Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Answer Key

Tnpsc Assistant Director Exam Previous Questions and Answer key 2022 – General Studies in English

Tnpsc Assistant Director Exam Previous Questions and Answer key 2022 – General Studies in English

ASSISTANT DIRECTOR OF TOWN AND COUNTRY PLANNING IN TAMIL NADU GENERAL SERVICE

1. தவறான இணையை அறிக:

(அ) ஜ்வாலை – தீயின் அனல் (ஒளி) (ஆ) கார்ஹாரன் – மகிழ்வுந்து ஒலி

(இ) சப்தம் – ஓசை (ஈ) ஈக்வலாக – நிலையாக

2. “இது செய்வாயா” என்று வினவியபோது “நீயே செய்” என்று ஏவிக் கூறுவது

(அ) நேர் விடை (ஆ) ஏவல் விடை (இ) சுட்டுவிடை (ஈ) உறுவது கூறல் விடை

3. “நல்ல வரலாறுகளைப் படித்தால் தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்”

– என்றவரைத் தேர்வு செய்க:

(அ) பேரறிஞர் அண்ணா (ஆ) திரு.வி.க (இ) அப்துல்கலாம் (ஈ) பாரதியார்

4. மடலி அல்லது வடலி என்பதனைக் குறிக்கும் பொருள் தேர்க:

(அ) தென்னையின் இளநிலை (ஆ) பனையின் இளநிலை

(இ) மாமரத்தின் இளநிலை (ஈ) பலா மரத்தின் இளநிலை

5. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி:

மொழியை எவ்வாறு பேசவும் எழுதவும் வேண்டும் என்பதை வரையறை செய்வதே இலக்கணம் எனப்படும். தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ஐந்து வகைப்படும். உயிருக்கு முதன்மையானது காற்று, இயல்பாகக் காற்று வெளிப்படும் போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன. “அ” முதல் “ஒள” வரையுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பிறக்கின்றன. மெய்யெழுத்துகள் பதினெட்டும் ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது. மெய் எழுத்துகள் ஒலிக்கம் கால் அளவு அரை மாத்திரை ஆகும். மெய் எழுத்துகள் பதினெட்டுடன் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றும் 216 எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.

5. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை?

(அ) நான்கு (ஆ) ஏழு (இ) ஐந்து (ஈ) இரண்டு

6. உயிருக்கு முதன்மையானது எது?

(அ) காற்று (ஆ) அணிகலன் (இ) ஆடைகள் (ஈ) விளையாட்டுப் பொருட்கள்

7. உயிர் எழுத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?

(அ) ஏழு (ஆ) பதினெட்டு (இ) பத்து (ஈ) பன்னிரண்டு

8. மெய்யெழுத்துகளை ஒலிக்கும் கால அளவு எவ்வளவு?

(அ) ஒரு மாத்திரை (ஆ) இரண்டு மாத்திரை (இ) அரை மாத்திரை (ஈ) ஒன்றரை மாத்திரை

9. உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?

(அ) 216 (ஆ) 206 (இ) 18 (ஈ) 12

10. பொருத்தமான காலம் அமைத்தல்:

எதிர்காலம்.

(அ) உணவு உண்டவன் அயர்ந்து தூங்கினான்

(ஆ) மண்ணில், விண்ணில் ஆய்வுகள் நிகழ்கின்றன

(இ) மலை மீது ஏறுவேன்

(ஈ) மனிதன் நிலவில் சென்று வாழ நினைக்கிறான்

11. கீழ்கண்ட தொடர் எக்காலத்திற்கு உரியது?

“ஆய்வுகள் செய்து பார்க்கின்றான்”

(அ) முக்காலம் (ஆ) இறந்தகாலம் (இ) எதிர்காலம் (ஈ) நிகழ்காலம்

12. எந்த இரண்டு சொற்களை இணைத்தால் சரியான புதிய சொல் கிடைக்கும்?

(அ) கண் + அழகு – கண்ணழகு (ஆ) பண் + உண்டு – பண் உண்டு

(இ) கண் + உண்டு – கண் உண்டு (ஈ) விண் + உண்டு – விண் உண்டு

13. பொருளுக்கேற்ற வினை மரபை எழுதுக:

(அ) சோறு தின் (ஆ) சோறு சாப்பிடு (இ) சோறு உண் (ஈ) சோறு பருகு

14. எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக:

(அ) உசிர் இருக்கிற வரைக்கும் தப்பு செய்ய மாட்டேன்

(ஆ) உயிர் இருக்கிற வரைக்கும் தப்பு செய்ய மாட்டேன்

(இ) உயிர் இருக்கும் வரை தவறு செய்ய மாட்டேன்

(ஈ) உசிர் இருக்கும் வரை தவறு செய்ய மாட்டேன்

15. பின்வருவனவற்றுள் எது சரியானது?

(பேச்சு வழக்கு)

(அ) அம்மா பசிக்குது. எனக்குச் சோறு வேணும் (ஆ) அம்மா பசிக்கிறது. எனக்குச் சோறு வேண்டும்.

(இ) அம்மா பசிக்குது. எனக்கு உணவு வேண்டும் (ஈ) அம்மா பசிக்கிறது எனக்கு சோறு வேணும்

16. நிறுத்தற்குறிகளை அறிதல்:

சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்டத் தொடரைக் கண்டறிக:

(அ) அந்தோ? பூனையின் காலில் அடிபட்டு விட்டதே!

(ஆ) அந்தோ! பூனையின் காலில் அடிபட்டு விட்டதே!

(இ) அந்தோ! பூனையின் காலில் அடிபட்டு விட்டதே

(ஈ) அந்தோ? பூனையின் காலில் அடிபட்டு விட்டதே.

17. நிறுத்தற்குறிகளை அறிதல்:

சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்டத் தொடரைக் கண்டறிக:

(அ) யாழினி, “நிலா நிலா ஓடி வா” எனப் பாடினாள்

(ஆ) யாழினி நிலா நிலா ஓடி வா எனப் பாடினாள்

(இ) யாழினி “நிலா, நிலா ஓடி வா” எனப் பாடினாள்?

(ஈ) யாழினி நிலா, நிலா ஓடி வா! எனப் பாடினாள்

18. சரியான கலைச் சொல்லால் பொருத்துக:

அ. Linguistics 1. எழுத்திலக்கணம்

ஆ. Phonology 2. மொழியியல்

இ. Journalism 3. ஒலியியல்

ஈ. Orthography 4. இதழியல்

அ ஆ இ ஈ

அ. 2 3 4 1

ஆ. 3 2 1 4

இ. 4 1 2 3

ஈ. 3 2 4 1

19. கூற்று, காரணம் – எது சரி? எது தவறு?

கூற்று: பாடுதல், படித்தல் – தொழிற்பெயர்கள்.

காரணம் : ?

(அ) முன்னிலைக்கு மட்டும் உரியது (ஆ) படர்க்கைக்கே உரியது

(இ) படர்க்கைக்கு மட்டுமல்லாமல் முன்னிலைக்கும் உரியது (ஈ) மூவிடத்திற்கும் உரியது

20. குறில் நெடில் மாற்றம் அறிந்து, பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக:

தொடு – தோடு

(அ) இயற்கை-செயற்கை (ஆ) வெகுளி-கோபம் (இ) கேண்மை-நட்பு (ஈ) தொடுதல்-அணிகலன்

21. சரியானவற்றைப் பொருத்துக:

அ. கார் காலம் 1. ஐப்பசி, கார்த்திகை

ஆ. குளிர் காலம் 2. மாசி, பங்குனி

இ. முன்பனிக்காலம் 3. ஆவணி, புரட்டாசி

ஈ. பின் பனிக்காலம் 4. மார்கழி, தை

அ ஆ இ ஈ

அ. 3 1 4 2

ஆ. 1 3 4 2

இ. 2 4 1 3

ஈ. 4 2 3 1

22. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் ———- என்று பெயர்.

(அ) பறவை (ஆ) பரவை (இ) பரதை (ஈ) பறப்பு

23. சொல் – பொருள் – பொருத்துக:

அ. தார் 1. மகிழ்ச்சி

ஆ. முனிவு 2. மாலை

இ. உவகை 3. உறவினர்

ஈ. தமர் 4. சினம்

அ ஆ இ ஈ

அ. 2 4 3 1

ஆ. 2 4 1 3

இ. 2 1 3 4

ஈ. 3 4 1 2

24. சரியான இணைப்புச் சொல்லைத் தேர்ந்தெடு:

மனிதர்களை நிலவிற்கு அனுப்புவோம் ——— நிலவிற்குச் செல்லத் தயாராக இருங்கள்.

(அ) எனவே (ஆ) ஏனெனில் (இ) ஆகையால் (ஈ) எனில்

25. பேச்சு வழக்கு : எழுத்து வழக்கு

(அ) பானை செய்தல் (ஆ) பானை முடைதல் (இ) பானை வனைதல் (ஈ) பானை கட்டுதல்

26. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:

கூவல் என்று அழைக்கப்படுவது ———–

(அ) எதனால் (ஆ) எதற்கு (இ) எது (ஈ) எவை

27. சரியான ஊர் பெயரின் மரூஉவை எழுதுக:

(அ) கோவை-கோயம்புத்தூர் (ஆ) கும்பை-கும்பக்கோணம்

(இ) நெல்வேலி-திருநெல்வேலி (ஈ) புதுக்கோட்டை-புதுச்சேரி

28. ஒரு சொல் தரும் பல பொருள்கள் கண்டறிக:

“மா”

(அ) மாடம், மதி (ஆ) வானம், அளவு (இ) மரம், விலங்கு (ஈ) அம்மா, அறிவு

29. ஒரு பொருள் தரும் பல சொற்களை எழுதுக:

மலை

(அ) வெற்பு, சிலம்பு (ஆ) வனப்பு, பொருப்பு (இ) பொருப்பு, உயரம் (ஈ) மலைத்தல், பக்கமலை

30. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக:

“Jungle”

(அ) சமவெளி (ஆ) சோலை (இ) காடு (ஈ) மலை

31. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:

“புதிய உரைநடை” என்னும் நூலுக்காக மா.இராமலிங்கம் சாகித்ய அகாதெமி பரிசு பெற்றார்.

(அ) புதிய உரைநடை என்பது எவ்வகையான நூல்?

(ஆ) “புதிய உரைநடை” என்னும் நூலுக்காக சாகித்ய அகாதெமி பரிசு பெற்றவர் யார்?

(இ) “சாகித்ய அகாதெமி” என்னும் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?

(ஈ) மா.இராமலிங்கம் பெற்ற பரிசு எவ்வகையானது?

32. கீழ்காண்பனவற்றுள் சரியான வினாக்களைத் தேர்ந்தெடுக்க:

தாயின் அன்பை எழுத உலகின் மொழிகள் போதாது.

1. யாருடைய அன்பை எழுத உலகின் மொழிகள் போதாது?.

2.எதன் அன்பை எழுத உலகின் மொழிகள் போதாது?.

3. தாயின் அன்பை எழுத உலகின் மொழிகள் போதுமா?.

4. தாயின் அன்பை எழுத உலகில் மொழிகள் உண்டோ?

(அ) 2,4 சரி (ஆ) 2,3 சரி (இ) 1,3 சரி (ஈ) 4,1 சரி

33. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:

மைதிலி உணவு உண்டாள்

(அ) செய்வினை (ஆ) செயப்பாட்டு வினை (இ) தன்வினை (ஈ) பிறவினை

34. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக: வணிகர் கடையைத் திறந்து வைத்தார்.

(அ) தன்வினை (ஆ) பிறவினை (இ) செய்வினை (ஈ) செயப்பாட்டு வினை

35. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:

பரிதி ஊஞ்சலை ஆட்டுவித்தான்.

(அ) செய்வினை (ஆ) பிறவினை (இ) செயப்பாட்டு வினை (ஈ) தன்வினை

36. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:

“இந்தியா தான் என்னுடைய மோட்சம்” என்று பாரதியார் கூறுகிறார்.

(அ) பாரதியார் எதிர்பார்த்தது என்ன?

(ஆ) மோட்சம் என்று எதனைக் கூறலாம்?

(இ) “இந்தியா தான் என்னுடைய மோட்சம்” என்று கூறியவர் யார்?

(ஈ) பாரதியாரின் கனவு யாது?

37. வரைந்து –

வேர்ச்சொல்லை கண்டறி:

(அ) வரைதல் (ஆ) வரை (இ) வரைந்தான் (ஈ) வரைந்த

38. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்:

ரோபோ (Robot) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்.

(இ) இயந்திர மனிதன் (ஆ) கணினி மனிதன் (இ) தானியங்கி (ஈ) தனியாக செய்தல்

39. வழுவற்ற தொடரை கண்டறிக

(அ) ஞான பீட விருது (ஆ) ஞாண பீட விருது (இ) நாண பீட விருது (ஈ) நான பீட விருது

40. சந்திப் பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக:

(அ) ஒன்றை சொல்லுவதற்கென்றே இசைக்கபடும் இசைக்கவல்ல தாள கருவி பறை

(ஆ) ஒன்றைச் சொல்லுவதற்கென்றே இசைக்கப்படும் இசைகவல்ல தாள கருவிப் பறை

(இ) ஒன்றைச் சொல்லுவதற்கென்றே இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக் கருவி பறை

(ஈ) ஒன்றைச் சொல்லுவதற்கென்ரே இசைக்கப்படும் இசைக்கவல்ல தாலக் கருபிப் பரை.

41. பிணி – எதிர்ச்சொல் தருக:

(அ) துன்பம் (ஆ) நோய் (இ) இன்பம் (ஈ) வறுமை

42. பிரித்தெழுதுதல்:

இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

(அ) இடம் + மெல்லாம் (ஆ) இடம் + எல்லாம் (இ) இட + எல்லாம் (ஈ) இட + மெல்லாம்

43. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் எழுதுக:

“Rhyme”

(அ) இயைபுத்தொடை (ஆ) மோனைத்தொடை (இ) எதுகைத் தொடை (ஈ) செந்தொடை

44. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:

“வாய்மையைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன”

(அ) வாய்மையின் சிறந்த அறமாகக் கருதப்படுவது எது?

(ஆ) வாய்மை என்பது சிறந்த அறமா?

(இ) சங்க இலக்கியங்கள் சிறந்ததா?

(ஈ) வாய்மையைச் சிறந்த அறமாக எந்த இலக்கியங்கள் பேசுகின்றன?

45. வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைக் கூறு:

வாழ்

(அ) வாழந்த (ஆ) வாழ்ந்து (இ) வாழ்க்கை (ஈ) வாழா

46. வினா வகைகளைக் கண்டறி:

“வீட்டில் அரிசி இல்லை” “நீ கடைக்குச் செல்கிறாயா?” என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல்.

(அ) ஐயவினா (ஆ) அறிவினா (இ) அறியாவினா (ஈ) ஏவல்வினா

47. மரபுத் தொடரின் பொருளை அறிக:

பச்சைப்பொய்

(அ) பேச்சில் பொய் (ஆ) உண்மையற்ற பொய் (இ) ஏமாற்றுதல் (ஈ) முற்றிலும் பொய்

48. பொருந்தாச் சொல்லை எழுத்தெழுதுக:

முதல்நிலைத் தொழிற்பெயர் அல்லாதது.

(அ) பெறு (ஆ) சுடு (இ) நடு (ஈ) வீடு

49. சரியான பொருளை அறிக:

அவிர்தல்

(அ) அழித்தல் (ஆ) நீக்குதல் (இ) ஒளிர்தல் (ஈ) உயர்தல்

50. சொல்வகை அறிந்து பொருந்தாச் சொல்லை எழுதுக:

(அ) சென்றாள் (ஆ) வந்த (இ) சித்திரை (ஈ) நடந்து

51. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?

(அ) அரசர்கள் நல்லாட்சி செய்தார் (ஆ) பசு கன்மை ஈன்றன

(இ) மேகங்கள் சூழ்ந்து கொண்டது (ஈ) குழலி நடனம் ஆடினாள்

52. தவறான இணையைத் தேர்ந்தெடு

(அ) ஊட்டி-உதக மண்டலம் (ஆ) நாகை-நாகப்பட்டினம்

(இ) உதகை-உதக மண்டலம் (ஈ) மயிலை-மயிலாடுதுறை

53. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்சொற்களைக் கண்டறிதல்:

சரியான இணையைத் தேர்ந்தெடு

(அ) இம்சை-இடறல் (ஆ) இம்சை-இன்பம் (இ) இம்சை-துன்பம் (ஈ) இம்சை-இழிவு

54. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்:

சரியான இணையைத் தேர்ந்தெடு:

(அ) கிரீடம்-மணியழகு (ஆ) கிரீடம்-மணிமுடி (இ) கிரீடம்-பொன் (ஈ) கிரீடம்-மணி

55. அயோத்திதாசர் நடத்திய வார இதழினைத் தேர்ந்தெடுக்க:

(அ) ஒரு பைசாத் தமிழன் (ஆ) இரண்டு பைசாத் தமிழன்

(இ) காலணாத் தமிழன் (ஈ) அரையணாத் தமிழன்

56. “தந்தை மகனை நன்றாகப் படிக்க வைத்தார்”.

எவ்வகையான தொடர்?

(அ) தன்வினைத் தொடர் (ஆ) பிறவினைத் தொடர்

(இ) உணர்ச்சித் தொடர் (ஈ) கட்டளைத் தொடர்

57. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்:

சரியான இணையைத் தேர்ந்தெடு:

(அ) ஆஸ்தி-செல்வம் (ஆ) ஆஸ்தி-சொத்து (இ) ஆஸ்தி-பணம் (ஈ) ஆஸ்தி-வருமானம்

58. சரியான தொடரை அறிக:

(அ) பசுக் குவியல் மேய்ந்து சென்ற (ஆ) பழக்கொத்துக் காய்த்துத் தொங்கியது

(இ) தென்னந்தோப்பில் தேங்காய்கள் கிடந்தன (ஈ) ஆட்டுக் கூட்டத்தைப் பட்டியில் அடைத்தனர்

59. பொருளைத் தேர்ந்தெடு:

“கல்லில் நார் உரித்தல்”

(அ) ஆராய்ந்து பாராமல் செய்தல் (ஆ) இருப்பது போல் தோன்றும்; ஆனால் இருக்காது

(இ) இயலாத காரியம் (ஈ) நீண்ட காலமாக இருப்பது

60. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு:

கண்ணி என்பதன் விளக்கம் ———-

(அ) யாது (ஆ) எவை (இ) யாவை (ஈ) எது

61. பொருத்தமான காலம் அமைத்தல்:

“அப்துல் கலாமின் சுய சரிதையை நான் படிப்பேன்”

(அ) இறந்தகாலம் (ஆ) எதிர்காலம் (இ) நிகழ்காலம் (ஈ) வசந்த காலம்

62. நிறுத்தற்குறிகளை அறிதல்:

சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்ட தொடரைக் கண்டுபிடிக்க:

(அ) இல்ல சார், அவனை விடக் கூடாது சார் என்றான்

(ஆ) இல்ல சார்! அவனை விடக்கூடாது சார் என்றான்?

(இ) “இல்ல சார், அவனை விடக்கூடாது சார்!” என்றான்

(ஈ) ‘இல்ல சார் அவனை விடக்கூடாது சார் என்றான்!

63. ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக: புதுக்கோட்டை

(அ) புதுவை (ஆ) புதுகை (இ) புதுமை (ஈ) புதூர்

64. பொருத்தமான காலம் அமைத்தல்:

சரியான தொடரைத் தேர்ந்தெடு

(அ) குமரன் உணவு உண்டான் (இறந்தகாலம்) (ஆ) குமரன் உணவு உண்பான் (நிகழ்காலம்)

(இ) குமரன் உணவு உண்கிறான் (எதிர்காலம்) (ஈ) குமரன் உணவு உண்ணச் செல்கிறான் (எதிர்காலம்)

65. எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக:

(அ) பேரன் பேத்தியோட சந்தோசமா இருக்கேன்

(ஆ) பெயரன் பெயர்த்தி உடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்

(இ) பேயரன் பேத்தி உடன் சந்தோசமாக இருக்கேன்

(ஈ) பேரன் பெயர்த்தி உடன் மகிழ்ச்சியாக இருக்கேன்

66. நிறுத்தற் குறிகளை அறிதல்:

சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான போன்றவை குறிப்பிடத்தக்கவை

(அ) சேரர்களின், பட்டப்பெயர்களில், கொல்லி வெற்பன், மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை

(ஆ) சேரர்களின் பட்டப்பெயர்களில் கொல்லி, வெற்பன், மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை

(இ) சேரர்களின் பட்டப்பெயர்களில், கொல்லி, வெற்பன் மலையமான், போன்றவை குறிப்பிடத்தக்கவை

(ஈ) சேரர்களின், பட்டப்பெயர்களில் கொல்லி, வெற்பன் மலையமான போன்றவை குறிப்பிடத்தக்கவை

67. சரியான கலைச்சொல்லைத் தேர்ந்தெடுக்க:

Cultural Values

(அ) பண்பாட்டு எல்லைகள் (ஆ) பண்பாட்டு நிகழ்ச்சிகள்

(இ) பண்பாட்டு விழுமியங்கள் (ஈ) பண்பாட்டு ஆதாரங்கள்

68. கலைச்சொல்லைப் பொருத்துக:

அ. Classical Literature 1. நவீன இலக்கியம்

ஆ. Devotional Literature 2. நாட்டுப்புற இலக்கியம்

இ. Folk Literature 3. செவ்விலக்கியம்

ஈ. Modern Literature 4. பக்தி இலக்கியம்

அ ஆ இ ஈ

அ 2 1 3 4

ஆ. 3 4 2 1

இ. 3 2 4 1

ஈ. 2 3 1 4

69. இருபொருள் தருக:

தாமம்

(அ) குணம், தகுதி (ஆ) அழுதல், பின்னுதல் (இ) கயிறு, பூமாலை (ஈ) கீற்று, கயிறு

70. சரியான இணையைத் தேர்ந்தெடு:

மெய்

(அ) பொருள், உடல் (ஆ) உண்மை, மாலை (இ) உண்மை, உடல் (ஈ) உடல், வலிமை

71. சரியான இணையைத் தேர்ந்தெடு:

பரவை

(அ) வேழம், கடல் (ஆ) ஞானம், இசை (இ) ஊர், ஆழி (ஈ) இசை, கடல்

72. ஒருமை பன்மை பிழையுள்ள தொடரைக் குறிப்பிடுக:

(அ) காட்டில் மாடுகள் மேய்ந்தன (ஆ) சோலையில் மான் துள்ளி விளையாடியது

(இ) ஓர் அணில் மரத்தில் தாவி ஓடின (ஈ) பூச்செடியில் பூ மலர்ந்திருந்தது

73. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?

(அ) பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றான்

(ஆ) பெண்கள் எல்லாத்துறையிலும் பணிபுரிகின்றன

(இ) பெண்கள் எல்லாத்துறையிலும் பணிபுரிகின்றது

(ஈ) பெண்கள் எல்லாத்துறையிலும் பணிபுரிகின்றனர்

74. பிழை திருத்துதல்:

(ஒரு-ஓர்)

கீழ்காணும் தொடர்களில் ஒரு – ஓர் சரியாக அமைந்த தொடர் எது?

(அ) அது ஒரு இனிய பாடல் (ஆ) அஃது ஒரு இனிய பாடல்

(இ) அது ஒரு பழைய பாடல் (ஈ) அது ஓர் பழைய பாடல்

75. பொருத்தமான காலம் அமைத்தல்:

சரியான காலத்தை தேர்ந்தெடு

(அ) கடந்துச் சென்றான் (இறந்தகாலம்) (ஆ) கடந்துச் செல்வான் (நிகழ்காலம்)

(இ) கடந்துச் செல்கிறான் (இறந்தகாலம்) (ஈ) கடந்துச் செல்லச் செய்வான் (நிகழ்காலம்)

76. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க:

(இயற்கை)

(அ) நாம் ———– உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும்

(ஆ) நாம் ——— உரங்கள் தவிர்த்து நில வளம் காப்போம்

(இ) நாம் உரங்கள் ———— தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும்

(ஈ) ———- உரங்கள் உழவர்களுக்குத் தயாரித்து நாம் வழங்க வேண்டும்

77. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்:

(ஒலி மரபு) – பசு

(அ) கதறும் (ஆ உறுமும் (இ) கத்தும் (ஈ) பிளிறும்

78. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்:

(ஒலி மரபு) – யானை

(அ) உறுமும் (ஆ) கதறும் (இ) பிளிறும் (ஈ) முழங்கும்

79. ஒரு பொருள் தரும் இரு சொற்கள் தருக:

கோ

(அ) ஆ, பசு (ஆ) வேந்தன், அரசன் (இ) பாடல், பண் (ஈ) இசை, புகழ்

80. பொருள் வேறுபாடறிந்து எழுதுக:

போரில் பயன்படுத்தியது ——–

(அ) வால் (ஆ) வாழ் (இ) வாள் (ஈ) வான்

81. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான சொல்லைத் தேர்ந்தெடு:

கண்ணனை ———- அடித்துச் சென்றது

(அ) வெல்லம் (ஆ) வெள்ளம் (இ) வெழ்ழம் (ஈ) பள்ளம்

82. பொருள் வேறுபாடு அறிந்து பொருத்துக:

அ. இலை 1. மெலிந்து போதல்

ஆ. இளை 2. நூல் இழை

இ. இழை 3. செடியின் இலை

ஈ. கழை 4. மூங்கில்

அ ஆ இ ஈ

அ. 1 3 2 4

ஆ. 3 1 2 4

இ. 3 2 4 1

ஈ. 2 4 1 3

83. தப்பாட்டம் நிகழ்த்தப்படும் சூழலுக்கேற்ப பல்வேறு ஆட்டக்கூறுகளைக் கொண்டுள்ளது.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:

(அ) தப்பாட்டம் என்றால் என்ன?

(ஆ) பல்வேறு ஆட்டக்கூறுகள் யாவை?

(இ) தப்பாட்டம் எவ்வகையான சூழலில் ஆடப்படும்?

(ஈ) எந்த ஆட்டம் நிகழ்த்தப்படும் சூழலுக்கேற்ப பல்வேறு ஆட்டக்கூறுகளைக் கொண்டுள்ளது?

84. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக:

“Tempest”

(அ) பெருங்காற்று (ஆ) நிலக்காற்று (இ) கடற்காற்று (ஈ) சுழல்காற்று

85. சரியான ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக:

(அ) உதக மண்டலம்-உதவை (ஆ) கோயம்புத்தூர்-கோயவை

(இ) திருநெல்வேலி-நெல்லை (ஈ) சைதாப்பேட்டை-சைதா

86. உவமைகளால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்:

“விழலுக்கு இறைத்த நீர் போல”

– உவமை கூறும் பொருளைக் கூறுக

(அ) எதிர்பாரா நிகழ்வு (ஆ) பயனற்ற செயல் (இ) தற்செயல் நிகழ்வு (ஈ) வெளிப்படைத் தன்மை

87. செய்வினைத் தொடரைக் கண்டறிக:

(அ) குமுதா பாடாதே (ஆ) குமுதா பாடி மகிழ்ந்தாள்

(இ) குமுதாவால் பாடப்பட்டது (ஈ) குமுதா பாடி மகிழ்வித்தாள்

88. வேர்ச்சொல்லில் தொழிற் பெயர் காண்க:

“பெறு”

(அ) பெற்றவன் (ஆ) பெற்ற (இ) பெற்று (ஈ) பெறுதல்

89. சேர்த்தெழுதுதல்:

தூக்கி + கொண்டு

(அ) தூக்கிக்கொண்டு (ஆ) தூக்குக்கொண்டு (இ) தூக்கிக் கொண்டு (ஈ) தூக்கு கொண்டு

90. எறிந்தான் – வேர்ச்சொல்லைத் தருக:

(அ) எறிந்த (ஆ) எறிதல் (இ) எறி (ஈ) எறிந்து

91. வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் காண்:

“பொறு”

(அ) பொறுத்தவர் (ஆ) பொறுத்தல் (இ) பொறுத்து (ஈ) பொறுத்தார்

92. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்:

காலிங்பெல் (Calling Bell) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்

(அ) மணியடிதல் (ஆ) ஒலித்தல் (இ) அழைத்தல் (ஈ) அழைப்பு மணி

93. சேர்த்தெழுதுதல்:

விழித்து + எழும்

(அ) விழியெழும் (ஆ) விழித்தெழும் (இ) விழித்தழும் (ஈ) விழித்து எழும்

94. இருவினைகளில் பொருள் வேறுபாடு அறிக:

நெற்கதிர்கள் ———– நிலத்தில், கரும்பு ————னர்

(அ) விளைத்த, விளைந்த (ஆ) விலைந்த, விளைத்த

(இ) விளைந்த, விளைவித்தனர் (ஈ) விளைத்த, விலைந்த

95. சரியான தொடரைத் தேர்ந்தெடு:

சேர்ந்து – சேர்த்து

(அ) சுற்றத்தார் சேர்ந்து வாழ்ந்தனர். பிரிந்திருந்த கணவன் மனைவியரைச் சேர்த்து வைத்தனர்

(ஆ) சுற்றத்தார் சேர்த்து வாழ்ந்தனர். பிரிந்திருந்த கணவன் மனையியரைச் சேர்த்து வைத்தனர்

(இ) சுற்றத்தார் சேர்ந்து வாழ்ந்தனர். பிரிந்திருந்த கணவன் மனைவியரைச் சேர்ந்து வைத்தனர்

(ஈ) சுற்றத்தார் சேர்த்து வாழ்ந்தனர். பிரிந்திருந்த கணவன் மனைவியரைச் சேர்ந்து வைத்தனர்

96. சரியான தொடரைத் தேர்ந்தெடு:

மாறு – மாற்று

(அ) மறைமலை அடிகள், அனைவரும் தூய தமிழில் எழுதுமாற்று வழிகாட்டி மாற்றினார்.

(ஆ) மறைமலை அடிகள், அனைவரும் தூய தமிழில் எழுதுமாறு வழிகாட்டி மாறினார்.

(இ) மறைமலை அடிகள் அனைவரும் தூய தமிழில் எழுதுமாறு வழிகாட்டி மாற்றினார்.

(ஈ) மறைமலை அடிகள் அனைவரும் தூய தமிழில் எழுதுமாற்று வழிகாட்டி மாற்றினார்.

97. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:

(அ) உந்து, உரு, ஊழி, ஊண் (ஆ) உரு, ஊழி, ஊழ், உந்து

(இ) ஊழி, ஊழ், உந்து, உரு (ஈ) உந்து, ஊழி, உரு, ஊழ்

98. அகர வரிசையில் எழுதுக:

(அ) ஒழுக்கம், உயி;ர், ஆடு, அலை (ஆ) முந்நீர், மனத்துயர், மீமிசை, மேடுபள்ளம்

(இ) உயிர், ஒழுக்கம், அலை, ஆடு (ஈ) அலை, ஆடு, உயிர், ஒழுக்கம்

99. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:

(அ) மாளாத வாளால் ஆளா மீளா (ஆ) ஆளா மீளா மாளாத வாளால்

(இ) ஆளா மாளாத மீளா வாளால் (ஈ) வாளால் ஆளா மீளா மாளாத

100. திணை வழுவை தேர்வு செய்க:

(அ) செழியன் வந்தது (ஆ) செழியன் வந்தார்

(இ) செழியன் வருவார் (ஈ) செழியன் வந்தான்

101. BAT=23, CAT=24 என்றால் BOY என்பது எதைக் குறிக்கும்?

(அ) 42 (ஆ) 24 (இ) 23 (ஈ) 41

102. A,B,C,D,E,F,G,H என்ற ஆங்கில எழுத்துக்கள் முறையே 2,4,6,8,10,12,14,16 என்ற எண்களை குறிக்கின்றன எனில் ன் மதிப்பை காண்க:

(அ)E (ஆ)F (இ)G (ஈ) H

103. A ஆனவர் B-ஐ காட்டிலும் 3 மடங்கு வேகமாக ஒரு வேலையை செய்து முடிப்பார். அவரால் அந்தப் பணியை B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும், நேரத்தை காண்க:

(அ) 9 நாட்கள் (ஆ) 12 நாட்கள் (இ) 3 நாட்கள் (ஈ) 6 நாட்கள்

104. “ZGP” என்பது “WIN” என்ற வார்த்தையை குறித்தால், “VMR” என்பது குறிக்கும் சொல்

(அ) WLS (ஆ) SOP (இ) UPQ (ஈ) TAP

105. ஒரு கோளத்தின் புறப்பரப்பு 154 ச.மீ எனில், அதன் விட்டம் காண்க:

(அ) 7 மீ (ஆ) 4 மீ (இ) 6 மீ (ஈ) 9 மீ

106. ரூ.15,625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில் 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்க:

(அ) ரூ.4063 (ஆ) ரூ.4508 (இ) ரூ.4058 (ஈ) ரூ.4085

107. a,b,c,d மற்றும் e-இன் சராசரி28. a,c மற்றும் e-இன் சராசரி 24, எனில் b மற்றும் d-இன் சராசரி

(அ) 24 (ஆ) 36 (இ) 26 (ஈ) 34

108. ரூ.16,000 தற்போதைய மதிப்புள்ள ஓர் இயந்திரம் தன் மதிப்பில் ஆண்டுக்கு 10% குறைந்தால், எத்தனை ஆண்டுகளில் அது தற்போதைய மதிப்பில் பாதி மதிப்பாகும்?

(அ) 2 ஆண்டுகள் (ஆ) ஆண்டுகள் (இ) 4 ஆண்டுகள் (ஈ) 5 ஆண்டுகள்

109. ரூ.1-க்கும் 20 பைசாவுக்கும் உள்ள விகிதம்

(அ) 1 :5 (ஆ) 1 : 2 (இ) 2 : 1 (ஈ) 5 : 1

110. ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன்பின், முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் இரண்டாவது அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் மூன்றாவது அலைபேசியானது ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும்?

(அ) காலை 7 மணி (ஆ) காலை 8 மணி (இ) காலை 9 மணி (இ) காலை 10 மணி

111. இரண்டு பகா எண்களின் மீ.பொ.வ.

(அ) -1 (ஆ) 0 (இ) 1 (ஈ) 2

112. 250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் ————-க்குச் சமமாகும்.

(அ) 30% (ஆ) 20% (இ) 15% (ஈ) 10%

113. ஒரு பள்ளிகளில் 560 மாணவர்கள் உள்ளனர். அதில் 320 பேர் சிறுவர்கள் எனில், அந்தப் பள்ளியிலுள்ள சிறுமிகளின் சதவீதத்தைக் கண்டறியவும்.

(அ) 41% (ஆ) 42.86% (இ) 43.8% (ஈ) 44%

114. பின்வருவனவற்றை பொருத்தவும்.

அ. IIPGCMS 1. மின் ஆளுமை மற்றும் பாதுகாப்பு

ஆ. CERT-TN 2. MSMEக்கான தொழில் கடன்

இ. ECLGS 3. கிராமப்புற தொழில்களுக்கு புத்துயிர்

ஈ. TNRTP 4. உதவி மைய மேலாண்மை

அ ஆ இ ஈ

அ. 4 1 2 3

ஆ. 3 2 4 1

இ. 3 4 1 2

ஈ. 2 3 4 1

115. தமிழக கல்லூரிகளில் தமிழை பயிற்று மொழியாக அறிமுகப்படுத்திய ஆண்டு

(அ) 1980 (ஆ) 1972 (இ) 1982 (ஈ) 1970

116. ஓய்வூதியதாரர்களுக்கான மின்னணு ஆயுள் சான்றிதழின் பெயர் என்ன?

(அ) ஜீவன் ஜோதி (ஆ) ஜீவன் பிரமாண் (இ) இந்திர தனுஷ் (ஈ) நிதி ஆயோக்

117. தமிழகத்தின் உள்ள மொத்த இட ஒதுக்கீடு ———— சதவீதம்

(அ) 69 (ஆ) 67 (இ) 68 (ஈ) 70

118. கிராமப்புற பெண்கள் பொருளாதார ரீதியில் அதிகாரமடைத்தலுக்கென, ஸ்திரி சக்தி திட்டம், ———– மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

(அ) தமிழ்நாடு (ஆ) கேரளா (இ) கர்நாடகா (ஈ) ஆந்திர பிரதேசம்

119. 1937-40ல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் யார் என்பதைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

(அ) பத்மாவதி ஆஷார் (ஆ) லீலாவதி (இ) ருக்மணி இலக்ஷ்மிபதி (ஈ) மூவலூர் இராமமிர்தம்

120. ஜஸ்டிஸ் கட்சியின் முந்தைய பெயர்

(அ) மதராஸ் மகாஜன சபை (ஆ) மதராஸ் நேட்டிவ் அசோசியேஷன்

(இ) தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு (ஈ) திராவிடர் கழகம்

121. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க:

பட்டியல் – I சுதந்திர போராட்ட வீரர்கள் பட்டியல்-II பிறந்த இடம்

அ. செண்பகராமன் 1. செங்கோட்டை

ஆ. மாடசாமி 2. வத்தலகுண்டு

இ. வாஞ்சிநாதன் 3. நாஞ்சில் நாடு

ஈ. சுப்ரமணிய சிவா 4. ஓட்டபிடாரம்

அ ஆ இ ஈ

அ. 3 4 1 2

ஆ. 4 3 2 1

இ. 2 4 3 1

ஈ. 1 2 3 4

122. மக்கட் பண்பு இல்லாதவர்கள் எதற்குச் சமமானவர்கள்? என்கிறார் வள்ளுவர்

(அ) எலும்புதோல் போர்த்தவர் (ஆ) மரம் போன்றவர்

(இ) நடை பிணம் போன்றவர் (ஈ) விலங்கு போன்றவர்

123. வள்ளுவர் கூற்றுப்படி மழலைச் சொல் கேளாதவர் எவற்றை இனிது என்பார்கள்?

(அ) குழலிசை, யாழிசை (ஆ) குழலிசை, மத்தள இசை

(இ) யாழிசை, வீணையிசை (ஈ) வீணையிசை, குழலிசை

124. தமிழுக்கு “கதி” என்று அழைக்கப்படுபவர்கள்

(அ) இளங்கோ, புகழேந்தி (ஆ) கம்பர், திருவள்ளுவர் (இ) ஒளவையார், பரணர் (ஈ) கபிலர், பரணர்

125. இரவலர்க்குக் குதிரைகள் நல்கிய கடையெழு வள்ளர் யார்?

(அ) அதியமான் (ஆ) பாரி (இ) காரி (ஈ) ஆய்அண்டிரன்

126. தமிழகத்தில் எவ்விடத்தில் ரோமானிய குடியரசு காசுகள் கிடைத்தன?

(அ) சென்னை (ஆ) கரூர் (இ) மதுரை (ஈ) தஞ்சாவூர்

127. மருத குலத்தில் வாழும் மக்கள்

(அ) குறவர் (ஆ) உழவர் (இ) இடையர் (ஈ) ஆயர்

128. கீழ்கண்ட பத்திரிக்கைகளில் மகாத்மா காந்தி ஆரம்பிக்காத அவரோடு தொடர்பற்ற பத்திரிக்கை எது?

(அ) இந்தியன் ஒப்பினியன் (ஆ) எங் இந்தியா (இ) நவஜீவன் (ஈ) ஹிந்துஸ்தான் டைம்ஸ்

129. ஆங்கிலேயர்கள் தங்கள் கவனத்தை வ.உ.சிதம்பரம் பெயரில் செலுத்தக் காரணம் எது?

(அ) வ.உ.சி.கடல் கடந்த வாணிபத்தின் பண்டைய பெருமையை மீண்டும் ஏற்படுத்தினார்.

(ஆ) நீராவி கப்பல் கம்பெனியின் பங்குகளை விற்றார்

(இ) வ.உ.சி. மக்களின் கவனத்தை சுதேசி இயக்கத்தின் பால் ஈர்த்தார்

(ஈ) சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை தொடங்கினார்

130. ——— என்பவர் பகத்சிங்-ன் மாமா மற்றும் பாரத மாதா கழகம் என்ற அமைப்பை தோற்றுவித்தவராவார்.

(அ) அர்ஜீன் சிங் (ஆ) அஜித் சிங் (இ) பல்பீர் சிங் (ஈ) குல்தீப் சிங்

131. சுயராஜ்ய கட்சியை ஆரம்பித்தவர்

(அ) பால கங்காதர திலகர் (ஆ) சித்தரஞ்சன் தாஸ் மற்றும் மோதிலால் நேரு

(இ) பிபின் சந்திர பால் (ஈ) அன்னிபெசண்ட்

132. எந்த ஐந்தாண்டுத் திட்டமானது “விரைவான நிலையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி” என்பதை நோக்கம் மற்றும் உத்தியாகக் கொண்டிருந்தது?

(அ) 10வது திட்டம் (ஆ) 12 வது திட்டம் (இ) 9 வது திட்டம் (ஈ) 8 வது திட்டம்

133. பின்வருவனவற்றுள் எது விவசாய பொருட்களின் விலைக் கொள்கை கருவிகள் இல்லை?

(அ) இடையக பங்கு (ஆ) ஆதரவு விலைகள்

(இ) கொள்முதல் விலைகள் (ஈ) விவசாயிகளுக்கு கடன் வசதி செய்து தருதல்

134. மானிய உதவி மாநிலங்களுக்கு வழங்கப்படுவது ஏன்?

(அ) மத்திய-மாநிலங்களுக்கு இடையே நல்ல உறவுகளை பராமரித்தல்

(ஆ) மாநில வரவு செலவுத் திட்டங்களில் வழக்கமான இடைவெளிகளை நிரப்புவதற்காக

(இ) மாநில திட்டங்களுக்கு நிதியளிக்க

(ஈ) அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு உதவுதல்

135. இந்திய கூட்டாட்சி முறையை “கூட்டுறவுக் கூட்டாட்சி” என விவரித்தவர் யார்?

(அ) கிரான்வில் ஆஸ்டின் (ஆ) டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் (இ) ஜவஹர்லால் நேரு (ஈ) D.C.வேரீ

136. கீழ்கண்டவற்றுள் எது ஒரு குடிமகனின் கடமையல்ல?

(அ) அரசியலமைப்புக்கு ஏற்ப நடந்து அதனுடைய கோட்பாடுகள் நிறுவனங்கள், தேசிய கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை மதித்து நடத்தல்

(ஆ) இந்தியாவின் இறைமை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை பேணி பாதுகாக்க வேண்டும்

(இ) தேவைப்படும் போது எல்லாம் நாட்டை பாதுகாப்பதும், நாட்டுக்கு சேவை செய்யவும் வேண்டும்

(ஈ) கட்டாய இராணுவ சேவை செய்ய வேண்டும்

137. பஞ்சாயத்து ராஜ் பற்றிய குழுக்களை அதன் தலைவருடன் பொருத்துக:

பஞ்சாயத்து தலைவர்

அ. பஞ்சாயத்து ராஜ் தேர்தல் 1. ஜி.ராமச்சந்திரன்

ஆ. பஞ்சாயத்து ராஜ் பயிற்சி மையங்கள் 2. வி.ஆர்.ராவ்

இ. சமுதாய மேம்பாடும் பஞ்சாயத்துராஜீம் 3. கே.சந்தானம்

ஈ. பஞ்சாயத்துராஜின் புள்ளியியல் பகுப்பாய்தல் 4. திருமதி தயா சவுபே

அ ஆ இ ஈ

அ. 3 4 1 2

ஆ. 3 1 4 2

இ 4 1 2 3

ஈ. 1 3 4 2

138. இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை வடிவத்தை மாற்ற இயலாது என்று கூறிய வழக்கு எது?

(அ) சங்கரி பிரசாத் Vs. இந்திய ஒன்றியம் (ஆ) கோலக் நாத் Vs. பஞ்சாப் மாநிலம்

(இ) கேசவானந்த பாரதி Vs. கேரள அரசு (ஈ) மினர்வா மில் Vs. இந்திய ஒன்றியம்

139. இந்தியாவிலுள்ள “சாங்போ” இனத்தவரை குறிப்பிடுகையில் கீழே உள்ள அறிக்கைகளில் எது சரியானதாக கருதப்படுகிறது.

1. அவர்கள் முக்கியமாக உத்ரகாண்ட் மாநிலத்தின் வாழ்கிறார்கள்.

2. அவர்கள் பஸ்நினா என்ற வெள்ளாட்டிலிருந்து அதிகப்படியான கம்பளியை பெறுகின்றனர்.

3. அவர்கள் மலைவாழ் இனத்தவர் என்ற பிரிவில் இருக்கின்றனர்.

(அ) 1 மட்டும் (ஆ) 2 மற்றும் 3 மட்டும் (இ) 3 மட்டும் (ஈ) 1, 2 மற்றும் 3

140. விஜய நகர பேரரசின் வளத்தை குறிப்பிடும்பொழுது கீழ்வருவனவற்றை கவனிக்கவும்.

1. விஜய நகர பேரரசின் வளர்ச்சிக்கு காரணம் அதன் விவசாயம், தொழிற்சாலை, வாணிபம்.

2. மாநிலங்கள் நீர்ப்பாசன முறையை கடைப்பிடித்தது.

3. தொழிற்சலைகளுக்கு மாநிலம் முக்கியத்துவம் கொடுத்தது.

4. வாணிபம் உள்நாடு, கடற்கரை ஓரம், வெளிநாட்டைச் சார்ந்தது.

மேலே கூறப்பட்டுள்ள கூற்றின் கால நிகழ்வில் எது சரியானவை?

(அ) 1-2-3-4 (ஆ) 4-3-2-1 (இ) 2-3-4-1 (ஈ) 3-1-4-2

141. சிந்து சமவெளி மக்களின் சமய நம்பிக்கையில் கீழ்க்கண்ட கூற்றில் எவை சரியானவை?

1. தாய் வழிபாடு கலாச்சாரம் சமுதாயத்தில் உள்ளது.

2. உருவ வழிபாட்டில் கடவுள் வழிபாடு என்று வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டது.

(அ) 1 மற்றும் 2 (ஆ) 1 (இ) 2 (ஈ) 1ம் அல்ல 2ம் அல்ல

142. ஒளி வேதிப்புகை மூட்டத்தில் உள்ள முக்கிய வாயுக்கூறுகள் யாவை?

(அ) நைட்ரஜன் ஆக்ஸைடுகள், CO மற்றும் SO2

(ஆ) நைட்ரஜன் ஆக்ஸைடுகள், CO மற்றும் H2S

(இ) நைட்ரஜன் ஆக்ஸைடுகள், ஓசோன் ஹைட்ரோ கார்பன்கள்

(ஈ) நைட்ரஜன் ஆக்ஸைடுகள், SO2 மற்றும் ஹைட்ரோ கார்பன்கள்

143. பசுமை மாறாக் காடுகள் காணப்படும் மாநிலம்

(அ) அருணாச்சலப் பிரதேசம் (ஆ) ஒடிசா (இ) மேற்கு வங்காளம் (ஈ) ஆந்திரப்பிரதேசம்

144. இந்திய திட்ட நேரத்தை கணக்கிட பயன்படுத்தப்படும் தீர்க்கரேகையானது

(அ) 37o 6’ கி (ஆ) 68 o 7’ கி (இ) 97 o 25’ கி (ஈ) 82 o 30’ கி

145. FAME திட்டத்தின் நோக்கம்

(அ) பொது போக்குவரத்தை மின்மயமாக்க

(ஆ) கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களை மின்மயமாக்க

(இ) நகர்ப்புறங்களில் உள்ள குடும்பங்களை மின்மயமாக்க

(ஈ) பூங்காக்கள் மற்றும் கடற்கரையை மின்மயமாக்க

146. “குடியரசு” எனும் பதம் முதன் முதலில் சொல்லப்பட்ட இடம்

(அ) கிரேக்கம் (ஆ) ரோம் (இ) ஜெர்மனி (ஈ) பிரான்சு

147. கீழ்காணப்படும் பழங்குடியினர் மற்றும் அவர்களின் இருப்பிடம், எது/எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளன?

பழங்குடியினர் (பெயர்) இருப்பிடம்

அ. ஜாராஸ் அந்தமான் நிகோபார் தீவுகள்

ஆ. காக்ரா உத்திரப்பிரதேசம்

இ. கோராகா தமிழ்நாடு

ஈ. ரத்தவா பீஹார்

(அ) அ மற்றும் இ (ஆ) ஆ மற்றும் ஈ (இ) அ மற்றும் ஆ (ஈ) இ மற்றும் ஈ

148. விலங்குகளின் ஒரு பகுதி மற்றொரு பகுதியோடு அடிப்படையில் ஒத்திருப்பது ———– என்று அழைக்கப்படுகிறது.

(அ) சீரியல் ஹோமாலஜி (ஆ) சீரியல் இணையுறுப்புகள்

(இ) சீரியல் வாயுறுப்புகள் (ஈ) வெஸ்டிஜியல் உறுப்புகள்

149. d-தொகுதி தனிமங்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது

(அ) உள்இடைநிலைத் தனிமங்கள் (ஆ) இடைநிலைத் தனிமங்கள்

(இ) கார உலோகங்கள் (ஈ) கார மண் உலோகங்கள்

150. கீழ்காண்பவற்றுள் எது சரியான கூற்று?

(அ) எந்த பொருளும் ஒளியின் வேகத்தை தாண்டாது

(ஆ) ஒரு பொருளின் எடை எப்போதும் மாறாதது

(இ) ஒரு பொருளின் எடை அதன் வேகத்தை பொறுத்ததல்;ல

(ஈ) சுழி நிலை எடையுள்ள எந்தத் துகளும் இல்லை

151. பொருள் உணராமல் கற்றல் எங்கு பயன்படுத்தப்படலாம் என்பதை அடையாளம் காண்க:

(அ) அணுக்கள் மற்றும் கூறுகளைப் பற்றி கற்றல் (ஆ) பெருக்கல் அட்டவணைகளை கற்றல்

(இ) ஒரு கனச்செவ்வகம் பற்றி கற்றல் (ஈ) சமநிலை பற்றி கற்றல்

152. 12 செ.மீ, 13 செ.மீ. …, 23 செ.மீ. ஆகியனவற்றை முறையே பக்க அளவுகளாகக் கொண்ட 12 சதுரங்களின் மொத்தப் பரப்பளவு காண்க:

(அ) 3818 ச.செ.மீ (ஆ) 650 ச.செ.மீ (இ) 4324 ச.செ.மீ (ஈ) 506 ச.செ.மீ

153. பின்வரும் தொடரில் விடுபட்ட எண்ணைக்காண்க:

7,26,63,124,215,342,———-

(அ) 391 (ஆ) 421 (இ) 471 (ஈ) 511

154. 48 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 7 மணி நேரம் வேலை செய்து 24 நாட்களில் முடிப்பர் எனில் 28 ஆண்கள் அதே வேலையை நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்து எத்தனை நாட்களில் முடிப்பர்?

(அ) 36 நாட்கள் (ஆ) 46 நாட்கள் (இ) 38 நாட்கள் (ஈ) 40 நாட்கள்

155. இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு குடும்பத்தில், குறைந்தது ஒரு பெண்ணாவது இருப்பதற்கான நிகழ்தகவு

(அ) 3/4 (ஆ) 1/2 (இ) 1/4 (ஈ) 1

156. A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?

(அ) 3 நாட்கள் (ஆ) 12 நாட்கள் (இ) 24 நாட்கள் (ஈ) 32 நாட்கள்

157. ஒரு சாய் சதுரத்தின் ஒரு மூலைவிட்டம் மற்றதைக் காட்டிலும் மூன்று மடங்கு மூலை விட்டங்களின் கூடுதல் 52 செ.மீ. எனில், சாய்சதுரத்தின் பரப்பளவு?

(அ) 507 செ.மீ2 (ஆ) 254 செ.மீ2 (இ) 253 1/2 செ.மீ2 (ஈ) 507 செ.மீ2

158. 10% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், ரூ.4400 ஆனது ரூ.4851 ஆக எடுத்து கொள்ளும் நேரம் ————— ஆகும்

(அ) 6 மாதங்கள் (ஆ) 1 ஆண்டு (இ) 1 1/2 ஆண்டுகள் (ஈ) 2 ஆண்டுகள்

159. ஓர் அசலானது 2 ஆண்டுகளில், ஆண்டுக்கு 4% கூட்டு வட்டியில் ரூ.2028 ஆக ஆகிறது. எனில், அசலைக் காண்க:

(அ) ரூ.1775 (ஆ) ரூ.1785 (இ) ரூ.1875 (ஈ) ரூ.1885

160. 180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?

(அ) 16 (ஆ) 18 (இ) 14 (ஈ) 12

161. இரு எண்கள் 2 : 5 எனும் விகிதத்தில் உள்ளன. ஒவ்வொரு எண்ணுடனும் 4-ஐக் கூட்டினால் அவற்றின் விகிதம் 4 : 9 என அமையும் எனில் அவ்விரு எண்கள்

(அ) 16 மற்றும் 40 (ஆ) 18 மற்றும் 45 (இ) 20 மற்றும் 50 (ஈ) 22 மற்றும் 55

162. 8,9,12 ஆகிய எண்களால் வகுபடும் மிகப்பெரிய 4 இலக்க எண் என்ன?

(அ) 9999 (ஆ) 9996 (இ) 9696 (ஈ) 9936

163. 101,126 மற்றும் 152-ஐ வகுக்கும் போது முறையே 5,6 மற்றும் 8-ஐ மீதிகளாகக் கொடுக்கும் மிகப்பெரிய எண் யாது?

(அ) 18 (ஆ) 24 (இ) 26 (ஈ) 25

164. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை கருத்தில் கொள்க:

1. மாநில அரசின் பல்வேறு துறைகளில் மின்-ஆளுமை அமலாக்கத்திற்கு வழிகாட்டுதல்.

2. தமிழ் மொழி மற்றும் தமிழ் யூனிகோட் பயன்பாட்டை ஊக்குவித்தல்.

3. அரசின் உறபத்தி திறன் அளவை ஊக்குவித்தல்.

4. B2B மற்றும் B2C-யின் தடையில்லா பணிகளுக்கு ஆதரவளித்தல்.

5. G2G மற்றும் G2C-யின் தடையில்லா பணிகளுக்கு ஆதரவளித்தல்.

6.அகண்ட அலைவரிசை பயன்பாட்டை அதிகரித்தல்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றுள் தமிழக அரசின் மின் ஆளுமைக் கொள்கை 2017-ன் நோக்கங்களை கண்டறிந்து குறிப்பிடு

(அ) 1,2,4,5 மற்றும் 6 (ஆ) 1,2 மற்றும் 4 மட்டும்

(இ) 1,2,3,4 மற்றும் 6 (ஈ) 1, 4 மற்றும் 6 மட்டும்

165. இந்தியாவில் மொத்தம் 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன. அவற்றில் 12 அரசு துறைமுகங்கள் ———- ஒன்று மட்டும் பெரு நிறுவன துறைமுகமாகும்.

(அ) தூத்துக்குடி துறைமுகம் (ஆ) போர்ட் பிளைர் துறைமுகம்

(இ) எண்ணூர் துறைமுகம் (ஈ) சென்னை துறைமுகம்

166. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:

திட்டம் பெயர்

அ. மகப்பே றுநல உதவித்திட்டம் 1. அன்னை தெரசா

ஆ. வளரிளம் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம் 2. சத்தியவாணி முத்து அம்மையார்

இ. இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் 3. ராஜீவ் காந்தி

ஈ. ஆதரவற்ற பெண்களுக்கு திருமண நிதி உதவித்திட்டம் 4. இந்திரா காந்தி

அ ஆ இ ஈ

அ. 1 3 2 4

ஆ. 4 2 3 1

இ. 1 4 2 3

ஈ. 4 3 2 1

167. டாக்டர் முத்துலெட்சுமி எந்த சமுதாய தீமைக்கு எதிராக போராடினார்?

(அ) குழந்தைத் திருமணம் (ஆ) தேவதாசி அமைப்பு (இ) வரதட்சணை அமைப்பு (ஈ) பலதார மணம்

168. “பெண் வேலை பங்கேற்பு விகிதம்” அதிகம் கொண்ட மாவட்டம்

(அ) காஞ்சிபுரம் (ஆ) சென்னை (இ) கோயம்புத்தூர் (ஈ) பெரம்பலூர்

169. காமராஜர் தமிழக முதலமைச்சராக எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார்?

(அ) 5 (ஆ) 7 (இ) 9 (ஈ) 15

170. தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமானவர் – உப்பு சத்தியாகிரகத்தை எடுத்து நடத்தி கைது செய்யப்பட் முதல் பெண்மணி

(அ) திருமதி.ருக்மணி லட்சுமிபதி (ஆ) சரோஜினி நாயுடு (இ) அம்புஜம்மாள் (ஈ) பார்வதி தேவி

171. எல்லா உயிர்களாலும் கைகூப்பித் தொழப்படுபவர் யார்?

(அ) தவம் செய்தவன் (ஆ) அரசன்

(இ) கொல்லான் புலால் மறுத்தான் (ஈ) நுண்மான் நுழைபுலம் இல்லான்

172. நூலோர் தொகுத்த அறங்களுள் தலையாய அறமாகத் திகழ்வது எது எனத் திருக்குறள் வலியுறுத்துகிறது?

(அ) பிற உயிர்களின் துன்பத்தை நீக்குதல் (ஆ) பிறர் மனைவியை விரும்பாமல் இருத்தல்

(இ) பிற உயிர்களிடத்து அன்பு செலுத்துதல் (ஈ) பகிர்ந்து உண்டு உயிர்களைப் பாதுகாத்தல்

173. ஆபுத்திரனே!

அமுதசுரபியைத் தான்

நீ தந்து சென்றாய்

இப்போது

எங்கள் கையில் இருப்பதோ

பிச்சைப்பாத்திரம்

– ஆபுத்திரன் யார்? அமுதசுரபி எது?

(அ) அரசன், அட்சயபாத்திரம் (ஆ) காந்தியடிகள், விடுதலை

(இ) மணிமேகலை,அட்சயபாத்திரம் (ஈ) காமதேனு, கற்பகத்தரு

174. “வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே”

– என்ற புறநானூற்றுப் பாடலில் கீழ்ப்பால், மேற்பால் என்பதன் உட்கருத்து யாது?

(அ) வறுமை, வளமை

(ஆ) இனப்பாகுபாடு

(இ) பிறப்பினால் வரும் சிறப்பினும் கல்வி அறிவினால் எய்தும் பெருமை

(ஈ) எல்லோரும் கல்வி கற்று மேம்பட வேண்டும்

175. கூற்று (A) : அதுவரை நாட்டைப் பிரிவினை செய்யும் முயற்சிக்கு எதிராக இருந்த காந்தியடிகள் முஸ்லீம் லீக்கின் பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்றார்.

காரணம் (R) : லீக் “நேரடி நடவடிக்கை நாளில் ஈடுபட அழைத்ததோடு கல்கத்தாவில் கலவரங்களும் கொள்ளைகளும் நடந்தேரின”

(அ) கூற்று (A) சரி காரணம் (R) கூற்றை விளக்குகிறது

(ஆ) கூற்று (A) சரி காரணம் (R) தவறு

(இ) கூற்று (A) தவறு காரணம் (R) சரி

(ஈ) கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) கூற்றை விளக்கவில்லை

176. இந்திய தேசிய காங்கிரசில் நீண்ட காலம் தலைவராக இருந்தவர் யார்?

(அ) பானர்ஜி (ஆ) ராஷ் பிகாரி கோஷ் (இ) அபுல்கலாம் ஆசாத் (ஈ) அன்னிபெசண்ட்

177. கீழ்க்கண்ட கூற்றுகளில் எ.ஓ.ஹீயமை பற்றி சரியான கூற்று யாது?

1. 1883 மற்றும் 1884 ஹீயும், ரிப்பன் பிரபுவிற்கு ஆலோசகராக பணிபுரிந்தார்.

2. பிரம்மஞான சபை என்ற அமைப்போடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

3. 1884இல் இந்திய தேசிய யூனியனை ஆரம்பித்தார்.

4.இந்திய தேசிய யூனியனின் நோக்கம் இந்திய தேசியமாக இருந்தது.

(அ) 1,2,3 சரியான கூற்று 4வது கூற்று தவறானது (ஆ) 1,2 கூற்று சரியானது 3,4 கூற்று தவறானது

(இ) 1,4 கூற்று சரியானது, 3,2 கூற்று தவறானது (ஈ) 1,2,3, 4 கூற்று சரியானது

178. மனிதவள மேம்பாட்டு குறியீடு எதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது?

1. கல்வி நிலை.

2.ஆயுட்காலம்.

3.வாழ்க்கைத் தரம்.

4. இடப்பெயர்ச்சி இல்லாமை

(அ) 1,2 மற்றும் 4 (ஆ) 1,3 மற்றும் 4 (இ) 2,3 மற்றும் 4 (ஈ) 1,2 மற்றும் 3

179. குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவன வளர்ச்சி சட்டம் 2006ன் கூற்றுப்படி சிறு நிறுவனத்தின் மூலதனத் தொகை ———– ஆகும்.

(அ) 1 லட்சம் – 25 லட்சம் (ஆ) 25 லட்சம் – 5 கோடி

(இ) 5 கோடி – 10 கோடி (ஈ) 10 கோடிக்கு மேல்

180. “ஒரு நாடு அதன் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பட்சத்தில், அதன் வருமானம் குறைவாக இருந்தாலும் பாதகமில்லை” – இந்தக் கூற்றை கூறியவர்.

(அ) மகாத்மா காந்தியடிகள் (ஆ) டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்

(இ) திருவள்ளுவர் (ஈ) ஜவஹர்லால் நேரு

181. பின்வரும் கூற்றை கவனிக்க:

1. பிமரு மாநிலங்கள் அதிக மக்கட் தொகை கொண்டுள்ளன.

2. பிமரு மாநிலங்கள் குறைவான மக்கட் தொகை கொண்டுள்ளன.

3. பிமரு மாநிலத்தில் எழுத்தறிவு விகிதம் அதிகமாக உள்ளது.

4. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் பிமரு மாநிலங்களில் தலா வருமானம் அதிகம்.

மேலே கண்டவற்றுள் எவை சரியான கூற்று?

(அ) 2 மற்றும் 3 (ஆ) 3 மற்றும் 4 (இ) 1 மற்றும் 2 (ஈ) 1 மட்டும்

182. பின்வரும் வாக்கியம் I மற்றும் II கவனிக்கவும்.

சரியான விடையை தேர்வு செய்க:

1. பாராளுமன்றம் மத்திய பட்டியலில் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றது.

2 பொதுப்பட்டியல் மற்றும் மாநில பட்டியலில் இடம் பெறாதவைகளில் பாராளுமன்றமே சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றுள்ளது.

(அ) 1 உண்மை 2 தவறு (ஆ) 1 தவறு 2 உண்மை

(இ) 1 மற்றும் 2 உண்மை (ஈ) 1 மற்றும் 2 தவறு

183. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் உயர்நீதி மன்றங்களை கவனிக்கவும்:.

1. தில்லி உயர்நீதிமன்றம்.

2.ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்.

3. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம்.

4. ஓரிசா உயர்நீதிமன்றம்.

இவை தொடங்கப்பட்ட காலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தவும்.

(அ) 4,3,2 மற்றும் 1 (ஆ) 2,3,4 மற்றும் 1 (இ) 3,4,2 மற்றும் 1 (ஈ) 1,3,2 மற்றும் 4

184. கீழ்காணும் இவர்களில் எந்த பிரதம மந்திரி நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பின் மூலம் ராஜினாமா செய்யவில்லை.

(அ) H.D.தேவகவுடா (ஆ) வி.பி.சிங் (இ) மன்மோகன் சிங் (ஈ) ஏ.பி.வாஜ்பாய்

185. அரசியலமைப்பு 44வது திருத்த சட்டம் 1978, சொத்துரிமையை

1. அடிப்படை உரிமையிலிருந்து சட்ட உரிமையாக மாற்றியது.

2. சட்ட உரிமையிலிருந்து அடிப்படை உரிமையாக மாற்றியது.

3. அடிப்படை உரிமையிலிருந்து அரசியலமைப்பின் அடிப்படை கூறாக மாற்றியது.

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானது?

(அ) 1 மட்டும் (ஆ) 2 மட்டும் (இ) 3 மட்டும் (ஈ) 2 மற்றும் 3 மட்டும்

186.”வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கருத்தில், இந்தியா இனங்களின் அருங்காட்சியகம் என்று உள்ளது கீழே கூறப்பட்டுள்ள கூற்றில் எது சரியானவை?

1. இந்தியாவில் பெரும்பான்மை மக்கள், இமயமலையிலிருந்து வந்த மக்களின் வழித் தோன்றல்கள்.

2.வேறுபட்ட இனமக்கள் பொதுவான இயற்கை உடல் அமைப்பு மற்றும் உணவு பழக்கத்தையும் கொண்டு இருந்தனர்.

(அ) 1 (ஆ) 2 (இ) 1 மற்றும் 2 (ஈ) 1ம் அல்ல 2ம் அல்ல

187. இந்தியாவில் முதன்முதலில் நிலக்கொடை பற்றிப் பேசும் கல்வெட்டு அமைந்துள்ள இடம் எது?

(அ) அலகாபாத் (ஆ) கிர்னார் (இ) நாசிக் (ஈ) பாட்னா

188. 1739ம் ஆண்டு பெர்சிய மன்னர் நாதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுத்த பொழுது இந்தியாவை ஆட்சி செய்த முகலாய மன்னரின் பெயரைக் குறிப்பிடுக:

(அ) பகதூர்ஷா -I (ஆ) பருக்க்ஷயர் (இ) முகம்மது ஷா (ஈ) அகம்மது ஷா

189. யாருடைய காலம் “சூத்திர கிரந்த காலம்” என்று அழைக்கப்படுகிறது?

(அ) மௌரியர்கள் காலம் (ஆ) குப்தர்களின் காலம்

(இ) சாளுக்கியர்களின் காலம் (ஈ) சோழர்களின் காலம்

190. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹரப்பா பற்றிய கூற்றுகளில் எது தவறானது?.

1. ஹரப்பாவின் சுவர்கள் வலிமையற்றவை.

2. டேக்டானிக் குளறுபடிகளால் நகரம் அழிவுற்றது.

3. சிறிய தலையையுடைய அர்மீனிய மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

4. ஹரப்பா கி.மு.1750-க்குப் பிறகு அழிவுற்றது.

(அ) 1 மற்றும் 2 சரி 3 மற்றும் 4 தவறு (ஆ) 1 சரி 2, 3 மற்றும் 4 தவறு

(இ) 1 தவறு 2,3 மற்றும் 4 சரி (ஈ) 1,2 மற்றும் 3 தவறு 4 சரி

191. சர்வதேச சுனாமி தகவல் மையம் அமைந்துள்ள இடம்

(அ) ஜகார்த்தா, இந்தோனேசியா (ஆ) ஹொனலுலு, அமெரிக்கா

(இ) புதுச்சேரி, இந்தியா (ஈ) கொலராடோ, அமெரிக்கா

192. 18ஆம் நூற்றாண்டின் புளுமென்பெக்கின் 5 வகையான உலக மனித இன வகைபாடு இதன் அடிப்படையிலானது.

(அ) சிகை வடிவம் (ஆ) மூக்கின் வடிவம் (இ) விழி வண்ணம் (ஈ) சரும நிறம்

193. ஜோரம் பெரிய உணவு பூங்கா அமைந்துள்ள இடம்

(அ) ஆந்திரப்பிரதேசம் (ஆ) திரிபுரா (இ) மிசோரம் (ஈ) உத்திரப்பிரதேசம்

194. இந்தியாவில் காணப்படும் மிகப்பெரிய உப்பங்கழி ஏரி

(அ) பழவேற்காடு ஏரி (ஆ) கொல்லெரு ஏரி (இ) நாராயண் சரோவர் ஏரி (ஈ) சில்கா ஏரி

195. கீழ்கண்டவற்றைப் பொருத்துக:

புகழ்பெற்ற நபர் தனித்துறை

அ. சத்யா நாதெல்லா 1. தொலையுணர்வு

ஆ. சித்தார்த் முகர்ஜி 2. பொருளாதாரம்

இ. கீதா கோபிநாத் 3. மேகத்தொகுப்பு

ஈ. S.K.சிவக்குமார் 4. மருத்துவம்

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 3 4 2 1

இ. 4 3 1 2

ஈ. 2 1 4 3

196. பொறியியல், மானிடவியல், சமூக அறிவியல் போன்ற பாடத் தொகுதிகளை தேசிய அளவில் திறந்த இணைய வழி கல்வியாக அளித்துக் கொண்டிருக்கும் திட்டம் இதுவாகும்.

(அ) சுபம் (Subam) (ஆ) ஸ்வயம் (Swayam) (இ) சுயம் (Suyam) (ஈ) ஸ்வத்யம் (Swasthyam)

197. ——— பாக்டீரியாவால் கம்பளி பிரிப்போர் நோய் உருவாகிறது

(அ) பேசிலஸ் ஆந்த்ராசிஸ் (ஆ) பேசிலஸ் செரியஸ்

(இ) பேசிலஸ் மெகாட்டேரியம் (ஈ) பேசிலஸ் சப்டிலிஸ்

198. புளுமின் கற்பித்தல் நோக்கங்களின் வகைப்பாடு விளக்குவது (விவரிப்பது)

(அ) அறவுசார் மற்றும் உளசார் களங்கள்

(ஆ) அறிவுசார் மற்றும் உள-இயக்கம் சார் களங்கள்

(இ) அறிவுசார், உளசார் மற்றும் உள-இயக்கம் சார் களங்கள்

(ஈ) உளசார் மற்றும் உள-இயக்கம் சார் களங்கள்

199. கீழ்காண்பவற்றுள் எது காந்த சேமிப்பு சாதனம் ஆகும்?

(அ) DVD (ஆ) பென் டிரைவ் (இ) குறந்தகடு (ஈ) பிளாப்பி தகடு

200. சாதாரண நிலையிலிருந்து மீக்கடத்து நிலைக்கான மாற்றம் வெப்ப இயக்கவியலின் படி

(அ) சுழியானது (ஆ) தொடர்ச்சியற்றது (இ) மீள முடியாதது (ஈ) மீளக்கூடியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!