரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் மிகுந்த இரத்தமும், ஆக்சிஜன் குறைந்த இரத்தமும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை.

ஆனால் சில விலங்கினங்களில் ஆக்சிஜன் மிகுந்த இரத்தமும் ஆக்சிஜன் குறைந்த இரத்தமும் ஒன்றுடன் ஒன்று கலந்து இதயத்தினுள் ஒரு முறை மட்டுமே சென்று வரும். இத்தகைய சுற்றோட்டம் ஒற்றை இரத்த ஓட்டம் எனப்படும். எ.கா மீன்கள், இருவாழ்விகள் மற்றும் சில ஊர்வன.

102) இதயத்தின் ஆரிக்கிள்கள் மற்றும் வெண்ட்ரிக்கிள்கள் சுருங்குதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) டையஸ்டோல்

b) சிஸ்டோல்

c) இதயத்துடிப்பு

d) a மற்றும் b

விளக்கம்: இதயத்தின் ஆரிக்கிள்கள் மற்றும் வெண்ட்ரிக்கிள்கள் முழுமையாக ஒருமுறை சுருங்கி (சிஸ்டோல்) விரிவடையும் (டையஸ்டோல்) நிகழ்விற்கு இதயத்துடிப்பு என்று பெயர். இதயமானது சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 72 – 75 முறை துடிக்கிறது.

103) இதயத்தின் ஆரிக்கிள்கள் மற்றும் வெண்ட்ரிக்கிள்கள் விரிவடைதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) டையஸ்டோல்

b) சிஸ்டோல்

c) இதயத்துடிப்பு

d) a மற்றும் b

விளக்கம்: இதயத்தின் ஆரிக்கிள்கள் மற்றும் வெண்ட்ரிக்கிள்கள் முழுமையாக ஒருமுறை சுருங்கி (சிஸ்டோல்) விரிவடையும் (டையஸ்டோல்) நிகழ்விற்கு இதயத்துடிப்பு என்று பெயர். இதயமானது சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 72 – 75 முறை துடிக்கிறது.

104) இதயத்தின் ஆரிக்கிள்கள் மற்றும் வெண்ட்ரிக்கிள்கள் முழுமையாக ஒருமுறை சுருங்கி விரிவடைதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) டையஸ்டோல்

b) சிஸ்டோல்

c) இதயத்துடிப்பு

d) a மற்றும் b

விளக்கம்: இதயத்தின் ஆரிக்கிள்கள் மற்றும் வெண்ட்ரிக்கிள்கள் முழுமையாக ஒருமுறை சுருங்கி (சிஸ்டோல்) விரிவடையும் (டையஸ்டோல்) நிகழ்விற்கு இதயத்துடிப்பு என்று பெயர். இதயமானது சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 72 – 75 முறை துடிக்கிறது.

105) இதயமானது சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது?

a) 65-85

b) 72 – 75

c) 60-85

d) 70-90

விளக்கம்: இதயத்தின் ஆரிக்கிள்கள் மற்றும் வெண்ட்ரிக்கிள்கள் முழுமையாக ஒருமுறை சுருங்கி (சிஸ்டோல்) விரிவடையும் (டையஸ்டோல்) நிகழ்விற்கு இதயத்துடிப்பு என்று பெயர். இதயமானது சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 72 – 75 முறை துடிக்கிறது.

106) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) நரம்புத் தூண்டலினால் நியூரோஜெனிக் இதயத்துடிப்பு உண்டாகிறது. இத்தூண்டல் இதயத்தின் அருகில் உள்ள நரம்பு முடிச்சினால் தூண்டப்படுகிறது.

II) மையோஜெனிக் இதயத் துடிப்பானது மாறுபாடடைந்த சிறப்புத் தன்மை வாய்ந்த இதயத்தசை நார்களால் தூண்டப்படுகிறது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: நியூரோஜெனிக் மற்றும் மையோஜெனிக் இதயத்துடிப்பு

நரம்புத் தூண்டலினால் நியூரோஜெனிக் இதயத்துடிப்பு உண்டாகிறது. இத்தூண்டல் இதயத்தின் அருகில் உள்ள நரம்பு முடிச்சினால் தூண்டப்படுகிறது. எ.கா. வளைதசைப் புழுக்கள், பெரும்பாலான கணுக்காலிகள்

மையோஜெனிக் இதயத் துடிப்பானது மாறுபாடடைந்த சிறப்புத் தன்மை வாய்ந்த இதயத்தசை நார்களால் தூண்டப்படுகிறது. எ.கா. மெல்லுடலிகள், முதுகெலும்பிகள்.

107) மனித இதயம் எந்த வகை இதயத் துடிப்பை சேர்ந்தது?

a) மையோஜெனிக்

b) நியூரோஜெனிக்

c) a மற்றும் b

d) எவையுமில்லை

விளக்கம்: மனித இதயம் மயோஜெனிக் வகையைச் சேர்ந்தது. மையோஜெனிக் இதயத் துடிப்பானது மாறுபாடடைந்த சிறப்புத் தன்மை வாய்ந்த இதயத்தசை நார்களால் தூண்டப்படுகிறது. எ.கா. மெல்லுடலிகள், முதுகெலும்பிகள்.

108) இதயத்தசையில் காணப்படும் எந்த பகுதி இதயம் சுருங்குவதைத் துவக்குகிறது?

a) புர்கின்ஜி கற்றைகள்

b) சைனோ ஏட்ரியல் கணு

c) ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் கணு

d) ஹிஸ் கற்றை

விளக்கம்: இதயத் துடிப்பு பரவுதல்

மனித இதயம் மயோஜெனிக் வகையைச் சேர்ந்தது. இதயத்தசையில் காணப்படும் சிறப்புப் பகுதியான சைனோ ஏட்ரியல் கணு (SA) இதயம் சுருங்குவதைத் துவக்குகிறது. இது வலது ஏட்ரியசுவரில் உள்ள மேற்பெருஞ்சிரைத் துளையின் அருகில் காணப்படுகிறது.

109) பின்வருவனவற்றுள் எது இதயத்தின் பேஸ்மேக்கர் என அழைக்கப்படுகிறது?

a) புர்கின்ஜி கற்றைகள்

b) சைனோ ஏட்ரியல் கணு

c) ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் கணு

d) ஹிஸ் கற்றை

விளக்கம்: இதயத் துடிப்பு பரவுதல்

SA கணுவானது மேற்புறம் அகன்றும் கீழ்புறம் குறுகியும் காணப்படுகிறது. இது மெல்லிய தசை நாரிழைகளால் ஆனது. SA கணுவானது இதயத்தின் பேஸ்மேக்கராக செயல்படுகிறது. ஏனெனில் இது இதயத் துடிப்புகளுக்கான மின் தூண்டலைத் தோற்றுவித்து இதயத் தசைகளின் சுருக்கத்தைத் தூண்டுகிறது.

110) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) SA கணுவானது மேற்புறம் அகன்றும் கீழ்புறம் குறுகியும் காணப்படுகிறது. இது மெல்லிய தசை நாரிழைகளால் ஆனது.

II) இது இதயத் துடிப்புகளுக்கான மின் தூண்டலைத் தோற்றுவித்து இதயத் தசைகளின் சுருக்கத்தைத் தூண்டுகிறது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: இதயத் துடிப்பு பரவுதல்

SA கணுவானது மேற்புறம் அகன்றும் கீழ்புறம் குறுகியும் காணப்படுகிறது. இது மெல்லிய தசை நாரிழைகளால் ஆனது. SA கணுவானது இதயத்தின் பேஸ்மேக்கராக செயல்படுகிறது. ஏனெனில் இது இதயத் துடிப்புகளுக்கான மின் தூண்டலைத் தோற்றுவித்து இதயத் தசைகளின் சுருக்கத்தைத் தூண்டுகிறது.

111) ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் கற்றை மற்றும் ___________ வழியாக வெண்ட்ரிக்கிள்களுக்கு மின்தூண்டல் அலைகள் பரவி அவற்றை சுருங்கச் செய்கிறது?

a) புர்கின்ஜி கற்றைகள்

b) சைனோ ஏட்ரியல் கணு

c) ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் கணு

d) ஹிஸ் கற்றை

விளக்கம்: சைனோ ஏட்ரியல் கணுவிலிருந்து தூண்டல்கள் அலைகளாகப் பரவி வலது மற்றும் இடது ஏட்ரிய சுவர்களை சுருங்கச் செய்வதன் மூலம் இரத்தம் ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் திறப்பின் வழியாக வெண்ட்ரிக்கிள்களுக்கு உந்தித் தள்ளப்படுகிறது. SA கணுவிலிருந்து மின்தூண்டல் அலைகள் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் (AV) கணுவிற்கு பரவுகிறது. ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் கற்றை மற்றும் புர்கின்ஜி கற்றைகள் வழி வெண்ட்ரிக்கிள்களுக்கு மின்தூண்டல் அலைகள் பரவி அவற்றை சுருங்கச் செய்கிறது.

112) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) ஹிஸ் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் கற்றைகளைக் கண்டறிந்தார்.

II) இரத்தம் ஒவ்வொரு முறையும் தமனிகளுக்குள் உந்தப்படும் போது தமனிகள் விரிவடைவது நாடித்துடிப்பு எனப்படும்.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: ஹிஸ் (1893) ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் கற்றைகளைக் கண்டறிந்தார். அதனால் இது ஹிஸ் கற்றை என்று அழைக்கப்படுகிறது.

நாடித்துடிப்பு

இதயத் துடிப்பின் போது இரத்தமானது தமனிகளுக்குள் உந்தித் தள்ளப்படுகிறது. இரத்தம் ஒவ்வொரு முறையும் தமனிகளுக்குள் உந்தப்படும் போது தமனிகள் விரிவடைவதை நாடித்துடிப்பு என்கிறோம். இதனை மணிக்கட்டின் அருகில் உள்ள தமனியின் மீது விரல் நுனியினை வைத்து உணரலாம். இயல்பான நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 70 – 90 முறைகள் ஆகும்.

113) ஒவ்வொரு இதய சுழற்சியும் எத்தனை வினாடிகளில் முடிவடைகிறது?

a) 0.8 வினாடிகளில்

b) 0.2 வினாடிகளில்

c) 0.1 வினாடிகளில்

d) 0.3 வினாடிகளில்

விளக்கம்: ஓர் இதயத் துடிப்பு துவங்குவதற்கும் முடிவடைவதற்கும் இடைப்பட்ட வரிசைக்கிரமமான நிகழ்வுகள் இதய சுழற்சி (கார்டியாக் சுழற்சி) எனப்படும். இதய சுழற்சியின் போது, இரத்தமானது இதயத்தின் அறைகளுக்குள் குறிப்பிட்ட திசையில் செல்லும். ஒவ்வொரு இதய சுழற்சியும் 0.8 வினாடிகளில் முடிவடையும். ஒரு இதய சுழற்சி கீழ்க்கண்ட நிகழ்வுகளை உள்ளடக்கியது.

1. ஏட்ரியல் சிஸ்டோல் : ஆரிக்கிள்கள் சுருக்கம் (0.1வினாடி)

2. வெண்ட்ரிக்குலார் சிஸ்டோல் : வெண்ட்ரிக்கிள்கள் சுருக்கம் (0.3 வினாடி)

3. வெண்ட்ரிக்குலார் டயஸ்டோல் : வெண்ட்ரிக்கிள்கள் விரிவடைதல் (0.4 வினாடி)

114) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) முதல் ஒலியான ‘டப்’ நீண்ட காலம் ஒலிக்கும். இவ்வொலியானது அரைச்சந்திர வால்வுகள் மூடுவதால் ஏற்படும்.

II) இரண்டாவது ஒலியான ‘லப்’ குறுகிய நேரத்திற்கு மட்டுமே ஒலிக்கும். வெண்ட்ரிக்குலார் சிஸ்டோலின் ஆரம்ப நிலையில் மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடுவதால் இந்த ஒலி உண்டாகிறது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: இதய ஒலியானது இதய வால்வுகள் சீரான முறையில் திறந்து மூடுவதால் ஏற்படுகிறது. முதல் ஒலியான ‘லப்’ நீண்ட நேரத்திற்கு ஒலிக்கும். வெண்ட்ரிக்குலார் சிஸ்டோலின் ஆரம்ப நிலையில் மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடுவதால் இந்த ஒலி உண்டாகிறது. இரண்டாவது ஒலியான ‘டப்’ சற்று குறுகிய காலமே ஒலிக்கும். இவ்வொலியானது வெண்ட்ரிக்குலார் சிஸ்டோலின் முடிவில் அரைச்சந்திர வால்வுகள் மூடுவதால் ஏற்படும்.

115) இரத்த அழுத்தம் எதன் மீது ஏற்படும் அழுத்தத்தால் ஏற்படுகிறது?

a) தமனி

b) சிரை

c) தந்துகிகள்

d) கரோனரி சிரை

விளக்கம்: தமனிகளின் வழியே இரத்தம் ஓடும் போது அத்தமனிகளின் பக்கவாட்டுச் சுவர் மீது இரத்தம் ஏற்படுத்தும் அழுத்தமே இரத்த அழுத்தம் எனப்படும்.

இரத்த அழுத்தமானது தமனிகளில் அதிகரித்து, ஆர்டிரியோல்கள் மற்றும் தந்துகிகளில் படிப்படியாக குறைந்து பின்னர் மிகக் குறைவான இரத்த அழுத்தம் சிரையில் காணப்படுகிறது.

116) இரத்தம் பெருந்தமனிக்குள் மிக வேகமாக செலுத்தப்படும் போது ஏற்படும் அழுத்தம் எவ்வாறு அறியப்படுகிறது?

a) சிஸ்டோலிக் அழுத்தம்

b) டயஸ்டோலிக் அழுத்தம்

c) ஏட்ரியோ வென்டிரிக்கிள் அழுத்தம்

d) a மற்றும் b

பொதுவாக இரத்த அழுத்தம் சிஸ்டோலிக் அழுத்தம் மற்றும் டயஸ்டோலிக் அழுத்தம் என குறிப்பிடப்படுகிறது.

சிஸ்டோலிக் அழுத்தம்: வென்ட்ரிகுலார் சிஸ்டோல் நிகழ்வின் போது இடது வெண்ட்ரிக்கிள் சுருங்குவதால் இரத்தம் பெருந்தமனிக்குள் மிக வேகமாக செலுத்தப்படுகிறது. இந்நிகழ்வின் போது ஏற்படும் மிகை அழுத்தம் சிஸ்டோலிக் அழுத்தம் எனப்படும்.

117) இடது வென்ட்ரிக்கிள்கள் விரிவடைவதன் காரணமாக குறையும் அழுத்தம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) சிஸ்டோலிக் அழுத்தம்

b) டயஸ்டோலிக் அழுத்தம்

c) ஏட்ரியோ வென்டிரிக்கிள் அழுத்தம்

d) a மற்றும் b

விளக்கம்: டயஸ்டோலிக் அழுத்தம்

டயஸ்டோல் நிகழ்வின் போது இடது வென்ட்ரிக்கிள்கள் விரிவடைவதன் காரணமாக அழுத்தம் குறைகிறது. இக்குறை அழுத்தமே டயஸ்டோலிக் அழுத்தம் எனப்படும்.

118) ஒரு ஆரோக்கியமான மனிதரில் ஓய்வாக உள்ள நிலையில் சிஸ்டோலிக் மற்றும் டயஸ்டோலிக் அழுத்தமானது எவ்வளவு இருக்க வேண்டும்?

a) 80mmHg / 120mmHg

b) 120mmHg / 80mmHg

c) 100mmHg / 180mmHg

d) 800mmHg /100mmHg

விளக்கம்: ஒரு ஆரோக்கியமான மனிதரில் ஓய்வாக உள்ள நிலையில் சிஸ்டோலிக் மற்றும் டயஸ்டோலிக் அழுத்தமானது 120mmHg / 80mmHg அளவில் காணப்படுகிறது. உடற்பயிற்சி, கவலை, உணர்ச்சி வசப்படுதல், மன அழுத்தம் மற்றும் உறக்கம் போன்ற நிலைகளில் இவ்வளவீடு மாறுபடுகிறது.

119) அடிக்கடி இரத்த அழுத்தம் அதிகரித்தல் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

a) ஹைபர்டென்ஷன்

b) ஹைபர் கிளைசிமியா

c) ஹைபோகிளைசிமியா

d) ஹைப்போடென்ஷன்

விளக்கம்: தொடர்ந்து அல்லது அடிக்கடி இரத்த அழுத்தம் அதிகரித்தல் ஹைபர்டென்ஷன் (உயர் இரத்த அழுத்தம்) எனப்படும். ஹைபர்டென்ஷன் அதிகரிப்பதன் மூலம் இதய நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்கள் உண்டாகின்றன. குறைவான இரத்த அழுத்த நிலை ஹைப்போடென்ஷன் (குறை இரத்த அழுத்தம்) எனப்படும்.

120) இரத்த அழுத்தம் குறைவாக காணப்படுவது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

a) ஹைபர்டென்ஷன்

b) ஹைபர் கிளைசிமியா

c) ஹைபோகிளைசிமியா

d) ஹைப்போடென்ஷன்

விளக்கம்: தொடர்ந்து அல்லது அடிக்கடி இரத்த அழுத்தம் அதிகரித்தல் ஹைபர்டென்ஷன் (உயர் இரத்த அழுத்தம்) எனப்படும். ஹைபர்டென்ஷன் அதிகரிப்பதன் மூலம் இதய நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்கள் உண்டாகின்றன. குறைவான இரத்த அழுத்த நிலை ஹைப்போடென்ஷன் (குறை இரத்த அழுத்தம்) எனப்படும்.

121) மனித உடலின் உள்ளுறுப்புகள் ஏற்படுத்தும் ஒலிகளைக் கண்டறிய உதவும் கருவியின் பெயர் என்ன?

a) ஸ்பிக்மோமானோமீட்டர்

b) தெர்மோமீட்டர்

c) குளுகோமீட்டர்

d) ஸ்டெத்தாஸ்கோப்

விளக்கம்: ஸ்டெத்தாஸ்கோப்

மனித உடலின் உள்ளுறுப்புகள் ஏற்படுத்தும் ஒலிகளைக் கண்டறிய ஸ்டெத்தாஸ்கோப் பயன்படுகிறது. ஸ்டெத்தாஸ்கோப்பினை மார்புப் பகுதியில் வைத்து இதயத்தின் ஒலியினைக் கேட்டறியலாம். இது ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிக்கல் உள்ளதைத் தெரிந்து கொண்டு நோய்களை அடையாளம் கண்டறிய உதவும் சாதனமாகும். நவீன மின்னணு ஸ்டெத்தாஸ்கோப் மிகவும் துல்லியமானது.

122) இரத்த அழுத்தத்தைக் கண்டறிய உதவும் மருத்துவ உபகரணத்தின் பெயர் என்ன?

a) ஸ்பிக்மோமானோமீட்டர்

b) தெர்மோமீட்டர்

c) குளுகோமீட்டர்

d) ஸ்டெத்தாஸ்கோப்

விளக்கம்: ஸ்பிக்மோமானோமீட்டர்

இரத்த அழுத்தத்தைக் கண்டறிய உதவும் மருத்துவ உபகரணம் ஸ்பிக்மோமானோ மீட்டர் ஆகும். இக்கருவியைக் கொண்டு ஒரு மனிதனின் மேற்கரத் தமனியின் அழுத்தம், அவர் ஓய்வாக உள்ள நிலையில் அளவிடப்படுகிறது. மேலும் இக்கருவி இரத்த ஓட்டத்தின் நிலையையும், இதயம் செயல்படுவதையும் கண்டறிய உதவுகிறது. குறைந்த மற்றும் உயர் இரத்த அழுத்த நிலைகளைக் கண்டறிய உதவுகிறது. மானோமெட்ரிக் மற்றும் நவீன எண்ணியல் (டிஜிட்டல்) வகையிலான உபகரணங்கள் இரத்த அழுத்தத்தினை அளக்க உதவும் சாதனங்களாகும்.

123) இரத்தவகைகளைக் கண்டறிந்தவர் யார்?

a) ஆன்டன் வான் லூவன் ஹூக்

b) ஜான் வில்லியம்

c) வில்லியம் அடிசன்

d) காரல் லேண்ட்ஸ்டீனர்

விளக்கம்: காரல் லேண்ட்ஸ்டீனர் (1900) இரத்தவகைகளைக் கண்டறிந்தார். இவர், A, B மற்றும் O இரத்த வகைகளை அடையாளம் கண்டறிந்தார். டிகாஸ்டிலோ மற்றும் ஸ்டய்னி (1902) AB இரத்த வகையினை கண்டறிந்தனர்.

124) பின்வருவனவற்றுள் எது RBC-யின் மேற்புற படலத்தில் காணப்படுகின்றன?

a) எதிர்ப்பொருள்கள்

b) அக்ளுட்டினின்

c) ஆன்ட்டிபாடிகள்

d) ஆன்டிஜென்கள்

விளக்கம்: மனித இரத்தத்தில் சில தனிச் சிறப்பு வாய்ந்த அக்ளுட்டினோஜென் அல்லது ஆன்டிஜென் (Ag) மற்றும் அக்ளுட்டினின் (அ) எதிர்ப்பொருள்கள் (ஆன்ட்டிபாடிகள்) காணப்படுகின்றன. ஆன்டிஜென்கள் RBC-யின் மேற்புற படலத்தில் காணப்படுகின்றன.

125) மனித இரத்தத்தில் காணப்படும் தனிச் சிறப்பு வாய்ந்த பொருள் எது?

a) அக்ளுட்டினோஜென்

b) அக்ளுட்டினின்

c) ஆன்ட்டிபாடிகள்

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: மனித இரத்தத்தில் சில தனிச் சிறப்பு வாய்ந்த அக்ளுட்டினோஜென் அல்லது ஆன்டிஜென் (Ag) மற்றும் அக்ளுட்டினின் (அ) எதிர்ப்பொருள்கள் (ஆன்ட்டிபாடிகள்) காணப்படுகின்றன. ஆன்டிஜென்கள் RBC-யின் மேற்புற படலத்தில் காணப்படுகின்றன.

126) எதிர்ப்பொருட்கள் எவற்றில் காணப்படுகின்றன?

a) இரத்த செல்கள்

b) பிளாஸ்மா

c) ஆக்க கூறுகள்

d) a அல்லது c

விளக்கம்: எதிர்ப்பொருட்கள் இரத்த பிளாஸ்மாவில் காணப்படுகின்றன. ஆன்டிஜென் மற்றும் (ஆன்டிபாடி) எதிர்ப்பொருள்கள் காணப்படுவதின் அடிப்படையில் மனித இரத்தத்தினை A, B, AB மற்றும் O என நான்கு வகைககளாக அறியலாம். இந்த நான்கு வகைகளில் ஏதேனும் ஒரு வகையினை ஒரு தனிநபர் பெற்றிருப்பார்.

127) எவற்றின் அடிப்படையில் மனித இரத்தத்தினை நான்கு வகைககளாக அறியலாம்?

a) ஹீமோகுளோபின்

b) ஆன்டிஜென்கள்

c) ஆன்ட்டிபாடிகள்

d) b மற்றும் c

விளக்கம்: எதிர்ப்பொருட்கள் இரத்த பிளாஸ்மாவில் காணப்படுகின்றன. ஆன்டிஜென் மற்றும் (ஆன்டிபாடி) எதிர்ப்பொருள்கள் காணப்படுவதின் அடிப்படையில் மனித இரத்தத்தினை A, B, AB மற்றும் O என நான்கு வகைககளாக அறியலாம். இந்த நான்கு வகைகளில் ஏதேனும் ஒரு வகையினை ஒரு தனிநபர் பெற்றிருப்பார்.

128) ஆன்டிஜென் மற்றும் எதிர்ப்பொருள்கள் அடிப்படையில் மனித இரத்தத்தினை எத்தனை வகைககளாக பிரிக்கப்படுகிறது?

a) ஐந்து

b) எட்டு

c) மூன்று

d) நான்கு

விளக்கம்: எதிர்ப்பொருட்கள் இரத்த பிளாஸ்மாவில் காணப்படுகின்றன. ஆன்டிஜென் மற்றும் (ஆன்டிபாடி) எதிர்ப்பொருள்கள் காணப்படுவதின் அடிப்படையில் மனித இரத்தத்தினை A, B, AB மற்றும் O என நான்கு வகைககளாக அறியலாம். இந்த நான்கு வகைகளில் ஏதேனும் ஒரு வகையினை ஒரு தனிநபர் பெற்றிருப்பார்.

129) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) O வகை : ஆன்டிஜென் A மற்றும் B RBC –யின் மேற்புறப்பரப்பில் காணப்படாது. இருந்த போதிலும் அதற்கான ஆன்டிபாடி A மற்றும் B பிளாஸ்மாவில் காணப்படும்.

II) A B வகை : ஆன்டிஜென் A மற்றும் B – RBC –யின் மேற்புறப்பரப்பில் காணப்படும். அதற்கான ஆன்டிபாடிகள் பிளாஸ்மாவில் காணப்படாது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: ஆன்டிஜென் மற்றும் (ஆன்டிபாடி) எதிர்ப்பொருள்கள் காணப்படுவதின் அடிப்படையில் மனித இரத்தத்தினை A, B, AB மற்றும் O என நான்கு வகைககளாக அறியலாம். இந்த நான்கு வகைகளில் ஏதேனும் ஒரு வகையினை ஒரு தனிநபர் பெற்றிருப்பார்.

‘A’ வகை : ஆன்டிஜென் A – RBC யின் மேற்புறப்பரப்பில் காணப்படும்.ஆன்டிபாடிB – இரத்த பிளாஸ்மாவில் காணப்படும்.

‘B’ வகை : ஆன்டிஜென் B – RBC யின் மேற்புறப்பரப்பில் காணப்படும். ஆன்டிபாடி A– இரத்த பிளாஸ்மாவில் காணப்படும்.

‘A B’ வகை : ஆன்டிஜென் A மற்றும் B – RBC –யின் மேற்புறப்பரப்பில் காணப்படும். அதற்கான ஆன்டிபாடிகள் பிளாஸ்மாவில் காணப்படாது.

‘O’ வகை : ஆன்டிஜென் A மற்றும் B RBC –யின் மேற்புறப்பரப்பில் காணப்படாது. இருந்த போதிலும் அதற்கான ஆன்டிபாடி A மற்றும் B பிளாஸ்மாவில் காணப்படும்.

130) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) இரத்தம் வழங்குபவர் மற்றும் இரத்தம் பெறுபவருக்கு இடையில் ஆன்டிஜெனுக்கும் ஆன்டிபாடிக்கும் உள்ள பொருத்தத்தினை கருத்தில் கொள்ள வேண்டும்.

II) பொருத்தமில்லா ஒரு இரத்த வகையினை ஒருவர் பெறுவதினால் அவர் இறக்க நேரிடும்.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: இரத்தம் வழங்குதல்: இரத்தம் செலுத்துவதற்கு முன்னர் இரத்தம் வழங்குபவர் மற்றும் இரத்தம் பெறுபவருக்கு இடையில் ஆன்டிஜெனுக்கும் ஆன்டிபாடிக்கும் உள்ள பொருத்தத்தினை கருத்தில் கொள்ள வேண்டும். பொருத்தமில்லா ஒரு இரத்த வகையினை ஒருவர் பெறுவதினால் அவருக்கு இரத்தத் திரட்சி ஏற்பட்டு இறக்க நேரிடும்.

131) பின்வருவனவற்றுள் எந்த இரத்த வகையினை சேர்ந்தவர்கள் ‘அனைவரிடமிருந்தும் இரத்தம் பெறுவோர் வகை’ என அழைக்கப்படுகிறார்கள்?

a) O

b) AB

c) A

d) B

விளக்கம்: AB இரத்த வகை கொண்ட நபரை அனைவரிடமிருந்து இரத்தம் பெறுவோர் வகை என அழைப்பர். இவர் அனைத்து இரத்த வகையினையும் ஏற்றுக் கொள்வார்.

132) எந்த இரத்த வகை கொண்ட நபரை ‘இரத்தக் கொடையாளி‘ என அழைப்பார்கள்?

a) O

b) AB

c) A

d) B

விளக்கம்: O இரத்த வகை கொண்ட நபரை ‘இரத்தக் கொடையாளி‘ என அழைப்பர். இவர் அனைத்து வகை இரத்த பிரிவினருக்கும் இரத்தம் வழங்குவார்.

133) Rh காரணியைக் கண்டறிந்தவர் யார்?

a) லேண்ட்ஸ்டீனர்

b) வீனர்

c) வில்லியம் அடிசன்

d) a மற்றும் b

விளக்கம்: Rh காரணி

ரீசஸ் இனக்குரங்கின் இரத்தத்தை முயலின் உடலுக்குள் செலுத்தி உற்பத்தியான ஆன்டிபாடிகளை கொண்டு 1940 – ல் லேண்ட்ஸ்டீனர் மற்றும் வீனர் Rh காரணியைக் கண்டறிந்தனர். இந்த எதிர்ப்பொருள் எதிர்க்காரணி Rh என்று பெயர். திரிபடையும் செல்கள் Rh (+) எனவும், திரிபு அடையாத செல்கள் Rh(-)எனவும் அழைக்கப்படுகின்றன.

134) ரீசஸ் இனக்குரங்கின் இரத்தத்தை எதன் உடலுக்குள் செலுத்தி Rh காரணியைக் கண்டறிந்தனர்?

a) எலி

b) தவளை

c) முயல்

d) ஆடு

விளக்கம்: Rh காரணி

ரீசஸ் இனக்குரங்கின் இரத்தத்தை முயலின் உடலுக்குள் செலுத்தி உற்பத்தியான ஆன்டிபாடிகளை கொண்டு 1940 – ல் லேண்ட்ஸ்டீனர் மற்றும் வீனர் Rh காரணியைக் கண்டறிந்தனர். இந்த எதிர்ப்பொருள் எதிர்க்காரணி Rh என்று பெயர். திரிபடையும் செல்கள் Rh (+) எனவும், திரிபு அடையாத செல்கள் Rh(-)எனவும் அழைக்கப்படுகின்றன.

135) பின்வருவனவற்றுள் எது நிணநீர் மண்டலத்தில் காணப்படாது?

a) நிணநீர் முடிச்சுகள்

b) நிணநீர் பைகள்

c) நிணநீர்த் தந்துகிகள்

d) நிணநீர்க் குழாய்கள்

விளக்கம்: நிணநீர் மண்டலமானது நிணநீர், நிணநீர்த் தந்துகிகள், நிணநீர் நாளங்கள், நிணநீர் முடிச்சுகள் மற்றும் நிணநீர்க் குழாய்களை உள்ளடக்கியது. நிணநீர் மண்டலத்தின் வழியே பாய்ந்தோடும் திரவம் நிணநீர் எனப்படும்.

136) எவை ஒன்றாக இணைந்து பெரிய நிணநீர் நாளங்களை உருவாக்குகின்றன?

a) நிணநீர் முடிச்சுகள்

b) நிணநீர் பைகள்

c) நிணநீர்த் தந்துகிகள்

d) நிணநீர்க் குழாய்கள்

விளக்கம்: நிணநீர்த் தந்துகிகள் ஒன்றாக இணைந்து பெரிய நிணநீர் நாளங்களை உருவாக்குகின்றன. சிறிய முட்டை அல்லது பேரிக்காய் வடிவமுடைய நிணநீர் முடிச்சுகள் நிணநீர் நாளங்களின் பாதையில் காணப்படுகின்றன.

137) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) நிணநீர் இரத்த பிளாஸ்மாவை ஒத்துள்ளது.

II) நிறமற்றது மற்றும் குறைந்த அளவு புரதத்தைக் கொண்டுள்ளது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: நிணநீர்: நிணநீர்த் தந்துகிகளின் செல் இடைவெளியில் நிணநீர் காணப்படுகிறது. இரத்தத் தந்துகிகளின் சுவர்களில் உள்ள துளைகளின் வழியாக பிளாஸ்மா, புரதங்கள் மற்றும் இரத்த செல்கள், திசுக்களின் செல் இடைவெளிகளுக்குள் ஊடுருவும் போது நிறமற்ற நிணநீராக உருவாகிறது. இது இரத்த பிளாஸ்மாவை ஒத்துள்ளது. ஆனால் நிறமற்றது மற்றும் குறைந்த அளவு புரதத்தைக் கொண்டுள்ளது. இதில் மிகக் குறைந்த அளவே ஊட்டப்பொருட்கள், ஆக்ஸிஜன், CO2, நீர் மற்றும் WBC ஆகியவை உள்ளன.

138) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) நிணநீரில் உள்ள லிம்ஃபோசைட்டுகள் உடலை நோய்த்தாக்குதலிலிருந்து பாதுகாக்கின்றன.

II) இரத்தம் எடுத்துச் செல்ல இயலாத பகுதிகளுக்கு ஊட்டப்பொருட்களையும் மற்றும் ஆக்சிஜனையும் வழங்குகிறது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: நிணநீரின் பணிகள்

• இரத்தம் எடுத்துச் செல்ல இயலாத பகுதிகளுக்கு ஊட்டப்பொருட்களையும் மற்றும் ஆக்சிஜனையும் வழங்குகிறது.

• இது அதிப்படியான திசு திரவத்தையும், வளர்சிதை மாற்றப் பொருட்களையும் திசுக்களின் இடைவெளிகளிலிருந்து புரதங்களையும் இரத்தத்திற்கு மீண்டும் கொண்டு வருகிறது.

• இது சிறு குடலினால் உறிஞ்சப்பட்ட கொழுப்பினை இரத்தத்திற்கு எடுத்துச் செல்கிறது. குடலுறிஞ்சிகளில் காணப்படக்கூடிய நிணநீர்த்தந்துகிகள் செரிக்கப்பட்ட கொழுப்பினை உறிஞ்சுகின்றன.

• நிணநீரில் உள்ள லிம்ஃபோசைட்டுகள் உடலை நோய்த்தாக்குதலிலிருந்து பாதுகாக்கின்றன.

139) பின்வரும் வாக்கியங்களை கவனி:

கூற்று (A) : சுவாச வாயுக்களை கடத்துவதில் RBC முக்கியப் பங்கு வகிக்கின்றது.

காரணம் (R) : RBC-ல் செல் நுண்ணுறுப்புகளும் உட்கருவும் காணப்படுவதில்லை.

a) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம்

b) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம் அல்ல

c) A சரி ஆனால் R தவறு

d) A தவறு ஆனால் R சரி

140) பின்வரும் வாக்கியங்களை கவனி

கூற்று (A) : ‘AB’ இரத்த வகை உடையோர் “அனைவரிடமிருந்தும் இரத்தத்தை பெறுவோராக” கருதப்படுகிறார்கள். ஏனெனில், அவர்கள் அனைத்து வகை இரத்தப் பிரிவினரிடமிருந்தும் இரத்தத்தினைப் பெறலாம்.

காரணம் (R) : AB இரத்த வகையில் ஆன்டிபாடிகள் காணப்படுவதில்லை.

a) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம்

b) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம் அல்ல

c) A சரி ஆனால் R தவறு

d) A தவறு ஆனால் R சரி

10th Science Lesson 15 Questions in Tamil

15] நரம்பியல் மண்டலம்

1) தூண்டல்களின் காரணமாக உயிரினங்கள் வெளிப்படுத்தும் பதில் விளைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?.

a) தூண்டல்

b) துலங்கல்

c) அழுத்தம்

d) எவையுமில்லை

விளக்கம்: ஒவ்வொரு உயிரினமும், புறத்தூண்டலுக்குரிய எதிர் வினையை வெளிப்படுத்துவது அவற்றின் முக்கியமான பண்பாகும். இங்கு தூண்டல் எனக்குறிப்பிடப்படுவது புறச் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களாகும். இவைகளை உணர்ந்து கொள்ள உடலில் உணர்வு உறுப்புகள் உள்ளன. அத்தகைய குறிப்பிட்ட தூண்டல்களின் காரணமாக உயிரினங்கள் வெளிப்படுத்தும் குறிப்பிட்ட பதில் விளைவு துலங்கல் எனப்படும்.

2) பின்வருவனவற்றுள் எது உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும் தூண்டல்?

a) வெப்பம்

b) அழுத்தம்

c) பிரகாசமான ஒளி

d) a அல்லது c

விளக்கம்: உயிருள்ளவை அனைத்தும் கீழ்க்கண்ட தூண்டல்களான ஒளி, வெப்பம், குளிர், ஒலி, மணம், சுவை, தொடுதல், அழுத்தம், வலி அல்லது புவி ஈர்ப்பு விசையினால் உண்டாகும் அழுத்தம் ஆகியவற்றுக்கு எதிரான துலங்கல்களை வெளிப்படுத்துகின்றன.

இதில் வெப்பம் அல்லது பிரகாசமான ஒளி என்பது உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும் தூண்டல் ஆகும். உடல் இதற்குரிய உடனடியான துலங்கலை வெளிப்படுத்தும்.

3) உடலிற்கு துலங்கலின் மூலம் ஏற்படும் நன்மை என்ன?

a) பாதுகாப்பு

b) உடல் வெப்பநிலையை சீர் செய்தல்

c) உடல் நலக்குறையின் அறிகுறியை வெளிப்படுத்துதல்

d) எவையுமில்லை

விளக்கம்: எனவே உடலானது, பெறப்படும் தூண்டலுக்குரிய துலங்கலை பொருத்தமாக, துரிதமாக வெளிப்படுத்துவதால் உடல் தன்னை பாதுகாத்துக்கொண்டு பணிகளை மேற்கொள்ள ஏதுவாகின்றது.

4) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) ஒவ்வொரு தூண்டலுக்குரிய துலங்கலை வெளிப்படுத்துவதற்கு உடலின் அனைத்து உறுப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

II) மனிதன் உட்பட அனைத்து விலங்கினங்களிலும் தன்நிலைக்காத்தல் என்பதை பராமரிக்க, அனைத்து செல்களும், உறுப்புகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுதல் அவசியமாகிறது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: ஒவ்வொரு தூண்டலுக்குரிய பொருத்தமான துலங்கலை வெளிப்படுத்துவதற்கு உடலின் அனைத்து உறுப்புகளும் முறையாக, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். வெவ்வேறு விதமான தூண்டல்களுக்குரிய பொருத்தமான துலங்கலை வெளிப்படுத்த, பல்வேறு உறுப்புகளும் முறையாக, வரிசைக்கிரமமாக, சிறப்பாகசெயல்படுவது அவசியமாகும். இவ்வாறு செயல்படுவதை “ஒருங்கிணைவு“என்கிறோம். மனிதன் உட்பட அனைத்து விலங்கினங்களிலும் அதன் உயிர் செயலியல் செயல்பாடுகளான தன்நிலைக்காத்தல் என்பதை பராமரிக்க, அனைத்து செல்களும், உறுப்புகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுதல் அவசியமாகிறது.

5) நரம்பு திசுக்களின் உட்கூறு வகை எவை?

a) நியூரான்கள்

b) நாரிழைகள்

c) நியூரோகிளியாக்கள்

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: நரம்பு மண்டலம் என்பது நரம்பு திசுக்களால் ஆனது. இவை மூன்று வகையான உட்கூறுகளை கொண்டுள்ளது. அவையாவன நியூரான்கள், நியூரோகிளியாக்கள் மற்றும் நரம்பு நாரிழைகள்.

6) நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல்ரீதியிலான அடிப்படை அலகு எது?

a) நியூரான்கள்

b) நாரிழைகள்

c) நியூரோகிளியாக்கள்

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: நியூரான்கள் அல்லது நரம்பு செல்கள்: நியூரான்கள் அல்லது நரம்பு செல்கள் என்பவை நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல்ரீதியிலான அடிப்படை அலகுகள் ஆகும்.

7) மனித உடலின் மிக நீளமான செல் நரம்பு செல் எது?

a) நியூரான்கள்

b) நாரிழைகள்

c) நியூரோகிளியாக்கள்

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: நியூரான்கள் அல்லது நரம்பு செல்கள்: நியூரான்கள் அல்லது நரம்பு செல்கள் என்பவை நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல்ரீதியிலான அடிப்படை அலகுகள் ஆகும்.

மனித உடலின் மிக நீளமான செல் நரம்பு செல் ஆகும். இவை சுமார் 100µm வரை நீளமுடையவை.

8) பின்வருவனவற்றுள் நியூரான்களின் சிறப்பு திறன் எது?

a) தூண்டல்களை அறிவது

b) தூண்டல்களை உணர்வது

c) தூண்டல்களை கடத்துவது

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: நியூரான்கள் பல்வேறு விதமான தூண்டல்களை அறிவதற்கும், உணரவும், கடத்துவதற்கும் ஏற்ப சிறப்பு திறன்களை கொண்டவை. நரம்பு செல்களில் தகவல்கள் உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மின்தூண்டல்களாகக் கடத்தப்படுகின்றது.

9) நரம்பு செல்கள் தகவல்களை உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு எவ்வாறு கடத்துகின்றன?

a) தூண்டல்

b) மின்தூண்டல்

c) துலங்கல்

d) நியூரான்கள்

விளக்கம்: நியூரான்கள் பல்வேறு விதமான தூண்டல்களை அறிவதற்கும், உணரவும், கடத்துவதற்கும் ஏற்ப சிறப்பு திறன்களை கொண்டவை. நரம்பு செல்களில் தகவல்கள் உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மின்தூண்டல்களாகக் கடத்தப்படுகின்றது.

10) நியூரோகிளியா வேறு எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

a) நரம்பு நாரிழைகள்

b) நியூரான்கள்

c) நரம்பு செல்கள்

d) கிளியல் செல்கள்

விளக்கம்: நியூரோகிளியா: நியூரோகிளியா என்பவை கிளியல் செல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை நரம்பு மண்டலத்தின் துணைச் செல்களாக செயல்படுகின்றன. இவை நியூரான்கள் போன்று நரம்பு தூண்டல்களின் உருவாக்கத்திலோ அல்லது கடத்துவதிலோ ஈடுபடுவதில்லை.

11) நரம்பு மண்டலத்தின் துணைச் செல்களாக எவை அறியப்படுகிறது?

a) நரம்பு நாரிழைகள்

b) நியூரான்கள்

c) நரம்பு செல்கள்

d) கிளியல் செல்கள்

விளக்கம்: நியூரோகிளியா: நியூரோகிளியா என்பவை கிளியல் செல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை நரம்பு மண்டலத்தின் துணைச் செல்களாக செயல்படுகின்றன. இவை நியூரான்கள் போன்று நரம்பு தூண்டல்களின் உருவாக்கத்திலோ அல்லது கடத்துவதிலோ ஈடுபடுவதில்லை

12) நரம்பு தூண்டல்களின் உருவாக்கத்திலோ அல்லது கடத்துவதிலோ ஈடுபடாத நரம்பு செல்கள் எவை?

a) நரம்பு நாரிழைகள்

b) நியூரான்கள்

c) நரம்பு செல்கள்

d) கிளியல் செல்கள்

விளக்கம்: நியூரோகிளியா: நியூரோகிளியா என்பவை கிளியல் செல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை நரம்பு மண்டலத்தின் துணைச் செல்களாக செயல்படுகின்றன. இவை நியூரான்கள் போன்று நரம்பு தூண்டல்களின் உருவாக்கத்திலோ அல்லது கடத்துவதிலோ ஈடுபடுவதில்லை

13) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) நியூரான்களின் மிக நீளமான, மெல்லிய செயல்படும் பகுதி நியூரோகிளியா ஆகும்.

II) பல நரம்பு நாரிழைகள் ஒன்றிணைந்து கற்றையாக மாறி நரம்புகளாக செயல்படுகின்றன.

a) I மற்றும் II சரி

b) I தவறு II சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: நரம்பு நாரிழைகள்: நியூரான்களின் மிக நீளமான, மெல்லிய செயல்படும் பகுதி நரம்பு நாரிழைகள் ஆகும். பல நரம்பு நாரிழைகள் ஒன்றிணைந்து கற்றையாக மாறி நரம்புகளாக செயல்படுகின்றன.

14) நியூரான் எதனால் ஆனது?

a) சைட்டான்

b) டெண்ட்ரைட்டுகள்

c) ஆக்சான்

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: நியூரான் என்பது கீழ்க்காணும் மூன்று பகுதிகளைக் கொண்டது.

(i) சைட்டான்

(ii) டெண்ட்ரைட்டுகள் மற்றும் (iii) ஆக்சான்

15) பின்வருவனவற்றுள் எது பெரிகேரியோன் என்று அழைக்கப்படுகிறது?

a) சைட்டான்

b) டெண்ட்ரைட்டுகள்

c) செல் உடலம்

d) a அல்லது c

விளக்கம்: சைட்டான்: சைட்டான் என்பது செல் உடலம் அல்லது பெரிகேரியோன் என்றும் அழைக்கப்படும்.

16) சைட்டானின் மைய உட்கருவில் சைட்டோபிளாசம் நிரம்பியுள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) நரம்பு நாரிழைகள்

b) நியூரான்கள்

c) நரம்பு செல்கள்

d) நியூரோபிளாசம்

விளக்கம்: சைட்டானின் மைய உட்கருவில் சைட்டோபிளாசம் நிரம்பியுள்ள பகுதி நியூரோபிளாசம் என்று அழைக்கப்படுகிறது. இதனுள் அளவில் பெரிய துகள்கள் நிரம்பியுள்ளன. இத்துகள்கள் நிசில் துகள்கள் எனப்படுகின்றன.

17) நிசில் துகள்கள் எங்கு காணப்படுகிறது?

a) நரம்பு நாரிழைகள்

b) நியூரான்கள்

c) நரம்பு செல்கள்

d) நியூரோபிளாசம்

விளக்கம்: சைட்டானின் மைய உட்கருவில் சைட்டோபிளாசம் நிரம்பியுள்ள பகுதி நியூரோபிளாசம் என்று அழைக்கப்படுகிறது. இதனுள் அளவில் பெரிய துகள்கள் நிரம்பியுள்ளன. இத்துகள்கள் நிசில் துகள்கள் எனப்படுகின்றன.

18) பின்வருவனவற்றுள் எது சைட்டோபிளாசத்தில் காணப்படாது?

a) ரிபோசோம்கள்

b) லைசோசோம்கள்

c) மைட்டோகாண்ட்ரியா

d) நியூக்ளிக் அமிலம்

விளக்கம்: சைட்டானின் மைய உட்கருவில் சைட்டோபிளாசம் நிரம்பியுள்ள பகுதி நியூரோபிளாசம் என்று அழைக்கப்படுகிறது. இதனுள் அளவில் பெரிய துகள்கள் நிரம்பியுள்ளன. இத்துகள்கள் நிசில் துகள்கள் எனப்படுகின்றன. மேலும் மற்ற செல் நுண்ணுறுப்புகளான மைட்டோகாண்ட்ரியா, ரிபோசோம்கள், லைசோசோம்கள் மற்றும் எண்டோபிளாச வலைப்பின்னல் ஆகியவையும் சைட்டோபிளாசத்தில் உள்ளன.

19) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) நியூரான்கள் பகுப்படையும் தன்மையுடையவை.

II) சைட்டோ பிளாசத்தினுள்ளே இரு நுண் இழைகள் காணப்படுகின்றன.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: நியூரான்கள் பகுப்படையும் தன்மையற்றவை. சைட்டோ பிளாசத்தினுள்ளே பல நுண் இழைகள் காணப்படுகின்றன. அவை செல் உடலத்தின் வழியாக நரம்பு தூண்டல்களை முன்னும் பின்னும் கடத்துவதற்கு உதவுகின்றன.

20) செல் உடலத்தின் வெளிப்புறமாக காணப்படும் கிளைத்த பகுதிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) சைட்டான்

b) டெண்ட்ரைட்டுகள்

c) ஆக்சான்

d) செல் உடலம்

விளக்கம்: டெண்ட்ரைட்டுகள்: செல் உடலத்தின் வெளிப்புறமாக பல்வேறு கிளைத்த பகுதிகள் காணப்படுகின்றன. இவை நரம்புத் தூண்டல்களை சைட்டானை நோக்கிக் கடத்துகின்றன. பிற நரம்பு செல்களில் இருந்து பெறப்படும் சமிக்ஞைகளை உள்வாங்கிக் கொள்ளும் பரப்பினை அதிகமாக்குகின்றன.

21) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) டெண்ட்ரைட்டுகள் நரம்புத் தூண்டல்களை சைட்டானை நோக்கிக் கடத்துகின்றன.

II) பிற நரம்பு செல்களில் இருந்து பெறப்படும் சமிக்ஞைகளை உள்வாங்கிக் கொள்ளும் பரப்பினை டெண்ட்ரைட்டுகள் அதிகமாக்குகின்றன.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: டெண்ட்ரைட்டுகள்: செல் உடலத்தின் வெளிப்புறமாக பல்வேறு கிளைத்த பகுதிகள் காணப்படுகின்றன. இவை நரம்புத் தூண்டல்களை சைட்டானை நோக்கிக் கடத்துகின்றன. பிற நரம்பு செல்களில் இருந்து பெறப்படும் சமிக்ஞைகளை உள்வாங்கிக் கொள்ளும் பரப்பினை அதிகமாக்குகின்றன.

22) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) ஆக்சான் என்பது தனித்த, நீளமான, மெல்லிய அமைப்பு ஆகும்.

II) ஆக்சானின் முடிவுப்பகுதி நுண்ணிய கிளைகளாகப் பிரிந்து குமிழ் போன்ற பகுதிகளாக முடிகின்றது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: ஆக்சான்: ஆக்சான் என்பது தனித்த, நீளமான, மெல்லிய அமைப்பு ஆகும். ஆக்சானின் முடிவுப்பகுதி நுண்ணிய கிளைகளாகப் பிரிந்து குமிழ் போன்ற “சினாப்டிக் குமிழ்” பகுதிகளாக முடிகின்றது.

23) ஆக்சானின் முடிவுப்பகுதி நுண்ணிய எவ்வாறு முடிகின்றது?

a) ஆக்ஸோபிளாசம்

b) சினாப்டிக் குமிழ்

c) ஆக்ஸோலெம்மா

d) செல் உடலம்

விளக்கம்: ஆக்சான்: ஆக்சான் என்பது தனித்த, நீளமான, மெல்லிய அமைப்பு ஆகும். ஆக்சானின் முடிவுப்பகுதி நுண்ணிய கிளைகளாகப் பிரிந்து குமிழ் போன்ற “சினாப்டிக் குமிழ்” பகுதிகளாக முடிகின்றது.

24) ஆக்சானின் பிளாஸ்மா சவ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) ஆக்ஸோபிளாசம்

b) சினாப்டிக் குமிழ்

c) ஆக்ஸோலெம்மா

d) செல் உடலம்

விளக்கம்: ஆக்சானின் பிளாஸ்மா சவ்வு, ஆக்ஸோலெம்மா என்றும், சைட்டோபிளாசம், ஆக்ஸோபிளாசம் என்றும் அழைக்கப்படும்.

25) ஆக்சானின் சைட்டோபிளாசம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) ஆக்ஸோபிளாசம்

b) சினாப்டிக் குமிழ்

c) ஆக்ஸோலெம்மா

d) செல் உடலம்

விளக்கம்: ஆக்சானின் பிளாஸ்மா சவ்வு, ஆக்ஸோலெம்மா என்றும், சைட்டோபிளாசம், ஆக்ஸோபிளாசம் என்றும் அழைக்கப்படும். இவை தூண்டல்களை சைட்டானில் இருந்து எடுத்துச் செல்கின்றன.

26) ஆக்ஸானின் மேற்புறத்தில் காணப்படும் பாதுகாப்பு உறையின் பெயர் என்ன?

a) ஆக்ஸோபிளாசம்

b) மெனின்ஜஸ்

c) மையலின்

d) செல் உடலம்

விளக்கம்: ஆக்ஸானின் மேற்புறம் ஒரு பாதுகாப்பு உறையால் போர்த்தப்பட்டுள்ளது. இவ்வுறை மையலின் உறை எனப்படும். இவற்றின் மேற்புறம் ஸ்வான் செல்களால் ஆன உறையால் பாதுகாக்கப்படுகிறது.

27) எவற்றின் மேற்புறம் ஸ்வான் செல்களால் ஆன உறையால் பாதுகாக்கப்படுகிறது?

a) ஆக்ஸோபிளாசம்

b) மெனின்ஜஸ்

c) மையலின்

d) செல் உடலம்

விளக்கம்: ஆக்ஸானின் மேற்புறம் ஒரு பாதுகாப்பு உறையால் போர்த்தப்பட்டுள்ளது. இவ்வுறை மையலின் உறை எனப்படும். இவற்றின் மேற்புறம் ஸ்வான் செல்களால் ஆன உறையால் பாதுகாக்கப்படுகிறது. இவ்வுறை நியூரிலெம்மா எனப்படும்.

28) ஸ்வான் செல்களால் ஆன உறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) ஆக்ஸோபிளாசம்

b) மெனின்ஜஸ்

c) மையலின்

d) நியூரிலெம்மா

விளக்கம்: ஆக்ஸானின் மேற்புறம் ஒரு பாதுகாப்பு உறையால் போர்த்தப்பட்டுள்ளது. இவ்வுறை மையலின் உறை எனப்படும். இவற்றின் மேற்புறம் ஸ்வான் செல்களால் ஆன உறையால் பாதுகாக்கப்படுகிறது. இவ்வுறை நியூரிலெம்மா எனப்படும்.

29) மையலின் உறையில் காணப்படும் இடைவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) ஆக்ஸோபிளாசம்

b) ரேன்வீரின் கணுக்கள்

c) சினாப்டிக் குமிழ்

d) நியூரிலெம்மா

விளக்கம்: மையலின் உறை தொடர்ச்சியாக இல்லாமல் குறிப்பிட்ட இடைவெளிகளுடன் அமைந்திருக்கிறது. இந்த இடைவெளிகள் ரேன்வீரின் கணுக்கள் எனப்படுகின்றன. இக் கணுக்களுக்கு இடையே உள்ள பகுதி கணுவிடைப் பகுதி எனப்படுகிறது.

30) மையலின் உறையின் பயன் என்ன?

a) பாதுகாப்பு

b) நரம்பு தூண்டல்கள் விரைவாக கடத்துவற்கு.

c) அதிர்வு தாங்கி

d) a மற்றும் b

விளக்கம்: மையலின் உறையானது ஒரு பாதுகாப்பு உறையாகச் செயல்பட்டு நரம்பு தூண்டல்கள் மிக விரைவாக கடத்தப்பட உதவுகிறது.

31) சினாப்டிக் குமிழ் பகுதிக்கும், டெண்ட்ரான் இணையும் பகுதிக்கும் இடையிலுள்ள இடைவெளிப் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) ஆக்ஸோபிளாசம்

b) ரேன்வீரின் கணுக்கள்

c) சினாப்டிக் இணைவுப் பகுதி

d) நியூரிலெம்மா

விளக்கம்: சினாப்ஸ்: ஒரு நியூரானின் சினாப்டிக் குமிழ் பகுதிக்கும், மற்றொரு நியூரானின் டெண்ட்ரான் இணையும் பகுதிக்கும் இடையிலுள்ள இடைவெளிப் பகுதி சினாப்டிக் இணைவுப் பகுதி எனப்படுகிறது.

32) நியூரான்களுக்கிடையில் தகவல்கள் பறிமாறிக்கொள்ள தேவைப்படும் வேதிப்பொருளின் பெயர் என்ன?

a) நரம்புணர்வு கடத்திகள்

b) ரேன்வீரின் கணுக்கள்

c) நியூரோடிரான்ஸ்மிட்டர்கள்

d) a அல்லது c

விளக்கம்: ஒரு நியூரானிலிருந்து தகவல்கள் மற்றொரு நியூரானுக்கு கடத்தப்படுவது சினாப்டிக் குமிழ் பகுதியில் வெளிப்படுத்தப்படும் வேதிப்பொருள் மூலமாக நடைபெறுகிறது. இவ் வேதிப்பொருட்கள் நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் அல்லது நரம்புணர்வு கடத்திகள் எனப்படுகின்றன.

33) பின்வருவனவற்றுள் எது நியூரானின் வகை அல்ல?

a) ஒருமுனை நியூரான்கள்

b) இருமுனை நியூரான்கள்

c) பல முனை நியூரான்கள்

d) மும்முனை நியூரான்கள்

விளக்கம்: நியூரான்களின் வகைகள் நியூரான்கள் அவற்றின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தின் அடிப்படையில் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒருமுனை நியூரான்கள் (அ),

இருமுனை நியூரான்கள் (ஆ),

பல முனை நியூரான்கள் (இ)

34) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) இரு முனை நியூரான்கள்: சைட்டானிலிருந்து இரு நரம்புப் பகுதிகள் இருபுறமும் இணைக்கப்பட்டிருக்கும். ஒன்று ஆக்சானாகவும் மற்றொன்று டெண்டிரானாகவும் செயல்படும்.

II) பலமுனை நியூரான்கள்: சைட்டானிலிருந்து பல டென்ட்ரான்கள் கிளைத்து ஒரு முனையிலும், ஆக்சான் ஒரு முனையிலும் காணப்படும்.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: ஒருமுனை நியூரான்கள்: இவ்வகை நியூரான்களில் ஒருமுனை மட்டுமே சைட்டானில் இருந்து கிளைத்து காணப்படும். இதுவே ஆக்சான் மற்றும் டெண்டிரானாக செயல்படும்.

(ii) இரு முனை நியூரான்கள்: சைட்டானிலிருந்து இரு நரம்புப் பகுதிகள் இருபுறமும் இணைக்கப்பட்டிருக்கும். ஒன்று ஆக்சானாகவும் மற்றொன்று டெண்டிரானாகவும் செயல்படும்.

(iii) பலமுனை நியூரான்கள்: சைட்டானிலிருந்து பல டென்ட்ரான்கள் கிளைத்து ஒரு முனையிலும், ஆக்சான் ஒரு முனையிலும் காணப்படும்.

35) வளர் கருவின் ஆரம்ப நிலையில் மட்டும் காணப்படும் நியூரான்கள் எவை?

a) ஒருமுனை நியூரான்கள்

b) இருமுனை நியூரான்கள்

c) பல முனை நியூரான்கள்

d) மும்முனை நியூரான்கள்

விளக்கம்: ஒருமுனை நியூரான்கள்: வளர் கருவின் ஆரம்ப நிலையில் மட்டும் காணப்படும். முதிர் உயிரிகளில் காணப்படாது.

36) கண்ணின் விழித்திரையிலும், நாசித்துளையில் உள்ள ஆல்ஃபேக்டரி எபீதிலியத்திலும் காணப்படும் நியூரான்கள் எவை?

a) ஒருமுனை நியூரான்கள்

b) இருமுனை நியூரான்கள்

c) பல முனை நியூரான்கள்

d) மும்முனை நியூரான்கள்

விளக்கம்: இருமுனை நியூரான்கள்: கண்ணின் விழித்திரையிலும், நாசித்துளையில் உள்ள ஆல்ஃபேக்டரி எபீதிலியத்திலும் காணப்படும்.

37) மூளையின் புறப்பரப்பான பெருமூளைப் புறணியில் காணப்படும் நியூரான்கள் எவை?

a) ஒருமுனை நியூரான்கள்

b) இருமுனை நியூரான்கள்

c) பல முனை நியூரான்கள்

d) மும்முனை நியூரான்கள்

விளக்கம்: பல முனை நியூரான்கள்: மூளையின் புறப்பரப்பான பெருமூளைப் புறணியில் காணப்படும்.

38) செயல்பாட்டின் அடிப்படையில் நியூரான்கள் எத்தனை வகைப்படுத்தப் படுகின்றன?

a) ஒன்று

b) இரண்டு

c) மூன்று

d) நான்கு

விளக்கம்: செயல்பாட்டின் அடிப்படையில் நியூரான்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

(i) உணர்ச்சி அல்லது உட்செல் நரம்புச்செல்கள்

(ii) இயக்க அல்லது வெளிச்செல் நரம்புச்செல்கள்

(iii) சங்கம நரம்புச் செல்கள்

39) உணர் உறுப்புகளிலிருந்து தூண்டல்களை எடுத்துச் செல்லும் நரம்புச் செல்களின் பெயர் என்ன?

a) உட்செல் நரம்புச்செல்கள்

b) வெளிச்செல் நரம்புச்செல்கள்

c) சங்கம நரம்புச் செல்கள்

d) இயக்க நரம்புச்செல்கள்

விளக்கம்: உணர்ச்சி அல்லது உட்செல் நரம்புச்செல்கள்: உணர் உறுப்புகளிலிருந்து தூண்டல்களை மைய நரம்பு மண்டலத்துக்கு எடுத்துச் செல்லும் நரம்புச் செல்கள்.

40) மைய நரம்பு மண்டலத்தில் இருந்து தூண்டல்களை இயக்க உறுப்புகளுக்கு

செல்லும் நரம்புச் செல்களின் பெயர் என்ன?

a) உட்செல் நரம்புச்செல்கள்

b) வெளிச்செல் நரம்புச்செல்கள்

c) சங்கம நரம்புச் செல்கள்

d) உணர்ச்சி நரம்புச்செல்கள்

விளக்கம்: இயக்க அல்லது வெளிச்செல் நரம்புச்செல்கள்: மைய நரம்பு மண்டலத்தில் இருந்து தூண்டல்களை (தகவல்கள்) இயக்க உறுப்புகளான தசை நாரிழைகள் அல்லது சுரப்பிகளுக்கு எடுத்துச் செல்லும் நரம்பு செல்கள்.

41) உணர்ச்சி மற்றும் இயக்க நரம்பு செல்களுக்கிடையே தூண்டல்களை கடத்தும் நரம்பு செல்களின் பெயர் என்ன?

a) உட்செல் நரம்புச்செல்கள்

b) வெளிச்செல் நரம்புச்செல்கள்

c) சங்கம நரம்புச் செல்கள்

d) உணர்ச்சி நரம்புச்செல்கள்

விளக்கம்: சங்கம நரம்புச் செல்கள்: இவ்வகை நரம்பு செல்கள் உணர்ச்சி மற்றும் இயக்க நரம்பு செல்களுக்கிடையே தூண்டல்களை கடத்தும் நரம்பு செல்களாகும்.

42) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) நரம்பு நாரிழைகள் இரு வகைப்படும்.

II) மூளையின் வெண்மைநிறப் பகுதி மையலின் உறையுடன் கூடிய நரம்புச் செல்களையும், சாம்பல்நிறப் பகுதி மையலின் உறையற்ற நரம்புச் செல்களையும் கொண்டது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: நரம்பு நாரிழைகள் இரு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன மையலின் உறையுடன் கூடிய நரம்பு செல்கள் மற்றும் மையலின் உறையற்ற நரம்புச் செல்கள்.

(i) மையலின் உறையுடன் கூடிய நரம்பு செல்கள்: நரம்புச் செல்லிலுள்ள ஆக்சான் மீது மையலின் உறை போர்த்தப்பட்டிருந்தால் அவை மையலின் உறையுடன் கூடிய நரம்பு செல்கள்.

(ii) மையலின் உறையற்ற நரம்புச் செல்கள்: நரம்புச் செல்லிலுள்ள ஆக்சான் மீது மையலின் உறை போர்த்தப்படாமலிருந்தால் அவை மையலின் உறையற்ற நரம்புச் செல்கள் என்றும் அழைக்கப்படும். மூளையின் வெண்மைநிறப் பகுதி மையலின் உறையுடன் கூடிய நரம்புச் செல்களையும், சாம்பல்நிறப் பகுதி மையலின் உறையற்ற நரம்புச் செல்களையும் கொண்டது.

43) நியூரானின் ஆக்சான் முனையிலிருந்து மற்றொரு நியூரானின் டெண்ட்ரான் முனைக்கு நரம்பு தூண்டல்கள் கடத்தப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) ஆக்ஸோபிளாசம் கடத்தல்

b) சினாப்டிக் குமிழ் கடத்தல்

c) நரம்பு தூண்டல்கள் கடத்தல்

d) சினாப்டிக் கடத்துதல்

விளக்கம்: ஒரு குறிப்பிட்ட நியூரான்களின் தொகுப்பில் நடைபெறும் நரம்பு தூண்டல்கள் செல்லும் பாதையானது, எப்பொழுதும் ஒரு நியூரானின் ஆக்சான் முனையிலிருந்து மற்றொரு நியூரானின் டெண்ட்ரான் முனைக்கு சினாப்ஸ் அல்லது சினாப்டிக் குமிழ் மூலம் கடத்தப்படுவதை “சினாப்டிக் கடத்துதல்” என்கிறோம்.

44) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) ஒவ்வொரு நியூரானும் 10000 நரம்பு தூண்டல்களை ஒரு வினாடி நேரத்தில் கடத்தக் கூடியவை.

II) பத்தாயிரத்திற்கும் அதிகமான நரம்பிடை இணைப்புகளை பிற நியூரான்களோடு உருவாக்கக் கூடியவை.

a) I மற்றும் II சரி

b) I தவறு II சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: ஒவ்வொரு நியூரானும் 1000 நரம்பு தூண்டல்களை ஒரு வினாடி நேரத்தில் கடத்தக் கூடியவை. மேலும் பத்தாயிரத்திற்கும் அதிகமான நரம்பிடை இணைப்புகளை பிற நியூரான்களோடு உருவாக்கக் கூடியவை.

45) நியூரான்கள் வெளியிடும் வேதிப்பொருளில் குறிப்பிடத்தகுந்த நரம்புணர்வு கடத்தியாக குறிப்பிடப்படுவது எது?

a) நரம்புணர்வு கடத்திகள்

b) ரேன்வீரின் கணுக்கள்

c) நியூரோடிரான்ஸ்மிட்டர்கள்

d) அசிட்டைல்கோலின்

விளக்கம்: நரம்புணர்வு கடத்திகள் (நியுரோ டிரான்ஸ்மிட்டர்கள்): நரம்புணர்வு கடத்திகள் என்பவை ஒரு நரம்புச் செல்லின் ஆக்சான் முனையிலிருந்து மற்றொரு நரம்புச் செல்லின் டெண்டிரான் முனைக்கு அல்லது எந்த இலக்கு உறுப்புகளோடு இணைக்கப் பட்டுள்ளதோ அந்த குறிப்பிட்ட இலக்கு உறுப்புக்கு நரம்புத் தூண்டல்களை கடத்தும் வேதிப் பொருள்கள் ஆகும். அசிட்டைல்கோலின் எனப்படும், நியூரான்கள் வெளியிடும் வேதிப்பொருள் ஒரு குறிப்பிடத்தகுந்த நரம்புணர்வு கடத்தி ஆகும்.

46) பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக நரம்பு மண்டலம் எவ்வாறு மாறியுள்ளது?

a) சிறப்பானதாக

b) சிக்கலானதாக

c) உறுதி வாய்ந்ததாக

d) a மற்றும் b

விளக்கம்: பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக நரம்பு மண்டலம் தற்காலத்தில் சிறப்பானதாகவும் சிக்கலானதாகவும் மாறியுள்ளது. மனிதர்கள் சிந்தித்து செயல்படும் ஆற்றலின் காரணமாக பிற விலங்கினங்களில் இருந்து வேறுபட்டிருக்கிறார்கள்.. இதற்கு சிறப்பான நரம்பு மண்டலம் காரணமாக அமைந்துள்ளது.

47) பின்வருவனவற்றுள் எது மனித நரம்பு மண்டலத்தின் பகுதி அல்ல?

a) மைய நரம்பு மண்டலம்

b) புற அமைவு நரம்பு மண்டலம்

c) மைய அமைவு நரம்பு மண்டலம்

d) தானியங்கு நரம்பு மண்டலம்

விளக்கம்: மனித நரம்பு மண்டலமானது மூன்று பகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ளது.

அவையாவன, மைய நரம்பு மண்டலம் (CNS), புற அமைவு நரம்பு மண்டலம் (PNS), தானியங்கு நரம்பு மண்டலம் (ANS) ஆகும்

48) தகவல்களை பரிசீலித்து செயல்படுத்தும் கட்டுப்பாட்டு மையமாக எது செயல்படுகிறது?

a) மைய நரம்பு மண்டலம்

b) புற அமைவு நரம்பு மண்டலம்

c) மைய அமைவு நரம்பு மண்டலம்

d) தானியங்கு நரம்பு மண்டலம்

விளக்கம்: மைய நரம்பு மண்டலமானது தகவல்களை பரிசீலித்து செயல்படுத்தும் கட்டுப்பாட்டு மையமாக செயல்படுகிறது. இது மூளை மற்றும் தண்டுவடத்தை உள்ளடக்கியது.

49) மைய நரம்பு மண்டலம் எதை உள்ளடக்கியது?

a) மூளை

b) நரம்புகள்

c) தண்டுவடம்

d) a மற்றும் c

விளக்கம்: மைய நரம்பு மண்டலமானது தகவல்களை பரிசீலித்து செயல்படுத்தும் கட்டுப்பாட்டு மையமாக செயல்படுகிறது. இது மூளை மற்றும் தண்டுவடத்தை உள்ளடக்கியது.

50) மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து உடலின் பிற பகுதிகளை இணைக்கும் நரம்புகளை உள்ளடக்கிய நரம்பு மண்டலம் எது?

a) மைய நரம்பு மண்டலம்

b) புற அமைவு நரம்பு மண்டலம்

c) மைய அமைவு நரம்பு மண்டலம்

d) தானியங்கு நரம்பு மண்டலம்

விளக்கம்: புற அமைவு நரம்பு மண்டலம் மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து உடலின் பிற பகுதிகளை இணைக்கும் நரம்புகளை உள்ளடக்கியது. தானியங்கு நரம்பு மண்டலமானது பரிவு நரம்புகளையும் எதிர்ப்பரிவு நரம்புகளையும் கொண்டது.

51) பரிவு நரம்புகளையும் எதிர்ப்பரிவு நரம்புகளையும் கொண்ட நரம்பு மண்டலம் எது?

a) மைய நரம்பு மண்டலம்

b) புற அமைவு நரம்பு மண்டலம்

c) மைய அமைவு நரம்பு மண்டலம்

d) தானியங்கு நரம்பு மண்டலம்

விளக்கம்: புற அமைவு நரம்பு மண்டலம் மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து உடலின் பிற பகுதிகளை இணைக்கும் நரம்புகளை உள்ளடக்கியது. தானியங்கு நரம்பு மண்டலமானது பரிவு நரம்புகளையும் எதிர்ப்பரிவு நரம்புகளையும் கொண்டது.

52) உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் மையமாக எது செயல்படுகிறது?

a) இதயம்

b) நரம்புகள்

c) தண்டுவடம்

d) மூளை

விளக்கம்: மூளை: உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் மையம் மூளையாகும். மூளையானது மூன்று பாதுகாப்பான உறைகளால் சூழப்பட்டிருக்கிறது. அவைமெனிஞ்சஸ் அல்லதுமூளை உறைகள்எனப்படும்.

53) மூளை எத்தனை பாதுகாப்பான உறைகளால் சூழப்பட்டிருக்கிறது?

a) ஒன்று

b) இரண்டு

c) மூன்று

d) நான்கு

விளக்கம்: மூளை: உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் மையம் மூளையாகும். மூளையானது மூன்று பாதுகாப்பான உறைகளால் சூழப்பட்டிருக்கிறது. அவைமெனிஞ்சஸ் அல்லதுமூளை உறைகள்எனப்படும்

54) மூளையை பாதுகாக்கும் உறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) ஆக்ஸோபிளாசம்

b) மெனின்ஜஸ்

c) மையலின்

d) நியூரிலெம்மா

விளக்கம்: மூளை: உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் மையம் மூளையாகும். மூளையானது மூன்று பாதுகாப்பான உறைகளால் சூழப்பட்டிருக்கிறது. அவை மெனிஞ்சஸ் அல்லது மூளை உறைகள்எனப்படும்

55) மூளையை பாதுகாக்கும் வெளிப்புற தடிமனான சவ்வுப்படலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) அரக்னாய்டு உறை

b) பையா மேட்டர்

c) டியூரா மேட்டர்

d) மெனிஞ்சஸ்

விளக்கம்: டியூரா மேட்டர்: ( டியூரா: கடினமான, மேட்டர்:சவ்வு) என்பது வெளிப்புற தடிமனான சவ்வுப்படலம் ஆகும்.

மூளையின் உறைகள் அனைத்தும் மூளையை அடிபடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றன.

56) அதிர்வுத் தாங்கியாக செயல்படும் மூளையின் பாதுகாக்கும் உறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) அரக்னாய்டு உறை

b) பையா மேட்டர்

c) டியூரா மேட்டர்

d) மெனிஞ்சஸ்

விளக்கம்: அரக்னாய்டு உறை: (அரக்னாய்டு : சிலந்தி) என்பது நடுப்புற மென்மையான சிலந்தி வலை போன்ற சவ்வுப்படலம் ஆகும். இது அதிர்வுத் தாங்கியாக செயல்படுகிறது.

மூளையின் உறைகள் அனைத்தும் மூளையை அடிபடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றன.

57) அதிகமான இரத்த நாளங்கள் காணப்படும் மூளையின் பாதுகாக்கும் உறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) அரக்னாய்டு உறை

b) பையா மேட்டர்

c) டியூரா மேட்டர்

d) மெனிஞ்சஸ்

விளக்கம்: பையா மேட்டர்: (பையா: மென்மையான) இது உட்புற மெல்லிய உறையாகும். இதில் அதிகமான இரத்த நாளங்கள் காணப்படுகின்றன.

மூளையின் உறைகள் அனைத்தும் மூளையை அடிபடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றன.

58) மூளை உறைகளில் ஏற்படும் வீக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) என்செபலைடிஸ்

b) மெனிஞ்சைடிஸ்

c) கொலைடிஸ்

d) சிஸ்டைடிஸ்

விளக்கம்: “மெனிஞ்சைடிஸ்” என்பது மூளை உறைகளில் ஏற்படும் வீக்கம் ஆகும். மூளை உறையைச் சுற்றி உள்ள திரவத்தில் ஏற்படும் நோய்த் தொற்றால் இந்த வீக்கம் உண்டாகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியங்களின் நோய்த் தொற்று இதற்குக் காரணமாகிறது.

59) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

மெனிஞ்சைடிஸ்:

I)மூளை உறையைச் சுற்றி உள்ள திரவத்தில் ஏற்படும் நோய்த் தொற்றால் இந்த வீக்கம் உண்டாகிறது.

II) வைரஸ் மற்றும் பாக்டீரியங்களின் நோய்த் தொற்று இதற்குக் காரணமாகிறது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: “மெனிஞ்சைடிஸ்” என்பது மூளை உறைகளில் ஏற்படும் வீக்கம் ஆகும். மூளை உறையைச் சுற்றி உள்ள திரவத்தில் ஏற்படும் நோய்த் தொற்றால் இந்த வீக்கம் உண்டாகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியங்களின் நோய்த் தொற்று இதற்குக் காரணமாகிறது.

60) மனித மூளை எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?

a) ஒன்று

b) இரண்டு

c) மூன்று

d) நான்கு

விளக்கம்: மனித மூளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன: (1) முன் மூளை (2) நடு மூளை (3) பின் மூளை.

61) முன் மூளை எதை உள்ளடக்கியது?

a) செரிப்ரம்

b) டயன்செஃப்லான்

c) தலாமஸ்

d) a மற்றும் b

விளக்கம்: முன் மூளை: முன் மூளையானது பெரு மூளை (செரிப்ரம்) மற்றும் டயன்செஃப்லான் என்பவைகளால் ஆனது. டயன்செஃப்லான் மேற்புற தலாமஸ் மற்றும் கீழ்ப்புற ஹைப்போதலாமஸ் கொண்டுள்ளது.

62) தலாமஸ் மற்றும் கீழ்ப்புற ஹைப்போதலாமஸை உள்ளடக்கிய மூளைப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) செரிப்ரம்

b) டயன்செஃப்லான்

c) தலாமஸ்

d) a மற்றும் b

விளக்கம்: முன் மூளை: முன் மூளையானது பெரு மூளை (செரிப்ரம்) மற்றும் டயன்செஃப்லான் என்பவைகளால் ஆனது. டயன்செஃப்லான் மேற்புற தலாமஸ் மற்றும் கீழ்ப்புற ஹைப்போதலாமஸ் கொண்டுள்ளது.

63) மூளையின் மூன்றில் இரண்டு பகுதி அளவுக்கு பெரும்பான்மையாக அமைந்துள்ள பகுதி எது?

a) முன் மூளை

b) நடு மூளை

c) பின் மூளை.

d) பெருமூளை

விளக்கம்: பெருமூளை: மூளையின் மூன்றில் இரண்டு பகுதி அளவுக்கு பெரும்பான்மையாக இப்பகுதி அமைந்துள்ளது. பெரு மூளையானது நீள் வாட்டத்தில் வலது மற்றும் இடது என இரு பிரிவுகளாக ஒரு ஆழமான பிளவு மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிளவு நடுப்பிளவு (median Cleft) எனப்படும்

64) வலது மற்றும் இடது என இரு பிரிவுகளாக ஒரு பிளவு மூலம் மூளையின் எந்த பகுதி பிரிக்கப்பட்டுள்ளது?

a) முன் மூளை

b) நடு மூளை

c) பின் மூளை.

d) பெருமூளை

விளக்கம்: பெருமூளை: பெரு மூளையானது நீள் வாட்டத்தில் வலது மற்றும் இடது என இரு பிரிவுகளாக ஒரு ஆழமான பிளவு மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிளவு நடுப்பிளவு (median Cleft) எனப்படும்.

இப்பிரிவுகள் செரிப்ரல் ஹெமிஸ்பியர் / பெரு மூளை அரைக் கோளங்கள் என்று அழைக்கப்படும்.

65) எவை மூளையின் அடிப்பகுதியில் அடர்த்தியான நரம்புத் திசுக்கற்றையால் இணைக்கப்பட்டுள்ளது?

a) பெரிபெரல் ஹெமிஸ்பியர்

b) பெரு மூளை அரைக் கோளங்கள்

c) செரிப்ரல் ஹெமிஸ்பியர்

d) b அல்லது c

விளக்கம்: பெருமூளை: பெரு மூளையானது நீள் வாட்டத்தில் வலது மற்றும் இடது என இரு பிரிவுகளாக ஒரு ஆழமான பிளவு மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிளவு நடுப்பிளவு (median Cleft) எனப்படும்.

இப்பிரிவுகள் செரிப்ரல் ஹெமிஸ்பியர் / பெரு மூளை அரைக் கோளங்கள் என்று அழைக்கப்படும். இப்பிரிவுகள் மூளையின் அடிப்பகுதியில் கார்பஸ் கலோசம் என்னும் அடர்த்தியான நரம்புத் திசுக்கற்றையால் இணைக்கப்பட்டுள்ளன.

66) மூளையின் பிரிவுகள், மூளையின் அடிப்பகுதியில் ____________ஆல் இணைக்கப்பட்டுள்ளன?

a) செரிப்ரம்

b) டயன்செஃப்லான்

c) தலாமஸ்

d) கார்பஸ் கலோசம்

விளக்கம்: பெருமூளை: பெரு மூளையானது நீள் வாட்டத்தில் வலது மற்றும் இடது என இரு பிரிவுகளாக ஒரு ஆழமான பிளவு மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிளவு நடுப்பிளவு (median Cleft) எனப்படும்.

இப்பிரிவுகள் செரிப்ரல் ஹெமிஸ்பியர் / பெரு மூளை அரைக் கோளங்கள் என்று அழைக்கப்படும். இப்பிரிவுகள் மூளையின் அடிப்பகுதியில் கார்பஸ் கலோசம் என்னும் அடர்த்தியான நரம்புத் திசுக்கற்றையால் இணைக்கப்பட்டுள்ளன.

67) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) பெருமூளையின் வெளிப்புற பகுதி, வெண்மை நிறப் பகுதியால் ஆனது.

II) பெருமூளையின் உட்புற ஆழமான பகுதி சாம்பல் நிறப் பொருளால் ஆனது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: பெருமூளையின் வெளிப்புற பகுதி, சாம்பல் நிறப் பகுதியால் ஆனது. இது பெருமூளைப் புறணி எனப்படும். பெருமூளையின் உட்புற ஆழமான பகுதி வெண்மை நிறப் பொருளால் ஆனது.

68) பெருமூளைப் புறணி எந்த நிறத்தில் காணப்படும்?

a) வெள்ளை

b) இளஞ்சிவப்பு

c) சாம்பல்

d) a மற்றும் b

விளக்கம்: பெருமூளையின் வெளிப்புற பகுதி, சாம்பல் நிறப் பகுதியால் ஆனது. இது பெருமூளைப் புறணி எனப்படும். பெருமூளையின் உட்புற ஆழமான பகுதி வெண்மை நிறப் பொருளால் ஆனது.

69) பெருமூளைப் புறணியில் காணப்படும் மடிப்புகளில் மேடு போன்ற பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) புறணி

b) சல்சி

c) கைரி

d) a மற்றும் b

விளக்கம்: பெருமூளைப் புறணி அதிகமான மடிப்புகளுடன் பல சுருக்கங்களைக் கொண்டு காணப்படும். இவற்றின் மேடு “கைரி” என்றும், பள்ளங்கள் “சல்சி” என்றும் அழைக்கப்படும். இவ்வாறு மடிப்புற்று இருப்பதால் பெருமூளைப் புறணி அதிக பரப்பைக் கொண்டதாக உள்ளது.

70) பெருமூளைப் புறணியில் காணப்படும் மடிப்புகளில் பள்ளங்கள் போன்ற பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) புறணி

b) சல்சி

c) கைரி

d) a மற்றும் b

விளக்கம்: பெருமூளைப் புறணி அதிகமான மடிப்புகளுடன் பல சுருக்கங்களைக் கொண்டு காணப்படும். இவற்றின் மேடு “கைரி” என்றும், பள்ளங்கள் “சல்சி” என்றும் அழைக்கப்படும். இவ்வாறு மடிப்புற்று இருப்பதால் பெருமூளைப் புறணி அதிக பரப்பைக் கொண்டதாக உள்ளது.

71) பின்வருவனவற்றுள் பெரு மூளை அரைக்கோளத்தின் பிரிவுகள் யாவை?

a) பக்கவாட்டுக் கதுப்பு

b) கீழ் கதுப்பு

c) மேல்கீழ் கதுப்பு

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: ஒவ்வொரு பெரு மூளை அரைக்கோளமும், முன்புறக் கதுப்பு, பக்கவாட்டுக் கதுப்பு, மேற்புறக் கதுப்பு மற்றும் பின்புறக் கதுப்பு என்று பிரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பெருமூளை கதுப்புகள் என அழைக்கப்படும். இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட செயலுக்கு பொறுப்பானவை. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கதுப்பில் ஏற்படும் சேதம் அந்தப் பகுதிக்கான செயல்களை பாதிக்கும்.

72) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) கதுப்புகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட செயலுக்கு பொறுப்பானவை.

II) ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கதுப்பில் ஏற்படும் சேதம் அனைத்து பகுதிக்கான செயல்களை பாதிக்கும்.

a) I மற்றும் II சரி

b) I சரி II தவறு

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: ஒவ்வொரு பெரு மூளை அரைக்கோளமும், முன்புறக் கதுப்பு, பக்கவாட்டுக் கதுப்பு, மேற்புறக் கதுப்பு மற்றும் பின்புறக் கதுப்பு என்று பிரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பெருமூளை கதுப்புகள் என அழைக்கப்படும். இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட செயலுக்கு பொறுப்பானவை. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கதுப்பில் ஏற்படும் சேதம் அந்தப் பகுதிக்கான செயல்களை பாதிக்கும்.

73) சிந்தித்தல், நினைவுத் திறன், கற்பனைத்திறன், காரணகாரியம் ஆராய்தல் ஆகியவற்றுக்கு காரணமான மூளைப்பகுதி எது?

a) முன் மூளை

b) தலாமஸ்

c) பின் மூளை.

d) பெருமூளை

விளக்கம்: பெரு மூளையானது சிந்தித்தல், நுண்ணறிவு, விழிப்புணர்வு நிலை, நினைவுத் திறன், கற்பனைத்திறன், காரணகாரியம் ஆராய்தல் மற்றும் மன உறுதி ஆகியவற்றுக்கு காரணமானதாகும்.

74) உணர்வு மற்றும் இயக்க தூண்டல்களைக் கடத்தும், கடத்து மையமாக எது செயல்படுகிறது?

a) முன் மூளை

b) தலாமஸ்

c) பின் மூளை

d) பெருமூளை

விளக்கம்: தலாமஸ்: பெருமூளையின் உட்புற ஆழமான பகுதியான மெடுல்லாவைச் சூழ்ந்து தலாமஸ் அமைந்துள்ளது. உணர்வு மற்றும் இயக்க தூண்டல்களைக் கடத்தும் முக்கியமான கடத்து மையமாக தலாமஸ் செயல்படுகிறது.

75) ஹைபோ என்பதன் பொருள் என்ன?

a) மேலாக

b) ஆழமாக

c) கீழாக

d) உள்ளே

விளக்கம்: ஹைபோதலாமஸ்: ஹைபோ என்பதற்கு கீழாக என்று பொருள். இப்பொருளுக்கேற்ப இது தலாமஸின் கீழ்ப்பகுதியில் உள்ளது. இது உள்ளார்ந்த உணர்வுகளான பசி, தாகம், தூக்கம், வியர்வை, பாலுறவுக் கிளர்ச்சி, கோபம், பயம், ரத்த அழுத்தம், உடலின் நீர் சமநிலை பேணுதல் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது.

76) பசி, தாகம், தூக்கம், வியர்வை, ரத்த அழுத்தம், உடலின் நீர் சமநிலை பேணுதல் ஆகியவற்றை மூளையின் எந்த பகுதி கட்டுப்படுத்துகிறது?

a) முன் மூளை

b) தலாமஸ்

c) ஹைபோதலாமஸ்

d) பெருமூளை

விளக்கம்: ஹைபோதலாமஸ்: ஹைபோ என்பதற்கு கீழாக என்று பொருள். இப்பொருளுக்கேற்ப இது தலாமஸின் கீழ்ப்பகுதியில் உள்ளது. இது உள்ளார்ந்த உணர்வுகளான பசி, தாகம், தூக்கம், வியர்வை, பாலுறவுக் கிளர்ச்சி, கோபம், பயம், ரத்த அழுத்தம், உடலின் நீர் சமநிலை பேணுதல் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது.

77) எது உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் மையமாக செயல்படுகிறது?

a) முன் மூளை

b) தலாமஸ்

c) ஹைபோதலாமஸ்

d) பெருமூளை

விளக்கம்: ஹைபோதலாமஸ்: இது உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் மையமாக செயல்படுகிறது. மேலும் இது பிட்யூட்டரி சுரப்பியின் முன் கதுப்பு ஹார்மோன் சுரப்புகளைக் கட்டுப்படுத்துகிறது. தலாமஸ் நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லாச் சுரப்பு மண்டலத்தின் இணைப்பாக செயல்படுகிறது.

78) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) ஹைபோதலாமஸ் பிட்யூட்டரி சுரப்பியின் முன் கதுப்பு ஹார்மோன் சுரப்புகளைக் கட்டுப்படுத்துகிறது.

II) தலாமஸ், நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லாச் சுரப்பு மண்டலத்தின் இணைப்பாக செயல்படுகிறது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: ஹைபோதலாமஸ்: இது உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் மையமாக செயல்படுகிறது. மேலும் இது பிட்யூட்டரி சுரப்பியின் முன் கதுப்பு ஹார்மோன் சுரப்புகளைக் கட்டுப்படுத்துகிறது. தலாமஸ் நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லாச் சுரப்பு மண்டலத்தின் இணைப்பாக செயல்படுகிறது.

79) எவற்றின் பின்புறத்தில் காணப்படும் கோள வடிவிலான பகுதிகள் கார்ப்போரா குவாட்ரிஜெமினா என அழைக்கப்படுகிறது?

a) முன் மூளை

b) நடு மூளை

c) பின் மூளை

d) பெருமூளை

விளக்கம்: நடுமூளை: இது தலாமஸிற்கும் பின் மூளைக்கும் இடையில் அமைந்துள்ளது. நடுமூளையின் பின்புறத்தில் நான்கு கோள வடிவிலான பகுதிகள் உள்ளன. இவை கார்ப்போரா குவாட்ரிஜெமினா என அழைக்கப்படும். இவை பார்வை மற்றும் கேட்டலின் அனிச்சைச் செயல்களை கட்டுப்படுத்துகிறது.

80) பார்வை மற்றும் கேட்டலின் அனிச்சைச் செயல்களை மூளையின் எந்த பகுதி கட்டுப்படுத்துகிறது?

a) முன் மூளை

b) நடு மூளை

c) பின் மூளை.

d) பெருமூளை

விளக்கம்: நடுமூளை: இது தலாமஸிற்கும் பின் மூளைக்கும் இடையில் அமைந்துள்ளது. நடுமூளையின் பின்புறத்தில் நான்கு கோள வடிவிலான பகுதிகள் உள்ளன. இவை கார்ப்போரா குவாட்ரிஜெமினா என அழைக்கப்படும். இவை பார்வை மற்றும் கேட்டலின் அனிச்சைச் செயல்களை கட்டுப்படுத்துகிறது.

81) பின் மூளை எதை உள்ளடக்கியது?

a) சிறுமூளை

b) பான்ஸ்

c) முகுளம்

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: பின் மூளை: பின் மூளையானது சிறுமூளை, பான்ஸ் மற்றும் முகுளம் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கியது.

82) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) மனித மூளையின் 80% பகுதி கொழுப்பாலானது.

II) அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களை நம் உடலால் உற்பத்தி செய்ய இயலாத காரணத்தால் உணவின் மூலமே பெற முடியும்.

a) I மற்றும் II சரி

b) I தவறு II சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: மனித மூளையின் 60% பகுதி கொழுப்பாலானது. நமது மூளையை ஒன்றிணைக்கும் மற்றும் செயல்படும் திறனுக்கு காரணமானவை அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள். இவை நம்மால் உற்பத்தி செய்ய இயலாத காரணத்தால் உணவின் மூலமே பெற முடியும். மீன், பச்சை காய்கறிகள் பாதாம், வாதுமை கொட்டை ஆகியவற்றில் அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் (EFA) அதிகம் உள்ளது.

83) அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் எதில் அதிகமாக காணப்படும்?

a) வாதுமை கொட்டை

b) பால்

c) ஆட்டு இறைச்சி

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: மனித மூளையின் 60% பகுதி கொழுப்பாலானது. நமது மூளையை ஒன்றிணைக்கும் மற்றும் செயல்படும் திறனுக்கு காரணமானவை அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள். இவை நம்மால் உற்பத்தி செய்ய இயலாத காரணத்தால் உணவின் மூலமே பெற முடியும். மீன், பச்சை காய்கறிகள் பாதாம், வாதுமை கொட்டை ஆகியவற்றில் அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் (EFA) அதிகம் உள்ளது.

84) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) மூளையின் இரண்டாவது மிகப்பெரிய பகுதி சிறு மூளை ஆகும்.

II) இது இயக்கு தசைகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உடல் சமநிலையைப் பேணுதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: சிறுமூளை: மூளையின் இரண்டாவது மிகப்பெரிய பகுதி சிறு மூளை ஆகும். சிறு மூளையானது மையப் பகுதியில் இரண்டு பக்கவாட்டு கதுப்புகளுடன் காணப்படும். இது இயக்கு தசைகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உடல் சமநிலையைப் பேணுதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.

85) “பான்ஸ்” என்னும் வார்த்தை எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?

a) கிரேக்கம்

b) ரோமானியம்

c) பார்ஸி

d) இலத்தின்

விளக்கம்: பான்ஸ்: “பான்ஸ்” என்னும் இலத்தின் மொழி சொல்லுக்கு “இணைப்பு” என்று பொருள். இது சிறு மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளை இணைக்கும் இணைப்பு பகுதியாக செயல்படுகிறது. இது சிறு மூளை, தண்டுவடம், நடுமூளை மற்றும் பெருமூளை ஆகியவற்றிற்கிடையே சமிக்ஞைகளை கடத்தும் மையமாக செயல்படுகிறது. இது சுவாசம் மற்றும் உறக்க சுழற்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.

86) எது சிறு மூளை, தண்டுவடம், நடுமூளை மற்றும் பெருமூளை ஆகியவற்றிற்கிடையே சமிக்ஞைகளை கடத்தும் மையமாக செயல்படுகிறது?

a) சிறுமூளை

b) பான்ஸ்

c) முகுளம்

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: பான்ஸ்: “பான்ஸ்” என்னும் இலத்தின் மொழி சொல்லுக்கு “இணைப்பு” என்று பொருள். இது சிறு மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளை இணைக்கும் இணைப்பு பகுதியாக செயல்படுகிறது. இது சிறு மூளை, தண்டுவடம், நடுமூளை மற்றும் பெருமூளை ஆகியவற்றிற்கிடையே சமிக்ஞைகளை கடத்தும் மையமாக செயல்படுகிறது. இது சுவாசம் மற்றும் உறக்க சுழற்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.

87) _________ சுவாசம் மற்றும் உறக்க சுழற்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.

a) சிறுமூளை

b) பான்ஸ்

c) முகுளம்

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: பான்ஸ்: “பான்ஸ்” என்னும் இலத்தின் மொழி சொல்லுக்கு “இணைப்பு” என்று பொருள். இது சிறு மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளை இணைக்கும் இணைப்பு பகுதியாக செயல்படுகிறது. இது சிறு மூளை, தண்டுவடம், நடுமூளை மற்றும் பெருமூளை ஆகியவற்றிற்கிடையே சமிக்ஞைகளை கடத்தும் மையமாக செயல்படுகிறது. இது சுவாசம் மற்றும் உறக்க சுழற்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.

88) இதயத் துடிப்பினை கட்டுப்படுத்தும் மையமாகவும் சுவாசத்தினை கட்டுப்படுத்தும் சுவாச மையமாகவும் எது செயல்படுகிறது?

a) சிறுமூளை

b) பான்ஸ்

c) முகுளம்

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: முகுளம்: மூளையின் கீழ்ப்பகுதியான முகுளம் தண்டுவடத்தையும் மூளையின் பிற பகுதிகளையும் இணைக்கின்றது. இது இதயத் துடிப்பினை கட்டுப்படுத்தும் மையம், சுவாசத்தினை கட்டுப்படுத்தும் சுவாச மையம், இரத்தக் குழாய்களின் சுருக்கத்தினை கட்டுப்படுத்தும் மையம் ஆகிய மையங்களை உள்ளடக்கியது. மேலும் உமிழ்நீர் சுரப்பது மற்றும் வாந்தி எடுத்தல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது.

89) உமிழ்நீர் சுரப்பது மற்றும் வாந்தி எடுத்தல் ஆகியவற்றை மூளையின் எந்த பகுதி ஒழுங்குபடுத்துகிறது?

a) சிறுமூளை

b) பான்ஸ்

c) முகுளம்

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: முகுளம்: மூளையின் கீழ்ப்பகுதியான முகுளம் தண்டுவடத்தையும் மூளையின் பிற பகுதிகளையும் இணைக்கின்றது. இது இதயத் துடிப்பினை கட்டுப்படுத்தும் மையம், சுவாசத்தினை கட்டுப்படுத்தும் சுவாச மையம், இரத்தக் குழாய்களின் சுருக்கத்தினை கட்டுப்படுத்தும் மையம் ஆகிய மையங்களை உள்ளடக்கியது. மேலும் உமிழ்நீர் சுரப்பது மற்றும் வாந்தி எடுத்தல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது.

90) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) எலக்ட்ரோஎன்செஃப்லோகிராம் (EEG) என்பது மூளையில் உண்டாகக்கூடிய மின் அதிர்வுகளை பதிவு செய்யும் கருவி ஆகும்.

II) இது மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் அசாதாரணமான மாற்றங்களை கண்டுணரவும் பயன்படுகிறது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: எலக்ட்ரோஎன்செஃப்லோகிராம் (EEG) என்பது மூளையில் உண்டாகக்கூடிய மின் அதிர்வுகளை பதிவு செய்யும் கருவி. இது மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் அசாதாரணமான மூளை அலைகளை கண்டுணரவும், மூளையில் ஏற்படும் உடனடி மாற்றங்கள், மூளைக்கட்டி, தலையில் ஏற்படும் காயங்கள், வலிப்பு போன்ற நோய்களை கண்டுணரவும் பயன்படுகிறது.

91) தண்டுவடம் எத்தனை சவ்வுகளால் மூடப் பட்டுள்ளது?

a) ஒன்று

b) இரண்டு

c) மூன்று

d) நான்கு

விளக்கம்: தண்டுவடம்: தண்டுவடமானது குழல் போன்ற அமைப்பாக முதுகெலும்பின் உள்ளே முள்ளெலும்புத் தொடரின் நரம்புக் குழலுக்குள் அமைந்துள்ளது. மூளையைப் போன்று தண்டுவடமும் மூவகை சவ்வுகளால் மூடப் பட்டுள்ளது. இது முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கி இடுப்பெலும்பின் கீழ்ப்புறம் வரை அமைந்துள்ளது. தண்டுவடத்தின் கீழ்ப்புறம் குறுகிய மெல்லிய நார்கள் இணைந்தது போன்ற அமைப்பு காணப்படுகிறது. இது “ஃபைலம் டெர்மினலே” எனப்படுகிறது.

92) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) தண்டுவடம் முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கி இடுப்பெலும்பின் கீழ்ப்புறம் வரை அமைந்துள்ளது.

II) தண்டுவடத்தின் கீழ்ப்புறம் குறுகிய மெல்லிய நார்கள் இணைந்தது போன்று காணப்படும் அமைப்பு “ஃபைலம் டெர்மினலே” எனப்படுகிறது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: தண்டுவடம்: தண்டுவடமானது குழல் போன்ற அமைப்பாக முதுகெலும்பின் உள்ளே முள்ளெலும்புத் தொடரின் நரம்புக் குழலுக்குள் அமைந்துள்ளது. மூளையைப் போன்று தண்டுவடமும் மூவகை சவ்வுகளால் மூடப் பட்டுள்ளது. இது முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கி இடுப்பெலும்பின் கீழ்ப்புறம் வரை அமைந்துள்ளது. தண்டுவடத்தின் கீழ்ப்புறம் குறுகிய மெல்லிய நார்கள் இணைந்தது போன்ற அமைப்பு காணப்படுகிறது. இது “ஃபைலம் டெர்மினலே” எனப்படுகிறது.

93) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) தண்டுவடத்தின் உட்புறம், தண்டுவடத் திரவத்தால் நிரம்பியுள்ள குழல் உள்ளது.

II) தண்டுவடத்தின் சாம்பல் நிறப் பகுதியானது ஆங்கில எழுத்தான “H” போன்று அமைந்துள்ளது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: தண்டுவடத்தின் உட்புறம், தண்டுவடத் திரவத்தால் நிரம்பியுள்ள குழல் உள்ளது. இது மையக்குழல் (central canal) எனப்படுகிறது. தண்டுவடத்தின் சாம்பல் நிறப் பகுதியானது ஆங்கில எழுத்தான “H” போன்று அமைந்துள்ளது.

94) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) H எழுத்தின் மேற்பக்க முனைகள “வயிற்றுப்புறக் கொம்புகள்” எனப்படும்.

II) H எழுத்தின் கீழ்ப்பக்க முனைகள “முதுகுப்புறக் கொம்புகள்” என்றும் குறிப்பிடப்படுகிறது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: தண்டுவடத்தின் உட்புறம், தண்டுவடத் திரவத்தால் நிரம்பியுள்ள குழல் உள்ளது. இது மையக்குழல் (central canal) எனப்படுகிறது. தண்டுவடத்தின் சாம்பல் நிறப் பகுதியானது ஆங்கில எழுத்தான “H” போன்று அமைந்துள்ளது.

“H” எழுத்தின் மேற்பக்க முனைகள “வயிற்றுப்புறக் கொம்புகள்” (posterior horns) என்றும், கீழ்ப்பக்க முனைகள “முதுகுப்புறக் கொம்புகள்” (anterior horns) என்றும் குறிப்பிடப்படுகிறது.

95) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) வயிற்றுப் புறக் கொம்புப்பகுதியில் கற்றையான நரம்பிழைகள் சேர்ந்து பரிவு நரம்புகளை உண்டாக்குகின்றன.

II) முதுகுப்புற கொம்பு பகுதிகளிலிருந்து வெளிப்புறமாக வரும் நரம்பிழைகள் எதிர்ப்பரிவு நரம்புகளை உண்டாக்குகின்றன.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: தண்டுவடத்தின் உட்புறம், தண்டுவடத் திரவத்தால் நிரம்பியுள்ள குழல் உள்ளது. இது மையக்குழல் (central canal) எனப்படுகிறது. தண்டுவடத்தின் சாம்பல் நிறப் பகுதியானது ஆங்கில எழுத்தான “H” போன்று அமைந்துள்ளது.

“H” எழுத்தின் மேற்பக்க முனைகள “வயிற்றுப்புறக் கொம்புகள்” (posterior horns) என்றும், கீழ்ப்பக்க முனைகள “முதுகுப்புறக் கொம்புகள்” (anterior horns) என்றும் குறிப்பிடப்படுகிறது.

வயிற்றுப் புறக் கொம்புப்பகுதியில் கற்றையான நரம்பிழைகள் சேர்ந்து பரிவு நரம்புகளை உண்டாக்குகின்றன. முதுகுப்புற கொம்பு பகுதிகளிலிருந்து வெளிப்புறமாக வரும் நரம்பிழைகள் எதிர்ப்பரிவு நரம்புகளை உண்டாக்குகின்றன. இவையிரண்டும் இணைந்து தண்டுவட நரம்புகளை (spinal nerves) உண்டாக்குகின்றன. வெளிப்புற வெண்மை நிறப் பகுதி நரம்பிழைக் கற்றைகளைக் கொண்டுள்ளது. தண்டு வடமானது, மூளைக்கும் பிற உணர்ச்சி உறுப்புகளுக்கும் இடையே உணர்வுத் தூண்டல்களையும், இயக்கத் தூண்டல்களையும், முன்னும் பின்னுமாக கடத்தக்கூடியது. இது உடலின் அனிச்சைச் செயல்களைக் கட்டுப்படுத்துகிறது.

96) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) மூளையானது சிறப்பு திரவத்தினுள் மிதந்த நிலையில் காணப்படுகிறது.

II) நிணநீர் போன்றுள்ள இத்திரவம் மூளையை அதிர்வுகளில் இருந்து பாதுகாக்கின்றது.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: மூளையானது சிறப்பு திரவத்தினுள் மிதந்த நிலையில் காணப்படுகிறது. இச்சிறப்பு திரவம் மூளைத் தண்டுவடத் திரவம் என்றழைக்கப்படுகிறது. மண்டையோட்டினுள் நிணநீர் போன்றுள்ள இத்திரவம் மூளையை அதிர்வுகளில் இருந்து பாதுகாக்கின்றது. தண்டு வடத்தின் மையக் குழலினுள்ளும் இத்திரவம் நிரம்பியுள்ளது.

பணிகள்

(1) திடீர் அதிர்வுகளின் போது மூளை பாதிப்படையாமல் பாதுகாக்கிறது.

(2) மூளைக்கான ஊட்டச்சத்துக்களை அளிக்கும் பணியை மேற்கொள்கிறது.

(3) மூளையில் உருவாகும் கழிவுகளை சேகரித்து வெளியேற்றும் பணியினை மேற்கொள்கிறது.

(4) மூளைப் பெட்டகத்தின் உள்ளே நிலையான அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

97) தண்டுவடத் திரவத்தின் பணி என்ன?

a) திடீர் அதிர்வுகளின் போது மூளை பாதிப்படையாமல் பாதுகாக்கிறது.

b) மூளைக்கான ஊட்டச்சத்துக்களை அளிக்கும் பணியை மேற்கொள்கிறது.

c) மூளையில் உருவாகும் கழிவுகளை சேகரித்து வெளியேற்றும் பணியினை மேற்கொள்கிறது.

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: மூளையானது சிறப்பு திரவத்தினுள் மிதந்த நிலையில் காணப்படுகிறது. இச்சிறப்பு திரவம் மூளைத் தண்டுவடத் திரவம் என்றழைக்கப்படுகிறது. மண்டையோட்டினுள் நிணநீர் போன்றுள்ள இத்திரவம் மூளையை அதிர்வுகளில் இருந்து பாதுகாக்கின்றது. தண்டு வடத்தின் மையக் குழலினுள்ளும் இத்திரவம் நிரம்பியுள்ளது.

பணிகள்

(1) திடீர் அதிர்வுகளின் போது மூளை பாதிப்படையாமல் பாதுகாக்கிறது.

(2) மூளைக்கான ஊட்டச்சத்துக்களை அளிக்கும் பணியை மேற்கொள்கிறது.

(3) மூளையில் உருவாகும் கழிவுகளை சேகரித்து வெளியேற்றும் பணியினை மேற்கொள்கிறது.

(4) மூளைப் பெட்டகத்தின் உள்ளே நிலையான அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

98) தன்னிச்சையாக ஒரு தூண்டலுக்கு பதில் விளைவாக நடக்கும் எதிர்வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) தன்னிச்சை செயல்

b) பதில் விளைவு

c) எதிர் விளைவு

d) அனிச்சைச் செயல்

விளக்கம்: அனிச்சைச் செயல் என்பது தன்னிச்சையாக ஒரு தூண்டலுக்கு பதில் விளைவாக நடக்கும் எதிர்வினை ஆகும். இரு வகையான அனிச்சைச் செயல்கள் காணப்படுகின்றன.

99) கண்ணில் தூசி விழும் போது இமைகளை மூடுதல், தும்முதல், இருமுதல், கொட்டாவி விடுதல் போன்ற செயல்கள் எந்த வகை அனிச்சைச் செயலின் கீழ் வரும்?

a) எளிய அனிச்சைச் செயல்கள்

b) அடிப்படையான அனிச்சைச் செயல்கள்

c) கட்டுப்படுத்தப்பட்ட அனிச்சைச்செயல்கள்

d) a அல்லது b

விளக்கம்: அனிச்சைச் செயல் என்பது தன்னிச்சையாக ஒரு தூண்டலுக்கு பதில் விளைவாக நடக்கும் எதிர்வினை ஆகும். இரு வகையான அனிச்சைச் செயல்கள் காணப்படுகின்றன.

எளிய அல்லது அடிப்படையான அனிச்சைச் செயல்கள்: இவ்வகையான அனிச்சைச் செயல்கள் உள்ளார்ந்த மற்றும் கற்றுணராத துலங்கல்களாகும். நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் பல எளிமையான அனிச்சைச் செயல்களை பயன்படுத்துகிறோம். உதாரணமாக நமது கண்ணில் தூசி விழும் போது இமைகளை மூடுதல், தும்முதல், இருமுதல், கொட்டாவி விடுதல் போன்ற இச்செயல்களை நாம் நம்மை அறியாமலேயே, சிந்திக்காமலேயே உடனடியாக செய்கிறோம்.

100) கற்றல் மற்றும் பயிற்சியின் மூலம் செயல்படுத்தப்படும் அனிச்சைச் செயல் எது?

a) எளிய அனிச்சைச் செயல்கள்

b) அடிப்படையான அனிச்சைச் செயல்கள்

c) கட்டுப்படுத்தப்பட்ட அனிச்சைச்செயல்கள்

d) a அல்லது b

விளக்கம்: பெறப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அனிச்சைச் செயல்கள்: இவ்வகையான அனிச்சைச் செயல்கள் கற்றல் மற்றும் பயிற்சியின் மூலம் செயல்படுத்தப்படுபவையாகும். ஹார்மோனியம் வாசித்தலின் போது இசை குறிப்புகளுக்கேற்ப சரியான கட்டையை அழுத்துவதும், விடுவிப்பதும் கற்றல் மூலம் பெறப்பட்ட அனிச்சைச் செயலாகும். தொடர்ச்சியான பயிற்சியின் மூலமே இதனை மேற்கொள்ள முடியும்.

101) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

I) பெரும்பாலான அனிச்சைச் செயல்கள் தண்டு வடத்தினால் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப் படுகின்றன. இவை தண்டுவட அனிச்சைச் செயல்கள் ஆகும்.

II) நரம்பு செல்களுக்கிடையே நடைபெறும் தூண்டல் துலங்கல் அனிச்சைச் செயல் பாதைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து அனிச்சை வில் எனப்படும்.

a) I மற்றும் II சரி

b) I சரி

c) II சரி

d) I மற்றும் II தவறு

விளக்கம்: பெரும்பாலான அனிச்சைச் செயல்கள் தண்டு வடத்தினால் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப் படுகின்றன. எனவே இவை தண்டுவட அனிச்சைச் செயல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. நரம்பு செல்களுக்கிடையே நடைபெறும் தூண்டல் துலங்கல் அனிச்சைச் செயல் பாதைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து அனிச்சை வில் எனப்படும்.

102) மனிதர்களில் மூளையிலிருந்து எத்தனை இணை மூளை நரம்புகள் உருவாகின்றன?

a) 11

b) 12

c) 13

d) 21

விளக்கம்: மூளை மற்றும் தண்டுவடத்தில் இருந்து உருவாகும் நரம்புகள் புற அமைவு நரம்பு மண்டலத்தை உருவாக்குகின்றன. மூளையிலிருந்து உருவாகும் நரம்புகள் மூளை நரம்புகள் / கபால நரம்புகள் என அழைக்கப்படும். தண்டுவடத்தில் இருந்து உருவாகும் நரம்புகள் தண்டுவட நரம்புகள் என அழைக்கப்படும்.

மனிதர்களில் மூளையிலிருந்து 12 இணை கபால நரம்புகள் உருவாகின்றன. சில கபால நரம்புகள் உணர்ச்சி நரம்புகளாக செயல்படுகின்றன. இவை உணர் உறுப்புகளில் இருந்து நரம்புத் தூண்டல்களை மூளைக்கு எடுத்துச் செல்கின்றன. எடுத்துகாட்டு:கண்ணில் உள்ள பார்வை நரம்புகள். இவற்றுள் சில நரம்புகள் கண் கோளம் சுழலுவதற்கு உதவி புரிகிறது. மேலும் கண்ணிலுள்ள தசை நார்கள், விழித்திரையின் தசை நார்கள், கண்ணீர் சுரப்பி ஆகியவை செயல் புரிவதற்கும் இந்நரம்புகள் உதவுகிறது.

103) தண்டுவடத்திலிருந்து எத்தனை இணை தண்டுவட நரம்புகள் உருவாகின்றன?

a) 11

b) 12

c) 31

d) 21

விளக்கம்: தண்டுவட நரம்புகள்: தண்டுவடத்தில் இருந்து 31 இணைத் தண்டுவட நரம்புகள் உருவாகின்றன. ஒவ்வொரு தண்டுவட நரம்பும் கீழ்ப்புற உணர்ச்சி வேர்களையும், மேற்புற இயக்க வேர்களையும் கொண்டுள்ளது. மேற்புற தண்டுவட நரம்பு வேர்கள் தூண்டல்களை தண்டுவடத்தை நோக்கி கடத்தும் படியும், கீழ்ப்புற தண்டுவட நரம்பு வேர்கள் தண்டுவடத்திலிருந்து வெளிப்புறமாக கடத்தும்படியும் அமைந்துள்ளது.

104) உள்ளுறுப்பு நரம்பு மண்டலம் என்று அழைக்கப்படும் நரம்பு மண்டலம் எது?

a) தண்டுவட நரம்பு மண்டலம்

b) தானியங்கு நரம்பு மண்டலம்

c) மூளை நரம்பு மண்டலம்

d) எவையுமில்லை

விளக்கம்: தானியங்கு நரம்பு மண்டலமானது உள்ளுறுப்பு நரம்பு மண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றில் உள்ள பரிவு நரம்புகளும், எதிர்ப் பரிவு நரம்புகளும் ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்பட்டு நமது உடல் உள்ளுறுப்புகளின் இயக்கங்களை ஒழுங்கு படுத்துகிறது. இவ்விரு நரம்புகளும் எதிரெதிராகச் செயல்பட்டு நமது உடலில் உள்ள உள்ளுறுப்புகளை மிக துரிதமாகச் செயல்பட வைப்பதன் மூலம் உடலை சம நிலையில் பராமரிக்க உதவுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!