Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 2

Tnpsc General Tamil Previous Question Paper 2

Tnpsc General Tamil Previous Question Paper 2: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. “ஆர்பரவை அணி திகழும் மணிமறுவல் அரும் பரவை” – இப்பாடலடியில் அமைந்துள்ளவாறு பின்வருவனவற்றுள் எது தவறானது?

(அ) சீர்மோனை அமைந்துள்ளது

(ஆ) சீர் முரண் அமைந்துள்ளது

(இ) சீர் இயைபு அமைந்துள்ளது

(ஈ) கீழ்க்கதுவாய் மோனை அமைந்துள்ளது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) சீர் முரண் அமைந்துள்ளது

ஆ ர்பரவை அ ணிதிகழும் மணிமுறுவல் அ ரும்பரவை–சீர்மோனை 1,2,4-ஆம் சீர்கள் ஒன்றிவருவதால் – கீழ்க்கதுவாய் மோனையாகும். இயைபு என்பது இறுதிச் சீர் ஒன்றி வருவதாகும். இறுதிச்சீரை ஒன்று என எடுத்துக்கொண்டு மற்ற சீர்களை 2,3 என்று கணக்கிட வேண்டும். ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை-இது சீர் இயைபு ஆகும். 1 மற்றும் 4-ஆம் சீர் ஒன்றி வருவதால் சீர் இயைபு வகையில் ஒரூஉ இயைபு என்ற பிரிவாகும்.

2. தனிவாக்கியம் குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

(அ) வினாப்பொருள் தரும் வாக்கியம்

(ஆ) ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்.

(இ) தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும்

(ஈ) ஒரு முதன்மை வாக்கியம் ஒரு துணை வாக்கியத்துடன் சேர்ந்து வரும்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்.

3. “திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது” எனக் கூறியவர்.

(அ) கி.வா.ஜ

(ஆ) கி.ஆ.பெ.வி

(இ) திரு.வி.க

(ஈ) உ.வே.சா

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) கி.ஆ.பெ.வி

4. “தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே” – இத்தொடரில் “திண்டிறல்” என்னும் சொல்லிற்குப் பொருள்

(அ) கொடுமையான

(ஆ) கடுமையான

(இ) எடுப்பான

(ஈ) உறுதியான

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) உறுதியான

“தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே” மேற்கண்ட பாடல் சீறாப்புரணம் விவாதத்துக் காண்டம் புலி வசனித்த படலத்தில் 8-ஆவது செய்யுளில் வந்துள்ளது. திண்டிறல்-உறுதியான, வலிமையான

5. துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர்

(அ) மீரா

(ஆ) முடியரசன்

(இ) கண்ணதாசன்

(ஈ) பெருஞ்சித்திரனார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) பெருஞ்சித்திரனார்

அ. மீரா-மீ.இராசேந்திரன். ஆ.முடியரசன்-துரைராசு. இ.கண்ணதாசன்-முத்தையா. ஈ.பெருஞ்சித்திரனார்-துரை.மாணிக்கம்

6. “தேம்பாவணி” நூலில் உள்ள படலங்களின் எண்ணிக்கை

(அ) 39 படலங்கள்

(ஆ) 30 படலங்கள்

(இ) 32 படலங்கள்

(ஈ) 36 படலங்கள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) 36 படலங்கள்

தேம்பாவணியில் 3 காண்டங்கள் உள்ளன. ஒவ்வொரு காண்டத்திற்கும்12 படலங்கள் என மொத்தம் 36 படலங்கள் உள்ளன.

7. பொருத்துக:

புலவர் நூற்பெயர்

(அ) முடியரசன் – 1. ஆனந்தத் தேன்

(ஆ) சச்சிதானந்தன் – 2. மாங்கனி

(இ) குமரகுருபரர் – 3. காவியப்பாவை

(ஈ) கண்ணதாசன் – 4. சகலகலா வல்லிமாலை

குறியீடுகள்:

(அ) (ஆ) (இ) (ஈ)

(அ) 2 1 4 3

(ஆ) 3 2 4 1

(இ) 3 1 4 2

(ஈ) 1 3 2 4

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 1 4 2

8. மலரின் பருவத்தைக் குறிக்காத பெயர் எது?

(அ) அகரு

(ஆ) அலர்

(இ) முகை

(ஈ) வீ

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) அகரு

மலரின் பருவத்தைக் குறிக்கும் பொய்கள்: அரும்பு, போது, மலர் (அலர்), வீ, செம்மல்

9. “மருமக்கள் வழி மான்மியம்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

(அ) திரு.வி.க

(ஆ) கவிமணி

(இ) இரசிகமணி

(ஈ) நாமக்கல் கவிஞர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கவிமணி

கவிமணி தேசிக விநாயகர் அவர்கள் எழுதிய “மருமக்கள் வழி மான்மியம்” நகைச்சுவை நூல் ஆகும்.

10. “சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்” – எனக்கூறியவர்

(அ) பேரறிஞர் அண்ணா

(ஆ) பண்டித ஜவஹர்லால் நேரு

(இ) காந்தியடிகள்

(ஈ) ஜி.யூ.போப்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) காந்தியடிகள்

General Tamil Study Materials

General Tamil Previous Questions Pdf

11. “கவி காளமேகம்” எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?

(அ) சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினார்

(ஆ) சைவத்திலிருந்து வைணவத்திற்கு மாறினார்

(இ) வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்

(ஈ) வைணவத்திலிருந்து பௌத்தத்திற்கு மாறினார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்

காளமேகப்புலவர் முதலில் திருவரங்கம் மடப்பள்ளியில் பணிபுரிந்தார். திருவானைக்காவில் உள்ள அகிலாண்டேஸ்வரியின் அருளால் தமிழ் மொழியில் சிறந்த புலமை பெற்றார். அதனால் அவர் வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்.

12. உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடு.

(அ) இந்தியா

(ஆ) குயில்

(இ) தமிழ்ச்சிட்டு

(ஈ) மணிக்கொடி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தமிழ்ச்சிட்டு

பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள்: தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்.

13. மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது

(அ) கற்றது மறவாமை

(ஆ) ஒழுக்கம் உடைமை

(இ) கண்ணஞ்சப் படுதல்

(ஈ) வாய்மை உடைமை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) கற்றது மறவாமை

“மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை” முதுமொழிக்காஞ்சி முதல் அதிகாரம் “சிறந்த பத்து” 3-ஆவது பாடல்.

பொருள்: நூல்களை மேலும் மேலும் கற்றுப் பேரறிவுடையவன் ஆவதை விட தான் முன்பு கற்றவற்றை மறவாதிருத்தல் சிறந்ததாகும்.

14. இலக்கணக்குறிப்பறிந்து பொருத்துக:

(அ) வழிக்கரை – 1. வினைத்தொகை

(ஆ) கரகமலம் – 2. உரிச்சொற்றொடர்

(இ) பொங்குகடல் – 3. ஆறாம் வேற்றுமைத் தொகை

(ஈ) உறுவேனில் – 4. உருவகம்

குறியீடுகள்:

அ ஆ இ ஈ

(அ) 3 2 4 1

(ஆ) 3 1 2 4

(இ) 3 4 1 2

(ஈ) 2 3 4 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 4 1 2

15. “நான்மணிமாலை” என்ற சொற்றொடர் குறிப்பது

(அ) முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம்

(ஆ) முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்

(இ) முத்து, மரகதம், கெம்பு, மாணிக்கம்

(ஈ) முத்து, பவளம், வைரம், மாணிக்கம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்

நான்மணிமாலையை இயற்றியவர் குமரகுருபரர். இவரது காலம் கி.பி.16-ஆம் நூற்றாண்டாகும். முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்ற நான்கு வகை மணிகளால் ஆன மாலையைப் போன்று வெண்பா. கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா ஆகிய நான்கு வகைப்பாக்களால் திருவாரூர் தியாகராசப் பெருமானைப் புகழ்ந்து இயற்றியுள்ளார். இவரது பிறநூல்கள்: நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம்.

16. சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் கூறுவது:

(அ) நுபுவத்துக் காண்டம்

(ஆ) விலாதத்துக் காண்டம்

(இ) ஹிஜ்ரத்துக் காண்டம்

(ஈ) மேற்கூறிய அனைத்தும்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) நுபுவத்துக் காண்டம்

சீறாப்புரணம்-நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு இந்நூல் மூன்று காண்டங்களை உடையது. விலாதத்துக் காண்டம்-பெருமானாரின் பிறப்பு, இளமை நிகழ்வுகள் மற்றும் திருமணம் ஆகியவை இந்தக் காண்டத்தில் உரைக்கப்படுகின்றன. நுபுவத்துக் காண்டம்-வானவர் ஜிப்ராயில் மூலம் திருமறை நபிகள் பெருமானார்க்கு அருளப்பட்டதும் அதன் பின் மெக்காவில் நடந்தவையும் நுபுவத்து காண்டத்தில் உரைக்கப்படுகின்றன. தீர்க்கதரிசனம் இந்தக் காண்டத்தைச் சேர்ந்தது. ஹிஜ்ரத்துக் காண்டம்-மெக்காவை விட்டு பெருமானார் மதீனா சென்றதும் அங்கு நிகழ்ந்த போர்களும் பிறவும் இக்காண்டத்தில் உரைக்கப்படுகின்றன.

17. “வள்ளைக்கு உறங்கும் வளநாட” வள்ளை-என்பதன் பொருள் யாது?

(அ) நெல் குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு

(ஆ) நடவு நடும் போது பெண்கள் பாடும் பாட்டு

(இ) கும்பியடிக்கும் போது பெண்கள் பாடும் பாட்டு

(ஈ) இவை எதுவும் இல்லை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) நெல் குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு

திருவள்ளுவமாலை-53-வது பாடல்

தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட

பனையளவு காட்டும் படித்தால்-மனையளகு

வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார்

வெள்ளைக் குறட்பா விரி – கபிலர்

பொருள்: உலக்கைப் பாட்டின் இன்னிசையைக் கேட்டுக் கண்ணுறங்கும் வீட்டுக் கோழிகளை உடை வளநாட்டு மன்னனே! சிறுபுல்லின் முனையில் உள்ள தினையளவான சிறுபனித் துளியாயினும் நெடிதுயர்ந்த பனைமரத்தின் உருவத்தினை தன்னுள் தெளிவாகக் காட்டும்.(உவமை). அதுபோல, வள்ளுவரின் குறள் வெண்பாக்கள் தன்னுள்ளே அடங்கியுள்ள அரிய பொருள்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. (உவமேயம்).

18. “மானுடப்பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்” என்ற உயிரியியல் தொழில் நுட்பத்தை அறிவுறுத்தும் நூல்.

(அ) தேவாரம்

(ஆ) திருவாசகம்

(இ) திருக்கோவையார்

(ஈ) திருப்பள்ளியெழுச்சி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) திருவாசகம்

திருவாசகத்தில் அமைந்துள்ள மேற்கண்ட பாடலடிகள் கரு வளர்ச்சி பற்றிக் கூறுகிறது.

19. எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்

(அ) மீரா

(ஆ) இன்குலாப்

(இ) தருமு.சிவராமு

(ஈ) ந.பிச்சமூர்த்தி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தருமு.சிவராமு

தருமு.சிவராமுவின் கவிதைகள்: விடிவு, எரிகல், கல்வீச்சு, மின்னல் இவருடைய கவிதைகள் “எழுத்து” என்ற இதழில் வெளிவந்துள்ளன.

20. மனிதர்களின் மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் “ஈஸ்வர லீலை” என்னும் கதை நூலின் ஆசிரியர்

(அ) லா.ச.ராமாமிருதம்

(ஆ) சி.சு.செல்லப்பா

(இ) ந.பிச்சமூர்த்தி

(ஈ) தி.ஜானகிராமன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) ந.பிச்சமூர்த்தி

21. முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்

(அ) குமரகுருபரர்

(ஆ) பலபட்டடைச் சொக்கநாதர்

(இ) சேக்கிழார்

(ஈ) சிவஞான சுவாமிகள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) குமரகுருபரர்

22. இந்திய நூலகத் தந்தை எனப்போற்றப்படுகிறவர்

(அ) உ.வே.சாமிநாத அய்யர்

(ஆ) மாயூரம் வேதநாயகம் பிள்ளை

(இ) சீர்காழி சீ.இரா.அரங்கநாதன்

(ஈ) தஞ்சை வாணன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) சீர்காழி சீ.இரா.அரங்கநாதன்

நூலகப் பயன்பாட்டிற்கான விதிகளை உருவாக்கித் தந்த சீர்காழி இர.அரங்கநாதன் “இந்திய நூலகத் தந்தை” எனப் போற்றப்படுகிறார்.

23. “நல்ல” எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது?

(அ) நற்றிணை

(ஆ) குறுந்தொகை

(இ) அகநானூறு

(ஈ) ஐங்குறுநூறு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) குறுந்தொகை

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஓத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை”

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை சங்க நூல்களாகும். இவற்றை பதினெண் மேல் கணக்கு நூல்கள் என்றும் கூறுவர்.

24. “கடலில் கரைத்த பெருங்காயம் போல” இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்

(அ) பகர்தல்

(ஆ) கலத்தல்

(இ) வீணாதல்

(ஈ) ஏமாறல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) வீணாதல்

25. தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக:

(அ) நோயின்றி வாழ்கிறான்

(ஆ) மெல்ல நடந்தான்

(இ) நடந்து வந்தான்

(ஈ) நன்கு பாடினான்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) நடந்து வந்தான்

நடந்து வந்தான்-தெரிநிலை வினையெச்சம். வெளிப்படையாகக் காலம் காட்டுவது தெரிநிலை வினையெச்சமாகும். ஏனைய மூன்றும் குறிப்பு வினையெச்சங்களாகும்.

26. பொருத்துக:

(அ) கை – 1. துன்பம்

(ஆ) நோ – 2. கைப்பற்றுதல்

(இ) யா – 3. ஒழுக்கம்

(ஈ) வெள – 4. ஒருவகை மரம்

குறியீடுகள்:

அ ஆ இ ஈ

(அ) 2 4 3 1

(ஆ) 3 4 1 2

(இ) 3 2 4 1

(ஈ) 3 1 4 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) 3 1 4 2

27. ஈற்றயலடி “சிந்தடி” பெற்று வரும் பா வகை

(அ) நேரிசைச் சிந்தியல் வெண்பா

(ஆ) இன்னிசைச் சிந்தியல் வெண்பா

(இ) நிலைமண்டிலய ஆசிரியப்பா

(ஈ) நேரிசை ஆசிரியப்பா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) நேரிசை ஆசிரியப்பா

நேரிசை ஆசிரியப்பாவின் ஈற்றயலடி (கடைசி அடிக்கு முதலடி) மூன்று சீர்களால் வருவதாகும். மூன்று சீர்களால் ஆகிய அடிக்கு சிந்தடி என்று பெயராகும்.

28. விடைக்கேற்ற வினாவைத் தேர்க:

“பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம்”

(அ) பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணத்தால் பெறுவது எது?

(ஆ) பெற்றதை வழங்கி ஏன் வாழ வேண்டும்?

(இ) பெருங்குணம் எப்போது வரும்?

(ஈ) பெறுவது எது?

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணத்தால் பெறுவது எது?

29. பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) தினம் – நாள்

(ஆ) நெருநல் – நேற்று

(இ) சலவர் – நல்லவர்

(ஈ) மாரன் – மன்மதன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) சலவர் – நல்லவர்

சலவர்-வஞ்சகர். “சலவரைச் சாரா விடுதல் இனிதே”-இனியவை நாற்பது. ஆசிரியர்-பூதஞ்சேந்தனார்

30. வேர்ச்சொல் தேர்க:

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

(அ) பற்றுக

(ஆ) பற்றற்றான்

(இ) பற்றி

(ஈ) பற்று

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) பற்று

பற்று-வேர்ச்சொல். பற்றுக-வியங்கோள் வினைமுற்று. பற்றற்றான்-எதிர்மறை வினைமுற்று. பற்றி-வினையெச்சம்.

31. “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” – எனப்பாடியவர்

(அ) அரிசில் கிழார்

(ஆ) மோசிகீரனார்

(இ) ஒளவையார்

(ஈ) பரணர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) மோசிகீரனார்

நெல்லும் உயிரன்றே: நீரும் உயிரன்றே:

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம். – மோசிகீரனார். புறநானூறில் 186-ஆவது பாடல்.

32. சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் போற்ற அரங்கேறிய நூல் எது?

(அ) பெரியபுராணம்

(ஆ) திவிளையாடற்புராணம்

(இ) கந்த புராணம்

(ஈ) திருவாசகம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) திருவிளையாடற்புராணம்

திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர். இவரது காலம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு

33. பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?

(அ) திருநாவுக்கரசர்

(ஆ) திருஞானசம்பந்தர்

(இ) சுந்தரர்

(ஈ) காரைக்கால் அம்மையார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) திருஞானசம்பந்தர்

பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தரின் வரலாறே அதிகமான பாடல்களைப் பெற்றுள்ளது. எனவேதான் பெரியபுராணத்தை “பிள்ளை பாதி புராணம்பாதி” என்று கூறுகின்றனர்.

34. சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் எது?

(அ) திருச்செங்குன்றம்

(ஆ) திருவெண்ணெய் நல்லூர்

(இ) திருச்செந்தூர்

(ஈ) திருவாரூர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) திருவெண்ணெய் நல்லூர்

இறைவன் திருவெண்ணெய் நல்லூரில் சுந்தரரை தடுத்தாட் கொண்டார். அங்குதான் சுந்தரர் “பித்தா பிறைசூடி பெருமானே” என்ற தனது முதல் பதிகத்தைப் பாடினார்.

35. பிறவினை வாக்கியத்தை கண்டறிக:

(அ) புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.

(ஆ) அகநாநூற்றுப் பாடல்களை மதுரை உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திர சன்மர் தொகுத்தார்.

(இ) அகநானூற்றைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தான்.

(ஈ) ஐங்குறுநூறு நூலைப் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் தொகுத்தார்.

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) அகநானூற்றைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தான்.

(அ)செய்வினை.

(ஆ) மற்றும்

(ஈ) தன்வினை.

(இ) பிறவினை

36. பின்வரும் இலக்கணக்குறிப்புக்குரிய பொருந்தாதச் சொல்லைத் தேர்க: பண்புத்தொகை

(அ) மென்கண்

(ஆ) செய்வினை

(இ) நன்கலம்

(ஈ) அருவிலை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) செய்வினை

செய்வினை-வினைத்தொகை: ஏனைய மூன்றும் பண்புத்தொகைகள்.

37. “நெறியினில் உயிர்செகுத் திடுவ” – இதில் “உயிர்செகுத்து” எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?

(அ) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்

(ஆ) வினையாலணையும் பெயர்

(இ) வியங்கோள் வினைமுற்று

(ஈ) இரண்டாம் வேற்றுமைத் தொகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) இரண்டாம் வேற்றுமைத் தொகை

இரண்டு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபுகள் மறைந்துவரச் சொற்கள் தொடர்ந்து நிற்பதற்கு வேற்றுமைத் தொகை என்று பெயர். இரண்டாம் வேற்றுமை உருபு “ஐ” மறைந்து வந்துள்ளது. “உயிரை செகுத்து” என்பது “உயிர்செகுத்து” என வந்துள்ளது

38. சரியானவற்றைத் தேர்க:

பொருள் – திணை

(அ) எதிரூன்றல் – 1. வெட்சி

(ஆ) மீட்டல் – 2. வஞ்சி

(இ) செருவென்றது – 3. வாகை

(ஈ) எயில்காத்தல் – 4. நொச்சி

(அ) 1ம், 2ம் சரி

(ஆ) 2ம், 3ம் சரி

(இ) 3ம், 4ம் சரி

(ஈ) 1ம், 4ம் சரி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 3ம், 4ம் சரி

(அ) கவர்தல் – வெட்சித் திணையாகும்

(ஆ) மீட்டல் – கரந்தைத் திணையாகும்

(இ) செருவென்றது – வாகைத் திணையாகும்

(ஈ) எயில்காத்தல் – நொச்சித் திணையாகும்

39. பிரித்தெழுதுக: நெடுநாவாய்

(அ) நெடு+நாவாய்

(ஆ) நெடுமை+நா+வாய்

(இ) நெடுமை+நாவாய்

(ஈ) நெடுநா+வாய்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) நெடுமை+நாவாய்

நெடுநாவாய் என்பது பண்புப்பெயர் புணர்ச்சியாகும். நெடுமை+நாவாய் – நெடுநாவாய். ஈறுபோதல் விதிப்படி “மை” விகுதி கெட்டு இயல்பாய் புணர்ந்தது.

40. செய் – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:

(அ) செய்தீர்

(ஆ) செய்வாய்

(இ) செய்தவன்

(ஈ) செய்தான்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) செய்தவன்

செய்தீர் – இறந்தகால முன்னிலை ஒருமை வினைமுற்று.

செய்வாய் – எதிர்கால முன்னிலை ஒருமை வினைமுற்று

செய்தவன் – வினையாலணையும் பெயர்

செய்தான் – இறந்தகால வினைமுற்று

41. சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடர் எழுதுக:

(அ)”கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்போ”

(ஆ) “கற்றார்க்கு கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பே”

(இ) “களிப்பே களிப்பருளும் கற்றார்க்கும் கல்லார்க்கும்”

(ஈ) களிப்பருளும் களிப்பே கற்றார்க்கும் கல்லார்க்கும்”

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ)”கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்போ”

42. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்

(அ) திறம்பட வுரைப்பது குறத்திப் பாட்டே இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும்

(ஆ) முக்காலமும் வுரைப்பது குறத்திப்பாட்டே இறப்பு நிகழ்வெதிர் திறப்பட வென்னும்

(இ) இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும் திறப்பட வுரைப்பது குறத்திப் பாட்டே

(ஈ) குறத்திப்பாட்டே முக்காலமும் வுரைப்பது இறப்பு நிகழ்வெதிர் வென்னும் திறப்பட

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும் திறப்பட வுரைப்பது குறத்திப் பாட்டே

43. விடையைத்தேர்க: இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப்பொருளையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது?

(அ) அபிதான கோசம்

(ஆ) அபிதான சிந்தாமணி

(இ) விவேக சிந்தாமணி

(ஈ) சீவக சிந்தாமணி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) விவேக சிந்தாமணி

1934-ஆம் ஆண்டு சிங்காரவேலனாரால் வெளியிடப்பட்ட “அபிதான சிந்தாமணி” இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப் பொருள்களுக்கும் விளக்கம் அளிக்கிறது

44. “திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது” – என்று கூறியவர் யார்?

(அ) காந்திஜி

(ஆ) நேருஜி

(இ) இராஜாஜி

(ஈ) நேதாஜி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) இராஜாஜி

இராஜாஜியின் கூற்று:“திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது. காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞராகத் தோன்றியது”.

45. “ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு” – என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்?

(அ) வ.உ.சிதம்பரம்

(ஆ) டி.கே.சிதம்பரம்

(இ) சிதம்பர சுவாமி

(ஈ) சிதம்பர நாதன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) டி.கே.சிதம்பரம்

46. திரு.வி.கல்யாண சுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது?

(அ) யான் கண்ட இலங்கை

(ஆ) எனது இலங்கைச்செலவு

(இ) யான் கண்ட ஜப்பான்

(ஈ) உலகம் சுற்றிய தமிழன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) எனது இலங்கைச்செலவு

47. கீழ்க்காணும் சொற்களில் தொழிற்பெயர் அல்லாததை அறிக

(அ) அழுகை

(ஆ) தொல்லை

(இ) போக்கு

(ஈ) தொழுகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) தொல்லை

தொல்லை-பண்புப்பெயர்.

48. செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக:

(அ) வ.உ.சி. தொல்காப்பியத்தைப் பதிப்பித்தார்

(ஆ) தொல்காப்பியம் வ.உ.சியால் பதிப்பிக்கப்பட்டது

(இ) பதிப்பித்தார் தொல்காப்பியத்தை வ.உ.சி

(ஈ) வ.உ.சி. பதிப்பித்தது தொல்காப்பியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) தொல்காப்பியம் வ.உ.சியால் பதிப்பிக்கப்பட்டது

49. “குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது” – இக்குறளில் அடி எதுகையாவது

(அ) குணமென்னும் – குன்றேறி

(ஆ) குன்றேறி – நின்றார்

(இ) குணமென்னும் – கணமேயும்

(ஈ) கணமேயும்-காத்தல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) குணமென்னும் – கணமேயும்

இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகைத் தொடையாகும்

50. பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்-எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக:

(அ) தனிவாக்கியம்

(ஆ) கலவை வாக்கியம்

(இ) செயப்பாட்டுவினை வாக்கியம்

(ஈ) பிறவினை வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) தனிவாக்கியம்

ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரே பயனிலையைக் கொண்டு முடிவது தனி வாக்கியமாகும்.

51. பொருந்தா இணையைத் தேர்க:

சொல் பொருள்

1. மா அழுகு

2. மீ உயர்ச்சி

3. மூ மூப்பு

4. மை மேம்பாடு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

4. மை மேம்பாடு

ஓரெழுத்து ஒரு மொழி: மா-அழகு, மேன்மை, மீ-உயர்ச்சி, மூ-மூப்பு, மூன்று. மை-அஞ்சனம்,எழுதுமை. ஓரிஜினல் வினாவில் அழகு என்பது “அழுகு” என்று பிழையாக கொடுக்கப்பட்டுள்ளது

52. ஏழையின் குடிசையில்

அடுப்பும் விளக்கும் தவிர

எல்லாமே எரிகின்றன” – இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்?

(அ) அறிஞர் அண்ணா

(ஆ) வல்லிக்கண்ணன்

(இ) பட்டுக்கோட்டையார்

(ஈ) மீரா

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) வல்லிக்கண்ணன்

53. “வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும்

கொப்பத் தொருகளிற்றால் கொண்டோன்” – இவ்வரிகள் யாரைக் குறிப்பிடுகிறது?

(அ) இராசேந்திரன்

(ஆ) முதல் இராசராசன்

(இ) இராசாதிராசன்

(ஈ) இராச மகேந்திரன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) இராசேந்திரன்

விக்கிரமச் சோழன், 2-ஆம் குலோத்துங்கள், 2-ஆம் இராசராசன் ஆகிய மன்னர்களின் சிறப்பினைக் குறித்து ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா என்ற நூலில் மேற்கண்ட செய்யுள் வந்துள்ளது.

பொருள்:ஆண் யானைகள் ஆயிரத்தையும் ஒரு களிற்றைக் கொண்டு கொப்பத்துப் போரில் வென்றவன் இராசேந்திரன் என்பதாகும்.

54. “நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன் றிருள்” – இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது?

(அ) இல்லறவியல்

(ஆ) துறவறவியல்

(இ) ஊழியல்

(ஈ) பாயிரவியல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

இப்பாடல் 999-ஆவது குறளாகும்.

பாயிரம்: 1 முதல் 40 வரை: இல்லறவியல்: 41 முதல் 240 வரை: துறவறவியல்: 241 முதல் 370 வரை: ஊழியல்: 371 முதல் 380 வரை

சரியான விடை: குடியியல்: 951 முதுல் 1080 வரை.

வினாவிற்கு கொடுக்கப்பட்ட 4 கொள்குறி விடைகளும் தவறு

55. பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு

பருமணி பகராநெற் – இத்தொடரில் “புயல்” – என்னும் சொல்லிற்கு பொருள்

(அ) வானம்

(ஆ) காற்று

(இ) மேகம்

(ஈ) நீர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) மேகம்

நந்திக் கலம்பகம்

பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு

பருமணி பகராநெற்

கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு

காவிரி வளநாடா!

பொருள்: ஊர்தோறும் மேகங்கள் பொழிகின்ற மணிகளையும், மூங்கில் தந்த பெரிய முத்துகளையும் கொடுத்து அவ்வூர்களிலுள்ள நெற்கதிர்களைத் தொகுத்து கொண்டு வருகின்ற நீர், கரையோடு மோதி வழியும் காவிரியின் வளம் பொருந்திய நாட்டை உடையவனே!

56. கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?

(அ) சே-சோலை

(ஆ) சோ-சிவப்பு

(இ) கா-மதில்

(ஈ) மா-விலங்கு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) மா-விலங்கு

சே-காளைமாடு, சிவப்பு. கா-காத்தல், சோலை. மதில், நகர். மா-விலங்கு, அழகு, மேன்மை.

57. ‘ஷெல்லிதாசன்” என்று தன்னைக் கூறிக்கொண்டவர் யார்?

(அ) சுப்பிரமணிய பாரதியார்

(ஆ) சுத்தானந்த பாரதியர்

(இ) சோமசுந்தர பாரதியார்

(ஈ) சுப்பிரமணிய சிவா

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) சுப்பிரமணிய பாரதியார்

58. குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது?

(அ) சூளாமணி

(ஆ) நாககுமார காவியம்

(இ) யசோதர காவியம்

(ஈ) நீலகேசி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) நீலகேசி

குண்டலகேசி என்ற பௌத்தசமய நூலுக்கு எதிராக எழுதப்பட்ட நீலகேசி சமண சமயம் சார்ந்த நூலாகும்.

59. “சேமமுற நாள் முழுவதும் உழைப்பதனாலே” – இந்தத் தேசமெல்லாம் செழுத்திடுது – எனப் பாடியவர்

(அ) கண்ணதாசன்

(ஆ) தஞ்சை இராமையாதாஸ்

(இ) மருதகாசி

(ஈ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) மருதகாசி

60. கீழ்வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது?

(அ) ஆயிரந்தீவு அங்கயற்கண்ணி

(ஆ) இராஜ தண்டனை

(இ) மாங்கனி

(ஈ) கொய்யாக்கனி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) மாங்கனி

“கொய்யாக்கனி” – இயற்றியவர் பெருஞ்சித்திரனார்

61. உவமைக் கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது?

(அ) நிலவுப் பூ

(ஆ) சூரியகாந்தி

(இ) தேன்மழை

(ஈ) பூங்கொடி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தேன்மழை

நிலவுப்பூ-சிற்பி: சூரியகாந்தி-நா.காமராசன், தேன்மழை-சுரதா, பூங்கொடி-முடியரசன்

62. தம்மை நாயகியாகக் கற்பனை செய்து நாரையைத் தூது விட்ட ஆழ்வார் யார்?

(அ) பொய்கையாழ்வார்

(ஆ) நம்மாழ்வார்

(இ) குலசேகர ஆழ்வார்

(ஈ) பெரியாழ்வார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) நம்மாழ்வார்

நம்மாழ்வார் தம்மை நாயகியாக எண்ணிப் பாடும் அகப்பாடற் போக்கில் அமைந்த பாசுரங்களில் இவர் தம் ஏக்கமும், தவிப்பும், இறையன்பும் நன்கு வெளிப்படுகின்றன.

63. உமர்கய்யாம், “ரூபாயத்” என்ற பெயரில் எழுதிய நூலைக் கவிமணி மொழி பெயர்த்தார். அடிக்கோடிட்ட சொல்லின் பொருளை எழுதுக:

(அ) எட்டடிச் செய்யுள்

(ஆ) இரண்டடிச் செய்யுள்

(இ) நான்கடிச் செய்யுள்

(ஈ) இவை எல்லாம் தவறானவை

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) நான்கடிச் செய்யுள்

64. கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை?

(அ) நச்சர்

(ஆ) திருமலையர்

(இ) அடியார்க்கு நல்லார்

(ஈ) தாமத்தர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) அடியார்க்கு நல்லார்

1. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர். இவரது காலம் கி.பி.12-ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.14-ஆம் நூற்றாண்டு என்றும் பலவிதமான கருத்துகளினால் உறுதியான முடிவுக்கு வர இயலவில்லை.

2. “தருமர் மணக்குடவர் தாமதத்தர் நச்சர்.

பரிதி பரிமேலழகர்-திருமலையார்

மல்லர் பரிப் பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்கு

எல்லையுரை செய்தார் இவர்” – திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர் பதின்மர் பற்றி மேற்கண்ட பழம் பாடல் கூறுகிறது.

65. “ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும்

ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின்

மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான்” – என்று பாடியவர் யார்?

(அ) பாரதிதாசன்

(ஆ) கண்ணதாசன்

(இ) முடியரசன்

(ஈ) பாரதியார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) முடியரசன்

“முடியரசன்” என்ற புனைப்பெயரில் எழுதியவர் துரைராசு ஆவார். இவர் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞருள் மூத்தவர். “யார் கவிஞன்?” என்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதையிலிருந்து வினாவில் உள்ள வரிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

66. “கோவலன் பொட்டல்” என வழங்கப்படும் இடம்

(அ) கோவலன் பொட்டலம் விரித்து உணவு அருந்திய இடம்

(ஆ) கோவலன் கொலைக்களப்பட்ட இடம்

(இ) கோவலன் சிலம்பு விற்க வந்த இடம்

(ஈ) கண்ணகி கோவலன் வாழ்ந்த இடம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கோவலன் கொலைக்களப்பட்ட இடம்

மதுரையில் கோவலன் கொலைக்களப்பட்ட இடம் “கோவலன் பொட்டல்” என வழங்கப்படுகிறது.

67. பாரதிக்கு “மகாகவி” என்ற பட்டம் கொடுத்தவர் யார்?

(அ) வ.ரா.

(ஆ) உ.வே.சா

(இ) கி.ஆ.பெ.வி

(ஈ) லா.ச.ரா.

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) வ.ரா.

பாரதியாருக்கு மகாகவி என்ற பட்டத்தை வழங்கியவர் வ.ராமசாமி ஐயங்கார் ஆவார்.

68. பொருந்தாத இணையைக் கண்டறிய:

(அ) வீரமாமுனிவர்-பரமார்த்த குருகதை

(ஆ) தேவநேயப் பாவாணர்-தமிழர் திருமணம்

(இ) திரு.வி.க-சைவத்திறவு

(ஈ) பெருஞ்சித்திரனார்-தமிழ்ச்சோலை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) பெருஞ்சித்திரனார்-தமிழ்ச்சோலை

பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள்: கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக் கொத்து, பள்ளிப் பறவைகள், நூறாசிரியம்.

69. பின்வருவனவற்றுள் பொருந்தும் இணையைத் தேர்ந்தெடு:

செரு செறு

(அ) சண்டை – 1. வயல்

(ஆ) போர் – 2. சிறிய

(இ) போர்க்களம் – 3. குளம்

(ஈ) கோபப்படு – 4. போரிடு

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) சண்டை – 1. வயல்

70. “அழுது அடியடைந்த அன்பர்” என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?

(அ) அருணகிரியார்

(ஆ) சம்பந்தர்

(இ) சுந்தரர்

(ஈ) மாணிக்கவாசகர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) மாணிக்கவாசகர்

திருப்பெருந்துறை இறைவனை மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்கி அழுது தொழுததால் மாணிக்க வாசகர் “அழுது அடியடைந்த அன்பர்” எனப்படுகிறார்.

71. “என்றுமுள தென்தமிழ்” என்னும் தொடரை இயம்பியவர் யார்?

(அ) கம்பர்

(ஆ) பாரதியார்

(இ) பாரதிதாசன்

(ஈ) வள்ளலார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) கம்பர்

72. “கற்றவனுக்குக் கட்டுச் சோறு வேண்டாம்” என்று குறிப்பிடும் இலக்கியம்

(அ) மூதுரை

(ஆ) நாலடியார்

(இ) பழமொழி நானூறு

(ஈ) நான்மணிக்கடிகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பழமொழி நானூறு

பழமொழி நானூறில் – 4ஆவது பாடல். ஆசிரியர்: முன்றுறை அரையனார். “ஆற்றுணா வேண்டுவது இல்” என்ற பழமொழியாகும்

73. மாணவன் பாடம் படித்திலன் – எவ்வகைத் தொடர்?

(அ) எதிர்மறைத் தொடர்

(ஆ) பொருள் மாறா எதிர்மறைத் தொடர்

(இ) உடன்பாட்டுத் தொடர்

(ஈ) கலவைத் தொடர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) எதிர்மறைத் தொடர்

74. தக்கார் தகவு இலர் என்பது அவர் அவர் எச்சத்தால் காணப்படும் – இக்குறளில் அமைந்துள்ள தக்கர் – எச்சத்தால் என்ற இணை.

(அ) அடி முரண்

(ஆ) அடி மோனை

(இ) அடி இயைபு

(ஈ) இன எதுகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

வினா தவறு. கொள்குறிகளும் தவறு.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்படும்

தக்கார்-தகவிலர்-இணைமோனை

75. விடைக்கேற்ற வினாவைத் தேர்க:

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

சொல்வதிலோர் மகிமை இல்லை”

(அ) தமிழர்க்குப் பெருமை தராதது எது?

(ஆ) நமக்குள்ளே பேசுவது எது?

(இ) பழங்கதைகளால் என்ன நன்மை?

(ஈ) பழங்கதைகளின் மகிமை யாது?

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) தமிழர்க்குப் பெருமை தராதது எது?

76. விடைக்கேற்ற வினாவைத் தேர்க:

“இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா”

(அ) இரட்டைக்கிளவி இரட்டித்தால் என்னவாகும்?

(ஆ) இரட்டைக்கிளவி எவ்விடத்தில் வரும்?

(இ) இரட்டிற்பிரிந்திசையாதது எது?

(ஈ) இரட்டிற் பிரிந்திசைப்பது எது?

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) இரட்டிற்பிரிந்திசையாதது எது?

77. “எறும்பும் தன் கையில் எண் சாண்” – எனப்பாடியவர்

(அ) கபிலர்

(ஆ) ஒட்டக்கூத்தர்

(இ) ஒளவையார்

(ஈ) புகழேந்தி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) ஒளவையார்

கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)

உற்ற கலைமடந்தை ஒதுகிறாள் – மெத்த

வெறும்பந் தயம்கூற வேண்ற்டா; புலவீர்

எறும்புந்தன் கையால்எண் சாண் – ஒளவையார்

ஒளவையார் பாடிய இப்பாடல் “தனிப்பாடல் திரட்டில்” உள்ளது. பல்வேறு காலகட்டங்களில் புலவர்கள் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பே தனிப்பாடல் திரட்டாகும். இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமியின் வேண்டுதலுக்கு இணங்க சந்திரசேகர கவிராசப் பண்டிதர் தமிழகம் முழுவதும் சென்று சேகரித்த பாடல்களின் தொகுப்பாகும். இங்கே குறிப்பிடப்பட்ட ஒளவையார் சங்ககால ஒளவையாருக்கு மிகவும் பிற்பட்டவர், கம்பர், ஒட்டக்கூத்தார், புகழேந்திப் புலவர் போன்றோரின் காலத்தில் வாழ்ந்தவர்

78. பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?

(அ) தைப்பாவை

(ஆ) திருப்பாவை

(இ) திருவெம்பாவை

(இ) காவியப்பாவை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) திருப்பாவை

1. பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டது திருப்பாவை.

2. இதனை எழுதியவர் ஆண்டாள். இவர் ஆழ்வார்களில் ஒருவராவார்.

3. இவர் எழுதிய மற்றொரு நூல் நாச்சியார் திருமொழி ஆகும்.

4. இவரது காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு ஆகும்.

79. காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்?

(அ) சிவஞான முனிவர்

(ஆ) பலபட்டடைச் சொக்கநாதர்

(இ) அழகிய சொக்க நாதர்

(ஈ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) அழகிய சொக்க நாதர்

1. அழகிய சொக்கநாதர் கி.பி.19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

2. இவரது பாடல்கள் பல (25-க்கும் மேற்பட்டவை) தனிப்பாடல் திரட்டில் தொகுக்கப்பட்டுள்ளன.

3. இவர் காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ், காந்தியம்மை அந்தாதி போன்ற நூல்களை எழுதியுள்ளார்

80. சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவக சிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?

(அ) பேராசிரியர்

(ஆ) அடியார்க்கு நல்லார்

(இ) நாச்சினார்க்கினியர்

(ஈ) ந.மு.வேங்கடசாமி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) நாச்சினார்க்கினியர்

1. நச்சினார்க்கினியர், “உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்” என்ற பெரும் பாராட்டைப் பெற்றவர். இவரது காலம் கி.பி.14-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியாகும். இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர்.

2. தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, குறுந்தொகையில் 20 பாடல்கள், சீவகசிந்தாமணி ஆகியவற்றிற்கு இவர் உரை எழுதுpயுள்ளார்.

81. கனி முன் நேர் வருவதும் கனி முன் நிரை வருவதும்

(அ) கலித்தளை

(ஆ) வஞ்சித்தளை

(இ) இயற்சீர் வெண்டளை

(ஈ) வெண்சீர் வெண்டளை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) வஞ்சித்தளை

கலித்தளை – காய்முன் நிரை வருவது. வஞ்சித்தளை – கனிமுன் நிரை மற்றும் கனி முன் நேர் வருவது. கனிமுன் நிரை – ஒன்றிய வஞ்சித்தளை. கனிமுன் நேர் – ஒன்றாத வஞ்சித்தளை. இயற்சீர் வெண்டளை – மா முன் நிரையும், விளம் முன் நேரும் வருவது. வெண்சீர் வெண்டளை – காய் முன் நேர் வருவது

82. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பி தேரினும் அஃதே துணை – கீழ்க்காணும் சொற்களும் எதிர்ச்சொல்லைக் கண்டறிக:

(அ) பரிந்து x வெறுத்து

(ஆ) பரிந்து x விரும்பி

(இ) தெரிந்து x உணர்ந்து

(ஈ) தெரிந்து x ஆராய்ந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) பரிந்து x வெறுத்து

83. “மூதூர்” எத்திணைக்குரிய ஊர்?

(அ) மருதம்

(ஆ) பாலை

(இ) குறிஞ்சி

(ஈ) நெய்தல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) மருதம்

மருதத் திணைக்குரிய ஊர்கள் – பேரூர் மற்றும் மூதூர்.

84. பின்வருவனவற்றுள் “ஈறு போதல்” “இனமிகல்” என்னும் விதிகளின்படி மட்டும் புணராதது

(அ) நெடுங்கடல்

(ஆ) செங்கடல்

(இ) கருங்கடல்

(ஈ) கருங்குயில்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) செங்கடல்

நெடுங்கடல்-நெடுமை + கடல்

1. ஈறுபோதல் விதிப்படி “மை” விகுதி கெட்டு நெடு + கடல் என்றானது.

2. நெடு + கடல் “க”விற்கு இனமான “ங்” தோன்றி நெடுங்கடல் என்றானது

செங்கடல்-செம்மை + கடல்

1. ஈறுபோதல் விதிப்படி செம் + கடல் என்றானது

2. நிலைமொழியீற்றில் மகரம் கெட்டு செ + கடல் என்றானது

3. இனமிகல் விதிப்படி செங்கடல் என்றாது

கருங்கடல்-கருமை + கடல்

ஈறுபோதல்-கரு + கடல்

இனமிகல் – கருங்கடல்

கருங்குயில் – கருமை + குயில்

ஈறுபோதல் – கரு+குயில், இனமிகல் – கருங்குயில்

85. “பண்புப்பெயர்” இலக்கணக்குறிப்புச் சொல்லைத் தேர்க:

(அ) திட்பம்

(ஆ) ஆட்டம்

(இ) கோடல்

(ஈ) பெறுதல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) திட்பம்

ஏனையவை தொழிற்பெயர்கள்

86. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

(அ) தோப்பு, துப்பு, தீர்ப்பு, தப்பு

(ஆ) துப்பு, தோப்பு, தப்பு, தீர்ப்பு

(இ) தப்பு, தீர்ப்பு, துப்பு, தோப்பு

(ஈ) தப்பு, தீர்ப்பு, தோப்பு, துப்பு

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) தப்பு, தீர்ப்பு, துப்பு, தோப்பு

87. பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) சுவடி-நூல்

(ஆ) வெய்யோன்-திங்கள்

(இ) செட்டு-சிக்கனம்

(ஈ) சிந்தை-உள்ளம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) வெய்யோன்-திங்கள்

வெண்யோன் என்றால் ஞாயிறு

88. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்

(அ) தமிழில் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும்.

(ஆ) தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல்

(இ) தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர்

(ஈ) தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்

89. உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர் – இத்தொடரைக் கூறியவர்

(அ) இளங்கோவடிகள்

(ஆ) சீத்தலை சாத்தனார்

(இ) கம்பர்

(ஈ) வால்மீகி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கம்பர்

மேற்கண்ட செய்யுள் தொடர் பண்டைத் தமிழகத்தில்

1. அறுவை சிகிச்சை முறை இருந்ததைப் பற்றி கூறும் கம்பரின் கூற்றாகும்.

2. பண்டைத் தமிழகத்தில் அறுவை சிகிச்சை முறை பற்றி கூறும் மற்றொரு நூல் மணிமேகலையாகும்.

90. “பிள்ளைத் தமிழ்” என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?

(அ) ஒட்டக்கூத்தர்

(ஆ) புகழேந்தி

(இ) குமரகுருபரர்

(ஈ) பகழிக்கூத்தர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) ஒட்டக்கூத்தர்

1. பிள்ளைத் தமிழ் என்பது 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். தெய்வத்தையோ மக்களுள் மாண்புற்றவரையோ குழந்தையாகப் பாவித்து அவர்தம் அருமை பெருமைகளைச் செய்யுளில் அமைத்துப் புகழ்ந்து பாடுவதாகும்.

2. கி.பி.12-ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் எழுதிய “குலோத்துங்கச் சோழன் பிள்ளைத்தமிழ்” என்ற நூலே பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட முதற்நூலாகும்.

91. திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது?

(அ) திருக்குறுந்தாண்டகம்

(ஆ) திருவெழுக்கூற்றிருக்கை

(இ) திருநெடுந்தாண்டகம்

(ஈ) திருவந்தாதி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) திருவெழுக்கூற்றிருக்கை

திருவெழுக்கூற்றிருக்கை என்பது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். சொல்லணியில் பாடப்படும் நூலாகும். திருவெழுக்கூற்றிருக்கை என்னும் பெயரில் திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வார், நக்கீர தேவ நாயனார், அருணகிரிநாதர் ஆகியோர் பாடல்கள் இயற்றியுள்ளனர்.

92. விடைத்தேர்க: வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?

(அ) முதுமொழி மாலை

(ஆ) செந்தமிழ் இலக்கணம்

(இ) கொடுந்தமிழ் இலக்கணம்

(ஈ) தொன்னூல் விளக்கம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) தொன்னூல் விளக்கம்

தொன்னூல் விளக்கம் வீரமாமுனிவரால் இயற்றப்பட்டது. இவரின் இயற்பெயர் கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி. இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இவர் இயற்றிய நூல்கள்: தேம்பாவணி-இயேசுவின் தந்தையான சூசையப்பரின் வாழ்க்கை வரலாறு, சதுரகராதி-தமிழ் மொழியில் தோன்றிய முதல் அகராதி நூல், தொன்னூல் விளக்கம்-எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களைக் கூறும் நூல். பரமார்த்த குரு கதை-நகைச்சுவைக் கதை. மேலும் ஞானோபதேசம், திருக்காவலூர்க் கலம்பகம், தமிழ், இலத்தீன், பிரெஞ்சு, போர்த்துகீசிய அகராதிகளையும் எழுதியுள்ளார்.

93. “ஏற்பாடு” என்பதன் பொருள்

(அ) சூரியன் உதிக்கும் நேரம்

(ஆ) ஏற்றப்பாட்டுப் பாடுதல்

(இ) சந்திரன் தோன்றும் நேரம்

(ஈ) சூரியன் மறையும் நேரம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) சூரியன் மறையும் நேரம்

வினாவில் “ஏற்பாடு” என்று பிழையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. எற்பாடு என்பதே சரியான சொல்லாகும். எற்பாடு என்பது நெய்தல் திணைக்குரிய சிறுபொழுதாகும். எற்பாடு-பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையாகும். ஏற்பாடு-எல்+பாடு. எல்-சூரியன். பாடு-மறையும் நேரம்

94. “க” – என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கு தவறான பொருள் எது?

(அ) அரசன்

(ஆ) காற்று

(இ) மயில்

(ஈ) காத்தல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) காத்தல்

க-அரசன், காற்று, மயில்; கா-காத்தல், சோலை

95. “சலவரைச் சாரா விடுதல் இனிதே”

“சலவர்” – என்றச் சொல்லின் ஆங்கிலச்சொல்

(அ) Sorrow full Person

(ஆ) Importer

(இ) Violent Person

(ஈ) Deceit full Person

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) Deceit full Person

சலவரின் பொருள்-வஞ்சகர். வஞ்சகன்-Deceitful Person (வினாவில் Deceitful என்று தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது). துயரமுடையோன் – Sorrowful Person (வினாவில் Sorrowfull என்று தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது). வன்முறையாளன்-Voilent Person. இறக்குமதியாளர்-Importer.

96. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

(அ) சீராட்டு, தாலாட்டு, நீராட்டு, பாராட்டு

(ஆ) தாலாட்டு, சீராட்டு, பாராட்டு, நீராட்டு

(இ) நீராட்டு, பாராட்டு, சீராட்டு, தாலாட்டு

(ஈ) பாராட்டு, நீராட்டு, தாலாட்டு, சீராட்டு

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) சீராட்டு, தாலாட்டு, நீராட்டு, பாராட்டு

97. செயப்பாட்டுவினைச்சொற்றொடரைக் காண்க:

(அ) நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது

(ஆ) தச்சன் நாற்காலியைச் செய்தான்

(இ) நாற்காலியைச் செய்தவன் தச்சன்

(ஈ) நாற்காலியைத் தச்சன் செய்தான்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது

நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது-செயப்பாட்டுவினை. B, C, D மூன்றுமே செய்வினை.

98. “கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்தது போல” என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது?

(அ) இன்பம்

(ஆ) வருமுன் காத்தல்

(இ) மகிழ்ச்சி

(ஈ) துன்பம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) துன்பம்

99. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

(அ) வைகுதல் வைகறை வைகலும் வைகல்

(ஆ) வைகறை வைகுதல் வைகல் வைகலும்

(இ) வைகலும் வைகல் வைகுதல் வைகறை

(ஈ) வைகல் வைகலும் வைகறை வைகுதல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) வைகல் வைகலும் வைகறை வைகுதல்

100. வாக்கியங்களைக் கவனி:

கூற்று (A) : எ.கா:”நான் புத்தகம் கொண்டு வருகிறேன்” என்று பவானி, காயத்ரியிடம் கூறினாள்.

காரணம் (R): ஒருவர் கூறியதை அப்படியே கூறுவது, மேற்கோள் குறியீடு இடம் பெறும் தன்மை, முன்னிலை பெயர்கள் இடம் பெறுவது நேர்க்கூற்று ஆகும்.

(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல

(ஆ) இவற்றுள் (A) தவறு ஆனால் (R) சரி

(இ) இவற்றுள் (A) சரி ஆனால் (R) தவறு

(ஈ) இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்.

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்.

வினாவானது தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

கூற்று (A): “நான் புத்தகம் கொண்டு வருகிறேன்” என்று பவானி காயத்திரியிடம் கூறினாள் என்பது நேர்க்கூற்றாகும்.

இவ்வாறு வினா அமைந்திருக்க வேண்டும். நேர்க்கூற்றில் மேற்கோள் குறிகள், தன்மை, முன்னிலைப் பெயர்களும் இங்கு, இப்போது, இவை என்ற கட்டுப்பெயர்களும், நேற்று, இன்று, நாளை என்ற காலப்பெயர்களும் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!