Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
General Tamil

7th Tamil Unit 6 Questions

7th Tamil Unit 6 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 7th Tamil Unit 6 Questions With Answers Uploaded Below.

1) “ஒரு வேண்டுகோள்” என்னும் தலைப்பின் கீழ் இடம்பெற்ற பாடலின் ஆசிரியர் யார்?

A) நா. பிச்சமூர்த்தி

B) தேனரசன்

C) கபிலன்

D) அகிலன்

விளக்கம்: “கலையுலகப் பிரும்மாக்களே மண்ணின் வனப்புக்குப்_______” எனத் தொடங்கும் “ஒரு வேண்டுகோள்” என்னும் பாடலின் ஆசிரியர் தேனரசன் ஆவார்.

2) பொருத்துக.

அ. பிருமாக்கள் – 1. குழந்தை

ஆ. நெடி – 2. அழகு

இ. மழலை – 3. நாற்றம்

ஈ. வனப்பு – 4. படைப்பாளர்கள்

A) 4, 3, 1, 2

B) 4, 3, 2, 1

C) 3, 4, 1, 2

D) 3, 2, 1, 4

விளக்கம்: பிருமாக்கள் – படைப்பாளர்கள்

நெடி – நாற்றம்

மழலை – குழந்தை

வனப்பு – அழகு

3) தொழிலுடன் அதில் வீச வேண்டிய மணத்தை தேனரசன் பாடலின் வழி பொருத்துக.

தொழில் வீச வேண்டிய மணம்

அ. சிலை செதுக்கினால் – 1. பால் மணம்

ஆ. உழவரின் உருவ வார்ப்பு – 2. வியர்வை நாற்றம்

இ. சிறு குழந்தையின் சித்திரம் – 3. ஈரமண்ணின் மணம்

A) 3, 2, 1

B) 1, 2, 3

C) 2, 3, 1

D) 2, 1, 3

விளக்கம்: சிலை செதுக்கினால் – அதில் வியர்வை மணம் வீச வேண்டும்

உழவரின் உருவ வார்ப்பு – அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்

சிறு குழந்தையின் சித்திரம் – பால் மணம் கமழ வேண்டும்

4) பொருத்துக.

அ. ஆல்ப்ஸ் – 1. காடு

ஆ. அட்லாண்டிக் – 2. பெருங்கடல்

இ. அமேசான் – 3. மலைச் சித்திரம்

A) 1, 2, 3

B) 2, 3, 1

C) 3, 1, 2

D) 3, 2, 1

விளக்கம்: ஆல்ப்ஸ் – மலைச்சிகரம்

அட்லாண்டிக் – பெருங்கடல்

அமேசான் – காடு

5) யாருடைய கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்?

A) நா. பிச்சமூர்த்தி

B) தேனாண்டாள்

C) ஒளவையார்

D) தேனரசன்

விளக்கம்: தேனரசன் தமிழராசிரியராக பணியாற்றியவர் இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்

6) தேனரசன் கீழ்க்கண்ட எந்தப் பத்திரிக்கையில் கவிதைகள் எழுதவில்லை?

A) வாணம்பாடி

B) குயில்

C) தென்றல்

D) ஆனந்த விகடன்

விளக்கம்: தேனரசன் வாணம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். ஆனந்த விகடனில் எழுதவில்லை.

7) “ஒரு வேண்டுகோள்” என்ற தேனரசனின் பாடல் அவரது எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

A) மண்வாசல்

B) வெள்ளை ரோஜா

C) பெய்து பழகிய மேகம்

D) எதுவுமில்லை

விளக்கம்: “ஒரு வேண்டுகோள்” என்ற தேனரசனின் பாடல் அவரது “பெய்து பழகிய மேகம்” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

8) மயிலும் மானும் வனத்திற்கு________தருகின்றன.

A) களைப்பு

B) வனப்பு

C) மலைப்பு

D) உழைப்பு

விளக்கம்: மயிலும், மானும் வனத்திறகு அழகு தருகின்றன. வனப்பு – அழகு

9) மிளகாய் வற்றலின்_________தும்மலை வரவழைக்கும்

A) நெடி

B) காட்சி

C) மணம்

D) நசை

விளக்கம்: மிளகாய் வற்றலின் நெடி தும்மலை வரவழைக்கும். நெடி என்றால் நாற்றம் என்று பொருள்.

10) அன்னை தான் பெற்ற________சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறாள்?

A) தங்கையின்

B) தம்பியின்

C) மழலையின்

D) கணவனின்

விளக்கம்: அன்னை தான் பெற்ற மழலையின் (குழந்தை) சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்

11) வனப்பில்லை – பிரித்தெழுதுக.

A) வனம் + இல்லை

B) வனப்பு + இல்லை

C) வனப் + யில்லை

D) வனம் + யில்லை

விளக்கம்: வனப்பில்லை – வனப்பு + இல்லை எனப் பிரியும்

12) வார்ப்பு + எனில் சேர்த்தெழுதுக

A) வார்ப்எனில்

B) வார்ப்பினில்

C) வார்ப்பெனில்

D) வார்ப்புஎனில்

விளக்கம்: வார்ப்பு + எனில் – வாரப்பெனில் எனப் புணரும்

13) ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படுவது எது?

A) திருக்குறள்

B) இல்பொருள் உவமையணி

C) இரட்டுற மொழிதல்

D) B மற்றும் C

விளக்கம்: ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும் படி பாடப்படுவது இரட்டுற மொழிதல் ஆகும். இதனைச் “சிலேடை” என்றும் கூறுவர்.

14) சிலேடைப் பாடுவதில் வல்லவர் யார்?

A) இராமச்சந்திரக் கவிராயர்

B) கபிலர்

C) நக்கீரர்

D) காளமேகப்புலவர்

விளக்கம்: சிலேடை அல்லது இரட்டுறமொழிதல் பாடலைப் பாடுவதில் வல்லவர் கவி காளமேகப்புலவர்

15) “கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்” எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?

A) இராமச்சந்திர கவிராயர்

B) கபிலர்

C) நக்கீரர்

D) காளமேகப்புலவர்

விளக்கம்: “கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்

வெட்டி மறிக்கின்ற மேன்மையால் – முட்டப்போய்

மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன் ஏறப் பரியாகுமே”- காளமேகப் புவலர்

16) பெருத்துக

அ. வண்கீரை – 1. முழுதாகச் சென்று

ஆ. பரி – 2. தடுத்தல்

இ. முட்டப்போய் – 3. வளமான கீரை

ஈ. மறித்தல் – 4. குதிரை

A) 3, 4, 1, 2

B) 3, 4, 2, 1

C) 1, 3, 4, 2

D) 4, 3, 2, 1

விளக்கம்: வண்கீரை – வளமான கீரை

பரி – குதிரை

முட்டப்போய் – முழுதாகச் சென்று

மறித்தல் – தடுத்தல்

17) காளமேகப் புலவர் இயற்பெயர் என்ன?

A) வரதன்

B) முடியரசன்

C) கவியரசன்

D) வரதராசன்

விளக்கம்: காளமேகப் புலவரின் இயற்பெயர் வரதன். மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப் புலவர் என்று அழைக்கப்படுகிறார்.

18) ‘திருவானக்கா உலா’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

A) குமரகுருபரர்

B) கபிலர்

C) கண்ணதாசன்

D) காளமேகப்புலவர்

விளக்கம்: காளமேகப்புலவரின் நூல்கள் – திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல்

19) “கட்டி அடிக்கையால்….” எனத் தொடங்;கும் பாடல் காளமேகப் புலவரின் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

A) சரசுவதி மாலை

B) சித்திர மடல்

C) தனிப்பாடல் திரட்டு

D) திருவானைக்கா உலா

விளக்கம்: இப்பாடல் காளமேகப் புலவரின் “தனிப்பாடல் திரட்டு” என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது. இவரது தனிப்பாடல்கள் அனைத்தும், தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன.

20) பொருந்தாத ஓசை உடைய சொல்லைக் கண்டுபிடி.

A) பாய்கையில்

B) மேன்மையால்

C) திரும்புகையில்

D) அடிக்கையில்

விளக்கம்: பாய்கையால், மேன்மையால், அடிக்கையால் ஆகியவை ‘ஆல்’ என்னும் ஓசையில் முடிகிறது. ஆனால் திரும்புகையில் என்னும் சொல்லில் “இல்” ஒசையில் முடிகிறது.

21) வண்கீரை பிரித்தெழுதுக

A) வளம் + கீரை

B) வண்ணம் + கீரை

C) வளம் + கீரை

D) வண்மை + கீரை

விளக்கம்: வண்கீரை என்பது வண்மை + கீரை எனப் பிரியும்.

22) கட்டி + அடித்தல் – சேர்த்தெழுதுக.

A) கட்டியிடித்தல்

B) கட்டியடித்தல்

C) கட்டிஅடித்தல்

D) கட்டுஅடித்தல்

விளக்கம்: கட்டி + அடித்தல் – கட்டியடித்தல் எனப் பிரியும்

23) ஆயகலைகள் எத்தனை?

A) 62

B) 63

C) 64

D) 72

விளக்கம்: ஆயகலைகள் – 64

நாயன்மார்கள் – 63 பேர்

24) காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் எதற்கு உண்டு?

A) இசை

B) நடனம்

C) ஓவியம்

D) அனைத்தும்

விளக்கம்: காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் ஓவியத்திற்கு உண்டு. ஒரு கருத்தைப் பேச்சாலும் எழுத்தாலும் வெளிப்படுத்துவதைக் காட்டிலும் ஓர் ஒவியர் மிக நுட்மாக புரிய வைத்திட முடியும். அதனால்தான் ஓவியத்தை நுண்கலைகளுள் முதன்மையான ஒன்றாகக் கருதுகின்றனர்.

25) மனிதன் முதன் முதலில் எவ்வகை ஓவியத்தை வரைந்தான்?

A) குகை ஓவியம்

B) சுவர் ஓவியம்

C) துணி ஓவியம்

D) செப்பேட்டு ஓவியம்

விளக்கம்: பழங்கால் மனிதர்கள் குகைகளில் வாழ்ந்தனர். அங்கு தான் முதன் முதலில் ஓவியங்கள் வரைந்தனர்.

26) எவை பெரும்பாலும் கோட்டோவியமாக இருக்கும்?

A) குகை ஓவியம்

B) சுவர் ஓவியம்

C) துணி ஓவியம்

D) செப்பேட்டு ஓவியம்

விளக்கம்: குகை ஓவியம் பெரும்பாலும் கோட்டோவியமாக இருக்கும். மண் மற்றும் கல் துகள்களைக் கொண்டு இதற்கு வண்ணம் தீட்டினர்.

27) தஞ்சைப் பெரியகோவிலில் எந்த வகை ஓவியத்தை ஏராளமாகக் காண முடியும்?

A) குகை ஓவியம்

B) சுவர் ஓவியம்

C) துணி ஓவியம்

D) ஓலைச்சுவடி ஓவியம்

விளக்கம்: தஞ்சைப் பெரியக் கோவிலில் சுவர் ஓவியங்கள் ஏராளமாகக் காண முடியும். மேலும், சுவர்களிலும், மேற்கூரைகளிலும் சுவர் ஓவியர்களைக் காணலாம்.

28) யாருடைய வாழ்க்கை நிகழ்வுகள் சுவர் ஓவியமாக தஞ்சை பெரிய கோவிலில் வரையப்பட்டிருக்கிறது?

A) அப்பர்

B) சுந்தரர்

C) சம்பந்தர்

D) நாவுக்கரசர்

விளக்கம்: நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் வாழ்க்கை நிகழ்வுகளாக சுவர் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும்.

29) துணி ஓவியம் வரையப்பட்ட செய்தியைக் கூறும் நூல் எது?

A) மணிமேகலை

B) சிலப்பதிகாரம்

C) குண்டகேசி

D) சீவக சிந்தாமணி

விளக்கம்: சீவகசிந்தாமணிக் காப்பியத்தில் குணமாலை என்னும் தலைவி யானையைக் கண்டு அஞ்சிய காட்சியைக் சீவகன் துணியில் வரைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

30) “கலம்காரி ஓவியங்கள்” எனப்படுபவை எவை?

A) சுவர் ஓவியம்

B) குகை ஓவியம்

C) துணி ஓவியம்

D) ஒலைச்சுவடி ஓவியம்

விளக்கம்: கலம்காரி ஓவியங்கள் என்னும் பெயரில் தமிழகத்திலும், ஆந்திராவிலும் ஓவியர்கள் “துணி ஓவியங்களை” வரைந்து வருகின்றனர்.

31) ஓவியம் வரையப் பயன்படும் துணி எவ்வாறு அழைக்கப்படும்?

A) எழினி

B) திரைச்சீலை

C) கிழி

D) அனைத்தும்

விளக்கம்: எழினி, திரைச்சீலை, கிழி, படாம் எனப் பலப் பெயர்களில் ஓவியம் வரையப் பயன்படும் துணி அழைக்கப்படுகிறது.

32) “புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்” எனக் கூறும் நூல் எது?

A) மணிமேகலை

B) சிலப்பதிகாரம்

C) நெடுநல்வாடை

D) பட்டினப்பாலை

விளக்கம்: “புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்” என நெடுநல்வாடை உரைக்கிறது.

33) “புனையா ஒவியம் புறம் போந்தன்ன” எனக் கூறும் நூல் எது?

A) மணிமேகலை

B) சிலப்பதிகாரம்

C) நெடுநல்வாடை

D) பட்டினப்பாலை

விளக்கம்: “புனையா ஓவியம் புறம் போந்தன்ன” எனக் கூறும் நூல் மணிமேகலை.

34) எவ்வகை ஓவியங்கள் பெரும்பாலம் இதிகாசம் மற்றும் புராணக் காட்சிகளாகவே இருக்கிறது?

A) குகை ஓவியம்

B) சுவரோவியம்

C) துணி ஓவியம்

D) ஓலைச் சுவடி ஓவியம்

விளக்கம்: ஓலைச்சுவடி ஓவியம் பெரும்பாலும் இதிகாசம் மற்றும் புராணக் காட்சிகளாகவே இருக்கிறது.

35) ஓலைச்சுவடி ஓவியத்தை எங்கு காணலாம்?

A) சரஸ்வதி மகால் நூலகம்

B) தஞ்சை பெரிய கோவில்

C) சித்தன்ன வாசல்

D) அனைத்தும்

விளக்கம்: ஓலைச்சுவடி மீது, எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும், வண்ணப்பூச்சு ஓவியமாகவும் இவை வரையப்படும். தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் இவற்றைக் காணலாம்.

36) பொதுவாக நீர்நிலைகள், செடிகொடிகள், பறவைகள், விலங்குள், குறியீடுகள், போன்றவையாக அமையும் ஓவியங்கள் எவை?

A) ஒலைச்சுவடி ஓவியம்

B) செப்பேட்டு ஓவியம்

C) குகை ஓவியம்

D) துணி ஓவியம்

விளக்கம்: முற்காலத்தில் மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் செப்பேடுகளில் பொறிப்பது வழக்கம். அதைப்போல உளிக் கொண்டு வரைகோடுகளாக இவற்றை வரைந்தனர். இவை. பொதுவாக நீர்நிலைகள், செடி கொடிகள், பறவைகள், விலங்குள் குறியீடுகள் போன்றவையாகக் காணலாம்.

37) “இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்

துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்” எனக் கூறும் நூல் எது?

A) மணிமேகலை

B) நெடுநல்வாடை

C) பரிபாடல்

D) பத்துப்பாட்டு

விளக்கம்: ஓவிய மண்டபத்தில் பல வகை ஒவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர் என்ற செய்தியை உணர்த்தும் இப்பாடல் வரிகள் பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.

38) தந்த ஓவியம் எந்த மாநிலத்தில் அதிகமாகக் காண முடியும்?

A) தமிழ்நாடு

B) கேரளா

C) ஆந்திரா

D) கோவா

விளக்கம்: வயது முதிர்ந்த இறந்த யானையின் தந்தங்களின் மது பலவகை நீர் வண்ணங்களைப் பயன்படுத்தி அழகான ஓவியங்களாக வரைந்தனர். இவற்றை கேரளா மாநிலத்தில் அதிகமாகக் காண முடியும்.

39) கண்ணாடி ஓவியம் வரையும் ஓவியர்கள் எங்கு மிகுதியாக உள்ளனர்?

A) தஞ்சாவூர்

B) புதுக்கோட்டை

C) வேலூர்

D) கேரளா

விளக்கம்: பலவகையான உருவங்கள் இயற்கைக் காட்சிகள் போன்றவையாக கண்ணாடி ஓவியங்கள் வரையப்படுகின்றன. இந்த ஓவியங்களை உருவாக்கும் ஒவியர்கள் தஞ்சாவூரில் மிகுதியாக உள்ளனர்.

40) தற்காலத்தில் பரவலாக பயன்பாட்டில் இருக்கும் ஓவியம் எது?

A) கண்ணாடி ஓவியம்

B) கலம்காரி ஓவியம்

C) தந்த ஓவியம்

D) தாள் ஒவியம்

விளக்கம்: தற்காலத்தில் பரவலான பயன்பாட்டில் இருக்கும் ஓவியம் தாள் ஓவியம், கோட்டோவியம், வண்ண ஒவியம், நவீன ஓவியம் எனப் பலவகையான வடிவங்களில் காணப்படுகின்றன.

41) தாள் ஒவியங்கள் எதைப் பயன்படுத்தி வரையப்படுகிறது?

A) கரிக்கோல்

B) நீர் வண்ணம்

C) எண்ணெய் வண்ணம்

D) அனைத்தும்

விளக்கம்: கரிக்கோல், நீர்வண்ணம், எண்ணெய் வண்ணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தாள் ஒவியங்கள் வரையப்படுகிறது.

42) அரசியல் கருத்துக்களை எளிமையாக விளக்க பயன்படும் ஒவியம் எது?

A) கோட்டோவியம்

B) கருத்துப்பட ஓவியம்

C) எண்ணெய் ஓவியம்

D) A மற்றும் B

விளக்கம்: அரசியல் கருத்துக்களை எளிமையாக விளக்குவதற்கு கருத்துப்பட ஓவியம் பயன்படுகிறது.

43) கருத்துப்பட ஓவியத்தை முதன் முதலில் தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) அண்ணா

D) பெரியார்

விளக்கம்: கருத்துப்பட ஓவியத்தை முதன்முதலில் தமிழில் அறிமுகப்படுத்தியர் பாரதியார் தான்.

44) கருத்துப்பட ஓவியத்தை எந்த இதழில் பாரதி அறிமுப்படுத்தினார்?

A) இந்தியா

B) ஆனந்த விகடன்

C) விஜயா

D) காமன் வீல்

விளக்கம்: கருத்துப்பட ஓவியத்தை “இந்தியா” என்ற இதழில் முதன்முதலில் தமிழில் பாரதியார் அறிமுகம் செய்தார்.

45) மனித உருவங்களை விந்தையான தோற்றத்தில் நகைச்சுவை தோன்றும்படி வரைவதை எவ்வாறு அழைப்பர்?

A) குகை ஓவியம்

B) கோட்டோவியம்

C) தந்த ஓவியம்

D) கேலிச்சித்திரம்

விளக்கம்: மனித உருவங்களை விந்தையான தோற்றத்தில் நகைச்சுவை தோன்றும்படி வரைவதையே கேலிச்சித்திரம் என்பர்.

46) ஓவியக் கலையின் மிகப் பழமையான வடிவம் எது?

A) கேலிச் சித்திரம்

B) எண்ணெய் ஓவியம்

C) நீர் ஓவியம்

D) நவீன ஓவியம்

விளக்கம்: புதுமையான பார்வையில் புதிய கருத்துக்கள் வெளிப்படுமாறு வரையப்படுபவையே நவீன ஓவியங்கள். பார்வையாளர்களின் மனப்பான்மைக்கு ஏற்பப் பொருள்கொள்ளும் வகையில் கோடுகளாகவும், கிறுக்கல்களாகவும் வரையப்படுகிறது. பல வண்ணக் கலவைகளைக் கொண்டும் இவை வரையப்படுகின்றன.

47) மாறுட்டதைத் தேர்க.

A) ஓவு

B) ஒவம்

C) படம்

D) ஓவமாக்கள்

விளக்கம்: ஓவியத்தின் வேறு பெயர்கள் – ஓவு, ஓவியம், ஓவம். சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி, ஓவமாக்கள் என்போர் ஓவியர்கள்.

48) எழுதொழில் அம்பலம் என்பது என்ன?

A) ஓவியம்

B) ஓவியர்கள்

C) ஒவியக் கூடம்

D) அனைத்தும்

விளக்கம்: எழுதொழில் அம்பலம் என்பது ஓவியக் கூடத்தைக் குறிக்கும். இதேபோல, எழுத்துநிலை மண்டபம், சித்தி அம்பலம், சித்திரக்கூடம், சித்திமாடம், சித்திர மண்டபம், சித்திர சபை எனவும் வழங்கப்படும்.

49) மாறுபட்டதை தேர்க

A) கண்ணுள் வினைஞர்

B) ஓவியப் புலவர்

C) கிளவி வல்லோன்

D) சித்திர மாடம்

விளக்கம்: சித்திரமாடம் என்பது ஓவியக் கூடத்தைக் குறிக்கும். ஓவியரைக் குறிப்பவை – கண்ணுள் வினைஞர், ஓவியப் புலவர். ஓவமாக்கள், கிளவி வல்லோன், சித்திரக்காரர், வித்தகர்.

50) “பசார் பெயிண்டிங்” எனப்படுவது எது?

A) தந்த ஓவியம்

B) நீர் ஓவியம்

C) எண்ணெய் ஓவியம்

D) நாட்காட்டி ஓவியம்

விளக்கம்: நாட்காட்டி ஓவியம் பசார் பெயிண்டிங் என்றும் அழைக்கப்படும். நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளுள் ஒருவர் கொண்டை ராஜு

51) ஐரோப்பிய கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் யார்?

A) இராஜா ரவிவர்மா

B) பிக்காசா

C) மகேந்திரவர்மா

D) மாமல்லன்

விளக்கம்: இவரது ஓவிய முறைகளே பிற்காலத்தில் நாட்காட்டிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டன. அதுவே நாட்காட்டிய ஓவியமாகும்.

52) குகை ஒவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று எது?

A) மண்துகள்

B) நீர் வண்ணம்

C) எண்ணெய் வண்ணம்

D) கரிக்கோள்

விளக்கம்: குகை ஓவியங்கள் பெரும்பாலும் கோட்டோவியமாகவே இருக்கும். மண் மற்றும் கல் துகள்களைக் கொண்ட இவைகளுக்கு வண்ணம் தீட்டினர்.

53) கோட்டோவியம் – பிரித்தெழுதுக

A) கோடு + ஓவியம்

B) கோட்டு + ஓவியம்

C) கோட் + ஓவியம்

D) கோடி + ஓவியம்

விளக்கம்: கோட்டோவியம் – கோட்டு + ஒவியம் எனப் பிரியும்.

54) செப்பேடு பிரித்தெழுதுக

A) செப்பு + ஈடு

B) செப்பு + ஓடு

C) செப்பபு + ஏடு

D) செப்பு + பேடு

விளக்கம்: செப்பேடு-செப்பு + எடு எனப் பிரியும்

55) எழுத்து + ஆணி சேர்த்தெழுதுக

A) எழுத்துஆணி

B) எழுத்தாணி

C) எழுத்துதாணி

D) எழுதாணி

விளக்கம்: எழுத்து + ஆணி – எழுத்தாணி எனப் புணரும்

56) மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் எதன் மீது பொறித்துப் பாதுகாத்தனர்?

A) தந்தம்

B) கண்ணாடி

C) செப்பேடு

D) தாள்

விளக்கம்: முற்காலத்தில் மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் செப்பேடுகளில் பொறிப்பது வழக்கம்.

57) தஞ்சை சரசுவதி மகால் நூலகம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருகிறது?

A) கி.பி. 1122

B) கி.மு. 1122

C) கி.பி. 1010

D) கி.மு. 1010

விளக்கம்: தஞ்சை சரசுவதி மகால் நூலகம் கி.பி (பொ.ஆ) 1122 முதல் இயங்கி வருவதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. இங்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச் சுவடிகளும் கையெழுத்துப் படிகளும் உள்ளன.

இங்கு தலைசிறந்த ஓவியம் மற்றும் தொன்மையான இசைக் கருவிகளும் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன.

58) தமிழப் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?

A) சென்னை

B) மதுரை

C) ஊட்டி

D) தஞ்சாவூர்

விளக்கம்: தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூரில் செம்மொழியாகிய தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டது.

59) தமிழ்ப் பல்கலைக்கழம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?

A) கி.பி. 1122

B) கி.பி. 1010

C) கி.பி.1981

D) கி.பி. 1991

விளக்கம்: தமிழ்ப் பல்கலைகக் கழகம் கி.பி(பொ.ஆ) 1981-ல் தமிழக அரசால் தஞ்சாவூரில் தோற்றுவிக்கப்பட்டது.

60) தமிழ்ப் பல்கலைகழகத்தை வானத்திலிருந்து பார்க்கும் போது_________எனத் தெரியும் வகையில் இதன் கட்டட அமைப்பு உள்ளது?

A) இந்தியா

B) தமிழ்

C) தமிழ்நாடு

D) மதராஸ்

விளக்கம்: 1000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட தமிழ் பல்கலைக்கழகம், வானத்திலிருந்து பார்க்கும் போது தமிழ்நாடு எனத் தெரியும் வகையில் இதன் கட்டட அமைப்பு உள்ளது.

61) இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராய வேண்டும் என்பது எதன் நோக்கம்?

A) பனாரஸ் பல்கலைக் கழகம்

B) தமிழ்ப் பல்கலைக்கழகம்

C) நாளந்தா பல்கலைக்கழம்

D) பெரியார் பல்கலைக்கழகம்

விளக்கம்: இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் விரிவாகவும் ஆழகமாகவும் ஆராய வேண்டும் என்பது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும்.

62) தமிழ்ப் பல்லைகக்கழத்தில் எத்தனை புலங்களும், துறைகளும் உள்ளன?

A) 5, 25

B) 25, 5

C) 20, 5

D) 5, 20

விளக்கம்: தமிழ்ப பல்கலைக்கழகத்தின் கலைப்புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்ப் புலம், மொழிப்புலம், அறிவியல் புலம் என 5 புலங்களும், 25 துறைகளும் உள்ளன.

63) இந்திய ஆட்சிப் பணி பயிற்சியாளர்களுக்கு தமிழ்மொழிப் பயிற்சியை எது வழங்குகிறது?

A) நாளந்தா பலகலைக்கழகம்

B) பெரியார் பல்கலைக்கழகம்

C) பனாரஸ் பல்கலைக்கழகம்

D) தமிழ்ப் பல்கலைக்கழகம்

விளக்கம்: தமிழ்ப் பல்கலைக்கழகம், இந்திய ஆட்சிப் பணி பயிற்சியாளர்களுக்கு தமிழ்மொழிப் பயிற்சியை வழங்குகிறது. மேலும், சித்த மருத்துவத்துறை மூலம் பொதுமக்களுக்குப் பயனுள்ள வகையில் மருத்துவத் தொண்டு செய்து வருகிறது. இங்கு மிகப்பெரிய நூலகமும் உள்ளது.

64) உ.வே.சா. நூலகம் எப்போது தொடங்கப்பட்டது?

A) 1981

B) 1991

C) 1942

D) 1938

விளக்கம்: உ.வே.சா நூலகம் கி.பி.1942-ல் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்நூலகத்தில் தமிழ், தெலுங்கு, வடமொழி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் உள்ளன.

65) உ.வே.சா நூலகத்தில் எத்தனை ஓலைச்சுவடிகள் உள்ளன?

A) 2128

B) 2134

C) 2088

D) 2991

விளக்கம்: உ.வே.சா நூலகத்தில் 2128 ஓலைச்சுவடிகளும் 2941 தமிழ் நூல்களும் உள்ளன.

66) கீழ்த்திசை நூலகம் எப்போது தொடங்கப்பட்டது?

A) 1212

B) 1981

C) 1942

D) 1869

விளக்கம்: சென்னையில் உள்ள கீழ்த்திசை நூலகம் கி.பி(பொ.ஆ) 1869-ல் தொடங்கபட்டது. இங்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச்சுவடிகள் உள்ளன.

67) கீழ்த்திசை நூலகம் தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எந்த தளத்தில் இயங்கி வருகின்றது?

A) 4

B) 5

C) 6

D) 7

விளக்கம்: கணிதம், வானியல், மருத்துவம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறை நூல்களும் உள்ள சென்னை கீழ்த்திசை நூலகம் தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 7-வது தளத்தில் இயங்கி வருகின்றது.

68) தமிழ்நாட்டின் மைய நூலகம் எது?

A) உ.வே.சா நூலகம்

B) கீழ்த்திசை நூலகம்

C) கன்னிமரா நூலகம்

D) தமிழ் பல்கலைக்கழக நூலகம்

விளக்கம்: சென்னையில் அமைந்த கன்னிமாரா நூலகமே தமிழ்நாட்டின் மைய நூலகமாகும்.

69) கன்னிமரா நூலகம் எப்போது தொடங்கப்பட்டது?

A) 1896

B) 1869

C) 1942

D) 1981

விளக்கம்: கன்னிமாரா நூலகம் கி.பி(பொ.ஆ) 1896-இல் தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் மைய நூலகமாகும்.

70) எது இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும்?

A) உ.வே.சா நூலகம்

B) கீழ்த்திசை நூலகம்

C) கன்னிமாரா நூலகம்

D) மறைமலை அடிகள் நூலகம்

விளக்கம்: கன்னி மாரா நூலகம், இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும். இங்கு 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்களின் ஒரு படி(பிரதி) இங்கு பாதுகாக்கப்படுகிறது.

71) கன்னிமாரா நூலகத்தின் எந்த தளத்தில் மறைமலை அடிகள் நூலகம் உள்ளது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: கன்னிமாரா நூலகத்தின் மூன்றாவது தளத்தில் மறைமலை அடிகள் நூலகம் அமைந்துள்ளது.

72) வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

A) கோடம்பாக்கம்

B) ஆயிரம் விளக்கு

C) மெரினா கடற்கரை

D) திருவான்மியூர்

விளக்கம்: திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் சென்னைக் கோடம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இது 1973-இல் தொடங்கி 1976-இல் கட்டி முடிக்கப்பட்டது.

73) வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடத் தேரின் உயரம் என்ன?

A) 25 அடி

B) 133 அடி

C) 128 அடி

D) 50 அடி

விளக்கம்: திருவாரூர்த் தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்ட இது 25 அடி நீளமும், 25 அடி அகலமும், 128 அடி உயரமும் கொண்டது.

74) வள்ளுவர் கோட்ட தேரை இழுத்துச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்ட மிருகம் எது?

A) குதிரை

B) யானை

C) சிங்கம்

D) புலி

விளக்கம்: வள்ளுவர் கோட்ட கலைக்கூட தேரை 2 யானைகள் இழுத்துச் செல்லும்படி கருங்கற்தேரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

75) வள்ளுவர் கோட்ட தேரின் மையத்தில் எந்த வடிவக் கருவறையில் திருவள்ளுவரின் சிலை உள்ளது?

A) சதுரம்

B) முக்கோணம்

C) செவ்வகம்

D) எண்கோணம்

விளக்கம்: வள்ளுவர் கோட்ட தேரின் மையத்தில் எண்கோண வடிவக் கருவறையில் திருவள்ளுவரின் சிலை கவினுற வடிவமைக்கப்பட்டுள்ளது.

76) வள்ளுவர் கோட்டத்தில் எந்த அதிகாரம், எந்த நிற பளிங்குக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது என பொருத்துக.

அ. அறத்துப்பால் – 1. செந்நிறப் பளிங்குக்கல்

ஆ. பொருட்பால் – 2. கருநிறப் பளிங்குக்கல்

இ. இன்பத்துப்பால் – 3. வெண்ணிறப் பளிங்குக்கல்

A) 3, 2, 1

B) 1, 2, 3

C) 3, 1, 2

D) 2, 3, 1

விளக்கம்: அறத்துப்பால் – கருநிறப் பளிங்குக்கல்

பொருட்பால் – வெண்ணிறப் பளிங்குக்கல்

இன்பத்துப்பால் – செந்நிறப் பளிங்குக்கல்

மேலும், வள்ளுவர் கோட்டத்தில் 1330 குறள்களும் பொறிக்கப்பட்டுள்ளன மற்றும் திருக்குறளின் கருத்துக்களை விளக்கும் ஒவியங்களும் வரையப்பட்டுள்ளன.

77) திருவள்ளுவரின் சிலை எங்கு நிறுவப்பட்டுள்ளது.

A) கன்னியாகுமரி

B) தூத்துக்குடி

C) குஜராத்

D) துவாரகை

விளக்கம்: இந்தியாவின் தெற்கு எல்லையாகிய கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலை தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது.

78) நீர் மட்டத்திலிருந்து எத்தனை அடி உயரப் பாறை மீது திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது?

A) 20 அடி

B) 25 அடி

C) 30 அடி

D) 35 அடி

விளக்கம்: கன்னியாக்குமரியில் விவேகானந்தர் பாறைக்கு அருகில் கடல் நடுவே நீர் மட்டத்தில் 30 அடி உயரப் பாறை மீது திருவள்ளுவர்சிலை நிறுவப்பட்டுள்ளது.

79) திருவள்ளுவர் சிலை எப்போது பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது?

A) 1990

B) 2000

C) 2010

D) 2004

விளக்கம்: திருவள்ளுவர் சிலை வேலை துவக்கம் – 1990

திருவள்ளுவர் சிலை மக்கள் பார்வைக்கு திறப்பு – 2000 ஜனவரி மாதம் முதல் நாள்

80) பாறையிலிருந்து திருவள்ளுவரின் சிலையின் உயரம் என்ன?

A) 1330 அடி

B) 133 அடி

C) 130 அடி

D) 163 அடி

விளக்கம்: பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி. இது திருக்குறளின் மொத்த அதிகாரங்களையும் குறிக்கிறது.

81) திருவள்ளுவர் சிலையின் பீடத்தின் உயரம் என்ன?

A) 38 அடி

B) 75 அடி

C) 95 அடி

D) 133 அடி

விளக்கம்: அறத்துப்பாலின் அதிகாரங்களை குறிக்கும் வகையில் பீடத்தின் உயரம் – 38 அடி பொருட்பால், இன்பத்துப்பாலின் அதிகாரங்களை குறிக்கும் வகையில் திருவள்ளுவர் சிலையின் உயரம் – 95 அடி

82) திருவள்ளுவர் சிலை பீடத்தின் உட்புறம் அமைந்து மண்டபத்தில் எத்தனை திருக்குறள்கள் செதுக்கப்பட்டுள்ளன?

A) 75

B) 130

C) 133

D) 38

விளக்கம்: பீடத்தின் உட்புறம் அமைந்த மண்டபத்தின் உட்சுவரில் அதிகாரத்திற்கு ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் செதுக்கப்பட்டுள்ளன.

83) திருவள்ளுவர் சிலை அமைக்க எத்தனை கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டது?

A) 3 டன்

B) 8 டன்

C) 3681

D 1330

விளக்கம்: 3 டன் முதல் 8 டன் வரை எடை உள்ள 3681 கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டது.

84) திருவள்ளவர் சிலையின் எடை என்ன?

A) 4000 டன்

B) 5000 டன்

C) 600 டன்

D) 7000 டன்

விளக்கம்: திருவள்ளுவர் சிலையின் மொத்த எடை 7000 டன் ஆகும். சென்று வர படகு வசதி செய்யப்பட்டுள்ளது.

85) உலகத் தமிழச் சங்கம் எங்கு அமைந்துள்ளது?

A) தஞ்சை

B) கோவை

C) மதுரை

D) சென்னை

விளக்கம்: மதுரை மாநகரின் தல்லாக்குளம் பகுதியில் காந்தி அருங்காட்சியம் அருகில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டுள்ளது. இது சுமார் 87000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படுள்ளது.

86) எந்த ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது?

A) 1971

B) 1981

C) 1991

D) 2106

விளக்கம்: கி.பி (பொ.ஆ) 1981-ல் மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

87) உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் எப்போது திறந்துவைக்கப்பட்டது?

A) 1981

B) 1991

C) 2001

D) 2016

விளக்கம்: விளக்கம் (பொ.ஆ) 2016-ஆம் ஆண்டு உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையில் திறந்து வைக்கப்பட்டது. இதன் வெளிப்புறச் சுவரில் 1330 குறட்பாக்களும் இடம்பபெற்றுள்ளன.

88) உலகத் தமிழ் சங்கத்தில் யாருடைய முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது

A) தொல்காப்பியர்

B) ஒளவையார்

C) கபிலர்

D) அனைத்தும்

விளக்கம்: உலகத் தமிழ் சங்கத்தில் தொல்காப்பியர், ஒளவையார் மற்றும் கபிலரின் முழு உருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் வள்ளல்கள், புலவர்கள் ஆகியோரின் வாழ்க்கை நிகழ்வுகளும் ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் செதுக்கப்பட்டுள்ளது மற்றும் இதன் சுற்றுப் புற சுவர்களில் சங்க இலக்கியக் காட்சியகள் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

89) சங்கத் தமிழ்க் காட்சிக்கூட நுழைவாயில் எந்த புராணக் காட்சி புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது?

A) கந்தபுராணம்

B) திருவிளையாடற்புராணம்

C) இராமாயணயம்

D) பெரிபுராணம்

விளக்கம்: உலகத் தமிழ்ச் சங்கத்தின் மற்றோர் அமைப்பான சங்கத்தமிழ்க் காட்சிக்கூடம் தனிக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தருமிக்குப் பாண்டிய மன்னன் பொற்கிழி வழங்கிய திருவிளையாடற் புராணக் காட்சி இதன் நுழைவாயிலில் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது.

90) 200 ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கியது எது?

A) மதுரை

B) முசிறி

C) கொற்கை

D) பூம்புகார்

விளக்கம்: 2000 ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலைநகராகவும் துறைமுக நகரமாகவும் விளங்கியது பூம்புகார்.

91) பூம்புகார் பற்றி உரைக்கும் நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) பூம்புகார்

C) A மற்றும் B

D) மணிமேகலை

விளக்கம்: சோழர்களின் தலைநகரமாக விளங்கிய பூம்புகார் நகர் பற்றி சிலப்பதிகாரம் மற்றும் பட்டினப்பாலை ஆகிய 2 நூல்களில் கூறப்பட்டுள்ளது.

92) சரியான் கூற்றைத் தேர்க

1. பூம்புகாரில் மருவூர்ப் பாக்கம் என்னும் கடல் பகுதி இருந்தது.

2. அதேபோல், அங்கு பட்டினப்பாகம் என்னும் கிராம பகுதியும் இருந்தது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: பூம்புகாரில் மருவூர்ப்பாக்கம் என்ற கடல் பகுதியும், பட்டினப்பாக்கம் என்ற நகரப் பகுதியும் அமைந்திருந்ததாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

93) பூம்புகார் கடற்கரையில் சிற்பக் கலைக்கூடம் எப்போது ஏற்படுத்தப்பட்டது?

A) 1973

B) 1981

C) 1990

D) 2016

விளக்கம்: பூம்புகார் நகரம் கடல்கோளினால் அழிந்தப் பின் அதன் பெருமையை உலகறியச் செய்ய கி.பி (பொ.ஆ) 1973-ல் பூம்புகார் கடற்கரையில் சிற்பக் கலைக்கூடம் ஏற்படுத்தப்பட்டது. இக்கூடம் ஏழுநிலை மாடங்களைக் கொண்டது.

94) பூம்புகாரிலுள்ள சிற்பக் கலைக்கூடத்தில் கண்ணகியின் வரலாற்றை விளக்கும் எத்தனை சிற்பத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன?

A) 48

B) 49

C) 42

D) 21

விளக்கம்: பூம்புகாரிலுள்ள சிற்பக் கலைக்கூடத்தில் கண்ணகியில் வரலாற்றை விளக்கும் 49 சிற்பத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இங்கு மாதவிக்கு ஒரு நெடிய சிலை நிறுவப்பட்டுள்ளது.

95) பூம்புகாரிலுள்ள சிற்பக் கலைக்கூடத்தில் எத்தனை மன்றங்கள் உள்ளன?

A) 2

B) 4

C) 3

D) 5

விளக்கம்: கலைக்கூடத்திற்கு அருகில் இலஞ்சிமன்றம், பாவைமன்றம், நெடுங்கல் மன்றம், ஆகியன அமைந்துள்ளன. இலஞ்சி மன்றத்திலும் பாவை மன்றத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ள பெண்களின் உருவங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. நெடுங்கல் மன்றத்தில் நெடிய கற்றூண் ஒன்றும் அதைச் சுற்றி 8

சிறிய கற்றூண்களும் 8 மனித உருவச் சிற்பங்களும் உள்ளன.

96) சரியான கூற்றைத் தேர்க

1. ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது தொழிற்பெயர் எனப்படும்.

2. இது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டும். படர்க்கை இடத்தில் மட்டும் வரும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: தொழிற்பெயர் எப்போதும் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது. படர்க்கை இடத்தில் மட்டும் வரும் (எ.கா) நடத்தல், பொறுத்தல், ஆடல்

97) தொழிற்பெயர் எத்தனையாக வகைப்படுத்தப்படுகிறது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தொழிற்பெயரை விகுதி பெற்ற தொழிற்பெயர், முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர் என 3 ஆக வகைப்படுத்தலாம்.

98) தொழிற்பெயர் விகுதிகள் எத்தனை?

A) 11

B) 12

C) 13

D) 14

விளக்கம்: வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது விகுதி பெற்ற தொழிற்பெயராகும். தொழிற்பெயர் விகுதிகள்- தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, வு, தி, சி, வி, மை (எ.கா) தருதல், கூறல், ஆட்டம், விலை, வருகை, பார்வை, போக்கு, நட்பு, மறைவு, மறதி, உணர்ச்சி, கல்வி, செய்யாமை

99) ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதியை முதனிலை என்பர். இந்த முதனிலை எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது_________?

A) தொழிற்பெயர்

B) விகுதி பெற்ற தொழிற்பெயர்

C) முதனிலை திரிந்த தொழிற்பெயர்

D) முதனிலைத் தொழிற்பெயர்

விளக்கம்: ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதியை முதனிலை என்பவர். முதனிலை எவ்வித மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.

(எ.கா) வானில் இடி இடித்தது

சோறு கொதி வந்தது.

இதில் இடி, கொதி என்பவை இடித்தல், கொதித்தல் என்னும் சொற்களின் பகுதிகளாகும். இவை பெறாமல் தம் பொருளை உணர்த்துகின்றன.

100) சொல்லின் முதன்நிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர்________

A) முதன்நிலை தொழிற்பெயர்

B) விகுதி பெற்ற தொழிற்பெயர்

C) முதன்நிலை திரிந்த தொழிற்பெயர்

D) எதுவுமில்லை

விளக்கம்: தமிழ் படிக்கும் பேறு பெற்றேன்

உணவின் சூடு குறையவில்லை

இதில், பேறு, சூடு என்பவை பெறு, சூடு என்ற பகுதிகளின் முதலெழுத்து நீண்டு திரிந்து தொழிற்பெயராக மாறி உள்ளது. இவ்வாறு முதனிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் (எ.கா) விடு- வீடு, மின்-மீன், கொள்-கோள், உடன்படு – உடன்பாடு

101) பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் எது?

A) எழுது

B) பாடு

C) படித்தல்

D) நடி

விளக்கம்: படித்தல் – அல் என்ற விகுதி பெற்றுள்ளது.

102) பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது?

A) ஊன்று

B) நாடு

C) விழு

D) எழுதுதல்

விளக்கம்: உறு என்பது ஊறு என திரிந்து வந்துள்ளது.

103) பொருத்துக.

அ. ஓட்டம் – 1. முதனிலைத் தொழிற்பெயர்

ஆ. பிடி – 2. முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

இ. சூடு – 3. விகுதி பெற்ற தொழிற்பெயர்

A) 3, 1, 2

B) 3, 2, 1

C) 2, 3, 1

D) 1, 3, 2

விளக்கம்: ஓட்டம் – விகுதி பெற்ற தொழிற்பெயர்

பிடி – முதனிலைத் தொழிற்பெயர்

சூடு – முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

104) தவறானதைத் தேர்க.

A) இருவழிச் சாலையில் மையத்தில் போட்டப்பட்ட வெள்ளைக்கோடு – வாகனங்களை முந்துவதற்கு வலப்பக்க சாலையை பயன்படுத்தலாம்

B) இருவழிச் சாலையின் மையத்தில் தொடர்ச்சியாக வெள்ளைஃமஞ்சள் – வாகனங்களை முந்த வலப்பக்க சாலையை பயன்படுத்தக் கூடாது.

C) இருவழிச் சாலையின் மையத்தில் இரட்டை சாலையின் மையத்தில் இரட்டை மஞ்சள் கோடு – வாகனங்களை முந்த எக்காரம் கொண்டும் வலப்பக்க சாலையை பயன்படுத்தக்கூடாது

D) எப்போதும் வாகனங்களை சாலையின் வலது புறமாகவே செலுத்த வேண்டும்

விளக்கம்: எப்போதும் சாலையின் இடப்புறமாகவே வாகனத்தை செலுத்த வேண்டும். இதேபோல் ஒருவழிப்பாதை என்று குறிப்பிடப்பட்டுள்ள சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசையில் மட்டுமே வாகனங்களைச் செலுத்த வேண்டும். தடக்கோடு இடப்பட்டுள்ள சாலையில் தடத்தின் உள்ளேயே வாகனங்களைச் செலுத்த வேண்டும்

105) பொருத்துக

அ. படைப்பாளர் – 1. Inscriptions

ஆ. சிற்பம் – 2. Manuscripts

இ. கல்வெட்டு – 3. Sculpture

ஈ. கையெழுத்துப்படி – 4. Creature

A) 4, 1, 2, 3

B) 4, 2, 3, 1

C) 4, 3, 2, 1

D) 4, 3, 1, 2

விளக்கம்: படைப்பாளர் – Creator

சிற்பம் – Sculpture

கல்வெட்டு – Inscriptions

கையெழுத்துப்படி – Manuscripts

106) தவறானதைத் தேர்க

A) அழகியல் – 1. Aesthetics

B) தூரிகை – 2. Brush

C) கருத்துப்படம் – 3. Modern Art

D) குகை ஓவியம் – 4. Cave Painting

விளக்கம்: கருத்துப்படம் – Cartoon

நவீன ஓவியம் – Modern Art

கலைஞர் – Artist

107) ____________தீமை உண்டாகும்

A) செய்யத்தகுந்த செயல்களைச் செய்தால்

B) செய்யத்தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்

C) செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்

D) எதுவும் செய்யாமல் இருப்பதால்

விளக்கம்: “செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்”

அதாவது செய்யத்தகாத செயல்களைச் செய்வதாலும், செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதாலும் தீமை உண்டாகும்.

108) தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவனிடம் ________ இருக்கக் கூடாது

A) சோம்பல்

B) சுறுசுறுப்பு

C) ஏழ்மை

D) செல்வம்

விளக்கம்: “மடிமை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர்”

தம் குடியைச் சிறப்புடைய குடியாகச் செய்ய விரும்புபவர் சோம்பலைத் துன்பமாகக் கருதி முயற்சியோடு வாழ்தல் வேண்டும்.

109) எழுத்தென்ப பிரித்தெழுக.

A) எழுத்து + தென்ப

B) எழுத்து + என்ப

C) எழுத்து + இன்ப

D) எழுத் + தென்ப

விளக்கம்: எழுத்தென்ப-எழுத்து + என்ப எனப் பிரியும்

110) கரைந்துண்ணும்- பிரித்தெழுதுக

A) கரைந்து + இன்னும்

B) கரை + துண்ணும்

C) கரைந்து + உண்ணும்

D) கரை + உண்ணும்

விளக்கம்: கரைந்துண்ணும் – கரைந்து + உண்ணும் எனப் பிரியும்.
111) கற்றனைத்து + ஊறும் – சேர்த்தெழுக

A) கற்றனைத்தூறும்

B) கற்றனைதூறும்

C கற்றனைத்தீறும்

D) கற்றைத்தோறும்

விளக்கம்: கற்றனைத்து + ஊறும் – கற்றனைத்தூறும் எனப்புணரும்

112) பொருத்துக.

அ. கற்கும் முறை – 1. செயல்

ஆ. உயிர்க்குக் கண்கள் – 2. காகம்

இ. விழுச்செல்வம் – 3. பிழையில்லாமல் கற்றல்

ஈ. எண்ணித்துணிக – 4. பிழையில்லாமல் கற்றல்

உ. இரவா கரைந்துண்ணும் – 5. கல்வி

A) 3, 4, 1, 5, 2

B) 3, 4, 5, 2, 1

C) 3, 2, 1, 5, 4

D) 3, 4, 5, 1, 2

விளக்கம்: கற்கும் முறை – பிழையில்லாமல் கற்றல்

உயிர்க்குக் கண்கள் – எண்ணும் எழுத்தும்

விழுச்செல்வம் – கல்வி

எண்ணித்துணிக – செயல்

இரவா கரைந்துண்ணும் – காகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!