General TamilTnpsc

General Tamil Model Question Paper 13

General Tamil Model Question Paper 13

General Tamil Model Question Paper 13: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்: தண்மை

(அ) குளிர்ச்சி

(ஆ) வெம்மை

(இ) கடுமை

(ஈ) மென்மை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) வெம்மை

தண்மை என்பதன் பொருள் குளிர்ச்சி. எனவே இதன் எதிர்ச்சொல் “வெம்மை” ஆகும்.

2. “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” எனப் பாடியவர்

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்

(இ) கவிமணி

(ஈ) நாமக்கல் கவிஞர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பாரதிதாசன்

“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” பாரதிதாசன்.

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” – பாரதியார்

3. பொருத்துக:

நூல் நூலாசிரியர்

அ. சிலப்பதிகாரம் – 1. திருத்தக்கதேவர்

ஆ. மணிமேகலை – 2. நாதகுத்தனார்

இ. சீவகசிந்தாமணி – 3. இளங்கோவடிகள்

ஈ. குண்டலகேசி – 4. சீத்தலைச்சாத்தனார்

அ ஆ இ ஈ

(அ) 2 3 1 4

(ஆ) 3 4 1 2

(இ) 3 4 2 1

(ஈ) 4 1 3 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 3 4 1 2

4. பொருளறிந்து பொருத்துக:

(அ) திங்கள் – 1.நட்சத்திரம்

(ஆ) வேந்தர்-  2.ஆகாயம்

(இ) வானம் – 3. மாதம்

(ஈ) விண்மீன்-  4. அரசர்

அ ஆ இ ஈ

(அ) 1 2 3 4

(ஆ) 2 3 4 1

(இ) 3 4 2 1

(ஈ) 4 1 2 3

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 4 2 1

5. கீழ்வருவனவற்றுள் சரியான இணையைக் கண்டறிக:

(அ) துடிப்பு-கோமகன்

(ஆ) அனுமதி-ஜெயகாந்தன்

(இ) ஆளுகை-டாக்டர்.சி.என்.அண்ணாதுரை

(ஈ) சோணாசலம்-சுஜாதா

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) துடிப்பு-கோமகன்

6. இவற்றில் அறிஞர் அண்ணா கூற்று?

(அ) “பாட்டாளி ஓய்வு பெறுவது சமூக நீதியில் ஒன்று”

(ஆ) “மெய்வைத்த செல்வமெங்கே! மண்டலீகர் தம் மேடை எங்கே”

(இ) “உள்ளத்தே பொருள் இருக்க புறம்பே பொருள் தேடுதல்”

(ஈ) “மன்னருக்குத் தன் தேசமில்லாமல் இறப்பில்லை”

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) “பாட்டாளி ஓய்வு பெறுவது சமூக நீதியில் ஒன்று”

“ஓய்வு என்ற தலைப்பில் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய கட்டுரையில் “பாட்டாளி ஓய்வு பெறுவது, சமூக நீதியில் ஒன்று, அடிப்படை நீதி! என்று குறிப்பிட்டுள்ளார்.

7. தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க:

(அ) இலக்கியம்-இலக்கு+இயம்

(ஆ) செம்மொழி-செம்மை+மொழி

(இ) தமிழ்மொழி- தமிழ்+மொழி

(ஈ) வேரூன்றிய-வேரூ+ஊன்றிய

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) வேரூன்றிய-வேரூ+ஊன்றிய

வேரூன்றிய- வேர்+ஊன்றிய. “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி புணர்ந்து (ர்+ஊ-ரூ) “வேரூன்றிய” என்றானது.

8. ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச்சொற்களை அறிக:

இந்தச் செஞ்சுரி டென்ஷன் நிறைந்தது

(அ) இந்த நூற்றாண்டு பரப்பரப்பானது

(ஆ) இந்த ஆண்டு பதற்றம் நிறைந்தது

(இ) இந்த நூற்றாண்டு மனக்கவலை அளிப்பது

(ஈ) இந்த நூற்றாண்டு மன அழுத்தம் நிறைந்தது

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) இந்த நூற்றாண்டு மன அழுத்தம் நிறைந்தது

9. பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) பாண்டியர்-கொற்கை

(ஆ) சோழர்-காவிரிப்பூம்பட்டினம்

(இ) பல்லவர்-விசாகப்பட்டினம்

(ஈ) சேரர்-முசிறி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பல்லவர்-விசாகப்பட்டினம்

தமிழகத்தை ஆண்ட மன்னர்களும் அவர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியிலிருந்த துறைமுகங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பல்லவரின் துறைமுகம் மாமல்லபுரம் ஆகும்.

10. பிரித்தெழுதுக:

“கரியன்”

(அ) கரு+அன்

(ஆ) கருமை+அன்

(இ) கரிய+அன்

(ஈ) கரி+அன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கருமை+அன்

கருமை+அன் – பண்புப்பெயர் புணர்ச்சி.

“ஈறுபோதல் விதிப்படி மை விகுதி கெட்டு “கரு+அன்” என்றானது.

“இடையுகரம் இய்யாதல்” என்ற விதிப்படி “கரி+அன்”என்றானது.

யகர உடம்படுமெய் பெற்று கரி+ய்+அன் என்றானது.

“உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “கரி+யன்” என்றாக “கரியன்” என்று புணர்ந்தது.

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!