Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
General Tamil

General Tamil Model Question Paper 19

General Tamil Model Question Paper 19

General Tamil Model Question Paper 19: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில் உறங்கிய போது கவரி வீசிய மன்னன்

(அ) சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை

(ஆ) பாண்டியன் நெடுஞ்செழியன்

(இ) கோப்பெருஞ்சோழன்

(ஈ) முதலாம் குலோத்துங்கன்

விடை மற்றும் விளக்கம்

(அ) சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை

விளக்கம்:

மோசிகீரனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரைச் சேர்ந்தவர். “கீரன்” என்பது இவரது குடிப்பெயராகும். இவருடைய பாடல்கள் அகநானூற்றில் ஒன்றும், நற்றிணையில் ஒன்றும், குறுந்தொகையில் மூன்றும் புறநானூற்றில் நான்கும் இடம் பெற்றுள்ளன.

ஒரு முறை இவர் உடல் சோர்வினால் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் படுத்து உறங்கிவிட்டார். முரசுக் கட்டிலில் அமர்வதும் படுப்பதும் மரணத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்ட அக்காலத்தில் அம்முரசுக்கட்டிலுக்கு உரிமையுடைய “சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை’ என்ற மன்னன் புலவர் மீதும் கொண்ட பற்றினால் அவருக்கு கவரி வீசினான்.

2. பொருத்துக:

அ. கவுந்தியடிகள் – 1. ஆயர்குல மூதாட்டி

ஆ. மாதரி – 2. மாநாய்கனின் மகள்

இ. மாதவி – 3. சமணத்துறவி

ஈ. கண்ணகி – 4. ஆடலரசி

அ ஆ இ ஈ

(அ) 3 1 4 2

(ஆ) 2 4 1 3

(இ) 3 4 2 1

(ஈ) 1 3 2 4

விடை மற்றும் விளக்கம்

(அ) 3 1 4 2

3. கடிகை என்பதன் பொருள் யாது?

(அ) அணிகலன்

(ஆ) கடித்தல்

(இ) கடுகு

(ஈ) காரம்

விடை மற்றும் விளக்கம்

(அ) அணிகலன்

விளக்கம்:

கடிகை-துண்டு, ஆபரணம், தோள்வளை ஆகிய பொருள்களைக் குறிக்கும்.

4. “கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா” எனக் கூறும் நூல்

(அ) நான்மணிக்கடிகை

(ஆ) பழமொழி நானூறு

(இ) ஏலாதி

(ஈ) திரிகடுகம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) பழமொழி நானூறு

விளக்கம்:

பழமொழி நானூறு

ஆற்றவும் கற்றார் அறிவுடையார், அஃதுடையார்

நாற்றிசையும் சொல்லாத நாடில்லை – அந்நாடு

வேற்றுநா டாகா; தமவேயாம் ஆயினால்

“ஆற்றுணா வேண்டுவ தில்”

– 40வது பாடல்.

ஆசிரியர்-முன்றுறை அரையனார்.

பொருள்: கற்கவேண்டிய நூல்களை முழுமையாகக் கற்றவர் அறிவுடையோர் ஆவர். அவருடைய புகழ் நான்கு திசைகளிலும் பரவியிருக்கும். அவருடைய புகழ் பரவாத நாடு ஏதும் இல்லை. வேற்று நாடுகளும் அவரின் நாடுகளேயாகும். எனவே அந்நாடுகளுக்குச் செல்லும்போது வழி நடை உணவை அவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.

ஆற்றுணா-வழிநடை உணவு. இக்காலத்தில் “கட்டுச்சோறு” என்றும் குறிப்பிடுவர்.

5. “வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார்

உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து”

– எனத் திருக்குறளை பாரட்டியவர்.

(அ) பரிமேலழகர்

(ஆ) கபிலர்

(இ) மாங்குடி மருதனார்

(ஈ) பரணர்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) பரணர்

விளக்கம்:

திருவள்ளுவமாலை.

மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்

ஞால முழுதும் நயந்தளந்தான் – வாலறிவின்

வள்ளுவரும் தம் குறள் வெண் பாவடியால் வையத்தார்

உள்ளுவதெல் லாமளந்தார் ஓர்ந்து

– பரணர்.

பொருள்:இப்பாடலில் வள்ளுவப் பெருமானைக் காக்கும் கடவுளாகிய திருமால் எனக் கூறுகிறார் பரணர். திருமால், வாமன அவதாரத்தில் குறனாய்த் (குள்ளனாய்) தோன்றி தன் இரண்டு அடிகளால் உலகத்தை அளந்தார். அதுபோல வள்ளுவரும் தன்னுடைய மெய்யறிவினால் தம் குறள் வெண்பா அடிகள் இரண்டைக் கொண்டு இந்த உலகத்தாரால் நினைக்கப்பட்டவற்றை எல்லாம் ஆராய்ந்து அளந்தார்.

6.பொருத்துக:

நூலாசிரியர் நூல்

1. ஜெயங்கொண்டார் – 1. சடகோபரந்தாதி

2. காரியாசான் – 2. புறநானூறு

3. கம்பர் – 3. கலிங்கத்துப்பரணி

4. கண்ணகனார் – 4. சிறுபஞ்சமூலம்

அ ஆ இ ஈ

அ. 3 4 1 2

ஆ. 1 2 4 3

இ. 2 1 3 4

ஈ. 3 2 4 1

விடை மற்றும் விளக்கம்

அ. 3 4 1 2

7. “என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்”

– என்ற வரிகளைப் பாடியவர்

(அ) திருப்பாணாழ்வார்

(ஆ) குலசேகராழ்வார்

(இ) பேயாழ்வார்

(ஈ) ஆண்டாள்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) குலசேகராழ்வார்

விளக்கம்:

“மீன்நோக்கும்நீள்வயல் சூழ்வித்துவக் கோட் டம்மாளன்

பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்

தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்

கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே”

– குலசேகர ஆழ்வார்.

பொருள்: மீன்கள் நீந்துகின்ற வயல்கள் சூழ்ந்த வித்துவக்கோட்டில் உள்ள பெருமானே! நீ எனக்கு திருவருள் புரியவில்லை என்றாலும், உன்னையே அடைக்கலமாகப் புகுவேனேயன்றி, எனக்கு வேறு ஒரு பற்றில்லை. மன்னவன் ஒருவன் செங்கோல் முறை தவறித் துன்புறுத்தினாலும், அவனுடைய ஆட்சியையே எதிர்நோக்கி வாழ்கின்ற குடிமக்களைப் போல, நான் உன் திருவடிகளையே எண்ணிக் கொண்டிருக்கிறேன.

மேற்கண்ட பாடல் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழியின் முதலாயிரத்தில் உள்ளது.

8. “செறு” என்பதன் பொருள்

(அ) செருக்க

(ஆ) சேறு

(இ) சோறு

(ஈ) வயல்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) வயல்

விளக்கம்:

நற்றிணை 210-வது பாடல்.

அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்

மறுகால் உழுத ஈரச் செறுவின்

வித்தொடு சென்ற வட்டி பற்பல

மீனோடு பெயரும் யாணர் ஊர.

– மிளைகிழான் நல்வேட்டனார்.

பொருள்: உழவர், நெற்கதிர்களை அறுவடை செய்த பின்னர், அகன்ற அழகிய வயலை மறுபடியும் பயிர் செய்ய உழுதனர். பனையோலைப் பொட்டியில் விதை கொண்டு சென்று ஈரமுள்ள அந்நிலத்தில் விதைத்தனர். பின்னர், அவர்கள் அங்குள்ள நீர்;நிலைகளில் பல்வகை மீன்களைப் பிடித்து அப்பெட்டியில் கொண்டு வருகின்ற புது வருவாயினை உடைய மருதநிலத் தலைவனே!

9. திருக்குறளில் “ஏழு என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?

(அ) 11

(ஆ) 09

(இ) 08

(ஈ) 10

விடை மற்றும் விளக்கம்

(இ) 08

விளக்கம்:

திருக்குறளில் “ஏழு” என்னும் எண்ணுப் பெயர் எட்டு குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

10. கீழ்க்கண்ட நூல்களில் “தமிழ் மூவாயிரம்” என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?

(அ) திரிகடுகம்

(ஆ) திருவள்ளுவமாலை

(இ) திருமந்திரம்

(ஈ) திருக்குறள்

விடை மற்றும் விளக்கம்

(இ) திருமந்திரம்

விளக்கம்:

திருமூலர் அருளிய திருமந்திரம் “தமிழ் மூவாயிரம்” என்று அழைக்கப்படுகிறது.

“தந்திரம் ஒன்பது சார்வு

மூவாயிரம் சுந்தரன் ஆகமச் சொன்மொழிந்தானே”

என்ற சிறப்புப் பாயிரப் பகுதி இதனை உறுதி செய்கிறது. இந்நூல் 3,000 பாடல்களைக் கொண்டுள்ளது.

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!