Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 5

Tnpsc General Tamil Previous Question Paper 5

Tnpsc General Tamil Previous Question Paper 5: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்: தண்மை

(அ) குளிர்ச்சி

(ஆ) வெம்மை

(இ) கடுமை

(ஈ) மென்மை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) வெம்மை

தண்மை என்பதன் பொருள் குளிர்ச்சி. எனவே இதன் எதிர்ச்சொல் “வெம்மை” ஆகும்.

2. “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” எனப் பாடியவர்

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்

(இ) கவிமணி

(ஈ) நாமக்கல் கவிஞர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பாரதிதாசன்

“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” பாரதிதாசன்.

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” – பாரதியார்

3. பொருத்துக:

நூல் நூலாசிரியர்

அ. சிலப்பதிகாரம் – 1. திருத்தக்கதேவர்

ஆ. மணிமேகலை – 2. நாதகுத்தனார்

இ. சீவகசிந்தாமணி – 3. இளங்கோவடிகள்

ஈ. குண்டலகேசி – 4. சீத்தலைச்சாத்தனார்

அ ஆ இ ஈ

(அ) 2 3 1 4

(ஆ) 3 4 1 2

(இ) 3 4 2 1

(ஈ) 4 1 3 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 3 4 1 2

4. பொருளறிந்து பொருத்துக:

(அ) திங்கள் – 1.நட்சத்திரம்

(ஆ) வேந்தர்-  2.ஆகாயம்

(இ) வானம் – 3. மாதம்

(ஈ) விண்மீன்-  4. அரசர்

அ ஆ இ ஈ

(அ) 1 2 3 4

(ஆ) 2 3 4 1

(இ) 3 4 2 1

(ஈ) 4 1 2 3

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 4 2 1

5. கீழ்வருவனவற்றுள் சரியான இணையைக் கண்டறிக:

(அ) துடிப்பு-கோமகன்

(ஆ) அனுமதி-ஜெயகாந்தன்

(இ) ஆளுகை-டாக்டர்.சி.என்.அண்ணாதுரை

(ஈ) சோணாசலம்-சுஜாதா

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) துடிப்பு-கோமகன்

6. இவற்றில் அறிஞர் அண்ணா கூற்று?

(அ) “பாட்டாளி ஓய்வு பெறுவது சமூக நீதியில் ஒன்று”

(ஆ) “மெய்வைத்த செல்வமெங்கே! மண்டலீகர் தம் மேடை எங்கே”

(இ) “உள்ளத்தே பொருள் இருக்க புறம்பே பொருள் தேடுதல்”

(ஈ) “மன்னருக்குத் தன் தேசமில்லாமல் இறப்பில்லை”

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) “பாட்டாளி ஓய்வு பெறுவது சமூக நீதியில் ஒன்று”

“ஓய்வு என்ற தலைப்பில் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய கட்டுரையில் “பாட்டாளி ஓய்வு பெறுவது, சமூக நீதியில் ஒன்று, அடிப்படை நீதி! என்று குறிப்பிட்டுள்ளார்.

7. தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க:

(அ) இலக்கியம்-இலக்கு+இயம்

(ஆ) செம்மொழி-செம்மை+மொழி

(இ) தமிழ்மொழி- தமிழ்+மொழி

(ஈ) வேரூன்றிய-வேரூ+ஊன்றிய

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) வேரூன்றிய-வேரூ+ஊன்றிய

வேரூன்றிய- வேர்+ஊன்றிய. “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி புணர்ந்து (ர்+ஊ-ரூ) “வேரூன்றிய” என்றானது.

8. ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச்சொற்களை அறிக:

இந்தச் செஞ்சுரி டென்ஷன் நிறைந்தது

(அ) இந்த நூற்றாண்டு பரப்பரப்பானது

(ஆ) இந்த ஆண்டு பதற்றம் நிறைந்தது

(இ) இந்த நூற்றாண்டு மனக்கவலை அளிப்பது

(ஈ) இந்த நூற்றாண்டு மன அழுத்தம் நிறைந்தது

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) இந்த நூற்றாண்டு மன அழுத்தம் நிறைந்தது

9. பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) பாண்டியர்-கொற்கை

(ஆ) சோழர்-காவிரிப்பூம்பட்டினம்

(இ) பல்லவர்-விசாகப்பட்டினம்

(ஈ) சேரர்-முசிறி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பல்லவர்-விசாகப்பட்டினம்

தமிழகத்தை ஆண்ட மன்னர்களும் அவர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியிலிருந்த துறைமுகங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பல்லவரின் துறைமுகம் மாமல்லபுரம் ஆகும்.

10. பிரித்தெழுதுக:

“கரியன்”

(அ) கரு+அன்

(ஆ) கருமை+அன்

(இ) கரிய+அன்

(ஈ) கரி+அன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கருமை+அன்

கருமை+அன் – பண்புப்பெயர் புணர்ச்சி.

“ஈறுபோதல் விதிப்படி மை விகுதி கெட்டு “கரு+அன்” என்றானது.

“இடையுகரம் இய்யாதல்” என்ற விதிப்படி “கரி+அன்”என்றானது.

யகர உடம்படுமெய் பெற்று கரி+ய்+அன் என்றானது.

“உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “கரி+யன்” என்றாக “கரியன்” என்று புணர்ந்தது.

General Tamil Study Materials

General Tamil Previous Questions Pdf

11. பொருத்துக:

அ. திருக்கோவையார் – 1.சேக்கிழார்

ஆ. திருப்பாவை – 2.மாணிக்கவாசகர்

இ. கலிங்கத்துப்பரணி – 3. ஆண்டாள்

ஈ. பெரியபுராணம் – 4. செயங்கொண்டார்

அ ஆ இ ஈ

(அ) 1 2 3 4

(ஆ) 2 3 4 1

(இ) 4 2 1 3

(ஈ) 2 3 1 4

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 2 3 4 1

12. “பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா

ஒருவன் தாயையும், நாட்டையும்

பழித்தவனாவான்” – என்று கூறியவர் யார்?

(அ) திரு.விக.

(ஆ) மறைமலையடிகள்

(இ) பரிதிமாற் கலைஞர்

(ஈ)தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) திரு.விக.

13. “புதுநெறிக

ண்ட புலவர்” – என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிறப்புக்குரியவர் எவர்?

(அ) சேக்கிழார்

(ஆ) தாயுமானவர்

(இ) மாணிக்கவாசகர்

(ஈ) இராமலிங்க அடிகளார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) இராமலிங்க அடிகளார்

14. “இமயம் எங்கள் காலடியில்” என்ற கவிதைத் தொகுப்பு யாரால் எழுதப்பட்டது?

(அ) சிற்பி பாலசுப்பிரமணியம்

(ஆ) தாரா பாரதி

(இ) ஆலந்தூர் கோ.மோகனரங்கன்

(ஈ) சுரதா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) ஆலந்தூர் கோ.மோகனரங்கன்

“இமயம் எங்கள் காலடியில்”என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் ஆவார். இந்நூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது. “நல்ல உலகம் நாளை மலரும்” என்ற நூல் இவருடைய மற்றொரு கவிதைத் தொகுப்பு நூலாகும்.

15. இரண்டு உதடுகள் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துகள்

(அ) ய், ர்

(ஆ) க், ங்

(இ) ல், ள்

(ஈ) ப், ம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) ப், ம்

இரண்டு உதடுகள் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துகள்-ப்,ம்.

க்,ங்-இவ்விரு மெய்களும் நாவினது முதற்பகுதி அண்ணத்தைத் தொடுவதனால் தோன்றுகின்றன.

ய்-இவ்வெழுத்து நாக்கின் அடிப்பகுதி, மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதனால் தோன்றுகிறது.

ர்,ழ்- இவை மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதனால் பிறக்கின்றன.

ல்-இது மேல்வாய்ப் பல்லின் அடியை நாவின் ஓரங்கள் தடித்து நெருங்குதவதனால் பிறக்கிறது.

ள்-இது மேல்வாயை நாவின் ஓரங்கள் தடித்துத் தடவுவதனால் பிறக்கிறது.

16. எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை, யாரைச் சாரும்?

(அ) பாரதிதாசன்

(ஆ) பாரதியார்

(இ) நாமக்கல் கவிஞர்

(ஈ) கவிமணி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பாரதியார்

17. கீழுள்ள பாரதிதாசன் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?

(அ) குடும்ப விளக்கு

(ஆ) பாண்டியன் பரிசு

(இ) தேன் மழை

(ஈ) குறிஞ்சித்திட்டு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தேன் மழை

“தேன்மழை” என்ற நூலின் ஆசிரியர் உவமைக் கவிஞர் சுரதா ஆவார். இந்நூல் தமிழக அரசின் “தமிழ் வளர்ச்சித் துறை” வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றுள்ளது.

18. கீழ்க்காணும் தொடரில் வழூஉச் சொற்களற்ற தொடரைக் கண்டுபிடி

(அ) வலதுபக்கச் சுவறில் எழுதாதே

(ஆ) வலதுபக்கம் சுவரில் எழுதாதே

(இ) வலப்பக்கச் சுவற்றில் எழுதாதே

(ஈ) வலப்பக்கச் சுவரில் எழுதாதே

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) வலப்பக்கச் சுவரில் எழுதாதே

19. “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” என வழங்கப்பெறும் நூல் எது?

(அ) மணிமேகலை

(ஆ) சிலப்பதிகாரம்

(இ) வளையாபதி

(ஈ) குண்டலகேசி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள்: உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், ஒற்றுமைக்காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், சிலம்பு, தமிழின் முதல் காப்பியம், சமுதாயக் காப்பியம், சிறப்பதிகாரம்.

20. திருக்குறள் பாயிர இயலில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

(அ) ஐந்து

(ஆ) நான்கு

(இ) இரண்டு

(ஈ) மூன்று

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) நான்கு

திருக்குறள்-பாயிரவியலில் நான்கு அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவையாவன: கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை மற்றும் அறன் வலியுறுத்தல்

1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!