General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 18

Tnpsc General Tamil Previous Question Paper 18

Tnpsc General Tamil Previous Question Paper 18: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. “தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளரவேண்டும்” என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?

(அ) தமிழ்த் தென்றல் திரு.வி.க

(ஆ) பெரியார்

(இ) பாவேந்தர் பாரதிதாசன்

(ஈ) தாராபாரதி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) தாராபாரதி

2. குமரகுருபரரின் “நீதி நெறி விளக்கம்” என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?

(அ) முப்பத்து மூன்று

(ஆ) ஐம்பது

(இ) ஐம்பத்தொன்று

(ஈ) ஐம்பத்து மூன்று

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) ஐம்பத்தொன்று

பரிதிமாற் கலைஞர் ரூபாவதி, கலாவதி போன்ற நாடகங்களை எழுதியுள்ளார். “மானவிஜயம்” என்ற இவரது நாடகம் “களவழிநாற்பது” என்ற இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது. “சித்திரகவி” என்ற நூலை எழுதியுள்ளார். குமரகுருபரரின் “நீதிநெறி விளக்கம்” என்ற நூலில் 51 பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

3. தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது?

(அ) பிள்ளையார்பட்டி

(ஆ) கழுகு மலை

(இ) திருப்பரங்குன்றம்

(ஈ) ஆனைமலை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) பிள்ளையார்பட்டி

பாண்டியன் செழியன் சேந்தன் கட்டிய பிள்ளையார்பட்டி குடைவரையும் மலையடிக் குறிச்சி குடைவரை கோயில்களே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில்கள் எனக் கூறப்படுகின்றன.

4. “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடில்லாத பறவை” – என்று பாடியவர் யார்?

(அ) பாவேந்தர் பாரதிதாசன்

(ஆ) உமர் கய்யாம்

(இ) இரசூல் கம்ச தேவ்

(ஈ) க.வைரமுத்து

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) இரசூல் கம்ச தேவ்

நாளை என் தாய்மொழி சாகுமானால், இன்றே நான் இறந்துவிடுவேன். தன் இனத்தையும் மொழியையும்பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடில்லாத பறவை – இரசூல் கம்சதேவ். “தமிழ்நாட்டு இரசூல் கம்சதேவ்” எனப் பாராட்டப் பெற்றவர் பாரதிதாசன் ஆவார்.

General Tamil Study Materials

General Tamil Previous Questions Pdf

5. “நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறியவரை தேர்வு செய்க:

(அ) உ.வே.சாமிநாதர்

(ஆ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

(இ) பரிதிமாற்கலைஞர்

(ஈ) மறைமலை அடிகளார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

“நோய்க்கு மருந்து இலக்கியம்” என்பது மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாரின் கூற்றாகும்.

6. “கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

(அ) திருவாசகம்

(ஆ) மதுரைக்காஞ்சி

(இ) பட்டினப்பாலை

(ஈ) தமிழ்விடுதூது

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) திருவாசகம்

மதுரையில் தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதனை “தமிழ்கெழுகூடல்” என்று புறநானூறும், “தமிழ்வேலி” என்ற பரிபாடலும் “கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என்று திருவாசகமும் (மணிவாசகம்) குறிப்பிடுகின்றன.

7. தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார். அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு.

(அ) பாலி

(ஆ) இந்துஸ்தானி

(இ) கன்னடம்

(ஈ) உருது

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) இந்துஸ்தானி

குமரகுருபரர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார்.

8. “பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய” – இத்தொடரில் உள்ள “துகிர்” என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க.

(அ) மாணிக்கம்

(ஆ) மரகதம்

(இ) இரத்தினம்

(ஈ) பவளம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) பவளம்

“பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும்” – கண்ணகனார். பொருள்: பொன்னும் பவளமும் முத்தும், பெருமலையில் பிறக்கும் மாணிக்கமும் என்பது பொருளாகும்.

9. “தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

(அ) பெருங்கதை

(ஆ) சீவகசிந்தாமணி

(இ) பதிற்றுப்பத்து

(ஈ) பரிபாடல்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) பதிற்றுப்பத்து

பண்டைத் தமிழகத்தில் கரும்பைப் பிழிவதற்கான எந்திரங்கள் இருந்ததை “தீம்பிழி எந்திரம் பந்தல் வருத்த” என்ற பதிற்றுப்பத்து வரிகள் மூலமாக அறிய முடிகிறது.

10. “உத்தம சோழப் பல்லவர்” என்னும் பட்டம் பெற்றவர்

(அ) கம்பர்

(ஆ) சேக்கிழார்

(இ) புகழேந்தி

(ஈ) ஒட்டக்கூத்தர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) சேக்கிழார்

“உத்தமச்சோழப் பல்லவர்” என்னும் பட்டம் பெற்றவர் பெரியபுராணத்தை இயற்றிய சேக்கிழார் ஆவார்.

1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!