General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 11

Tnpsc General Tamil Previous Question Paper 11

Tnpsc General Tamil Previous Question Paper 11: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில் உறங்கிய போது கவரி வீசிய மன்னன்

(அ) சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை

(ஆ) பாண்டியன் நெடுஞ்செழியன்

(இ) கோப்பெருஞ்சோழன்

(ஈ) முதலாம் குலோத்துங்கன்

விடை மற்றும் விளக்கம்

(அ) சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை

விளக்கம்:

மோசிகீரனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரைச் சேர்ந்தவர். “கீரன்” என்பது இவரது குடிப்பெயராகும். இவருடைய பாடல்கள் அகநானூற்றில் ஒன்றும், நற்றிணையில் ஒன்றும், குறுந்தொகையில் மூன்றும் புறநானூற்றில் நான்கும் இடம் பெற்றுள்ளன.

ஒரு முறை இவர் உடல் சோர்வினால் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் படுத்து உறங்கிவிட்டார். முரசுக் கட்டிலில் அமர்வதும் படுப்பதும் மரணத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்ட அக்காலத்தில் அம்முரசுக்கட்டிலுக்கு உரிமையுடைய “சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை’ என்ற மன்னன் புலவர் மீதும் கொண்ட பற்றினால் அவருக்கு கவரி வீசினான்.

2. பொருத்துக:

அ. கவுந்தியடிகள் – 1. ஆயர்குல மூதாட்டி

ஆ. மாதரி – 2. மாநாய்கனின் மகள்

இ. மாதவி – 3. சமணத்துறவி

ஈ. கண்ணகி – 4. ஆடலரசி

அ ஆ இ ஈ

(அ) 3 1 4 2

(ஆ) 2 4 1 3

(இ) 3 4 2 1

(ஈ) 1 3 2 4

விடை மற்றும் விளக்கம்

(அ) 3 1 4 2

3. கடிகை என்பதன் பொருள் யாது?

(அ) அணிகலன்

(ஆ) கடித்தல்

(இ) கடுகு

(ஈ) காரம்

விடை மற்றும் விளக்கம்

(அ) அணிகலன்

விளக்கம்:

கடிகை-துண்டு, ஆபரணம், தோள்வளை ஆகிய பொருள்களைக் குறிக்கும்.

4. “கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா” எனக் கூறும் நூல்

(அ) நான்மணிக்கடிகை

(ஆ) பழமொழி நானூறு

(இ) ஏலாதி

(ஈ) திரிகடுகம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) பழமொழி நானூறு

விளக்கம்:

பழமொழி நானூறு

ஆற்றவும் கற்றார் அறிவுடையார், அஃதுடையார்

நாற்றிசையும் சொல்லாத நாடில்லை – அந்நாடு

வேற்றுநா டாகா; தமவேயாம் ஆயினால்

“ஆற்றுணா வேண்டுவ தில்”

– 40வது பாடல்.

ஆசிரியர்-முன்றுறை அரையனார்.

பொருள்: கற்கவேண்டிய நூல்களை முழுமையாகக் கற்றவர் அறிவுடையோர் ஆவர். அவருடைய புகழ் நான்கு திசைகளிலும் பரவியிருக்கும். அவருடைய புகழ் பரவாத நாடு ஏதும் இல்லை. வேற்று நாடுகளும் அவரின் நாடுகளேயாகும். எனவே அந்நாடுகளுக்குச் செல்லும்போது வழி நடை உணவை அவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.

ஆற்றுணா-வழிநடை உணவு. இக்காலத்தில் “கட்டுச்சோறு” என்றும் குறிப்பிடுவர்.

5. “வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார்

உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து”

– எனத் திருக்குறளை பாரட்டியவர்.

(அ) பரிமேலழகர்

(ஆ) கபிலர்

(இ) மாங்குடி மருதனார்

(ஈ) பரணர்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) பரணர்

விளக்கம்:

திருவள்ளுவமாலை.

மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்

ஞால முழுதும் நயந்தளந்தான் – வாலறிவின்

வள்ளுவரும் தம் குறள் வெண் பாவடியால் வையத்தார்

உள்ளுவதெல் லாமளந்தார் ஓர்ந்து

– பரணர்.

பொருள்:இப்பாடலில் வள்ளுவப் பெருமானைக் காக்கும் கடவுளாகிய திருமால் எனக் கூறுகிறார் பரணர். திருமால், வாமன அவதாரத்தில் குறனாய்த் (குள்ளனாய்) தோன்றி தன் இரண்டு அடிகளால் உலகத்தை அளந்தார். அதுபோல வள்ளுவரும் தன்னுடைய மெய்யறிவினால் தம் குறள் வெண்பா அடிகள் இரண்டைக் கொண்டு இந்த உலகத்தாரால் நினைக்கப்பட்டவற்றை எல்லாம் ஆராய்ந்து அளந்தார்.

6.பொருத்துக:

நூலாசிரியர் நூல்

1. ஜெயங்கொண்டார் – 1. சடகோபரந்தாதி

2. காரியாசான் – 2. புறநானூறு

3. கம்பர் – 3. கலிங்கத்துப்பரணி

4. கண்ணகனார் – 4. சிறுபஞ்சமூலம்

அ ஆ இ ஈ

அ. 3 4 1 2

ஆ. 1 2 4 3

இ. 2 1 3 4

ஈ. 3 2 4 1

விடை மற்றும் விளக்கம்

அ. 3 4 1 2

7. “என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்”

– என்ற வரிகளைப் பாடியவர்

(அ) திருப்பாணாழ்வார்

(ஆ) குலசேகராழ்வார்

(இ) பேயாழ்வார்

(ஈ) ஆண்டாள்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) குலசேகராழ்வார்

விளக்கம்:

“மீன்நோக்கும்நீள்வயல் சூழ்வித்துவக் கோட் டம்மாளன்

பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்

தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்

கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே”

– குலசேகர ஆழ்வார்.

பொருள்: மீன்கள் நீந்துகின்ற வயல்கள் சூழ்ந்த வித்துவக்கோட்டில் உள்ள பெருமானே! நீ எனக்கு திருவருள் புரியவில்லை என்றாலும், உன்னையே அடைக்கலமாகப் புகுவேனேயன்றி, எனக்கு வேறு ஒரு பற்றில்லை. மன்னவன் ஒருவன் செங்கோல் முறை தவறித் துன்புறுத்தினாலும், அவனுடைய ஆட்சியையே எதிர்நோக்கி வாழ்கின்ற குடிமக்களைப் போல, நான் உன் திருவடிகளையே எண்ணிக் கொண்டிருக்கிறேன.

மேற்கண்ட பாடல் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழியின் முதலாயிரத்தில் உள்ளது.

8. “செறு” என்பதன் பொருள்

(அ) செருக்க

(ஆ) சேறு

(இ) சோறு

(ஈ) வயல்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) வயல்

விளக்கம்:

நற்றிணை 210-வது பாடல்.

அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்

மறுகால் உழுத ஈரச் செறுவின்

வித்தொடு சென்ற வட்டி பற்பல

மீனோடு பெயரும் யாணர் ஊர.

– மிளைகிழான் நல்வேட்டனார்.

பொருள்: உழவர், நெற்கதிர்களை அறுவடை செய்த பின்னர், அகன்ற அழகிய வயலை மறுபடியும் பயிர் செய்ய உழுதனர். பனையோலைப் பொட்டியில் விதை கொண்டு சென்று ஈரமுள்ள அந்நிலத்தில் விதைத்தனர். பின்னர், அவர்கள் அங்குள்ள நீர்;நிலைகளில் பல்வகை மீன்களைப் பிடித்து அப்பெட்டியில் கொண்டு வருகின்ற புது வருவாயினை உடைய மருதநிலத் தலைவனே!

9. திருக்குறளில் “ஏழு என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?

(அ) 11

(ஆ) 09

(இ) 08

(ஈ) 10

விடை மற்றும் விளக்கம்

(இ) 08

விளக்கம்:

திருக்குறளில் “ஏழு” என்னும் எண்ணுப் பெயர் எட்டு குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

10. கீழ்க்கண்ட நூல்களில் “தமிழ் மூவாயிரம்” என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?

(அ) திரிகடுகம்

(ஆ) திருவள்ளுவமாலை

(இ) திருமந்திரம்

(ஈ) திருக்குறள்

விடை மற்றும் விளக்கம்

(இ) திருமந்திரம்

விளக்கம்:

திருமூலர் அருளிய திருமந்திரம் “தமிழ் மூவாயிரம்” என்று அழைக்கப்படுகிறது.

“தந்திரம் ஒன்பது சார்வு

மூவாயிரம் சுந்தரன் ஆகமச் சொன்மொழிந்தானே”

என்ற சிறப்புப் பாயிரப் பகுதி இதனை உறுதி செய்கிறது. இந்நூல் 3,000 பாடல்களைக் கொண்டுள்ளது.

General Tamil Study Materials

General Tamil Previous Questions Pdf

11. “தொண்டர்சீர் பரவுவார்” என்று போற்றப்படுபவர் யார்?

(அ) அப்பூதியடிகள்

(ஆ) திருநாவுக்கரசர்

(இ) சேக்கிழார்

(ஈ) திருஞானசம்பந்தர்

விடை மற்றும் விளக்கம்

(இ) சேக்கிழார்

விளக்கம்:

செயற்கரிய செயல்களைச் செய்து பெருமை பெற்ற சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் நூலான பெரியபுராணத்தை இயற்றியமையால் சேக்கிழார் தொண்டர்சீர் பரவுவார் எனப் போற்றப்பட்டார்.

12. யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்?

(அ) கவுந்தியடிகள்

(ஆ) மாதவி

(இ) அறவணவடிகள்

(ஈ) கண்ணகி

விடை மற்றும் விளக்கம்

சரியான விடை: காயசண்டிகையின் அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை பிச்சையேற்றாள். “காயசண்டிகை” என்ற விடை கொள்குறிகளில் கொடுக்கப்படவில்லை.

விளக்கம்:

மணிமேகலை-பாத்திரங்கொண்டு பிச்சை புக்க காதை

பாடல்-8.

மணமனை மறுகின், மாதவி ஈன்ற

அணிமலர்ப் பூங்கொம்பு, “அகமலி உவகையிற்,

பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம்

பிச்சை ஏற்றல் பெருந்தக வுடைத்து”

பொருள்: மணங்கொண்ட மனையிடத்தாக மாதவியாள் கோவலனோடு வாழ்ந்து பெற்றெடுத்த, அழகிய மலர்களையுடைய பூங்கொம்பு போன்றவளாகிய மணிமேகலை, தன் உள்ளத்தே பெருகும் மகிழ்ச்சியினைக் கொண்டவளாக, “பத்தினிப் பெண்கள் பண்புடனே இடுகின்ற பிச்சையினை முதற்கண் அவ்விடத்தே ஏற்றல் பெரிதும் பெருமையுடயதாகும்” என்றாள்.

பாடல்-9

“குளனணி தாமரைக் கொழுமலர் நாப்பண்

ஒருதனி ஓங்கிய திருமலர் போன்று,

வான்தரு கற்பின் மனையுறை மகளிரில்-

தான்தனி யோங்கிய தகைமையள் அன்றோ

ஆதிரை நல்லாள்! அவள்மனை யிம்மனை;

நீ புகல் வேண்டும், நேரிழை! என்றனள்.

பொருள்: அதனைக் கேட்டதும், அங்கே நின்றிருந்த காயசண்டிகை, குளத்திற்கு அழகுடன் திகழ்கின்ற தாமரையின் கொழுமையான மலர்கள் பலவற்றிற்கும் நடுவிலே, ஒப்பற்ற தனிச் சிறப்புடையதாக உயரமுடன் விளங்கும் ஓர் அழகிய மலரினைப் போன்று மழைவளம் தரும் கற்புச் செல்வியரான இல்லுறை மகளிருள், தான் தனித்த புகழுடைய தன்மையன் ஆதிரையாள் அல்லவோ! அவள் இருக்கும் மனை இதுவேயாகும். நேரிழையே நீ இதன்கண் புகுவாய்” என்றனள்.

ஆதிரை பிச்சையிட்ட காதை பாடல்-24.

“ஆங்ஙனம் ஆகிய ஆதிரை கையால்,

பூங்கொடி நல்லாய்! பிச்சை பெறு’கென,

மனையகம் புகுந்து மணிமே கலைதான்

புனையா ஓவியம் போல நிற்றலும் –

பொருள்: “அப்படிப்பட்டவளாகிய ஆதிரையின் கையினாலே, பூங்கொடி போன்ற நல்லவளே, நீ பிச்சை பெறுவாயாக” என்றனள் காயசண்டிகை. மணிமேகலையும், ஆதிரையின் இல்லத்தே புகுந்து, எழுதாத ஓவியம் போல நின்றனள்.

சரியான விடை: காயசண்டிகையின் அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை பிச்சையேற்றாள். “காயசண்டிகை” என்ற விடை கொள்குறிகளில் கொடுக்கப்படவில்லை.

13. ‘தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்”

என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்.

(அ) கம்பர்

(ஆ) இளங்கோவடிகள்

(இ) திருத்தக்க தேவர்

(ஈ) காரியாசான்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) இளங்கோவடிகள்

விளக்கம்:

“தண்டமிழ் ஆசான்”, “சாத்தான் நன்னூற்புலவன்” என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர் இளங்கோவடிகள்.

14. கம்பரைப் புரந்தவர் யார்?

(அ) ஒட்டக்கூத்தர்

(ஆ) சடையப்பவள்ளல்

(இ) சீதக்காதி

(ஈ) சந்திரன் சுவர்க்கி

விடை மற்றும் விளக்கம்

(ஆ) சடையப்பவள்ளல்

விளக்கம்:

கம்பரைப் புரந்தவர் திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளல் ஆவார். கம்பர் தம்மை ஆதிரித்த வள்ளல் சடையப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் கம்பராமாயணத்தில் பாடியுள்ளார்.

15. ஜி.யூ.போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழி பெயர்த்தார்?

(அ) பிரெஞ்சு

(ஆ) கிரேக்கம்

(இ) ஆங்கிலம்

(ஈ) ஜெர்மன்

விடை மற்றும் விளக்கம்

(இ) ஆங்கிலம்

விளக்கம்:

ஜியார்ஜ் யூக்ளோ போப் (ஜி.யூ.போப்) திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்

ஜி.யூ.போப் தமது 80-வது அகவையில் கி.பி.1900-ஆம் ஆண்டில் திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார்

16. நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு

(அ) 2004

(ஆ) 2003

(இ) 2005

(ஈ) 2002

விடை மற்றும் விளக்கம்

(அ) 2004

விளக்கம்:

தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டி, கி.பி.1901-ல் தொடங்கி எடுத்த முயற்சிகள் கி.பி.2004 வரை தொடர்ந்தன. அதன் பயனாக கி.பி.2004-இல் நடுவணரசு கமிழைச் செம்மொழியாக அறிவித்தது.

17. குரூக், மால்தோ, பிராகுயி என்பன

(அ) தென்திராவிட மொழிகள்

(ஆ) நடுத்திராவிட மொழிகள்

(இ) வடதிராவிட மொழிகள்

(ஈ) மேலைநாட்டு மொழிகள்

விடை மற்றும் விளக்கம்

(இ) வடதிராவிட மொழிகள்

விளக்கம்:

தென்திராவிட மொழிகள்: தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா.

நடுத்திராவிட மொழிகள்: தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூலி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கு, பெங்கோ, முண்டா.

வடதிராவிட மொழிகள்: குரூக், மால்தோ, பிராகுயி. இவற்றுள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் “திராவிட பெருமொழிகள்” எனப்படும்.

18. “ஓர் இலட்சிய சமூகம் – சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது” என்றவர்.

(அ) பெரியார்

(ஆ) அண்ணல் அம்பேத்கர்

(இ) காந்தியடிகள்

(ஈ) திரு.வி.க.

விடை மற்றும் விளக்கம்

(ஆ) அண்ணல் அம்பேத்கர்

19. திரு.வி.கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் எது?

(அ) முருகன் அல்லது அழகு

(ஆ) சித்திரக்கவி

(இ) உரிமை வேட்டல்

(ஈ) தமிழ்ச்சோலை

விடை மற்றும் விளக்கம்

(ஆ) சித்திரக்கவி

விளக்கம்:

சித்திரக்கவி என்ற நூலின் ஆசிரியர் பரிதிமாற்கலைஞர்

20. பொருந்தாதனவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக

(அ) சூசையப்பர் தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர்

(ஆ) திருமந்திரம் சைவத்திருமுறைகளில் பத்தாவது திருமுறை

(இ) சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத் தலைமையாசிரியர்

(ஈ) மதங்க சூளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) மதங்க சூளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்

விளக்கம்:

“மதங்க சூளாமணி” என்பது ஒரு நாடகத்தமிழ் நூலாகும். இந்நூலை இயற்றியவர் விபுலானந்த சுவாமிகள். இந்நூல் 3 இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

உறுப்பியல்: சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையினால் பெறப்பட்ட அழிந்துபோன நாடகத் தமிழ் நூல் சூத்திரங்கள் சிலவற்றை ஆதூரமாகக் கொண்டு தமிழ்நாடாக இலக்கியத்தை உரைக்கிறார்.

எடுத்துக்காட்டியல்: ஷேக்ஸ்பியரின் 12 நாடகங்களை ஆய்வு செய்து விளக்கியுள்ளார்.

ஒழிபியல்: தனஞ்சயனார் வடமொழியில் இயற்றிய நாடக இலக்கண நூலான தசரூபத்தின் முடிவுகளைத் தொகுத்துக் கூறியுள்ளார்.

1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!