General TamilTnpsc

General Tamil Model Question Paper 11

General Tamil Model Question Paper 11

General Tamil Model Question Paper 11: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. சரியாகப் பொருத்துக:

நூலாசிரியர் நூல்

அ. சுரதா – 1. கொடிமுல்லை

ஆ. முடியரசன் – 2. பள்ளிப்பறவைகள்

இ. வாணிதாசன் – 3. எச்சில் இரவு

ஈ. ஆலந்தூர் மேகனரங்கன் – 4. பூங்கொடி

அ ஆ இ ஈ

(அ) 4 2 1 3

(ஆ) 3 4 1 2

(இ) 3 1 2 4

(ஈ) 2 3 4 1

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 3 1 2 4

முடியரசன்-பூங்கொடி, சுரதா-எச்சில் இரவு, வாணிதாசன்-கொடிமுல்லை, பாவலரேறு பெருஞ்சித்திரனார்-பள்ளிப்பறவைகள். ஆனால் வினாவில் ஆலந்தூர் மேகானரங்கன் எனத் தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது

2. கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்.

மடக்கொடி-அவ்வூர்.

(அ) அன்மொழித்தொகை, சேய்மைச்சுட்டு

(ஆ) பண்புத்தொகை, சேய்மைச்சுட்டு

(இ) உரிச்சொற்றொடர், அன்மொழித்தொகை

(ஈ) வினைத்தொகை, பண்புத்தொகை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) அன்மொழித்தொகை, சேய்மைச்சுட்டு

3. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும் – இதில் பயின்று வரும் மோனைச்சொற்கள்

(அ) ஒழுக்கம்-ஒழுக்கம்

(ஆ) ஒழுக்கம்-விழுப்பம்

(இ) விழுப்பம்-தரலான்

(ஈ) உயிரினும்-ஓம்பப்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) ஒழுக்கம்-ஒழுக்கம்

கொடுக்கபட்டுள்ள சீர்களில் முதலாம் எழுத்து ஒன்றி வருவது மோனைச் சொற்களாகும். ஒழுக்கம்-ஒழுக்கம்

4. உடம்பார் அழியின் உயிரார் அழிவர்-இச்செய்யுளில் பயின்று வரும் மோனை

(அ) கூழை மோனை

(ஆ) இணை மோனை

(இ) முற்று மோனை

(ஈ) பொழிப்பு மோனை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) பொழிப்பு மோனை

முதல் மற்றும் மூன்றா0ம் சீர்களில் உள்ள முதலாம் எழுத்து ஒன்றி வருவது பொழிப்பு மோனையாகும்

(உ)டம்பார் அழியின் (உ)யிரார் அழிவர்

5. மாமுன் நிரையும் விளமுன் நேரும் வருவது

(அ) வஞ்சித் தளை

(ஆ) இயற்சீர் வெண்டளை

(இ) வெண்சீர் வெண்டளை

(ஈ) கலித்தளை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) இயற்சீர் வெண்டளை

மாமுன் நிரையும், விளம் முன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளையாகும்.

வெண்சீர் வெண்டளை-காய் முன் நேர் வருவது.

கலித்தளை-காய் முன் நிரை வருவது.

ஓன்றிய வஞ்சித்தளை-கனிமுன் நிரை வருவது.

ஓன்றா வஞ்சித்தளை-கனிமுன் நேர் வருவது.

6. பூவோடு சேர்ந்த நார் போல-உவமை உணர்த்தும் பொருள்

(அ) நன்மை

(ஆ) களிப்பு

(இ) உயர்வு

(ஈ) வீணாதல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) உயர்வு

நாருக்கு தனியாக மணம் கிடையாது. பூவோடு சேர்த்துக் கட்டும்போது நாரும் மணம் பெறுகிறது. எனவே இவ்வுவமை “உயர்வு” என்ற பொருளை உணர்த்துகிறது.

7. நூலையும் நூலாசிரியரையும் பொருத்துக:

(அ) தி.ஜானகிராமன் – 1.சாயாவனம்

(ஆ) க.நா.சுப்பிரமணியன் – 2. செம்பருத்தி

(இ) சா.கந்தசாமி – 3. கரைந்த நிழல்கள்

(ஈ) அசோகமித்திரன் – 4. பெரியமனிதன்

அ ஆ இ ஈ

(அ) 2 4 1 3

(ஆ) 2 3 4 1

(இ) 3 1 2 4

(ஈ) 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 2 4 1 3

8. “கற்பனைக் களஞ்சியம்” – என்று போற்றப்படுபவர்

(அ) தண்டபாணி தேசிகர்

(ஆ) அமிர்தகவிராயர்

(இ) சவ்வாதுப்புலவர்

(ஈ) சிவப்பிரகாச சுவாமிகள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) சிவப்பிரகாச சுவாமிகள்

கற்பனைக் களஞ்சியம் என்று போற்றப்படுபவர் சிவப்பிரகாச சுவாமிகள். இவருடைய பிற சிறப்புப் பெயர்கள் சிற்றிலக்கியப் புலவர், நன்னெறி சிவப்பிரகாசர், துறைமங்கலம் சிவப்பிரகாசர்.

இவர் இயற்றிய நூல்களுள் சில:

நால்வர் நான்மணி மாலை, சோணாசலமாலை, திருச்செந்தூர் நீரோட்டக யமக அந்தாதி (உதடு ஒட்டாமல் பாடப்படும் ஒருவகை பா), திருவெங்கை உலா, சதமணி மாலை, பிரபுலிங்க லீலை, பழமலை அந்தாதி, கொச்சகக் கலிப்பா, நெஞ்சுவிடு தூது நன்னெறி.

9. சேரமான் பெருமாள் நாயனார் பாடாத நூல் எது?

(அ) பொன் வண்ணத்தந்தாதி

(ஆ) திருhவாரூர் மும்மணிக்கோவை

(இ) போற்றிக் கலிவெண்பா

(ஈ) ஞான உலா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) போற்றிக் கலிவெண்பா

போற்றிக் கலிவெண்பாவின் ஆசிரியர் நக்கீரர், வினாவில் கொடுக்கப்பட்டுள்ள நான்கு நூல்களும் 11-ஆம் திருமுறையில் அமைந்துள்ளன.

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

10. பின்வருவனவற்றுள் எது சமண இலக்கியம் இல்லை?

(அ) சீவசிந்தாமணி

(ஆ) சூளாமணி

(இ) குண்டலகேசி

(ஈ) நீலகேசி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) குண்டலகேசி

குண்டலகேசி-பௌத்த காப்பியம், ஏனைய மூன்றும் சமணக் காப்பியங்களாகும்.

1 2 3 4 5 6 7 8Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!