Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 13

Tnpsc General Tamil Previous Question Paper 13

Tnpsc General Tamil Previous Question Paper 13: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. சரியானவற்றைக் காண்க

1. யான்+கு=எனக்கு

2. யான்+கண்=என்னின்கண்

3. யான்+அது=என்னது

4. யான்+ஆல்=என்னால்

(அ) 2, 3 சரி

(ஆ) 1, 2 சரி

(இ) 1, 4 சரி

(ஈ) நான்கும் சரி

விளக்கம்:

விடை மற்றும் விளக்கம்

(இ) 1, 4 சரி

யான்+கு=எனக்கு; யான்+கண்=என்கண்; யான்+அது=எனது; யான்+ஆல்=என்னால்

2. பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க: தொழிற்பெயர்

(அ) காலங்காட்டாது

(ஆ) மூவிடங்களிலும் வரும்

(இ) தொழிலுக்குப் பெயராய் வரும்

(ஈ) இருவகைப்படும்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) மூவிடங்களிலும் வரும்

ஒரு தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்டும். இது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது. இது இருவகைப்படும். அவையாவன, முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

3. கொடுக்கப்படும் சொல்லுக்குரிய சரியான பொருள் எது? ‘கவிகை’

(அ) தேவருலகம்

(ஆ) கவிதை

(இ) பாட்டு

(ஈ) குடை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) குடை

4. கொடுக்கப்பட்ட சொற்களுள் சரியான மரபுச் சொல்லைத் தேர்க.

(அ) மான்குட்டி

(ஆ) சிங்கக்குருளை

(இ) கீரிக்குட்டி

(ஈ) கழுதைக்கன்று

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) சிங்கக்குருளை

மரபுச் சொற்கள்: மான் கன்று, சிங்கக்குருளை, கீரிப்பிள்ளை, கழுதைக்குட்டி.

5. கீழ்க்காணும் “வல்லினம் மிகா இடம்” குறித்த இலக்கணக்கூற்றில் பிழையான கூற்று எது?

(அ) எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது

(ஆ) வினைத்தொகையில் வல்லினம் மிகாது

(இ) இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது

(ஈ) உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது

எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது. எ.கா: நாய்+போனது-நாய்போனது. மாடு+பாய்ந்தது-மாடு பாய்ந்தது.

இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும். எ.கா: பொருளை+தேடு-பொருளைத்தேடு. அவளை+கண்டேன்-அவளைக்கண்டேன். உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது. எ.கா: தாய்+தந்தை-தாய்தந்தை. இரவு+பகல்-இரவுபகல்.

6. PROJECTOR-என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க:

(அ) படப்பிடிப்பு

(ஆ) படப்பிடிப்புக் கருவி

(இ) பட வீழ்த்தி

(ஈ) பார்வை நிலைப்பு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பட வீழ்த்தி

Projector-படவீழ்த்தி (அ) திரைப்படக்கருவி

7. மரபுத் தொடருக்குப் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக: “ஆகாயத் தாமரை”

(அ) அலைந்து திரிதல்

(ஆ) இல்லாத ஒன்று

(இ) பயனின்றி இருத்தல்

(ஈ) இருப்பது போல் தோன்றும் ஆனால் இராது

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) இல்லாத ஒன்று

8. இலக்கணக் குறிப்பு அறிக: கெடுப்பதூஉம்

(அ) இன்னிசை அளபெடை

(ஆ) இசைநிறை அளபெடை

(இ) சொல்லிசை அளபெடை

(ஈ) செய்யுளிசைஅளபெடை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) இன்னிசை அளபெடை

1. இவ்வளபெடை மூன்று அசைகளைக் கொண்ட காய்ச்சீராக இருக்கும். கெடுப்/பதூ/உம். நிறை நிரை நேர் -கருவிளங்காய்

2. “இ” என்னும் எழுத்தில் முடியாது.

3. பெரும்பாலும் “உ” என்னும் எழுத்தில் முடிந்திருக்கும்.

9. “பார்குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை” கீழ் உள்ள விடைகளில் சரியான விடையை எழுதுக:

(அ) எதுகை மட்டும் வந்துள்ளது

(ஆ) எதுகையும் இயைபும் வந்துள்ளது

(இ) மோனையும் எதுகையும் வந்துள்ளது

(ஈ) மோனை, எதுகை, இயைபு வந்துள்ளது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) மோனை, எதுகை, இயைபு வந்துள்ளது

பார்குலாம் செவ்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை. மோனை: முதற்சீரில் வந்த முதல் எழுத்து அடுத்து வரும் சீர்களில் வருவது மோனையாகும். பார்குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை. எதுகை: முதற்சீரில் வந்த இரண்டாம் எழுத்து அடுத்து வரும் சீர்களில் ஒன்றி வருவது எதுகையாகும். பார்குலாம் செவ்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை இயைபு: இறுதிச்சீர் ஒன்றி வருவது இயைபு ஆகும்.

10. விடைக்கேற்ற வினாவைக் கண்டறிக.

திரைப்படம் எடுப்பதனைவிடச் செய்திப்படம் எடுப்பது கடினமான பணியாகும்.

(அ) திரைப்படம் எடுப்பதனைவிட எப்படம் எடுப்பது கடினமான பணியாகும்?

(ஆ) திரைப்படம் எடுப்பதனைவிட எந்தப்படம் எடுப்பது கடினமான பணியாகும்?

(இ) திரைப்படம் எடுப்பதனைவிட கடினமான பணி எது?

(ஈ) திரைப்படம் எடுப்பதனைவிட எவ்வகைப்படம் எடுப்பது கடினமான பணியாகும்?

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) திரைப்படம் எடுப்பதனைவிட எப்படம் எடுப்பது கடினமான பணியாகும்?

General Tamil Study Materials

General Tamil Previous Questions Pdf

11. பொருந்தாத சொல்லைக் கண்டறிக:

(அ) கெடாஅ

(ஆ) அரங்ங்கம்

(இ) எடுப்பதூஉம்

(ஈ) தழீஇ

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) அரங்ங்கம்

அளபெடை: உயிர் அளபெடை, ஒற்றளபெடை-அரங்கம்

உயிர்அளபெடை: செய்யுளிசை அளபெடை-எ.கா:கெடாஅ.

இன்னிசை அளபெடை:எ.கா:எடுப்பதூஉம்,

சொல்லிசை அளபெடை: தழீஇ.

கெடாஅ, எடுப்பதூஉம், தழீஇ, – மூன்றும் உயிர் அளபெடைகளின் வகைகள்.

அரங்ங்கம்-ஒற்றளபெடை.

12. பாதபீடிகை உள்ள இடம்:

(அ) வஞ்சிமாநகர்

(ஆ) மணிபல்லவத் தீவு

(இ) ஆபுத்திரன் நாடு

(ஈ) சேரநாடு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) மணிபல்லவத் தீவு

மணிமேகலை-ஆபுத்திரன் நாடு அடைந்த காதை. “ஆபுத் திரனா டடைந்தற் பின்னாள் மாசில் மணிபல் லவம் தொழு தேத்தி” – சீத்தலைச் சாத்தனார். மணிமேகலையின் கூற்று: “நான் ஆபுத்திரன் நாட்டையடைந்து, பின்னர் அங்கிருந்து குற்றமற்ற மணிபல்லவத் தீவுக்குச் சென்று பாதபீடிகையை வணங்குவேன்”.

13. அறவண அடிகள் “அறிவுண்டாகுக” என யாரை எல்லாம் வாழ்த்தினார்?

(அ) அரசமாதேவி, தோழியர் கூட்டம்

(ஆ) சித்திராபதி

(இ) மணிமேகலை

(ஈ) அனைவரையும்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) அனைவரையும்

மணிமேகலை-ஆபத்திரன் நாடு அடைந்த காதை

தேவியும் ஆயமும் சித்திரா பதியும்

மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்

எழுத்தெதிர் சென்றாங்கு இணைவளைக் கையால்

தொழுந்தகை மாதவன் துணையடி வணங்க

அறிவுண் டாகவென் றாங்கவன் கூறலும்

பொருள்: அறவண அடிகளைக் கண்ட அளவில் அரசமாதேவியும் தோழியர் கூட்டமும் சித்திராபதியும் மணிமேகலையும் எழுந்து, அவர் எதிரே சென்றனர். வணங்கும் தகுதியுடைய அறவணரின் இருபாதத்தைத் தம் இரு கைகளாலும் தொட்டு வணங்கினர்; அடிகள் “அறிவுண்டாகுக” என அவர்களை வாழ்த்தினார்.

14. “புல்லாகிப் பூடாய்” இடம்பெற்றுள்ள நூல்

(அ) திருவாசகம்

(ஆ) திருமந்திரம்

(இ) தேவாரம்

(ஈ) பதிற்றுப்பத்து

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) திருவாசகம்

திருவாசகம்: புல்லாகிப் பூடாய்ப் புழவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று விடு உற்றேன் – மாணிக்கவாசகர். மேற்கண்ட பாடலடிகள் ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள பரிணாம வளர்ச்சியைக் கூறுகின்றன.

15. திருக்குறளில் அறத்துப்பாலுக்குரிய அதிகாரங்கள்

(அ) 70

(ஆ) 25

(இ) 38

(ஈ) 30

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 38

அறத்துப்பாலுக்குரிய அதிகாரங்கள்-38. பொருட்பாலுக்குரிய அதிகாரங்கள்-70. இன்பத்துப்பாலுக்குரிய அதிகாரங்கள்-25

16. முழுவதும் விருத்தப்பாக்களால் ஆன காப்பியம்.

(அ) சிலப்பதிகாரம்

(ஆ) மணிமேகலை

(இ) கம்பராமாயணம்

(ஈ) குண்டலகேசி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கம்பராமாயணம்

முழுதும் விருத்தப்பாக்களால் ஆன காப்பியம் கம்பராமாயணம் ஆகும். “விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” என்ற தொடர் இதனை விளக்குகிறது.

17. எத்திராசுலு (எ) அரங்கசாமி என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்.

(அ) நா.காமராசன்

(ஆ) தாராபாரதி

(இ) அப்துல் ரகுமான்

(ஈ) வாணிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) வாணிதாசன்

கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் எத்திராசலு (எ) அரகங்சாமி என்பதாகும். புதுவையில் பிறந்தார். இவருடைய காலம் 22.07.1915 முதல் 07.08.1974 வரையாகும். 34 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளை அறிந்திருந்தார். இவருடைய சிறப்புப் பெயர்கள் கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் “வேர்ட்ஸ் வொர்த்” என்பவையாகும்.

18. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் சிறப்பு குறித்து பாடப்பட்ட நூல் எது?

(அ) மும்மணிக்கோவை

(ஆ) முத்தொள்ளாயிரம்

(இ) மூவர் உலா

(ஈ) கலிங்கத்துப்பரணி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) முத்தொள்ளாயிரம்

முத்தொள்ளாயிரம்

இந்நூல் மூவேந்தர்களைப் (சேர,சோழ, பாண்டியர்) பற்றிய 900 பாடல்களைக் கொண்டது. ஆயினும் இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. “புறத்திரட்டு” என்னும் நூல் மூலமாக 108 பாடல்களும், பழைய உரை நூல்களில் மேற்கோள்களாக 22 பாடல்களும் கிடைத்துள்ளன. இந்நூல் மூவேந்தர்களின் ஆட்சிச்சிறப்பு, படைச்சிறப்பு, போர்த்திறன், கொடை முதலிய செய்திகளை விளக்குகிறது. இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.

19. மார்போலையில் எழுதும் எழுத்தாணி

(அ) ஈட்டி

(ஆ) தூரிகை

(இ) தந்தம்

(ஈ) ஊசி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தந்தம்

முத்தொள்ளாயிரம்-பாண்டிய மன்னன் பற்றிய பாடல்

மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர்

உருத்தகு மார்போலை யாகத் – திருத்தக்க

வையக மெல்லா மெமன் றெழுதுமே

மொய்யிலைவேல் மாறன் களிறு.

பொருள்: நெருங்கி அமைந்த இலை போன்ற வடிவிலான வேலை உடையவன் பாண்டிய மன்னன். அம்மன்னனின் யானை, தன் தந்தங்களை எழுத்தாணியாகவும் வீரம் செறிந்த வேற்படையையுடைய பகை மன்னரின் அகன்ற மார்புகளை ஓலைகளாகவும் கொண்டு, “செல்வம் நிலைத்த உலகமெல்லாம் எம் பாண்டியருக்கே உரியது” என எழுதும்.

20. “வனப்பு” என்னும் சொல்லின் பொருள்

(அ) அழகு

(ஆ) அறிவு

(இ) வளமை

(ஈ) ஆளுமை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) அழகு

1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!