Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
General Tamil

General Tamil Model Question Paper 29

General Tamil Model Question Paper 29

General Tamil Model Question Paper 29: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க?

A) பழுத்த பழம்

B) பழுக்கும் பழம்

C) பழுக்கின்றது

D) பழங்கள் பழுத்தன

விடை : C) பழுக்கின்றது

விளக்கம் :

பழுத்த பழம் – இறந்தகால பெயரெச்சம்

பழுக்கும் பழம் – எதிர்கால பெயரெச்சம்

பழுக்கின்றது – நிகழ்கால வினைமுற்று

பழங்கள் பழுத்தன – இறந்தகால வினைமுற்று

2. படி என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினையெச்சத்தை உருவாக்குக?

A) படித்து

B) படித்தல்

C) படித்த

D) பாடுதல்

விடை : A) படித்து

விளக்கம் :

படித்து – வினையெச்சம் படித்தல் – தொழிற்பெயர்

படித்த – பெயரெச்சம் பாடுதல் – தொழிற்பெயர்

3. “கல்” என்னும் வேர்சொல்லின் பதம் அறிக?

A) கற்றல்

B) கற்பனை

C) கண்டான்

D) கல்லை

விடை : A) கற்றல்

4. “இயல்பானது” வேர்ச்சொல்லறிக.

A) இயல்

B) இயல்பு

C) இயைபு

D) இய

விடை : B) இயல்பு

5. ‘ஏ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

A) தலைவன்

B) நெருப்பு

C) அரண்

D) அம்பு

விடை : D) அம்பு

விளக்கம் :

தலைவன்
தீ நெருப்பு
அம்பு

6. “வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்

வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று

தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?

A) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

B) பெருங்குன்று கிழார்

C) பெருநாவலர்

D) பாவேந்தர் பாரதிதாசன்

விடை : A) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

விளக்கம் :

3000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த இலக்கிய வளமிக்க மொழி தமிழ் மொழியாகும். – இதனை

“வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் பறைசாற்றியுள்ளார்.

7. ‘துரை மாணிக்கம்’ என்பது இவரின் இயற்பெயர்

A) கவிஞர் சுரதா

B) கவிஞர் மீரான்

C) பாரதிதாசன்

D) பெருஞ்சித்திரனார்

விடை : D) பெருஞ்சித்திரனார்

விளக்கம் :

கவிஞர் இயற்பெயர்
சுராதா தி. இராசகோபாலன்
பாரதிதாசன் கனக சுப்புரத்தினம்
பெருஞ்சித்திரனார் துரை. மாணிக்கம்

8. திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?

A) சி. வை. தாமோதரம்

B) வ. சுப. மாணிக்கம்

C) தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்

D) சீனி. வேங்கடசாமி

விடை : C) தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்

விளக்கம் :

தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் : இவர் கால்டுவெல்லுக்கு அடுத்தபடியாக திராவிட மொழிகள் ஒப்பியல் ஆய்வினை வளர்த்தவர்.

சி. வை. தாமோதரனார் : இவர், பல அரிய தமிழ்நூல்களை உரையுடன் வெளியிட்டார். ‘தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்’ என்று போற்றப்பட்டவர்.

சீனி. வேங்கடசாமி : இவர், தமிழ் மொழியில் மறந்துபோன, மறைந்துபோன அளவு கடந்த செய்திகளை தம் ஆய்வின் மூலம் உலகறியச் செய்தவர்.

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

9. பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?

A) மு. சி. பூர்ணலிங்கம்

B) தெ. பொ. மீனாட்சி சுந்தரம்

C) கே. வி. சுப்பையா

D) எல். வி. இராமசுவாமி

விடை : A) மு. சி. பூர்ணலிங்கம்

விளக்கம் :

19 – ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத் தக்கவர் பரிமாற் கலைஞர். மு. சி. பூர்ணலிங்கம் என்பவர் தொடங்கிய ‘ஞானபோதினி’ என்னும் இதழை பரிதிமார்கலைஞர் தொடர்ந்து நடத்தி வந்தார்.

10. பெரியபுராணத்திற்கு சேக்கிழாரிட்ட பெயர்

A) சிவதொண்டர் புராணம்

B) சிவனடியார் புராணம்

C) திருத்தொண்டர் புராணம்

D) தொண்டர்சீர் புராணம்

விடை : C) திருத்தொண்டர் புராணம்

விளக்கம் :

செயற்கரிய செயல்களைச் செய்து பெருமை பெற்ற 63 சிவனடியார்களின் வரலாற்றையும் தொகையடியார் ஒன்பது பேரின் வரலாற்றையும் கூறும் பெரிய புராணத்தை சேக்கிழார் இயற்றினார். இந்நூலுக்கு சேக்கிழார் இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம் ஆகும். இந்நூலின் பெருமை கருதி பின்னாளில் இது ‘பெரியபுராணம்’ என அழைக்கப்பெற்றது.

11. சுந்தரம்பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது யாது?

A) பல்கலைக்கழகம்

B) அரசவைக் கவிஞர் பணி

C) அறக்கட்டளை

D) பேராசிரியர் பணி

விடை : A) பல்கலைக்கழகம்

விளக்கம் :

பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை அவர்கள் மனோன்மணீயம் என்ற காப்பியத்தை இயற்றியவர். இவர் இயற்றிய ‘நீராருங்கடலுடுத்த’ என்ற பாடல் தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டுள்ளது. இவரைப் போற்றும் விதமாக தமிழக அரசு ‘மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை’ 1990 – இல் திருநெல்வேலியில் உருவாக்கியது.

12. பொருளறிந்து பொருத்துக.

a) தடக்கர் 1. கரடி

b) எண்கு 2. காட்சி

c) வள்உகிர் 3. பெரிய யானை

d) தெரிசனம் 4. கூர்மையான நகம்

குறியீடுகள் :

a) b) c) d)

A) 3 1 4 2

B) 1 4 3 2

C) 1 2 3 4

D) 1 3 2 4

விடை : A) 3 1 4 2

விளக்கம் :

சொல் பொருள்
தடக்கரி பெரிய யானை
எண்கு கரடி
வள்உகிர் கூர்மையான நகம்
தெரிசனம் காட்சி

மேற்கண்ட சொற்கள் சீறாப்புராணம் விலாதத்துக் காண்டம் – புலி வசனித்த படலத்தில் அமைந்துள்ளன.

ஒரிஜினல் வினாத்தாளில் ‘தடக்கரி’ என்பது ‘தடக்கர்’ என்று தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

13. அவன் சித்திரையான் – எவ்வகை பெயர்

A) குணப் பெயர்

B) இடப் பெயர்

C) காலப் பெயர்

D) தொழிற்பெயர்

விடை : C) காலப் பெயர்

14. வேற்றுமை உருபை இணைத்து தொடரை ஒழுங்குபடுத்தி எழுதுக :

A) மாணவர்களை உட்கார வட்டமாகச் செய்க

B) மாணவர்களை வட்டமாக உட்காரச் செய்க

C) மாணவர்களை உட்கார வட்டமாகச் செய்க

D) மாணவர்களை செய்க வட்டமாக உட்கார

விடை : B) மாணவர்களை வட்டமாக உட்காரச் செய்க

15. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

A) மாலை மீது மலையின் மழை பெய்தது நேற்று

B) மலையின் மாலை மீது நேற்று பெய்தது மழை

C) நேற்று மாலை மலையின் மீது மழை பெய்தது

D) பெய்தது மழை மலையின் மீது நேற்று மாலை

விடை : C) நேற்று மாலை மலையின் மீது மழை பெய்தது

16. அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்து எழுதுக.

A) கொன்றை, கெண்டை, கண், கீரன், காடை

B) கெண்டை, கீரன், கொன்றை, காடை, கண்

C) கண், காடை, கீரன், கெண்டை, கொன்றை

D) கண், கீரன், காடை, கொன்றை, கெண்டை

விடை : C) கண், காடை, கீரன், கெண்டை, கொன்றை

17. காடுகளில் வாழ்ந்த மக்கள் விலங்கின் பெயர் கொண்டு அமைத்த ஊரின் பெயர் என்ன?

A) ஆட்டையாம்பட்டி

B) வேப்பனேரி

C) புளியம்பட்டி

D) புளியங்குடி

விடை : A) ஆட்டையாம்பட்டி

விளக்கம் :

ஏனைய மூன்றும், மரங்களின் பெயர் கொண்டு அமைந்த ஊர்களின் பெயர்களாகும்.

18. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி யார்?

A) அம்பேத்கர்

B) இராஜாஜி

C) அண்ணா

D) காமராசர்

விடை : A) அம்பேத்கர்

19. அறிஞர் அண்ணாவின் கவிதைகள் ‘தமிழ்ப்பீடம்’ என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆண்டு எது?

A) 2005

B) 2004

C) 2003

D) 2006

விடை : A) 2005

விளக்கம் :

அறிஞர் அண்ணாவின் கவிதைகள் ‘தமிழ்ப்பீடம்’ என்ற இதழில் 1. 09. 2005 அன்று வெளிவந்தன. இந்த மாத இதழின் ஆசிரியராக இருந்தவர் உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் மகன் கல்லாடன் ஆவார்.

20. தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர்

A) ஜி. யூ. போப்

B) வீரமாமுனிவர்

C) H. A. கிருஷ்ணப்பிள்ளை

D) ரா. பி. சேதுபிள்ளை

விடை : B) வீரமாமுனிவர்

விளக்கம் :

தமிழ் மொழியின் முதல் அகராதி நூல் ‘சதுரகராதி’ ஆகும். இந்நூலை எழுதியவர் வீரமாமுனிவர் ஆவார். ‘சதுர’ என்றால் நான்கு என்பது பொருளாகும். இதிலுள்ள நான்கு பிரிவுகள் பெயர் அகராதி, பொருள் அகராதி, தொடை அகராதி, தொகை அகராதி.

21. ‘தபோலி’ என்னும் சிற்றூர் எந்த மாநிலத்தில் உள்ளது.

A) மராட்டிய மாநிலம்

B) குஜராத் மாநிலம்

C) தமிழ்நாடு

D) கர்நாடகம்

விடை : A) மராட்டிய மாநிலம்

விளக்கம் :

தபோலி என்னும் சிற்றார் மராட்டிய மாநிலம் கொங்கண் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரில்தான் அம்பேத்கர் ஆரம்பக் கல்வியைக் கற்றார்.

22. ‘காவடிச் சிந்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர் ……..

A) பாரதியார்

B) சென்னிகுளம் அண்ணாமலையார்

C) அருணகிரியார்

D) விளம்பி நாகனார்

விடை: B) சென்னிகுளம் அண்ணாமலையார்

விளக்கம்:

தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியதால் ‘காவடிச் சிந்தின் தந்தை’ என்று சென்னிகுளம் அண்ணாமலையார் அழைக்கப்பட்டார். இவரது காலம் 19 – ஆம் நூற்றாண்டு ஆகும்.

23. கலிங்கத்துப்பரணி – நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது?

A) 596

B) 599

C) 593

D) 597

விடை : B) 599

விளக்கம்:

கலிங்கத்துப்பரணி : இந்நூல் பரணி இலக்கியங்களுள் முதலில் தோன்றியதாகும். இந்நூலை இயற்றியவர் ஜெயங்கொண்டார். இந்நூலை இயற்றியவர் ஜெயங்கொண்டார். இந்நூலில் 599 தாழிசைகள் உள்ளன.

24. “நாயின் வாயினீர் தன்னை நீரெனா

நவ்வி நாவினால் நக்கி விக்குமே”

– இவ்வரிகள் இடம்பெற்ற நூல்

A) வங்கத்துப் பரணி

B) திராவிடத்துப் பரணி

C) கலிங்கத்துப் பரணி

D) தக்கயாகப் பரணி

விடை : C) கலிங்கத்துப் பரணி

விளக்கம் :

கலிங்கத்துப்பரணி

தீயின் வாயினீர் பெறினு முண்பதோர்

சிந்தை கூரவாய் வெந்து லர்ந்துசெந்

நாயின் வாயினீர் தன்னை நீரெனா

நவ்வி நாவினால் நக்கி விக்குமே – ஜெயங்கொண்டார்.

பொருளுரை : பாலை நிலத்தில் கடும் வெப்பம் நிலவியதால் மானின் வாய் வெந்து உலர்ந்தது. நெருப்பிலிருந்து நீர் கிடைத்தாலும் குடித்துவிடலாம் என்ர எண்ணம் தோன்றுமளவுக்குத் தாகத்தால் தவித்தது. செந்நாயின் வாயிலிருந்து வடிவம் உமிழ்நீரைக் கூடக் குடிக்க முயன்று நக்கி, விக்கி நின்றது. (செந்நாய்க்கு மான் அஞ்சி ஓடும் எனினும் பாலைநில வென்மை மிகுதியால் தத்தம் இயல்பை மறந்து களைத்திருந்தன என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்).

25. அதியமானின் தூதராக ஔவை சென்றதைக் கூறும் நூல் எது?

A) பதிற்றுப்பத்து

B) பரிபாடல்

C) புறநானூறு

D) ஆத்திச்சூடி

விடை : C) புறநானூறு

விளக்கம் :

தொண்டை நாட்டை ஆண்டு வந்த தொண்டைமான் என்ற குறுநில மன்னன் அதியமான் மீது பகைமை கொண்டான். அதியமானோடு போர் புரிய எண்ணினான். அதை அறிந்த அதியமான் ஔவையாரை அவனிடம் தூதுவராக அனுப்பினான். தொண்டைமான் தன் படைப் பெருமையை ஔவையாருக்குக் காட்ட எண்ணித் தன் படைக்கலக் கொட்டிலுக்கு அவரை அழைத்துச் சென்றான். அவன் எண்ணத்தை அறிந்த ஔவையார் தொண்டைமானிடம் கூறியது,புறநானூறில் 95 – ஆவது பாடலாக இடம்பெற்றுள்ளது.

“இவ்வேலி பீலி அணிந்து மாலை சூட்டிக்

கண் திரள் நோன் காழ் திருத்தி நெய் அணிந்து

கடி உடை வியன் நகர், அவ்வே அவ்வே

பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து

கொல் துறைக் குற்றில மாதோ”

– ஔவையார்

பொருளுரை : இங்கே இருக்கும் போர்க்கருவிகள் அனைத்தும் மயில் இறகு அணியப்பட்டு, பூமாலை சூடப்பட்டுத் திரண்ட வலிமையான காம்புகள் அழகுற செய்யப்பட்டு, நெய் பூசப்பட்டுக் காவலுடைய பெரிய அரண்மனையில் உள்ளன. அங்கே அதியமான் அரண்மனையில் இருப்பவையோ, பகைவரைக் குத்தியதால் வேலின் பக்கமும் நுனியும் சிதைந்து, எப்பொழுதும் கொல்லனின் பணியிடமாகிய சிறிய பட்டறையில் கொட்டிக் கிடக்கின்றன என்று கூறினார்.

பாடலின் கருத்து : தொண்டைமான் போருக்கு செல்லாததால் அவனுடைய போர்க் கருவிகள் புதிதாக உள்ளன. அடிக்கடி போருக்குச் சென்று வெற்றி பெறுவதால் அதியமானின் கருவிகள் பழுதடைந்துள்ளன.

26. தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க.

A) அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை.

B) அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.

C) அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?

D) அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்.

விடை : B) அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.

விளக்கம் :

அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை – எதிர்மறை வாக்கியம்

அப்பூதி அடிகள் நான்மறை கற்றார் – தன்வினை வாக்கியம்

அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா ? – வினா வாக்கியம்

அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார் – பிறவினை வாக்கியம்

27. இலக்கணக் குறிப்புத் தருக : கங்கையும் சிந்துவும்

A) உம்மைத்தொகை

B) பெண்பால் பெயர்கள்

C) எண்ணும்மை

D) அன்மொழித்தொகை

விடை : C) எண்ணும்மை

விளக்கம் :

கங்கையும் சிந்துவும் – எண்ணும்மை

‘உம்’ விகுதி வெளிபட்டு வரும் சொற்கள் எண்ணும்மை ஆகும்.

28. சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம்

A) மிகும்

B) மிகாது

C) சில இடங்களில் வரும்

D) சில இடங்கலில் வராது

விடை : A) மிகும்

விளக்கம் :

சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்.

(எ.கா) சால + பேசினான் = சாலப்பேசினான்

தவ + சிறிது = தவச்சிறிது

29. தாழ்பூந்துறை – என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு தருக.

A) ஏவல் வினைமுற்று

B) உரிச்சொல் தொடர்

C) பண்புத்தொகை

D) வினைத்தொகை

விடை : D) வினைத்தொகை

விளக்கம் :

தாழ்பூந்துறை – வினைத்தொகை

முக்காலத்திற்கும் பொருந்தும்படி விரிந்து பொருள் தருவன வினைத்தொகைகள் ஆகும். காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை ஆகும்.

தாழ் என்பது வினைப்பகுதி. பூந்துறை என்பது பெயர்ச்சொல்.

காலம் காட்டும் இடைநிலைகள் இப்பெயரெச்சத்தில் தொங்கி நிற்கின்றன.

தாழ்ந்த பூந்துறை – இறந்தகாலம்

தாழுகின்ற பூந்துறை – நிகழ்காலம்

தாழும் பூந்துறை – எதிர்காலம்

30. தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்.

A) திலகவதி

B) தில்லையாடி வள்ளியம்மை

C) ஜான்சிராணி

D) நாகம்மை

விடை : B) தில்லையாடி வள்ளியம்மை

விளக்கம் :

தில்லையாடி வள்ளியம்மை : தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைகாக காந்தியடிகளின் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.சிறையில் உடல்நலம் குன்றியதால் விடுதலை செய்யப்பட்ட இவர் தனது 16 – ஆவது அகவையில் மரணமடைந்தார். இவரைப் பற்றி காந்தியடிகள் தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம் என்னும் நூலில் ’ தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் ’ என்று எழுதியுள்ளார்.

31. உலகம் உருண்டையானது என்பதைத் தம் தொலைநோக்கியால் கண்டறிந்து சொன்னவர் யார் ?

A) கலீலியோ

B) நிகோலஸ்கிராப்ஸ்

C) சி.வி.இராமன்

D) தாமஸ் ஆல்வா எடிசன்

விடை : A) கலீலியோ

32. தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்களில் ஒருவர்

A) ஆறுமுக நாவலர்

B) ஜோசப் கொன்ஸ்டான்

C) ஜேம்ஸ் பிராங்கா

D) ஜி.யு.போப்

விடை : C) ஜேம்ஸ் பிராங்கா

விளக்கம் :

தமிழ்த் தொண்டாற்றிய அயல்நாட்டவர்

ஆறுமுகநாவலர் – இலங்கை

கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி – இத்தாலி

ஜி.யு.போப் – கனடா நாட்டின் பிரின்ஸ் எட்வர்டு தீவு

ஜேம்ஸ் பிராங்கா – அமெரிக்க பேராசிரியர்

33) ”இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார் ?

A) கால்டுவெல்

B) ஜி.யு.போப்

C) வீரமாமுனிவர்

D) ஷெல்லி

விடை : B) ஜி.யு.போப்

விளக்கம் :

ஜி. யு. போப்பின் இறுதி விருப்பங்கள் :

1. இறப்புக்குப் பின் தனது கல்லறையில் “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கின்றான்’’ என்ற வாசகம் இடம்பெற வேண்டும்.

2. தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையாக அமைய வேண்டும்.

3. தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசகத்தை தன்னை அடக்கம் செய்யும் போது கல்லறையில் உடன் வைக்க வேண்டும்.

இவருடைய மூன்று விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டன. இவருடைய இரண்டாவது விருப்பத்தை நிறைவேற்ற,பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராக இருந்த செல்வக்கேசவராயர் தமிழன்பர்களிடம் நன்கொடை திரட்டி இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தார்.

34. சித்தர்களில் ஆதி சித்தராக கருதப்படுவர் யார் ?

A) பாம்பாட்டிச் சித்தர்

B) திருமூலர்

C) போகர்

D) கோரக்கர்

விளக்கம் :

சித்தர்களில் ஆதி சித்தராகக் கருதப்படுபவர் திருமூலர்.இவர் இயற்றிய திருமந்திரம் பன்னிரு திருமுறைகளுள் 10 – ஆவது திருமுறையாக அமைந்துள்ளது.

35. ’லிட்டன் பிரபு’ எழுதிய ‘இரகசிய வழி’ என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல்

A) மனோன்மணீயம்

B) அகத்தியம்

C) முறுவல்

D) குணநூல்

விடை : A) மனோன்மணீயம்

விளக்கம் :

பெ.சுந்தரனார் அவர்கள் இயற்றிய நூல் மனோன்மணீயம் ஆகும். இது பாண்டிய நாட்டு மன்னனாகிய சீவக வழுதியின் மகள் மனோன்மணியின் வரலாற்றைக் கூறும் நாடக நூலாகும். இந்நாடகம் லிட்டன் பிரபு என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘இரகசிய வழி‘ என்ற நூலைத் தழுவி இயற்றப்பட்டது.

இது வழிநூலாயினும் ‘முதல் நூல்‘ என்று கூறத்தக்க அளவு சிறப்புடையது.

இந்நூலின் இடையே ‘சிவகாமி சரிதம்‘ என்ற துணைக்கதை ஒன்றும் இடம்பெற்றுள்ளது.இந்நூலில் 5 அங்கங்கள் மற்றும் 20 காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

36. மனோன்மணியத்தை இயற்றியவர்

A) சுந்தரம் பிள்ளை

B) சுந்தர முனிவர்

C) சுந்தரர்

D) சுந்தர மூர்த்தி

விடை : A) சுந்தரம் பிள்ளை

37. செங்கீரைப் பருவம் – பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளக்குகிறது ?

A) இரண்டாம் பருவம்

B) ஐந்தாம் பருவம்

C) முதற் பருவம்

D) மூன்றாம் பருவம்

விடை : A)இரண்டாம் பருவம்

விளக்கம் :

பிள்ளைத்தமிழ் பருவங்கள்:

3 – ஆம் திங்கள் காப்பு
5 – ஆம் திங்கள் செங்கீரை
7 – ஆம் திங்கள் தால்
9 – ஆம் திங்கள் சப்பாணி
11 – ஆம் திங்கள் முத்தம்
13 – ஆம் திங்கள் வருகை
15 – ஆம் திங்கள் அம்புலி
17 – ஆம் திங்கள் சிற்றில் (ஆண்பால்) கழங்கு (பெண்பால்)
19 – ஆம் திங்கள் சிறுபறை (ஆண்பால்) அம்மானை (பெண்பால்)
21 – ஆம் திங்கள் சிறுதேர் (ஆண்பால்) ஊசல் (பெண்பால்)

38. வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக.

A) தென்னை போன்ற தோள்

B) பளிங்கு போன்ற தோள்

C) மூங்கில் போன்ற தோள்

D) வாழை போன்ற தோள்

விடை : C) மூங்கில் போன்ற தோள்

விளக்கம் :

‘வேய்‘ என்றால் மூங்கில் என்பது பொருளாகும். வேய்புரை தோள் என்றால் ‘மூங்கில் போன்ற தோள்‘ என்பது பொருளாகும்.

39. பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.

A) எழிலரசி சிலப்பதிகாரம் கற்றாள்.

B) எழிலரசியால் சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது.

C) எழிலரசி சிலப்பதிகாரம் கல்லாள்

D) எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்

விடை : D) எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்

விளக்கம் :

எழிலரசி சிலப்பதிகாரம் தன்வினை
எழிலரசியால் சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது செயப்பாட்டுவினை
எழிலரசி சிலப்பதிகாரம் கல்லாள் எதிர்மறைத் தொடர்
எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள் பிறவினை

40. தாய் மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார் – பொருத்தமான வாக்கியத்தை தேர்ந்தெடுக்க.

A) அயற்கூற்று வாக்கியம்

B) நேர்க்கூற்று வாக்கியம்

C) கலவை வாக்கியம்

D) எதிர்மறை வாக்கியம்

விடை : A) அயற்கூற்று வாக்கியம்

விளக்கம் :

அயற்கூற்றில் மேற்கோள் குறிகள் வாரா. இதில் தன்மை முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறும்.

அயர்கூற்று : தாய்மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார்.

நேர்க்கூற்று : “தாய்மொழியை உயிராகப் போற்ற வேண்டும்” என்று ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார்.

41. பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்

A) தன்வினை வாக்கியம்

B) செய்வினை வாக்கியம்

C) பிறவினை வாக்கியம்

D) செயப்பாட்டுவினை வாக்கியம்

விடை : C) பிறவினை வாக்கியம்

விளக்கம் :

பாத்திமா திருக்குறள் கற்பித்தாள் – பிறவினை வாக்கியம்

பாத்திமா திருக்குறள் கற்றாள் – தன்வினை வாக்கியம்

42. தவறான இணை எது?

A) மணித்தக்காளி – வாய்ப்புண்

B) முகமுசுக்கை வேர் – இருமல்

C) அகத்திக் கீரை – கண் நோய்

D) வேப்பங்கொழுந்து – மார்புச்சளி

விடை : C) அகத்திக் கீரை – கண் நோய்

விளக்கம் :

அகத்திக்கீரை, பல்சார்ந்த நோய்களைக் குணமாக்குகிறது.

43. பொருந்தாத இணை எது

A) மேற்கு மலையில் இருந்து வந்தவை – சந்தனம், ஆரம்

B) கீழ்க்கடலில் விளைந்தவை – பவளம்

C) வடமலையில் இருந்து வந்தவை – கறி (மிளகு)

D) தென்கடலில் இருந்து கிடைத்தவை – முத்து

விடை : C) வடமலையில் இருந்து வந்தவை – கறி (மிளகு)

விளக்கம் :

வடமலையில் இருந்து வந்தவை மெருகிடப்பட்ட பொன், மாணிக்கக் கற்கள். உள் நாட்டில் இருந்து தரை வழி வந்தவை கறி (மிளகு)

44. அகர வரிசைப்படுத்துக.

A) மிளகு, மருங்கை, முசிறி, மூதூர், மேற்குமலை

B) முசிறி, மூதூர், மிளகு, மேற்குமலை, மருங்கை

C) மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை

D) மருங்கை, முசிறி, மூதூர், மிளகு, மேற்குமலை

விடை : C) மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை

45. தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர் யார்?

A) இராணி மங்கம்மாள்

B) ஜான்சி ராணி

C) தில்லையாடி வள்ளியம்மை

D) வேலுநாச்சியார்

விடை : A) இராணி மங்கம்மாள்

விளக்கம் :

மதுரையை ஆட்சி செய்த சொக்கநாத நாயக்கரின் மனைவி இராணி மங்கம்மாள். கணவர் இறந்தவுடன் இவர் காப்பாட்சியாளராக இருந்து மதுரையை ஆட்சி செய்து வந்தார். மகன் முத்து வீரப்பன் பதவிக்கு வந்ததும் அரியணையைத் துறந்தார். ஏழாண்டுகள் ஆட்சி செய்த முத்துவீரப்பன் இறந்து விடவே, தன் பேரன் ஆட்சிக்கு வரும்வரை மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றார். இவர், தன் ஆட்சிக் காலத்தில் திருவிதாங்கூர் போர், தஞ்சைப் போர், மைசூர் போர் ஆகிய மூன்று போர்களை எதிர்கொண்டு, வெற்றியடைந்தார்.

46. “வாழ்வினிற் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு எது?

A) தமிழ்நாடு அரசு

B) புதுவை அரசு

C) பிரெஞ்சு அரசு

D) ஆங்கில அரசு

விடை : B) புதுவை அரசு

விளக்கம் :

“வாழ்வினிற் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற பாடல் பாரதிதாசன் அவர்களால் இயற்றப்பட்டது. இப்பாடலை புதுவை அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுகொண்டுள்ளது.

47. இளங்கோவடிகள் “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்” என்று யாரைப் பாராட்டியுள்ளார்?

A) நாதகுத்தனார்

B) தோலாமொழித்தேவர்

C) திருத்தக்க தேவர்

D) சீத்தலைச் சாத்தனார்

விடை : D) சீத்தலைச் சாத்தனார்

விளக்கம் :

சீத்தலைச் சாத்தனாரின் காலம் கி. பி. 2 – ஆம் நூற்றாண்டு ஆகும். இவர் இளங்கோவடிகளின் காலத்தில் வாழ்ந்தவர். கண்ணகியின் வாழ்க்கை வரலாற்றை இளங்கோவடிகளுக்கு இவர் கூறினார். அவ்வரலாற்றை சிலப்பதிகாரமாக இளங்கோவடிகள் இயற்றினார்.

இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனாரை தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன் என்று பாராட்டியுள்ளார்.

48. வாகீசர், அப்பர், தருசேனர், தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?

A) திருநாவுக்கரசர்

B) சுந்தரர்

C) திருஞானசம்பந்தர்

D) மாணிக்கவாசகர்

விடை : A) திருநாவுக்கரசர்

விளக்கம் :

திருநாவுக்கரசர் சிறிது காலம் சமண சமயத்தைத் தழுவியிருந்தபோது தருமசேனர் என அழைக்கப்பட்டார்.

இவருக்கு அப்பர் என்று பெயரிட்டவர் திருஞானசம்பந்தர்.

‘தாண்டகம்’ எனும் விருத்த வகையைப் பாடியமையால் ‘தாண்டக வெந்தர்’

எனும் பெயர் பெற்றார்.

வாகீசர் என்றும் இவர் அழைக்கப்பட்டார்.

49. ‘ஏர்முனைக்கு நேர்ங்கே எதுவுமே இல்லே !

என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே !’

என்ற பாடலின் ஆசிரியர் யார்?

A) பட்டினத்தார்

B) மருதகாசி

C) உடுமலை நாராயணகவி

D) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

விடை : B) மருதகாசி

விளக்கம் :

“திரையிசைக் கவித்திலகம் அ. மருதகாசி அவர்கள் இயற்றிய இந்தப் பாடல், அவர் இயற்றிய பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலில் ‘சமுகம்’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.

50. செல்வச் செவிலி – இலக்கணக் குறிப்பு

A) உவமை

B) அடுக்குத்தொடர்

C) எண்ணும்மை

D) உருவகம்

விடை : D) உருவகம்

விளக்கம் :

உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடு இன்றி உவமையையே பொருளாகக் கூறுவது உருவகம் ஆகும்.

(எ.கா) இன்ப வெள்ளம், அடிமலர், செல்வச் செவிலி.

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

செல்வச் செவிலியால் உண்டு – திருக்குறள் 757

பொருள் : அன்புத்தாய் பெற்ற அருள் என்னும் குழந்தை, பொருள் என்னும் வளர்ப்புத் தாயால் (செல்வச் செவிலி) வளர்க்கப்படுகிறது.

51. குன்றேறி யானைபோர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை

இவ்வடிகளில் கைத்தொன்று – பொருள் யாது?

A) படை கவசம்

B) படை கருவிகள்

C) கைப்பொருள்

D) வலிமையான ஆயுதம்

விடை : C) கைப்பொருள்

விளக்கம் :

குன்றேறி யானைபோர் கண்டற்றால் தன்கைத்தொன்று

உண்டாகச் செய்வான் வினை – திருக்குறள் 758

பொருள் : தன் கைப்பொருள் கொண்டு ஒருவன் செய்யும் செயலானது, குன்றின் மேல் இருந்து கொண்டு யானைப் போரைக் காண்பது பொன்ற பாதுகாப்பான செயலாகும்.

தன்கைத்தொன்று – கைப்பொருள்.

52. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு – எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்.

A) பொழிப்பு எதுகை

B) கூழை எதுகை

C) மேற்கதுவாய் எதுகை

D) கீழ்க்கதுவாய் எதுகை

விடை : B) கூழை எதுகை

விளக்கம் :

1 2 3

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு – திருக்குறள் 350

எதுகை – விளக்கம்

அடிதோறும் அல்லது சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகைத் தொடை ஆகும்.

1, 2, 3 – ஆம் சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்தால் அது கூழை எதுகை எனப்படும்.

53. ‘அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்’ – இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத் தேர்க.

A) கூழை எதுகை

B) மேற்கதுவாய் எதுகை

C) கீழ்க்கதுவாய் எதுகை

D) பொழிப்பு எதுகை

விடை : B) மேற்கதுவாய் எதுகை

விளக்கம் :

1 3 4

அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்

1, 3, 4 – ஆம் சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது மேற்கதுவாய் எதுகை ஆகும்.

54. பொருத்துக.

வேற்றுமை உருபு

a) நான்காம் வேற்றுமை 1. இன்

b) ஐந்தாம் வேற்றுமை 2. அது

c) ஆறாம் வேற்றுமை 3. கண்

d) ஏழாம் வேற்றுமை 4. கு

குறியீடுகள் :

a) b) c) d)

A) 4 1 2 3

B) 3 2 1 4

C) 2 3 4 1

D) 1 4 3 2

விடை : A) 4 1 2 3

விளக்கம் :

முதல் வேற்றுமை மற்றும் எட்டாம் வேற்றுமைத் தவிர, ஏனைய ஆறு வேற்றுமைத் தொடர்களுக்கும் உருபுகள் உள்ளன.

வேற்றுமை உருபு
2 – ஆம் வேற்றுமை
3 – ஆம் வேற்றுமை ஆல்
4 – ஆம் வேற்றுமை கு
5 – ஆம் வேற்றுமை இன் / இல்
6 – ஆம் வேற்றுமை அது
7 – ஆம் வேற்றுமை கண்

55. கீழ்க்கண்ட கூற்றுக்களுள் சரியானவற்றைத் தேர்வு செய்க.

1. தாயுமானவர் பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு

2. இவர் காலம் கி. பி. பதினெட்டாம் நூற்றாண்டு

3. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்பது இவர் எழுதிய நூல்

4. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சேதுபதியிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றினார்.

A) 1, 4 சரி

B) 2, 3 சரி

C) 2, 4 சரி

D) 1, 3 சரி

விடை : B) 2, 3 சரி

விளக்கம் :

1. தாயுமானவர் பிறந்த ஊர் திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்.

4. மதுரையை ஆண்ட விஜயரங்க சொக்கநாத நாயக்கரிடம் இவர் கருவூல அலுவலராகப் பணியாற்றினார்.

56. தாயுமானவர் ஆற்றிய பணி எது?

A) அரசுக்கணக்கர்

B) தட்டச்சுப்பணியாளர்

C) பத்திரிகையாளர்

D) இசைப்பணியாளர்

விடை : A) அரசுக்கணக்கர்

விளக்கம் :

தாயுமானவர் விஜயரங்க சொக்கநாத நாயக்கரிடமும் அவருடைய மறைவுக்குப் பின் அவரது மனைவி இராணி மீனாட்சியின் ஆட்சியிலும் அரசுக் கணக்கராகப் பணியாற்றினார்.

57. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?

A) துறைமுகம்

B) சுவரும் சுண்ணாம்பும்

C) தேன்மழை

D) சுரதாவின் கவிதைகள்

விடை : C) தேன்மழை

விளக்கம் :

உவமைக் கவிஞர் சுரதாவின் ‘தேன்மழை’ என்ற நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது. இந்த நூலில் ‘இயற்கை எழில்’ முதல் ‘ஆராய்ச்சி’ ஈறாக 16 பகுதிகளாக சுரதாவின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

58. “இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை…..” என்று பாடியவர்

A) சுரதா

B) மு. மேத்தா

C) தாரா பாரதி

D) அப்துல் ரகுமான்

விடை : A) சுரதா

59. பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது?

A) கண்ணகி புரச்சிக் காப்பியம்

B) பிசிராந்தையார்

C) சுவரும் சுண்ணாம்பும்

D) பாண்டியன் பரிசு

விடை : B) பிசிராந்தையார்

விளக்கம் :

பாரதிதாசன் இயற்றிய நாடக நூல் பிசிராந்தையார். இந்நூலுக்காக 1969 – இல் பாரதிதாசனுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. கண்ணகி புரட்சிக் காப்பியம், பாண்டியன் பரிசு ஆகியவை பாரதிதாசன் கவிதை நூல்கள்ளகும். சுவரும் சுண்ணாம்பும் என்பது கவிஞர் சுரதா இஉற்றிய நூலாகும்.

60. நாமக்கல் கவிஞருக்கு “பத்மபூஷன்” விருது வழங்கிச் சிறப்பித்தது யார்?

A) நடுவணரசு

B) மாநில அரசு

C) ஆங்கில அரசு

D) பிரெஞ்சு அரசு

விடை : A) நடுவணரசு

விளக்கம் :

நடுவணரசு, நாமக்கல் கவிஞருக்கு 1971 – இல் பத்மபூஷண் விருது வழங்கிச் சிறப்பித்தது.

61. துடியன், நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர்

அடியன், அல்செறிந் தன்ன நிறத்தினாள்

– இக்கூற்றிற்குரியவர் யார்?

A) இராமன்

B) இலக்குவன்

C) அனுமன்

D) குகன்

விடை : D) குகன்

விளக்கம் :

கம்பராமாயணம் – அயோத்திய காண்டம் – குகப்படலம்

துடியன், நாயினன் தோல் செருப்பு ஆர்த்தபேர்

அடியன், அல்செறிந் தன்ன நிறத்தினான்.

நெடிய தானை நெருங்கலின் நீர்முகில்

இடுயி னோடு எழுந்து தாலன்ன ஈட்டினான் – கம்பர்

பொருள் : குகன் துடியென்னும் பறையை உடையவன் ; வேட்டை நாய்களைக் கொண்டிருப்பவன்; தோல் செருப்பணிந்த பெருங்கால்களை உடையவன் ; இருள் போன்ற கரிய நிறத்தையுடையவன் ; கரிய மேகக்கூட்டம் திரண்டு வந்தது போல மிகுதியான படை பலம் உடையவன்.

62. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று

A) நற்றிணை

B) குறிஞ்சிப்பாட்டு

C) பரிபாடல்

D) ஏலாதி

விடை : D) ஏலாதி

விளக்கம் :

ஏலாதி – பதினெண்கீழ்க்கணக்கு நூல்

நற்றிணை – எட்டுத்தொகை நூல்

பரிபாடல் – எட்டுத்தொகை நூல்

குறிஞ்சிப்பாட்டு – பத்துப்பாட்டு நூல்

63. பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது?

A) இன்னா நாற்பது

B) நான்மணிக்கடிகை

C) நாலடியார்

D) சிறுபஞ்சமூலம்

விடை : C) நாலடியார்

விளக்கம் :

பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் நாலடியார் என்ற நூலின் இடம் பெற்றுள்ளன. பாடல் எண் 200 மற்றும் 296.

64. கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால் அவர்களிடம் உள்ள _______ ஆகும்.

A) நற்பண்பு

B) நற்குணம்

C) புகழ்

D) நல்லெண்ணங்கள்

விடை : D) நல்லெண்ணங்கள்

விளக்கம் :

மனைக்கு விளக்கம் மடவார் ; மடவார்

தனக்குத் தகைசால் புதல்வர் ; மனக்கினிய

காதல் புதல்வர்க்குக் கல்வியே ; கல்விக்கும்

ஓதின் புகழ்சால் உணர்வு – விளம்பிநாகனார்

பொருள் : குடும்பத்தின் விளக்கு பெண்ணாவாள். அப்பெண்ணுக்கு விளக்கினைப் போன்றவர்கள், அவன் பெற்ற பண்பில் சிறந்த பிள்ளைகள். மனத்திற்கினிய அன்புமிக்க அப்பிள்ளைகளுக்கு விளக்கினைப் போன்றது கல்வி. கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால், அவர்களிடம் உள்ள நல்ல எண்ணங்களே ஆகும்.

65. பொருட்பாலின் இயல்கள்

A) பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்

B) அரசியல், அங்கவியல், ஒழிபியல்

C) களவியல், கற்பியல்

D) பாயிரவியல், அரசியல், களவியல்

விடை : B) அரசியல், அங்கவியல், ஒழிபியல்

விளக்கம் :

பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் – அறத்துப்பால்

அரசியல், அங்கவியல், ஒழிபியல் – பொருட்பால்

களவியல், கற்பியல் – இன்பத்துப்பால்

66. பாகற்காய் – பிரித்தெழுதுக

A) பாகு + அல் + காய்

B) பாகு + அகற்காய்

C) பாகற் + காய்

D) பாகு + கல் + காய்

விடை : A) பாகு + அல் + காய்

விளக்கம் :

பொருள் : பாகு (இனிப்பு) அல்லாத காய் பாகற்காய்.

புணர்ச்சி விதி : பாகு + அல் (குற்றியலுகரப் புணர்ச்சி விதி) “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி பாக் + அல் என்றானது. “உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி ‘பாகல்’ என்றானது. பகல் + காய் (தனிக்குறில் முன் ஒற்று புணர்ச்சி) நிலை மொழி ஈற்றில் லகரம் வந்து வருமொழி முதலில் வல்லினம் வந்ததால் அந்த (ல்) றகரமாகத் திரிந்து, பாகற்காய் என்றானது.

67. பைந்நிணம் – பிரித்தெழுதுக

A) பை + நிணம்

B) பை + இணம்

C) பசுமை + நிணம்

D) பசுமை + இணம்

விடை : C) பசுமை + நிணம்

விளக்கம் :

பைந்நிணம் – பசுமை + நிணம்

இது பண்புப்பெயர் புணர்ச்சி விதியாகும்.

1) ஈறுபோதல் விதிப்படி ‘மை’ விகுதி கெட்டு பசு + நிணம் என்றானது.

2) ‘அடியகரம் ஐயாதல் என்ற விதிப்பசி பைசு + நிணம்’ என்றானது.

3) ‘இணையவும்’ என்ற விதிப்படி ‘சு’ கெட்டு பை + நிணம் என்றானது.

4) ‘குறில் வழிய’ தனி ஐ. எஒ, து முன் மெலி மிகலுமாம் என்ற விதிப்படி பைந் + நிணம் என்றாகி பைந்நிணம் என்று புணர்ந்தது.

68. “திருத்தொண்டர் புராணம்” என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்

A) திருவிளையாடற்புராணம்

B) மேருமந்த புராணம்

C) திருவாசகம்

D) பெரியபுராணம்

விடை : D) பெரியபுராணம்

விளக்கம் :

பெரியபுராணம் என்ற நூல் சேக்கிழாரால் இயற்றப்பட்டது. இந்நூலுக்கு சேக்கிழார் இட்ட பெயர் ‘திருத்தொண்டர் புராணம்’ ஆகும்.

69. மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிச் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?

A) ஐங்குறுநூறு

B) குறுந்தொகை

C) கலித்தொகை

D) புறநானூறு

விடை : A) ஐங்குறுநூறு

விளக்கம் :

ஐந்து + குறுமை + நூறு – ஐங்குறுநூறு

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகைத் திணை குறித்த நூறு நூறு பாடல்களாகத் தொகுக்கப்பட்ட நூல் இது.

இந்நூல் மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் உடைய ஐந்நூறு பாடல்களைக் கொண்டுள்ளது.

இந்நூலில் உள்ள பாடல்கள் அகவற்பாக்களால் (ஆசிரியப்பா) ஆனவை.

70. “எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்

A) சிற்பி

B) சி. சு. செல்லப்பா

C) ந. பிச்சமூர்த்தி

D) மு. மேத்தா

விடை : B) சி. சு. செல்லப்பா

விளக்கம் :

‘எழுத்து’ என்ற இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி. சு. செல்லப்பா அவர்கள். புதுக்கவிதை எழுதிய கவிஞர்களுக்கு ‘எழுத்து’ பத்திரிக்கை ஒரு சரணாலயமாக விளங்கியது.

இவர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். சுதந்திர தாகம் என்ற இவருடைய புதினத்திற்கு 2001 – ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.

71. வழக்குரைஞராகவும் இந்துசமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றிய கவிஞர் யார்?

A) அப்துல் ரகுமான்

B) சிற்பி

C) ந. பிச்சமூர்த்தி

D) இரா. மீனாட்சி

விடை : C) ந. பிச்சமூர்த்தி

விளக்கம் :

ந. பிச்சமூர்த்தி : இவரின் இயற்பெயர் ந. வேங்கட மகாலிங்கம். இவர் 1924 முதை 1938 வரை வழக்குரைஞராக இருந்தார். 1939 முதல் 1954 வரை இந்து அறநிலையத் துறை அதிகாரியாகப் பணியாற்றினார். இவர் புதுக்கவிதையின் முன்னோடி, தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை, தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றுநர், புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.

72. “ஒருபூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான் !” என்று கூறியவர் யார்?

A) மு. மேத்தா

B) பசுவய்யா

C) ந. பிச்சமூர்த்தி

D) ஈரோடு தமிழன்பன்

விடை : D) ஈரோடு தமிழன்பன்

விளக்கம் :

ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் ஜெகதீசன். இவர் ‘ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்கக் கவிஞர்’ எனக் புகழப்படுகிறார்.

‘வணக்கம் வள்ளுவ !’ என்ற கவிதை நூலுக்காக இவர் 2004 – ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றுள்ளார். இவருடைய ‘தமிழோவியம்’ என்ற நூலின் முன்னுரையில் “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

73. “தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்

A) பாரதிதாசன்

B) நாமக்கல் கவிஞர்

C) வாணிதாசன்

D) முடியரசன்

விடை : C) வாணிதாசன்

விளக்கம் :

வாணிதாசன் : இவருடைய இயற்பெயர் எத்திராசலு (எ) அரங்கசாமி. 34 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணி புரிந்தார். இவர் “தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்பெற்றவர். கவிஞரேறு, பாவலர்மணி என்ற சிறப்புப் பெயர்களையும் பெற்றுள்ளார். இவரது பாடல்கள் ரஷ்ய மற்றும் ஆங்கில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

74. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்

A) அகநானூறு

B) ஐங்குறுநூறு

C) நற்றிணை

D) பரிபாடல்

விடை : C) நற்றிணை

விளக்கம் :

எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் போற்றப்படும் நூல் நற்றிணை ஆகும்.

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை”

75. அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது?

A) பரிபாடல்

B) நற்றிணை

C) ஐங்குறுநூறு

D) பதிற்றுப்பத்து

விடை : A) பரிபாடல்

விளக்கம் :

அகப்பொருள் நூல்கள் : நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு. புறப்பொருள் நூல்கள் : புறநானூறு, பதிற்றுப்பத்து. அகமும், புறமும் கலந்து வருவது : பரிபாடல்

76. தவறான இணையைத் தேர்வு செய்க :

A) குறிஞ்சி – கபிலர்

B) முல்லை – ஓதலாந்தையார்

C) மருதம் – ஓரம்போகியார்

D) நெய்தல் – அம்மூவனார்

விடை : B) முல்லை – ஓதலாந்தையார்

விளக்கம் :

ஐங்குறுநூறு என்ற நூலில் ஒவ்வொரு திணையையும் வேறுவேறு புலவர்கள் பாடியுள்ளனர்.

“மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்

கருதுங் குறிஞ்சிக் கபிலன் – கருகிய

பாலைஓத லாந்தை பனிமுல்லை பேயனே

நூலையோ தைங்குறு நூறு”

மருதத் திணை – ஓரம்போகியார்

நெய்தல் திணை – அம்மூவனார்

குறிஞ்சித் திணை – கபிலர்

பாலைத் திணை – ஓதலாந்தையார்

முல்லைத் திணை – பேயனார்

77. பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க :

A) கம்பர் தேரழுந்தூரில் பிறந்தவர்

B) கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி

C) சரசுவதி அந்தாதியை இயற்றியவர் கம்பர்

D) கம்பரது காலம் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு

விடை : B) கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி

விளக்கம் :

கம்பரை ஆதரித்த வள்ளல் திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளல் ஆவார். உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி ஆவார்.

78. குழலியும் பாடத் த்ந்ரியும் – தொடரில் உள்ள பிழையை நீக்கி சரியான தொடரை தேர்ந்தெடுக்க

A) குழலிக்குப் பாடத்தெரியும்

B) குழலியின் பாடத்தெரியும்

C) குழலி பாடத்தெரியும்

D) குழலியால் பாடத்தெரியும்

விடை : A) குழலிக்குப் பாடத்தெரியும்

79. தமிழ்ச் சொல்லைக் கண்டறிக :

A) அனுமதி

B) ஈசன்

C) குபேரன்

D) மணிமுடி

விடை : D) மணிமுடி

விளக்கம் :

பிறமொழிச்சொல் தமிழ்ச்சொல்
அனுமதி இசைவு
ஈசன் இறைவன்
குபேரன் பெருஞ்செல்வன்
கிரீடம் மணிமுடி

80. பொருந்தா இணையைக் சுட்டுக :

A) குறிஞ்சி – யாமம்

B) முல்லை – மாலை

C) மருதம் – நண்பகல்

D) நெய்தல் – எற்பாடு

விடை : C) மருதம் – நண்பகல்

விளக்கம் :

திணை சிறுபொழுது
குறிஞ்சி யாமம்
முல்லை மாலை
மருதம் வைகறை
நெய்தல் எற்பாடு
பாலை நண்பகல்

81. மிசை – எதிர்ச்சொல் காண்க.

A) இசை

B) கீழ்

C) விசை

D) நாள்

விடை : B) கீழ்

விளக்கம் :

மிசை என்றால் ‘மேல்’ என்பது பொருளாகும்.

‘மிசை’ என்ற சொல்லின் எதிர்ச்சொல் ‘கீழ்’ ஆகும்.

82. கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் – இத்தொடருக்குரிய சரியான எதிர்ச்சொல்லைத் தருக.

A) கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்

B) கலைச்செல்வி கட்டுரை எழுத விரும்பவில்லை

C) கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்

D) கலைச்செல்வி கட்டுரை வாசிக்கவில்லை

விடை : A) கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்

83. “கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்” எனக் கூறியவர் யார்?

A) கந்தர்வன்

B) நாஞ்சில் நாடன்

C) புதுமைப்பித்தன்

D) வண்ணதாசன்

விடை : C) புதுமைப்பித்தன்

விளக்கம் :

சிறுகதைகள் குறித்து புலமைப்பித்தனின் கூற்று : சிறுகதைப் பின்னலில் ஆரம்பம், மத்திய சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற மூன்று பகுதிகள் உண்டு. சாதாரணமான கதைகளில் இம்மூன்றும் படிப்படியாக வளர்ந்து கொண்டேபோகும். சமீபத்தில் எழுதப்பட்ட அமெரிக்கா சிறுகதைகளில் பழைய சம்பிரதாயமான ஆரம்பம், முடிவு என்ற இரு பகுதிகளும் கிடையாது. கதை திடீரென்று மத்திய சம்பவத்தின் உச்சஸ்தானத்தில் ஆரம்பித்து அதிலேயே முடிகிறது. இன்னும் வேறுவிதமான கதைகளும் உள்ளன. அவற்றில் முடிவு என்ற ஒன்று கிடையாது. அதாவது கதை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவிப்பதற்கு ஒரு தூண்டுகோல்.

84. தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்

A) மரபியல்

B) பொருளியல்

C) மெய்ப்பாட்டியல்

D) களவியல்

விடை : C) மெய்ப்பாட்டியல்

விளக்கம் :

தொல்காப்பியம் – மெய்ப்பாட்டியல்

நகையே அழுகை இளிவால் மரிட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப. – தொல்காப்பியர்

நாடகத்தில் நடிப்பவரிடத்தில் தோன்றும் மெய்ப்பாடுகள் காண்பவரிடத்திலும் உணர்வுகளைத் தோற்றுவிக்கும். இலக்கியத்தில் வரும் செய்தி கண்ணெதிரே தோன்றுமாறு காட்டப்படுவதே மெய்ப்பாடு ஆகும்.

இலக்கியங்களில் நாடகம் பற்றிய குறிப்புகள்

தொல்காப்பிய மெய்ப்பாட்டியல், நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்துள்ளது.

திருக்குறள் :

“கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று.” – திருக்குறள் 332

சிலப்பதிகாரம் : ‘நாடகமேத்தும் நாடகக் கணிகை’ என்று மாதவியைக் குறிப்பிடுகிறது.

85. பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது?

A) நாடகக்கலை

B) நாட்டியக்கலை

C) இசைக்கலை

D) ஓவியக்கலை

விடை C) இசைக்கலை

86. ‘சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு’ – என்று கூறியவர்

A) அண்ணா

B) காந்தி

C) அம்பெத்கர்

D) மு. வரதராசனார்

விடை : A) அண்ணா

87. குண்டலகேசியின் கதைத் தலைவி – குண்டலகேசி, அவளின் வேறு பெயர்

A) கைகேயி

B) பத்தரை

C) சுமத்திரை

D) மாதவி

விடை : B) பத்தரை

88. கவுந்தியடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி?

A) சமணத் துறவி

B) பௌத்தத் துறவி

C) இஸ்லாமியத் துறவி

D) சைவ துறவி

விடை : A) சமணத் துறவி

89. சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது?

A) சீவகசிந்தாமணி

B) மணிமேகலை

C) குண்டலகேசி

D) நீலகேசி

விடை : B) மணிமேகலை

விளக்கம் :

சிலப்பதிகாரத்தின் கதை மாந்தர்களான கோவலன் – மாதவி ஆகியோரின் மகளாகிய மணிமேகலையின் வரலாற்றை “மணிமேகலை” என்ற காப்பியம் கூறுகிறது. எனவே இது சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியான நூலாகக் கருதப்படுகிறது.

90. “அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்

மறவாது இது கேள் ! மன்னுபார்க் கெல்லாம்

உண்டியும், உடையும், உறையுளும்”

– இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?

A) சிலம்பு

B) கம்பராமாயணம்

C) மணிமேகலை

D) பெரிய புராணம்

விடை : C) மணிமேகலை

விளக்கம் :

மணிமேகலை 25 – ஆவது காதை (அடிகள் 228 – 331)

“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்

மறவாது இது கேள் ! மன்னுயிர்க் கெல்லாம்

உண்டியும் உடையும் உறையுளுள் அல்லது

கண்டது இல்”

பொருள் : அறம் எனப்படுவது யாதெனில், செறிந்துள்ள உயிரினங்கட்கு எல்லம் உணவும் உடையும் தங்கும் இடமும் அளிப்பதன்றி, வேறு அறமென ஆன்றோர்கள் எதனையும் கண்டதில்லை.

91. குறுந்தொகை நூலின் ‘பா’ – வகை யாது?

A) கலிப்பா

B) வஞ்சிப்பா

C) வெண்பா

D) அகவற்பா

விடை : D) அகவற்பா

விளக்கம் :

குறுந்தொகையில் உள்ள 400 பாடல்கள் அகவற்பாவில் அமைந்துள்ளன.

92. சொல்லுக்கேற்ற பொருளறிக :

A) வலிமை – திண்மை

B) நாண் – தன்னைக்குறிப்பது

C) கான் – பார்

D) துணி – துன்பம்

விடை : A) வலிமை – திண்மை

விளக்கம் :

வலிமை – திண்மை ; நாண் – வில் ; கான் – காடு ; துணி – துணிவு

93. சரியான இணையைத் தேர்ந்தெடு

மரை மறை

A) மான் – வேதம்

B) தாமரை – புலன்

C) வேதம் – இயல்பு

D) யானை – மறைத்தல்

விடை : A) மான் – வேதம்

94. ஜெராக்ஸ் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்

A) ஒளி நகல்

B) ஒலி நகல்

C) அசல் படம்

D) மறு படம்

விடை : A) ஒளி நகல்

95. “மா” ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

A) பெரிய

B) இருள்

C) வானம்

D) அழகு

விடை : (*)

விளக்கம் :

‘மா’ என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கு பல பொருள்கள் உள்ளன.

மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு.

96. பரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக் கூடியவர்

A) மறைமலையடிகள்

B) உ. வே. சாமிநாத ஐயர்

C) வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி

D) வையாபுரிப்பிள்ளை

விடை : C) வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி

விளக்கம் :

19 – ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பரிதிமாற் கலைஞர் ஆவார். ‘சூரியநாராயண சாஸ்திரி’ என்ற தனது பெயரை தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டார்.

97. “தமிழே மிகவும் பண்பட்ட மொழி” என்று பாராட்டியவர் யார்?

A) கபில்சுவலபில்

B) மாக்சு முல்லர்

C) முனைவர் எமினோ

D) வில்லியம் ஜோன்ஸ்

விடை : B) மாக்சு முல்லர்

விளக்கம் :

“தமிழே மிகவும் பண்பட்ட மொழி ; அது தனக்கேயுரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி”

– மொழியியல் அறிஞர், மாக்சு முல்லர்

98. ‘இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது’ என்றவர் யார்?

A) மாக்சு முல்லர்

B) கால்டுவெல்

C) கெல்லட்

D) எமினோ

விடை : D) எமினோ

விளக்கம் :

இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளை தொல்காப்பியம் கூறுகின்றது” – முனைவர் எமினோ

“விரியாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை”

– மொழியியல் அறிஞர் கபில்சுவலபில்

“தமிழ் இலக்கணம் படிக்கப்படிக்க விருப்பத்தை உண்டாக்குவது” – கெல்லட்

“தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்”

– கால்டுவெல்

99. விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன?

A) போட்டி

B) பொழுதுபோக்கு

C) உடற்பயிற்சி

D) உற்சாகம்

விடை : A) போட்டி

விளக்கம் :

விளையாட்டின் அடிப்படை நோக்கம் போட்டியிடுதல் ஆகும். உடலிலும் உள்ளத்திலும் உள்ள ஆற்றல்களை வெளியிடவும், எதிர்பாராத தோல்விகளை எதிர்கொள்ளவும் விளையாட்டு உதவுகிறது. விளையாட்டு வழியாகப் பட்டறிவையும் போராட்டத்திற்கு விடை காணும் திறனையும் பெறமுடிகிறது.

100. ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?

A) எட்வார்டு மை பிரிட்சு

B) வால்ட் விட்மன்

C) எடிசன்

D) கீட்ஸ்

விடை : C) எடிசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!