January 2nd Week 2021 Current Affairs Online Test Tamil
January 2nd Week 2021 Current Affairs Online Test Tamil
January 2nd Week 2021 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
January 2nd Week 2021 Current Affairs Online Test Tamil
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
Categories
- Not categorized 0%
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
1.வடகிழக்கு இந்தியாவின் முதல் கேலோ இந்தியா விளையாட்டுப்பள்ளி அமைந்துள்ள நகரம் எது?
Correct
விளக்கம்
கேலோ இந்தியா விளையாட்டுப் பள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஷில்லாங்கின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் பள்ளியை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடங்கிவைத்தார். வடகிழக்கு மாகாணங்களின் முதல் பள்ளியாக அஸ்ஸாம் ரைபிள்ஸ் பள்ளி அமைந்துள்ளது. மொத்தம் ஒன்பது விளையாட்டுப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கல்வியுடன் விளையாட்டை ஒருங்கிணைத்து, அதன் வாயிலாக நாட்டில் விளையாட்டுகளை மேம்படுத்தி வீரர்களின் ஒட்டுமொத்த திறனை வளர்ப்பதே கேலோ இந்தியா விளையாட்டுப் பள்ளிகளின் முக்கிய குறிக்கோளாகும்.
Incorrect
விளக்கம்
கேலோ இந்தியா விளையாட்டுப் பள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஷில்லாங்கின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் பள்ளியை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடங்கிவைத்தார். வடகிழக்கு மாகாணங்களின் முதல் பள்ளியாக அஸ்ஸாம் ரைபிள்ஸ் பள்ளி அமைந்துள்ளது. மொத்தம் ஒன்பது விளையாட்டுப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கல்வியுடன் விளையாட்டை ஒருங்கிணைத்து, அதன் வாயிலாக நாட்டில் விளையாட்டுகளை மேம்படுத்தி வீரர்களின் ஒட்டுமொத்த திறனை வளர்ப்பதே கேலோ இந்தியா விளையாட்டுப் பள்ளிகளின் முக்கிய குறிக்கோளாகும்.
-
Question 2 of 50
2. Question
2.தேசிய அளவியல் மாநாடு – 2021’ஐ ஏற்பாடு செய்துள்ள ஆராய்ச்சி அமைப்பு எது?
Correct
விளக்கம்
தனது 75ஆவது ஆண்டுக்குள் நுழையும், புது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மையம் – தேசிய இயற்பியல் ஆய்வகம், தேசிய அளவியல் மாநாடு 2021’ஐ ஏற்பாடு செய்தது. “நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு அளவியல்” என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். தேசிய அளவியல் மாநாட்டில், பிரதமர் மோடி காணொலிக்காட்சிமூலம் தொடக்க உரையாற்றினார்.
Incorrect
விளக்கம்
தனது 75ஆவது ஆண்டுக்குள் நுழையும், புது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மையம் – தேசிய இயற்பியல் ஆய்வகம், தேசிய அளவியல் மாநாடு 2021’ஐ ஏற்பாடு செய்தது. “நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு அளவியல்” என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். தேசிய அளவியல் மாநாட்டில், பிரதமர் மோடி காணொலிக்காட்சிமூலம் தொடக்க உரையாற்றினார்.
-
Question 3 of 50
3. Question
3. ‘தைப்பூசம்’ என்பது கீழ்க்காணும் எந்த இந்திய மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்?
Correct
‘தமிழ்க்கடவுள்’ முருக வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ‘தைப் பூசம்’ என்ற திருவிழாவை உலகம் முழுமைக்கும் பரவி வாழும் தமிழ் மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க தமிழர்கள் கோரியதை அடுத்து, அதற்கான உத்தரவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் க.பழனிசாமி வெளியிட்டார்.
இந்த விழா, கேரளாவின் சில பகுதிகளிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற பிற நாடுகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
Incorrect
‘தமிழ்க்கடவுள்’ முருக வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ‘தைப் பூசம்’ என்ற திருவிழாவை உலகம் முழுமைக்கும் பரவி வாழும் தமிழ் மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க தமிழர்கள் கோரியதை அடுத்து, அதற்கான உத்தரவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் க.பழனிசாமி வெளியிட்டார்.
இந்த விழா, கேரளாவின் சில பகுதிகளிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற பிற நாடுகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
-
Question 4 of 50
4. Question
4. அண்மையில் தொடங்கப்பட்ட, “தேசிய அணு கால அளவின்” துல்லியம் என்ன?
Correct
தேசிய அளவியல் மாநாட்டின் தொடக்க விழாவின்போது பிரதமர் மோடி, ‘தேசிய அணு கால அளவை’ நாட்டுக்கு அர்ப்பணித்தார் . இந்த நடவடிக்கையின்மூலம், இந்திய திட்ட நேரமானது பன்னாட்டு திட்ட நேரத்துடன் ஒத்தமைக்கப்படுகிறது. 2.8 நானோ நொடிகள் என்னும் துல்லியத்துடன் இந்திய நிலையான நேரத்தை தேசிய அணு கால அளவு வழங்கும். தேசிய சுற்றுச்சூழல் தரநிர்ணய ஆய்வகத்துக்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டினார்.
Incorrect
தேசிய அளவியல் மாநாட்டின் தொடக்க விழாவின்போது பிரதமர் மோடி, ‘தேசிய அணு கால அளவை’ நாட்டுக்கு அர்ப்பணித்தார் . இந்த நடவடிக்கையின்மூலம், இந்திய திட்ட நேரமானது பன்னாட்டு திட்ட நேரத்துடன் ஒத்தமைக்கப்படுகிறது. 2.8 நானோ நொடிகள் என்னும் துல்லியத்துடன் இந்திய நிலையான நேரத்தை தேசிய அணு கால அளவு வழங்கும். தேசிய சுற்றுச்சூழல் தரநிர்ணய ஆய்வகத்துக்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டினார்.
-
Question 5 of 50
5. Question
5.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, கொச்சி – மங்களூரு இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை அமைக்கின்ற பொதுத் துறை நிறுவனம் எது?
Correct
கேரளாவின் கொச்சிக்கும் கர்நாடகாவின் மங்களூருக்கும் இடையில் 450 கிமீ நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய்பாதை, GAIL (இந்தியா) நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது. `3000 கோடி மதிப்பிலான திட்டத்தை இந்திய பிரதமர் வணிக நடவடிக்கைகளுக்காக திறந்து வைத்துள்ளார். இதன்மூலம், நாள் ஒன்றுக்கு 12 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு கடந்துசெல்லும்.
Incorrect
கேரளாவின் கொச்சிக்கும் கர்நாடகாவின் மங்களூருக்கும் இடையில் 450 கிமீ நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய்பாதை, GAIL (இந்தியா) நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது. `3000 கோடி மதிப்பிலான திட்டத்தை இந்திய பிரதமர் வணிக நடவடிக்கைகளுக்காக திறந்து வைத்துள்ளார். இதன்மூலம், நாள் ஒன்றுக்கு 12 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு கடந்துசெல்லும்.
-
Question 6 of 50
6. Question
6. உலக பிரெய்லி நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
உலக பிரெய்லி நாளானது 2018 டிசம்பரில் ஐநா பொதுச் சபையால் நிறுவப்பட்ட பின்னர், ஆண்டுதோறும் ஜன.4 அன்று அனுசரிக்கப்படு -கிறது. பார்வைக்குறைபாடுள்ளவர்கள் பயன்படுத்தும் வாசிப்பு மற்றும் எழுதுதலுக்கான முறையை கண்டுபிடித்த லூயிஸ் பிரெய்லியின் பிறந்தநாளை இந்தத்தேதி குறிக்கிறது. இந்த ஆண்டு, உலகளாவிய தொடுதல்-அடிப்படையிலான தகவல் தொடர்பு அமைப்பின் முக்கியத்துவத்தை ஐ.நா சிறப்பித்துக்காட்டுகிறது.
Incorrect
உலக பிரெய்லி நாளானது 2018 டிசம்பரில் ஐநா பொதுச் சபையால் நிறுவப்பட்ட பின்னர், ஆண்டுதோறும் ஜன.4 அன்று அனுசரிக்கப்படு -கிறது. பார்வைக்குறைபாடுள்ளவர்கள் பயன்படுத்தும் வாசிப்பு மற்றும் எழுதுதலுக்கான முறையை கண்டுபிடித்த லூயிஸ் பிரெய்லியின் பிறந்தநாளை இந்தத்தேதி குறிக்கிறது. இந்த ஆண்டு, உலகளாவிய தொடுதல்-அடிப்படையிலான தகவல் தொடர்பு அமைப்பின் முக்கியத்துவத்தை ஐ.நா சிறப்பித்துக்காட்டுகிறது.
-
Question 7 of 50
7. Question
7.எக்கருவியை நிறுவுவதற்காக PM கேர்ஸ் நிதிய அறக்கட்டளை `120 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது?
Correct
விளக்கம்
பிரதமரின் அவசரகால மக்கள் உதவி மற்றும் நிவாரண (PM CARES) நிதிய அறக்கட்டளை, நாடு முழுவதுமுள்ள பொது நலவாழ்வு மையங்க -ளில் 162 பிரத்யேக அழுத்த விசை உறிஞ்சுதல் (PSA) பிராணவாயு தயாரிப்பு வசதிகளை நிறுவ `201.58 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தன்னாட்சிபெற்ற அமைப்பான மத்திய மருத்துவ விநியோக விற்பனை கூடத்தால் கொள்முதல் நடத்தப்படும். இந்த ஆலைகள் மருத்துவ தரத்திலான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும்.
Incorrect
விளக்கம்
பிரதமரின் அவசரகால மக்கள் உதவி மற்றும் நிவாரண (PM CARES) நிதிய அறக்கட்டளை, நாடு முழுவதுமுள்ள பொது நலவாழ்வு மையங்க -ளில் 162 பிரத்யேக அழுத்த விசை உறிஞ்சுதல் (PSA) பிராணவாயு தயாரிப்பு வசதிகளை நிறுவ `201.58 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தன்னாட்சிபெற்ற அமைப்பான மத்திய மருத்துவ விநியோக விற்பனை கூடத்தால் கொள்முதல் நடத்தப்படும். இந்த ஆலைகள் மருத்துவ தரத்திலான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும்.
-
Question 8 of 50
8. Question
8.பின்வரும் எவ்வமைப்பு சமீபத்தில் தனது அனைத்து பெண்கள் அணியையும் எதிர்பாரா பணிகளுக்காக அனுப்பியது?
Correct
விளக்கம்
கங்கையாற்றின் கரையிலுள்ள உத்தர பிரதேசத்தின் கர் முக்தேஷ்வர் நகரத்தில், எதிர்பாரா பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் அனைத்து பெண் குழுவும் அண்மையில் ஈடுபடுத்தப்பட்டது.
தொழிற்முறை பயிற்சிபெற்ற இந்த அனைத்து பெண்கள் குழு, மீட்புப் படகுகள் மற்றும் அது தொடர்புடைய உபகரணங்களை கையாண்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போராளிகளை தேசிய பேரிடர் மீட்புப் படை தனது அணியில் சேர்த்துள்ளது.
Incorrect
விளக்கம்
கங்கையாற்றின் கரையிலுள்ள உத்தர பிரதேசத்தின் கர் முக்தேஷ்வர் நகரத்தில், எதிர்பாரா பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் அனைத்து பெண் குழுவும் அண்மையில் ஈடுபடுத்தப்பட்டது.
தொழிற்முறை பயிற்சிபெற்ற இந்த அனைத்து பெண்கள் குழு, மீட்புப் படகுகள் மற்றும் அது தொடர்புடைய உபகரணங்களை கையாண்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போராளிகளை தேசிய பேரிடர் மீட்புப் படை தனது அணியில் சேர்த்துள்ளது.
-
Question 9 of 50
9. Question
9.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஸ்வஸ்த்வாயு’ என்ற உடலில் செலுத்த தேவையில்லாத செயற்கை சுவாச வழங்கியை உருவாக்கியுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு – தேசிய வானூர்தி ஆய்வகத்தை (CSIR-NIL) சேர்ந்த விஞ்ஞானிகள், CSIR-IGIB மருத்துவப் பணியாளர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ள ‘சுவஸ்த் வாயு’ என்னும் உடலில் செலுத்த வேண்டிய தேவையில்லாத சுவாசக் கருவிக்கு அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
மத்திய சுகாதார & குடும்பநல அமைச்சின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநர் அமைத்த நிபுணர் குழு இந்தச் சுவாசக் கருவியை பரிசோதித்து, இதை 35% வரை பிராணவாயு உதவி தேவைப்படும் COVID நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம் என்று சான்றளித்தது.
Incorrect
விளக்கம்
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு – தேசிய வானூர்தி ஆய்வகத்தை (CSIR-NIL) சேர்ந்த விஞ்ஞானிகள், CSIR-IGIB மருத்துவப் பணியாளர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ள ‘சுவஸ்த் வாயு’ என்னும் உடலில் செலுத்த வேண்டிய தேவையில்லாத சுவாசக் கருவிக்கு அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
மத்திய சுகாதார & குடும்பநல அமைச்சின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநர் அமைத்த நிபுணர் குழு இந்தச் சுவாசக் கருவியை பரிசோதித்து, இதை 35% வரை பிராணவாயு உதவி தேவைப்படும் COVID நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம் என்று சான்றளித்தது.
-
Question 10 of 50
10. Question
10.அண்மையில் தொடங்கப்பட்ட ‘டாய்கத்தான்’ முன்னெடுப்புக்கு எத்தனை அமைச்சகங்கள் கூட்டு சேர்ந்துள்ளன?
Correct
விளக்கம்
உள்நாட்டு விளையாட்டுப் பொருட்கள் தொழிற்துறையை மேம்படுத் -துவதற்கும் இறக்குமதியைக் குறைப்பதற்குமாக இந்திய அரசு, “டாய் கத்தான்” என்ற புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழிற்துறை, MSME, I&B உள்ளிட்ட ஆறு அமைச்சகங்கள் மற்றும் AICTE ஆகியவை இம்முன்னெடுப்புக்கு ஒத்துழைக்கின்றன. உள்நாட்டு விளையாட்டுப் பொருட்களை உருவாக்க மாணவர்கள், ஆசிரியர்கள், வடிவமைப்பு வல்லுநர்கள் மற்றும் துளிர்நிறுவனங்கள் இணைந்து செயல்படுவார்கள்.
Incorrect
விளக்கம்
உள்நாட்டு விளையாட்டுப் பொருட்கள் தொழிற்துறையை மேம்படுத் -துவதற்கும் இறக்குமதியைக் குறைப்பதற்குமாக இந்திய அரசு, “டாய் கத்தான்” என்ற புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழிற்துறை, MSME, I&B உள்ளிட்ட ஆறு அமைச்சகங்கள் மற்றும் AICTE ஆகியவை இம்முன்னெடுப்புக்கு ஒத்துழைக்கின்றன. உள்நாட்டு விளையாட்டுப் பொருட்களை உருவாக்க மாணவர்கள், ஆசிரியர்கள், வடிவமைப்பு வல்லுநர்கள் மற்றும் துளிர்நிறுவனங்கள் இணைந்து செயல்படுவார்கள்.
-
Question 11 of 50
11. Question
11. ‘இந்தியாவில் நீண்ட முதுமை குறித்த ஆய்வறிக்கை’யை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
இந்தியாவில் நீண்ட முதுமை பற்றிய ஆய்வறிக்கை (LASI), அலை-1’ஐ மத்திய சுகாதாரம் & குடும்பநல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார். மக்கள் முதுமையடைவதால் நாட்டில் ஏற்படும் சுகாதார, பொருளாதார, சமூக மாற்றங்கள், விளைவுகள் குறித்த முழு அளவிலான, அறிவியல் பூர்வமான தேசிய ஆய்வே LASI ஆகும். முதியோர்களுக்கான தேசிய மற்றும் மாநில அளவிலான கொள்கைகளை வகுக்க இவ்வறிக்கை உதவும்.
Incorrect
விளக்கம்
இந்தியாவில் நீண்ட முதுமை பற்றிய ஆய்வறிக்கை (LASI), அலை-1’ஐ மத்திய சுகாதாரம் & குடும்பநல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார். மக்கள் முதுமையடைவதால் நாட்டில் ஏற்படும் சுகாதார, பொருளாதார, சமூக மாற்றங்கள், விளைவுகள் குறித்த முழு அளவிலான, அறிவியல் பூர்வமான தேசிய ஆய்வே LASI ஆகும். முதியோர்களுக்கான தேசிய மற்றும் மாநில அளவிலான கொள்கைகளை வகுக்க இவ்வறிக்கை உதவும்.
-
Question 12 of 50
12. Question
12.இந்தியாவில் மிகவும் அருகிவரும் உயிரினங்களுக்கான மீட்பு திட்டத்தின்கீழ், எத்தனை வனவுயிரினங்கள் உள்ளன?
Correct
தேசிய வனவுயிரி வாரியத்தின் நிலைக்குழுவானது அண்மையில் நாட்டில் மனித-வனவுயிரி மோதலை நிர்வகிப்பதற்கான ஆலோசனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தின் சில பகுதிகளில் காணப்படும், ‘கராகல்’ என்ற காட்டுப்பூனையை மிகவும் அருகிவரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கவும் அக்குழு ஒப்புதல் அளித்தது.
தற்போது, மிகவும் அருகிவரும் உயிரினங்களுக்கான மீட்பு திட்டத்தின்கீழ் 22 வனவுயிரினங்கள் உள்ளன.
Incorrect
தேசிய வனவுயிரி வாரியத்தின் நிலைக்குழுவானது அண்மையில் நாட்டில் மனித-வனவுயிரி மோதலை நிர்வகிப்பதற்கான ஆலோசனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தின் சில பகுதிகளில் காணப்படும், ‘கராகல்’ என்ற காட்டுப்பூனையை மிகவும் அருகிவரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கவும் அக்குழு ஒப்புதல் அளித்தது.
தற்போது, மிகவும் அருகிவரும் உயிரினங்களுக்கான மீட்பு திட்டத்தின்கீழ் 22 வனவுயிரினங்கள் உள்ளன.
-
Question 13 of 50
13. Question
13. அண்மைச் செய்திகளின் இடம்பெற்ற, அங்கமாலி-அழுதா சபரி இரயில் திட்டமானது எந்த மாநிலத்தில் அமையவுள்ளது?
Correct
விளக்கம்
அங்கமாலி-அழுதா சபரி இரயில் திட்டத்திற்கு கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் நிதியைப் பயன்படுத்த நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பை இரயில்வே மேற்கொள்ளும்; அதே வேளையில், நிலையத்தின் வளர்ச்சி, பொதுத்துறை-தனியார் கூட்டாண்மையின் கீழ் இருக்கும். செலவினங்களைக்கழித்தபின்னர், வருமானம், கேரள மாநில அரசுக்கும் இரயில்வே துறைக்கும் இடையில் பகிரப்படும்.
Incorrect
விளக்கம்
அங்கமாலி-அழுதா சபரி இரயில் திட்டத்திற்கு கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் நிதியைப் பயன்படுத்த நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பை இரயில்வே மேற்கொள்ளும்; அதே வேளையில், நிலையத்தின் வளர்ச்சி, பொதுத்துறை-தனியார் கூட்டாண்மையின் கீழ் இருக்கும். செலவினங்களைக்கழித்தபின்னர், வருமானம், கேரள மாநில அரசுக்கும் இரயில்வே துறைக்கும் இடையில் பகிரப்படும்.
-
Question 14 of 50
14. Question
14. எந்தவொரு கடவுளரின் பெயரையும் பயன்படுத்தி மேற்கொள் -ளப்படும் எந்தவொரு விளம்பரமும் சட்டத்துக்குப்புறம்பானது என அண்மையில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் எது?
Correct
விளக்கம்
பம்பாய் உயர்நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் அமர்வு, எந்தவொரு கடவுளரின் பெயரையும் பயன்படுத்தி எந்தவொரு பொருளையும் விளம்பரம் செய்வது மற்றும் அப்பொருளில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இருப்பதாகக் கூறுவது சட்டத்துக்குப் புறம்பானது என்று அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை, மகாராஷ்டிரா நரபலி தடுப்பு மற்றும் ஒழிப்பு மற்றும் பிற மனிதாபிமானமற்ற, தீய மற்றும் அகோரி நடைமுறைகள் மற்றும் பில்லி, சூனியம், ஏவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வருகிறது. அனுமன் சாலிசா யந்திரம், இலக்ஷ்மி யந்திரம், மேரு மோதிரம் போன்ற பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விளம்பரங்களைத் தடுப்பதற்காக அம்மனு தாக்கல் செய்யப்பட்டது.Incorrect
விளக்கம்
பம்பாய் உயர்நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் அமர்வு, எந்தவொரு கடவுளரின் பெயரையும் பயன்படுத்தி எந்தவொரு பொருளையும் விளம்பரம் செய்வது மற்றும் அப்பொருளில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இருப்பதாகக் கூறுவது சட்டத்துக்குப் புறம்பானது என்று அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை, மகாராஷ்டிரா நரபலி தடுப்பு மற்றும் ஒழிப்பு மற்றும் பிற மனிதாபிமானமற்ற, தீய மற்றும் அகோரி நடைமுறைகள் மற்றும் பில்லி, சூனியம், ஏவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வருகிறது. அனுமன் சாலிசா யந்திரம், இலக்ஷ்மி யந்திரம், மேரு மோதிரம் போன்ற பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விளம்பரங்களைத் தடுப்பதற்காக அம்மனு தாக்கல் செய்யப்பட்டது. -
Question 15 of 50
15. Question
15.தேசிய பசு அறிவியல் தேர்வை நடத்தும் நிறுவனம் எது?
Correct
நாட்டுப்பசுக்கள்குறித்து இளம் மாணாக்கர்களிடையேயும், மக்களிடையேயும் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், பசு அறிவியல் குறித்த நூல்களை அனைவருக்கும் கிடைக்க செய்யவும், “காமதேனு கெள-விஞ்ஞான் பிரச்சார்-பிரசார் தேர்வு” என்னும் தேர்வை நடத்தவும் தேசிய காமதேனு ஆயோக் முன்வந்துள்ளது.
இத்தேர்வு, ஆண்டுதோறும் நாடு முழுவதும் நடைபெறுகிறது. தேசிய காமதேனு ஆயோக் என்பது மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின்கீழ் பசுக்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட ஓர் அரசு அமைப்பாகும்.
Incorrect
நாட்டுப்பசுக்கள்குறித்து இளம் மாணாக்கர்களிடையேயும், மக்களிடையேயும் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், பசு அறிவியல் குறித்த நூல்களை அனைவருக்கும் கிடைக்க செய்யவும், “காமதேனு கெள-விஞ்ஞான் பிரச்சார்-பிரசார் தேர்வு” என்னும் தேர்வை நடத்தவும் தேசிய காமதேனு ஆயோக் முன்வந்துள்ளது.
இத்தேர்வு, ஆண்டுதோறும் நாடு முழுவதும் நடைபெறுகிறது. தேசிய காமதேனு ஆயோக் என்பது மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின்கீழ் பசுக்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட ஓர் அரசு அமைப்பாகும்.
-
Question 16 of 50
16. Question
16. DRDO ஆனது பயோடைஜெஸ்டர் MK-II தொழில்நுட்பத்தை பின்வரும் எந்த மாநிலத்தின் மெட்ரோ இரயில் நெட்வொர்க்கில் நிறுவவுள்ளது?
Correct
இந்திய அரசின் முன்னணி ஆராய்ச்சி முகமையான பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமும் (DRDO), இந்திய, மகாராஷ்டிர அரசுகளின் கூட்டு நிறுவனமான மகாராஷ்டிரா மெட்ரோ இரயில் நிறுவனமும் (மகா-மெட்ரோ) தண்ணீர் சேமிப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் இணைந்து பணிபுரிந்து வருகின்றன.
மெட்ரோ இரயில் மையங்களில் மனிதக்கழிவுகளை கையாள்வதற்காக மேம்படுத்தப்பட்ட பயோ டைஜெஸ்டர் (MK-II) தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆதரவை DRDO வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், மகாராஷ்டிரா மெட்ரோ இரயில் நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே கையெழுத்தானது.
Incorrect
இந்திய அரசின் முன்னணி ஆராய்ச்சி முகமையான பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமும் (DRDO), இந்திய, மகாராஷ்டிர அரசுகளின் கூட்டு நிறுவனமான மகாராஷ்டிரா மெட்ரோ இரயில் நிறுவனமும் (மகா-மெட்ரோ) தண்ணீர் சேமிப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் இணைந்து பணிபுரிந்து வருகின்றன.
மெட்ரோ இரயில் மையங்களில் மனிதக்கழிவுகளை கையாள்வதற்காக மேம்படுத்தப்பட்ட பயோ டைஜெஸ்டர் (MK-II) தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆதரவை DRDO வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், மகாராஷ்டிரா மெட்ரோ இரயில் நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே கையெழுத்தானது.
-
Question 17 of 50
17. Question
17.ஆறு ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள உஜாலா மற்றும் SLNP திட்டங்கள், எந்த அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகின்றன?
Correct
விளக்கம்
அனைவருக்கும் LED விளக்குகள் வழங்கும் திட்டம் (UJALA), தேசிய தெருவிளக்கு திட்டம் (SLNP) ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015 ஜன.5 அன்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்கள் 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. இந்த இரண்டு திட்டங்களையும், எரிசக்தி அமைச்சகத்தின் கீழுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சியில், எரிசக்தி திறன் சேவைகள் நிறுவனம் (EESL) அமல்படுத்தியது.
உஜாலா திட்டத்தின்கீழ், நாடு முழுவதம் 36.69 கோடி LED பல்புகளை EESL நிறுவனம் வழங்கியது. தேசிய தெருவிளக்கு திட்டம்மூலம் நாடு முழுவதும், 1.14 கோடி LED தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன.
Incorrect
விளக்கம்
அனைவருக்கும் LED விளக்குகள் வழங்கும் திட்டம் (UJALA), தேசிய தெருவிளக்கு திட்டம் (SLNP) ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015 ஜன.5 அன்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்கள் 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. இந்த இரண்டு திட்டங்களையும், எரிசக்தி அமைச்சகத்தின் கீழுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சியில், எரிசக்தி திறன் சேவைகள் நிறுவனம் (EESL) அமல்படுத்தியது.
உஜாலா திட்டத்தின்கீழ், நாடு முழுவதம் 36.69 கோடி LED பல்புகளை EESL நிறுவனம் வழங்கியது. தேசிய தெருவிளக்கு திட்டம்மூலம் நாடு முழுவதும், 1.14 கோடி LED தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன.
-
Question 18 of 50
18. Question
18.சிறு நிதி வங்கியாக மாற்றப்பட்ட இந்தியாவின் முதல் நகர்ப்புற கூட்டுறவு வங்கி எது?
Correct
விளக்கம்
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சிவாலிக் வணிகர்கள் கூட்டுறவு வங்கி இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து ஒரு சிறு நிதி வங்கியாக உரிமம் பெற்றுள்ளது. இதன்மூலம், தானாக முன்வந்து மாறும் திட்டத்தின்கீழ், ஒரு சிறு நிதி வங்கியாக மாறிய நாட்டின் முதல் நகர கூட்டுறவு வங்கி ஆனது சிவாலிக் கூட்டுறவு வங்கி. இவ்வங்கி, 2021 ஏப்ரல் வாக்கில் தனது வணிகத்தைத் தொடங்கவுள்ளது.
Incorrect
விளக்கம்
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சிவாலிக் வணிகர்கள் கூட்டுறவு வங்கி இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து ஒரு சிறு நிதி வங்கியாக உரிமம் பெற்றுள்ளது. இதன்மூலம், தானாக முன்வந்து மாறும் திட்டத்தின்கீழ், ஒரு சிறு நிதி வங்கியாக மாறிய நாட்டின் முதல் நகர கூட்டுறவு வங்கி ஆனது சிவாலிக் கூட்டுறவு வங்கி. இவ்வங்கி, 2021 ஏப்ரல் வாக்கில் தனது வணிகத்தைத் தொடங்கவுள்ளது.
-
Question 19 of 50
19. Question
19.நிதியமைச்சகம் இயக்கிய 4 மக்கள் மைய சீர்திருத்தங்களில் மூன்றனை முதலில் முடித்த இரண்டு மாநிலங்கள் எவை?
Correct
விளக்கம்
மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை நிர்ணயித்த நான்கு சீர்திருத்தங்களில், ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை, தொழில் செய்வதை எளிதாக்குதல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு ஆகிய 3 மக்கள் மைய சீர்திருத்தங்களை ம.பியும், ஆந்திர பிரதேசமும் நிறைவேற்றியுள்ளன.
இதற்காக இந்த இரு மாநிலங்களுக்கும், புதிதாக தொடங்கப்பட்ட “மாநிலங்களின் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவி” திட்டத்தின் கீழ் `1004 கோடி நிதி வழங்க நிதியமைச்சகத்தின் செலவினத்துறை முடிவு செய்துள்ளது.
Incorrect
விளக்கம்
மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை நிர்ணயித்த நான்கு சீர்திருத்தங்களில், ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை, தொழில் செய்வதை எளிதாக்குதல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு ஆகிய 3 மக்கள் மைய சீர்திருத்தங்களை ம.பியும், ஆந்திர பிரதேசமும் நிறைவேற்றியுள்ளன.
இதற்காக இந்த இரு மாநிலங்களுக்கும், புதிதாக தொடங்கப்பட்ட “மாநிலங்களின் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவி” திட்டத்தின் கீழ் `1004 கோடி நிதி வழங்க நிதியமைச்சகத்தின் செலவினத்துறை முடிவு செய்துள்ளது.
-
Question 20 of 50
20. Question
20.உழவர்களின் வருவாயை அதிகரிப்பதற்காக, ‘கிசான் கல்யாண் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
உழவர்களின் வருவாயை அதிகரிப்பதற்காக உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கிசான் கல்யாண் திட்டத்தை தொடங்கினார். இந்தத் திட்டம், வரும் 2022’க்குள் உத்தர பிரதேச மாநில உழவர்களின் வருவாயை இரட்டிப்பாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் 825 வட்டங்களில் உழவர்களு -க்கான மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கப்படும் என்பதையும் அம்மாநில முதல்வர் உறுதிபட தெரிவித்தார்.
Incorrect
விளக்கம்
உழவர்களின் வருவாயை அதிகரிப்பதற்காக உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கிசான் கல்யாண் திட்டத்தை தொடங்கினார். இந்தத் திட்டம், வரும் 2022’க்குள் உத்தர பிரதேச மாநில உழவர்களின் வருவாயை இரட்டிப்பாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் 825 வட்டங்களில் உழவர்களு -க்கான மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கப்படும் என்பதையும் அம்மாநில முதல்வர் உறுதிபட தெரிவித்தார்.
-
Question 21 of 50
21. Question
21.பின்வரும் எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில், பறவைக் காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்திய அரசு ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது?
Correct
விளக்கம்
நாட்டின் சில மாநிலங்களில் காகங்கள் & வெளிநாட்டுப்பறவைகளிடம், பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், இவற்றை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை அமல்படுத்தவும், மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படவும் தில்லியில் கட்டுப்பாட்டு உதவி மையத்தை மத்திய கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கட்டுப்பாட்டு அறை, நிலைமையை கண்காணிப்பதும், மாநில அதிகாரிகள் மேற்கொண்ட தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தினசரி அடிப்படையில் பதிவு செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
நாட்டின் சில மாநிலங்களில் காகங்கள் & வெளிநாட்டுப்பறவைகளிடம், பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், இவற்றை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை அமல்படுத்தவும், மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படவும் தில்லியில் கட்டுப்பாட்டு உதவி மையத்தை மத்திய கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கட்டுப்பாட்டு அறை, நிலைமையை கண்காணிப்பதும், மாநில அதிகாரிகள் மேற்கொண்ட தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தினசரி அடிப்படையில் பதிவு செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 22 of 50
22. Question
22.சமீபத்தில் ‘திறன்மிகு தொழிலாளர்’ குறித்த எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது?
Correct
“குறிப்பிட்ட திறன்மிகு தொழிலாளர்” தொடர்பான அமைப்பு முறையை உருவாக்குவதற்கான அடிப்படை கட்டமைப்பிற்கான இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
செவிலியர் பணி, கட்டிட தூய்மைப் பணி, சரக்கு கையாளும் தொழில், உள்ளிட்ட பதினான்கு தொழில் துறைகளில், தகுதியுள்ள, திறன்மிகு இந்திய தொழிலாளர்கள், ஜப்பான் நாட்டில் பணிபுரிவதற்கு இந்த உடன்படிக்கை வழிவகுக்கும். ஜப்பானில் பணிபுரியப்போகும் இந்திய தொழிலாளர்களுக்கு, “குறிப்பிட்ட திறன்மிகு பணியாளர்” என்ற உறைவிட அந்தஸ்தை ஜப்பான் அரசு வழங்கவுள்ளது.
Incorrect
“குறிப்பிட்ட திறன்மிகு தொழிலாளர்” தொடர்பான அமைப்பு முறையை உருவாக்குவதற்கான அடிப்படை கட்டமைப்பிற்கான இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
செவிலியர் பணி, கட்டிட தூய்மைப் பணி, சரக்கு கையாளும் தொழில், உள்ளிட்ட பதினான்கு தொழில் துறைகளில், தகுதியுள்ள, திறன்மிகு இந்திய தொழிலாளர்கள், ஜப்பான் நாட்டில் பணிபுரிவதற்கு இந்த உடன்படிக்கை வழிவகுக்கும். ஜப்பானில் பணிபுரியப்போகும் இந்திய தொழிலாளர்களுக்கு, “குறிப்பிட்ட திறன்மிகு பணியாளர்” என்ற உறைவிட அந்தஸ்தை ஜப்பான் அரசு வழங்கவுள்ளது.
-
Question 23 of 50
23. Question
23. NSO’இன் முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, 2020-21 நிதியாண்டில், இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி / சுருக்கம் என்னவாக இருக்கும்?
Correct
விளக்கம்
மத்திய புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம், 2020-2021 நிதியாண்டிற்கான ஆண்டு வருமானத்தின் முன்கூட்டிய உத்தேச மதிப்பீடுகளை வெளியிட்டது. 2020-2021ஆம் ஆண்டில் GDP வளர்ச்சி -7.7 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-2020ஆம் ஆண்டில் இது 4.2 சதவீதமாக இருந்தது.
நடப்பு நிதியாண்டில் வேளாண்மையைத்தவிர அனைத்து துறைகளிலும் சுருக்கம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் துறையில் சுருக்கம் 9.4% ஆக இருக்கக்கூடும். வேளாண் துறை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 3.4% வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.Incorrect
விளக்கம்
மத்திய புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம், 2020-2021 நிதியாண்டிற்கான ஆண்டு வருமானத்தின் முன்கூட்டிய உத்தேச மதிப்பீடுகளை வெளியிட்டது. 2020-2021ஆம் ஆண்டில் GDP வளர்ச்சி -7.7 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-2020ஆம் ஆண்டில் இது 4.2 சதவீதமாக இருந்தது.
நடப்பு நிதியாண்டில் வேளாண்மையைத்தவிர அனைத்து துறைகளிலும் சுருக்கம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் துறையில் சுருக்கம் 9.4% ஆக இருக்கக்கூடும். வேளாண் துறை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 3.4% வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. -
Question 24 of 50
24. Question
24. NFHS-5’இன் பாதகங்களை கண்டு ஆராய்வதற்காக சுகாதார அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
Correct
விளக்கம்
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5’இன் பாதகங்களை கண்டறிவது குறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்ப நிபுணர் குழுவை சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் அமைத்துள்ளது. இணைச் செயலாளர் பிரீத்தி பந்த் தலைமையிலான இந்தக் குழு, ஊட்டச்சத்து குறைபாடு, குன்றல் நோய், குருதிச்சோகை மற்றும் C பிரிவு ஆகியவற்றுடன் தொடர்புடைய காரணிகளை மேம்படுத்த கொள்கை தலையீடுகளையும் பரிந்துரைக்கும்.
இந்தக் குழுவில் மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மாநில திட்ட அதிகாரிகள் உள்ளனர்.
Incorrect
விளக்கம்
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5’இன் பாதகங்களை கண்டறிவது குறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்ப நிபுணர் குழுவை சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் அமைத்துள்ளது. இணைச் செயலாளர் பிரீத்தி பந்த் தலைமையிலான இந்தக் குழு, ஊட்டச்சத்து குறைபாடு, குன்றல் நோய், குருதிச்சோகை மற்றும் C பிரிவு ஆகியவற்றுடன் தொடர்புடைய காரணிகளை மேம்படுத்த கொள்கை தலையீடுகளையும் பரிந்துரைக்கும்.
இந்தக் குழுவில் மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மாநில திட்ட அதிகாரிகள் உள்ளனர்.
-
Question 25 of 50
25. Question
25.இந்திய-அமெரிக்க மருத்துவர் இராஜ், பின்வரும் எந்த நாட்டின் இராணுவத்தின் முதல் தலைமைத் தகவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்?
Correct
விளக்கம்
அமெரிக்க இராணுவத்தின் முதல் தலைமைத் தகவல் அதிகாரியாக இந்திய-அமெரிக்கர் Dr இராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2020 ஜூலையில் உருவாக்கப்பட்ட இப்பதவி 3 நட்சத்திர ஜெனரலுக்கு சமமானதாகும். அமெரிக்க இராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப நடவடிக்கைகளுக்காக, 16 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தை அவர் மேற்பார்வையிடுவார்.
அமெரிக்க இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான கொள்கை மற்றும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் அவர் வழிநடத்துவார். அவர் இராணுவ செயலாளரின் முதன்மை ஆலோசகராக பணியாற்றுகிறார்.
Incorrect
விளக்கம்
அமெரிக்க இராணுவத்தின் முதல் தலைமைத் தகவல் அதிகாரியாக இந்திய-அமெரிக்கர் Dr இராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2020 ஜூலையில் உருவாக்கப்பட்ட இப்பதவி 3 நட்சத்திர ஜெனரலுக்கு சமமானதாகும். அமெரிக்க இராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப நடவடிக்கைகளுக்காக, 16 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தை அவர் மேற்பார்வையிடுவார்.
அமெரிக்க இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான கொள்கை மற்றும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் அவர் வழிநடத்துவார். அவர் இராணுவ செயலாளரின் முதன்மை ஆலோசகராக பணியாற்றுகிறார்.
-
Question 26 of 50
26. Question
26.வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட, ‘Fatah-1’ என்பது பின்வரும் எந்நாட்டின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையாகும்?
Correct
விளக்கம்
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வழிசெலுத்தப்பட்ட பல்-ஏவு ஏவுகணை முறைமையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்துள்ளது. ‘பத்தா-1’ என்று பெயரிடப்பட்ட இந்த அமைப்பு, 140 கி.மீ தூர வரம்பில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது.
வழிசெலுத்தப்பட்ட இப்பல்-ஏவு ஏவுகணை முறைமை, வழக்கமான ஏவுகணைகளைவிட மிகத்துல்லியமாக தாக்கும்.
Incorrect
விளக்கம்
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வழிசெலுத்தப்பட்ட பல்-ஏவு ஏவுகணை முறைமையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்துள்ளது. ‘பத்தா-1’ என்று பெயரிடப்பட்ட இந்த அமைப்பு, 140 கி.மீ தூர வரம்பில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது.
வழிசெலுத்தப்பட்ட இப்பல்-ஏவு ஏவுகணை முறைமை, வழக்கமான ஏவுகணைகளைவிட மிகத்துல்லியமாக தாக்கும்.
-
Question 27 of 50
27. Question
27.லடாக்கின் நிலத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவர் யார்?
Correct
லடாக்கின் மொழி, கலாச்சாரம் மற்றும் நிலத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு குழுவை அமைக்க இந்திய அரசு முடிவுசெய்துள்ளது. இக்குழுவுக்கு உள்துறை இணையமைச்சர் G கிஷன் ரெட்டி தலைமைதாங்குவார். இதில் லடாக், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில், மத்திய அரசு மற்றும் லடாக் நிர்வாகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அடங்குவர்.
Incorrect
லடாக்கின் மொழி, கலாச்சாரம் மற்றும் நிலத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு குழுவை அமைக்க இந்திய அரசு முடிவுசெய்துள்ளது. இக்குழுவுக்கு உள்துறை இணையமைச்சர் G கிஷன் ரெட்டி தலைமைதாங்குவார். இதில் லடாக், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில், மத்திய அரசு மற்றும் லடாக் நிர்வாகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அடங்குவர்.
-
Question 28 of 50
28. Question
28.உலக உணவுவிலைக்குறியீட்டை வெளியிடுகின்ற அமைப்பு எது?
Correct
விளக்கம்
ஐநா உணவு நிறுவனமான உணவு மற்றும் உழவு அமைப்பு, உலக உணவுவிலைக்குறியீட்டை வெளியிடுகிறது. அண்மைய பதிப்பின்படி, கடந்த நவம்பர் மாதத்தில் 105.2 ஆக இருந்த உலக உணவு விலைகள் தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக தற்போது டிசம்பர் மாதத்தில் 107.5 புள்ளிகளாக உயர்ந்துள்ளன. சர்க்கரையைத் தவிர்த்து உணவுக் குறியீட்டின் அனைத்து முக்கிய வகைகளும் உயர்ந்துள்ளன.
Incorrect
விளக்கம்
ஐநா உணவு நிறுவனமான உணவு மற்றும் உழவு அமைப்பு, உலக உணவுவிலைக்குறியீட்டை வெளியிடுகிறது. அண்மைய பதிப்பின்படி, கடந்த நவம்பர் மாதத்தில் 105.2 ஆக இருந்த உலக உணவு விலைகள் தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக தற்போது டிசம்பர் மாதத்தில் 107.5 புள்ளிகளாக உயர்ந்துள்ளன. சர்க்கரையைத் தவிர்த்து உணவுக் குறியீட்டின் அனைத்து முக்கிய வகைகளும் உயர்ந்துள்ளன.
-
Question 29 of 50
29. Question
29.உலகின் முதல் இரட்டையடுக்கு மிகநீண்ட பெட்டக இரயிலை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
சமீபத்தில் இந்தியா உலகின் முதல் இரட்டையடுக்கு மிகநீண்ட தூர பெட்டக இரயிலை அறிமுகப்படுத்தியது. மேற்கு பிரத்யேக சரக்குப் பாதையின் 306 கி.மீ தூர ரெவாரி மதார் பிரிவையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இப்பிரிவு தொடங்கப்படுவதன்மூலம், மேற்கு மற்றும் கிழக்கு சரக்குப் பாதைகள் இடையே தடையற்ற இணைப்பு ஏற்படும்.
Incorrect
விளக்கம்
சமீபத்தில் இந்தியா உலகின் முதல் இரட்டையடுக்கு மிகநீண்ட தூர பெட்டக இரயிலை அறிமுகப்படுத்தியது. மேற்கு பிரத்யேக சரக்குப் பாதையின் 306 கி.மீ தூர ரெவாரி மதார் பிரிவையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இப்பிரிவு தொடங்கப்படுவதன்மூலம், மேற்கு மற்றும் கிழக்கு சரக்குப் பாதைகள் இடையே தடையற்ற இணைப்பு ஏற்படும்.
-
Question 30 of 50
30. Question
30.சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) அமைக்கப்பட்ட கல்வி ஆலோசனைக்குழுவின் தலைவர் யார்?
Correct
விளக்கம்
ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையாளர்கள் கல்லூரியின் முழுநேர இயக்குநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு கல்வி ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவின் தலைவராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் N S விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை அதன் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை ஊழியர்களிடையே மேற்பார்வையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையாளர்கள் கல்லூரியின் முழுநேர இயக்குநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு கல்வி ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவின் தலைவராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் N S விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை அதன் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை ஊழியர்களிடையே மேற்பார்வையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 31 of 50
31. Question
31.பிரபல இராசாங்க அமைச்சரும் – துறவியுமான ‘பசவேஸ்வரா’ சார்ந்த மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்
12ஆம் நூற்றாண்டைய கல்யாணி சாளுக்கிய வம்சத்தின் ஆட்சிக் காலத்தில், அமைச்சரும் லிங்காயத் துறவியுமாக இருந்தவர் ‘பசவேஸ்வரர்’ என்னும் ‘பசவண்ணா’. அவர் கர்நாடகாவில் உள்ள லிங்காயத் சமூகத்தின் பிரபல ஆளுமையாக கருதப்படுகிறார். சமீபத்தில், கர்நாடக முதல்வர் B S எடியுரப்பா, பசவகல்யாணில் `500 கோடி மதிப்பீட்டில், ‘புதிய அனுபவ மண்டபம்’ நிறுவுவதற்காக அடிக்கல் நாட்டினார். இது அவரின் வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்
12ஆம் நூற்றாண்டைய கல்யாணி சாளுக்கிய வம்சத்தின் ஆட்சிக் காலத்தில், அமைச்சரும் லிங்காயத் துறவியுமாக இருந்தவர் ‘பசவேஸ்வரர்’ என்னும் ‘பசவண்ணா’. அவர் கர்நாடகாவில் உள்ள லிங்காயத் சமூகத்தின் பிரபல ஆளுமையாக கருதப்படுகிறார். சமீபத்தில், கர்நாடக முதல்வர் B S எடியுரப்பா, பசவகல்யாணில் `500 கோடி மதிப்பீட்டில், ‘புதிய அனுபவ மண்டபம்’ நிறுவுவதற்காக அடிக்கல் நாட்டினார். இது அவரின் வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது.
-
Question 32 of 50
32. Question
32.புதிய ‘பள்ளிப்பை கொள்கை’யை அறிமுகப்படுத்திய மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்
தேசிய கல்விக்கொள்கைக்கு இணங்க, மாணவர்களின் பள்ளிப்பைகளின் எடையை குறைக்க தில்லி அரசு ஒரு புதிய “பள்ளிப்பை கொள்கையை” அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கொள்கையை விரைவில் செயல்படுத்துமாறு தேசிய தலைநகர பிராந்தியத்தில் உள்ள பள்ளிகளுக்கு தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. இக்கொள்கையின்படி, 1-10 வகுப்புகளுக்கு இடையில் உள்ள மாணவர்களுக்கான பள்ளிப் பைகளின் எடை அவர்களின் உடல் எடையில் 10 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
Incorrect
விளக்கம்
தேசிய கல்விக்கொள்கைக்கு இணங்க, மாணவர்களின் பள்ளிப்பைகளின் எடையை குறைக்க தில்லி அரசு ஒரு புதிய “பள்ளிப்பை கொள்கையை” அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கொள்கையை விரைவில் செயல்படுத்துமாறு தேசிய தலைநகர பிராந்தியத்தில் உள்ள பள்ளிகளுக்கு தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. இக்கொள்கையின்படி, 1-10 வகுப்புகளுக்கு இடையில் உள்ள மாணவர்களுக்கான பள்ளிப் பைகளின் எடை அவர்களின் உடல் எடையில் 10 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
-
Question 33 of 50
33. Question
33.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘மெலிபோனிகல்ச்சர்’ என்றால் என்ன?
Correct
விளக்கம்
காசர்கோடை தலைமையிடமாகக்கொண்ட உழவர்கள் பல்கலைக் கழகமான கர்ஷகா வித்யாபீடம், சம்பேரியில் ஒரு ‘மெலிபோனி கல்ச்சர்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மெலிபோனிகல்ச்சர் குறித்த 4 மாத பயிற்சி வகுப்பு (அதாவது கொடுக்கற்ற தேனீ வளர்ப்பு) தொடங்கப்பட்டது. அடுத்தகட்ட உதவியுடன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மன்றத்தால் வடிவமைக்கப்பட்ட, ‘சுதேச தேன்கூடுகளும்; இந்தப் பயிற்சியின் வழங்கப்படும்.
Incorrect
விளக்கம்
காசர்கோடை தலைமையிடமாகக்கொண்ட உழவர்கள் பல்கலைக் கழகமான கர்ஷகா வித்யாபீடம், சம்பேரியில் ஒரு ‘மெலிபோனி கல்ச்சர்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மெலிபோனிகல்ச்சர் குறித்த 4 மாத பயிற்சி வகுப்பு (அதாவது கொடுக்கற்ற தேனீ வளர்ப்பு) தொடங்கப்பட்டது. அடுத்தகட்ட உதவியுடன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மன்றத்தால் வடிவமைக்கப்பட்ட, ‘சுதேச தேன்கூடுகளும்; இந்தப் பயிற்சியின் வழங்கப்படும்.
-
Question 34 of 50
34. Question
34.மக்களவை சபாநாயகரின் சமீபத்திய அறிவிப்பின்படி, பள்ளிகள் & கல்லூரிகளில், எந்தப் பரப்புரை மேற்கொள்ளப்பட உள்ளது?
Correct
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சமீபத்தில் உத்தரகண்ட் பஞ்சாயத்து ராஜ் துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இந்த நிகழ்வின்போது, நாடு முழுவதுமுள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், “உங்கள் அரசியலமைப்பை அறிந்துகொள்ளுங்கள்” என்ற பெயரில் ஒரு பரப்புரையை மத்திய அரசு விரைவில் மேற்கொள்ளும் என்று அவர் அறிவித்தார். இது அரசியலமைப்பின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சமீபத்தில் உத்தரகண்ட் பஞ்சாயத்து ராஜ் துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இந்த நிகழ்வின்போது, நாடு முழுவதுமுள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், “உங்கள் அரசியலமைப்பை அறிந்துகொள்ளுங்கள்” என்ற பெயரில் ஒரு பரப்புரையை மத்திய அரசு விரைவில் மேற்கொள்ளும் என்று அவர் அறிவித்தார். இது அரசியலமைப்பின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 35 of 50
35. Question
35.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, வர்த்தக கொள்கை மீளாய்வுடன் தொடர்புடைய நிறுவனம் எது?
Correct
விளக்கம்
வர்த்தக கொள்கை மீளாய்வு (Trade Policy Review) என்பது உலக வர்த்தக அமைப்பின் (WTO) கீழ் உள்ள ஒரு பொறிமுறையாகும். இதில், உறுப்பினர்களின் வர்த்தகம் மற்றும் அது தொடர்புடைய கொள்கைகள் ஆராயப்படுகின்றன. அதன் விதிகளுக்கு இணங்குவதை மேம்படுத்துகின்றன.
அண்மையில், இந்தியாவின் ஏழாவது வர்த்தக கொள்கை ஆய்வு உலக வர்த்தக அமைப்பில் ஜெனீவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பில் முடிந்தது. இந்தியாவின் முந்தைய TPR, கடந்த 2015ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. COVID-19’க்கான புதிய நோயறிமுறைகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தித்திறன் மற்றும் அவை சரியான நேரத்தில் கிடைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா ஆதரித்தது.
Incorrect
விளக்கம்
வர்த்தக கொள்கை மீளாய்வு (Trade Policy Review) என்பது உலக வர்த்தக அமைப்பின் (WTO) கீழ் உள்ள ஒரு பொறிமுறையாகும். இதில், உறுப்பினர்களின் வர்த்தகம் மற்றும் அது தொடர்புடைய கொள்கைகள் ஆராயப்படுகின்றன. அதன் விதிகளுக்கு இணங்குவதை மேம்படுத்துகின்றன.
அண்மையில், இந்தியாவின் ஏழாவது வர்த்தக கொள்கை ஆய்வு உலக வர்த்தக அமைப்பில் ஜெனீவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பில் முடிந்தது. இந்தியாவின் முந்தைய TPR, கடந்த 2015ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. COVID-19’க்கான புதிய நோயறிமுறைகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தித்திறன் மற்றும் அவை சரியான நேரத்தில் கிடைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா ஆதரித்தது.
-
Question 36 of 50
36. Question
36.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற IREDA என்பது பின்வரும் எந்த அமைச்சகத்தின் கீழ்வரும் ஓர் அமைப்பாகும்?
Correct
விளக்கம்
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘மினி இரத்னா’ நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (IREDA), புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குவதற்காக தேசிய நீர்மின்சார கழகத்துடன் (NHPC) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தேசிய நீர்மின்சார கழகத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எரிசக்தி சேமிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப நிதி சேவைகளை இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை வழங்கும்.
Incorrect
விளக்கம்
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘மினி இரத்னா’ நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (IREDA), புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குவதற்காக தேசிய நீர்மின்சார கழகத்துடன் (NHPC) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தேசிய நீர்மின்சார கழகத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எரிசக்தி சேமிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப நிதி சேவைகளை இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை வழங்கும்.
-
Question 37 of 50
37. Question
37.அடிப்படை வாழ்வுக்கான ஊதியத்தை பரிந்துரைத்த, மத்திய தொழிலாளர் அமைச்சக ஆணையத்தின் தலைவர் யார்?
Correct
COVID-19 தொற்றுநோய்களின்போது ஒப்பந்தத்தொழிலாளர்களின் நலன் மற்றும் மேம்பாட்டுக்கான செயல்திட்டத்தைத் தயாரிப்பதற்காக தொழிலாளர் அமைச்சின் மத்திய ஆலோசனை ஒப்பந்த தொழிலாளர் வாரியத்தின்கீழ் உறுப்பினர் ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டது.
இவ்வாணையத்தின் பொறுப்பாளராக இருந்த மூத்த IAS அதிகாரி C V ஆனந்த போஸ், வேலையிழப்பு ஏற்பட்டால் அடிப்படை வாழ்வுக்கான ஊதியத்தை செலுத்த பரிந்துரைத்துள்ளார். இந்திய தொழிலாளர் ஆணையத்தை ஒரு மைய அமைப்பாக நிறுவவும் அவர் முயன்றார்.
Incorrect
COVID-19 தொற்றுநோய்களின்போது ஒப்பந்தத்தொழிலாளர்களின் நலன் மற்றும் மேம்பாட்டுக்கான செயல்திட்டத்தைத் தயாரிப்பதற்காக தொழிலாளர் அமைச்சின் மத்திய ஆலோசனை ஒப்பந்த தொழிலாளர் வாரியத்தின்கீழ் உறுப்பினர் ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டது.
இவ்வாணையத்தின் பொறுப்பாளராக இருந்த மூத்த IAS அதிகாரி C V ஆனந்த போஸ், வேலையிழப்பு ஏற்பட்டால் அடிப்படை வாழ்வுக்கான ஊதியத்தை செலுத்த பரிந்துரைத்துள்ளார். இந்திய தொழிலாளர் ஆணையத்தை ஒரு மைய அமைப்பாக நிறுவவும் அவர் முயன்றார்.
-
Question 38 of 50
38. Question
38. ‘Pioneers’ என்பது எந்த விண்வெளி மையத்தின் திட்டமாகும்?
Correct
விளக்கம்
‘Pioneers’ திட்டமானது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA’ஆல் கடந்த 2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அது, சிறிய வன்பொருளைப்பயன்படுத்தி வானியற்பியல் அறிவியல்பற்றி ஆராய்ச்சி மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அண்மையில், இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக, NASA, நான்கு சிறிய அளவிலான வானியற்பியல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அஸ்பெரா, பண்டோரா மற்றும் ஸ்டார்பர்ஸ்ட் என்ற சிறிய செயற்கைக் கோள்கள் & PUEO என்ற பலூன் திட்டம் ஆகியவை இதில் அடங்கும். இத்திட்டங்கள் அண்ட நிகழ்வுகளைப்பற்றி ஆய்வுசெய்ய உதவும்.
Incorrect
விளக்கம்
‘Pioneers’ திட்டமானது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA’ஆல் கடந்த 2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அது, சிறிய வன்பொருளைப்பயன்படுத்தி வானியற்பியல் அறிவியல்பற்றி ஆராய்ச்சி மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அண்மையில், இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக, NASA, நான்கு சிறிய அளவிலான வானியற்பியல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அஸ்பெரா, பண்டோரா மற்றும் ஸ்டார்பர்ஸ்ட் என்ற சிறிய செயற்கைக் கோள்கள் & PUEO என்ற பலூன் திட்டம் ஆகியவை இதில் அடங்கும். இத்திட்டங்கள் அண்ட நிகழ்வுகளைப்பற்றி ஆய்வுசெய்ய உதவும்.
-
Question 39 of 50
39. Question
39.நாட்டின் முதல் சூரிய மின்சார RO-RO சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
நாட்டின் முதல் சூரிய மின்சார ரோ-ரோ சேவை, 2021-2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று கேரள ஆளுநர் சட்டமன்றத்தில் அறிவித்தார். மாநிலத்தின் முதல் நீர்-நில இயக்க பேருந்து சேவை தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். சரக்குகள் இயக்கம் மற்றும் அதிவேக சுற்றுலா சேவைகளுக்காக படகு சேவையை தொடங்கவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
நாட்டின் முதல் சூரிய மின்சார ரோ-ரோ சேவை, 2021-2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று கேரள ஆளுநர் சட்டமன்றத்தில் அறிவித்தார். மாநிலத்தின் முதல் நீர்-நில இயக்க பேருந்து சேவை தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். சரக்குகள் இயக்கம் மற்றும் அதிவேக சுற்றுலா சேவைகளுக்காக படகு சேவையை தொடங்கவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
-
Question 40 of 50
40. Question
40.பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் எந்த மாநகராட்சி, ‘பீரியட் ரூம்’ என்ற முயற்சியைத் தொடங்கியுள்ளது?
Correct
விளக்கம்
மாநகராட்சியில் அமைந்துள்ள கழிப்பறைத் தொகுதிகளில், “பீரியட் ரூம்” ஒன்றை தானே மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. பத்துக்கு ஒரு கழிப்பறையில், தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய “பீரியட் ரூம்” ஆக மாற்றப்பட்டுள்ளது. மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
மாநகராட்சியில் அமைந்துள்ள கழிப்பறைத் தொகுதிகளில், “பீரியட் ரூம்” ஒன்றை தானே மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. பத்துக்கு ஒரு கழிப்பறையில், தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய “பீரியட் ரூம்” ஆக மாற்றப்பட்டுள்ளது. மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
Question 41 of 50
41. Question
41.தேசிய இளையோர் நாடாளுமன்ற விழாவின் முதலாவது பதிப்பு, எந்த ஆண்டில் நடைபெற்றது?
Correct
விளக்கம்
முதல் தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவானது 2019 பிப்ரவரி மாதம் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தத் திருவிழாவின் இரண்டாவது பதிப்பு, 2020 டிசம்பரில் தொடங்கப்பட்டது.
மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிகழ்வுகளுக்குப் பிறகு, இறுதி நிகழ்வு சமீபத்தில் நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் நடைபெற்றது. 18 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் தேசிய நடுவர் மன்றத்தின் முன் பேசுவார்கள், அவர்களில் மூன்று பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
Incorrect
விளக்கம்
முதல் தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவானது 2019 பிப்ரவரி மாதம் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தத் திருவிழாவின் இரண்டாவது பதிப்பு, 2020 டிசம்பரில் தொடங்கப்பட்டது.
மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிகழ்வுகளுக்குப் பிறகு, இறுதி நிகழ்வு சமீபத்தில் நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் நடைபெற்றது. 18 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் தேசிய நடுவர் மன்றத்தின் முன் பேசுவார்கள், அவர்களில் மூன்று பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
-
Question 42 of 50
42. Question
42. உலக ஹிந்தி நாளானது, எந்த நகரத்தில் நடந்த முதல் உலக ஹிந்தி மாநாட்டின் ஆண்டுநிறைவை நினைவுகூர்கிறது?
Correct
விளக்கம்
ஒவ்வோர் ஆண்டும் ஜன.10 அன்று உலக ஹிந்தி நாள் கொண்டாடப் -படுகிறது. இது விஸ்வ ஹிந்தி திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது, 1975ஆம் ஆண்டு இதே நாளில் நாக்பூரில் நடைபெற்ற முதல் உலக ஹிந்தி மாநாட்டின் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
உலக ஹிந்தி நாள் முதன்முதலில் கடந்த 2006ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. ஹிந்தி, நாட்டின் அதிகம் பேசப்படும் மொழி மட்டுமல்ல மேலும், உலகிலேயே அதிகம் பேசப்படும் மூன்றாவது மொழியுமாகும்.
Incorrect
விளக்கம்
ஒவ்வோர் ஆண்டும் ஜன.10 அன்று உலக ஹிந்தி நாள் கொண்டாடப் -படுகிறது. இது விஸ்வ ஹிந்தி திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது, 1975ஆம் ஆண்டு இதே நாளில் நாக்பூரில் நடைபெற்ற முதல் உலக ஹிந்தி மாநாட்டின் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
உலக ஹிந்தி நாள் முதன்முதலில் கடந்த 2006ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. ஹிந்தி, நாட்டின் அதிகம் பேசப்படும் மொழி மட்டுமல்ல மேலும், உலகிலேயே அதிகம் பேசப்படும் மூன்றாவது மொழியுமாகும்.
-
Question 43 of 50
43. Question
43.ஃபின்டெக் புத்தாக்க மையத்தை அமைப்பதற்காக கான்பூர் IITஉடன் கூட்டினைந்துள்ள இந்திய வங்கி?
Correct
விளக்கம்
நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியானது ஃபின்டெக் புத்தாக்க மையத்தை நிறுவுவதற்
-காக IIT கான்பூர் மற்றும் FIRST (அறிவியல் & தொழில்நுட்பத்தில் புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சிக்கான அறக்கட்டளை) உடன் கூட்டு சேர்ந்துள்ளது. IIT வளாகத்திலேயே இம்மையம் நிறுவப்படும். அது, வங்கி மற்றும் நிதித்துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப தீர்வுகளின் மீதான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உதவும்.
Incorrect
விளக்கம்
நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியானது ஃபின்டெக் புத்தாக்க மையத்தை நிறுவுவதற்
-காக IIT கான்பூர் மற்றும் FIRST (அறிவியல் & தொழில்நுட்பத்தில் புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சிக்கான அறக்கட்டளை) உடன் கூட்டு சேர்ந்துள்ளது. IIT வளாகத்திலேயே இம்மையம் நிறுவப்படும். அது, வங்கி மற்றும் நிதித்துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப தீர்வுகளின் மீதான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உதவும்.
-
Question 44 of 50
44. Question
44. 16ஆவது பிரவாசி பாரதிய திவாஸின் கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
ஜன.9 அன்று பிரவாசி பாரதிய திவாஸின் 16ஆவது பதிப்பை பிரதமர் மோடி மெய்நிகராக திறந்து வைத்தார். வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்திய சமூக-பொருளாதார வளர்ச்சியின் ஒருபகுதியாக திகழ்வதற்கு அவர்களை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
“தற்சார்பு இந்தியாவுக்கு பங்களியுங்கள்” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். சுரினாம் குடியரசின் தலைவர், இதன்போது முக்கிய குறிப்புரையை வழங்கினார்.
Incorrect
விளக்கம்
ஜன.9 அன்று பிரவாசி பாரதிய திவாஸின் 16ஆவது பதிப்பை பிரதமர் மோடி மெய்நிகராக திறந்து வைத்தார். வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்திய சமூக-பொருளாதார வளர்ச்சியின் ஒருபகுதியாக திகழ்வதற்கு அவர்களை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
“தற்சார்பு இந்தியாவுக்கு பங்களியுங்கள்” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். சுரினாம் குடியரசின் தலைவர், இதன்போது முக்கிய குறிப்புரையை வழங்கினார்.
-
Question 45 of 50
45. Question
45.எந்த ஆயுதப்படையின் புதிய தலைமை இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பொறுப்பேற்றுள்ளார்?
Correct
விளக்கம்
மூத்த IPS அதிகாரியான சுபோத் குமார் ஜெய்ஸ்வால் மத்திய தொழிலக பாதுகாப்புப்படையின் (CSIF) புதிய தலைமை இயக்குநராக பொறுப்பே -ற்றார். 2019 முதல் அவர் மகாராஷ்டிரா காவல்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். முன்னதாக நாட்டின் சிறப்பு பாதுகாப்புக் குழுவில் பணியாற்றிய அவர், பிரதமரைப் பாதுகாத்தார்.
Incorrect
விளக்கம்
மூத்த IPS அதிகாரியான சுபோத் குமார் ஜெய்ஸ்வால் மத்திய தொழிலக பாதுகாப்புப்படையின் (CSIF) புதிய தலைமை இயக்குநராக பொறுப்பே -ற்றார். 2019 முதல் அவர் மகாராஷ்டிரா காவல்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். முன்னதாக நாட்டின் சிறப்பு பாதுகாப்புக் குழுவில் பணியாற்றிய அவர், பிரதமரைப் பாதுகாத்தார்.
-
Question 46 of 50
46. Question
46. ‘STEM’ கல்வியை மேம்படுத்துவதற்காக, நாடு முழுவதுமுள்ள 100 அடல் டிங்கரிங் ஆய்வகங்களை பயன்படுத்தவுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
நாடு முழுவதும் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்), விண்வெளி கல்வி மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் சம்பந்தமான புதுமைகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO, 100 அடல் ஆய்வகங்களைப் பயன்படுத்த இருப்பதாக அடல் புத்தாக்க இயக்கம், NITI ஆயோக், ISRO ஆகியவை அறிவித்துள்ளன.
Incorrect
விளக்கம்
நாடு முழுவதும் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்), விண்வெளி கல்வி மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் சம்பந்தமான புதுமைகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO, 100 அடல் ஆய்வகங்களைப் பயன்படுத்த இருப்பதாக அடல் புத்தாக்க இயக்கம், NITI ஆயோக், ISRO ஆகியவை அறிவித்துள்ளன.
-
Question 47 of 50
47. Question
47.இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் எத்தனை சதவீதம் பாதுகா -க்கப்பட்ட பகுதிகளாக உள்ளன?
Correct
விளக்கம்
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 146 தேசிய பூங்கா மற்றும் வனவுயிரி சரணாலயங்கள் மற்றும் நாட்டின் உயிரியல் பூங்காக்களின் மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டை வெளியிட்டார்.
தற்போது, இந்தியாவில் 903 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உள்ளன. அது, நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 5% ஆகும். ஒவ்வோர் ஆண்டும் 10 சிறந்த தேசிய பூங்காக்கள், 5 கடலோர மற்றும் கடல் பூங்காக்கள் மற்றும் நாட்டின் முதல் 5 உயிரியல் பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப் -பட்டு அவற்றுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 146 தேசிய பூங்கா மற்றும் வனவுயிரி சரணாலயங்கள் மற்றும் நாட்டின் உயிரியல் பூங்காக்களின் மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டை வெளியிட்டார்.
தற்போது, இந்தியாவில் 903 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உள்ளன. அது, நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 5% ஆகும். ஒவ்வோர் ஆண்டும் 10 சிறந்த தேசிய பூங்காக்கள், 5 கடலோர மற்றும் கடல் பூங்காக்கள் மற்றும் நாட்டின் முதல் 5 உயிரியல் பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப் -பட்டு அவற்றுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
-
Question 48 of 50
48. Question
48.கோவாவில் நடக்கும் 51ஆவது பன்னாட்டு திரைப்பட விழாவில் சிறப்பு கவனம் பெறும் நாடு எது?
Correct
விளக்கம்
2021 ஜன.16-24 வரை திட்டமிடப்பட்டுள்ள இந்தியாவின் 51ஆவது பன்னாட்டு திரைப்பட விழாவில், வங்கதேசம் சிறப்பு கவனம் பெறும் நாடாக உள்ளது. திரைத்துறைக்கான அந்நாட்டின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக, 4 வங்கதேச திரைப்படங்கள் சிறப்பு கவனப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.
51ஆவது இந்திய பன்னாட்டு திரைப்பட விழா, 2020’க்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலில் தமிழ் திரைப் படங்களான அசுரன் மற்றும் தேன் இடம்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
Incorrect
விளக்கம்
2021 ஜன.16-24 வரை திட்டமிடப்பட்டுள்ள இந்தியாவின் 51ஆவது பன்னாட்டு திரைப்பட விழாவில், வங்கதேசம் சிறப்பு கவனம் பெறும் நாடாக உள்ளது. திரைத்துறைக்கான அந்நாட்டின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக, 4 வங்கதேச திரைப்படங்கள் சிறப்பு கவனப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.
51ஆவது இந்திய பன்னாட்டு திரைப்பட விழா, 2020’க்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலில் தமிழ் திரைப் படங்களான அசுரன் மற்றும் தேன் இடம்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
-
Question 49 of 50
49. Question
49. “புதுப்பிக்கப்பட்ட பெண்கள் தொழில்முனைவு தளத்தை” தொடங்குவதற்காக, எந்த மின்னணு-வணிக நிறுவனத்துடன் NITI ஆயோக் கூட்டிணைந்துள்ளது?
Correct
விளக்கம்
“புதுப்பிக்கப்பட்ட பெண்கள் தொழில்முனைவு தளத்தைத் தொடங்க, NITIT ஆயோக், பிளிப்கார்ட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்தியாவில் பெண் தொழில்முனைவோருக்கு சமூக அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியாக இது கருதப்படுகிறது. இத்தளம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பெண்களை ஒன்றிணைத்து, அவர்களின் தொழில்முனைவு எண்ணங்களை உணர்ந்துகொள்ளும்.
Incorrect
விளக்கம்
“புதுப்பிக்கப்பட்ட பெண்கள் தொழில்முனைவு தளத்தைத் தொடங்க, NITIT ஆயோக், பிளிப்கார்ட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்தியாவில் பெண் தொழில்முனைவோருக்கு சமூக அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியாக இது கருதப்படுகிறது. இத்தளம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பெண்களை ஒன்றிணைத்து, அவர்களின் தொழில்முனைவு எண்ணங்களை உணர்ந்துகொள்ளும்.
-
Question 50 of 50
50. Question
50. ஒவ்வோர் ஆண்டும், இந்தியா முழுவதும், ‘இராணுவ நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்:
ஒவ்வோர் ஆண்டும் ஜன.15ஆம் தேதியன்று, ‘இராணுவ நாள்’ நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 73ஆவது ‘இராணுவ நாள்’ அண்மையில் 2021 ஜன.15 அன்று அனுசரிக்கப்பட்டது.
1949 ஜன.15 அன்று, ஜெனரல் K M கரியப்பா, விடுதலைக்குப்பிறகான இந்திய இராணுவத்தின் முதல் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார். அந்நாள் ஒவ்வோர் ஆண்டும் ‘இராணுவ நாளாக’ நினைவுகூரப்படுகிறது.
Incorrect
விளக்கம்:
ஒவ்வோர் ஆண்டும் ஜன.15ஆம் தேதியன்று, ‘இராணுவ நாள்’ நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 73ஆவது ‘இராணுவ நாள்’ அண்மையில் 2021 ஜன.15 அன்று அனுசரிக்கப்பட்டது.
1949 ஜன.15 அன்று, ஜெனரல் K M கரியப்பா, விடுதலைக்குப்பிறகான இந்திய இராணுவத்தின் முதல் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார். அந்நாள் ஒவ்வோர் ஆண்டும் ‘இராணுவ நாளாக’ நினைவுகூரப்படுகிறது.
Leaderboard: January 2nd Week 2021 Current Affairs Online Test Tamil
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||