General Tamil

6th Tamil Unit 9 Questions

6th Tamil Unit 9 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 6th Tamil Unit 9 Questions With Answers Uploaded Below.

1. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. இரக்கம் என்பது தலைசிறந்த பண்பு. மனிதரிடம் மட்டுமன்று, மற்ற எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொள்ள வேண்டும்.

II. பிற உயிர்களைத் தம்முயிர் போல் எண்ணிக் காக்க வேண்டும். அதுவே சான்றோர் போற்றும் உயிர் இரக்கம் ஆகும்.

III. அவ்விரக்கமே மனித குலத்தை வாழ வைக்கிறது. உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் புத்தர்.

A) I, II, III அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

2. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. அரச வாழ்வைத் துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு வந்தவர் புத்தர்பிரான்.

II. பிம்பிசார மன்னனின் யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன.

III. அவற்றின் நடுவில் அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியைப் புத்தர் தம் தோளில் சுமந்து சென்றார். யாகசாலையை அடைந்தார்.

IV. மன்னனுக்கு அறவுரை கூறினார். நாடெங்கும் உயிர்க்கொலையைத் தடுத்து நிறுத்தினார்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

3. நின்றவர் கண்டு நடுங்கினாரே – ஐயன் நேரிலே நிற்கவும் அஞ்சினாரே; துன்று கருணை நிறைந்த வள்ளல் – அங்கு சொன்ன மொழிகளைக் கேளும் ஐயா! வாழும் உயிரை வாங்கிவிடல் – இந்த மண்ணில் எவர்க்கும் எளிதாகும்; வீழும் உடலை எழுப்புதலோ – ஒரு வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா! – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தொடுவானம், வாணிதாசன்

B) ஆசிய ஜோதி, கவிமணி தேசிக விநாயகனார்

C) மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

D) பாரதி அறுபத்தாறு, பாரதியார்

4. யாரும் விரும்புவது இன்னுயிராம்; – அவர் என்றுமே காப்பதும் அன்னதேயாம்; பாரில் எறும்பும் உயிர்பிழைக்கப் – படும் பாடு முழுதும் அறிந்திலீரோ? நேரிய உள்ளம் இரங்கிடுமேல் – இந்த நீள்நிலம் முற்றுமே ஆண்டிடலாம்; பாரினில் மாரி பொழிந்திடவே – வயல் பக்குவ மாவது அறிந்திலீரோ? – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தொடுவானம், வாணிதாசன்

B) ஆசிய ஜோதி, கவிமணி தேசிக விநாயகனார்

C) மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

D) பாரதி அறுபத்தாறு, பாரதியார்

5. காட்டும் கருணை உடையவரே – என்றும் கண்ணிய வாழ்வை உடையவராம்; வாட்டும் உலகில் வருந்திடுவார்- இந்த மர்மம் அறியாத மூடரையா! காடு மலையெலாம் மேய்ந்துவந்து – ஆடுதன் கன்று வருந்திடப் பாலையெல்லாம் தேடிஉம் மக்களை ஊட்டுவதும் – ஒரு தீய செயலென எண்ணினீரோ? – என்ற பாடலை கவிமணி தேசிக விநாயகனார் எந்த நூலைத் தழுவி எழுதினார்?

A) லீவ்ஸ் ஆஃப் கிராஸ், வால்ட் விட்மன்

B) த ட்ரேஜடி ஆஃப் மக்பெத், வில்லியம் சேக்சுபியர்

C) லைட் ஆஃப் ஆசியா, எட்வின் அர்னால்டு

D) இவற்றில் ஏதுமில்லை

6. அம்புவி மீதில்இவ் ஆடுகளும் – உம்மை அண்டிப் பிழைக்கும் உயிரலவோ? நம்பி இருப்பவர் கும்பி எரிந்திடில் நன்மை உமக்கு வருமோ ஐயா? ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் – ஏழை ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ? தீயவும் நல்லவும் செய்தவரை – விட்டுச் செல்வது ஒருநாளும் இல்லைஐயா! – என்ற பாடலை கவிமணி தேசிக விநாயகனார் எந்த நூலைத் தழுவி எழுதினார்?

A) லீவ்ஸ் ஆஃப் கிராஸ், வால்ட் விட்மன்

B) த ட்ரேஜடி ஆஃப் மக்பெத், வில்லியம் சேக்சுபியர்

C) லைட் ஆஃப் ஆசியா, எட்வின் அர்னால்டு

D) இவற்றில் ஏதுமில்லை

7. ஆதலால் தீவினை செய்யவேண்டா – ஏழை ஆட்டின் உயிரையும் வாங்கவேண்டா; பூதலந் தன்னை நரகம்அது ஆக்கிடும் புத்தியை விட்டுப் பிழையும்ஐயா! – ஆசிய ஜோதி என்னும் இந்நூலின் ஆசிரியர் கவிமணி தேசிக விநாயகனார். ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி இந்நூல் எழுதப்பட்டது. இந்நூல் _____________ அவர்களின் வரலாற்றைக் கூறுகிறது.

A) சமண முனிவர்

B) புத்தர்

C) சிவன்

D) இயேசு கிறிஸ்து

8. சொல்லும் பொருளும் – சரியாகப் பொருந்தியது எது?

I. அஞ்சினர் – பயந்தனர்

II. வீழும் – விழும்

III. நீள்நிலம் – பரந்த உலகம்

IV. முற்றும் – முழுவதும்

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

9. சொல்லும் பொருளும் – சரியாகப் பொருந்தியது எது?

I. மாரி – மழை

II. கும்பி – வயிறு

III. பூதலம் – பூமி

IV. பார் – உலகம்

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

10. வாழ்கின்ற உயிர்களை அழிப்பது இந்த உலகத்தில் எல்லார்க்கும் எளிய செயல். ஆனால், இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல். எல்லாரும் தம் உயிரைப் பெரிதாக மதித்துப் பாதுகாக்கின்றனர். எறும்பு கூடத் தன் உயிரைக் காத்துக் கொள்ளப் பாடுபடுவதை அறியாதவர் உண்டோ? – என்று கூறியவர் யார்?

A) சமணத் துறவி

B) புத்தர்

C) பாண்டிய மன்னன்

D) அசோகர்

1 2 3 4 5 6Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!