Answer Key

Tnpsc Psychologist Exam Previous Questions And Answer Key 2022 – General Tamil & General Studies in Tamil

Tnpsc Psychologist Exam Previous Questions And Answer Key 2022 – General Tamil & General Studies in Tamil

PSYCHOLOGIST (IN PRISONS AND CORRECTIONAL SERVICES DEPARTMENT) IN TAMIL NADU JAIL SERVICES

1. “ஐ”, “ஒள” என்ற எழுத்துக்களின் இன எழுத்துகளைக் கண்டறிக

(அ) அ,இ (ஆ) இ,உ (இ) ஈ,ஓ (ஈ) அய்,அவ்

2. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளை கண்டறிக:

கரை கறை

அ. கரைதல் அறை

ஆ. ஓரம் அழுக்கு

இ. புரை பறை

ஈ. முதலை முதல்

3. சரியான நிறுத்தற் குறிகளைக் கண்டறிக:

(அ) “பாரத ஸ்டேட் வங்கி” “இலா” என்னும் மென்பொருளை உருவாக்கியிருக்கிறது.

(ஆ) பாரத ஸ்டேட் வங்கி, “இலா” என்னும் மென்பொருளை உருவாக்கியிருக்கிறது.

(இ) பாரத, ஸ்டேட் வங்கி “இலா” என்னும் மென்பொருளை உருவாக்கியிருக்கிறது.

(ஈ) “பாரத ஸ்டேட் வங்கி” இலா என்னும் மென்பொருளை உருவாக்கியிருக்கிறது.

4. ஊர்ப் பெயர்களின் மரூஉவைக் கண்டுபிடிக்க:

தஞ்சாவூரின் மரூஉவைக் கண்டுபிடிக்க

(அ) சோணாடு (ஆ) பழையாறை (இ) தென்னாடு (ஈ) தஞ்சை

5. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக:

(அ) ஆடு அலப்பும் (ஆ) மயில் கூவும் (இ) நரி ஊளையிடும் (ஈ) நாய் கத்தும்

6. சொல்லைப் பிரித்துப் பொருந்தாத தொடரை அறிக:

கானடை

(அ) கான் + அடை – காட்டைச்சேர் (ஆ) கான் + நடை – காட்டுக்கு நடத்தல்

(இ) கால் + நடை – விலங்குகள் (ஈ) கால் + நடை – காலால் நடத்தல்

7. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க:

கேட்டார்

(அ) கேட் (ஆ) கேட்ட (இ) கேட்டு (ஈ) கேள்

8. வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்:

எழுதுகிறாள்

(அ) எழுதுகின்றார் (ஆ) எழுதுவாள் (இ) எழுது (ஈ) எழுதுகின்றாள்

9. தாமரை தன் தோழியுடன் ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடை வீதிக்குச் சென்றாள்

– இவ்வாக்கியத்துக்கு பொருத்தமற்ற வினாச்சொல் இடம்பெற்றுள்ள தொடரைச் சுட்டுக:

(அ) தாமரை எங்குச்சென்றாள்? (ஆ) தாமரை எப்படிச் சென்றாள்?

(இ) தாமரையுடன் சென்றது யார்? (ஈ) தாமரை எப்பொழுதுச் சென்றாள்?

10. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:

(அ) பைந்தமிழ், பெருவெடிப்பு, பீடு, பேரண்டம் (ஆ) பீடு, பெருவெடிப்பு, பேரண்டம், பைந்தமிழ்

(இ) பேரண்டம், பைந்தமிழ், பெருவெடிப்பு, பீடு (ஈ) பெருவெடிப்பு, பீடு, பேரண்டம், பைந்தமிழ்

11. சொற்களை இணைத்து புதியசொல் உருவாக்கல்:

“பூ” என்ற சொல்லோடு இணையாத சொல்லைக் கண்டறிக:

(அ) மாலை (ஆ) மணி (இ) விலங்கு (ஈ) குண்டுமணி

12. கீழ்கண்ட வாக்கியங்களில் பேச்சு வழக்கில் அமைந்துள்ள வாக்கியத்தைக் கண்டறிக:

(அ) தமிழ் இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது.

(ஆ) தமிழ் முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளாக்கப்பட்டது

(இ) தமிழ் ஐம்பெருங்காப்பியங்கள அணிகலன்களாகப் பெற்றது

(ஈ) தமிழ் படிச்சவங்களால் வளர்க்கப்பட்டது

13. சரியான வினாச் சொல் எது?

மனப்பாடச் செய்யுளைப் படித்தாயா?

(அ) அறியாவினா (ஆ) கொடைவினா (இ) அறிவினா (ஈ) ஏவல்வினா

14. காண்பான் – கீழ்க்கண்டவற்றுள் எது சரி?

(அ) நடந்து முடிந்தசெயலைக் குறிப்பது (ஆ) நடந்த செயலைக் குறிப்பது

(இ) நடக்கவிருக்கும் செயலைக் குறிப்பது (ஈ) நடக்கும் செயலைக் குறிப்பது

15. கிறு,கின்று, ஆநின்று – எக்காலத்திற்கு உரிய இடைநிலைகள்?

(அ) எதிர்கால இடைநிலைகள் (ஆ) நிகழ்கால இடைநிலைகள்

(இ) இறந்தகால இடைநிலைகள் (ஈ) எதிர்மறை இடைநிலைகள்

16. விடைக்கேற்ற வினாவைக் கண்டறி:

“தென்னாட்டுப் பெர்னாட்ஷா” என்ற அறிஞர் அண்ணா புகழப்படுகிறார்

(அ) அறிஞர் அண்ணா எவ்வாறு புகழப்படுகிறார்?

(ஆ) அறிஞர் அண்ணா தென்னாட்டுப் பெர்னாட்ஷா என ஏன் புகழப்படுகிறார்

(இ) பெர்னாட்ஷா யார்?

(ஈ) பெர்னாட்ஷா எவ்வாறு புகழப்படுகிறார்?

17. சரியான இணையைத் தேர்ந்தெடு

(அ) அலை-கடலலை (ஆ) அளை-வரவழை (இ) அழை-நண்டு (ஈ) அனை-கூப்பிடு

18. சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரைத் தேர்க:

(அ) சிறுபஞ்சமூலத்தின் ஒவ்வொரு ஐந்து பாடலிலும் கருத்துகள் இடம் பெற்றுள்ளன

(ஆ) சிறுபஞ்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துகள் இடம்பெற்றுள்ளன

(இ) ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துகள் சிறுபஞ்சமூலத்தின் இடம் பெற்றுள்ளன.

(ஈ) ஒவ்வொரு ஐந்து பாடலிலும் சிறுபஞ்சமூலம் இடம் பெற்றுள்ளன.

19. ஊர்ப்பெயர்களின் மரூஉ:

சரியான இணையைத் தெரிவு செய்க:

(அ) கோயம்புத்தூர்-கோவைபுதூர் (ஆ) புதுச்சேரி-புதுவை

(இ) கும்பகோணம்-கும்பை (ஈ) திருநெல்வேலி-நெய்வேலி

20. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக:

(அ) மாமல்லபுரம்-மயிலை (ஆ) செங்கல்பட்டு-செஞ்சி

(இ) உதகமண்டலம்-உதகை (ஈ) புதுச்சேரி-புதுகை

21. இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக:

“வெயிட்”

(அ) எடை (ஆ) நிறை (இ) பருமன் (ஈ) தராசு

22. பிறமொழிச் (ஆங்கிலச்) சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்:

பேங்க் (BANK)

(அ) பெட்டகம் (ஆ) இணையதள வணிகம் (இ) வணிக வளாகம் (ஈ) வங்கி

23. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக:

அ. Aesthetis 1. தொன்மம்

ஆ. Artifacts 2. கலைச்சொல்

இ. Terminology 3. கலைப்படைப்புகள்

ஈ. Myth 4. அழகியல்

அ ஆ இ ஈ

அ. 2 3 4 1

ஆ. 4 2 3 1

இ. 1 3 4 2

ஈ. 4 3 2 1

24. விடை வகைகள்:

“விளையாட்டு மைதானம் எங்குள்ளது?” என்ற வினாவிற்கு “இப்பக்கத்தில் உள்ளது” என உரைப்பது

(அ) ஏவல் விடை (ஆ) மறை விடை (இ) நேர் விடை (ஈ) சுட்டு விடை

25. பொருத்தமான காலம் அமைத்தல்:

சரியான தொடரைத் தேர்ந்தெடு:

(அ) கண்ணனைப் பார்த்தேன் (நிகழ்காலம்) (ஆ) கண்ணனைப் பார்க்கப் போகிறேன் (எதிர்காலம்)

(இ) கண்ணனைப் பார்க்கிறேன் (இறந்தகாலம்) (ஈ) கண்ணனைப் பார்ப்பேன் (எதிர்காலம்)

26. சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க:

குருவி, கொய்யா, சோறு, பழம், போட்டி

(அ) குருவி போட்டி (ஆ) கொய்யா சோறு (இ) சோறு போட்டி (ஈ) கொய்யாப் பழம்

27. பேச்சு வழக்கில் இருந்து எழுத்து வழக்காக மாற்றுக:

இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. நீயும் புரிஞ்சுக்கோ

(இ) இப்பொழுது எனக்கு புரிஞ்சுது. நீயும் புரிஞ்சுக்க

(ஆ) இப்பொழுது எனக்கு புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள்

(இ) இப்போ எனக்கு புரிஞ்சுருச்சு. நீயும் புரிந்துகொள்

(ஈ) இப்ப எனக்கு புரிந்துவிட்டது. நீயும் புரிஞ்சுக்க

28. சரியான “அகர” வரிசையைத் தேர்ந்தெடு:

(அ) தூசும், துகிரும், ஆரமும், அகிலும், முத்தும், மணியும்

(ஆ) தூசும், துகிரும், முத்தும், மணியும், அகிலும், ஆரமும்

(இ) அகிலும், ஆரமும், துகிரும், முத்தும், தூசும், மணியும்

(ஈ) அகிலும், ஆரமும், துகிரும், தூசும், மணியும், முத்தும்

29. தொடரின் வகையைக் கண்டறிக:

அவன் திருந்தினான்

(அ) பிறவினைத் தொடர் (ஆ) கட்டளைத் தொடர் (இ) தன்வினைத் தொடர் (ஈ) செய்தித் தொடர்

30. பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன் ————- பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்

(அ) மேலும் (ஆ) ஆகையால் (இ) ஏனெனில் (ஈ) அதனால்

31. தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது

– இத்தொடருக்கு ஏற்ற வினா அதை;திடுக:

(அ) மழை ஏன் வெள்ளத்தில் மூழ்கியது? (ஆ) வெள்ளம் ஏன் மழையில் மூழ்கியது?

(இ) மழையு; வெள்ளமும் ஏன் புவியில் மூழ்கியது (ஈ) புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

32. பிரித்தெழுதுதல்:

“வெண்குடை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

(அ) வெண் + குடை (ஆ) வெண்மை + குடை

(இ) வெம் + குடை (ஈ) வெம்மை + குடை

33. சேர்த்தெழுதுதல்:

நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

(அ) நிலயென்று (ஆ) நிலவென்று (இ) நிலவன்று (ஈ) நிலவுஎன்று

34. உவமைக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற்போல

(அ) ஒற்றுமை (ஆ) நட்பு (இ) ஒற்றுமையின்மை (ஈ) பகைமை

35. வினைமுற்றுக்குரிய வேர்ச்சொல்லை எழுதுக:

பயின்றாள்

(அ) படி (ஆ) பயின்று (இ) பயின்ற (ஈ) பயில்

36. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:

சூரியன்

(அ) ஞாயிறு, பரிதி (ஆ) பரிதி, திங்கள் (இ) திங்கள், நிலவு (ஈ) நிலவு, கதிரவன்

37. ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான தொடரைத் தேர்க:

1. உலகம் தமிழ் மொழி வாழட்டும் உள்ள வரையிலும்.

2. உயிரெழுத்துகள் பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.

3. வென்றதை பகைவரை பாடும் இலக்கியம் ஆகும் பரணி.

4. அம்புவிடும் கலையை ஏகலை என்றது தமிழ்

(அ) 1 மற்றும் 3 (ஆ) 2 மற்றும் 4 (இ) 2 மற்றும் 3 (ஈ) 3 மற்றும் 4

38. பிழையற்ற சரியான தொடரைக் கண்டறிக:

(அ) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின (ஆ) தேர்த்திருவிலாவிற்குச் சென்றனர்

(இ) வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது (ஈ) இளைக்கு வேறு பெயர் தளை

39. நிறுத்தற்குறியிட்ட சரியான தொடரைத் தேர்ந்தெடு:

(அ) 11வது வயதிலேயே, அரசவையில் கவிதை எழுதி பாரதி என்னும் பட்டம் பெற்றார் பாரதியார்

(ஆ) 11வது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி “பாரதி” என்னும் பட்டம் பெற்றார் பாரதியார்

(இ) 11வது வயதிலேயே, அரசவையில் கவிதை எழுதி “பாரதி” என்னும் பட்டம் பெற்றார் பாரதியார்

(ஈ) 11வது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி “பாரதி” என்னும் பட்டம் பெற்றார் பாரதியார்

40. சரியான நிறுத்தற்குறியிட்ட வாக்கியத்தைக் கண்டறிக:

(அ) திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள் போன்றவற்றை இல்லவிழாக்களாக கொண்டாடினர்.

(ஆ) திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள், போன்றவற்றை இல்ல விழாக்களாக கொண்டாடினர்

(இ) திருமணம் : வளைகாப்பு : பிறந்தநாள், போன்றவற்றை இல்ல விழாக்களாக கொண்டாடினர்

(ஈ) திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள் போன்றவற்றை இல்ல விழாக்களாக கொண்டாடினர்

41. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:

கிளி

(அ) தத்தை, கிள்ளை (ஆ) உயிர், உண்மை

(இ) வாய்மை, பொய்மை (ஈ) கண், உண்மை

42. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிக:

(அ) மூவேந்தர் 1. இறந்த, நிகழ், எதிர்

(ஆ) முக்கனி 2. சேரர், சோழர், பாண்டியர்

(இ) முத்தமிழ் 3. மா, பலா, வாழை

(ஈ) முக்காலம் 4. இயல், இசை, நாடகம்

அ ஆ இ ஈ

அ. 4 1 2 3

ஆ. 2 3 4 1

இ. 2 1 4 3

ஈ. 3 2 4 1

43. தமிழ்ச்சொல் அறிக:

ப்ரௌசர் (Browser) என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல் எது?

(அ) சுட்டி (ஆ) உலவி (இ) செதுக்கி (ஈ) கணினி

44. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தெரிக:

Cutural Values

(அ) கலை விழா (ஆ) கலாச்சாரப் பெருமை

(இ) பண்பாட்டு எல்லை (ஈ) பண்பாட்டு விழுமியங்கள்

45. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக:

புலி

(அ) குட்டி (ஆ) குருளை (இ) பறழ் (ஈ) கன்று

46. சொல்லத்தகாத சொற்களை மறைத்துக் கூறுவது

(அ) மரபு (ஆ) குழுஉக்குறி (இ) மரூஉ (ஈ) இடக்கர் அடக்கல்

47. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:

(அ) தொன்மை, தேங்காய், தௌவை, தோழன் (ஆ) தொன்மை, தௌவை, தோழன், தேங்காய்

(இ) தேங்காய், தொன்மை, தோழன், தௌவை (ஈ) தேங்காய், தௌவை, தோழன், தொன்மை

48. “கேள்” என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று கண்டறிக:

(அ) கேட்ட (ஆ) கேட்டான் (இ) கேட்டு (ஈ) கேட்டல்

49. வேர்ச்சொல்லின் எதிர்மறை தொழிற்பெயரைக் காண்க:

“நட”

(அ) நடத்தல் (ஆ) நடந்த (இ) நடவாமை (ஈ) நடந்தவன்

50. சொற்களை ஒழுங்குபடுத்துக:

“காவிய இன்பமும் ஒன்று வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள்”

(அ) இன்பத்துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று வாழ்விற்குரிய

(ஆ) காவிய இன்பத்துறைகளுள் இன்பமும் வாழ்விற்குரிய ஒன்று

(இ) ஒன்று காவிய இன்பமும் வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள்

(ஈ) வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று

51. சந்திப் பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக:

1. மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்புச் சொந்தமாகும்.

2. மாட்டை தழுவும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும்.

3. தமிழ் மக்களின் வீரத்தை சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும்.

4. தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும்.

(அ) 1 மற்றும் 2 (ஆ) 1 மற்றும் 4 (இ) 2 மற்றும் 3 (ஈ) 3 மற்றும் 4

52. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றுக:

ஊட்டமிகு உணவு உண்டார் – அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

(அ) ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்

(ஆ) ஊட்டமிகு உணவு உண்டதால் அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்

(இ) ஊட்டமிகு உணவு உண்டு அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்

(ஈ) ஊட்டமிகு உணவால் அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்

53. பொருந்தாத சொல்லைக் கண்டறிக:

(அ) கர்நாடகம் (ஆ) கேரளா (இ) இலங்கை (ஈ) ஆந்திரா

54. எதிர்ச்சொற்களை பொருத்துக:

1. எளிது – புரவலர்

2. ஈதல் – அரிது

3. அந்நியர் – ஏற்றல்

4. இரவலர் – உறவினர்

(அ) 2,1,4,3 (ஆ) 3,4,1,2 (இ) 2,3,4,1 (ஈ) 3,4,2,1

55. “புதுமணல்” என்பதன் எதிர்ச்சொல் எழுதுக:

(அ) புதுமை மணல் (ஆ) புதிய மணல் (இ) பழமணல் (ஈ) பூமணல்

56. எதிர்ச்சொல்லை எழுத்தெழுதுதல்:

இயற்கை:

(அ) வன்மை (ஆ) செயற்கை (இ) செழுமை (ஈ) வலிமை

57. பிரித்து எழுதுக:

“துயின்றிருந்தார்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது

(அ) துயின்று + இருந்தார் (ஆ) துயில் + இருந்தார் (இ) துயின்றி + இருந்தார் (ஈ) துயின் + இருந்தார்

58. விடை வகைகள்:

“நீ சாப்பிட வில்லையா?” என்ற வினாவிற்கு “சாப்பிட்டால் தூக்கம் வரும்” என்று உரைப்பது

(அ) இன மொழி விடை (ஆ) உறுவது கூறல் விடை (இ) உற்றது உரைத்தல் விடை (ஈ) நேர்விடை

59. அலுவல் சார்ந்த கலைச்சொற்களை கண்டறிந்து எழுதுக:

ஃபோல்டர் (Folder)

(அ) கோப்பு (ஆ) இழுவை முத்திரை (இ) மை பொதி (ஈ) மடிப்புத்தாள்

60. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்:

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்:

வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:

தோசை வைக்கப்பட்டது

(அ) செயப்பாட்டு வினை (ஆ) தன்வினை (இ) பிறவினை (ஈ) செய்வினை

61. பின்வரும் பத்தியைப் படித்து வினாவிற்கேற்ற விடையளிக்கவும் (61-65):

காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார் உடனே அவர்களை உள்ளே அழைத்தார். யாரைப் பார்க்க வந்தீங்க? என்று அன்புடன் வினவினார். “எங்க அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லே. உங்களைப் பார்த்தால், என்று சிறுமி கூறி முடிப்பதற்குள் அம்மா அனுப்பி விட்டாரா?” என்று காமராசர் கேட்டார். இல்லை நாங்களாகத்தான் வந்தோம். ஆம்மா அப்பளம் போட்டு வீடு விடாகக் கொண்டு போய் வித்திட்டு வருவாங்க அதில் வரும் வருமானத்தை வச்சுத்தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க” என்று குழந்தைகள் கூறினர். அதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார்.

மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். ஐயா தேர்வுக்குப் பணம் கட்டியாச்சு இந்த இந்த இரசீதை (பற்றுச் சீட்டை) அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க என்றனர். அதனைக் கேட்டு காமராசர் மனம் நெகிழ்ந்தார்.

61. காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள் யார்?

(அ) பெற்றோர் (ஆ) மக்கள் (இ) சிறுவன்-சிறுமி (ஈ) ஆசிரியர்கள்

62. இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது?

(அ) ஏழ்மை (ஆ) நேர்மை (இ) உழைப்பு (ஈ) கல்லாமை

63. மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம் எப்படியிருந்தது?

(அ) மகிழ்ந்தார் (ஆ) நெகிழ்ந்தார் (இ) துன்பப்பட்டார் (ஈ) கோபப்பட்டார்

64. சிறுவனும் சிறுமியும் எதற்காக காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?

(அ) தேர்வுக்கு பணம் கட்ட (ஆ) புத்தகம் வாங்க (இ) பொருள் வாங்க (ஈ) பேனா வாங்க

65. மறுநாள் குழந்தைகள் எதைக் கொண்டு வந்தனர்?

(அ) இரும்புப்பெட்டி (ஆ) இரசீதை (பற்றுச்சீட்டு) (இ) கடிதம் (ஈ) உணவு

66. ஒருமை பன்மை பிழையற்றதைக் கண்டறிக:

(அ) மேகங்கள் சூழந்து கொண்டது (ஆ) மேகம் சூழ்ந்து கொண்டன

(இ) மேகம் சூழ்ந்து கொண்டது (ஈ) மேகம் சூழந்து கொள்கின்றன

67. கீழ்க்காணும் தொடர்களில் தன்மை ஒருமை தொடரைத் தேர்க:

(அ) நான் அல்லோம் (ஆ) நாம் அல்லோம் (இ) அவன் அல்லன் (ஈ) நான் அல்லேன்

68. ஒருமை, பன்மை பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக:

(அ) மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை (ஆ) மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்று

(இ) மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்ல (ஈ) மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லேன்

69. தவறான பொருத்தம் எது?

(அ) திங்கள்-மாதம் (ஆ) ஓடு-மேற்கூரை (இ) நகை-மெய்ப்பாடு (ஈ) அரம்-ஆயுதம்

70. சரியான பொருத்தம்:

சொல் பொருள்

அ. யாக்கை காக்கை

ஆ. சேக்கை படுக்கை

இ. பிணித்து பிணி

ஈ. வாய்ந்த வாய்ச்சொல்

71. சொல்லை ஏற்புடைய பொருளுடன் பொருத்துக:

(அ) மயலுறுத்து-சீராக (ஆ) அருகுற-அருகில்

(இ) லயத்துடன்-தீராத (ஈ) மாளாத-மயங்கச்செய்

72. பிழையற்ற தொடரை அறிக:

(அ) செழியன் விளையாட வந்தது (ஆ) கண்ணகி மதுரையை எரித்தான்

(இ) மாடலன் நேற்று வந்தான் (ஈ) செல்வன் பாடங்களைப் படித்து வந்தாள்

73. மரபுச் சொற்களைப் பொருத்துக:

அ. கிளி 1. கூவும்

ஆ. மயில் 2. பேசும்

இ. ஆந்தை 3. அகவும்

ஈ. சேவல் 4. அலறும்

அ ஆ இ ஈ

அ. 2 4 3 1

ஆ. 2 3 4 1

இ. 3 2 1 4

ஈ. 3 1 4 2

74. பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் அடங்கி பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் நூல் எது?

(அ) புறநானூறு (ஆ) பழமொழி நானூறு (இ) அகநானூறு (ஈ) பாஞ்சாலி சபதம்

75. “தூது இலக்கியம்” வேறு எந்த பெயரால் அழைக்கப்படுகிறது?

(அ) சிந்து இலக்கியம் (ஆ) சந்து இலக்கியம் (இ) சங்க இலக்கியம் (ஈ) காதல் இலக்கியம்

76. மக்கள் – கூட்டுப்பெயர்:

சரியான எண்ணடையைக் கண்டறிக:

(அ) மக்கள் மந்தை (ஆ) மக்கள் கூட்டம் (இ) மக்கள் திரள் (ஈ) மக்கள் குவியல்

77. பொருத்தமற்ற தொடரை அறிக:

(அ) அவரை கொத்துக் கொத்தாய்க காய்க்கும்

(ஆ) முந்திரி குலை குலையாய்க் காய்க்கும்

(இ) வைக்கோலைக் கற்றை கற்றையாயக் கட்டி வைத்தனர்

(ஈ) மக்கள் குவியல் குவியலாய்த் திரண்டனர்

78. தகுந்த சொல்லைத் தேர்ந்தெடு:

பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது———-

(அ) வம்பு (ஆ) அமைதி (இ) அடக்கம் (ஈ) பொறை

79. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்:

———– விலங்கிடம் பழகாதே

(அ) நல்ல (ஆ) பெரிய (இ) இனிய (ஈ) கொடிய

80. சரியான கலைச்சொல்லைத் தேர்ந்தெடுக்க:

Passenger Name Record

(அ) பயணியர் வருகைப் பதிவு (ஆ) பயணியர் முன்பதிவு

(இ) பயணியர் பெயர்ப்பதிவு (ஈ) பயணியர் அவசரப்பதிவு

81. Irrigation – ஏற்ற தமிழ்ச்சொல் கண்டறிக:

(அ) நிலப்பகுதி (ஆ) காப்புரிமை (இ) பாசனம் (ஈ) வயல்

82. ‘Puppetry’ – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?

(அ) சிலம்பாட்டம் (ஆ) கோலாட்டம் (இ) பொம்மலாட்டம் (ஈ) கரகாட்டம்

83. கூற்று, காரணம் – சரியா? தவறா?

கூற்று: நடுவண் அரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு 2004

காரணம்: உலக மொழிகளில் மூத்தமொழி தமிழ்

(அ) கூற்று தவறு, காரணம் சரி (ஆ) கூற்று சரி, காரணம் தவறு

(இ) கூற்று சரி, காரணம் சரி (ஈ) கூற்று தவறு, காரணம் தவறு

84. கூற்று, காரணம் – சரியா? தவறா?

கூற்று: நல்லொழுக்கமே நல்ல மனிதர்களை உருவாக்கும்

காரணம்: நாம் பின்பற்ற வேண்டிய நற்பண்புகளை அற நூல்கள் விளக்குகின்றன.

(அ) கூற்று தவறு, காரணம் சரி (ஆ) கூற்று சரி, காரணம் தவறு

(இ) கூற்று சரி, காரணம் சரி (ஈ) கூற்று தவறு, காரணம் தவறு

85. குறில் நெடில் மாற்றம் அறிந்து, பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக:

வனம் வானம்

அ. விசும்பு அரண்

ஆ. கான் விசும்பு

இ. முளி ஆரம்பம்

ஈ. சோலை பொழில்

86. குறில் நெடில் மாற்றம் அறிந்து, பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக:

மலை மாலை

அ. மழை வெள்ளம்

ஆ. தொடுதல் விடுதல்

இ. சிகரம் சிறு பொழுது

ஈ. விலங்கு ஓவியம்

87. கீழ்கண்ட சொற்களில் வேகமாக நடத்தல், கூரையாக பயன்படுத்தும் பொருள் என்பதைக் குறிக்கும் சொல்லைக் கண்டறிக:

(அ) வீடு (ஆ) தேடு (இ) நாடு (ஈ) ஓடு

88. இரு பொருள் தருக. ஒரு சொல்லால் நிரப்பு:

மழலை பேசும் —— அழகு.

இனிமைத் தமிழ் ——- எமது

(அ) பேச்சு (ஆ) மொழி (இ) சொல் (ஈ) செப்புதல்

89. இருபொருள் கொண்ட ஒரு சொல்:

நீ அறிந்ததைப் பிறருக்கு ——-

எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது —-

(அ) சொல் (ஆ) பதம் (இ) வார்த்தை (ஈ) கிளவி

90. அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்க்க (அழகாக)

(அ) ஊர்தி ———- சென்றது

(ஆ) காலம் ———– ஓடுகிறது

(இ) சங்க இலக்கியம் வாழ்க்கையை ——— காட்டுகிறது

(இ) இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதை அனைவருக்கும் ——— காட்டு

91. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க: (பெண்ணும்)

(அ) ஆணும் —– சமம் (ஆ) சேவலும் ——— பறவைகள்

(இ) ——– ஆய்ச்சியும் முல்லை நில மக்கள் (ஈ) தந்தை தாயை ———–ஐயை என்பர்

92. சரியான இணைப்புச் சொல் எது?

காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர் ——- அவர் எளிமையை விரும்பியவர்

(அ) மேலும் (ஆ) ஆகையால் (இ) ஏனெனில் (ஈ) எனவே

93. சரியான இணைப்புச் சொல் எது?

அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன் ———- அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்து விடுகிறது.

(அ) அதனால் (ஆ) அதுபோல (இ) ஏனெனில் (ஈ) எனவே

94. உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

“மழைமுகம் காணாப்பயிர் போல”

(அ) ஏக்கம் (ஆ) இரக்கம் (இ) நட்பு (ஈ) பகைமை

95. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்.

தன்பினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களை கண்டெழுதுதல்:

தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க:

(அ) கயல்விழி காலையில் படித்தாளா? (ஆ) கயல்விழி காலையில் படித்தாள்

(இ) கயல்விழி காலையில் படிக்கவில்லை (ஈ) கயல்விழி காலையில் படிப்பித்தாள்

96. கவிதா பாடம் படித்தாள் – இத்தொடரை பிறவினையாக்குக:

(அ) பாடம் கவிதாவால் படிக்கப்பட்டது (ஆ) கவிதா பாடம் படிப்பித்தாள்

(இ) பாடத்தைப் படித்தவள் கவிதா (ஈ) கவிதா பாடத்தைப் படிக்கவில்லை

97. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:

பந்து உருண்டது.

(அ) தன்வினைத் தொடர் (ஆ) பிறவினைத்தொடர்

(இ) செயப்பாட்டு வினைத்தொடர் (ஈ) எதிர்மறை வினைத்தொடர்

98. விடைக்கேற்ற வினா அமைக்க:

தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் மேட்டுப்பாளையம் ஆகும்.

(அ) கால்நடை வளங்கள் என்றால் என்ன?

(ஆ) தமிழ் நாட்டில் உள்ள வனக்கல்லூhகளின் எண்ணிக்கை எவ்வளவு?

(இ) தமிழ் நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது?

(ஈ) காடு என்பதன் மற்றொரு பொருள் என்ன?

99. விடைக்கேற்ற வினா அமைக்க:

எனக்கு கதை எழுதத் தெரியும்

(அ) உனக்கு கதை எழுதத் தெரியுமா? (ஆ) உனக்கு எழுதத் தெரிந்த கதை எது?

(இ) உனக்குத் தெரிந்த கதைகள் என்னென்ன? (ஈ) உனக்குத் தெரிந்த கதைகளைக் கூறு?

100. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல் அறிக:

அ. Satellite 1. மீத்திறன் கணினி

ஆ. Intelligence 2. செயற்கைக் கோள்

இ. Super Computer 3. செயற்கை நுண்ணறிவு

ஈ. Artificial INtelligence 4. நுண்ணறிவு

அ ஆ இ ஈ

அ. 2 4 1 3

ஆ. 3 2 1 4

இ. 2 3 1 4

ஈ, 1 4 2 3

101. ஆம்பிஆக்சஸின் கழிவு நீக்க மண்டலத்திலுள்ள நெப்ரிடியாக்களின் எண்ணிக்கை ———– ஆகும்

(அ) 70 ஜோடிகள் (ஆ) 85 ஜோடிகள் (இ) 90 ஜோடிகள் (ஈ) 75 ஜோடிகள்

102. எந் உயிரினத்தின் முதன் முதலில் பாலிடீன் குரோமோசோம்கள் கண்டறியப்பட்டது?

(அ) பழபூச்சி (ஆ) டிரோசோபைல (இ) கைரோனாமஸ் (ஈ) வீட்டு ஈ

103. ஒரு பாக்ட்டீரியம் அதன் உணவு திரவத்தை நோக்கி ஈர்க்கப்படும் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

(அ) உறக்கநிலை (ஆ) செல்இறப்பு (இ) வேதித் தூண்டல் (ஈ) கலங்கல் தன்மை

104. சூரிய ஒளிச் சக்தியை ஏன் விரும்பப்படும் பசுமை சக்தியாக தேர்வு செய்கிறோம்?

(அ) புதுப்பிக்க இயலாதது (ஆ) எளிதில் கிடைக்காதது

(இ) புதுப்பிக்ககூடியது (ஈ) மாசு உண்டாக்குவது

105. ஆந்த்ரசைட் என்பது ஒரு ——— நிலக்கரியாகும்

(அ) உயர் தர (ஆ) நடுத்தர (இ) குறைந்த தர (ஈ) மிகக் குறைந்த தர

106. கீழ்க்கண்டவற்றுள் எது வீரியம் குறைந்த அமிலம் மற்றும் வீரியம் குறைந்த கார உப்பு?

(அ) சோடியம் குளோரைடு (ஆ) அம்மோனியம் குளோரைடு

(இ) சோடியம் அசிட்டேட் (ஈ) அம்மோனியம் அசிட்டேட்

107. SI அலகு முறைமையின் படி ஆற்றலின் அலகு என்ன?

(அ) Nm-1 (ஆ) Nsm-1 (இ) Nm (ஈ)Ns-1m-1

108. இயந்திர அலைகள் கேட்கக்கூடிய வரம்பிற்குக் கீழே அதிர்வெண் கொண்டிருக்கும் போது இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

(அ) ஒலியியல் (சோனிக்) (ஆ) தாழொலியல் (இன்பரா சோனிக்)

(இ) மீயொலி (அல்ட்ரா சோனிக்) (ஈ) சூப்பர்சோனிக் (மீவேக ஒலி)

109. ஜனவரி 2022-ல் அறுவை சிகிச்சையாளர்களால் வெற்றிகரமாக, மரபு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்திய நாடு

(அ) ஜெர்மனி (ஆ) இத்தாலி (இ) ஐக்கிய அரபு நாடு (ஈ) அமெரிக்க ஐக்கிய நாடு

110. தமிழக முதலமைச்சர் ——– நாளை “புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக”க் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.

(அ) ஜனவரி 12 (ஆ) ஜனவரி 7 (இ) மார்ச் 7 (ஈ) மார்ச் 12

111. தேசியத் தண்ணீர் ஆணையத்தின் “கேட்ச் தி ரெயின்” (மழையை பிடி) தொடங்கப்பட்ட நாள்

(அ) 22 பிப்ரவரி, 2021 (ஆ) 22 மார்ச், 2021 (இ) 22 ஏப்ரல், 2021 (ஈ) 22 மே, 2021

112. UPSC நடத்தும் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் சிறுபான்மை மாணவர்களை முதன்மைத் தேர்வுக்கு தயார்படுத்துவதற்கு பின்வருவனற்றுள் எது உள்ளன?

(அ) நய் உதான் (ஆ) நய சவேரா (இ) நய் ரோசினி (ஈ) உஸ்தாத்

113. இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் அமைந்துள்ள இடம்

(அ) அகமதாபாத் (ஆ) புனே (இ) பெங்களுரு (ஈ) திருவனந்தபுரம்

114. தேசியக் கொடியின் வடிவமைப்பை இந்திய அரசியல் நிர்ணயச் சபையால் ——— அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது

(அ) 20 ஜீன் 1947 (ஆ) 22 ஜீலை 1947 (இ) 21 ஆகஸ்டு 1947 (ஈ) 23 நவம்பர் 1947

115. 2021ம் ஆண்டின் 12வது தேதிய வாக்காளர் தினத்தையொட்டி ———- மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்குச் சிறந்த மாநில விருதினைத் தேர்தல் கமிஷன் வழங்கியது

(அ) தமிழ்நாடு (ஆ) அசாம் (இ) வங்காளம் (ஈ) புது தில்லி

116. கீழ்கண்ட முக்கிய இந்திய பழங்குடியினரை அவர்களின் அமைவிடத்துடன் பொருத்துக

அ. பில்கள் 1. ஓடிஷா

ஆ. போடோ 2. குஜராத்

இ. கோண்டா 3. ஜார்கண்ட்

ஈ. முண்டா 4. அஸ்ஸாம்

அ ஆ இ ஈ

அ. 3 2 4 1

ஆ. 3 1 4 2

இ. 2 4 1 3

ஈ. 2 3 4 1

117. பின்வருவனவற்றில் உலகினிலே மிக அதிக பயணிகள் அடர்த்தி சேவை வழங்கிடும் இந்திய இரயில் பாதை எது?

(அ) மும்பாய் புறநகர் இரயில்வே (ஆ) கொல்கத்தா புறநகர் இரயில்வே

(இ) தில்லி புறநகர் இரயில்வே (ஈ) சென்னை புறநகர் இரயில்வே

118. மனிதனால் தூண்டப்படாத ஆபத்துக்கள் எது?

(அ) பௌதீக ஆபத்துக்கள் (ஆ) இரசாயண ஆபத்துக்கள்

(இ) உயிரியல் ஆபத்துக்கள் (ஈ) கிரக ஆபத்துக்கள்

119. மொத்த காவிரி ஆற்றின் நீளத்தில், எவ்வளவு சதவிகித நீளம் தமிழ்நாட்டில் உளள்து?

(அ) 41.0 % (ஆ) 46.0% (இ) 56.0 % (ஈ) 51.0%

120. இந்தியாவில் எந்த ஆண்டில் இமாலய சுனாமி ஏற்பட்டது?

(அ) 16 ஜீன் 2013 (ஆ) 6 ஆகஸ்டு 2013 (இ) 26 ஜீலை 2010 (ஈ) 16 ஜீலை 2013

121. நமது இந்திய அரசியலமைப்பின்படி மொழிகள் ———- கீழ் வருகின்றது

(இ) எட்டாவது அட்டவணை (ஆ) ஏழாவது அட்டவணை

(இ) ஆறாவது அட்டவணை (ஈ) ஐந்தாவது அட்டவணை

122. சாம்பாவதி கல்யாணம் என்ற நூல் எந்த மொழியில் எழுதப்பட்டுளள்து?

(அ) தெலுங்கு (ஆ) தமிழ் (இ) மராத்தி (ஈ) சமஸ்கிருதம்

123. இந்தியத் துணைக்கண்டம் தவிர எந்த நாட்டில் சமஸ்கிருத கல்வெட்டுகள் உள்ளன?

(அ) ஆப்கானிஸ்தான் (ஆ) பங்களாதேஷ் (இ) பாகிஸ்தான் (ஈ) தென்கிழக்காசிய நாடுகள்

124. பாமினி அரசில் குல்பார்க்காவில் இருந்து பீடாரருக்கு தலைநகரை மாற்றியவர் யார்?

(அ) முதலம் அகமது ஷா (ஆ) பாமன் ஷா

(இ) முதலாம் முகமது ஷா (ஈ) அலாவுதீன் மஜீகித் ஷா

125. தவறான இணை எது?

(அ) ஷாஜகான் நாமா-ஷாஜகான் (ஆ) துசுக்-ஐ-ஜஹாங்கிரி

(இ) துசுக்-ஐ-பபூரி-பாபர் (ஈ) ஹீமாயூன் நாமா-குல்பதன் பேகம்

126. 1664ஆம் ஆண்டு, சிவாஜியால் தாக்கப்பட்டதும் மற்றும் குறையாடப்பட்டதுமான மேற்கு கடற்கரை கோட்டை எது?

(அ) கோவா (ஆ) பேஸின் (இ) சௌல் (ஈ) சூரத்

127. கலிஃபாக்களிடமிருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொண்ட டெல்லி அரசர் யார்?

(அ) குத்புதின்-ஐபக் (ஆ) இல்டுட்மிஷ் (இ) பால்பன் (ஈ) இரஷ்யா பேகம்

128. சிந்துவெளி நாகரிகத்தின் முடிவிற்கு எது காரணமாக அமைந்தது?

(அ) வானியல் மாற்றம் (ஆ) நில நடுக்கம் (இ) வெள்ளம் (ஈ) படையெடுப்பு

129. பாராளுமன்றம் மற்றும் சட்ட சபையில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டிற்கான மசோதா முதல் முதலில் எந்த பிரதம மந்திரியின் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?

(அ) தேவ கௌடா (ஆ) ராஜீவ் காந்தி (இ) மன்மோகன் சிங் (ஈ) பி.வி.நரசிம்ம ராவ்

130. இந்தியாவில் முதல் முதலில் லோக் அயுக்தா அமைப்பினை உருவாக்கிய மாநிலம்

(அ) தமிழ்நாடு (ஆ) பீகார் (இ) ஒரிஸா (ஈ) ராஜஸ்தான்

131. உயர்நீதிமன்ற நீதிபதியின் ஓய்வுபெறும் வயது

(அ) 65 (ஆ) 67 (இ) 62 (ஈ) 61

132. புன்சி கமிஷன் அமைக்கப்பட்டது?

(அ) ஏப்ரல் 28, 2007 (ஆ) ஏப்ரல் 29, 2007 (இ) ஏப்ரல் 30, 2007 (ஈ) ஏப்ரல் 29, 2008

133. மாவட்ட கிராம மேம்பாட்டு முகமையின் தலைவர் யார்?

(அ) கடன் திட்ட அலுவலர் (ஆ) ஊரக தொழில் சாலைகள் அலுவலர்

(இ) மாவட்ட ஆட்சியர் (ஈ) கூடுதல் ஆட்சியர்

134. குடியரசு தலைவர், ராஜ்ய சபாவில் ———- உறுப்பினர்களை நியமிக்கிறார்.

(அ) 10 உறுப்பினர்கள் (ஆ) 12 உறுப்பினர்கள் (இ) 11 உறுப்பினர்கள் (ஈ) 9 உறுப்பினர்கள்

135. அடிப்படை கடமைகள் பற்றி பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவினை குறிப்பிடுக:

(அ) ஷர்மா குழு (ஆ) சந்தானம் குழு (இ) சுவரன் சிங் குழு (ஈ) பல்வந்த்ராய் மேத்தா குழு

136. 1976ல. இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் சேர்க்கப்பட்ட கூற்று யாது?

(அ) மதச்சார்பின்மை (ஆ) சமதர்மம் (இ) கம்யூனிஸம் (ஈ) மேற்கூறிய அனைத்தும்

137. தேசிய கிராமப்புற சுகாதார பணி தொடங்கப்பட்ட ஆண்டு

(அ) 2000 (ஆ) 2005 (இ) 2010 (ஈ) 2015

138. பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அரசு மார்ச் 31, 2019-ல் 1 கோடி பேருக்கு வீட்டு வசதி கொடுக்க திட்டமிட்டிருந்தது ஆனால் அதே காலத்திற்குள் ———– வீடுகள் வழங்கப்பட்டடிருந்தது.

(அ) 1.05 கோடி வீடுகள் (ஆ) 1.54 கோடி வீடுகள்

(இ) 0.95 கோடி வீடுகள் (ஈ) மேற்கூறிய எதுவுமில்லை

139. குத்தகைச் சட்டத்தின் முக்கிய அம்சம்/அம்சங்கள்:

1. ஓப்பந்த காலத்தை நிர்ணயித்தல்.

2. நியாயமான வாடகை.

3. நிலத்தை வாங்கும் உரிமை.

(அ) 1 மட்டும் (ஆ) 1 மற்றும் 3 மட்டும் (இ) 2 மற்றும் 3 மட்டும் (ஈ) 1, 2 மற்றும் 3

140. பட்டியல் I மற்றும் I ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க:

பட்டியல் I பட்டியல் I

அ. நான்காவது நிதிக்குழு 1. ஏ.எம்.குஸ்ரூ

ஆ. எட்டாவது நிதிக்குழு 2. பி.வி.ராஜமன்னார்

இ. பதினோராவது நிதிக்குழு 3. ஓய்.பி.சவான்

அ ஆ இ

அ. 2 3 1

ஆ. 3 2 1

இ. 1 3 2

ஈ. 2 1 3

141. இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி உருவம் பொறிக்கப்பட்ட 200 ரூபாய் காகிதப் பணத்தை ஆர்பிஐ கவர்னர் டாக்டர்.உர்ஜித் படேலின் கையொப்பத்துடன் ———— அன்று வெளியிட்டது.

(அ) 25.08.2016 (ஆ) 25.08.2017 (இ) 25.08.2018 (ஈ) 25.08.2019

142. பட்டியல் I மற்றும் பட்டியல் II-ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்க:

பட்டியல் I பட்டியல் II

அ. முதல் ஐந்தாண்டு திட்டம் 1.தொழில்மயமாதல்

ஆ. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் 2. தன்னிறைவு

இ. ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் 3. வேளாண்மை

ஈ. ஆறாவது ஐந்தாண்டு திட்டம் 4. வறுமை ஒழிப்பு

அ ஆ இ ஈ

அ. 1 3 2 4

ஆ. 4 3 2 1

இ. 3 1 4 2

ஈ. 4 2 1 3

143. 2016-17ல் உலக பொருளாதாரத்தில் (GDP) இந்தியா பெற்றுள்ள இடம் ———— ஆகும்.

(அ) நான்கு (ஆ) ஏழாவது (இ) ஐந்தாவது (ஈ) பத்தாவது

144. இந்திய மக்களுக்கு அதிகாரத்தை ஒப்படைக்க போகிறோம் என்ற தகவலை பொதுமக்கள் சபையில் அறிவித்தவர் யார்?

(அ) விக்டோரியா மகாராணி (ஆ) இரண்டாம் எலிஸபெத் மகாராணி

(இ) iசிராய் லூயிஸ் மௌண்ட்பேட்டன் பிரபு (ஈ) பிரதமர் அட்லி

145. சட்ட மறுப்பு இயக்கம் காந்தியினால் ஒத்திவைப்பதற்கு காரணமாயிருந்தது ———- ஆகும்

(அ) காந்தி-அம்பேத்கர் ஒப்பந்தம் (ஆ) காந்தி-இர்வின் ஒப்பந்தம்

(இ) காந்தி-வேவல் ஒப்பந்தம் (ஈ) காந்தி-மௌண்ட்பேட்டன் ஒப்பந்தம்

146. டிரியோ என சிறப்பாக அழைக்கப்பட்டவர்கள் யாவர்?

(அ) காந்தி, நேரு மற்றும் படேல் (ஆ) லால், பால் மற்றும் ப்பால்

(இ) காந்தி, நேரு மற்றும் தாகூர் (ஈ) நேரு, தாகூர் மற்றும் நேதாஜி

147. மாநில தன்னாட்சி என்பது ———-வின் பிரதான பரிந்துரையாக இருந்தது

(அ) காந்திஜி (ஆ) இராஜாஜி (இ) கோகலே (ஈ) பி.ஜி.திலக்

148. ஒடுக்கப்பட்ட மக்கள் தெளிவான பிரதிநிதித்துவத்தை உள்ளாட்சி தேர்தலில் பெற்றிடவும் மற்றும் பொது பணியில் தேர்வாகிட உதவிடுவதும் ———- ஒப்பந்தமாகும்.

(அ) பூனா (ஆ) பம்பாய் (இ) கல்கத்தா (ஈ) அலகாபாத்

149. 1893ஆம் ஆண்டு சிகாகோ உலக சமய பாராளுமன்றத்தில் தியாசபியின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர் யார்?

(அ) அன்னிபெசண்ட் (ஆ) விவேகானந்தர் (இ) போதகர் பிராங் பெசன்ட் (ஈ) பால்வாட்ஸ்கி

150. கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பொருத்தி, கொடுக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு:

அ. பிரிஜிஸ் காதர் 1. பைசாபாத்

ஆ. நானா சாகிப் 2. பீகார்

இ. குன்வார் சிங் 3. அவுத் நவாப்

ஈ. மேளலவி அகமத்துல்லா 4. கான்பூர்

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 3 4 2 1

இ. 4 3 2 1

ஈ. 3 2 1 4

151. அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வாழ்க்கையை விவரிக்கும் நூல்

(அ) நாலாயிர பிரபந்தம் (ஆ) தேவாரம்

(இ) பெரிய புராணம் (ஈ) திருவிளையாடல் புராணம்

152. கரிகாலனுக்கு திருப்பு முனையாக இருந்த போர்

(அ) வென்னி (ஆ) மகதம் (இ) அவந்தி (ஈ) வஜ்ரா

153. இந்திய தேசிய காங்கிரஸின் இரண்டாவது பெண் தலைவர்

(அ) சரோஜினி நாயுடு (ஆ) அன்னிபெசன்ட் (இ) பார்வதி தேவி (ஈ) பத்மாசினி அம்மாள்

154. பல்லவர்களின் ஆந்திரர் தோற்றம் பற்றி ———-ஆல் கூறப்பட்டது.

(அ) கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி (ஆ) கே.பி.ஜெயஸ்வால்

(இ) கிருஷ்ணசாமி ஜயங்கார் (ஈ) சத்தியாநதய்யர்

155. ஈ.வே.ராமசாமி சுயமரியாதை மாநாட்டில் பெண்களின் நலனுக்காக திட்டங்கள் இயற்றப்பட்ட இடம்

(அ) மெட்ராஸ் (ஆ) கோயமுத்தூர் (இ) சேலம் (ஈ) செங்கல்பட்டு

156. “பட்டியரிசித்திட்டம்” யார் காலத்தில் கொண்டு வரப்பட்டது?

(அ) இராஜாஜி (ஆ) பகத்வத்சலம் (இ) காமராஜ் (ஈ) சி.என்.அண்ணாதுரை

157. நீதிக்கட்சியை உருவாக்கியர்

(அ) டி.எம்.நாயர் (ஆ) பி.சுப்பராயன் (இ) பி.எஸ்.குமாரசாமி ராஜா (ஈ) சி.சத்தியமூர்த்தி

158. மருது சகோதரர்களின் பிரகடனம் ———- சுவரில் ஒட்டப்பட்டது?

(அ) திருச்சிக் கோட்டை (ஆ) சிவகங்கை கோட்டை

(இ) காளையார் கோவில் கோட்டை (ஈ) நெற்கட்டும் செவல் கோட்டை

159. காங்கிரஸின் மூன்றாவது மாநாடு நடைபெற்ற இடம் ————- ஆகும்

(அ) பாம்பே (ஆ) மெட்ராஸ் (இ) கல்கத்தா (ஈ) டெல்லி

160. திருப்புறம்பியம் போரில் நேரடியாக பங்கு கொண்ட சோழ மன்னர்

(அ) விஜயாலய சோழன் (ஆ) ஆதித்ய சோழன்

(இ) பறாந்தக சோழன் (ஈ) ராஜேந்திர சோழன்

161. சீன பயணி யுவான் சுவாங் யாருடைய காலத்தில் காஞ்சிக்கு வருகை புரிந்தார்?

(அ) மகேந்திரவர்மன் (ஆ) நரசிம்மவர்மன் (இ) ராஜசிம்மன் (ஈ) அப்பராஜித்தன்

162. தனி ஆந்திர மாநிலம் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர் ——— ஆவார்.

(அ) பொட்டி ஸ்ரீராமுலு (ஆ) பொட்டி சுபராயலு (இ) டி-பிரகாசம் (ஈ) ஸ்ரீநிவாசலு

163. சங்க காலத்தில் ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன் இறந்த உடன் அவனுடைய மனைவி கோப்பெருந்தேவி உடனடியாக இறந்த சம்பவத்தை ——— என அழைத்தனர்

(அ) மற கற்பு (ஆ) கற்பு (இ) சதி (ஈ) அறகற்பு

164. இந்தியர்களுக்கும் ரோமானியர்களுக்கும் வியாபார தொடர்பு இருந்தது என்று உறுதி கூறிய அரிக்கமேட்டில் கண்டுப்பிடிக்கப்பட்ட நாணயங்கள் ———– காலத்தில் வெளியிடப்பட்டன.

(அ) கோபர்நிகஸ் (ஆ) ஜீலியஸ் (இ) அகஸ்டஸ் (ஈ) ஜஸ்டினியன்

165. மாநில சமூக நல ஆலோசனை குழுவின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டவர்

(அ) அன்னி பெசன்ட் (ஆ) முத்துலெட்சுமி (இ) கோவிந்தம்மாள் (ஈ) சுந்தராம்பாள்

166. “நடந்தாய் வாழி காவிரி” என்ற புதிய திட்டத்தின் நோக்கமானது

(அ) காவிரி ஆற்றின் வடிகாலில் தடுப்பணைகள் கட்டுதல்

(ஆ) காவிரி ஆற்றை தூய்மைபடுத்தல்

(இ) காவிரி ஆற்றை மாசுபடுத்துதல்

(ஈ) காவிரி ஆற்றை மற்ற நதிகளுடன் இணைத்தல்

167. (2009-10) தேசிய மாதிரி கணக்கெடுப்பின் 66-வது சுழற்ச்சியின்படி இந்தியாவில் மொத்த தொழிலாளர் சக்தியில் தமிழ்நாட்டின் பங்கு

(அ) 6.74 சதவீதம் (ஆ) 7.74 சதவீதம் (இ) 9.74 சதவீதம் (ஈ) 8.74 சதவீதம்

168. தமிழ்நாடு மனித மேம்பாட்டு அட்டவணை 2013-14ம் ஆண்டின்படி, முதல் வரிசை-ல் மனித மேம்பாட்டில் உள்ள மாவட்டம்

(அ) கன்னியாகுமரி (ஆ) தர்மபுரி (இ) சென்னை (ஈ) ராமநாதபுரம்

169. தமிழ்நாடு மனித மேம்பாட்டு அட்டவணை அறிக்கை 2014-15ஆம் ஆண்டின்படி, தமிழக மாநிலத்தில் பாலின சமத்துவமின்மை குறியீட்டில் முதன்மையாக விளங்கும் மாவட்டம்

(அ) ஈரோடு (ஆ) கரூர் (இ) நீலகிரி (ஈ) வேலூர்

170. 2018ம் ஆண்டில், தமிழ்நாட்டில் “ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டம்” நடைபெற்ற இடம்

(அ) தஞ்சாவூர் (ஆ) தூத்துக்குடி (இ) கன்னியாகுமாரி (ஈ) சேலம்

171. தமிழ்நாட்டில் மனிதனுக்கும், மிருகங்களுக்குமிடைடே சச்சரவு இருக்க காரணமாவது

(அ) மிருகங்களை வேட்டையாடுதல் (ஆ) பயிர் விளைச்சலை மிருகங்கள் சேதபடுத்தல்

(இ) மிருகங்கள் சத்ம் எழுப்புதல் (ஈ) மிருகங்களிடையே சண்டை இருப்பதால்

172. “Kaavalan SOS” என்ற செயலியின் நோக்கம் ———— ஆகும்

(அ) ஆபத்து காலங்களில் மக்களின் இருப்பிடத்தை கண்டறிதல்

(ஆ) வனத்தில் புலிகளின் நடமாடும் எண்ணிக்கையை அறிதல்

(இ) விபத்துகளை மதிப்பிடுதல்

(ஈ) சாலை விபத்துகளை மேலாண்மை செய்தல்

173. 2019-ல் தமிழ்நாட்டின் நல்ல ஆளுமை திறன் குறியீட்டின் அளவு என்ன?

(அ) 4.31 (ஆ) 5.62 (இ) 7.50 (ஈ) 6.72

174. தமிழ்நாட்டில் அதிகமான மழை பொழிவு பெரும் காலம்

(அ) அக்டோபரிலிருந்து டிசம்பர் வரை (ஆ) ஜனவரியிலிருந்து மே வரை

(இ) ஜீன்-ல் இருந்து செப்டம்பர் வரை (ஈ) ஆகஸ்டு மாதம் மட்டும்

175. தமிழக அரசு வழங்கும் விலையில்லா கறவை மாடு பெற தகுதியானவர்கள் யார்?

(அ) வறுமையிலும் வறுமையான குடும்பத் தலைவியாக உள்ள பெண்கள்

(ஆ) நிலமற்ற விவசாயிகள்

(இ) நிலமற்ற விவசாய கூலிகள்

(ஈ) வறுமையிலும் வறுமையான குடும்பத்தலைவராக உள்ள ஆண்கள்

176. 1+2+3+…+k = 55 எனில் 13+23+33+…k3 ன் மதிப்பு

(அ) 3025 (ஆ) 3125 (இ) 166375 (ஈ) 171875

177. ஒரு A.P.ன் 16 மற்றும் 26வது உறுப்புகள் முறையே 65, 105 எனில் முதல் 36 உறுப்புகளின் கூடுதல்

(அ) 2000 (ஆ) 2500 (இ) 2600 (ஈ) 2700

178. 20, 21, 25, 34, 50, ?, 111 தொடர் வரிசையில் கேள்விக்குறிக்கு பதிலாக என்ன வரவேண்டும்?

(அ) 75 (ஆ) 70 (இ) 65 (ஈ) 60

179. சீரான இரு பகடைகள் ஒரு முறை உருட்டபடுகிறது எனில் முதல் பகடையில் 3ன் மடங்கு எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?

(அ) 1/3 (ஆ) 1/2 (இ) 1/6 (ஈ) 2/9

180. பின்வரும் தொடர்வரிசையில் அடுத்து வருவது என்ன? B,C,E,G, —-

(அ) I (ஆ) J (இ) J (ஈ) H

181. A மற்றும் B இணைந்து 12 நாட்களில் ஒரு வேலையை செய்கின்றனர். B மட்டும் தனியாக 30 நாட்களில் அந்த வேலையை முடிக்க முடியும் எனில் A மட்டும் தனியாக அவ்வேலையை முடிக்க ஆகும் நாட்கள் காண்க

(அ) 15 நாட்கள் (ஆ) 18 நாட்கள் (இ) 20 நாட்கள் (ஈ) 25 நாட்கள்

182. 6 பெண்கள் அல்லது 8 ஆண்கள் ஓர் அறையை 86 நாட்களில் கட்டி முடிப்பர், அது போன்ற அறையை 7 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் கட்டி முடிக்க எத்தனை நாள்கள் ஆகும்?

(அ) 35 நாட்கள் (ஆ) 48 நாட்கள் (இ) 30 நாட்கள் (ஈ) 40 நாட்கள்

183. அரைக்கோளத்தின் வளைபரப்பு அதன் ஆரத்தின் வர்க்கத்திற்கு எத்தனை மடங்கு?

(அ) 3 π (ஆ) 4 π (இ) π (ஈ) 2 π

184. ஒரு நேர்வட்டக் கூம்பில் எத்தனை இடைக்கண்டங்கள் உள்ளன?

(அ) எண்ணிலடங்கா (ஆ) 3 (இ) 2 (ஈ) 1

185. 484 செ.மீ அடிச் சுற்றளவுள்ள ஒரு மரக்கூம்பின் உயரம் 105 செ.மீ எனில், கூம்பின் கன அளவைக் காண்க:

(அ) 652910 செ.மீ3 (ஆ) 652190 செ.மீ3 (இ) 59290 செ.மீ3 (ஈ) 59920 செ.மீ3

186. ஒரு அரைக்கோளத்தின் மொத்த புறபரப்பு அதன் வளைபரப்பின் எத்தனை மடங்கு?

(அ) 2 (ஆ) 3 (இ) 3/2 (ஈ) 2/3

187. ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 30 செ.மீ எனில் அதன் பரப்பு

(அ) 10√3 ச.செ.மீ2 (ஆ) 12√3 ச.செ.மீ2 (இ) 15√3 ச.செ.மீ2 (ஈ) 25 √3 ச.செ.மீ2

188. ரூ.31,250-க்கு ஆண்டுக்கு 16 என்ற வீதத்தில் 9 மாத காலண்டின் கூட்டு வட்டி காண்க:

(அ) ரூ.3,500 (ஆ) ரூ.3,902 (இ) ரூ.4,000 (ஈ) ரூ.4,200

189. ரூ.68,000க்கு 9 மாதங்களில் வட்டி வீதம் 16 2/3% வீதம் கிடைக்கும் தனிவட்டி என்ன?

(அ) ரூ.8,500 (ஆ) ரூ.7,500 (இ) ரூ.6,500 (ஈ) ரூ.8,000

190. 2x : y = 8 : 5 எனில் (3x + 3y) : (4x – 2y) ன் மதிப்பு யாது?

(அ) 6 : 2 (ஆ) 2 : 6 (இ) 9 : 2 (ஈ) 2 : 9

191. இரு எண்களின் விகிதம் 3 : 4 மற்றும் அவைகளின் பெருக்கற்பலன் 432 எனில் பெரிய எண் எது?

(அ) 15 (ஆ) 20 (இ) 24 (ஈ) 30

192. ஒரு வரைபடத்தின் அளவு 1 : 30000000 என வழங்கப்படுகிறது. வரைபடத்தில் இரு நகரங்களுக்கு இடையே உள்ள தொலைவு 4 செ.மீ எனில் உண்மையில் அவ்விரு நகரங்களுக்கு இடையே உள்ள தொலைவை காண்

(அ) 120 கி.மீ (ஆ) 1,200 கி.மீ (இ) 12,000 கி.மீ (ஈ) 520 கி.மீ

193. இரு எண்களின் பெருக்கற்பலன் 1320, மீ.பொ.வ. 6 எனில் மீ.சி.ம

(அ) 220 (ஆ) 1314 (இ) 1326 (ஈ) 7920

194. 24, 15 மற்றும் 26 ஆல் வகுபடும் 6 இலக்க மிகப்பெரிய எண்

(அ) 999700 (ஆ) 999720 (இ) 999780 (ஈ) 999999

195. ஒரு எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில் அந்த எண்ணைக் காண்க:

(அ) 160 (ஆ) 120 (இ) 180 (ஈ) 150

196. இரண்டு தொடர் தள்ளுபடிகளான 20% மற்றும் 25% ஆகியவற்றிற்கு சமமான தள்ளுபடி சதவீதம்

(அ) 40% (ஆ) 5% (இ) 45% (ஈ) 22.5%

197. சுருக்குக: [ma/mb] (a+b) x [mb/mc](b+c) x [mc/ma](c+a) x 1/m

(அ) 1/m (ஆ) m (இ) 1 (ஈ) m (a+b+c)

198. ஒருவரின் வருமானம் 10% அதிகரிக்கிறது. பின்பு 10% குறைகிறது எனில் அவரது வருமானத்தில் என்ன மாற்றம் நிகழும்?

(அ) 1 அதிகரிக்கும் (ஆ) 1 குறையும் (இ) எந்த மாற்றமுமில்லை (ஈ) 10 அதிகரிக்கும்

199. ஒரு கடைக்காரர் ஒவ்வொன்றும் ரூ.10 என 200 பல்புகளை வாங்கினார். அவற்றில் 5 பல்புகள் பழுது என்று கண்டறியப்பட்டு, தூக்கி எறியப்பட்டது. மீதியை ஒவ்வொன்றும் ரூ.12க்கு விற்றால், அவர் பெற்ற லாப அல்லது நஷ்ட சதவீதத்தைக் காண்க:

(அ) நஷ்டம் 14.53% (ஆ) இலாபம் 15.43% (இ) இலாபம் 17% (ஈ) நஷ்டம் 18%

200. a=3 1/2 , b = 5 3/4 , c = 4 3/5, d = 4 3/8 எனில் ab/cd ன் மதிப்பு யாது?

(அ) 0 (ஆ) 1 (இ) 12 (ஈ) 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!