Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
General Tamil

General Tamil Model Question Paper 24

General Tamil Model Question Paper 24

General Tamil Model Question Paper 24: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. உம், என்று, கொல், அம்ம – எவ்வகைச் சொல் என்பதைக் கண்டறிக:

(அ) பெயர்ச்சொல்

(ஆ) வினைச்சொல்

(இ) உரிச்சொல்

(ஈ) இடைச்சொல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) இடைச்சொல்

பெயர்ச்சொற்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையே வந்து பொருள் உணர்த்தும் சொற்கள் இடைச்சொற்கள் எனப்படும்.

உம், கொல், மன், மற்று, என, என்று முதலியவை இடைச்சொற்களாகும்.

எ.கா: உம்-வயிற்றிற்கும் ஈயப்படும்.

கொல்-இவன் தந்தை என்நோற்றான் கொல்.

மன்-கூரியதோர் வாள்மன்.

மற்று-மற்றென்னை யாள்க.

என-மழை பொழிந்ததென மக்கள் மகிழ்ந்தனர்.

என்று-வெள்ளென்று விளர்த்தது.

2. “கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்” – எவ்வகையான எச்சம்?

(அ) வினையெச்சம்

(ஆ) தெரிநிலை வினையெச்சம்

(இ) குறிப்பு வினையெச்சம்

(ஈ) முற்றெச்சம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) குறிப்பு வினையெச்சம்

குறிப்பு வினையெச்சம்

காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் குறிப்பால் உணர்த்தி வினைச்சொல்லைத் தழுவி வருவது குறிப்பு வினையெச்சம் ஆகும்.

எ.கா: மெல்லச் சென்றான்.

வந்து போனான்.

நோயின்றி வாழ்ந்தான்.

3. “பண்ணொடு தமிழொப்பாய்” எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்.

(அ) திருவாசகம்

(ஆ) தேவாரம்

(இ) திருக்குறள்

(ஈ) பட்டினப்பாலை.

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) தேவாரம்

4. 4 என்ற எண்ணைக் குறிக்கும் தமிழெழுத்து எது?

(அ) அ

(ஆ) ச

(இ) உ

(ஈ) ரு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) ச

அ – எட்டு,

ச-நான்கு,

உ-இரண்டு,

ரு-ஐந்து

5. மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? – என வினவும் வினா

(அ) அறிவினா

(ஆ) ஐயவினா

(இ) கொடை வினா

(ஈ) ஏவல் வினா

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) கொடை வினா

6. பொருந்தாத மரபுத் தொடரைக் குறிப்பிடுக:

(அ) குயில் கூவும்

(ஆ) மயில் அகவும்

(இ) கோழி கூவும்

(ஈ) கிளி பேசும்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கோழி கூவும்

கோழி கொக்கரிக்கும்

7. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக:

மணம் வைத்தாய், புதுமை, மண்ணில், மலர்க்குள்

(அ) மலர்க்குள் புதுமை மண்ணில் மணம் வைத்தாய்

(ஆ) மண்ணில் புதுமை மலர்க்குள் மணம் வைத்தாய்

(இ) மணம் வைத்தாய் மலர்க்குள் மண்ணில் புதுமை

(ஈ) மலர்க்குள் புதுமை மணம் வைத்தாய் மண்ணில்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) மண்ணில் புதுமை மலர்க்குள் மணம் வைத்தாய்

8. திருவாசகத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை

(அ) அறுநூற்று ஐம்பத்தெட்டு

(ஆ) அறநூற்று எண்பத்தைந்து

(இ) நானூற்று ஐம்பத்தெட்டு

(ஈ) அறுநூற்றுப் பத்து

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) அறுநூற்று ஐம்பத்தெட்டு

9. சொல்லிசை அளபெடை தேர்க:

(அ) உண்பதூஉம்

(ஆ) பெறா அவிடின

(இ) தழீஇ

(ஈ) அண்ணன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தழீஇ

சொல்லிசை அளபெடை:

தழீஇ – “தழீ” என்னும் தொழிற்பெயர்ச்சொல் ‘தழீஇ’ (தழுவி) என வினையெச்சம் சொல்லாக அளபெடுத்ததால் இது சொல்லிசை அளபெடை ஆயிற்று. இவ்வளபெடை “இ” என்னும் எழுத்தில் முடிந்திருக்கும்.

10. பிரித்தெழுதுக:

வெவ்விரும்பாணி

(அ) வெம்+இரும்பு+ஆணி

(ஆ) வெம்+இருப்பு+ஆணி

(இ) வெம்மை+இரும்பு+ஆணி

(ஈ) வெம்மை+இருப்பு+ஆணி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) வெம்மை+இரும்பு+ஆணி

வெம்மை+இரும்பு

வெம்மை என்பதன் ஈறு(மை)விகுதி கெட்டு முன் ஒற்றாகிய மகரவொற்று வகர ஒற்றாகத் திரிந்து வெவ்+இரும்பு என்றானது. இது “முன்னின்ற மெய்திரிதல்” விதியாகும்.

“தனிக்குறில் முன் ஒற்றுயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “வெவ்வ்+இரும்பு” என்றானது. “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “வெவ்விரும்பு” என்றானது.

“மென்றொடர் மொழியுள் சிலவேற் றுமையில்

தம்மின வன்றொட ராகா மன்னே”

– நன்னூல் – 184.

என்ற விதிப்படி “வெவ்விரும்பு+ஆணி” என்றானது.

“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி வருமொழி முதலில் உயிரெழுத்து வந்ததால் வெவ்விரும்ப்+ஆணி என்றானது.

“உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “வெவ்விரும்பாணி” என்றானது.

1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!