Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
General TamilTnpsc

General Tamil Model Question Paper 10

General Tamil Model Question Paper 10

General Tamil Model Question Paper 10: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

81. கனி முன் நேர் வருவதும் கனி முன் நிரை வருவதும்

(அ) கலித்தளை

(ஆ) வஞ்சித்தளை

(இ) இயற்சீர் வெண்டளை

(ஈ) வெண்சீர் வெண்டளை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) வஞ்சித்தளை

கலித்தளை – காய்முன் நிரை வருவது. வஞ்சித்தளை – கனிமுன் நிரை மற்றும் கனி முன் நேர் வருவது. கனிமுன் நிரை – ஒன்றிய வஞ்சித்தளை. கனிமுன் நேர் – ஒன்றாத வஞ்சித்தளை. இயற்சீர் வெண்டளை – மா முன் நிரையும், விளம் முன் நேரும் வருவது. வெண்சீர் வெண்டளை – காய் முன் நேர் வருவது

82. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பி தேரினும் அஃதே துணை – கீழ்க்காணும் சொற்களும் எதிர்ச்சொல்லைக் கண்டறிக:

(அ) பரிந்து x வெறுத்து

(ஆ) பரிந்து x விரும்பி

(இ) தெரிந்து x உணர்ந்து

(ஈ) தெரிந்து x ஆராய்ந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) பரிந்து x வெறுத்து

83. “மூதூர்” எத்திணைக்குரிய ஊர்?

(அ) மருதம்

(ஆ) பாலை

(இ) குறிஞ்சி

(ஈ) நெய்தல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) மருதம்

மருதத் திணைக்குரிய ஊர்கள் – பேரூர் மற்றும் மூதூர்.

84. பின்வருவனவற்றுள் “ஈறு போதல்” “இனமிகல்” என்னும் விதிகளின்படி மட்டும் புணராதது

(அ) நெடுங்கடல்

(ஆ) செங்கடல்

(இ) கருங்கடல்

(ஈ) கருங்குயில்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) செங்கடல்

நெடுங்கடல்-நெடுமை + கடல்

1. ஈறுபோதல் விதிப்படி “மை” விகுதி கெட்டு நெடு + கடல் என்றானது.

2. நெடு + கடல் “க”விற்கு இனமான “ங்” தோன்றி நெடுங்கடல் என்றானது

செங்கடல்-செம்மை + கடல்

1. ஈறுபோதல் விதிப்படி செம் + கடல் என்றானது

2. நிலைமொழியீற்றில் மகரம் கெட்டு செ + கடல் என்றானது

3. இனமிகல் விதிப்படி செங்கடல் என்றாது

கருங்கடல்-கருமை + கடல்

ஈறுபோதல்-கரு + கடல்

இனமிகல் – கருங்கடல்

கருங்குயில் – கருமை + குயில்

ஈறுபோதல் – கரு+குயில், இனமிகல் – கருங்குயில்

85. “பண்புப்பெயர்” இலக்கணக்குறிப்புச் சொல்லைத் தேர்க:

(அ) திட்பம்

(ஆ) ஆட்டம்

(இ) கோடல்

(ஈ) பெறுதல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) திட்பம்

ஏனையவை தொழிற்பெயர்கள்

86. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

(அ) தோப்பு, துப்பு, தீர்ப்பு, தப்பு

(ஆ) துப்பு, தோப்பு, தப்பு, தீர்ப்பு

(இ) தப்பு, தீர்ப்பு, துப்பு, தோப்பு

(ஈ) தப்பு, தீர்ப்பு, தோப்பு, துப்பு

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) தப்பு, தீர்ப்பு, துப்பு, தோப்பு

87. பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) சுவடி-நூல்

(ஆ) வெய்யோன்-திங்கள்

(இ) செட்டு-சிக்கனம்

(ஈ) சிந்தை-உள்ளம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) வெய்யோன்-திங்கள்

வெண்யோன் என்றால் ஞாயிறு

88. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்

(அ) தமிழில் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும்.

(ஆ) தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல்

(இ) தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர்

(ஈ) தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்

89. உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர் – இத்தொடரைக் கூறியவர்

(அ) இளங்கோவடிகள்

(ஆ) சீத்தலை சாத்தனார்

(இ) கம்பர்

(ஈ) வால்மீகி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கம்பர்

மேற்கண்ட செய்யுள் தொடர் பண்டைத் தமிழகத்தில்

1. அறுவை சிகிச்சை முறை இருந்ததைப் பற்றி கூறும் கம்பரின் கூற்றாகும்.

2. பண்டைத் தமிழகத்தில் அறுவை சிகிச்சை முறை பற்றி கூறும் மற்றொரு நூல் மணிமேகலையாகும்.

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

90. “பிள்ளைத் தமிழ்” என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?

(அ) ஒட்டக்கூத்தர்

(ஆ) புகழேந்தி

(இ) குமரகுருபரர்

(ஈ) பகழிக்கூத்தர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) ஒட்டக்கூத்தர்

1. பிள்ளைத் தமிழ் என்பது 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். தெய்வத்தையோ மக்களுள் மாண்புற்றவரையோ குழந்தையாகப் பாவித்து அவர்தம் அருமை பெருமைகளைச் செய்யுளில் அமைத்துப் புகழ்ந்து பாடுவதாகும்.

2. கி.பி.12-ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் எழுதிய “குலோத்துங்கச் சோழன் பிள்ளைத்தமிழ்” என்ற நூலே பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட முதற்நூலாகும்.

1 2Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!