Tamil Current Affairs 10th September 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 10th September 2016 is given below as quiz format. Also tnpsc peoples can download Daily Current affairs in tamil as PDF format.
Tnpsc Tamil Current Affairs 10th September 2016
Start
Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 10th September 2016.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
1. இந்தியாவின் முதல் லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் ஈர்ப்பு அலை உற்றுநோக்கல் (LIGO- Laser Interferometer Gravitational-Wave Observatory) ஆய்வகம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது ?
A | உத்தரப் பிரதேசம் |
B | மகாராஷ்டிரா |
C | ஆந்திரப் பிரதேசம் |
D | தமிழ்நாடு |
Question 1 Explanation:
இந்தியாவின் முதல் லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் ஈர்ப்பு அலை உற்றுநோக்கல் (LIGO- Laser Interferometer Gravitational-Wave Observatory) ஆய்வகம் மகாராஷ்டிரா மாநிலத்தின் Hingoli மாவட்டத்தில் ஆந்த்-ல் அமைக்கப்பட உள்ளது. சமமான Terrain -ன் உயர் வெற்றிடக்குழாயின் மீது 8 கி.மீ நீண்ட குழாய் அமைக்கும் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும், இந்திய தொழிற்சாலைகளில் பயன்படும் cutting edge தொழில்நுட்பத்தில் புதிய வாய்ப்புகளை கொண்டுவருவதே LIGO-இந்தியாவின் திட்டமாகும். இது உலகில் 3-வது ஆய்வகம் அமெரிக்காவிற்கு வெளியில் அமையப்போகும் முதல் ஆய்வகம். ஏற்கனவே, லிகோ ஆய்வகங்கள் ஹான்போர்ட், வாஷிங்டன் & லிவிங்ஸ்டன், லூசியானாவில் அமைந்துள்ளது.
Question 2 |
2. 2016 ரியோ பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு
எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A | ஸ்பிரிண்ட் |
B | உயரம் தாண்டுதல் |
C | நீச்சல் |
D | ஈட்டி எறிதல் |
Question 2 Explanation:
மாரியப்பன் தங்கவேலு, 2016 ரியோ பாராலிம்பிக்ஸ் ஆண்கள் உயரம் தாண்டுதல் T-42 போட்டியில் 1.89 மீட்டர் குதித்து, இந்தியாவிற்கான முதல் தங்கத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார். இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீரரான வருண் சிங் பாட்டி அதே நிகழ்வில் வெண்கல பதக்கம் வென்றார். பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் பெறும் 3-வது இந்திய வீரர் தங்கவேலு. இவருக்கு முன் 1972-ஆம் ஆண்டு ஹெயிடெல்பெர்க்கில் நடந்த நீச்சல் போட்டியில் முரளிகாந்த் பெட்கர் என்பவரும், 2004-ஆம் ஆண்டு ஏதென்ஸ்-ல் நடந்த ஈட்டி எரிதலில் தேவேந்திர ஜஹாஹாரியா என்பவரும் தங்கம் வென்றுள்ளனர்.
Question 3 |
3. எந்த மாநில அரசு சமீபத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை துவங்கியது ?
A | உத்தரப் பிரதேசம் |
B | ஒடிசா |
C | தமிழ்நாடு |
D | மத்தியப் பிரதேசம்
|
Question 3 Explanation:
ஒடிசா அரசு சமீபத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை தொடங்கியது. படிப்படியாக செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தில் சுமார் 25 லட்சம் பேர் பயனடைவார்கள். இத்திட்டப்படி, 60 வயதுக்கு மேலே உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் ரூ 300 ஓய்வூதியமும், 80 வயதுக்கு மேல் உள்ள தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ .500 ஓய்வூதியம் கிடைக்கும். மேலும் விதவை மற்றும் ஊனமுற்ற கட்டுமான தொழிலாளர்களும் இந்த ஓய்வூதிய திட்டத்தில் நன்மை பெறலாம். ஒடிஷா மாநில அரசால் இந்த 1 மாத காலத்திற்குள் செயல்படுத்தப்படும் 3வது திட்டம் இதுவாகும். இதற்கும் முன், மஹாபிரயான்( இறந்தவர்களின் உடலை மருத்துவமனையிலிருந்து அவர்கள் வீட்டிற்கு எடுத்து செல்லுதல்) திட்டமும், பிஜு கன்யா ரத்னா (பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்துதல் ) திட்டமும் இந்த 1 மாத காலத்தில் செயல்படுத்தப்பட்டது.
Question 4 |
4. எந்த மாநில அரசு சமீபத்தில் மாநிலத்திற்குள்ளான விமான இணைப்பை அதிகரிக்க, விமானத்துறை அமைச்சகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது ?
A | பஞ்சாப் |
B | குஜராத் |
C | சத்தீஸ்கர் |
D | கேரளா |
Question 4 Explanation:
சத்தீஸ்கர் மாநில அரசு சமீபத்தில் மாநிலத்திற்குள்ளான விமான இணைப்பை அதிகரிக்க, விமானத்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஒப்பந்தம் படி, மத்திய அரசின் பிராந்திய இணைப்பு திட்டத்தின் (RCS) கீழ், இம்மாநிலத்தின் வெவ்வேறு நகரங்களுக்கிடையே விமான சேவைகளை எளிதாக்கும் வண்ணம் சிறிய விமான நிலையங்கள் மற்றும் விமானத்தளங்கள் படிப்படியான முறையில் அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் விமான சேவைகள் நீண்ட காலம் நிறுத்தப்பட்ட அல்லது தொடங்கப்படாத நகரங்களில் விமான சேவையை பலப்படுத்தவுள்ளது.
மத்திய அரசு பல்வேறு விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு இம்மாநிலத்தில் விமான சேவை வழங்க மானியமுறையில் வாய்ப்பு வழங்கும்.
Question 5 |
5. “Six Machine” எனும் புத்தகம் எந்த கிரிக்கெட் வீரருடைய சுயசரிதை ?
A | யுவராஜ் சிங் |
B | கிறிஸ் கெய்ல் |
C | சேவாக் |
D | ஏபி டி வில்லியர்ஸ் |
Question 5 Explanation:
“Six Machine: I Don’t Like Cricket … I Love It” எனும் சுயசரிதை மேற்கிந்திய தீவுகளுக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடும் ஜமைக்கா வீரர் கிறிஸ் கெய்ல் உடையது ஆகும். கிங்ஸ்டன் தெருவில் தகரம் வேய்ந்த கூரை குடிசையில் இருந்த வெட்கப்படும், ஒல்லியான ஒரு குழந்தை எப்படி உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் நன்கு அறியப்பட்ட நட்சத்திரங்களுள் ஒன்றாக மாறியது என்பது பற்றி இப்புத்தகம் கூறுகிறது. இது வெறும் விளையாட்டு வீரரின் வாழ்க்கையை கூறாமல், வலிந்து ஈர்க்கிற வகையில் அவரின் போராட்டங்களையும், விளையாடும் போது எதிரணியினர் கிண்டல் செய்தால் ஒரு பரந்த சிறு புன்னகையுடன் அதை அணுகுவதையும் பற்றி இந்நூலில் கூறப்படுகிறது.
Question 6 |
6. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (NSSO-National Sample Survey Office) துப்புரவு மதிப்பீட்டின் படி, இந்தியாவின் சுத்தமான மாநிலமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மாநிலம் எது ?
A | மணிப்பூர் |
B | மிசோரம் |
C | நாகாலாந்து |
D | சிக்கிம் |
Question 6 Explanation:
சமீபத்தில், தேசிய மாதிரி ஆய்வு அலுவலம் (NSSO-National Sample Survey Office) கிராமப்புற பகுதிகளில் உள்ள சுகாதார வசதிகளின் மதிப்பீட்டின் படி, சுத்தமான இந்திய மாநிலமாக சிக்கிமை அறிவித்தது . இதனை தொடர்ந்து இவ்வரிசையில், கேரளா, மிசோரம், இமாசலப் பிரதேசம், நாகாலாந்து, அரியானா, பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் ஆகியன தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுகாதார கழிப்பறைகள் (வீட்டு அல்லது சமூக கழிப்பறைகள்) அமைத்து அவற்றை பயன்படுத்தும் குடும்பங்களின் சதவீதத்தின் அடிப்படையில் இந்த தரம் வழங்கப்படுகிறது. ஆய்வு முடிவு புது தில்லியில் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மூலம் வெளியிடப்பட்டன.
Question 7 |
7. டிவிட்டர் மூலம் மக்களுடன் இணைந்திருக்க “Twitter seva” -வை துவங்கியுள்ள முதல் இந்திய மாநிலம் எது ?
A | குஜராத் |
B | திரிபுரா |
C | உத்தரப் பிரதேசம் |
D | கர்நாடகா |
Question 7 Explanation:
"ட்விட்டர் சேவா" வை துவங்கியுள்ள முதல் இந்திய மாநிலமாக உத்தரப் பிரதேசம் மாறியுள்ளது. மொத்தமாக ஒரே நேரத்தில் 122 ட்விட்டர் கைப்பிடிகள் லக்னோவில் தொடங்கப்பட்டன. தொழில் முனைவோருக்கு நிதி, ஆதரவு அல்லது அரசு உதவி போன்ற அனைத்துவிதமான அரசு தேவைகளுக்கும் தொடர்புகொள்ள ஒரு நேரடி புள்ளி ஆதாரமாக ட்விட்டர் சேவா விளங்கும். அனைத்து கைப்பிடிகளும் மாநில காவல்துறை மூலம் பராமரிக்கப்படும். குடிமக்கள் அவர்களின் கேள்வியை (@uppolice) என்ற கணக்கிற்கு ட்வீட் செய்யலாம், புகாரை பதிவு செய்யலாம். சேவை விதிமுறைகளின் கீழ், புகார் / கோரிக்கை உண்மையான நேரத்தில் ஆராயப்படும்.
Question 8 |
8. எந்த மாநிலம், இந்திய உணவு மற்றும் விவசாய கவுன்சில் (ICFA) வழங்கும் "மிகச்சிறந்த தோட்டக்கலை மாநிலம்" என்ற விருதை பெறுகிறது ?
A | மேற்கு வங்கம் |
B | ஹரியானா |
C | அசாம் |
D | ஒடிசா |
Question 8 Explanation:
தோட்டக்கலை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க ஹரியானா அரசு மேற்கொண்ட தீவிர முயற்சிகளுக்கான அங்கீகாரமாக "மிகச்சிறந்த தோட்டக்கலை மாநிலம்" என்ற விருதை இந்திய உணவு மற்றும் விவசாய கவுன்சில் (ICFA) புது தில்லியில் நடைபெற்ற 9வது 2016 விவசாய தலைமை உச்சி மாநாட்டில் வழங்கியது. இது தவிர, 2016-ஆம் ஆண்டின் "சிறந்த விவசாயம் மாநில" விருதை ஒரிசா பெற்றது. விவசாயத்தின் வளர்ச்சி மற்றும் கிராமப்புற செழிப்பு நோக்கி மாநிலத்தின் முயற்சிகளுக்கான அங்கீகாரமாக ஒரிசாவிற்கு இவ்விருது அளிக்கப்பட்டது.
Question 9 |
9. "Scooty for College Girls Scheme” என்ற திட்டம் இந்தியாவின் எந்த மாநிலஅரசால் துவங்கப்பட்டுள்ளது ?
A | இமாசலப் பிரதேசம் |
B | பஞ்சாப் |
C | ஹரியானா |
D | ஜம்மு மற்றும் காஷ்மீர் |
Question 9 Explanation:
"Scooty for College Girls Scheme” திட்டம், பெண்கள் இலகுவான முறையில் சுதந்திரமாக இருக்க ஜம்மு காஷ்மீர் மாநில அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திட்டப்படி, ஸ்கூட்டி பெற தகுதியானது, குறைந்தபட்ச சதவீதம் மற்றும் ஆண்டு குடும்ப வருமானம் முறையே 65% மற்றும் Rs.4 லட்சம் ஆக இருக்க வேண்டும். இதன்படி, கல்லூரி செல்லும் பெண் மாணவர்கள் ஸ்கூட்டி வாங்குவதற்கு 50% மானியம் வழங்கப்படும்.
Question 10 |
10. இந்தியாவின் எந்த மாநில முதல்வர் 2016-ஆம் ஆண்டின் பங்கோர் வசன விருதை பெற்றார் ?
A | லால் தன்ஹவ்லா |
B | T R ஸிலியாங் |
C | சர்பானந்தா சனோவால் |
D | பெமா காண்டு |
Question 10 Explanation:
T R ஸிலியாங் , நாகாலாந்து முதல்வர். மாநிலத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அதை பரப்ப முயற்சி மேற்கொண்ட மாநில மக்களின் சேவையை பாராட்டும் வகையில் மலேஷியாவில் இவருக்கு 2016-ஆம் ஆண்டின் பங்கோர் வசன விருது அளிக்கப்பட்டது. விழா ஒருங்கிணைப்பாளர்களான தாருல் ரூட்ஜுவான் மற்றும் மலேசிய அரசாங்கம் இவ்விருதை ஸிலியாங்கிற்கு வழங்கியது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
Get Results
There are 10 questions to complete.
You have completed
questions
question
Your score is
Correct
Wrong
Partial-Credit
You have not finished your quiz. If you leave this page, your progress will be lost.
Correct Answer
You Selected
Not Attempted
Final Score on Quiz
Attempted Questions Correct
Attempted Questions Wrong
Questions Not Attempted
Total Questions on Quiz
Question Details
Results
Date
Score
Hint
Time allowed
minutes
seconds
Time used
Answer Choice(s) Selected
Question Text
All done
Need more practice!
Keep trying!
Not bad!
Good work!
Perfect!
Tags :
Tnpsc Tamil Current Affairs September 2016, Tnpsc Tamil Current Affairs 2016, Tnpsc Tamil Current Affairs 2017, Tnpsc Tamil Current Affairs October 2016, Tnpsc Tamil Current Affairs november 2016, Tnpsc Tamil Current Affairs december 2016, Tnpsc group 4 tamil current affairs, Tnpsc Portal current affairs, Tnpsc job current affairs
September 12, 2016
0 1,433 Less than a minute