Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
General Tamil

12th Tamil Unit 1 Questions

12th Tamil Unit 1 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 12th Tamil Unit 1 Questions With Answers Uploaded Below.

1) இளந்தமிழே என்ற கவிதையை எழுதியவர் யார்?

A) பாரதியார்

B) சிற்பி பாலசுப்பிரமணியம்

C) தி.சு.நடராஜன்

D) அய்யப்ப மகாதேவன்

விளக்கம்: இளந்தமிழே என்ற கவிதையை எழுதியவர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆவார். இக்கவிதை நிலவுப்பூ என்னும் அவரது கவிதை நூலில் இருந்து தரப்பட்டுள்ளது.

2) சூரியோதயம் என்னும் இதழை நடத்தியவர் யார்?

A) பாரதிதாசன்

B) கண்ணதாசன்

C) பெரியார்

D) பாரதியார்

விளக்கம்: சூரியோதயம், கர்மயோகி என்ற இதழை நடத்தியவர் பாரதியார். இதில் துணையாசிரியராகப் பணியாற்றியவர் பரலி.சு.நெல்லையப்பர் ஆவார்.

3) உன்னை + அல்லால் என்னும் சொல் எந்த விதிப்படி உன்னையல்லால் என்று சேரும்?

A) இஈஐ வழி யவ்வும்

B) உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே

C) உயிர் வரின் உக்குரல் மெய்விட்டோடும்

D) A மற்றும் B

விளக்கம்: உன்னையல்லால் – உன்னை + அல்லால்.

விதி: இஈஐ வழி யவ்வும் – உன்னை + ய் + அல்லால்

விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – உன்னையல்லால்.

4) கூற்றுகளை ஆராய்க (ந, ண, ன, ர, ற, ல, ள, ழ ஆகிய எழுத்துக்கள் பற்றிய கூற்றுகளில்)

1. நகரம் மட்டுமே சொல்லின் தொடக்கமாக வரும்.

2. றகர மெய் சொல்லின் இறுதியில் வராது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: மேலுள்ள எட்டு எழுத்துக்களில் நகரம் மட்டுமே சொல்லின் தொடக்கமாக வரும். றகர மெய் சொல்லின் இறுதியில் வராது. மற்றவை சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும்

5) முத்துமுத்தாய் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

A) இரட்டைக் கிளவி

B) உவமைத்தொகை

C) உருவகம்

D) அடுக்குத்தொடர்

விளக்கம்: முத்துமுத்தாய் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு – அடுக்குத்தொடர் ஆகும்.

அடுக்குத்தொடர்: சொற்கள் இரண்டுக்கும் மேற்பட்ட முறை வரும். பிரித்தால் பொருள் தரும்.

இரட்டைக் கிளவி: சொற்கள் இரண்டும் முறை மட்டுமே வரும். பிரித்தால் பொருள் தராது.

6) ஒளிப்பறவை என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?

A) பாரதியார்

B) சிற்பி பாலசுப்ரமணியம்

C) அய்யப்ப மகாதேவன்

D) பாரதிதாசன்

விளக்கம்: சிற்பி பாலசுப்ரமணியத்தின்,

கவிதை நூல்கள்:

1. ஒளிப்பறவை

2. சர்ப்பயாகம்

3. சூரிய நிழல்

4. ஒரு கிராமத்து நதி

5. பூஜ்யங்களின் சங்கிலி

உரைநடை நூல்கள்:

1. மலையாளக் கவிதை

2. அலையும் சுவடும்

7) கூற்றுகளை ஆராய்க.

1. ஞ், ந், வ் என்னும் எழுத்துகளில் முடியக்கூடிய சொற்கள் அரிதாக உள்ளன.

2. ய, ர, ழ ஒற்றுகள் மட்டுமே ஈரொற்றாய் வரும். மற்றவை அளப்பெடுத்தால் மட்டுமே வரும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஞ், ந், வ் என்னும் எழுத்துகளில் முடியக்கூடிய சொற்கள் அரிதாக உள்ளன. உரிஞ், வெரிந், பொருந், தெவ்

2. ய, ர, ழ ஒற்றுகள் மட்டுமே ஈரொற்றாய் வரும். மற்றவை அளப்பெடுத்தால் மட்டுமே வரும். பாய்ச்சு, பார்க்கும், வாழ்க்கை.

8) அந்நில மருங்கின் அறமுதலாகிய

மும்முதற் பொருட்கும் உரிய என்ப – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) அகத்தியம்

B) நன்னூல்

C) தொல்காப்பியம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: அந்நில மருங்கின் அறமுதலாகிய

மும்முதற் பொருட்கும் உரிய என்ப – தொல்காப்பியம்.

9) நெல்லைத்தென்றல் என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?

A) பாரதிதாசன்

B) பரலி.சு.நெல்லையப்பர்

C) வ.உ.சி

D) பாரதியார்

விளக்கம்: நெல்லைத் தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி – பரலி.சு.நெல்லையப்பர்

10) செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்

செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம் – இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) நிலவுப்பூ

B) ஒரு கிராமத்து நதி

C) பூஜ்யங்களின் சங்கிலி

D) ஒளிப்பறவை

விளக்கம்: செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்

செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம் என்ற வரிகள் இடம்பெற்ற நூல் இளந்தமிழே என்னும் கவிதை நூலாகும். இந்நூல் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து தரப்பட்டுள்ளது. இதனை எழுதியவர் சிற்பி பாலசுப்ரமணியம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!