Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
General Tamil

9th Tamil Unit 7 Questions

9th Tamil Unit 7 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 9th Tamil Unit 7 Questions With Answers Uploaded Below.

1. கல், உலோகம், செங்கல், மரம் முதலியவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலை சிற்பக் கலை எனக் கூறும் நூல்

அ) அகராதி நிகண்டு

ஆ) சிந்தாமணி நிகண்டு

இ) சூடாமணி நிகண்டு

ஈ) திவாகர நிகண்டு

2. உருவ அமைப்பின் அடிப்படையில் சிற்பங்களின் வகைகள் எத்தனை?

அ) 3

ஆ) 2

இ) 4

ஈ) 5

(விளக்கம்: 1. முழு உருவச் சிற்பங்கள் 2. புடைப்புச் சிற்பங்கள்)

3. கோபுரம், தூண்கள், நுழைவாயில்கள், கோவிலின் தரைப்பகுதி, சுவர்களின் வெளிப்புறங்களில் காணப்படும் சிற்பங்கள் ____.

அ) புடைப்புச் சிற்பங்கள்

ஆ) முழு உருவச் சிற்பங்கள்.

இ) பிரதிமை

ஈ) தெய்வசிற்பங்கள்

4. உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்படும் சிற்பங்கள் _______ எனப்படும்.

அ) புடைப்புச் சிற்பங்கள்

ஆ) முழு உருவச் சிற்பங்கள்.

இ) பிரதிமை

ஈ) தெய்வசிற்பங்கள்

5. உலோகங்கள் மற்றும் கல்லினால் செய்யப்படும் சிற்பங்கள் எத்தனை நிலைகளில் செய்யப்படுகின்றன.

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

(விளக்கம்: 1. தெய்வ உருவங்கள் 2. இயற்கை உருவங்கள் 3. கற்பனை உருவங்கள் 4. முழுவடிவ (பிரதிமை) உருவங்கள்)

6. கீழ்க்கண்டவற்றுள் தமிழர் அழகியலின் வெளிப்பாடு எது?

அ) கோயில்கள்

ஆ) சிற்பங்கள்

இ) நூல்கள்

ஈ) மொழி

7. சிற்ப இலக்கண மரபுப்படி சிற்பங்கள் செய்பவர்கள் _____ எனப்படுவர்.

அ) கற்கவிஞர்கள்

ஆ) சிற்பக் கவிஞர்கள்

இ) உருவக் கவிஞர்கள்

ஈ) உலோக கவிஞர்கள்

8. மாளிகைகளில் பல சுதைச் சிற்பங்கள் இருந்ததை கூறும் நூல் ____.

அ) சிலப்பதிகாரம்

ஆ) தொல்காப்பியம்

இ) திவாகர நிகண்டு

ஈ) மணிமேகலை

9. போரில் இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும் என்ற செய்தியை கூறும் நூல்

அ) சிலப்பதிகாரம்

ஆ) தொல்காப்பியம்

இ) திவாகர நிகண்டு

ஈ) மணிமேகலை

10. தமிழர்களின் தொடக்கக் காலச் சிற்பக் கலைக்கு சான்று

அ) நடுகல்

ஆ) சுதைச் சிற்பங்கள்

இ) புடைப்புச் சிற்பங்கள்

ஈ) கோயில்கள்

11. பல்லவர் கால சிற்பங்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இக்காலத்தில் சுதையினாலும் கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.

2. மாமல்லபுரச் சிற்பங்கள் பல்லவர்காலச் சிற்பக்கலைக்கு சிறந்த சான்று.

3. காஞ்சி வைகுந்த பெருமாள் கோவில் சுற்றுச்சுவர் சிற்பங்களின் கலைக்கூடமாக திகழ்கிறது.

4. பல்லவர் கால குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் உள்ளன.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 3 தவறு

இ) 3 தவறு

ஈ) அனைத்தும் தவறு

(விளக்கம்: 3. காஞ்சி கயிலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் (முழுவதும்) சிற்பங்களின் கலைக்கூடமாக திகழ்கிறது.)

12. கீழ்க்கண்டவற்றுள் சிற்பக்கலை பற்றிய குறிப்புகள் இடம்பெறாத நூல் எது?

அ) தொல்காப்பியம்

ஆ) திவாகர நிகண்டு

இ) மணிமேகலை

ஈ) திருக்குறள்

13. பஞ்ச பாண்டவர் இரதம் அமைந்துள்ள இடம் ____.

அ) மாமல்லபுரம்

ஆ) காஞ்சி கைலாசநாதர் கோயில்

இ) தஞ்சை பெரிய கோவில்

ஈ) மலைக்கோட்டை

14. கீழ்க்கண்டவற்றுள் பாண்டியர் கால சிற்பங்கள் காணப்படாத இடம்

அ) பிள்ளையார்பட்டி

ஆ) திருமயம்

இ) கழுகுமலை

ஈ) மலைக்கோட்டை

(விளக்கம்: திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம், கழுகுமலை வெட்டுவான் கோவில் முதலிய இடங்களில் உள்ள கோவில்களில் பாண்டியர் கால சிற்பங்கள் காணப்படுகின்றன)

15. செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என அழைக்கப்படுவது ____.

அ) சோழர்காலம்

ஆ) சேரர் காலம்

இ) பாண்டியர் காலம்

ஈ) பல்லவர் காலம்

16. தஞ்சை பெரிய கோவிலில் காணப்படும் வாயிற்காவலர் உருவங்களின் உயரம் _____.

அ) 13 அடி

ஆ) 15 அடி

இ) 14 அடி

ஈ) 11 அடி

(விளக்கம்: தஞ்சை பெரிய கோவிலில் காணப்படும் 14 அடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்களும் மிகப் பெரிய நந்தியும் வியப்பூட்டும் வேலைப்பாடுகள் கொண்ட தூண்களும் சோழர் காலச் சிற்பத் திறனுக்கு சான்றுகளாக உள்ளன.)

17. சோழர் காலத்தில் விரைவாக வளர்ச்சி பெற்ற கலை எது?

அ) கற்சிற்பக் கலை

ஆ) உலோக சிற்பக் கலை

இ) ஓவியக்கலை

ஈ) சுதை சிற்பக்கலை

18. பொருத்துக.

1. 2 ம் குலோத்துங்கன் – i) தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில்

2. 2 ம் இராசராசன் – ii) தீரிபுவன வீரேசுவரம் கோயில்

3. முதலாம் இராசேந்திரன் – iii) தஞ்சை பெரிய கோவில்

4. முதலாம் இராசராசன் – iv) கங்கைகொண்ட சோழபுரம்.

அ) i ii iii iv

ஆ) ii i iv iii

இ) ii i iii iv

ஈ) i ii iv iii

19. நடன முத்திரைகளுடன் கூடிய சோழர் கால சிற்பங்கள் காணப்படும் இடம்

அ) தஞ்சாவூர்

ஆ) நார்த்தாமலை

இ) சிதம்பரம்

ஈ) கும்பகோணம்

20. ஒரே கல்லில் அமைந்த நவக்கிரக சி லை அமைந்துள்ள இடம்

அ) மாமல்லபுரம்

ஆ) கங்கை கொண்ட சோழபுரம்

இ) தாராசுரம்

ஈ) தஞ்சை பெரிய கோவில்

21. 2 ம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட மூவர் கோயில் அமைந்துள்ள இடம்

அ) நார்த்தாமலை – புதுக்கோட்டை

ஆ) சீனிவாசநல்லூர் – திருச்சி

இ) கொடும்பாளூர் – புதுக்கோட்டை

ஈ) திருவரங்கம் – திருச்சி

22. குரங்கநாதர் கோவில் சிற்பங்கள் அமைந்துள்ள இடம்

அ) நார்த்தாமலை – புதுக்கோட்டை

ஆ) சீனிவாசநல்லூர் – திருச்சி

இ) கொடும்பாளூர் – புதுக்கோட்டை

ஈ) திருவரங்கம் – திருச்சி

23. கீழ்க்கண்டவற்றுள் பல்லவர் கால சிற்பங்கள் காணப்படும் இடம் எது?

அ) குன்றக்குடி

ஆ) பிள்ளையார்பட்டி

இ) காஞ்சிபுரம்

ஈ) திருப்பரங்குன்றம்

24. பின்வரும் கூற்றுகளை ஆராய்க.

1. பாண்டியர் கால குகைக் கோவில்கள் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கவை.

2. திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் இவற்றை காணலாம்.

3. கோவில்பட்டிக்கு கிழக்கே கழுகுமலை வெட்டுவான் கோவிலிலும் இவர்களது சிற்பங்கள் உள்ளன.

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 1, 2 சரி

ஈ) 1, 3 சரி

(விளக்கம்: 3. கோவில்பட்டிக்கு மேற்கே கழுகுமலை வெட்டுவான் கோவிலிலும் இவர்களது சிற்பங்கள் உள்ளன.)

25. சுண்ணாம்புக் கலவையால் செய்யப்படும் சிற்பங்கள் ______ எனப்படும்.

அ) புடைப்பு சிற்பங்கள்

ஆ) முழு உருவச் சிற்பங்கள்

இ) சுதைச் சிற்பங்கள்

ஈ) சுண்ணாம்பு சிற்பங்கள்

26. தெலுங்கு, கன்னடப் பகுதிகளின் சிற்பக் கலை தாக்கம் தமிழக சிற்பக் கலையில் யாருடைய காலத்தில் ஏற்பட்டது.

அ) சோழர்கள் காலம்

ஆ) பாண்டியர்கள் காலம்

இ) நாயக்கர் காலம்

ஈ) விஜயநகர மன்னர் காலம்

27. பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களை அமைத்தவர்கள் யார்?

அ) சோழர்கள்

ஆ) பாண்டியர்கள்

இ) நாயக்கர்கள்

ஈ) விஜயநகர மன்னர்கள்

28. பின்வரும் கூற்றுகளை கவனி.

1. விஜயநகர மன்னர்கள் காலத்தில் மிக உயர்ந்த கோபுரங்கள் கோவில்களில் அமைக்கப்பட்டன.

2. வீரர்கள் அமர்ந்த நிலையில் குதிரைகள் முன் கால்களை தூக்கி நிற்பது போன்ற சிற்பங்களை தூண்களில் அமைத்தனர்.

3. கோயில் மண்டபங்களில் சுதைகளாலான சிற்பங்கள் இருந்தன.

4. கோயில் மண்டபங்களில் சிற்பத் தூண்கள் மிகுதியாக இருந்தன.

அ) 1, 2, 3 சரி

ஆ) 1, 2, 4 சரி

இ) 1, 2 சரி

ஈ) 1 மட்டும் சரி

(விளக்கம்: கோபுரங்களில் சுதைகளாலான சிற்பங்கள் மிகுதியாக இருந்தன.)

29. ஆடை, அணிகலன்கள் அணிந்த நிலையில் உள்ள உருவங்களை சிறபங்களாக உருவாக்கியவர்கள் யார்?

அ) சோழர்கள்

ஆ) பாண்டியர்கள்

இ) நாயக்கர்கள்

ஈ) விஜயநகர மன்னர்கள்

30. காண்போரை ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ள குறவன், குறத்தி, இரதிதேவி சிலைகள் அமைந்துள்ள இடம் எது?

அ) கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில்

ஆ) பிள்ளையார்பட்டி கோயில்

இ) திருச்சி மலைக்கோட்டை

ஈ) நார்த்தாமலை

31. நாயக்கர் கால சிற்பக் கலை நுட்பத்தின் உச்சநிலைப்படைப்பு

அ) மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பங்கள்

ஆ) கிருஷ்ணாபுரம் கோவில் சிற்பங்கள்

இ) இராமேஸ்வரம் பெருங்கோவில் சிற்பங்கள்

ஈ) கோயம்புத்தூர் பேரூர் சிவன் கோவில் சிற்பங்கள்.

32. விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என நுட்பமான கலை நயத்துடன் கூடிய சிற்பங்கள் காணப்படும் இடம் எது?

அ) மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

ஆ) கோயம்புத்தூர் பேரூர் சிவன் கோவில்.

இ) புதுக்கோட்டை பேரூர் சிவன் கோவில்

ஈ) கிருஷ்ணாபுரம் வேங்கடாசலபதி கோவில்

33. இறந்த மைந்தனை கையில் ஏந்தியபடி நிற்கும் சந்திரமதி சிலை அமைந்துள்ள இடம்

அ) மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

ஆ) கோயம்புத்தூர் பேரூர் சிவன் கோவில்.

இ) புதுக்கோட்டை பேரூர் சிவன் கோவில்

ஈ) கிருஷ்ணாபுரம் வேங்கடாசலபதி கோவில்

(விளக்கம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் கண்ணப்பர், குறவன், குறத்தி போன்ற சிற்பங்கள் உள்ளன.)

34. ஆயிரங்கால் மண்டபங்கள் யாருடைய காலத்தில் அதிக இடங்களில் அமைக்கப்பட்டன.

அ) விஜய நகர மன்னர்கள்

ஆ) சோழர்கள்

இ) நாயக்கர்கள்

ஈ) பல்லவர்கள்

(விளக்கம்: ஆயிரங்கால் மண்டப தூண்களில் அழகிய சிற்பங்களை நாயக்கர்கள் செதுக்கினர்.)

35. குதிரையின் உருவங்களை சிற்பங்களில் இடம்பெற செய்தவர்கள் யார்?

அ) விஜய நகர மன்னர்கள்

ஆ) சோழர்கள்

இ) நாயக்கர்கள்

ஈ) பல்லவர்கள்

36. கீழ்க்கண்டவற்றுள் சோழர் கால சிற்பக்கலை நுட்பத்திற்கு மிகச் சிறந்த சான்று எது?

அ) நார்த்தாமலை

ஆ) திருவரங்க கோவில்

இ) குரங்கநாதர் கோவில்

ஈ) பேரூர் சிவன் கோவில்

37. புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளுரில் மூவர் கோவில் சிற்பங்களை அமைத்தவர் யார்?

அ) 2ம் இராசராசன்

ஆ) 2ம் குலோத்துங்கன்

இ) முதலாம் இராசேந்திரன்

ஈ) 2ம் பராந்தகச் சோழன்.

38. அளவுக்கு மீறிய உயரமும், பருமனும் உடைய சிற்பங்கள் எந்த மதத்தில் உள்ளன.

அ) பெளத்த மதம்

ஆ) சமண மதம்

இ) இந்து மதம்

ஈ) வைணவம்.

39. அருக கடவுளின் உருவத்தையும், 24 தீர்த்தங்கரர் உருவத்தையும் சிற்பங்களாக்கியவர்கள் யார்?

அ) விஜயநகர மன்னர்கள்

ஆ) பெளத்தர்கள்

இ) சமணர்கள்

ஈ) பல்லவர்கள்

40. ஒரு பாறையில் 24 தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ள இடம்

அ) மதுரை

ஆ) திருநாதர்குன்று

இ) திருப்பரங்குன்றம்

ஈ) வேலூர்

41. சிமெண்ட் என்பதன் தமிழ்ச் சொல் _____.

அ) களிமண்

ஆ) பைஞ்சுதை

இ) கட்டிட சுதை

ஈ) பெருஞ்சுதை

42. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

கூற்று: சிற்பக் கலையை போற்றி பாதுகாப்பது நமது கடமை.

காரணம்: சிற்பங்கள் மனித அறிவு வளர்ச்சியின் முதிர்ச்சி மற்றும் வரலாற்று பதிவுகள்.

அ) கூற்று சரி காரணம் தவறு.

ஆ) கூற்று காரணம் இரண்டும் சரி, சரியான விளக்கமல்ல

இ) கூற்று காரணம் இரண்டும் சரி, சரியான விளக்கம்.

ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு.

43. தமிழ்நாடு அரசு சிற்பக் கல்லூரி அமைந்துள்ள இடம்

அ) மதுரை

ஆ) சென்னை

இ) தஞ்சாவூர்

ஈ) மாமல்லபுரம்

44. உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள இடங்களில் பொருந்தாதது எது?

அ) சுவாமிமலை

ஆ) மாமல்லபுரம்

இ) மதுரை

ஈ) கும்பகோணம்

45. “சிற்பச்செந்நூல் “ என்ற நூலை வெளியிடும் அமைப்பு எது?

அ) தமிழ்நாடு சிற்பக்கலை இயக்ககம்.

ஆ) தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம்.

இ) இந்திய தொழில்நுட்பக்கல்வி இயக்ககம்.

ஈ) தமிழ்நாடு கல்வி அமைச்சகம்.

46. நாயக்கர் கால சிற்பங்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. நாயக்கர்கள் ஆயிரங்கால் மண்டபங்களை அமைத்தனர்.

2. பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசை கற்றுண்களை அமைத்தனர்.

3. ஆடை, அணிகலன்கள் அணிந்த நிலையில் உருவங்களை சிற்பங்கள் ஆக்கினர்.

4. பேரூர் சிவன் கோவில் சிற்பங்கள் இவர்களது உச்சநிலைப் படைப்பு.

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 1, 4 சரி

ஈ) அனைத்தும் தவறு

47. பொருத்துக.

1. பல்லவர்கள் – i) தாடிக்கொம்பு

2. பாண்டியர்கள் – ii) தாராசுரம்

3. சோழர்கள் – iii) பிள்ளையார்பட்டி

4. நாயக்கர்கள் – iv) மாமல்லபுரம்

5. சமணர்கள் – v) திருநாதர்குன்று

அ) iv iii ii i v

ஆ) iii iv ii i v

இ) iii iv i v ii

ஈ) iv ii iii i v

48. “ கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும்

– – – – – – – – – – – – – – –

பத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன ”

என்னும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

அ) மணிமேகலை

ஆ) திவாகர நிகண்டு

இ) சிலப்பதிகாரம்

ஈ) தொல்காப்பியம்

49. கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்கள் யாருடைய காலத்தவை

அ) பல்லவர்கள்

ஆ) பாண்டியர்கள்

இ) சோழர்கள்

ஈ) நாயக்கர்கள்

50. திரிபுவன வீரேசுவரம் கோயிலை அமைத்தவர் யார்?

அ) 2ம் குலோத்துங்கன்

ஆ) முதலாம் குலோத்துங்கன்

இ) 2ம் இராசராசன்

ஈ) 2ம் பராந்தகன்

51. கண்ணகிக்கு சிலை வடித்த செய்தி இடம்பெற்றுள்ள நூல் எது?

அ) மணிமேகலை

ஆ) சிலப்பதிகாரம்

இ) சிற்பச்செந்நூல்

ஈ) திவாகர நிகண்டு

52. “ ஓவிய விதானத்து, உரைபெறு நித்திலத்து

மாலைத்தாமம் வளையுடன் நாற்றி,

விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கம்”

என்ற அடிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன

அ) மணிமேகலை

ஆ) சிலப்பதிகாரம்

இ) சிற்பச்செந்நூல்

ஈ) திவாகர நிகண்டு

(விளக்கம்: சிலப்பதிகாரம் 111-113)

53. “துருப்பிடு மைவனச் சோற்றின் நாற்றமும் ” இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ) பூக்களை உடைய வனம்

ஆ) சந்தனம்

இ) இறகு

ஈ) மலை நெல்

54. அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி ” இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ) குறிஞ்சிப்பறை

ஆ) சந்தனம்

இ) இறகு

ஈ) மலைநெல்

55. சரியான பொருளைத் தேர்ந்தெடு

சிறை, சாந்தம்

அ) அறை, பூக்கள்

ஆ) இறகு, சந்தனம்

இ) இறகு, பூக்கள்

ஈ) அறை, சந்தனம்

56. ” அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை ” இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ) பூக்களை உடைய வனம்

ஆ) மயில்

இ) இறகு

ஈ) சந்தனம்

57. ” மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற்

கடைப்படு பொருளெலாம் கமழும் குன்றமே ”

இவ்வரிகள் எந்நிலத்தின் வளத்தை பற்றிக் கூறுகின்றன?

அ) குறிஞ்சி

ஆ) முல்லை

இ) மருதம்

ஈ) நெய்தல்

58. சரியான பொருளைத் தேர்ந்தெடு

பொலம், பொலி

அ) காடு, அழகு

ஆ) அழகு, அழகு

இ) அழகு, தானியக்குவியல்

ஈ) காடு, தானியக்குவியல்

59. ” பாஇசை பாடமுப் பழமும் தேனும்தந்

தேஇசை பெறும்கடறு இடையர் முக்குழல்”

இதில் குறிப்பிடப்படும் முக்குழல் எவற்றால் ஆனது?

1. கொன்றை

2. மூங்கில்

3. வேம்பு

4. ஆம்பல்

அ) 1, 2

ஆ) 1, 2, 3

இ) 1, 2, 4

ஈ) 2, 3, 4

60. சரியான பொருளைத் தேர்ந்தெடு

கடறு, உழை

அ) மேடு, யானை

ஆ) பள்ளம், புலி

இ) காடு, யானை

ஈ) காடு, ஒரு வகை மான்

61. ” பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும் ”

இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ) பூஞ்சோலை

ஆ) காகம்

இ) நாகணவாய்ப் பறவை

ஈ) வண்டுகள்

62. ” முதிரையும் சாமையும் வரகும் பொய்மணிக்

குதிரைவாலி யும்களம் குவித்துக் குன்றுஎனப்

பொதுவர்கள் பொலிஉறப் போர்அ டித்திடும் ”

இவ்வரிகள் எந்நிலத்தின் வளத்தை பற்றிக் கூறுகின்றன?

அ) குறிஞ்சி

ஆ) முல்லை

இ) மருதம்

ஈ) நெய்தல்

63. ” மன்னிய முதுவெயில் வளைப்ப வாய்வெரீஇ ”

இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ) துன்புறுதல்

ஆ) கொம்பு

இ) சோர்வால் வாய் குழறுதல்

ஈ) வருந்துதல்

64. “இன்னிளம் குருளை மிகு இனைந்து வெம்பிட ” இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ) யானை

ஆ) மான்

இ) குரங்கு

ஈ) குட்டி

65. சரியான பொருளைத் தேர்ந்தெடு.

இனைந்து, உயங்குதல்

அ) சேர்ந்து, உரங்குதல்

ஆ) துன்புறுதல், உரங்குதல்

இ) துன்புறுதல், வருந்துதல்

ஈ) சேர்ந்து, வருந்துதல்

66. சரியான பொருளைத் தேர்ந்தெடு.

படிக்குஉற, கோடு

அ) வருந்துதல், கொம்பு

ஆ) நிலத்தில்விழ, கொம்பு

இ) கூறுதல், மலை

ஈ) வருந்துதல், மலை

67. ” தன்னிழல் தங்கவே தாய்மை மீதுற

நன்னரில் வலியசெந் நாய்உய ங்குமே ”

இவ்வரிகள் எந்நிலத்தில் நிகழும் நிகழ்ச்சியை உணர்த்துகின்றன?

அ) குறிஞ்சி

ஆ) முல்லை

இ) மருதம்

ஈ) பாலை

68. “கல்லிடைப் பிறந்த ஆறும் ” இதில் ‘கல்’ என்பதன் பொருள்?

அ) அருவி

ஆ) மலை

இ) பாறை

ஈ) மழை

69. “முருகுகான் யாறு பாயும் ” இதில் முருகு என்பதன் பொருள் என்ன?

1. தேன்

2. மணம்

3. அழகு

4. காடு

அ) 1, 2, 3

ஆ) 2, 3, 4

இ) 1, 2

ஈ) 3, 4

70. “மல்லல்அம் செறுவில் காஞ்சி ” இதில் செறு என்பதன் பொருள்

அ) செறுக்கு

ஆ) சோலை

இ) காடு

ஈ) வயல்

71. சரியான பொருளைத் தேர்ந்தெடு – மல்லல், விசும்பு

அ) குற்றம், வருத்தம்

ஆ) வளம், வருத்தம்

இ) வளம், வானம்

ஈ) குற்றம், வானம்

72. “நீண்ட பொரு கரிக்குருத்து அளந்து ”

இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ) சிறு செடி

ஆ) யானைத் தந்தம்

இ) வயல்

ஈ) சோலை

73. “குரைகழல் சிறுவர் போரில்

குலுங்கியே தெங்கின் காயைப் “

இதில் குறிப்பிடப்படும் ‘ போர் ‘ என்பதன் பொருள்

அ) போர்க்களம்

ஆ) வைக்கோற்போர்

இ) விவாதம்

ஈ) யானை

74. “புரைதபப் பறித்துக் காஞ்சிப்

புனைநிழல் அருந்து வாரே “

இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ) குற்றம்

ஆ) கனிகள்

இ) குற்றமின்றி

ஈ) தேன்

75. ” நெல்லினைக் கரும்பு காக்கும்

நீரினைக் கால்வாய் தேக்கும் ”

இவ்வரிகள் எந்நிலத்தின் வளத்தை பற்றிக் கூறுகின்றன?

அ) குறிஞ்சி

ஆ) முல்லை

இ) மருதம்

ஈ) நெய்தல்

76. “ மலையெனத் துவரை நன்னீர் ”

இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ) ஒரு வகை தானியம்

ஆ) நிலவு

இ) வானம்

ஈ) பவளம்

77. சரியான பொருளைத் தேர்ந்தெடு

தும்பி, மரை

அ) ஒரு வகை வண்ணத்துப்பூச்சி, மான்

ஆ) ஒரு வகை வண்டு, தாமரை மலர்

இ) ஒரு வகை வண்ணத்துப்பூச்சி, தாமரை மலர்

ஈ) ஒரு வகை வண்டு, மலை

78. ” இளமைதீர் மதியம் தன்னை ”

இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ) சூரியன்

ஆ) நிலவு

இ) மலர்

ஈ) கடல்

79. ” வசிபட முதுநீர் புக்கு

மலையெனத் துவரை நன்னீர் ”

இவ்வடிகள் எந்நிலத்தின் இயல்பைக் கூறுகின்றன

அ) குறிஞ்சி

ஆ) முல்லை

இ) மருதம்

ஈ) நெய்தல்

80. ” இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் ” என்று கூறியவர் யார்?

அ) காமராசர்

ஆ) அண்ணா

இ) பெரியார்

ஈ) வைரமுத்து

81. இலக்கணக் குறிப்புத் தருக.

இடிகுரல், மரைமுகம்

அ) உவமைத் தொகை

ஆ) வினைத் தொகை

இ 2ம் வேற்றுமைத் தொகை

ஈ) பண்புத்தொகை

(விளக்கம்: பொருளுக்கும் உவமைக்குமிடையே போன்ற, போல, அன்ன, நிகர போன்ற உவம உருபுகள் மறைந்து வருமாயின் அவை உவமைத்தொகை எனப்படும்.

• இடி போன்ற குரல் – இடிகுரல்

• மரை போன்ற முகம் – மரைமுகம்)

82. இலக்கணக் குறிப்புத் தருக.

இன்னுயிர், பைங்கிளி

அ) உவமைத் தொகை

ஆ) வினைத் தொகை

இ 2ம் வேற்றுமைத் தொகை

ஈ) பண்புத்தொகை

(விளக்கம்: இரு சொற்களுக்கிடையில் ‘மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்.

• இனிமை + உயிர் – இன்னுயிர்

• பசுமை + கிளி – பைங்கிளி)

83. இலக்கணக் குறிப்புத் தருக.

பிடிபசி, அதிர்குரல்

அ) உவமைத் தொகை, வினைத்தொகை

ஆ) வினைத் தொகை, உவமைத்தொகை

இ) வேற்றுமைத் தொகை, வினைத் தொகை

ஈ) பண்புத்தொகை, வினைத் தொகை

(விளக்கம்: வினைத் தொகை என்பது மூன்று கால வினைகளையும் தொகுத்து ஒரு சேரக் குறிக்குமாறு வரும் பெயர்ச்சொல் ஆகும். இச்சொல் முக்காலத்தையும் உணர்த்தும்.

• அதிர்குரல் – அதிர்ந்த குரல், அதிர்கின்ற குரல், அதிரும் குரல் என மூன்று காலத்தையும் உணர்த்துகிறது.)

84. இலக்கணக் குறிப்புத் தருக.

பூவையும் குயில்களும், முதிரையும், சாமையும், வரகும்

அ) உவமைத் தொகை

ஆ) வினைத் தொகை

இ உம்மைத் தொகை

ஈ) எண்ணும்மை

(விளக்கம்: கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் ‘உம்’ எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.)

85. இலக்கணக் குறிப்புத் தருக.

பெருங்கடல், இன்னிளங்குருளை

அ) உவமைத் தொகை

ஆ) வினைத் தொகை

இ) 2ம் வேற்றுமைத் தொகை

ஈ) பண்புத்தொகை

(விளக்கம்: இரு சொற்களுக்கிடையில் ‘மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்

• பெருங்கடல் – பெருமை + கடல்

• இன்னிளங்குருளை – இன்னிளமை + குருளை)

86. இலக்கணக் குறிப்புத் தருக.

மன்னிய, வருமலை

அ) வினையெச்சம், பண்புத்தொகை

ஆ) பெயரெச்சம், வினைத்தொகை

இ) பெயரெச்சம், பண்புத்தொகை

ஈ) வினையெச்சம், வினைத் தொகை

(விளக்கம்: பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும்.

• மன்னிய முதுவெயில் என பெயர்ச்சொல்லை கொண்டு முடிகிறது.

• வருமலை என்பது நிகழ்காலம், இறந்த காலம், எதிர்காலம் என முக்காலத்தையும் உணர்த்துகிறது.)

87. இலக்கணக் குறிப்புத் தருக – வெரீஇ

அ) இன்னிசை அளபெடை

ஆ) செய்யுளிசை அளபெடை

இ) சொல்லிசை அளபெடை

ஈ) வினைத் தொகை

(விளக்கம்: ஒரு பெயர்ச் சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும். செல்லிசை அளபெடையில் பெரும்பாலும் இ என்னும் எழுத்து வரும்.

• வெரீஇ – குழறி என்னும் பொருளில் வினை எச்சமாக வந்துள்ளது)

88. இலக்கணக் குறிப்புத் தருக – கடிகமழ்

அ) உவமைத் தொகை

ஆ) வினைத் தொகை

இ உரிச்சொற்றொடர்

ஈ) பண்புத்தொகை

(விளக்கம்: ஒன்றை பெரிது படுத்திக் காட்டுவது உரிச்சொற்றொடர் ஆகும். சால, உறு, தவ, நனி, கூர், கழி, கடி, மா, தட ஆகியவை உரிச்சொற்களாக வரும்.

• கடிகமழ் -கடி என்பது உரிச் சொல்லாக வந்துள்னது)

89. இலக்கணக் குறிப்புத் தருக – மலர்க்கண்ணி

அ) 2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

ஆ) 3ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

இ) 4ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

ஈ) 5ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

(விளக்கம்: சொற்றொடர்களில் பொருள் நிறைவு பெறும் பொருட்டு வேற்றுமை உருபுடன் வேறு சொல்லும் தொக்கி (மறைந்து) வரலாம். அச்சொற்றொடர்கள் உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.

• மலர்க்கண்ணி -மலரால் ஆகிய கண்ணி. இதில் மூன்றாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளதால் 3 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை)

90. இலக்கணக் குறிப்புத் தருக – எருத்துக்கோடு

அ) 3ம் வேற்றுமைத் தொகை

ஆ) 4ம் வேற்றுமைத் தொகை

இ) 5 ம் வேற்றுமைத் தொகை

ஈ) 6 ம் வேற்றுமைத் தொகை

(விளக்கம்: எருத்துக்கோடு – எருதினது கொம்பு. இதில் 6 ம் வேற்றுமை உருபான ‘அது’ மறைந்து வந்துள்ளது)

91. இலக்கணக் குறிப்புத் தருக – கரைபொரு

அ) 2ம் வேற்றுமைத் தொகை

ஆ) 4ம் வேற்றுமைத் தொகை

இ) 5 ம் வேற்றுமைத் தொகை

ஈ) 6 ம் வேற்றுமைத் தொகை

(விளக்கம்: கரைபொரு – கரையை பொரு (கரையை மோதும்). இதில் ‘ஐ’ என்னும் 2ம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது.)

92. இலக்கணக் குறிப்புத் தருக – கருமுகில்

அ) உவமைத் தொகை

ஆ) வினைத் தொகை

இ 2ம் வேற்றுமைத் தொகை

ஈ) பண்புத்தொகை

(விளக்கம்: இரு சொற்களுக்கிடையில் ‘மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்.

• கருமுகில் – கருமை + முகில்)

93. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பருகிய

அ) பருகு + இய

ஆ) பருகு + ய் + அ

இ) பருகு + இன் + ய் + அ

ஈ) பருகு + இன் + அ

94. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பூக்கும்

அ) பூ + க் + உம்

ஆ) பூ + க் + க் + உம்

இ) பூ + க் + கும்

ஈ) பூக்கு + உம்

95. “பருகிய –> பருகு + இன் + ய் + அ ” என்பதில் ‘ அ ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) வினையெச்சவிகுதி

ஆ) பெயரெச்ச விகுதி

இ) வினைமுற்று விகுதி

ஈ) முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி

(விளக்கம்: பெயரெச்ச விகுதிகள் – அ, (உம்)

• பருகு – பகுதி, இன் – இறந்த கால இடைநிலை(ன் கெட்டது விகாரம்), ய் – உடம்படு மெய், அ – பெயரெச்சவிகுதி)

96. ” பூக்கும் –> பூ + க் + க் + உம் “ என்பதில் ‘ க் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) நிகழ்கால இடைநிலை

ஆ) எதிர்கால இடைநிலை

இ) இறந்தகால இடைநிலை

ஈ) எதிர்மறை இடைநிலை

(விளக்கம்: எதிர்கால இடைநிலைகள் – ப், வ்

• பூ – பகுதி, க் – சந்தி, க்- எதிர்கால இடைநிலை, உம் – வினைமுற்று)

97. கோர்வை என்பதன் வேர்ச்சொல் ______.

அ) கோர்

ஆ) கோத்தல்

இ) கோ

ஈ) கோவை

98. தனித்தமிழ்ப் பெருங்காப்பியமான இராவண காவியம் எந்நூற்றாண்டில் தோன்றியது?

அ) 18

ஆ) 19

இ) 20

ஈ) 21

99. இராவண காவியத்தில் மொத்தம் எத்தனை காண்டங்கள் மற்றும் பாடல்கள் உள்ளன

அ) 4, 1300

ஆ) 5, 3100

இ) 5, 1300

ஈ) 4, 3200

100. கீழ்க்கண்டவற்றுள் இராவண காவியத்தில் உள்ள காண்டங்கள் எவை?

1. தமிழக காண்டம்

2. இலங்கைக் காண்டம்

3. விந்தக் காண்டம்

4. பழிபுரிக்காண்டம்

5. போர்க் காண்டம்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3

இ) 2, 3, 4

ஈ) 1, 3, 5

101. இராவண காவியம் என்னும் நூல் யாரால் இயற்றப்பட்டது?

அ) அண்ணா

ஆ) பெரியார்

இ) புலவர் குழந்தை

ஈ) வைரமுத்து

102. புலவர் குழந்தை அவர்கள் யாருடைய வேண்டுகோளுக்கிணங்க திருக்குறளுக்கு உரை எழுதினார்

அ) அண்ணா

ஆ) பெரியார்

இ) சுரதா

ஈ) வைரமுத்து

103. புலவர் குழந்தை அவர்கள் எத்தனை நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதினார்?

அ) 24

ஆ) 25

இ) 52

ஈ) 42

104. புலவர் குழந்தை அவர்கள் யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட ____க்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களை படைந்துள்ளார்.

அ) 25

ஆ) 28

இ) 30

ஈ) 32

105. இராமாயணததில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு அமைக்கப்பட்ட நூல் ____.

அ) இராவண சரித்திரம்

ஆ) இராவண காவியம்

இ) இலங்கை காவியம்

ஈ) இலங்கை சரித்திரம்

106. ” கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி

சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள ”

இவ்வடிகள் இடம்பெறும் நூல்

அ) நான்மாடக்கூடல்

ஆ) இராவண காவியம்

இ) நாச்சியார் திருமொழி

ஈ) அழகியல்

107. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. தீபம் – விளக்கு

2. சதிர் – வீதி

3. தாமம் – தாமதம்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 1 மட்டும் சரி

ஈ) 1, 3 சரி

(விளக்கம்: 2. சதிர் – நடணம்

3. தாமம் – மாலை)

108. ” மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து ” இத்தொடர் யாரைக் குறிப்பிடுகிறது?

அ) ஆண்டாள்

ஆ) கண்ணன்

இ) திருமாள்

ஈ) சிவன்

109. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. ஆணின் திருமண வயது – 21

2. பெண்ணின் திருமண வயது – 18

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) இரண்டும் தவறு

110. இலக்கணக் குறிப்புத் தருக – கொட்ட

அ) பெயரெச்சம்

ஆ) வினைமுற்று

இ) வினையெச்சம்

ஈ) பண்புத்தொகை

(விளக்கம்: வினையெச்சம் என்பது ஒரு வினைமுற்றினை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும்.)

111. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – தொட்டு

அ) தொடு + ட் + உ

ஆ) தொடு + ட் + டு

இ) தொ + ட் + உ

ஈ) தொடு (தொட்டு) + உ

112. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – கண்டேன்

அ) கண்டு + ஏன்

ஆ) கண்டு + ட் + ஏன்

இ) கண் + ட் + ஏன்

ஈ) காண் (கண்) + ட் + ஏன்

113. “தொட்டு ” என்பதன் பகுபத உறுப்புகளில் வரும் ‘ உ’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) பெயரெச்சவிகுதி

ஆ) வினையெச்சவிகுதி

இ) தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

ஈ) தன்மை பன்மை வினைமுற்று விகுதி

(விளக்கம்: வினையெச்சவிகுதி – உ, இ

• தொடு – பகுதி, தொட்டு என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது – விகாரம், உ – வினையெச்சவிகுதி)

114. ” கண்டேன் “என்பதன் பகுபத உறுப்புகளில் வரும் ‘ ஏன் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) பெயரெச்சவிகுதி

ஆ) வினையெச்சவிகுதி

இ) தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

ஈ) தன்மை பன்மை வினைமுற்று விகுதி

(விளக்கம்: தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் என், ஏன் அல், அன், கு, டு, து, று.

காண் – பகுதி (‘கண் ‘ எனக் குறுகியது விகாரம்), ட் – இறந்த கால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி)

115. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு ____ ஆகும்.

அ) தேவாரம்

ஆ) திருவாசகம்

இ) நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஈ) திருப்பாவை

116. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடிய தொகுப்புகள் எவை?

1. திருப்பாவை

2. திருவெம்பாவை

3. நாச்சியார் திருமொழி

4. தைப்பாவை

அ) 1, 2

ஆ) 2, 3

இ) 4, 3

ஈ) 1, 3

117. ஆண்டாள் இயற்றிய நாச்சியார் திருமொழி எத்தனை பாடல்களை கொண்டது

அ) 130

ஆ) 140

இ) 150

ஈ) 160

118. ” கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி

சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள ”

என்னும் நாச்சியார் திருமொழி பாடல் எத்தனையாவது திருமொழியில் இடம் பெற்றுள்ளது?

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 6

119. திருமாலை வழிபட்டு சிறப்பு நிலை எய்திய ஆழ்வார்கள் எத்தனை பேர்?

அ) 12

ஆ) 13

இ) 18

ஈ) 20

120. ஆண்டாளை யாருடைய வளர்ப்பு மகள் என கூறுவர்?

அ) நம்மாழ்வார்

ஆ) பெரியாழ்வார்

இ) பூதத்தாழ்வார்

ஈ) திருமழிசை ஆழ்வார்

121. கூற்று: ஆண்டாள் ” சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ” என அழைக்கப்படுகிறார்.

காரணம்: அவர் இறைவனுக்கு பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டினார்

அ) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்

ஆ) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கமல்ல

இ) கூற்று சரி காரணம் தவறு

ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு

122. பன்னிரு ஆழ்வார்களுள் இருந்த ஒரே பெண் யார்?

அ) ஒளவை

ஆ) ஆண்டாள்

இ) பேயாழ்வார்

ஈ) பூதத்தாழ்வார்

123. “அன்பளிப்பு ” என்னும் சிறுகதைக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

அ) தி. ஜானகிராமன்

ஆ) ஆதவன்

இ) கு. அழகிரிசாமி

ஈ) அசோகமித்ரன்

124. “ முதலில் இரவு வரும் ” என்னும் சிறுகதைக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

அ) தி. ஜானகிராமன்

ஆ) ஆதவன்

இ) கு. அழகிரிசாமி

ஈ) அசோகமித்ரன்

125. “சக்தி வைத்தியம் ” என்னும் சிறுகதைக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

அ) தி. ஜானகிராமன்

ஆ) ஆதவன்

இ) கு. அழகிரிசாமி

ஈ) அசோகமித்ரன்

126. கீழ்க்கண்டவற்றுள் சாகித்திய அகாதெமி விருது பெற்ற அசோகமித்ரனின் நூல் எது?

அ) மின்சாரப்பூ

ஆ) சூடிய பூ சூடற்க

இ) ஒரு சிறு இசை

ஈ) அப்பாவின் சிநேகிதர்

127. கீழ்க்கண்டவற்றுள் சாகித்திய அகாதெமி விருது பெற்ற மேலாண்மை பொன்னுசாமியின் நூல் எது?

அ) மின்சாரப்பூ

ஆ) சூடிய பூ சூடற்க

இ) ஒரு சிறு இசை

ஈ) அப்பாவின் சிநேகிதர்

128. கீழ்க்கண்டவற்றுள் சாகித்திய அகாதெமி விருது பெற்ற வண்ணதாசனின் நூல் எது?

அ) மின்சாரப்பூ

ஆ) சூடிய பூ சூடற்க

இ) ஒரு சிறு இசை

ஈ) அப்பாவின் சிநேகிதர்

129. “சூடிய பூ சூடற்க” என்னும் சிறுகதைக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

அ) நாஞ்சில் நாடன்

ஆ) ஆதவன்

இ) கு. அழகிரிசாமி

ஈ) அசோகமித்ரன்

130. சரியான இணையைத் தேர்ந்தெடு (சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் – ஆண்டு)

1. சக்தி வைத்தியம் – 1970

2. ஒரு சிறு இசை – 2016

3. அன்பளிப்பு -1979

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 2 சரி

(விளக்கம்: 1. சக்தி வைத்தியம் – 1979, 3. அன்பளிப்பு -1970)

131. சரியான இணையைத் தேர்ந்தெடு (சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் – ஆண்டு)

1. அப்பாவின் சிநேகிதர் – 1996

2. முதலில் இரவு வரும் – 1978

3. சூடிய பூ சூடற்க – 2010

4. மின்சாரப் பூ – 2008

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3சரி

இ) 2, 3, 4 சரி

ஈ) 1, 3, 4 சரி

(விளக்கம்: 2. முதலில் இரவு வரும் – 1987)

132. “சிறுகதை என்றால் சிறிய கதை, கொஞ்சப் பக்கங்களில் முடிந்து விடுவது என்பதல்ல; சிறுகதை என்ற பிரிவு இலக்கியத்தில் அதில் எடுத்தாளப்படும் பொருள் பற்றியது ” என்று கூறியவர் யார்?

அ) வண்ணதாசன்

ஆ) நாஞ்சில் நாடன்

இ) புதுமைப்பித்தன்

ஈ) ஆதவன்

133. ‘ செய்தி ‘ என்னும் சிறுகதை தொகுப்பை இயற்றியவர் யார்?

அ) தி. ஜானகிராமன்

ஆ) ஆதவன்

இ) கு. அழகிரிசாமி

ஈ) அசோகமித்ரன்

134. தி. ஜானகிராமன் அவர்கள், தனது ஜப்பான் பயண அனுபவங்களை _____ என்னும் தலைப்பில் _____ இதழில் எழுதினார்.

அ) என் சரிதம், சுதேசமித்திரன்

ஆ) உதயசூரியன், சுதேசமித்திரன்

இ) கருங்கடலும் கலைக்கடலும், இந்தியா

ஈ) கருங்கடலும் கலைக்கடலும், சுதேசமித்திரன்

135. சுதேசமித்திரன் என்பது எவ்வகை இதழ்?

அ) மாத இதழ்

ஆ) ஆண்டு இதழ்

இ) வார இதழ்

ஈ) தின இதழ்

136. தி. ஜானகிராமன் அவர்களின் ஜப்பான் பயண அனுபவங்கள் நூலாக வெளி வந்த ஆண்டு

அ) 1976

ஆ) 1967

இ) 1974

ஈ) 1969

137. தி. ஜானகிராமன் அவர்களின் ரோம், செக்கோஸ்லோவோக்கியா அனுபவங்களை கொண்டுள்ள நூல் ______.

அ) உதய சூரியன்

ஆ) நடந்தாய் வாழி காவேரி

இ) கருங்கடலும் கலைக்கடலும்

ஈ) அடுத்த வீடு ஐம்பது மைல்

138. தி. ஜானகிராமன் அவர்களின் ரோம், செக்கோஸ்லோவோக்கியா பயண அனுபவங்கள் நூலாக வெளி வந்த ஆண்டு

அ) 1976

ஆ) 1967

இ) 1974

ஈ) 1969

139. தி. ஜானகிராமன் அவர்களின் காவிரிக்கரை வழியான பயணத்தை கூறும் நூல்

அ) காவேரி பயணம்

ஆ) நடந்தாய் வாழி காவேரி

இ) காவேரிக்கரை

ஈ) காவேரி

(குறிப்பு: இவரது மற்றுமொரு பயணக்கட்டுரை அடுத்த வீடு ஐம்பது மைல்)

140. “அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை ” என்னும் கோட்டைக் கொண்டவர் யார்?

அ) தி. ஜானகிராமன்

ஆ) ஆதவன்

இ) கு. அழகிரிசாமி

ஈ) அசோகமித்ரன்

141. தி. ஜானகிராமன் அவர்களின் கதைகள் கீழ்க்கண்ட எந்த இதழ்களில் வெளிவந்தன.

1. மணிக்கொடி

2. கல்கி

3. கலைமகள்

4. கிராம ஊழியன்

5. ஆனந்த விகடன்

அ) அனைத்தும்

ஆ) 2, 3, 4

இ) 1, 2, 4

ஈ) 1, 3, 4, 5

142. கீழ்க்கண்ட தி. ஜானகிராமன் குறித்த கூற்றுகளுள் எது தவறானது?

அ) இவர் தஞ்சை மண்வாசனையுடன் கதைகளை படைத்தவர்.

ஆ) உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றியவர்.

இ) பிரெஞ்சு மொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்டவர்.

ஈ) தமிழ்க் கதையுலகம் நவீனமயமானதில் இவரது பங்களிப்புப் குறிப்பிடத்தக்கது.

(விளக்கம்: வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்டவர்.)

143. தி. ஜானகிராமன் அவர்களின் செய்தி என்னும் சிறுகதை _____ தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

அ) கணையாழி

ஆ) நடந்தாய் வாழி காவேரி

இ) சிவப்பு ரிக்க்ஷா

ஈ) அடுத்த வீடு ஐம்பது மைல்

(விளக்கம்: மிக உயர்ந்த இசை சிறந்த கலைஞனால் கையாளப்படும் போது சொற்களின் எல்லையைத் தாண்டி இசையின் மூலமாகவே பொருள் கொடுக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது.)

144. தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடைகளாக கருதப்படுபவர்கள் யார்?

1. உ. வே. சாமிநாதர்

2. மெளனி

3. தி. ஜானகிராமன்

4. தஞ்சை பிரகாஷ்

5. இராமையா தாஸ்

அ) அனைத்தும்

ஆ) 1, 3, 4

இ) 3, 4, 5

ஈ) 3, 4

145. ‘சங்கீத இரத்னாகரம் ‘ என்னும் நூல் எந்த நூற்றாண்டை சேர்ந்தது?

அ) 12

ஆ) 13

இ) 14

ஈ) 15

(விளக்கம்: 13 ம் நூற்றாண்டு வரையிலுள்ள எந்த பதிவுகளிலும் நாகசுரம் பற்றி குறிப்பிடப்படவில்லை.)

146. நாகசுர இசைக்கருவி _____ காலத்திற்கு பின் ஏற்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.

அ) சங்ககாலம்

ஆ) இடைக்காலம்

இ) பல்லவர்கள் காலம்

ஈ) சோழர்கள் காலம்

147. நாகசுர இசைக்கருவி ______மரத்தில் செய்யப்படுகிறது.

அ) ஆலமரம்

ஆ) ஆச்சா

இ) மா

ஈ) அரசமரம்

148. நாகசுரத்தின் மேல் பகுதியில் பொருத்தப்படும் சீவாளி என்ற கருவி ____ கொண்டு செய்யப்படுகிறது.

அ) நாணல்

ஆ) ஆச்சா

இ) பூவரசு

ஈ) மாமரப் பட்டை

149. நாகசுர இசைக்கருவி _____ ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் வாசிக்கப்பட்டது.

அ) 300

ஆ) 400

இ) 500

ஈ) 600

(குறிப்பு: தமிழக பழைமை வாய்ந்த கோவில் சிற்பங்களில் நாகசுர இசைக்கருவி காணப்படவில்லை.)

150. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. தமிழில் இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட சொற்கள் சேர்வது புணர்ச்சி எனப்படும்.

2. முதலில் நிற்கும் நிலைமொழியோடு, அதைத் தொடர்ந்து வரும் வருமொழி இணைவது புணர்ச்சி எனப்படும்

3. புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதி எழுத்தைப் பொருத்து உயிரீறு, மெய்யீறு எனவும் வருமொழியின் முதல் எழுத்தைப் பொறுத்து உயிர்முதல் மெய்ம் முதல் எனவும் பிரிக்கலாம்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

151. எழுத்து வகையால் சொற்கள் எத்தனை வகைப்படும்?

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

(விளக்கம்: 1. உயிரீறு 2. மெய்யீறு 3. உயிர்முதல் 4. மெய்ம்முதல்)

152. பொருத்துக.

1. கலை + அழகு – i) உயிரீறு

2. மண் + குடம் – ii) மெய்யீறு

3. வாழை + இலை – iii) உயிர்முதல்

4. வாழை + மரம் – iv) மெய்ம்முதல்

அ) i ii iii iv

ஆ) ii i iv iii

இ) iv iii ii i

ஈ) i ii iv iii

153. புணர்ச்சியில் நிலைமொழி இறுதி எழுத்து, வருமொழி முதல் எழுத்து அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம்

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

(விளக்கம்: 1. உயிர்முன் உயிர் 2. உயிர்முன் மெய் 3. மெய்ம்முன் உயிர் 4. மெய்ம்முன் மெய்)

154. பொருத்துக.

1. உயிர்முன் உயிர் – i) மரக்கிளை

2. உயிர்முன் மெய் – ii) ஆலிலை

3. மெய்ம்முன் உயிர் – iii) பனிக்காற்று

4. மெய்ம்முன் மெய் – iv) மணியடி

அ) i ii iii iv

ஆ) ii i iv iii

இ) iv iii ii i

ஈ) i ii iv iii

155. புணர்ச்சியில் நிலைமொழியும் வருமொழியும் அடையும் மாற்றங்களின் அடிப்படையில் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

(விளக்கம்: 1. இயல்பு புணர்ச்சி 2. விகாரப் புணர்ச்சி)

156. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது?

அ) புணர்ச்சியின் போது மாற்றங்கள் ஏதுமின்றி இயல்பாகப் புணர்வது இயல்பு புணர்ச்சி எனப்படும்.

ஆ) புணர்ச்சியின் போது ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும்

இ) ‘புறநானூறு‘ என்பது இயல்பு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு

ஈ) நுழைவுத்தேர்வு என்பது விகாரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு.

(விளக்கம்: ‘ புறம் + நானூறு = புறநானூறு ‘ என்பது விகாரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு.)

157. விகாரப் புணர்சசி எத்தனை வகைப்படும்?

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

(விளக்கம்: தோன்றல், திரிதல், கெடுதல் என விகாரப் புணர்ச்சி 3 வகைப்படும்)

158. ” கல்லூரிச்சாலை ” என்பது எவ்வகை புணர்ச்சி?

அ) இயல்பு

ஆ) தோன்றல்

இ) திரிதல்

ஈ) கெடுதல்

159. உயிரை ஈறாக உடைய சொற்களின் முன் உயிரை முதலாக உடைய சொற்கள் வந்து சேரும் போது, ஒன்று சேராத உயிரொலிகளை ஒன்று சேர்ப்பதற்கு அங்கு தோன்றும் மெய் ____ என்படும்.

அ) சந்தி

ஆ) இடைநிலை

இ) உடம்படுமெய்

ஈ) விகாரம்

160. ” இ ஈ ஐ வழி______ ஏனை

உயிர்வழி ____ ஏமுனிவ் விருமையும்

உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும். ”

அ) வவ்வும், யவ்வும்

ஆ) யவ்வும், வவ்வும்

இ) த்தும், வவ்வும்

ஈ) யவ்வும், த்தும்

161. தவறான இணையை தேர்ந்தெடு

அ) பொன்வளை – இயல்பு புணர்ச்சி

ஆ) பூக்கூடை – உடம்படு மெய்

இ) கற்சிலை – விகாரப் புணர்ச்சி

ஈ) எனதுயிர் – குற்றியலுகரபுணர்ச்சி

(விளக்கம்: பூக்கூடை – விகாரப் புணர்ச்சி)

162. சொல்லின் இறுதியில் நிற்கும் உகரத்தின் முந்தைய எழுத்தை பொறுத்து குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

அ) 2

ஆ) 3

இ) 5

ஈ) 6

(விளக்கம்:

1. வன்தொடர் குற்றியலுகரம்

2. மென்தொடர்க் குற்றியலுகரம்

3. இடைத்தொடர்க் குற்றியலுகரம்

4. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

5. ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

6. நெடில் தொடர்க் குற்றியலுகரம்)

163. குற்றியலுகரத்தில் வரும் உகரத்தின் மாத்திரை அளவு ___.

அ) 1

ஆ) 1 ½

இ) ½

ஈ) 2

(விளக்கம்: தனிக் குறில் அல்லாது, சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்கள் ஏறிய உகரம் (கு, சு, டு, து, பு, று) தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும்)

164. சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. வகுப்பு – வன்த்தொடர்க் குற்றியலுகரம்

2. இரும்பு – மென்தொடர்க் குற்றியலுகரம்

3. மார்பு – இடைத் தொடர்க் குற்றியலுகரம்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

165. தவறான இணையைத் தேர்ந்தெடு.

1. பேசு – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

2. எஃகு – ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

3. காது – நெடில் தொடர்க் குற்றியலுகரம்

அ) அனைத்தும்

ஆ) 1, 2

இ) 1 மட்டும்

ஈ) 3 மட்டும்

(விளக்கம்: பேசு – நெடில் குற்றியலுகரம்)

166. ‘ வரலாறு’ என்பது எவ்வகை குற்றியலுகரம்?

அ) வன்த்தொடர்க் குற்றியலுகரம்

ஆ) மென்தொடர்க் குற்றியலுகரம்

இ) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

ஈ) நெடில்தொடர்க் குற்றியலுகரம்

167. புணர்ச்சியில் இரு சொற்கள் இணையும் போது வருமொழியில் க, ச, த, ப வந்து மீண்டும் அதே எழுத்து தோன்றுவது ____ எனப்படும்.

அ) சந்தி

ஆ) இடைநிலை

இ) உடம்படுமெய்

ஈ) வலி மிகுதல்

168. கீழ்க்கண்ட மெய்ம்மயக்கம் தொடர்பான கூற்றுகளில் எது தவறானது?

அ) ‘ ய ‘ கர ஈற்றுச் சொறகள் முன் மெல்லினம் மிகும்.

ஆ) வேற்று நிலை மெய்ம்மயக்கத்தில் ய, ர, ழ முன்னர் வல்லினம் மிகும்.

இ) ‘ புளி ‘ என்னும் சுவைப் பெயர் முன்னர் வல்லெழுத்து மட்டுமன்றி மெல்லினமும் மிகும்.

ஈ) ‘பூ’ என்னும் பெயர் முன்னர் வல்லினத்தோடு மெல்லினமும் மிகும்.

(விளக்கம்: வேற்று நிலை மெய்ம்மயக்கத்தில் ய, ர, ழ முன்னர் மெல்லினம் மிகும். (எ-கா) வேய் + குழல் = வேய்ங்குழல்.)

169. உயிரெழுத்தை இறுதியில் கொண்ட மரப் பெயர்களுக்கு முன்னர் _____மிகும்.

அ) வல்லினம்

ஆ) மெல்லினம்

இ) இடையினம்

ஈ) உயிர்

(எ – கா: பூஞ்சோலை, பூங்கொடி, பூந்தொட்டி)

170. எழுத்து வகை அறிந்து பொருத்துக

1. இயல் – i) உயிர் முதல் உயிரீறு

2. புதிது – ii) உயிர் முதல் மெய்யீறு

3. ஆணி – iii) மெய்ம்முதல் மெய்யீறு

4. வரம் – iv) மெய்ம்முதல் உயிரீறு

அ) i ii iii iv

ஆ) ii iv i iii

இ) iii ii i iv

ஈ) ii iv iii i

171. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. செல்வி + ஆடினாள் – உயிரீறு + உயிர்முதல்

2. பாலை + திணை – உயிரீறு + மெய்ம்முதல்

3. கோல் + ஆட்டம் – மெய்யீறு + உயிர்முதல்

4. மண் + சரிந்தது – மெய்யீறு + மெய்ம்முதல்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3, 4 சரி

172. பல்லவர் காலச் சிற்பங்களுக்குச் சிறந்த சான்று ____.

அ) மாமல்லபுரம்

ஆ) பிள்ளையார்பட்டி

இ) திரிபுவனவீரேசுவரம்

ஈ) தாடிக்கொம்பு

173. ‘ பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும் ‘ நிலப்பகுதி ____.

அ) குறிஞ்சி

ஆ) நெய்தல்

இ) முல்லை

ஈ) பாலை

174. மரவேர் என்பது _____ புணர்ச்சி.

அ) இயல்பு

ஆ) திரிதல்

இ) தோன்றல்

ஈ) கெடுதல்

175. ‘ அதிரப் புகுதக் கனாக் கண்டேன் ‘ – யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்?

அ) கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்

ஆ) தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்

இ) ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள்

ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

(விளக்கம்: இவ்வடிகள் நாச்சியார் திருமொழியில் இடம்பெற்றுள்ளது.)

176. திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்ப்பங்களாக உள்ளவை ____.

அ) விலங்கு உருவங்கள்

ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்

இ) தெய்வ உருவங்கள்

ஈ) நாட்டியம் ஆடும் உருவங்கள்

177. இலக்கணக் குறிப்புத் தருக

இடிக்குரல், பெருங்கடல்

அ) வினைத் தொகை, உவமைத்தொகை

ஆ) உவமைத்தொகை, உவமைத்தொகை

இ) உவமைத்தொகை, பண்புத்தொகை

ஈ) பண்புத்தொகை, உவமைத்தொகை

(விளக்கம்: உவமைத் தொகை என்பது, இரு சொற்களைக் கொண்ட ஒரு தொகைச்சொல். அதில் முதற்சொல் உவமைச் சொல்லாக இருக்கும்.

• இடியை போன்ற குரல் – இடிக்குரல்

இரு சொற்களுக்கிடையில் ‘மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்.

• பெருங்கடல் – பெருமை + கடல்)

178. ” பித்தேறி மேல்கீழ் என்று

மக்கள்தாம் பேசல் என்னே! “

இந்த வரிகள் யாருடையது?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) புதுமைப்பித்தன்

ஈ) கல்கி

179. மரபுப் பிழையற்ற தொடரை தேர்ந்தெடு

அ) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.

ஆ) கயல் பானை செய்யக் கற்றுக் கொண்டாள்.

இ) நேற்றுத் தென்றல் காற்று அடித்தது.

ஈ) அணில் பழம் தின்றது.

(விளக்கம்:

அ) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.

ஆ) கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்.

இ) நேற்றுத் தென்றல் காற்று வீசியது.)

180. பிழையை நீக்கி எழுதுக

” தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார் ”

அ) தென்னையிலிருந்து நார் எடுத்தார்.

ஆ) தென்னை மட்டையிலிருந்து நார் உரித்தார்

இ) தென்னையிலிருந்து நார் உரித்தார்.

ஈ) தென்னை மட்டையிலிருந்து நார் அறுத்தனர்.

181. பிழையை நீக்கி எழுதுக

” கொடியிலுள்ள மலரை எடுத்து வா “

அ) கொடியிலுள்ள மலரை பறித்து வா

ஆ) கொடியிலுள்ள மலரை பரித்து வா

இ) கொடியிலுள்ள மலரை கொய்து வா

ஈ) கொடியிலுள்ள மலரை கொண்டு வா

182. சரியான பொருளைத் தேர்ந்தெடு

ஏங்கல், பான்மை

அ) ஏங்குதல், குணம்

ஆ) அஞ்சுதல், இறக்கம்

இ) அஞ்சுதல், குணம்

ஈ) ஏங்குதல், இறக்கம்

183. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. தாமம் – பூமாலை

2. கிடுகு – கடுகு

3. பொறி- வலை

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) 1 மட்டும் சரி

(விளக்கம்: 2. கிடுகு – ஒரு வகை பறை

3. பொறி- இயந்திரம்)

184. பொருத்துக

1. குடைவரைக் கோயில் – i) Treasury

2. கருவூலம் – ii) Cave Temple

3. மதிப்புறு முனைவர் – iii) Honorary Doctorate

4. புணர்ச்சி – iv) Combination

5. மெல்லிசை – v) Melody

அ) i v ii iii iv

ஆ) ii i iii iv v

இ) iii ii v i iv

ஈ) ii v iv iii i

185. சரியான இணையை தேர்ந்தெடு

1. நட்புக்காலம் – கவிஞர் அறிவுமதி

2. திருக்குறள் கதைகள் – கிருபானந்தவாரியார்

3. கையா, உலகே ஒரு உயிர் – ஜேம்ஸ் லவ்லாக்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 1, 3 சரி

ஈ) 2, 3 சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!