Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
General Tamil

11th Tamil Unit 4 Questions

11th Tamil Unit 4 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 11th Tamil Unit 4 Questions With Answers Uploaded Below.

1. கூற்று: கல்வி என்பதன் பொருள் ‘கலலுதல்‘.

காரணம்: அது கற்பவர் மனத்தில் ஆழப் புதைந்துள்ள திறன்களை தோண்டி வெளிக்கொண்டு வருவதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி

ஆ) கூற்று சரி காரணம் தவறு

இ) கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல.

ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு

2. தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், கல்வி கற்பதற்காக பிரிந்து செல்வதை எவ்வாறு குறிப்பிடுகிறது.

அ) காலிற்பிரிவு

ஆ) கலத்திற்பிரிவு

இ) ஓதல் பிரிவு

ஈ) கல்விப்பிரிவு

3. தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், எண்வகை மெய்ப்பாடு பற்றிக் கூறும்போது கல்வியின் பொருட்டு ஒருவருக்கு _____ தோன்றும் எனக் கூறுகிறது.

அ) நகை

ஆ) செல்வம்

இ) வியப்பு

ஈ) பெருமிதம்.

4. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான இலக்கணங்களை கூறும் நூல்கள்

1. நன்னூல் 2. திருக்குறள்

3. தொல்காப்பியம் 4. ஆத்திச்சூடி

அ) அனைத்தும்

ஆ) 1, 2, 3

இ) 1, 3

ஈ) 1, 4

5. “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிள்றை நிலை முனியாது கற்றல் நன்றே ” என்று கூறும் நூல்

அ) புறநானூறு – 188

ஆ) புறநானூறு – 183

இ) அகநானூறு – 188

ஈ) அகநானூறு – 183

6. பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும் ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி கற்றதை புறநானூற்றில் பாடியவர்

அ) கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி

ஆ) ஒளவையார்

இ) ஆரியப் படைக் கடந்த நெடுஞ்செழியன்

ஈ) பாரதம் பாடிய பெருந்தேவனார்

7. “சங்க காலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது” என்ற கருத்தை கூறியவர்

அ) திரு.வி.க

ஆ) அண்ணா

இ) ராஜாஜி

ஈ) மா. இராசமாணிக்கனார்

8. கீழ்க்கண்டவற்றுள் தமிழகத்தில் சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத்தில் கற்பித்தல் பணியை செய்த அமைப்புகள் எது / எவை?

1. அறங்கூர் அவையம் 2. சமணப்பள்ளி

3. பெளத்தப்பள்ளி 4. மன்றம்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 3 சரி

இ) 1, 3, 4 சரி

ஈ) 2, 3, 4 சரி

9. பலர் கூடி விவாதிக்கும் பாங்குடைய அமைப்பு ___

அ) மன்றம்

ஆ) அறங்கூர் அவையம்

இ) சங்கம்

ஈ) சமணப் பள்ளி

10. சங்க காலத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் எத்தனை பிரிவினராக இருந்தனர்

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

11. சங்க காலத்தில் கற்ற மாணவர்களை எவ்வாறு வகைப்படுத்தினர்

1. சிறுவன் 2. மாணவன்

3. கேட்போன் 4. வாசிப்போன்

அ) அனைத்தும் சரி

ஆ) 2, 3, 4 சரி

இ) 1, 2, 3 சரி

ஈ) 2, 3 சரி

12. கல்வி கற்பிக்கப்படும் இடங்களை ‘ஓதும் பள்ளி ‘ என்று கூறும் நூல்

அ) பெரிய திருமொழி

ஆ) திவாகர நிகண்டு

இ) சீவக சிந்தாமணி

ஈ) மணிமேகலை

13. சரியான இணையை தேர்ந்தெடு.

1. பள்ளி – திவாகர நிகண்டு

2. கல்லூரி – சீவக சிந்தாமணி

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) அனைத்தும் தவறு

14. பின்வருவனவற்றுள் ஏட்டுக்கற்றைகளின் பெயர்களில் அல்லாதது

அ) ஏடு

ஆ) சுவடு

இ) பொத்தகம்

ஈ) பனுவல்

15. பின்வருவனவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு

1. உட்பொருளை குறிப்பவை– ஏடு, சுவடி, பொத்தம்

2. ஓலைக்கற்றையை குறிப்பவை – பனுவல், நூல்

அ) இரண்டும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) இரண்டும் தவறு

16. கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம் ஆகிய 4 கொடைகளும் _____ சமயத்தின் தலையாய அறங்களாகும்.

அ) வைணவம்

ஆ) சமணம்

இ) பெளத்தம்

ஈ) சைவம்

17. சமணத்தை சேர்ந்த திகம்பரத் துறவிகள் மாணவர்களுக்கு கல்வியை எங்கு போதித்தனர்

அ) சமணக் கோவில்கள்

ஆ) மலைக்குகைகள்

இ) பள்ளிக் கட்டிடங்கள்

ஈ) மடங்கள்

18. கூற்று: பள்ளி என்பதன் பொருள் படுக்கை

காரணம்: படுக்கைகளின் மீது மாணவர்கள் அமர்ந்து கற்றதனால் கல்விக்கூடம், பள்ளிக்கூடம் என அழைக்கப்படலாயிற்று.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி

ஆ) கூற்று சரி காரணம் தவறு

இ) கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல.

ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு

19. _____ என்னும் சொல் சமண பௌத்த சமயங்களின் கொடை ஆகும்.

அ) கல்வி

ஆ) மலை

இ) பள்ளி

ஈ) ஆசிரியர்

20. சமண பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு எடுத்த படுக்கைகள் பற்றி கூறும் கல்வெட்டுகள் எங்குள்ளன.

அ) பழனி மலை, கழுகுமலை

ஆ) திருச்சி மலைக்கோட்டை, வேலூர்

இ) திருச்சி மலைக்கோட்டை, கழுகுமலை

ஈ) திருச்சி மலைக்கோட்டை, பழனி மலை

21. எழுத்தும், இலக்கியமும் உரிச்சொல்லும் கணக்கும் கற்பிப்போர்

அ) ஆசிரியர்

ஆ) கணக்காயர்

இ) குரவர்

ஈ) சான்றோர்

22. சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர் ___ ஆவர்.

அ) ஆசிரியர்

ஆ) கணக்காயர்

இ) குரவர்

ஈ) சான்றோர்

23. ஐந்தாக விரிக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கியங்களையும் கற்பிப்போர் ___.

அ) ஆசிரியர்

ஆ) கணக்காயர்

இ) குரவர்

ஈ) சான்றோர்

24. கலைகள், கல்வி கற்பிக்கும் இடங்களாக விளங்கியவை___ எனப்பட்டன.

அ) பள்ளிகள்

ஆ) மன்றம்

இ) சான்றோர் அவை

ஈ) சபை

25. கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடமாகத் திகழ்ந்தவை ___ ஆகும்.

அ) பள்ளிகள்

ஆ) மன்றம்

இ) சான்றோர் அவை

ஈ) சபை

26. ____ என்பது செயல்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் அவையாக இருந்தது.

அ) பள்ளிகள்

ஆ) மன்றம்

இ) சான்றோர் அவை

ஈ) சபை

27. ____ என்னும் ஊரில் இருந்த சமணப் பள்ளியில் பெண் சமண ஆசிரியர் ஒருவர் 500 மாணவர்களுக்கு கல்வி கற்பித்தார்.

அ) தென்காசி அருகிலுள்ள வேடல்

ஆ) வந்தவாசி அருகிலுள்ள வேடல்

இ) வந்தவாசி அருகிலுள்ள விளாப்பாக்கம்

ஈ) தென்காசி அருகிலுள்ள விளாப்பாக்கம்

28. விளாப்பாக்கத்தில் சமணப் பள்ளியை நிறுவியவர்

அ) சமணக் குரவர்கள்

ஆ) பட்டினிக்குரத்தி

இ) திகம்பரர்

ஈ) மகாவீரர்

29. பெண்களுக்கெனத் தனியாகக் கல்வி கற்பிக்கும் சமணப் பள்ளிகள் ___ என அழைக்கப்பட்டன.

அ) பெண்கள் மடங்கள்

ஆ) பெண்கள் சபை

இ) பெண்கள் மடாலயங்கள்

ஈ) பெண் பள்ளிகள்

30. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. பட்டிமண்டபம் என்ற கலைவடிவம் சமயத்துறையிலிருந்து தோன்றியது.

2. இது சமயக் கருத்துகளை விவாதிக்கும் இடமென நீலகேசி கூறுகிறது.

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) அனைத்தும் தவறு

31. ” ஒட்டிய சமயத்து உறுபொருள்வாதிகள் பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின் ” என்று கூறும் நூல்.

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) நீலகேசி

ஈ) குண்டலகேசி

32. காஞ்சிபுரத்திலுள்ள பெளத்தப் பல்கலைக்கழகத்தில் தங்கி சிறப்புரை ஆற்றிய வெளிநாட்டுப் பயணி

அ) மெகஸ்தனிஸ் – சீன பயணி

ஆ) மெகஸ்தனிஸ் – இத்தாலிய பயணி

இ) யுவான் சுவாங் – இத்தாலிய பயணி

ஈ) யுவான் சுவாங் – சீனப் பயணி

33. தமிழக திண்ணை பள்ளி முறையை ஸ்காட்லாந்தில் அறிமுகம் செய்தவர்

அ) ஜான் கூட்டன்பர்க்

ஆ) ஹென்ரி ஆடம்ஸ்

இ) ரெவரெண்ட் பெல்

ஈ) தாமஸ் மன்றோ

34. தமிழக திண்ணை பள்ளி முறையை ஸ்காட்லாந்தில் எவ்வாறு அழைத்தனர்

1. மெட்ராஸ் காலேஜ் 2. மெட்ராஸ் சிஸ்டம்

3. பெல் சிஸ்டம் 4. மானிடரி சிஸ்டம்

அ) அனைத்தும் சரி

ஆ) 2, 3 சரி

இ) 2, 3, 4 சரி

ஈ) 1, 2, 3 சரி

35. போதனா முறையைத் தாண்டி வாழ்வியலைக் கட்டமைப்பதில் உறுதுணையாக இருந்த கல்வி முறை

அ) குருகுலக் கல்விமுறை

ஆ) திண்ணைப் பள்ளிக் கல்விமுறை

இ) உயர்நிலைக் கல்விமுறை

ஈ) மரபுவழிக் கல்வி முறைகள்

36. குருகுலக் கல்விமுறை கீழ்க்கண்ட எவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது

1. செய்து கற்றல் 2. வாழ்ந்து கற்றல்

3. எளிமையாக வாழ்தல் 4. பகிர்ந்து கற்றல்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 4 சரி

இ) 1, 2, 3 சரி

ஈ) 2, 3, 4 சரி

37. மாணவர்கள் ஆசிரியர்களை அணுகி அவருடன் பல ஆண்டுகள் தங்கி அவருக்கு தேவைப்படும் பணிகளை செய்து கல்வி கற்கும் முறை

அ) குருகுலக் கல்விமுறை

ஆ) திண்ணைப் பள்ளிக் கல்விமுறை

இ) உயர்நிலைக் கல்விமுறை

ஈ) மரபுவழிக் கல்வி முறைகள்

38. திண்ணைப் பள்ளிகள் எக்காலக்கட்டத்தில் கிராமங்களில் அதிக அளவில் இருந்தன.

அ) 17ம் நூற்றாண்டு

ஆ) 18ம் நூற்றாண்டு

இ) 19ம் நூற்றாண்டு

ஈ) 20 ம் நூற்றாண்டு

39. ஆங்கிலேயரால் நாட்டுக் கல்வி என அழைக்கப்பட்ட கல்வி அமைப்புகள் எவை?

1. திண்ணைப் பள்ளிகள் 2. பாடசாலைகள்

3. மக்தாபுகள் 4. மதரஸாக்கள்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2

இ) 1, 2, 3

ஈ) 1, 2, 4

40. திண்ணைப் பள்ளிக் கல்வி முறை குறித்த கூற்றுகளில் தவறானது எது?

அ) இவை தெற்றிப் பள்ளிகள் எனவும் அழைக்கப்பட்டன.

ஆ) இவற்றின் ஆசிரியர்கள் கணக்காயர்கள் என அழைக்கப்பட்டனர்.

இ) இப்பள்ளிகள் ஒரே மாதிரியான வரன்முறையுடன் செயல்பட்டன.

ஈ) இவற்றின் பாடத்திட்டம், பள்ளி நேரம், பயிற்றுவிக்கும் முறை ஆகியன ஆசிரியரின் விருப்பப் படியே அமைந்திருந்தன.

41. தாமஸ் மன்றோ காலத்தில் சென்னை மாகாணத்தில் எத்தனை திண்ணைப் பள்ளிகள் இயங்கி வந்தன

அ) 12, 894

ஆ) 14, 298

இ) 14, 892

ஈ) 12, 498

42. கீழ்க்கண்டவர்களும் திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தலைமைப் புலவராக விளங்கியவர்

அ) உ.வே.சா

ஆ) மீனாட்சி சுந்தரனார்

இ) மீரா

ஈ) கல்யாணசுந்தரனார்

43. மீனாட்சி சுந்தரனாரிடம் தமிழ் தாத்தா உ.வே.சா பாடம் பயின்ற முறை

அ) குருகுலக் கல்விமுறை

ஆ) திண்ணைப் பள்ளிக் கல்விமுறை

இ) உயர்நிலைக் கல்விமுறை

ஈ) பாடசாலை முறை

44. ” கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்

மூத்தோரை இல்லா அவைக்களணும் – பத்துண்ணும்

______________

நன்மை பயத்தல் இல்”

– இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

அ) மணிமேகலை

ஆ) நாலடியார்

இ) திரிகடுகம்

ஈ) புறநானூறு

45. சென்னை ஆளுநர் தாமஸ் மன்றோ ஆணைக்கிணங்கப் பொதுக் கல்வி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு

அ) 1826

ஆ) 1835

இ) 1854

ஈ) 1857

46. சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு

அ) 1826

ஆ) 1835

இ) 1854

ஈ) 1857

47. பொதுக் கல்வி துறை நிறுவப்பட்டு முதல் பொதுக் கல்வி இயக்குநர் நியமிக்கப்பட்ட ஆண்டு

அ) 1826

ஆ) 1835

இ) 1854

ஈ) 1857

48. சென்னைப் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது

அ) 1826

ஆ) 1835

இ) 1854

ஈ) 1857

49. 1794ல் தொடங்கப்பட்ட ஸ்கூல் ஆஃப் சர்வே என்ற நிறுவனம், எப்போது கிண்டி பொறியியல் கல்லூரியாக வளர்ச்சி அடைந்தது

அ) 1826

ஆ) 1835

இ) 1859

ஈ) 1857

50. தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு

அ) 1826

ஆ) 1910

இ) 1854

ஈ) 1857

51. பள்ளியிறுதி வகுப்பு – மாநில அளவிலான பொக்த் தேர்வு நடைமுறைக்கு வந்த ஆண்டு

அ) 1826

ஆ) 1835

இ) 1911

ஈ) 1857

52. 1453 ம் ஆண்டின் தொடக்கத்தில் அச்சு இயந்திரத்தை வடிவமைத்தவர் யார் அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்

அ) ஜான் கூட்டன்பர்க் – இங்கிலாந்து

ஆ) ஜான் கூட்டன் ப்ர்க் – ஜெர்மனி

இ) தாமஸ் மன்றோ – இங்கிலாந்து

ஈ) தாமஸ் மன்றோ – ஜெர்மனி

53. டச்சுக் காரர்களின் சமயப் பரப்பு சங்கம் தமிழகத்தில் முதன்முதலாக கல்வி பணியில் ஈடுபட்ட ஆண்டு

அ) 1706

ஆ) 1835

இ) 1854

ஈ) 1857

54. டச்சுக்காரர்கள் முதன்முதலில் அச்சுக்கூடத்தை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை அச்சடித்த இடம்

அ) காரைக்கால்

ஆ) தரங்கம்பாடி

இ) நாகப்பட்டினம்

ஈ) சென்னை

55. இந்தியாவில் முதன் முதலில் அச்சேறிய மொழி

அ) சமஸ்கிருதம்

ஆ) ஆங்கிலம்

இ) தமிழ்

ஈ) பாரசீகம்

56. கீழ்க்கண்டவற்றுள் டச்சுக்காரர்கள் தமிழகத்தில் கல்விப் பணியில் ஈடுபட்ட போது செய்தவைகளில் சரியானது எது?

a. அச்சுக்கூடத்தை ஏற்படுத்தி புத்தகங்களை அச்சடித்தனர்

b. அறப்பள்ளிகளை நிறுவினர்.

c. ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளையும் நிறுவினர்.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 1, 3 சரி

ஈ) 2, 3 சரி

57. எந்த ஆண்டின் சாசனச் சட்டப்படி லண்டன் பாராளுமன்றம் இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் ஒதுக்கியது.

அ) 1813

ஆ) 1833

இ) 1853

ஈ) 1856

58. இந்தியாவில் தாய்நாட்டு இலக்கியங்களையும் கீழைத் தேசத்துக் கலைகளையும் பயிற்றுவிக்க வேண்டும் என்னும் கொள்கை கொண்டவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்

அ) இந்தியவாதிகள்

ஆ) தெற்கத்தியவாதிகள்

இ) கீழைத்தேயவாதிகள்

ஈ) மேற்கத்தியவாதிகள்

59. மேற்கத்திய பாணிக் கல்வி முறையான ஆங்கில வழிக் கல்வி முறை மூலமாகவே இந்தியர்களை முன்னேற்ற முடியும் என்று கூறியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்

அ) இந்தியவாதிகள்

ஆ) தெற்கத்தியவாதிகள்

இ) கீழைத்தேயவாதிகள்

ஈ) மேற்கத்தியவாதிகள்

60. “ஆசிரியர்களால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும். அவரால், ஏற்படப்போகும் நல்ல விளைவுகள் அவர்களாலேயே மதிப்பிட இயலாது” என்று கூறியவர்

அ) தாமஸ் மன்றோ

ஆ) மெக்காலே

இ) ஹென்றி ஆடம்ஸ்

ஈ) சுர்லஸ்வுட்

61. கீழைத்தேயவாதிகள், மேற்கத்தியவாதிகளின் கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்டக் குழு மற்றும் ஆண்டு

அ) சார்லஸ் வுட் குழு – 1853

ஆ) சார்லஸ் வுட் குழு – 1854

இ) மெக்காலே குழு – 1834

ஈ) மெக்காலே குழு – 1835

62. தற்கால கல்வியும் தேர்வு முறையும் எந்த குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டவை

அ) சார்லஸ் வுட் குழு – 1853

ஆ) சார்லஸ் வுட் குழு – 1854

இ) மெக்காலே குழு – 1834

ஈ) மெக்காலே குழு – 1835

63. இந்தியக் கல்வி வளர்ச்சியின் மகாசாசனம் என அழைக்கப்படுவது எந்த கல்விக் குழுவின் அறிக்கை

அ) மெக்காலே கல்விக் குழு

ஆ) ஹண்டர் கல்விக் குழு

இ) சார்லஸ் வுட் கல்விக் குழு

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

64. சீருடைமுறை, தாய் மொழிவழிக் கல்வி போன்றவற்றைக் கட்டாயமாக்கியது எந்த கல்விக் குழு

அ) மெக்காலே கல்விக் குழு – 1835

ஆ) ஹண்டர் கல்விக் குழு – 1882

இ) சார்லஸ் வுட் கல்விக் குழு – 1854

ஈ) ஹண்டர் கல்விக் குழு – 1854

65. புதிய பள்ளிகளை தொடங்கி நடத்தும் பொறுப்பை தனியாருக்கு வழங்கப் பரிந்துரைத்த கல்விக் குழு

அ) மெக்காலே கல்விக் குழு – 1835

ஆ) ஹண்டர் கல்விக் குழு – 1882

இ) சார்லஸ் வுட் கல்விக் குழு – 1854

ஈ) ஹண்டர் கல்விக் குழு – 1854

66. ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த 19 ம் நூற்றாண்டில் இந்தியாவில் எழுதப் படிக்க தெரிந்தவரின் எண்ணிக்கை

அ) 10%

ஆ) 12%

இ) 15%

ஈ) 18%

67. 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும் எனக் கூறும் இந்திய அரசியலமைப்பு சட்ட உறுப்பு

அ) 14

ஆ) 24

இ) 54

ஈ) 45

68. “தாய் மொழியிலே பயின்று

யாதும் உளரென

உலகின் உறவாகவே

விரும்புகிறேன் நான் ”

என்று பாடியவர்

அ) திரு.வி.க

ஆ) அண்ணா

இ) இரா.மீனாட்சி

ஈ) வரதராசனார்

69. “இங்கே, ஐம்பதாண்டு வேம்பு

கோடையில் கொட்டும் பூக்களை

எண்ணச் சொல்கிறார்கள்”

இவ்வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை

அ) பள்ளிக்கூடம்

ஆ) பிள்ளைக்கூடம்

இ) சிறகுகள்

ஈ) நற்றிணை

70. “ சொந்தமொழி கற்பிக்கும்

இந்தப் பள்ளிக்கூடம்

மிகவும் பிடித்துப் போய்விட்டது”

இவ்வரிகள் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்ட கவிதையில் உள்ளது

அ) நெருஞ்சி

ஆ) சுடு பூக்கள்

இ) கொடி விளக்கு

ஈ) மறுபயணம்

71. இரா.மீனாட்சி அவர்கள் எழுதிய கவிதைத் தொகுப்புகளில் அல்லாதது எது?

அ) நெருஞ்சி முள்

ஆ) சுடு பூக்கள்

இ) கொடி விளக்கு

ஈ) மறுபயணம்

72. இரா.மீனாட்சி குறித்த கூற்றுகளில் எது தவறானது.

அ) தற்போது பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழ்ந்து வருகிறார்.

ஆ) 1980 முதல் எழுதத் தொடங்கி பல கவிதைத் தொகுப்புகளை படைத்துள்ளார்.

இ) ஆசிரிய பணியிலும் கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர்.

ஈ) இவர் சுடுபூக்கள், தீபாவளிப் பகல், மறுபயணம், உதயநகரிலிருந்து, வாசனைப்புல் போன்ற கவிதை தொகுப்புகளை இயற்றியுள்ளார்.

73. ” பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்

விரி கதிர்ப் பொற்கலத்து ஒருவகை ஏந்திப்

புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்

உண்என்று”

– இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

அ) ஐங்குறுநூறு

ஆ) புறநானூறு

இ) நற்றிணை

ஈ) குறுந்தொகை

74. “ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி

அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்க் தனள் கொல்”

– இவ்வரிகளை பாடியவர்

அ) பேயனார்

ஆ) கபிலர்

இ) ஓரம்போகியார்

ஈ) போதனார்

75. “அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்

பரீஇ மெலிந்து ஒழியப் பந்தர் ஓடி ”

– இவ்வரிகள் இடம்பெற்றுள்ள பாடலில் அமைந்துள்ள திணை மற்றும் துறை

அ) முல்லை, கணவனின் நிலை உரைத்தல்

ஆ) மருதம், தந்தையின் நிலை உரைத்தல்

இ) பாலை, மகள் நிலை உரைத்தல்

ஈ) மருதம், தன் நிலை உரைத்தல்

76. ‘மகள் நிலை உரைத்தல்’ என்னும் துறை வேறு எவ்வாறு அழைக்கப் படுகிறது.

அ) மகள்மருட்சி

ஆ) மனைமருட்சி

இ) மனைமகள் மருட்சி

ஈ) செவிலித்தாய் மருட்சி

77. சரியான பொருளைத் தேர்ந்தெடு.

வறன், கொழுஞ்சோறு

அ) செல்வம், பெருஞ்செல்வம்

ஆ) வறுமை, பெருஞ்செல்வம்

இ) செல்வம், போர் வீரர்களுக்கு அளிக்கும் விருந்து

ஈ) வறுமை, போர் வீரர்களுக்கு அளிக்கும் விருந்து

78. சரியான பொருளைத் தேர்ந்தெடு.

பிரசம், மதுகை

அ) தேன், பெருமிதம்

ஆ) பெருமிதம், தேன்.

இ) இனிப்பு, கடுஞ்சொல்

ஈ) கடுஞ்சொல், இனிப்பு

79. தவறான இணையைத் தேர்ந்தெடு.

1. புடைத்தல் – கோல் கொண்டு ஓச்சுதல்

2. கொழுநன் குடி – கணவனுடைய வீடு

3. உள்ளாள் – நினையாள்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 1, 3 சரி

ஈ) 2, 3 சரி

80. இலக்கணக் குறிப்புத் தருக

வெண்சுவை, தீம்பால்

அ) வினைதொகைகள்

ஆ) தொழிற்பெயர்கள்

இ) பண்புத்தொகைகள்

ஈ) வினையெச்சங்கள்

81. இலக்கணக் குறிப்புத் தருக

விரிகதிர், ஒழுகுநீர்

அ) வினைதொகைகள்

ஆ) தொழிற்பெயர்கள்

இ) பண்புத்தொகைகள்

ஈ) வினையெச்சங்கள்

82. இலக்கணக் குறிப்புத் தருக

பந்தர், கொண்ட

அ) தொழிற்பெயர், பெயரெச்சம்

ஆ) ஈற்றுப் போலி, பெயரெச்சம்

இ) வினையெச்சம், பெயரெச்சம்

ஈ) பெயரெச்சம், வினையெச்சம்

83. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – மெலிந்து

அ) மெலி + த்(ந்) + த் + உ

ஆ) மெலி + த் + த்(ந்) + உ

இ) மெலிந்து + உ

ஈ) மெலிந் + த் + உ

84. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – மறுத்து

அ) மறு + த் + உ

ஆ) மறுத் + து

இ) மறு + த் + த் + உ

ஈ) மறு + த் + து

85. “மெலிந்து –> மெலி + த்(ந்) + த் + உ”

இதில் ‘உ’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) பெயரெச்சவிகுதி

ஆ) வினையெச்சவிகுதி

இ) தொழில் பெயர் விகுதி

ஈ) வினை முற்று விகுதி

86. “சிறுமை + கோல் –> சிறுகோல் ”

இதில் வந்துள்ள புணர்ச்சி விதி

அ) இனமிகல்

ஆ) உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்

இ) ஈறு போதல்

ஈ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்.

87. “பொன் + சிலம்பு பொற்சிலம்பு”

இதில் வந்துள்ள புணர்ச்சி விதி

அ) இனமிகல்

ஆ) உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்

இ) ணன வல்லினம் வர ட ற வும்

ஈ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்

88. எட்டுத்தொகை நூல்களுள் ‘நல்ல திணை’ என்ற அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடைய நூல்

அ) நற்றிணை

ஆ) குறுந்தொகை

இ) ஐங்குறுநூறு

ஈ) புறநானூறு

89. நற்றிணையில் அமைந்துள்ள மொத்த பாடல்கள் மற்றும் அவற்றின் அடிவரையறை

அ) 401, 3 – 12 அடி

ஆ) 401, 9 – 12 அடி

இ) 400, 3 – 12 அடி

ஈ) 400, 9 – 12 அடி

90. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணையை தொகுப்பித்தவர்

அ) பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

ஆ) கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி

இ) கடியலூர் உருத்திரங்கண்ணனார்

ஈ) பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

91. நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் யார்

அ) கபிலர்

ஆ) பேயனார்

இ) போதனார்

ஈ) பெருந்தேவனார்.

92. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் பாடப்படும் நூல்

அ) குறுந்தொகை

ஆ) புறநானூறு

இ) நற்றிணை

ஈ) அகநானூறு

93. சங்க காலப் புலவரான போதனார் நற்றிணையில் எத்தனையாவது பாடலை பாடியுள்ளார்

அ) 110

ஆ) 112

இ) 120

ஈ) 100

94. நற்றிணையில் பேதனாரின் பாடல் எத்தனை அடிகளை கொண்டதாக அமைந்துள்ளது.

அ) 12

ஆ) 13

இ) 14

ஈ) 15

95. இலக்கணக் குறிப்புத் தருக.

பொற்கலம், பொற்சிலம்பு

அ) 7 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைகள்

ஆ) 3 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைகள்

இ) 2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைகள்

ஈ) 6 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைகள்

96. தொல்காப்பியம் கீழ்க்கண்ட எவற்றிற்கு இலக்கணம் வகுத்துக் கூறுகிறது.

1. எழுத்து 2. சொல் 3. பொருள் 4. வாழ்வு

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3 சரி

இ) 1, 3, 4 சரி

ஈ) 2, 3, 4 சரி

97. சரியான இணையை தேர்ந்தெடு

1. இகக்கும் – குற்றம் இழுக்கு – குற்றம் வினாயவை – கேட்டவை

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

98. “ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பிற்

பெருக நூலிற் பிழைபா டிலனே “

i. இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

அ) நன்னூல்

ஆ) தொல்காப்பியம்

இ) நற்றினை

ஈ) புறநானூறு

99. இலக்கணக் குறிப்புத் தருக.

அறிதல், கேட்டல்

அ) தொழிற்பெயர், வினையெச்சம்

ஆ) வினையெச்சம், வினை முற்று

இ) தொழிற்பெயர், தொழிற்பெயர்

ஈ) வினையெச்சம், வினையெச்சம்

100. இலக்கணக் குறிப்புத் தருக – நனிஇகக்கும்

அ) வினை முற்று

ஆ) வினையெச்சம்

இ) வினைத்தொகை

ஈ) உரிச்சொற்றொடர்

101. பகுபத உறுப்புகளாக பிரிக்க – விடுத்தல்

அ) விடு + த் + த் + அல்

ஆ) விடு + த் + அல்

இ) விடு + த் + தல்

ஈ) விடுத்து + அல்

102. “விடு + த் + தல்” என்பதில் ‘தல்’ என்பதின் பகுபத உறுப்பிலக்கணம்

அ) பெயரெச்சவிகுதி

ஆ) வினையெச்சவிகுதி

இ) தொழில் பெயர் விகுதி

ஈ) வினை முற்று விகுதி

103. பகுபத உறுப்புகளாக பிரிக்க – அறிந்து

அ) அறிந் + துஆ) அறிந் + த் + உஇ) அறி + த்(ந்) + த் + உஈ) அறி + த் + த்(ந்) + உ

104. சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு – இழுக்கின்றி

அ) இழுக்கு + இன்றி –> இழுக் + இன்றி –> இழுக்கின்றி

ஆ) இழுக்கு + இன்றி –> இழுக் + ய் + இன்றி –> இழுக்கின்றி

இ) இழுக்கு + இன்றி –> இழுக் + கி + இன்றி –> இழுக்கின்றி

ஈ) இழுக்கு + இன்றி –> இழுக்க் + இன்றி –> இழுக்கின்றி

105. சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு – முறையறிந்து

அ) முறை + அறிந்து –> முறை + ய் + அ + அறிந்து –> முறையறிந்து

ஆ) முறை + அறிந்து –> முறை + ய் + ய + அறிந்து –> முறையறிந்து

இ) முறை + அறிந்து –> முறை + ய் + அறிந்து –> முறையறிந்து

ஈ) முறை + அறிந்து –> முறையறிந்து

106. முறையறிந்து என்னும் சொல் புணரும் விதிகளில்

“முறை + அறிந்து –> முறை + ய் + அறிந்து ”

இதில் இடம்பெறும் புணர்ச்சி விதி

அ) இனமிகல்

ஆ) உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்

இ) இ ஈ ஐ வழி யவ்வும்

ஈ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்

107. இழுக்கின்றி என்னும் சொல் புணரும் விதிகளில்

” இழுக்கு + இன்றி –> இழுக்க் + இன்றி ”

இதில் இடம்பெறும் புணர்ச்சி விதி

அ) இனமிகல்

ஆ) உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்

இ) இ ஈ ஐ வழி யவ்வும்

ஈ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்

108. தொல்காப்பியம் முதன் முதலில் பதிக்கப்பட்ட ஆண்டு

அ) 1947

ஆ) 1847

இ) 1874

ஈ) 1974

109. கீழ்க்கண்டவற்றில் தொல்காப்பிய அதிகாரங்களில் அல்லாதது எது?

அ) எழுத்து

ஆ) சொல்

இ) பொருள்

ஈ) யாப்பு

110. தொல்காப்பியத்தில் உள்ள மொத்த இயல்கள் எத்தனை?

அ) 9

ஆ) 18

இ) 27

ஈ) 36

111. கீழ்க்கண்டவற்றில் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பழமையான உரையாசிரியர்களுள் அல்லாதவர் யார்?

1. இளம்பூரணர் 2. நச்சினார்க்கினியர்

3. கல்லாடனார் 4. பேராசிரியர்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2

இ) 1, 3

ஈ) 1, 2, 4

112. ” முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும் “

i. இவ்வரிகள் யாருடைய சிறப்பை கூறுகிறது.

அ) ஆசிரியரின் சிறப்பு

ஆ) மாணவரின் சிறப்பு

இ) பெற்றோரின் சிறப்பு

ஈ) கடவுளின் சிறப்பு

113. ” வழக்கின் இலக்கணம் இழுக்கின்று அறிதல்

பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் “

– என்னும் தொல்காப்பியப் பாடல் யாருடைய உரை விளக்கத்தில் இடம்பெற்றுள்ளது

அ) இளம்பூரணர்

ஆ) நச்சினார்க்கினியர்

இ) கல்லாடனார்

ஈ) பேராசிரியர்

114. நமக்குக் கிடைத்த தமிழ் நூல்களில் காலத்தால் பழமையான இலக்கண நூல்

அ) நன்னூல்

ஆ) பாயிரம்

இ) தொல்காப்பியம்

ஈ) நிகண்டு

115. பாரதியார் எப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார்.

அ) தஞ்சை உயர்நிலைப் பள்ளி

ஆ) எட்டயபுர சேதுபதி உயர்நிலைப்பள்ளி

இ) மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி

ஈ) மெட்ராஸ் உயர்நிலைப்பள்ளி

116. சுதேசமித்ரன் இதழில் பாரதி ஏற்றுக் கொண்ட பொறுப்பு

அ) எழுத்தாளர்

ஆ) உதவி ஆசிரியர்

இ) ஆசிரியர்

ஈ) எதுவுமில்லை

117. கீழ்க்கண்டவற்றில் பாரதி பணியாற்றிய இதழ்கள் யாவை?

1. சக்ரவர்த்தினி 2. பாலபாரதி 3. விஜயா

4. சூர்யோதயம் 5. கர்மயோகி

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3 சரி

இ) 2, 3, 5 சரி

ஈ) 1, 3, 4 சரி

118. கீழ்க்கண்டவறறுள் பாரதி தம் படைப்புகளை வெளியிட்ட இதழ்கள் எவை?

1. கலைமகள் 2. தேசபக்தன் 3. கதாரத்னாகரம்

4. ஞான பானு 5. காமன்வீல்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 5 சரி

இ) 1, 3, 5 சரி

ஈ) 1, 3, 4, 5 சரி

119. தன் பெயரையும் தன்னையும் முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்பும் மனிதர்களுக்கிடையில் ” தான் ” என்ற ஒன்றை ஒழித்தவர்

அ) பாரதிதாசன்

ஆ) பாரதி

இ) அண்ணா

ஈ) திரு.வி.க

120. தமிழ் இதழியல் துறையில் முதன்முதலாக கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் _____

அ) பாரதிதாசன்

ஆ) பாரதி

இ) அண்ணா

ஈ) திரு.வி.க

121. கீழ்க்கண்டவற்றுள் பாரதியின் புனைப்பெயர்களில் அல்லாதது எது?

1. சாவித்திரி 2. வேதாந்தி 3. நித்திய தீரர்

4. காசி 5. செல்லம்மா

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 5 சரி

இ) 1, 3, 5 சரி

ஈ) 1, 3, 4, 5 சரி

122. பாரதி, தமிழில் ____ என்ற பெயரில் கருத்துப் படங்களை மட்டுமே கொண்ட இதழ் ஒன்றை நடத்த விரும்பினார்.

அ) சித்திரம்

ஆ) சித்திராவளி

இ) கருத்துப்பட இதழ்

ஈ) சித்திரா இதழ்

123. தமிழ் இதழ்களில் கருத்துப்படங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை பாரதிக்கு ஏறபடுத்திய இதழ்கள்

1. லண்டன் பஞ்ச் 2. இந்தி பஞ்ச்

அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும்

இ) இரண்டும் சரி

ஈ) இரண்டும் தவறு

124. கீழ்க்கண்டவற்றுள் பாரதி கருத்துப் படங்களை வெளியிட்ட இதழ்கள் எவை?

1. இந்தியா 2. விஜயா 3. சித்திராவளி 4. கர்மயோகி

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 1, 2, 3 சரி

ஈ) 2, 3, 4 சரி

125. கீழ்கண்டவற்றுள் பாரதியிடம் துணையாசிரியர்களாக பணியாற்றியவர்கள் யார்?

1. பி.பி.சுப்பையா 2. ஹரிஹரர் 3. என்.நாகசாமி

4. வ.ராமசாமி 5. கனகசுப்பையா

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3, 4 சரி

இ) 1, 2, 3, 5 சரி

ஈ) 1, 3, 4, 5 சரி

126. தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன்முதலாக குறித்தவர் யார்?

அ) பாரதிதாசன்

ஆ) பாரதி

இ) அண்ணா

ஈ) திரு.வி.க

127. பாரதி பெண்களுக்காக தமது _____ என்னும் இதழில் குறள் வெண்பா எழுதியுள்ளார்

அ) சக்ரவர்த்தினி

ஆ) பாலபாரதி

இ) விஜயா

ஈ) சூர்யோதயம்

128. “பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான்

ஒண்மை யுறஓங்கும் உலகு “

– இக்குறள் வெண்பாவை எழுதியவர்

அ) திருவள்ளுவர்

ஆ) திரு.வி.க

இ) பாரதி

ஈ) பாரதிதாசன்

129. பாரதி சிவப்பு வண்ணத்தாளில் வெளியிட்ட இதழ்

அ) சக்ரவர்த்தினி

ஆ) இந்தியா

இ) விஜயா

ஈ) சூர்யோதயம்

130. இந்தியா என்பது எவ்வகையான இதழ்?

அ) மாத இதழ்

ஆ) நாளிதழ்

இ) வார இதழ்

ஈ) வருட இதழ்

131. கூற்று: பாரதி இந்தியா இதழை சிவப்பு வண்ணத் தாளில் வெளியிட்டார்.

காரணம்: சிவப்பு வண்ணம் புரட்சியையும் விடுதலையையும் குறிப்பது என்பதால் அடிமைத்தளையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று எண்ணினார்.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி

ஆ) கூற்று சரி காரணம் தவறு

இ) கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல.

ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு

132. பாரதி இறந்து போவதற்கு முதல் நாள் இரவில் யாரைப் பற்றிய வியாசம் எழுத வேண்டும் என கூறினார்?

அ) காந்தி

ஆ) அமானுல்லா கான்

இ) சிதம்பரனார்

ஈ) கால்டுவெல்

133. பாரதியார் இறக்கும் பொழுதும் இதழாளராகவே இறந்தார் என கூறுவது

அ) பாரதியப் பற்றி நண்பர்கள் – ரா.அ.பத்மநாபன்

ஆ) பாரதியப் பற்றி நண்பர்கள் – பார்த்திபன்

இ) பாரதியப் பற்றி இதழாளர்கள் – ரா.அ.பத்மநாபன்

ஈ) பாரதியப் பற்றி இதழாளர்கள் – பார்த்திபன்

134. பாரதி தம் மனைவி செல்லம்மாவை எந்தெந்த புனைப்பெயர்களில் குறிப்பிட்டுள்ளார்.

1. கண்ணம்மா 2. சரஸ்வதி 3. வள்ளி

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 1, 3 சரி

ஈ) 2, 3 சரி

135. பாரதி குறித்த கூற்றுகளில் தவறானது எது?

அ) தமிழ் இதழ்களில் தமிழில் தலைப்பிடுவதற்கு பாரதியே முன்னோடி.

ஆ) தலைப்பிடலை ‘மகுடமிடல்’ என்று பாரதி கூறினார்.

இ) சக்ரவர்த்தினி போன்ற இதழ்களில் 1906 – 1907 காலப்பகுதியில் ஆங்கிலத் தலைப்பையும் பாரதி கலந்து பயன்படுத்தினார்.

ஈ) பாரதி தம் நண்பர்கள் பெயரையும் அவர்கள் கூடிப் பேசும் இடங்களையும் புனைப்பெயரில்

136. உவமை கீழ்க்கண்ட எவற்றின் அடிப்படையில் தோன்றும் என்கிறார் தொல்காப்பியர்

1. வினை 2. பயன் 3. வடிவம் 4. உரு

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 4 சரி

இ) 1, 2, 3சரி

ஈ) 2, 3, 4 சரி

137. “வினை பயன் மெய் உரு என்ற நான்கே

வகைபெற வந்த உவமத் தோற்றம் ”

இவ்வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளது

அ) நன்னூல்

ஆ) தொல்காப்பியம்

இ) பாயிரம்

ஈ) திருவாசகம்

138. “கண்ணன் புலி போலப் பாய்ந்தான்” இத்தொடரில் அமைந்துள்ள உவமை, உவமேயம் முறையே ____, ____

அ) கண்ணன், புலி

ஆ) புலி, கண்ணன்

இ) புலி, போல

ஈ) புலி, பாய்ந்தான்

139. ஒன்றை விளக்கவும் தெளிவுபடுத்தவும் அழகுபடுத்தவும் ___ எளியதும் தொன்மை மிக்கதாகவும் உள்ளது.

அ) உவமை

ஆ) உவமேயம்

இ) உவம உருபு

ஈ) பகுதி

140. சங்கப்பாடல்களில் பெரும்பாலும் ___அணி இடம் பெறுகிறது.

அ) எடுத்துக்காட்டுவமையணி

ஆ) பிறிது மொழிதல் அணி

இ) உவமை அணி

ஈ) சொல் பின்வரு நிலையணி

141. “ஊர்க் குறுமாக்கள் வெண்கோடு கழாஅலின்

நீர்த்துறை படியும் பெருங் களிறு போல

___ ___ ___ ___ ___ ___ ___

இன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே”

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்

அ) தொல்காப்பியம்

ஆ) புறநானூறு

இ) நன்னூல்

ஈ) அகநானூறு

142. ஊர்க் குறுமாக்கள் வெண்கோடு கழாஅலின்

நீர்த்துறை படியும் பெருங் களிறு போல

___ ___ ___ ___ ___ ___ ___

இன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே”

– இப்பாடல் யாரால் யாருக்காகப் பாடப்பட்டது.

அ) ஒளவையாரால் பாரிக்கு

ஆ) ஒளவையாரால் அதியமானுக்கு

இ) கபிலரால் பாரிக்கு

ஈ) கபிலரால் அதியமானுக்கு

143. “கண்ணீரை நீ துடைத்தபோது

நட்சத்திரங்கள் துடைக்கப்பட்ட

வானம் போல் உன் முகம்

இருண்டு போயிருந்தது ”

– இவ்வரிகள் இடம் பெற்றுள்ள கவிதை

அ) மெளன மயக்கங்கள்

ஆ) மயக்கங்கள்

இ) வெளிச்சம்

ஈ) பிள்ளைக்கூடம்

144. “அவர்கள் மூளையில் விதையைப் போல்

தூவப்பட வேண்டிய அறிவு

ஆணியைப் போல அறையப்படுகின்றது ”

இப்பாடலில் இடம்பெற்றுள்ள உவமை எவ்வகையை சார்ந்தது

அ) வினை உவமை

ஆ) பயன் உவமை

இ) மெய் உவமை

ஈ) உரு உவமை

145. ” வறண்ட வாழ்வு துளிர்க்க

மழை போல் வந்தாய் நீ ”

இப்பாடலில் இடம்பெற்றுள்ள உவமை எவ்வகையை சார்ந்தது

அ) வினை உவமை

ஆ) பயன் உவமை

இ) மெய் உவமை

ஈ) உரு உவமை

146. “சுருக்கிய குடையைப் போலத்

தோன்றும் அசோக மரம்”

இப்பாடலில் இடம்பெற்றுள்ள உவமை எவ்வகையை சார்ந்தது

அ) வினை உவமை

ஆ) பயன் உவமை

இ) மெய் உவமை

ஈ) உரு உவமை

147. “சோடிய விளக்காய் மாலை நேரச் சூரியனின்

மஞ்சள் வெளிச்சம் தெருவில் நிரம்பி வழிந்தது ”

இப்பாடலில் இடம்பெற்றுள்ள உவமை எவ்வகையை சார்ந்தது

அ) வினை உவமை

ஆ) பயன் உவமை

இ) மெய் உவமை

ஈ) உரு உவமை

148. ஒப்பீட்டுச்செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும் போது அது _____ எனப்படுகிறது

அ) உவமை

ஆ) உவமேயம்

இ) உவம உருபு

ஈ) உருவகம்

149. உவமையையும் உவமிக்கப்படும் பொருளையும் வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக் கூறுவது ______.

அ) உவமை

ஆ) உவமேயம்

இ) உவம உருபு

ஈ) உருவகம்

150. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது?

அ) உருவகத் தொடரில் உவமை முன்னும் உவமேயம் பின்னுமாக அமையும்.

ஆ) உவமையின் செறிவார்ந்த வடிவமே உருவகம்.

இ) உவமையை விட உருவகம் ஆழமானது.

ஈ) உருவகத்தில் உவமானமும் உவமேயமும் ஒன்றே என்ற உணர்வு கிடைக்கிறது.

151. தீ போல் சினம் என்பதை சினத்தீ என்று கூறியவர்

அ) பாரதிதாசன்

ஆ) பாரதி

இ) கம்பர்

ஈ) இளங்கோவடிகள்

152. “வானக் கருமை கொல்லோ?

பட்டுக் கருநீலப் புடவை

பதித்த நல்வயிரம்

நட்ட நடுநிசியில் – தெரியும்

நட்சத்திரங்களடி ….”

என்று பாடியவர்

அ) பாரதிதாசன்

ஆ) பாரதி

இ) கம்பர்

ஈ) இளங்கோவடிகள்

153. “எண்ணவலை பின்னும் மூளைச் சிலந்தி ” இதில் எவ்வகை உருவகம் இடம்பெற்றுள்ளது.

அ) வினை உருவகம்

ஆ) பயன் உருவகம்

இ) வடிவ உருவகம்

ஈ) உரு உருவகம்

154. “ஆகாசப் புயல்களாலும் அசைக்க முடியாத ஆகாசப் பூ… ”

இதில் எவ்வகை உருவகம் இடம்பெற்றுள்ளது.

அ) வினை உருவகம்

ஆ) பயன் உருவகம்

இ) வடிவ உருவகம்

ஈ) உரு உருவகம்

155. “நீல வயலின் நட்சத்திர மணிகள் … ”

இதில் எவ்வகை உருவகம் இடம்பெற்றுள்ளது.

அ) வினை உருவகம்

ஆ) பயன் உருவகம்

இ) வடிவ உருவகம்

ஈ) உரு உருவகம்

156. “ மலைக் கிழவியின் நரைத்த கூந்தல்…”

இதில் எவ்வகை உருவகம் இடம்பெற்றுள்ளது.

அ) வினை உருவகம்

ஆ) பயன் உருவகம்

இ) வடிவ உருவகம்

ஈ) உரு உருவகம்

157. கவிஞர் தான் கூறக்கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல், அகமாந்தரின் மன உணர்வுகளை கருப்பொருள்கள் மூலம் உவமைப்படுத்துவதை ____ என்பர்.

அ) உள்ளுறை உவமம்

ஆ) உவமேயம்

இ) உவம உருபு

ஈ) உருவகம்

158. அன்பிற்கு ஆட்படும் தலைவன் தலைவியரின் எண்ணங்களைச் சொற்களால் வெளிப்படுத்தாமல் நாகரிகமாக மறைத்துக் கூறுவதற்காக அமைத்துக் கொள்ளும் வடிவமாக பயன்படுவது

அ) உள்ளுறை உவமம்

ஆ) உவமேயம்

இ) உவம உருபு

ஈ) உருவகம்

159. இலக்கியங்களில் காணப்படும் கருப்பொருள்களின் காட்சி இயற்கைப் புனைந்துரைகளாக மட்டும் நின்றுவிடாமல், பாடல்களில் இடம்பெறும் மாந்தர்களின் உள்ளத்தெழும் உணர்வுகளின் குறிப்புப் பொருளாகவும் அமைவது ____ ஆகும்.

அ) உள்ளுறை உவமம்

ஆ) உவமேயம்

இ) உவம உருபு

ஈ) உருவகம்

160. உள்ளுறை குறித்த செய்திகளில் தவறானது எது?

1. வினை, பயன் போன்ற அடிப்படைகளில் தோன்றும்

2. குறியீடுகளைக் கொண்டு உருவாக்கப்படும்

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும்

இ) 2 மட்டும் சரி

ஈ) இரணடும் தவறு.

161. “ஈயல் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த

குறும்பி வல்சிப் பெருங்கை ஏற்றை

தூங்கு தோல் துதிய வள்ளுகிர் கதுவலின்

பாம்பு மதன் அழியும் பானாட் கங்குல் ”

– இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்

அ) புறநானூறு – ஒளவை

ஆ) அகநானூறு – கோப்பெருங் கிழார்

இ) அகநானூறு – பெருங்குன்றூர் கிழார்

ஈ) புறநானூறு – பெருங்குன்றூர்கிழார்.

162. இறைச்சி குறித்த கூற்றுகளில் தவறானது எது?

அ) உள்ளுறை போன்றே இறைச்சியும் அகப்பாடலில் வரும் உத்தி ஆகும்

ஆ) இது குறிப்புப் பொருளில் வரும்.

இ) இறுத்தல் என்றால் தாங்குதல் என்று பொருள்

ஈ) உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருளே இறைச்சி ஆகும்.

163. ” நடைபெரிது உடையர் நல்கலும் நல்குவர்

பிடிபசி களை இய பெருங்கை வேழம்”

_ இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்

அ) நற்றிணை

ஆ) குறுந்தொகை

இ) புறநானூறு

ஈ) அகநானூறு

164. கீழ்க்கண் கூற்றுகளில் கூற்றுகளில் தவறானது எது?

அ) உவமைக்குள் மற்றொரு பொருளை குறிப்பாக உணர்த்தினால் உள்ளுறை உவமை.

ஆ) குறிப்புப் பொருளுக்குள் மேலும் ஒரு குறிப்புப் பொருள் அமைந்திருக்குமானால் அதற்கு இறைச்சி என்று பெயர்

இ) உள்ளுறை உவமம் கவிதை பொருளோடு சேர்ந்து காணப்படுகிறது.

ஈ) இறைச்சி பொருள் கவிதை பொருளின் அகத்தே உவமேயமாய் நிற்கும்

165. “ நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று

அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

அம்ம நாணுதும் நும்மொடு நகையே ”

_ இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்

அ) நற்றிணை

ஆ) குறுந்தொகை

இ) புறநானூறு

ஈ) அகநானூறு

166. ” ஒட்டுப்போடாத ஆகாயம் போல –

இந்த உலகமும் ஒன்றேதான் ”

இக் கவிதைகளில் பயின்று வருவது

அ) உவமை

ஆ) உருவகம்

இ) உள்ளுறை

ஈ) இறைச்சி

167. கீழ்க்கண்வற்றுள் “இறைச்சி ” பற்றிய கூற்றைத் தேர்க

அ) குறியீடுகளைக் கொண்டு உருவாக்கப்படும்

ஆ) ஒப்பீட்டுச்செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும்

இ) வினை, பயன், வடிவம், நிறம் ஆகிய நான்கின் அடிப்படையில் தோன்றும்.

ஈ) உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருள்

168. ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள் ____.

அ) நூல்

ஆ) ஓலை

இ) எழுத்தாணி

ஈ) தாள்

169. ஜி.யு.போப் அவர்கள் தென்னிந்தியாவுக்கு வந்த ஆண்டு

அ) 1835

ஆ) 1836

இ) 1839

ஈ) 1832

170. ஜி.யு.போப் அவர்கள் முதன் முதலில் தமிழ் சொற்பொழிவாற்றிய இடம்

அ) தஞ்சாவூர்

ஆ) சாந்தோம்

இ) கொடைக்கானல்

ஈ) மதுரை

171. ஜி.யு.போப் அவர்கள் மொழிப்பெயர்த்த நூல்கள்

1. திருக்குறள் 2. திருவாசக ஆங்கில மொழிப்பெயர்ப்புகள்

அ) இரண்டும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) இரண்டும் தவறு

172. ஜி.யு.போப் அவர்கள் வாழ்ந்த காலம்

அ) 1820 – 1890

ஆ) 1820 – 1908

இ) 1809 – 1890

ஈ) 1809 – 1908

173. இலக்கணக் குறிப்புத் தருக – பிறந்தார்

அ) வினைத்தொகை

ஆ) வினையெச்சம்

இ) வினையாலணையும் பெயர்

ஈ) பெயரெச்சம்

174. பொருத்துக.

a. தொல்காப்பியம் – i) சங்க நூல்

b. திருக்குறள் – ii) பக்தி நூல்

c. புறநானூறு – iii) அற நூல்

d. திருவாசகம் – iv) இலக்கண நூல்

அ) iv iii I ii

ஆ) iii i ii iv

இ) ii i iii iv

ஈ) ii i iv iii

175. “மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு மனத்தை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. எத்துறையிலும் வெற்றி பெறுவது இதை பொறுத்துத்தான் இருக்கிறது” என்று கூறியவர்

அ) கால்டுவெல்

ஆ) ஜி. யு.போப்

இ) விவேகானந்தர்

ஈ) திரு.வி.க

176. “மண்ணுக்குள்ளே சில மூடர் – நல்ல

மாதர் அறிவைக் கெடுத்தார். ”

இவ்வரிகளை பாடியவர்

அ) பாரதி

ஆ) பாரதிதாசன்

இ) ஜி.யு.போப்

ஈ) கால்டுவெல்

177. பொருத்துக

a. உள்கட்டமைப்பு i) Infrastructure

b. செம்மொழி ii) classical language

c. மூதாதையர் iii) ancestor

d. மதிப்புக் கல்வி iv) value education

e. மன ஆற்றல் v) mental abilities

அ) i ii iii iv v

ஆ) iii i v iv ii

இ) ii v iii iv i

ஈ) ii i iv iii v

178. “இந்தியாவில் இருந்த வழிமுறையே இங்கிலாந்தில் அனைவருக்கும் கல்வியைக் கொண்டு வர வழிகாட்டி இருக்கிறது. ஆனால் அது இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக இருந்திருக்கிறது.” என்று கூறியவர்

அ) கால்டுவெல்

ஆ) ஜி. யு.போப்

இ) தரம் பால்

ஈ) திரு.வி.க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!