General TamilTnpsc

General Tamil Model Question Paper 14

General Tamil Model Question Paper 14

General Tamil Model Question Paper 14: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

(அ) அவர்களிருவருக்கும் இடையே கான்வர்சேசன் நடந்தது.

(ஆ) அவர்களிருவருக்கும் இடையே விவாதம் நடந்தது

(இ) அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது

(ஈ) அவர்களிருவருக்கும் இடையே ஸ்பீச் நடந்தது

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது

2. விடை தேர்க: சரியான சொற்றொடரைத் தேர்க:

(அ) தாழ்வு உயர்வு கருதுதல் பிறப்பில் தவறு

(ஆ) பிறப்பில் உயர்வு தாழ்வு கருதுதல் தவறு

(இ) பிறப்பில் உயர்வு கருதுதல் தாழ்வு தவறு

(ஈ) உயர்வு கருதுதல் பிறப்பில் தாழ்வு தவறு

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பிறப்பில் உயர்வு தாழ்வு கருதுதல் தவறு

3. கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியானவை

அ. எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்.

ஆ. அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்.

இ. நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று.

ஈ. அவை எல்லாம் மாதவியின் நூல்கள்

(அ) அ மற்றும் இ

(ஆ) ஆ மற்றும் ஈ

(இ) இ மற்றும் ஈ

(ஈ) ஆ மற்றும் இ

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) இ மற்றும் ஈ

விளக்கம்

எனது மகன்-தவறு. என் மகன்-சரி. அவளது தந்தை-தவறு. அவளுடைய தந்தை-சரி. ஆறாம் வேற்றுமை உருபுகள்-அது, ஆது, அ என்பன. “உடைய” என்பது சொல்லுருபாக அமையும். அது, ஆது உருபுகள் அஃறிணை ஒருமைக்கும், “அ” உருபு அஃறிணைப் பன்மைக்கும் உரியன. உயர்திணை ஒருமைக்கும் பன்மைக்கும் இவ்வுருபுகள் பொருந்தா.

4. “முட்டையிட்டது சேவலா பெட்டையா?” இவ்வினாவில் அமைந்துள்ள வழு எது?

(அ) பால் வழு

(ஆ) திணை வழு

(இ) வினா வழு

(ஈ) மரபு வழு

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) வினா வழு

விளக்கம்:

சேவல்-ஆண்பால். ஆண்பால் முட்டையிடாது. எனவே இது வினா வழுழுவாகும்.

5. வரை-இவ்வேர்ச்சொல் வினையாலணையும் பெயராக்குக:

(அ) வரைதல்

(ஆ) வரைந்த

(இ) வரைந்தவன்

(ஈ) வரைந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) வரைந்தவன்

விளக்கம்:

வரை-வேர்ச்சொல்.

வரைதல்-தொழிற்பெயர்.

வரைந்த-பெயரெச்சம்.

வரைந்தவன்-வினையாலணையும் பெயர்.

வரைந்து-வினையெச்சம்

6. பின்வருவனவற்றைப் பொருத்துக:

(அ) டெலிகேட் – 1.கருத்துரு

(ஆ) சாம்பியன் – 2. மரபுத்தகவு

(இ) புரபோசல் – 3. பேராளர்

(ஈ) புரோட்டோகால் – 4. வாகைசூடி

அ ஆ இ ஈ

(அ) 1 3 4 2

(ஆ) 3 2 1 4

(இ) 3 4 1 2

(ஈ) 2 1 4 3

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 4 1 2

7. “ஊ” என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு:

(அ) இறைச்சி

(ஆ) உலகம்

(இ) உயிர்

(ஈ) உயர்வு

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) இறைச்சி

விளக்கம்:

ஊ-உணவு, இறைச்சி, ஊன், தசை

8. “து” என்ற சொல்லின் பொருள் பின்வருவனவற்றுள் எது?

(அ) ஆறு

(ஆ) துப்பு

(இ) உண்

(ஈ) துன்பம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) உண்

விளக்கம்:

து-உண்

துப்பார்க்கு-உண்பவர்க்கு

9. பொருத்துக:

பட்டிபயல் I – பட்டியல் II

(அ) சரதம் – 1. நிலா முற்றம்

(ஆ) சூளிகை – 2. நாடு

(இ) மகோததி – 3. வாய்மை

(ஈ) அவனி – 4. கடல்

அ ஆ இ ஈ

(அ) 3 1 4 2

(ஆ) 2 1 3 4

(இ) 3 2 1 4

(ஈ) 1 4 3 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 3 1 4 2

விளக்கம்:

இராசராச சோழனுலா பாடல் எண்: 9 & 10

“தரைகொண்ட வேற்றரசர் தஞ்சென்னிப் பொன்னிக்

கரைகண்ட போர் முரசங் காணீர் – சரதப்

பவித்ர விசயப் படைப்பரசு ராமன்

கவித்த வபிடேகங் காணீர்”

  • ஓட்டக்கூத்தர்

பொருள்: போரில் தோற்ற வேற்று நாட்டு மன்னர், முன்னர்த் தாம் இழந்த நாட்டினைப் பெற்றுக் கொண்டதற்காகத் தம் தலையில் மண் சுமந்து காவிரி அணை கட்டுமாறு செய்த போர் முரசத்தைக் காணுங்கள். வாய்மை, தூய்மை, வெற்றி ஆகியவற்றினை உடைய படையாகிய மழுவாயுதத்தைக் கைக்கொண்ட பரசுராமன் சூட்டிய கிரீடத்தைக் காணுங்கள்.

சரதம்-வாய்மை

பாடல் எண் 1

“மாளிகையும் சாலையு மாலயமு மண்டபமும்

சூளிகையு மெம்மருங்குந் தோரணமும்”

– ஓட்டக்கூத்தர்.

பொருள்: இராசராச சோழன் தெருவில் உலா வந்தவோது அவனைக் காணப் பல்வேறு குலமங்கையரும் மாளிகைகளிலும் சாலையிலும் கோயிலிலும் மண்டபத்திலும் நிலா முற்றங்களிலும் கூடியிருந்தனர்.

சூளிகை-நிலாமுற்றம்

பாடல் எண்:5

“வட்ட மகோததி வேவ வொருவாளி

விட்ட திருக்கொற்ற விற்காணீர்

– ஒட்டக்கூத்தர்.

பொருள்: உலகை வட்டமாய்ச் சூழ்ந்துள்ள பெருங்கடல் காய்ந்து வற்றுமாறு, முன்பு வளைத்து ஓர் அம்பினை விடுத்த சிறந்த வெற்றி பொருந்திய வில்லினைப் பாரீர்.

மகோததி-பெருங்கடல்

10. கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காண்பிக்கவும்

கருத்துகள்

(அ) மிளகு நீரைச் (சாற்றமுது) சாத்தமுது என்பது வைணவ மரபு

(ஆ) ஆசிரியரை “ஐயா” என்றே அழைப்பது வேலூர் ஆம்பூர் வட்டத்தூர் மரபு.

(இ) அமிழ்தத்தைக் கருப்பஞ்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு

(ஈ) திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்குக் கீற்று வேய்வதனைக் கொட்டகை என்பது செட்டிநாடு மரபு.

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) அமிழ்தத்தைக் கருப்பஞ்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!