Science Questions

9th Std Science Lesson Wise Questions in Tamil – Part 3

9th Science Lesson 16 Questions in Tamil

16] பயன்பாட்டு வேதியியல்

1) நானோ என்ற வார்த்தையானது எந்த மொழிச் சொல்லிலிருந்து உருவானது?

A) கிரேக்கம்

B) இலத்தீன்

C) பிரெஞ்சு

D) அரபு

விளக்கம்: நானோ என்ற வார்த்தையானது ‘நானோஸ்’ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவானது. நானோ வேதியியல் என்பது நானோ அறிவியலின் ஒரு பிரிவு ஆகும்.

2) கூற்று: ஒவ்வொரு வேதியலாளர்களும் புதிய கருத்துக்களையும், கோட்பாடுகளையும் கண்டறிகின்றனர்

காரணம்: அன்றாட வாழ்வில் நாம் பல்வேறு வழிகளில் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்கிறோம்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: அன்றாட வாழ்வில் நாம் பல்வேறு வழிகளில் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்கிறோம். இத்தகைய இடையூறுகளே ஒவ்வொரு வேதியியலாளர்களிடமிருந்தும் புதிய கருத்துகளையும் கோட்பாடுகளையும் வெளிக்கொணர்கின்றன.

3) நானோ என்ற வார்த்தை கீழ்க்கண்ட எதைக் குறிக்கிறது?

A) ஒரு மீட்டரில் மில்லியனில் ஒரு பகுதி

B) ஒரு மீட்டரில் பில்லியனில் ஒரு பகுதி

C) ஒரு மீட்டரில் லட்சத்தில் ஒரு பகுதி

D) ஒரு மீட்டரில் பத்தாயிரத்தில் ஒரு பகுதி

விளக்கம்: நானோ என்ற வார்த்தையானது ‘நானோஸ்’ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவானது. ஒது மீட்டரில் பில்லியனில் ஒரு பகுதி என்பதை இது குறிக்கிறது

4) ஒரு நானோ மீட்டர் என்பது?

A) 10-9

B) 0.00000001

C) 10-12

D) A மற்றும் B

விளக்கம்: ஒரு நானோ மீட்டர் என்பது 10-9 அல்லது 0.000000001 மீட்டர் ஆகும். நானோ வேதியியல் என்பது நானோ பொருட்களை நானோ தொழில்நுட்பத்திற்குப் பயன்படுத்தும் வேதியியல் பயன்பாட்டைப் பற்றியதாகும்.

5) ஒரு வினாடியில் நமது நகம் எத்தனை நானோ மீட்டர் வளர்கிறது?

A) 1

B) 5

C) 0.1

D) 0.5

விளக்கம்: ஒரு வினாடியில் நமது நகம் ஒரு நானோ மீட்டர் வளர்கிறது. ஒரு நானோ மீட்டர் என்பது 10-9 அல்லது 0.000000001 மீட்டர் ஆகும்

6) ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம்?

A) 0.1 நானோ மீட்டர்

B) 0.2 நானோ மீட்டர்

C) 0.5 நானோ மீட்டர்

D) 0.75 நானோ மீட்டர்

விளக்கம்: ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம் 0.2 நானோ மீட்டர் ஆகும். ஒரு நானோ மீட்டர் என்பது 10-9. தனிம வரிசை அட்டவணையில் முதல் தனிமம் ஹைட்ரஜன். இது ஒரு அலோகம் ஆகும்.

7) சரியான ஒன்றை தேர்வு செய்க.

A) SEM – Scanning Electron Microscope

B) TEM – Transmission Electron Microscope

C) AFM – Atomic Froce Mircroscope

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: நானோ பொருட்களின் பயன்பாடுகள் அவற்றின் புறப்பரப்புப் பண்புகளைப் பொறுத்தே அமைகிறது என்பதால், அவற்றை ஆய்வதற்கு அதிக திரைத்திறன் வாய்ந்த வருடி எலக்ட்ரான் நுண்ணோக்கி தேவைப்படுகிறது. அவை,

SEM – Scanning Electron Microscope

TEM – Transmission Electron Microscope

AFM – Atomic Froce Mircroscope

8) நானோ துகள்கள் எந்த வாயுவுடன் தொடர்பு கொள்ளும் போது உறுதியற்ற தன்மையை அடைகின்றன?

A) ஹைட்ரஜன்

B) நைட்ரஜன்

C) ஆக்ஸிஜன்

D) ஹீலியம்

விளக்கம்: நானோ துகள்கள் ஆக்ஸிஜனோடு தொடர்பு கொள்ளும் போது உறுதியற்ற தன்மையை அடைகின்றன. அவை ஆக்ஸிஜனுடன் வெப்ப உமிழ் எரிதல் வினைபுரிந்து வெடித்துச் சிதற வாய்ப்புள்ளது

9) நானோ பொருட்களின் பயன்பாடுகள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. உலோக நானோ துகள்கள் செயல்திறன் மிக்க வினையூக்கிகளாக பயன்படுகின்றன.

2. நானோ மேற்பூச்சுகள், நானோ கலப்புப்பொருள்கள் ஆகியவை விளையாட்டுப் பொருள்கள், மிதி வண்டி, ஊர்திகள் போன்றவைகளை உருவாக்கப் பயன்படுகின்றன.

3. அறுவைச் சிகிச்சைகளுக்கு பயன்படும் செயற்கைத் தோல்களை உருவாக்க நானோ தொழில்நுட்பம் பயன்படுகிறது

4. மின் கடத்துத்திறன் கொண்ட நானோ துகள்கள் மின்னணுவியல் துறையில் நுண் சில்லுகளாக பயன்படுகின்றன.

A) 1, 2, 3 சரி

B) 1, 4 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. உலோக நானோ துகள்கள் செயல்திறன் மிக்க வினையூக்கிகளாக பயன்படுகின்றன.

2. நானோ மேற்பூச்சுகள், நானோ கலப்புப்பொருள்கள் ஆகியவை விளையாட்டுப் பொருள்கள், மிதி வண்டி, ஊர்திகள் போன்றவைகளை உருவாக்கப் பயன்படுகின்றன.

3. அறுவைச் சிகிச்சைகளுக்கு பயன்படும் செயற்கைத் தோல்களை உருவாக்க நானோ தொழில்நுட்பம் பயன்படுகிறது

4. மின் கடத்துத்திறன் கொண்ட நானோ துகள்கள் மின்னணுவியல் துறையில் நுண் சில்லுகளாக பயன்படுகின்றன.

10) பொருத்துக.

அ. தாவரங்கள் – 1. திரவ பாரஃபின்

ஆ. ரசாயனத் தொகுப்பு – 2. மார்ஃபின்

இ. விலங்கு – 3. ஆஸ்பிரின்

ஈ. கனிமம் – 4. இன்சுலின்

A) 2, 3, 1, 4

B) 2, 3, 4, 1

C) 3, 2, 1, 4

D) 3, 2, 4, 1

விளக்கம்: தாவரங்கள் – மார்ஃபின்

ரசாயனத் தொகுப்பு – ஆஸ்பிரின்

விலங்கு – இன்சுலின்

கனிமம் – திரவ பாரஃபின்

11) டிரக் என்ற வார்த்தையானது டிரக்யூ என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இது எம்மொழிச்சொல்?

A) கிரேக்கம்

B) இலத்தீன்

C) பிரெஞ்சு

D) அரபு

விளக்கம்: டிரக் என்ற வார்த்தையானது டிரக்யூ என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளது. இதன் பொருள் காய்ந்த மூலிகை என்பதாகும்.

12) உட்கொள்பவரின் நலனுக்காக அவரது உடலியல் அமைப்பைப் பற்றி அறிவதற்காகவோ அல்லது நோயியல் நிலை குறித்து ஆராய்வதற்காகவே, பயன்படுத்தப்படும் பொருள் அல்லது தயாரிப்பே மருந்து என்று மருந்து பற்றி வரையறு செய்த அமைப்பு?

A) ஐ.நா சபை

B) நோபல் பரிசு குழு

C) உலக சுகாதார நிறுவனம்

D) உலக மருத்துவ சங்கம்

விளக்கம்: உலக சுகாதரா அமைப்பனாது மருந்து என்பதை பின்வருமாறு வரையறுக்கிறது. உட்கொள்பவரின் நலனுக்காக அவரது உடலியல் அமைப்பைப் பற்றி அறிவதற்காகவோ அல்லது நோயியல் நிலை குறித்து ஆராய்வதற்காகவே, பயன்படுத்தப்படும் பொருள் அல்லது தயாரிப்பே மருந்து.

13) மருந்துகள் பொதுவாக எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன?

A) 5

B) 4

C) 3

D) 2

விளக்கம்: மருந்துகள் பொதுவாக இருபிரிவுகளாக வகைப்படுத்துப்படுகின்றன. அவை,

1. குறிப்பிட்ட வியாதிக்கு சிகிச்சையளித்து, அதைக் குணமாக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள்.

2. சில மருந்துகள் வியாதியைக் குணப்படுத்தவிடினும், மனித உடலில் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தும் தன்மையுள்ளதாக இருக்கின்றன. (எ.கா) மார்ஃபின் மற்றும் கொகைன் போன்றவை

14) தற்போது பயன்படுத்தப்படாத மயக்க மருந்து எது?

A) நைட்ரஸ் ஆக்ஸைடு

B) குளோரோஃபார்ம்

C) ஈதர்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: குளோரோஃபார்ம் என்ற மயக்க மருந்து தற்போது பயன்படுத்தப்படுவதில்லை. இது ஆக்ஸிஜனுடன் வினைபுரியும்போது நச்சுத் தன்மையுள்ள கார்போனைல் குளோரைடை உருவாக்குகிறது.

15) வைரஸ்-ன் விட்டம் எத்தனை நானோ மீட்டர் கொண்டது?

A) 10

B) 20

C) 30

D) 40

விளக்கம்: நமக்கு சளி மற்றும் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் சுமார் 30 நானோ மீட்டர் விட்டம் கொண்டது.

16) மைய நரம்புமண்டலத்தைத் தாக்கி நோயாளியை உணர்விழக்கச் செய்யும் மயக்க மருந்து எது?

A) நைட்ரஸ் ஆக்ஸைடு

B) குளோரோஃபார்ம்

C) ஈதர்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: ஈதர், திசுக்களால் உட்கவரப்பட்டு பிறகு மைய நரம்பு மண்டலத்தைத் தாக்கி நோயாளியை உணர்விழக்கச் செய்கிறது

17) மயக்க மருந்துகளுள் மிகவும் பாதுகாப்பானது?

A) நைட்ரஸ் ஆக்ஸைடு

B) குளோரோஃபார்ம்

C) ஈதர்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: மயக்க மருந்துகளில் மிகவும் பாதுகாப்பானது நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகும்.

18) குளோரோஃபார்ம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இது எளிதில் ஆவியாகும் திரவம்.

2. இனிமையான மணம் கொண்டது

3. இனிப்புச் சுமை கொண்டது

4. ஆக்ஸிஜனுடன் வினைபுரியும்போது நச்சுத் தன்மையுள்ள கார்போனைல் குளோரைடை உருவாக்குகிறது

A) 1, 2, 3 சரி

B) 1, 3, 4 சரி

C) 1, 2 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இது எளிதில் ஆவியாகும் திரவம்.

2. இனிமையான மணம் கொண்டது

3. இனிப்புச் சுமை கொண்டது

4. ஆக்ஸிஜனுடன் வினைபுரியும்போது நச்சுத் தன்மையுள்ள கார்போனைல் குளோரைடை உருவாக்குகிறது

19) ஆஸ்பிரின் என்பது ஒரு வகையான_________

A) மயக்க மருந்து

B) கிருமி நாசினி

C) புரைத்தடுப்பான் நிவாரணி

D) வலி நிவாரணி

விளக்கம்: உறுப்புகளை உணர்விழக்கச் செய்யாமல், எல்லா வகையான வலிகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும் சேர்மங்களே வலி நிவாரணிகள் ஆகும். ஆஸ்பிரின் மற்றும் நோவால்ஜின் என்பது பொதுவான வலி நிவாரணி ஆகும்.

20) மயக்க மருந்துகள் எத்தனை வகைப்படுகின்றன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: மயக்க மருந்துகள் இரண்டு வகைப்படுகின்றன. அவை,

1. பொது மயக்கமூட்கள்: இவை எல்லா வகையான உணர்வுகளையும் இழக்கச் செய்பவை. உடல் உறுப்புகளில் பெரிய அறுவைசிகிச்சை செய்யும் போது இது செலுத்தப்படுகிறது.

2. குறிப்பிட்ட மயக்க மூட்டிகள்: இவை குறிப்பிட்ட இடத்தை உணர்விழக்கச் செய்யும். பல் மருத்துவத்தில் பல் மற்றும் வாய் பகுதிகளை மட்டும் உணர்விழக்கச் செய்ய இவை பயன்படுத்தப்படுகின்றன.

21) கீழ்க்கண்டவற்றுள் எது காய்ச்சல் நிவாரணி அல்ல?

A) ஆஸ்பிரின்

B) ஆன்ட்டிபைரின்

C) ஃபினாசிடின்

D) அயோடோபார்ம்

விளக்கம்: காய்ச்சலைக் குறைக்க (உடலின் அதிக வெப்பநிலையை சாதாரண வெப்பநிலைக்குக் கொண்டு வருவது) காய்ச்சல் நிவாரணி ஆகும். இவை மாத்திரைகளாவோ அல்லது கூடு வடிவ மாத்திரைகளாகவோ வாய்வழி மருந்தாகவோ எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆஸ்பிரின், ஆன்ட்டிபைரின், ஃபினாசிடின் மற்றும் பாராசிட்டமால் ஆகியவை மிகவும் அதிமாகப் பயன்படுத்தப்படும் காய்ச்சல் நிவாரணிகள் ஆகும்.

22) மலேரியா நிவாரணி மருந்தான பைரிமீத்தமின் எந்த ஆண்டு கண்டறியப்பட்டது?

A) 1960

B) 1961

C) 1965

D) 1970

விளக்கம்: சில தாவரங்களின் தண்டு மற்றும் வேர்ப் பகுதிகளின் சாறு மலேரியா நிவாரணியாக அதிகமாகப் பயன்படுகிறது. குயினைன் எனும் மலேரியா நிவாரணி சின்கோனா என்னும் மரப்பட்டையிலிருந்து பெறப்படுகிறது. இறுதியாக 1961-ல் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா நிவாரணி மருந்து பைரிமீத்தமின் ஆகும்.

23) பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் மற்றும் பிளாஸ்மோடியம் ஓவேல் போன்றவற்றைக் கட்டுப்படுத்த ______ அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது?

A) பைரீமீத்தமின்

B) குயினைன்

C) பிரைமாகுயின்

D) குளோரோகுயின்

விளக்கம்: பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் மற்றும் பிளாஸ்மோடியம் ஓவேல் போன்றவற்றைக் கட்டுப்படுத்த குளோரோகுயின் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது நேரடியாக குணமளிப்பதற்கு பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, மற்ற மலேரிய நிவாரணிகளுடன் கலவையாகப் பயன்படுத்தப்படுகிறது.

24) மலேரியா கீழ்க்கண்ட எதன் மூலம் பரவுகிறது?

A) வைரஸ்

B) பாக்டீரியா

C) பூஞ்சை

D) புரோட்டோசோவா

விளக்கம்: மலேரியாவானது புரோட்டோசோவாவால் பரவும். குளிரையும், காய்ச்சலையும் ஏற்படுத்தக்கூடிய நோயாகும். இது உடலின் வெப்பநிலையை 103-106 டிகிரி பாரன்ஹீட்க்கு அதிகரிக்கின்றது.

25) கூற்று: பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவை நுண்ணுயிர் எதிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.

காரணம்: மற்ற நுண்ணுயிர்களின் வளர்ச்சியையும், வளர்ச்சிதை மாற்றத்தையும் தடுக்கும் தன்மை அற்றவை.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவை நுண்ணுயிர் எதிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.

இவை மற்ற நுண்ணுயிர்களின் வளர்ச்சியையும், வளர்ச்சிதை மாற்றத்தையும் தடுக்கும் தன்மை உடையவை.

26) எந்த ஆண்டு அலெக்ஸாண்டர் ஃபிளமிங் என்பவர் முதன்முதலில் பென்சிலின் என்ற நுண்ணுயிரி எதிரியை கண்டறிந்தார்?

A) 1925

B) 1927

C) 1929

D) 1930

விளக்கம்: 1929ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் ஃபிளமிங் என்பவர் முதன்முதலில் பென்சிலின் என்ற நுண்ணுயிர் எதிரியை பென்சிலியம் நெட்டோட்டம் என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.

27) கருவுறுதல் சம்மபந்தமான குறைபாடுகளை கண்டறிய உதவுவது?

A) கோபால்ட் – 60

B) பாஸ்பரஸ் – 131

C) இரும்பு – 59

D) ஹைட்ரஜன் – 3

விளக்கம்: இரும்பு – 59 கதிரியக்க ஐசோடோப்பைப் பயன்படுத்தி கருவுறுதல் சம்பந்தமான குறைபாடுகளைக் கண்டறியலாம்.

28) ஹைட்ரஜன் பெராக்சைடு முக்கியமாக எதற்குப் பயன்படுகிறது?

A) வெளிக்காயங்களைச் சுத்தம் செய்ய

B) நுண்ணுயிரிகளை அழிக்க

C) குடல் மற்றும் சிறுநீர்ப்பைத் தொற்று நோய்களுக்கு சிகிக்சை அளிக்க

D) வலி நிவாரணியாக

விளக்கம்: ஹைட்ரஜன் பெராக்சைடு முக்கியமாக வெளிக்காயங்களைச் சுத்தம் செய்தவற்காக பயன்படுத்தப்படுகிறது.

29) ஒரு நானோ மீட்டர் என்பது கீழ்க்கண்ட எதைக் குறிக்கும்?

A) 10-9மீ

B) 0.000000001

C) ஒரு மீட்டரில் பில்லியனில் ஒரு பகுதி

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: நானோ என்ற வார்த்தையானது ‘நானோஸ்’ என்ற கிரேக்க வார்தையிலிருந்து உருவானது. 1 நானோ மீட்டர் என்பது,

10-9மீ

0.000000001

ஒரு மீட்டரில் பில்லியனில் ஒரு பகுதி

30) பெனிசிலியம் கீழ்கண்ட எந்த நோயை குணமாக்குவதற்குப் பயன்படுவதில்லை?

A) மூட்டுகளில் ஏற்படும் நோய்

B) இதயக் குழாய்கள் சுருங்குதல்

C) மூச்சுக்குழாய் நோய்கள்

D) கல்லீரல் சார்ந்த நோய்கள்

விளக்கம்: 1929ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் ஃபிளமிங் என்பவர் முதன்முதலில் பென்சிலின் என்ற நுண்ணுயிர் எதிரியை பென்சிலியம் நெட்டோட்டம் என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார். இது,

1. மூட்டுகளில் ஏற்படும் நோய்

2. இதயக் குழாய்கள் சுருங்குதல்

3. மூச்சுக்குழாய் நோய்கள்

4. நிமோனியா

போன்ற நோய்களைக் குணமாக்க இது பயன்படுகிறது.

31) புரைத் தடுப்பான் பற்றிய தவறான கூற்று எது?

A) நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றை நீக்குவதற்கு புரைத்தடுப்பான்கள் பயன்படுகின்றன.

B) இவை நுண்ணுயிரிகளை அழிப்பதற்கோ அல்லது அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கோ பயன்படுவதில்லை

C) புரைத்தடுப்பான்கள் வெளிக்காயங்களைச் சுத்தம் செய்வதற்கு பயன்படுகின்றன.

D) குடல் மற்றும் சிறுநீர்ப்பைத் தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகின்றன.

விளக்கம்: நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றை நீக்குவதற்கு புரைத்தடுப்பான்கள் பயன்படுகின்றன.

இவை நுண்ணுயிரிகளை அழிப்பதற்கோ அல்லது அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கோ பயன்படும் வேதிப்பொருள்கள் ஆகும்.

புரைத்தடுப்பான்கள் வெளிக்காயங்களைச் சுத்தம் செய்வதற்கு பயன்படுகின்றன.

குடல் மற்றும் சிறுநீர்ப்பைத் தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகின்றன

32) பொருத்துக.

அ. மரபுப்பொறியியல் – 1. குயினைன்

ஆ. விலங்கு – 2. மனித வளர்ச்சி ஹார்மோன்

இ. ரசாயனத் தொகுப்பு – 3. ஹெபாரின்

ஈ. தாவரங்கள் – 4. பாராசிட்டமால்

A) 4, 3, 2, 1

B) 3, 4, 2, 1

C) 2, 3, 4, 1

D) 3, 2, 4, 1

விளக்கம்: மரபுப்பொறியியல் – மனித வளர்ச்சி ஹார்மோன்

விலங்கு – ஹெபாரின்

ரசாயனத் தொகுப்பு – பாராசிட்டமால்

தாவரங்கள் – குயினைன்

33) அமில நீக்கிகளில் முக்கியமாக பயன்படுத்தப்படுவது?

A) மெக்னீசியம்

B) அலுமினியம் ஹைட்ராக்ஸைடு

C) கால்சியம் குளோரைடு

D) A மற்றும் B

விளக்கம்: வயிறு மற்றும் உணவுக் குழாய்களில் அதிகமாக அமிலம் சுரக்கப்படுவதால் எரிச்சல் ஏற்படுகிறது. அதிகமாக சுரக்கும் அமிலத்தை சரி செய்ய அமில நீக்கி பயன்படுகிறது. இவற்றில் முக்கியமாக மெக்னீசியம் அல்லது அலுமினியம் ஹைட்ராக்சைடுகளே உள்ளன.

34) நுண்ணுயிர் எதிர்பொருள்களுக்கு எத்தனை முக்கிய மூலங்கள் உள்ளன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: நுண்ணுயிர் எதிர்பொருள்களுக்கு மூன்று முக்கிய மூலங்கள் உள்ளன. அவை,

1. பாக்டீரியா

2. பூஞ்சை

3. ஆக்டினோமைசடிஸ்

35) மலேரியா எந்த உடல் உறுப்பை அதிகம் பாதிக்கிறது?

A) சிறுநீரகம்

B) கல்லீரல்

C) இதயம்

D) நரம்பு மண்டலம்

விளக்கம்: மலேரியாவானது புரோட்டோசோவாவால் பரவும். இது கல்லீரலைப் பாதித்து இரத்த சோகை ஏற்படுத்தும்.

36) ஒரு மீட்டருக்கும் ஒரு நானோ மீட்டருக்கும் இடையே உள்ள வித்தியாசம்?

A) பூமி மற்றும் சந்திரன்

B) பூமி மற்றும் சூரியன்

C) பூமி மற்றும் வெள்ளி

D) பூமி மற்றும் கோல்ப் பந்து

விளக்கம்: பூமி மற்றும் ஒரு கோல்ப் பந்து ஆகியவற்றிகிடையே உள்ள அளவு வேறுபாடுதான் ஒரு மீட்டருக்கும் ஒரு நானோ மீட்டருக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் ஆகும்.

37) கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு குறிப்பிட்ட சாதனத்தில் நடைபெறும் ஆக்ஸிஜனேற்ற, ஒடுக்க வினைகள் மட்டுமே மின்சாரத்தை உற்பத்தி செய்வதில்லை

2. வேதி ஆற்றலை மின்னாற்றலாகவோ, மின்னானற்றலை வேதி ஆற்றலாகவோ மாற்றக்கூடிய சாதனங்கள் வேதி மின்கலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஒரு குறிப்பிட்ட சாதனத்தில் நடைபெறும் ஆக்ஸிஜனேற்ற, ஒடுக்க வினைகள் மட்டுமே மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.

2. வேதி ஆற்றலை மின்னாற்றலாகவோ, மின்னானற்றலை வேதி ஆற்றலாகவோ மாற்றக்கூடிய சாதனங்கள் வேதி மின்கலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

38) கீழ்க்கண்டவற்றில் எது சிறந்த மலேரியா நிவாரணியாக அறியப்படவில்லை?

A) குயினைன்

B) பிரைமாகுயின்

C) குளோரோகுயின்

D) பைரிமீத்தமின்

விளக்கம்: 1961ஆம் ஆண்டு பைரிமீத்தமின் என்னும் மலேரியா நிவாரணி கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், குயினைன், பிரைமாகுயின் மற்றும் குளோரோகுயின் ஆகியவை சிறந்த மலேரியா நிவாரணிகளாகும்.

39) கூற்றுகளை ஆராய்க.

1. மின்முனைகள் என்பவை திண்ம உலோகத்தாலான மின் கடத்திகள்.

2. கிராஃபைட் போன்ற அலோங்கள் மின்முனைகளாக பயன்படுத்தப்படுவதில்லை

3. ஒரு மின்கலத்தில் நேர்மின் முனை மற்றும் எதிர் மின்முனை என்று இரண்டு முனைகள் உள்ளன.

4. வேதி மின்கலன்களின் இரண்டு முக்கியக் கூறுகள்: மின்முனைகள் மற்றும் மின்பகுளி

A) 1, 2 சரி

B) 1, 3, 4 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. மின்முனைகள் என்பவை திண்ம உலோகத்தாலான மின் கடத்திகள்.

2. கிராஃபைட் போன்ற அலோங்கள் மின்முனைகளாக பயன்படுத்தப்படுகின்றன.

3. ஒரு மின்கலத்தில் நேர்மின் முனை மற்றும் எதிர் மின்முனை என்று இரண்டு முனைகள் உள்ளன.

4.வேதி மின்கலன்களின் இரண்டு முக்கியக் கூறுகள்: மின்முனைகள் மற்றும் மின்பகுளி

40) இதயத்தின் செயல்பாடு பற்றி அறிய உதவும் கதிரியக்க ஐசோடோப்பு?

A) சோடியம் – 131

B) சோடியம் – 60

C) சோடியம் – 24

D) சோடியம் – 59

விளக்கம்: இதயத்தின் செயல்பாடு பற்றி அறிய உதவும் கதிரியக்க ஐசோடோப்பு சோடியம் – 24 ஆகும்

41) விலங்குகளின் தோல்கள் மற்றும் செயற்கை இழைகளை சாயமேற்றுவதற்கு பயன்படும் சாயங்கள்?

A) அமிலச் சாயங்கள்

B) காரச்சாயங்கள்

C) நேரடிச் சாயங்கள்

D) தொட்டிச் சாயம்

விளக்கம்: அமிலச் சாயங்கள் விலங்குகளின் தோல்கள் மற்றும் செயற்கை இழைகளை சாயமேற்றுவதற்கு பயன்படுகிறது. இவை அமிலத் தன்மை கொண்டவை. மேலும் இவை கம்பளி மற்றும் பட்டு போன்ற புரத நூலிழைகளை சாயமேற்றவும் பயன்படுகின்றன

42) டிரக் என்ற சொல் பிரெஞ்சு வார்த்தையான டிரக்யூ என்பதிலிரு;நது பெறப்பட்டது. இதில் டிரக்யூ என்ற சொல்லின் பொருள்?

A) மருந்து

B) நோய்

C) தாவரங்கள்

D) காய்ந்த மூலிகை

விளக்கம்: நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பல வேதிப்பொருட்களைப் பயன்படுத்தினாலும், நோய்களைக் குணப்படுத்தப் பயன்படும் வேதிப் பொருள்களே மருந்துகள் என்று அழைக்கப்படுகின்றன. டிரக் என்ற வார்த்தையானது காய்ந்த மூலிகை என்று பொருள்படும் டிரக்யூ என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும்.

43) மலேரியா பற்றிய கூற்றுகளை ஆராய்க

1. குளிரையும், காய்ச்சலையும் ஏற்படுத்தக்கூடிய நோய்

2. வைரஸால் பரவும்

3. உடலின் வெப்பநிலையை 103-106 டிகிரி பாரன்ஹீட்க்கு அதிகரிக்கின்றது.

4. பக்க விளைவுகளுடன் கூடிய அதிக பலவீனத்தை ஏற்படுத்தும்

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: 1. குளிரையும், காய்ச்சலையும் ஏற்படுத்தக்கூடிய நோய்

2. புரோட்டோசோவாவால் பரவும்

3. உடலின் வெப்பநிலையை 103-106 டிகிரி பாரன்ஹீட்க்கு அதிகரிக்கின்றது.

4. பக்க விளைவுகளுடன் கூடிய அதிக பலவீனத்தை ஏற்படுத்தும்

44) செல்சவ்வானது எத்தனை நானோ மீட்டர் பரவி இருக்கும்?

A) 30

B) 1

C) 9

D) 0.2

விளக்கம்: செல்லை சுற்றியிருக்கும் செல்சவ்வானது சுமார் 9 நானோ மீட்டர் வரை பரவியிருக்கும். ஒரு நானோ மீட்டர் என்பது 10-9 மீட்டர் ஆகும்.

45) குயினைன் என்னும் மலேரியா நிவாரணி எந்த தாவரத்தின் மரப்பட்டையிலிருந்து பெறபட்டது?

A) சின்கோனா

B) வேம்பு

C) யூகலிப்டஸ்

D) குயினைன்

விளக்கம்: சில தாவரங்களின் தண்டு மற்றும் வேர்ப் பகுதிகளின் சாறு மலேரியா நிவாரணியாக அதிகமாகப் பயன்கிறது. குயினைன் என்னும் மலேரியா நிவாரணி சின்கோனா என்னும் மரப்பட்டையிலிருந்து பெறப்படுகிறது.

46) கூற்றுகளை ஆராய்க.

1. வேதி மின்கலங்களில் இரண்டு வேதிவினைகள் ஒன்றாக நடைபெறுவதில்லை

2. ஆக்ஸிஜனேற்றம் என்பது எலக்ட்ரானை ஏற்கும் நிகழ்வு

3. ஒடுக்கம் என்பது எலக்ட்ரான் இழக்கும் நிகழ்வு

4. ஹைட்ரஜன் பெராக்சைடு முக்கியமாக வெளிக்காயங்களைச் சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது.

A) 1, 2, 3 தவறு

B) 1 மட்டும் தவறு

C) 1, 4 தவறு

D ) அனைத்தும் தவறு

விளக்கம்: 1. வேதி மின்கலங்களில் இரண்டு வேதிவினைகள் ஒன்றாக நடைபெறுகிறது

2. ஆக்ஸிஜனேற்றம் என்பது எலக்ட்ரானை இழக்கும் நிகழ்வு

3. ஒடுக்கம் என்பது எலக்ட்ரான் ஏற்கும் நிகழ்வு

4. ஹைட்ரஜன் பெராக்சைடு முக்கியமாக வெளிக்காயங்களைச் சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது.

47) பாஸ்பரஸ் – 32 என்பது கீழக்கண்ட எந்த நோயை குணப்படுத்துகிறது?

A) இரத்தக் கோளாறு

B) தோல்நோய்

C) புற்றுநோய்

D) A மற்றும் B

விளக்கம்: கதிரியக்க வேதியியல் என்பது கதிரியக்கத்தின் மூலம் மருத்துவத்துறையில் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஒரு முறை ஆகும். பாஸ்பரஸ்-ஐ பயன்படுத்தி இரத்தக் கோளாறு மற்றும் தோல் நோய் ஆகியவற்றைக் குணப்படுத்த உதவுகிறது.

48) எந்த கார்பன் ஐசோடோப்பை பயன்படுத்தி புதைபடிவ மரங்கள் அல்லது விலங்குகளின் வயதைத் தீர்மானிக்கலாம்?

A) C10

B) C4

C) C12

D) C14

விளக்கம்: C14 என்ற கார்பன் ஐசோடோப்பை பயன்படுத்தி புதைபடிவ மரங்கள் அல்லது விலங்குகளின் வயதைத் தீர்மானிக்கலாம்.

49) உடலில் உள்ள நீரின் அளவைக் கண்டறிய பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு?

A) கோபால்ட் – 60

B) பாஸபரஸ் – 131

C) ஆக்ஸிஜன் – 3

D) ஹைட்ரஜன் – 3

விளக்கம்: ஹைட்ரஜன்-3 என்ற கதிரியக்க ஐசோடோப்பைப் பயன்படுத்தி மனித உடலிலுள்ள நீரின் அளவை அறியலாம்.

50) கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு வினாடியில் நமது நகம் ஒரு நானோ மீட்டர் வளர்கிறது.

2. நமக்கு சளி மற்றும் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் சுமார் 30 நானோ மீட்டர் விட்டம் கொண்டது.

3. பூமி மற்றும் சந்திரன் ஆகியவற்றிகிடையே உள்ள அளவு வேறுபாடுதான் ஒரு மீட்டருக்கும் ஒரு நானோ மீட்டருக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆகும்.

4. செல் சவ்வானது 9 நானோ மீட்டர் பரவியிருக்கும்

A) 1, 4 சரி

B) 1, 3, 4 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. ஒரு வினாடியில் நமது நகம் ஒரு நானோ மீட்டர் வளர்கிறது.

2. நமக்கு சளி மற்றும் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் சுமார் 30 நானோ மீட்டர் விட்டம் கொண்டது.

3. பூமி மற்றும் கோல்ப் பந்து ஆகியவற்றிகிடையே உள்ள அளவு வேறுபாடுதான் ஒரு மீட்டருக்கும் ஒரு நானோ மீட்டருக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆகும்.

4. செல் சவ்வானது 9 நானோ மீட்டர் பரவியிருக்கும்

51) உடல் உறுப்புகளின் செயல்பாட்டிற்குத் தேவையான ஆற்றலை வழங்குவது?

A) புரதங்கள்

B) கார்போஹைட்ரேட்டுகள்

C) வைட்டமின்கள்

D) தாதுஉப்புகள்

விளக்கம்: ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வகையான உணவுகள் தேவைப்படுகின்றன. அதில் ஒன்று ஆற்றல் அளிக்கும் உணவுகள். இவை உடல் உறுப்புகளின் செயல்பாட்டிற்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன. (எ.கா).கார்போஹைட்ரேட்டுகள்.

52) இரத்த சோகை நோயைக் கண்டறிய உதவும் ஐசோடோப்பு எது?

A) கோபால்ட் – 60

B) பாஸ்பரஸ் – 131

C) இரும்பு – 59

D) ஹைட்ரஜன் – 3

விளக்கம்: இரும்பு – 59 இரத்தசோகை நோய், கருவுறுதல் சம்பந்தமான குறைபாடுகளைக் கண்டறிய உதவுகிறது

53) இரத்த உறைவு மற்றும் இரத்த சுழற்சி சீர்குலைவு ஆகியவற்றை அறிய பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு எது?

A) சோடியம் – 24

B) பாஸ்பரஸ் – 131

C) இரும்பு – 59

D) ஹைட்ரஜன் – 3

விளக்கம்: சோடியம்- 24-ஐப் பயன்படுத்தி,

1. இரத்த உறைவு மற்றும் இரத்த சுழற்சி சீர்குலைவுகள்

2. இதயத்தின் செயல்பாடு

ஆகியவற்றைக் கண்டறியலாம்.

54) குற்ற விசாரணையில் ________ என்பது மிக முக்கியமான ஆதாரங்களுள் ஒன்றாகும்?

A) கத்தி

B) கைரேகைப் பதிவு

C) குற்றவாளியின் பொருள்

D) கருவிகள்

விளக்கம்: குற்றம் சார்ந்த விசாரணையில் கைரேகைப்பதிவுத் தடயம் என்பது மிக முக்கியமான ஆதாரங்களுள் ஒன்றாகும்.

55) _______ மற்றும் _______ போன்ற உலோகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து உற்பத்தி செய்ய மின் வேதியியல் பயன்படுகிறது

A) அலுமினியம் மற்றும் துத்தநாகம்

B) அலுமினியம் மற்றும் டைட்டானியம்

C) டைட்டானியம் மற்றும் துத்தநாகம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: அலுமினியம் மற்றும் டைட்டானியம் போன்ற உலோகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து உற்பத்தி செய்ய மின் வேதியியல் பயன்படுகிறது

56) கீழ்க்கண்டவற்றில் எது ஹைபர்தைராய்டிசம் நோயைக் குணப்படுத்த உதவுகிறது?

A) தங்கம் – 198

B) அயோடின் – 131

C) பாஸ்பரஸ் – 32

D) கோபால்ட் – 60

விளக்கம்: அயோடின் – 131 என்ற கதிரியக்க ஐசோடோப்பு ஹைபர்தைராய்டிசம் என்ற நோயைக் குணப்படுத்த உதவுகிறது

57) வேதிஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுவதற்கு பயன்படும் மின்கலன் எது?

A) லித்தியம் அயனி மின்கலன்

B) எரிபொருள் மின்கலன்

C) காரிய அமில மின்கலன்

D) சோடியம் அயனி மின்கலன்

விளக்கம்: காரிய அமில மின்கலன்கள், லித்தியம் அயனி மின்கலன்கள் மற்றும் எரிபொருள் மின்கலன்கள் ஆகியன மின்வேதிக்கலன்களை அடிப்படையாகக் கொண்டவை. வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுவதற்கு எரிபொருள் மின்கலன்கள் பயன்படுகின்றன.

58) தனிமங்கள் இயற்கையில் கீழ்க்கண்ட எவ்வகையில் உள்ளன?

A) ஐசோடோப்பு

B) ஐசோபார்

C) ஐசோடோன்கள்

D) தூய்மை நிலை

விளக்கம்: தனிமங்கள் இயற்கையில் அவற்றின் ஐசோடோப்புகளாக உள்ளன. ஐசோடோப்புகள் என்பது ஒரே எண்ணிக்கையிலான புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களையும் வேறுபட்ட நியூட்ரான்களையும் கொண்டுள்ளன.

59) வாகன ஓட்டிகள் குடிபோதையில் உள்ளனரா என்பதை _________ ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினையின் மூலம் கண்டறியலாம்.

A) எத்தனால் ஆக்ஸிஜனேற்றம்

B) மெத்தனால் ஆக்ஸிஜனேற்றம்

C) எத்தனால் ஆக்ஸிஜனேற்ற ஒடுக்கம்

D) மெத்தனால் ஆக்ஸிஜனேற்ற ஒடுக்கம்

விளக்கம்: வாகன ஓட்டிகள் குடிபோதையில் உள்ளனரா என்பதை எத்தனாலின் ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினையின் மூலம் கண்டறியலாம்.

60) கூற்றுகளை ஆராய்க.

1. டி.என்.ஏ-வின் இரட்டைச் சுருள் 2 நானோ மீட்டர் விட்டத்தில் இருக்கும்

2. ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம் 0.2 நானோ மீட்டர் ஆகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. டி.என்.ஏ-வின் இரட்டைச் சுருள் 2 நானோ மீட்டர் விட்டத்தில் இருக்கும்

2. ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம் 0.2 நானோ மீட்டர் ஆகும்.

61) கூற்றுகளை ஆராய்க.

1. ஆக்ஸிஜனேற்றம் என்பது வேதி மின்கலத்தில் எதிர்மின் முனையில் நடைபெறுகிறது

2. ஒடுக்கம் என்பது வேதி மின்கலத்தில் நேர்மின் முனையில் நடைபெறுகிறது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஆக்ஸிஜனேற்றம் என்பது வேதி மின்கலத்தில் நேர்மின் முனையில் நடைபெறுகிறது

2. ஒடுக்கம் என்பது வேதி மின்கலத்தில் எதிர்மின் முனையில் நடைபெறுகிறது

62) கீழ்கண்டவற்றில் எது புற்றுநோயை குணப்படுத்த பயன்படுவதில்லை?

A) தங்கம் – 198

B) அயோடின் – 131

C) பாஸ்பரஸ் – 32

D) கோபால்ட் – 60

விளக்கம்: தங்கம் – 198 – புற்றுநோய்

அயோடின் – 131 – ஹைபர்தைராய்டிசம் மற்றும் புற்றுநோய்

பாஸ்பரஸ் – 32 – இரத்தக் கோளாறு மற்றும் தோல் நோய்

கோபால்ட் – 60 – புற்றுநோய்

63) கீழ்க்கண்டவற்றில் எண்ம விதிக்கு பொருத்தமானது எது?

A) ஒரு தனிமமானது எலக்ட்ரான்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நிலைப்புத் தன்மை அடைகிறது

B) ஒரு தனிமமானது எலக்ட்ரான்களைப் பெறுவதன் மூலம் நிலைப்புத் தன்மை அடைகிறது

C) ஒரு தனிமமானது எலக்ட்ரான்களைப் இழப்பதன் மூலம் நிலைப்புத் தன்மை அடைகிறது

D) அனைத்தும் சரி

விளக்கம்: எண்ம விதி:

1. ஒரு தனிமமானது எலக்ட்ரான்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நிலைப்புத் தன்மை அடைகிறது

2. ஒரு தனிமமானது எலக்ட்ரான்களைப் பெறுவதன் மூலம் நிலைப்புத் தன்மை அடைகிறது

3. ஒரு தனிமமானது எலக்ட்ரான்களைப் இழப்பதன் மூலம் நிலைப்புத் தன்மை அடைகிறது

64) கூற்றுகளை ஆராய்க.

1. சில ஐசோடேப்புகள் நிலையானவை. எப்போதும் நீடித்து உள்ளவை.

2. சில ஐசோடோப்புகள் நிலையற்றவை. கதிரியக்க வடிவில் தங்கள் ஆற்றலை இழப்பதன் மூலம் இவை சிதைவடைகின்றன

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சில ஐசோடேப்புகள் நிலையானவை. எப்போதும் நீடித்து உள்ளவை.

2. சில ஐசோடோப்புகள் நிலையற்றவை. கதிரியக்க வடிவில் தங்கள் ஆற்றலை இழப்பதன் மூலம் இவை சிதைவடைகின்றன

65) கூற்றுகளை ஆராய்க.

1. நானோ என்ற வார்த்iதையானது ‘நானாஸ்’ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவானது.

2. ஒரு மீட்டரில் மில்லியனில் ஒரு பகுதி என்பதை இது விளக்குகிறது.

3. அணு மற்றும் மூலக்கூறு அளவில் இருக்கும் பொருள்களை உருவாக்கி அல்லது மாற்றியமைத்து அவற்றின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை ஆய்வு செய்வதை நானோ தொழில்நுட்பம் என்கிறோம்.

4. ஒரு நானோ மீட்டர் என்பது 0.0000000001மீட்டர் ஆகும்.

A) 1, 2, 3 சரி

B) 1, 2 சரி

C) 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. நானோ என்ற வார்த்தையானது ‘நானோஸ்’ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவானது.

2. ஒரு மீட்டரில் பில்லியனில் ஒரு பகுதி என்பதை இது விளக்குகிறது.

3. அணு மற்றும் மூலக்கூறு அளவில் இருக்கும் பொருள்களை உருவாக்கி அல்லது மாற்றியமைத்து அவற்றின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை ஆய்வு செய்வதை நானோ தொழில்நுட்பம் என்கிறோம்.

4. ஒரு நானோ மீட்டர் என்பது 0.000000001மீட்டர் ஆகும்.

66) கூற்றுகளை ஆராய்க

1. நானோ பொருள்கள், அணுக்கள் மற்றும் பெரிய பொருட்களின் அமைப்புப் பண்புகளுக்கு இடைப்பட்ட பண்புகளைப் பெற்றிருக்கும்

2. நானோ பரிமாணத்தில் இருக்கும் பொருள் ஒன்றின் பண்பானது, அது அணு அல்லது பெரிய பொருளாக இருக்கும்போது உள்ள பண்பிலிருந்து மாறுபட்டிருக்காது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. நானோ பொருள்கள், அணுக்கள் மற்றும் பெரிய பொருட்களின் அமைப்புப் பண்புகளுக்கு இடைப்பட்ட பண்புகளைப் பெற்றிருக்கும்

2. நானோ பரிமாணத்தில் இருக்கும் பொருள் ஒன்றின் பண்பானது, அது அணு அல்லது பெரிய பொருளாக இருக்கும்போது உள்ள பண்பிலிருந்து மாறுபட்டிருக்கும்

67) கூற்று: சோடியம் – 24 ஒரு கதிரியக்க ஐசோடோப்பு

காரணம்: சோடியம் கதிர்வீச்சு வடிவில் தங்களது ஆற்றலை இழந்த நிலையான ஐசோடோப்புகளாக மற்றமடைகின்றன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: சில ஐசோடோப்புகள் கதிரியக்க வடிவில் தங்கள் ஆற்றலை இழப்பதன் மூலம் சிதைவிற்கு உட்படுகின்றன. இவை கதிரியக்க ஐசோடோப்பு எனப்படும். சோடியம் – 24 ஒரு கதிரியக்க ஐசோடோப்பு ஆகும். இது இரத்த உறைவு மற்றும் இரத்த சுழற்சி சீர்குலைவுகள், இதயத்தின் செயல்பாடு ஆகியவற்றைக் கண்டறிதல் போன்றவற்றிற்கு பயன்படுகிறது.

68) பூமியிலுள்ள எந்த தனிமம் சிதைவடைந்த மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் ரேடான் வாயுவை வெளியிடுகிறது?

A) யுரேனியம்

B) ஜெர்மானியம்

C) அலுமினியம்

D) சிலிக்கான்

விளக்கம்: பூமியிலுள்ள யுரேனியமானது சிதைவடைந்து மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் ரேடான் வாயுவை வெளியிடுகிறது.

69) சாயங்களின் சிறப்பியல்புகள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. ஒளியுடன் வேகமாக செயல்பட வேண்டும்.

2. நீர், நீர்த்த அமிலங்கள் மற்றும் காரம் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஒளியுடன் வேகமாக செயல்பட வேண்டும்.

2. நீர், நீர்த்த அமிலங்கள் மற்றும் காரம் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்

70) கால்வானிக் மின்கலம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இது வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது. அதாவது வேதிவினைகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

2. இதில் இரண்டு அரை மின்கலங்கள் உள்ளன. அவை 1. அரை நேர்மின்கலங்கள் 2. அரை எதிர்மின்கலங்கள்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இது வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது. அதாவது வேதிவினைகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

2. இதில் இரண்டு அரை மின்கலங்கள் உள்ளன. அவை

1. அரை நேர்மின்கலங்கள்

2. அரை எதிர்மின்கலங்கள்

71) கூற்று: மறைமுக சாயங்கள் பருத்தி ஆடைகள் மீது படிவதில்லை

காரணம்: மறைமுகச் சாயங்கள் பருத்தி ஆடைகளுடன் குறைவான ஈர்ப்புத் தன்மை கொண்டுள்ளது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: மறைமுகச் சாயங்கள் பருத்தி ஆடைகளுடன் குறைவான ஈர்ப்புத் தன்மை கொண்டுள்ளதால் நேரடியாக அவற்றின் மீது படிவதில்லை. எனவே அவை முதலில் நிறமூன்றிகளுடன் செயல்படுத்த வேண்டும்.

72) பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்கள் எத்தனை வகைப்படும்?

A) 7

B) 5

C) 3

D) 2

விளக்கம்: பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்கள் ஐந்து வகைப்படும். அவை,

1. அமிலச் சாயங்கள்

2. காரச்சாயங்கள்

3. மறைமுகச் சாயங்கள்

4. நேரடிச் சாயங்கள்

5. தொட்டிச் சாயம்

73) பருத்தி இழைகளுக்கு மட்டுமே பயன்படும் சாயம்?

A) அமிலச் சாயங்கள்

B) காரச்சாயங்கள்

C) நேரடிச் சாயங்கள்

D) தொட்டிச் சாயம்

விளக்கம்: தொட்டிச் சாயம் பருத்தி இழைகளுக்கு மட்டுமே பயன்படக்கூடியவை. ஆனால், பட்டு மற்றும் கம்பளி இழைகளுக்குப் பயன்படாது. இந்த சாயமிடுதல் தொடர்ச்சியான செயல்பாடாகும். இவற்றை செயல்படுத்த ஒரு பெரிய கலன் தேவைப்படுகிறது. இவை தொட்டி என்று அழைக்கப்படுகின்றன. எனவே, இவ்வகை சாயம் தொட்டிச்சாயம் என்றழைக்கப்படுகிறது. (எ.கா) இண்டிகோ.

74) கம்பளி மற்றும் பட்டு போன்ற புதர நூலிழைகளை சாயமேற்ற பயன்படும் சாயங்கள்?

A) அமிலச் சாயங்கள்

B) காரச்சாயங்கள்

C) நேரடிச் சாயங்கள்

D) தொட்டிச் சாயம்

விளக்கம்: கம்பளி மற்றும் பட்டு போன்ற புரத நூலிழைகளை சாயமேற்ற அமிலச்சாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அமிலத்தன்மை கொண்டவை.

75) நுண்ணியிரியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து வகை?

A) இன்சுலின்

B) பென்சிலின்

C) குயினைன்

D) திரவ பாரஃபின்

விளக்கம்: பென்சிலின் என்ற மருந்து நுண்ணுயிரியிலிருந்து பெறப்படுகிறது. இது பென்சிலியம் நெட்டோட்டம் என்ற பூஞ்சையிலிருந்து பெறப்படுகிறது.

76) உலகின் மிகப்பெரிய தனிப்பட்ட வேலை எது?

A) தகவல் தொழில்நுட்பம்

B) வங்கிப்பணி

C) வேளாண்மை

D) ஆடைதயாரிப்பு

விளக்கம்: இன்றைய உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுகின்றனர். இதுவே உலகின் மிகப்பெரிய தனிப்பட்ட வேலை வாய்ப்பு ஆகும்.

77) நம்மைச் சுற்றியுள்ள நாம் காணும் தனிமங்கள்————ஐசோடோப்புகள் ஆகும்..

A) நிலையான ஐசோடோப்புகள்

B) கதரியக்க ஐசோடோப்புகள்

C) ரேடியோ ஐசோடோப்புகள்

D) நிலையற்ற ஐசோடோப்புகள்

விளக்கம்: நம்மைச் சுற்றியுள்ள நாம் காணக்கூடிய தனிமங்கள் அனைத்தும் நிலையான ஐசோடோப்புகள் ஆகும்.

78) கீழ்க்கண்டவற்றில் எது நிறமூன்றிகள் அல்ல?

A) அலுமினியம்

B) மெக்னீசியம்

C) குரோமியம்

D) இரும்பின் உப்புகள்

விளக்கம்: மறைமுக சாயம் குறைவான ஈர்ப்புத் தன்மை கொண்டுள்ளதால் நேரடியாக பருத்தி ஆடைகள் மீது அவை படிவதில்லை. எனவே அவை முதலில் நிறமூன்றிகளுடன் செயல்படுத்த வேண்டும். அலுமினியம், குரோமியம் மற்றும் இரும்பின் உப்புகள் நிறமூன்றிகளாக பயன்படுகின்றன.

79) கூற்றுகளை ஆராய்க.

1. குற்றம் சார்ந்த விசாரணையில் கைரேகைப்பதிவுத் தடயம் என்பது மிக முக்கியமான ஆதாரங்களுள் ஒன்றாகும்.

2. மென்மையான மேற்பரப்பில் உள்ள கைரேகைகள் நின்ஹைட்ரின் பயன்பாட்டால் காணமுடிகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. குற்றம் சாரந்த விசாரணையில் கைரேகைப்பதிவுத் தடயம் என்பது மிக முக்கியமான ஆதாரங்களுள்ள ஒன்றாகும்.

2. மென்மையான மேற்பரப்பில் உள்ள கைரேகைகள் பெரும்பாலும் ஒளி அல்லது கறுப்புத் தூளின் பயன்பாட்டால் அறியப்படுகின்றன

80) பொருத்துக.

அ. அமிலசாயங்கள் – 1. இண்டிகோ

ஆ. மறைமுக சாயங்கள் – 2. பிக்ரிக் அமிலம், மஞ்சள் நாப்தல்

இ. நேரடிச் சாயங்கள் – 3. காங்கோ சிவப்பு

ஈ. தொட்டிச் சாயம் – 4. அலிசரின்

A) 2, 4, 3, 1

B)4, 2, 3, 1

C)4, 3, 1, 2

D)1, 2, 3, 4

விளக்கம்: அமிலசாயங்கள் – பிக்ரிக் அமிலம், மஞ்சள் நாப்தல்

மறைமுக சாயங்கள் – அலிசரின்

நேரடிச் சாயங்கள் – காங்கோ சிவப்பு

தொட்டிச் சாயம் – இண்டிகோ

81) புற்றுநோயை ஏற்படுத்தும் இரண்டாவது முக்கிய ஐசோடோப்;பு?

A) கோபால்ட்

B) தங்கம்

C) அயோடின்

D) யுரேனியம்

விளக்கம்: பூமியிலுள்ள யுரேனியமானது சிதைவடைந்து மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ரேடான் வாயுவை வெளியிடுகிறது. யுரேனியமே புற்றுநோயை ஏற்படுத்தும் இரண்டாவது முக்கிய ஐசோடோப்பு.

82) தைராய்டு சுரப்பியின் சீர்குலைவு பற்றி கண்டறிய உதவும் கதிரியக்க ஐசோடோப்பு எது?

A) சோடியம் – 24

B) அயோடின் – 131

C) இரும்பு – 59

D) ஹைட்ரஜன் – 3

விளக்கம்: மூளைக்கட்டி, தைராய்டு சுரப்பியின் சீர்குலைவு ஆகியவற்றை அடையாம் கண்டு அவற்றின் இடத்தைக் கண்டறிய உதவும் கதிரியக்க ஐசோடோப்பு – அயோடின் – 131

83) ஐசோடோப்பு-ல் எதன் எண்ணிக்கை ஒரே மாதிரியாக இருக்கும்?

A) புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்

B) புரோட்டான் மற்றும் நியூட்ரான்

C) எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான்

D) புரோட்டான், எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான்

விளக்கம்: ஐசோடோப்புகள் என்பவை ஒரே எண்ணிக்கையிலான புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களையும், வேறுபட்ட நியூட்ரான்களையும் கொண்டுள்ளன. தனிமங்கள் இயற்கையில் அவற்றின் ஐசோடோப்புகளாக கிடைக்கின்றன.

84) கூற்றுகளை ஆராய்க.

1. பயிர்நிலங்கள் வெவ்வேறு வகையான PH அளவைக் கொண்ட மண்வகைகளைக் கொண்டுள்ளன.

2. பயிர்களைத் தேர்வு செய்வதற்கும், மண்ணின் தன்மையை மாற்றுவதற்கும் ஒரு மண்ணின் PH தன்மையானது கருத்தில் கொள்ள தேவையில்லை.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பயிர்நிலங்கள் வெவ்வேறு வகையான PH அளவைக் கொண்ட மண்வகைகளைக் கொண்டுள்ளன.

2. பயிர்களைத் தேர்வு செய்வதற்கும், மண்ணின் தன்மையை மாற்றுவதற்கும் ஒரு மண்ணின் PH தன்மையானது கருத்தில் கொள்ளப்படவேண்டும்

85) ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்றுவகையான உணவுகள் தேவைப்படுகின்றன. அவற்றில் தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) உடல் வளர்ச்சி உணவுகள் – புரதங்கள்

B) ஆற்றல் வளர்ச்சி உணவுகள் – கார்போஹைட்ரேட்டுகள்

C) பாதுகாப்பளிக்கும் உணவுகள் – வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: மனிதன் மற்றும் விலங்குகளின் அடிப்படைத் தேவைகளுள் உணவும் ஒன்று. நாம் உண்ணும் உணவும் வேதிப்பொருள்களை உள்ளடத்கியதாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் பின்வரும் மூன்று வகையான உணவுகள் தேவைப்படுகின்றன. அவை,

உடல் வளர்ச்சி உணவுகள் – புரதங்கள்

ஆற்றல் வளர்ச்சி உணவுகள் – கார்போஹைட்ரேட்டுகள்

பாதுகாப்பளிக்கும் உணவுகள் – வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள்

86) பற்றாக்குறை மற்றும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பது?

A) புரதங்கள்

B) கார்போஹைட்ரேட்டுகள்

C) வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புகள்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வகையான உணவுகள் தேவைப்படுகின்றன. அதில் ஒன்று பாதுகாப்பளிக்கும் உணவுகள். இது நம்மை பற்றாக்குறை மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. (எ.கா) வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புகள்.

87) உடலின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றங்களுக்கு கீழக்கண்ட எது தேவைப்படுவதில்லை?

A) புரதங்கள்

B) கார்போஹைட்ரேட்டுகள்

C) வைட்டமின்கள்

D) தாதுஉப்புகள்

விளக்கம்: ஊட்டச்சத்துக்கள் என்பது உணவில் உள்ள முக்கியமான வேதிப்பொருள்களாகும். உடலின் வளர்ச்சி, உடலியல் வளர்சிதை மாற்றங்கள் போன்ற செயல்களுக்கு இவை அவசியமாகும். இவை உணவில் இயற்கையாவோ அல்லது செயற்கையாகவோ காணப்படுகின்றன. (எ.கா) புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்

88) நைட்ரஸ் ஆக்ஸைடு பற்றிய கூற்றை ஆராய்க.

1. இது நிறமற்றது

2. மணமுள்ள கனிம வாயு

3. மயக்க மருந்துகளுள் மிகவும் பாதுகாப்பனாது

4. எளிதில் ஆவியாகும் திரவம்

A) 1, 3 சரி

B) 2, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இது நிறமற்றது

2. மணமுள்ள கனிம வாயு

3. மயக்க மருந்துகளுள் மிகவும் பாதுகாப்பனாது

4. எளிதில் ஆவியாகும் திரவம்

89) தவறான ஒன்றை தெரிவு செய்க

A) நிலையான ஐசோடோப்புகள்

B) கதிரியக்க ஐசோடோப்புகள்

C) ரேடியோ ஐசோடோப்புகள்

D) நிலையற்ற ஐசோடோப்புகள்

விளக்கம்: சில ஐசோடோப்புகள் நிலையானவையாகவும், சில நிலையற்றவையாகவும் உள்ளன. தனிமங்களின் நிலையற்ற ஐசோடோப்புகள் கதிர்வீச்சு வடிவில் தங்களது ஆற்றலை இழந்து நிலையான ஐசோடோப்புகளாக மாற்றமடைகின்றன.

நிலையற்ற ஐசோடோப்பின் வேறு பெயர்கள்,

  1. கதிரியக்க ஐசோடோப்பு
  2. ரேடியோ ஐசோடோப்பு

90) கீழ்க்கண்டவற்றில் எது எதிர் ஆக்ஸிஜனேற்றிகள் அல்ல?

A) கரோட்டின்

B) வைட்டமின் C

C) வைட்டமின் E

D) வைட்டமின் D

விளக்கம்: எதிர் ஆக்ஸிஜனேற்றிகள் என்பது ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுத்து உணவின் தன்மையைக் கெடாமல் பாதுகாக்கின்றன. நம்மை இதய நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. உதாரணம். வைட்டமின் C, வைட்டமின் E, கரோட்டின்.

91) பின்வருவனவற்றில் எது உணவுப் பதப்படுத்திகள் அல்ல?

A) வினிகர்

B) பென்சோயேட்

C) பென்சாயிக் அமிலம்

D) குர்குமின்

விளக்கம்: உணவுப் பதப்படுத்திகள் என்பது நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்புலிருந்து உணவைப் பாதுகாக்கின்றன. உதாரணம், வினிகர், சோடியம் பென்சோயேட், பென்சாயிக் அமிலம், சோடியம் நைட்ரைட்.

குர்குமின் என்பது உணவிற்கு இனிய நிறத்தை தரும் நிறமி ஆகும்.

92) பொதுவாக தடயவியல் வேதியியலாளர்கள் குற்றப்பின்னணி ஆய்வில் எத்தனை படிகளில் ஆய்வு செய்கின்றனர்?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: பொதுவாக தடயவியல் வேதியியலாளர்கள் குற்றப்பின்னணி ஆய்வில் நான்கு படிகளில் வேலை செய்கினறனர். அவை,

1. சான்றுகள் சேகரிப்பு

2. ஆதாரங்களின் பகுப்பாய்வு

3. கலந்துரையாடல்

4. கண்டுபிடிப்பின் அறிக்கை

93) மூளைக் கட்டி நோயைக் கண்டறிய உதவும் கதிரியக்க ஐசோடோப்பு?

A) சோடியம் – 24

B) அயோடின் – 131

C) இரும்பு – 59

D) ஹைட்ரஜன் – 3

விளக்கம்: அயோடின் – 131 என்ற மூளைக்கட்டி, தைராய்டு சுரப்பியின் சீர்குலைவு ஆகியவற்றை அடையாளம் கண்டு அவற்றின் இடத்தைக் கண்டறிய பயன்படுகிறது.

94) கால்சியம் டை குளுட்டமேட் என்பது ஒரு____________?

A) உணவுப் பதப்படுத்தி

B) நிறமி

C) செயற்கை இனிப்பூட்டி

D) சுவையூட்டி

விளக்கம்: கால்சியம் டை குளுட்டமேட் என்பது ஒரு சுவையூட்டி ஆகும். இவை உணவு வகைகளின் சுவையை மேம்படுத்துகின்றன.

95) கூற்றுகளை ஆராய்க(மின் வேதியியல்)

1. கரிமச் சேர்மங்கள், இரும்பு அல்லாத உலோகங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்ய மற்றும் தூய்மைப்படுத்த தேவையான தொழில்நுட்ப செயல்முறைகளைக் கண்டறிவதற்கு பயன்படுகிறது.

2. ஒரு குறிப்பிட்ட வேதிவினையானது நிகழுமா நிகழாதா என்பதைக் கணிக்க மின் வேதியியல் பயன்படுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. கரிமச் சேர்மங்கள், இரும்பு அல்லாத உலோகங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்ய மற்றும் தூய்மைப்படுத்த தேவையான தொழில்நுட்ப செயல்முறைகளைக் கண்டறிவதற்கு பயன்படுகிறது.

2. ஒரு குறிப்பிட்ட வேதிவினையானது நிகழுமா நிகழாதா என்பதைக் கணிக்க மின் வேதியியல் பயன்படுகிறது.

96) மது அருந்தியவர்களை (ஆல்கஹால் பரிசோதனை) கீழக்கண்ட எந்த வாயு மூலம் கண்டறிய இயலாது?

A) சல்பியூரிக் அமிலம்

B) பொட்டாசியம் டை குரோமேட்

C) நீர் மற்றும் வெள்ளி நைட்ரேட்

D) நின்ஹைட்ரின்

விளக்கம்: மது அருந்தியவர்களை பயன்பாட்டு அறிவியல் மூலம் எளிதாகக் கண்டறியலாம். சல்பியூரிக் அமிலம், பொட்டாசியம் டை குரோமேட், நீர் மற்றும் வெள்ளி நைட்ரேட்டைக் கொண்டிருக்கும் குழயினுள் மது அருந்தியவர்களை வாயினால் ஊதச் செய்யும் பொழுது கண்டறியலாம்.

97) மது அருந்தியவர்களை ஆல்கஹால் பரிசோதனை கருவியில் ஊதச்செய்யும் போது ஆல்கஹால் _________ அடைந்து டை குரோமேட்டை குரோமிக் அயனியாக ஒடுக்குகிறது?

A) ஆக்ஸிஜனேற்றம்

B) ஒடுக்கம்

C) மின்னாற் பகுத்தல்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: மது அருந்தியவர்களை ஆல்கஹால் பரிசோதனை கருவியில் ஊதச்செய்யும் போது ஆல்கஹால் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து டை குரோமேட்டை குரோமிக் அயனியாக ஒடுக்குகிறது.

9th Science Lesson 17 Questions in Tamil

17] விலங்குலகம்

1) இதுவரை எத்தனை மில்லியன் விலங்குகளின் பண்புகள் விவரிக்கப்பட்டுள்ளன?

A) 1

B) 1.5

C) 2

D) 2.5

விளக்கம்: இதுவரை 1.5 மில்லியன் விலங்குகளின் பண்புகள் விவரிக்கப்பட்டுள்ளன. அவை ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடுகின்றன. பாக்டீரியா, தாவரங்கள் அல்லது விலங்குகள் ஆகியவற்றின் பல்வகைத் தன்மையே அவற்றின் சிறப்புப் பண்பிற்குக் காரணம்.

2) உயிரினங்களை முதன் முதலில் வகைப்படுத்தியவர் யார்?

A) சார்லஸ் டார்வின்

B) கரோலஸ் லின்னேயஸ்

C) ஹெரோடோட்டஸ்

D) ஆன்டிரியஸ்

விளக்கம்: உயிரினங்களை முதன் முதலில் வகைப்படுத்தியவர் கரோலஸ் லின்னேயஸ் ஆவார்.

3) வகைப்பாட்டியலின் அடிப்படை அலகு?

A) சிற்றினம்

B) பேரினம்

C) குடும்பம்

D) வகுப்பு

விளக்கம்: வகைப்பாட்டின் படிநிலையின் அடிப்படையில் உயிரினங்கள் சிறிய குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அத்தகைய சிறிய குழுவே (சிற்றினம்) வகைப்பாட்டியலின் அடிப்படை அலகாகும்.

4) ஐந்துலக வகைப்பாட்டை வரிசைப்படுத்துக.

1. மொனிரா

2. புரோடிஸ்டா

3. பூஞ்சைகள்

4. அனிமாலியா

5. பிளான்டே

A) 1, 2, 3, 5, 4

B) 1, 2, 3, 4, 5

C) 1, 2, 4, 3, 5

D) 1, 2, 4, 3, 5

விளக்கம்: உயிரினங்களை அவற்றின் ஒற்றுமை, வேறுபாடுகள் மற்றும் அவற்றிற்கிடையே உள்ள இனத்தொடர்புகளின் அடிப்படையில் குழுக்களாகப் பிரித்தல் வகைப்படுத்துதல் எனப்படும். ஐந்துலக வகைபாடு என்பது,

1. மொனிரா

2. புரோடிஸ்டா

3. பூஞ்சைகள்

4. பிளான்டே

5. அனிமாலியா

5) சென்டிபீட் என்பதற்கு நூறு காலிகள் என்று பொருள். அது எத்தனை கால்களை கொண்டுள்ளது?

A) 40

B) 30

C) 20

D) 50

விளக்கம்: சென்டிபீட்(பூரான்) என்பதற்கு நூறு காலிகள் என்று பொருள். ஆனால் பெரும்பாலானவை 30 இணைக்கால்களை மட்டுமே பெற்றுள்ளன.

6) வகைப்பாட்டியலின் கடைசி நிலை எது?

A) வகுப்பு

B) வரிசை

C) குடும்பம்

D) சிற்றினம்

விளக்கம்: சிற்றினம் என்பது வகைப்பாட்டியலின் கடைசியான நிலையாகும். வகைப்பாட்டியலின் முதல் நிலை உலகம் ஆகும்.

7) கூற்று: முயல், எலி, மனிதன், திமிங்கலம் போன்றவை பாலூட்டிகள் என்னும் வகுப்பில் இடம்பெற்றுள்ளன.

காரணம்: இவற்றில் முதுகு நாண் அல்லது முதுகெலும்புத் தொடர் உள்ளது

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் தவறு, காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய அல்லது ஒரே மாதிரியான வரிசைகள் ஒன்று சேர்ந்து வகுப்பினை உருவாக்குகின்றன. முயல், எலி, வெளவால், திமிங்கலம், மனிதக் குரங்கு மற்றும் மனிதன் போன்ற ஒரே வரிசையைச் சார்ந்த வெவ்வேறு விலங்குகள் தோல் மற்றும் பால்சுரப்பிகளை பொதுவான பண்புகளாகக் கொண்டுள்ளன. எனவே, இவை அனைத்தும் பாலூட்டிகள் என்னும் வகுப்பில் வைக்கப்பட்டுள்ளன.

8) விலங்குலகமானது எத்தனை அடிப்படைகளை கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: விலங்குலகமானது 4 அடிப்படைகளை கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. அவை,

1. கட்டமைப்பு நிலை

2. சமச்சீர்

3. கருமூல அடுக்கு

4. உடற் குழியின் தன்மை

9) பறப்பன பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இதன் முட்டைகள் கடினமாக கால்சியம் மிகுந்த ஓடுடையவை

2.. இதன் முட்டைகளில் குறைவான கருவுணவே உள்ளன.

3. முதுகெலும்பிகளில் பறவைகளே முதலில் தோன்றிய வெப்ப இரத்த உயிரிகள் ஆகும்.

4. இவற்றின் வடிவம் கதிர் வடிவமாகும்

A) 1, 2, 3 சரி

B) 1, 3, 4 சரி

C) 1, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இதன் முட்டைகள் கடினமாக கால்சியம் மிகுந்த ஓடுடையவை

2.. இதன் முட்டைகளில் அதிகளவு கருவுணவே உள்ளன.

3. முதுகெலும்பிகளில் பறவைகளே முதலில் தோன்றிய வெப்ப இரத்த உயிரிகள் ஆகும்.

4. இவற்றின் வடிவம் கதிர் வடிவமாகும்

10) கரோலஸ் லின்னேயஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

A) பிரிட்டன்

B) பிரான்ஸ்

C) அமெரிக்கா

D) ஸ்வீடன்

விளக்கம்: உயிரினங்களை முதன் முதலில் வகைப்படுத்தியவர் ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த தாவரவியலாளர் கரோலஸ் லின்னேயஸ் என்பவர் ஆவார்.

11) பொருத்துக.

அ. உடற்குழி அற்றவை – 1. உருளைப்புழுக்கள்

ஆ. பெய்யான உடற்குழி கொண்டவை – 2. மண்புழு, தவளை

இ. உண்மையான உடற்குழி உடையவை – 3. நாடாப்புழுக்கள்

A) 3, 2, 1

B) 3, 1, 2

C) 2, 3, 1

D) 1, 2, 3

விளக்கம்: உடற்குழி அற்றவை – நாடாப்புழுக்கள்

பெய்யான உடற்குழி கொண்டவை – உருளைப்புழுக்கள்

உண்மையான உடற்குழி உடையவை – மண்புழு, தவளை.

12) மண்புழுவின் இடப்பெயர்ச்சி உறுப்பு?

A) கைட்டின்

B) சீட்டா

C) அன்னுலி

D) பொய்க்கால்கள்

விளக்கம்: மண்புழு என்பது வளைதசைப் புழுக்கள் என்ற தொகுதியை சார்ந்தவை ஆகும். இவை சீட்டாக்கள் மற்றும் பாரபோடியாக்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.

13) யானைக்கால் நோயை தோற்றுவிக்கும் உயிரி எது?

A) உச்சேரேரியா

B) நீரிஸ்

C) சைகான்

D) யூபிலெக்டெல்லா

விளக்கம்: உருளைப் புழுக்கள் யானைக்கால் நோய் மற்றும் ஆஸ்காரியாஸ் ஆகியவற்றை தோற்றுவிக்கும். (எ.கா) ஆஸ்காரிஸ், உச்சேரேரியா

14) கூற்றுகளை ஆராய்க.

1. இந்தியக் கிளி மற்றும் பச்சைக் கிளி ஆகிய இரண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்தவையாகும்.

2. இந்தியாவின் நரி மற்றும் குள்ள நரி ஆகிய இரண்டும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை அல்ல

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இந்தியக் கிளி மற்றும் பச்சைக் கிளி ஆகிய இரண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை அல்ல

2. இந்தியாவின் நரி மற்றும் குள்ள நரி ஆகிய இரண்டும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை

15) ஃபெலிடெவில் குடும்பத்தில் இடம் பெறாத உயிரினம் எது?

A) சிறுத்தை

B) புலி

C) பூனை

D) ஓணான்

விளக்கம்: பல பொதுவான பண்புகளையுடைய, பல்வகை ஜெனிராக்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு குடும்பத்தை உருவாக்குகின்றன. (எ.கா) சிறுத்தை, புலி மற்றும் பூனை ஆகிய மூன்றும் பொதுவான பண்புகளைப் பெற்றுள்ளன. ஆகையால், இவை ஒரு பெரும் குடும்பமான ஃபெலிடெவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

16) மனிதன் என்பவன் வகைப்பாட்டியலின் எந்த படிநிலையில் இடம் பெற்றுள்ளான்?

A) பேரினம்

B) குடும்பம்

C) வரிசை

D) உலகம்

விளக்கம்: பொதுவான பண்புகளால் ஒன்றோடென்று தொடர்புடைய பல வகுப்புகள் அனைத்தும் ஒரே வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. குரங்குள், வாலற்ற பெருங்குரங்குகள், மனிதக் குரங்குள் மற்றும் மனிதன் போன்ற பல்வேறுபட்ட வகுப்புகளைச் சார்ந்த அனைத்தும் வகைப்பாட்டியலின் வரிசை என்னும் படிநிலையில் வைக்கப்பட்டுள்ளன.

17) மில்லிபீட்(மரவட்டை) என்பதற்கு என்ன பொருள்?

A) பத்து காலிகள்

B) நூறு காலிகள்

C) ஆயிரம் காலிகள்

D) பத்தாயிரம் காலிகள்

விளக்கம்: மில்லிபீட் என்பதற்கு ஆயிரம் கால்கள் என்று பொருள். ஆனால் இது நூறுகால்களை மட்டுமே பெற்றுள்ளன.

18) முதுகு நாணின் அடிப்படையில் விலங்குகள் எத்தனை குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: முதுகு நாணின் அடிப்படையில் விலங்குகள் இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை,

1. முதுகுநாணுள்ளவை

2. முதுகுநாணற்றவை

19) செல், திசு, உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலம் ஆகியவற்றின் அடிப்படையில் உயிரினங்கள் எத்தனை வகைப்படுத்தபடுகின்றன?

A) 2

B) 4

C) 3

D) 5

விளக்கம்: செல், திசு, உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலம் ஆகியவற்றின் அடிப்படையில் உயிரினங்கள் 2 வகைப்படுத்தபடுகின்றன, அவை.

1 ஒரு செல் உயிரிகள்

2 பல செல் உயிரிகள்

20) உடற்குழி பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. உடலினுள்ளே திரவத்தினால் நிரப்பப்பட்ட குழி உடற்குழி எனப்படும்.

2. இது உடல் சுவற்றிலிருந்து உணவுப்பாதையைப் பிரிக்கிறது

3. உண்மையான உடற்குழி அல்லது சீலோம் என்பது அக அடுக்கில் அமைந்துள்ளது.

4. உண்மையான உடற்குழி உடையவை – உருளைப்புழுக்கள்

A) 1, 2 சரி

B) 2, 3 சரி

C) 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. உடலினுள்ளே திரவத்தினால் நிரப்பப்பட்ட குழி உடற்குழி எனப்படும்.

2. இது உடல் சுவற்றிலிருந்து உணவுப்பாதையைப் பிரிக்கிறது

3. உண்மையான உடற்குழி அல்லது சீலோம் என்பது நடு அடுக்கில் அமைந்துள்ளது.

4. உண்மையான உடற்குழி உடையவை – மண்புழு, தவளை

21) கூற்றுகளை ஆராய்க.

1. கரோலஸ் லின்னேயஸ் என்பார் உயிரினங்களுக்கு இரு பெயர்களிடும் முறையை அறிமுகப்படுத்தினார்.

2. இரு பெயர்களில் முதல் பெயர் சிற்றினம்

3. சிற்றினப் பெயர்கள் சிறிய எழுத்துகளில் இருக்க வேண்டும்

4. இரு பெயர்களில் இரண்டாம் பெயர் பேரினம்

5. பேரினப் பெயர்கள் பெரிய எழுத்துக்களில் இருக்க வேண்டும்

A) 1, 3, 5 சரி

B) 1, 2, 4 சரி

C) 1 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. கரோலஸ் லின்னேயஸ் என்பார் உயிரினங்களுக்கு இரு பெயர்களிடும் முறையை அறிமுகப்படுத்தினார்.

2. இரு பெயர்களில் முதல் பெயர் பேரினம்

3. சிற்றினப் பெயர்கள் சிறிய எழுத்துகளில் இருக்க வேண்டும்

4. இரு பெயர்களில் இரண்டாம் பெயர் சிற்றினம்

5. பேரினப் பெயர்கள் பெரிய எழுத்துக்களில் இருக்க வேண்டும்

22) உடற்குழி தன்மையின் அடிப்படையில் விலங்குகள் எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: உடற்குழியின் தன்மையின் அடிப்படையில் விலங்குகள் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை,

1. உடற்குழி அற்றவை – நாடாப்புழு

2. பொய்யான உடற்குழி – உருளைப்புழு

3. உண்மையான உடற்குழி உடையவை – மண்புழு, தவளை

23) கரோலஸ் லின்னேயஸ் எந்த மொழியைப் பயன்படுத்தி உயிரினங்களை வகைப்படுத்தினார்?

A) கிரேக்கம்

B) இலத்தீன்

C) ஆங்கிலம்

D) பிரெஞ்சு

விளக்கம்: உயிரினங்களை முதன் முதலில் வகைப்படுத்தியவர் ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த தாவரவியலாளர் கரோலஸ் லின்னேயஸ் என்பவர் ஆவார். இவர் லத்தீன் மொழியைப் பயன்படுத்தி உயிரினங்களுக்கு அவற்றின் பேரினம், சிற்றினம் மற்றும் குழுக்களின் அடிப்படையில் பெயரிடும் நிலையான முறையினை உருவாக்கினார்.

24) கூற்றுகளை ஆராய்க.

1. சென்டிபீட் என்றால் நூறு காலிகள் என்று பொருள்

2. மில்லிபீட் என்பதற்கு ஆயிரம் கால்கள் என்று பொருள்

3. பூரான் 30 இணைக்கால்களை மட்டுமே பெற்றுள்ளன.

4. மரவட்டை நூறுகால்களை மட்டுமே பெற்றுள்ளன.

A) 1, 2 சரி

B) 3, 4 சரி

C) அனைத்தும் சரி

D) அனைத்தும் தவறு

விளக்கம்: 1. சென்டிபீட் என்றால் நூறு காலிகள் என்று பொருள்

2. மில்லிபீட் என்பதற்கு ஆயிரம் கால்கள் என்று பொருள்

3. பூரான் 30 இணைக்கால்களை மட்டுமே பெற்றுள்ளன.

4. மரவட்டை நூறுகால்களை மட்டுமே பெற்றுள்ளன.

25) இந்திய தேசிய பறவையின்- இருசொல் பெயர் என்ன?

A) ரானான ஹெக்சாடாக்டைலா

B) கார்வஸ் ஸ்பென்டென்ஸ்

C) பெரிப்பிளானட்டா அமெரிக்கானா

D) பாவோ கிரிஸ்டேடஸ்

விளக்கம்: இந்தியாவின் தேசிய பறவை மயில். இதன் இருசொல் பெயர் – பாவோ கிரிஸ்டேடஸ்

ரானா ஹெக்சாடாக்டைலா – தவளை

கார்வஸ் ஸ்பென்டென்ஸ் – காகம்

பெரிப்பிளானட்டா அமெரிக்கானா – கரப்பான் பூச்சி

26) பறவையின் _________ இறக்கைகளாக மாற்றம் அடைந்துள்ளன?

A) பின்னங்கால்கள்

B) முன்னங்கால்கள்

C) தாடைகள்

D) முதுகெலும்புகள்

விளக்கம்: பறவைகளில் முன்னங்கால்கள் இறக்கைகளாக உள்ளன. பின்னங்கால்கள் நடப்பதற்கும், ஓடுவதற்கும், நீங்துவதற்கும் ஏற்ப தகவமைப்பைப் பெற்றுள்ளன.

27) பறவைகள் எதன் மூலம் சுவாசிக்கின்றன?

A) தோல்

B) செவுள்கள்

C) நுரையீரல்

D) இதயம்

விளக்கம்: காற்றறைகளைக் கொண்ட நுரையீரல் மூலம் பறவைகளில் சுவாசம் நடைபெறுகிறது. இவையே முதுகெலும்பிகளில் தோன்றிய முதல் வெப்ப இரத்த விலங்காகும்.

28) உடல் உறுப்புகள் அமைந்துள்ள முறை அடிப்படையில் உயிரிகள் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: உடல் உறுப்புகள் அமைந்துள்ள முறை சமச்சீர் ஆகும். இவை இரு வகைப்படும். அவை, 1. ஆரச்சமச்சீர் – இம்முறையில் விலங்குகளின் உடல் உறுப்புகள் ஒரு மைய அச்சினைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கும். உயிரியின் உடலை எந்த ஒரு திசையில் பிரித்தாலும் ஒத்த சமமான இரண்டு பாகங்களாக பிரிக்க முடியும்(எ.கா) ஹைட்ரா, ஜெல்லி மீன், நட்சத்திர மீன்.

2. இருபக்கச் சமச்சீர் – இம்முறையில் ஒரு உயிரியின் உடல் உறுப்புகள் மைய அச்சின் இரு மருங்கிலும் அமைக்கப்பட்டிருக்கும். மைய அச்சின் வழியாக உடலைப் பிரித்தால் மட்டுமே இரு சமமான பாகங்களாகப் பிரிக்க இயலும் (எ.கா) தவளை

29) உயிரினங்களின் வகைப்பாட்டியலின் படிநிலைகளை வரிசைப்படுத்துக.

1. தொகுதி

2. உலகம்

3. வரிசை

4. வகுப்பு

A) 3, 4, 2, 1

B) 3, 4, 1, 2

C) 4, 3, 1, 2

D) 4, 3, 2, 1

விளக்கம்: உயிரினங்களின் வகைப்பாட்டியலின் படிநிலைகளை கீழே உள்ளவாறு வரிசைப்படுத்தலாம்.

1. உலகம்

2. தொகுதி

3. வகுப்பு

4. வரிசை

30) கீழ்க்கண்டவற்றில் எது உடற்குழி அற்றவை?

A) தட்டைப்புழு

B) உருளைப்புழு

C) மண்புழு

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்:உடற்குழி அற்றவை – தட்டைப்புழு, நாடாப்புழு

2. பொய்யான உடற்குழி உடையவை – உருளைப்புழு

3. உண்மையான உடற்குழி உடையவை – மண்புழு

31) வகைப்பாட்டியலில் மனிதன் _________ என்னும் வரிசையில் இடம்பெற்றுள்ளான்

A) பிரைமேட்டுகள்

B) ஃபெலிடெவ்

C) ஜெனிரா

D) யுபாட்ரா

விளக்கம்: குரங்குள், வாலற்ற குரங்குகள், மனிதக் குரங்குகள் மற்றும் மனிதன் போன்ற பல்வேறுபட்ட வகுப்புகளைச் சார்ந்த அனைத்தும் பிரைமேட்டுகள் என்னும் ஒரே வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.

32) முதுகு நாண் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. முதன்மை உயிரிகளில் இது முதுகெலும்புத் தொடராக மாற்றமடைகிறது

2. முதன்மை உயிரிகள் தவிர்த்து மற்ற உயிரிகளில் இது முதுகுநாணாக உள்ளது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: முதுகு நாண் – இது கருவளர்ச்சியின் போது உடலில் உள்ள நடு முதுகுப் பகுதியில் உருவாக்கப்படும் நீண்ட கோல் வடிவ அமைப்பு ஆகும். இது முதன்மை உயிரிகளில் மட்டும் நிலைத்திருக்கும். மற்ற உயிரிகளில் முதுகெலும்புத் தொடராக மாற்றமடைகிறது

33) தமிழ்நாட்டின் மாநிலப் பறவை எது?

A) மரகதப் புறா

B) மயில்

C) இந்தியக் கிளி

D) சிட்டுக்குருவி

விளக்கம்: தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப் புறா ஆகும். இது எளிதில் பழகும் தன்மை கொண்டது. பறப்பதை விட நடப்பதையே அதிகம் விரும்பும்.

34) முதுகெலும்பிகளில் முதலில் தோன்றிய வெப்ப இரத்த உயிரி எது?

A) குரங்குகள்

B) டைனசர்

C) பறவைகள்

D) மனிதன்

விளக்கம்: முதுகெலும்பிகளில், பறவைகளே முதலில் தோன்றிய வெப்ப இரத்த உயிரிகள் ஆகும். இவை பறப்பதற்கேற்ற சிறப்பான தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.

35) கூற்றுகளை ஆராய்க.

1. முயல், எலி, வெளவால், திமிங்கலம், மனிதக் குரங்கு மற்றும் மனிதன் – பாலூட்டி வகுப்பு

2. பெருங்குரங்கு, குரங்குகள், வாலற்ற பெருங்குரங்குகள், மனிதக் குரங்குகள் – பிரைமேட்டுகள்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. முயல், எலி, வெளவால், திமிங்கலம், மனிதக் குரங்கு மற்றும் மனிதன் – பாலூட்டி வகுப்பு

2. பெருங்குரங்கு, குரங்குகள், வாலற்ற பெருங்குரங்குகள், மனிதக் குரங்குள் – பிரைமேட்டுகள்

36) முதுகுடைய விலங்குகளில் பெரிய விலங்கு எது?

A) யானை

B) ஒட்டகம்

C) நீலத் திமிங்கலம்

D) காண்டாமிருகம்

விளக்கம்: முதுகெலும்புடைய விலங்குகளில் 35 மீட்டர் நீளமும் 120 டன் எடையும் கொண்ட ராட்சத நீலத் திமிங்கிலமே மிகப்பெரிய விலங்காகும்.

37) பூமியின் மீது மனிதனுக்கு அடுத்து அதிக ஆதிக்கம் செலுத்துபவைகளாக விளங்குபவை எது?

A) டீனியா சோலியம்

B) ஆக்டோபஸ்கள்

C) பைலா குளோரோபோசா

D) மில்லிபீட்

விளக்கம்: பூமியின் மீது மனிதனுக்கு அடுத்து அதிக ஆதிக்கம் செலுத்துபவைகளாக ஆக்டோபஸ்கள் விளங்கும் என சிலர் யூகிக்கின்றனர்.

38) நிலத்தில் வாழ்வதற்குத் தேவையான முழுமையான தகவமைப்பினைப் பெற்ற முதல் முதுகெலும்பு வகுப்பு எது?

A) பறப்பன

B) பாலூட்டிகள்

C) இருவாழ்விகள்

D) ஊர்வன

விளக்கம்: நிலத்தில் வாழ்வதற்குத் தேவையான முழுமையான தகவமைப்பினைப் பெற்ற முதல் முதுகெலும்பு வகுப்பு ஊர்வன ஆகும். இதன் தோலின் மேற்புறத்தில் சொரசொரப்பான முட்கள் போன்ற செதில்கள் உள்ளன.

39) கீழ்க்கண்டவற்றில் எது உண்மையான உடற்குழி பெறவில்லை?

A) கணுக்காலிகள்

B) அரைநாணிகள்

C) வளைதசைப் புழுக்கள்

D) தட்டைப்புழுக்கள்

விளக்கம்: உடற்குழியற்றவை – தட்டைப்புழு, நாடாப்புழு

போலி உடற்குழியுடையவை – உருளைப்புழு

உண்மையான உடற்குழியுடையவை – வளைதசைப் புழுக்கள், கணுக்காலிகள், மெல்லுடலிகள், முட்தோலிகள், அரைநாணிகள், முதுகு நாணுள்ளவை.

40) பொதுவாக ஊர்வனவற்றின் இதயம் எத்தனை அறைகளைக் கொண்டது?

A) 2

B) 3

C) 4

D) 1

விளக்கம்: நிலத்தில் வாழ்வதற்குத் தேவையான முழுமையான தகவமைப்பினைப் பெற்ற முதல் முதுகெலும்பு வகுப்பான ஊர்வன மூன்று அறைகளை கொண்ட இதயத்தை பெற்றுள்ளன.

41) கூற்று: குரங்குகள், வாலற்ற குரங்குள், மனிதக் குரங்குள் மற்றும் மனிதன் போன்ற பல்வேறுபட்ட வகுப்புகளைச் சார்ந்த அனைத்தும் பிரைமேட்டுகள் என்னும் ஒரே வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.

காரணம்: அனைத்தும் சில பொதுவான பண்புகளைப் பெற்றுள்ளன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் தவறு, காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: குரங்குள், வாலற்ற குரங்குள், மனிதக் குரங்குள் மற்றும் மனிதன் போன்ற பல்வேறுபட்ட வகுப்புகளைச் சார்ந்த அனைத்தும் பிரைமேட்டுகள் என்னும் ஒரே வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. அவையனைத்தும் சில பொதுவான பண்புகளைப் பெற்றுள்ளதால் ஒரே வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

42) நாயின் இருசொல் பெயர்?

A) ஹேமோ செப்பியன்ஸ்

B) பான்தரா டைகிரிஸ்

C) கேனிஸ் பெமிலியாரிஸ்

D) ஃபெலிஸ் ஃபெலிஸ்

விளக்கம்: நாயின் இருசொல் பெயர் – கேனிஸ் பெமிலியாரிஸ்

ஹேமோ செப்பியன்ஸ் – மனிதன்

பான்தரா டைகிரிஸ் – புலி

ஃபெலிஸ் ஃபெலிஸ் – பூனை

43) முதலையின் இதயம் எத்தனை அறைகளை கொண்டது?

A) 1

B) 2

C) 3

D) 4

விளக்கம்: பொதுவாக ஊர்வன வகையைச் சேர்ந்தவை மூன்று அறைகளைக் கொண்ட இதயத்தை பெற்றிருக்கும். ஆனால் ஊர்வன வகையைச் சேர்ந்த முதலைகள் நான்கு அறைகளை கொண்ட இதயத்தை பெற்றிருக்கின்றன

44) வரிசைப்படுத்துக.

1. குடும்பம்

2. வரிசை

3. பேரினம்

4. சிற்றினம்

A) 4, 3, 1, 2

B) 4, 2, 3, 1

C) 4, 3, 2, 1

D) 4, 3, 1, 2

விளக்கம்: உயிரினங்களின் வகைப்பாட்டியலின் படிநிலைகளை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1. சிற்றினம்

2. பேரினம்

3. குடும்பம்

4. வரிசை

45) பொருத்துக.

அ. உடற்குழி அற்றவை – 1. உருளைப்புழு

ஆ. பொய்யான உடற்குழி – 2. மண்புழு, தவளை

இ. உண்மையான உடற்குழி உடையவை – 3. நாடாப்புழு

A) 2, 3, 1

B) 1, 3, 2

C) 3, 2, 1

D) 3, 1, 2

விளக்கம்: 1. உடற்குழி அற்றவை – நாடாப்புழு

2. பொய்யான உடற்குழி – உருளைப்புழு

3. உண்மையான உடற்குழி உடையவை – மண்புழு, தவளை

46) கீழ்க்கண்டவற்றில் எது ஆரச்சமச்சீர் உயிரி அல்ல?

A) ஹைட்ரா

B) ஜெல்லி மீன்

C) நட்சத்திர மீன்

D) தவளை

விளக்கம்: உடல் உறுப்புகள் அமைந்துள்ள முறை சமச்சீர் ஆகும். இவை இரு வகைப்படும். அவை, 1. ஆரச்சமச்சீர் – இம்முறையில் விலங்குகளின் உடல் உறுப்புகள் ஒரு மைய அச்சினைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கும். உயிரியின் உடலை எந்த ஒரு திசையில் பிரித்தாலும் ஒத்த சமமான இரண்டு பாகங்களாக பிரிக்க முடியும்(எ.கா) ஹைட்ரா, ஜெல்லி மீன், நட்சத்திர மீன்.

47) கரு மூல அடுக்கு பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. ஈரடுக்கு உயிரி – ஹைட்ரா

2. மூவடுக்கு உயிரி – முயல்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: கரு அடுக்கு – இவை கரு உருவாக்கத்தின் பொழுது உருவாக்கப்படுகின்றன. கரு மூல அடுக்குகளிலிருந்து உடல் உறுப்புகள் தோன்றி ஒரு முதிர் உயிரி உருவாகின்றது.

1. ஈரடுக்கு உயிரிகள் (புற அடுக்கு, அக அடுக்கு) – ஹைட்ரா

2. மூவடுக்கு உயிரிகள் (புற அடுக்கு, நடு அடுக்கு, அக அடுக்கு) – முயல்

48) ஊர்வனவற்றின் சுவாச உறுப்பு எது?

A) தோல்

B) நுரையீரல்

C) செவுள்கள்

D) இதயம்

விளக்கம்: நிலத்தில் வாழ்வதற்குத் தேவையான முழுமையான தகவமைப்பினைப் பெற்ற முதல் முதுகெலும்பு வகுப்பு ஊர்வனவாகும். இவற்றில் சுவாசம் நுரையீரல் மூலம் நடைபெறுகிறது

49) முட்டையிடும் பாலூட்டி எது?

A) பிளாட்டிபஸ்

B) நெருப்புக்கோழி

C) சுறா

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: பொதுவாக பாலூட்கள் முட்டையிடுகின்றன. ஆனால் பிளாட்டிபஸ் என்ற பாலூட்டி மட்டும் குட்டியை ஈனுகின்றன.

50) பெரிப்பிளானட்டா அமெரிக்கானா என்பது எதன் இருசொல் பெயர்?

A) மயில்

B) கரப்பான் பூச்சி

C) தவளை

D) காகம்

விளக்கம்: பெரிப்பிளானட்டா அமெரிக்கானா – கரப்பான் பூச்சி

பாவோ கிரிஸ்டேடஸ் – மயில்

ரானா ஹெக்சாடாக்டைலா – தவளை

கார்வஸ் ஸ்பென்டென்ஸ் – காகம்

51) தாடையற்ற முதுகெலும்பி எது?

A) லாம்ப்ரே

B) சாலமான்டர்

C) பிக்மி கோபி

D) மடவை

விளக்கம்: ஹேக் மீன் மற்றும் லாம்ப்ரே போன்றவை வட்டவாயுடையன ஆகும். இவை தாடையற்ற முதுகெலும்பி ஆகும்.

52) மீன்களின் சுவாச உறுப்பு எது?

A) இதயம்

B) நுரையீரல்

C) செவுள்கள்

D) செதில்கள்

விளக்கம்: மீன்கள் செவுள்கள் மூலம் சுவாசிக்கின்றன. மீனின் உடல் செதில்களால் போர்த்தப்பட்டுள்ளது.

53) மீனின் இதயம் எத்தனை அறைகளைக் கொண்டது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: மீனின் இதயம் ஆரிக்கிள், வெண்டிரிக்கிள் என இரு அறைகளைக் கொண்டது. இதன் சுவாசம் செவுள்கள் வழியாக நிகழ்கிறது.

54) கீழ்க்கண்டவற்றில் எது மிகச்சிறிய முதுகெலும்பி?

A) லாம்ப்ரே

B) சாலமான்டர்

C) குட்டை பிக்மி கோபி

D) மடவை

விளக்கம்: மிகச்சிறிய முதுகெலும்பி – பிலிப்பைன் கோபி அல்லது குட்டை பிக்மி கோபி ஆகும். இது வெப்பமண்டலப் பகுதியில் வாழும் மீனினமாகும்.

55) இருவாழ்விகளில் சுவாசமானது கீழ்க்கண்ட எதன் மூலம் நடைபெறுவதில்லை?

A) செவுள்கள்

B) நுரையீரல்கள்

C) தொண்டை

D) செதில்கள்

விளக்கம்: இருவாழ்விகளில் சுவாசமானது செவுள்கள், நுரையீரல்கள், தோல் மற்றும் தொண்டை வழியாக நடைபெறுகிறது.

56) இருவாழ்விகளின் இதயம் கீழ்க்கண்ட எதனை போன்று உள்ளது?

A) இரு ஆரிக்கிள், ஒரு வென்டிரிக்கிள் என மூன்று அறைகள்

B) ஒரு ஆரிக்கிள், இரு வென்டிரிக்கிள் என மூன்று அறைகள்

C) இரு ஆரிக்கிள், இரு வென்டிரிக்கிள் என நான்கு அறைகள்

D) ஒரு ஆரிக்கிள், ஒரு வென்டிரிக்கிள் என இரண்டு அறைகள்

விளக்கம்: இரு வாழ்விகளின் இதயமானது ஒரு ஆரிக்கிள், இரு வென்டிரிக்கிள் என மூன்று அறைகளை கொண்டது. இதன் சுவாசமானது செவுள்கள், நுரையீரல்கள், தோல் மற்றும் தொண்டை வழியாக நடைபெறுகிறது.

57) பாலூட்டிகள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. குளிர் இரத்த விலங்குகள் ஆகும்

2. இவற்றின் உடல் ரோமங்களால் போர்த்தப்பட்டுள்ளது.

3. உடலில் வியர்வைச் சுரப்பிகள் மற்றும் எண்ணெய்ச் சுரப்பிகள் உண்டு.

4. இவற்றின் உடலானது தலை, கழுத்து, வயிறு மற்றும் வால் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

A) 2, 3 சரி

B) 2, 3, 4 சரி

C) 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. வெப்ப இரத்த விலங்குகள் ஆகும்

2. இவற்றின் உடல் ரோமங்களால் போர்த்தப்பட்டுள்ளது.

3. உடலில் வியர்வைச் சுரப்பிகள் மற்றும் எண்ணெய்ச் சுரப்பிகள் உண்டு.

4. இவற்றின் உடலானது தலை, கழுத்து, வயிறு மற்றும் வால் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

58) முதுகுநாணுள்ளவைகளின் துணைத்தொகுதிகள் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: முதுகுநாணுள்ளவைகளின் துணைத் தொகுதிகள் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

1. வால்முதுகுநாணிகள் எ.கா. அசிடியன்

2. தலைமுதுகுநாணிகள் எ.கா. ஆம்பியாக்ஸிஸ்

3. முதுகெலும்பிகள் – தவளை, மனிதன்

59) கீழ்க்கண்டவற்றில் எது இருபால் உயிரி?

A) சைகான்

B) ஹைட்ரா

C) ஜெல்லி மீன்

D) நாடாப்புழு

விளக்கம்: தட்டைப்புழுக்கள் இரு பால் உயிரிகள். ஆண் மற்றும் பெண் இருப்பெருக்க உறுப்புகள் ஒரே உயிரிகள் காணப்படும். (எ.கா) கல்லீரல் புழு, நாடாப்புழு

60) பொருத்துக.

அ. மீன்கள் – 1. பல்லி

ஆ. இருவாழ்விகள் – 2. நெருப்புக்கோழி

இ. பறப்பன – 3. தேரை

ஈ. ஊர்வன – 4. மடவை

A) 1, 3, 4, 2

B) 3, 4, 2, 1

C) 4, 2, 3, 1

D) 4, 3, 2, 1

விளக்கம்: மீன்கள் – மடவை

இருவாழ்விகள் – தேரை

பறப்பன – நெருப்புக்கோழி

ஊர்வன – பல்லி

61) வட்ட வாயுடைய உயிர்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. தாடையற்ற முதுகெலும்பி

2. உடல் விலாங்கு மீன் போன்று நீளமானது.

3. தோல் சொரசொரப்பாகவும், செதிள்களுடனும் காணப்படும்

4. மீன்களின் மேல் புற ஒட்டுண்ணிகளாக வாழ்க்கை நடத்துகின்றன.

A) 1, 2 சரி

B) 1, 2, 4 சரி

C) 1, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. தாடையற்ற முதுகெலும்பி

2. உடல் விலாங்கு மீன் போன்று நீளமானது.

3. தோல் வழவழப்பாகவும், செதிள்களற்றும் காணப்படும்

4. மீன்களின் மேல் புற ஒட்டுண்ணிகளாக வாழ்க்கை நடத்துகின்றன

62) முதுகெலும்பிகள் எத்தனை வகுப்புகளாக பிரிக்கப்படுகின்றன?

A) 2

B) 4

C) 5

D) 6

விளக்கம்: முதுகெலும்பிகள் ஆறு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வளர்நிலை அமைப்பிலுள்ள முதுகுநாண், முதிர் உயிரியில் அச்சு எலும்பினாலான முதுகெலும்புத் தொடராக மாற்றியமைக்கப்படுகிறது. இது உடலின் பிரதான சட்டமாக அமைகிறது.

63) ஊர்வன பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. நிலத்தில் வாழ்வதற்குத் தேவையான முழுமையான தகவமைப்பினைப் பெற்ற முதல் முதுகெலும்பு வகுப்பு

2. தோலின் மேற்புறத்தில் சொரசொரப்பான முட்கள் போன்ற செதில்கள் உள்ளன.

3. இவற்றின் சுவாசம் தோல் மூலம் நடைபெறுகிறது

4. தடித்த தோல் போன்ற ஓடுடைய முட்டைகளை இடுகின்றன.

A) 1, 2 சரி

B) 1, 2, 3 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. நிலத்தில் வாழ்வதற்குத் தேவையான முழுமையான தகவமைப்பினைப் பெற்ற முதல் முதுகெலும்பு வகுப்பு

2. தோலின் மேற்புறத்தில் சொரசொரப்பான முட்கள் போன்ற செதில்கள் உள்ளன.

3. இவற்றின் சுவாசம் நுரையீரல் மூலம் நடைபெறுகிறது

4. தடித்த தோல் போன்ற ஓடுடைய முட்டைகளை இடுகின்றன.

64) மனிதனின் இருசொல் பெயர்?

A) ஹேமோ செப்பியன்ஸ்

B) பான்தரா டைகிரிஸ்

C) கேனிஸ் பெமிலியாரிஸ்

D) ஃபெலிஸ் ஃபெலிஸ்

விளக்கம்: ஹேமோ செப்பியன்ஸ் – மனிதன்

நாயின் இருசொல் பெயர் – கேனிஸ் பெமிலியாரிஸ்

பான்தரா டைகிரிஸ் – புலி

ஃபெலிஸ் ஃபெலிஸ் – பூனை

65) மீன் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. குளிர் இரத்தப் பிராணி

2. தாடைகளை பெற்றவை

3. இதன் உடல் படகு போன்று அமைந்துள்ளது

4. இது தலை, உடல், வால் என மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.

A) 2, 3, 4 சரி

B) 1, 3, 4 சரி

C) 1, 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. குளிர் இரத்தப் பிராணி

2. தாடைகளை பெற்றவை

3. இதன் உடல் படகு போன்று அமைந்துள்ளது

4. இது தலை, உடல், வால் என மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.

66) பாலூட்டிகள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. வெளிக்காது மடல் இவற்றில் காணப்படுகிறது.

2. பாலூட்டும் சுரப்பிகள், பெண் உயிரிகளில் காணப்படுகிறது.

3. தாய்-செய் இணைப்புத் திசு இவற்றின் சிறப்பம்சமாகும்

4. முட்டையிடும் பாலூட்டி – பிளாட்டிபஸ்

A) 1, 2 சரி

B) 1, 2, 3 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. வெளிக்காது மடல் இவற்றில் காணப்படுகிறது.

2. பாலூட்டும் சுரப்பிகள், பெண் உயிரிகளில் காணப்படுகிறது.

3. தாய்-செய் இணைப்புத் திசு இவற்றின் சிறப்பம்சமாகும்

4. முட்டையிடும் பாலூட்டி – பிளாட்டிபஸ்

67) கூற்றுகளை ஆராய்க.

1. மிகச்சிறிய முதுகெலும்பியான பிலிப்பைன் கோபி அல்லது குட்டை பிக்மி கோபியின் நீளம் – 10 செ.மீ

2. மிகப்பெரிய இருவாழ்வி சாலமான்டர் ஆன்டிரியஸ் டாவிடியன்ஸின் நீளம் ஐந்து அடி மற்றும் 11 அங்குலம்

3. மிகப்பெரிய பாலூட்டி நீலத்திமிங்கலத்தின் நீளம் – 140 டன்

4. சென்டிபீட் என்பதற்கு ஆயிரம் காலிகள் என்று பொருள்

A 1, 3, 4 தவறு

B) 1, 2, 4 தவறு

C) 1, 2 தவறு

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. மிகச்சிறிய முதுகெலும்பியான பிலிப்பைன் கோபி அல்லது குட்டை பிக்மி கோபியின் நீளம் – 10 மி.மீ

2. மிகப்பெரிய இருவாழ்வி சாலமான்டர் ஆன்டிரியஸ் டாவிடியன்ஸின் நீளம் ஐந்து அடி மற்றும் 11 அங்குலம்

3. மிகப்பெரிய பாலூட்டி நீலத்திமிங்கலத்தின் நீளம் – 120 டன்

4. சென்டிபீட் என்பதற்கு நூறு காலிகள் என்று பொருள்

68) முதுகெலும்பிகளின் முன்னோடி எது?

A) முதுகுநாணுள்ளவை

B) முன்முதுகுநாணுள்ளவை

C) நடுமுதுகுநாணுள்ளவை

D) பின்முதுகுநாணுள்ளவை

விளக்கம்: முதுகெலும்பிகளின் முன்னோடி என்று அழைக்கப்படுபவை முன்முதுகுநாணுள்ளவை ஆகும்.

69) கூற்றுகளை ஆராய்க.

1. அனைத்து முதுகுநாணிகளும் மூவடுக்கு உயிரி ஆகும்.

2. அனைத்து முதுகுநாணிகளும் பொய்யான உடற்குழி பெற்றவை

3. முதுகுநாணிகளின் தொகுதி இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

4. முதுகெலும்பிகளின் முன்னோடி – முதுகெலும்புள்ளவை.

A) 1, 3 சரி

B) 2, 3 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. அனைத்து முதுகுநாணிகளும் மூவடுக்கு உயிரி ஆகும்.

2. அனைத்து முதுகுநாணிகளும் உண்மையான உடற்குழி பெற்றவை

3. முதுகுநாணிகளின் தொகுதி இரண்டு குழுக்களாகப்பிரிக்கப்பட்டுள்ளது.

4. முதுகெலும்பிகளின் முன்னோடி – முன்முதுகுநாணுள்ளவை

70) பல செல்களைக் கொண்ட இயங்கும் தன்மையற்ற நீர் வாழ் உயிரிகள் எது?

A) தட்டைப்புழுக்கள்

B) உருளைப்புழுக்கள்

C) வளைதசைப்புழுக்கள்

D) துளையுடலிகள்

விளக்கம்: துளையுடலிகள் (பேரிஃபெரா) பல செல்களைக் கொண்ட இயங்கும் தன்மையற்ற நீர் வாழ் உயிரிகளாகும். இவை செல்கள் அளவிலான கட்டமைப்பைப் பெற்றுள்ளன.

71) கூற்று: முதுகெலும்பிகளில் பறக்கும் தன்மையை பெற்றிருப்பவை பறவைகள்

காரணம்: அவற்றின் எலும்புகள் மென்மையானவை. எலும்புகளினுள் காற்றறைகள் உண்டு.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் தவறு, காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: முதுகெலும்பிகளில் பறக்கும் தன்மையை பெற்றிருப்பவை பறவைகள். அவற்றின் எலும்புகள் மென்மையானவை. எலும்புகளினுள் காற்றறைகள் உண்டு. எனவே, இவற்றின் எடை குறைவாக இருக்கும்.

72) கூற்று: தவளை மற்றும் தேரை இருவாழ்விகள் என அழைக்கப்படுகின்றன.

காரணம்: இவற்றின் உடலானது தலை, உடல் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் தவறு, காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: தவளை, தேரை போன்றவை இருவாழ்விகளாகும். இவை நிலம் மற்றும் நீரில் வாழும் தகவமைப்பை பெற்றுள்ளன.

73) துளையுடலிகள் எம்முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன?

A) பால் இனப்பெருக்கம்

B) ஸ்போர்கள்

C) பாலிலா இனப்பெருக்கம்

D) A மற்றும் C

விளக்கம்: துளையுடலிகள் பாலின மற்றும் பாலிலா முறைகளில் இனப்பெருக்கம் செய்யும் இயல்புடையவை ஆகும். (எ.கா) யூடெலெக்டெல்லா மற்றும் சைகான்

74) விலங்குலகின் மிகப்பெரிய தொகுதி எது?

A) தட்டைப்புழுக்கள்

B) கணுக்காலிகள்

C) வளைதசைப்புழுக்கள்

D) துளையுடலிகள்

விளக்கம்: கணுக்காலிகள் விலங்குலகின் மிகப்பெரிய தொகுதியாகும். இவை இருபக்க சமச்சீர், மூவடுக்குகள் மற்றும் உண்மையான உடற்குழியுடைய விலங்குகள்.

75) மிகச்சிறிய முதுகெலும்பி பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இது வெப்பமண்டலப் பகுதியில் வாழும் மீனினமாகும்

2. இவை தெற்காசியாவின் சதுப்பு நிலங்கள் மற்றும் உப்பு நீர்நிலைகளில் காணப்படுகின்றன

3. இவை 10 செ.மீ மட்டுமே நீளம் கொண்டவை

4. மிகச்சிறிய முதுகெலும்பி – பிலிப்பைன் கோபி அல்லது குட்டை பிக்மி கோபி

A) 1, 4 சரி

B) 1, 2, 4 சரி

C) 1, 2 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இது வெப்பமண்டலப் பகுதியில் வாழும் மீனினமாகும்

2. இவை தெற்காசியாவின் சதுப்பு நிலங்கள் மற்றும் உப்பு நீர்நிலைகளில் காணப்படுகின்றன

3. இவை 10 மி.மீ மட்டுமே நீளம் கொண்டவை

4. மிகச்சிறிய முதுகெலும்பி – பிலிப்பைன் கோபி அல்லது குட்டை பிக்மி கோபி

76) கீழ்க்கண்டவற்றில் எதன் உடல் ஆஸ்டியா எனப்படும் எண்ணற்ற துளைகளால் துளைக்கப்பட்டுள்ளது?

A) தட்டைப்புழுக்கள்

B) உருளைப்புழுக்கள்

C) வளைதசைப்புழுக்கள்

D) துளையுடலிகள்

விளக்கம்: துளையுடலிகளின் உடல் ஆஸ்டியா எனப்படும் எண்ணற்ற துளைகளால் துளைக்கப்பட்டுள்ளது. துளையுடலிகள் பல செல்களைக் கொண்ட இயங்கும் தன்மையற்ற நீர் வாழ் உயிரிகள் ஆகும்.

77) முதலில் தோன்றிய நான்கு கால்களை உடைய உயிரினம்?

A) இருவாழ்விகள்

B) ஊர்வன

C) பறப்பன

D) பாலூட்டிகள்

விளக்கம்: இருவாழ்விகளே முதன்முதலில் தோன்றிய நான்கு கால்களை உடைய உயிரினங்களாகும். நீர் மற்றும் நிலச் சூழ்நிலையில் வாழ்வதற்கான தகவலமைப்பினைப் பெற்றுள்ளன.

78) உலகின் மிகப்பெரிய இருவாழ்வி எது?

A) சாலமான்டர்

B) லாம்ப்ரே

C) பிலிப்பைன் கோபி

D) அசிடியன்

விளக்கம்: சீனாவின் ராட்ச சாலமான்டர் ஆன்டிரியஸ் டாவிடியன்ஸ் உலகிலேயே மிகப்பெரிய இருவாழ்வியாகும். இது ஐந்து அடி 11 அங்குல நீளம் மற்றும் 65 கிலோ எடை கொண்டது

79) குழியுடலிகள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இது ஒரு நீர் வாழ்வனவாகும்.

2. பல செல் ஆரச்சமச்சீர் மற்றும் திசு அளவிலான கட்டமைப்புப் பெற்றவை.

3. உடல் சுவற்றில் அக அடுக்கு என்ற ஒரே அடுக்கு மட்டுமே உள்ளது

4. வாயைச் சுற்றி சிறிய உணர் நீட்சிகள் உள்ளன.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: 1. இது ஒரு நீர் வாழ்வனவாகும்.

2. பல செல் ஆரச்சமச்சீர் மற்றும் திசு அளவிலான கட்டமைப்புப் பெற்றவை.

3. உடல் சுவற்றில் அக அடுக்கு மற்றும் புற அடுக்கு என்ற இரு அடுக்குகள் உண்டு

4. வாயைச் சுற்றி சிறிய உணர் நீட்சிகள் உள்ளன.

80) அஸ்காரிஸ் லும்பிரிகாய்ட்ஸ் என்பது எதன் இருசொல் பெயர்?

A) அமீபா

B) ஹைட்ரா

C) உருளைப்புழு

D) நாடாப்புழு

விளக்கம்: உருளைப்புழு – அஸ்காரிஸ் லும்பிரிகாய்ட்ஸ்

அமீபா – அமீபா புரோடியஸ்

ஹைடிரா – ஹைடிரா வல்காரிஸ்

நாடாப்புழு – டீனியா சோலியம்

81) ஊர்வன பற்றிய கூற்றுகளை ஆராய்க.

A) பறவையின் முன்னங்கல்கள் இறக்கைகளாக உள்ளன.

B) சுவாசம் தோல் மூலம் நடைபெறுகிறது

C) கதிர் வடிவம் கொண்ட உடலானது தலை, கழுத்து, உடல் மற்றும் வால் என நான்கு பகுதிகளைக் கொண்டது.

D) இவற்றின் உடலானது இறகுகளால் மூடப்பட்டுள்ளது.

விளக்கம்:பறவையின் முன்னங்கல்கள் இறக்கைகளாக உள்ளன.

சுவாசம் நுரையீரல் மூலம் நடைபெறுகிறது

கதிர் வடிவம் கொண்ட உடலானது தலை, கழுத்து, உடல் மற்றும் வால் என நான்கு பகுதிகளைக் கொண்டது.

இவற்றின் உடலானது இறகுகளால் மூடப்பட்டுள்ளது.

82) மீன்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இணைத் துடுப்புகளாலும், நடுமையத் துடுப்பகளாலும் நீந்திச் செல்கின்றன.

2. இதன் உடல் செவுள்களால் போர்த்தப்பட்டுள்ளது

3. இது செதில்கள் மூலம் சுவாசிக்கின்றன.

4. இதயம் ஆரிக்கிள் மற்றும் வென்டிரிக்கிள்களால் ஆன 4 அறைகளை கொண்டுள்ளது

A) 1 மட்டும் சரி

B) 1, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இணைத் துடுப்புகளாலும், நடுமையத் துடுப்பகளாலும் நீந்திச் செல்கின்றன.

2. இதன் உடல் செதில்களால் போர்த்தப்பட்டுள்ளது

3. இது செவுள்கள் மூலம் சுவாசிக்கின்றன.

4. இதயம் ஆரிக்கிள் மற்றும் வென்டிரிக்கிள் என 2 அறைகளை கொண்டுள்ளது

83) சீலண்டிரான் என்னும் வயிற்றுக்குழி கீழக்கண்ட எதில் காணப்படுகிறது?

A) தட்டைப்புழுக்கள்

B) கணுக்காலிகள்

C) வளைதசைப்புழுக்கள்

D) குழியுடலி

விளக்கம்: சீலண்டிரான் என்னும் வயிற்றுக்குழி குழியுடலியில் காணப்படுகிறது. இவை நீர் வாழ்வனவாகும். பெரும்பாலும் இவை கடல் மற்றும் நன்னீர் நிலைகளில் வாழ்வனவாகும். இவை பலசெல் ஆரச்சமச்சீர் மற்றும் திசு அளவிலான கட்டமைப்புப் பெற்றவை.

84) கீழ்க்கண்டவற்றில் எது இருபால் உயிரி?

A) தட்டைப்புழுக்கள்

B) குழியுடலிகள்

C) வளைதசைப்புழுக்கள்

D) துளையுடலிகள்

விளக்கம்: தட்டைப்புழுக்கள் இரு பால் உயிரிகள் ஆகும். அதாவது ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளானவை ஒரே உயிரியில் காணப்படும்.

85) உலகின் மிகப்பெரிய இருவாழ்வி எந்த நாட்டில் உள்ளது?

A) அமெரிக்கா

B) ரஷ்யா

C) இந்தியா

D) சீனா

விளக்கம்: சீனாவின் ராட்ச சாலமான்டர் ஆன்டிரியஸ் டாவிடியன்ஸ் உலகிலேயே மிகப்பெரிய இருவாழ்வியாகும். இது ஐந்து அடி 11 அங்குல நீளம் மற்றும் 65 கிலோ எடை கொண்டது. இது மத்திய மற்றும் தெற்கு சீனாவில் காணப்படுகின்றது.

86) பொருத்துக.

அ. துளையுடலிகள் – 1. ஆஸ்காரிஸ்

ஆ. குழியுடலிகள் – 2. கல்லீரல் புழு

இ. தட்டைப்புழுக்கள் – 3. ஹைட்ரா

ஈ. உருளைப்புழுக்கள் – 4. சைகான்

A) 4, 2, 3, 1

B) 4, 3, 2, 1

C) 1, 2, 3, 4

D) 4, 2, 3, 1

விளக்கம்: துளையுடலிகள் – சைகான்

குழியுடலிகள் – ஹைட்ரா

தட்டைப்புழுக்கள் – கல்லீரல் புழு

ஈஉருளைப்புழுக்கள் – ஆஸ்காரிஸ்

87) கீழ்க்கண்டவற்றில் எது திறந்த வகை இரத்த ஓட்டம் கொண்ட உயிரி அல்ல?

A) மரவட்டை

B) நண்டு

C) இறால்

D) கல்லீரல் புழு

விளக்கம்: மேற்கண்டவற்றில் இறால், நண்டு, கரப்பான் பூச்சி, மரவட்டை ஆகியவை திறந்த வகை இரத்த ஓட்டம் கொண்டவை ஆகும்.

88) கணுக்காலிகள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1.கணுக்காலிகள் விலங்குலகின் மிகப்பெரிய தொகுதியாகும்.

2. இருபக்க சமச்சீர் உடையவை.

3. மூவடுக்கு மற்றும் உண்மையான உடற்குழி உடையவை

4. இவற்றின் உடல் தலை, மார்பு, வயிறு எனப் பிரக்கப்பட்டுள்ளது.

A) 1, 2 சரி

B) 1, 3 சரி

C) 1, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1.கணுக்காலிகள் விலங்குலகின் மிகப்பெரிய தொகுதியாகும்.

2. இருபக்க சமச்சீர் உடையவை.

3. மூவடுக்கு மற்றும் உண்மையான உடற்குழி உடையவை

4. இவற்றின் உடல் தலை, மார்பு, வயிறு எனப் பிரக்கப்பட்டுள்ளது.

89) கூற்றுகளை ஆராய்க.

1. சீனாவின் ராட்சத சாலமான்டர் ஆன்டிரியஸ் டாவிடியன்ஸ் 75 கிலோ எடைகொண்டது

2. நீலத்தமிலங்கலம் 35 மீட்டர் நீளம் கொண்டது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சீனாவின் ராட்சத சாலமான்டர் ஆன்டிரியஸ் டாவிடியன்ஸ் 65 கிலோ எடைகொண்டது

2. நீலத்தமிலங்கலம் 35 மீட்டர் நீளம் கொண்டது

90) கொட்டும் செல்களான நிமெட்டோசிஸ்ட்களை பெற்றுள்ள தொகுதி எவை?

A) தட்டைப்புழுக்கள்

B) குழியுடலிகள்

C) வளைதசைப்புழுக்கள்

D) துளையுடலிகள்

விளக்கம்: குழியுடலிகள் கொட்டும் செல்களான நிமெட்டோசிஸ்ட்ளை பெற்றுள்ள தொகுதி ஆகும். குழியுடலிகளின் வாயைச் சுற்றி சிறிய உணர் நீட்சிகள் உள்ளன.

91)கூற்றுகளை ஆராய்க.

1. பொதுவாக ஊர்வன வகை நான்கு அறைகளை கொண்ட இதயத்தை பெற்றிருக்கும்

2. ஊர்வன வகையைச் சேர்ந்த முதலை மூன்று அறைகளை கொண்ட இதயத்தை பெற்றுள்ளன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பொதுவாக ஊர்வன வகை மூன்று அறைகளை கொண்ட இதயத்தை பெற்றிருக்கும்

2. ஊர்வன வகையைச் சேர்ந்த முதலை நான்கு அறைகளை கொண்ட இதயத்தை பெற்றுள்ளன.

92) கணுக்காலிகளின் உடலின் மேற்புறத்தில் ________ என்ற பாதுகாப்பு உறை உள்ளது?

A) கைட்டின்

B) ஹீமோலிம்ப்

C) கியூட்டிகள்

D) அன்னுலி

விளக்கம்: கணுக்காலிகளின் மேற்புறத்தில் கைட்டின் பாதுகாப்பு உறையாக உள்ளது. வளர்ச்சியின் போது குறிப்பிட்ட கால இடைவெளியில் இவை உதிர்கின்றன. இந்நிலைக்கு தோலுரித்தல் என்று பெயர். இந்நிகழ்வின் மூலம் இவற்றின் மேற்புற உறை உதிர்க்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படுகின்றது.

93) கூற்று: கரப்பான் பூச்சியானது திறந்த வெளி இரத்த ஓட்டம் கொண்ட உயிரி ஆகும்.

காரணம்: நன்கு வரையறுக்கப்பட்ட இரத்தக் குழல்கள் இல்லாததால் இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவருகிறது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் தவறு, காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: கரப்பான் பூச்சியானது திறந்த வெளி இரத்த ஓட்டம் கொண்ட உயிரி ஆகும். நன்கு வரையறுக்கப்பட்ட இரத்தக் குழல்கள் இல்லாததால் இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவருகிறது.

9th Science Lesson 18 Questions in Tamil

18] திசுக்களின் அமைப்பு

1) ஒரே மாதிரியான தோற்றம் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை கொண்ட செயல்களின் தொகுப்பு?

A) சைலம்

B) திசு

C) உள்ளுருப்பு

D) ஏதுமில்லை

விளக்கம்: ஒரே மாதிரியான தோற்றம் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை கொண்ட செயல்களின் தொகுப்பு திசு என அழைக்கப்படுகின்றன.

2) மெரிஸ்டோஸ் என்பது எம்மொழியில் இருந்து பெறப்பட்டது?

A) கிரேக்கம்

B) இலத்தீன்

C) உருது

D) அரபு

விளக்கம்: மெரிஸ்டோஸ் என்னும் வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது. இதற்கு பகுப்படையும் தன்மையுடையது அல்லது செல் பகுப்பு செயல்பாடுடையது என்பதாகும்.

3) தொடர்ந்து பகுப்படையும் தன்மைகொண்ட ஒத்த அளவுடைய முதிர்ச்சி அடையாத செல்களின் தொகுப்பு?

A) தள திசு

B) புறம்தோல் தொகுப்பு

C) ஆக்கு திசு

D) வடிவ ஒத்திசைவு

விளக்கம்: தொடர்ந்து பகுப்படையும் தன்மை கொண்ட ஒத்த அளவுடைய முதிர்ச்சி அடையாத செல்களின் தொகுப்பு ஆக்கு திசு எனப்படும். இந்த பெயரை முதன் முதலில் இட்டவர் நகேலி (1858).

4) ஆக்கு திசு தாவரத்தில் எங்கு காணப்படும்?

A) புறத்தோல்

B) சைலம்

C) இலையின் நடுப்பகுதி

D) தக்கை கேம்பியம்

விளக்கம்: ஆக்கு திசுவானது தாவரத்தின் வளர்ச்சி நடைபெறும் இடங்களில் காணப்படுகிறது. இவைகள் தாவர தண்டிண் நுனிப்பகுதி வேரின் நுனி பகுதி இலைகளின் வாஸ்குலார் கேம்பியம் தக்கை கேம்பியம் போன்றவற்றில் காணப்படுகிறது.

5) ஆக்கு திசுக்களின் பண்புகளில் தவறானவை?

1. உயிர் உள்ள செல்களால் ஆனவை

2. பெரியதாக நீள் முட்டை வடிவில் உள்ளது

3. இவை பெரிய குமிழ்களை கொண்டுள்ளன

4. மைட்டாசிஸ் செல் பகுப்பை கொண்டுள்ளன

A) 1, 4 சரி

B) 1, 2, 3 சரி

C) 3, 4 சரி

D) 1, 3, 4 சரி

விளக்கம்: சிறியதாக முட்டை வடிவ பல கோண அல்லது கோள வடிவில் உள்ளன. மெல்லிய செல்சுவர் பெரிய நியூக்ளியஸ் அடர்ந்த சைட்டோபிளாசம் மற்றும் சிறிய குமிழ்களை கொண்டுள்ளது.

6) ஆக்கு திசு தோன்றிய விதம் மற்றும் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: இவை 3 ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது

  1. புரோமெரிஸ்டம்
  2. முதல்நிலை ஆக்குதிசு

3. இரண்டாம்நிலை ஆக்குதிசு

7) வளரும் உறுப்பிலுள்ள இளம் ஆக்குதிசு செல்களின் தொகுப்பு எது?

A) புரோமெரிஸ்டம்

B) முதல்நிலை ஆக்குதிசு

C) இரண்டாம்நிலை ஆக்குதிசு

D) மெட்டாஸ்டேஜ்

விளக்கம்: வளரும் உறுப்பிலுள்ள இளம் ஆக்குதிசு செல்களின் தொகுப்பு புரோமெரிஸ்டம் எனப்படும். இவை வேரின் நுனிப்பகுதியில் சிறிதளவு இடத்தை கொண்டுள்ளது.

8) பகுப்படைந்து நிலைத்த திசுக்களை உருவாக்குவது எது?

A) புரோமெரிஸ்டம்

B) முதல்நிலை ஆக்குதிசு

C) இரண்டாம்நிலை ஆக்குதிசு

D) மெட்டாஸ்டேஜ்

விளக்கம்: பகுப்;படைந்து நிலைத்த திசுக்களை உருவாக்குவது ஆகும் இவை புரோமெரிஸ்டங்களுக்கு கீழே உள்ளது.

9) திசுக்களை பற்றிய படிப்பிற்கு __________ என்று பெயர்?

A) செல்லியல்

B) ஹீஸ்டோலஜி

C) கார்டியாலஜி

D) பைக்காலஜி

விளக்கம்: செல் பற்றிய படிப்பிற்கு – செல்லியல்

திசு பற்றிய படிப்பிற்கு – ஹிஸ்டோலஜி

இதயம் பற்றிய படிப்பிற்கு – கார்டியாலஜி

புஞ்சை பற்றிய படிப்பிற்கு – பைக்காலஜி

10) விலங்கு திசுக்கள் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம் விலங்கு திசுக்கள் அவற்றின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் அடிப்படையில் நான்கு வகைப்படும்

  1. எப்பிதீலியஸ் திசு
  2. இணைப்பு திசு
  3. தசை திசு
  4. நரம்பு திசு

11) விலங்கு திசுக்களில் கரு நிலையில் எதிலிருந்து தோன்றுகிறது?

A) புறப்படலம்

B) ஆகப்படலம்

C) இடையடுக்கு படலம்

D) அனைத்தும்

விளக்கம்: விலங்கு திசுக்கள் கருநிலையில் முதன்மையான முன்று படலங்களை உருவாக்குகிறது.

12) ஹிஸ்டாலஜியின் தந்தை?

A) மேரி பிரான்ஸ் சோயியர் பிசேட்

B) மஹேர்

C) லாவாய்சியர்

D) ரிச்சர்ட்

விளக்கம்: ஹிஸ்டோலஜி என்ற சொற்பதத்தை முதன் முதலில் உருவாக்கியவர் மஹேர் ஹிஸ்டாலஜியின் தந்தை மேரி பிரான்காஸ் சோயியர் பிசேட்.. இவர் 21 வகை திசுக்களை வேறுபடுத்தினார்.

13) இவற்றுள் வேறுபட்டு இருப்பது எது?

A) எபிதீலியஸ் திசு

B) இணைப்பு திசு

C) தசை திசு

D) குளோரன்கைமா

விளக்கம்: எபிதீலியஸ் திசு இணைப்பு திசு தசை திசு என்பது விலங்குகளின் திசு குளோரன்கைமா என்பது தாவரத்தின் ஒரு நுண் உறுப்பு ஆகும்.

14) ஹிஸ்டோலஜி என்ற சொற்பதத்தை உருவாக்கியவர்?

A) மஹேர்

B) சோயியர் பிசேட்

C) ரிச்சர்ட்

D) காஸ்கி

விளக்கம்: மஹேர் (1819) ஹிஸ்டோலஜி என்ற சொற்பதத்தை உருவாக்கினார். சோயியர் பிசேட் என்பவர் ஹிஸ்டாலஜியின் தந்தை ஆவார்.

15) எபீதீலிய திசுக்கள் எவ்வகை புரதத்தை கொண்டுள்ளது எது?

A) கொலஜன்

B) பிளாஸ்மா

C) நிணநீர்

D) ஒருவகை கோழை பொருள்

விளக்கம்: எப்பிதீலிய செல்கள் செல்கள் இல்லா தாங்கு சவ்வு மீது அமைந்து சிறப்பு அமைப்பான கொலாஜன் எனும் அமைப்பு கூறு புரதத்தை கொண்டுள்ளது.

16) எப்பிதீலிய திசுக்களால் உருவாகாதவை எது?

A) தோல்

B) கணையம்

C) கல்லீரல்

D) குருத்தெழும்பு

விளக்கம்: தோல் கணையம் கல்லீரல் போன்றவை எப்பிதீலிய திசுக்களால் உருவாக்ககூடியவை. ஆனால் குருத்தெழும்பு மட்டும் இணைப்பு திசுவால் ஆனது.

17) எப்பிதீலிய செல்களின் வகைகள்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: இவை இரண்டு வகைப்படும். மேலும் அடிதளச் சவ்வின் மீது அமைந்த ஒற்றை அடுக்கு செல்களால் ஆனது.

18) கூற்று: வளரும் வேர் மற்றும் தண்டின் நுனிகளில் நுனி ஆக்கு திசு காணப்படுகிறது.

காரணம்: இவை தாவரத்தின் நீள் போக்கு வளர்ச்சியை ஏற்படுத்தும்

A) கூற்று காரணம் இரண்டும் சரி

B) கூற்று காரணம் இரண்டும் தவறு

C) கூற்று சரி

D) காரணம் சரி

விளக்கம்: வளரும் வேர் மற்றும் தண்டின் நுனிகளில் நுனி ஆக்கு திசு காணப்படுகிறது.

இவை தாவரத்தின் நீள் போக்கு வளர்ச்சியை ஏற்படுத்தும்

19) தாவரப் பகுதியின் அளவை அதிகரிக்க செய்யும் ஆக்கு திசு எது?

A) நுனி ஆக்குதிசு

B) இடை ஆக்குதிசு

C) பக்க ஆக்குதிசு

D) புரோமெரிஸ்டம்

விளக்கம்: பக்க ஆக்குதிசுவானது தாவரப் பகுதியின் அளவை அதிகரிக்க செய்யும் ஆக்குதிசுவாகும் மேலும் இவை இரண்டாம் நிலை நிலைத்த திசுக்களை கொடுக்கிறது.

20) புரோட்டோடெர்ம் – காற்றிடை பகுதி கொண்டிருக்கும்

ஏரன்கைமா – புறணி பித் உருவாக்க கூடியது

தள ஆக்குதிசு – புறத்தோள் திசுக்களாக மாற்றியமையக்கூடியது

புரோகேம்பியம் – வாஸ்குலார் திசு

A) 1234

B) 2134

C) 4123

D) 3124

விளக்கம் புரோட்டோடெர்ம் – புறணி பித் உருவாக்க கூடியது

ஏரன்கைமா – காற்றிடை பகுதி கொண்டிருக்கும்

தள ஆக்குதிசு – புறத்தோள் திசுக்களாக மாற்றியமையக்கூடியது

புரோகேம்பியம் – வாஸ்குலார் திசு

21) இவற்றுள் எது சரி?

1. திரள் ஆக்குதிசு செல் பகுப்பில் ஏதேனும் ஒரு தளத்தில் மட்டுமே நடைபெறுகிறது.

2. வரி ஆக்குதிசு தாவரத்தின் தண்டின் புறணி மற்றும் பித் பகுதியில் காணப்படுகிறது.

3. தட்டு ஆக்குதிசு தாவர உறுப்பின் பரப்பளவை அதிகரிக்கிறது.

A) 3 மட்டும் சரி

B) 1, 3 மட்டும் சரி

C) 1, 2 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம் திரள் ஆக்குதிசு தாவர தண்டின் புறணி மற்றும் பித் பகுதியில் காணப்படுகிறது. வரி ஆக்குதிசு செல் பகுப்பின் ஏதேனும் ஒரு தளத்தின் மட்டுமே நடைபெறுகிறது.

22) இவற்றில் எளிய திசு அல்லாதது எது?

A) பாரன்கைமா

B) கோலன்கைமா

C) ஸ்கீளீரன்கைமா

D) சைலம்

விளக்கம்: பாரன்கைமா கோலன்கைமா ஸ்கீளீரன்கைமா ஆகியவை எளிய திசுக்கள் ஆகும். சைலம் ஒரு கடத்தும் உறுப்பு.

23) எளிய திசுக்களில் உயிர் அற்ற திசு?

A) பாரன்கைமா

B) கோலன்கைமா

C) ஸ்கீளீரன்கைமா

D) சைலம்

விளக்கம்: பாரன்கைமா செல்கள் உயிருள்ள எளிய நிலைத்த திசு ஆகும்

24) பாரன்கைமா செல்களின் சேமிப்பு அடிப்படையில்

உருளைக்கிழங்கு – சர்க்கரை சேமிக்கிறது

ஆப்பிள் – நீரை சேமிக்கிறது

வறண்ட நிலத்தாவரம் – காற்றை சேமிக்கிறது

நீர்த்தாவரம் – ஸ்டார்ச்சை சேமிக்கிறது

A) 2 4 3 1

B) 3 2 1 4

C) 3 1 2 4

D) 2 3 4 1

விளக்கம்: உருளைக்கிழங்கு – ஸ்டார்ச்சை சேமிக்கிறது

ஆப்பிள் – சர்க்கரை சேமிக்கிறது

வறண்ட நிலத்தாவரம் – நீரை சேமிக்கிறது

நீர்த்தாவரம் – காற்றை சேமிக்கிறது

25) அதிக நீளம் உடைய நார்கள் எது?

A) லின்னம் யுசிட்டாஸ்ஸிம் (ஆளி)

B) காணபினஸ் சட்டைவா (சணல்)

C) கார்கோரல் காப்சுலரிஸ் (சணல்)

D) அனைத்தும்

விளக்கம்: லின்னம் யுசிட்டாஸ்ஸிம் (ஆளி) காணபினஸ் சட்டைவா (சணல்) கார்கோரல் காப்சுலரிஸ் (சணல்) இத்தாவரங்களில் காணப்படும் நார்கள் அதிக நீளம் கொண்டவை. இதன் நீளம் சுமார் 20மிமீ முதல் 550 மிமீ வரை காணப்படுகிறது.

26) தாவரத்திற்கு கடின தன்மையை தருவது எது?

A) பாரன்கைமா

B) கோலன்கைமா

C) லிக்னன்

D) ஸ்கீளீரைடுகள்

விளக்கம்: ஸ்கீளீரைடுகள் உள்ள தாவரத்தில் தாவரத்தின் வலிமையை தருகிறது. மேலும் ஸ்கீளீரைடுகள் தாவரத்தின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.

27) 1. கோலன்கைமா செல்களில் செல்சுவர் மெல்லியது

2. உயிருள்ள இயந்திர திசுவாக வேலை செய்கிறது

3. கோலன்கைமா தாவர உறுப்புகளின் வெளி மற்றும் உள் பகுதியில் காணப்படுகிறது

4. இவை உயிறற்ற செல்கள் ஆகும்

A) 2, 4 சரி

B) 1, 4 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: கோலன்கைமா செல்கள் செல்களுக்கு இடையேயுள்ள இடைவெளியில் நன்கு வளர்ந்த அதிக தடிமனை கொண்டிருக்கும். இவை தாவர உறுப்புகளின் துணை எபிடெர்மல் பகுதியில் மட்டுமே இவை உள்ளன.

28) கோலன்கைமா செல்கள் காணப்படாத திசு எது?

A) சைலம்

B) புளோயம்

C) ஸ்கீளீரைடுகள்

D) A & B

விளக்கம்: சைலம் & புளோயம் கூட்டு திசுவாகும் இதில் கோலன்கைமா காணப்படுவதில்லை.

29) எளிய எபிதீலிய செல்களின் வகைகள்?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: எளிய எபிதீலியம் அவற்றின் அமைப்பு மாற்றதின் அடிப்படையில் 5 வகைபடும்

  1. தட்டை எபிதிலியம்
  2. கனசதுர எபிதிலியம்
  3. தூண் எபிதிலியம்
  4. குறுயிலை எபிதிலியம்
  5. சுரக்கும் எபிதிலியம்

30) பாதை சவ்வு என்று அறியப்படும் எபிதிலியம் எது?

A) தட்டை எபிதிலியம்

B) கனசதுர எபிதிலியம்

C) தூண் எபிதிலியம்

D) குறுயிலை எபிதிலியம்

விளக்கம்: தட்டை எபிதீலியம் ஆனது பாதை சவ்வு என்றும் அழைக்கப்படுகிறது. இவை வாய்க்குழி நுரையீரல் நுண் காற்றுப்பைகள் சிறுநீரகத்தின் அண்மை சுருள் போன்றவற்றில் காணப்படுகிறது.

31) கூற்று: தட்டை எபிதிலியம் உடலை காயங்கள் வறண்டு போதல் நோய்கிருமி புகுவதில் இருந்து பாதுகாக்கிறது.

காரணம்: இவை தேர்ந்தெடுத்து கடத்தும் சவ்வு பரப்பை உருவாக்குவதன் முலம் வடிகட்டுதலில் உதவிபுரிகிறது.

A) கூற்று சரி

B) காரணம் சரி

C) கூற்று காரணம் இரண்டும் சரி

D) கூற்று காரணம் இரண்டும் தவறு

விளக்கம்: தட்டை எபிதிலியம் உடலை காயங்கள் வறண்டு போதல் நோய்கிருமி புகுவதில் இருந்து பாதுகாக்கிறது.

இவை தேர்ந்தெடுத்து கடத்தும் சவ்வு பரப்பை உருவாக்குவதன் முலம் வடிகட்டுதலில் உதவிபுரிகிறது.

32) A) தட்டை எபிதிலியம் – பித்த நாளங்களில் காணப்படுகிறது

B) கனசதுர எபிதிலியம் – அண்டக் குழல்களில் காணப்படுகிறது

C) தூண் எபிதிலியம் – இரத்த நாளங்களில் காணப்படுகிறது

D) குறுயிலை எபிதிலியம் – சிறுகுடலில் காணப்படுகிறது

E) சுரக்கும் எபிதிலியம் – இரைப்பையில் காணப்படுகிறது

A) 3 4 1 2 5

B) 3 1 4 2 5

C) 3 5 4 2 1

D) 3 4 2 1 5

விளக்கம்: தட்டை எபிதிலியம் – இரத்த நாளங்களில் காணப்படுகிறது

கனசதுர எபிதிலியம் – சிறுகுடலில் காணப்படுகிறது

தூண் எபிதிலியம் – பித்த நாளங்களில் காணப்படுகிறது

குறுயிலை எபிதிலியம் – அண்டக் குழல்களில் காணப்படுகிறது

சுரக்கும் எபிதிலியம் – இரைப்பையில் காணப்படுகிறது

33) அடிதள திசுக்கள் இயந்திர மற்றும் இரசாயன அழுத்தங்களில் பாதுகாப்பு அளிப்பது எது?

A) இணைப்பு திசு

B) எபிதீலிய திசு

C) சிற்றிடை விழையம்

D) தசை நார்கள்

விளக்கம்: கூட்டு எபிதீலிய திசுவானது அழத்தன திசுக்களுக்கு இயந்திர மற்றும் இரசாயன அழுத்தங்களில் பாதுகாப்பு அளிக்கிறது.

34) பலவகை திசுக்களுக்கு கட்டமைப்பையும் ஆதரவையும் அளிக்கும் திசு எது?

A) எபிதிலிய திசு

B) இணைப்பு திசு

C) தசை திசு

D) நரம்பு திசு

விளக்கம்: இணைப்பு திசுவானது அதிக அளவில் நிறைந்து காணப்படும் திசுவாகும் இது உறுப்புகளை உருவாக்கும் பலவகை திசுக்களுக்கு கட்டமைப்பையும் ஆதரவையும் அளிக்கிறது.

35) இரத்த வெள்ளையணுக்களின் வகைகள் ?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: இரத்த வெள்ளையணுக்கள் இரண்டு வகைபடும் அவை

கிராணுலோசைட் – துகள் உடைய வெள்ளையணு

ஏகிராணுலோசைட் – துகள்களற்ற வெள்ளையணு

36) உடளுக்குள் வரும் துகள்களை அழித்துவிடும் தன்மை கொண்ட இரத்த வெள்ளையணு எது?

A) நியுட்ரோபில்

B) லிம்போசைட்

C) மோனோசைட்

D) எரித்ரோசைட்

விளக்கம்: மோனோசைட்டுகள் வெளியிலிருந்து வரும் உயிரிகளை முழுவதும் விழுங்கி விடுகின்றன. மேலும் அவற்றின் தீமைத் தன்மைகளை சமநிலைபடுத்துகின்றன.

37) இரத்தம் உறைதலில் முக்கிய பங்கு வகிப்பவை எது?

A) இரத்த சிவப்பணு

B) வெள்ளையணு

C) இரத்த தட்டுக்கள்

D) பிளாஸ்மா புரதம்

விளக்கம்: இவை சிறிய உட்கரு அற்ற மெகாகேரியேட் எனப்படும் எலும்பு மஞ்சையில் உருவாகின்றன.

38) 1. முதிர்ந்த இரத்த சிவப்பணுக்களுக்கு உட்கரு உண்டு

2. இரத்த தட்டுக்கள் எலும்பு மஞ்சையில் இருந்து உருவாகிறது

3. வெள்ளையணு அளவில் பெரியவை

4. நிணநீர் ஒரு நிறமற்ற திரவமாகும்

A) 1, 2 சரி

B) 2 , 3 சரி

C) 1, 2, 4 சரி

D) 2, 3, 4 சரி

விளக்கம்: இளம் இரத்த சிவப்பணுக்களில் உட்கரு உண்டு ஆனால் முதிர்ந்த இரத்த சிவப்பணுக்களில் உட்கரு கிடையாது.

39) இரத்ததிற்கும் திசுத் திரவங்களுக்கும் இடையே பொருட்களைப் பரிமாற்றிக் கொள்ள உதவி புரிவது எது?

A) நிணநீர்

B) வெள்ளையணு

C) இரத்த தட்டுக்கள்

D) பிளாஸ்மா புரதம்

விளக்கம்: இரத்த தந்துகிகளிலிருந்து வடிகட்டப்பட்ட இது ஒரு நிறமற்ற திரவமாகும் இது பிளாஸ்மா மற்றும் இரத்த வெள்ளையணுக்களை கொண்டுள்ளது. இது இரத்ததிற்கும் திசுத் திரவங்களுக்கும் இடையே பொருட்களைப் பரிமாற்றிக் கொள்ள உதவி புரிவது.

40) கீழ்கண்டவற்றுள் எது துகள்களற்ற இரத்த வெள்ளையணு?

A) நியுட்ரோபில்

B) பேசோபில்

C) ஈயோசினோபில்

D) லிம்போசைட்

விளக்கம்: நியுட்ரோபில் பேசோபில் ஈயோசினோபில் போன்றவை துகள்களுடைய வெள்ளையணுக்கள் ஆகும். லிம்போசைட் மட்டும் துகள்களற்ற வெள்ளையணுக்கள் ஆகும்

41) தசையிலையம் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: இவை 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது அவை

  1. வரி தசை
  2. வரியற்ற தசை
  3. இதய தசை

42) எலும்பு சட்டக தசை என அழைக்கப்படுவது?

A) வரி தசை

B) வரியற்ற தசை

C) இதய தசை

D) A & B

விளக்கம்: வரி தசைகள் எழும்பு சட்டகத்தால் ஒட்டியுள்ளன உடலின் அசைவிற்குக் காரணமாக உள்ளன. ஆதனால் இவை எழும்பு சட்டக தசை என அழைக்கப்படுகிறது. இது தன்னிச்சை தசைகள் என்றும் அழைக்கப்படுகிறது.

43) இரத்த நாளம் இரைப்பை சுரப்பிகள் சிறுகுடல் விரலிகள் மற்றும் சிறுநீர்பை ஆகிய உள்ளுறுப்புகளின் சுவர்களில் காணப்படும் தசை?

A) வரி தசை

B) வரியற்ற தசை

C) இதய தசை

D) A & B

விளக்கம்: வரியற்ற தசையானது இரத்த நாளம் இரைப்பை சுரப்பிகள் சிறுகுடல் விரலிகள் மற்றும் சிறுநீர்பை ஆகிய உள்ளுறுப்புகளின் சுவர்களின் காணப்படும் தசையாகும் இவை தன்னிச்சையற்ற இயக்கங்களை கொண்டுள்ளது.

44) இடைச்சொருகு தட்டு என அழைக்கப்படும் தசை?

A) வரி தசை

B) வரியற்ற தசை

C) இதய தசை

D) A & B

விளக்கம்: இது ஒற்றை உட்கரு கொண்ட கிளைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு வலைபின்னல் அமைப்பை ஏற்படுத்துவதால் இதற்கு இடைச்சொருகு தசை என அழைக்கப்படுகிறது.

45) 1. இதயதசை தன்னிச்சையானது

2. வரியற்ற தசைகள் தன்னிச்சையானது

3. வரியற்ற தசைகள் தன்னிச்சையற்றது

4. இடைச்சொருகு தட்டு என அழைக்கப்படும் தசை இதயதசை ஆகும்.

A) 1, 2 சரி

B) 2, 3 சரி

C) 1, 2, 4 சரி

D) 2, 3, 4 சரி

விளக்கம்: இதய தசையானது தன்னிச்சையற்றது

46) செல் பகுப்பின் வகைகள் எவை?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: விலங்குசெல்கள் மூன்று வகையான செல்பகுப்பை கொண்டுள்ளது அவை

  1. ஏமைட்டாசிஸ்
  2. மைட்டாசிஸ்
  3. மியாசிஸ்

47) உடலின் மிக நீண்ட செல் எது?

A) நரம்பு செல்கள்

B) விந்து செல்கள்

C) அண்ட செல்கள்

D) எபிதிலிய செல்கள்

விளக்கம்: நரம்பு செல்கள் நியுரான்களால் ஆனது இவை உடலின் மிக நீண்ட செல் ஆகும்

48) 1. தாவர செல்களில் சென்ரியோல்கள் காணப்படுகிறது

2. விலங்கு செல்களில் மைட்டோகாண்ரியாவில் மட்டும் காணப்படுகிறது

3. நரம்பு செல்களில் சென்ரியோல்கள் காணப்படுவதில்லை

A) 1 சரி

B) 2, 3 சரி

C) 1, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: அனைத்து செல்களிலும் சென்ரியோல்கள் காணப்படுகிறது.

49) நரம்பு திசுவின் அடிப்படை செயல்பாட்டு அலகு எது?

A) நியுரான்கள்

B) சைட்டான்கள்

C) இடைக் கதுப்பு

D) மைட்டோகாண்டிரியா

விளக்கம்: நியுரான்கள் நரம்பு திசுவின் செயல் மற்றும் அடிப்படை செயல்பாட்டு அலகாகும்

50) ஒரு விலங்குசெல் வயதான செல்கள் மற்றும் கருப்பைச் சவ்வுகளில் முதல் உட்கரு நீண்டு ஒரு சுருக்கத்தை அதன் மையத்தில் தோன்றுவிக்கும் இதன் முடிவில் இரண்டு சேய் உட்கருக்களாக பிரிகிறது இதனை எவ்வாறு அழைக்கலாம்?

A) ஏமைட்டாசிஸ்

B) மைட்டாசிஸ்

C) மியாசிஸ்

D) சைக்கோட்

விளக்கம்: இது ஒரு எளிய முறை செல் பகுப்பு ஆகும் இது சைட்டோபிளாசத்திலும் நடைபெறும்

51) மைட்டாசிஸ் முறையை முதன் முதலில் கண்டறிந்தவர்?

A) மஹேர்

B) பிளம்மிங்

C) கிலியல்

D) சைட்டேஸ்

விளக்கம்: பிளம்மிங் என்பவர் 1879 ஆம் ஆண்டு மைட்டாசிஸ் செல் பகுப்பை முதல்முதலில் கண்டறிந்தார்.

52) 1. மைட்டாசிஸ் செல்பகுப்பு நிகழ்வின் போது குரோமோசோம் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

2. மியாசிஸ் நிகழ்வின் போது குரோமோசோம்கள் அமைப்பில் மாற்றம் நிகழ்வதில்லை

3. எளிய பகுப்பு முறை என்பது மியாசிஸ் பகுப்பு முறை ஆகும்

4. மைட்டாசிஸ் பகுப்பு முறை நான்கு நிலைகளை கொண்டது

A) 1, 3 சரி

B) 1, 2, 3 சரி

C) 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: மைட்டாசிஸ் செல்பகுப்பு நிகழ்வின் போது குரோமோசோம் அமைப்பில் மாற்றம் ஏற்படுவதில்லை. மியாசிஸ் நிகழ்வின் போது குரோமோசோம்கள் அமைப்பில் மாற்றம் நிகழ்கிறது. எளிய பகுப்பு முறை என்பது ஏமைட்டாசிஸ் பகுப்பு முறை ஆகும். மைட்டாசிஸ் பகுப்பு முறை நான்கு நிலைகளை கொண்டது.

53) கூற்று: மைட்டாசிஸ் செல்பகுப்பில் இடைநிலை என்பது உட்கருவின் ஓய்வுநிலை ஆகும்

காரணம்: இந்த நிலையின் போது செல்லானது அடுத்த செல்பகுப்பிற்கு உட்பட்ட தேவையான முக்கியமான பொருட்களை உற்பத்தி செய்து தன்னை அடுத்த செல் பகுப்பிற்கு தாயர் படுத்திக் கொள்கிறது.

A) கூற்று காரணம் இரண்டும் சரி

B) கூற்று சரி

C) காரணம் சரி

D) கூற்று காரணம் இரண்டும் தவறு

விளக்கம்: மைட்டாசிஸ் செல்பகுப்பில் இடைநிலை என்பது உட்கருவின் ஓய்வுநிலை ஆகும் இந்த நிலையின் போது செல்லானது அடுத்த செல்பகுப்பிற்கு உட்பட்ட தேவையான முக்கியமான பொருட்களை உற்பத்தி செய்து தன்னை அடுத்த செல் பகுப்பிற்கு தாயர் படுத்திக் கொள்கிறது.

54) 1. ஆக்குதிசுவில் சைட்டோபிளாஸம் அடர்த்தியான வெற்றிடங்கள் காணப்படுகிறது

2. செல்களுக்கு இடையே வெற்றிடம் காணப்படுகிறது

3. நியுக்ளியஸ் பெரியது மற்றும் முக்கியத்துவம் அற்றது

4. இவை தாவர உடலுக்கு இயந்திர உதவியையும் நெகிழ்ச்சி தன்மையும் அளிப்பதில்லை

A) 1, 2 தவறு

B) 1, 4 தவறு

C) 1, 2, 3 தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: ஆக்குதிசுவில் சைட்டோபிளாஸம் அடர்த்தியான வெற்றிடங்கள் காணப்படுவதில்லை

  1. செல்களுக்கு இடையே வெற்றிடம் காணப்படுவதில்லை
  2. நியுக்ளியஸ் பெரியது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது
  3. இவை தாவர உடலுக்கு இயந்திர உதவியையும் நெகிழ்ச்சி தன்மையும் அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது

55) 1. டிரக்கீடுகள் ஒற்றை செல்களால் ஆனது

2. முனைகள் சாய்ந்து சுற்றப்பட்டவை

3. ஒரு செ.மீ நீளமுடையது

4. தடித்த சுவர் மற்றும் குறுகிய செல் அறைகளைக் கொண்டது

A) 1, 2 சரி

B) 1, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. டிரக்கீடுகள் ஒற்றை செல்களால் ஆனது

2. முனைகள் சாய்ந்து சுற்றப்பட்டவை

3. ஒரு செ.மீ நீளமுடையது

4. தடித்த சுவர் மற்றும் குறுகிய செல் அறைகளைக் கொண்டது

56) உடல் அசைவுகளின் முலம் ஏற்படும் உறுப்புகள் இடம் பெயர்தலை _____ தடுப்பது எது?

A) எபிதிலிய திசு

B) இணைப்பு திசு

C) தசை திசு

D) நரம்பு திசு

விளக்கம்: இணைப்பு திசுவின் முக்கிய செயல் இணைத்தல் ஆதாரமளித்தல் மற்றும் உடல் உறுப்புகளை ஒன்றாக ஒருங்கு திரட்டுதல் ஆகும் மேலும் இது உடல் அசைவுகளின் மூலம் ஏற்படும் உறுப்புகள் இடம் பெயர்தலை தடுக்கிறது.

57) இணைப்பு திசுக்களின் வகைகள்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: 1. முறையான இணைப்புதிசு

2. ஆதார இணைப்புதிசு

3. அடர்த்தியான இணைப்புதிசு

4. திரவ இணைப்புதிசு

58) கூற்று: சிற்றிடை விழையம் என்பது அரை திரவ தளப்பொருளில் தளர்வாக அமையப் பெற்ற செல்கள் மற்றும் நார்களை கொண்டது

காரணம்: இது தோலை தசையுடன் இணைக்கிறது

A) கூற்று காரணம் இரண்டும் தவறு

B) கூற்று காரணம் இரண்டும் சரி

C) கூற்று சரி

D) காரணம் சரி

விளக்கம்: சிற்றிடை விழையம் என்பது அரை திரவ தளப்பொருளில் தளர்வாக அமையப் பெற்ற செல்கள் மற்றும் நார்களை கொண்டது மேலும் இது தோலை தசையுடன் இணைக்கிறது

59) 1. முறையான இணைப்பு திசுவானது தோலை தசையுடன் இணைக்கிறது

2. உறுப்புகளின் உட்பகுதி இடைவெளியை நிரப்புவதில்லை

3. இது தசை இரத்த நாளங்கள் சுற்றியும் காணப்படுகிறது

4. சிறிய இரத்த நாளங்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் சத்துபொருள்களை பரவுவதில் முக்கிய பங்காற்றுகிறது

5. காயமடைந்த திசுக்களை பழுதுபார்கிறது

A) 1, 3, 4, 5 சரி

B) 1, 2, 5, சரி

C) 1, 5 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: உட்பகுதி இடைவெளியை நிரப்புகிறது

60) அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்படுவது எது?

A) சிற்றிடை விழையம்

B) கொழுப்பு திசு

C) ஆதார இணைப்பு திசு

D) குறுத்தெழும்பு

விளக்கம்: கொழுப்பு திசுவானது சிறுநீரகம் மற்றும் கருவிழிகளை அதிர்ச்சியிலிருந்து பாதுகாப்பதால் இதற்கு அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்படுகிறது.

61) 1. தசை இரத்த நாளங்களில் சுற்றியும் சிற்றிடை விழையம் காணப்படுகிறது

2. இதயம் சிறுநீரகம் போன்ற உள்உறுப்புகளுக்கு இடையே கொழுப்பு திசு காணப்படுகிறது

3. உடலுக்கு வலுவையும் உள் உறுப்புகளுக்கு பாதுகாப்பும் வழங்குவது ஆதார திசுவாகும்

4. மூக்கு நுனி வெளி காது போன்ற இடங்களில் குருத்தெலும்பு காணப்படுகிறது

A) 1, 2, 3 சரி

B) 2, 4 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: தசை இரத்த நாளங்களில் சுற்றியும் சிற்றிடை விழையம் காணப்படுகிறது. இதயம் சிறுநீரகம் போன்ற உள்உறுப்புகளுக்கு இடையே கொழுப்பு திசு காணப்படுகிறது. உடலுக்கு வலுவையும் உள் உறுப்புகளுக்கு பாதுகாப்பும் வழங்குவது ஆதார திசுவாகும். மூக்கு நுனி வெளி காது போன்ற இடங்களில் குருத்தெலும்பு காணப்படுகிறது.

62) 1. உடல் உறுப்புகளை அதன் இடத்திலேயே நிலைநிறுத்த குருத்தெலும்பு பயன்படுகிறது

2. ஆதார இணைப்புதிசு உடலுக்கு வலுவையும் அசைதலுக்கு துணைபுரிகிறது

3. உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க கொழுப்பு திசு பயன்படுகிறது

4. உடலுக்கு வலிமையையும் கட்டமைப்பும் கொடுப்பது எலும்பு ஆகும்

A) 2, 3, 4 சரி

B) 1, 4 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: உடல் உறுப்புகளை அதன் இடத்திலேயே நிலை நிறுத்த கொழுப்புதிசு பயன்படுகிறது

63) பருமனான வயது வந்தவர்களிடம் கொழுப்பு செல்களின் எண்ணிக்கை?

A) 30-50 பில்லியன்

B) 50-80 பில்லியன்

C) 60-90 பில்லியன்

D) 60-100 பில்லியன்

விளக்கம்: பருமனான வயது வந்தவர்களின் கொழுப்பு செல்களின் எண்ணிக்கை மிக அதிகம். இதன் மதிப்பு சுமார் 60-100 பில்லியன் ஆகும்.

64) உடலுக்கு வலுவளிக்கும் திசு கீழ்கண்டவற்றில் எது?

A) சிற்றிடை விழையம்

B) ஆதார இணைப்புதிசு

C) குருத்தெழும்பு

D) எலும்பு

விளக்கம்: ஆதார இணைப்பு திசுக்கள் முகுகெலும்பிகளின் உடல் அமைப்பை உலுவாக்குகிறது மேலும் இது உடலுக்கு வலிமையை அளிக்கிறது.

65) ஆதார திசு எதனை உள்ளடக்கியது?

A) கொழுப்பு திசு

B) குருத்தெழும்பு

C) எலும்பு

D) B & C

விளக்கம்: இது உடலுக்கு வலிமையை அளிப்பதோடும் உடல் அசைவிற்கு உதவி செய்கிறது

66) குருத்தெழும்பு செல்கள் எந்த திரவத்தில் உள்ளது?

A) லாக்குனே

B) கார்டியல் திரவம்

C) புளுரா திரவம்

D) மேட்ரிக்ஸ்

விளக்கம்: குருத்தெழும்பு செல்கள் லாக்குனே எனும் திரவ இடைவெளியில் நிரம்பி காணப்படுகிறது.

67) உருளைக் கிழங்கின் பாரன்கைமா வெற்றிடத்தில் நிரம்பி காணப்படுவது எது?

A) சர்க்கரை

B) குளுக்கோஸ்

C) ஸ்டார்ச்

D) லாக்டோஸ்

விளக்கம்: உருளைக்கிழங்கு பாரன்கைமா செல்களில் சதைப்பற்றுள்ள பகுதி ஸ்டார்ச் ஆல் ஆனது. எனவே இது உணவாக பயன்படுகிறது

68) தண்டு மற்றும் வேரின் பக்கவாட்டில் அதன் நீள அச்சிக்கு இணையாக காணப்படும் திசு எது?

A) இடை ஆக்குதிசு

B) பக்க ஆக்குதிசு

C) முதல்நிலை ஆக்குதிசு

D) திரள் ஆக்குதிசு

விளக்கம்: தண்டு மற்றும் வேரின் பக்கவாட்டில் அதன் நீள அச்சிக்கு இணையாக காணப்படும் திசு பக்க ஆக்குதிசு ஆகும். இவை பொதுவாக ஆரப்போக்கில் பகுப்படைந்து இரண்டாம் நிலை நிலைத்த தன்மையை உண்டாக்கும்

69) 1. கேலன்கைமா செல்கள் உயிருள்ளவை

2. இதன் செல்கள் லிக்னினால் ஆனது

3. உட்குழிப் பகுதி அகன்றது

4. இவை இயந்திர உதவி மட்டுமே அளிக்கிறது

A) 1, 2, 3 சரி

B) 1, 3 சரி

C) 1, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: இதன் செல்கள் செல்லுலோசால் ஆனது. இவைகள் தாவர உடலுக்கு இயந்திர உதவியையும் மற்றும் நெகிழ்ச்சி தன்மையையும் அளிக்கின்றன.

70) ஏரன்கைமா செல்கள் எத்தாவரத்தில் காணப்படுகிறது?

A) சதுப்பு நிலதாவரம்

B) வறண்ட நில தாவரம்

C) நீர் தாவரம்

D) மலைவாழ் தாவரம்

விளக்கம்: நீர்த் தாவரங்களில் பாரன்கைமா செல்கள் காற்றிடைப் பகுதியாக கொண்டிருப்பதால் அவற்றிற்கு ஏரன்கைமா என்று அழைக்கப்படுகிறது

71) 1. சைலம் ஒரு கடத்து திசுவாகும்

2. இது ஒரு எளிய திசுவால் ஆனது

3. இது உணவு பொருட்களை கடத்துகிறது

A) 1, 3 தவறு

B) 2, 3 தவறு

C) 1, 2 தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: 1. இது ஒரு கூட்டு திசுவாகும்

2. நீர் மற்றும் கனிம ஊட்டச்சத்துக்களை கடத்துகிறது

72) சைலத்தில் எத்தனை வகை உறுப்புகள் காணப்படுகிறது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: சைலத்தில் 4 வகை உறுப்புகள் காணப்படுகிறது

  1. சைலம் டிரக்கீடுகள்
  2. சைலம் நார்கள்
  3. சைலம் குழாய்கள்
  4. சைலம் பாரன்கைமா

73) கூற்று: சைல டிரக்கீடுகள் புரோட்டோபிளாசம் அற்றது

காரணம்: இதனால் நீரை கடத்துகிறது மற்றும் வலிமையளிக்கிறது

A) கூற்று காரணம் இரண்டும் சரி

B) கூற்று காரணம் இரண்டும் தவறு

C) கூற்று சரி

D) காரணம் சரி

விளக்கம்: சைல டிரக்கீடுகள் புரோட்டோபிளாசம் அற்றது இதனால் நீரை கடத்துகிறது மற்றும் வலிமையளிக்கிறது.

74) கீழ்கண்டவற்றில் எது ஸ்டார்ச் மற்றும் கொழுப்புகளை சேமிக்கிறது?

A) சைலம் டிரக்கீடுகள்

B) சைலம் நார்கள்

C) சைலம் குழாய்கள்

D) சைலம் பாரன்கைமா

விளக்கம்: சைல பாரன்கைமா செல்களானது மெல்லிய சுவரையுடைய உயிருள்ள செல்கள ஆகும்.; இதன் முக்கிய பணி ஸ்டார்ச் மற்றும் கொழுப்புகளை சேமித்தல்

75) புளோயத்தின் கடத்தும் கூறுகள் என அழைக்கப்படுவது எது?

A) சல்லடைக் குழாய்கள்

B) துணை செல்கள்

C) புளோயம் பாரண்கைமா

D) புளோயம் நார்கள்

விளக்கம்: சல்லடைக் குழாய் கூறுகள் உணவினை தாவர இலையிலிருந்து சேமிப்பு உறுப்புகளுக்கு இடமாற்றம் செய்வதாகும்

76) 1. ஸ்கீளீரன்கைமா இறந்த செல்களால் ஆனவை

2. செல்கள் வெறுமையானவை மற்றும் புரோட்டோபிளாசம் காணப்படுகிறது

3. செல்சுவர் லிக்னினால் ஆனது

4. இயந்திர உதவியை மட்டுமே அளிக்கிறது

A) 1, 3 சரி

B) 1, 2, 3 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: ஸ்கீளீரன்கைமா செல்கள் வெறுமையானது மற்றும் புரோட்டோபிளாசம் காணப்படுவதில்லை

77) சைலம் செல்களில் உயிருள்ள செல் எவை?

A) சைலம் டிரக்கீடுகள்

B) சைலம் நார்கள்

C) சைலம் குழாய்கள்

D) சைலம் பாரன்கைமா

விளக்கம்: சைலம் செல்களில் சைலம் பாரன்கைமா செல்கள் மெல்லிய சுவரை உடைய உயிருள்ள செல்களாகும்

78) புளோயத்தின் கூறுகள் எவை?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: சல்லடைக் குழாய்கள்

துணை செல்கள்

புளோயம் பாரண்கைமா

புளோயம் நார்கள்

79) அதிக வலிமையுடைய இணைப்பு திசு எது?

A) தசை நாண்கள்

B) தசை நார்கள்

C) திரவ இணைப்பு திசு

D) குருத்தெழும்பு

விளக்கம்: தசை நார்கள் மிகவும் நெகிழும் அமைப்புடையவை மற்றும் அதிக வலிமையுடையவை எலும்புகளை எலும்புகளுடன் இணைக்கிறது.

80) இரத்தத்தில் இரத்த செல்களை நகர பயன்படும் திரவ பொருள்?

A) சிவப்பணு

B) வெள்ளையணு

C) தட்டுகள்

D) பிளாஸ்மா

விளக்கம்: சிவப்பணு வெள்ளையணு தட்டுக்கள் ஆகியவை இரத்த செல்களாகும் இது பிளாஸ்மா என்று அழைக்கப்பட்ட திரவ மேட்ரிக்ஸ் ரத்த செல்களை நகர்த்துகிறது

81) கரிம பொருட்களையும் கனிம உப்புக்களையும் கொண்டவை எது?

A) சிவப்பணு

B) வெள்ளையணு

C) தட்டுகள்

D) பிளாஸ்மா

விளக்கம்: இரத்த பிளாஸ்மா ஆனது கனிம உப்புக்களையும் கரிம பொருட்களையும் கொண்டுள்ளது இவை பொருட்களை கடத்த உதவுகிறது.

82) இரத்த சிவப்பணு எவ்வகை நிறமிகளை கொண்டுள்ளது?

A) மெக்னீசியம்

B) கால்சியம்

C) குளோரோபிளாஸ்ட்

D) ஹிமோகுளோபின்

விளக்கம்: ஹிமோகுளோபின் இரத்ததில் ஆக்ஸிஜன் கடத்தி செல்லும் பணிக்கு பயன்படுகிறது. மேலும் இது மெக்னீசியம் எனும் தனிமத்தால் ஆனது.

83) இரத்த வெள்ளையணுக்களின் வகைகள்?

A) 4

B) 5

C) 6

D) 7

விளக்கம்: இரத்த வெள்ளையணுக்கள் 6 வகைப்படும் அவை

  1. எரித்ரோசைட்
  2. மோனோசைட்
  3. லிம்போசைட்
  4. ஈயோசினோசைட்
  5. நியுட்ரோபில்
  6. பேசோபில்

84) நகரும் தன்மை கொண்ட இரத்த செல்கள் எது?

A) சிவப்பணு

B) வெள்ளையணு

C) தட்டுகள்

D) பிளாஸ்மா

விளக்கம்: வெள்ளையணுக்கள் தெளிவான உட்கருவை கொண்ட அமிபா போன்று நகரும் தன்மையுடையவை இவை உடலின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பவையாகும்.

85) 1. நிலைத்த திசுக்கள் செல்களுக்கு இடையே இடைவெளி உண்டு

2. இதன் செல்சுவர் தடித்தது

3. நியுக்லியஸ் எளிதில் காணப்படக்கூடியது அல்ல

4. நிலைத்த செல்கள் சாதாரணமாக பகுப்படையும் தன்மையற்றது

A) 1, 2 சரி

B) 1, 4 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. நிலைத்த திசுக்கள் செல்களுக்கு இடையே இடைவெளி உண்டு

2. இதன் செல்சுவர் தடித்தது

3. நியுக்லியஸ் எளிதில் காணப்படக்கூடியது அல்ல

4. நிலைத்த செல்கள் சாதாரணமாக பகுப்படையும் தன்மையற்றது

86) 1. சைலத்தில் கடத்தல் பெரும்பாலும் ஒரே திசையில் நடக்கிறது

2. சல்லடைக்குழாய்கள் மூலம் கடத்துகிறது

3. உணவு மற்றும் கனிமங்களை கடத்துகின்றன

4. இது ஒரு கூட்டு திசுவாகும்

A) 1, 2, 3 சரி

B) 1, 2, 4 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: சைலத்தில் டிரக்கீடுகள் மற்றும் சைலக்குழாய்கள் மூலம் கடத்துகின்றன.

87) வயதான பருமனற்ற வயது வந்;தவர்களின் கொழுப்பு செல்களின் எண்ணிக்கை?

A) 30-50 பில்லியன்

B) 50-80 பில்லியன்

C) 60-90 பில்லியன்

D) 60-100 பில்லியன்

விளக்கம்: பருமனான வயது வந்தவர்களின் கொழுப்பு செல்களின் எண்ணிக்கை மிக அதிகம். இதன் மதிப்பு சுமார் 60-100 பில்லியன் ஆகும் அதே வயதான பருமனற்ற வயது வந்தவர்களிடம் 30-50 பில்லியன் செல்கள் மட்டுமே காணப்படுகிறது.

88) மியாசிஸ் செல்பகுப்பு எவ்வகை செல்களில் நடைபெறுகிறது?

A) உடல் செல்கள்

B) இன செல்கள்

C) ஒரு செல் உயிரினம்

D) அமீபா செல்கள்

விளக்கம்: மியாசிஸ் செல் பகுப்பு இனச்செல்கள் அல்லது கேமிட்டுகளை உருவாக்குகிறது. இதில் குரோமோசோம்களின் எண்ணிக்கை இருமயத்திலிருந்து ஒரு மயத்திற்க்கு மாற்றப்படுகிறது.

89) மியாசிஸ் செல்பகுப்பில் மிக நீண்ட அளவைக் கொண்ட நிலைகள் ?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: மியாசிஸ் செல்பகுப்பின் படிநிலைகளில் புரோநிலை நீண்ட படிநிலைகளை கொண்டுள்ளது அவை 5 வகைப்படும்.

90) சினாப்ஸிஸ் எந்த படிநிலைகளில் நடைபெறுகிறது?

A) லெப்டோடின்

B) சைகோட்டீன்

C) பேக்கிடீன்

D) டிப்ளோடீன்

விளக்கம்: சினாப்ஸிஸ் என்பது ஒன்றியெடுத்தல் என அழைக்கப்படுகிறது இது சைகோட்டின் படி நிலைகளில் நடைபெறுகிறது. சைக்கோட்டீன் என்பது மியாசிஸ் படிநிலைகளில் ஒன்று

91) ஜெனிடிக் ரீகாம்பினேசன் என்பது செல் பகுப்பின் எந்த படிநிலைகளில் நடைபெறுகிறது?

A) லெப்டோடின்

B) சைகோட்டீன்

C) பேக்கிடீன்

D) டிப்ளோடீன்

விளக்கம்: மியாசிஸ் பகுப்பில் மிகவும் முக்கியதுவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது ஏனெனில் இது குரோமோசோம் முடிவுற்ற பகுதி மற்றொன்றுடன் பரிமாற்றிக் கொள்கிறது. இதனை குறுக்கே கலத்தல் என்றும் அழைக்கலாம்.

92) சிற்றினங்களுக்குள் மரபியல் வேறுபாடுகளை ஒரு சந்ததியிடம் இருந்து மற்றொரு சந்ததிக்கு கடத்த உதவும் செல்பகுப்பு?

A) மைட்டாஸிஸ் செல்பகுப்பு

B) மியாசிஸ் செல்பகுப்பு

C) ஏமைட்டாசிஸ்

D) ஏதுமில்லை

விளக்கம்: மியாசிஸ் செல்பகுப்பில் படிநிலைகளில் குறுக்கே கலத்தல் நிகழ்வதால் சிற்றினங்களுக்குள் மரபியல் வேறுபாடுகளை ஒரு சந்ததியில் இருந்து மற்றொரு சந்ததியில் கடத்தப்படுகிறது.

93) இரு ஒத்திசைவு குரோமோசோம்களில் ஒன்று மற்றொன்றை அணுகி ஜோடியாக இணைகிறது. இந்நிகழ்விற்கு

A) குறுக்கே கலத்தல்

B) லெப்டோடின்

C) சினாப்ஸிஸ்

D) டயாகைனசிஸ்

விளக்கம்: மியாசிஸ் செல்பகுப்பில் இரு ஒத்திசைவு குரோமோசோம்களில் ஒன்று மற்றொன்றை அணுகி ஜோடியாக இணைகிறது. இந்நிகழ்விற்கு சினாப்ஸிஸ் என்று அழைக்கப்படுகிறது.

94) 1. மைட்டாசிஸ் செல்பகுப்பு இன செல்களில் நடைபெறுகிறது

2. இதில் இரு பகுப்பை மட்டும் கொண்டது

3. தாய் செல்களின் குரோமோசோம்களின் எண்ணிக்கை உள்ளதை போலவே சேய் செல்களிலும் ஒத்து காணப்படுகிறது.

4. நான்கு இருமய சேய் செல்களை தோன்றுகின்றன

A) 1, 2 தவறு

B) 1, 2, 4 தவறு

C) 1, 3, 4 தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: 1. மைட்டாசிஸ் செல்பகுப்பு உடல் செல்களில் நடைபெறுகிறது

2. இது ஒரு பகுப்பை மட்டும் கொண்டுள்ளது

3. தாய் செல்களின் குரோமோசோம்களின் எண்ணிக்கை உள்ளதை போலவே சேய் செல்களிலும் ஒத்து காணப்படுகிறது

4. இது இரு இருமய செல்களை தோன்றுவிக்கின்றது

95) ஒரு ஆக்குதிசு கொண்டிருப்பது?

A) பகுப்படையக்கூடிய மற்றும் வளரும் நிலையில் உள்ள முதிர்ச்சியுள்ள செல்கள்

B) முதிர்ந்த செல்கள்

C) உயிரற்ற செல்கள்

C) ஸ்கிளிரன்கைமா செல்கள்

D) A & B

விளக்கம்: தொடர்ந்து பகுப்படையும் தன்மையுடைய வளரும் தன்மைகொண்ட செல்கள் ஆக்குதிசு எனப்படும்

96) உயிருள்ள மெல்லிய சுவருடைய பலகோண வடிவ செல்களை கொண்டுள்ள திசு?

A) பாரன்கைமா செல்கள்

B) கோலன்கைமா செல்கள்

C) ஸ்கிளிரைன்கைமா செல்கள்

D) மேலே கூறிய எதுவும் இல்லை

விளக்கம்: பாரன்கைமா செல்கள் உயிருள்ள மெல்லிய சுவருடைய பலகோண வடிவ செல்களை கொண்டுள்ள திசு பாரன்கைமா திசுக்கள் ஆகும். மற்றவைகள் உயிரற்றவை.

97) நார் கொண்டுள்ளது எது?

A) பாரன்கைமா செல்கள்

B) கோளன்கைமா செல்கள்

C) ஸ்கிளிரைன்கைமா செல்கள்

D) மேலே கூறிய எதுவும் இல்லை

விளக்கம்: ஸ்கிளிரன்கைமா செல்கள் லிக்னின் ஆன தடித்த செல்சுவரை கொண்டுள்ளது இவை புரோட்டோபிளாசம் அற்று காணப்படும். இது நார்கள். ஸ்கிளீரைடுகளை கொண்டுள்ளது

98) குளோரன்கைமா உருவாக்கம் _______ ல் அறியப்பட்டது.

A) குளோரோலாவில் சைட்டோபிளாசத்தில்

B) பச்சைசாணம் அஸ்பர்ஜில்லஸில் மைசிலியத்தில்

C) மாஸ்வுடைய ஸ்போர்கேம்சுலில்

D) பைனஸின் மகரந்த குழாயில்

விளக்கம்: குளோரோலாவின் சைட்டோபிளாசத்தில் உள்ள பாரன்கைமா செல்கள் ஒளிபடும்போது அவை பசுங்கனிகமாக உருவாகின்றன

99) நரம்பு செல்கள் பெற்றிடாதது?

A) ஆக்ஸான்

B) நரம்பு நுனி

C) தசை நாண்கள்

D) மென்ட்ரைட்

விளக்கம்: நரம்பு செல்கள் ஆக்ஸான் நரம்பு நுனி மென்ட்ரைட் போன்றவற்றை கொண்டுள்ளது ஆனால் தசை நாண்களை மட்டும் பெற்றிருக்கவில்லை

தசை நாண்கள் ஒரு இணைப்பு திசுவாகும்

100) மிருதுவான தசை காணப்படுவது

A) கர்பப்பை

B) சிறுகுடல்

C) தமனி

D அனைத்தும்

விளக்கம்: மேற்கூறிய அனைத்து இடங்களிலும் மிருதுவான தசை காணப்படுகிறது இவை நெகிழும் தன்மை கொண்டது

101) துணைசெல்கள் ________ வுடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளன.

A) சல்லடை கூறுகள்

B) பாத்திர கூறுகள்

C) ட்ரைக்கோம்கள்

D) துணை செல்கள்

விளக்கம்: துணை செல்கள் சல்லடைக் குழாய் கூறுகளி;ன் பக்கச்சுவற்றில் ஒட்டிக் காணப்படும் இவை தொடர்ச்சியாக பகுப்படைந்து துணை செல்களை உருவாக்கும்.

9th Science Lesson 19 Questions in Tamil

19] தாவர உலகம் – தாவர செயலியல் 

1) எந்த செடியைத் தொடும் பொழுது அதன் இலைகள் சுருங்குகின்றன?

A) ஹீலியாந்தஸ் அன்னுவஸ்

B) மைமோஸா புடிகா

C) ஐபோமியா ஆல்பா

D) அஃபிசினேல்

விளக்கம்: தொடுதல் மூலமாக தாவரத்தில் ஏற்படும் விளைவு நடுக்கமுறு வளைதல் ஆகும். தொட்டாச் சிணுங்கி (மைமோஸா புடிகா) செடியைத் தொடும் பொழுது அதன் இழைகள் சுருங்குகின்றன.

2) தூண்டல்களின் தன்மையைப் பொறுத்து சார்பசைவு எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தூண்டல்களின் தன்மையைப் பொறுத்து பொறுத்து சார்பசைவு 5 வகைப்படும். அவை,

1. ஒளி சார்பசைவு

2. புவிச் சார்பசைவு

3. நீர்ச்சார்பசைவு

4. தொடுசார்பசைவு

5. வேதிச் சார்பசைவு

3) ஒரு தாவரத்தின் மகரந்த குழாயின் வளர்ச்சி எந்த சார்பசைவினால் ஏற்படுகிறது?

A) ஒளி சார்பசைவு

B) வேதிச் சார்பசைவு

C) தொடுசார்பசைவு

D) நீர்ச்சார்பசைவு

விளக்கம்: வேதிப்பொருட்களின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர பாகம் நகர்தல் வேதிச் சார்பசைவு எனப்படும். (எ.கா) மகரந்த குழாயின் வளர்ச்சி

4) திசை சாரா தூண்டல் அசைவுகள் தூண்டல்களின் தன்மைக்கேற்ப எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: திசையை நோக்கி, நடைபெறாத தாவர பகுதியின் அசைவுகளுக்கு திசை சாரா தூண்டல் அசைவு என்று பெயர். தூண்டல்களின் தன்மைக்கேற்ப திசை சாரா தூண்டல் அசைவுகள் இரண்டு வகைப்படும். அவை,

1. ஒளியுறு வளைதல்

2. நடுக்கமுறு வளைதல்

5) எந்த தாவரத்தின் மலர்கள் இரவில் திறந்த நிலையிலும், பகலில் மூடிய நிலையிலும் காணப்படும்?

A) ஹீலியாந்தஸ் அன்னுவஸ்

B) மைமோஸா புடிகா

C) ஐபோமியா ஆல்பா

D) அஃபிசினேல்

விளக்கம்: ஐபோமியா ஆல்பா (நிலவு மலர்) என்ற தாவரத்தின் மலர்கள் இரவில் திறந்த நிலையிலும், பகலில் மூடியநிலையிலும் காணப்படும்.

6) திசைசார் அசைவுகள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. அசைவு தூண்டலைப் பொறுத்து அமையும்

2. வளர்ச்சியைச் சார்ந்து அமையாது

3. ஏறக்குறைய நிரந்தரமானது மற்றும் மீளாதது

4. சில சிறப்புத் தாவரங்களில் மட்டுமே காணப்படும்

A) 1, 3 சரி

B) 2, 4 சரி

C) 1, 2 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. அசைவு தூண்டலைப் பொறுத்து அமையும்

2. வளர்ச்சியைச் சார்ந்து அமையும்

3. ஏறக்குறைய நிரந்தரமானது மற்றும் மீளாதது

4. அனைத்துத் தாவரங்களிலும் காணப்படும்

7) Photosynthesis – என்ற சொல்லின் பொருள்?

A) ஒளியின் உதவியால் உருவாக்கப்படுதல்

B) ஒளியின்றி உருவாக்கப்படுதல்

C) சூரிய ஒளியால் உருவாக்கப்படுதல்

D) சூரிய ஒளியின்றி உருவாக்கப்படுதல்

விளக்கம்: Photosynthesis (Photo – ஒளி, Synthesis – உருவாக்குதல்) என்ற சொல்லுக்கு ஒளியின் உதவியால் உருவாக்கப்படுதல் என்பது பொருளாகும். இந்நிகழ்ச்சியின் போது ஒளி ஆற்றல் வேதி ஆற்றலாக மாற்றப்படுகிறது.

8) கூற்று: பசுந்தாவரம் அனைத்தும் தற்சார்பு உணவூட்டம் பெற்றவை

காரணம்: அவை சூரிய ஒளியை பெறுகிறது

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: பசுந்தாவரம் அனைத்தும் தற்சார்பு உணவூட்டம் உடையவை. இவை பச்சையம் என்ற நிறமியைப் பெற்றிருப்பதால் தங்களுக்கு வேண்டிய உணவை ஒளிச்சேர்க்கை என்று அழைக்கப்படும் நிகழ்ச்சியின் மூலம் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன.

9) டையோனியா மிஃசிபுலா என்ற தாவரம் கீழ்க்கண்ட எதனுடன்? தொடர்புடையது?

A) நடுக்கமுறு வளைதல்

B) ஒளியுறு வளைதல்

C) நீர்ச் சார்பசைவு

D) வேதிச் சார்பசைவு

விளக்கம்: நடுக்கமுறு வளைதல் என்ற திசை சாராத் தூண்டல் அசைவுக்கு வீனஸ் பூச்சிப் பிடிப்பான் என்றழைக்கப்படும் டையோனியா மிஃசிபுலா என்ற தாவரம் சிறந்த எடுத்துகாட்டாகும். திசை சாரா தூண்டலில் இது மிக வேகமானது ஆகும்.

10) கொடி பற்றி பரவுதல் எந்த சார்பசைவினால் ஏற்படுகிறது?

A) ஒளி சார்பசைவு

B) வேதிச் சார்பசைவு

C) தொடுசார்பசைவு

D) நீர்ச்சார்பசைவு

விளக்கம்: தொடுலுக்கு ஏற்ப தாவர பாகம் நகர்தல் தொடு சார்பசைவு எனப்படும் (எ.கா). கொடி பற்றி படர்தல்

11) ஒளிச்சேர்க்கையின் சமன்பாடு எது?

A) 6CO2 + 12H2OC6H12O6 + 6H2O + 6O2

B) 6CO2 + 6H2OC6H12O6 + 6H2O + 6O2

C) 6CO2 + 12H2OC6H12O6 + 12H2O + 6O2

D) 6CO2 + 12H2OC2H12O6 + 6H2O + 12O2

விளக்கம்: பசுந்தாவரங்கள் அனைத்தும் தற்சார்பு ஊட்டம் உடையவை. இவை தங்களுக்கு வேண்டிய உணவை ஒளிச்சேர்க்கை என்று அழைப்படும் நிகழ்ச்சியின் மூலம் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. ஒளிச்சேர்க்கையின் ஒட்டு மொத்த சமன்பாடு,

6CO2 + 12H2OC6H12O6 + 6H2O + 6O2

12) சூரிய ஒளியை ஈரக்கும் பூச்சி எது?

A) கோலியஸ்

B) வெஸ்பா ஒரியன்டாலிஸ்

C) சாந்தோப்டெரின்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: ஒளியை ஈரக்கக் கூடிய உயிரினம் வெஸ்பா ஒரியன்டாலிஸ் என்ற எறும்பு இனம் ஆகும்.

13) ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள்______________வாயுவை உள்ளெடுத்துக்கொள்கின்றன?

A) கார்பன் டை ஆக்ஸைடு

B) ஆக்ஸிஜன்

C) நைட்ரஜன் ஆக்ஸைடு

D) ஹைட்ரஜன் டை ஆக்ஸைடு

விளக்கம்: ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உள்ளெடுத்துக் கொள்கின்றன. ஆனால் சுவாசித்தல் மற்றும் உயிர் வாழ்தலுக்கு ஆக்ஸிஜன் தேவையானதாக உள்ளது.

14) கீழ்க்கண்டற்றில் எந்த தாவரம் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை சூரியன் இருக்கும் திசையை நோக்கி நகர்கின்து?

A) ஹீலியாந்தஸ் அன்னுவஸ்

B) மைமோஸா புடிகா

C) ஐபோமியா ஆல்பா

D) அஃபிசினேல்

விளக்கம்: சூரியகாந்தி (ஹீலியாந்தஸ் அன்னுவஸ்) தாவரத் தண்டின் முனையானது உதயம் முதல் அஸ்தமனம் வரை சூரியன் இருக்கும் திசையை நோக்கி நகர்கின்றது. இந்த நிகழ்வுகள் வெளிப்புறக் காரணிகளால் தூண்டப்படுகின்றன.

15) தாவர வேர்ப்பகுதியின் நகர்வு கீழ்க்கண்ட எதைப் பொறுத்து அமைகிறது?

A) புவிச் சார்பசைவு

B) ஒளிச்சார்பசைவு

C) நீர்ச்சார்பசைவு

D) A மற்றும் C

விளக்கம்: புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப தாவரபாகம் நகர்தல் புவிச் சார்பசைவு எனப்படும் (எ.கா) தாவர வேர் பகுதி

நீரின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவரபாகம் நகர்தல் நீர்ச்சார்பசைவு எனப்படும் (எ.கா). தாவர வேர் பகுதி

ஒளியின் தூண்டுலுக்கு ஏற்ப தாவர பாகம் நகர்தல் ஒளிச் சார்பசைவு எனப்படும் (எ.கா) தாவரத்தின் தண்டுப்பகுதி

16) திசாரா அசைவுகள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. அசைவுத் தூண்டலைப் பொறுத்து அமையாது

2. வளர்ச்சியைச் சார்ந்து அமையாது

3. தற்காலிகமானது மற்றும் மீளக்கூடியது

4. சில சிறப்புத் தாவரங்களில் மட்டுமே காணப்படும்

A) 1, 2, 3 சரி

B) 2, 3, 4 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. அசைவுத் தூண்டலைப் பொறுத்து அமையாது

2. வளர்ச்சியைச் சார்ந்து அமையாது

3. தற்காலிகமானது மற்றும் மீளக்கூடியது

4. சில சிறப்புத் தாவரங்களில் மட்டுமே காணப்படும்

17) ரைசோபோரா தாவரத்தின் சிறப்பம்சம்?

A) வேர் – நேர் புவி சார்பசைவு

B) வேர் – எதிர் புவி சார்பசைவு

C) வேர் – எதிர் ஒளி சார்பசைவு

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: சில உவர்த் தாவரங்கள் எதிர் புவிச்சார்பசைவு உடையவை. ரைசேபோரா தாவரத்தின் வேர்கள் 180 டிகிரி கோணத்தில் செங்குத்தான வேர்களைக் கொண்டவை. பொதுவாக வேர்கள் எதிர் ஒளி சார்பசைவாகவும், நேர் புவி சார்பசைவாகவும் உள்ளது. ஆனால் ரைசோபோரா தாவரத்தின் வேர்கள் எதிர் புவிச் சார்பசைவு கொண்டது

18) நீராவிப் போக்கு கீழக்கண்ட எதன் மூலம் நடைபெறுகிறது?

A) தண்டு

B) வேர்

C) மலர்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: தாவரப்பகுதிகளான இலைகள் மற்றும் பசுமையான தண்டுகளின் மூலமாக நீரானது ஆவியாக வெளியேற்றப்படுவது நீராவிப் போக்கு என்று அழைக்கப்படுகிறது.

19) ஒவ்வொரு இலைத்துளையும் கீழ்க்கண்ட எதனால் சூழப்பட்டுள்ளது?

A) நியூக்ளியஸ்

B) வாக்குவோல்

C) செல்சுவர்

D) காப்பு செல்கள்

விளக்கம்: இலைகளில் காணப்படும் சிறிய நுண் துளைகள் இலைத்துளைகள் எனப்படும். நீர் இலைத்துளைகள் வழியாக நீராவியாக வெளியேறும். ஒவ்வொரு இலைத்துளையும் காப்புச் செல்களால் சூழப்பட்டுள்ளது. இலைத்துளைகள் திறந்து மூடுவதன் மூலம் நீராவிப் போக்கின் வீதம் கட்டுப்படுத்தப்படுகின்றது.

20) ஒளியை ஈர்க்கக்கூடிய வெஸ்பா ஒரியன்டலிஸ் என்ற எறும்பை எந்த பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்?

A) ஆக்ஸ்போர்டு

B) ஜவஹர்லால் நேரு

C) கேம்பிரிட்ஜ்

D) டெல்அவிவ்

விளக்கம்: ஒளியை ஈர்க்கக்கூடிய வெஸ்பா ஒரியன்டாலிஸ் என்ற எறும்பை டெல்அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

21) நீராவிப்போக்கு எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தாவரங்களில் மூன்று வகையான நீராவிப்போக்கு காணப்படுகிறது. அவை,

1. இலைத்துளை நீராவிப்போக்கு

2. கியூட்டிக்கிள் நீராவிப்போக்கு

3. பட்டைத்துளை நீராவிப்போக்கு

22) நீராவிப்போக்கு கீழ்க்கண்ட எந்த காரணங்களுக்காக நடைபெறாது?

A) தண்டு மற்றும் வேர்ப்பகுதியின் இழுவிசையை அதிகப்படுத்துகிறது.

B) வேரின் உறிஞ்சும் தன்மையை குறைக்கிறது

C) தாவரங்கள் தாதுஉப்புகளை தொடர்ந்து பெறுவதற்கு இது அவசியமாகிறது

D) தாவரத்தின் வெப்பநிலையை சீர்படுத்துகிறது

விளக்கம்: கீழ்க்கண்ட காரணங்களுக்காக நீராவிப்போக்கு அவசியம் ஆகும். தண்டு மற்றும் வேர்ப்பகுதியின் இழுவிசையை அதிகப்படுத்துகிறது. வேரின் உறிஞ்சும் தன்மையை அதிகப்படுத்துகிறது. தாவரங்கள் தாது உப்புகளை தொடர்ந்து பெறுவதற்கு இது அவசியமாகிறது. தாவரத்தின் வெப்பநிலையை சீர்படுத்துகிறது

23) ஏறும் கொடிகள் தங்களுக்கு பொருத்தமான ஆதரவைக் கண்டறிய உதவும் இயக்க அசைவுகள் _________

A) ஒளிச்சார்பசைவு

B) புவி சார்பசைவு

C) தொடு சார்பசைவு

D) வேதி சார்பசைவு

விளக்கம்: தொடுதலுக்கு ஏற்ப தாவர பாகம் நகர்தல் தொடு சார்பசைவு எனப்படும். (எ.கா). கொடி பற்றி படர்தல்

24) பெருமளவு நீராவிப் போக்கு கீழ்க்கண்ட எதன் மூலம் நடைபெறுகிறது?

A) இலைத்துளை நீராவிப்போக்கு

B) கியூட்டிக்கிள் நீராவிப்போக்கு

C) பட்டைத்துளை நீராவிப்போக்கு

D) தண்டுத்துளை நீராவிப்போக்கு

விளக்கம்: பெருமளவு நீர், இலைத்துளைகள் வழியாக நடைபெறுகிறது. ஏறக்குறைய 90-95 சதவீதம் நீர் இழப்பு ஏற்படுகின்றது.

25) கூற்று: ஐபோமியா ஆல்பா என்ற தாவரத்தின் மலர்கள் நிலவு மலர் என்று அழைக்கப்படுகிறது

காரணம்: இம்மலர் பௌர்ணமியில் மட்டுமே மலரும்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: தாவரத்தின் ஒரு பகுதி ஒளிக்கேற்ப தன் துலங்களை வெளிப்படுத்துவது ஒளியுறு வளைதல் எனப்படும். ஐபோமியா ஆல்பா என்ற தாவரத்தின் மலர் நிலவு மலர்கள் என்று அழைக்கப்படுகிறது. இவை இரவில் திறந்த நிலையிலும், பகலில் மூடிய நிலையிலும் காணப்படும்.

26) எந்த தாவரத்தின் மலர்கள் காலையில் திறந்த நிலையிலும், மாலையில் மூடிய நிலையிலும் காணப்படும்?

A) ஹீலியாந்தஸ் அன்னுவஸ்

B) மைமோஸா புடிகா

C) ஐபோமியா ஆல்பா

D) டாராக்சம் அஃபிசினேல்

விளக்கம்: டாராக்சம் அஃபிசினேல் என்ற தாவரத்தின் மலர்கள் காலையில் திறந்த நிலையிலும் மாலையில் மூடிய நிலையிலும் காணப்படும்

27) வெஸ்பா ஒரியன்டாலிஸ் என்ற எறும்பைப் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இதன் வயிற்றுப் பகுதியில் மஞ்சள் திட்டுகள் மற்றும் அசாதாரண மேல் தோல் அமைப்பு 30 அடுக்குகளைக் கொண்டு தடித்துக் காணப்படுகிறது

2. இதன் மேல் தோல் பகுதியில் பச்சையம் காணப்படாது, மாறாக சாந்தோப்டெரின் என்ற மஞ்சள் நுண் ஒளி உணர் நிறமி காணப்படுகிறது.

3. இந்த வகை எறும்பினம் சூரிய ஒளியை ஈர்க்கும் ஆற்றல் பெற்றவை.

4. இவை ஒளி ஆற்றலை, மின் ஆற்றலாக மாற்றுகின்றன.

A) 1, 4 சரி

B) 2, 3 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இதன் வயிற்றுப் பகுதியில் மஞ்சள் திட்டுகள் மற்றும் அசாதாரண மேல் தோல் அமைப்பு 30 அடுக்குகளைக் கொண்டு தடித்துக் காணப்படுகிறது

2. இதன் மேல் தோல் பகுதியில் பச்சையம் காணப்படாது, மாறாக சாந்தோப்டெரின் என்ற மஞ்சள் நுண் ஒளி உணர் நிறமி காணப்படுகிறது.

3. இந்த வகை எறும்பினம் சூரிய ஒளியை ஈர்க்கும் ஆற்றல் பெற்றவை.

4. இவை ஒளி ஆற்றலை, மின் ஆற்றலாக மாற்றுகின்றன.

28) டூலிப் மலர்களுக்கு பொருத்தமானது எது?

A) ஒளியுறு வளைதல்

B) நடுக்கமுறு வளைதல்

C) வெப்பமுறு வளைதல்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: தாவரத்தின் தண்டுப் பகுதி வெப்பநிலைக்கேற்ப தன் துலங்கலை வெளிப்படுத்துவது வெப்பமுறு வளைதல் எனப்படும்

29) தாவரத்தின் தண்டுப் பகுதி கீழ்க்கண்ட எந்த சார்பசைவுக்கு ஏற்ப நகர்கிறது?

A) ஒளி சார்பசைவு

B) வேதிச் சார்பசைவு

C) தொடுசார்பசைவு

D) நீர்ச்சார்பசைவு

விளக்கம்: ஒளியின் தூண்டுலுக்கு ஏற்ப தாவர பாகம் நகர்தல் ஒளிச் சார்பசைவு எனப்படும் (எ.கா) தாவரத்தின் தண்டுப்பகுதி

30) கீழ்க்கண்டவற்றில் ஒளிச்சேர்க்கைக்கு எது தேவையில்லை?

A) நைட்ரஜன்

B) நீர்

C) கார்பன்-டை-ஆக்ஸைடு

D) ஒளி

விளக்கம்: ஒளிச்சேர்க்கை நிகழ தேவையான காரணிகள்:

1. பச்சையம் – இலையில் காணப்படும் பச்சை நிறம்

2. நீர்

3. கார்பன் டை ஆக்ஸைடு

4. ஒளி

31) தாவரங்கள் சுவாசித்தலுக்கு ____________ வாயு தேவையானதாக உள்ளது?

A) கார்பன்டை ஆக்ஸைடு

B) ஆக்ஸிஜன்

C) நைட்ரஜன் ஆக்ஸைடு

D) ஹைட்ரஜன் டை ஆக்ஸைடு

விளக்கம்: சுவாசித்தல் மற்றும் உயிர் வாழ்தலுக்கு ஆக்ஸிஜன் தேவையானதாக உள்ளது. ஆனால் ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உள்ளெடுத்துக் கொள்கின்றன.

32) கூற்றுகளை ஆராய்க.

1. திசைசார தூண்டல் ஒரு விரைவான செயல்

2. திசைசார் தூண்டல் ஒரு மெதுவான செயல்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. திசைசார தூண்டல் ஒரு விரைவான செயல்

2. திசைசார் தூண்டல் ஒரு மெதுவான செயல்

33) பொருத்துக.

அ. ஒளிச்சார்பசைவு – 1. கொடி பற்றி படர்தல்

ஆ. புவிச் சார்பசைவு – 2. மகரந்த குழாயின் வளரச்சி

இ. தொடு சார்பசைவு – 3. தாவர வேர் பகுதி

ஈ. வேதிச் சார்பசைவு – 4. தாவரத்தின் தண்டுப் பகுதி

A) 4, 1, 2, 3

B) 3, 2, 1, 4

C) 3, 4, 1, 2

D) 4, 3, 1, 2

விளக்கம்: ஒளிச்சார்பசைவு – தாவரத்தின் தண்டுப் பகுதி

புவிச் சார்பசைவு – தாவர வேர் பகுதி

தொடு சார்பசைவு – கொடி பற்றி படர்தல்

வேதிச் சார்பசைவு – மகரந்த குழாயின் வளரச்சி

34) கூற்றுகளை ஆராய்க.

1. தாவரத் தண்டு – நேர் ஒளிச் சார்பசைவு

2. தாவர வேர்கள் – எதிர் ஒளிச் சார்பசைவு

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்:1. தாவரத் தண்டு – நேர் ஒளிச் சார்பசைவு

2. தாவர வேர்கள் – எதிர் ஒளிச் சார்பசைவு

35) இலையில் காணப்படும் பச்சையம் ___________ க்கு தேவைப்படும்?

A) ஒளிச்சேரக்கை

B) நீராவிப்போக்கு

C) சார்பசைவு

D) திசை சாரா தூண்டல் அசைவு

விளக்கம்: ஒளிச்சேர்க்கை நிகழ தேவையான காரணிகள்:

1. பச்சையம் – இலையில் காணப்படும் பச்சை நிறம்

2. நீர்

3. கார்பன் டை ஆக்ஸைடு

4. ஒளி

36) பொருத்துக.

அ. வேர் நிலத்தில் கீழ்நோக்கி வளர்வது – 1. நேர் ஒளிச்சார்பசைவு

ஆ. தண்டு ஒளியை நோக்கி வளர்வது – 2. எதிர் புவிசார்பசைவு

இ. தண்டு மேல்நோக்கி வளர்வது – 3. எதிர் ஒளி சார்பசைவு

ஈ. வேர் சூரிய ஒளிக்கு எதிராக கீழ் நோக்கி வளர்வது – 4. நேர் புவிசார்பசைவு

A) 4, 1, 2, 3

B) 4, 3, 2, 1

C) 1, 2, 3, 4

D) 4, 2, 3, 1

விளக்கம்:வேர் நிலத்தில் கீழ்நோக்கி வளர்வது – நேர் புவிசார்பசைவு

தண்டு ஒளியை நோக்கி வளர்வது – நேர் ஒளிச்சார்பசைவு

தண்டு மேல்நோக்கி வளர்வது – எதிர் புவிசார்பசைவு

வேர் சூரிய ஒளிக்கு எதிராக கீழ் நோக்கி வளர்வது – எதிர் ஒளி சார்பசைவு

37) தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) தண்டு – நேர் ஒளி சார்பசைவு

B) வேர் – நேர் புவி சார்பசைவு

C) தண்டு – எதிர் புவி சார்பசைவு

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: தண்டு – நேர் ஒளி சார்பசைவு

தண்டு – எதிர் புவி சார்பசைவு

வேர் – நேர் புவி சார்பசைவு

வேர் – எதிர் புவி சார்பசைவு

38) பொருத்துக.

அ. ஒளியுறு வளைதல் – 1. தொட்டால் சிணுங்கி

ஆ. நடுக்கமுறு வளைதல் – 2. டூலிப் மலர்கள்

இ. வெப்பமுறு வளைதல் – 3. ஐபோமியா ஆல்பா

A) 3, 2, 1

B) 2, 3, 1

C) 1, 2, 3

D) 1, 3, 2

விளக்கம்:ஒளியுறு வளைதல் – ஐபோமியா ஆல்பா

நடுக்கமுறு வளைதல் – தொட்டால் சிணுங்கி

வெப்பமுறு வளைதல் – டூலிப் மலர்கள்

39) ஒளிச்சேர்க்கையின் போது நடைபெறுவது?

A) CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது

B) நீர் ஒடுக்கமடைதல் மற்றும் CO2 ஆக்ஸிகரணம் அடைதல்

C) நீர் மற்றும் CO2 இரண்டுமே ஆக்ஸிகரணம் அடைதல்

D) CO2 மற்றும் நீர் இரண்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன

விளக்கம்: ஒளிச்சேர்க்கையின் போது CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது.

40) கூற்றுகளை ஆராய்க.

1. ஒளிச்சேர்க்கை – கார்பன் டை ஆக்ஸைடு

2. சுவாசித்தல் – ஆக்ஸிஜன்

3. உயிர் வாழ்தல் – ஆக்ஸிஜன்

4. ஒளிச்சேர்க்கை முடிவில் குளுக்கோஸ் கிளைக்கோஜனாக மாற்றப்படுகிறது.

A) 1, 2, 4 சரி

B) 1, 3, 4 சரி

C) 1, 2 சரி

D) 1, 2, 3 சரி

விளக்கம்: 1. ஒளிச்சேர்க்கை – கார்பன் டை ஆக்ஸைடு

2. சுவாசித்தல் – ஆக்ஸிஜன்

3. உயிர் வாழ்தல் – ஆக்ஸிஜன்

4. ஒளிச்சேர்க்கை முடிவில் குளுக்கோஸ் ஸ்டார்ச்சாக மாற்றப்படுகிறது.

9th Science Lesson 20 Questions in Tamil

20] விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

1) ஓர் உயிரினத்தின் மிகச்சிறிய அடிப்படை அலகு என எதனை அழைக்கிறோம்?

A) செல்

B) திசு

C) உறுப்பு

D) உறுப்பு மண்டலம்

விளக்கம்: அனைத்து உயிரினங்களும் எளிமையான வடிவத்திலிருந்து சிக்கலான அமைப்பு நிலையாக உருவாகிறது. இது ஒரு செல் பல செல்களாக மாறி அவை திசுக்களாக உருமாற்றம் பெற்று பின் அவை உடல் அமைப்பை பெறுகின்றன, எனவே ஓர் உயிரினத்தின் அடிப்படை அலகு செல் ஆகும்

2) தோல் மற்றும் தோல் சுரப்பிகள் கீழ்கண்ட எந்த உறுப்பு மண்டலத்தில் அமைப்பெற்றுள்ளது?

A) எலும்பு மண்டலம்

B) தசை மண்டலம்

C) புறச்சட்டக மண்டலம்

D) உணர்ச்சி மண்டலம்

விளக்கம்: நமது உடலில் பல வித உறுப்பு மண்டலங்கள் அமையப்பெற்றுள்ளன, அதில் புறச்சட்டக மண்டலத்தில் தோல் மற்றும் தோல் சுரப்பிகளும் அமையப்பெற்றுள்ளன.

3) உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் முதன் முதலில் எந்த தொகுதியில் தோன்றியது?

A) தட்டைப்புழு

B) உருளைப்புழு

C) மொனிரா

D) பாலுட்டிகள்

விளக்கம்: உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் முதன் முதலில் தட்டைப்புழு தொகுதியில் இருந்து தோற்றம் பெற்றன, அவை பாலுட்டிகள் வரை தொடர்ந்து வரையறுக்கப்படுகிறது.

4) உணர்ச்சி மண்டலத்தில் தொடர்புடையது கீழ்கண்டவற்றில் எது?

A) கண்

B) தோல்

C) நாக்கு

D) அனைத்தும்

விளக்கம்: மேற்கூறிய அனைத்தும் உணர்ச்சி மண்டலத்துடன் தொடர்புடையவையாகும். இவைகள் உடலின் மிக இன்றியமையாத பணிகளை செய்கின்றன.

5) நைட்ரஜன் கழிவு பொருட்களை நீக்கம் செய்யும் உறுப்பு மண்டலம் எவை?

A) செரிமான மண்டலம்

B) இரத்த ஓட்ட மண்டலம்

C) கழிவு நீக்க மண்டலம்

D) சுவாச மண்டலம்

விளக்கம்: கழிவு நீக்க மண்டலம் ஆனது நமது உடலில் தேங்கியிருக்கும் யூரியா போன்ற நைட்ரஜன் கழிவுகளை நீக்க உதவுகிறது.

6) விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் பொதுவாக எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?

A) 9

B) 10

C) 11

D) 12

விளக்கம்: விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் பொதுவாக 11 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

7) வாய்க்குழிக்குள் காணப்படும் உமிழ்நீர் சுரப்பிகளின் எண்ணிக்கை?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: வாய்க்குழிக்குள் மூன்று இணை உமிழ்நீர் சுரப்பிகள் காணப்படுகிறது அவை

  1. மேலண்ணச் சுரப்பி
  2. நாவடிச் சுரப்பி
  3. தாடைச் சுரப்பி

8) கீழ்கண்டவற்றுள் எளிய மூலக்கூறுகள் எது?

A) வைட்டமின்கள்

B) தாதுக்கள்

C) கார்போஹைட்ரேட்

D) A & B

விளக்கம்: நாம் உண்ணும் உணவானது எளிய மூலக்கூறாகிய வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருளாக மாற்றம் அடைய செரிமான மண்டலம் துணைபுரிகிறது, இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருள்கள் என்பது எளிய மூலக்கூறாகும்.

9) நமது உடலின் செரிமானமானது எத்தனை படிநிலைகளாக நடைபெறுகிறது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: நமது உடலின் செரிமானமானது 5 படிநிலைகளாக நடைபெறுகிறது. அவையாவன

  1. உணவு உட்கொள்ளல்
  2. செரித்தல்
  3. உட்கிரகித்தல்
  4. தன்மயமாதல்
  5. கழிவை வெளியேற்றுதல்

10) உணவு மூலக்கூறுகளானது செரிமான நொதிகளின் செயலால் சிறிய, எளிய, கரையும் மற்றும் விரவும் தன்மையுடையதாக மாற்றும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) உணவு உட்கொள்ளல்

B) செரித்தல்

C) உட்கிரகித்தல்

D) தன்மயமாதல்

விளக்கம்: உணவு மூலக்கூறுகளானது செரிமான நொதிகளின் செயலால் சிறிய, எளிய, கரையும் மற்றும் விரவும் தன்மையுடையதாக மாற்றும் நிகழ்வு செரித்தல் என அழைக்கப்படுகிறது.

11) வெட்டும் பற்கள் – நசுக்கவும் அரைக்கவும்

கோரைப்பற்கள் – நசுக்கவும் அரைக்கவும் மெல்லவும்

முன்கடைவாய்ப்பற்கள் – கிழிக்கவும் துளையிடவும்

பின் கடைவாய்ப்பற்கள் – வெட்டவும் கடிக்கவும்

A) 1, 2, 4, 3

B) 3, 4, 2, 1

C) 4, 3, 1, 2

D) 3, 4, 1, 2

விளக்கம்: வெட்டும் பற்கள் – வெட்டவும் கடிக்கவும்

கோரைப்பற்கள் – கிழிக்கவும் துளையிடவும்;

முன்கடைவாய்ப்பற்கள் – நசுக்கவும் அரைக்கவும்

பின் கடைவாய்ப்பற்கள் – நசுக்கவும் அரைக்கவும் மெல்லவும்

12) செரிமான மண்டலத்தோடு தொடர்பில்லாத சுரப்பி எது?

A) இரைப்பை சுரப்பி

B) கணையம்

C) தைராய்டு சுரப்பி

D) கல்லீரல்

விளக்கம்: தைராய்டு சுரப்பி ஆனது செரிமான சுரப்பிகளில் தொடர்பில்லாதது ஆகும் ஏனெனில் தைராய்டு சுரப்பி வளர்சிதை மாற்றத்தில் பங்கேற்கிறது.

13) நாளமில்லா சுரப்பி மண்டலங்களில் பொருந்தாதது?

A) பிட்யூட்டரி சுரப்பி

B) தோல் சுரப்பி

C) தைராய்டு சுரப்பி

D) தைமஸ் சுரப்பி

விளக்கம்: தோல் சுரப்பியானது புறச்சட்டக மண்டலத்தை கொண்டது, மற்றபடி பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி, தைமஸ் சுரப்பி, போன்றவை நாளமில்லா சுரப்பி மண்டலமாக செயல்படுகிறது.

14) வாய்குழியானது பெரிய இடைவெளியோடு மேல்பகுதி அண்ணம் பிரிப்பது எதை?

A) காற்றுக் குழாய்

B) உணவுக்குழாய்

C) தாடைகள்

D) A & B

விளக்கம்: உணவுப்பாதையில் இரு மென்மையான அசையும் மேல் மற்றும் கீழ் உதடுகளால் பிணைக்கப்பட்டுள்ளது, குழியானது பெரிய இடைவெளியோடு மேல்பகுதி அண்ணம் பிரிப்பது காற்றுக் குழாய் மற்றும் உணவுக் குழாய் ஆகும்.

15) முன் மற்றும் பின் கடைவாய்ப்பற்களின் எண்ணிக்கை?

A) 8, 12

B) 4, 8

C) 12, 8

D) 8, 8

விளக்கம்: முன் கடைவாய்ப்பற்களின் எண்ணிக்கை 8 ஆகும், பின் கடைவாய்ப் பற்களின் எண்ணிக்கை 12.

16) கூற்று: மனிதர்களின் வாழ்நாளில் பற்கள் இரண்டு தொகுப்பாக உருவாகின்றன.

காரணம்: முதலில் பால் பற்களும் பின்பு நிலைத்த பற்களும் தோன்றுகின்றன.

A) கூற்று காரணம் இரண்டும் சரி

B) கூற்று காரணம் இரண்டும் தவறு

C) கூற்று சரி

D) காரணம் சரி

விளக்கம்: மனிதர்களின் வாழ்நாளில் பற்கள் இரண்டு தொகுப்பாக உருவாகின்றன. முதலில் பால் பற்களும் பின்பு நிலைத்த பற்களும் தோன்றுகின்றன. இவை உணவினை அரைப்பதற்கு பயன்படுகிறது.

17) மனித நிரந்தர பற்களின் எண்ணிக்கை எத்தனை?

A) 28

B) 30

C) 32

D) 34

விளக்கம்: மனித நிரந்தர பற்களின் எண்ணிக்கை 32 ஆகும். இது ஒரு தாடைக்கு 16 வீதம் மேல் கீழ் என இரு தாடைகளிலும் காணப்படுகிறது.

18) உமிழ்நீர் சுரப்பிகளில் மிகப் பெரிய சுரப்பி எது?

A) மேலண்ணச் சுரப்பி

B) நாவடிச் சுரப்பி

C) தாடைச் சுரப்பி

D) ஏதுமில்லை

விளக்கம்: மேலண்ணச் சுரப்பி தான் உமிழ்நீர் சுரப்பிகளில் மிக்பபெரிய சுரப்பி ஆகும். இவைகள் இரு கன்னங்களிலும் காதுக்குக் கீழே அமைந்துள்ளது.

19) மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் மென்படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்புக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) வாய்

B) தொண்டை

C) இதழ்

D) நாக்கு

விளக்கம்: மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் மென்படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்புக்கு தொண்டை என அழைக்கப்படுகிறது. இது வாய்க்குழியை உணவுக் குழலுடன் இணைக்கிறது.

20) நாக்கு ______ என்றும் அழைக்கப்படுகிறது?

A) மடல்

B) ஃப்ருனுலம்

C) பியூமான்

D) ரெனிக்ஸ்

விளக்கம்: நாக்கு ஃப்ருனுலம் என்றும் அழைக்கப்படுகிறது இது வாயின் கீழ் பகுதிக்கும் நாக்கிற்கும் இடையே இது அமைந்துள்ளது.

21) உமிழ்நீர் சுரப்பி நாள் ஒன்றிற்கு சுமார் எத்தனை லிட்டர் உமிழ்நீரை சுரக்கிறது?

A) 1 லி

B) 1.5 லி

C) 2 லி

D) 800 மிலி

விளக்கம்: வாய்க்குழியில் 3 இணை உமிழ்நீர் சுரப்பிகள் காணப்படுகிறது இது நாள் ஒன்றிற்கு சுமார் 1.5லி உமிழ்நீரை சுரக்கிறது, இது செரித்தலுக்கு பயன்படுகிறது.

22) 1. வெட்டும் பற்கள் உணவினை வெட்டவும் கடிக்கவும் பயன்படுகிறது.

2. கோரைப்பற்கள் கிழிக்கவும் துழையிடவும் பயன்படுகிறது.

3. முன்கடைவாய்பற்கள் கிழிக்கவும் துழையிடவும் பயன்படுகிறது.

4. பின் கடைவாய்ப்பற்கள் நசுக்கவும் அரைக்கவும் மெல்லவும் பயன்படுகிறது.

A) 1, 2, 4 சரி

B) 1, 2, 3 சரி

C) 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: வெட்டும் பற்கள் உணவினை வெட்டவும் கடிக்கவும் பயன்படுகிறது.

கோரைப்பற்கள் கிழிக்கவும் துழையிடவும் பயன்படுகிறது. முன்கடைவாய்பற்கள் நசுக்கவும் அரைக்கவும பயன்படுகிறது. பின் கடைவாய்ப்பற்கள் நசுக்கவும் அரைக்கவும் மெல்லவும் பயன்படுகிறது.

23) இரைப்பை சார் உடற்செயலியலின் தந்தை என அறியப்படுபவர்?

A) மஹேர்

B) ரிச்சர்ட்

C) ஹென்றி

D) வில்லியம் பியூமாண்ட்

விளக்கம்: வில்லியம் பியூமாண்ட் என்பவர் ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராவர். இவர் தனது அவதானிப்பகளின் அடிப்படையில் இரைப்பையிலுள்ள செறிவுமிக்க அமிலம் ஹைட்ரோகுளோரிக் அமிலம் செரிமானத்தில் முக்கிய பங்காற்றுகிறது என குறிப்பிட்டார்

24) நாக்கை நாமே விழுங்கிவிடாமல் பாதுகாக்கும் சவ்வு என அறியப்படுவது?

A) ஃப்னுலம்

B) மென்படலம்

C) குடல் வாய்

D) புளோரா

விளக்கம்: நாக்கானது ஃப்னுலம் எனும் ஒரு வித சவ்வால் இணைக்கப்பட்டுள்ளது இது நாக்கை நாமே விழுங்கிவிடாமல் தடுக்கிறது.

25) செரிமான ஊக்கியாக பயன்படும் புரதம் எது?

A) ரெனின்

B) ரென்னின்

C) அமிலேஸ்

D) மால்டோஸ்

விளக்கம்: ரென்னின் என்பது ஒரு செரிமான ஊக்கியாக பயன்படுகிறத இது பால் புரதமாகிய கேசின்னை உறைய வைக்கிறது. மற்றும் புரதம் செரிமானமாவதை அதிகரிக்கிறது.

26) உமிழ்நீரில் உள்ள பாக்டீரியா எது?

A) லாக்டோபேசிலஸ்

B) லைசோசைம்

C) லாக்டோபேசிலஸ்

D) விப்ரியோ

விளக்கம்: உமிழ்நீரில் உள்ள லைசோசைம் என்ற பாக்டீரியாவை எதிர்த்து அழிக்கும் நொதியானது உள்ளது.

27) சிறுநீரக வடிதிரவத்திலிருந்து நீரையும் சோடியத்தையும் சீராக உறிஞ்ச பயன்படும் புரதம்?

A) ரென்னின்

B) ரெனின்

C) அமிலேஸ்

D) மால்டோஸ்

விளக்கம்: ரெனின் சிறுநீரக வடிதிரவத்திலிருந்து நீரையும் மற்றும் சோடியத்தையும் ஒரே சீராக உறிஞ்ச பயன்படுகிறது. மேலும் இது ஆன்ஜியோடென்சினோஜென்னை ஆன்ஜியோடென்சின்னாக மாற்றுகிறது.

28) ஆதாரம் வடிவம், உடலுக்கு ஓர் அமைப்பை தருகின்ற உறுப்பு மண்டலம் எது?

A) புறச்சட்டக மண்டலம்

B) எலும்பு மண்டலம்

C) தசை மண்டலம்

D) நரம்புமண்டலம்

விளக்கம்: எலும்பு மண்டலமானது ஆதாரம், வடிவம் மற்றும் உடலுக்கு ஓர் அமைப்பைத் தரும் உறுப்பு மண்டலமாக செயல்படுகிறது.

29) இரைப்பையில் காணப்படும் நொதிகளில் தவறானது?

A) ரென்னின்

B) டையலின்

C) பெப்சின்

D) ஹைட்ரோ குளோரிக் அமிலம்

விளக்கம்: டையலின் நொதி மட்டும் உமிழ்நீரில் காணப்படுகிறது. மேற்கண்ட அனைத்தும் இரைப்பையில் காணப்படும் நொதிகளாகும் டையலின் நொதியை தவிர.

30) 1. இரைப்பை நீர் நிறமற்றது.

2. உணவோடு விழுங்கப்பட்ட பாக்டீரியாவை ஹைட்ரோ குளோரிக் அமிலம் அழித்துவிடுகிறது.

3. ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிக்கப்படாத வகையில் இரைப்பையின் உட்சுவற்றில் கொளகொளப்பான திரவம் ஒன்று உள்ளது.

4. இரைப்பையில் நொதிகளாக ரென்னின், பெப்சின் காணப்படுகிறது.

A) 1, 4 சரி

B) 1, 3, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: இரைப்பை நீர் நிறமற்றது. உணவோடு விழுங்கப்பட்ட பாக்டீரியாவை ஹைட்ரோ குளோரிக் அமிலம் அழித்துவிடுகிறது. ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிக்கப்படாத வகையில் இரைப்பையின் உட்சுவற்றில் கொளகொளப்பான திரவம் ஒன்று உள்ளது. இரைப்பையில் நொதிகளாக ரென்னின், பெப்சின் காணப்படுகிறது.

31) கூற்று: உணவுக்குழலின் மிக நீண்ட பகுதி சிறுகுடல் ஆகும்

காரணம்: இது முன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

A) கூற்று காரணம் இரண்டும் சரி

B) கூற்று காரணம் இரண்டும் தவறு

C) கூற்று சரி

D) காரணம் சரி

விளக்கம்: உணவுக்குழலின் மிக நீண்ட பகுதி சிறுகுடல் ஆகும். இது முன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது இது உணவின் செரித்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது இரைப்பைப் பாகுடன் காணப்படுகிறது.

32) இரைப்பை சிறுகுடல் எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: இரைப்பை சிறுகுடல் ஆனது முன்று பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது இவை

  1. முன்சிறுகுடல்
  2. நடுச்சிறுகுடல்
  3. பின்சிறுகுடல்

33) இரைப்பை சிறுகுடலில் சுரக்கும் நொதிகள்?

A) சுக்ரோஸ்

B) மால்டோஸ்

C) லாக்டோஸ்

D) அனைத்தும்

விளக்கம்: இரைப்பை சிறுகுடலில் சுக்ரோஸ், மால்டோஸ், லாக்டோஸ் மற்றும் லிப்பேஸ் போன்ற நொதிகள் காணப்படுகிறது

34) 1. முன் சிறுகுடலில் பித்த நாளமும் கணைய நாளமும் திறக்கிறது.

2. நடுசிறுகுடல் சிறுகுடலின் சிறிய பகுதியாகும்.

3. நடுசிறுகுடலில் சிறுகுடல் நீர் சுரக்கிறது.

4. பின் சிறுகுடலில் குடலுறிஞ்சிகள் காணப்படுகிறது.

A) 1, 4 சரி

B) 1, 3, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: முன் சிறுகுடலில் பித்த நாளமும் கணைய நாளமும் திறக்கிறது.

நடுசிறுகுடல் சிறுகுடலின் சிறிய பகுதியாகும்.

நடுசிறுகுடலில் சிறுகுடல் நீர் சுரக்கிறது.

பின் சிறுகுடலில் குடலுறிஞ்சிகள் காணப்படுகிறது.

35) 1. பெப்சின் – பெப்டோன்கள்

2. மால்டோஸ் – குளுக்கோஸ்

3. லாக்டோஸ் – குளுக்கோஸ் மற்றும் ப்ரக்டோஸ்

4. சுக்ரோஸ் – குளுக்கோஸ் மற்றும் காலக்டோஸ்

A) 3 2 1 4

B) 1 2 4 3

C) 2 1 4 3

D) 1 4 2 3

விளக்கம்: பெப்சின் – பெப்டோன்கள்

மால்டோஸ் – குளுக்கோஸ்

லாக்டோஸ் – குளுக்கோஸ் மற்றும் காலக்டோஸ்

சுக்ரோஸ் – குளுக்கோஸ் மற்றும் ப்ரக்டோஸ்

36) இரைப்பை குடலுறிஞ்சிகளின் எண்ணிக்கை?

A) 2 மி

B) 3 மி

C) 4 மி

D) 4 பி

விளக்கம்: இரைப்பையில் காணப்படும் குடலுறிஞ்சிள் 1 மி.மீட்டர் நீளமுடையது இவை சுமாராக 4 மில்லியன் காணப்படும்.

37) 1. கல்லீரல் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

2. இது கருவில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது.

3. நச்சுக்கள் மற்றும் உலோக நஞ்சினை வெளியேற்றுகிறது.

4. இரும்பு, தாமிரம், வைட்டமின்களை சேமித்து வைக்கிறது.

5. மருந்து பொருட்கள் மற்றும் ஆல்கஹாலின் நஞ்சினை நீக்குகிறது.

A) 1, 3, 5 சரி

B) 1, 2, 3, 5 சரி

C) 3, 4, 5 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: கல்லீரல் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இது கருவில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது. நச்சுக்கள் மற்றும் உலோக நஞ்சினை வெளியேற்றுகிறது. இரும்பு, தாமிரம், வைட்டமின்களை சேமித்து வைக்கிறது. மருந்து பொருட்கள் மற்றும் ஆல்கஹாலின் நஞ்சினை நீக்குகிறது.

38) முதல் சிறுநீரக அறுவை சிகிச்சை மாற்றம் நடைபெற்ற வருடம்?

A) 1950

B) 1952

C) 1954

D) 1970

விளக்கம்: முதல் சிறுநீரக அறுவை சிகிச்சையானது ஒத்த பண்புடைய இரட்டையர்களுக்கு 1954 ஆம் ஆண்டு நடைபெற்றது சிறுநீரகத்தை பெற்ற நபர் 8 ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்து மறைந்தார்.

39) உடல் விந்தணுவின் வெப்ப சீராக்கியாக செயலாற்றும் உறுப்பு?

A) விரைப்பை

B) விந்து நாளம்

C) சிறுநீர்புறவழிக்குழாய்

D) துணைச் சுரப்பிகள்

விளக்கம்: விரைப்பை விந்தணுவின் வெப்ப சீராக்கியாக செயலாற்றுகிறது, இது சாதாரண உடல் வெப்பநிலையை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைவாக பராமரிக்கிறது.

40) வளரும் விந்துவிற்கு ஊட்டத்தினை அளிப்பது?

A) எப்பிடிமிஸ்

B) செர்டோலி செல்கள்

C) துணை சுரப்பிகள்

D) மைட்டோகாண்டிரியா

விளக்கம்: வளரும் விந்துவிற்கு ஊட்டத்தை அளிப்புத செர்டோலி செல்கள் ஆகும்.

41) உடலில் காணப்படும் இரு சிறுநீரகங்களிலும் சுமார் எத்தனை நெஃரான்களை கொண்டுள்ளன?

A) 2 மில்லியன்

B) 3 மில்லியன்

C) 4 மில்லியன்

D) 2 பில்லியன்

விளக்கம்: மனித உடலில் காணப்படும் இரு சிறுநீரகங்களும் சேர்ந்து 2 மில்லியன் நெஃரான்களை கொண்டுள்ளன. இது இரத்தத்தை வடிகட்டுகின்ற பணியை செய்கின்றன.

42) 1. முதன்மை பாலின உறுப்புக்கள் பாலின சுரப்பிகள் பாலின உயிரணுவையும் தயாரிக்கின்றன.

2. இதுவே பாலின ஹார்மோன்களையும் சுரக்கிறது.

3. இரண்டாம் பாலின உறுப்புகளில் பிறப்புறுப்புகள் மற்றும் சுரப்பிகள் அடங்கும்.

4. இரண்டாம் நிலை பாலின உறுப்புகள் பாலின உயிரணுவையும் அல்லது பாலின ஹார்மோன்களையும் உருவாக்குவது இல்லை.

A) 1, 3 சரி

B) 1, 4 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: முதன்மை பாலின உறுப்புக்கள் பாலின சுரப்பிகள் பாலின உயிரணுவையும் தயாரிக்கின்றன. இதுவே பாலின ஹார்மோன்களையும் சுரக்கிறது. இரண்டாம் பாலின உறுப்புகளில் பிறப்புறுப்புகள் மற்றும் சுரப்பிகள் அடங்கும். இரண்டாம் நிலை பாலின உறுப்புகள் பாலின உயிரணுவையும் அல்லது பாலின ஹார்மோன்களையும் உருவாக்குவது இல்லை.

43) பெண்களில் பாலியல் முதிர்ச்சி எந்த வயதில் நடைபெறுகிறது?

A) 13 – 14

B) 10 – 13

C) 11 – 13

D) 14 – 16

விளக்கம்: இனப்பெருக்க உறுப்புகள் பாலியல் முதிர்ச்சி அடைந்த பின்னர் செயல்பட தொடங்கும் இது பெண்களில் பொதுவாக 11 – 13 வயதில் ஏற்படுகிறது.

44) நாளொன்றிற்கு எவ்வளவு இரத்தத்தை சிறுநீரகங்கள் வடிகட்டுகின்றன

A) 1700-1800 லிட்டர்

B) 1600-1800 லிட்டர்

C) 1500-1900 லிட்டர்

D) 1450-1750 லிட்டர்

விளக்கம்: மனித உடலில் உள்ள சிறுநீரகமானது நாளொன்றிற்கு 1700-1800 லிட்டர் இரத்ததை வடிகட்டுகின்றன

45) விந்துவை உருவாக்கும் செயலுக்கு _________ என்று பெயர்?

A) கருஉருவாக்கம்

B) விந்தணுவாக்கம்

C) பெலோப்பியன்

D) லேடிக் உருவாக்கம்

விளக்கம்: ஆணின் விந்தணுவை உருவாக்கும் செயலுக்கு விந்தணுவாக்கம் எனவும் அழைக்கப்படுகிறது இது சாதாரணமாக 500 பில்லியன் விந்தணுவை உருவாக்குகிறது.

46) மனித செல்களில் மிகப்பெரிய செல் என அறியப்படுவது?

A) விந்து செல்

B) கருமுட்டை

C) எபிதிலிய செல்

D) உடல் செல்கள்

விளக்கம்: கருமுட்டை தான் மனித செல்களில் மிகப்பெரிய செல் ஆகும் கருமுட்டை உருவாக்கும் செயல்முறைக்கு கருமுட்டை உருவாக்கம் என்று பெயர்

47) மூச்சுக்குழலின் துளைக்குள் உணவானது நுழைவதை தடுப்பது ______ ஆகும்

A) குரல்வளை மூடிகள்

B) குரல்வளை முனை

C) கடின அண்ணம்

D) மிருதுவான அண்ணம்

விளக்கம்: மூச்சுக்குழலின் துளைக்குள் உணவானது நுழைவதை தடுப்பது குரல்வளை மூடிகள் ஆகும்.

48) பித்த நீர் எதை செரிக்க உதவுகின்றன?

A) புரதம்

B) சர்க்கரை

C) கொழுப்புகள்

D) கார்போஹைட்ரேட்கள்

விளக்கம்: பித்த நீர் ஆனது கொழுப்புகளை செரிக்க உதவுகிறது இது ஒரு செரிமான நிகழ்வுகளில் மிக முக்கிய பங்கினை ஆற்றுகிறது.

49) கழிவுநீக்கம் என்பது _______ ஆகும்?

A) காற்றிலிருந்து ஆக்ஸிஜனை உள்ளெடுத்து கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடல்

B) உடலில் இருந்து தீமை தரும் கிருமிகளை புழுக்களையும் வெளியேற்றல்

C) இரத்தத்தின் வழியாக செரிமானமாக்கப்பட்ட உணவிளை உடற்திசுக்களுக்கு கடத்துதல்

D) உடலிலிருந்து உருவான நைட்ரஜன் கழிவுகளை வெளியேற்றல்

விளக்கம்: கழிவு நீக்கம் என்பது செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆகும் இது உடலில் உருவான நைட்ரஜன் கழிவுகளை வெளியேற்றும் முக்கிய செயல்பாடுகளில் ஈடுபடுகிறது

50) மனித உடலில் மிகச்சிறிய செல் என அறியப்படுவது?

A) விந்து செல்

B) அண்ட செல்

C) நரம்புசெல்

D) உடற்செல்கள்

விளக்கம்: ஆண் உடலின் மிகச்சிறிய செல்லாக கருதப்படுவது விந்து செல் ஆகும் இது ஒரு மனிதனின் சாதாரண வாழ்நாளில் 500 பில்லியன் செல்களை தோற்றுவிக்கும்.

51) மனித இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பது?

A) கார்போஹைட்ரோட்

B) புரதங்கள்

C) கொழுப்புகள்

D) சுக்ரோஸ்

விளக்கம்: மனிதனின் இரைப்பை பெரும்பாலும் செரிமானம் அடைவது புரதங்கள் ஆகும்

52) 1. தோல் – சிறுநீர்

2. நுரையீரல் – வியர்வை

3. பெருங்குடல் – கார்பன் டை ஆக்ஸைடு

4. சிறுநீரகங்கள் – செரிக்காத உணவு

A) 2 3 4 1

B) 4 1 2 3

C) 4 3 2 1

D) 4 1 3 2

விளக்கம்: தோல் – வியர்வை

நுரையீரல் – கார்பன் டை ஆக்ஸைடு

பெருங்குடல் – செரிக்காத உணவு

சிறுநீரகங்கள் – சிறுநீர்

53) கீழ்காண்பவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை?

A) நாவடி சுரப்பி

B) லாக்ரிமால்

C) கீழ்தாடை சுரப்பி

D) மேலண்ணச் சுரப்பி

விளக்கம்: வாயில் 3 இணை உமிழ்நீர் சுரப்பிகள் காணப்படுகிறது. அவை

நாவடி சுரப்பி

கீழ்தாடை சுரப்பி

மேலண்ணச் சுரப்பி

54) கீழ்காண்பவற்றில் எது வியர்வை உட்கூறு இல்லை?

A) யூரியா

B) புரதம்

C) நீர்

D) உப்பு

விளக்கம்: வியர்வை சுரப்பியானது யூரியா, நீர், உப்பு ஆகியவற்றை உட்கூறாக கொண்டுள்ளது. புரதம் உடலுக்கு தேவையான ஒரு அத்தியாவசிய பொருளாகும்.

55) கீழ்காண்பவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?

A) அண்டம்

B) கருப்பை

C) விந்தகம்

D) அண்டக்குழாய்

விளக்கம்: அண்டம், கருப்பை, அண்டக்குழாய் போன்றவை பெண் இனப்பெருக்க உறுப்புகளில் காணப்படும் பகுதியாகும். விந்தகம் மட்டும் ஆண் இனப்பெருக்க உறுப்பாகும்

56) உமிழ்நீரோடு உணவினை கலக்குவதற்கு பயன்படும் தசையாலான உணர்வு உறுப்பு — ஆகும்

A ) நாவடி சுரப்பி

B) நாக்கு

C) அண்ணம்

D) மேலண்ணச் சுரப்பி

விளக்கம்: உமிழ்நீரோடு உணவினை கலக்குவதற்கு பயன்படும் தசையாலான உணர்வு உறுப்பு நாக்கு ஆகும் இது உணவினை வாயில் நன்கு கலப்பதற்கு பயன்படுகிறது மேலும் பற்கள் அரைப்பதற்கும் இது உதவிபுரிகிறது.

57) ஆண்களின் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கு பொதுவான பாதையாக செயல்படுவது எது?

A) சிறுநீரக குழாய்

B) சிறுநீர்புறவழி

C) விந்துக்குழாய்

D) விதைப்பை

விளக்கம்: ஆண்களின் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கு பொதுவான பாதையாக செயல்படுவது சிறுநீர்புறவழி யாகும் இது இரண்டிற்கும் ஒரு பொதுவான பாதையாக திகழ்கிறது.

58) பெண் இனப்பெருக்க உறுப்புகளில் விந்துவை பெறும் பகுதி?

A) கர்பப்பை

B) யோனிக்குழாய்

C) கருப்பை தசைநார்

D) கிராப்பியன் பாலிக்கில்

விளக்கம்: யோனிக்குழாய் ஆனது விந்துவை பெற்று கருவுருதலுக்கு துணைபுரிகிறது. இது கருப்பைவாய் மற்றும் வெளி பிறப்புறுப்பை இணைக்கிறது.

59) சிறுநீரகங்கள் மனித இரத்தத்தில் எத்தனை சதவிகிதம் வடிகட்டி சிறுநீராக வெளியேற்றுகிறது?

A) 98 சதவிகிதம்

B) 99 சதவிகிதம்

C) 90 சதவிகிதம்

D) 1 சதவிகிதம்

விளக்கம்: சிறுநீரகமானது இரத்தத்தை 99 சதவிகிதம் உறிஞ்சி வடிகட்டுகிறது பின் இவை 1 சதவிகிதம் மட்டுமே சிறுநீராக வெளியேற்றுகிறது.

60) எத்தனை படிநிலைகளில் சிறுநீரகங்கள் உருவாகிறது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: சிறுநீரகமானது மூன்று படிநிலைகளில் சிறுநீரகத்தை உருவாக்குகிறது.

  1. கிளாமருலார் வடிகட்டுதல்,
  2. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்,
  3. குழல்களில் சுரத்தல்.

61) சுவாச வாயுக்கள், ஊட்டச்சத்துப் பொருட்கள், கழிவுப் பொருட்கள் போன்றவற்றை கடத்தும் மண்டலம் எது?

A) கழிவுநீக்க மண்டலம்

B) இரத்த ஓட்ட மண்டலம்

C) சுவாச மண்டலம்

D) உணர்ச்சி மண்டலம்

விளக்கம்: சுவாச வாயுக்கள், ஊட்டச்சத்துப் பொருட்கள், கழிவுப் பொருட்கள் போன்றவற்றை கடத்தும் மண்டலம் இரத்த ஓட்ட மண்டலம் ஆகும்

62) இரைப்பையிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் தான் செரிமானத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது என்பதை முதலில் கண்டறிந்தவர்?

A) மஹேர்

B) வாஸ்கி

C) வில்லியம் பியூமாண்ட்

D) பிளம்மிங்

விளக்கம்: இரைப்பையிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் தான் செரிமானத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது என்பதை முதலில் கண்டறிந்தவர் வில்லியம் பியூமாண்ட் ஆவார். இவர் இரைப்பை சார் உடற்செயலியலின் தந்தை என அறியப்படுகிறார்.

63) மனித உடலில் காணப்படும் மிகப்பெரிய சுரப்பி எது?

A) கணையம்

B) தைராய்டு

C) கல்லீரல்

D) இரைப்பை

விளக்கம்: உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமான சுரப்பி கல்லீரல் சுரப்பியாகும் இது செம்மண்ணிறத்தில் இருக்கும்.

64) 1. கல்லீரல் ஆனது இரண்டு கதுப்புக்களை கொண்டது.

2. இதில் வலது கதுப்பானது இடது கதுப்பை விட சற்று பெரியதாகும்.

3. கல்லீரல் செல்கள் பித்த நீரை சுரக்கிறது.

4. பித்த உப்புக்கள் கொழுப்புகளை செரித்தலுக்கு உதவுகிறது.

A) 1 3 சரி

B) 1 2 4 சரி

C) 1 3 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: கல்லீரல் ஆனது இரண்டு கதுப்புக்களை கொண்டது. இதில் வலது கதுப்பானது இடது கதுப்பை விட சற்று பெரியதாகும். கல்லீரல் செல்கள் பித்த நீரை சுரக்கிறது. பித்த உப்புக்கள் கொழுப்புகளை செரித்தலுக்கு உதவுகிறது.

65) பித்தநீரில் காணப்படுவது?

A) சோடியம் கிளைக்கோலேட்

B) சோடியம் டாரோகிளைக்கோலேட்

C) பித்த நிறமிகள்

D) அனைத்தும்

விளக்கம்: சோடியம் கிளைக்கோலேட் மற்றும் சோடியம் டாரோகிளைக்கோலேட் என்பது பித்த உப்புக்களாகும் இவை பித்த நீரில் காணப்படுகிறது மேலும் பித்த நிறமிகளும் காணப்படுகிறது.

66) நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பியாக செயல்படுவது?

A) கணையம்

B) தைராய்டு

C) கல்லீரல்

D) இரைப்பை

விளக்கம்: கணையம் ஆனது நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பியாக செயல்படுகிறது நாளமுள்ள சுரப்பியாக செரித்தலுக்கும் நாளமில்லா சுரப்பியாக இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

67) மால்டோஸ், லாக்டோஸ், சுக்ரேஸ் மற்றும் லிப்பேஸ் போன்ற காரத் தன்மையுடைய பகுதிகளில் செயலாற்றும் நொதிகள் காணப்படும் பகுதி?

A ) கணையம்

B) இரைப்பை

C) கல்லீரல்

D) குடல் சுரப்பிகள்

விளக்கம்: மால்டோஸ், லாக்டோஸ், சுக்ரேஸ் மற்றும் லிப்பேஸ் போன்ற காரத் தன்மையுடைய பகுதிகளில் செயலாற்றும் நொதிகள் காணப்படுவது குடல் சுரப்பிகளில் மட்டுமே.

68) சக்கஸ் எண்ட்டிரிக்கஸ் என்ற திரவத்தை சுரப்பது எது?

A) கணையம்

B) இரைப்பை

C) கல்லீரல்

D) குடல் சுரப்பிகள்

விளக்கம்: மால்டோஸ், லாக்டோஸ், சுக்ரேஸ் மற்றும் லிப்பேஸ் போன்ற காரத் தன்மையுடைய பகுதிகளில் செயலாற்றும் நொதிகள் காணப்படுவது குடல் சுரப்பிகளில் மட்டுமே இதனையே சக்கஸ் எண்ட்டிரிக்கஸ் எனவும் அழைக்கிறோம்.

69) உறிஞ்சப்பட்ட உணவுப்பொருட்களை உட்புறமுள்ள மற்றும் ஒத்திசைவான திசுக்களோடும் இணைப்பது செரித்தலின் ஒரு படிநிலையாகும்

A) செரித்தல்

B) உட்கிரகித்தல்

C) தன்மயமாதல்

D) அனைத்தும்

விளக்கம்: உறிஞ்சப்பட்ட உணவுப்பொருட்களை உட்புறமுள்ள மற்றும் ஒத்திசைவான திசுக்களோடும் இணைப்பது தன்மயமாதல் என அழைக்கப்படுகிறது.

70) கணைய நீரில் காணப்படும் நொதிகள் எவை?

A) டிரிப்சின்

B) லிப்பேஸ்

C) அமைலேஸ்

D) அனைத்தும்

விளக்கம்: கணைய நீரில் டிரிப்சின், லிப்பேஸ், அமைலேஸ் போன்ற நொதிகள் காணப்படுகிறது இது முறையே புரதம், கொழுப்பு மற்றும் ஸ்டார்ச் ஆகியவற்றில் செயலாற்றுகிறது.

71) கூற்று: கணையத்தில் உள்ள ஆல்பா செல்கள் இன்சுலினை சுரக்கிறது.

காரணம்: இது இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.

A) கூற்று காரணம் இரண்டும் சரி

B) கூற்று காரணம் இரண்டும் தவறு

C) கூற்று சரி

D) காரணம் சரி

விளக்கம்: கணையத்தில் உள்ள ஆல்பா செல்கள் இன்சுலினை சுரக்கிறது. இது இரத்ததில் சர்க்கரை அளவை குறைக்கப்பயன்படுகிறது.

72) செரிமான மண்டலத்தில் மிக நீண்ட பகுதி காணப்படுவது?

A) சிறுகுடல்

B) பெருங்குடல்

C) இரைப்பை

D) பித்த நாளம்

விளக்கம்: செரிமான மண்டலத்தில் மிக நீளமான பகுதியாக சிறுகுடல் காணப்படுகிறது, இது 5 மீட்டர் நீளமுடையது.

73) பெருங்குடலில் காணப்படும் பகுதி ?

A) சீக்கம்

B) கோலன்

C) ரெக்கம்

D) அனைத்தும்

விளக்கம்: பெருங்குடல் மூன்று பகுதிகளாக காணப்படுகிறது. இவை

  1. சீக்கம்
  2. கோலன்
  3. ரெக்கம்

74) குடல்வால் எங்கு காணப்படுகிறது?

A) சீக்கம்

B) கோலன்

C) ரெக்கம்

D) ஜிஜினம்

விளக்கம்: சீக்கம் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடம் ஆகும் இதில் ஒரு விரல் போன்ற நீட்சி காணப்படுகிறது இதுவே குடல்வால் என அழைக்கப்படுகிறது.

75) செயற்கை சிறுநீரகத்தை பயன்படுத்தி இரத்ததை சுத்தம் செய்யும் முறைக்கு — என்று பெயர்?

A) ஹீமோடையலிசஸ்

B) மாற்று சிறுநீரக முறை

C) மைக்டியூரின்

D) வடிதிரவ முறை

விளக்கம்: செயற்கை சிறுநீரகத்தை பயன்படுத்தி இரத்ததை சுத்தம் செய்யும் முறைக்கு ஹீமோடையலிசஸ் என்று பெயர் இம்முறை கூழ்மபிரிப்பு என்று பெயர்

76) ஒரு நல்ல ஆரோக்கியமான மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் சிறுநீரகத்தை வெளியேற்றுகிறான்?

A) 1.5 – 2 லிட்டர்

B) 2 – 3 லிட்டர்

C) 1 – 2 லிட்டர்

D) 2 லிட்டர்

விளக்கம்: நல்ல நிலையில் உள்ள ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 1 – 2 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறான்.

77) ஹோமியோஸ்டேஸிஸ் நிலையை வைத்துக்கொள்ளும் மிக முக்கியமான பங்கினை வகிப்பது?

A) நெப்ரான்கள்

B) கழிவுநீக்கம்

C) இரத்த ஓட்ட மண்டலம்

D) செரிமான மண்டலம்

விளக்கம்: ஹோமியோஸ்டேஸிஸ் என்பது சீர்சமநிலை என்று பொருள் இதனை கழிவுநீக்க உறுப்புக்கள் உடலினை சீர்சமநிலையில் வைத்திருக்க முக்கிய பங்கு வகிக்கின்றன.

78) 1. சிறுநீரகத்தை தவிர தோலும் ஒரு கழிவுநீக்க உறுப்பாக செயல்படுகிறது.

2. நுரையீரல் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறது.

3. தோலானது நீர், யூரியா மற்றும் உப்புக்களை வெளியேற்றுகிறது.

4. யூரியாவை கல்லீரலில் உருவாகிறது.

A) 1 4 சரி

B) 1 3 4 சரி

C) 1 2 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: சிறுநீரகத்தை தவிர தோலும் ஒரு கழிவுநீக்க உறுப்பாக செயல்படுகிறது. நுரையீரல் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறது. தோலானது நீர், யூரியா மற்றும் உப்புக்களை வெளியேற்றுகிறது. யூரியாவை கல்லீரலில் உருவாகிறது.

79) மனித உடலின் வெப்பநிலை எவ்வளவு?

A) 36 டிகிரி செல்சியஸ்

B) 37 டிகிரி செல்சியஸ்

C) 37.7 டிகிரி செல்சியஸ்

D) 38 டிகிரி செல்சியஸ்

விளக்கம்: மனிதனின் சாதாரண உடல் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆக பராமரிக்கப்படுகிறது, இவ்வெப்பநிலையில் உறுப்புகள் அனைத்தும் சீராக செயல்படுகிறது.

80) 1. சிறுநீரகங்கள் அடர் சிவப்புநிறம் கொண்டது.

2. இது அவரைவடிவம் கொண்டது.

3. வலதுபுற சிறுநீரகமானது இடதுபுற சிறுநீரகத்தை விட சற்று கீழே இறங்கிக் காணப்படுகிறது.

4. சிறுநீரகமானது தசைநார், இணைப்புத் திசுக்கள், சிறுநீரக கேப்சியூல்கள், கொழுப்பு கேப்சியூல்கள் மற்றும் இழைகளாலான சவ்வினால் மூடப்பட்டுள்ளது.

A) 1 4 சரி

B) 1 3 4 சரி

C) 1 2 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: சிறுநீரகங்கள் அடர் சிவப்புநிறம் கொண்டது. இது அவரைவடிவம் கொண்டது. வலதுபுற சிறுநீரகமானது இடதுபுற சிறுநீரகத்தை விட சற்று கீழே இறங்கிக் காணப்படுகிறது. சிறுநீரகமானது தசைநார், இணைப்புத் திசுக்கள், சிறுநீரக கேப்சியூல்கள், கொழுப்பு கேப்சியூல்கள் மற்றும் இழைகளாலான சவ்வினால் மூடப்பட்டுள்ளது.

81) சிறுநீரகத்தில் நெஃரான்கனை கொண்டுள்ள பகுதி எது?

A) கார்டெக்ஸ்

B) மெடுல்லா

C) சிறுநீர் குழாய்

D) A & B

விளக்கம்: சிறுநீரகத்தின் அடர்த்தியான வெளிப்பகுதியான கார்டெக்ஸ்வும், மெலிதான உட்பகுதியான மெடுல்லாவிலும் நெஃரான்கள் காணப்படுகிறது.

82) சிறுநீரகத்தின் பணிகளில் தவறானது?

1. நமது உடலில் நீரையும் மின்பகுபொருள்களையும் சமநிலைப்படுத்த உதவுகிறது.

2. இரத்ததில் அமில – காரச்சமநிலையை ஒழுங்குபடுத்துவதில்லை.

3. இரத்ததிலும், திரவத்திலும் சவ்வூடு பரவல் அழுத்ததையும் சமநிலைப்படுத்துவதில்லை.

4. பிளாஸ்மா திரவத்தின் முக்கிய பகுதிப்பொருள்களான குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்களை மீண்டும் பிளாஸ்மாவில் தக்கவைக்க உதவுகிறது.

A) 1 4 சரி

B) 1 3 4 சரி

C) 1 2 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: நமது உடலில் நீரையும் மின்பகுபொருள்களையும் சமநிலைப்படுத்த உதவுகிறது. இரத்ததில் அமில – காரச்சமநிலையை ஒழுங்குபடுத்துவதுகிறது. இரத்ததிலும், திரவத்திலும் சவ்வூடு பரவல் அழுத்ததையும் சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. பிளாஸ்மா திரவத்தின் முக்கிய பகுதிப்பொருள்களான குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்களை மீண்டும் பிளாஸ்மாவில் தக்கவைக்க உதவுகிறது.

83) ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சராசரியாக எவ்வளவு நெஃரான்கள் காணப்படுகிறது?

A) ஒரு மில்லியனை விட அதிகம்

B) ஒரு மில்லியனை விட குறைவு

C) சுமார் இரண்டு மில்லியன்

D) நான்கு மில்லியன்

விளக்கம்: ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமாராக ஒரு மில்லியன் நெஃரான்களுக்கும் அதிகமான நெஃரான்கள் காணப்படுகிறது. இவை இரத்தத்தை சுத்தம் செய்ய பயன்படும் முக்கிய செயல் அலகாகும்.

84) சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதிக்கு _________ என்று பெயர்?

A) குடல்வாய்

B) ஜிஜினம்

C) ஃப்னுலம்

D) தசைப்படலம்

விளக்கம்: இரைப்பையில் செரிக்கப்பட்ட இரைப்பைப்பாகு குடல்வாய் வழியாக நகர்கிறது. இது சிறுகுடலில் கொண்டுசேர்க்கிறது.

85) உமிழ்நீரோடு உணவினை கலக்குவதற்கு பயன்படும் தசையாளான உணர்வு உறுப்பு — ஆகும்

A) நாக்கு

B) அண்ணம்

C) மேலண்ணச் சுரப்பி

D) உமிழ்நீர்

விளக்கம்: நாக்கானது உமிழ்நீரோடு உணவினை கலக்குவதற்கு பயன்படும் தசையாளான உணர்வு உறுப்பு ஆகும்.

86) கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக __________ ல் சேமித்து வைக்கப்படுகிறது?

A) சிறுநீர் பை

B) சிறுகுடல் குழாய்

C) பித்தப்பை

D) கல்லீரல் குழாய்

விளக்கம்: கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக பித்தப்பையில் சேமித்து வைக்கப்படுகிறது. இது உணவினை செரித்தலுக்கு பயன்படுகிறது.

87) சிறுநீர் உருவாதல், சேர்த்து வைக்கப்படுதல் மற்றும் வெளியேற்றுதல் போன்றவற்றோடு இணைந்துள்ள உறுப்புகள் அடங்கியது _______ எனப்படும்

A) நெஃரான்கள்

B) ரீனல் பிரமிடு

C) சிறுநீரகம்

D) சிறுநீர்பை

விளக்கம்: சிறுநீர் உருவாதல், சேர்த்து வைக்கப்படுதல் மற்றும் வெளியேற்றுதல் போன்றவற்றோடு இணைந்துள்ள உறுப்புகள் அடங்கியது சிறுநீரகம் எனப்படும். கழிவு நீக்கத்தில் முக்கிய பங்காற்றுவது சிறுநீரகங்கள் ஆகும்.

88) 1. இரைப்பையில் காணப்படும் நைட்ரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளை கொல்லுகிறது.

2. செரிமானத்தின் போது புரதங்கள் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகிறது.

3. கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள், உப்புகள், குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகிறது.

4. இயல்பான உட்கூறுகளைத் தவிர, சிறுநீர் ஆனது உயிர் எதிரியை விட வைட்டமின்கள் அதிகம் வெளியேற்றுகிறது.

A) 1 2 4 சரி

B) 1 3 4 சரி

C) 2 3 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: இரைப்பையில் காணப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளை கொல்லுகிறது.

2. செரிமானத்தின் போது புரதங்கள் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகிறது.

3. கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள், உப்புகள், குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகிறது.

4. இயல்பான உட்கூறுகளைத் தவிர, சிறுநீர் ஆனது உயிர் எதிரியை விட வைட்டமின்கள் அதிகம் வெளியேற்றுகிறது.

89) நைட்ரஜன் கழிவுகளை வடிகட்டும் சிறுநீரகத்தின் உட்பகுதி எது?

A) நெஃ.ரான்

B) ரீனல் பெல்விஸ்

C) அண்மை சுருண்ட குழல்

D) கிலாமருலஸ்

விளக்கம்: சிறுநீரகத்தின் நைட்ரஜன் கழிவுகளை வடிகட்டும் சிறுநீரகத்தின் உட்பகுதி ரீனல் பெல்விஸ் என அழைக்கப்படுகிறது.

90) இரத்ததில் காணப்படும் தேவையான மற்றும் தேவையற்ற பொருட்களை வடிகட்டும் பகுதி எது?

A) நெஃரான்கள்

B) ரீனல் பெல்விஸ்

C) அண்மை சுருண்ட குழல்

D) கிலாமருலஸ்

விளக்கம்: கிளாமருலஸ் கிண்ணம் ஆனது இரத்ததில் காணப்படும் தேவையான மற்றும் தேவையற்ற பொருட்களை வடிகட்டும் பகுதியாக செயல்படுகிறது. இங்கு தான் சிறுநீர் ஆனது உருவாக்கப்படுகிறது.

91) சிறுநீர் உருவாகும் முறைகளில் தவறானவை எது?

A) கிளாமருலஸ் வடிகட்டுதல்

B) குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்

C) குழல்களில் சுரத்தல்

D) அனைத்தும்

விளக்கம்: சிறுநீர் உருவாகும் முறைகளில் சரியானவை முறையே கிளாமருலஸ் வடிகட்டுதல், குழல்களில் மீள உறிஞ்சுதல், குழல்களில் சுரத்தல் போன்றவை முறையே நடைபெறுகிறது.

92) மனிதனின் அடர் உப்படர்வுத் தன்மையுள்ள திரவம் எங்கு கடக்கிறது?

A) கிளாமருலஸ் வடிகட்டுதல்

B) குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்

C) குழல்களில் சுரத்தல்

D) ஹென்லே வளைவு

விளக்கம்: மனிதனின் அடர் உப்படர்வுத் தன்மையுள்ள திரவம் குழல்களில் சுரத்தல் நிகழ்வுகளின் காரணமாக நிகழ்கிறது. இதுவே சிறுநீராக சிறுநீர் பையில் சேகரிக்கப்படுகிறது.

93) 1. உணவுக்குழல் உணவினை தொண்டையிலிருந்து இரைப்பைக்கு குடல் அசைவுகளின் மூலம் கடத்துகிறது.

2. சிறுகுடலில் காணப்படும் குடலுறிஞ்சிகள் உறிஞ்சும் தன்மையை அதிகப்படுத்தும் விரல் போன்ற நீட்சியுடையது.

3. சிறுநீர்குழாய் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்பைக்கு சிறுநீரகத்தை கொண்டு செல்லும் மெல்லிய தசையாலானது

4. விந்தகத்தை சுற்றியுள்ள சிறிய பை போன்ற தசையாலான அமைப்பிற்கு விரைப்பை என அழைக்கிறோம்.

A) 1 2 4 சரி

B) 1 3 4 சரி

C) 2 3 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. உணவுக்குழல் உணவினை தொண்டையிலிருந்து இரைப்பைக்கு குடல் அசைவுகளின் மூலம் கடத்துகிறது.

2. பெருங்குடலில் காணப்படும் குடலுறிஞ்சிகள் உறிஞ்சும் தன்மையை அதிகப்படுத்தும் விரல் போன்ற நீட்சியுடையது.

3. சிறுநீர்குழாய் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்பைக்கு சிறுநீரகத்தை கொண்டு செல்லும் மெல்லிய தசையாலானது.

4. விந்தகத்தை சுற்றியுள்ள சிறிய பை போன்ற தசையாலான அமைப்பிற்கு விரைப்பை என அழைக்கிறோம்.

94) இரைப்பை நீரில் பெப்சின் குறைவுபட்டால் இரைப்பையில் எச்செயலானது பாதிக்கப்படும்?

A) ஸ்டார்ச்சிலிருந்து சர்க்கரையாக மாறும் செரிமான மாற்றம்.

B) புரதங்கள் பெப்டைடுகளாக உடைதல்.

C) நியூக்ளிக் அமிலங்களின் செரிமானம்.

D) கொழுப்புகள் கிளிசராலாகவும், கொழுப்பு அமிலங்கலாகவும் உடைதல்.

விளக்கம்: இரைப்பை நீரில் பெப்சின் குறைவுபட்டால் இரைப்பையில் புரதங்கள் பெப்டைடுகளாக உடையும் செயல் பாதிக்கப்படுகிறது. புரதங்களை பிரித்து பெப்டைடுகளாக மாற்றம் அடையும் நிகழ்வுகளை பெப்சின் நொதி செய்கிறது.

95) மாறி மாறி அமைந்திருக்கும் உணவுப் பாதையின் பல்வேறு பகுதிகளை மறுபடியும் சரியாக வரிசைப்படுத்துக?

A) தொண்டை, சிறுகுடல், இரைப்பை, பெருங்குடல், மலவாய், வாய், மலக்குடல்.

B) தொண்டை, இரைப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலவாய், வாய், மலக்குடல்.

C) வாய், தொண்டை, இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், மலவாய்.

D) வாய், தொண்டை, இரைப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், மலவாய்.

விளக்கம்: வாய், தொண்டை, இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், மலவாய். இவையே முறையாக அமைந்துள்ள உணவுப்பாதையின் வரிசையாகும்.

96) கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் உடலிலிருந்து வெளியேற்றப்படக்கூடிய பொருள் எவை?

A) யூரியா

B) அமினோ அமிலங்கள்

C) குளுக்கோஸ்

D) புரதங்கள்

விளக்கம்: நமது உடலிலிருந்து வெளியேற்றப்படக்கூடிய பொருள்களாக கருதப்படக்கூடியவை யூரியா ஆகும். இது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. யூரியா நச்சுத் தன்மை வாய்ந்த பொருளாகும்.

97) மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லும் மற்றும் மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாளங்கள் எவை எவை?

A) உட்செல் நுண்தமனி

B) வெளிசெல் நுண்தமனி

C) நுண்குழல்கள்

D) A & B

விளக்கம்: மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லும் மற்றும் மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாளங்கள் முறையே உட்செல் நுண்தமனி மற்றும் வெளிசெல் நுண்தமனி என அழைக்கப்படுகிறது.

98) பெரிய கொழுப்புத் துளிகளை சிறியதாக மாற்றுதலுக்கு – என்று பெயர்?

A) பால்மமாக்கம்

B) நொதித்தல்

C) ஹோமியோஸ்டேஸிஸ்

D) ஆஸ்மோரெகுலேசன்

விளக்கம்: பெரிய கொழுப்புத் திவளைகளை சிறியதாக கொழுப்புத் திவளையாக மாற்றும் நிகழ்வுக்கு பால்மமாக்கம் என்று பெயர். செரித்தலில் பால்மமாக்கம் இன்றியமையாத ஒன்றாகும்.

99) ஓர் உயிரினத்தின் நிகழும் முழு வேதியியல் மற்றும் ஆற்றல் மாற்றங்களை எவ்வாறு அழைக்கலாம்?

A) ஆற்றல் மாற்றம்

B) வளர்சிதை மாற்றம்

C) உணவூட்டம்

D) நொதித்தல்

விளக்கம்: ஓர் உயிரினத்தின் நிகழும் முழு வேதியியல் மற்றும் ஆற்றல் மாற்றங்களை வளர்சிதை மாற்றம் என அழைக்கப்படுகிறது. இது உயிரினம் பரிணாம மாற்றத்திற்கும் பயன்படுகிறது.

100) நீர் மற்றும் உப்பின் செறிவுகளின் கட்டுப்பாட்டினால் ஓர் உயிரினத்தின் உள்ள திரவத்தின் நிலைத்த சவ்வூடு பரவல் அழுத்தத்தை பராமரிப்பது

A) எதிர்க்களித்தல்

B) பால்மமாக்கம்

C) ஆஸ்மோரெகுலேசன்

D) ஹீமோடையாலிசிஸ்

விளக்கம்: நீர் மற்றும் உப்பின் செறிவுகளின் கட்டுகப்பாட்டிளால் ஓர் உயிரினத்தின் உள்ள திரவத்தின் நிலைத்த சவ்வூடு பரவல் அழுத்தத்தை பராமரிப்பது ஆஸ்ரோரெகுலேசன் என அழைக்கப்படுகிறது இது சிறுநீரகத்தில் இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது.

101) மனித உறுப்பு மண்டலங்களில் தவறானது?

A) நரம்பு மண்டலம்

B) புறத்தோற்ற மண்டலம்

C) எலும்பு மண்டலம்

D) சுவாச மண்டலம்

விளக்கம்: நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம், சுவாச மண்டலம் என்பவையே உறுப்பு மண்டலங்கள் ஆகும் புறத்தோற்ற மண்டலம் என ஒரு உறுப்பு மண்டலம் இல்லை.

102) நாளமில்லா சுரப்பு மண்டலங்களில் காணப்படாத சுரப்பி?

A) தோல் சுரப்பி

B) தைராய்டு சுரப்பி

C) அட்ரினல் சுரப்பி

D) தைராய்டு சுரப்பி

விளக்கம்: தோல் சுரப்பி என்பது புறச்சட்டக மண்டலம் உள்ளடக்கியது, நாளமில்லா சுரப்பு மண்டலங்களில் காணப்படாது இவை வேதி ஒருங்கமைவை மேற்கொள்கிறது.

103) உமிழ்நீர் சுரப்பிகளில் மிகப்பெரிய சுரப்பி எது?

A) நாவடி சுரப்பி

B) மேலண்ணச் சுரப்பி

C) கீழ் தாடைச் சுரப்பி

D) மேல்தாடைச் சுரப்பி

விளக்கம்: உமிழ்நீர் சுரப்பிகளில் மேலண்ணச் சுரப்பி மட்டுமே மிகப்பெரிய சுரப்பியாகும். இது கன்னங்கள் மற்றும் காதுக்கு கீழே அமைந்துள்ளது.

104) 1. சிறுகுடல் – 5-7 மீ

2. பெருங்குடல் – 1.5 மீ

3. குடலுறிஞ்சிகள் – 1 மிமீ

4. உணவுக்குழல் – 22 செமீ

A) 2 3 1 4

B) 3 4 2 1

C) 4 3 2 1

D) 1 2 3 4

விளக்கம்: சிறுகுடல் – 5-7 மீ

பெருங்குடல் – 1.5மீ

குடலுறிஞ்சிகள் – 1 மிமீ

உணவுக்குழல் – 22 செமீ

105) லாங்கர்கான் திட்டுக்கள் காணப்படும் பகுதி?

A) கல்லீரல்

B) கணையம்

C) குடல் திட்டுக்கள்

D) தைமஸ்

விளக்கம்: லாங்கர்கான் திட்டுக்கள் கணையத்தில் மேற்புறத்தில் காணப்படுகிறது, இவை இரத்ததில் சர்க்கரை அளவை சமநிலைபடுத்துகிறது.

106) 1. லிப்பேஸ் – புரதம்

2. டிரிப்சின் – இன்சுலின்

3. அமைலேஸ் – கொழுப்பு

4. ஆல்பா செல்கள் – ஸ்டார்ச்

A) 2 4 1 3

B) 3 4 1 2

C) 3 1 4 2

D) 1 2 4 3

விளக்கம்: லிப்பேஸ் – கொழுப்பு

டிரிப்சின் – புரதம்

அமைலேஸ் – ஸ்டார்ச்

ஆல்பா செல்கள் – இன்சுலின்

107) உமிழ்நீர் சுரப்பியின் மிகச்சிறிய சுரப்பி எது?

A) நாவடி சுரப்பி

B) மேலண்ணச் சுரப்பி

C) கீழ் தாடைச் சுரப்பி

D) மேல்தாடைச் சுரப்பி

விளக்கம்: உமிழ்நீர் சுரப்பிகளின் மிகச்சிறிய சுரப்பி நாவடி சுரப்பியாகும்; இது நாக்கின் அடிப்பகுதியில் காணப்படுகிறது.

108) ஓர் முதிர்ச்சியடைந்த மனிதனின் தோல் உடல் எடையில் எத்தனை சதவிகிதம் காணப்படுகிறது?

A) 21

B) 15

C) 25

D) 22

விளக்கம்: தோலானது உடலை மூடியிருக்கும் வெளிப்புறப்பகுதியாகும் இது முதிர்ச்சியடைந்த மனிதனின் உடல் எடையில் 15 சதவிகிதத்தை கொண்டுள்ளது.

109) கூற்று: சிறுநீரகங்களின் வழியே யூரியா வெளியேற்றப்படுகிறது.

காரணம்: யூரியா ஒரு நச்சுத் தன்மையான பொருள் இது இரத்ததில் அதிக அளவு கலந்திருந்தால் இறப்புக்கு கூட வழிவகுக்கும்.

A) கூற்று காரணம் இரண்டும் சரி

B) கூற்று காரணம் இரண்டும் தவறு

C) கூற்று சரி

D) காரணம் சரி

விளக்கம்: சிறுநீரகங்களின் வழியே யூரியா வெளியேற்றப்படுகிறது. யூரியா ஒரு நச்சுத் தன்மையான பொருள் இது இரத்ததில் அதிக அளவு கலந்திருந்தால் இறப்புக்கு கூட வழிவகுக்கும்.

110) சிறுகுடல் எந்தெந்த செயல்முறைகளில் ஈடுபடுகிறது?

A) செரிமானம்

B) உறிஞ்சுதல்

C) கடத்துதல்

D) A & B

விளக்கம்: உடலில் உள்ள சிறுகுடல் ஆனது செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் போன்ற இரு செயல்களை செய்கிறது. இதன் காரணமாக சிறுகுடல் செரிமானத்தில் இன்றியமையாத பணிகளை செய்கிறது.

111) செரிமானம் அடைந்த உணவுப்பொருள்கள் குடலுரிஞ்சிகளின் மூலம் உறிஞ்சப்பட்டு பின் எதன் மூலம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சென்றடைகிறது?

A) இரத்தம்

B) ஹார்மோன்கள்

C) நிணநீர்

D) A & C

விளக்கம்: செரிமானம் அடைந்த உணவுப்பொருள்கள் குடலுரிஞ்சிகளின் மூலம் உறிஞ்சப்பட்டு பின் இரத்தம் மற்றும் நிணநீர் மூலம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சென்றடைகிறது.

112) 1. கர்பப்பையானது பேரிக்காய் போன்ற தசையாளான வெற்றிடமுள்ள அமைப்புடையது.

2. இது இடுப்புக்குழிக்குள் அமைந்து காணப்படுகிறது.

3. கருவின் வளர்ச்சி கர்பப்பையின் உள்ளே நடைபெறுகிறது.

4. கருப்பபையின் வாய் யோனி என்ற பகுதிக்குள் செல்கிறது.

A) 1 2 சரி

B) 1 3 4 சரி

C) 1 2 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: கர்பப்பையானது பேரிக்காய் போன்ற தசையாளான வெற்றிடமுள்ள அமைப்புடையது. இது இடுப்புக்குழிக்குள் அமைந்து காணப்படுகிறது. கருவின் வளர்ச்சி கர்பப்பையின் உள்ளே நடைபெறுகிறது. கருப்பபையின் வாய் யோனி என்ற பகுதிக்குள் செல்கிறது.

113) பிளசன்டா உருவாக்கத்தோடு தொடர்புடைய ஹார்மோன் எது?

A) ஈஸ்ட்ரோஜன்

B) புரோஜஸ்ரோன்

C) ஆன்கோஜன்

D) கிராப்பியன் பாலிக்கிள்

விளக்கம்: பிளசன்டா உருவாக்கத்தோடு தொடர்புடைய ஹார்மோன் புரோஜஸ்டிரோன் ஆகும் இது கார்பஸ் லியூட்டியத்தால் உருவாக்கப்படுகிறது.

114) கலவியின் போது கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டையை பதிய வைக்க முக்கிய பங்காற்றும் ஹார்மோன்?

A) ஈஸ்ட்ரோஜன்

B) புரோஜஸ்ரோன்

C) ஆன்கோஜன்

D) கிராப்பியன் பாலிக்கிள்

விளக்கம்: புரோஜஸ்டிரோன் என்ற ஹார்மோன் கர்பப்பையில் கருவுற்ற முட்டையை பதிய வைக்கிறது, இது கார்பஸ்லுட்டியத்திலிருந்து உருவாகிறது.

115) கருமுட்டையானது அண்டகத்திலிருந்து வெளியேறும் நிகழ்வுக்கு இவ்வாறு அழைக்கிறோம்?

A) கருமுட்டை வெளிபடுதல்

B) நஞ்சுக்கொடி உருவாதல்

C) கர்பத்தினை பராமரித்தல்

D) அண்டம் வெளிபடுதல்

விளக்கம்: கருமுட்டையானது அண்டகத்திலிருந்து வெளியேறும் நிகழ்வுக்கு கருமுட்டை வெளிபடுதல் எனப்படும் இதனை ஓவலேசன் எனவும் அழைக்கலாம்.

116) 1. முன்சிறுகுடல் – பித்தநாளம் மற்றும் கல்லீரல் நாளமும் இங்கு திறக்கிறது

2. பின் சிறுகுடல் – இது பெருங்குடலில் திறக்கிறது

3. நடுசிறுகுடல் – குடல்சுரப்பிகள் காணப்படுகிறது

A) 1 2 3

B) 3 2 1

C) 2 1 3

D) 2 3 1

விளக்கம்:

முன்சிறுகுடல் – பித்தநாளம் மற்றும் கல்லீரல் நாளமும் இங்கு திறக்கிறது

பின் சிறுகுடல் – இது பெருங்குடலில் திறக்கிறது

நடுசிறுகுடல் – குடல்சுரப்பிகள் காணப்படுகிறது

117) சிறுகுடலின் சிறிய பகுதி எது?

A) முன்சிறுகுடல்

B) பின்சிறுகுடல்

C) நடுசிறுகுடல்

D) A & C

விளக்கம்: சிறுகுடலின் சிறிய பகுதி நடு சிறுகுடல் ஆகும் இதில் தான் குடல்சுரப்பிகள் காணப்படுகிறது குடல்சுரப்பிகளில் சுக்ரோஸ், மால்டோஸ், லாக்டோஸ், லிப்பேஸ் போன்றவை காணப்படுகிறது.

118) செரிமான மண்டலம் எத்தனை தொகுதிகளாக உறுப்புகளை கொண்டுள்ளது?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: உடலின் செரிமான மண்டலம் இரு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது இவை

  1. உணவுப்பாதை
  2. செரிமான சுரப்பிகள்

119) மாதவிடாய் சுழற்சி எத்தனை நாட்களுக்கு ஒரு முறை வெளிப்படுகிறது?

A) 15

B) 25

C) 28

D) 30

விளக்கம்: கருவடையாத கருமுட்டையானது முதிர்ச்சியடைந்து அண்டகத்திலிருந்து பிரதிமாதம் 28 நாள் வெளிப்படுகிறது இந்நிகழ்விற்கு மாதவிடாய் சுழற்சி அல்லது கருமுட்டை வெளியேற்றம் எனவும் அழைக்கப்படுகிறது.

120) செரிமானமடைந்த உணவுப்பொருட்கள் இரத்ததின் மூலம் செரிமான மண்டலத்தில் எந்த பகுதியில் உறிஞ்சப்படுகிறது?

A) இரைப்பை

B) சிறுகுடல்

C) பெருங்குடல்

D) குடலுறிஞ்சிகள்

விளக்கம்: சிறுகுடலானது செரிமானமடைந்த உணவுப்பொருட்களை இரத்தம் மற்றும் நிணநீர் மூலமாக கடத்தப்படுகிறது.

121) கூற்று: இரு பாலினங்களிலும் பாலினச்சுரப்பிகள் இரட்டை வேலையை செய்கிறது.

காரணம்: பாலினச்சுரப்பிகள் முதன்மை பாலியல் உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.

A) கூற்று காரணம் இரண்டும் சரி

B) கூற்று காரணம் இரண்டும் தவறு

C) கூற்று சரி

D) காரணம் சரி

விளக்கம்: இரு பாலினங்களிலும் பாலினச்சுரப்பிகள் இரட்டை வேலையை செய்கிறது. பாலினச்சுரப்பிகள் முதன்மை பாலியல் உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.

122) 1. இரத்த ஓட்ட மண்டலம் – சுவாசம்.

2. உணர்ச்சி மண்டலம் – அனைத்து உறுப்புமண்டலங்களின்

செயல்களையும் ஒருங்கிணைத்தல்.

3. சுவாச மண்டலம் – சுவாச வாயுக்களை கடத்துதல்.

4. நாளமில்லா மண்டலம் – பார்த்தல் நுகர்தல் போன்ற நிகழ்வுகளை

செயல்படுதல்.

A) 1 3 4 2

B) 3 4 1 2

C) 3 4 2 1

D) 4 2 1 3

விளக்கம்: இரத்த ஓட்ட மண்டலம் – சுவாச வாயுக்களை கடத்துதல்.

உணர்ச்சி மண்டலம் – பார்த்தல் நுகர்தல் போன்ற நிகழ்வுகளை செயல்படுதல்.

சுவாச மண்டலம் – சுவாசம். நாளமில்லா மண்டலம் – அனைத்து உறுப்புமண்டலங்களின் செயல்களையும் ஒருங்கிணைத்தல்.

123) மனித பால் பற்களின் எண்ணிக்கை?

A) 20

B) 28

C) 30

D) 32

விளக்கம்: மனிதனில் முதலில் பால் பற்கள் தோன்றுகிறது இவை 20 பற்களை கொண்டுள்ளது.

124) உமிழ்நீருடன் உணவை கலப்பதற்கு பயன்படும் உணர்ச்சி உறுப்பு?

A) அண்ணம்

B) பற்கள்

C) நாக்கு

D) தொண்டை

விளக்கம்: உமிழ்நீருடன் உணவை கலப்பதற்கு பயன்படும் உணர்ச்சி உறுப்பு நாக்கு ஆகும். இது சுவையை உணர்வதற்கும் பயன்படும் சுவை மொட்டுக்கள் காணப்படுகிறது.

125) சிறுநீரக நுண்குழல் எத்தனை பகுதிகளை கொண்டுள்ளது?

A) 2

B) 3

C) 5

D) 7

விளக்கம்: பௌமானின் கிண்ணத்தை தொடர்ந்து சிறுநீரக நுண்குழல் 3 பகுதிகளை கொண்டுள்ளது. அவை

  1. அண்மை சுருள்நுண்குழல்
  2. U வடிவம் கொண்ட ஹென்லே வளைவு
  3. சேய்மை சுருள் நுண்குழல்.

 

9th Science Lesson 21 Questions in Tamil

21] ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

1) கூற்று: ஹீமோகுளோபினில் இரும்பு உள்ளது

காரணம்: இரும்புக் குறைபாடு இரத்தசோகை நோயை ஏற்படுத்துகிறது

A) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

C) கூற்று சரி, காரணம் தவறு.

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

விளக்கம்: ஹீமோகுளோபினில் இரும்பு உள்ளது. இரும்பு குறைபாடு இரத்தசோகை நோயை ஏற்படுத்துகிறது.

2) கீழ்க்கண்டவற்றில் கார்போஹைட்ரேட்டின் பகுதிபொருள் அல்லாதது எது?

A) கார்பன்

B) ஹைட்ரஜன்

C) ஆக்ஸிஜன்

D) ஹைட்ரஜன்

விளக்கம்: கார்போஹைட்ரேட்டுகள் என்பவை கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றைக் கொண்ட கரிம கூட்டுப்பொருட்களாகும். இவை உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடிய பிரதான மூலப்பொருள்களாகும்.

3) உடலுக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்தாகவும், அதற்கான கட்டமைப்பு பொருளாகவும் உள்ளது எது?

A) வைட்டமின்கள்

B) கார்போஹைட்ரேட்டுகள்

C) புரதங்கள்

D) தாது உப்புகள்

விளக்கம்: உடலுக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்தாகவும், அதற்கான கட்டமைப்பு பொருளாகவும் உள்ளது புரதங்கள் ஆகும். இவை செல்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கும், அவற்றைப் பாதுகாப்பதற்கும் அவசியமானவையாகும்.

4) ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள சர்க்கரை மூலக்கூறுகளின் அடிப்படையில் கார்போஹைட்ரேட்கள் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன?

A) 5

B) 4

C) 3

D) 2

விளக்கம்: கார்போஹைட்ரேட்டுகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

1. ஒற்றைச் சர்க்கரை – குளுக்கோஸ்

2. இரட்டைச் சர்க்கரை – சுக்ரோஸ்

3. கூட்டுச்சர்க்கரை – செல்லுலோஸ்

5) வைட்டமின் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?

A) வில்லியம் ஹார்வி

B) டாக்டர் ஃபன்க்

C) இராபர்ட் வைட்டமின்

D) மேற்கண்ட யாருமில்லை

விளக்கம்: டாக்டர் ஃபன்க் என்பவரால் வைட்டமின் என்ற வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது. வைட்டமின் A-விற்கு ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தான A கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின் இதுவாகும்.

6) செல்லின் அமைப்பைப் பராமரிப்பதோடு வளர்ச்சிதை மாற்றப்பணிகளிலும் ஈடுபடுவது எது?

A) வைட்டமின்கள்

B) அமினோ அமிலங்கள்

C) புரதங்கள்

D) கொழுப்புகள்

விளக்கம்: கொழுப்புகள்,

1. உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கின்றன.

2. செல்லின் அமைப்பை பராமரிக்கின்றன.

3. வளர்ச்சிதை மாற்றப்பணிகளில் ஈடுபடுகின்றன.

7) பொருத்துக.

உணவின் முக்கிய தொகுதிகள் தினமும் தேவைகள்(கிராமில்)

அ. கார்போஹைட்ரேட்கள் – 1. 35

ஆ. புரதங்கள் – 2. 150-200

இ. கொழுப்புகள் – 3. 40

A) 3, 2, 1

B) 2, 3, 1

C) 1, 2, 3

D) 3, 1, 2

விளக்கம்: கார்போஹைட்ரேட்டுகள் தேன், கரும்புகள், பழங்கள், முழுதானியங்கள், மாவுச்சத்து காய்கறிகளில் காணப்படுகிறது. இது 150-200 கிராம் அளவிற்கு தேவைப்படுகிறது.

புரதங்கள் – பருப்பு வகைகள், சோயா பீன்ஸ், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றில் காணப்படுகிறது இது 40 கிராம் அளவிற்கு தேவைப்படுகிறது.

கொழுப்புகள் – நிறைவுற்ற எண்ணெய், முட்டை மஞ்சள் கரு, இறைச்சி போன்றவற்றில் காணப்படுகிறது . இது 35 கிராம் அளவிற்கு தேவைப்படுகிறது.

8) குறிப்பிட்ட உடற்செயலியல் மற்றும் உயிர் வேதியியல் செயல்பாடுகளுக்கு தேவைப்படுபவை?

A) வைட்டமின்கள்

B) அமினோ அமிலங்கள்

C) புரதங்கள்

D) கொழுப்புகள்

விளக்கம்: வைட்டமின்கள் சிறிய அளவில் தேவைப்படும் மிக முக்கியமான ஊட்டச்சத்தாகும். குறிப்பிட்ட உடற்செயலியல் மற்றும் உயிர் வேதியியல் செயல்பாடுகளுக்கு தேவைப்படுகின்றன.

9) கீழ்க்கண்டற்றில் கார்போஹைட்ரேட்டுகளின் எடுத்துக்காட்டுகளில் தவறானது எது?

A) குளுக்கோஸ்

B) லாக்டோஸ்

C) வேலைன்

D) செல்லுலோஸ்

விளக்கம்: கார்போஹைட்ரேட்டுகள் என்பவை உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடிய பிரதான மூலப்பொருள்களாகும். இவற்றின் சில எடுத்துகாட்டுகள்,

1. குளுக்கோஸ்

2. சுக்ரோஸ்

3.லாக்டோஸ்

4. ஸ்டார்ச்

5. செல்லுலோஸ்

இதில் வேலைன் என்பது அமினோ அமிலம் ஆகும்.

10) மனிதனின் தோலால் எந்த வைட்டமினை உருவாக்க முடியும்?

A) வைட்டமின் D

B) வைட்டமின் A

C) வைட்டமின் B

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மனிதனின் தோலால் வைட்டமின் D-ஐ உருவாக்க முடியும். மனிதனின் தோலின் மீது சூரியக் கதிர்கள் விழும்போது (குறிப்பாக அதிகாலையில்) வைட்டமின் D உருவாக்கப்படுகின்றது.

11) நமது உடலில் எத்தனை வகையான புரதங்கள் உள்ளன?

A) 5

B) 4

C) 7

D) 9

விளக்கம்: நமது உடலில் 9 வகையான புரதங்கள் உள்ளன. அவை,

1. ஃபினைல் அலனைன்

2. வேலைன்

3. திரயோனைன்

4. டிரிப்டோஃபேன்

5. மெத்தியோனைன்

6. லுசைன்

7. ஐசோ லுசைன்

8. லைசின்

9. ஹிஸ்டிடைன்

12) உடலுக்கு பெருமமாக தேவைப்படும் தனிமங்களில் பொருந்தாதது எது?

A) கால்சியம்

B) பாஸ்பரஸ்

C) பொட்டாசியம்

D) இரும்பு

விளக்கம்: உயிரினங்கள் தாங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பல்வேறு உயிரியல் செயல்பாடுகளைப் புரிவதற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்தாக தாது உப்புகள் எனப்படும் கரிமப் பொருள்கள் உள்ளன. அதிகமாக தேவைப்படுபவை பெரும் தனிமங்கள் எனப்படுகின்றன. அவை,

1. கால்சியம்

2. பாஸ்பரஸ்

3. பொட்டாசியம்

4. சோடியம்

5. மெக்னீசியம்.

குறைவாக தேவைப்படுபவை,

1. கந்தகம்

2. இரும்பு

3. குளோரின்

4. கோபால்ட்

5. தாமிரம்

6. துத்தநாகம்

7. மாங்கனீஸ்

8. மாலிப்டினம்

9. அயோடின்

10. செலினியம்.

13) கீழ்க்கண்டவற்றில் எது வைட்டமின் A-ஆல் ஏற்படும் நோய்?

A) சீரோப்தால்மியா

B) நிக்டலோபியா

C) எபிபோபிளாவினோஸிஸ்

D) A மற்றும் B

விளக்கம்: வைட்டமின் A ஆல் ஏற்படும் நோய்கள்:

1. சீரோப்தால்மியா (தோல் நோய்கள்)

2. நிக்டலோபியா (மாலைக்கண் நோய்)

வைட்டமின் B12ஆல் ஏற்படும் நோய் – எபிபோபிளாவினோஸிஸ்.

14) எந்த வைட்டமின் குறைவாக இருந்தால் இரத்தம் உறையாது?

A) வைட்டமின் D

B) வைட்டமின் B12

C) வைட்டமின் K

D) வைட்டமின் E

விளக்கம்: வைட்டமின் K குறைபாட்டால் இரத்தம் உறைதல் நடைபெறாது. இதனால் அதிகப்படியான இரத்த இழப்பு ஏற்படும். இவற்றை தவிர்க்க இலை வகை காய்கறிகள், சோயாபீன்ஸ் போன்றவை உண்ண வேண்டும்.

15) ஸ்கர்வி என்ற நோய் எந்த வைட்டமின் குறைபாட்டால் வருகிறது?

A) வைட்டமின் A

B) வைட்டமின் K

C) வைட்டமின் C

D) வைட்டமின் D

விளக்கம்: வைட்டமின் C – ஸ்கர்வி

வைட்டமின் A – சீரோப்தால்மியா (தோல் நோய்கள்), நிக்டலோபியா (மாலைக்கண் நோய்)

வைட்டமின் D – ரிக்கெட்ஸ்

வைட்டமின் K – இரத்தம் உறையாமை.

16) இரத்தசோகை எதன் குறைபாட்டால் ஏற்படும் நோய்?

A) இரும்பு

B) அயோடின்

C) பொட்டாசியம்

D) கால்சியம்

விளக்கம்: இரத்த சோகை இரும்பு சத்து குறைபாட்டால் ஏற்படும் நோயாகும். இரும்பு ஹீமோகுளோபினின் முக்கியக் கூறாக செயல்படுகிறது.

17) உலக உணவு தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?

A) செப்டம்பர் 16

B) ஜுன் 5

C) மார்ச் 22

D) அக்டோபர் 16

விளக்கம்: அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்று, உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவு கெட்டுப் போவதைத் தடுத்தல் வலியுறுத்தப்படுகிறது.

செப்டம்பர் 16 – உலக ஓசோன் தினம்

ஜுன் 5 – உலக சுற்றுச்சூழல் தினம்

மார்ச் 22 – உலக தண்ணீர் தினம்.

18) கீழ்க்கண்டவற்றில் எது நீரில் கரையாத வைட்டமின்?

A) வைட்டமின் B1

B) வைட்டமின் B2

C) வைட்டமின் C

D) வைட்டமின் A

விளக்கம்: நீரில் கரையும் வைட்டமின்கள்:

வைட்டமின் B1

வைட்டமின் B2

வைட்டமின் B3

வைட்டமின் B6

வைட்டமின் B12

வைட்டமின் C

வைட்டமின் A என்பது கொழுப்பில் கரையும் வைட்டமின் ஆகும்.

19) எந்த உயிரியில் மலட்டுத்தன்மை ஏற்பட வைட்டமின் E குறைபாடு காரணமாக உள்ளது?

A) சிறுத்தை

B) எலி

C) நாய்

D) பல்லி

விளக்கம்: வைட்டமின் E குறைபாடு காரணமான எலிகளில் மலட்டுத்தன்மை மற்றும் இனப்பெருக்க கோளாறுகள் ஏற்படுகிறது. இதனை தவிரக்க முழு கோதுமை, இறைச்சி, தாவர எண்ணெய் மற்றும் பால் பருக வேண்டும்.

20) வைட்டமின் K எதிலிருந்து பெறப்படுகிறது?

A) குயினோன்

B) தயமின்

C) ரிபோஃபிளேவின்

D) சூரிய ஒளி

விளக்கம்: வைட்டமின் k ஆனது வேதிப்பொருள் குயினோனிலிருந்து பெறப்படுகிறது. இந்த வைட்டமின் குறைபாடு கரணமாக இரத்தம் உறையாவை என்ற நோய் ஏற்படுகிறது.

21) காய்டர் என்ற முன்கழுத்துக் கழலை எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது?

A) இரும்பு

B) அயோடின்

C) பொட்டாசியம்

D) கால்சியம்

விளக்கம்: காய்டர் என்றால் முன்கழுத்துக் கழலை என்று பொருள். இது அயோடின் என்ற நுண்ணிய தனிமச்சத்து பற்றாக்குறையால் ஏற்படுகிறது.

22) ரிக்கட்ஸ் என்ற நோய் எந்த வைட்டமின் குறைப்பாட்டால் ஏற்படுகிறது?

A) வைட்டமின் A

B) வைட்டமின் B

C) வைட்டமின் D

D) வைட்டமின் E

விளக்கம்: ரிக்கட்ஸ் என்ற நோய் வைட்டமின் D குறைபாட்டால் ஏற்படுகிறது. இது குழந்தைகளிடம் காணப்படுகிறது.

23) கூற்றுகளை ஆராய்க.

1. தாது உப்புகளானது பல அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது.

2. அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் நமது உடலிலேயே உருவாக்கப்படுகின்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: புரதங்களானவை பல அமினோ அமிலங்களைக் கொண்டு உருவானவை. அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் நமது உடலில் உருவாக்கப்படுவதில்லை. எனவே, இவற்றை உணவில் இருந்து தான் பெற்றுக் கொள்ள வேண்டும்.

24) வைட்டமின் D__________உறிஞ்சுதலுக்கு உதவுவதன் மூலம் எலும்பின் பலத்தை அதிகப்படுத்துகிறது.

A) மெக்னீசியம்

B) சல்பர்

C) இரும்பு

D) கால்சியம்

விளக்கம்: வைட்டமின் D கால்சியம் உறிஞ்சுதலுக்கு உதவுவதன் மூலம் எலும்பின் பலத்தை அதிகப்படுத்துகிறது. வைட்டமின் D சூரிய ஒளியின் மூலம் தோலால் தயாரிக்கப்படுகிறது.

25) கூற்று: சில கொழுப்பு அமிலங்கள் அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

காரணம்: இந்த கொழுப்பு அமிலங்களை உடலால் உருவாக்க முடியும்.

A) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்

B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

C) கூற்று சரி, காரணம் தவறு

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விளக்கம்: சில கொழுப்பு அமிலங்கள் ‘அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள்’ என அழைக்கப்படுகின்றன. ஏனென்றால், இந்த கொழுப்பு அமிலங்களை உடலால் உருவாக்க முடிவதில்லை. எனவே, இவை உணவின் மூலம் பெறப்படுகின்றன.

26) செல்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கும் அவசியமானவை?

A) வைட்டமின்கள்

B) கார்போஹைட்ரேட்டுகள்

C) புரதங்கள்

D) தாது உப்புகள்

விளக்கம்: புரதங்கள் செல்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கும், அவற்றைப் பாதுகாப்பதற்கும் அவசியமானவையாகும். உடலுக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்தாகவும், அதற்கான கட்டமைப்பு பொருளாகவும் உள்ளது புரதங்கள் ஆகும்.

27) தைராய்டு ஹார்மோன் சரியாக சுரக்காததால் வரும் நோய் எது?

A) இரத்த சோகை

B) இரத்தம் உறையாமை

C) காய்டர்

D) டெர்மாடிட்ஸ்

விளக்கம்: தைராய்டு என்ற ஹார்மோன் சரியாக சுரக்காததால் காய்டர் என்ற முன்கழுத்துக் கழலை நோய் ஏற்படுகிறது. இதனுடன் தொடர்புடைய நுண்ணிய தனிமச்சத்து அயோடின் ஆகும்.

28) நரம்பு மற்றும் தசைகளின் செயல்திறனை ஒழுங்குப்படுத்தும் தனிமம் எது?

A) கால்சியம்

B) சோடியம்

C) பொட்டாசியம்

D) மெக்னீசியம்

விளக்கம்: நரம்பு மற்றும் தசைகளின் செயல்திறனை ஒழுங்குப்படுத்துவது பொட்டாசியம் என்ற தனிமம் ஆகும். இது வாழைப்பழம், சக்கரைவள்ளிக் கிழங்கு, கொட்டைகள், முழு தானியங்கள், சிட்ரஸ் வகைப்பழங்களில் காணப்படுகிறது.

29) கீழ்க்கண்டவற்றில் எது கொழுப்பில் கரையாத வைட்டமின்?

A) வைட்டமின் B1

B) வைட்டமின் D

C) வைட்டமின் K

D) வைட்டமின் A

விளக்கம்: கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்:

வைட்டமின் A

வைட்டமின் D

வைட்டமின் E

வைட்டமின் K

வைட்டமின் B1 என்பது நீரில் கரையும் வைட்டமின் ஆகும்.

30) பெரி பெரி என்ற நோய் எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?

A) வைட்டமின் B1

B) வைட்டமின் B2

C) வைட்டமின் B6

D) வைட்டமின் B12

விளக்கம்: பெரி பெரி என்ற நோய் வைட்டமின் B1-ஆல் ஏற்படுகிறது. இதனால் தசைகள் வலிமையற்றுப் போதல், பக்கவாதம், நரம்புகளில் சிதைவுறும் மாற்றங்கள் ஏற்படுகிறது.

31) சூரிய ஒளி வைட்டமின் என்று அழைக்கப்படுவது எது?

A) வைட்டமின் E

B) வைட்டமின் A

C) வைட்டமின் K

D) வைட்டமின் D

விளக்கம்: மனிதனின் தோலால் வைட்டமின் D-ஐ உருவாக்க முடியும். மனிதனின் தோலின் மீது சூரியக் கதிர்கள் விழும்போது (குறிப்பாக அதிகாலையில்) வைட்டமின் D உருவாக்கப்படுகின்றது. எனவே, வைட்டமின் D சூரிய ஒளி வைட்டமின் என்று அழைக்கப்படுகிறது.

32) முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின் எது?

A) வைட்டமின் A

B) வைட்டமின் B

C) வைட்டமின் D

D) வைட்டமின் K

விளக்கம்: வைட்டமின் A-விற்கு ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தான A கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்னறால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின் இதுவாகும். டாக்டர் ஃபன்க் என்பவரால் வைட்டமின் என்ற வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது.

33) பொருத்துக

அ. ஒற்றைச் சர்க்கரை – 1. செல்லுலோஸ்

ஆ. இரட்டைச் சர்க்கரை – 2. குளுக்கோஸ்

இ. கூட்டுச்சர்க்கரை – 3. சுக்ரோஸ்

A) 3, 1, 2

B) 2, 3, 1

C) 1, 2, 3

D) 2, 1, 3

விளக்கம்:ஒற்றைச் சர்க்கரை – குளுக்கோஸ்

இரட்டைச் சர்க்கரை – சுக்ரோஸ்

கூட்டுச்சர்க்கரை – செல்லுலோஸ்

34) மனித உணவூட்டத்திற்கு அத்தியாவசியமான கொழுப்பு அமிலம் எது?

A) திரியோனைன்

B) லுசைன்

C) ஃபினைன் அலனைன்

D) ஒமேகா

விளக்கம்: மனித உணவூட்டத்திற்கு அத்தியவசியமான கொழுப்பு அமிலம் ஒமேகா கொழுப்பு அமிலமாகும். திரியோனைன், லுசைன், ஃபினைன் அலனைன் ஆகியவை அமினோ அமிலமாகும்.

35) பொருத்துக.

அ. வைட்டமின் A – 1. குயினோன்

ஆ. வைட்டமின் D – 2. டோகோஃபெரால்

இ. வைட்டமின் E – 3. கால்சிஃபெரால்

ஈ. வைட்டமின் K – 4. ரெட்டினால்

A) 4, 2, 3, 1

B) 1, 2, 3, 4

C) 4, 3, 2, 1

D) 4, 1, 2, 3

விளக்கம்: வைட்டமின் A (ரெட்டினால்) – சீரோப்தால்மியா(தோல் நோய்கள்), நிக்டலோபியா(மாலைக்கண் நோய்).

வைட்டமின் D – கால்சிஃபெரால் – ரிக்கட்ஸ் (குழந்தைகளிடம் காணப்படுகிறது).

வைட்டமின் E – டோகோஃபெரால் – எலிகளில் மலட்டுத்தன்மை, இனப்பெருக்க கோளாறுகள்.

வைட்டமின் K – குயினோன் – இரத்தம் உறையாமை.

36) எரிபோபிளாவினோஸிஸ் என்ற குறைபாட்டு நோய் எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?

A) வைட்டமின் B1

B) வைட்டமின் B2

C) வைட்டமின் B3

D) வைட்டமின் B6

விளக்கம்: எரிபோபிளாவினோஸிஸ் என்ற குறைபாட்டு நோய் வைட்டமின் B2ஆல் ஏற்படுகிறது. இதனால் கண்களில் எரிச்சல், வறட்சியான தோல், உதடுகளில் வீக்கம், வாயின் ஓரங்களில் பிளவு போன்றவை ஏற்படுகிறது.

37) பெரிடாக்ஸின் என்ற சொல்லுடன் தொடர்புடைய வைட்டமின் எது?

A) வைட்டமின் B1

B) வைட்டமின் B2

C) வைட்டமின் B3

D) வைட்டமின் B6

விளக்கம்: பெரிடாக்ஸின் என்ற சொல்லுடன் தொடர்புடைய வைட்டமின் B6. இதனால் டெர்மாடிட்ஸ் என்ற குறைபாட்டு நோய் ஏற்படுகிறது.

38) சையனோகோபாலமைன் என்ற சொல்லுடன் தொடர்புடைய வைட்டமின் எது?

A) வைட்டமின் B1

B) வைட்டமின் B2

C) வைட்டமின் B6

D) வைட்டமின் B12

விளக்கம்: வைட்டமின் B12 – சையனோகோபாலமைன் என்ற வைட்டமினுடன் தொடர்புடையது. இதனால் ஏற்படும் குறைபாடு உயிரைப் போக்கும் இரத்தசோகை ஆகும்.

39) கார்போஹைட்ரேட்டுகள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகியவற்றைக் கொண்ட கரிம கூட்டுப்பொருள்களாகும்.

2. குளுக்கோஸ், சுக்ரோஸ், லாக்டோஸ், ஸ்டார்ச் மற்றும் செல்லுலோஸ் ஆகியவை கார்போஹைட்ரேட்டுகளுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும்.

3. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள சர்க்கரை மூலக்கூறுகளின் எண்ணிக்கை அடிப்படையில் இவை ஒற்றைச்சர்க்கரை (குளுக்கோஸ்), இரட்டைச் சர்க்கரை (சுக்ரோஸ்), கூட்டுச்சர்க்கரை (செல்லுலோஸ்) என வகைப்படுத்தப்படுகின்றன.

4. கால்சியம் உறிஞ்சுதலுக்கு உதவுவதன் மூலம் எலும்பின் பலத்தை அதிகப்படுத்துவது வைட்டமின் D

A) 1, 2, 3 சரி

B) 2, 3 சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகியவற்றைக் கொண்ட கரிம கூட்டுப்பொருள்களாகும்.

2. குளுக்கோஸ், சுக்ரோஸ், லாக்டோஸ், ஸ்டார்ச் மற்றும் செல்லுலோஸ் ஆகியவை கார்போஹைட்ரேட்டுகளுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும்.

3. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள சர்க்கரை மூலக்கூறுகளின் எண்ணிக்கை அடிப்படையில் இவை ஒற்றைச்சர்க்கரை (குளுக்கோஸ்), இரட்டைச் சர்க்கரை (சுக்ரோஸ்), கூட்டுச்சர்க்கரை (செல்லுலோஸ்) என வகைப்படுத்தப்படுகின்றன.

4. கால்சியம் உறிஞ்சுதலுக்கு உதவுவதன் மூலம் எலும்பின் பலத்தை அதிகப்படுத்துவது வைட்டமின் D.

40) கூற்று: வைட்டமின் D சூரிய ஒளி வைட்டமின் என்று அழைக்கப்படுகிறது

காரணம்: சூரியக்கதிர்கள் தோலின் மேல் விழும்போது டிஹைடிரோ கொலஸ்ட்ரால் எனும் பொருள் வைட்டமின் D ஆக மாறுகிறது.

A) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்

B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

C) கூற்று சரி, காரணம் தவறு

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விளக்கம்: சூரியக்கதிர்கள் தோலின் மேல் விழும்போது டிஹைடிரோ கொலஸ்ட்ரால் எனும் பொருள் வைட்டமின் D ஆக மாறுகிறது. எனவே வைட்டமின் D சூரிய ஒளி வைட்டமின் என்று அழைக்கப்படுகிறது.

41) உயிரினங்கள் வாழ்வதற்கு குறைவாக தேவைப்படும் தனிமங்களில் பொருந்தாது எது?

A) மாலிப்டினம்

B) துத்தநாகம்

C) குளோரின்

D) பாஸ்பரஸ்

விளக்கம்: உயிரினங்கள் தாங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பல்வேறு உயிரியல் செயல்பாடுகளைப் புரிவதற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சதாக தாது உப்புகள் எனப்படும் கரிமப் பொருள்கள் உள்ளன. இவை அதிகமாக தேவைப்படுபவை பெரும தனிமங்கள் எனப்படுகின்றன. அவை,

1. கால்சியம்

2. பாஸ்பரஸ்

3. பொட்டாசியம்

4. சோடியம்

5. மெக்னீசியம்.

குறைவாக தேவைப்படுபவை,

1. கந்தகம்

2. இரும்பு

3. குளோரின்

4. கோபால்ட்

5. தாமிரம்

6. துத்தநாகம்

7. மாங்கனீஸ்

8. மாலிப்டினம்

9. அயோடின்

10. செலினியம்.

42) கொழுப்புகள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இவை ஆற்றலை அளிக்கின்றன.

2. செல்லின் அமைப்பைப் பராமரிப்பதோடு வளர்சிதை மாற்றப் பணிகளிலும் ஈடுபடுகின்றன.

3. அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களை உடல் உருவாக்குகிறது.

4. மனித உணவூட்டத்திற்கு அத்தியாவசியமான கொழுப்பு அமிலம் ஒமேகா கொழுப்பு அமிலமாகும்.

A) 1, 2 சரி

B) 1, 2, 4 சரி

C) 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இவை ஆற்றலை அளிக்கின்றன.

2. செல்லின் அமைப்பைப் பராமரிப்பதோடு வளர்சிதை மாற்றப் பணிகளிலும் ஈடுபடுகின்றன.

3. அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களை உடலால் உருவாக்க முடிவதில்லை.

4. மனித உணவூட்டத்திற்கு அத்தியாவசியமான கொழுப்பு அமிலம் ஒமேகா கொழுப்பு அமிலமாகும்

43) வாழைப்பழத்தில் உள்ள தனிமச் சத்து எது?

A) சோடியம்

B) பொட்டாசியம்

C) கால்சியம்

D) இரும்பு

விளக்கம்: வாழைப் பழத்தில் காணப்படும் தனிமச் சத்து பொட்டாசியம். இது சக்கரைவள்ளிக் கிழங்கு, கொட்டைகள், முழு தானியங்கள், சிட்ரஸ் வகைப்பழங்களிலும் காணப்படுகிறது. நரம்பு மற்றும் தசைகளின் செயல்திறனை ஒழுங்குப்படுத்துவது பொட்டாசியம் என்ற தனிமம் ஆகும்.

44) கீழ்க்கண்டவற்றில் எது பெரும் ஊட்ட தனிமச்சத்து அல்ல?

A) சோடியம்

B) பொட்டாசியம்

C) கால்சியம்

D) இரும்பு

விளக்கம்: பெரும தனிமச் சத்துக்கள்:

1. கால்சியம்

2. சோடியம்

3. பொட்டாசியம்

நுண்ணிய தனிமச்சத்துக்கள்:

1. இரும்பு

2. அயோடின்.

45) ஹீமோகுளோபினின் முக்கியக் கூறாக செயல்படும் தனிமச்சத்து எது?

A) இரும்பு

B) அயோடின்

C) பொட்டாசியம்

D) மெக்னீசியம்

விளக்கம்: ஹீமோகுளோபினின் முக்கியக் கூறாக செயல்படுவது இரும்பு சத்தாகும். இதன் குறைபாட்டால் வரும் நோய் இரத்த சோகை ஆகும்.

46) பெலாக்ரா என்ற குறைபாட்டு நோய் எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?

A) வைட்டமின் B1

B) வைட்டமின் B3

C) வைட்டமின் B6

D) வைட்டமின் B12

விளக்கம்: பெலாக்ரா என்ற குறைபா ட்டு நோய் வைட்டமின் B3-ஆல் ஏற்படுகிறது. இதனால் கண்களில் எரிச்சல், வறட்சியான தோல், உதடுகளில் வீக்கம், வாயின் ஓரங்களில் பிளவு போன்றவை ஏற்படுகிறது.

47) குவாசியோக்கர் என்பது எதன் குறைபாட்டு நோய்?

A) வைட்டமின்கள்

B) அமினோ அமிலங்கள்

C) புரதங்கள்

D) கொழுப்புகள்

விளக்கம்: அதிகப்படியான புரதக் குறைபாட்டால் குவாசியோக்கர் என்ற நோய் ஏற்படுகிறது. இந்நோய் 1 முதல் 5 வரை உள்ள குழந்தைகளைத் தாக்குகிறது.

48) கூற்றுகளை ஆராய்க.

1. உடலுக்குத் தேவையான முக்கியமான ஊட்டசத்தாகவும், அதற்கான கட்டமைப்புப் பொருளாகவும் தாது உப்புகள் உள்ளன.

2. செல்கள் மற்றும் திசுக்களின் வளரச்சிகும், அவற்றைப் பாதுகாப்பதற்கும் புரதங்கள் அவசியமானவை ஆகும்.

3. வைட்டமின்கள் பல அமினோ அமிலங்களால் ஆனவை.

4. நமது உடலில் பத்து வகையான அமினோ அமிலங்கள் உள்ளன.

A) 1, 2 சரி

B) 1, 2, 3 சரி

C) 2 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. உடலுக்குத் தேவையான முக்கியமான ஊட்டசத்தாகவும், அதற்கான கட்டமைப்புப் பொருளாகவும் புரதங்கள் உள்ளன.

2. செல்கள் மற்றும் திசுக்களின் வளரச்சிகும், அவற்றைப் பாதுகாப்பதற்கும் புரதங்கள் அவசியமானவை ஆகும்.

3. புரதங்கள் பல அமினோ அமிலங்களால் ஆனவை.

4. நமது உடலில் ஒன்பது வகையான அமினோ அமிலங்கள் உள்ளன.

49) கீழ்க்கண்டவற்றில் எது வைட்டமின் B12 ஆல் ஏற்படும் நோய்?

A) சீரோப்தால்மியா

B) நிக்டலோபியா

C) எபிபோபிளாவினோஸிஸ்

D) A மற்றும் B

விளக்கம்: வைட்டமின் B12ஆல் ஏற்படும் நோய்:

எபிபோபிளாவினோஸிஸ்

வைட்டமின் A ஆல் ஏற்படும் நோய்கள்:

1. சீரோப்தால்மியா (தோல் நோய்கள்)

2. நிக்டலோபியா (மாலைக்கண் நோய்)

50) கீழ்க்கண்டவற்றில் எது இரும்பு சத்தின் மூலம்?

A) கடலிலிருந்து கிடைக்கும் உணவு

B) சிட்ரஸ் வகைப் பழங்கள்

C) கல்லீரல்

D) சக்கரைவள்ளிக் கிழங்கு

விளக்கம்: இரும்புச் சத்தின் மூலம்:

1. பசலைக்கீரை

2. பேரீச்சம்பழம்

3. கீரைக்கள்

4. பிராக்கோலி

5. முழு தானியங்கள்

6. மீன்

7. கல்லீரல்.

51) டெர்மாடிட்ஸ் என்ற குறைபாட்டு நோய் எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?

A) வைட்டமின் B1

B) வைட்டமின் B2

C) வைட்டமின் B6

D) வைட்டமின் B12

விளக்கம்: டெர்மாடிட்ஸ் என்ற குறைபாட்டு நோய் வைட்டமின் B6 குறைபாட்டால் ஏற்படுகிறது. இதனால் செதில்கள் போன்ற தோல் மற்றும் நரம்பு குறைபாடுகள் ஏற்படும்.

52) கூற்றுகளை ஆராய்க.

1. மராஸ்மஸ் என்பது ஒரு வைட்டமின் குறைபாட்டு நோய் ஆகும்.

2. நரம்பு மற்றும் தசைகளின் செயல் திறனை ஒழுங்குப்படுத்துவது பொட்டாசியம்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்:1. மராஸ்மஸ் என்பது ஒரு புரத குறைபாட்டு நோய் ஆகும்.

2. நரம்பு மற்றும் தசைகளின் செயல் திறனை ஒழுங்குப்படுத்துவது பொட்டாசியம்

53) இந்திய உணவுக் கழகம் எப்போது ஏற்படுத்தப்பட்டது?

A) 1965

B) 1976

C) 1987

D) 1991

விளக்கம்: இந்திய உணவுக் கழம் 1965-ல் உருவாக்கப்பட்டது. இவை விவசாயப் பொருள்களுக்கு சரியான விலை கொடுத்து விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பது போன்ற காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்டது.

54) கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. மனிதனின் தோலால் வைட்டமின் D-ஐ உருவாக்க முடியும்.

2. மனிதனின் தோலின் மீது சூரியக்கதிர்கள் விழும்போது (குறிப்பாக அதிகாலையில்) வைட்டமின் D உருவாக்கப்படுகின்றது.

3. சூரியக்கதிர்கள் தோலின் மேல் விழும்போது டிஹைடிரோ கொலஸ்ட்ரால் எனும் பொருள் வைட்டமின் D-ஆக மாறுகிறது. எனவே வைட்டமின் D சூரிய ஒளி வைட்டமின் என்று அழைக்கப்படுகிறது.

4. வைட்டமின் D கால்சியம் உறிஞ்சுதலுக்கு உதவுவதன் மூலம் எலும்பின் பலத்தை அதிகப்படுத்துகிறது.

A) 1, 2, 3 சரி

B) 1, 2, 4 சரி

C) 2, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. மனிதனின் தோலால் வைட்டமின் D-ஐ உருவாக்க முடியும்.

2. மனிதனின் தோலின் மீது சூரியக்கதிர்கள் விழும்போது (குறிப்பாக அதிகாலையில்) வைட்டமின் D உருவாக்கப்படுகின்றது.

3. சூரியக்கதிர்கள் தோலின் மேல் விழும்போது டிஹைடிரோ கொலஸ்ட்ரால் எனும் பொருள் வைட்டமின் D ஆக மாறுகிறது. எனவே வைட்டமின் D சூரிய ஒளி வைட்டமின் என்று அழைக்கப்படுகிறது.

4. வைட்டமின் D கால்சியம் உறிஞ்சுதலுக்கு உதவுவதன் மூலம் எலும்பின் பலத்தை அதிகப்படுத்துகிறது.

55) அஸ்கார்பிக் அமிலம் எந்த வைட்டமினில் உள்ளது?

A) வைட்டமின் B1

B) வைட்டமின் B2

C) வைட்டமின் B6

D) வைட்டமின் C

விளக்கம்: அஸ்கார்பிக் அமிலம் வைட்டமின் C-ல் உள்ளது. இதன் குறைபாட்டால் ஸ்கர்வி என்ற நோய் ஏற்படுகிறது.

56) உணவுப் பாதுகாப்பு கழகம் கீழக்கண்ட எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்படவில்லை?

A) நாடு முழுவதும் உணவு தானியங்களை விநியோகம் செய்தல்

B) தேசிய பாதுகாப்பை உறுதி செய்து போதுமான அளவு உணவு தானியங்களை விநியோகம் செய்வது மற்றும் தேவையான அளவு சேமித்து வைத்து உணவுப் பாதுகாப்பை நிலைநிறுத்துவது

C) உணவு தானியங்களை நுகர்வோர் வாங்கும் வீதத்தில் சந்தை விலையை ஒழுங்குபடுத்துதல்

D) விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்திப் பொருள்களான தானியங்கள், அத்தியாவசிய எண்ணெய்கள், பருப்பு வகைகள், தேன், வெண்ணெய் முதலியவற்றிற்கு சான்றளிக்கிறது

விளக்கம்: உணவுப் பாதுகாப்பு கழகம் கீழக்கண்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது:

1. விவாசாயப் பொருள்களுக்கு சரியான விலை கொடுத்து விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பது

2. நாடு முழுவதும் உணவு தானியங்களை விநியோகம் செய்தல்

3. தேசிய பாதுகாப்பை உறுதி செய்து போதுமான அளவு உணவு தானியங்களை விநியோகம் செய்வது மற்றும் தேவையான அளவு சேமித்து வைத்து உணவுப் பாதுகாப்பை நிலைநிறுத்துவது

4. உணவு தானியங்களை நுகர்வோர் வாங்கும் வீதத்தில் சந்தை விலையை ஒழுங்குபடுத்துதல்

விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்திப் பொருள்களான தானியங்கள், அத்தியாவசிய எண்ணெய்கள், பருப்பு வகைகள், தேன், வெண்ணெய் முதலியவற்றிற்கு சான்றளிப்பது – அக்மார்க்

57) கூற்று: வைட்டமின் A-விற்கு ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தான A கொடுக்கப்பட்டுள்ளது.

காரணம்: ஏனென்னறால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின் இதுவாகும். டாக்டர் ஃபன்க் என்பவரால் வைட்டமின் என்ற வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது.

A) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்

B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

C) கூற்று சரி, காரணம் தவறு

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விளக்கம்: வைட்டமின் A-விற்கு ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தான A கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்னறால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின் இதுவாகும். டாக்டர் ஃபன்க் என்பவரதல் வைட்டமின் என்ற வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது.

58) FPO என்பதின் விரிவாக்கம் என்ன?

A) Food Products Order

B) Fruit Products Order

C) Fresh Products Order

D) Face Products Order

விளக்கம்: பழ உற்பத்திப் பொருட்களான பழரசம், ஜாம்கள், சாஸ், பதப்படுத்தப்பட்ட கனிகள் மற்றும் காய்கறிகள், ஊறுகாய்கள் முதலியவற்றிற்கு சான்றளிப்பது அமைப்பு – FPO.

FPO – Fruit Products Order

FPO – கனி உற்பத்திப் பொருள்கள் ஆணை

59) உயிரைப் போக்கும் இரத்தசோகை என்ற நோய் எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?

A) வைட்டமின் B1

B) வைட்டமின் B2

C) வைட்டமின் B6

D) வைட்டமின் B12

விளக்கம்: உயிரைப் போக்கும் இரத்த சோகை வைட்டமின் B12 குறைபாட்டால் ஏற்படுகிறது. இதனால் அதிக அளவிலான இரத்தசோகை, தண்டுவட நரம்பு குறைபாடுகள் ஏற்படும்.

60) fssai என்பதன் விரிவாக்கம் என்ன?

A) food security and safty authority of India

B) food safty and security authority of India

C) foods security and safty authority of India

D) foods safty and security authority of India

விளக்கம்: உணவுப் பாதுகாப்பைக் கண்காணிப்பது மற்றும் ஒழுங்குப்படுத்துவதின் மூலம் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது fssai ஆணைத்தின் பொறுப்பாகும்.

fssai – food safty and security authority of India

61) உலக சுகாதார தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

A) ஏப்ரல் 7

B) அக்டோபர் 16

C) செப்டம்பர் 16

D) மார்ச் 22

விளக்கம்: ஏப்ரல் 7 – உலக சுகாதார தினம்

அக்டோபர் 16 – உலக உணவு தினம்

செப்டம்பர் 16 – ஓசோன் தினம்

மார்ச் 22 – உலக தண்ணீர் தினம்

62) தவறான ஒன்றை தெரிவு செய்க.

1. திராட்சைகள், உலர்கனிகள், உருளைக் கிழங்கு சீவல்கள் – உலர்த்துதல்

2. காய்கறிகள் மற்றும் பழங்கள் – குளிர் முறை

A) 1 மட்டும்

B) 2 மட்டும்

C) இரண்டும்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: 1. திராட்சைகள், உலர்கனிகள், உருளைக் கிழங்கு சீவல்கள் – உலர்த்துதல்

2. காய்கறிகள் மற்றும் பழங்கள் – குளிர் முறை.

63) கூற்று: உணவில் உப்பினைச் சேர்க்கும் போது அது கெடாமல் பாதுகாக்கப்படுகிறது

காரணம்: உணவிலுள்ள ஈரதப்பதம் சவ்வூடு பரவல் மூலம் நீக்கப்படுகிறது.

A) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்

B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

C) கூற்று சரி, காரணம் தவறு

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விளக்கம்: உணவை கெடாமல் பாதுகாக்க அதனுடன் உப்பினை சேர்ப்பது ஒரு பழங்கால முறையாகும். உப்பினைச் சேர்க்கும் போது உணவிலுள்ள ஈரப்பதம் சவ்வூடு பரவல் மூலம் நீக்கப்படுகிறது. இதனால் பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது மற்றும் நுண்ணுயிரி நொதிகளின் செயல்பாடும் குறைக்கப்படுகிறது.

64) விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்திப் பொருள்களான தானியங்கள், அத்தியாவசிய எண்ணெய்கள், பருப்பு வகைகள், தேன், வெண்ணெய் முதலியவற்றிற்கு சான்றளிப்பது எது?

A) ISI

B) அக்மார்க்

C) FPO

D) fssai

விளக்கம்: விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்திப் பொருள்களான தானியங்கள், அத்தியாவசிய எண்ணெய்கள், பருப்பு வகைகள், தேன், வெண்ணெய் முதலியவற்றிற்கு சான்றளிப்பது – அக்மார்க். இது வேளாண் பொருட்களுக்கு தரக் குறியீடு வழங்குகிறது.

65) ISI ஆனது________ என்றும் அழைக்கப்படுகிறது?

A) FPO

B) BIS

C) fssai

D) UIS

விளக்கம்: ISI – இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம். இது BIS என்றும் அழைக்கப்படுகிறது.

BIS – Bureau of Indian Standard

66) உணவு கலப்படத் தடுப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

A) 1965

B) 1954

C) 1955

D) 1987

விளக்கம்: உணவுக் கலப்படம் தடுப்புச் சட்டம் 1954-ஆம் ஆண்டு நுகர்வோருக்கு தூய்மையான மற்றும் முழுமையான உணவு கிடைக்கப்பபெறுவதை உறுதிப்படுத்தவும் மற்றும் நுகர்வோரை வியாபாரிகள் ஏமாற்றுவதிலிருந்து பாதுகாக்கவும் இயற்றப்பட்டது.

67) கனிகள் ஆக்ஸிஜனேற்றம் அடைவதை குறைக்க அதனுடன் எதை சேர்க்க வேண்டும்?

A) உப்பு

B) சக்கரை

C) எண்ணெய்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: கனிகள் ஆக்ஸிஜனேற்றம் அடைவதைக் குறைப்பதற்கு உதவுவது – சக்கரை.

68) கூற்றுகளை ஆராய்க.

1. வைட்டமின் B1 – தயமின்

2. வைட்டமின் B2 – ரிபோஃபிளேவின்

3. வைட்டமின் B3 – பெரிடாக்ஸின்

4. வைட்டமின் B6 – நியாசின்

A) 1, 4 சரி

B) 2, 3 சரி

C) 1, 2 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:1. வைட்டமின் B1 – தயமின்

2. வைட்டமின் B2 – ரிபோஃபிளேவின்

3. வைட்டமின் B3 – நியாசின்

4. வைட்டமின் B6 – பெரிடாக்ஸின்

69) பாஸ்டர் முறையில் பால் எத்தனை டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு உயர்த்தப்பட்டு பின்னர் உடனே குளிர்விக்கப்படுகிறது?

A) 76

B) 93

C) 63

D) 100

விளக்கம்: பாஸ்டர் பதனம் என்பது திரவ நிலையில் உள்ள உணவுப் பொருள்களை வெப்பத்தின் மூலம் பதப்படுத்தும் செயல் முறை ஆகும். இந்த முறையில் பால் 63டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 30 நிமிடங்கள் கொதிக்க வைக்கப்பட்டு உடனே குளிரூட்டப்படுகிறது. இதனால் பாலில் உள்ள நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகின்றன.

70) AGMARK என்பதன் விரிவாக்கம் என்ன?

A) Agriculture Marking

B) Agricultural Marking

C) Agriculture Marketing

D) Agricultural Marketing

விளக்கம்: AGMARK – Agricultural Marketing.

அக்மார்க் என்றால் வேளாண் பொருட்களுக்கான தரக்குறியீடு ஆகும். விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்திப் பொருள்களான தானியங்கள், அத்தியாவசிய எண்ணெய்கள், பருப்பு வகைகள், தேன், வெண்ணெய் முதலியவற்றிற்கு சான்றளிக்கிறது.

71) வாழைப் பழங்கள் மற்றும் மாம்பழங்களை பழுக்க வைப்பதற்கு பயன்படுத்தப்படுவது எது?

A) ஹைட்ரஜன் பெராக்சைடு

B) கால்சியம் கார்பைடு

C) சோடியம் பை கார்பனேட்

D) செல்லாக்

விளக்கம்: வாழைப் பழங்கள் மற்றும் மாம்பழங்களை பழுக்க வைப்பதற்கு பயன்படுத்தப்படுவது கால்சியம் கார்பைடு ஆகும்.

72) உணவு கலப்படத் தடுப்பு விதிகள் எப்போது இயற்றப்பட்டது?

A) 1965

B) 1954

C) 1955

D) 1987

விளக்கம்: உணவுக் கலப்படம் தடுப்புச் சட்டம் 1954-ஆம் ஆண்டும், உணவு கலப்பட தடுப்பு விதிகள் – 1954 ஆம் ஆண்டும் நுகர்வோருக்கு தூய்மையான மற்றும் முழுமையான உணவு கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்தவும் மற்றும் நுகர்வோரை வியாபாரிகள் ஏமாற்றுவதிலிருந்து பாதுகாக்கவும் இயற்றப்பட்டது.

73) ஏப்ரல் 7 உலக சுகாதார தினம் ஆகும். இந்த தினத்தின் 2015 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் போது என்ன முழக்கம் எழுப்பப்பட்டது?

A) இயற்கையான உணவுமுறை

B) பண்ணை முதல் உண்ணும் வரை பாதுகாத்திடுவீர் உணவை

C) இயற்கை உரத்தை பயன்படுத்துவோம் நீண்ட நாள் வாழ்வோம்

D) மருந்தில்லா வாழ்வு மகத்தான வாழ்வு

விளக்கம்: உணவுப் பாதுகாத்தலை ஊக்குவிப்பதற்காகவும் அதன் முன்னேற்றத்திற்காகவும், 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி ‘உலக சுகாதார தினத்தன்று’, “பண்ணை முதல் உண்ணும் வரை பாதுகாத்திடுவீர் உணவை” என்ற முழக்கம் எழுப்பப்பட்டது.

74) கூற்றுகளை ஆராய்க.

1. தைராய்டு ஹார்மோன்களை உருவாக்குவது – இரும்பு

2. உயிரைப்போக்கும் இரத்தசோகை வைட்டமின் B12 குறைபாட்டால் ஏற்படுகிறது.

3. பாஸ்டர் பதனம் முறையில் பால் 93 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொதிக்க வைக்கப்பட்டு உடனே குளிரூட்டப்படுகிறது.

4. நொதிகளின் செயல்பாடு காரணமாக உணவு கெட்டுப் போதல் உட்காரணிகள் என்று அழைக்கப்படுகிறது.

A) 1, 2, 3 சரி

B) 1, 3 தவறு

C) 3, 4 சரி

D) 2 தவறு

விளக்கம்: 1. தைராய்டு ஹார்மோன்களை உருவாக்குவது – அயோடின்

2. உயிரைப்போக்கும் இரத்தசோகை வைட்டமின் B12 குறைபாட்டால் ஏற்படுகிறது.

3. பாஸ்டர் பதனம் முறையில் பால் 63 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொதிக்க வைக்கப்பட்டு உடனே குளிரூட்டப்படுகிறது.

4. நொதிகளின் செயல்பாடு காரணமாக உணவு கெட்டுப் போதல் உட்காரணிகள் என்று அழைக்கப்படுகிறது.

75) தாது உப்புகள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. உயிரினங்கள் தாங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பல்வேறு உயிரியல் செயல்பாடுகளைப் புரிவதற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சதாக தாது உப்புகள் எனப்படும் கரிமப் பொருள்கள் உள்ளன.

2. சிறும தனிமங்கள் – கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம்.

3. பெரும தனிமங்கள் – கந்தகம், இரும்பு, குளோரின், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாங்கனீஸ், மாலிப்டினம், அயோடின், செலினியம்.

4. தாது உப்புகள் பற்கள், எலும்புகள், இரத்தம், தசை மற்றும் நரம்பு செல்களில் அடங்கியுள்ளன.

A) 1, 4 சரி

B) 2, 3 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: உயிரினங்கள் தாங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பல்வேறு உயிரியல் செயல்பாடுகளைப் புரிவதற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சதாக தாது உப்புகள் எனப்படும் கரிமப் பொருள்கள் உள்ளன. இவை அதிகமாக தேவைப்படுபவை பெரும தனிமங்கள் எனப்படுகின்றன. அவை,

1. கால்சியம்

2. பாஸ்பரஸ்

3. பொட்டாசியம்

4. சோடியம்

5. மெக்னீசியம்.

குறைவாக தேவைப்படுபவை ,

  1. கந்தகம்
  2. இரும்பு
  3. குளோரின்
  4. கோபால்ட்
  5. தாமிரம்
  6. துத்தநாகம்
  7. மாங்கனீஸ்
  8. மாலிப்டினம்
  9. அயோடின்
  10. செலினியம்

தாது உப்புகள் பற்கள், எலும்புகள், இரத்தம், தசை மற்றும் நரம்பு செல்களில் அடங்கியுள்ளன.

76) கலப்படப் பொருட்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: கலப்படப் பொருட்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

1. இயற்கையான கலப்படப் பொருள்கள்

2. தெரியாமல் சேர்க்கப்படும் கலப்படப் பொருள்கள்

3. தெரிந்தே சேர்க்கப்படும் கலப்படப் பொருள்கள்

77) ஆப்பிள் மற்றும் செர்ரி விதைகளில் காணப்படும் அமிலம்?

A) மாலிக் அமிலம்

B) ஆக்ஸாலிக் அமிலம்

C) சிட்ரிக் அமிலம்

D) புரூசிக் அமிலம்

விளக்கம்: ஆப்பிள் மற்றும் செர்ரி விதைகளில் காணப்படும் அமிலம் – புரூசிக் அமிலமாகும். இது இவ்வகையான பழங்களில் காணப்படும் இயற்கையான கலப்படப் பொருளாகும்.

78) BIS என்பதன் விரிவாக்கம் என்ன?

A) British Indian Standard

B) Brilliant Indian Standard

C) Bureau Indian Standard

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: BIS – Bureau Indian Standard. இது ISI என்றும் அழைக்கப்படுகிறது.

ISI – Indian Standards Institution

79) பழ உற்பத்திப் பொருள்களுக்கு சான்றளிக்கும் அமைப்பு எது?

A) FPO

B) BIS

C) fssai

D) UIS

விளக்கம்: பழஉற்பத்திப் பொருட்களான பழரசம், ஜாம்கள், சாஸ், பதப்படுத்தப்பட்ட கனிகள் மற்றும் காய்கறிகள், ஊறுகாய்கள் முதலியவற்றிற்கு சான்றிக்கும் அமைப்பு – FPO.

FPO – Fruit Products Order

FPO – கனி உற்பத்திப் பொருள்கள் ஆணை

80) கூற்று: அக்மார்க் என்பது ஒரு தரக்கட்டுப்பாட்டு நிறுவனம்.

காரணம்: ஐஎஸ்ஐ என்பது தரத்தின் குறியீடு.

A) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்

B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

C) கூற்று சரி, காரணம் தவறு

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விளக்கம்: அக்மார்க் என்பது ஒரு தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் ஆகும். ஐஎஸ்ஐ என்பது தரத்தின் குறியீடு.

81) உணவுப் பாதுகாப்பைக் கண்காணிப்பது மற்றும் ஒழுங்குப்படுத்துவதின் மூலம் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது கீழக்கண்ட எந்த ஆணைத்தின் பொறுப்பாகும்?

A) FPO

B) BIS

C) fssai

D) UIS

விளக்கம்: உணவுப் பாதுகாப்பைக் கண்காணிப்பது மற்றும் ஒழுங்குப்படுத்துவதின் மூலம் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது fssai ஆணைத்தின் பொறுப்பாகும்.

fssai – food safty and security authority of India

82) பாலில் சேர்க்கப்படும் கலப்பட பொருள் எது?

A) ஹைட்ரஜன் பெராக்சைடு

B) கால்சியம் கார்பைடு

C) சோடியம் பை கார்பனேட்

D) செல்லாக்

விளக்கம்: இலாப நோக்கத்திற்காக பாலில் ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது.

83) கூற்றுகளை ஆராய்க.

1. கோழிப்பண்ணை தயாரிப்புகளில் எஸ்செரிச்சியா கோலை, சால்மோனெல்லா இனம் போன்ற நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இருப்பதால் அவை கெட்டுப்போகும்.

2. உணவு கலப்படம் தடுப்புச் சட்டம் – 1954 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. கோழிப்பண்ணை தயாரிப்புகளில் எஸ்செரிச்சியா கோலை, சால்மோனெல்லா இனம் போன்ற நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இருப்பதால் அவை கெட்டுப்போகும்.

2. உணவு கலப்படம் தடுப்புச் சட்டம் – 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது

84) ஆப்பிள் மற்றும் பேரிக்காய் போன்ற கனிகளின் மேல் பளபளப்பான தோற்றத்தைக் கொடுப்பதற்காக சேர்க்கப்படுவது?

A) ஹைட்ரஜன் பெராக்சைடு

B) கால்சியம் கார்பைடு

C) சோடியம் பை கார்பனேட்

D) செல்லாக்

விளக்கம்: ஆப்பிள் மற்றும் பேரிக்காய் போன்ற கனிகளின் மேல் பளபளப்பான தோற்றத்தைக் கொடுப்பதற்காக உண்ணக்கூடிய ஆனால் தீங்கு விளைவிக்கும் செயற்கை மெழுகான செல்லாக் அல்லது கார்னோபா மெழுகு போன்றவை சேர்க்கப்படுகின்றன.

85) கூற்று: பச்சைக் காய்கறிகள், பாகற்காய், பச்சைப்பட்டாணி போன்றவற்றில் காரீய உலோகம் சேர்க்கப்படுகிறது.

காரணம்: பசுமை நிறத்தைக் கொடுப்பதற்காக மற்றும் வாடிய நிலை தோன்றாமலிக்க

A) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்

B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

C) கூற்று சரி, காரணம் தவறு

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விளக்கம்: பச்சைக் காய்கறிகள், பாகற்காய், பச்சைப்பட்டாணி போன்றவற்றில் பசுமை நிறத்தைக் கொடுப்பதற்காக காரீய உலோகம் கலந்த அங்கீகரிக்கப்படாத உணவு நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை காய்கறிகளில் வாடிய நிலை தோன்றாமலிருப்பதற்காக சேர்க்கப்படுகின்றன.

86) கூற்றுகளை ஆராய்க.

1. 1 முதல் 5 வரையுள்ள குழந்தைகளை தாக்கும் நோய் – மராஸ்மஸ்

2. குவாசியோர்கர் ஒரு புரதக் குறைபாட்டு நோயாகும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. 1 முதல் 5 வரையுள்ள குழந்தைகளை தாக்கும் நோய் – குவாசியோர்கர்

2. குவாசியோர்கர் ஒரு புரதக் குறைபாட்டு நோயாகும்

87) கூற்றுகளை ஆராய்க.

1. தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு சான்றளிப்பது – ISI

2. விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தி பொருட்களுக்கு சான்றளிப்பது – fssai

3. பழ உற்பத்திப் பொருள்களுக்கு சான்றளிப்பது – FPO

4. உணவுப் பாதுகாப்பைக் கண்காணிப்பது மற்றும் ஒழுங்குப்படுத்துவது – அக்மார்க்

A) 1, 2 சரி

B) 1, 3 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு சான்றளிப்பது – ISI

2. விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தி பொருட்களுக்கு சான்றளிப்பது – அக்மார்க்

3. பழ உற்பத்திப் பொருள்களுக்கு சான்றளிப்பது – FPO

4. உணவுப் பாதுகாப்பைக் கண்காணிப்பது மற்றும் ஒழுங்குப்படுத்துவது – fssai

88) மனித உடலின் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்த அளவே (மைக்ரோ) தேவைப்படும் ஊட்டச்சத்து?

A) கார்போஹைட்ரேட்

B) புரோட்டீன்

C) வைட்டமின்

D) கொழுப்பு

விளக்கம்: வைட்டமின்கள் சிறிய அளவில் தேவைப்படும் மிக முக்கியமான ஊட்டச்சத்தாகும். இவை குறிப்பிட்ட உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கு தேவைப்படுகின்றன.

89) உணவு கெட்டுப்போவதற்குக் காரணமான உள்காரணியாகச் செயல்படுவது?

A) மெழுகுப் பூச்சு

B) சுகாதராமற்ற சமையல் பாத்திரங்கள்

C) உணவின் ஈரத்தன்மை

D) செயற்கை உணவுப் பாதுகாப்புப் பொருட்கள்

விளக்கம்: நொதிகளின் செயல்பாடு மற்றும் உணவில் சேர்க்கப்படும் ஈரப்பதம் போன்றவை உணவு கெட்டுப் போதலுக்குக் காரணமான உள் காரணிகள் ஆகும்.

90) கூற்றுகளை ஆராய்க.

1. நொதிகளின் செயல்பாடு மற்றும் உணவில் காணப்படும் ஈரப்பதம் போன்றவை உணவு கெட்டுப் போதலுக்குக் காரணமான வெளிக்காரணிகள் ஆகும்.

2. உணவில் சேர்க்கப்படும் கலப்படங்கள், நுண்ணுயிரிகளால் பாதிக்கப்பட்ட அசுத்தமான பாத்திரங்கள் மற்றும் சாதனங்கள், சுகாதாரமில்லாத சமையல் செய்யும் இடங்கள், உணவைச் சேமிக்கும் வசதிகள் இல்லாமை போன்றவை உணவைக் கெட்டுப் போகச் செய்யும் உட்காரணிகள் ஆகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. நொதிகளின் செயல்பாடு மற்றும் உணவில் காணப்படும் ஈரப்பதம் போன்றவை உணவு கெட்டுப் போதலுக்குக் காரணமான உட்காரணிகள் ஆகும்.

2. உணவில் சேர்க்கப்படும் கலப்படங்கள், நுண்ணுயிரிகளால் பாதிக்கப்பட்ட அசுத்தமான பாத்திரங்கள் மற்றும் சாதனங்கள், சுகாதாரமில்லாத சமையல் செய்யும் இடங்கள், உணவைச் சேமிக்கும் வசதிகள் இல்லாமை போன்றவை உணவைக் கெட்டுப் போகச் செய்யும் வெளிக்காரணிகள் ஆகும்.

9th Science Lesson 22 Questions in Tamil

22] நுண்ணுயிரிகளின் உலகம்

1) கீழ்க்கண்டவற்றில் எது பாக்டீரியாவால் உருவாக்கப்படும் எதிர்பொருள் அல்ல?

A) ஸ்டெரெப்டோமைசின்

B) எரித்ரோமைசின்

C) பேசிட்ரசின்

D) செபலோஸ்போரின்

விளக்கம்: பாக்டீரியாவால் உருவாக்கப்படும் எதிர்பொருள்:

  1. ஸ்டெரெப்டோமைசின்
  2. எரித்ரோமைசின்
  3. பேசிட்ரசின்

பூஞ்சையால் உருவாக்கப்படும் எதிர்பொருள்:

  1. பெனிசிலின்
  2. செபலோஸ்போரின்

2) முதன் முதலில் நுண்ணோக்கியை வடிவமைத்தவர் யார்?

A) ஆன்டன் வான் லூவன்ஹக்

B) இராபர்ட் ஹக்

C) இராபர்ட் பர்கின்ஜி

D) நியூட்டன்

விளக்கம்: ஆன்டன் வான் லூவன்ஹக் என்ற நுண்ணுயிரிலாளர் முதன் முதலில் நுண்ணோக்கியை வடிவமைத்தார்.

3) பாக்டீரியா பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

A) பெரும்பாலானவை ஒரு செல் உடையவை

B) உட்கரு மற்றும் பிற செல் நுண்ணுறுப்பு கிடையாது

C) சில இனங்கள் தளர்வாக இணைக்கப்பட்டுள்ள இழைகளைக் கொண்டு பெரியதாக உள்ளன.

D) இவை யூகேரியோட் உயிரி ஆகும்

விளக்கம்: பெரும்பாலானவை ஒரு செல் உடையவை

உட்கரு மற்றும் பிற செல் நுண்ணுறுப்பு கிடையாது

சில இனங்கள் தளர்வாக இணைக்கப்பட்டுள்ள இழைகளைக் கொண்டு பெரியதாக உள்ளன.

இவை புரோகேரியோட் உயிரி ஆகும்.

4) பாக்டீரியாக்களின் நீளம்_______முதல்__________மைக்ரோ மீட்டருக்கும் குறைவாக வேறுபடுகின்றன

A) 1-5

B) 1-10

C) 0.2-1

D) 0.2-5

விளக்கம்: பாக்டீரியாக்கள் நீளத்தில் 1 முதல் 10 மைக்ரோ மீட்டருக்கும் குறைவாக வேறுபடுகின்றன.

5) பாக்டீரியாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு எது?

A) பொய்கால்கள்

B) கசையிழை

C) சீட்டா

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: பாக்டீரியாக்கள் இடம் பெயர்கின்றனவாகவும், இடம் பெயராதவையாகவும் காணப்படுகின்றன. சில பாக்டீரியங்கள் இடம் பெயர்ந்து செல்வதற்கு கசையிழை என்ற சிறப்பான அமைப்பு செல்லின் மேற்பரப்பில் காணப்படுகிறது. பாக்டீரியா இனங்களிடையே கசையிழைகளின் அமைவிடங்கள் மாறுபட்டுக் காணப்படுகின்றன.

6) பாக்டீரியாவை வடிவத்தைப் பொறுத்து எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

A) 4

B) 3

C) 2

D) 5

விளக்கம்: வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு பாக்டீரியங்களை கீழ்க்காணும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை,

1. கோள வடிவம்

2.கோல் வடிவம்

3. திருகு வடிவம்

7) கோள வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள்____________என அழைக்கப்படுகின்றன

A) காக்கைகள்

B) பேசில்லைகள்

C) ஸ்பைரில்லா

D) ஸ்பைரில்லம்

விளக்கம்: வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு பாக்டீரியங்கள் மூன்று வகைப்படும். அவற்றில் கோள வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள் காக்கைகள் என அழைக்கப்படுகின்றன.

8) பாக்டீரியா பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. பாக்டீரியா செல்லானது செல்சவ்வினைக் கொண்டுள்ளது.

2. இதில் லைசோசோம்கள் என்ற புரத உற்பத்திக்கான மையங்கள் காணப்படுகின்றன

3. இதில் சவ்வினால் சூழப்பட்ட உள்ளுறுப்புகள் காணப்படுகின்றன.

4. பிளாஸ்மிடுகள் என அழைக்கப்படும் சிறிய கூடுதலான வட்டமான குரோமோசோம் டி.என்.ஏ ஒன்று சைட்டோபிளாசத்தில் காணப்படுகிறது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: 1. பாக்டீரியா செல்லானது செல்சவ்வினைக் கொண்டுள்ளது.

2. இதில் ரைபோசோம்கள் என்ற புரத உற்பத்திக்கான மையங்கள் காணப்படுகின்றன

3. இதில் சவ்வினால் சூழப்பட்ட உள்ளுறுப்புகள் காணப்படுகின்றன.

4. பிளாஸ்மிடுகள் என அழைக்கப்படும் சிறிய கூடுதலான வட்டமான குரோமோசோம் டி.என்.ஏ ஒன்று சைட்டோபிளாசத்தில் காணப்படுகிறது.

9) வைரஸ் என்பது எம்மொழிச் சொல்?

A) கிரேக்கம்

B) இலத்தீன்

C) அரபு

D) சமஸ்கிருதம்

விளக்கம்: வைரஸ் என்ற இலத்தீன் சொல்லானது நச்சு அல்லது விஷத்தன்மையுள்ள திரவம் என்று பொருள்படுகிறது. இவை செல்லற்ற தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளும் ஒட்டுண்ணியாகும்.

10) கூற்று: பூஞ்சை ஒரு ஒட்டுண்ணி உணவூட்ட முறை கொண்டது.

காரணம்: இவற்றில் பச்சையம் கிடையாது

A) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்

B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

C) கூற்று சரி, காரணம் தவறு

D) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

விளக்கம்: பூஞ்சைகள் பச்சையமற்ற உயிரினமாகும். எனவே அவை உயிருள்ள அல்லது உயிரற்ற ஓம்புயிரிகளை தங்களது உணவுத்தேவைக்காக சார்ந்து வாழ்கின்றன. எனவே பூஞ்சை ஒரு ஒட்டுண்ணிகளாகும்.

11) வைரஸ்கள் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: வைரஸ்கள் இரண்டு வகைப்படும். அவை,

1. தாவர வைரஸ்கள்

2. விலங்கு வைரஸ்கள்

12) எந்த ஆண்டு ஆன்டன் வான் லூவன்ஹக் முதன் முதலில் நுண்ணோக்கியை வடிவமைத்தார்?

A) 1647

B) 1664

C) 1665

D) 1676

விளக்கம்: ஆன்டன் வான் லூவன்ஹக் என்ற நுண்ணுயிரியலார் முதன்முதலில் நுண்ணோக்கியை 1647-ல் வடிவமைத்தார். அவர் தனது பல்லிலிருந்து சிதைவுற்ற பகுதியை எடுத்து அதை நுண்ணோக்கியின் உதவியுடன் உற்றுநோக்கினார்.

13) தாவர செல்களில் உட்புகுந்து அத்தாவரங்களுக்கு நோயினை உண்டாக்கும் வைரஸ் எது?

A) ஸ்பைரில்லம்

B) பேசில்லஸ்

C) வீரியம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: வைரஸிலுள்ள புரத உறையற்ற தீங்களிக்கும் ஆர்.என்.ஏ.வே வீராய்டு எனப்படும். இவை தாவர செல்களில் உட்புகுந்து அத்தாவரங்களுக்கு நோயினை உண்டாக்குகின்றன.

14) கூற்றுகளை ஆராய்க.

1. உயிருள்ள ஓம்புயிரிகளில் வாழும் பூஞ்சைகள் சாறுண்ணிகள் எனப்படும்.

2. உயிரற்ற இறந்து போன கரிமப் பொருள்களில் வாழும் பூஞ்சைகள் ஒட்டுண்ணிகள் எனப்படும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. உயிருள்ள ஓம்புயிரிகளில் வாழும் பூஞ்சைகள் ஒட்டுண்ணிகள் எனப்படும்

2. உயிரற்ற இறந்து போன கரிமப் பொருள்களில் வாழும் பூஞ்சைகள சாறுண்ணிகள் எனப்படும்.

15) பூஞ்சைகளின் உடலம்___________என அழைக்கப்படுகிறது.

A) மைலஸ்

B) ஈஸ்ட்

C) தாலஸ்

D) பீரியான்கள்

விளக்கம்: பூஞ்கைளின் உடலம் தாலஸ் என அழைக்கப்படுகிறது. பூஞ்சைகள் பச்சையமற்ற உயிரினமாகும். இவை ஒட்டுண்ணிகளாகவோ அல்லது சாறுண்ணிகளாகவோ வாழ்கின்றன.

16) கூற்றுகளை ஆராய்க.

1. வைரஸ்கள் செல் அமைப்புள்ள, தன்னைத்தானே பெருக்கிக்கொள்ளும் ஒட்டுண்ணிகளாகும்.

2. வைரஸ்கள் உயிருள்ள மற்றும் உயிரற்ற பண்புகளை வெளிப்படுத்துகின்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. வைரஸ்கள் செல் அமைப்பற்ற, தன்னைத்தானே பெருக்கிக்கொள்ளும் ஒட்டுண்ணிகளாகும்.

2. வைரஸ்கள் உயிருள்ள மற்றும் உயிரற்ற பண்புகளை வெளிப்படுத்துகின்றன.

17) ஒரு மைக்ரோ மீட்டர் என்பது?

A) 10-3மீ

B) 10-6மீ

C) 10-9மீ

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: ஒரு மைக்ரோ மீட்டர் என்பது 10-6 மீட்டர் ஆகும்.

10-3– மில்லிமீட்டர்

10-9 – நானோ மீட்டர்

18) பாக்டீரியாக்களின் அகலம்___________முதல்_______________மைக்ரோ மீட்டர் ஆகும்

A) 1-5

B) 1-10

C) 0.2-1

D) 0.2-5

விளக்கம்: பாக்டீரியாக்கள் அகலத்தில் 0.2 முதல் 1 மைக்ரோ மீட்டருக்கும் குறைவாக வேறுபடுகின்றன.

19) கூற்று: பூஞ்சைகள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்வதில்லை

காரணம்: பூஞ்சைகள் ஒரு கசையிழையற்றவை

A) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்

B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

C) கூற்று சரி, காரணம் தவறு

D) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

விளக்கம்: பூஞ்சைகளில் கசையிழை காணப்படாததால் இவை இடம்பெயர்வதில்லை. வைரஸ்களில் கசையிழை காணப்படுகிறது.

20) கூற்றுகளை ஆராய்க.

1. பாக்டீரிய செல்சவ்வனாது உறுதியான செல்சுவரால் மூடப்பட்டுக் காணப்படுகிறது.

2. பாக்டீரியாவில் பிளாஸ்மா படலமானது, சைட்டோபிளாசத்தையும், தெளிவான உட்கருவினையும் கொண்டுள்ளது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு 6

விளக்கம்: 1. பாக்டீரிய செல்சவ்வனாது உறுதியான செல்சுவரால் மூடப்பட்டுக் காணப்படுகிறது.

2. பாக்டீரியாவில் பிளாஸ்மா படலமானது, சைட்டோபிளாசத்தையும், தெளிவற்ற உட்கருவினையும் கொண்டுள்ளது.

21) கோல் வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள்_________________என அழைக்கப்படுகின்றன

A) காக்கைகள்

B) பேசில்லைகள்

C) ஸ்பைரில்லா

D) ஸ்பைரில்லம்

விளக்கம்: வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு பாக்டீரியங்கள் மூன்று வகைப்படும். அவற்றில் கோல் வடிவத்தில் காணப்படும் பாக்டீரிய்ங்கள் பேசில்லைகள் என அழைக்கப்படுகின்றன.

22) வைரஸ்-ன் உருவ அளவு பரவலாக _____________முதல்_____________வரை உள்ளது.

A) 18-40 நானோமீட்டர்

B) 18-400 நானோமீட்டர்

C) 8-40 நானோமீட்டர்

D) 18-400 நானோமீட்டர்

விளக்கம்: வைரஸ் மிகச்சிறியவையாகும். இதனுடைய உருவ அளவு பரவலாக 18 முதல் 400 நானோமீட்டர் வரை உள்ளது.

23) எச்.ஐ.வி என்பதன் பொருள் என்ன?

A) மனித நோய் எதிர்ப்பு குறைபடுத்தும் வைரஸ்

B) மனித நோய் குறைப்பு வைரஸ்

C) பாலியல் தொடர்பு வைரஸ்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: எச்.ஐ.வி என்றால் மனித நோய் எதிர்ப்பு குறைபடுத்தும் வைரஸ் என்கிறோம். இந்த வைரஸ் இரத்த வெள்ளையணுக்களை அல்லது லிம்போசைட்டுகளைத் தாக்கி உடலினை பலவீனமடையச் செய்கிறது. மேலும் உடலில் தானாகவே நோயினை எதிர்க்கும் திறனைக் குறைக்கிறது.

24) பூஞ்சை கீழ்க்கண்ட எந்த முறையில் இனப்பெருக்கம் செய்வதில்லை?

A) உடல்வழி இனப்பெருக்கம்

B) பாலிலா இனப்பெருக்கம்

C) பால் இனப்பெருக்கம்

D) அரும்புதல்

விளக்கம்: பூஞ்சையின் இனப்பெருக்க முறைகள்:

1. உடல்வழி (வெஜிடேட்டிவ்) – இரண்டாகப் பிளத்தல், மொட்டு விடுதல், துண்டாதல்

2. பாலிலா இனப்பெருக்கம் – கொனிடிய வித்துக்கள் உருவாதல்

3. பால் இனப்பெருக்கம் – ஆந்த்ரிடியம் ஊகோனியம் என்று அழைக்கப்படும் ஆண் மற்றும் பெண் கேமிட்டான்ஜியம்.

25)பீரியான்கள் என்ற பதம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

A) 1929

B) 1967

C) 1982

D) 1875

விளக்கம்: பிரீயான்கள் என்ற பதம் ஸ்டான்லி பி.பிரூய்ஸ்னர் என்பவரால் 1982-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

26) பிரீயான்கள் என்பது கீழ்க்கண்ட எதனைக் குறிக்கும்?

A) புரதங்களை மட்டுமே கொண்ட வைரஸ்

B) புரதங்களை மட்டுமே கொண்ட பாக்டீரியா

C) புரதங்களை மட்டுமே கொண்ட பூஞ்சைகள்

D) புரதங்களை மட்டுமே கொண்ட புரோட்டோசோவா

விளக்கம்: பிரீயான்கள் என்பது புரதங்களை மட்டுமே கொண்ட வைரஸ் துகள்களாகும். பிரீயான்கள் என்ற பதம் ஸ்டான்லி பி.பிரூய்ஸ்னர் என்பவரால் 1982-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

27) வைரஸ் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இவை புரதத்தால் சூழப்பட்டுள்ளன.

2. வைரஸில் காணப்படும் நியூக்ளிக் அமிலங்கள் டி.என்.ஏ-வாக மட்டுமே இருக்கும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இவை புரதத்தால் சூழப்பட்டுள்ளன.

2. வைரஸில் காணப்படும் நியூக்ளிக் அமிலங்கள் டி.என்.ஏ-வாக அல்லது ஆர்.என்.ஏ-வாகவோ காணப்படுகின்றன.

28) பீரியான்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இவற்றில் நியூக்ளிக் அமிலமானது காணப்படவில்லை.

2. இவை நோயினைத் தோற்றுவிக்கக்கூடிய, ஆனால் வைரஸ்களைவிட பெரிய அமைப்புடையவை ஆகும்.

3. இவை கோல் வடிவத்தில் இருக்கின்றன.

4. பிரீயான்கள் என்ற பதம் 1982-ல் ஸ்டான்லி பி.ப்ரூய்ஸ்னர் என்பவரால் உருவாக்கப்பட்டது.

A) 1, 3 சரி

B) 1, 3, 4 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இவற்றில் நியூக்ளிக் அமிலமானது காணப்படவில்லை

2. இவை நோயினைத் தோற்றுவிக்கக்கூடிய, ஆனால் வைரஸ்களைவிட சிறிய அமைப்புடையவை ஆகும்.

3. இவை கோல் வடிவத்தில் இருக்கின்றன.

4. பிரீயான்கள் என்ற பதம் 1982-ல் ஸ்டான்லி பி.ப்ரூய்ஸ்னர் என்பவரால் உருவாக்கப்பட்டது.

29) தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) முதல் எச்.ஐ.வி பாதிப்பு – ஹட்டாய்

B) இந்தியாவின் முதல் எச்.ஐ.வி பாதிப்பு – தமிழ்நாடு

C) முதல் எச்.ஐ.வி தடுப்பூசி – அமெரிக்கா

D) முதல் எச்.வி.ஐ தடுப்பூசி ஆய்வறிக்கை – 2011

விளக்கம்: முதல் எச்.ஐ.வி பாதிப்பு – ஹட்டாய் (அமெரிக்கா) – 1981

இந்தியாவின் முதல் எச்.ஐ.வி பாதிப்பு – தமிழ்நாடு(1986)

முதல் எச்.ஐ.வி தடுப்பூசி – தாய்லாந்து (2003 சோதனைக்காக)

முதல் எச்.வி.ஐ தடுப்பூசி ஆய்வறிக்கை – 2011

30) கீழ்க்கண்டவற்றில் எது உயிரியல் துப்புரவாளர் அல்ல?

A) கார்பன்

B) நைட்ரஜன்

C) ஆக்ஸிஜன்

D) ஹைட்ரஜன்

விளக்கம்: நுண்ணுயிரிகள் உயிரியக் கட்டுப்பாட்டுக் காரணியாகவும், உயிரின உரங்களாகவும் விவசாயத்துறையில் முக்கியப் பங்களிக்கின்றன. இவை, கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், சல்பர் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தனிமங்களின் சுழற்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவை உயிரியல் துப்புரவாளர்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

31) கீழ்க்கண்டவற்றில் எது உயிரி உரங்களின் முக்கிய ஆதாரம் அல்ல?

A) பாக்டீரியா

B) சயனோ பாக்டீரியா

C) பூஞ்சை

D) ஆல்கா

விளக்கம்: நிலத்திலுள்ள மண்ணினை சத்துமிக்கதாய் வளப்படுத்தும் நுண்ணுயிரிகள் உயிரி உரங்கள் என அழைக்கப்படுகின்றன. பாக்டீரியா, சயனோ பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகியவை உயிரி உரங்களின் முக்கிய ஆதாரங்கள் ஆகும்.

32) திருகு வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள்_________________என அழைக்கப்படுகின்றன

A) காக்கைகள்

B) பேசில்லைகள்

C) ஸ்பைரில்லா

D) ஸ்பைரில்லம்

விளக்கம்: வடிவங்களை அடிப்படையாக் கொண்டு பாக்டீரியங்கள் மூன்று வகைப்படும். அவற்றில் திருகு வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள் ஸ்பைரில்லா என அழைக்கப்படுகின்றன.

33) கூற்றுகளை ஆராய்க.

1. சில பாக்டீரியங்களில் செல் சுவரினைச் சுற்றி பல கூட்டுச் சக்கரைகளால் (பாலிசாக்கரைடு) உருவான கூடுதலான மெல்லிய படலம் போன்ற அமைப்பு பாதுகாப்பிற்காகக் காணப்படுகிறது.

2. பாக்டீரியாவின் பிளாஸ்மா படலம் ரைபோசோம்கள் மற்றும் மரபணுப்பொருளாகிய டி.என்.ஏ வையும் உள்ளடக்கியுள்ளது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சில பாக்டீரியங்களில் செல் சுவரினைச் சுற்றி பல கூட்டுச் சக்கரைகளால்(பாலிசாக்கரைடு) உருவான கூடுதலான மெல்லிய படலம் போன்ற அமைப்பு பாதுகாப்பிற்காகக் காணப்படுகிறது.

2. பாக்டீரியாவின் பிளாஸ்மா படலம் ரைபோசோம்கள் மற்றும் மரபணுப்பொருளாகிய டி.என்.ஏ வையும் உள்ளடக்கியுள்ளது.

34) தாவர ஊட்டச்சத்துகளில் மிகவும் முக்கியமானவை நைட்ரஜன். வளிமண்டலத்தில் வாயுவாக காணப்படும் இவற்றை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்காற்றுவது எது?

A) அசோடோபாக்டர் நைட்ரோசோமோனாஸ்

B) நாஸ்டாக்

C) ரைசோபியம்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: தாவர ஊட்டச்சத்துகளில் மிகவும் முக்கியமானவை நைட்ரஜன். வளிமண்டலத்தில் வாயுவாக காணப்படும் இவற்றை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்காற்றுவது:

1. அசோடோபாக்டர் நைட்ரோசோமோனாஸ்

2. நாஸ்டாக்

3. ரைசோபியம்

4. ஃப்ரான்கியா

35) உலக சுகாதார தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

A) ஏப்ரல் 25

B) ஏப்ரல் 7

C) மார்ச் 22

D)டிசம்பர் 23

விளக்கம்: ஏப்ரல் 7 – உலக சுகாதார தினம்

ஏப்ரல் 25 – உலக மலேரியா தினம்

மார்ச் 22 – உலக தண்ணீர் தினம்

டிசம்பர் 23 – தேசிய விவசாயிகள் தினம்

36) கூற்றுகளை ஆராய்க.

1. ஹைஃபாக்கள் செல்சுவரால் குறுக்கிடப்பட்டோ அல்லது குறுக்கிடபடாமலோ உள்ளன.

2. ஹைஃபாக்களின் செல்சுவரானது செல்லுலோஸ் அல்லது கைட்டின் பொருளால் ஆனது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஹைஃபாக்கள் செல்சுவரால் குறுக்கிடப்பட்டோ அல்லது குறுக்கிடபடாமலோ உள்ளன.

2. ஹைஃபாக்களின் செல்சுவரானது செல்லுலோஸ் அல்லது கைட்டின் பொருளால் ஆனது.

37) கூற்று: நுண்ணுயிரிகள் உயிரியக்கட்டுப்பாட்டுக் காரணிகள் (உயிரிபூச்சிக்கொல்லிகள்) என அழைக்கப்படுகின்றன.

காரணம்: தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது நோயினை உருவாக்கும் உயிரிகள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் நுண்ணுயிரிகள் பயனுள்ளதாக இருக்கின்றன.

A) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்

B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

C) கூற்று சரி, காரணம் தவறு

D) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

விளக்கம்: தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது நோயினை உருவாக்கும் உயிரிகள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் நுண்ணுயிரிகள் பயனுள்ளதாக இருக்கின்றன. எனவே, நுண்ணுயிரிகள் உயிரியக்கட்டுப்பாட்டுக் காரணிகள் (உயிரிபூச்சிக்கொல்லிகள்) என அழைக்கப்படுகின்றன.

38) பேசிலஸ் துரின்சியென்சிஸ் என்பது ஒரு _____________?

A) பாக்டீரியா

B) பூஞ்சை

C) வைரஸ்

D) புரோட்டோசோவா

விளக்கம்: பேசிலஸ் துரின்சியென்சிஸ் என்ற பாக்டீரியத்தின் சிற்றினத்திலிருந்து ‘க்ரை’ புரதம் என்று அழைக்கப்படும் புரதமானது பூச்சிகளின் இளம் உயிரிகளுக்கு நச்சுத்தன்மையுடையதாக இருந்து அவற்றைக் கொல்கின்றன.

39) பூஞ்சைகள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. பச்சையமற்ற உயிரினம்

2. பூஞ்சையின் உடலம் தாலஸ் என்று அழைக்கப்படுகிறது.

3. ஒரு செல் உயிரியான ஈஸ்ட் கோள வடிவத்தில் உள்ளன.

4. பல செல் உயிரிகளில் பூஞ்சையின் உடலம் மைசீலியம் என்று அழைக்கப்படுகிறது

A) 1, 2 சரி

B) 1, 2, 3 சரி

C) 2, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. பச்சையமற்ற உயிரினம்

2. பூஞ்சையின் உடலம் தாலஸ் என்று அழைக்கப்படுகிறது.

3. ஒரு செல் உயிரியான ஈஸ்ட் கோள வடிவத்தில் உள்ளன.

4. பல செல் உயிரிகளில் பூஞ்சையின் உடலம் மைசீலியம் என்று அழைக்கப்படுகிறது.

40) வைரஸ் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இதில் உள்ள டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ, 60-95 சதவீதம் புரதங்களும் மீதி நியூக்ளிக் அமிலங்களும் காணப்படுகின்றன.

2. வைரஸ்களை படிகப்படுத்த முடியும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இதில் உள்ள டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ, 60-95 சதவீதம் புரதங்களும் மீதி நியூக்ளிக் அமிலங்களும் காணப்படுகின்றன.

2. வைரஸ்களை படிகப்படுத்த முடியும்.

41) தட்டம்மை-க்கு எவ்வகையான தடுப்பான் வழங்கப்படுகிறது?

A) MMR

B) BCG

C) IPV

D) ஹெப்படைட்டிஸ் B

விளக்கம்: தட்டம்மை, பென்னுக்கு வீங்கி, ரூபெல்லா போன்றவற்றிற்கு நோய்தடுப்பானாக MMR பயன்படுகிறது.

42) திராட்சை பழத்தை நொதிக்க வைக்க கீழக்கண்ட எது பயன்படுகிறது?

A) சாக்கரோமைசிஸ் செரிவிசே

B) ஃபேசில்லஸ் மெகாடெரியம்

C) லாக்டோஃபேசில்லஸ்

D) ஆஸ்பர்ஜிலஸ்

விளக்கம்: திராட்சைப் பழத்தை சாக்கரோமைசிஸ் செரிவிசே கொண்டு நொதிக்க வைத்து திராட்சை ரசங்கள் (வைன்) தயாரிக்கப்படுகின்றன.

43) அஸ்பர்ஜிலஸ் நைகர் என்பது ஒரு_______________ஆகும்

A) பாக்டீரியா

B) வைரஸ்

C) பூஞ்சை

D) புரோட்டோசோவா

விளக்கம்:ஆஸ்பர்ஜிலஸ் நைகர் என்பது ஒரு பூஞ்சை ஆகும். இது ஆக்ஸாலிக் அமிலம், அசிடிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் போன்றவை தயாரிக்கப்பயன்படுகின்றன.

44) கீழ்க்கண்டவற்றில் எது நுண்ணுயிரிகளிடமிருந்து பெறப்படும் நொதி அல்ல?

A) லிப்பேஸ்

B) இன்வெர்டேஸ்

C) புரேட்டியேஸ்

D) மால்டோஸ்

விளக்கம்: கீழ்க்கண்ட நொதிகள் நுண்ணுயிரிகளிடமிருந்து பெறப்படுகின்றன.

1. லிப்பபேஸ்

2. இன்வெர்டேஸ்

3. புரோட்டியேஸ்

4. குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ்

45) தொண்டை அடைப்பான் என்னும் நோய்க்கு கீழ்க்கண்ட எந்த தடுப்பான் வழங்கப்படுகிறது?

A) டெட்டனஸ் டாக்சாய்டு

B) டிப்தீரியா டாக்சாய்டு

C) ஹெப்படைட்டிஸ் B தடுப்பான்

D) பேசிலஸ் கால்மெட் குய்ரின்

விளக்கம்: தொண்டை அடைப்பான்(டிப்தீரியா) என்ற நோய்க்கு டிப்தீரியா டாக்சாய்டு என்ற நோய்தடுப்பான் பயன்படுத்தப்படுகிறது.

46) திருகு வடிவத்தில் காணப்படும் ஒரு செல் பாக்டீரியங்கள்_________________என அழைக்கப்படுகின்றன

A) காக்கைகள்

B) பேசில்லைகள்

C) ஸ்பைரில்லா

D) ஸ்பைரில்லம்

விளக்கம்: வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு பாக்டீரியங்கள் மூன்று வகைப்படும். அவற்றில் திருகு வடிவத்தில் காணப்படும் ஒரு செல் பாக்டீரியங்கள் ஸ்பைரில்லம் என அழைக்கப்படுகின்றன.

47) வீரியான் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு எளிய வைரஸ் துகள் வீரியான் என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறது.

2. இவை உயிரற்ற செல்களில் மட்டுமே வளர்ந்து பெருகுகின்றன.

3. நோய்த் தொற்றை உருவாக்கும் காரணிகளில் இவையே மிகப் பெரியவையாகும்.

4. இதனுடைய உருவ அளவு பரவலாக 18-400 நானோ மீட்டர் வரை உள்ளது.

A) 1, 4 சரி

B) 1, 2, 4 சரி

C) 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. ஒரு எளிய வைரஸ் துகள் வீரியான் என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறது.

2. இவை உயிருள்ள செல்களில் மட்டுமே வளர்ந்து பெருகுகின்றன.

3. நோய்த் தொற்றை உருவாக்கும் காரணிகளில் இவையே மிகப் சிறியனவாகும்.

4. இதனுடைய உருவ அளவு பரவலாக 18-400 நானோ மீட்டர் வரை உள்ளது.

48) கீழ்க்கண்டவற்றில் எது நைட்ரஜனை நிலைநிறுத்தும் கூட்டுயிர் வாழ்க்கை முறையுடைய நுண்ணுயிரி?

A) ரைசோபியம்

B) ஃப்ரான்கியா

C) நைட்ரோசோமோனாஸ்

D) A மற்றும் B

விளக்கம்: தாவர ஊட்டச்சத்துக்களில் நைட்ரஜனும் மிக முக்கியமான ஒரு ஆதாரம் ஆகும். வளிமண்டலத்தில் வாயுவாகக் காணப்படும் நைட்ரஜனானது பயன்படுத்தக்கூடிய விதத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இந்த மாற்றத்தினை நிகழ்த்துவதில் தனித் நிலையில் வாழும் நுண்ணுயிரிகளோ அல்லது தாவரத்தோடு கூட்டுயிர் தொடர்பினைக் கொண்டிருக்கும் நுண்ணுயிரிகளோ பெரும் பங்காற்றுகின்றன.

தனித்து வாழ்பகைவள்:

1. அசோடோபாக்டர் நைட்ரோசோமேனாஸ்

2. நாஸ்டாக்

கூட்டுயிர் வாழ்க்கை முறையுடையவை:

1. ரைசோபியம்

2. ஃபஃரான்கியா

49) வைரஸ்களின் உயிருள்ள பண்புகளில் பெருந்தாதது எது?

A) வைரஸ்கள் பெருக்கமடையும் தன்மையிலான மரபணுப் பொருள்களையுடைய (டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ) நியூக்ளிக் அமிலத்தைக் கொண்டுள்ளன

B) இவை ஓம்புரியிகளில் உள்ள உயிருள்ள செல்களில் பெருக்கமடைகின்றன.

C) இந்த வைரஸ்கள் ஒரு குறிப்பிட்ட ஓம்புயிரிகளையே தாக்கக்கூடியவை

D) இவ்வகையான வைரஸ்களை படிகமாக்க முடியும்.

விளக்கம்: வைரஸ்களின் உயிருள்ள பண்புகள்:

1. வைரஸ்கள் பெருக்கமடையும் தன்மையிலான மரபணுப் பொருள்களையுடைய (டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ) நியூக்ளிக் அமிலத்தைக் கொண்டுள்ளன

2. இவை ஓம்புரியிகளில் உள்ள உயிருள்ள செல்களில் பெருக்கமடைகின்றன.

3. இந்த வைரஸ்கள் ஒரு குறிப்பிட்ட ஓம்புயிரிகளையே தாக்கக்கூடியவை

உயிரற்ற பண்புகளை பெற்றிருக்கும் போது மட்டுமே வைரஸ்களை படிகமாக்க முடியும்.

50) கூற்று: கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், சல்பர் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை உயிரியல் துப்புரவாளர் என்று அழைக்கப்படுகின்றன.

காரணம்: மேற்கண்ட தனிமங்கள் நுண்ணுயிரிகளை அழிக்கப்பயன்படுகின்றன

A) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்

B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

C) கூற்று சரி, காரணம் தவறு

D) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

விளக்கம்: நுண்ணுயிரிகள் உயிரியக் கட்டுப்பாட்டுக் காரணியாகவும், உயிரின உரங்களாகவும் விவசாயத்துறையில் முக்கியப் பங்களிக்கின்றன. இவை, கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், சல்பர் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தனிமங்களின் சுழற்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவை உயிரியல் துப்புரவாளர்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

51) பெனிசிலின் என்ற நுண்ணுயிர் எதிர்பொருளை யார் கண்டறிந்தார்?

A) இராபர்ட் கோச்

B) அலெக்ஸாண்டர் ஃபிளெம்மிங்

C) இராபர்ட் பர்கின்ஜி

D) லூயிஸ் பாய்ஸ்டர்

விளக்கம்: நுண்ணுயிரிகளின் வளர்சிதை மாற்றத்தின் விளைபொருள்களே நுண்ணுயிரி எதிர்பொருள்கள் (ஆண்டிபயோடிக்) ஆகும். இவை நோயினைப் பரப்பும் நுண்ணுயிரிகளைத் தாக்கி அவற்றிற்கு தீங்கிழைக்கும் அல்லது அவற்றைக் கட்டுப்படுத்தும் தன்மையுடையவை. அலெக்ஸாண்டர் ஃபிளம்மிங் என்பார் பெனசிலின் என்ற நுண்ணுயிர் எதிர்பொருளினை முதன்முதலில் தயாரித்தார்.

52) கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு செல் உயிரியான ஈஸ்ட் ஒரு பாக்டீரியா வகை ஆகும்.

2. வைரஸ் என்ற கிரேக்க மொழிச் சொல்லின் பொருள் நச்சு அல்லது விஷத்தன்மையுள்ள திரவம் என்று பொருள்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஒரு செல் உயிரியான ஈஸ்ட் ஒரு பூஞ்சை வகை ஆகும்.

2. வைரஸ் என்ற இலத்தீன் மொழிச் சொல்லின் பொருள் நச்சு அல்லது விஷத்தன்மையுள்ள திரவம் என்று பொருள்.

53) உலக எய்ட்ஸ் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?

A) ஏப்ரல் 7

B) ஏப்ரல் 25

C) டிசம்பர் 1

D) மார்ச் 24

விளக்கம்: டிசம்பர் 1 – உலக எய்ட்ஸ் தினம்

ஏப்ரல் 7 – உலக சுகாதார தினம்

ஏப்ரல் 25 – உலக மலேரியா தினம்

மார்ச் 24 – உலக காசநோய் எதிர்ப்பு தினம்

54) எச்.வி.ஐ பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

A) 1981 – முதல் எச்.ஐ.வி பாதிப்பு கண்டறியப்பட்டது

B) 1987 – இந்தியாவில் முதல் எச்.வி.ஐ பாதிப்பு கண்டறியப்பட்டது

C) 2003 – எச்.ஐ.வி தடுப்பூசி மருந்து சோதனைக்காக வழங்கப்பட்டது

D) 2011 – தடுப்பூசி மருந்தின் ஆய்வறிக்கை வழங்கப்பட்டது

விளக்கம்: 1981 – முதல் எச்.ஐ.வி பாதிப்பு அமெரிக்காவின் ஹட்டாய் என்ற இடத்தில் கண்டறியப்பட்டது.

1986 – இந்தியாவில் முதல் எச்.வி.ஐ பாதிப்பு கண்டறியப்பட்டது

2003 – எச்.ஐ.வி தடுப்பூசி மருந்து தாய்லாந்து நாட்டில் சோதனைக்காக வழங்கப்பட்டது

2011 – தடுப்பூசி மருந்தின் ஆய்வறிக்கை வழங்கப்பட்டது.

55) கீழ்க்கண்டவற்றில் எது காசநோய்க்கு நோய் தடுப்பானாக பயன்படுகிறது?

A) MMR

B) BCG

C) IPV

D) ஹெப்படைட்டிஸ் B

விளக்கம்: காசநோய்க்கு BCG (பேசிலஸ் கால்மெட் குய்ரின்) என்பது தடுப்பானாக பயன்படுகிறது. இது உயிருள்ள நோய் உண்டாக்கும் வீரியம் குறைக்கப்பட்ட தடுப்பானின் வகை ஆகும்.

56) Disease என்ற ஆங்கில சொல்லின் பொருள்?

A) வசதிக்கு எதிரானது

B) வசதிக்கு உகந்தது

C) தொல்லை தரக்கூடியது

D) உடலைக் கெடுக்கக்கூடியது

விளக்கம்: நோய் என அழைக்கப்படும் பதமானது ஆங்கிலத்தில் ‘disease’ எனப்படுகிறது. இதில் dis என்பது ‘எதிரானது’ (against) என்ற பொருளையும் ease என்பது ‘வசதியாக’(comfort) என்ற பொருளையும் பெற்று ‘வசதிக்கு எதிரானது’(disease) எனப்படுகிறது.

57) நோய் காணப்படுவதின் அடிப்படையில் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: நோய் காணப்படுவதின் அடிப்படையில் நான்கு வகைப்படும். அவை,

1. வட்டார நோய்

2. கொள்ளை நோய்

3. பெருங்கொள்ளை நோய்

4. தொடர்ச்சியற்ற நோய்

58) பொருத்துக.

அ. வட்டார நோய் – 1. பான்டெமிக்

ஆ. கொள்ளை நோய் – 2. எபிடெமிக்

இ. பெருங்கொள்ளை நோய் – 3. என்டெமிக்

ஈ. தொடர்ச்சியற்ற நோய் – 4. ஸ்பொராடிக்

A) 2, 3, 1, 4

B) 2, 3, 4, 1

C) 3, 2, 4, 1

D) 3, 2, 1, 4

விளக்கம்: நோய் காணப்படுவதின் அடிப்படையில் நான்கு வகைப்படும். அவை

1. வட்டார நோய் – ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறைவான மக்களை மட்டும் தாக்கும்

2. கொள்ளை நோய் – ஒரு குறிப்பிட்ட பகுதியில் தோன்றி அதிக எண்ணிக்கையில் மக்களை பாதிக்கும்

3. பெருங்கொள்ளை நோய் – உலகம் முழுவதும் பரவி அதிகளவு சேதத்தை ஏற்படுத்தும்

4. தொடர்ச்சியற்ற நோய் – எப்போதாவது தோன்றுகிற ஒரு நோய்.

59) காஃபி மற்றும் தேயிலைச் செடி இலைகள் எந்த நுண்ணுயிரியைப் பயன்படுத்தி நொதிக்க வைக்கப்படுகின்றன?

A) சாக்கரோமைசிஸ் செரிவிசே

B) ஃபேசில்லஸ் மெகாடெரியம்

C) லாக்டோஃபேசில்லஸ்

D) ஆஸ்பர்ஜிலஸ்

விளக்கம்: காஃபி மற்றும் தேயிலைச் செடி போன்றவை ஃபேசில்லஸ் மெகாடெரியம் என்ற பாக்டீரியாவைப் பயன்படுத்தி நொதிக்க வைக்கப்படுகின்றன. இது சிறப்பான நறுமணத்தைத் தருகிறது.

60) கூற்றுகளை ஆராய்க.

1. பாக்டீரியா ஒரு புரோகேரியாட்டிக் உயிரினங்களாகும்.

2. ஒரு எளிய வைரஸ் வீரியான் என்று அழைக்கப்படுகிறது

3. 1664 ஆம் ஆண்டில் தனது பல்லிலிருந்து சிதைவுற்ற பகுதியை எடுத்து அதை நுண்ணோக்கியின் உதவியுடன் உற்று நோக்கினார் ஆன்டன் வான் லூவன்ஹக்.

4. அடினோ வைரஸ் என்பது ஒரு வகையான தாவர வைரஸ் ஆகும்

A) 1, 2 சரி

B) 1, 2, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. பாக்டீரியா ஒரு புரோகேரியாட்டிக் உயிரினங்களாகும்.

2. ஒரு எளிய வைரஸ் வீரியான் என்று அழைக்கப்படுகிறது

3. 1647 ஆம் ஆண்டில் தனது பல்லிலிருந்து சிதைவுற்ற பகுதியை எடுத்து அதை நுண்ணோக்கியின் உதவியுடன் உற்று நோக்கினார் ஆன்டன் வான் லூவன்ஹக்.

4. அடினோ வைரஸ் என்பது ஒரு வகையான விலங்கு வைரஸ் ஆகும்

61) பரவும் நிலைகளைக் கொண்டு நோய்கள் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பரவும் நிலை கொண்டு நோய்கள் இரண்டு வகைப்படும். அவை,

1. தொற்றும் தன்மையுடைய நோய்கள்

2. தொற்றும் தன்மையற்ற நோய்கள்

62) மனிதர்களில் நுண்ணுயிர் எதிர்பொருள்களாவை கீழ்க்கண்ட எதனைக் கட்டுப்படுத்த பயன்படுவதில்லை?

A) வாந்திபேதி (காலரா)

B) தொண்டை அடைப்பான் (டிப்தீரியா)

C) நிமோனியா

D) மலேரியா

விளக்கம்: மனிதர்களில் நுண்ணுயிர் எதிர்பொருள்களானவை வாந்திபேதி (காலரா), தொண்டை அடைப்பான் (டிப்தீரியா), நிமோனியா, டைபாய்டு போன்ற நோய்களைக் கட்டப்படுத்த பயன்படுகின்றன.

63) அலெக்ஸாண்டர் ஃபிளம்மிங் என்பார் பெனசிலின் என்ற நுண்ணுயிர் எதிர்பொருளினை முதன்முதலில் எந்த ஆண்டு தயாரித்தார்?

A) 1913

B) 1919

C) 1928

D) 1929

விளக்கம்: அலெக்ஸாண்டர் ஃபிளம்மிங் என்பார் பெனிசிலின் என்ற நுண்ணுயிர் எதிர்பொருளினை முதன்முதலில் 1929-ஆம் ஆண்டு தயாரித்தார்.

64) வைரஸ்களின் உயிரற்ற பண்புகளில் பொருந்தாதது எது?

A) வைரஸ்கள் ஓம்புயிரிகளுக்கு வெளியே மந்தமான பொருள்களாகவே இருக்கின்றன.

B) வைரஸ்கள் செல்சவ்வு மற்றும் செல்சுவர் அற்றவை. அதைப்போலவே செல் நுண்ணுறுப்புகளாகிய ரைபோசோம்கள், மைட்டோகாண்ட்ரியா முதலியவைகளும் வைரஸில் காணப்படுவதில்லை

C) வைரஸ்கள் பெருக்கமடையும் தன்மையிலான மரபணுப் பொருள்களையுடைய (டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ) நியூக்ளிக் அமிலத்தைக் கொண்டுள்ளன.

D) இவ்வகையான வைரஸ்களை படிகமாக்க முடியும்

விளக்கம்: வைரஸ்களின் உயிரற்ற பண்புகள்:

1. வைரஸ்கள் ஓம்புயிரிகளுக்கு வெளியே மந்தமான பொருள்களாகவே இருக்கின்றன.

2. வைரஸ்கள் செல்சவ்வு மற்றும் செல்சுவர் அற்றவை. அதைப்போலவே செல் நுண்ணுறுப்புகளாகிய ரைபோசோம்கள், மைட்டோகாண்ட்ரியா முதலியவைகளும் வைரஸில் காணப்படுவதில்லை.

3. இவ்வகையான வைரஸ்களை படிகமாக்க முடியும்.

உயிருள்ள பண்புகளைக் கொண்ட வைரஸ்கள் பெருக்கமடையும் தன்மையிலான மரபணுப் பொருள்களையுடைய (டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ) நியூக்ளிக் அமிலத்தைக் கொண்டுள்ளன.

65) ஆஸ்பர்ஜிலஸ் என்ற பூஞ்சை மூலம் கீழ்க்கண்ட எந்த அமிலம் தயாரிக்கப்படுவதில்லை?

A) ஆக்ஸாலிக் அமிலம்

B) அசிடிக் அமிலம்

C) சிட்ரிக் அமிலம்

D) மாலிக் அமிலம்

விளக்கம்: ஆஸ்பர்ஜிலஸ் நைகர் என்ற பூஞ்சை மூலம் கீழ்க்கண்ட அமிலங்கள் தயாரிக்கப்படுகின்றன.

1. ஆக்ஸாலிக் அமிலம்

2. அசிடிக் அமிலம்

3. சிட்ரிக் அமிலம்

66) ஈஸ்ட்கள் எந்த வைட்டமின் கூட்டுப்பொருள்களை அதிகம் உற்பத்தி செய்யும் ஆதாரங்களாக உள்ளன?

A) வைட்டமின் A

B) வைட்டமின் B

C) வைட்டமின்C

D) வைட்டமின் D

விளக்கம்: ஈஸ்ட்கள் வைட்டமின் B கூட்டுப்பொருள்களை (காம்ப்ளக்ஸ்) அதிகம் உற்பத்தி செய்யும் ஆதாரங்களாக உள்ளன.

67) காய்டர் என்னும் நோய் கீழக்கண்ட எந்த வகை நோயாகும்?

A) வட்டார நோய்

B) கொள்ளை நோய்

C) பெருங்கொள்ளை நோய்

D) தொடர்ச்சியற்ற நோய்

விளக்கம்: காய்டர் என்றால் முன்கழுத்துக் கழலை நோய் ஆகும். இது இமயமலைப் பிரதேசத்தின் அடிவாரப் பகுதியிலுள்ளவர்களுக்கு வரும் ஒரு நோயாகும். அதாவது ஒரு புவிப்பரப்பில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே, குறைவான மக்களை தாக்குகின்றன நோய். எனவே இது வட்டார நோய் (என்டெமிக்) எனப்படும்.

68) உலகம் முழுவதும் அதிக அளவில் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தும் நோய் பெருங்கொள்ளை நோய் ஆகும். கீழ்க்கண்டவற்றுள் இதற்குப் பொருத்தமான நோய் எது?

A) மலேரியா

B) காலரா

C) எய்ட்ஸ்

D) இன்புளுயென்சா

விளக்கம்: எய்ட்ஸ் – பெருங்கொள்ளை நோய்

மலேரியா மற்றும் காலரா – தொடர்ச்சியற்ற நோய்

இன்புளுயென்சா – கொள்ளை நோய்

69) பாக்டீரியாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

A) இராபர்ட் ஹக்

B) இராபர்ட் கோச்

C) இராபர்ட் கோஃ

D) இராபர்ட் பர்கின்ஜி

விளக்கம்: பாக்டீரியாவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் இராபர்ட் கோஃ. இவர் ஜெர்மானிய மருத்துவராவார்.

70) கீழ்க்கண்டவற்றில் எது பூஞ்சையால் உருவாக்கப்படும் எதிர்ப்பொருள்?

A) பெனிசிலின்

B) செபலோஸ்போரின்

C) ஸ்டெரெப்டோமைசின்

D) A மற்றும் B

விளக்கம்: பூஞ்சையால் உருவாக்கப்படும் எதிர்பொருள்:

1. பெனிசிலின்

2. செபலோஸ்போரின்

பாக்டீரியாவால் உருவாக்கப்படும் எதிர்பொருள்:

ஸ்டெரெப்டோமைசின்

எரித்ரோமைசின்

பேசிட்ரசின்

71) இளம்பிள்ளை வாதத்தை போக்க கீழ்க்கண்ட எந்த நோய் தடுப்பான் பயன்படுத்தப்படுகிறது?

A) MMR

B) BCG

C) IPV

D) ஹெப்படைட்டிஸ் B

விளக்கம்: போலியோ என்று அழைக்கப்படும் இளம்பிள்ளை வாத நோயை அகற்ற செயல்படாத போலியோ வைரஸ்(IPV) என்ற நோய் தடுப்பான் பயன்படுகிறது. இது செயல்படாத தடுப்பான்(ஆன்டிஜன் நீக்கப்பட்ட) ஆகும்.

72) கோக்கோ தாவரத்தின் விதைகள் மற்றும் புகையிலைச் செடியின் இலைகள் போன்றவை கீழக்கண்ட எந்த நுண்ணுயிரியைப் பயன்படுத்தி நொதிக்க வைக்கப்படுகின்றன?

A) சாக்கரோமைசிஸ் செரிவிசே

B) ஃபேசில்லஸ் மெகாடெரியம்

C) லாக்டோஃபேசில்லஸ்

D) ஆஸ்பர்ஜிலஸ்

விளக்கம்: காஃபி மற்றும் கோக்கோ தாவரத்தின் விதைகள், தேயிலைச் செடி மற்றும் புகையிலைச் செடியின் இலைகள் ஆகியவை ஃபேசில்லஸ் மெகாடெரியம் என்ற பாக்டீரியாவைப் பயன்படுத்தி நொதிக்க வைக்கப்படுகின்றன. இது சிறப்பான நறுமணத்தைத் தருகிறது.

73) புவிப்பரப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறைவான மக்களை மட்டும் தாக்குகின்ற நோய் கீழ்க்கண்டவற்றில் எது?

A) என்டெமிக்

B) எபிடெமிக்

C) பான்டெமிக்

D) ஸ்பொராடிக்

விளக்கம்: புவிப்பரப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறைவான மக்களை மட்டும் தாக்குகின்ற நோய் வட்டார நோய் எனப்படும். இதனை என்டமிக் என்பர்.

74) எப்போதாவது தோன்றுகின்ற நோய் தொடர்ச்சியற்ற நோய் எனப்படும். கீழ்க்கண்டவற்றில் எது தொடர்ச்சியற்ற நோய்?

A) காய்டர்

B) மலேரியா

C) எய்ட்ஸ்

D) இன்புளுயென்சா

விளக்கம்: காய்டர் – வட்டார நோய்

மலேரியா – தொடர்ச்சியற்ற நோய்

எய்ட்ஸ் – பெருங்கொள்ளை நோய்

இன்புளுயென்சா – கொள்ளை நோய்

75) எச்.ஐ.வி நோய்கான தடுப்பூசி ஆய்வறிக்கை எந்த ஆண்டு வழங்கப்பட்டது?

A) 1981

B) 1986

C) 2003

D) 2011

விளக்கம்: எச்.ஐ.வி நோயானது இரத்த வெள்ளையணுக்களைத் தாக்கி உடலினை தானாகவே நோயினை எதிர்க்கும் திறனைக் குறைக்கிறது. எய்ட்ஸ் பாதிப்பிற்கு எய்ட்ஸ் தடுப்பூசி ஆர்.வி. 144 என்ற மருந்தானது தாய்லாந்து நாட்டில் 2003-ஆம் ஆண்டு சோதனைக்காக வழங்கப்பட்டது. இதனுடைய ஆய்வறிக்கை 2011-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

76) கீழ்க்கண்ட எது தொற்றாத நோய் அல்ல?

A) புற்றுநோய்

B) நீரழிவுநோய்

C) முன் கழுத்துக் கழலை

D) நிமோனியா

விளக்கம்: தொற்றும் தன்மையுடைய நோய்கள்:

1. இன்புளுயென்சா

2. காசநோய்

3. பெரியம்மை

4. காலரா

5. நிமோனியா

6. மலேரியா

தொற்றும் தன்மையற்ற நோய்:

1. நீரழிவு நோய்

2. புற்றுநோய்

3. இதயம் சார்ந்த நோய்கள்

4. உடல் பருமன்

5. முன் கழுத்துக் கழலை

77) தொற்றாத நோய் பரவும் காரணங்களை ஆராய்க.

1. முறையாக இயங்காத உடல் உறுப்புகள்.

2. மரபுக் காரணங்கள்

3. ஹார்மோனின் அளவில் காணப்படும் ஏற்றத்தாழ்வு நிலை

4. நோய் எதிரப்பு அமைப்பிலுள்ள குறைபாடு

A) 1, 2 சரி

B) 1, 2, 3 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: தொற்றாத நோய்கள் பரவாத நோய்களாகும். இவை கீழ்க்கண்ட காரணங்களால் ஏற்படுகிறது.

1. முறையாக இயங்காத உடல் உறுப்புகள்.

2. மரபுக் காரணங்கள்

3. ஹார்மோனின் அளவில் காணப்படும் ஏற்றத்தாழ்வு நிலை

4. நோய் எதிரப்பு அமைப்பிலுள்ள குறைபாடு.

78) நோயரும்பு காலம் என்பது எது?

A) நோய் தொற்றும் காலத்திற்கும் நோயின் முதல் அறிகுறி வெளிப்படும் காலத்திற்கும் இடைப்பட்ட காலம்

B) நோய் தொற்றும் காலத்திற்கும் நோய் முழுமையாக குணமாகும் காலத்திற்கும் இடைப்பட்ட காலம்

C) நோயின் முதல் அறிகுறி வெளிப்படும் காலத்திற்கும் குணமாகும் காலத்திற்கும் இடைப்பட்ட காலம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: நோயரும்பு காலம் அல்லது நோய் அடைகாக்கும் காலம் என்பது நோய் தொற்றும் காலத்திற்கும் நோயின் முதல் அறிகுறி வெளிப்படும் காலத்திற்கும் இடைப்பட்ட காலம் ஆகும். இது சில மணி நேரம் முதல் பல நாட்கள் வரை வேறுபட்டுக் காணப்படும்.

79) மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் வைரஸ்கள் எந்த உடல் உறுப்பை பாதிக்கின்றன?

A) நுரையீரல்

B) சிறுநீரகம்

C) கல்லீரல்

D) இதயம்

விளக்கம்: மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் வைரஸ்கள் கல்லீரல் திசுக்களை அழிக்கின்றன.

80) கூற்றுகளை ஆராய்க.

1. பாக்டீரியா, சயனோ பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகியவை உயிரி உரங்களின் முக்கிய ஆதாரங்கள் ஆகும்.

2. பூஞ்சைகள் உடல்வழி இனப்பெருக்கம் செய்வதில்லை. மாறாக பால் மற்றும் பாலிலா முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்:1. பாக்டீரியா, சயனோ பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகியவை உயிரி உரங்களின் முக்கிய ஆதாரங்கள் ஆகும்.

2. பூஞ்சைகள் உடல்வழி இனப்பெருக்கம், பால் மற்றும் பாலிலா முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன.

81) எந்த நுண்ணுயிரி காற்று வழி நோய்த் தொற்றை ஏற்படுத்துகின்றன?

A) வைரஸ் மற்றும் பாக்டீரியா

B) வைரஸ் மற்றும் புரோட்டோசோவா

C) பாக்டீரியா மற்றும் பூஞ்சை

D) பாக்டீரியா மற்றும் புரோட்டோசோவா

விளக்கம்: வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் காற்றுவழி நோய்களை உருவாக்குகின்றன.

82) கீழ்க்கண்ட எந்த நோய் பாக்டீரியா நோய் அல்ல?

A) காசநோய்

B) தொண்டை அழற்சி

C) கக்குவான் இருமல்

D) பொன்னுக்கு வீங்கி

விளக்கம்: பாக்டீரியாவில் ஏற்படும் நோய்கள்:

1. காசநோய்

2. தொண்டை அழற்சி

3. கக்குவான் இருமல்

பொன்னுக்கு வீங்கி என்பது மிக்சோ வைரஸ் பரோடிடிஸ் என்ற வைரஸால் ஏற்படுகிறது.

83) கீழக்கண்டவற்றில் எந்த நோய் சுவாசப்பாதையை பாதிக்காது?

A) தட்டம்மை

B) சின்னம்மை

C) கக்குவான் இருமல்

D) காசநோய்

விளக்கம்: காசநோய் தவிர மேற்கண்ட அனைத்து நோய்களும் சுவாக் குழாய்களை பாதிக்கும் நோய்களாகும். காசநோய் நுரையீரலைப் பாதிக்கும் நோயாகும்.

84) நுண்கிருமிகள் எப்படி நோய்களைத் தோற்றுவிக்கின்றன என்று முதன்முதலில் கற்றவர் யார்?

A) இராபர்ட் ஹக்

B) இராபர்ட் கோச்

C) இராபர்ட் கோஃ

D) இராபர்ட் பாஸ்டியர்

விளக்கம்: பாக்டீரியாவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் இராபர்ட் கோஃ. இவர் ஜெர்மானிய மருத்துவராவார். இவர் முதன் முதலில் நுண்கிருமிகள் எப்படி நோய்களைத் தோற்றுவிக்கின்றன என்பதை கற்றவராவார்.

85) புவியின் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே நேரத்தில் தோன்றி அதிகமான எண்ணிக்கையில் மக்களைப் பாதிக்கும் வகையைச் சார்ந்த நோய்___________எனப்படும்

A) என்டெமிக்

B) எபிடெமிக்

C) பான்டெமிக்

D) ஸ்பொராடிக்

விளக்கம்: புவியின் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதயில் ஒரே நேரத்தில் தோன்றி அதிகமான எண்ணிக்கையில் மக்களைப் பாதிக்கும் வகையைச் சார்ந்த நோய் கொள்கை நோய் எனப்படும். இதனை எபிடெமிக் என்பர்.

86) காசநோய் எந்த பாக்டீரியாவால் ஏற்படுகிறது?

A) போர்டெடெல்லா பெர்டுசிஸ்

B) கோர்னிபாக்டீரியம் டிஃப்தீரியே

C) மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்

D) வாரிசெல்லா ஸோஸ்டர்

விளக்கம்: காசநோய் மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது நுரையீரலைப் பாதிக்கிறது. இதன் அறிகுறிகள்:

1. தொடர் இருமல்

2. நெஞ்சு வலி

3. உடல் எடை குறைவு

4. பசியின்மை.

87) பொன்னுக்கு வீங்கி என்ற நோய் எந்த வைரஸ்-ஆல் ஏற்படுகிறது?

A) மிக்சோ வைரஸ் பரோடிடிஸ்

B) வாரிசெல்லா ஸோஸ்டர்

C) ரூபெல்லா வைரஸ்

D) ரைனோ வைரஸ்

விளக்கம்: பொன்னுக்கு வீங்கி என்ற நோய் மிக்சோ வைரஸ் பரோடிடிஸ் என்ற வைரஸ்-ஆல் ஏற்படுகிறது. இந்நோய் சுவாசக் குழாயை பாதிக்கிறது.

88) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) திராட்சை பழம் – சாக்கரோமைசிஸ்

B) காஃபி மற்றும் கோக்கோ – ஃபேசில்லஸ் மெகாடெரியம்

C) தயிர் – லாக்டோஃபேசில்லஸ்

D) ஈஸ்ட் – வைட்டமின் A

விளக்கம்: திராட்சை பழம் சாக்கரோமைசிஸ் கொண்டு நொதிக்க வைத்து தயாரிக்கப்படுகின்றன

காஃபி மற்றும் கோக்கோ போன்றவற்றை ஃபேசில்லஸ் மெகாடெரியம் என்ற பாக்டீரியாவைப் பயன்படுத்தி நொதிக்க வைக்கப்படுகின்றன

லாக்டோஃபேசில்லஸ் என்ற சிற்றினங்கள் பாலினை தயிராக மாற்றுகின்றன

ஈஸ்ட்கள் வைட்டமின் B கூட்டுப்பொருள்களை(காம்ப்ளக்ஸ்) அதிகம் உற்பத்தி செய்யும் ஆதாரங்களாக உள்ளன.

89) கீழ்க்கண்டவற்றுள் எது சிறு குடலை பாதிக்கிறது?

A) காலரா

B) டைபாய்டு

C) போலியோ

D) மலேரியா

விளக்கம்: டைபாய்டு (குடல்சார் காய்ச்சல்) சிறுகுடலை பாதிக்கிறது. இது சால்மோனெல்லா டைஃபி என்ற பாக்டீரியாவால் நீர் மூலம் பரவுகிறது.

90) கீழ்க்கண்டவற்றில் எது பாலை தயிராக மாற்றுகிறது?

A) சாக்கரோமைசிஸ் செரிவிசே

B) ஃபேசில்லஸ் மெகாடெரியம்

C) லாக்டோஃபேசில்லஸ்

D) ஆஸ்பர்ஜிலஸ்

விளக்கம்: லாக்டோஃபேசில்லஸ் என்ற சிற்றினங்கள் பாலினை தயிராக மாற்றுகின்றன.

91) கூற்றுகளை ஆராய்க.

1. மிக்சோ வைரஸ்-ஆல் ஏற்படும் நோய் தட்டம்மை

2. பொன்னுக்கு வீங்கி என்ற நோய் நுரையீரலை பாதிக்கிறது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: மிக்சோ வைரஸ்-ஆல் ஏற்படும் நோய் – இன்ஃபுளுயன்சா

தட்டம்மை ரூபெல்லா வைரஸ்-ஆல் ஏற்படுகிறது.

பொன்னுக்கு வீங்கி என்ற நோயால் பாதிக்கப்படும் உறுப்பு – மேல் சுவாக் குழாய்.

நுரையீரல் – காசநோய் வருவதால் பாதிக்கப்படும் உறுப்பு ஆகும்.

92) கூற்றுகளை ஆராய்க.

1. ஆந்த்ராக்ஸ் என்ற நோயானது செம்மறி ஆடுகளில் காணப்பட்டது.

2. நோயினைக் கடத்தும் காரணிகளைக் கொண்டு பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை அல்லது புரோட்டோசோவாக்களால் கடத்தும் நோய்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஆந்த்ராக்ஸ் என்ற நோயானது செம்மறி ஆடுகளில் காணப்பட்டது.

2. நோயினைக் கடத்தும் காரணிகளைக் கொண்டு காற்றின் மூலம், நீரின் மூலம் அல்லது கடத்திகள் (கொசு போன்ற) மூலம் பரவும் நோய்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.

93) மலேரியா கீழ்க்கண்ட எதன் மூலம் பரப்பப்படுகிறது?

A) வைரஸ்

B) பாக்டீரியா

C) பூஞ்சை

D) புரோட்டோசோவா

விளக்கம்: வளர்ந்து வரும் நாடுகளில் மிகவும் முக்கியமானதொரு சுகாதாரப் பிரச்சசனையாக மலேரியாவானது தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. பிளாஸ்மோடியம் என்ற புரோட்டோசோவாவைச் சார்ந்த ஒட்டுண்ணியால் இது ஏற்படுகிறது.

94) உலக மலேரியா தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?

A) ஏப்ரல் 25

B) ஏப்ரல் 7

C) மார்ச் 22

D)டிசம்பர் 23

விளக்கம்: ஏப்ரல் 25 – உலக மலேரியா தினம்

ஏப்ரல் 7 – உலக சுகாதார தினம்

மார்ச் 22 – உலக தண்ணீர் தினம்

டிசம்பர் 23 – தேசிய விவசாயிகள் தினம்.

95) புவியின் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே நேரத்தில் தோன்றி அதிகமான எண்ணிக்கையில் மக்களைப் பாதிக்கும் வகையைச் சேர்ந்த நோய் எது?

A) கொள்ளை நோய்

B) பெருங்கொள்ளை நோய்

C) தொடர்ச்சியற்ற நோய்

D) வட்டார நோய்

விளக்கம்: புவியின் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே நேரத்தில் தோன்றி அதிகமான எண்ணிக்கையில் மக்களைப் பாதிக்கும் வகையைச் சேர்ந்த நோய் கொள்ளை நோய். எ.கா. இன்புளுயென்சா.

96) மலேரிய ஒட்டுகளில் கொடியதும், உயிரைப் பறிக்கக் கூடியது எது?

A) பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்

B) பிளாஸ்மோடியம் மலேரியே

C) பிளாஸ்மோயடிம் ஃபால்ஸிபேரம்

D) பிளாஸ்மோடியம் ஓவேல்

விளக்கம்: மலேரிய ஒட்டுகளில் பிளாஸ்மோயடிம் ஃபால்ஸிபேரம் என்பது மிகவும் கொடியதும், உயிரைப் பறிக்கக் கூடியதும் ஆகும்.

97) கீழ்க்கண்டவற்றில் மலேரியாவைப் பற்றிய தனது ஆய்விற்கு புகழ்பெற்றவர் யார்?

A) சர் ரொனால்ட் ராஸ்

B) இராபர்ட் கோச்

C) இராபர்ட் கோஃ

D) ஆன்டன் வான் லூவன்ஹ{க்

விளக்கம்: சர் ரொனால்ட் ராஸ் என்பவர் இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் மருத்துவராவார். இவர் மலேரியாவைப் பற்றிய தனது ஆய்விற்கு புகழ் பெற்றவர். இவர் இந்திய மருத்துவத்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றினார்.

98) கீழ்க்கண்டவற்றில் எது பரவும் தன்மையுடைய நோய் அல்ல?

A) இன்புளுயென்சா

B) காசநோய்

C) நிமோனியா

D) முன் கழுத்துக் கழலை நோய்

விளக்கம்: தொற்றும் தன்மையுடைய நோய்கள்:

1. இன்புளுயென்சா

2. காசநோய்

3. பெரியம்மை

4. காலரா

5. நிமோனியா

6. மலேரியா

தொற்றும் தன்மையற்ற நோய்:

1. நீரழிவு நோய்

2. புற்றுநோய்

3. இதயம் சார்ந்த நோய்கள்

4. உடல் பருமன்

5. முன் கழுத்துக் கழலை

99) மலேரியா, பிளாஸ்மோடியம் என்ற புரோட்டோசோவாவைச் சேர்ந்த ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. கீழ்க்கண்டற்றில் எது அதன் வகை அல்ல?

A) பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்

B) பிளாஸ்மோடியம் மலேரியே

C) பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபேரம்

D) பிளாஸ்மோடியம் டைஃபி

விளக்கம்: பிளாஸ்மோடியத்தின் வகைகள்:

பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்

பிளாஸ்மோடியம் மலேரியே

பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபேரம்

பிளாஸ்மோடியம் ஓவேல்

100) மலேரியா எந்த வகை கொசுவினால் பரவக்கூடியது?

A) பிளாஸ்மோடியம்

B) கியூலக்ஸ்

C) அனாபிலெஸ்

D) ஃபிலேரியா

விளக்கம்: மலேரியாவானது பிளாஸ்மோடியம் என்ற புரோட்டோசோவாவைச் சேர்ந்த ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. இது அனோபிலெஸ் பெண் கொசுவால் பரவுகிறது.

101) காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் எந்த உடல் உறுப்பை பாதிக்கின்றன?

A) நுரையீரல்

B) சிறுநீரகம்

C) கல்லீரல்

D) இதயம்

விளக்கம்: காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் நுரையீரல் செல்களை சேதப்படுத்துகின்றன. தொடர் இருமல், நெஞ்சுவலி, உடல்எடை குறைவு மற்றும் பசியின்மை போன்றவை காசநோயின் அறிகுறிகளாகும்.

102) கூற்று: 1902-ல் நோபல் பரிசு பெற்றவர் சர் ரொனால்ட் ராஸ்

காரணம்: உடலியல் அல்லது மருத்துவத்துறைகளில், மலேரியா பரவும் விதம் பற்றி ஆராய்ந்தவர் சர் ரொனால்ட் ராஸ்

A) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்

B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

C) கூற்று சரி, காரணம் தவறு

D) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

விளக்கம்: உடலியல் அல்லது மருத்துவத்துறைகளில், மலேரியா பரவும் விதம் பற்றிய தனது கண்;டுபிடிப்புக்காக 1902-ஆம் ஆண்டு சர் ரொனல்ட் ராஸ்-க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

103) உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் தோராயமாக எத்தனை மக்கள் மலேரியா நோயால் பாதிக்கப்படுகின்றனர்?

A) 200 மில்லியன்

B) 300 மில்லியன்

C) 200 பில்லியன்

D) 300 பில்லியன்

விளக்கம்: உலகம் முழுவதும் கணக்கிடும்போது ஒவ்வொரு வருடமும் சுமார் 300 மில்லியன் மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இது மனிதனுக்கு மிகவும் அபாயகரமானதாக இருந்தாலும் குணப்படுத்தக்கூடிய நோயாகும்.

104) எந்த மாத்திரையின் பயன்பாடு மலேரியா ஒட்டுண்ணிகளைக் கொல்கிறது?

A) பாரசிட்டமால்

B) குயினைன்

C) குவானைன்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமான வியர்வை ஏற்படுவதைத் தொடர்ந்து காய்ச்சல் குறைகிறது. குயினைன் மாத்திரைகளின் பயன்பாடு மலேரியா ஒட்டுண்ணிகளைக் கொல்கிறது.

105) கூற்றுகளை ஆராய்க.

1. சிக்குன்குனியா என்ற நோயானது ஒற்றை இழை ஆர்.என்.ஏ என்ற வைரஸால் ஏற்படுத்தப்படுகிறது.

2. காலரா ஒரு அதீத வயிற்றுப்போக்கு நோயாகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சிக்குன்குனியா என்ற நோயானது ஒற்றை இழை ஆர்.என்.ஏ என்ற வைரஸால் ஏற்படுத்தப்படுகிறது.

2. காலரா ஒரு அதீத வயிற்றுப்போக்கு நோயாகும்.

106) டெங்கு காய்ச்சல் எந்த நுண்ணுயிரியால் ஏற்படுகிறது?

A) வைரஸ்

B) பாக்டீரியா

C) பூஞ்சை

D) புரோட்டோசோவா

விளக்கம்: டெங்கு காய்ச்சலானது வைரஸினால் ஏற்படுகிறது. இந்த நோயானது ஏற்கனவே இந்நோயினால் தாக்கப்பட்டவரை ஏடிஸ் எய்ஜிப்டி என்ற கொசு கடித்து பின்னர் ஆரோக்கியமானவரைக் கடிப்பதால் பரவுகிறது.

107) ஆர்.வி. 144 என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொர்புடையது?

A) காலரா

B) மலேரியா

C) டைபாய்டு

D) எய்ட்ஸ்

விளக்கம்: எச்.ஐ.வி நோயானது இரத்த வெள்ளையணுக்களைத் தாக்கி உடலை தானாகவே நோயினை எதிர்க்கும் திறனைக் குறைக்கிறது. இந்நோய் பாதிப்பிற்கு எய்ட்ஸ் தடுப்பூசி ஆர்.வி. 144 என்ற மருந்தானது தாய்லாந்து நாட்டில் 2003-ஆம் ஆண்டு சோதனைகாக வழங்கப்பட்டது.

108) கூற்று: மலேரியாவானது கொசுவினால் தான் பரவுகிறது

காரணம்: மலேரியா ஒட்டுண்ணியின் வளரும் நிலைகளானது கொசுவின் இரைப்பை-குடல்வழிப் பகுதியில் நடைபெறுகிறது

A) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்

B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

C) கூற்று சரி, காரணம் தவறு

D) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

விளக்கம்: மலேரியா ஒட்டுண்ணியின் வளரும் நிலைகளானது கொசுவின் இரைப்பை-குடல்வழிப் பகுதியில் நடைபெறுகிறது எனவும், எனவே மலேரியாவானது கொசுவினால் தான் பரவுகிறது என நிரூபித்தவர் சர் ரொனால்ட் ராஸ்.

109) கீழ்க்கண்டவற்றில் எந்த நோய் வீட்டு ஈக்களால் பரப்பப்படுகிறது?

A) டைபாய்டு

B) போலியோ

C) சிக்கன் குனியா

D) இன்ஃபுளுயென்சா

விளக்கம்: காலரா மற்றும் டைபாய்டு ஆகிய நோய்கள் வீட்டு ஈக்கள் மூலம் பரப்பப்படுகிறது.

காலரா ஒரு அதீத வயிற்றுப்போக்கு நோயாகும்

டைபாய்டு ஒரு குடல்சார் காய்ச்சல் ஏற்படுத்தும் நோயாகும்.

110) ரூபெல்லா வைரஸ்-ஆல் எந்த நோய் ஏற்படுகிறது?

A) தட்டம்மை

B) பொன்னுக்கு வீங்கி

C) சின்னம்மை

D) இன்புளுயென்சா

விளக்கம்: ரூபெல்லா வைரஸ்-ஆல் தட்டம்மை என்ற நோய் ஏற்படுகிறது. இது சுவாசக் குழாயைப் பாதிக்கிறது.

111) சின்னம்மை எந்த வைரஸ்-ஆல் ஏற்படுகிறது?

A) மிக்சோ வைரஸ்

B) வாரிசெல்லா ஸோஸ்டர்

C) ரூபெல்லா வைரஸ்

D) ஸோஸ்டர் வைரஸ்

விளக்கம்: சின்னம்மை ஸோஸ்டர் வைரஸ்-ஆல் ஏற்படுகிறது. இந்நோய் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது. இதன் அறிகுறிகள்: 1. தோலில் ஏற்படும் வீக்கம் (கொப்பளம்), காய்ச்சல்.

112) கியூலக்ஸ் என்ற கொசு இனம் கடிப்பதனால் ஏற்படும் நோய்?

A) ஃபிலேரியா

B) டெங்கு காய்ச்சல்

C) மலேரியா

D) சிக்கன் குனியா

விளக்கம்: இந்தியாவில் ஃபிலேரியா ஒரு முக்கியமான ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினையாகும். இந்த நோய் நூல் போன்ற புழுவாகிய நெமடோடுகள்) உச்சரேரியா பான்க்ராப்டீ என்ற புழுவினால் ஏற்படுகின்றது. இது கியூலக்ஸ் என்ற கொசு இனம் கடிப்பதன் மூலம் இது கடத்தப்படுகிறது.

113) கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும் நோய் எது?

A) போலியோ மைலிடிஸ்

B) ஹெப்பாடைட்டிஸ் ஏ

C) டைபாய்டு

D) காலரா

விளக்கம்: ஹெப்பாடைட்டிஸ் ஏ அல்லது நோய் தொற்றக்கூடிய ஹெப்பாடைட்டிஸ் கல்லீரலில் வீக்கத்தை உண்டாக்குகிறது.

114) கீழக்கண்டவற்றில் எந்த நோய் ஏடிஸ் எய்ஜிப்டி என்ற கொசுவினால் பரப்பப்படுகிறது?

A) சிக்குன்குனியா

B) டெங்கு

C) மலேரியா

D) A மற்றும் B

விளக்கம்: சிக்குன்குனியா மற்றும் டெங்கு ஆகியவை ஏடிஸ் எய்ஜிப்டி என்ற கொசு கடிப்பதால் பரப்பப்படுகிறது. மலேரியா பெண் அனாபிலஸ் கொசு மூலம் பரவுகிறது.

115) எலும்பு முறிப்பு காய்ச்சல் என்று அழைக்கப்படுவது எது?

A) காலரா

B) டெங்கு

C) டைபாய்டு

D) சிக்கன்குனியா

விளக்கம்: எலும்பு முறிப்பு காய்ச்சல் என அழைக்கப்படுவது டெங்கு. மூட்டுகளிலும் தசைநார்களிலும் கடுமையான வலி தோன்றுவதால், இதற்கு எலும்பு முறிப்பு காய்ச்சல் என்று பெயர்.

116) ஃபிலேரியா புழுவினால் கீழ்க்கண்ட எந்த நோய் ஏற்படுகிறது?

A) உச்சரேரியா பான்க்ராப்டீ

B) டெங்கு காய்ச்சல்

C) இன்ஃபுளுயன்சா

D) யானைக்கால் நோய்

விளக்கம்: ஃபிலேரியா புழுவின் அடைகாக்கும் நாட்கள் 8-16 மாதங்கள் ஆகும். இக்கால கட்டத்தில் கடுமையான தொற்று, காய்ச்சல் மற்றும் நிணநீர் சுரப்பிகள் வீக்கமடைதல் ஆகிய அறிகுறிகள் வெளிப்படுகின்றன. நாள்பட்ட தொற்றின் முக்கிய வெளிப்பாடு யானைக்கால் நோயாகும்.

117) உலக காசநோய் எதிர்ப்பு தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?

A) ஏப்ரல் 7

B) ஏப்ரல் 25

C) டிசம்பர் 1

D) மார்ச் 24

விளக்கம்: மார்ச் 24 – உலக காசநோய் எதிர்ப்பு தினம்

ஏப்ரல் 7 – உலக சுகாதார தினம்

ஏப்ரல் 25 – உலக மலேரியா தினம்

டிசம்பர் 1 – உலக எய்ட்ஸ் தினம்.

118) காசநோய் என்பது எந்த வகையான நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது?

A) வைரஸ்

B) பாக்டீரியா

C) பூஞ்சை

D) புரோட்டோசோவா

விளக்கம்: காசநோய் என்பது ஒரு வகையான பாக்டீரிய நோயாகும். எடுத்துக்காட்டாக நுரையீரல் சார்ந்த காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் நுரையீரல் செல்களை சேதப்படுத்துகின்றன.

119) ரோட்டா வைரஸ்-ஆல் ஏற்படும் நோய்?

A) போலியோ மைலிடிஸ்

B) ஹெப்பாடைட்டிஸ் ஏ

C) அதீத வயிற்றுப்போக்கு

D) காலரா

விளக்கம்: ரோட்டா வைரஸ்-ஆல் ஏற்படும் நோய் அதீத வயிற்றுப்போக்கு ஆகும். சரியான சுத்தமும் சுகாதாரமும் இந்நோயை தடுக்கும் வழிமுறையாகும்.

120) கீழ்க்கண்டவற்றில் எது மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய் ஆகும்?

A) போலியோ மைலிடிஸ்

B) ஹெப்பாடைட்டிஸ் ஏ

C) டைபாய்டு

D) காலரா

விளக்கம்: போலியோ மைலிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்படும் உறுப்பு – மத்திய நரம்பு மண்டலமாகும். இந்நோயை தடுக்க சால்க் என்ற தடுப்பு மருந்து அல்லது வாய்வழி போலியோ தடுப்பு மருந்து உண்ண வேண்டும்.

121) மலேரியா கொசுவினால் தான் பரவுகிறது என நிரூபித்தவர் யார்?

A) சர் ரொனால்ட் ராஸ்

B) இராபர்ட் கோச்

C) இராபர்ட் கோஃ

D) ஆன்டன் வான் லூவன்ஹக்

விளக்கம்: சர் ரொனால்ட் ராஸ் மலேரியாவைப் பற்றிய தனது ஆய்விற்கு புகழ் பெற்றவர். தனது ஆராய்ச்சியின் விளைவாக, மலேரியா ஒட்டுண்ணியின் வளரும் நிலைகளானது கொசுவின் இரைப்பை-குடல்வழிப் பகுதியில் நடைபெறுகிறது எனவும், எனவே மலேரியாவானது கொசுவினால் தான் பரவுகிறது எனவும் நிரூபித்தார்.

122) போர்டெடெல்லா பெர்டுசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நோய் எது?

A) காநோய்

B) தொண்டை அழற்சி நோய்

C) கக்குவான் இருமல்

D) பொன்னுக்கு வீங்கி

விளக்கம்: போர்டெடெல்லா பெர்டுசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நோய் – கக்கவான் இருமல். இது சுவாசக் குழாய் பகுதிகளை பாதிக்கிறது.

123) சாதாரண சளியை ஏற்படுத்தும் வைரஸ்?

A) மிக்சோ வைரஸ்

B) வாரிசெல்லா ஸோஸ்டர்

C) ரூபெல்லா வைரஸ்

D) ரைனோ வைரஸ்

விளக்கம்: ரைனோ வைரஸ் சாதாரண சளியை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், இருமல், மூக்கிலிருந்து ஒழுகுதல், தும்மல் மற்றும் தலைவலி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

124) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) டைபாய்டு

B) சாதாரண சளி

C) இன்ஃபுளுயென்சா

D) தட்டம்மை

விளக்கம்: டைபாய்டு என்பது நீர் மூலம் பரவும் நோய் ஆகும். ஆனால் சாதாரண சளி, இன்ஃபுளுயென்சா, தட்டம்மை போன்றவை வைரஸ்-ஆல் பரவும் நோயாகும்.

125) மலேரியா பற்றிய கூற்றுகளை ஆராய்க

1. இந்நோய் அனாபிளஸ் பெண் கொசு கடிப்பதன் மூலம் பரவுகிறது.

2. பிளாஸ்மோடியம் என்ற வைரஸ்-ஆல் இந்நோய் ஏற்படுகிறது.

3. பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபேரம் என்பது மிகவும் கொடியதும், உயிரைப் பறிக்கக் கூடியதும் ஆகும்.

4. இது மனிதனுக்கு மிகவும் அபாயகரமானது. குணப்படுத்த இயலாத நோய் ஆகும்

A) 1, 2 சரி

B) 1, 3 சரி

C) 2, 3 சரி

D) 3, 4 சரி

விளக்கம்: 1. இந்நோய் அனாபிளஸ் பெண் கொசு கடிப்பதன் மூலம் பரவுகிறது.

2. பிளாஸ்மோடியம் என்ற புரோட்டோசோவாவால் இந்நோய் ஏற்படுகிறது.

3. பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபேரம் என்பது மிகவும் கொடியதும், உயிரைப் பறிக்கக் கூடியதும் ஆகும்.

4. இது மனிதனுக்கு மிகவும் அபாயகரமானதாக இருந்தாலும் இது குணப்படுத்தக்கூடிய நோய் ஆகும்

126) சிக்கன்குனியாவை பரப்பும் கொசு எது?

A) பெண் அனாபிளஸ் கொசு

B) ஏடிஸ் எய்ஜிப்டி

C) உச்சரேரியா பான்க்ராப்டீ

D) கியூலக்ஸ்

விளக்கம்: சிக்கன்குனியா என்ற நோயானது பாதிக்கப்பட்ட ஏடிஸ் எய்ஜிப்டி என்ற கொசு பகல்நேரத்தில் மனிதர்களைக் கடிப்பதால் பரப்பப்படுகிறது.

127) கூற்றுகளை ஆராய்க.

1. ஃபிலேரியா என்ற நோய் உச்சரேரியா பான்க்ராப்டீ என்ற புழுவினால் ஏற்படுகின்றது.

2. இந்நோய் ஏடிஸ் எய்ஜிப்டி என்ற கொசு இனம் கடிப்பதன் மூலம் இது கடத்தப்படுகிறது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஃபிலேரியா என்ற நோய் உச்சரேரியா பான்க்ராப்டீ என்ற புழுவினால் ஏற்படுகின்றது.

2. இந்நோய் கியூலக்ஸ் என்ற கொசு இனம் கடிப்பதன் மூலம் இது கடத்தபடுகிறது.

128) பன்றிக்காய்ச்சல் எப்போது கண்டறியப்பட்டது?

A) 2008 ஏப்ரல்

B) 2009 ஏப்ரல்

C) 2010 ஏப்ரல்

D) 2007 ஏப்ரல்

விளக்கம்: 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பன்றிக்காய்ச்சலானது கண்டறியப்பட்டது. இந்நோய் மில்லியன் மக்களைத் தாக்கியது.

129) பன்றிக்காய்ச்சலானது கீழ்க்கண்ட எதன் மூலம் பரவுகிறது?

A) பாக்டீரியா

B) வைரஸ்

C) பூஞ்சை

D) புரோட்டோசோவா

விளக்கம்: பன்றிக்காய்ச்சலானது ஒரு வைரஸ் நோய் ஆகும். இன்ஃபுளுயன்சா வைரஸ் எச் 1 என் 1 உயிரிதான் இந்த நோய் பரவுவதற்கு காரணமாக உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

130) எந்த ஆண்டு செம்மறி ஆடுகளில் காணப்பட்ட ஆந்த்ராக்ஸ் என்ற நோயானது பேசில்லஸ் ஆந்தராசிஸ் என்ற உயிரியால் உருவாகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார் இராபர்ட் கோஃ?

A) 1879

B) 1876

C) 1878

D) 1877

விளக்கம்: 1876-ஆம் ஆண்டு செம்மறி ஆடுகளில் காணப்பட்ட ஆந்த்ராக்ஸ் என்ற நோயானது பேசில்லஸ் ஆந்தராசிஸ் என்ற உயிரியால் உருவாகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார் இராபர்ட் கோஃ என்னும் ஜெர்மானிய மருத்துவர்.

131) பறவை இன்ஃபுளுயென்சா வைரஸ் எந்த ஆண்டு தோன்றியது?

A) 1996

B) 2009

C) 1998

D)2010

விளக்கம்: பறவை இன்ஃபுளுயென்சா வைரஸ் எனப்படும் எச் 5 என் 1 1996-ஆம் ஆண்டு தோன்றியது. இது பறவைகளில் தோன்றி மனிதர்களுக்கு பரவும் ஒரு வகையான நோயாகும்.

132) பறவை இன்ஃபுளுயென்சா வைரஸ் நோயின் வெளிப்பாடு முதலாவதாக மனிதனில் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?

A) 1996

B) 1997

C) 2003

D) 2009

விளக்கம்: 1997-ஆம் ஆண்டு பறவை இன்ஃபுளுயென்சா வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் முதலாவதாக மனிதனில் கண்டுபிடிக்கப்பட்டது. 2003-ஆம் ஆண்டு டிசம்பரில் முதன்முதலில் இந்நோயின் வெளிப்பாடு அறியப்பட்டது.

133) கூற்று: பிரீயான்கள் நரம்புத் திசுக்களை சீர்குலைவடையச் செய்கின்றன.

காரணம்: இவை சாதாரணமான புரதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

A) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்

B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

C) கூற்று சரி, காரணம் தவறு

D) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

விளக்கம்: பிரீயான்கள் சாதாரணமான புரதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த நிலை நரம்புத் திசுக்களை சீர்குலைவடையச் செய்கின்றன.

134) எய்ட்ஸ் நோய் மனிதனின்_________________ஐ தாக்கி உடலினை பலவீனமடையச் செய்யும்?

A) இரத்த தட்டுக்கள்

B) .இரத்த வெள்ளையணுக்கள்

C) இரத்த சிவப்பணுக்கள்

D) கல்லீரல்

விளக்கம்: எய்ட்ஸ் நோய் மனிதனின் .இரத்த வெள்ளையணுக்கள் தாக்கி உடலினை பலவீனமடையச் செய்யும். இது ஒரு பெருங்கொள்ளை நோய் என்று அழைக்கப்படுகிறது.

135) ஃபிலேரியா நோய் கீழ்க்கண்ட எந்த உறுப்பை தாக்கும்?

A) மைய நரம்பு மண்டலம்

B) நிணநீர் மண்டலம்

C) சிறுகுடல்

D) சுவாச பாதைகள்

விளக்கம்: முதிர்சியடைந்த ஃபிலேரியா புழுக்கள் மனிதனின் நிணநீர் மண்டலத்தில் காணப்படுகின்றன. இதனால் நிணநீர் சுரப்பிகள் வீக்கமடைகின்றன.

136) கூற்று: எலும்பு முறிப்பு காய்ச்சல் என அழைக்கப்படுவது டெங்கு.

காரணம்: மூட்டுகளிலும் தசைநார்களிலும் கடுமையான வலி தோன்றும்

A) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்

B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

C) கூற்று சரி, காரணம் தவறு

D) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

விளக்கம்: எலும்பு முறிப்பு காய்ச்சல் என அழைக்கப்படுவது டெங்கு. மூட்டுகளிலும் தசைநார்களிலும் கடுமையான வலி தோன்றுவதால், இதற்கு எலும்பு முறிப்பு காய்ச்சல் என்று பெயர்.

137) எந்த ஆண்டு பன்றிக்காய்ச்சலானது உலக சுகாதார அமைப்பால் பெரும் கொள்ளை நோய் என்று அறிவிக்கப்பட்டது?

A) 2009 ஏப்ரல்

B) 2009 மே

C) 2009 ஜுன்

D) 2009 ஜுலை

விளக்கம்: பன்றிக்காய்ச்சலானது பல மில்லியன் மக்களைத் தாக்கியதால் இது பெரும்கொள்ளை நோய் என்று உலக சுகாதார அமைப்பால் 2009 ஜுன் மாதம் அறிவிக்கப்பட்டது.

138) இந்தியாவில் முதன் முதலில் எங்கு எச்.ஐ.வி நோயானது கண்டறியப்பட்டது?

A) கேரளா

B)ஆந்திரா

C) தமிழ்நாடு

D) கர்நாடாகா

விளக்கம்: எச்.ஐ.வி நோயானது இரத்த வெள்ளையணுக்களைத் தாக்கி உடலினை தானாகவே நோயினை எதிர்க்கும் திறனைக் குறைக்கிறது. இந்தியாவில் முதன் முதலாக தமிழ்நாட்டில்தான் ஆதாரத்துடன் எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

139) பறவை இன்ஃபுளுயென்சா முதன் முதலில் எந்த நாட்டில் கண்டறியப்பட்டது?

A) தெற்கு சீனா மற்றும் ஹாங்காங்

B) ஜப்பான் மற்றும் சிங்கப்பூர்

C) மலேசியா மற்றும் பிரிட்டன்

D) ஈரான் மற்றும் ஈராக்

விளக்கம்: பறவை இன்ஃபுளுயென்சா வைரஸ் எனப்படும் எச் 5 என் 1 வைரஸ் 1996-ஆம் ஆண்டு தோன்றியது. இந்த வைரஸால் தெற்கு சீனா மற்றும் ஹாங்காங்கில் முதன் முதலில் நோய் தோன்றியதாக கண்டறியப்பட்டது.

140) தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) ரொட்டிக்காளான் என்பது ஒரு செல் உயிரி

B) ஒரு செல் உயிரிகளில் தாலஸ் என்பது மைசீலியம் என்று அழைக்கப்படுகிறது

C) மைசீலியம் என்பது பல நுண்ணிய நூல்வடிவ ஹைஃபே என்ற இழைகளின் தொகுப்பாகும்

D) ஒவ்வொரு ஹைஃபாக்களும் 5 முதல் 10 மைக்ரோ மீட்டர் அகலமுடையவை.

விளக்கம்: ரொட்டிக்காளான்(ஈஸ்ட்) என்பது ஒரு செல் உயிரி

பல செல் உயிரிகளில் தாலஸ் என்பது மைசீலியம் என்று அழைக்கப்படுகிறது

மைசீலியம் என்பது பல நுண்ணிய நூல்வடிவ ஹைஃபே என்ற இழைகளின் தொகுப்பாகும்

ஒவ்வொரு ஹைஃபாக்களும் 5 முதல் 10 மைக்ரோ மீட்டர் அகலமுடையவை.

141) கூற்று: எச்.ஐ.வி வைரஸ், நோய் எதிர்ப்பு குறைவுபடுத்தும் வைரஸ் என்று அழைக்கப்படுகிறது.

காரணம்: இரத்த சிவப்பணுக்களை அல்லது லிம்போசைட்டுகளைத் தாக்கி உடலினை பலவீனமடையச் செய்கிறது.

A) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்

B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

C) கூற்று சரி, காரணம் தவறு

D) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

விளக்கம்: எச்.ஐ.வி என்றால் மனித நோய் எதிர்ப்பு குறைவுபடுத்தும் வைரஸ் என்கிறோம். இந்த வைரஸ் இரத்த வெள்ளையணுக்களை அல்லது லிம்போசைட்டுகளைத் தாக்கி உடலினை பலவீனமடையச் செய்கிறது. மேலும் உடலில் தானாகவே நோயினை எதிர்க்கும் திறனைக் குறைக்கிறது.

142) ஹெப்பாடைட்டிஸ் என்ற நோய் எந்த மனித உறுப்பை தாக்குகிறது?

A) சுவாசப்பாதை

B) கல்லீரல்

C) சிறுநீரகம்

D) இதயம்

விளக்கம்: ஹெப்பாடைட்டிஸ் – பி அல்லது சீரம் ஹெப்பாடைட்டிஸ் நோய், எண்டிரோ வைரஸ் எனப்படும் ஹெப்படைடிஸ் பி வைரஸால்(எச்.பி.வி) ஏற்படுகிறது. இவ்வகை நோயினைப் பரப்பும் வைரஸானது கல்லீரல் செல்களைப் பாதித்து கடுமையான கல்லீரல் வீக்கத்தினை ஏற்படுத்துகிறது.

143) பன்றிக்காய்ச்சல் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இந்நோயை உருவாக்கும் வைரஸானது பன்றிகளிடமிருந்து உருவானதால் பன்றிக்காய்ச்சல் என இதற்கு பெயரிடப்பட்டது.

2. நோய்த்தடுப்பு ஆற்றல் மண்டலம் பலவீனமடைந்திருப்போருக்கு இந்த நோயின் பாதிப்பு மிக எளிதில் ஏற்படும்.

3. இந்த வைரஸானது சுவாசித்தலை தீவிரமாய் பாதிக்கும்.

4. இது நீரின் மூலம் பரவும் நோயாகும்

A) 1, 2 சரி

B) 1, 2, 3 சரி

C) 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இந்நோயை உருவாக்கும் வைரஸானது பன்றிகளிடமிருந்து உருவானதால் பன்றிக்காய்ச்சல் என இதற்கு பெயரிடப்பட்டது.

2. நோய்த்தடுப்பு ஆற்றல் மண்டலம் பலவீனமடைந்திருப்போருக்கு இந்த நோயின் பாதிப்பு மிக எளிதில் ஏற்படும்.

3. இந்த வைரஸானது சுவாசித்தலை தீவிரமாய் பாதிக்கும்.

4. இது காற்றின் மூலம் பரவும் நோயாகும்.

144) எந்த வைரஸ் காரணமாக பன்றிக்காய்ச்சல் பரவுகிறது?

A) இன்ஃபுளுயன்சா வைரஸ் எச் 1 என் 1

B) இன்ஃபுளுயன்சா வைரஸ் ஏ 1 என் 1

C) இன்ஃபுளுயன்சா வைரஸ் எச் 1 ஏ 1

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: இன்ஃபுளுயன்சா வைரஸ் எச் 1 என் 1 என்ற உயிரிதான் பன்றிக்காய்ச்சல் பரவுவதற்குக் காரணமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

145) இன்ஃபுளுயன்சா (பறவைக்காய்ச்சல்) கீழ்க்கண்ட எதன் மூலம் பரவுகிறது?

A) இன்ஃபுளுயென்சா வைரஸ் எச் 5 என் 1

B) இன்ஃபுளுயென்சா வைரஸ் எச் 1 என் 1

C) இன்ஃபுளுயென்சா வைரஸ் எச் 1 என் 5

D) இன்ஃபுளுயென்சா வைரஸ் எச் 5 என் 5

விளக்கம்: பறவைகளின் மூலம் பரவும் இன்ஃபுளுயென்சா (பறவைக்காய்ச்சல்) என்ற நோயானது, இன்ஃபுளுயென்சா வைரஸ் எச் 5 என் 1 என்ற வைரஸால் பரவுகிறது. இந்நோய்க் கிருமிகளின் அடைகாக்கும் காலம் 2 முதல் 7 நாட்களாகும்.

146) எந்த ஆண்டு பறவை இன்ஃபுளுயென்சா வைரஸ் மனிதனில் கண்டுபிடிக்கப்பட்டது?

A) 1996

B) 1997

C) 2003

D) 2009

விளக்கம்: 1997-ஆம் ஆண்டு பறவை இன்ஃபுளுயென்சா வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் முதலாவதாக மனிதனில் கண்டுபிடிக்கப்பட்டது.

147) கீழ்க்கண்டவற்றில் எது கொல்லப்பட்ட தடுப்பூசி அல்ல?

A) போலியோ

B) டைபாய்டு

C) காலரா தடுப்பூசி

D) கக்குவான் தடுப்பூசி

விளக்கம்: உயிருள்ள தடுப்பூசி:

1.வாய்வழி போலியோ தடுப்பூசி மருந்து

2. பிசிஜி தடுப்பூசி

கொல்லப்பட்ட தடுப்பூசி:

1. டைபாய்டு தடுப்பூசி

2. காலரா தடுப்பூசி

3. கக்குவான் தடுப்பூசி.

148) தடுப்பூசியிடுதல் நிகழ்வை அறிமுப்படுத்தியவர்?

A) எட்வர்டு ஜென்னர்

B) லூயிஸ் பாஸ்டர்

C) இராபரட் கோஃ

D) இராபர்ட் கோச்

விளக்கம்: தடுப்பூசியிடுதல் நிகழ்வை எட்வர்டு ஜென்னர் என்பவர் அறிமுகப்படுத்தினார். பொதுவாக தடுப்பூசி இரண்டு வகைப்படும். அவை

1. உயிருள்ள தடுப்பூசி

2. உயிரற்ற தடுப்பூசி.

149) கூற்று: பன்றிக்காய்ச்சலானது 2009-ஆம் ஆண்டு ஜுன் மாதம் உலக சுகாதார அமைப்பால் பெரும் கொள்ளை நோய் என்று அறிவிக்கப்பட்டது

காரணம்: இந்தியாவில் 31000 மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டனர்

A) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்

B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

C) கூற்று தவறு, காரணம் தவறு

D) கூற்று தவறு மற்றும் காரணம் சரி.

விளக்கம்: 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பன்றிக்காய்ச்சலானது கண்டறியப்பட்டது. இந்நோய் பல மில்லியன் மக்களைத் தாக்கியது. எனவே, பன்றிக்காய்ச்சலானது 2009-ஆம் ஆண்டு ஜுன் மாதம் உலக சுகாதார அமைப்பால் பெரும் கொள்ளை நோய் என்று அறிவிக்கப்பட்டது.

150) கீழ்க்கண்டவற்றில் எது டைபாய்டு மருந்து ஆகும்?

A) பிசிஜி

B) டீ.ஏ.பி

C) டீ.டீ

D) டி.டீ

விளக்கம்: டீ.ஏ.பி என்ற தடுப்பு மருந்தானது, டைபாய்டு, பாராடைஃபி ஏ மற்றும் பாராடைஃபி பி போன்ற நோய்களுக்கான தடுப்பு மருந்தாகும்.

151) எய்ட்ஸ் பாதிப்பை குணப்படுத்தும் தடுப்பூசி எந்த ஆண்டு சோதனைக்காக தாய்லாந்து நாட்டில் வழங்கப்பட்டது?

A) 2000

B) 1981

C) 1986

D) 2003

விளக்கம்: எய்ட்ஸ் பாதிப்பை குணப்படுத்தும் எய்ட்ஸ் தடுப்பூசி ஆர்.வி 144 என்ற மருந்தானது தாய்லாந்து நாட்டில் சோதனைக்காக 2003-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

152) காலரா, ஆந்தராக்ஸ் மற்றும் பிறநோய்களுக்கு மருந்து உருவாக்கியவர்?

A) எட்வர்டு ஜென்னர்

B) லூயிஸ் பாஸ்டர்

C) இராபரட் கோஃ

D) இராபர்ட் கோச்

விளக்கம்: லூயிஸ் பாய்ஸ்டர் என்பவர் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வேதியாலாளர் மற்றும் நுண்ணுயிரியலாளர் ஆவார். இவர் நோய்த் தடுப்பு மருந்தளித்தல் மற்றும் பாஸ்டுரைசேஷன் என்ற நிகழ்விற்கு பெயர் பெற்றவர். இவர் காலரா, ஆந்ராக்ஸ் மற்றும் பிற நோய்களுக்கு மருந்தை உருவாக்கினார்.

153) எம்.எம்.ஆர் என்ற தடுப்பூசி கீழ்க்கண்ட எதற்கு பயன்படுத்தப்படுவதில்லை?

A) பொன்னுக்கு வீங்கி

B) தட்டம்மை

C) ரூபெல்லா

D) தொண்டை அடைப்பான்

விளக்கம்: எம்.எம்.ஆர் :

1. பென்னுக்கு வீங்கி

2. தட்டம்மை

3. ரூபெல்லா தடுப்பு மருந்துகள் வைரஸ் தாக்கத்திற்கு எதிராக பாதுகாப்பை அளிக்கின்றன.

154) டிபிடீ (மூன்று தடுப்பு நோய்) என்ற தடுப்பூசி கீழ்க்கண்ட எந்த நோயை குணப்படுத்தாது?

A) டிப்தீரியா

B) பெர்டூசிஸ்

C) டைட்டனஸ்

D) ரூபெல்லா

விளக்கம்: டிபிடீ (மூன்று நோய் தடுப்பு) என்பது ஒரு கூட்டு தடுப்பு மருந்து ஆகும். இது கீழ்க்கண்ட மூன்று நோய்களைத் தடுக்க பயன்படுகிறது.

1. டிப்தீரியா (தொண்டை அடைப்பான்)

2. பெர்டூசியஸ் (கக்குவர் இருமல்)

3. டெட்னஸ்.

155) கீழ்க்கண்டவற்றில் எது காசநோயை குணப்படுத்தப் பயன்படுகிறது?

A) பிசிஜி

B) டிபிடீ

C) எம்.எம்.ஆர்

D) டி.டீ

விளக்கம்: பிசிஜி (பேசில்லஸ் கால்மெட்டெகுயிரின்) என்ற மருந்தானது, கால்மெட்டே மற்றும் குயிரின் என்ற இரு பிரான்சு நாட்டு ஊழியர்களால் 1908 முதல் 1921 வரை, 13 ஆண்டுகளின் முடிவில் உருவாக்கப்பட்டது. பேசில்லையானது வலு குறைக்கப்பட்ட, காசநோய்க்கெதிரான நோய்த் தடுப்பு திறனூட்டலாக பயன்படுத்தப்படுகிறது.

156) ஜென்னரின் தடுப்பூசி மனித குலத்தினிடையே இருந்த எந்த நோயை குணப்படுத்த உதவியது?

A) சின்னம்மை

B) தட்டம்மை

C) பெரியம்மை

D) போலியோ

விளக்கம்: தடுப்பூசியிடுதல் நிகழ்வை எட்வர்டு ஜென்னர் என்பவர் அறிமுகப்படுத்தினார். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, மனித குலத்தினிடையே இருந்த பெரியம்மையானது ஜென்னரின் தடுப்பூசி மூலம் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டது.

157) கீழ்க்கண்டவற்றில் எது பாக்டீரியாவின் நச்சாகும்?

A) பிசிஜி

B) டிபிடீ

C) டீ.டீ

D) டி.டீ

விளக்கம்: டீ.டீ(டெட்டனஸ் டாக்சாய்டு) என்பது டெட்டனஸ் பாக்டீரியாவின் நச்சாகும்.

158) பப்பாளி இலைக்கொழுந்து சாறு மற்றும் நிலவேம்பு கசாயம் போன்றவை எதற்கு பயன்படுகிறது?

A) இரத்த சிவப்பணு எண்ணிக்கையை அதிகரிக்க

B) இரத்த வெள்ளையணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க

C) இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க

D) பித்த நீர் மற்றும் கணைய நீர் சுரப்பை அதிகரிக்க

விளக்கம்: பப்பாளி இலைகளின் கொழுந்திலிருந்து எடுக்கப்பட்டு வடிகட்டப்பட்ட திரவம் மற்றும் நிலவேம்பு கசாயம் ஆகியவை டெங்கு நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது. இது இரத்த தட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக அறியப்பட்டுள்ளது.

159) இந்தியாவில் முதன் முதலில் தமிழ்நாட்டில் எப்போது எச்.ஐ.வி நோயானது கண்டறியப்பட்து?

A) 1990

B)1981

C)1986

D) 1994

விளக்கம்: எச்.ஐ.வி நோயானது இரத்த வெள்ளையணுக்களைத் தாக்கி உடலினை தானாகவே நோயினை எதிர்க்கும் திறனைக் குறைக்கிறது. இந்தியாவில் முதன் முதலாக தமிழ்நாட்டில்தான் 1986-ல் ஆதாரத்துடன் எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

160) எச்.வி.ஐ நோயானது முதன் முதலில் எந்த நாட்டில் கண்டறியப்பட்டது?

A) இங்கிலாந்து

B) அமெரிக்கா

C) இந்தியா

D) பிரான்ஸ்

விளக்கம்: எச்.ஐ.வி நோயானது முதன்முதலில் அமெரிக்காவில் ஹட்டாய் என்ற இடத்தில் 1981-ஆம் ஆண்டு கண்டுனரப்பட்டது.

161) எந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு திறனூட்டல் அட்டவணையை வழங்கியது?

A) 1970

B) 1980

C) 1990

D) 2000

விளக்கம்: 1970-ஆம் எந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு திறனூட்டல் அட்டவணையை வழங்கியது. இந்த அட்டவணையானது அனைத்து நாடுகளிலும் செயல்படுத்தப்படுகிறது. குழந்தைகளை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பதற்காக எந்த வயது குழந்தைக்கு எந்த தடுப்பு மருந்தை வழங்குதல் வேண்டும் என்பதனை இந்த அட்டவணைச் சுட்டிக்காட்டுகிறது.

162) தட்டம்மைக்கான தடுப்பு மருந்து குழந்தையின் எத்தனையாவது மாதத்தில் வழங்கப்படுகிறது?

A) 9-12

B) 18-24

C) 15 மாதங்கள் முதல் 2 வருடங்கள்

D) 2-3 வருடங்கள்

விளக்கம்: தட்டம்மைக்கான தடுப்பு மருந்து குழந்தையின் 9-12வது மாதங்களில் வழங்கப்படுகிறது.

163) வாய்வழி போலியோ குழந்தைக்கு எப்போது வழங்கப்படுகிறது?

A) 15ஆம் நாளில்

B) 6வது வாரம்

C) 10வது வாரம்

D) 14வது வாரம்

விளக்கம்: குழந்தையின் 15-ஆம் நாளில் வாய்வழியே போலியோ மருந்து வழங்கப்படுகிறது. பின் 18-24வது மாதங்களில் போலியோ மற்றும் டிபிடீ தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது.

9th Science Lesson 23 Questions in Tamil

23] பொருளாதார உயிரியல்

1) ஆண் தேனீயின் முக்கியப் பணி எது?

A) தேன் சேகரித்தல்

B) தேன் கூட்டைப் பராமரித்தல்

C) சிறிய தேனீக்களைப் பராமரித்தல்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: ஆண் தேனீக்களின் முக்கியப் பணி இராணித் தேனீ இடக்கூடிய முட்டைகளை கருவுறச் செய்தலே ஆகும்.

2) பழவியல் எனப்பொருள்படும் போமாலாஜி என்ற வார்த்தை எம்மொழிச் சொல்லிருந்து உருவாக்கப்பட்டது?

A) இலத்தீன்

B) பிரெஞ்சு

C) கிரேக்கம்

D) அரபு

விளக்கம்: பழவியல் எனப் பொருள்படும் போமாலஜி என்ற வார்த்தையானது, பழம் எனப் பொருள்படும் போமம் மற்றும் படிப்பு எனப் பொருள்படும் லாஜி ஆகிய லத்தீன் வார்த்தைகளிலிருந்து பெறப்படுகிறது. பழங்களின் தரம், உற்பத்தி முறைகள் ஆகியவற்றை முன்னேற்றி மேம்படுத்துவது, உற்பத்திக் காலத்தை முறைப்படுத்துவது மற்றும் உற்பத்தி செலவைக் குறைப்பது ஆகியவற்றை இது உள்ளடக்கியுள்ளது.

3) பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

A) 2016 அக்டோபர் 2

B) 2016 டிசம்பர் 23

C) 2016 பிப்ரவரி 18

D) 2016 ஜுன் 5

விளக்கம்: பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்பது இந்திய நடுவண் அரசின் வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு, விவசாயிகளுக்கு நிதி உதவியும், பயிர்க்காப்பீடும் வழங்குகின்றது. இது 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.

4) தமிழக அரசு விவசாயிகளுக்காக வழங்கியுள்ள செயலி எது?

A) விவசாயி

B) உயிர் காப்பான்

C) உழவன்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: தமிழ்நாடு அரசு உழவன் செயலி என்ற கைபேசி பயன்பாட்டுச் செயலியை விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விவசாயிகள், விவசாயம் சார்ந்த தகவல்களை அரசிடமிருந்து பெற முடியும்..

5) தமிழக அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உயிரி உரத்திட்டத்தின் நோக்கம் என்ன?

A) இயற்கை விவசாயத்தை முறையாக நிர்வகிப்பது

B) மண் வளத்தை அதிகரிப்பது

C) A மற்றும் B

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: உயிரி உரத்திட்டம் என்பது தமிழக அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்கை விவசாயத்தை முறையாக நிர்வகிப்பதும், மண் வளத்தை அதிகரிக்க உதவிசெய்வதும் இதன் நோக்கமாகும்.

6) வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்தி, அவற்றை அம்மோனியாவாக மாற்றி வழங்குவது எது?

A) ரைசோபியம்

B) அசோட்டோபாக்டர்

C) அசோலா

D) அசோஸ்பைரில்லம்

விளக்கம்: ரைசோபியம் என்பது ஒரு மண் வாழ் பாக்டீரியம் ஆகும். இந்த பாக்டீரியங்கள் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்தி, அவற்றை அமோனியாவாக மாற்றி வழங்குகின்றன.

7) இரத்தபுற்றுநோய்க்கு கீழ்க்கண்ட எந்த தாவரம் மருந்தாகப் பயன்படுகிறது?

A) சின்கோனா

B) சிவன் அவல்

C) வெட்பாலை

D) நித்திய கல்யாணி

விளக்கம்: நித்திய கல்யாணி, லுயுக்கேமியா என்று அழைக்கப்படும் இரத்த புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. இத்தாவரத்தின் அனைத்துப் பகுதியும் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

8) டெங்கு காய்ச்சலை குணப்படுத்த கீழ்க்கண்ட எது உதவும்?

A) நன்னாரி

B) பப்பாளி

C) தைலமரம்

D) துளசி

விளக்கம்: பப்பாளி தாவரத்தின் இலைகள் டெங்கு காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இந்த இலைச்சாறுடன் நிலவேம்பு கொழுந்து இலைச்சாறும் சேர்த்து பருகும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

9) கீழ்க்கண்டவற்றில் எது ஒளிச்சேர்க்கை மூலம் பெறப்படும் ஆற்றலால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது?

A) ரைசோபியம்

B) அசோட்டோபாக்டர்

C) அசோலா

D) அசோஸ்பைரில்லம்

விளக்கம்: அசோலா ஒரு நீர் பெரணியாகும். இது நீரின் மேல் மிதக்கும் தன்மை கொண்டது. இது ஒளிச்சேர்க்கை மூலம் பெறப்படும் ஆற்றலால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது.

10) கீழ்க்கண்டவற்றில் பாறை மற்றும் காட்டுத்தேனீ எது?

A) ஏபிஸ் டார்சேட்டா

B) ஏபிஸ் புளோரியா

C) ஏபிஸ் இண்டிகா

D) ஏபிஸ் மெல்லி ஃபெரா

விளக்கம்: உள்நாட்டு வகைகள்:

1. ஏபிஸ் டார்சேட்டா (பாறை மற்றும் காட்டுத்தேனீ)

2. ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ)

3. ஏபிஸ் இண்டிகா (இந்தியத் தேனீ)

வெளிநாட்டு வகைகள்:

1. ஏபிஸ் மெல்லி ஃபெரா (இத்தாலிய தேனீ)

2. ஏபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ)

11) தோட்டக்கலையில் எத்தனை பிரிவுகள் உள்ளன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தோட்டக்கலை என்பது அறிவியல் மற்றும் கலை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும். மேம்படுத்தப்பட்ட வளர்ச்சி, தரம் மற்றும் மகசூல் கொண்ட, அதே வேளையில், நோய்கள் மற்றும் பூச்சிகளுக்கெதிரான திறனுடைய தாவரங்களை உருவாக்குவதையும் இது உள்ளடக்கியுள்ளது. இதில் நான்கு பிரிவுகள் உள்ளன. அவை,

1. பழவியல்

2. பூந்தோட்டப் பண்ணை

3. காய்கறிப்பண்ணை

4. நிலஅமைவுத் தோட்டங்கள்.

12) உழவன் செயலி கீழ்க்கண்ட எந்த தகவலை வழங்காது?

A) விவசாய மானியங்கள்

B) விவசாய உபகரணங்கள்

C) விதை மற்றும் உரங்களின் கையிருப்பு

D) பயிரின் இருப்பு

விளக்கம்: தமிழ்நாடு அரசு உழவன் செயலி என்ற கைபேசி பயன்பாட்டுச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன், மூலம் அரசு வழங்கும் விவசாய மானியங்கள், விவசாய உபகரணங்கள், பயிர்க் காப்பீட்டுத் தகவல்கள் மற்றும் காலநிலை ஆகியவை பற்றி தகவல்களைப் பெறமுடியும். மேலும் அரசு மற்றும் தனியார் நிலையங்களில் உள்ள விதை மற்றும் உரங்களின் கையிருப்பைப் பற்றிய தகவல்களையும் வழங்குகின்றது.

13) உயிரி உரங்கள் தாவர உட்பகுதிகளில்——————-முண்டுகளை உருவாக்கி, ஓம்புயிரிகளுக்கான முதல் நிலை ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதன் மூலம் தாவர வளர்ச்சியைத் தூண்டுகின்றன.

A) ரைசோபியம்

B) அசோட்டோபாக்டர்

C) அசோலா

D) அசோஸ்பைரில்லம்

விளக்கம்: உயிரி உரங்கள் என்பவை நுண்ணுயிரிகள் கலந்த பொருள்கள் ஆகும். இவற்றை விதைகள், தாவரங்களின் மேற்பரப்புகள் அல்லது மண் ஆகியவற்றில் பயன்படுத்தும்போது, தாவர உட்பகுதிகளில் ரைசோபியம் முண்டுகளை உருவாக்கி, ஓம்புயிரிகளுக்கான முதல் நிலை ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதன் மூலம் தாவர வளர்ச்சியைத் தூண்டுகின்றன.

14) பாம்பின் விஷ முறிவுக்கு பயன்படும் தாவரம் கீழ்க்கண்டவற்றில் எது?

A) நித்திய கல்யாணி

B) வெட்பாலை

C) சிவன் அவல் பொறி

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: பாம்பின் விஷ முறிவுக்கு சிவன் அவல் பொறி என்னும் தாவரத்தின் வேர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து ரிசெர்பைன் என்று அழைக்கப்படுகிறது.

15) நன்னாரி கீழ்க்கண்ட எதனை குணப்படுத்தப் பயன்படுகிறது?

A) காயங்களை சரிப்படுத்த

B) தோல் நோய் மற்றும் புற்றுநோய்

C) படர் தாமரை

D) பாக்டீரியத்தொற்று

விளக்கம்: நன்னாரி என்ற தாவரத்தின் வேர்களிலிருந்து பெறப்படும் டெர்பீன் என்ற மருந்தானது பாக்டீரியத் தொற்று மற்றும் வயிற்றுப்போக்கை குணப்படுத்தப் பயன்படுகிறது.

16) குயினைன் என்ற மருந்து கீழ்க்கண்ட எந்த தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது?

A) கற்றாழை

B) நன்னாரி

C) வெட்பாலை

D) சின்கோனா

விளக்கம்: சின்கோனா மரத்தின் மரப்பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் குயினைன் என்ற மருந்து மலேரியா மற்றும் நிமோனியா காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சின்கோனா மரத்தின் அறிவியல் பெயர் சின்கோனா அபிசினாலிஸ் என்பதாகும்.

17) ஆசிமம் சாங்டம் என்பது கீழ்க்கண்ட எந்த தாவரத்தின் அறிவியல் பெயர்?

A) கற்றாழை

B) நன்னாரி

C) துளசி

D) சின்கோனா

விளக்கம்: ஆசிமம் சாங்கடம் என்பது துளசியின் அறிவியல் பெயராகும். இதன் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் பயன்பாட்டு எண்ணெய் சளி, காய்ச்சல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தப்பயன்படுகிறது.

18) நைட்ரஜனை நிலைநிறுத்துவது மட்டுமின்றி பூஞ்சை எதிர்பொருள் மற்றும் பாக்டீரிய எதிர்பொருள் போன்ற கூட்டுப்பொருள்களையும் உற்பத்தி செய்வது எது?

A) ரைசோபியம்

B) அசட்டோபாக்டர்

C) அசோலா

D) அசோஸ்பைரில்லம்

விளக்கம்: அசட்டோபாக்டர் என்ற பாக்டீரியா நைட்ரஜனை நிலைநிறுத்துவது மட்டுமின்றி பூஞ்சை எதிர்பொருள் மற்றும் பாக்டீரிய எதிர்பொருள் போன்ற கூட்டுப்பொருள்களையும் உற்பத்தி செய்து தாவரங்களுக்கு வழங்குகின்றன.

19) தேனில் எந்த வைட்டமின்கள் காணப்படுகிறது?

A) வைட்டமின் B

B) வைட்டமின் C

C) வைட்டமின் D

D) வைட்டமின் A

விளக்கம்: தேனில் காணப்படும் பொருள்கள்:

1. அமினோ அமிலங்கள்

2. அஸ்கார்பிக் அமிலம்

3. B வைட்டமின்கள்

4. தாது உப்புகள்

பார்மிக் அமிலம் தேனைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.

20) கூற்று: அசோலா என்ற நீர்ப்பெரணியாது மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை என அழைக்கப்படுகிறது.

காரணம்: ஒளிச்சேர்க்கை மூலம் நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: அசோலா என்ற நீர்ப்பெரணியானது, நீரின் மேல் மிதக்கும் தன்மை கொண்டது. நீலப்பச்சைப் பாசியான அனபினாவுடன் சேர்ந்து சையனோ பாக்டீரிய கூட்டுயிர் வாழ்க்கையை நடத்துகின்றது. இது ஒளிச்சேர்க்கை மூலம் பெறப்படும் ஆற்றலால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது. எனவே, மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை எனவும் அழைக்கப்படுகின்றது.

21) கீழ்க்கண்டவற்றில் எது சிக்குன் குனியா நோயை குணப்படுத்தப் பயன்படுகிறது?

A) கற்றாழை

B) துளசி

C) நிலவேம்பு

D) சின்கோனா

விளக்கம்: நிலவேம்பிலிருந்து தயாரிக்கப்படும் டெர்பினாய்டுகள் என்ற மருந்து டெங்கு காய்ச்சல், நீரழிவு நோய் மற்றும் சிக்குன் குனியாவை குணப்படுத்தப்பயன்படுகிறது.

22) கீழ்க்கண்டவற்றில் எதன் மகசூலை அசோட்டோபாக்டர் என்ற பாக்டீரியா அதிகரிப்பதில்லை?

A) நெல்

B) கோதுமை

C) மக்காச்சோளம்

D) கம்பு

விளக்கம்: அசோட்டோபாக்டர் என்ற பாக்டீரியா கோதுமை, நெல், மக்காச்சோளம் மற்றும் சோளம் ஆகியவற்றின் மகசூலை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

23) கீழ்க்கண்டவற்றுள் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் நோக்கம் எது?

A) விவசாயிகளுக்கு நிதி உதவி

B) விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை

C) விவசாயிகளுக்கு நீர்பாசனத் திட்டம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்பது இந்திய நடுவண் அரசின் வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்கு நிதி உதவியும், பயிர்க்காப்பீடும் வழங்குகின்றது. இது 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.

24) கீழ்க்கண்டவற்றில் எது பாக்டீரியா அல்ல?

A) ரைசோபியம்

B) அசோட்டோபாக்டர்

C) அசோலா

D) அசோஸ்பைரில்லம்

விளக்கம்: மேற்கண்டவற்றில் அசோலா என்பது பாக்டீரியா அல்ல. இது நீர் பெரணியாகும். இது நீரின் மேல் மிதக்கும் தன்மை கொண்டது.

25) கீழ்க்கண்டவற்றில் எது பாஸ்பரஸ் ஊட்டச் சத்தினை எடுத்துக்கொள்ளும் திறனை அதிகரிக்கின்றன?

A) மைக்கோரைசா

B) அசோஸ்பைரில்லம்

C) ரைசோபியம்

D) அசோலா

விளக்கம்: பூஞ்சை வேர்கள் (மைக்கோரைசா): இவ்வகைப் பூஞ்சைகள் வாஸ்குலார் தாவரங்களின் வேர்களுடன் கூட்டுயிர் வாழ்க்கையை மேற்கொள்கின்றன. இவை பாஸ்பரஸ் ஊட்டச் சத்தினை எடுத்துக்கொள்ளும் திறனை அதிகரிக்கின்றன.

26) தோல் நோய் புற்றுநோயை குணப்படுத்தப் பயன்படுத்தப்படுவது எது?

A) கற்றாழை

B) நன்னாரி

C) வெட்பாலை

D) சின்கோனா

விளக்கம்: கற்றாழையிலிருந்து தயாரிக்கப்படும் ஆந்த்ராக்குயினோன் என்ற மருந்து காயங்களை சரிப்படுத்தவும், தோல் நோய் புற்றுநோயை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

27) இரத்த அழுத்தம் குறைவதற்கு கீழ்க்கண்ட எந்த தாவரத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது?

A) சின்கோனா மரம்

B) சிவன் அவல் பொறி

C) நித்திய கல்யாணி

D) வெட்பாலை

விளக்கம்: இரத்த அழுத்தம் குறைய மற்றும் பாம்பின் விஷ முறிவுக்கு சிவன் அவல் பொறி என்ற தாவரத்தின் வேர்களிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது.

28) கேத்தராந்தஸ் ரோஸியஸ் என்பது எந்த தாவரத்தின் அறிவியல் பெயராகும்?

A) வெட்பாலை

B) நித்திய கல்யாணி

C) சிவன் அவல் பொறி

D) நிலவேம்பு

விளக்கம்: கேத்தராந்தஸ் ரோஸியஸ் என்பது நித்திய கல்யாணியின் அறிவியில் பெயராகும். இந்த தாவரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் நிறைந்தது ஆகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து இரத்தப் புற்றுநோயை குணப்படுத்தப்பயன்படுகிறது.

29) சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க

1. நித்திய கல்யாணி – லுயுக்கேமியா

2. தைலமரம் – தலைவலி

3. பப்பாளி – சிக்குன் குனியா

4. நிலவேம்பு – நீரழிவுநோய்

A) 1, 2

B) 1, 2, 4

C) 1 மட்டும்

D) அனைத்தும்

விளக்கம்: 1. நித்திய கல்யாணி – லுயுக்கேமியா (இரத்தப் புற்றுநோய்)

2. தைலமரம் – தலைவலி, காய்ச்சல்

3. பப்பாளி – டெங்கு காய்ச்சல்

4. நிலவேம்பு – நீரழிவுநோய், டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா.

30) கீழ்க்கண்டவற்றில் ஆப்பிரிக்க தேனீ எது?

A) ஏபிஸ் டார்சேட்டா

B) ஏபிஸ் புளோரியா

C) ஏபிஸ் ஆடம்சோனி

D) ஏபிஸ் மெல்லி ஃபெரா

விளக்கம்: உள்நாட்டு வகைகள்:

1. ஏபிஸ் டார்சேட்டா (பாறை மற்றும் காட்டுத்தேனீ)

2. ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ)

3. ஏபிஸ் இண்டிகா (இந்தியத் தேனீ)

வெளிநாட்டு வகைகள்:

1. ஏபிஸ் மெல்லி ஃபெரா (இத்தாலிய தேனீ)

2. ஏபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ).

31) கீழ்;க்கண்டவற்றில் எது வயிற்றுப்போக்கு-விற்கு மருந்தாகப் பயன்படுகிறது?

A) நன்னாரி

B) வெட்பாலை

C) துளசி

D) A மற்றும் B

விளக்கம்: நன்னாரி – பாக்டீரியத் தொற்று, வயிற்றுப்போக்கு

வெட்பாலை – படர் தாமரை, வயிற்றுப்போக்கு, வீக்கம்.

32) படர்தாமாரையை குணப்படுத்;த கீழ்க்கண்ட எது பயன்படுகிறது?

A) கற்றாழை

B) நன்னாரி

C) வெட்பாலை

D) சின்கோனா

விளக்கம்: வெட்பாலை என்று அழைக்கப்படும் ரைட்டியா டிங்டோரியா என்ற தாவரத்தின் மரப்பால் மற்றும் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் பிளவினாய்டுகள் என்ற மருந்து படர்தாமரை, வயிற்றுப்பபோக்கு மற்றும் வீக்கத்தை குணப்படுத்தப்பயன்பகிறது.

33) மக்காச்சோளம், பார்லி, ஓட்ஸ் மற்றும் சோளம் போன்ற தாவரங்களின் மீது நோய்த்தடுப்பு உரமாக பயன்படுத்தப்படுவது எது?

A) அசோஸ்பைரில்லம்

B) அசோலா

C) ரைசோபியம்

D) அசோட்டோபாக்டர்

விளக்கம்: அசோஸ்பைரில்லம் என்ற பாக்டீரியா, வளிமண்டல நைட்ரஜனைப் பயன்படுத்தும் திறன் பெற்றவை. மேலும் அவற்றைத் தாவரங்களுக்குக் கடத்துகின்றன. மக்காச்சோளம், பார்லி, ஓட்ஸ் மற்றும் சோளம் போன்ற தாவரங்களின் மீது நோய்த்தடுப்பு உரமாக இவை பயன்படுத்துகின்றன.

34) BGR என்பதின் விரிவாக்கம் என்ன?

A) Blood Glucose Regulator

B) Blood Glucose Regulation

C) Blood Glucose Redcution

D) Blood Glucose Reuse

விளக்கம்: அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவ, நறுமணத் தாவரங்களுக்கான மத்திய நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து BGR-34 எனப்படும் நீரழிவு ஆயர்வேத தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

BGR – Blood Glucose Regulator

35) அனபினாவுடன் சேர்ந்து சையனோ பாக்டீரிய கூட்டுயிர் வாழ்க்கையை நடத்துவது எது?

A) ரைசோபியம்

B) அசோட்டோபாக்டர்

C) அசோலா

D) அசோஸ்பைரில்லம்

விளக்கம்: அசோலா, நீலப்பச்சைப் பாசியான அனபினாவுடன் சேர்ந்து சையனோ பாக்டீரிய கூட்டுயிர் வாழ்க்கையை நடத்துகின்றது. இது ஒளிச்சேர்க்கை மூலம் பெறப்படும் ஆற்றலால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது. எனவே, மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை எனவும் அழைக்கப்படுகின்றது.

36) கூற்றுகளை ஆராய்க.

1 சித்தா, ஆயர்வேதா, யோகா, யுனானி மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகள் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் மருந்துகளைப் பயன்படுத்துகின்றன.

2. மேற்கண்ட மருந்துப்பொருள்கள் தாவரங்களின் முதல்நிலை வளர்ச்சிதை மாற்றப் பொருள்கள் ஆகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1 சித்தா, ஆயர்வேதா, யோகா, யுனானி மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகள் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் மருந்துகளைப் பயன்படுத்துகின்றன.

2. மேற்கண்ட மருந்துப்பொருள்கள் தாவரங்களின் இரண்டாம்நிலை வளர்ச்சிதை மாற்றப் பொருள்கள் ஆகும்.

37) மலேரியாவிற்கான மருந்து கீழ்க்கண்ட எந்த தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது?

A) கற்றாழை

B) நன்னாரி

C) வெட்பாலை

D) சின்கோனா

விளக்கம்: சின்கோன மரத்தின் மரப்பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் குயினைன் என்ற மருந்து மலேரியா என்ற நோய்க்கு மருந்தாகப்பயன்படுத்தப்படுகிறது. சின்கோனா மரத்தின் அறிவியல் பெயர் சின்கோனா அபிசினாலிஸ் என்பதாகும்.

38) ரைட்டியா டிங்டோரியா என்பது எந்த தாவரத்தின் அறிவியல் பெயர்?

A) கற்றாழை

B) நன்னாரி

C) வெட்பாலை

D) சின்கோனா

விளக்கம்: ரைட்டியா டிங்டோரியா என்பது வெட்பாலை தாவரத்தின் அறிவியல் பெயராகும். இந்த தாவரத்திலிருந்து பெறப்படும் மருந்து படர் தாமரை, வயிற்றுப்போக்கு மற்றும் வீக்கத்தை குணப்படுத்தப் பயன்படுகிறது.

39) கூற்றுகளை ஆராய்க.

1. ரைசோபியம் – மண் வாழ் பாக்டீரியம்

2. மைக்கோரைசா – பூஞ்சை

3. அசோஸ்பைரில்லம் – தானிய உற்பத்தியை அதிகப்படுத்துகிறது

4. அசோட்டோபாக்டர் – நீர்ப்பெரணி

A) 1, 2, 3 சரி

B) 1, 2, 4 சரி

C) 1, 2 சரி

D)அனைத்தும் சரி

விளக்கம்: 1. ரைசோபியம் – மண் வாழ் பாக்டீரியம்

2. மைக்கோரைசா – பூஞ்சை

3. அசோஸ்பைரில்லம் – தானிய உற்பத்தியை அதிகப்படுத்துகிறது

4. அசோலா – நீர்ப்பெரணி

40) மத்திய கடல்சார் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனமானது எப்போது நிறுவப்பட்டது?

A) 1957

B) 1960

C) 1947

D) 1952

விளக்கம்: 1947-ஆம் ஆண்டு கேரளா மாநிலத்திலுள்ள கொச்சின் என்ற இடத்தில் மத்திய கடல்சார் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனமானது நிறுவப்பட்டது. இந்நிறுவனமானது கடல் மீன் வளர்ப்பு நிலையங்கள், வகைப்பாட்டியல் மற்றும் உயிரிகளின் பொருளாதாரப் பண்புகளை ஆராய்ச்சி செய்தல் போன்ற செயல்களில் அதிக கவனம் செலுத்துகின்றது.

41) காய்கறி வளர்ப்பு எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: காய்கறி வளர்ப்பானது மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,

1. சமயலறை அல்லது உணவுத் தோட்டங்கள்

2. வணிகத் தோட்டங்கள்

3. செயற்கைக் காய்கறித் தோட்டங்கள்

42) சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

1. சிவன் அவல் பொறி – பாம்பின் விஷ முறிவு

2. தைல மரம் – காய்ச்சல்

3. சின்கோனா மரம் – மலேரியா

4. நன்னாரி – பாக்டீரியத் தொற்று

A) 1, 2

B) 1, 2, 4

C) 1, 3, 4

D) அனைத்தும்

விளக்கம்: 1. சிவன் அவல் பொறி – பாம்பின் விஷ முறிவு, இரத்த அழுத்தம் குறைய

2. தைல மரம் – காய்ச்சல், தலைவலி

3. சின்கோனா மரம் – மலேரியா, நிமோனியா காய்ச்சல்

4. நன்னாரி – பாக்டீரியத் தொற்று, வயிற்றுப்போக்கு.

43) கீழ்க்கண்டவற்றில் எது தோல் சம்மபந்தப்பட்ட நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது?

A) கற்றாழை

B) துளசி

C) A மற்றும் B

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: கற்றாழை – தோல் நோய் புற்றுநோய் மற்றும் காயங்களை சரிபடுத்துதல்

துளசி – சளி, காய்ச்சல், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்.

44) கீழ்க்கண்டவற்றில் எது தாவரங்களின் முதல்நிலை வளர்சிதை மாற்றப்பொருள் அல்ல?

A) கார்போஹைட்ரேட்

B) அமினோ அமிலங்கள்

C) டெர்பினாய்டுகள்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: தாவரங்களின் முதல் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் அவற்றின் வாழ்க்கைக்குப் பயன்படுகின்றன. எ.கா. கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமிலங்கள்.

டெர்பினாய்டுகள் என்பது இரண்டாம் வளர்ச்சிதை மாற்றப் பொருள் ஆகும்.

45) அல்கலாய்டுகள் என்ற மருந்து எந்த தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது?

A) வெட்பாலை

B) நித்திய கல்யாணி

C) சிவன் அவல் பொறி

D) நிலவேம்பு

விளக்கம்: நித்திய கல்யாணி தாவரத்திலிருந்து அல்கலாய்டுகள் என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. கேத்தராந்தஸ் ரோஸியஸ் என்பது நித்திய கல்யாணியின் அறிவியல் பெயராகும். இந்த தாவரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் நிறைந்தது ஆகும்.

46) கீழ்க்கண்டவற்றில் இத்தாலிய தேனீ என்று அழைக்கப்படும் தேனீ?

A) ஏபிஸ் ஆடம்சோனி

B) ஏபிஸ் மெல்லி ஃபெரா

C) ஏபிஸ் டார்சேட்டா

D) ஏபிஸ் இண்டிகா

விளக்கம்: உள்நாட்டு வகைகள்:

1. ஏபிஸ் டார்சேட்டா (பாறை மற்றும் காட்டுத்தேனீ)

2. ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ)

3. ஏபிஸ் இண்டிகா (இந்தியத் தேனீ)

வெளிநாட்டு வகைகள்:

1. ஏபிஸ் மெல்லி ஃபெரா (இத்தாலிய தேனீ)

2. ஏபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ)

47) காளான்கள்________ என்ற பூஞ்சை பிரிவைச் சார்ந்தவiயாகும்?

A) ஸ்டெப்ரோமைசின்

B) வால்வோரியெல்லா வால்வேசி

C) பெசிடியோமைசிட்ஸ்

D)மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: காளான்கள் பெசிடியோமைசிட்ஸ் என்ற பூஞ்சை பிரிவைச் சார்ந்தவையாகும். இவை அதிக அளவு புரதங்களையும், நார்ச்சத்துக்களையும், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளன.

48) தவறாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) கற்றாழை – அலோவிரா

B) துளசி – ஆசிமம் சாங்கடம்

C) வெட்பாலை – ரைட்டியா டிங்டோரியா

D) சிவன் அவல் பொறி – கேத்தராந்தஸ் ரோஸியஸ்

விளக்கம்: மேற்கண்டவற்றில் தவறாக பொருந்தியுள்ளது சிவன் அவல் பொறி தாவரத்தின் அறிவியல் பெயர்

கற்றாழை – அலோவிரா

துளசி – ஆசிமம் சாங்கடம்

வெட்பாலை – ரைட்டியா டிங்டோரியா

சிவன் அவல் பொறி – ரவுல்பியா செர்பன்டினா.

49) அசோலா பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இது ஒரு நீர்ப் பெரணியாகும்.

2. இது நீலப்பச்சைப் பாசியான அனவினாவுடன் சேர்ந்து சையனோ பாக்டீரியா கூட்டுயிர் வாழ்க்கையை நடத்துகின்றது.

3. சூரியஒளியால் பெறப்படும் ஆற்றால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது.

4. மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை எனவும் அழைக்கப்படுகிறது.

A) 1, 2, 3 சரி

B) 1, 2, 4 சரி

C) 1, 2 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இது ஒரு நீர்ப் பெரணியாகும். இது நீரில் மிதக்கும் தன்மை கொண்டது.

2. இது நீலப்பச்சைப் பாசியான அனபினாவுடன் சேர்ந்து சையனோ பாக்டீரியா கூட்டுயிர் வாழ்க்கையை நடத்துகின்றது.

3. ஒளிச்சேர்க்கை மூலம் பெறப்படும் ஆற்றால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது.

4. மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை எனவும் அழைக்கப்படுகிறது

50) போமாலஜி என்ற வார்த்தை கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) தோட்டக்கலை

B) பழவியல்

C) நிலஅமைவுத் தோட்டங்கள்

D) காய்கறிப் பண்ணை

விளக்கம்: பழவியல் எனப் பொருள்படும் போமாலஜி என்ற வார்த்தையானது, பழம் எனப் பொருள்படும் போமம் மற்றும் படிப்பு எனப் பொருள்படும் லாஜி ஆகிய லத்தீன் வார்த்தைகளிலிருந்து பெறப்படுகிறது. பழங்களின் தரம், உற்பத்தி முறைகள் ஆகியவற்றை முன்னேற்றி மேம்படுத்துவது, உற்பத்திக் காலத்தை முறைப்படுத்துவது மற்றும் உற்பத்தி செலவைக் குறைப்பது ஆகியவற்றை இது உள்ளடக்கியுள்ளது.

51) நிமோனியா காய்ச்சலுக்கான மருந்து கீழ்க்கண்ட எந்த தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது?

A) கற்றாழை

B) நன்னாரி

C) வெட்பாலை

D) சின்கோனா

விளக்கம்: சின்கோனா மரத்தின் மரப்பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் குயினைன் என்ற மருந்து மலேரியா மற்றும் நிமோனியா காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சின்கோனா மரத்தின் அறிவியல் பெயர் சின்கோனா அபிசினாலிஸ் என்பதாகும்.

52) நீரழிவு நோய்காக புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஆயர்வேத மருந்து எது?

A) BGR-14

B) BGR-24

C) BGR-34

D) BGR-44

விளக்கம்: அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவ, நறுமணத் தாவரங்களுக்கான மத்திய நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து BGR-34 எனப்படும் நீரழிவு ஆயர்வேத தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

BGR – Blood Glucose Regulator.

53) கீழ்க்கண்டவற்றில் எது தாவரங்களின் இரண்டாம்நிலை வளர்ச்சிதை மாற்றப்பொருள் அல்ல?

A) அல்கலாய்டுகள்

B) அமினோ அமிலங்கள்

C) டெர்பினாய்டுகள்

D) பிளவோனாய்டுகள்

விளக்கம்: தாவரங்களின் இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்றப் பொருள்கள் தாவரங்களின் பாதுகாப்பு, போட்டி மற்றும் சிற்றினங்களின் உட்தொடர்பு ஆகியவற்றிக்குப் பயன்படுகின்றன. எ.கா. அல்கலாய்டுகள், டெர்பினாய்டுகள் மற்றும் பிளவோனாய்டுகள்.

தாவரங்களின் முதல் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் அவற்றின் வாழ்க்கைக்குப் பயன்படுகின்றன. எ.கா. கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமிலங்கள்.

54) கழிவை அழித்து நலத்தை உருவாக்கும் தொழில்நுட்பம் என சுருக்கமாக நாம் எதனை குறிப்பிடுகிறோம்?

A) கோழி வளர்ப்பு

B) மீன் வளர்ப்பு

C) காளான் வளர்ப்பு

D) ஆடு, மாடு வளர்ப்பு

விளக்கம்: தாவர, விலங்கு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைப் பயன்படுத்தி காளான்களை வளர்க்கும் முறையே காளான் வளர்ப்பு ஆகும். இது கழிவை அழித்து நலத்தை உருவாக்கும் தொழில்நுட்பம் என சுருக்கமாகக் கூறப்படுகிறது.

55) காளானின் வித்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) மைசீலியம்

B) ஹைஃபா

C) ஸ்பான்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: ஸ்பான் என்பது காளான் விதையாகும். நோய்நுண்மை நீக்கப்பட்ட நிலையில் பூஞ்சை உடலங்களை தானியங்களில் வைத்து வளர்ப்பதன் மூலம் இது பெறப்படுகின்றது. இவ்வாறு பெறப்பட்ட விதைகள் உரங்களின் மேல் தூவப்படுகின்றன.

56) மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல்_________எனப்படும்.

A) ஹைட்ரோபோனிக்ஸ்

B) ஏரோபோனிக்ஸ்

C) நியூட்ரோபோனிக்ஸ்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல் மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்புமுறை (ஹைட்ரோபோனிக்ஸ்) எனப்படும்.

57) எத்தனை வகையான காளான்கள் உள்ளன?

A) 2000

B) 2500

C) 3000

D) 3500

விளக்கம்: 3000க்கும் மேற்பட்ட காளான்கள் உள்ளன. இவை அதிக புரதங்களைவும், நார்ச்சத்துக்களையும், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளன.

58) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) காளான்கள் – ஸ்டெப்ரோமைசிஸ்

B) பட்டன் காளான் – அகாரிகஸ் பைஸ்போராஸ்

C) சிப்பக்காளான் – புளுரோட்டஸ் சிற்றினங்கள்

D) வைக்கோல் காளான் – வால்வோரியெல்லா வால்வேசி

விளக்கம்: காளான்கள் பெசிடியோமைசிட்ஸ் என்ற பூஞ்சைகள் பிரிவைச் சார்ந்தவையாகும். இவை அதிக புரதங்களைவும், நார்ச்சத்துக்களையும், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளன.

59) தேனீல் கீழ்க்கண்ட எது காணப்படுவதில்லை?

A) அமினோ அமிலம்

B) அஸ்கார்பிக் அமிலம்

C) தாது உப்புகள்

D) மாலிக் அமிலம்

விளக்கம்: தேனில் உள்ள பொருள்கள்:

1. அமினோ அமிலம்

2. அஸ்கார்பிக் அமிலம்

3. B வைட்டமின்கள்

4. தாது உப்புகள்

60) தேனீக்கள் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றைத் தெரிவு செய்க.

1. தனது ஒரு பயணத்தில் 100 முதல் 200 மலர்களிடமிருந்து தேனை சேகரிக்கும்.

2. ஏபிஸ் ஆடம்சோனி என்பது ஒரு குட்டித் தேனீ ஆகும்

3. இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது.

4. இராணீத் தேனீக்களின் வயிற்றில், உள்ள மெழுகுச் சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் பொருளினால், தேனீக்களின் தேனடையானது உருவாக்கப்படுகின்றது.

A) 1, 2

B) 3, 4

C) 1, 2, 3

D) அனைத்தும்

விளக்கம்: 1. தனது ஒரு பயணத்தில் 50 முதல் 100 மலர்களிடமிருந்து தேனை சேகரிக்கும்.

2. ஏபிஸ் ஆடம்சோனி என்பது ஒரு ஆப்பிரிக்க தேனீ ஆகும்

3. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.

4. வேலைக்காரத் தேனீக்களின் வயிற்றில், உள்ள மெழுகுச் சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் பொருளினால், தேனீக்களின் தேனடையானது உருவாக்கப்படுகின்றது.

61) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) நித்திய கல்யாணி – கேத்தராந்தஸ் ரேஸியஸ்

B) பப்பாளி – காரிகா பப்பாயா

C) தைலமரம் – யூக்கலிப்டஸ் குளோபுலஸ்

D) சின்கோனா மரம் – சின்கோனா டிங்டோரியா

விளக்கம்: மேற்கண்டவற்றில் சின்கோனா மரத்தின் தாவர பெயர் தவறாக உள்ளது.

நித்திய கல்யாணி – கேத்தராந்தஸ் ரேஸியஸ்

பப்பாளி – காரிகா பப்பாயா

தைலமரம் – யூக்கலிப்டஸ் குளோபுலஸ்

சின்கோனா மரம் – சின்கோனா அபிசினாலிஸ்

62) கீழ்க்கண்டவற்றில் எந்த தாவரத்தின் அனைத்து பகுதிகளும் மருந்தாகப் பயன்படுவதில்லை?

A) நித்திய கல்யாணி

B) சிவன் அவல் பொறி

C) கற்றாழை

D) B மற்றும் C

விளக்கம்: தாவரம் மருந்து தயாரிக்கப்பயன்படும் பகுதிகள்

கற்றாழை – இலைகள்

சிவன் அவல் பொறி – வேர்கள்

நித்திய கல்யாணி – அனைத்துப் பகுதிகளும்

63) BGR என்ற நீரழிவு ஆயர்வேத தடுப்பு மருந்து எத்தனை வகையான தாவர மூலிகை வளங்களை அங்கமாகக் கொண்டது?

A) 24

B) 34

C) 44

D) 54

விளக்கம்: BCG-34 என்பது 34 வகையான தாவர மூலிகை வளங்களை அங்கமாகக் கொண்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவ, நறுமணத் தாவரங்களுக்கான மத்திய நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து BGR-34 எனப்படும் நீரழிவு ஆயர்வேத தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

64) ஆந்த்ராக்குயினோன் என்ற மருந்து கீழ்க்கண்ட எந்த தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது?

A) கற்றாழை

B) நன்னாரி

C) வெட்பாலை

D) சின்கோனா

விளக்கம்: ஆந்த்ராக்குயினோன் என்ற மருந்து கற்றாழை தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. அலோ விரா என்பது கற்றாழை தாவரத்தின் அறிவியல் பெயர் ஆகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் ஆந்த்ராக்குயினோன் என்ற மருந்து காய்ங்களை சரிபடுத்துதல், தோல் நோய் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தப் பயன்படுகிறது.

65) ஹைட்ரோபோனிக்ஸ் என்ற தொழில்நுட்பமானது எந்த ஆண்டு கண்டறியப்பட்டது?

A) 1970

B) 1980

C) 1990

D) 1960

விளக்கம்: மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல் மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்புமுறை (ஹைட்ரோபோனிக்ஸ்) எனப்படும். இந்த நுட்பானது 1980ல் ஜெர்மன் தாவரவியலாளர் ஜீலியஸ் வான் சாக்ஸ் என்பவரால் செய்து காண்பிக்கப்பட்டது.

66) ஏரோபோனிக்ஸ் வேளாண் முறையில் முதன்மையான ஊடகம் எது?

A) நீர்

B) காற்று

C) உரம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: வளிமண்டல வேளாண்மை (ஏரோபோனிக்ஸ்) என்றும் அழைக்கப்படும் இம்முறை அதிநவீன மண்ணில்லா வேளாண்மைத் தோட்டமாகும். இதிலுள்ள முதன்மையான வளர்ஊடகம் காற்று ஆகும்.

67) தமிழகத்தை தாயகமாகக் கொண்ட புலிக்குளம் மாடுகள் எந்த மாவட்டத்தைச் சார்ந்தது?

A) மதுரை

B) திருப்பூர்

C) கோவை

D) தென்காசி

விளக்கம்: தமிழகத்தை தாயகமாகக் கொண்ட இழுவை மாடு புலிக்குளம் மாடு ஆகும். இவ்வின மாடுகள் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள கம்பம் பள்ளத்தாக்குகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. இவை ஜல்லிக்கட்டு மாடு எனவும் அழைக்கப்படுகின்றன. நிலத்தினை உரமேற்றவும், உழவு செய்யவும் இவ்வகை மாட்டினங்கள் அதிகம் பயன்படுகின்றன.

68) காளான் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. காளான் அறுவடை செய்ய 1 மாதம் முதல் 2 மாதம் வரை ஆகும்.

2. காளான் வளர ஏற்ற வெப்பநிலை – 15 முதல் 23 டிகிரி செல்சியஸ் ஆகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. காளான் அறுவடை செய்ய 1 மாதம் முதல் 3 மாதம் வரை ஆகும்.

2. காளான் வளர ஏற்ற வெப்பநிலை 15 முதல் 23 டிகிரி செல்சியஸ் ஆகும்.

69) கூற்று: கழிவை அழித்து நலத்தை உருவாக்கும் தொழில்நுட்பம் – காளான் வளர்ப்பு

காரணம்: தாவர, விலங்கு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைப் பயன்படுத்தி காளான்களை வளர்க்கலாம்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

D) கூற்று கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: தாவர, விலங்கு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைப் பயன்படுத்தி காளான்களை வளர்க்கும் முறையே காளான் வளர்ப்பு ஆகும். இது கழிவை அழித்து நலத்தை உருவாக்கும் தொழில்நுட்பம் என சுருக்கமாகக் கூறப்படுகிறது.

70) லுயுக்கேமியா என்பது கீழக்கண்ட எந்த நோயை குறிக்கிறது?

A) இரத்த அழுத்தம்

B) இரத்தப் புற்றுநோய்

C) நீரழிவு நோய்

D) டெங்கு காய்ச்சல்

விளக்கம்: லுயுக்கேமியா என்பது இரத்தப் புற்றுநோயை குறிக்கும். இதனைக் குணப்படுத்த நித்திய கல்யாணி என்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் அல்கலாய்டுகள் பயன்படுகிறது. நித்திய கல்யாணி தாவரத்தின் அறிவியல் பெயர் கேத்தராந்தஸ் ரோஸியஸ் என்பதாகும்.

71) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) கற்றாழை – ஆந்த்ராக்குயினோன்

B) துளசி – பயன்பாட்டு எண்ணெய்

C) நிலவேம்பு – டெர்பீன்

D) சின்கோனா மரம் – குயினைன்

விளக்கம்: மேற்கண்டவற்றில் தவறாக பொருந்தியுள்ளது நிலவேம்பு ஆகும்.

தாவரத்தின் பெயர் தாயரிக்கப்படும் மருந்து

கற்றாழை – ஆந்த்ராக்குயினோன்

துளசி – பயன்பாட்டு எண்ணெய்

நிலவேம்பு – டெர்பினாய்டுகள்

சின்கோனா மரம் – குயினைன்

72) காளான்கள் ஒரு வாரத்தில் எத்தனை செ.மீ உயரத்திற்கு வளரும் தன்மை பெற்றவை?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: காளான் வளர ஏற்ற வெப்பநிலை 15 முதல் 23 டிகிரி செல்சியஸ் ஆகும். இவை ஒரு வாரத்தில் 3 செ.மீ உயரத்திற்கு வளரக்கூடியவை. இது அறுவடை செய்யத் தேவையான வளர்ச்சி ஆகும். மூன்று வார காலத்தில், முழுமையான காளான்களை அறுவடை செய்யலாம்.

73) காளான் நிறம் மாறுதல் மற்றம் எடை குறைதல் போன்ற பிரிச்சனைகளை தீர்க்க பயன்படுவது எது?

A) X-கதிரவீச்சு

B) காமாகதிர்வீச்சு

C) ஆல்பா கதிர்கள்

D) பீட்டா கதிர்கள்

விளக்கம்: நிறம் மாறுதல், எடை குறைதல் மற்றும் சுவை இழப்பு ஆகியன அறுவடைக் காலத்தில் காணப்படும் முக்கியப் பிரச்சினைகளாகும். இவற்றைத் தவிர்க்க, கீழ்க்கண்ட முறைகளைப் பயன்படுத்தலாம்,

1. குளிர்வித்தல்

2. உலர்த்துதல்

3. கலனில் அடைத்தல்

4. வெற்றிட குளிர்வித்தல்

5. காமா கதிர்வீச்சு மற்றும் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்தல்.

74) கூற்றுகளை ஆராய்க. (ஹைட்ரோபோனிக்ஸ்)

1. மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல்.

2. இம்முறையை முதலில் செய்து காட்டியவர் – ஜீலியஸ் வான் சாக்ஸ்

3. இது விதையில்லா வெள்ளரி மற்றும் தக்காளி போன்றவைகளை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்காக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

4. இம்முறை முதன் முதலில் 1980-ல் செய்து காண்பிக்கப்பட்டது.

A) 1, 3 சரி

B) 1, 2, 4 சரி

C) 2, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல்.

2. இம்முறையை முதலில் செய்து காட்டியவர் – ஜீலியஸ் வான் சாக்ஸ்

3. இது விதையில்லா வெள்ளரி மற்றும் தக்காளி போன்றவைகளை வணித ரீதியாக உற்பத்தி செய்வதற்காக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

4. இம்முறை முதன் முதலில் 1980-ல் செய்து காண்பிக்கப்பட்டது.

75) கீழ்க்கண்ட எந்த முறையில் ஊட்டச்சத்துக்கள் தூவுதல் மூலம் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன?

A) ஹைட்ரோபோனிக்ஸ்

B) ஏரோபோனிக்ஸ்

C) நியூட்ரோபோனிக்ஸ்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: ஏரோபோனிக்ஸ் என்பது ஒரு வளிமண்டல வேளாண்மை முறையாகும். இதில் தாவரத்தின் வேர்கள் தொங்கவிடப்பட்டு ஊட்டசத்துக்கள் காற்றில் பனிபோல தூவப்படுகின்றன. தாவரங்கள் அவற்றை உறிஞ்சிக் கொண்டு வாழ்கின்றன. பனி போன்று தூவும் நிகழ்வானது ஒவ்வொரு சில நிமிடங்களிலும் நடக்கும்.

76) 1 கி.கி தேனில் எத்தனை கலோரி ஆற்றல் உள்ளது?

A) 3200

B) 2800

C) 2400

D) 2000

விளக்கம்: தேன் ஒரு ஆற்றல் மிகுந்த உணவாகும். 1 கி.கி தேனில் 3200 கலோரி ஆற்றல் உள்ளது.

77) தேனீ தனது ஒரு பயணத்தில் குறைந்தது_______முதல்________மலர்களிடம் தேனை சேகரிக்கும்?

A) 50-100

B) 10-50

C) 100-200

D) 150-200

விளக்கம்: தேனீ தனது ஒரு பயணத்தில் குறைந்தது 50 முதல் 100 மலர்களிடம் தேனை சேகரிக்கும்.

78) கீழ்க்கண்டவற்றில் எது உள்நாட்டு தேனீ அல்ல?

A) ஏபிஸ் டார்சேட்டா

B) ஏபிஸ் புளோரியா

C) ஏபிஸ் இண்டிகா

D) ஏபிஸ் மெல்லி ஃபெரா

விளக்கம்: உள்நாட்டு வகைகள்:

1. ஏபிஸ் டார்சேட்டா (பாறை மற்றும் காட்டுத்தேனீ)

2. ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ)

3. ஏபிஸ் இண்டிகா (இந்தியத் தேனீ)

வெளிநாட்டு வகைகள்:

1. ஏபிஸ் மெல்லி ஃபெரா (இத்தாலிய தேனீ)

2. ஏபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ).

79) கூற்றுகளை ஆராய்க.

1. தேன் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.

2. தேன் பசியைத் தூண்டுவதற்கும், செரிமானத்திற்கும் பயன்படுகிறது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தேன் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.

2. தேன் பசியைத் தூண்டுவதற்கும், செரிமானத்திற்கும் பயன்படுகிறது.

80) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) வெட்பாலை – பிளவினாய்டுகள்

B) நிலவேம்பு – அல்கலாய்டுகள்

C) நன்னாரி – டெர்பீன்

D) சிவன் அவல் பொறி – ரிசெர்பைன்

விளக்கம்: மேற்கண்டவற்றில் தவறாக பொருந்தியுள்ளது நிலவேம்பு ஆகும்.

தாவரத்தின் பெயர் தயாரிக்கப்படும் மருந்து

வெட்பாலை – பிளவினாய்டுகள்

நிலவேம்பு – டெர்பினாய்டுகள்

நன்னாரி – டெர்பீன்

சிவன் அவல் பொறி – ரிசெர்பைன்.

அல்கலாய்டுகள் என்பது நித்திய கல்யாணி தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் மருந்து ஆகும்.

81) BGR-34 என்ற ஆயுர்வேத மருந்து எதற்காகப் பயன்படுகிறது?

A) இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது

B) இரத்தத்தின் சக்கரை அளவைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது.

C) இரத்த புற்றுநோய் (லுயுக்கேமியா) வராமல் பாதுகாக்கிறது

D) இரத்த செல்களின் எண்ணிக்கையை பராமரிக்க பயன்படுகிறது.

விளக்கம்: BGR-34 என்பது 34 வகையான தாவர மூலிகை வளங்களை அங்கமாகக் கொண்டுள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவ, நறுமணத் தாவரங்களுக்கான மத்திய நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து BGR-34 எனப்படும் நீரழிவு ஆயர்வேத தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

82) கூற்றுகளை ஆராய்க.

1. தேன் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை வறட்சியை நீக்கவும் பயன்படுகிறது.

2. தேன் நாக்கு, வயிறு மற்றும் குடற்புண்களை குணப்படுத்த உதவுகிறது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1.தேன் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை வறட்சியை நீக்கவும் பயன்படுகிறது.

2. நாக்கு, வயிறு மற்றும் குடற்புண்களை குணப்படுத்த உதவுகிறது.

83) தேனீக்கள் எத்தனை வகையாகக் காணப்பகின்றன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தேனீக்கள் மூன்று வகையாகக் காணப்படுகின்றன. அவை,

1. இராணித் தேனீ

2. ஆண் தேனீ

3. வேலைக்காரத் தேனீ

84) தேன் கூட்டிலுள்ள மிகப்பெரிய தேனீ எது?

A) இராணித் தேனீ

B) ஆண் தேனீ

C) வேலைக்காரத் தேனீ

D) மலட்டுத் தேனீ

விளக்கம்: இராணித் தேனீயானது, தேன் கூட்டிலுள்ள மிகப்பெரிய உறுப்பினராகவும், இனப்பெருக்கம் செய்யும் பெண் தேனீயாகவும் உள்ளது. இவை ஆரோக்கியமான முட்டைகளிலிருந்து உருவாகின்றன. தேன் கூட்டில் முட்டையிடுவது இதன் பொறுப்பாகும்.

85) வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

A) முனைவர் வர்கீஸ் குரியன்

B) முனைவர் எம்.எஸ். சுவாமிநாதன்

C) நம்மாழ்வார்

D) மேற்கண்ட யாருமில்லை

விளக்கம்: முனைவர் வர்கீஸ் குரியன் என்பவரால் தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகமானது உருவாக்கப்பட்டது. எனவே, அவர் நவீன இந்தியாவின் பால் பண்ணைத் தொழில் சிற்பி என்றும், வெண்மைப் புரட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.

86) மத்திய உவர்நீர் வாழ் உயிரிவளர்ப்பு நிறுவனமானது எங்கு நிறுவப்பட்டது?

A) சென்னை

B) கொச்சின்

C) மும்பை

D) கொல்கத்தா

விளக்கம்: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 1987ஆம் ஆண்டு மத்திய உவர் நீர் வாழ் உயிரிவளர்ப்பு நிறுவனமானது நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் நோக்கமானது கிளிஞ்சல்கள் மற்றும் துடுப்புள்ள மீன்களை வளம் குன்றாமல் உவர் நீர்நிலைகளில் வளர்த்து நிர்வகித்தல் ஆகும்.

87) தேனைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் அமிலம் எது?

A) அமினோ அமிலம்

B) அஸ்கார்பிக் அமிலம்

C) பார்மிக் அமிலம்

D) சிட்ரிக் அமிலம்

விளக்கம்: தேன் ஒரு இனிப்பான, பாகு நிலை கொண்ட இயற்கையான தாவர உணவுப்பொருள் ஆகும். பார்மிக் அமிலம் தேனைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.

88) தேனீக்கள் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) ஆரோக்கியமான முட்டையிலிருந்து உருவானவை – ஆண் தேனீ

B) இனப்பெருக்கம் செய்யும் திறனுள்ள தேனீ – வேலைக்காரத் தேனீ

C) இராணீத் தேனியைவிட அளவில் பெரியது – வேலைக்காரத் தேனீ

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: ஆரோக்கியமான முட்டையிலிருந்து உருவானவை – இராணித் தேனீ

இனப்பெருக்கம் செய்யும் திறனுள்ள தேனீ – இராணித் தேனீ மற்றும் ஆண் தேனீ

இராணீத் தேனியே தேன் கூட்டில் அளவில் பெரியது.

89) தவறாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) கற்றாழை – தோல் நோய்

B) நன்னாரி – வயிற்றுப்போக்கு

C) நிலவேம்பு – சிக்கன் குனியா

D) சின்கோனா – படர்தாமரை

விளக்கம்: மேற்கண்டவற்றில் தவறாகப் பொருந்தியுள்ளது சின்கோனா மரம் பற்றி கூற்று ஆகும்.

தாவரத்தின் பெயர் குணப்படுத்தும் நோய்கள்:

கற்றாழை – தோல் நோய்

நன்னாரி – வயிற்றுப்போக்கு

நிலவேம்பு – சிக்கன் குனியா

சின்கோனா – மலேரியா மற்றும் நிமோனியா காய்ச்சல்.

90) ஜல்லிக்கட்டு மாடு என்று அழைக்கப்படும் மாடு எந்த மாவட்டத்தைச் சேர்ந்தது?

A) மதுரை

B) திருப்பூர்

C) கோவை

D) தென்காசி

விளக்கம்: தமிழகத்தை தாயகமாகக் கொண்ட இழுவை மாடு புலிக்குளம் மாடு ஆகும். இவ்வின மாடுகள் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள கம்பம் பள்ளத்தாக்குகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. இவை ஜல்லிக்கட்டு மாடு எனவும் அழைக்கப்படுகின்றன. நிலத்தினை உரமேற்றவும், உழவு செய்யவும் இவ்வகை மாட்டினங்கள் அதிகம் பயன்படுகின்றன.

91) மத்திய உவர் நீர் வாழ் உயிரிவளர்ப்பு நிறுவனம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

A) சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 1987ஆம் ஆண்டு மத்திய உவர் நீர் வாழ் உயிரிவளர்ப்பு நிறுவனமானது நிறுவப்பட்டது.

B) இந்நிறுவனத்தின் நோக்கமானது கிளிஞ்சல்கள் மற்றும் துடுப்புள்ள மீன்களை வளம் குன்றாமல் உவர் நீர்நிலைகளில் வளர்த்து நிர்வகித்தல் ஆகும்.

C) இந்நிறுவனமானது கடல் மீன் வளர்ப்பு நிலையங்கள், வகைப்பாட்டியல் மற்றும் உயிரிகளின் பொருளாதாரப் பண்புகளை ஆராய்ச்சி செய்தல் போன்ற செயல்களில் அதிக கவனம் செலுத்துகின்றது.

D) இந்நிறுவனமானது, துடுப்பு மீன் மற்றும் இறால் ஆகியவற்றை சிறிய அளவில் வளர்ப்போருக்கு நவீன தொழில்நுட்பங்களை வழங்கிட உதவிபுரிகிறது.

விளக்கம்: 1. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 1987ஆம் ஆண்டு மத்திய உவர் நீர் வாழ் உயிரிவளர்ப்பு நிறுவனமானது நிறுவப்பட்டது.

2. இந்நிறுவனத்தின் நோக்கமானது கிளிஞ்சல்கள் மற்றும் துடுப்புள்ள மீன்களை வளம் குன்றாமல் உவர் நீர்நிலைகளில் வளர்த்து நிர்வகித்தல் ஆகும்.

3. இந்நிறுவனமானது, துடுப்பு மீன் மற்றும் இறால் ஆகியவற்றை சிறிய அளவில் வளர்ப்போருகு;கு நவீன தொழில்நுட்பங்களை வழங்கிட உதவிபுரிகிறது.

கடல் மீன் வளர்ப்பு நிலையங்கள், வகைப்பாட்டியல் மற்றும் உயிரிகளின் பொருளாதாரப் பண்புகளை ஆராய்ச்சி செய்தல் போன்ற செயல்களில் அதிக கவனம் செலுத்துவது – மத்திய கடல்சார் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம்.

92) தேனின் பயன்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. தேன் புரைத்தடுப்பானக பயன்படுகிறது.

2. பாக்டீரிய எதிர்ப்புப் பொருளாகவும் பயன்படுகிறது.

3. இரத்தத்தை தூய்மையாக்கப் பயன்படுகிறது.

4. ஆயர்வேதம் மற்றும் யுனானி மருத்ததுவத்தில் பயன்படுகிறது

A) 1, 2 சரி

B) 2, 3 சரி

C) 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. தேன் புரைத்தடுப்பானக பயன்படுகிறது.

2. பாக்டீரிய எதிர்ப்புப் பொருளாகவும் பயன்படுகிறது.

3. இரத்தத்தை தூய்மையாக்கப் பயன்படுகிறது.

4. ஆயர்வேதம் மற்றும் யுனானி மருத்ததுவத்தில் பயன்படுகிறது.

93) ஹைட்ரோபோனிக்ஸ் என்பது மண்ணற்ற முறையில் விவசாயம் செய்தல் ஆகும். இது யாரால் முதலில் செய்து காண்பிக்கப்பட்டது?

A) சார்லஸ் டார்வின்

B) கரோலஸ் லின்னேயஸ்

C) வர்கீஸ் குரியன்

D) ஜீலியஸ் வான் சாக்ஸ்

விளக்கம்: மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல் மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்புமுறை (ஹைட்ரோபோனிக்ஸ்) எனப்படும். இந்த நுட்பமானது 1980ல் ஜெர்மன் தாவரவியலாளர் ஜீலியஸ் வான் சாக்ஸ் என்பவரால் செய்து காண்பிக்கப்பட்டது.

94) தேனில் கீழ்க்கண்ட எந்த அமிலம் காணப்படுகிறது?

A) அமினோ அமிலம்

B) அஸ்கார்பிக் அமிலம்

C) A மற்றும் B

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: தேன் ஒரு இனிப்பான, பாகு நிலை கொண்ட இயற்கையான தாவர உணவுப்பொருள் ஆகும். தேனில் அமினோ அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை காணப்படுகிறது.

95) ஹார்ட்டிகல்சர் என்ற வார்த்தை எம்மொழியிலிருந்து வந்தது?

A) இலத்தீன்

B) பிரெஞ்சு

C) கிரேக்கம்

D) அரபு

விளக்கம்: தோட்டக்கலை என்பது வேளாண்மையின் ஒரு பிரிவு ஆகும். இது கனிகள், காய்கறிகள் மற்றும் அழகுத் தாவரங்களை வளர்த்தலுடன் தொடர்புடையது. தோட்டம் எனப் பொருள்படும் ஹார்ட்ஸ் மற்றும் வளர்ப்பு எனப் பொருள்படும் கலரே என்ற லத்தீன் வார்த்தைகளிலிருந்து இது உருவானதாகும்.

96) கூற்றுகளை ஆராய்க.

1. மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல் – நியூட்ரோ போனிக்ஸ் எனப்படும்.

2. அக்வா ஹைட்ரோபோனிக்ஸ் என்பது விதையில்லா வெள்ளரி மற்றும் தக்காளி போன்றவைகளை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்காக வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகிறது.

3. ஹைட்ரோ போனிக்ஸ் என்ற நுட்பமானது ஆர்டிக் துருவப் பகுதிகளிலும், பாலைவனங்களிலும் சிறந்த மாற்று வேளாண் முறையாக உள்ளது.

4. ஹைட்ரோபோனிக்ஸ் என்ற முறையை முதலில் செய்து காண்பித்தவர் ஜீலியஸ் வான் சாக்ஸ்

A) 2, 3, 4 சரி

B) 1, 2, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல் – ஹைட்ரோ போனிக்ஸ் எனப்படும்.

2. அக்வா ஹைட்ரோபோனிக்ஸ் என்பது விதையில்லா வெள்ளரி மற்றும் தக்காளி போன்றவைகளை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்காக வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகிறது.

3. ஹைட்ரோ போனிக்ஸ் என்ற நுட்பமானது ஆர்டிக் துருவப் பகுதிகளிலும், பாலைவனங்களிலும் சிறந்த மாற்று வேளாண் முறையாக உள்ளது.

4. ஹைட்ராபோனிக்ஸ் என்ற முறையை முதலில் செய்து காண்பித்தவர் ஜீலியஸ் வான் சாக்ஸ்.

97) கீழ்க்கண்டவற்றில் எது பாக்டீரியத் தொற்று மற்றும் வயிற்றுப்போக்கை சரிசெய்யப் பயன்படுகிறது?

A) ஆசிமம் சாங்டம்

B) அலோ விரா

C) ஹெமிடெஸ்மஸ் இன்டிகஸ்

D) ஆன்ட்ரோ கிராபிஸ்

விளக்கம்: ஹெமிடெஸ்மஸ் இன்டிகஸ் என்பது நன்னாரியின் அறிவியல் பெயராகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் டெர்பீன் என்ற மருந்து பாக்டீரியத் தொற்று மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றைக் குணப்படுத்தப்பயன்படுகிறது.

98) வேலைக்காரத் தேனீக்களின் பணிகளில் பொருந்தாதது எது?

A) இனப்பெருக்கத் திறனற்ற ஆண் தேனீக்கள்

B) தேன் கூட்டிலுள்ள மிகச்சிறிய உறுப்பினர்களாகும்

C) தேன் சேகரித்தல் பணியில் ஈடுபடும்

D) சிறிய தேனீக்களைப் பராமரிக்கும்

விளக்கம்: வேலைக்காரத் தேனீ:

1. இனப்பெருக்கத் திறனற்ற பெண் தேனீக்கள்

2. தேன் கூட்டிலுள்ள மிகச்சிறிய உறுப்பினர்களாகும்

3. தேன் சேகரித்தல் பணியில் ஈடுபடும்

4. சிறிய தேனீக்களைப் பராமரிக்கும்

5. தேனடையைச் சுத்தம் செய்யும்

6. தேன் கூட்டைப் பாதுகாத்தல்

7. தேன்கூட்டின் வெப்பத்தைப் பராமரித்தல்

99) தேனில் காணப்படும் நொதி எது?

A) இன்வர்டேஸ்

B) மால்டேஸ்

C) பிரக்டோஸ்

D) மேற்கண்ட எதுமில்லை

விளக்கம்: தேன் இனிப்பான, பாகு நிலை கொண்ட இயற்கையான தாவர உணவுப் பொருள் ஆகும். டெக்ஸ்ட்ரோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்றவை தேனுக்கு இனிப்புச் சுவையைத் தருகின்றன. தேனில் இன்வர்டேஸ் என்ற நொதியும் காணப்படுகிறது.

100) BGR-34 பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இது 34 வகையான தாவர மூலிகை வளங்களை அங்கமாகக் கொண்டுள்ளது.

2. இரத்தத்தில் சக்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: BGR-34 என்பது 34 வகையான தாவர மூலிகை வளங்களை அங்கமாகக் கொண்டுள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றது.

101) தவறாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) கற்றாழை – காயங்களை சரிப்படுத்துதல்

B) நன்னாரி – பாக்டீரியத்தொற்று

C) நிலவேம்பு – நிமோனியா காய்ச்சல்

D) சின்கோனா – மலேரியா

விளக்கம்: மேற்கண்டவற்றில் தவறாகப் பொருந்தியுள்ளது நிலவேம்பு பற்றி கூற்று ஆகும்.

தாவரத்தின் பெயர் குணப்படுத்தும் நோய்கள்:

கற்றாழை – காயங்களை சரிபடுத்துதல், தோல் நோய்

புற்றுநோய்

நன்னாரி – வயிற்றுப்போக்கு மற்றும் பாக்டீரியத் தொற்று

நிலவேம்பு – சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல் மற்றும் நீரழிவு

நோய்

சின்கோனா – மலேரியா மற்றும் நிமோனியா காய்ச்சல்

102) BGR-34 மருந்து கண்டுபிடிப்பில் கீழ்க்கண்ட எந்த அமைப்பு ஈடுபடவில்லை?

A) அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் (CSIR)

B) தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (NBRI)

C) மருத்துவ, நறுமணத் தாவரங்களுக்கான மத்திய நிறுவனம்(CIMAP)

D) மத்திய ஆயுஷ் அமைச்சகம்

விளக்கம்: அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவ, நறுமணத் தாவரங்களுக்கான மத்திய நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து BGR-34 எனப்படும் நீரழிவு ஆயர்வேத தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

103) கீழ்க்கண்டவற்றில் எது வெளிநாட்டு தேனீ?

A) ஏபிஸ் டார்சேட்டா

B) ஏபிஸ் புளோரியா

C) ஏபிஸ் இண்டிகா

D) ஏபிஸ் மெல்லி ஃபெரா

விளக்கம்: உள்நாட்டு வகைகள்:

1. ஏபிஸ் டார்சேட்டா (பாறை மற்றும் காட்டுத்தேனீ)

2. ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ)

3. ஏபிஸ் இண்டிகா (இந்தியத் தேனீ)

வெளிநாட்டு வகைகள்:

1. ஏபிஸ் மெல்லி ஃபெரா (இத்தாலிய தேனீ)

2. ஏபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ)

104) கீழ்க்கண்டவற்றில் எது பாக்டீரியத் தொற்று மற்றும் வயிற்றுப்போக்கை சரிசெய்யப் பயன்படுகிறது?

A) ஆந்த்ராக்குயினோன்

B) டெர்பீன்

C) ஹெமிடெஸ்மஸ் இன்டிகஸ்

D) டெர்பினாய்டுகள்

விளக்கம்: ஹெமிடெஸ்மஸ் இன்டிகஸ் என்பது நன்னாரியின் அறிவியல் பெயராகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் டெர்பீன் என்ற மருந்து பாக்டீரியத் தொற்று மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றைக் குணப்படுத்தப்பயன்படுகிறது.

105) அலோ விரா என்பது எந்த தாவரத்தின் அறிவியல் பெயர் ஆகும்?

A) கற்றாழை

B) நன்னாரி

C) வெட்பாலை

D) சின்கோனா

விளக்கம்: அலோ விரா என்பது கற்றாழை தாவரத்தின் அறிவியல் பெயர் ஆகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் ஆந்த்ராக்குயினோன் என்ற மருந்து காயங்களை சரிபடுத்துதல், தோல் நோய் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தப் பயன்படுகிறது.

106) இராணித் தேனீ பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. தேன் கூட்டிலுள்ள மிகப்பெரிய உறுப்பினர்.

2. இனப்பெருக்கம் செய்யும் பெண் தேனீ.

3. ஆரோக்கியமான முட்டைகளிலிருந்து உருவான தேனீ

4. தேன் சேகரிப்பது இதன் வேலையாகும்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: இராணித் தேனீயானது, தேன் கூட்டிலுள்ள மிகப்பெரிய உறுப்பினராகவும், இனப்பெருக்கம் செய்யும் பெண் தேனீயாகவும் உள்ளது. இவை ஆரோக்கியமான முட்டைகளிலிருந்து உருவாகின்றன. தேன் கூட்டில் முட்டையிடுவது இதன் பொறுப்பாகும்.

தேன் சேகரிப்பில் ஈடுபடுவது மலட்டுத் தேனீயாகும்.

107) ஏரோபோனிக்ஸ் என்ற சொல்லுடன் தொடர்புடையது எது?

A) நீரில்லா வேளாண்மை

B) காற்றில்லா வேளாண்மை

C) வளிமண்டல வேளாண்மை

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: வளிமண்டல வேளாண்மை (ஏரோபோனிக்ஸ்) என்று அழைக்கப்படும் இம்முறை அதிநவீன மண்ணில்லா வேளாண்மைத் தோட்டமாகும். இதிலுள்ள முதன்மையான வளர்ஊடகம் காற்று ஆகும்.

108) கீழ்க்கண்டவற்றில் எது உள்நாட்டு பால் உற்பத்தி இனம் அல்ல?

A) சிவப்பு சிந்தி

B) சாகிவால்

C) தியோனி

D) ஹோல்ஸ்டீய்ன்

விளக்கம்: பால் உற்பத்தி இனங்கள் உள்நாட்டு இனங்களாகவோ அல்லது வெளிநாட்டு இனங்களாகவோ இருக்கலாம்.

1. உள்நாட்டு இனங்கள் – சாகிவால், சிவப்பு சிந்தி, தியோனி மற்றும் கிர். இவை இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவை. வலுவான கால்களையும், நிமிர்ந்த திமில்களையும், தளர்வான தோல்களையும் கொண்டுள்ளன. சிறப்பான நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளன.

2. வெளிநாட்டு இனங்கள் – ஜெர்ஸி, ப்ரௌன் ஸ்விஸ் மற்றும் ஹோல்ஸ்டீய்ன், ஃப்ரெய்ஸ்யன்.

109) Operation Flood என்பது எதனுடன் தொடர்புடையது?

A) பயிர் மேலாண்மை

B) நீர் மேலாண்மை

C) பால் மேம்பாடு

D) பருவமழைக்கால நடவடிக்கை

விளக்கம்: முனைவர் வர்கீஸ் குரியன் என்பவரால் தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகமானது உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது உலகின் மிகப்பெரிய பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டமான Operation Flood என்ற திட்டத்தை செயல்படுத்தியது.

110) எந்த தேனீக்களின் வயிற்றில், உள்ள மெழுகுச் சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் பொருளினால், தேனீக்களின் தேனடையானது உருவாக்கப்படுகின்றது?

A) இராணித் தேனீ

B) ஆண் தேனீ

C) வேலைக்காரத் தேனீ

D) இராஜா தேனீ

விளக்கம்: வேலைக்காரத் தேனீக்களின் வயிற்றில், உள்ள மெழுகுச் சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் பொருளினால், தேனீக்களின் தேனடையானது உருவாக்கப்படுகின்றது.

111) அதிதீவிர கால்நடை மேம்பாட்டுத் திட்டம் என்பது பால் உற்பத்தியை அதிகரிக்க இந்திய அரசாங்கமானது மேற்கொண்ட திட்டமாகும். இது உள்நாட்டுப் பசு இனங்களை கீழ்க்கண்ட எந்த இனங்களோடு கலப்புச் செய்து புதிய இன மாடுகளை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டதாகும்?

A) ஆசிய

B) ஐரோப்பிய

C) தென் அமெரிக்க

D) ஆப்பிரிக்க

விளக்கம்: கால்நடைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு இந்திய அரசாங்கமானது பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அதிதீவிர கால்நடை மேம்பாட்டுத் திட்டமானது பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக உள்நாட்டுப் பசு இனங்களை ஐரோப்பிய இனங்களோடு கலப்புச் செய்து புதிய இன மாடுகளை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டதாகும்.

112) கடலிலும், உள் நன்னீர் இடங்களிலும் மற்றும் கடலோர நீர் வாழ் உயிரிகள் வளர்ப்பு நிலைகளிலும் அதிகமான மீன் வளங்களைக் கொண்டுள்ள முன்னோடி மாநிலமாக விளங்கும் மாநிலம் எது?

A) ஆந்திரா

B) தமிழ்நாடு

C) கர்நாடகா

D) கேரளா

விளக்கம்: கடலிலும், உள் நன்னீர் இடங்களிலும் (ஏரி, குளங்கள், ஆறுகள்) மற்றும் கடலோர நீர் வாழ் உயிரிகள் வளர்ப்பு நிலைகளிலும் அதிகமான மீன் வளங்களைக் கொண்டுள்ள முன்னோடி மாநிலமாக விளங்கும் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

113) மீன் வளர்ப்பு என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) அக்வாகல்ச்சர்

B) செரிகல்ச்சர்

C) பிசிகல்ச்சர்

D) ஹார்டிகல்ச்சர்

விளக்கம்: பிசிகல்ச்சர் அல்லது மீன் வளர்ப்பு என்பது மீன்களை, குளம், நீர்த்தேக்கம் (டேம்), ஏரிகள், ஆறுகள் மற்றும் விளைநிலங்கள் போன்ற இடங்களில் இனப்பெருக்கம் செய்ய வைத்து, வளர்த்தெடுக்கும் செயல்முறையாகும்.

114) ட்ரோன்கள் என்று அழைக்கப்படும் தேனீ எது?

A) ஆண் தேனீ

B) இராணீத் தேனீ

C) வேலைக்கார தேனீ

D) இராஜாத்தேனீ

விளக்கம்: ஆண் தேனீ ட்ரோன்கள் என்று அழைக்கப்படுகிறது. இவை இனப்பெருக்கம் செய்யும் திறனுடைய ஆண் தேனீக்களாகும். இராணித் தேனீ இடக்கூடிய முட்டைகளை கருவுறச் செய்தலே இவற்றின் முக்கியப் பணியாகும்.

115) தாவரங்களை நீரில் வளர்க்கும் பழமையான முறையையும், மண்ணில்லா வேளாண் முறையையும் சேர்த்து உருவாக்கப்பட்ட புதிய முறை எது?

A) ஹைட்ரோபோனிக்ஸ்

B) ஏரோபோனிக்ஸ்

C) நியூட்ரோபோனிக்ஸ்

D) அக்வா போனிக்ஸ்

விளக்கம்: அக்வா போனிக்ஸ் முறை என்பது தாவரங்களை நீரில் வளர்க்கும் பழமையான முறையையும், மண்ணில்லா வேளாண் முறையையும் இணைத்து உருவாக்கப்பட்ட புதிய முறையாகும்.

116) விவசாயப் பயிர்கள் அல்லது கால்நடை வளர்ப்புப் பண்ணைகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களை வளர்க்கும் முறை________எனப்படும்?

A) தீவிர மீன் வளர்ப்பு

B) ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு

C) விரிவான மீன் வளர்ப்பு

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: விவசாயப் பயிர்கள் அல்லது கால்நடை வளர்ப்புப் பண்ணைகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களை வளர்க்கும் முறை ஒருங்கிணைந்த மீன் பண்ணை எனப்படுகிறது. நெற்பயிர், கோழிகள், கால்நடை, வாத்துகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களும் வளர்க்கப்படுகின்றன.

117) நவீன இந்தியாவின் பால் பண்ணைத் தொழில் சிற்பி என்று அழைக்கப்படுபவர் யார்?

A) முனைவர் வர்கீஸ் குரியன்

B) முனைவர் எம்.எஸ். சுவாமிநாதன்

C) நம்மாழ்வார்

D) மேற்கண்ட யாருமில்லை

விளக்கம்: முனைவர் வர்கீஸ் குரியன் என்பவரால் தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகமானது உருவாக்கப்பட்டது. எனவே, அவர் நவீன இந்தியாவின் பால் பண்ணைத் தொழில் சிற்பி என்றும், வெண்மைப் புரட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.

118) பிசிகல்ச்சர் என்பது மீன் வளர்ப்பு ஆகும். மீன் வளர்ப்பு எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: மீன் வளர்ப்பின் 5 வகைகள்:

1. விரிவான மீன் வளர்ப்பு

2. தீவிர மீன் வளர்ப்பு

3. ஒற்றைவகை மீன் வளர்ப்பு

4. பலவகை மீன் வளர்ப்பு

5. ஒருங்கிணைந்த மீன் பண்ணை.

119) மீன்கள் எத்தனை வகையான குளங்களில் வளர்க்கப்படுகிறது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: மீன்கள் பல்வேறு வளர்ச்சி நிலைகளுக்கேற்ப பல்வேறுபட்ட குளங்கள் தேவைப்படுகின்றன. அவையாவன,

1. இனப்பெருக்க குளம்

2. குஞ்சு பொரிக்கும் குழிகள்

3. நாற்றங்கால் குளங்கள்

4. வளர்க்கும் குளங்கள்

5. இருப்புக் குளங்கள்.

120) தேனீயின் அளவைப் பொருத்து கீழ்க்கண்ட தேனீக்களை ஏறுவரிசைப்படுத்துக.

1. இராணீத்தேனி

2. ஆண் தேனீ

3. வேலைக்காரத் தேனீ

A) 1, 2, 3

B) 3, 2, 1

C) 1, 3, 2

D) 2, 3, 1

விளக்கம்: 1. இராணித்தேனீ – தேன் கூட்டிலுள்ள மிகப்பெரிய உறுப்பினர்

2. ஆண் தேனீ – வேலைக்காரத் தேனீக்களைவிட அளவில் பெரியதாகவும், இராணித் தேனீக்களைவிட அளவில் சிறியதாகவும் உள்ளன.

3. வேலைக்காரத் தேனீ – மிகச்சிறிய உறுப்பினர் ஆகும்.

121) அக்வா போனிக்ஸ் முறையில் நீர்வாழ் உயிரினங்களால் வெளியேற்றப்படும் கழிவுப் பொருட்களை தாவரங்கள் உள்ளெடுத்துக் கொள்கின்றன. இந்த கழிவுப்பொருள்களை தாவர ஊட்டப்பொருள்களாக மாற்றுவது எது?

A) பாக்டீரியா

B) பூஞ்சைகள்

C) புரோட்டோசோவா

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: விலங்குகளால் வெளியேற்றப்படும் கழிவுகளை தாவரங்கள் உள்ளெடுத்துக் கொள்கின்றன. இந்த கழிவுப்பொருள்கள் நைட்ராடாக்கும் பாக்டீரியாக்களின் உதவியுடன் முதலில் நைட்ரைட்டுகளாகவும், பிறகு நைட்ரேட்டுகளாகவும் மாற்றப்பட்டு, பின்னர் தாவரங்களால் ஊட்டச் சத்துகளாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

122) அக்வா போனிக்ஸ் எத்தனை பகுதிகளை கொண்டது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: அக்வா போனிக்ஸ் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியது . அவை,

1. நீர் வளர்த்தல் – மீன் போன்ற நீர் உயிரினங்களை வளர்ப்பது

2. மண்ணில்லா வளர்த்தல் – தாவரங்களை வளர்ப்பது.

123) கூற்று: முனைவர் வர்கீஸ் குரியன் என்பவரால் தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகமானது உருவாக்கப்பட்டது.

காரணம்: பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: முனைவர் வர்கீஸ் குரியன் என்பவரால் தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகமானது உருவாக்கப்பட்டது. எனவே, அவர் நவீன இந்தியாவில் பால் பண்ணைத் தொழில் சிற்பி என்றும், வெண்மைப் புரட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.

124) கடலோர மீன் வளர்ப்பில் தமிழ்நாடானது பிற கடலோர மாநிலங்களை ஒப்பிடும் போது எத்தனையாவது இடத்தில் உள்ளது?

A) 5

B) 4

C) 6

D) 10

விளக்கம்: கடலோர மீன் வளர்ப்பில் தமிழ்நாடானது பிற கடலோர மாநிலங்களை ஒப்பிடும் போது 6-வது இடத்தில் உள்ளது. கடலிலும், உள் நன்னீர் இடங்களிலும் (ஏரி, குளங்கள், ஆறுகள்) மற்றும் கடலோர நீர் வாழ் உயிரிகள் வளர்ப்பு நிலைகளிலும் அதிகமான மீன் வளங்களைக் கொண்டுள்ள முன்னோடி மாநிலமாக விளங்கும் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

125) கூற்றுகளை ஆராய்க.

1. நீர்வாழ் உயிரி வளர்ப்பு என்பது நீலப்புரட்சியை நோக்கமாகக் கொண்டது.

2. பால் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்கி, நகர்ப்புறங்களில் விநியோகம் செய்தலை அடிப்படையாகக் கொண்டது பால் செயல்முறைத் திட்டம் என்ற இந்திய அரசின் திட்டம்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. நீர்வாழ் உயிரி வளர்ப்பு என்பது நீலப்புரட்சியை நோக்கமாகக் கொண்டது.

2. பால் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்கி, நகர்ப்புறங்களில் விநியோகம் செய்தலை அடிப்படையாகக் கொண்டது பால் செயல்முறைத் திட்டம் என்ற இந்திய அரசின் திட்டம்.

126) கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) இருப்புக் குளம்

B) வளர்ப்புக் குளம்

c) உற்பத்திக் குளம்

D) இனப்பெருக்க குளம்

விளக்கம்: இருப்புக் குளங்கள்: இவை வளர்ப்புக் குளம் அல்லது உற்பத்திக் குளம் எனவும் அழைக்கப்படுகின்றன. விற்பனைக்கு ஏற்ற அளவினை அடையும் வரை மீன்குஞ்சுகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.

127) பால் உற்பத்தி மற்றும் இழுவை ஆகிய இரண்டிற்கும் பயன்படும் மாடு எது?

A) நான்கரேஜ் மாடு

B) அம்ரித்மகால்

C) உம்பளச்சேரி

D) மாலவி

விளக்கம்: இரு பயன்களையும் தரும் இனங்கள் பால் உற்பத்திக்காகவும், பண்ணை வேலைகளைச் சிறப்பாகச் செய்தவற்காகவும் பயன்படுகின்றன. எ.கா. அர்யானா மாடுகள், ஓங்கோல் மாடுகள், நான்கரேஜ் மாடுகள் மற்றும் தார்பார்கர் மாடுகள் ஆகியவை.

128) தேன் கூட்டின் மிகச்சிறிய உறுப்பினராக உள்ள தேனீ எது?

A) ஆண் தேனீ

B) இராணீத் தேனீ

C) வேலைக்கார தேனீ

D) இராஜாத்தேனீ

விளக்கம்: தேன் கூட்டின் மிகச்சிறிய உறுப்பினராக இருக்கும் வேலைக்காரத் தேனீ இனப்பெருக்கத் திறனற்ற பெண் தேனீக்கள் ஆகும். இவை தேன் சேகரித்தல், சிறிய தேனீக்களைப் பராமரித்தல் போன்ற பணிகளை செய்கிறது.

129) நீர் வாழ் உயிரிவளர்ப்பின் வகைகள் எத்தனை?

A) 2

B) 4

C) 5

D) 3

விளக்கம்: நீர் வாழ் உயிரி வளர்ப்பானது கீழ்க்காணும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,

1. நன்னீர்வாழ் உயிரிவளர்ப்பு

2. உவர்நீர்வாழ் உயிரிவளர்ப்பு

130) கீழ்க்கண்ட கூற்றுகளில் உள்நாட்டு பால் சுரப்பு இனங்களுக்கு பொருந்தாத கூற்று எது?

A) வலுவான கால்களையும், நிமிர்ந்த திமில்களையும் கொண்டுள்ளன.

B) சிறப்பான நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளன.

C) அதிகமாக பால் சுரப்பு காலத்தைக் கொண்டிருக்கும்

D) இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட இவை தளர்வான தோல்களை கொண்டதாகும்.

விளக்கம்: உள்நாட்டு இனங்கள் – சாகிவால், சிவப்பு சிந்தி, தியோனி மற்றும் கிர். இவை இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவை. வலுவான கால்களையும், நிமிர்ந்த திமில்களையும், தளர்வான தோல்களையும் கொண்டுள்ளன. சிறப்பான நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளன.

2. வெளிநாட்டு இனங்கள் – ஜெர்ஸி, ப்ரௌன் ஸ்விஸ் மற்றும் ஹோல்ஸ்டீய்ன், ஃப்ரெய்ஸ்யன். இவை அதிகமாக பால் சுரப்பு காலத்தைக் கொண்டிருக்கும்.

131) கடல்நீர் வாழ் உயிரி வளர்ப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) மார் வளர்ப்பு

B) கடல்பண்ணைகள்

C) ஆழமான நீர்வாழ் உயிரி வளர்ப்பு

D) A மற்றும் B

விளக்கம்: நீர்வாழ் உயிரினங்களை கடல் நீரில் வளர்த்தலையே கடல்நீர்வாழ் உயிரி வளர்த்தல் என்கிறோம். இவை மாரி வளர்ப்பு அல்லது கடல்பண்ணைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவ்வளர்ப்பானது கடலின் கரையை ஒட்டிய பகுதிகளிலும், ஆழ்கடல் பகுதிகளிலும் நடைபெறுகின்றது.

132) கீழே கொடுக்கப்பட்ட மீன் வளர்ப்பு குளங்களை வரிசைப்படுத்துக.

1. இனப்பெருக்க குளம்

2. நாற்றங்கால் குளங்கள்

3. குஞ்சு பொறிக்கும் குழிகள்

4. வளர்க்கும் குளங்கள்

5. இருப்புக் குளங்கள்

A) 1, 3, 2, 4, 5

B) 1, 2, 3, 4, 5

C) 1, 2, 3, 5, 4

D) 1, 3, 2, 4, 5

விளக்கம்: மீனின் வளர்ப்புக் குளங்களில் சரியான வரிசை:

1. இனப்பெருக்க குளம்

2. குஞ்சு பொறிக்கும் குழிகள்

3. நாற்றங்கால் குளங்கள்

4. வளர்க்கும் குளங்கள்

5. இருப்புக் குளங்கள்.

133) கூற்றுகளை ஆராய்க.

A) ஒற்றை வகை மீன்வளர்ப்பு – ஒரு வகை மீன் மட்டும் வளர்க்கப்படும்

B) பலவகை மீன் வளர்ப்பு – ஒன்றுக்கும் மேற்பட்ட மீன் வகைகளை ஒன்றுசேர நீர்நிலைகளில் வளர்த்தல்

C) ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு – மிகக்குறுகிய இடங்களில் அதிகமான எண்ணிக்கையிலான மீன்களை, உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், செயற்கையான உணவளித்து வளர்த்தல்.

D) விரிவான மீன் வளர்ப்பு – பரந்த இடத்தில் குறைவான எண்ணிக்கையிலான மீன்களை, இயற்கையான உணவளித்து வளர்த்தல்

விளக்கம்: ஒற்றை வகை மீன்வளர்ப்பு – ஒரு வகை மீன் மட்டும் வளர்க்கப்படும்

பலவகை மீன் வளர்ப்பு – ஒன்றுக்கும் மேற்பட்ட மீன் வகைகளை ஒன்றுசேர நீர்நிலைகளில் வளர்த்தல்

ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு – விவசாயப் பயிர்கள் அல்லது கால்நடை வளர்ப்புப் பண்ணைகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களை வளர்க்கும் முறை ஒருங்கிணைந்த மீன் பண்ணை எனப்படுகிறது. நெற்பயிர், கோழிகள், கால்நடை, வாத்துகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களும் வளர்க்கப்படுகின்றன.

விரிவான மீன் வளர்ப்பு – பரந்த இடத்தில் குறைவான எண்ணிக்கையிலான மீன்களை, இயற்கையான உணவளித்து வளர்த்தல்.

தீவிர மீன் வளர்ப்பு – மிகக்குறுகிய இடங்களில் அதிகமான எண்ணிக்கையிலான மீன்களை, உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், செயற்கையான உணவளித்து வளர்த்தல்.

134) மத்திய கடல்சார் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனமானது எங்கு உள்ளது?

A) சென்னை

B) திருவனந்தபுரம்

C) கொச்சின்

D) மும்பை

விளக்கம்: 1947-ஆம் ஆண்டு கேரளா மாநிலத்திலுள்ள கொச்சின் என்ற இடத்தில் மத்திய கடல்சார் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனமானது நிறுவப்பட்டது. இந்நிறுவனமானது கடல் மீன் வளர்ப்பு நிலையங்கள், வகைப்பாட்டியல் மற்றும் உயிரிகளின் பொருளாதாரப் பண்புகளை ஆராய்ச்சி செய்தல் போன்ற செயல்களில் அதிக கவனம் செலுத்துகின்றது.

135) Olericulture என்ற வார்த்தை கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) பழங்கள் வளர்ப்பு

B) காய்கறி வளர்ப்பு

C) பூக்கள் வளர்ப்பு

D) தோட்டக்கலை துறை

விளக்கம்: Olericulture என்றால் காய்கறி வளர்ப்பை குறிக்கும். காய்கறி வளர்ப்பு என்பது காய்கறித் தாவரங்களை வளர்ப்பது பற்றி அறிவியல் ஆகும்.

136) தேனுக்கு இனிப்புச் சுவையைத் தருவது எது?

A) சுக்ரோஸ்

B) டெக்ஸ்ரோஸ்

C) மால்டேஸ்

D) A மற்றும் B

விளக்கம்: தேன் ஒரு இனிப்பான, பாகு நிலை கொண்ட இயற்கையான தாவர உணவுப்பொருள் ஆகும். டெக்ஸ்ட்ரோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்றவை தேனுக்கு இனிப்புச் சுவையைத் தருகின்றன.

137) கீழ்க்கண்டவற்றில் இந்தியத் தேனீ எது?

A) ஏபிஸ் டார்சேட்டா

B) ஏபிஸ் புளோரியா

C) ஏபிஸ் இண்டிகா

D) ஏபிஸ் மெல்லி ஃபெரா

விளக்கம்: உள்நாட்டு வகைகள்:

1. ஏபிஸ் டார்சேட்டா (பாறை மற்றும் காட்டுத்தேனீ)

2. ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ)

3. ஏபிஸ் இண்டிகா (இந்தியத் தேனீ)

வெளிநாட்டு வகைகள்:

1. ஏபிஸ் மெல்லி ஃபெரா (இத்தாலிய தேனீ)

2. ஏபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ)

138) கூற்று: இறால் மகிழ்ச்சியை அளிக்கும் உணவாக உண்ணப்படுகின்றன.

காரணம்: இவற்றில் மிகுந்த சுவை உள்ளது

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஓடுடைய மீன் ஆதாரங்களுள் மிக முக்கியமானது இறால் ஆகும். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள சந்தைகளிலும் இதற்கு அதிகமான தேவை உள்ளது. இவற்றின் மிகுந்த சுவையின் காரணமாக மகிழ்ச்சியை அளிக்கும் உணவாக இவை உண்ணப்படுகின்றன.

139) சராசரியாக ஒரு தேனீ தனது வாழ்நாளில் எவ்வளவு தேனை மட்டுமே சேகரிக்கிறது?

A) அரை தேக்கரண்டி

B) ஒரு தேக்கரண்டி

C) இரண்டு தேக்கரண்டி

D) ஐந்து தேக்கரண்டி

விளக்கம்: சராசரியாக ஒரு தேன் தனது வாழ்நாளில் அரை தேக்கரண்டி தேனை மட்டுமே சேகரிக்கிறது. 1கி.கி தேனில் 3200 காலோரி ஆற்றல் உள்ளது. இது ஆற்றல் மிகுந்த உணவாகும்.

140) நெற்பயிரோடு இறால் வளர்க்கும் முறை கேரளா மாநிலத்தில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியமான இறால் வளர்ப்பு முறையாகும். இதன் மற்றொரு பெயர் என்ன?

A) பொக்காலி வளர்ப்பு

B) பொன்னம் வளர்ப்பு

C) கூனி இறால் வளர்ப்பு

D) பினேய்டு இறால் வளர்ப்பு

விளக்கம்: நெற்பயிரோடு இறால் வளர்க்கும் முறை என்பது கேரளாவில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியமான இறால் வளர்ப்பு முறையாகும். இது பொக்காலி வளர்ப்பு எனவும் அழைக்கப்படுகிறது.

141) தேன் கூட்டின் வெப்பத்தை பாராமரிப்பது எந்த வகையான தேனீ ஆகும்?

A) ஆண் தேனீ

B) இராணீத் தேனீ

C) வேலைக்கார தேனீ

D) இராஜாத்தேனீ

விளக்கம்: தேன் கூட்டைப் பாதுகாத்தல் மற்றும் தேன் கூட்டின் வெப்பத்தை பராமரித்தல் போன்ற பணிகளை செய்வுது வேலைக்கார தேனீ ஆகும்.

142) மத்திய உவர்நீர் வாழ் உயிரிவளர்ப்பு நிறுவனமானது எப்போது நிறுவப்பட்டது?

A) 1947

B) 1967

C) 1977

D) 1987

விளக்கம்: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 1987ஆம் ஆண்டு மத்திய உவர் நீர் வாழ் உயிரிவளர்ப்பு நிறுவனமானது நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் நோக்கமானது கிளிஞ்சல்கள் மற்றும் துடுப்புள்ள மீன்களை வளம் குன்றாமல் உவர் நீர்நிலைகளில் வளர்த்து நிர்வகித்தல் ஆகும்.

143) தவறாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) கற்றாழை – புற்று நோய்

B) நன்னாரி – படர்தாமரை

C) நிலவேம்பு – நீரழிவு நோய்

D) சின்கோனா – மலேரியா

விளக்கம்: மேற்கண்டவற்றில் தவறாகப் பொருந்தியுள்ளது நன்னாரி பற்றி கூற்று ஆகும்.

தாவரத்தின் பெயர் குணப்படுத்தும் நோய்கள்:

கற்றாழை – தோல் நோய்

நன்னாரி – வயிற்றுப்போக்கு மற்றும் பாக்டீரித் தொற்று

நிலவேம்பு – சிக்கன் குனியா

சின்கோனா – மலேரியா மற்றும் நிமோனியா காய்ச்சல்

144) வேலைக்காரத் தேனீ என்பது_________?

A) இனப்பெருக்கத்தில் ஈடுபடும் பெண் தேனீ

B) இனப்பபெருக்கத் திறனற்ற ஆண் தேனீ

C) தேன் சேகரிக்கும் பெண் ஆண் தேனீ

D) மேற்கண்ட எதுவுமில்லை.

விளக்கம்: வேலைக்காரத் தேனீ என்பது இனப்பெருக்கத் திறனற்ற பெண் தேனீக்கள் ஆகும். இவை தேன் கூட்டிலுள்ள மிகச்சிறிய உறுப்பினர்களாகும்.

145) அதிதீவிர கால்நடை மேம்பாட்டுத் திட்டம் என்பது கீழ்க்கண்ட எந்த காரணத்திற்காக இந்திய அரசாங்கமானது மேற்கொண்டது?

A) பால் உற்பத்தியை அதிகரிக்க

B) முட்டை உற்பத்தியை அதிகரிக்க

C) இறைச்சி உற்பத்தியை அதிகரிக்க

D) மேற்கண்ட எதுமில்லை

விளக்கம்: கால்நடைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு இந்திய அரசாங்கமானது பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அதிதீவிர கால்நடை மேம்பாட்டுத் திட்டமானது பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக உள்நாட்டுப் பசு இனங்களை ஐரோப்பிய இனங்களோடு கலப்புச் செய்து புதிய இன மாடுகளை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டதாகும்.

146) நெற்பயிரோடு இறால் வளர்க்கும் முறை எந்த மாநிலத்தில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியமான இறால் வளர்ப்பு முறையாகும்?

A) தமிழ்நாடு

B) கர்நாடகா

C) கேரளா

D) ஆந்திரா

விளக்கம்: நெற்பயிரோடு இறால் வளர்க்கும் முறை என்பது கேரளாவில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியமான இறால் வளர்ப்பு முறையாகும். இது பொக்காலி வளர்ப்பு எனவும் அழைக்கப்படுகிறது.

9th Science Lesson 24 Questions in Tamil

24] சூழ்நிலை அறிவியல்

1) 1. கரிம வேதியியல் என்பது கார்பன் அதன் சேர்மங்கள் பற்றிய படிப்பாகும்.

2. வேதிப் பொருட்களின் பண்புகளை பற்றிய படிப்பிற்கு கனிம வேதியியல் என்பதாகும்.

3. தாதுப்புக்கள் பற்றிய படிப்பிற்கு இயற்பியல் வேதியியல் என்பதாகும்.

A) 1 3 சரி

B) 2 சரி

C) 3 சரி

D) 1 சரி

விளக்கம்: வேதிப் பொருட்களின் பண்புகளை பற்றிய படிப்பிற்கு இயற்பியல் வேதியியல் என்பதாகும். தாதுப்புக்கள் பற்றிய படிப்பிற்கு கனிம வேதியியல் என்பதாகும்.

2) அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள், அழகுசாதன பொருட்கள், உடைகள், மருந்துபொருட்கள் மற்றும் தங்கமுலாம் பூசப்பட்ட அழகுசாதன பொருட்கள் போன்றவை எவ்வகை வேதியியல் பிரிவுகனை உள்ளடக்கியது?

A) கனிம வேதியியல்

B) கரிம வேதியியல்

C) பயன்பாட்டு வேதியியல்

D) இயற்பியல் வேதியியல்

விளக்கம்: அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள், அழகுசாதன பொருட்கள், உடைகள், மருந்துபொருட்கள் மற்றும் தங்கமுலாம் பூசப்பட்ட அழகுசாதன பொருட்கள் போன்றவை பயன்பாட்டு வேதியியல் பிரிவுகனை உள்ளடக்கியது. இது வாழ்வியல் செயல்பாட்டினை உள்ளடக்கியது.

3) அணு மற்றும் மூலக்கூறு அளவில் இருக்கும் பொருட்களை உருவாக்கி அல்லது மாற்றியமைத்து அவைகளின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை ஆய்வு செய்வதை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

A) நானோ வேதியியல்

B) பயன்பாட்டு வேதியியல்

C) இயற்பியல் வேதியியல்

D) கனிம வேதியியல்

விளக்கம்: அணு மற்றும் மூலக்கூறு அளவில் இருக்கும் பொருட்களை உருவாக்கி அல்லது மாற்றியமைத்து அவைகளின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை ஆய்வு செய்வதை நானோ வேதியியல் என குறிப்பிடுகிறோம் இது வேதியியலின் ஒரு பிரிவாகும்.

4) பூமியின் விட்டம் எவ்வளவு?

A) 1.27 x 107 மீ

B) 1.25 x 107 மீ

C) 4.9 x 10-9 மீ

D) 2.75 x 108 மீ

விளக்கம்: பூமியின் விட்டம் ஆனது 1.27 x 107 மீட்டர் ஆகும்.

5) 1. நமக்கு சளி மற்றும் காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ் சுமார் 30 நானோ மீட்டர் கொண்டது.

2. நம்முடைய தலையில் இருக்கும் தலைமுடியின் விட்டத்தில்1/25000 பகுதியே ஒரு நானோ மீட்டர் ஆகும்

3. செல் சவ்வானது 9 நானோ மீட்டர் ஆகும்.

4. ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம் 0.2 நானோ மீட்டர் ஆகும்.

A) 1 3 சரி

B) 1 2 4 சரி

C) 1 3 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: நமக்கு சளி மற்றும் காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ் சுமார் 30 நானோ மீட்டர் கொண்டது.

நம்முடைய தலையில் இருக்கும் தலைமுடியின் விட்டத்தில்1/25000 பகுதியே ஒரு நானோ மீட்டர் ஆகும்

செல் சவ்வானது 9 நானோ மீட்டர் ஆகும்.

ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம் 0.2 நானோ மீட்டர் ஆகும்.

6) கூற்று: நானோ பொருள்கள் அணுக்கள் மற்றும் பெரிய பொருட்களின் அமைப்புக்கு இடைப்பட்ட பண்பினை பெற்றிருக்கும்.

காரணம்: நானோ பொருளின் பண்பானது அது புறப்பறப்பளவு ஆற்றல், நெருக்கமான இடப்பொதிவு மற்றும் குறைவான திண்ம நிலை ஆகியவையே காரணம்

A) கூற்று காரணம் இரண்டும் சரி

B) கூற்று காரணம் இரண்டும் தவறு

C) கூற்று சரி

D) காரணம் சரி

விளக்கம்: : நானோ பொருள்கள் அணுக்கள் மற்றும் பெரிய பொருட்களின் அமைப்புக்கு இடைப்பட்ட பண்பினை பெற்றிருக்கும்.

நானோ பொருளின் பண்பானது அது புறப்பறப்பளவு ஆற்றல், நெருக்கமான இடப்பொதிவு மற்றும் குறைவான திண்ம நிலை ஆகியவையே காரணம்.

7) நானோ பொருட்களை ஆராய எவ்வகை வருடி பயன்படுகிறது?

A) அதிக திரைதிறன் வாய்ந்த வருடி எலக்ரான் நுண்னோக்கி

B) ஊடுருவு எலக்ட்ரான் நுண்னோக்கி

C) அணுவிசை நுண்ணோக்கி

D) அனைத்தும்.

விளக்கம்: நானோ பொருட்களை ஆராய அதிக திரைதிறன் வாய்ந்த வருடி எலக்ரான் நுண்னோக்கி, ஊடுருவு எலக்ட்ரான் நுண்னோக்கி, அணுவிசை நுண்ணோக்கி போன்ற அதிக பகுப்புத்திறன் வாய்ந்த நுண்ணோக்கிகள் பயன்படுகிறது.

8) சூரிய கதிர்வீச்சை குறைக்கும் களிம்பு நானோவில் பயன்படும் வேதிப்பொருள்?

A) சிங்க் ஆக்ஸைடு

B) டைட்டானியம் ஆக்ஸைடு

C) மெக்னீசியம் ஆக்ஸைடு

D) A&B

விளக்கம்: சூரிய கதிர் வீச்சை கட்டுப்படுத்தும் களிம்பு நானோ வேதியியலில் சிங்க் ஆக்சைடு மற்றும் டைட்டானியம் ஆக்ஸைடு பயன்படுத்தப்படுகிறது.

9) 1. நானோ துகள்கள் பயன்படுத்துதல் மற்றும் வடிவமைத்தல் கடினம்.

2. சில நானோ துகள்கள் ஆபத்தானதும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கின்றன.

3. நானோ துகள்கள் அதிகளவு வினைபுரிவதால் எளிதாக மாசுக்களுடனும் வினைபுரிகின்றன.

4. நானோ துகள்கள் ஆக்ஸிஜனோடு தொடர்பு கொள்ளும் போது உறுதியற்ற தன்மையை அடைகின்றன.

A) 1 3 சரி

B) 1 2 4 சரி

C) 1 3 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: நானோ துகள்கள் பயன்படுத்துதல் மற்றும் வடிவமைத்தல் கடினம்.

சில நானோ துகள்கள் ஆபத்தானதும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கின்றன.

நானோ துகள்கள் அதிகளவு வினைபுரிவதால் எளிதாக மாசுக்களுடனும் வினைபுரிகின்றன.

நானோ துகள்கள் ஆக்ஸிஜனோடு தொடர்பு கொள்ளும் போது உறுதியற்ற தன்மையை அடைகின்றன.

10) நானோ ரோபாட்டுகள் எந்தெந்த துறைகளில் பயன்படுகிறது?

A) மருத்துவ துறை

B) விவசாயம்

C) விண்வெளி துறை

D) A&C

விளக்கம்: நானோ ரோபாட்டுகள் மருத்துவ துறை மற்றும் விண்வெளி துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

11) உயிரி மருத்துவ துறைகளில் நானோ தொழில் நுட்பம் எந்தெந்த பயன்பாட்டுக்கு பயன்படுகிறது?

A) புற்றுநோயை குணப்படுத்துதல்.

B) டி.என்.ஏ அமைப்பில் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்யவும்.

C) சிறுநீரக கற்களை அகற்றவும்.

D) ஆனைத்தும்

விளக்கம்: உயிரி மருத்துவத் துறையில் நானோ தொழில் நுட்பம் கீழ்கண்ட அனைத்து துறைகளிலும் பயன்படுகிறது. புற்றுநோயை குணப்படுத்துதல்.

டி.என்.ஏ அமைப்பில் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்யவும்.

சிறுநீரக கற்களை அகற்றவும்.

மற்றும் மனித உயிர்களில் பாதுகாக்கப் பயன்படும் வேறுசில சிகிச்சையிலும் நானோ ரோபாட்டிக்ஸ் பயன்படுகிறது.

12) ஒரு உலோகத்தின் மீது மற்றொரு உலோகத்தை மெல்லிய அடுக்காக படிய வைக்கும் செயல்முறைக்கு — என்று பெயர்?

A) படிய வைத்தல்

B) மின் முலாம் பூசுதல்

C) நானோ தொழில் நுட்பம்

D) மின்பகுளி இடுதல்

விளக்கம்: ஒரு உலோகத்தின் மீது மற்றொரு உலோகத்தை மெல்லிய அடுக்காக படிய வைக்கும் முறைக்கு மின்முலாம் பூசுதல் என்றுபெயர்.

13) மின்முலாம் பூசுதலின் பயன்களில் தவறானது எது?

A) அரிப்பை தடுத்தல்.

B) அலங்கார வேலைகள்.

C) பழுதுபார்ப்பு வேலைகள்

D) எதுவுமில்லை.

விளக்கம்: மின்முலாம் பூசுதல் அனைத்து விதத்திலும் பயன்படுகிறது இது மேற்கூறிய அனைத்து செயல்பாடுகளிலும் பயன்படுகிறது அவை அரிப்பை தடுத்தல், அலங்கார வேலைகளில், பழுதுபார்த்தலிலும் பயன்படுகிறது.

14) நேர் மின்வாய், எதிர்மின்வாய், மின்பகுளி கொண்ட ஒரு கலத்திற்கு எவ்வாறு அழைக்கலாம்?

A) மின்கலம்

B) மின்கல அடுக்கு

C) மின்பகுப்பு கலம்

D) மின்முலாம் பூசுதல்

விளக்கம்: நேர் மின்வாய், எதிர்மின்வாய், மின்பகுளி ஆகியவற்றை கொண்ட ஒரு கலத்திற்கு மன்கலம் என்று பெயர். தொடரில் இணைக்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலங்கள் கொண்ட அமைப்பிற்கு மின்கல அடுக்கு என அழைக்கப்படுகிறோம்.

15) ஒரு மின்பகுப்பு கலத்தில் மின்சாரமானது மின்பகுளிக்குள் அனுப்பப்படும்போது, அது அயனிகளாக பிரிவடைகின்றது. இந்த அயனிகள் ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைக்குட்பட்டு அவற்றின் தனிமங்களை உருவாக்கும் நிகழ்விற்கு __________ என்று பெயர்?

A) மின்கலம்

B) மின்கல அடுக்கு

C) மின்னாற் பகுப்பு

D) மின்முலாம் பூசுதல்

விளக்கம்: ஒரு மின்பகுப்பு கலத்தில் மின்சாரமானது மின்பகுளிக்குள் அனுப்பப்படும்போது, அது அயனிகளாக பிரிவடைகின்றது. இந்த அயனிகள் ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைக்குட்பட்டு அவற்றின் தனிமங்களை உருவாக்கும் நிகழ்விற்கு மின்னாற்பகுப்பு என அழைக்கப்படுகிறது.

16) மின்னாற்பகுப்பின் மூலம் உலோகங்கள், அலோகங்கள் மற்றும் சேர்மங்கள் உற்பத்தி செய்யும் முறைக்கு _________ என்று பெயர்?

A) நடுநிலையாக்கல்

B) உலோக பூச்சு

C) மின்னாற் உற்பத்தி

D) மின்முலாம் பூசுதல்

விளக்கம்: மின்னாற்பகுப்பின் மூலம் உலோகங்கள், அலோகங்கள் மற்றும் சேர்மங்கள் உற்பத்தி செய்யும் முறைக்கு மின்னாற் உற்பத்தி என அழைக்கிறோம். இதன் மூலம் மிக தூய்மையான உலோகங்களை பெற முடியும்.

17) தனிமங்களின் நிலையற்ற ஐசோடோப்புகள் கதிர்வீச்சு வடிவில் தங்களது ஆற்றலை இழந்து நிலையான ஐசோடோப்பாக மாற்றமடையும் நிகழ்வு?

A) ரேடியம்

B) கதிரியக்கச் சிதைவு

C) கதிரியக்கச் சுவடறிவான்

D) கியூரி

விளக்கம்: தனிமங்களின் நிலையற்ற ஐசோடோப்புகள் கதிர்வீச்சு வடிவில் தங்களது ஆற்றலை இழந்து நிலையான ஐசோடோப்பாக மாற்றமடையும் நிகழ்வு கதிரியக்கச் சிதைவு என அழைக்கப்படுகிறது.

18) புதைபடிவ மரங்கள் அல்லது விலங்குகளின் வயதைக் கணிக்கப்பயன்படும் முறைக்கு பயன்படும் வேதி ஐசோடோப்பு எது?

A) மெக்னீசியம் ஐசோடோப்பு

B) கார்பன் 14 ஐசோடோப்பு

C) பாஸ்பரஸ் ஐசோடோப்பு

D) கோபால்ட் 60 ஐசோடோப்பு

விளக்கம்: புதைபடிவ மரங்கள் அல்லது விலங்குகளின் வயதைக் கணிக்கப்பயன்படும் முறைக்கு பயன்படும் வேதி ஐசோடோப்பு கார்பன் 14 ஐசோடோப்புகள் ஆகும். கதிரியக்க தனிமத்தின் சராசரி ஆயுட்காலம் மிக அதிகம் எனவே இது வயதை கணிக்கப் பயன்படுகிறது.

19) இயற்கை கதிரியக்கத்தை கண்டறிந்ததற்காக 1903 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்?

A) பெக்கோரல்

B) பியரி கியூரி

C) மேரி கியூரி

D) ஹென்றிகோ பெர்மி

விளக்கம்: இயற்கை கதிரியக்கத்தை கண்டறிந்ததற்காக 1903 ஆண்டு ஹென்றி பெக்கோரல் என்ற பிரான்சு நாட்டை சேர்ந்த அறிவியல் அறிஞருக்கு வழங்கப்பட்டது.

20) செயற்கை சாயத்தை முதல் முதலில் காப்புரிமை பெற்றவர்?

A) பெர்கின்ஸ்

B) பியரி கியூரி

C) மேரி கியூரி

D) ஹென்றிகோ பெர்மி

விளக்கம்: செயற்கை சாயம் தயாரிப்பு 1856 ஆம் ஆண்டில் தொடங்கியது. பெர்கின்ஸ் என்ற ஆங்கில வேதியியலாலர் முதன் முதலில் செயற்கை சாயத்தை உருவாக்கி அதை பயன்படுத்த காப்புரிமை பெற்றார்.

21) 1.தங்கம் – 198 – புற்றுநோய்

2. அயோடின் – 131 – இரத்தக் கோளாறு மற்றும் தோல் நோய்

3. பாஸ்பரஸ் – 30 – ஹைபர் தைராய்டிசம் மற்றும் புற்றுநோய்

4. கோபால்ட் – 60 – புற்றுநோய்

A) 1 2 3 4

B) 1 3 2 4

C) 1 3 4 2

D) 4 3 1 2

விளக்கம்: தங்கம் – 198 – புற்றுநோய்

அயோடின் – 131 – ஹைபர் தைராய்டிசம் மற்றும் புற்றுநோய்

பாஸ்பரஸ் – 30 – இரத்தக் கோளாறு மற்றும் தோல் நோய்

கோபால்ட் – 60 – புற்றுநோய்

22) சாயங்கள் பயன்பாட்டின் அடிப்படையில் எத்தனை வகைப்படும்?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: சாயங்கள் பயன்பாட்டின் அடிப்படையில் 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது, அவை

  1. அமில சாயங்கள்
  2. காரச்சாயங்கள்
  3. மறைமுக சாயங்கள்
  4. நேரடிச் சாயங்கள்
  5. தொட்டி சாயங்கள்

23) நிறம் தாங்கி மற்றும் நிறம் பெருக்கி கொள்கையை அறிமுகப்படுத்தியவர்?

A) ஓட்டோவிட்

B) பெர்கின்ஸ்

C) பெர்மி

D) லாவாஸ்கி

விளக்கம்: நிறம் தாங்கி மற்றும் நிறம் பெருக்கி என்ற கொள்கையை அறிமுகப்படுத்திவர் ஜெர்மன் நாட்டு அறிவியளாளர் ஓட்டோவிட் 1876 ஆவர்.

24) 1. அனைத்து கரிமச் சேர்மங்களும் நிறமுள்ளவை.

2. இவை 350 – 700 நானோ மீட்டர் அலைநீளம் கொண்டவை ஒளியை உட்கிரகிக்கும் சேர்மங்கள் மட்டுமே நிறமுள்ளவை.

3. கரிமச் சேர்மங்கள் ஒளியை உட்கிரகிப்பது அவற்றின் அமைப்பை பொருத்ததே.

4. நிறம் பெருக்கி என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியவர் ஓட்டோவியட் ஆவார்.

A) 1 3 சரி

B) 1 2 4 சரி

C) 2 3 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: அனைத்து கரிமச் சேர்மங்களும் நிறமற்றவை. இவை 350 – 700 நானோ மீட்டர் அலைநீளம் கொண்டவை ஒளியை உட்கிரகிக்கும் சேர்மங்கள் மட்டுமே நிறமுள்ளவை. கரிமச் சேர்மங்கள் ஒளியை உட்கிரகிப்பது அவற்றின் அமைப்பை பொருத்ததே. நிறம் பெருக்கி என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியவர் ஓட்டோவியட் ஆவார்.

25) இன்றைய உலக மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் பேர் வேளாண்மை தொழிலில் ஈடுபட்டுள்ளன.

A) 60 சதவிகிதம்

B) 50 சதவிகிதம்

C) 40 சதவிகிதம்

D) 80 சதவிகிதம்

விளக்கம்: இன்றைய உலக மக்கள் தொகையில் 40 சதவிகிதம் பேர் மட்;டுமே வேளாண்மை தொழிலில் ஈடுபட்டுள்ளனர் இதுவே உலகின் தனிப்பட்ட வேலை வாய்ப்பு துறை ஆகும்.

26) ஆல்கஹால் சோதனையில் மது அருந்தியவர்கள் ஊதும் போது எந்த நிறமாக மாற்றம் அடைகிறது?

A) மஞ்சள் நிறம்

B) ஆரஞ்சு

C) பச்சை

D) ஊதா

விளக்கம்: ஆல்கஹால் சோதனையில் மது அருந்தியவர்கள் ஊதும் போது ஆல்கஹால் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து டை குரோமேட்டை குரோமியம் அயனியாக மாற்றம் அடைகிறது, இதனால் ஆரஞ்சு நிற அயனியானது பச்சைநிற அயனியாக மாற்றம் அடைகிறது.

27) தடய நச்சுயிரியல் சோதனையில் பயன்படுத்தப்படும் சிறிய பகுதிகள் எவை?

A) இரத்தம்

B) உமிழ்நீர்

C) விந்து

D) அனைத்தும்

விளக்கம்: தடய நச்சுயிரியல் சோதனையில் பயன்படுத்தப்படும் சிறிய பகுதியாக இரத்தம், உமிழ்நீர், விந்துவின் சிறிய பகுதி போன்ற அனைத்தையும் என்சைம் சோதனைக்கு பகுப்பாய்வுக்கு உட்படுத்தி தடயத்தை கண்டறிவர்.

28) மருந்து பெறுபவரின் நலனுக்காக அவரது உடலியல் அமைப்பை பற்றி அறியவோ உடலியல் அமைப்பை பற்றி அறியவோ அல்லது நோயின் நிலை குறித்து ஆராயவோ பயன்படுத்தக்கூடிய பொருள்?

A) நச்சு

B) மருந்து

C) அலவுகள்

D) எதிர்பான்கள்

விளக்கம்: மருந்து பெறுபவரின் நலனுக்காக அவரது உடலியல் அமைப்பை பற்றி அறியவோ உடலியல் அமைப்பை பற்றி அறியவோ அல்லது நோயின் தன்மையை பற்றி ஆராயவோ பயன்படுத்தப்படக்கூடிய பொருள் மருந்து ஆகும்.

29) ஒரு நபரின் சுவாசம் மூலம் அவரது இரத்த ஓட்டத்தில் எவ்வளவு ஆல்கஹால் கலந்துள்ளது என கண்டறியும் சோதனை?

A) தடய நச்சுயிரியல்

B) ஆல்ஹகால் சோதனை

C) உயிரியல் அளவீட்டியல்

D) தடயவியல்

விளக்கம்: ஒரு நபரின் சுவாசம் மூலம் அவரது இரத்த ஓட்டத்தில் எவ்வளவு ஆல்கஹால் கலந்துள்ளது என கண்டறியும் சோதனை ஆல்கஹால் சோதனையாகும்

30) ஒரு நபரின் அடையாளத்தை அங்கீகரிப்பதற்கான அளவீடுகளாக உள்ளது?

A) கருவிழி அச்சு

B) கைரேகை

C) நாக்கு அச்சு

D) அனைத்தும்

விளக்கம்: மேற்கண்ட அனைத்தும் மனித உடலில் காணப்படும் தனித்துவமான அமைப்பாகும் இவையே ஒரு மனிதனை தனித்துவமாக அடையாளப்படுத்து உதவுகிறது.

31) கைரேகையை கீழ்கண்ட எதில் இருந்து பெறுவது கடினம்?

A) கண்ணாடி

B) மேசை

C) துணி

D) சீப்பு

விளக்கம்: நமது கைரேகையில் சிறிய துளையின் வழியே சில எண்ணெய் மற்றும் உப்புகள் வெளியேற்றப்படுகிறது. இது நாம் எதையாவது தொடும்போது அது கைரேகையாக அச்சாகிறது எனினும் துணி மற்றும் விரிப்புகளில் ஒட்டும்பொழுது கைரேகையை பெறுவது கடினமாக உள்ளது.

32) குற்றப்பிண்ணணி ஆய்வில் தடயவியல் வேதியியலாலர் மேற்கொள்ளும் படிநிலைகள் எத்தனை?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: குற்றப்பிண்ணணி ஆய்வில் தடயவியல் வேதியியலாலர் 4 படிநிலைகளை மேற்கொள்கின்றன அவையாவன

  1. சான்றுகள் சேகரிப்பு
  2. ஆதாரங்களின் பகுப்பாய்வு
  3. கலந்துரையாடல்
  4. கண்டுபிடிப்புகளின் அறிக்கை

33) உணவு நிறமிகளின் அடிப்படையான சேர்க்கை பொருள்?

A) நீர்

B) புரப்பைல் பாராயின்

C) புரப்பலீன் கிளைக்கால்

D) அனைத்தும்

விளக்கம்: உணவு நிறமிகளின் அடிப்படை சேர்க்கையாக புரப்பைல் பாராயின், புரப்பலீன் கிளைக்கால், மற்றும் நீர் போன்ற அனைத்தும் அடிப்படை உணவு நிறமிகளாக சேர்க்கப்படுகிறது.

34) இயற்கையில் காணப்படும் உணவு பதப்படுத்திகளில் தவறானவை?

A) எண்ணெய்

B) சர்க்கரை

C) கிராம்பு

D) எதுவுமில்லை

விளக்கம்: இயற்கையில் காணப்படும் உணவுப் பதப்படுத்திகளில் எண்ணெய், உப்பு, சர்க்கரை, கிராம்பு, எலுமிச்சை, வினிகர், இலவங்கப்பட்டை போன்ற அனைத்தும் உணவு பதப்படுத்தியாக அறியப்பட்டுள்ளது.

35) 1.உணவு பதப்படுத்திகள் – குர்குமின்

2. செயற்கை இனிப்பூட்டிகள் – வைட்டமின் சி

3. சுவையூட்டிகள் – சோடியம் பென்சோயேட்

4. எதிர் ஆக்ஸிஜனேற்றிகள் – கால்சியம் டைகுளுட்டமேட்

5. நிறமிகள் – சாக்கரீன்

A) 3 5 2 1 4

B) 3 5 4 2 1

C) 5 2 4 1 3

D) 1 5 2 4 3

விளக்கம்: உணவு பதப்படுத்திகள் – சோடியம் பென்சோயேட்

செயற்கை இனிப்பூட்டிகள் – சாக்கரீன்

சுவையூட்டிகள் – கால்சியம் டைகுளுட்டமேட்

எதிர் ஆக்ஸிஜனேற்றிகள் – வைட்டமின் சி

நிறமிகள் – குர்குமின்

36) ஆக்ஸிஜனேற்றத்தை தடுத்து உணவின் தன்மையை கெடாமல் பாதுகாப்பது?

A) நிறமிகள்

B) செயற்கை இனிப்பூட்டிகள்

C) சுவையூட்டிகள்

D) எதிர் ஆக்ஸிஜனேற்றிகள்

விளக்கம்: எதிர் ஆக்ஸிஜனேற்றிகள் உணவின் ஆக்ஸிஜனேற்றத்தை தடுத்து உணவின் தன்மையை கெடாமல் பாதுகாக்கிறது மேலும் இது இதய நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

37) செயற்கை சாயங்கள் எதில் இருந்து பெறப்படுகின்றது?

A) கரிம சேர்மங்கள்

B) நிலக்கரி தார்கள்

C) குயினைன்

D) எதுவுமில்லை

விளக்கம்: செயற்கை சாயங்கள் நிலக்கரி தார்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது அமைப்பு மற்றும் செயல்பாட்டு பயன்பாட்டின் அடிப்படையில் மாறுபடுகிறது.

38) 1. அமில சாயங்கள் – அலிசரின்

2. நேரடி சாயங்கள் – இண்டிகோ

3. மறைமுக சாயங்கள் – மஞ்சள் நாப்தால்

4. தொட்டிச் சாயங்கள் – காங்கோ சிவப்பு

A) 2 1 3 4

B) 3 2 4 1

C) 1 2 4 3

D) 3 4 1 2

விளக்கம்: அமில சாயங்கள் – மஞ்சள் நாப்தால்

நேரடி சாயங்கள் – காங்கோ சிவப்பு

மறைமுக சாயங்கள் – அலிசரின்

தொட்டிச் சாயங்கள் – இண்டிகோ

39) மனித உடலின் செல்களைப் பாதிக்காமல் வியாதிகளை உண்டாக்கும் கிருமிகளை மட்டும் அழிக்க சில கரிம வேதிபொருட்களை பயன்படுத்தும் முறைக்கு?

A) இயற்கை மருத்துவம்

B) புரை தடுப்பான்கள்

C) வேதி மருத்துவம்

D) மருந்தாக்க வேதியியல்

விளக்கம்: மனித உடலின் செல்களைப் பாதிக்காமல் வியாதிகளை உண்டாக்கும் கிருமிகளை மட்டும் அழிக்க சில கரிம வேதிபொருட்களை பயன்படுத்தும் முறைக்கு வேதி மருத்துவம் என்று அழைக்கப்படுகிறது.

40) பின்வருவனவற்றில் எது இயற்கை சாயம் இல்லை?

A) உருளைக்கிழங்கு

B) கேரட்

C) பீட்ருட்

D) மஞ்சள்

விளக்கம்: உருளைக் கிழங்கானது இயற்கை சாயமாக கருதப்படாது மற்ற அனைத்து பொருட்களும் இயற்கை சாயங்களாக கருதப்படுகின்றன.

41) எந்தவகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன?

A) கார்போஹைட்ரேட்

B) வைட்டமின்கள்

C) புரதங்கள்

D) கொழுப்புகள்

விளக்கம்: புரதமானது உணவுக்குறைபாட்டு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. புரதக்குறைபாடு காரணமாக நமக்கு

மராஸ்மஸ்

குவாசியோகர் என்ற புரத குறைபாட்டு நோய்கள் ஏற்படுகிறது.

42) கதிரியக்கவியலுடன் தொடர்புடையது எது?

A) ஆக்ஸிஜனேற்றம்

B) மின்கலங்கள்

C) ஐசோடோப்புகள்

D) நானோதுகள்கள்

விளக்கம்: கதிரியக்கவியலுடன் தொடர்புடையவை ஐசோடோப்புகள் ஆகும் இது கதிரியக்கச் சிதைவினை ஏற்படுத்துகிறது.

43) 1. குற்றம் சார்ந்த விசாரணையில் கைரேகை பதிவுத் தடயம் மிக அவசியம்.

2. இது காசோலை மற்றும் பிற ஆவணங்களில் அடிக்கடி மறைந்துவிடுகின்றன.

3. மறைக்கப்பட்ட கைரேகைகளை சில நேரங்களில் நின்ஹைட்ரின் பயன்பாட்டினால் காண முடிகிறது.

4. சயனோஅக்ரிலேட் எஸ்டர் சுவாலை ஒளிரும் வண்ணச்சாயத்துடன் சேர்த்து பயன்படுத்தும் போது கைரேகைகள் வெளிப்படுவதில்லை.

A) 1 3 சரி

B) 1 2 3 சரி

C) 2 3 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: குற்றம் சார்ந்த விசாரணையில் கைரேகை பதிவுத் தடயம் மிக அவசியம். இது காசோலை மற்றும் பிற ஆவணங்களில் அடிக்கடி மறைந்துவிடுகின்றன. மறைக்கப்பட்ட கைரேகைகளை சில நேரங்களில் நின்ஹைட்ரின் பயன்பாட்டினால் காண முடிகிறது. சயனோஅக்ரிலேட் எஸ்டர் சுவாலை ஒளிரும் வண்ணச்சாயத்துடன் சேர்த்து பயன்படுத்தும் போது கைரேகைகள் வெளிப்படுவகிறது.

44) தாவரங்கள், விலங்குகள், பாக்டீரியா மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கு இடையேயான அறிவியல் தொடர்பை பற்றி விளக்குவது?

A) இயற்கை வேதியியல்

B) வேளான் வேதியியல்

C) உணவு வேதியியல்

D) கரிம வேதியியல்

விளக்கம்: தாவரங்கள், விலங்குகள், பாக்டீரியா மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கு இடையேயான அறிவியல் தொடர்பை பற்றி விளக்குவது வேளாண் வேதியியல் என்று அழைக்கப்படுகிறது.

45) இந்தியா ஒரு ________ நாடு?

A) தொழில் வளம் மிக்க நாடு

B) விவசாய நாடு

C) வல்லரசு நாடு

D) தொலைத்தொடர்பு சேவை மிக்க நாடு

விளக்கம்: இந்தியா ஒரு அடிப்படை வேளாண்மை மற்றும் விவசாய நாடு ஆகும், நம் நாடு கி.மு 7000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது.

46) ஒரு மண்ணின் தன்மையை மாற்றுவதற்கு எதன் மதிப்பு முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும்?

A) அமில தன்மை

B) கார தன்மை

C) நடுநிலை தன்மை

D) PH மதிப்பு

விளக்கம்: மேற்கண்ட அனைத்தையும் PH மதிப்பின் முலம் அறியலாம் மேலும் இதன் மதிப்பை பொறுத்து பயிர் சாகுபடி செய்ய அதற்கான விளைச்சலும் மாறுபடுகிறது.

47) உலக சுகாதார அமைப்பின் வரையரைப்படி பூச்சிக்கொல்லி என்பது?

A) பூச்சிகனை அழிக்கவும்

B) பூஞ்சைகளை அழிக்கவும்

C) தேவையற்ற தாவரங்களை அழிக்கவும்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: உலக சுகாதார அமைப்பின் வரையரைப்படி பூச்சிக்கொல்லி என்பது பூச்சிகனை அழிக்கவும், பூஞ்சைகளை அழிக்கவும், தேவையற்ற தாவரங்களை அழிக்கவும் பயன்படும் வேதிக்கலவை என வரையறுத்துள்ளது.

48) வேதி உரங்களில் தவறானவை?

A) யூரியா

B) அம்மோனியம் நைட்ரேட்

C) கால்சியம் பாஸ்பேட்

D) பஞ்சகவ்யம்

விளக்கம்: பஞ்சகவ்யம் என்பது இயற்கையாக மாட்டின் 5 பொருட்களில் இருந்து பெறப்படுகிறது ஆனால் மேற்கண்ட அனைத்தும் தொழில் முறை உரமாக தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.

49) குளோரினேற்றமடைந்த ஹைட்ரோகார்பன் எவ்வகை உரமாக பயன்படுகிறது?

A) வேதி உரம்

B) களைக் கொல்லி

C) பூச்சிக் கொல்லி

D) மாலத்தியான்

விளக்கம்: குளோரினேற்றமடைந்த ஹைட்ரோகார்பன் ஆனது பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது.

50) மனிதனில் உணவுப் பழக்கமுறைகளில் எத்தனை படிநிலைகளாக உணவு தேவைப்படுகிறது?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: மனிதனின் உணவுப்பழக்க முறைகளில் 3 படிநிலையாக உணவு தேவைப்படுகிறது. அவை

உடல்வளர்ச்சி உணவுகள்

ஆற்றல் அளிக்கும் உணவுகள்

பாதுகாப்பளிக்கும் உணவுகள்

51) உணவு வேதியியல் என்பது எத்தனை பிரிவுகளை உள்ளடக்கியது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: உணவு வேதியியல் என்பது 4 படிநிலைகளில் உள்ளடக்கியது.

பகுப்பாய்வு

பதப்படுத்துதல்

உணவை கலன்களில் அடைத்தல்

பாதுகாப்பு மற்றும் தரத்திற்காக உயிரி ஆற்றலைப் பயன்படுத்துதல்.

52) ஒரே எண்ணிக்கையிலான புரோட்டான்களையும் ஒரே எண்ணிக்கையிலான எலக்ரான்களையும் வேறுபட்ட நியூட்ரான்களையும் கொண்ட தனிமங்கள் எவ்வாறு அழைக்கலாம்?

A) ஐசோடோப்புகள்

B) ஐசோபார்கள்

C) ஐசோடோன்கள்

D) கதிரியக்க தனிமங்கள்

விளக்கம்: ஒரே எண்ணிக்கையிலான புரோட்டான்களையும் ஒரே எண்ணிக்கையிலான எலக்ரான்களையும் வேறுபட்ட நியூட்ரான்களையும் கொண்ட தனிமங்கள் ஐசோடோப்புகள் என அழைக்கப்படுகிறது.

53) அமைப்பின் அடிப்படையில் சாயங்கள் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?

A) 6

B) 7

C) 8

D) 9

விளக்கம்: அமைப்பின் அடிப்படையில் சாயங்கள் 8 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.

  1. அசோ சாயம்
  2. டைபினைல் மீத்தேன் சாயம்
  3. டிரைபினைல் மீத்தேன் சாயம்
  4. தாலியன் சாயம்
  5. ஆந்த்ரோ குயினோன் சாயம்
  6. இண்டிகோ சாயம்
  7. தாலோசயனின் சாயம்
  8. நைட்ரோ மற்றும் நைட்ரசோ சாயம்

54) ஹென்னா என்பது ஒரு எவ்வகை சாயம்?

A) இயற்கை சாயம்

B) இண்டிகோ சாயம்

C) அசோ சாயம்

D) செயற்கை சாயம்

விளக்கம்: ஹென்னா என்பது ஒரு இயற்கை சாயம் ஆகும் இது லவ்சோனியா இனர்மிஸ் என்ற தாவரத்திலிருந்து பெறப்படும் செம்பழுப்பு நிற சாயம் ஆகும்.

55) இந்தியாவின் பாரம்பரியமான இயற்கை சாயம் என எதை அழைக்கிறோம்?

A) மஞ்சள்

B) வேம்பு

C) கிராம்பு

D) இண்டிகோ

விளக்கம்: மஞ்சள் இந்தியாவின் இயற்கை அழகுசாதன பொருளாகும் இது கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. மேலும் இந்தியாவில் உணவு நிறமியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

56) பொலோனியம் மற்றும் ரேடியத்தை பிரித்தெடுத்தவர்?

A) பெக்கோரல்

B) ஹென்றி

C) மேரி கியூரி

D) பியரி கியூரி

விளக்கம்: பொலோனியத்தை கண்டறிந்ததற்காகவும் ரேடியத்தை பிரித்தெடுத்ததற்காகவும் மேரி கியூரி அவர்களுக்கு 1911 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

57) மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும் ரேடான் வாயுவை வெளியிடும் தனிமம்

A) யுரேனியம்

B) புளுட்டோனியம்

C) கதிரியக்க கார்பன்

D) பாஸ்பரஸ்

விளக்கம்: யுரேனியம் ஆனது சிதைவடைந்து மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும் ரேடான் வாயுவை வெளியிடுகிறது, இதுவே நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் இரண்டாவது முக்கிய ஐசோடோப்பு என கருதப்படுகிறது.

58) 1. அயோடின்-131 – மூளைக்கட்டி

2. சோடியம்-24 – இரத்தசோகை

3. கோபால்ட்-60 – இரத்தம் உறைவு

4. ஹைட்ரஜன்-3 – மனித உடலில் உள்ள நீரின் அளவை கண்டறிய

A) 1 3 2 4

B) 1 4 3 2

C) 1 2 4 3

D) 1 3 4 2

விளக்கம்: அயோடின்-131 – மூளைக்கட்டி

சோடியம்-24 – இரத்தம் உறைவு

கோபால்ட்-60 – இரத்தசோகை

ஹைட்ரஜன்-3 – மனித உடலில் உள்ள நீரின் அளவை கண்டறிய

59) உடைந்த இயந்திரப்பாகங்களில் உள்ள துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கிடையே ஒரு உலோகத்தை கொண்டு எத்தத்துவத்தின் அடிப்படையில் சரிசெய்யலாம்?

A) மின்படிவு

B) கதிரியக்கமுறை

C) வேதிப்பிணைப்பு

D) மின்னாற்பகுப்பு

விளக்கம்: உடைந்த இயந்திரப்பாகங்களில் உள்ள துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கிடையே ஒரு உலோகத்தை கொண்டு மின்படிவு தத்துவத்தின் அடிப்படையில் சரிசெய்யலாம்.

60) துருப்பிடிபதிலிருந்து இரும்பை பாதுகாக்க பயன்படுத்தப்படும் மின்முலாம் பூசப் பயன்படும் உலோகம் எது?

A) நிக்கல்

B) குரோமியம்

C) தகரம்

D) அனைத்தும்

விளக்கம்: உலோகங்களை அரிப்பிலிருந்து தடுக்க மின்முலாம் பூசப்படுகிறது, இரும்பானது துருப்பிடிப்பதிலிருந்து தடுக்க இரும்பின் மேற்பகுதி நிக்கல், குரோமியம் மற்றும் தகரம் போன்ற உலோகங்களால் மின்முலாம் பூசப்படுகிறது.

61) நீர்த்த அல்லது உருகிய நிலையில் உள்ள மின்பகுளியின் வழியே மின்சாரத்தை செலுத்தும் போது மின்பகுளியானது பிரிகை அடைந்து அதன் அயனிகளாக மாறும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) மின்கலம்

B) மின்னாற்பகுப்பு

C) பிரிகை நிலைமை

D) பிரிகை ஊடகம்

விளக்கம்: நீர்த்த அல்லது உருகிய நிலையில் உள்ள மின்பகுளியின் வழியே மின்சாரத்தை செலுத்தும் போது மின்பகுளியானது பிரிகை அடைந்து அதன் அயனிகளாக மாறும் நிகழ்வு மின்றாற்பகுப்பு என அழைக்கப்படுகிறது.

62) டேனியல் மின்கலத்தில் மின்திறன் எவ்வளவு?

A) 1.1 வோல்ட்

B) 1.5 வோல்ட்

C) 1.8 வோல்ட்

D) 2.2 வோல்ட்

விளக்கம்: டேனியல் மின்கலம் ஆனது ஒரு முதன்மை மின்கலம் ஆகும், இதன் மின்னியக்கு திறன் மிக குறைவு இதில் 1.1 வோல்ட் மின்னிறயக்கு திறன் கொண்டுள்ளது.

63) வேதிஆற்றலை மின்னாற்றலாகவோ அல்லது மின்னாற்றலை வேதியாற்றலாகவோ மாற்றக்கூடிய சாதனங்களை எவ்வாறு அழைக்கலாம்?

A) மின்முனைகள்

B) மின்பகுளி

C) மின்கல வினைகள்

D) மின்வேதிக்கலன்கள்

விளக்கம்: வேதிஆற்றலை மின்னாற்றலாகவோ அல்லது மின்னாற்றலை வேதியாற்றலாகவோ மாற்றக்கூடிய சாதனங்களை மின்வேதிக்கலன்கள் என அழைக்கப்படுகிறது, இதில் நடைபெறும் ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகளே மின்சாரத்தை கடத்துகிறது.

64) ஒரு உலோகம் ஆக்ஸிஜனை ஏற்று எலக்ட்ரான்கனை இழக்கும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) ஒடுக்கம்

B) ஆக்ஸிஜனேற்றம்

C) ஆக்ஸிஜனேற்றஒடுக்கம்

D) வேதிநிகழ்வுகள்

விளக்கம்: ஒரு உலோகம் ஆக்ஸிஜனை ஏற்று எலக்ட்ரான்களை இழக்கும் நிகழ்வு ஆக்ஸிஜனேற்றம் என்று அழைக்கப்படுகிறது, இது வேதிவினைகளில் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது, ஆக்ஸிஜனேற்ற ஒடுக்கவினைகளே அனைத்து நிகழ்வுகளுக்கும் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

65) மின்கலங்களில் பயன்படும் ஆற்றல் மாற்றும் நிகழ்வு

A) ஒடுக்கம்

B) ஆக்ஸிஜனேற்றம்

C) ஆக்ஸிஜனேற்றஒடுக்கம்

D) வேதிநிகழ்வுகள்

விளக்கம்: பொதுவாக அனைத்து மின்கலன்களிலும் நடைபெறும் மின்னாற்றல் நிகழ்வு ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினை நடைபெறுகிறது. இதன்முலமே மின்கலன்களில் மின்னாற்றல் பெறப்படுகிறது.

66) அமில நீக்கியில் காணப்படும் முக்கியமான பொருட்கள் எவை எவை?

A) மெக்னீசியம்

B) ஹைட்ரோகுளோரிக் அமிலம்

C) அலுமினியம் ஹைட்ராக்சைடு

D) A&C

விளக்கம்: பொதுவாக அமில நீக்கிகள் நமது உடலின் வயிற்றுப்பகுதியில் சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகமாகும் போது ஏற்படும் எரிச்சலை நீக்க பயன்படுகிறது இதில் பொதுவாக மெக்னீசியம் அல்லது அலுமினியம் ஹைட்ராக்சைடு காணப்படுகிறது.

67) அதிசிய மருந்து என அறியப்படுவது?

A) பென்சிலியம்

B) பென்சிலின்

C) மாஸ்

D) ஸ்பாக்னம்

விளக்கம்: பென்சிலின் ஆனது மருந்துகளின் இராணி என்றும் அதிசய மருந்து என்றும் அழைக்கப்படுகிறது இதனை அலெக்சான்டர் பிளம்மிங் என்பவர் 1929 ல் கண்டறிந்தார்.

68) நுண்ணுயிர் எதிரிகளாக செயல்படும் உயிரிகள் எவை?

A) பாக்டீரியா

B) பூஞ்சை

C) ஆக்டினோமைசடிஸ்

D) அனைத்தும்

விளக்கம்: நுண்ணுயிர் எதிர்பொருளாக செயல்படும் பொருட்களாக மேற்கண்ட அனைத்தும் செயல்படுகிறது, இவை சில வேதிப்பொருள்களை வெளிப்படுத்துகிறது இவை மற்ற நுண்ணுயிரியின் வளர்சியை தடுக்கிறது எனவே இது நுண்ணுயிரியின் எதிரிகளாக பயன்படுத்தப்படுகிறது.

69) பென்சிலின் என்னும் நுண்ணுயிர் எதிரி எவற்றிற்கெல்லாம் பயன்படுகிறது?

A) மூட்டுக்களில் ஏற்படும் நோய்

B) இதய குழாய் சுருங்குதல் நோய்

C) நிமோனியா

D) அனைத்தும்

விளக்கம்: பென்சிலின் என்னும் நுண்ணுயிர் எதிரி மருந்துகளின் இராணி என அழைக்கப்படுகிறது, இது மேற்கண்ட அனைத்து வித நோய்களையும் குணப்படுத்துகிறது.

70) நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மையை பெறாத தாவரம்?

A) லவங்கம்

B) வேம்பு

C) இஞ்சி

D) ஆலமரம்

விளக்கம்: இஞ்சி, வேம்பு, இலவங்கம், பூண்டு,தேன் மற்றும் மஞ்சள் போன்றவை இயற்கையாக மூலங்களி;ல் இருந்து பெறப்படும் சாறுகள் எண்ணெய்கள் மற்றும் உணவுகள் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மையை பெற்றுள்ளன. ஆனால் ஆலமரம் இத்தகைய எதிர்ப்பு தன்மையை பெறவில்லை.

71) 1. மலேரியாவானது வைரசால் ஏற்படும் நோய் ஆகும்.

2. இது கணையத்தை பாதித்து இரத்த சோகையை ஏற்படுத்துகிறது.

3.மலேரியா நேயை கட்டுப்படுத்த குளோரோகுயின் பயன்படுத்தப்படுகிறது.

4. கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா தடுப்பு மருந்து பைரிமீத்தமின் ஆகும்.

A) 1 3 சரி

B) 1 2 3 சரி

C) 1 3 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: மலேரியாவானது வைரசால் ஏற்படும் நோய் ஆகும். இது கல்லீரலை பாதித்து இரத்த சோகையை ஏற்படுத்துகிறது. மலேரியா நேயை கட்டுப்படுத்த குளோரோகுயின் பயன்படுத்தப்படுகிறது. கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா தடுப்பு மருந்து பைரிமீத்தமின் ஆகும்.

72) புரைதடுப்பான்கள் எதற்கு பயன்படுகிறது?

A) வெளிக்காயத்திற்கு

B) குடல்தொற்று நோய்

C) சிறுநீர் தொற்று நோய்

D) அனைத்தும்

விளக்கம்: புரைதடுப்பான்கள் மேற்கண்ட அனைத்து விதமான நோய்தொற்றுக்கும் பயன்படுகிறது இது நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றை நீக்க பயன்படுகிறது.

73) சின்கோனா மரப்பட்டையிலிருந்து பெறப்படும் மருந்து?

A) குயினைன்

B) பைரிமித்தின்

C) குளோரோகுயின்

D) பிரிமாகுயின்

விளக்கம்: சின்கோனா மரப்பட்டையிலிருந்து பெறப்படும் எதிர்ப்பு மருந்து குயினைன் ஆகும், இது மலேரியா நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. இது இயற்கையாக தாவரத்திலிருந்து பெறப்படும் எதிர்ப்பு மருந்து ஆகும்.

74) கீழ்கண்டவற்றில் எவை காய்ச்சல் நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது?

A) ஆஸ்பிரின்

B) ஆன்டிபைரின்

C) பாராசிட்டமால்

D) அனைத்தும்

விளக்கம்: மேற்கண்ட அனைத்தும் காய்ச்சலை குறைக்கப்பயன்படுகிறது, இவை உடலின் வெப்பத்தை சாதாரண நிலைக்கு கொண்டுவருதில் முக்கிய பங்காற்றுகிறது, பெறும்பாலும் பாராசிட்டமால் அதிகப்படியாக பயன்படுத்தப்படும் காய்ச்சல் நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது.

75) மயக்க மருந்தாக பயன்படுவது எது?

A) கந்தக ஈதர்

B) ஆஸ்பிரின்

C) ஆன்டிபைரின்

D) பாராசிட்டமால்

விளக்கம்: கந்தக ஈதர் மயக்க மருந்தாக பயன்படுகிறது, இதனை நுகரும் போது எந்தவித துலங்களும் இன்றி உணர்வுகளற்று இருப்பதனை வில்லியம் மோர்டன் என்ற இளம் அமெரிக்க பல்மருத்துவர் கண்டறிந்தார்.

76) மலேரியா காய்சலின் போது உடலின் வெப்பநிலை எவ்வளவு இருக்கும்?

A) 103 – 106 டிகிரி பாரன்ஹீட்

B) 105 – 108 டிகிரி பாரன்ஹீட்

C) 103 – 108 டிகிரி பாரன்ஹீட்

D) 100 – 106 டிகிரி பாரன்ஹீட்

விளக்கம்: மலேரியா காய்ச்சலின் போது உடலின் வெப்பநிலை 103 – 106 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு அதிகமாக இருக்கும். இந்த வெப்பநிலையானது உடலின் கல்லீரலை பாதித்து இரத்த சோகையை ஏற்படுத்துகிறது.

77) உணர்வை இழக்கச் செய்யும் மருந்துகள்?

A) வலி நீக்கிகள்

B) காய்ச்சல் நிவாரணி

C) மயக்க மருந்துகள்

D) புரை தடுப்பான்கள்

விளக்கம்: உணர்வை இழக்கச் செய்யும் மருந்துகள் மயக்க மருந்துகள் என அழைக்கப்படுகிறது, இவை அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

78) கீழ்கண்டவற்றுள் எவை மயக்கமூட்டும் வேதி பொருள் அல்ல?

A) நைட்ரஸ் ஆக்சைடு

B) குளோரோபார்ம்

C) ஈதர்

D) எதுவுமில்லை

விளக்கம்: மேற்கண்ட அனைத்தும் மயக்கமூட்டும் வேதிப்பொருட்கள் ஆகும். இவை பொது மயக்க மருந்தாக பயன்படுகிறது.

நைட்ரஸ் ஆக்சைடு

குளோரோபார்ம்

ஈதர்

79) 1. உள்உறுப்புகளில் பெரிய அறுவை சிகிச்சை செய்யும்போது பொது மயக்க மருந்துகள் பயன்படுகிறது.

2. பல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது பொது மயக்க மூட்டிகள் பயன்படுத்தப்படுகிறது.

3. தற்போது வரை குளோரோபார்ம் மயக்கமூட்டி பொது மயக்கமூட்டியாக பயன்படுத்தப்படுகிறது.

4. ஆஸ்பிரின் நோவால்ஜின் போன்றவை பொதுவான வலி நீக்கிகள் ஆகும்.

A) 1 4 சரி

B) 1 2 3 சரி

C) 1 3 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: உள்உறுப்புகளில் பெரிய அறுவை சிகிச்சை செய்யும்போது பொது மயக்க மருந்துகள் பயன்படுகிறது.

பல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது குறிப்பிட்ட மயக்க மூட்டிகள் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது வரை குளோரோபார்ம் மயக்கமூட்டி பொது மயக்கமூட்டியாக பயன்படுத்தப்பட வில்லை.

ஆஸ்பிரின் நோவால்ஜின் போன்றவை பொதுவான வலி நீக்கிகள் ஆகும்.

80) 1. நைட்ரஸ் ஆக்சைடு – கார்பனைல்குளோரைடை உருவாக்குகிறது.

2. ஈதர் – மிகவும் பாதுகாப்பான மயக்கமூட்டி

3. குளோரோபார்ம் – திசுக்களால் உட்கவரப்பட்டு மைய நரம்புமண்டலத்தை தாக்கி

உணர்விழக்க செய்கிறது

A) 1 3 2

B) 2 3 1

C) 3 2 1

D) 1 2 3

விளக்கம்: நைட்ரஸ் ஆக்சைடு – மிகவும் பாதுகாப்பான

மயக்கமூட்டி

ஈதர் – திசுக்களால் உட்கவரப்பட்டு

மைய நரம்புமண்டலத்தை தாக்கி உணர்விழக்க செய்கிறது

குளோரோபார்ம் – கார்பனைல்குளோரைடை

உருவாக்குகிறது.

81) உட்கொள்பவரின் நலனுக்காக அவரது உடலியல் அமைப்பை பற்றி அறிவதற்காகவோ அல்லது நோயியல் நிலை பற்றி குறித்து ஆராய்வதற்காகவோ பயன்படுத்தப்படும் பொருள் — எனப்படும்?

A) வலிநீக்கி

B) புரைதடுப்பான்

C) மருந்துகள்

D) மயக்கமூட்டிகள்

விளக்கம்: உட்கொள்பவரின் நலனுக்காக அவரது உடலியல் அமைப்பை பற்றி அறிவதற்காகவோ அல்லது நோயியல் நிலை பற்றி குறித்து ஆராய்வதற்காகவோ பயன்படுத்தக்கபடும் பொருள் மருந்து என வரையறுக்கப்படுகிறது. இந்த வரையறையானது உலக சுகாதார அமைப்பால் வரையறுக்கப்பட்டது.

82) மறைமுக சாயமேற்றிகளில் நிறமூன்றிகளாக பயன்படுத்தப்படும் பொருட்கள் எவை எவை?

A) இரும்பு உப்புக்கள்

B) அலுமினியம்

C) குரோமியம்

D) அனைத்தும்

விளக்கம்: நிறமூன்றி என்பது துணிகளுடன் இணைக்கப்பட்டு பிறகு சாயங்களுடன் இணைக்ககூடிய பொருளாகும், இதன் காரணமாக லேக் எனப்படும் கரையாத கூட்டுபொருள் உருவாகும். இவ்வாறு நிறமூன்றிகளாக மேற்கண்ட அனைத்து பொருட்களும் பயன்படுத்தப்படுகிறது.

இரும்பு உப்புக்கள்

அலுமினியம்

குரோமியம்

83) சாதாரண உப்பு – பூஞ்சை பாக்டீரியாக்களை தடுக்கிறது.

2. சர்க்கரை – இறைச்சி மற்றும் காய்கறிகள்.

3. கிராம்பு – ஊருகாய் மற்றும் கலன்களில் அடைக்கப்பட்ட உணவு.

4. வினிகர் – பழத்துவையல்.

A) 2 3 4 1

B) 4 2 1 3

C) 1 3 2 4

D) 2 4 1 3

விளக்கம்: சாதாரண உப்பு – இறைச்சி மற்றும் காய்கறிகள்.

சர்க்கரை – பழத்துவையல்.

கிராம்பு – பூஞ்சை பாக்டீரியாக்களை தடுக்கிறது.

வினிகர் – ஊருகாய் மற்றும் கலன்களில் அடைக்கப்பட்ட உணவு.

84) ஆல்கஹால் பரிசோதனையில் பயன்படுத்தப்படாத வேதி பொருட்கள் எது?

A) சல்பியூரிக் அமிலம்

B) வெள்ளி நைட்ரேட்

C) பொட்டாசியம் டை குரோமேட்

D) அசிடிக் அமிலம்

விளக்கம்: ஆல்கஹால் பரிசோதனையில் அசிடிக் அமிலம் பயன்படுத்தப்படுவதில்லை.

பரிசோதனையில் மது அருந்தியவர்கள் ஊதும் போது மதுவில் உள்ள ஆல்கஹால் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து டை குரோமேட்டை குரோமிக அயனியாக மாற்றம் அடைய வைக்கிறது, இது ஆரஞ்சு நிறத்தை பச்சை நிறமாக மாற்றுகிறது.

85) மின்வேதிக்கலத்தில் எதிர்மின்வாயில் நிகழும் மாற்றம் ________?

A) ஆக்ஸிஜனேற்றம்

B) ஒடுக்கம்

C) நடுநிலையாக்கல்

D) சங்கிலி இணைப்பு

விளக்கம்: மின்வேதிக்கலத்தின் எதிர் மின்வாயில் ஒடுக்க வினை மட்டுமே நிகழ்கிறது, இது நேர்மின்வாயின் ஆக்ஸிஜனேற்ற வினையில் உண்டான எலக்ரான்கனை ஈர்க்கப்படுவதால் சுற்றில் மின்னோட்டம் உண்டாகிறது.

86) புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் மருந்து எத்தகைய தன்மைவாய்ந்தது?

A) இயற்கை மருந்துகள்

B) வேதி மருந்துகள்

C) விலங்கு மூலங்கள்

D) நுண்ணுயிர் மூலங்கள்

விளக்கம்: புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் வேதி மருந்துகளே ஆகும், இவை புற்றுநோய் செல்களின் செயலில் குறுக்கிட்டு அவற்றின் பிரிதல் மற்றும் வளர்ச்சியை தடைசெய்து, அவற்றின் வளர்ச்சியை தடுக்கிறது.

87) கைரேகை பதிவை கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள் ___________ ஆகும்?

A) நின்ஹட்ரின்

B) லேசர்

C) சயனோஅக்ரிலேட் எஸ்டர்

D) அனைத்தும்

விளக்கம்: மேற்கண்ட அனைத்து வழிகளிலும் கைரேகைப்பதிவை கண்டறியலாம், நின்ஹட்ரின் பயன்பாட்டினால் மறைக்கப்பட்ட கைரேகை தெரியப்படுகிறது, லேசர் ஒளியின் வெளிப்பாட்டின் மூலமும் காணப்படுகிறது, சயனோ அக்ரிலேட் எஸ்டர் சுவாலையை ஒளிரும் வண்ண சாயத்துடன் சேர்த்து பயன்படுத்தப்படும்போது கைரேகை வெளிப்படுகிறது.

88) மலேரியா நிவாரண மருந்து கடைசியாக எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?

A) 1986

B) 1961

C) 1970

D) 1995

விளக்கம்: மலேரியா நிவாரண மருந்தாக பலவகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது ஆனால் கடைசியாக 1961 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பைரிமீத்தமின் ஆகும். எனினும் குயினைன், பிரிமாகுயின் மற்றும் குளோரோகுயின் போன்ற மருந்துகள் சிறந்த நிவாரணியாக கருதப்படுகின்றன.

89) 1. ஒரு குறிப்பிட்ட வேதி வினையானது நிகழுமா நிகழாதா என தீர்மானிப்பது மின்வேதியியல் ஆகும்.

2. வாகன ஓட்டிகள் குடிபோதையில் உள்ளனரா என்பதனை தீர்மாணிக்கவும் மின்வேதியியல் பயன்படுகிறது.

3. கரிம சேர்மங்களை உருவாக்குவதற்கும் இரும்பு அல்லாத உலோகங்களை உற்பத்தி செய்யவும் மின்வேதியியல் பயன்படுகிறது.

4. அலுமினியம் மற்றும் டைட்டானியம் போன்ற உலோகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து உற்பத்தி செய்ய மின்வேதியியல் பயன்படுகிறது.

A) 1 4 சரி

B) 1 2 3 சரி

C) 1 3 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: ஒரு குறிப்பிட்ட வேதி வினையானது நிகழுமா நிகழாதா என தீர்மானிப்பது மின்வேதியியல் ஆகும்.

வாகன ஓட்டிகள் குடிபோதையில் உள்ளனரா என்பதனை தீர்மாணிக்கவும் மின்வேதியியல் பயன்படுகிறது.

கரிம சேர்மங்களை உருவாக்குவதற்கும் இரும்பு அல்லாத உலோகங்களை உற்பத்தி செய்யவும் மின்வேதியியல் பயன்படுகிறது.

அலுமினியம் மற்றும் டைட்டானியம் போன்ற உலோகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து உற்பத்தி செய்ய மின்வேதியியல் பயன்படுகிறது.

90) 1. உணவு வேதியியல் – மருந்துகள் மற்றும் அதன் மேம்பாடு பற்றி கற்கும் இயல்.

2. நானோ வேதியியல் – உணவின் தரத்தையும் அதன் பாதுகாப்பையும் பற்றிய இயல்.

3. தடயவியல் வேதியியல் – பொருட்களை அணு அல்லது மூலக்கூறு பரிமானத்திற்கு எடுத்துச்சென்று அவற்றின் பண்புகளை ஆராயும் அறிவியல்.

4. மருந்தாக்க வேதியியல் – வேதியியலின் கொள்கைகளையும் அதன் நுட்பங்களையும் கொண்டு குற்றங்களை ஆராய்வதற்கு பயன்படுவது.

A) 3 4 2 1

B) 2 3 4 1

C) 2 4 3 1

D) 2 3 1 4

விளக்கம்: உணவு வேதியியல் – உணவின் தரத்தையும் அதன் பாதுகாப்பையும் பற்றிய இயல்.

நானோ வேதியியல் – பொருட்களை அணு அல்லது மூலக்கூறு பரிமானத்திற்கு எடுத்துச்சென்று அவற்றின் பண்புகளை ஆராயும் அறிவியல்.

தடயவியல் வேதியியல் – வேதியியலின் கொள்கைகளையும் அதன் நுட்பங்களையும் கொண்டு குற்றங்களை ஆராய்வதற்கு பயன்படுவது.

மருந்தாக்க வேதியியல் – மருந்துகள் மற்றும் அதன் மேம்பாடு பற்றி கற்கும் இயல்.

91) தாவர வளர்சிக்கு பெரிதும் பயன்படும் பெரும நுண் ஊட்டத் தனிமங்கள் எவை?

A) பாஸ்பரஸ், பொட்டாசியம், கார்பன்

B) நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ்

C) ஆர்சனிக், ஆன்டிமனி, நைட்ரேட்

D) மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ்

விளக்கம்: தாவர வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும் நுண்ஊட்ட தனிமங்களாக நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்களே உதவுகிறது, இவற்றை இயற்கையாகவும் கொடுக்கலாம், தொழிற்சாலையில் வணிக நோக்கத்திற்கும் பயன்படுத்தலாம்.

92) 1. வலி நிவாரணி – ஆன்டிபைரின்.

2. காய்ச்சல் நிவாரணி – நோவால்ஜின்.

3. மலேரியா நிவாரணி – அயோடோபார்ம்.

4. புரைதடுப்பான் – குயினைன்.

A) 3 2 4 1

B) 4 1 2 3

C) 2 1 4 3

D) 2 3 1 4

விளக்கம்: வலிநிவாரணி – நோவால்ஜின்.

காய்ச்சல் நிவாரணி – ஆன்டிபைரின்.

மலேரியா நிவாரணி – குயினைன்.

புரைதடுப்பான் – அயோடோபார்ம்.

93) சில மருந்துகள் வியாதியை குணப்படுத்தாவிடினும், மனித உடலின் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தும் தன்மையுள்ளதாக இருக்கின்றன இவ்வகை மருந்திற்கு எடுத்துக்காட்டு?

A) நோவால்ஜின்

B) ஆஸ்பரின்

C) குயினைன்

D) மார்ஃபின்

விளக்கம்: மார்ஃபின் மற்றும் கொகைன் போன்ற மருந்துகள் வியாதியை குணப்படுத்தாவிடினும் மனித உடலின் சிறப்பான வினைவுகளை ஏற்படுத்தும் தன்மையுள்ளவையாக இருக்கின்றன இந்த மருந்துகள் சட்டத்திற்கு புறம்பானவை எனவே இதனை தடை செய்யப்பட்டுள்ளது.

94) 1. மருந்தானது நமது உடலின் நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியவையாக இருத்தல் கூடாது.

2. அது உட்கொள்பவரின் திசுக்களை அது பாதிக்கக்கூடாது.

3. மேலும் இது சாதாரண உடலியல் செயல்பாடுகளை பாதிக்கக்கூடாது.

4. மருந்துகள் அதன் செயல்பாடுகளில் தீவிரமாக இருத்தல் வேண்டும்.

A) 1 4 சரி

B) 1 2 3 சரி

C) 1 3 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: மருந்தானது நமது உடலின் நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியவையாக இருத்தல் கூடாது. அது உட்கொள்பவரின் திசுக்களை அது பாதிக்கக்கூடாது. மேலும் இது சாதாரண உடலியல் செயல்பாடுகளை பாதிக்கக்கூடாது. மருந்துகள் அதன் செயல்பாடுகளில் தீவிரமாக இருத்தல் வேண்டும்.

95) நுண்ணுயிர் எதிர்ப்பு பொருளின் மூலாதாரம் எது?

A) புரோட்டோசோவா

B) வைரஸ்

C) ஆக்டியோமைசிஸ்

D) மோல்டுகள்

விளக்கம்: நுண்ணுயிர் எதிர்ப்பு மூலங்களாக 3 முக்கிய மூலாதாரங்களை கொண்டுள்ளன அவையாவன

  1. பாக்டீரியா
  2. பூஞ்சை
  3. ஆக்டியோமைசிஸ்

இவை நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளாகவும் வைரஸ் நீக்கி மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

96) வினைபடுபொருள்களின் கதிரியக்க ஐசோடோப்புகளுடன் கதிரியகத் தன்மையற்ற ஐசோடோப்புகளை சேர்த்து சில வகையான வேதிவினைகளின் தன்மையை அறியலாம் இந்த நோக்கத்திற்காக பயன்படும் ஐசோடோப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) கதிரியக்க கார்பன் தேதியிடல்

B) கதிரியக்கசுடறிவான்

C) கதிரியக்கநோய் கண்டறிதல்

D) கதிரியக்க சிகிச்சை

விளக்கம்: வினைபடுபொருள்களின் கதிரியக்க ஐசோடோப்புகளுடன் கதிரியகத் தன்மையற்ற ஐசோடோப்புகளை சேர்த்து சில வகையான வேதிவினைகளின் தன்மையை அறியலாம் இந்த நோக்கத்திற்காக பயன்படும் ஐசோடோப்புகள் கதிரியக்கசுடறிவான் என அழைக்கப்படுகிறது, இது எந்த பொருட்களில் இருந்து உருமாற்றம் பெற்றது என கண்டறியலாம்.

97) 1. ஹென்றி பெக்கோரல் – 1938

2. கியூரி – 1903

3. ஃபெர்மி – 1911

A) 2 3 1

B) 3 1 2

C) 1 3 2

D) 3 1 2

விளக்கம்: ஹென்றி பெக்கோரல் – 1903

கியூரி – 1911

ஃபெர்மி – 1938

கதிரியக்கத்தில் சில சிறப்பு நிகழ்வுகளை கண்டறிந்ததால் இவர்களுக்கு இந்த ஆண்டுகளில் நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.

98) செயற்கை சாயம் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?

A) 1938

B) 1911

C) 1903

D) 1856

விளக்கம்: செயற்கை சாயமானது 1856 ஆம் ஆண்டு பெர்கின் என்பவரால் உருவாக்கப்பட்டது.

99) இந்தியாவின் இயற்கை பாரம்பரிய அழகுசாதன பொருள் என எதனை அழைக்கப்படுகிறது?

A) ஹென்னா

B) கர்குமா லங்கா

C) குயினைன்

D) இண்டிகோ

விளக்கம்: இந்தியாவின் இயற்கை பாரம்பரிய அழகுசாதன பொருளாக விளங்குவது கர்குமா லங்கா என்ற வேதிப்பெயர் கொண்ட மஞ்சள் ஆகும். இது கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது மேலும் இந்தியாவில் இது உணவு நிறமியாக பயன்படுகிறது.

100) வேளாண்வேதியியலின் இலக்குகளில் கீழ்கண்டவற்றில் சரியானவை எது?

A) பயிர் மகசூல் மற்றும் கால்நடைகளை அதிகரித்தல்.

B) உணவுத் தரத்தினை மேம்படுத்துதல்.

C) உணவு உற்பத்திக்கான செலவை குறைத்தல்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: வேளாண்வேதியியலின் இலக்குகளானது மேற்கண்ட அனைத்தும் சரியானவையே இவை

பயிர் மகசூல் மற்றும் கால்நடைகளை அதிகரித்தல்

உணவுத் தரத்தினை மேம்படுத்துதல்

உணவு உற்பத்திக்கான செலவை குறைத்தல் போன்ற அனைத்து செயல்களையும் கொண்டது.

101) 1. உணவுபதப்படுத்திகள் – உணவில் இனிப்பு சுவையை

கூட்டுவதற்கு.

2. நிறமிகள் – நுண்ணுயிர்களால் ஏற்படும்

பாதிப்பிலிருந்து உணவை பாதுகாக்கிறது.

3.செயற்கை இனிப்பூட்டிகள் – உணவிற்கு இனிய நிறத்தினை

கொடுக்கிறது.

4. சுவையூட்டிகள் – ஆக்சிஜனேற்றத்தை தடுத்து உணவின்

தன்மையை கெடாமல் பாதுகாக்கிறது.

5. எதிர் ஆக்ஸிஜனேற்றிகள் – உணவுவகைகளின் சுவைகளை

மேம்படுத்துகின்றன.

A) 2 3 4 1 5

B) 2 3 5 4 1

C) 2 5 4 3 1

D) 2 3 1 5 4

விளக்கம்: உணவுபதப்படுத்திகள் – நுண்ணுயிர்களால் ஏற்படும்

பாதிப்பிலிருந்து உணவை

பாதுகாக்கிறது.

நிறமிகள் – உணவிற்கு இனிய நிறத்தினை

கொடுக்கிறது.

செயற்கை இனிப்பூட்டிகள் – உணவில் இனிப்பு சுவையை

கூட்டுவதற்கு.

சுவையூட்டிகள் – உணவுவகைகளின் சுவைகளை

மேம்படுத்துகின்றன.

எதிர் ஆக்ஸிஜனேற்றிகள் – ஆக்சிஜனேற்றத்தை தடுத்து

உணவின் தன்மையை கெடாமல் பாதுகாக்கிறது.

102) 1. நானோதுகள்கள் ஆக்ஸிஜனோடு தொடர்புகொண்டு உறுதியற்ற தன்மையை அடைகின்றன.

2. இவை ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து வெப்ப உட்கவர் வினையில் ஈடுபட்டு வெடித்து சிதற வாய்ப்புள்ளது.

3. நானோ துகள்களை தொகுத்தல் வடிவமைத்தல் மற்றும் பயன்படுத்துதல் கடினம்.

4. இவைகனை மறுசுழற்சி செய்வதும், முழுவதுமாக அழிப்பதும் கடினமாகும்.

A) 1 4 சரி

B) 1 2 3 சரி

C) 1 3 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: நானோதுகள்கள் ஆக்ஸிஜனோடு தொடர்புகொண்டு உறுதியற்ற தன்மையை அடைகின்றன. இவை ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து வெப்ப உமிழ் எரிதல் வினையில் ஈடுபட்டு வெடித்து சிதற வாய்ப்புள்ளது. நானோ துகள்களை தொகுத்தல் வடிவமைத்தல் மற்றும் பயன்படுத்துதல் கடினம். இவைகனை மறுசுழற்சி செய்வதும், முழுவதுமாக அழிப்பதும் கடினமாகும்.

103) 1. தாவரங்கள் – பென்சிலின்

2. ரசாயன தொகுப்பு – திரவ பாரஃபின்

3. நுண்ணுயிர் – மார்ஃபின்

4. கனிமம் – மனித வளர்ச்சி ஹார்மோன்கள்

5. மரபு பொறியியல் – ஆஸ்பரின்

A) 3 5 1 2 4

B) 3 5 2 4 1

C) 3 2 1 4 5

D) 5 2 1 4 3

விளக்கம்: தாவரங்கள் – மார்ஃபின்

ரசாயன தொகுப்பு – ஆஸ்பரின்

நுண்ணுயிர் – பென்சிலின்

கனிமம் – திரவ பாரஃபின்

மரபு பொறியியல் – மனித வளர்ச்சி ஹார்மோன்கள்

104) மயக்க மருந்தை முதன் முதலில் கண்டறிந்தவர்?

A) கியூரி

B) மோர்டன்

C) லான்சி

D) மோஸ்லே

விளக்கம்: மயக்க மருந்தானது 1846 ஆம் ஆண்டு வில்லியம் மோர்டன் என்பவரால் கண்டறியப்பட்டது இது இவர் கந்தக ஈதரை பயன்படுத்தி கண்டறிந்தார்.

105) 1. காய்ச்சல் நிவாரணி – பெரிய மேற்பரப்பு பகுதி

2. அரிப்பை தடுத்தல் – அயோடின் 131

3. ஹைப்பர்தைராய்டிசம் – காய்ச்சல்

4. நானோ துகள்கள் – புற்றுநோய் செல்களைக் கண்டறிதல்

5. நானோ ரோபாட்டீஸ் – மின் முலாம் பூசுதல்

A) 3 5 2 1 4

B) 3 2 5 1 4

C) 3 5 2 4 1

D) 2 5 3 1 4

விளக்கம்: காய்ச்சல் நிவாரணி – காய்ச்சல்

அரிப்பை தடுத்தல் – மின் முலாம் பூசுதல்

ஹைப்பர்தைராய்டிசம் – அயோடின் 131

நானோ துகள்கள் – பெரிய மேற்பரப்பு பகுதி

நானோ ரோபாட்டீஸ் – புற்றுநோய் செல்களைக் கண்டறிதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!