Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
General Tamil

8th Tamil Unit 8 Questions

8th Tamil Unit 8 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 8th Tamil Unit 8 Questions With Answers Uploaded Below.

1) கூற்றுகளை ஆராய்க.

1. இரண்டு குறில் எழுத்துக்கள் அல்லது குறில், நெடில் எழுத்துக்கள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் நேரசையாகும்.

2. குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நேரசையாகும். எ.கா. ந, நம், நா, நாம்.

இரண்டு குறில் எழுத்துக்கள் அல்லது குறில், நெடில் எழுத்துக்கள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும். எ.கா. கட, கடல், கடா, கடாம்.

2) திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?

A) 1000

B) 2000

C) 3000

D) 4000

விளக்கம்: திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக்கொண்டது. திருமந்திரம் பத்தாம் திருமுறையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

3) கள்ளக் கருத்துக்களை கட்டேர்டு அறுத்தவர்க்கு

உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பாராபரமே – இப்பாடலடி இடம்பெற்ற நூல்?

A) திருமந்திரம்

B) எக்காளக் கண்ணி

C) குணங்குடியார் பாடற்கோவை

D) தாயுமானவர் பாடல்கள்

விளக்கம்: கள்ளக் கருத்துக்களை கட்டேர்டு அறுத்தவர்க்கு

உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பாராபரமே – குணங்குடியார் பாடற்கோவை.

பொதுவாக பராபரம் என்ற சொல்லை பாடலடியில் அமைத்து பாடுபவர் தாயுமானவர். இவர் பாடல் மீது கொண்ட பற்றின் காரணமாக குணங்குடி மஸ்தான் சாகிபு பாராபரம் என்ற சொல்லை தமது பாடலிலும் இடம்பெறச் செய்தார்.

4) சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றவர் யார்?

A) வீரமாமுனிவர்

B) தாயுமானவர்

C) குணங்குடி மஸ்தான் சாகிபு

D) ஆறுமுகநாவலர்

விளக்கம்: குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல் காதர் என்பதாகும். இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தார். சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார்.

5) மனிதர்கள் தம்_______தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்?

A) ஐந்திணைகளை

B) அறுசுவைகளை

C) நாற்றிசைகளை

D) ஐம்பொறிகளை

விளக்கம்: மனிதர்கள் தம் ஐம்பொறிகளை தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.

ஐந்திணைகள் – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை

அறுசுவை – இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கைப்பு

நாற்றிசைகள் – கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு

ஐம்பொறிகள் – மெய், வாய், மூக்கு, கண், காது

6) மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என்று அயோத்திதாச பண்டிதர் எதை கூறுகிறார்?

A) சுயராஜ்ஜியம்

B) கல்வி

C) பெண்களின் நிலை

D) சமத்துவம்

விளக்கம்: சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக் கூடாது. மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அது அமைய வேண்டும் – அயோத்திதாசர்.

7) தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் நூல்?

A) திருக்குறள்

B) திருமந்திரம்

C) பத்துப்பாட்டு

D) தொல்காப்பியம்

விளக்கம்: தமிழ்மூவாயிரம் என்று அழைக்கப்படும் நூல் திருமந்திரம். 3000 பாடல்களைக் கொண்டது. இது திருமுறைகளின் வரிசையில் பத்தாம் திருமுறையாக இடம்பெற்றுள்ளது.

8) உள் + இருக்கும் என்பதனைக் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

A) உள்ளேயிருக்கும்

B) உள்ளிருக்கும்

C) உளிருக்கும்

D) உளருக்கும்

விளக்கம்: உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் உள்ளிருக்கும் என்பதாகும்.

நிலைமொழியின் இறுதி எழுத்து ள் (மெய் எழுத்து)

வருமொழயின் முதல் எழுத்து இ (உயிரெழுத்து).

உ + ள் + இ + ருக்கும்=உள்ளிருக்கும் (உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே) எனும் விதிப்படி நிலைமொழியின் இறுதி மெய் எழுத்தும் (உடல்), வருமொழியில் முதல் உயிர் எழுத்தும் (உயிர்) புணர்ந்தது.

9) குணங்குடி மஸ்தான் சாகிபு-விற்கு பொருந்தாதது எது?

A) எக்களாக் கண்ணி

B) மனோன்மணிக் கண்ணி

C) நந்தீசுவரக் கண்ணி

D) பராபரக்கண்ணி

விளக்கம்: குணங்குடி மஸ்தான் சாகிபு, தாயுமானவரின் பராபரக்கண்ணி பாடல் மீது கொண்ட பற்றின் காரணமாக இவரும் அவ்வாறு பாடல் எழுதினார். அவற்றில் சில,

1. எக்களாக்கண்ணி

2. மனோன்மணிக் கண்ணி

3. நந்தீசுவரக் கண்ணி

பராபரக்கண்ணி என்பது தாயுமானவரின் பாடல்கள் ஆகும்.

10) பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்

ஊராண்மை மற்றுஅதன் எஃகு – இக்குறட்பாவில் பேராண்மை என்ற சொல்லின் பொருள்?

A) பெருவீரம்

B) ஆண்மை

C) பகைவரை எதிர்த்து நிற்கும் வீரம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: பேராண்மை என்ற சொல்லின் பொருள் பகைவரை எதிர்த்து நிற்கும் வீரம் ஆகும். பகைவரை எதிர்த்து நிற்கும் வீரத்தை ஆண்மை என்று கூறுவர். பகைவருக்கு துன்பம் வரும்போது, உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர் என்பது இக்குறட்பாவின் விளக்கம் ஆகும்.

11) சங்க இலக்கியங்கள் பலவும் எந்த பாவகையால் அமைந்துள்ளது?

A) வெண்பா

B) ஆசிரியப்பா

C) கலிப்பா

D) வஞ்சிப்பா

விளக்கம்: பா நான்கு வகைப்படும். அவை,

1. வெண்பா

2. ஆசிரியப்பா

3. கலிப்பா

4. வஞ்சிப்பா

ஆசிரியப்பா அகவல் ஓசை உடையது. சங்க இலக்கியங்கள் பலவும் ஆசிரியப்பாவால் அமைந்தவை.

12) ஞானியர் சிறந்த கருத்துக்களை மக்களிடம்_________

A) பகர்ந்தனர்

B) நுகர்ந்தனர்

C) சிறந்தனர்

D) துறந்தனர்

விளக்கம்: ஞானியர் சிறந்த கருத்துக்களை மக்களிடம் பகர்ந்தனர். பகர்தல் என்றால் கூறுதல் என்று பொருள். பகராய் என்றால் தருவாய் என்று பொருள்.

13) திருமூலர் கீழ்க்கண்ட எதற்கு பொருத்தமானவர்?

A) 63 நாயன்மார்களில் ஒருவர்

B) பதினெண் சித்தர்களில் ஒருவர்

C) தொகையடியார்களில் ஒருவர்

D) A மற்றும் B

விளக்கம்: திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும், 18 சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவர் இயற்றிய நூல் திருமந்திரம்.

14) மக்களையும் மழையையும் தொடர்புபடுத்தி கருத்து கூறியவர் யார்?

A) அயோத்திதாச பண்டிதர்

B) இராமலிங்கனார்

C) தந்தை பெரியார்

D) புதுமைப்பித்தன்

விளக்கம்: வானம் பொய்ப்பதற்குக் காரணம் ஒழுக்கமுள்ள ஞானிகள் இல்லாமையே. அதற்கு காரணம் கல்வி, அறிவு, அருள், ஒழுக்கம், ஒற்றுமை ஆகியன உடைய குடிகள் இல்லாமையே என்று கூறுவதன் மூலம் நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கைகூட உதவாது என்கிறார் அயோத்திதாசர்.

15) காசை விரும்பிக் கலங்கிநின்று உன்பாத

ஆசை விரும்பாது அலைந்தேன் பராபரமே – என்று பாடியவர் யார்?

A) திருமூலர்

B) தாயுமானவர்

C) குணங்குடி மஸ்தான் சாகிபு

D) ஆறுமுக நாவலர்

விளக்கம்: காசை விரும்பிக் கலங்கிநின்று உன்பாத

ஆசை விரும்பாது அலைந்தேன் பராபரமே – குணங்குடி மஸ்தான் சாகிபு.

இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் குணங்குடியார் பாடற்கோவை ஆகும்.

உன் திருவடிகளின்மேல் பற்று வைக்காமல், பணத்தின்மீது ஆசை வைத்ததால் நான் மனம் கலங்கி அலைகின்றேன் என்பது மேற்கண்ட பாடலடியின் பொருளாகும்.

16) காத்தவராயன் என்ற இயற்பெயரைக் கொண்டவர் யார்?

A) தந்தை பெரியார்

B) பரிதிமாற்கலைஞர்

C) அய்யன் காளி

D) அயோத்திதாசர்

விளக்கம்: அயோத்திதாசர் 1845ஆம் ஆண்டு மே திங்கள் 20ஆம் நாள் சென்னையில் பிறந்தார். இவரது இயற்பெயர் காத்தவராயன் என்பதாகும்.

17) குணங்குடி மஸ்தான் சாகிபு பற்றிய கூற்றுகளில் தவறானது எது?.

1. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெர் – சுல்தான் அப்துல்காதர்

2. இளம் வயதிலேயே சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார்.

3. இவர் திருமூலர் இயற்றிய பராபரக்கண்ணி போலவே எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களை இயற்றியுள்ளார்.

4. குணங்குடியார் படற்கோவை என்பது இவர் இயற்றிய மற்றொரு நூல் ஆகும்.

A) 1 மட்டும்

B) 2 மட்டும்

C) 3 மட்டும்

D) 4 மட்டும்

விளக்கம்: 1. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெர் – சுல்தான் அப்துல்காதர்

2. இளம் வயதிலேயே சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார்.

3. இவர் தாயுமானவர் இயற்றிய பராபரக்கண்ணி போலவே எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களை இயற்றியுள்ளார்.

4. குணங்குடியார் படற்கோவை என்பது இவர் இயற்றிய மற்றொரு நூல் ஆகும்.

18) என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்த்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர் என்று தந்தை பெரியார் யாரைக் குறிப்பிடுகிறார்?

A) அயோத்திதாச பண்டிதர்

B) அம்பேத்கர்

C) இராஜராம் மோகன்ராய்

D) அய்யன் காளி

விளக்கம்: என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்த்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள் – தந்தை பெரியார்.

19) கள்ளக் கருத்துக்களை கட்டோடு அறுத்தவர்க்கு

உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே – என்ற பாடலடிகளில் இடம்பெற்ற அறுத்தவருக்கு என்ற சொல்லின் எதிர்ச்சொல்?

A) பெற்றவருக்கு

B) நீக்கியவருக்கு

C) துண்டாக்குதல்

D) இன்பப்பெருக்கு

விளக்கம்: மேற்கண்ட பாடலடிகள் குணங்குடியார் கோவை என்னும் நூலிலிருந்து தரப்பட்டுள்ளது. அறுத்தவருக்கு என்ற சொல்லின் பொருள் நீக்கியவர்க்கு என்பதாகும். இதன் எதிர் சொல் பெற்றவருக்கு என்பதாகும்.

20) நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு – இக்குறட்பாவில் பயில்தொறும் என்ற சொல்லின் பொருள்?

A) படிக்க படிக்க

B) பழகப் பழக

C) நல்ல நூல்கள்

D) பண்புடையவர்

விளக்கம்: பயில்தொறும் என்ற சொல்லின் பொருள் பழகப் பழக என்பதாகும். நல்ல நூல்களை படிக்கப் படிக்க இன்பம் தருவதுபோல் பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும் என்பது இக்குறட்பாவின் பொருள் ஆகும்.

21) அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை எங்குள்ளது?

A) தாம்பரம்

B) செங்கல்பட்டு

C) கிண்டி

D) அண்ணாநகர்

விளக்கம்: சென்னை தாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருத்துவமனைக்கு அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

22) கீழ்க்கண்டவற்றில் எது நிரையசை அல்ல?

A) நட

B) கடல்

C) கடா

D) நாம்

விளக்கம்: இரண்டு குறில் எழுத்துக்கள் அல்லது குறில், நெடில் எழுத்துக்கள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும். எ.கா. கட, கடல், கடா, கடாம்.

நாம் என்பது நிரையசை அல்ல.

குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நேரசையாகும். எ.கா. ந, நம், நா, நாம்.

23) தென்னிந்திய சமூக சீர்த்திருத்ததின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?

A) தந்தை பெரியார்

B) இராமலிங்க சுவாமிகள்

C) வைகுண்ட சுவாமிகள்

D) அயோத்திதாசப் பண்டிதர்

விளக்கம்: சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை மக்களிடம் பரவலாக்கியவர்கள் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆவார்கள். இவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் அயோத்திதாச பண்டிதர் ஆவார். இவரே தென்னிந்திய சமூக சீர்திருத்ததின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

24) பொருத்துக.

அ. நம்பர் – 1. கூசாமல்

ஆ. நாணாமே – 2. அடியார்

இ. ஈயில் – 3. உள்ளம்

ஈ. சித்தம் – 4. வழங்கினால்

A) 1, 4, 2, 3

B) 1, 4, 3, 2

C) 2, 4, 3, 1

D) 2, 1, 4, 3

விளக்கம்: நம்பர் – அடியார்

நாணாமே – கூசாமல்

ஈயில் – வழங்கினால்

சித்தம் – உள்ளம்

25) அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும்_______க் கண்டு அஞ்சமாட்டார்கள்

A) புலனை

B) அறனை

C) நமனை

D) பலனை

விளக்கம்: அறிநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் நமனைக் கண்டு அஞ்சமாட்டார்கள். நமன் என்றால் எமன் என்று பொருள்.

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே – திருமந்திரம்

26) நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கைகூட உதவாது கூறியவர் யார்?

A) அயோத்திதாச பண்டிதர்

B) இராமலிங்கனார்

C) தந்தை பெரியார்

D) புதுமைப்பித்தன்

விளக்கம்: மக்களையும் மழையையும் தொடர்புபடுத்தி கருத்து கூறிய அயோத்திதாசர், வானம் பொய்ப்பதற்குக் காரணம் ஒழுக்கமுள்ள ஞானிகள் இல்லாமையே. அதற்கு காரணம் கல்வி, அறிவு, அருள், ஒழுக்கம், ஒற்றுமை ஆகியன உடைய குடிகள் இல்லாமையே என்று கூறுவதன் மூலம் நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கைகூட உதவாது என்கிறார்.

27) யாப்பின் உறுப்புகளில் பொருந்தாதது எது?

A) எழுத்து

B) சொல்

C) அடி

D) தளை

விளக்கம்: யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்குரிய உறுப்புகள் 6 ஆகும். அவை,

1. எழுத்து

2. அசை

3. சீர்

4. தளை

5. அடி

6. தொடை.

28) நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல்?

A) நம்பரங்கு

B) நம்மார்க்கு

C) நம்பர்க்கங்கு

D) நம்பங்கு

விளக்கம்: நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் நம்பர்க்கங்கு என்பதாகும்.

இங்கு நிலைமொழியின் இறுதி எழுத்து கு. வருமொழியின் முதல் எழுத்து அ.

நம்பர்க்க் + அங்கு (உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்).

நம்பர்க் + க் + அ + ங்கு=நம்பர்க்கங்கு (உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே).

29) திருமூலர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. 63 நாயன்மார்களில் ஒருவர்

2. 18 சித்தர்களில் ஒருவர்

3. இயற்றிய நூல் திருமந்திரம்

4. திருமந்திரம் 2000 பாடல்களைக் கொண்டது

A) 1, 2 சரி

B) 2, 3 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. 63 நாயன்மார்களில் ஒருவர்

2. 18 சித்தர்களில் ஒருவர்

3. இயற்றிய நூல் திருமந்திரம்

4. திருமந்திரம் 3000 பாடல்களைக் கொண்டது.

30) நகுதல் பொருட்டுஅன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தல் பொருட்டு – இக்குறட்பாவில் நட்டல் என்ற சொல்லின் பொருள்?

A) சிரித்தல்

B) நழுவுதல்

C) நட்பு கொள்ளுதல்

D) மகிழ்தல்

விளக்கம்: நட்டல் என்ற சொல்லின் பொருள் நட்புகொள்ளுதல் என்பதாகும். நட்பு, சிரித்துப் பேசி மகிழ்வறத்கு மட்டுமன்று, நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது.

31) நன்றே நினைமின் நமனில்லை நாணாமே – இதில் நமன் என்ற சொல்லின் பொருள்?

A) எமன்

B) நோய்

C) அடியார்

D) மருந்து

விளக்கம்: நமன் என்றால் எமன் என்று பொருள். மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே. இக்கருத்துக்களை நன்றான மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் தேவை இல்லை.

32) விடுதலை என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமன்று. அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமையவேண்டும் என்பது யாருடைய கருத்து?

A) காந்தியடிகள்

B) அம்பேத்கர்

C) தந்தை பெரியார்

D) அயோத்திதாச பண்டிதர்

விளக்கம்: விடுதலை என்பது வெறும் ஆட்சிமாற்றம் மட்டுமன்று. அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமையவேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து ஆகும்.

33) என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்த்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர் என்று தந்தை பெரியார் யாரைக் குறிப்பிடுகிறார்?

A) தங்கவயல் அப்பாத்துரையார்

B) அம்பேத்கர்

C) இராஜராம் மோகன்ராய்

D) அய்யன் காளி

விளக்கம்: என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்த்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள் – தந்தை பெரியார்.

34) கீழ்க்கண்டவற்றில் எது நேரசை அல்ல?

A) ந

B) நம்

C) நா

D) கட

விளக்கம்: குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நேரசையாகும். எ.கா. ந, நம், நா, நாம்.

கட என்பது நிரையசை.

இரண்டு குறில் எழுத்துக்கள் அல்லது குறில், நெடில் எழுத்துக்கள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும். எ.கா. கட, கடல், கடா, கடாம்.

35) சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து – இதில் சித்தம் என்ற சொல்லின் பொருள்?

A) சித்தர்

B) திருமூலர்

C) இறைவன்

D) உள்ளம்

விளக்கம்: சித்தம் என்ற சொல்லின் பொருள் உள்ளம். உலகத்து மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழவேண்டுமாயின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று நினைத்து ஈடேறுங்கள்.

36) கூற்று: 1892 ஆம் ஆண்டு திராவிட மகாஜன சங்கம் தொடங்கப்பட்டது.

காரணம்: ஒடுக்கப்பட்டோர் உரிமைகளைப் பாதுகாக்க.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: அயோத்திதாசர் தமது கொள்கைகளை வலியுறுத்தவும் ஒடுக்கப்பட்டோர் உரிமைகளைப் பாதுகாக்கவும் 1892 ஆம் ஆண்டு திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்.

37) கூற்றுகளை ஆராய்க.

1. சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை மக்களிடம் பரவலாக்கியவர்கள் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆவார்கள். இவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் இராமலிங்க அடிகள் ஆவார்.

2. தென்னிந்திய சமூக சீர்திருத்ததின் தந்தை என்று அழைக்கப்படுபவர் – வைகுண்ட சுவாமிகள்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை மக்களிடம் பரவலாக்கியவர்கள் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆவார்கள். இவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் அயோத்திதாச பண்டிதர் ஆவார்.

2. தென்னிந்திய சமூக சீர்திருத்ததின் தந்தை என்று அழைக்கப்படுபவர் – அயோத்திதாச பண்டிதர்.

38) கல்வியோடு கைத்தொழில் போன்ற இதரத் தொழில்களும் கற்பிக்க வேண்டும் என்று கூறியவர் யார்?

A) தந்தை பெரியார்

B) பரிதிமாற்கலைஞர்

C) காமராசர்

D) அயோத்திதாசப் பண்டிதர்

விளக்கம்: கல்வியோடு கைத்தொழில், வேளாண்மை, தையல், மரம் வளர்த்தல் போன்றவற்றையும் கற்கவேண்டும் என்று வலியுறுத்தியவர் அயோத்திதாசப் பண்டிதர் ஆவார். இவர் சங்ககால பெண்களைப் போலவே, இக்காலப் பெண்களும் கல்விகற்றுத் தம் வாழ்க்கையைத் தாமே அமைத்துக் கொள்ளும் உரிமையைப் பெறவேண்டும் என்றும் கூறினார்.

39) எத்தனை அணாக்கள் கொண்டது ஒரு ரூபாய் ஆகும்?

A) 14

B) 8

C) 20

D) 16

விளக்கம்: அணா, சல்லி, துட்டு என்பது அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த நாணயப் பெயர்கள் ஆகும். பதினாறு அணாக்கள் கொண்டது ஒரு ரூபாய் ஆகும். அதனால்தான் இன்றும் பேச்சுவழக்கில் அரை ரூபாயை எட்டணா என்றும் கால் ரூபாயை நாலணா என்றும் கூறுகின்றனர்.

40) நகுதல் பொருட்டுஅன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தல் பொருட்டு – இக்குறட்பாவில் இடித்தல் என்ற சொல்லின் பொருள்?

A) அழித்தல்

B) நழுவுதல்

C) கடிந்துரைத்தல்

D) துன்பமடைதல்

விளக்கம்: இடித்தல் என்ற சொல்லின் பொருள் கடிந்துரைத்தல் என்பதாகும். நட்பு, சிரித்துப் பேசி மகிழ்வதற்கு மட்டுமன்று, நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது.

41) படமாடக் கோயில் பகவற்குஒன்ற ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா – இதில் பகவர் என்று குறிப்பிடப்படுபவர்?

A) அடியார்

B) இறைவன்

C) சித்தர்கள்

D) கோயில்

விளக்கம்: இங்கு பகவற்கு என்ற சொல்லின் பொருள் இறைவன் ஆகும். படங்களை அமைந்த மாடங்களையுடைய கோயிலில் வீற்றிருக்கும் இறைவன் என்று பொருள்.

42) அடக்கத் தாம்மாய ஐம்பொறியைக் கட்டிப்

படிக்கப் படிப்பு எனக்குப் பகராய் பராபரமே – என்ற பாடலடிகளில் இடம்பெற்ற பகராய் என்ற சொல்லின் பொருள்?

A) நீக்குவாய்

B) தருவாய்

C) பெறுவாய்

D) பார்ப்பாய்

விளக்கம்: பகராய் என்ற சொல்லின் பொருள் தருவாய் என்பதாகும். மேற்கண்ட பாடலடிகள் இடம்பெற்ற நூல் குணங்குடியார் பாடற்கோவை ஆகும்.

43) அயோத்திதாசர் எப்போது பிறந்தார்?

A) 1845 ஏப்ரல் 20

B) 1855 ஏப்ரல் 20

C) 1845 மே 20

D) 1855 மே 20

விளக்கம்: அயோத்திதாசர் 1845ஆம் ஆண்டு மே திங்கள் 20ஆம் நாள் சென்னையில் பிறந்தார். இவரே தென்னிந்தியச் சமூகச் சீர்த்திருத்ததின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

44) சிறுகதை மன்னன் என்று போற்றப்படுபவர் யார்?

A) ஜெயகாந்தன்

B) புதுமைப்பித்தன்

C) இரா.பி. சேதுப்பிள்ளை

D) மு.வ

விளக்கம்: சிறுகதை மன்னன் என்று போற்றப்படுபவர் புதுமைப்பித்தன் ஆவார். இவர் மணிக்கொடி இதழில் சிறுகதை எழுபவர் ஆவார்.

45) கீழ்க்கண்டவற்றுள் புதுமைப்பித்தன் எழுதாத நூல் எது?

A) கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்

B) சாபவிமோசனம்

C) மறுநாள் கழிந்தது

D) பொன்னகரம்

விளக்கம்: புதமைப்பித்தன் எழுதிய நூல்கள்:

1. பொன்னகரம்

2. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்

3. சாபவிமோசனம்

4. ஒருநாள் கழிந்தது.

46) கீழ்க்கண்டவற்றில் எது அயோத்திதாசர் எழுதாத நூல்?

A) புத்தரது ஆதிவேதம்

B) இந்திரர் தேச சரித்திரம்

C) விவாக விளக்கம்

D) பாலவாகடம்

விளக்கம்: அயோத்திதாசர் எழுதிய நூல்கள்:

1. புத்தரது ஆதிவேதம்

2. இந்திரர் தேச சரித்திரம்

3. விவாக விளக்கம்

4. புத்தர் சரித்திரப்பா

பாலவாகடம் என்பது அயோத்திதாசர் பதிப்பித்த நூல் ஆகும்.

47) அயேத்திதாசருக்கு கல்வி மற்றும் சித்த மருத்துவம் கற்றுக்கொடுத்தவர்?

A) காத்தவராயன்

B) அயோத்திதாசப் பண்டிதர்

C) இராமலிங்க அடிகள்

D) மேற்கண்ட யாருமில்லை

விளக்கம்: அயோத்தித் தாசப் பண்டிதர் என்பாரிடம் காத்தவராயன் என்னும் இயற்பெயர் கொண்ட (பிற்காலத்தில் அயோத்திதாசர் பண்டிதர் என்று அழைக்கப்பட்டவர்) கல்வி மற்றும் சித்தமருத்துவத்தை பயின்றார். தம்மீது அன்பு காட்டிய அந்த ஆசிரியரது பெயரையே தமது பெயராக வைத்துக்கொண்டார்.

48) யாப்பிலக்கத்தின்படி ஒற்று எழுத்தின் மாத்திரை எவ்வளவு?

A) 1

B) 2

C) 1 ½

D) ½

விளக்கம்: யாப்பிலக்கணத்தின்படி எழுத்துகளை மூன்றாகப் பிரிப்பர். அவையாவன

1. குறில் – உயிர்க்குறில், உயிர்மெய்க்குறில்

2. நெடில் – உயிர்நெடில், உயிர்மெய் நெடில்

3. ஒற்று – மெய்யெழுத்து, ஆய்த எழுத்து.

இதில் ஒற்றெழுத்துக்களின் மாத்திரை ½ மாத்திரை ஆகும்.

49) தவறாக பொருந்தியுள்ளதை தேர்க.

A) பகராய் – தருவாய்

B) பராபரம் – மேலான பொருள்

C) ஆனந்த வெள்ளம் – இன்பப்பெருக்கு

D) அறுத்தவருக்கு – பெற்றவருக்கு

விளக்கம்: பகராய் – தருவாய்

பராபரம் – மேலான பொருள்

ஆனந்த வெள்ளம் – இன்பப்பெருக்கு

அறுத்தவருக்கு – நீக்கியவருக்கு.

50) கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல் – இக்குறட்பாவில் உறுதி என்ற திருவள்ளுவர் குறிப்பிடுவது எது?

A) செயல்

B) நிச்சயமாக

C) நன்மை

D) நண்பர்கள்

விளக்கம்: உறுதி என்ற சொல்லின் பொருள் நன்மை என்பதாகும். நமக்கு வரும் துன்பத்திலும் ஒரு நன்மை உண்டு. அத்துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்துகாட்டும் அளவுகோலாகும் என்பது இக்குறட்பாவின் பொருள் ஆகும்.

படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்

51) நீலகிரிக்குச் சென்று அங்கு வாழ்ந்த அயோத்திதாசர், திருமணத்திற்குப் பிறகு எந்த நாட்டிற்கு சென்றார்?

A) வங்கதேசம்

B) நேபாளம்

C) பர்மா

D) பூடான்

விளக்கம்: நீலகிரிக்குச் சென்று அங்கு வாழ்ந்த அயோத்திதாசர், திருமணத்திற்குப் பிறகு பர்மாவுக்குச் சென்றார். அங்குக் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்துவந்த தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டார்.

52) அயோத்திதாசருக்கு கீழ்க்கண்ட எந்த மொழி தெரியாது?

A) பாலி

B) வடமொழி

C) ஆங்கிலம்

D) தெலுங்கு

விளக்கம்: அயோத்திதாசர் தமிழ் மட்டுமின்று, பாலி, வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சிப் பெற்றிருந்தார். இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், சமயத்தத்துவம் உள்ளிட்ட பல் துறை நூல்களையும் ஆழ்ந்து கற்றார்.

53) மக்கள் வாழ வேண்டிய முறை பற்றி அயோத்திதாசரின் சிந்தனைகளில் சரியானது எது?

1. மக்கள் அனைவரும் அன்புகொண்டு வாழவேண்டும்.

2. கோபம், பொறாமை, பொய், களவு போன்றவற்றைத் தம் வாழ்விலிருந்து நீக்கி வாழ வேண்டும்.

3. பிற உயிர்களுக்குத் துன்பம் தரக்கூடாது.

4. மதியை அழிக்கும் போதைப்பொருள்களைக் அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

A) 1, 2, 3 சரி

B) 2, 3 சரி

C) 1, 2, 3, 4 சரி

D) 3, 4 சரி

விளக்கம்: மக்கள் அனைவரும் அன்புகொண்டு வாழவேண்டும். கோபம், பொறாமை, பொய், களவு போன்றவற்றைத் தம் வாழ்விலிருந்து நீக்கி வாழ வேண்டும். பிற உயிர்களுக்குத் துன்பம் தரக்கூடாது. மேலும் மதியை அழிக்கும் போதைப்பொருள்களைக் கையாலும் தொடுதல் கூடாது.

54) ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது__________எனப்படும்.

A) தளை

B) சீர்

C) அடி

D) தொடை

விளக்கம்: ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது சீர் எனப்படும். சீர்கள் நான்கு வகைப்படும். அவை,

1. ஓரசைச்சீர்

2. ஈரசைச்சீர்

3. மூவசைச்சீர்

4. நாலசைச்சீர்.

55) ஒரு பைசாத் தமிழன் என்ற இதழ் பிறகு எந்த பெயர் சூட்டப்பட்டு வெளிவந்தது

A) பைசாத் தமிழன்

B) தமிழன்

C) தமிழகம்

D) தமிழ்நாடு

விளக்கம்: ஓர் ஆண்டிற்குப்பிறகு ஒருபைசாத் தமிழன் என்னும் வாரஇதழ் தமிழன் என்று பெயர் மாற்றப்பட்டு வெளிவந்தது. இது 1907ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது.

56) ஒரு பைசாத் தமிழன் இதழின் நோக்கம் என்ன?

A) இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், சமயத்தத்துவம் உள்ளிட்ட பல் துறை நூல் பற்றிய கருத்துக்களை மக்களிடம் பரப்புதல்.

B) சித்தமருத்துவ கருத்துக்களை மக்களிடம் பரப்புதல்

C) கூலித்தொழிலாளர்களாக இருக்கும் தமிழர்களின் நிலையை உயர்த்துதல்.

D) உயர்நிலையையும் இடைநிலையையும் கடைநிலையையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, நேர்மை, சரியான பாதை ஆகியவற்றைத் தெளிப்படுத்தல்

விளக்கம்: 1907ஆம் ஆண்டு சென்னையில் ஒரு பைசாத் தமிழன் என்று தொடங்கப்பட்ட இதழின் நோக்கம்: உயர்நிலையையும் இடைநிலையையும் கடைநிலையையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, நேர்மை, சரியான பாதை ஆகியவற்றைத் தெளிப்படுத்தல்.

57) Rational என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?

A) தொண்டு

B) நேர்மை

C) பகுத்தறிவு

D) சீர்திருத்தம்

விளக்கம்: தொண்டு – Charity

நேர்மை – Integrity

பகுத்தறிவு – Rational

சீர்திருத்தம் – Reform.

58) மரபு கவிதை எழுதுவதற்கான இலக்கணம்?

A) எழுத்து இலக்கணம்

B) பொருளிலக்கணம்

C) அணி இலக்கணம்

D) யாப்பு இலக்கணம்

விளக்கம்: குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகளை மரபுக்கவிதைகள். மரபு கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் யாப்பு இலக்கணம் எனப்படும்.

59) ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தொடர் இடம்பெற்றுள்ள நூல்?

A) திருமந்திரம்

B) திருவாசகம்

C) பெரியபுராணம்

D) புறநானூறு

விளக்கம்: ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தொடர் இடம்பெற்றுள்ள நூல் திருமந்திரம் ஆகும். இது தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படுகிறது. இது 3000 பாடல்களைக் கொண்டது.

60) கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல் – இக்குறட்பாவில் கிளைஞரை என்ற சொல்லின் பொருள்?

A) இளைஞர்

B) நண்பர்

C) உறவினர்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: கிளைஞரை என்ற சொல்லின் பொருள் நண்பர்கள் என்பதாகும். நமக்கு வரும் துன்பத்திலும் ஒரு நன்மை உண்டு. அத்துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்துகாட்டும் அளவுகோலாகும் என்பது இக்குறட்பாவின் பொருள் ஆகும்.

61) சங்ககால பெண்களைப் போலவே, இக்காலப் பெண்களும் கல்விகற்றுத் தம் வாழ்க்கையைத் தாமே அமைத்துக் கொள்ளும் உரிமையைப் பெறவேண்டும் – என்று எடுத்துரைத்தவர் யார்?

A) தந்தை பெரியார்

B) பரிதிமாற்கலைஞர்

C) காமராசர்

D) அயோத்திதாசப் பண்டிதர்

விளக்கம்: சங்ககால பெண்களைப் போலவே, இக்காலப் பெண்களும் கல்விகற்றுத் தம் வாழ்க்கையைத் தாமே அமைத்துக் கொள்ளும் உரிமையைப் பெறவேண்டும் என்று எடுத்துரைத்தவர் அயோத்திதாசப் பண்டிதர் ஆவார்.

62) யாப்பு இலக்கணத்தின் படி செய்யுளுக்கு உரிய உறுப்பகள் எத்தனை?

A) 2

B) 4

C) 6

D) 7

விளக்கம்: யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்குரிய உறுப்புகள் 6 ஆகும். அவை,

1. எழுத்து

2. அசை

3. சீர்

4. தளை

5. அடி

6. தொடை

63) நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) நம் + இல்லை

B) நமது + இல்லை

C) நமன் + நில்லை

D) நமன் + இல்லை

விளக்கம்: நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது நமன் + இல்லை என்பதாகும்.

64) புத்தர் சரித்திரப்பா என்ற நூலை எழுதியவர் யார்?

A) அம்பேத்கர்

B) அயோத்திதாசர்

C) தங்கவயல் அப்பாதுரை

D) அசோகர்

விளக்கம்: புத்தர் சரித்திரப்பா என்ற நூலை எழுதியவர் அயோத்திதாச பண்டிதர் ஆவார். இவர் எழுதிய பிற நூல்கள்:

1. புத்தரது ஆதிவேதம்

2. இந்திரர் தேச சரித்திரம்

3. விவாக விளக்கம்

4. புத்தர் சரித்திரப்பா.

65) யாப்பிலக்கணத்தின்படி எழுத்துக்களை எத்தனை வகையாகப் பிரிப்பர்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: யாப்பிலக்கணத்தின்படி எழுத்துகளை மூன்றாகப் பிரிப்பர். அவையாவன,

1. குறில் – உயிர்க்குறில், உயிர்மெய்க்குறில்

2. நெடில் – உயிர்நெடில், உயிர்மெய் நெடில்

3. ஒற்று – மெய்யெழுத்து, ஆய்த எழுத்து.

66) சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக் கூடாது. மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அது அமைய வேண்டும் என்பது யாருடைய கருத்து?

A) காந்தியடிகள்

B) அம்பேத்கர்

C) திலகர்

D) அயோத்திதாச பண்டிதர்

விளக்கம்: சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக் கூடாது. மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அது அமைய வேண்டும் – அயோத்திதாசர்.

67) யாருடைய பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்த்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாக பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் திகழ்ந்தவர்கள்?

A) தந்தை பெரியார்

B) அம்பேத்கர்

C) இராஜராம் மோகன்ராய்

D) அய்யன் காளி

விளக்கம்: என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்த்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள் – தந்தை பெரியார்.

68) சிறுகதைகளில் புதிய உத்திகளைக் கையாண்டவர் என திறனாய்வாளர்களால் பாராட்டப்படுபவர் யார்?

A) வரதன்

B) சொ. விருத்தாசலம்

C) எத்திராசலு

D) அரங்கசாமி

விளக்கம்: சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர் என்று திறனாய்வாளர்களால் போற்றப்படுபவர் – புதுமைப்பித்தன். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவரின் இயற்பெயரே சொ. விருத்தாசலம் என்பதாகும்.

69) அசை எத்தனை வகைப்படும் என்று யாப்பிலக்கணம் கூறுகிறது?

A) 2

B) 3

C) 4

D) 8

விளக்கம்: எழுத்துக்கள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது அசை. அது இரண்டு வகைப்படும். அவை,

1. நேரசை

2. நிரையசை

70) கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல் – இக்குறட்பாவில் நண்பரை அளக்கும் அளவுகோள் எது என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?

A) நமக்கு வரும் துன்பம்

B) நண்பருக்கு வரும் துன்பம்

C) நண்பரிடம் உள்ள பொருள்

D) நம்மிடம் உள்ள பொருள்

விளக்கம்: இக்குறட்பாவில் நண்பரை அளக்கும் அளவுகோள் எது என திருவள்ளுவர் குறிப்பிடுவது நமக்கு வரும் துன்பம். நமக்கு வரும் துன்பத்திலும் ஒரு நன்மை உண்டு. அத்துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்துகாட்டும் அளவுகோலாகும் என்பது இக்குறட்பாவின் பொருள் ஆகும்.

71) நிலவு நாளும் வளர்ந்து ஒளிவீசுவது போல் கல்வி நிறுவனங்களில் அறிவை வளர்க்கும் நூல்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்று கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர் யார்?

A) தந்தை பெரியார்

B) பரிதிமாற்கலைஞர்

C) காமராசர்

D) அயோத்திதாசப் பண்டிதர்

விளக்கம்: ஒரு மனிதன் அறிவு வளர்ச்சிப் பெற வேண்டுமானால், கல்வி அவசியம் என்ற அயோத்திதாசர் கருதினார். நிலவு நாளும் வளர்ந்து முழுநிலவாகி ஒளிவீசுவது போல் கல்வி நிறுவனங்களில் அறிவை வளர்க்கும் நூல்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்று கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

72) கூற்றுகளை ஆராய்க.

1. குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகள் – புதுக்கவிதைகள்

2. இலக்கணக்கட்டுப்பாடின்றி எழுதப்படும் கவிதைகள் – மரபுக் கவிதைகள்

3. கருத்துக்கு முதன்மை கொடுப்பது – மரபுக் கவிதைகள்

4. புதுக்கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் யாப்பு இலக்கணம் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1, 2, 3 சரி

C) அனைத்தும் சரி

D) அனைத்தும் தவறு

விளக்கம்: 1. குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகள் – மரபுக் கவிதைகள்

2. இலக்கணக்கட்டுப்பாடின்றி எழுதப்படும் கவிதைகள் – புதுக்கவிதைகள்

3. கருத்துக்கு முதன்மை கொடுப்பது – புதுக்கவிதைகள்

4. மரபுக் கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் யாப்பு இலக்கணம் ஆகும்.

73) Reform என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?

A) தத்துவம்

B) நேர்மை

C) பகுத்தறிவு

D) சீர்திருத்தம்

விளக்கம்: தத்துவம் – Philosophy

நேர்மை – Intefrity

பகுத்தறிவு – Rational

சீர்திருத்தம் – Reform

74) மதியை அழிக்கும் போதைப்பொருள்களைக் கையாலும் தொடுதல் கூடாது என்று கூறியவர் யார்?

A) காந்தியடிகள்

B) இராமலிங்கவள்ளலார்

C) தந்தை பெரியார்

D) அயோத்திதாசர்

விளக்கம்: மக்கள் அனைவரும் அன்புகொண்டு வாழவேண்டும். கோபம், பொறாமை, பொய், களவு போன்றவற்றைத் தம் வாழ்விலிருந்து நீக்கி வாழ வேண்டும். பிற உயிர்களுக்குத் துன்பம் தரக்கூடாது. மேலும் மதியை அழிக்கும் போதைப்பொருள்களைக் கையாலும் தொடுதல் கூடாது.

75) நடமாடக்கோயில் நம்பரக்குஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே – இத்தொடரில் நம்பரக்கு என்ற சொல்லின் பொருள்

A) இறைவன்

B) அடியார்

C) சித்தர்கள்

D) நாயன்மார்கள்

விளக்கம்: நம்பர் என்றால் அடியார் என்று பொருள். இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் திருமந்திரம். அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கும் சேரும்.

76) அறிவை அறிவோருக்கு ஆனந்த வெள்ளமதாய்க்

கரையறவே பொங்கும் கடலே பராபரமே – என்ற பாடலடியில் இடம்பெற்ற ஆனந்த வெள்ளம் என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

A) இன்பப் பெருக்கு

B) மேலான பொருள்

C) மகிழ்ச்சிக் கடல்

D) துன்ப மிகுதி

விளக்கம்: ஆனந்த வெள்ளம் என்ற சொல்லின் பொருள் இன்பப் பெருக்கு என்பதாகும். இதன் எதிர்ச்சொல் துன்ப மிகுதி.

77) தலைவர்கள் மாமனிதராக, அறிவாற்றல்பெற்றவராக, நன்னெறியைக் கடைப்பிடிப்பவராக இருக்கவேண்டும். என்று நாட்டுக்கு வழிகாட்டும் தலைவர் பற்றி விளக்கியவர் யார்?

A) அயோத்திதாச பண்டிதர்

B) பரிதிமாற்கலைஞர்

C) தந்தை பெரியார்

D) தங்கவயல் அப்பாதுரை

விளக்கம்: ஒரு நாட்டுக்கு வழிகாட்டும் தலைவர் பற்றி அயோத்திதாசரின் சிந்தனைகள்:

மக்களும் அவர்தம் நோக்கங்களும் பெருமைப்படத்தக்கனவாக இருக்கவேண்டுமென்றால், அவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி அமையவேண்டும்.

அவர் மக்களுள் மாமனிதராக, அறிவாற்றல்பெற்றவராக, நன்னெறியைக் கடைபிடிப்பவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தலைவரை வணக்கத்திற்கு உரியவராக மக்கள் ஏற்பார்கள். கடவுளெனத் துதிப்பார்கள் என்பது அயோத்திதாசர் கருத்து.

78) திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பு எப்போது தொடங்கப்பட்டது?

A) 1892

B) 1897

C) 1907

D) 1899

விளக்கம்: அயோத்திதாசர் தமது கொள்கைகளை வலியுறுத்தவும் ஒடுக்கப்பட்டோர் உரிமைகளைப் பாதுகாக்கவும் 1892 ஆம் ஆண்டு திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்.

79) ஒன்றே__________என்று கருதி வாழ்வதே மனிதப் பண்பாகும்.

A) குலம்

B) குளம்

C) குணம்

D) குடம்

விளக்கம்: ஒன்றே குலம் என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் – திருமந்திரம்.

மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவரே. இக்கருத்துக்களை நன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் தேவை இல்லை.

80) யாருடைய படைப்புகளுக்குப் பௌத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதினார் அயோத்திதாச பண்டிதர்?

A) திருவள்ளுவர்

B) கம்பர்

C) இளங்கோவடிகள்

D) புத்தர்

விளக்கம்: திருவள்ளுவர், ஒளவையார் ஆகியோரின் படைப்புகளுக்குப் பௌத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் அயோத்திதாசர் புதிய விளக்கங்களை எழுதியுள்ளார்.

81) சுல்தான் அப்துலகாதர் என்பது யாருடைய இயற்பெயர் ஆகும்?

A) வீரமாமுனிவர்

B) கால்டுவெல்

C) குணங்குடி மஸ்தான் சாகிபு

D) ஜி.யு. போப்

விளக்கம்: குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர் என்பதாகும்.

வீரமாமுனிவரின் இயற்பெயர் – கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி

82) சிறுகதை மன்னனின் இயற்பெயர் என்ன?

A) ஜெயகாந்தன்

B) சோ. விருத்தாசலம்

C) வரதன்

D) எத்திராசலு

விளக்கம்: சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருத்தாசலம் என்பதாகும்.

83) அயோத்திதாசர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கருக்கு முன்னோடி

2. தென்னிந்தியச் சமூகச் சீர்த்திருத்தத்தின் தந்தை

3. 1854 மே 20-ல் சென்னையில் பிறந்தார்.

4. இயற்பெயர் கார்த்திகைநாதன் என்பதாகும்.

A) 1, 2 சரி

B) 1, 2, 3 சரி

C) 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கருக்கு முன்னோடி

2. தென்னிந்தியச் சமூகச் சீர்த்திருத்தத்தின் தந்தை

3. 1845 மே 20-ல் சென்னையில் பிறந்தார்.

4. இயற்பெயர் காத்தவராயன் என்பதாகும்.

84) பொருத்துக.

அ. நமன் – 1. அடியார்

ஆ. ஈயில் – 2. எமன்

இ. சித்தம் – 3. ஈடேறுங்கள்

ஈ. உய்ம்மின் – 4. உள்ளம்

A) 2, 1, 4, 3

B) 2, 1, 3, 4

C) 1, 2, 3, 4

D) 1, 4, 3, 2

விளக்கம்: நமன் – எமன்

ஈயில் – அடியார்

சித்தம் – உள்ளம்

உய்ம்மின் – ஈடேறுங்கள்

85) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) புத்தர் சரித்திரப்பா – அயோத்திதாச பண்டிதர்

B) திருமந்திரம் – திருமூலர்

C) பொன்னகரம் – காத்தவராயன்

D) எக்காளக் கண்ணி – குணங்குடி மஸ்தான் சாகிபு

விளக்கம்: புத்தர் சரித்திரப்பா, புத்தரது ஆதிவேதம், இந்திரர் தேச சரித்திரம், விவாக விளக்கம் – அயோத்திதாச பண்டிதர்

திருமந்திரம் – திருமூலர்

பொன்னகரம், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சாபவிமோசனம், ஒருநாள் கழிந்தது – புதமைப்பித்தன்

எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி – குணங்குடி மஸ்தான் சாகிபு

86) ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகளை_________என்பர்?

A) மரபுக் கவிதை

B) புதுக்கவிதை

C) A மற்றும் B

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: பாவலர்கள் தம் உள்ளத்தில் தோன்றும் உயர்ந்த கருத்துக்களைப் பாடல்களாகப் படைக்கின்றனர். குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகளை மரபுக்கவிதைகள் என்பர்.

87) மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது எது?

A) வானம்

B) கடல்

C) மழை

D) கதிரவன்

விளக்கம்: மக்களையும் மழையையும் தொடர்புபடுத்தி அயோத்திதாசர் கூறியுள்ளார். வானம் பொய்ப்பதற்குக் காரணம் ஒழுக்கமுள்ள ஞானிகள் இல்லாமையே. கல்வி, அறிவு, அருள், ஒழுக்கம், ஒற்றுமை ஆகியன உடைய குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கைகூட உதவாது என்கிறார். அயோத்திதாச பண்டிதர்.

88) கூற்றுகளை ஆராய்க.

1. யாப்பிலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் 4.

2. யாப்பிலக்கணத்தின்படி எழுத்துக்களை மூன்றாகப் பிரிக்கலாம்

3. அசை நான்கு வகைப்படும்.

4. சீர் இரண்டு வகைப்படும்

A) 1, 2 சரி

B) 1, 3, 4 சரி

C) 2 மட்டும் சரி

D) அனைத்தும் தவறு

விளக்கம்: 1. யாப்பிலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் 6.

2. யாப்பிலக்கணத்தின்படி எழுத்துக்களை மூன்றாகப் பிரிக்கலாம்

3. அசை இரண்டு வகைப்படும்.

4. சீர் நான்கு வகைப்படும்.

89) அயோத்திதாசர் எப்போது ஒருபைசாத் தமிழன் என்ற வார இதழை தொடங்கினார்?

A) 1908

B) 1907

C) 1906

D) 1905

விளக்கம்: 1907ஆம் ஆண்டு சென்னையில் ஒருபைசாத் தமிழன் என்னும் வாரஇதழை காலணா விலையில் தொடங்கினார் அயோத்திதாசப் பண்டிதர்.

90) பொருத்துக.

அ. தொண்டு – 1. Integrity

ஆ. ஞானி – 2. Charity

இ. தத்துவம் – 3. Saint

ஈ. நேர்மை – 4. Philosophy

A) 1, 2, 3, 4

B) 2, 1, 3, 4

C) 2, 3, 4, 1

D) 2, 4, 3, 1

விளக்கம்: தொண்டு – Charity

ஞானி – Saint

தத்துவம் – Philosophy

நேர்மை – Integrity.

91) இலக்கணக் கட்டுபாடுகளின்றிக் கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதைகள்______எனப்படும்?

A) மரபுக் கவிதை

B) புதுக்கவிதை

C) A மற்றும் B

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: பாவலர்கள் தம் உள்ளத்தில் தோன்றும் உயர்ந்த கருத்துக்களைப் பாடல்களாப் படைக்கின்றனர். குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகளை மரபுக்கவிதைகள் என்பர். இலக்கணக் கட்டுபாடுகளின்றிக் கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்படும்.

92) இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது________எனப்படும்?

A) அசை

B) சீர்

C) தளை

D) அடி

விளக்கம்: இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது அடி எனப்படும். அடி ஐந்து வகைப்படும்.

93) தொடை எத்தனை வகைப்படும்?

A) 5

B) 7

C) 8

D) 4

விளக்கம்: செய்யுளில் ஓசை இன்பமும் பொருள் இன்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமையே தொடை ஆகும். தொடை எட்டு வகைப்படும். முதன்மையான தொடைகள்:

1. மோனை

2. எதுகை

3. இயைபு

4. அந்தாதி

94) காசை விரும்பிக் கலங்கிநின்று உன்பாத

ஆசை விரும்பாது அலைந்தேன் பராபரமே – என்ற பாடலடிகளில் இடம்பெற்ற பராபரம் என்ற சொல்லின் பொருள்?

A) மேலான பரம்பொருள்

B) இறைவன்

C) விலையுயர்ந்த பொருள்

D) A மற்றும் B

விளக்கம்: காசை விரும்பிக் கலங்கிநின்று உன்பாத

ஆசை விரும்பாது அலைந்தேன் பராபரமே – குணங்குடி மஸ்தான் சாகிபு.

பராபரம் என்ற சொல்லின் பொருள் – மேலான பொருள், இறைவன் என்பதாகும்.

இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் குணங்குடியார் பாடற்கோவை ஆகும்.

உன் திருவடிகளின்மேல் பற்று வைக்காமல், பணத்தின்மீது ஆசை வைத்ததால் நான் மனம் கலங்கி அலைகின்றேன் என்பது மேற்கண்ட பாடலடியின் பொருளாகும்.

95) அயோத்திதாசர் பதிப்பித்த நூல்களில் பொருந்தாதது எது?

A) போகர் எழுநூறு

B) அகத்தியர் இருநூறு

C) சிமிட்டு இரத்திரனாவளி

D) பாலவாகடம்

விளக்கம்: அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள்:

போகர் எழுநூறு

அகத்தியர் இருநூறு

சிமிட்டு இரத்தினச் சுருக்கம்

பாலவாகடம்.

96) யாப்பிலக்கணத்தில் பா எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பா நான்கு வகைப்படும். அவை,

1. வெண்பா

2. ஆசிரியப்பா

3. கலிப்பா

4. வஞ்சிப்பா.

97) அறநூல்கள் பலவும் எந்த ஓசையில் இயற்றப்பட்டுள்ளது?

A) அகவல் ஓசை

B) செப்பல் ஓசை

C) துள்ளல் ஓசை

D) தூங்கல் ஓசை

விளக்கம்: பா நான்கு வகைப்படும். அவை,

1. வெண்பா

2. ஆசிரியப்பா

3. கலிப்பா

4. வஞ்சிப்பா

வெண்பா செப்பல் ஓசை உடையது. அறநூல்கள் பலவும் வெண்பாவால் அமைந்தவை.

98) சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை மக்களிடம் பரவலாக்கியவர்கள் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆவார்கள். இவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்?

A) அயோத்திதாச பண்டிதர்

B) இராஜராம் மோகன் ராய்

C) தயானந்த சரஸ்வதி சுவாமிகள்

D) இராமலிங்க அடிகள்

விளக்கம்: சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை மக்களிடம் பரவலாக்கியவர்கள் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆவார்கள். இவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் அயோத்தித் தாச பண்டிதர் ஆவார்.

99) துள்ளல் ஓசை உடைய பாவகை எது?

A) வெண்பா

B) ஆசிரியப்பா

C) கலிப்பா

D) வஞ்சிப்பா

விளக்கம்: கலிப்பா துள்ளல் ஓசை உடையது. கலித்தொகை கலிப்பாவால் ஆனது.

100) பொருத்துக.

அ. வெண்பா – 1. அகவல் ஓசை

ஆ. ஆசிரியப்பா – 2. துள்ளல் ஓசை

இ. கலிப்பா – 3. தூங்கல் ஓசை

ஈ. வஞ்சிப்பா – 4. செப்பல் ஓசை

A) 1, 2, 3, 4

B) 4, 3, 1, 2

C) 4, 3, 2, 1

D) 4, 1, 2, 3

விளக்கம்: வெண்பா – செப்பல் ஓசை

ஆசிரியப்பா – அகவல் ஓசை

கலிப்பா – துள்ளல் ஓசை

வஞ்சிப்பா – தூங்கல் ஓசை.

101) கூற்றுகளை ஆராய்க.

1. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது – எதுகை

2. இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது – மோனை

3. இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது – இயைபு.

4. ஒரு பாடலின் இறுதிச் சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது அந்தாதித் தொடை

A) 1, 2 சரி

B) 3, 4 சரி

C) 1, 3 சரி

D) 2, 3, 4 சரி

விளக்கம்: 1. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது – மோனை

2. இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது – எதுகை

3. இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது – இயைபு.

4. ஒரு பாடலின் இறுதிச் சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது அந்தாதித் தொடை.

102) விடும் என்பது_________சீர்.

A) நேரசை

B) நிரையசை

C) மூவசை

D) நாலசை

விளக்கம்: விடும் என்பது நிரையசையாகும்..

இரண்டு குறில் எழுத்துக்கள் அல்லது குறில், நெடில் எழுத்துக்கள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும். எ.கா. கட, கடல், கடா, கடாம்.

இங்கு இரு குறில் எழுத்துடன் மெய் எழுத்தும் சேர்ந்து வந்துள்ளது. எனவே நிரையசையாகும்.

103) கான முயல்எய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தலர் இனிது – என்ற குறளின் அணி எது?

A) வேற்றுமை அணி

B) பிறிதுமொழிதல் அணி

C) உவமை அணி

D) இரட்டுற மொழிதல் அணி

விளக்கம்: இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி பிறிதுமொழிதல் அணி. உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது பிறிதுமொழிதல் அணி எனப்படும்.

காட்டுமுயலை வீழ்த்தி அம்பினை ஏந்துவதைவிட யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும் என்பதே இக்குறட்பாவில் பொருள் ஆகும். இது உவமை.

இதன் மூலம் கூறவந்த கருத்து பெரு முயற்சியே பெருமை தரும் என்பதாகும்.

104) கான முயல்எய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தலர் இனிது – இக்குறட்பாவில் கான என்ற சொல்லின் பொருள் என்ன?

A) மரம்

B) காடு

C) கண்டு

D) முயல்

விளக்கம்: கான என்ற சொல்லின் பொருள் காடு என்பதாகும். காட்டுமுயலை வீழ்த்தி அம்பினை ஏந்துவதைவிட யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும். (பெரிய முயற்சியே பெருமை தரும் என்பதே இக்குறட்பாவில் பொருள் ஆகும்.

105) நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு – இக்குறட்பாவில் பயின்று வரும் அணி எது?

A) வேற்றுமை அணி

B) பிறிதுமொழிதல் அணி

C) உவமை அணி

D) இரட்டுற மொழிதல் அணி

விளக்கம்: இக்குறட்பாவில் பயின்று வரும் அணி உவமை அணியாகும். நல்ல நூல்களைப் படிக்கப் படிக்க இன்பம் தருவதுபோலப் பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும். இங்கு போல என்னும் உவம உருபு வந்துள்ளது. எனவே இது உவமை அணியாகும்.

106) பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலம்தீமை யால்திரிந்து அற்று – இக்குறட்பாவில் பயின்று வரும் அணி எது?

A) வேற்றுமை அணி

B) பிறிதுமொழிதல் அணி

C) உவமை அணி

D) இரட்டுற மொழிதல் அணி

விளக்கம்: இக்குறட்பாவில் பயின்று வரும் அணி உவமை அணியாகும். தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் திரிந்துவிடும். அதுபோல நற்பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் யாருக்கும் பயனின்றி அழியும். இங்கு போல என்னும் உவம உருபு வந்துள்ளது. எனவே இது உவமை அணியாகும்.

107) ஆண்மையின் கூர்மை_________

A) வறியவருக்கு உதவுதல்

B) பகைவருக்கு உதவுதல்

C) நண்பனுக்கு உதவுதல்

D) உறவினருக்கு உதவுதல்

விளக்கம்: பகைவருக்கும் துன்பம் வரும்போது, உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.

108) வறுமை வந்த காலத்தில்___________குறையாமல் வாழ வேண்டும்.

A) இன்பம்

B) தூக்கம்

C) ஊக்கம்

D) ஏக்கம்

விளக்கம்: வறுமை வந்த காலத்தில் ஊக்கம் குறையாமல் பெருமித உணர்வுடன் வாழவேண்டும்.

109) பெருஞ்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) பெரிய + செல்வம்

B) பெருஞ் + செல்வம்

C) பெரு + செல்வம்

D) பெருமை + செல்வம்

விளக்கம்: பெருஞ்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது பெருமை + செல்வம் ஆகும்.

110) ஊராண்மை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) ஊர் + ஆண்மை

B) ஊராண் + மை

C) ஊ + ஆண்மை

D) ஊரு + ஆண்மை

விளக்கம்: ஊராண்மை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ஊர் + ஆண்மை ஆகும்.

111) திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

A) திரிந்ததுஅற்று

B) திரிந்தற்று

C) திரிந்துற்று

D) திரிவுற்று

விளக்கம்: திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் திரிந்தற்று ஆகும்.

நிலைமொழியின் இறுதி எழுத்து து (த் + உ). வருமொழியின் முதல் எழுத்து அ (உயிர் எழுத்து).

திரிந்த் + அற்று (உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்).

திரிந் + த் + அற்று=திரிந்தற்று (உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே).

112) பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்.

ஊராண்மை மற்றுஅதன் எஃகு – இதில் எஃகு என்ற சொல்லின் பொருள்?

A) இரும்பு

B) உலோகம்

C) வலிமை

D) கூர்மை

விளக்கம்: இங்கு எஃகு என்ற சொல்லின் பொருள் கூர்மை ஆகும். பகைவரை எதிர்த்து நிற்கும் வீரத்தை ஆண்மை என்று கூறுவர். பகைவருக்கு துன்பம் வரும்போது உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர் என்பது இக்குறட்பாவின் விளக்கம் ஆகும்.

113) ஆனந்தவெள்ளம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) ஆனந்த + வெள்ளம்

B) ஆனந்தன் + வெள்ளம்

C) ஆனந்தம் + வெள்ளம்

D) ஆனந்தர் + வெள்ளம்

விளக்கம்: ஆனந்தவெள்ளம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ஆனந்தம் + வெள்ளம் என்பதாகும்.

114) நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு – இக்குறட்பாவில் நயம் என்ற சொல்லின் பொருள்?

A) சிரித்தல்

B) இன்பம்

C) நட்பு

D) படித்தல்

விளக்கம்: நயம் என்ற சொல்லின் பொருள் இன்பம் ஆகும். நல்ல நூல்களை படிக்கப் படிக்க இன்பம் தருவதுபோல் பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும் என்பது இக்குறட்பாவின் பொருள் ஆகும்.

115) தொடை எட்டு வகைப்படும். கீழ்க்கண்டவற்றில் எது முதன்மையான தொடை அல்ல?

A) மோனை

B) எதுகை

C) முரண்

D) இயைபு

விளக்கம்: செய்யுளில் ஓசை இன்பமும் பொருள் இன்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமையே தொடை ஆகும். தொடை எட்டு வகைப்படும். முதன்மையான தொடைகள்:

1. மோனை

2. எதுகை

3. இயைபு

4. அந்தாதி

116) நகுதல் பொருட்டுஅன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தல் பொருட்டு – இக்குறட்பாவில் நகுதல் என்ற சொல்லின் பொருள்?

A) சிரித்தல்

B) நழுவுதல்

C) பேசுதல்

D) மகிழ்தல்

விளக்கம்: நகுதல் என்ற சொல்லின் பொருள் சிரித்தல் என்பதாகும். நட்பு, சிரித்துப் பேசி மகிழ்வதற்கு மட்டுமன்று, நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது.

117) யாப்பிலக்கணத்தின் உறுப்புகளில் ஒன்றாகிய தளை எத்தனை வகைப்படும்?

A) 4

B) 5

C) 7

D) 8

விளக்கம்: சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதைத் தளை என்பர். முதல் சீரின் இறுதியிலும் வரும் சீரின் முதலிலும் உள்ள அசைகள் எவ்வகை அசைகள் என்பதன் அடிப்படையில் தளை ஏழு வகைப்படும்.

118) அன்பும் ஆறுதலும் நிறைந்த நாட்டில் புலியும் பசுவும் ஒரே நீர்த்துறையில் நீர் அருந்தும் என்று கூறியவர் யார்?

A) புதுமைப்பித்தன்

B) அயோத்திதாசர்

C) இராமலிங்க அடிகள்

D) மேற்கண்ட யாருமில்லை

விளக்கம்: ஒரு குடும்பத்தில் அன்பும் ஆறுதலும் நிறைந்தால், அக்குடும்பம் வாழும் ஊர் முழுவதும் அன்பும் ஆறுதலும் பெறும். ஊர்கள் அன்பும் ஆறுதலும் பெறுமானால் நாடு முழுவதும் அன்பும் ஆறுதலும் பெறும். இத்தகைய நாட்டில் புலியும் பசுவும் ஒரே நீத்துறையில் நீர் அருந்தும் என்பவை அயோத்திதாசர் கருத்துகள்.

119) எப்போது ஊக்கம் குறையாமல் பெருமித உணர்வுடன் வாழவேண்டும் என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?

A) செல்வம் மிகுந்த காலத்தில்

B) நண்பர்கள் உதவி செய்யும் காலத்தில்

C) வறுமை வந்த காலத்தில்

D) நண்பர் உதவாத காலத்தில்

விளக்கம்: வறுமை வந்த காலத்தில் ஊக்கம் குறையாமல் பெருமித உணர்வுடன் வாழவேண்டும் என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு.

செல்வம் மிகுந்த காலத்தில் பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும். வறுமை வந்த காலத்தில் ஊக்கம் குறையாமல் பெருமித உணர்வுடன் வாழவேண்டும் என்பதே இக்குறட்பாவின் விளக்கமாகும்.

120) ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும் – இக்குறட்பாவில் கேண்மை என்ற சொல்லின் பொருள்?

A) சுற்றம்

B) நட்பு

C) உறவினர்

D) அன்பு

விளக்கம்: கேண்மை என்ற சொல்லின் பொருள் நட்பு ஆகும். மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பாராமல் ஒருவனுடன் கொண்ட நட்பு தாம் சாகும் அளவுக்குத் துன்பம் தரும் என்பது இக்குறட்பாவின் பொருள் ஆகும்.

121) கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல் – இக்குறட்பாவில் கேட்டினும் என்ற சொல்லின் பொருள்?

A) கேட்டாலும்

B) துன்பம் வரினும்

C) கேட்காமலும்

D) துன்பம் வராமலும்

விளக்கம்: கேட்டினும் என்ற சொல்லின் பொருள் துன்பம் வரினும் என்பதாகும். நமக்கு வரும் துன்பத்தினாலும் ஒரு நன்மை உண்டு. அத்துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்துகாட்டும் அளவுகோலாகும் என்பது இக்குறட்பாவின் பொருள் ஆகும்.

122) நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா – இதில் நடமாடக்கோயில் என்ற சொல்லின் பொருள்?

A) அடியார்

B) இறைவன்

C) சித்தர்கள்

D) கோயில்

விளக்கம்: இங்கு நடமாடக் கோயில் என்ற சொல்லின் பொருள் அடியார். படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒருபொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால் அது நடமாடும் கோயிலாகிய உடம்பையுடைய அடியார்க்குச் சேராது.

123) காத்தவராயன் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இவரின் ஆசிரியர் பெயர் அயோத்திதாச பண்டிதர்

2. பர்மாவில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்த தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டார்.

3. 1908ஆம் ஆண்டில் சென்னையில் ஒரு பைசாத்தமிழன் என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கினார்.

4. மனிதனின் அறிவு வளர்ச்சிப்பெற வேண்டுமானால், கல்வி அறிவு அவசியம் என்று கருதினார்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: 1. இவரின் ஆசிரியர் பெயர் அயோத்திதாச பண்டிதர்

2. பர்மாவில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்துவந்த தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டார்.

3. 1907ஆம் ஆண்டில் சென்னையில் ஒரு பைசாத்தமிழன் என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கினார்.

4. மனிதனின் அறிவு வளர்ச்சிப்பெற வேண்டுமானால், கல்வி அறிவு அவசியம் என்று கருதினார்.

124) கூற்று: அயோத்திதாசரை அன்றைய தமிழர்கள் தனித்தன்மை உடைய சிந்தனையாளாராக மதித்தனர்.

காரணம்: பகுத்தறிவு, இலக்கியம், சமூகம், சமயம், அரசியல், வரலாறு, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறை கொண்டு புதிய சிந்தனைகளை விதைத்தவர் அயோத்திதாசர்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: அயோத்திதாசரை அன்றைய தமிழர்கள் தனித்தன்மை உடைய சிந்தனையாளாராக மதித்தனர். பகுத்தறிவு, இலக்கியம், சமூகம், சமயம், அரசியல், வரலாறு, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறை கொண்டு புதிய சிந்தனைகளை விதைத்தவர் அயோத்திதாசர்.

125) நமக்கு துன்பம் வருவதிலும் ஓர் நன்மை உண்டு என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதற்கான காரணம் என்ன?

A) நாம் ஒழுக்கத்துடன் வாழ

B) நாம் பிறருக்கு உதவி செய்ய

C) நண்பர் பற்றி நாம் அறிய

D) ஆசையை துறந்து வாழ

விளக்கம்: நமக்கு வரும் துன்பத்திலும் ஒரு நன்மை உண்டு. அத்துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்துகாட்டும் அளவுகோலாகும்.

கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்.

126) ஆராய்ந்து பாராமல் கொண்ட நட்பு பற்றி திருவள்ளுவர் குறிப்பிடுவது எது?

A) இடையில் முறியும்

B) துன்பத்துடன் தொடரும்

C) சாகும் அளவுக்குத் துன்பம் தரும்

D) விரைவில் முறியும்.

விளக்கம்: மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பாராமல் ஒருவனுடன் கொண்ட நட்பு தாம் சாகும் அளவுக்குத் துன்பம் தரும்.

127) கான முயல்எய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது – இக்குறட்பாவில் திருவள்ளுவர் குறிப்பிடும் செய்தி எது?

A) பெருமுயற்சியே பெருமை தரும்

B) தகுந்த படையுடன் சென்று போரிடல் வேண்டும்

C) தகுந்த காலத்தில் போர் தொடங்க வேண்டும்

D) தகுந்த பயிற்சி பெற்றவருடன் சென்று போரிடல் வேண்டும்

விளக்கம்: காட்டுமுயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும். அதாவது இக்குறட்பாவில் பெரிய முயற்சியே பெருமை தரும் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

128) பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு – இக்குறட்பாவில் பெருக்கத்து வேண்டும் என்று குறிப்பிடப்படுவது எது?

A) இன்பம்

B) செல்வம்

C) நண்பர்கள்

D) பதவி

விளக்கம்: இக்குறட்பாவில் பெருக்கத்து வேண்டும் என்று குறிப்பிடப்படுவது செல்வம் ஆகும். செல்வம் மிகுந்த காலத்தில் பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும். வறுமை வந்த காலத்தில் ஊக்கம் குறையாமல் பெருமித உணர்வுடன் வாழவேண்டும் என்பதே இக்குறட்பாவின் விளக்கமாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!