Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
General Tamil

9th Tamil Unit 4 Questions

9th Tamil Unit 4 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 9th Tamil Unit 4 Questions With Answers Uploaded Below.

1. Photo Copier என்பதன் தமிழ்ச் சொல்லாக்கம்

அ) தொலைநகல் இயந்திரம்

ஆ) நகல் இயந்திரம்

இ) ஒளிப்படி இயந்திரம்

ஈ) ஒலிப்படி இயந்திரம்

2. உலகின் முதல் ஒளிப்படி எடுக்கப்பட்ட ஆண்டு

அ) 1959

ஆ) 1958

இ) 1938

ஈ) 1939

3. கிரேக்க மொழிச் சொல்லான ” சீரோகிராஃபி ” என்பதன் பொருள்

அ) உலர் எழுத்துமுறை

ஆ) ஒளிப்படி எழுத்துமுறை

இ) ஜெராக்ஸ் முறை

ஈ) கந்தக எழுத்துமுறை

4. ஒளிப்படி இயந்திரத்தை 1959 ல் உலகிற்கு அறிமுகம் செய்தவர் யார்?

அ) செஸ்டர் கார்ல்சன்

ஆ) அலெக்சாண்டர் பெயின்

இ) ஹாங்க் மாக்னஸ்கி

ஈ) ஜான் ஜெப்பர்டு பாரன்

5. _____ தட்டைக் கொண்டு செஸ்டர் கார்ல்சன் உலகின் முதல் ஒளிப்படியை எடுத்தார்.

அ) ஜிங்க் தடவிய தட்டு

ஆ) கந்தகம் தடவிய துத்தநாக தட்டு

இ) காப்பர் தட்டு

ஈ) தங்கம் முலாம் பூசிய தட்டு

6. குறியீடுகளை மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதற்கான காப்புரிமையை பெற்றவர் யார்?

அ) ஜியோவான்னி காசில்லி

ஆ) அலெக்சாண்டர் பெயின்

இ) ஹாங்க் மாக்னஸ்கி

ஈ) செஸ்டர் கார்ல்சன்

7. பொருத்துக.

1. ஜியோவான்னி காசில்லி – i) குறியீடுகளை மின்னாற்றலில் அச்சிடுதல்

2. அலெக்சாண்டர் பெயின் – ii) பான்டெலிகிராப்

3. ஹாங்க் மாக்னஸ்கி – iii) காமா ஃபேக்ஸ்

4. செஸ்டர் கார்ல்சன் – iv) ஒளிப்படி இயந்திரம்

அ) i ii iii iv

ஆ) ii iii i iv

இ) ii i iv iii

ஈ) ii i iii iv

8. ஜியோவன்னி காசில்லி கண்டுபிடிப்பை கொண்டு பாரிஸ் நகரிலிருந்து லியான் நகரத்துக்கு தொலைநகல் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு

அ) 1865

ஆ) 1846

இ) 1985

ஈ) 1938

9. பான்டெலிகிராஃப் என்பது ____ வகை கருவி.

அ) ஒளிப்படி இயந்திரம்

ஆ) தொலைநகல்கருவி

இ) ஒலிப்படி கருவி

ஈ) நகலெடுக்கும் கருவி

10. 1985 ல் கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் யார்?

அ) அலெக்சாண்டர் பெயின்

ஆ) ஜியோவான்னி காசில்லி

இ) செஸ்டர் கார்ல்சன்

ஈ) ஹாங்க் மாக்னஸ்கி

11. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் கருவி எது?

அ) காமாஃபேக்ஸ்

ஆ) பான்டெலிகிராப்

இ) சீரோகிராஃபி

ஈ) ஆல்பா ஃபேக்ஸ்

12. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. ஜான் ஷெப்பர்டு பாரன் என்பவரின் குழு தானியங்கி பண இயந்திரத்தை முதலில் நிறுவினர்.

2. பேங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கிக்காக இலண்டனில் 1967 ஜூன் 27 அன்று தானியக்க பண இயந்திரத்தை அமைத்தது.

அ) இரண்டும் சரி

ஆ) 1 சரி, 2 தவறு

இ) 1 தவறு, 2 சரி

ஈ) இரண்டும் தவறு

(விளக்கம்: பார்க்லேஸ் வங்கிக்காக இலண்டனில் 1967 ஜூன் 27 அன்று தானியக்க பண இயந்திரத்தை அமைத்தது.)

13. கூற்று: தானியங்கி பண இயந்திரம் எதிர்காலத்தில் குறைந்து விடக் கூடும்.

காரணம்: பெருகி வரும் இணைய பயன்பாடு மற்றும் பணமற்ற வணிக முறையை நடைமுறைப்படுத்துவதால்.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி, சரியான விளக்கமல்ல

ஆ) கூற்று சரி காரணம் தவறு

இ) கூற்று காரணம் இரண்டும் சரி, சரியான விளக்கம்

ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு

14. “Swiping Machine ” என்பது கீழ்க்கண்டவற்றுள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

1. கட்டணம் செலுத்தும் கருவி

2. விற்பனைக் கருவி

3. அட்டை பயன்படுத்தும் இயந்திரம்

4. தானியங்கி பண இயந்திரம்

அ) 1, 2

ஆ) 1, 3

இ) 1, 2, 3

ஈ) அனைத்தும்

15. தற்காலத்தில் பயன்படுத்தப்படும் வங்கி அட்டைகளின் ____ பகுதியை விற்பனைக் கருவியில் தேய்ப்பதன் மூலம் வணிக பரிமாற்றம் நடைபெறுகிறது.

அ) காந்தப்பட்டை

ஆ) கருப்புப்பட்டை

இ) தாமிரம்

ஈ) சில்லு

16. கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றவர் யார்?

அ) ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு

ஆ) அலெக்சாண்டர் பெயின்

இ) செஸ்டர் கார்ல்சன்

ஈ) ஹாங்க் மாக்னஸ்கி

17. ஆட்ரியன் ஆஷ்பீல்டு கடவுச் சொல்லுடன் கூடிய அட்டைக்கு காப்புரிமை பெற்ற ஆண்டு

அ) 1959

ஆ) 1958

இ) 1962

ஈ) 1972

18. தமிழகத்தில் திறன் அட்டைகளுடன் கீழ்க்கண்ட எந்த விவரங்கள் சேர்க்கப்படுகின்றன.

1. முகவரி

2. வங்கி கணக்கு எண்

3. ஆதார் எண்

4. அலைபேசி எண்

5. கையொப்பம்

அ) 1, 2, 3

ஆ) 1, 3, 4, 5

இ) 1, 3, 4

ஈ) அனைத்தும்

19. இணைய வணிகத்தை மைக்கேல் ஆல்ட்ரிச் கண்டுபிடித்த ஆண்டு

அ) 1979

ஆ) 1989

இ) 1969

ஈ) 1959

20. இணையவழி மளிகைக்கடை எங்கு எப்போது முதலில் தொடங்கப்பட்டது

அ) அமெரிக்கா, 1979

ஆ) கனடா, 1979

இ) அமெரிக்கா, 1989

ஈ) ஆஸ்திரேலியா, 1989

21. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க

1. IRCTC ன் இணையதளத்தில் பயணச்சீட்டை பதிவு செய்யவும் அதை நீக்கம் செய்யவும் வசதி உள்ளது.

2. இந்த வசதி 2002 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

3. 12 ஆண்டுகள் கழித்து இந்த இணையதளத்தில் ஒரே நாளில் 13 இலட்சம் பயணச்சீட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

4. தற்போது இதில் ஒரு மணி நேரத்திற்கு 1500 பயணச்சீட்டுகள் பதிவு செய்யலாம்.

அ) 2, 3 சரியல்ல

ஆ) 2, 4 சரியல்ல

இ) 3, 4 சரியல்ல

ஈ) 2, 3, 4 சரியல்ல

(விளக்கம்: 3. 13 ஆண்டுகள் கழித்து இந்த இணையதளத்தில் 2015 ஏப்ரல் 1 அன்று ஒரே நாளில் 13 இலட்சம் பயணச்சீட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

4. தற்போது இதில் ஒரு நிமிடத்திற்கு 1500 பயணச்சீட்டுகள் பதிவு செய்யும் வகையிலும் 3 இலட்சம் பயனர்கள் ஒரே நேரத்தில் இணைய வழிச் சேவையைப் பயன்படுத்தவும் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.)

22. ” இணையதளத்தில் இது இல்லையெனில், உலகத்தில் அது நடைபெறவே இல்லை” என்ற வையக விரிவு வலை வழங்கி குறித்த வாசகம் யாருடையது

அ) ஜியோவான்னி காசில்லி

ஆ) டிம் பெர்னர்ஸ் லீ

இ) ஹாங்க் மாக்னஸ்கி

ஈ) செஸ்டர் கார்ல்சன்

23. இணையத்தை பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கிய ஆண்டு

அ) 1991

ஆ) 1979

இ) 1989

ஈ) 1992

24. இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் இணைய வழி பயணச்சீட்டு வசதியை அறிமுகப்ப்டுத்திய ஆண்டு

அ) 1991

ஆ) 2002

இ) 2012

ஈ) 2015

25. IRCTC இணையதளத்தில் ஒரே நாளில் 13 இலட்சம் பயணச்சீட்டுகள் பதிவு செய்யப்பட்டது எப்போது?

அ) 2015 டிசம்பர் 1

ஆ) 2015 ஆகஸ்ட் 1

இ) 2015 ஏப்ரல் 1

ஈ) 2015 மே 1

26. IRCTC இணையதளத்தை ஒரே நேரத்தில் எத்தனை பயனர்கள் பயன்படுத்தலாம்

அ) 3, 00, 000

ஆ) 30, 000

இ) 30, 00, 000

ஈ) 3, 000

27. 2002 ல் IRCTC இணைய வழி பயணச்சீட்டு வசதியை அறிமுகப்படுத்திய போது ஒரு நாளைக்கு பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுளின் எண்ணிக்கை எவ்வளவு?

அ) 26

ஆ) 29

இ) 30

ஈ) 21

28. சிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ்கள் ஆகியவற்றை இணையம் மூலம் பெற அரசின் _____ மையங்களை நாடலாம்.

அ) மின்சார சேவை மையம்

ஆ) மின்னணு சேவை மையம்

இ) பொது விநியோக மையம்

ஈ) இணைய சேவை மையம்

29. TRUST என்பதன் விரிவாக்கம் என்ன?

அ) Tamilnadu rural students talent search examination

ஆ) Tamilnadu rural and urban students talent search examination

இ) Tamilnadu rare and uniform students talent search examination

ஈ) Tamilnadu urban students talent search examination

30. சரியான தமிழ்ச்செல்லுடன் பொருத்துக.

1. Document – i) உறை

2. Folder – ii) விரலி

3. Pendrive – iii) உலர் எழுத்துமுறை

4. Dry writng – iv) எழுத்துக்கோப்பு

அ) iv i ii iii

ஆ) iii I ii iv

இ) ii i iv iii

ஈ) i ii iii iv

31. பொருத்துக

1. 10 ம் வகுப்பு – i) தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு

2. 8ம் வகுப்பு – ii) ஊரக திறனாய்வு தேர்வு

3. 9ம் வகுப்பு – iii) தேசிய திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகை தேர்வு

4. 12 ம் வகுப்பு – iv) தேசிய திறனாய்வு தேர்வு

அ) iv i ii iii

ஆ) iii i ii iv

இ) ii i iv iii

ஈ) i ii iii iv

32. ____ வருகைக்குப் பின் தந்தி முறை விடை பெற்றது.

அ) மின்னஞ்சல்

ஆ) தொலைபேசி

இ) குறுஞ்செய்தி

ஈ) சமூக வலைதளங்கள்

33. பொருத்துக

1. அலெக்சாண்டர் பெயின் – i) இங்கிலாந்து

2. ஜியோவன்னி காசில்லி – ii) அமெரிக்கா

3. ஹாங்க் மாக்னஸ்கி – iii) இத்தாலி

4. ஜான் ஷெப்பர்டு பாரன் – iv) ஸ்காட்லாந்து

அ) i ii iii iv

ஆ) ii iii i iv

இ) ii i iv iii

ஈ) iv iii ii i

34. பொருத்துக

1. குறியீடுகளை மின்னாற்றல் மூலம் அச்சிடுவது – i) 1846

2. தொலைநகல் கருவி சேவை – ii) 1865

3. தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பம் – iii) 1985

4. இணைய வணிகம் – iv) 1979

5. வையக விரிவு வலை வழங்கி – v) 1990

அ) i ii iii iv v

ஆ) ii iii i v iv

இ) v ii i iv iii

ஈ) iv iii v ii i

35. பொருத்துக.

1. குறியீடுகளை மின்னாற்றல் மூலம் – i) மைக்கேல் ஆல் ட்ரிச் அச்சிடுவது

2. பான்டெலிகிராஃப் – ii) ஹாங்க் மாக்னஸ்கி

3. காமா ஃபேக்ஸ் – iii) அலெக்சாண்டர் பெயின்

4. இணைய வணிகம் – iv) ஜியோவான்னி காசில்லி

5. வையக விரிவு வலை வழங்கி – v) டிம் பெர்னர்ஸ்லீ

அ) i ii iii iv v

ஆ) ii iii i v iv

இ) iii iv ii i v

ஈ) iv iii v ii i

36. பொருத்துக

1. Payment terminal – i) கட்டணம் செலுத்தும் கருவி

2. Point of Sale terminal – ii) விற்பனைக்கருவி

3. Smart card – iii) ஆளறி சோதனைக் கருவி

4. Biometric device – iv) திறன் அட்டை

அ) i ii iv iii

ஆ) ii iii i iv

இ) ii i iv iii

ஈ) iv iii ii i

37. பொருத்துக.

1. www Server – i) வையக விரிவு வலை வழங்கி

2. Swiping machine – ii) அட்டை பயன்படுத்தும் இயந்திரம்

3. Fax – iii) தொலைநகல் இயந்திரம்

4. Photo Copier – iv) ஒளிப்படி இயந்திரம்

அ) i ii iii iv

ஆ) ii iii i iv

இ) ii i iv iii

ஈ) iv iii ii i

38. “ ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள் ” என்ற வரிகள் யாருடையது?

அ) கண்ணதாசன்

ஆ) வைரமுத்து

இ) வாலி

ஈ) தமிழ்ஒளி

39. இலக்கணக் குறிப்புத் தருக.

பண்பும் அன்பும், இனமும் மொழியும்

அ) உம்மைத் தொகைகள்

ஆ) உவமைத் தொகைகள்

இ) எண்ணும்மைகள்

ஈ) பண்புத்தொகைகள்

(விளக்கம்: கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் ‘உம்’ எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.)

40. இலக்கணக் குறிப்புத் தருக – சொன்னோர்

அ) பண்புத்தொகை

ஆ) வினையெச்சம்

இ) வினைத்தொகை

ஈ) வினையாலணையும் பெயர்

(விளக்கம்: வினைமுற்று, வினைசெய்த கருத்தாவைக் குறிக்க வருவது வினையாலணையும் பெயர் ஆகும்.)

41. பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக – பொருத்துங்கள்

அ) பொருத்து + உங்கள்

ஆ) பொருத்து + உம் + கள்

இ) பொரு + த் + உங்கள்

ஈ) பொரு + து + உங்கள்

42. ” பொருத்துங்கள்  பொருத்து + உம் + கள் “ இதில் ‘ உம் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) முன்னிலை ஒருமை வினை முற்று விகுதி

ஆ) முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி

இ) விகுதி மேல் விகுதி

ஈ) ஏவல் வினை முற்று விகுத

(விளக்கம்: பொருத்து – பகுதி, உம் – முன்னிலைப் பன்மை விகுதி)

43. கவிஞர் வைரமுத்து அவர்கள் பிறந்த ஊர் எது?

அ) மெட்டூர் – மதுரை

ஆ) மெட்டூர் – தேனி

இ) மெட்டூர் – கோவை

ஈ) மெட்டூர் – திண்டுக்கல்

44. கவிஞர் வைரமுத்து அவர்கள் எந்த ஆண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?

அ) 2001

ஆ) 2002

இ) 2003

ஈ) 2004

45. கவிஞர் வைரமுத்து அவர்கள் இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை _____ முறையும் மாநில அரசின் விருதினை _____ முறையும் பெற்றுள்ளார்.

அ) 6, 7

ஆ) 7, 6

இ) 5, 6

ஈ) 6, 5

46. கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதைகள் கீழ்க்கண்ட எந்தெந்த மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன

1. இந்தி

2. தெலுங்கு

3. மலையாளம்

4. வங்காளம்

5. ஆங்கிலம்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3

இ) 2, 3, 4

ஈ) 1, 3, 4

47. கவிஞர் வைரமுத்து அவர்கள் கீழ்க்கண்ட எந்த விருதினை பெற்றுள்ளார்

அ) பத்மஸ்ரீ

ஆ) பாரத ரத்னா

இ) பத்மபூஷண்

ஈ) துரோணாச்சார்யா விருது

48. ” புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான ஊர்தி ”

இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?

அ) புறநானூறு

ஆ) அகநானூறு

இ) சீவக சிந்தாமணி

ஈ) மணிமேகலை

(விளக்கம்: இவ்வரிகள் புறநானூற்றில் பாடல் 27, அடி 7-8ல் அமைந்துள்ளது)

49. ” பெருந்தச்சனைக் கூவி, “ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின் ” என்றார் ” என்றவரிகள் இடம்பெற்றுள்ள நூல்?

அ) புறநானூறு

ஆ) அகநானூறு

இ) சீவக சிந்தாமணி

ஈ) மணிமேகலை

(விளக்கம்: இவ்வரிகள் சீவக சிந்தாமணியில் நாமகள் இலம்பகம் 50ல் இடம்பெற்றுள்ளது)

50. “அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள் ”

என்ற வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை தொகுப்பு

அ) கள்ளிக்காட்டு இதிகாசம்

ஆ) வைரமுத்து கவிதைகள்

இ) அறிவியல் சிந்தனை

ஈ) தோழர்கள்

51. ” ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே”

என்று பாடியவர் யார்?

அ) அகத்தியர்

ஆ) தொல்காப்பியர்

இ) கபிலர்

ஈ) ஒவையார்

52. இலக்கணக் குறிப்புத் தருக – உணர்ந்தோர்

அ) பண்புத்தொகை

ஆ) வினையெச்சம்

இ) வினைத்தொகை

ஈ) வினையாலணையும் பெயர்

(விளக்கம்: வினைமுற்று, வினைசெய்த கருத்தாவைக் குறிக்க வருவது வினையாலணையும் பெயர் ஆகும்.)

53. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – நெறிப்படுத்தினர்

அ) நெறி + படுத்தினர்

ஆ) நெறி + படுத்து + இனர்

இ) நெறிப்படுத்து + இன் + அர்

ஈ) நெறி + படுத்து + இன் + அர்

54. ” நெறிப்படுத்தினர்  நெறிப்படுத்து + இன் + அர் ” இதில் ‘ இன் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) நிகழ்கால இடைநிலை

ஆ) எதிர்கால இடைநிலை

இ) இறந்த கால இடைநிலை

ஈ) எதிர்மறை இடைநிலை

(விளக்கம்: இறந்த கால இடைநிலைகள் – த், ட், ற், இன்)

55. கீழ்க்கண்டவற்றுள் நான்கறிவுள்ள உயிர்களிடம் உள்ள அறியும் ஆற்றல்கள் எவை?

1. உற்றறிதல் 2. சுவைத்தல் 3. நுகர்தல் 4. காணல்

5. கேட்டல் 6. பகுத்தறிதல்

அ) 1, 2, 3, 4

ஆ) 2, 3, 4, 5

இ) 3, 4, 5, 1

ஈ) 4, 5, 1, 2

56. கீழ்க்கண்டவற்றுள் சரியான தவறான இணை எது?

அ) ஓரறிவு – உற்றறிதல்

ஆ) ஈரறிவு – உற்றறிதல் + நுகர்தல்

இ) மூவறிவு – உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல்

ஈ) ஐந்தறிவு – உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் + கேட்டல்

(விளக்கம்: ஈரறிவு – உற்றறிதல் + சுவைத்தல்)

57. பொருத்துக

அறிவு நிலை – எ – கா

1. ஓரறிவு – i) பறவை, விலங்கு

2. ஈரறிவு – ii) கரையான், எறும்பு

3. மூவறிவு – iii) சிப்பி, நத்தை

4. ஐந்தறிவு – iv) புல், மரம்

அ) i ii iii iv

ஆ) ii iii i iv

இ) iii iv ii i

ஈ) iv iii ii i

58. கீழ்க்கண்டவற்றுள் நான்கறிவுள்ள உயிர்கள் எவை?

1. சிப்பி 2. நண்டு

3. நத்தை 4. தும்பி

அ) 1, 2

ஆ) 2, 3

இ) 2, 4

ஈ) 1, 3

59. கீழ்க்கண்டவற்றுள் எறும்புக்குரிய அறியும் ஆற்றல்கள் எவை?

1. உற்றறிதல் 2. காணல்

3. நுகர்தல் 4. சுவைத்தல்

5. கேட்டல்

அ) 1, 2, 3

ஆ) 1, 3, 4

இ) 1, 4, 5

ஈ) 1, 2, 5

60. பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்களுக்கு முதல் நூலாக அமைந்த நூல் எது?

அ) அகத்தியம்

ஆ) தொல்காப்பியம்

இ) நன்னூல்

ஈ) பாயிரம்

61. கீழ்க்கண்டவற்றுள் தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள் எவை?

1. எழுத்து 2. சொல்

3. பொருள் 4. யாப்பு

5. அணி

அ) 1, 2, 3

ஆ) 2, 3, 4

இ) 1, 3, 4

ஈ) 1, 2, 3, 4

62. தொல்காப்பியத்தில் உள்ள மொத்த இயல்கள் எத்தனை?

அ) 26

ஆ) 27

இ) 36

ஈ) 37

63. தொல்காப்பியத்தில் உள்ள எந்த அதிகாரங்கள் மொழி இலக்கணங்களை விளக்குகின்றன?

1. எழுத்து 2. சொல்

3. பொருள் 4. யாப்பு

5. அணி

அ) 1, 2

ஆ) 2, 3

இ) 1, 3

ஈ) 1, 2, 3

64. தொல்காப்பியத்தில் உள்ள எந்த அதிகாரங்கள் தமிழரின் அகம் புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும் தமிழ் இலக்கியக் கோட்பாடுகளையும் விளக்குகின்றன.

1. எழுத்து 2. சொல்

3. பொருள் 4. யாப்பு

5. அணி

அ) 1, 2

ஆ) 2 மட்டும்

இ) 3 மட்டும்

ஈ) 4, 5

65. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

1. தொல்காப்பியத்தில் பல அறிவியல் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

2. இந்நூலில் கூறிப்பிட்டுள்ள பிறப்பியலில் எழுத்துகள் பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கியிருப்பதை அயல்நாட்டு அறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர்.

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) இரண்டும் தவறு

66. தமிழகத்தை சேர்ந்த சிவன் இஸ்ரோவின் எத்தனையாவது தலைவர்?

அ) 6

ஆ) 7

இ) 8

ஈ) 9

67. இஸ்ரோவின் தலைவராக பதவியேற்ற முதல் தமிழர் யார்?

அ) அப்துல்கலாம்

ஆ) மயில்சாமி அண்ணாதுரை

இ) சிவன்

ஈ) வளர்மதி

68. சிவன் அவர்கள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்த ஆண்டு

அ) 2014

ஆ) 2015

இ) 2016

ஈ) 2017

69. சிவன் அவர்களின் சொந்த ஊர் எது?

அ) வல்லங்குமாரவிளை – இராமநாதபுரம் அருகில்

ஆ) வல்லங்குமாரவிளை – தூத்துக்குடி அருகில்

இ) வல்லங்குமாரவிளை – நாகர்கோவில் அருகில்

ஈ) வல்லங்குமாரவிளை – நாகப்பட்டிணம் அருகில்

70. பி. எஸ். எல். வி திட்டத்தை தொடங்க இந்திய அரசு இசைவு தந்த ஆண்டு ______.

அ) 1969

ஆ) 1972

இ) 1982

ஈ) 1983

71. சிவன் அவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் ஏவு ஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும் செயலி____.

அ) பி. எஸ். எல். வி

ஆ) சித்தாரா

இ) டிஜிட்டல்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

72. SITARA என்பதன் முழு விரிவாக்கம் என்ன?

அ) software for trajectory analysis

ஆ) software for integrated trajectory analysis with real time application

இ) software for instant track with real time application

ஈ) software for instant trajectory with real time application

73. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

அ) விக்ரம் சாராபாய்

ஆ) ஹோமி பாபா

இ) அருணன் சுப்பையா

ஈ) அப்துல் கலாம்

74. விக்ரம் சாராபாய் அவர்கள் ____ என்ற முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்கு காரணமாக இருந்தார்.

அ) ரோகினி

ஆ) ஆரியபட்டா

இ) பி. எஸ். எல். வி

ஈ) ஜி. எஸ். எல். வி

75. விக்ரம் சாராபாய் அவர்கள் செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக ____ இந்திய கிராமங்களில் உள்ள ஐம்பது இலட்சம் மக்களுக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார்.

அ) 24000

ஆ) 25000

இ) 2400

ஈ) 2500

76. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எந்த இடத்தில் செயல்பட்டு வருகிறது?

அ) ஹைதராபாத்

ஆ) பெங்களுர்

இ) திருவனந்தபுரம்

ஈ) திருநெல்வேலி

77. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் கீழ்க்கண்ட எந்தெந்த துறைகளில் ஆராய்ச்சிகளும் வடிவமைப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன?

1. வானூர்தியியல்

2. வான்பயண மின்னணுவியல்

3. கூட்டமைப் பொருள்கள்

4. கணினி – தகவல் தொழில்நுட்பம்

அ) அனைத்தும்

ஆ) 1, 2

இ) 2, 3, 4

ஈ) 1, 2, 4

78. யாருடைய முயற்சியால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது.

அ) விக்ரம் சாராபாய்

ஆ) ஹோமி பாபா

இ) அருணன் சுப்பையா

ஈ) அப்துல் கலாம்

79. அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவின் எத்தனையாவது குடியரசு தலைவராக பணியாற்றினார்

அ) 9

ஆ) 10

இ) 11

ஈ) 12

80. ‘ இந்திய ஏவுகணை நாயகன் ‘ என்று அழைக்கப்படுபவர் யார்?

அ) விக்ரம் சாராபாய்

ஆ) ஹோமி பாபா

இ) அருணன் சுப்பையா

ஈ) அப்துல் கலாம்

81. அப்துல்கலாம் அவர்கள் கீழ்க்கண் எந்த நிறுவனங்களில் விண்வெளி பொறியாளராகப் பணியாற்றினார்

1. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்

2. இந்திய அணுசக்தி துறை

3. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

அ) அனைத்தும்

ஆ) 1, 2

இ) 1, 3

ஈ) 2, 3

82. அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவின் உயரிய விருதான ___ விருதை பெற்றுள்ளார்.

அ) பத்மஸ்ரீ

ஆ) பாரத ரத்னா

இ) பத்மபூஷண்

ஈ) துரோணாச்சார்யா விருது

83. ______ ஆண்டு முதல் இரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைக்கோள்களை ஏவியிருக்கின்றன.

அ) 1947

ஆ) 1957

இ) 1949

ஈ) 1969

84. கீழ்க்கண்டவற்றுள் செயற்கை கோள் தொழில்நுட்பத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் பயன்களில் சரியானது எது?

1. ஒவ்வொரு ஆண்டும் விவசாய விளைச்சல் எவ்வளவு கிடைக்கும் என கணிக்க முடிகிறது.

2. நிலத்தில் எந்த இடத்தில் நீரின் அளவு எவ்வளவு இருக்கும் என கண்டறிய முடிகிறது.

3. கடல் பகுதியில் எந்த எந்த இடங்களில் மீன்கள் அதிகமாக கிடைக்கும் என மீனவர்களுக்கு சொல்ல முடிகிறது.

4. இணைய செயல்கள் அனைத்திற்கும் செயற்கைக்கோள்கள் அவசியம் தேவை.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3 சரி

இ) 2, 3, 4 சரி

ஈ) 2, 3 சரி

85. இதுவரை இந்தியாவுக்காக எத்தனை செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன

அ) 44

ஆ) 45

இ) 54

ஈ) 55

86. தமிழ்நாடு அரசின் அப்துல் கலாம் விருதை பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்?

அ) சிவன்

ஆ) அருணன் சுப்பையா

இ) வளர்மதி

ஈ) வான்மதி

87. வளர்மதி அவர்கள் இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்களில் எத்தனையாவது பெண் அறிவியல் அறிஞர் ஆவார்?

அ) 1

ஆ) 2

இ) 3

ஈ) 4

88. முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளை உள்நாட்டிலேயே உருவாகும் திட்டம் எந்த ஆண்டு நடைபெற்றது?

அ) 2010

ஆ) 2011

இ) 2012

ஈ) 2013

89. கீழ்க்கண்ட வளர்மதி அவர்கள் குறித்த கூற்றுகளில் தவறானது எது?

அ) வளர்மதி அவர்கள் அரியலூரில் பிறந்தவர்.

ஆ) 2014ல் இவர் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதை பெற்றார்.

இ) இஸ்ரோவில் 1984 முதல் பணியாற்றி வருகிறார்.

ஈ) 2012ல் உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.

(விளக்கம்: 2015 ல் இவர் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதை பெற்றார்.)

90. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. மீனவர்களுக்கு நேவிக் என்ற செயலியை கடல் பயணத்திற்காக இஸ்ரோ உருவாக்கி உள்ளது.

2. இது கடலில் எல்லை தாண்டினால் உடனடியாக எச்சரிக்கும்.

3. மீன்கள் அதிகமுள்ள பகுதியைக் காட்டும் செயலியையும் இஸ்ரோ வருவாக்கியுள்ளது.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ 1, 3 சரி

ஈ) 2, 3 சரி

91. விண்வெளித் துறையில் எத்தனை வகையான தொழில்நுட்பங்கள் இருக்கின்றன?

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 6

92. கீழ்க்கண்டவற்றுள் விண்வெளித் துறையில் உள்ள தொழில்நுட்பங்கள் எவை?

1. செயற்கைக்கோளை ஏவுவதற்கான தொழில்நுட்பம்

2. செயற்கைக்கோளை ஏற்றிச்செல்லும் ஏவு ஊர்தி

3. ஏவு ஊர்தியிலிருந்து விடுபட்ட செயற்கைக்கோள் தரும் செய்திகளை பெற்று அதை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருதல்.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 1, 3 சரி

ஈ) 2, 3 சரி

93. தற்போதுள்ள ஜி. எஸ். எல். வி மார்க் – 2, ஜி. எஸ். எல். வி மார்க் – 3 ஏவுகணையின் சுமக்கும் திறன்கள் எவை?

அ) 3 டன், 2. 25 டன்

ஆ) 2. 25 டன், 3 டன்

இ) 3. 25 டன், 6 டன்

ஈ) 6 டன், 3. 25 டன்

94. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது / எவை சரியானது?

1. இஸ்ரோவின் முக்கிய நோக்கம், தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் குறைந்த செலவில் மக்களுக்கு தரமான சேவைகளைக் கொடுப்பது.

2. அப்துல் கலாம் அவர்கள் இஸ்ரோ தலைவர் சிவனை ‘மென்பொறியாளர் ‘ என்றே அழைப்பார்.

3. தற்போது மறுபயன்பாட்டிற்கு ஏற்ற ஏவு ஊர்திகளை உருவாக்குவதில் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

4. ஜி. எஸ். எல். வி மார்க் 2 ஏவுகணையின் சுமக்கும் திறன் 3. 25 டன்னாகவும், ஜி. எஸ். எல். வி மார்க் 3 ஏவுகணையின் சுமக்கும் திறன் 6 டன்களாகவும் அதிகரிக்கப்படவிருக்கிறது

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 1, 2, 3 சரி

ஈ) 2, 3, 4 சரி

95. கீழ்க்கண்டவற்றுள் சந்திராயன்-1 ன் நோக்கம் என்ன?

அ) நிலவின் வளிமண்டலத்தை ஆராய்வது

ஆ) நிலவின் புறவெளியை ஆராய்வது

இ) நிலவிலுள்ள வாயுக்களை ஆராய்வது

ஈ) நிலவின் உட்புறத்தை ஆராய்வது

96. கீழ்க்கண்ட சந்திராயன் – 2 குறித்த கூற்றுகளில் எது தவறானது.

1. சந்திராயன் 2 ன் பணியில், நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பயண ஊர்தி இறங்குவது துல்லியமான கட்டுப்பாடுகளின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

2. அதிலிருந்து ரோவர் எனப்படும் ஆராயும் ஊர்தி ரோபோட்டிக் தொழில்நுட்ப உதவியினால் தானாகவே வெளிவரும்.

3. இந்த ரோவர் ஊர்தி நிலவில் இறங்கி 14 நாள்கள் பயணிக்கும்.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 2, 3 சரி

97. அருணன் சுப்பையா அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

அ) கோதைசேரி – தூத்துக்குடி

ஆ) கோதைசேரி – திருநெல்வேலி

இ) ஏர்வாடி – தேனி

ஈ) ஏர்வாடி – தூத்துக்குடி

98. அருணன் சுப்பையா அவர்கள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்த ஆண்டு

அ) 1983

ஆ) 1984

இ) 1985

ஈ) 1986

99. அருணன் சுப்பையா அவர்கள் இந்திய விண்வெளித் துறையின் எந்த திட்டத்தின் திட்ட இயக்குநராக உள்ளார்.

அ) சூரியன் சுற்றுகலன் திட்டம்

ஆ) சந்திரன் சுற்றுகலன் திட்டம்.

இ) செவ்வாய் சுற்றுகலன் திட்டம்

ஈ) வியாழன் சுற்றுகலன் திட்டம்

100. மங்கள் யான் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்ட ஆண்டு

அ) 2012

ஆ) 2013

இ) 2014

ஈ) 2015

101. அருணன் சுப்பையா அவர்கள் தற்போது எந்த இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிகிறார்?

அ) திருவனந்தபுரம்

ஆ) ஹைதராபாத்

இ) பெங்களுரு

ஈ) திருநெல்வேலி

102. ‘ இளைய கலாம் ‘ என்று அழைக்கப்படுபவர் யார்?

அ) விக்ரம் சாராபாய்

ஆ) மயில்சாமி அண்ணாதுரை

இ) அருணன் சுப்பையா

ஈ) அப்துல் கலாம்

103. மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பிறந்த ஊர் எது?

அ) கோதைசேரி – தூத்துக்குடி

ஆ) கோதைசேரி – திருநெல்வேலி

இ) கோதவாடி – கோவை

ஈ) கோதவாடி – ஈரோடு

104. மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் எந்த வகுப்பு வரை அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்?

அ) 10

ஆ) 11

இ) 12

ஈ) 6

105. மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பெற்றுள்ள முனைவர் பட்டங்கள் எத்தனை?

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

106. மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்த ஆண்டு

அ) 1982

ஆ) 1983

இ) 1984

ஈ) 1985

107. நிலவுக்கு முதன்முதலில் அனுப்பிய ஆய்வுக் கலம் சந்திராயன் மற்றும் சந்திராயன் 2 திட்டத்தின் திட்ட இயக்குநராக பணியாற்றியவர் யார்?

அ) விக்ரம் சாராபாய்

ஆ) மயில்சாமி அண்ணாதுரை

இ) அருணன் சுப்பையா

ஈ) அப்துல் கலாம்

108. கீழ்க்கண்டவற்றுள் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பெற்ற விருது எது?

அ) பாரத ரத்னா

ஆ) பத்ம பூஷண்

இ) பத்மஸ்ரீ

ஈ) சர். சி. வி. இராமன் நினைவு அறிவியல் விருது

109. மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் தமது அறிவியல் அனுபவங்களை _____ என்னும் நூலாக எழுதியுள்ளார்?

அ) அறிவியல் அனுபவங்கள்

ஆ) கையருகே நிலா

இ) சந்திராயன்

ஈ) இஸ்ரோ

110. கீழ்க்கண்டவற்றுள் இஸ்ரோவில் எப்போதும் இருக்கும் 3 வகையான திட்டங்கள் எவை?

1. 2 ஆண்டுகள்

2. 3 ஆண்டுகள்

3. 5 ஆண்டுகள்

4. 7 ஆண்டுகள்

5. 15 ஆண்டுகள்

அ) 1, 2, 3

ஆ) 2, 3, 4

இ) 2, 4, 5

ஈ) 2, 3, 5

111. கீழ்க்கண்ட வல்லினம் மிகா இடங்களில் தவறானது எது?

அ) அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின்

ஆ) வினாப் பெயர்களின் பின்

இ) எழுவாய்த் தொடர்

ஈ) 3, 6ம் வேற்றுமை தொகை

(விளக்கம்: 3, 6ம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது.)

112. கீழ்க்கண்ட வல்லினம் மிகா இடங்களில் எது / எவை சரியானது?

1. விளித் தொடர்கள்

2. பெயரெச்சங்கள்

3. இரண்டாம் வேற்றுமைத் தொகை

4. படி என்று முடியும் வினையெச்சம்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 4

இ) 1, 3, 4

ஈ) 1, 2, 3

113. கீழ்க்கண்ட வல்லினம் மிகா இடங்களில் தவறானது எது?

அ) வியங்கோள் வினைமுற்று தொடர்

ஆ) வினைத் தொகை

இ) அனைத்து எண்ணுப் பெயர்களுடன்

ஈ) உம்மைத் தொகை

(விளக்கம்: எட்டு, பத்து தவிர பிற எண்ணுப் பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது.)

114. கீழ்க்கண்ட வல்லினம் மிகா இடங்களில் தவறானது எது?

அ) அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி, போன்ற என்னும் சொற்களின் பின்

ஆ) நேற்றைய, இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின்

இ) 3, 5, 6 ம் வேற்றுமைத் தொகை

ஈ) சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின் பின்

(விளக்கம்: சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களைத் தவிர ஏனைய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.)

115. கீழ்க்கண்ட தொடர்களில் தவறானது எது?

அ) வந்த சிரிப்பு

ஆ) வரும்படி சொன்னார்

இ) திருவளர்செல்வன்

ஈ) கருத்துக்கள்

(விளக்கம்: கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சேரும் போது வல்லினம் மிகாது)

116. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. அக்கினிச் சிறகுகள் – அப்துல்கலாம்

2. மின்மினி – சுஜாதா

3. ஏன், எதற்கு, எப்படி?- ஆயிஷா நடராஜன்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1 மட்டும் சரி

(விளக்கம்: 2. மின்மினி – ஆயிஷா நடராஜன்

3. ஏன், எதற்கு, எப்படி? – சுஜாதா)

117. கீழ்க்காணும் மூன்று தொடர்களுள்,

1. இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப்பெரிய இந்திய நிறுவனம் இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும்.

2. வங்கி அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.

3. திறன் அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டனவாகும்.

அ) 1, 2 சரி; 3 தவறு

ஆ) 1, 3 சரி; 2 தவறு

இ) 1 தவறு; 2, 3 சரி

ஈ) மூன்றும் சரி

118. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?

அ) தேசியத் திறனாய்வுத் தேர்வு

ஆ) ஊரகத் திறனாய்வுத் தேர்வு

இ) தேசிய திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு

ஈ) மூன்றும் சரி

119. “ஒன்றறிவதுவே உற்றறிவதுவே

இரண்டறிவதுவே அதனொடு நாவே ”

இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது?

அ) நுகர்தல்

ஆ) தொடு உணர்வு

இ) கேட்டல்

ஈ) காணல்

120. பின்வரும் தொடர்களைப் படித்து ‘ நான் ‘ யார் என்று கண்டுபிடிக்க.

அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்

எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்

இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்

அ) இணையம்

ஆ) தமிழ்

இ) கணினி

ஈ) ஏவுகணை

121. விடை வரிசையைத் தேர்க.

1. இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும்.

2. இது கடல் பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி.

அ) நேவிக், சித்தாரா

ஆ) நேவிக், வானூர்தி

இ) வானூர்தி, சித்தாரா

ஈ) சித்தாரா, நேவிக்

122. “கடலிலே கோடி கோடிக் கதிர்க்கைகள் ஊன்று கின்றாய்

நெடுவானில் கோடி கோடி நிறை சுடர்க் கைகள் நீட்டி “

இவ்வரிகளை இயற்றியவர் யார்?

அ) பாரதி

ஆ) பாரதிதாசன்

இ) வைரமுத்து

ஈ) தமிழ்ஒளி

123. சரியான பொருளை தேர்ந்தெடு

துவனம், துகலம்

அ) நுட்பமான ஒலி, ஒலி

ஆ) ஒலி, நுட்பமான ஒலி

இ) முழங்குதல், ஒலி

ஈ) முழங்குதல், நுட்பமான ஒலி

124. சரியான இணையத் தேர்ந்தெடு

1. இமிழ்தல் – முழங்குதல்

2. இசைவு – ஒப்புதல்

3. சபலை – மின்னல்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

125. பொருத்துக

1. ஏவு ஊர்தி – i) Launch Vehicle

2. ஏவுகணை – ii) Missile

3. கடல்மைல் – iii) Nautial Mile

4. பதிவிறக்கம் – iv) Download

அ) i ii iii iv

ஆ) ii iii i iv

இ) ii i iv iii

ஈ) iv iii ii i

126. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. காணொலிக் கூட்டம் – Video Conference

2. பயணியர் பெயர்ப் பதிவு – Passenger Name Record

3. மின்னணு கருவிகள் – Electronic devices

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!