Tnpsc Tamil Current Affairs 9th September 2016
Tamil Current Affairs 9th September 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 9th September 2016 is given below as quiz format. Also tnpsc peoples can download Daily Current affairs in tamil as PDF format.
Tnpsc Tamil Current Affairs 9th September 2016
Start
Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 9th September 2016.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
1. வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களுக்காக மத்திய அரசால் துவங்கப்பட்ட பதிவேட்டுத்தளத்தின் பெயர் என்ன ?
A | Madad |
B | Milan |
C | Bharat |
D | iBharat |
Question 1 Explanation:
வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களுக்காக வெளியுறவுத்துறை அமைச்சகம் “madad.gov.in” என்ற பதிவுத்தளத்தினை துவங்கியுள்ளது. இதனால் இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது ஏற்படும் அவசர கால தேவைகளின்போது, அவர்களை கண்டறிந்து மீட்க முடியும். தற்போது, வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்கள் குறித்த எந்த தரவும் இல்லை.
Question 2 |
2. இந்திய யுரேனியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (UCIL) நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்(CMD)
யார் ?
A | ஜே.சத்யநாராயணா |
B | C.K. அஷ்னாணி |
C | விவேக் பண்டாரி |
D | சூர்யா தேவா |
Question 2 Explanation:
C.K. அஷ்னாணி, ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பயின்ற ஒரு இரசாயன பொறியாளர். இந்திய யுரேனியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (UCIL) நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்(CMD) ஆவார். UICL, அணு சக்தி துறையால் (DAE) இயக்கப்படும் ஒரு நிறுவனம்.
Question 3 |
3. மேரிலிபோன் கிரிக்கெட் கிளப்பின்(எம்.சி.சி.) மதிப்புமிக்க கவுரவ வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்து பெறும் முதல் இந்திய கிரிக்கெட் பெண்மணி யார் ?
A | ஷோபா பண்டிட் |
B | அஞ்சும் சோப்ரா |
C | ஸ்ரவந்தி நாயுடு |
D | மிதாலி ராஜ் |
Question 3 Explanation:
அஞ்சும் சோப்ரா, முன்னாள் இந்திய கேப்டன். மேரிலிபோன் கிரிக்கெட் கிளப்பின்(எம்.சி.சி.) மதிப்புமிக்க கவுரவ வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்து பெறும் முதல் இந்திய கிரிக்கெட் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Question 4 |
4.அங்கூர் தாமா எந்த விளையாட்டுகளுடன் தொடர்புடையவர் ?
A | ஸ்பிரிண்ட் |
B | குத்துச்சண்டை |
C | மல்யுத்தம் |
D | தட்டு எறிதல் |
Question 4 Explanation:
அங்கூர் தாமா, ஒரு நடுத்தர தொலைவு ஓட்டப்பந்தய வீரர். பார்வையற்ற தடகள வீரரான இவர், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 2016 பாராலிம்பிக் போட்டியில், இந்தியாவின் சார்பில் பிரதிநிதியாக வழிநடத்த உள்ளார். இவ்வாறு இந்தியாவை வழிநடத்தும் முதல் பார்வையற்ற தடகள வீரர் இவர். இவரது கூட்டாளியான விபின் குமாருடன் இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார். முன்னதாக, தாமா 2014 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்டு, ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
Question 5 |
5. எந்த வானிலை செயற்கைக்கோளை சமீபத்தில் இஸ்ரோ, Geosynchronous Transfer Orbit (GTO) சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது ?
A | INSAT-3WR |
B | INSAT-3MR |
C | INSAT-3SR |
D | INSAT-3DR |
Question 5 Explanation:
INSAT-3DR எனப்படும் மேம்பட்ட வானிலை செயற்கைக்கோளை, GSLV-F05 ராக்கெட் வாகனம்மூலம் , ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) Geosynchronous Transfer Orbit (GTO) சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது. INSAT-3DR ஒரு நவீன வானிலை செயற்கைக்கோள் மற்றும் இதன் வாழ்நாள் 10 ஆண்டுகள். இது வானிலையை கணிக்கவும் மற்றும் தேடல் மற்றும் மீட்பு தகவல்களை வழங்கவும் உதவுகிறது.
Question 6 |
6. சக்திமிக்க வங்கி செயல்பாடுகளுக்காக, ரோபோடிக்ஸ் மென்பொருளை உருவாக்கியுள்ள முதல் இந்திய வங்கி எது ?
A | State Bank Of India |
B | Axis Bank |
C | ICICI Bank |
D | HDFC Bank |
Question 6 Explanation:
ICICI வங்கி, சக்திமிக்க வங்கி செயல்பாடுகளுக்காக, ரோபோடிக்ஸ் மென்பொருளை உருவாக்கியுள்ள முதல் இந்திய வங்கி ஆகும். மனிதர்களை போன்ற நடவடிக்கையையுடன் செயல்படும் இந்த மென்பொருள் ரோபாட்டிக்ஸ் , திரும்பத்திரும்ப, அதிக அளவுள்ள, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் பணியை செய்து முடிக்கிறது. இதனால் பல்வேறு மென்பொருள்களின் பணி குறைக்கப்பட்டுள்ளது.
Question 7 |
7. பின்வரும் எந்த மத்திய அமைச்சர் கிராமப்புறங்களில், சமீபத்தில் "Swachh Survekshan" என்ற அறிக்கையை வெளியிட்டார் ?
A | நரேந்திர சிங் தோமர் |
B | ராஜ்நாத் சிங் |
C | பிரகாஷ் ஜவடேகர் |
D | உமா பாரதி |
Question 7 Explanation:
நரேந்திர சிங் தோமர், குடிநீர் மற்றும் சுகாதார, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர். சமீபத்தில் கிராமப்புறங்களில் "Swachh Survekshan" என்ற அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில், "மலை" பகுதியில் மண்டி (இமாசலப் பிரதேசம்) மாவட்டமும், "சமவெளி" பகுதியில் சிந்துதுர்க் (மகாராஷ்டிரா) மாவட்டமும் சுத்தமான மாவட்டமாக கூறப்பட்டுள்ளது. இது தவிர, சிம்லா (இமாசலப் பிரதேசம்), நாடியா (மேற்கு வங்காளம்) மற்றும் சதாரா (மகாராஷ்டிரம்) ஆகிய மாவட்டங்கள் தர வரிசையில் முதலிடத்தில் உள்ளன.
Question 8 |
8. ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் பின்வரும் எந்த இந்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
A | தமிழ் |
B | சமஸ்கிருதம் |
C | தெலுங்கு |
D | இந்தி |
Question 8 Explanation:
ஐக்கிய நாடுகள் சபை சாசனம், ஐ.நா. எதிர்கால ஒப்பந்தம் ஆகியன சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்க்கப்படும் என லக்னோ சார்ந்த அகில பாரதிய சமஸ்கிருதம் பரிஷத் (ABSP) செயலாளர் டாக்டர் ஜிதேந்திர குமார் திரிபாதி கூறியுள்ளார். தற்போது, ஐ.நா. சாசனம் ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளில் கிடைக்கிறது. அதாவது, அரபு, சீன, பிரஞ்சு, ரஷியன் மற்றும் ஸ்பானிஷ். சர்வதேச நிறுவனம் குறித்த ஐக்கிய நாடுகள் மாநாட்டின் முடிவில், 1945-ம் ஆண்டு ஜூன் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் ஐ.நா சாசனம் கையெழுத்திடப்பட்டு, 1945 அக்டோபர் 24 அன்று அமலுக்கு வந்தது.
Question 9 |
9. மத்தியப் பிரதேசத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ளவர் யார் ?
A | ஓம் பிரகாஷ் கோஹ்லி |
B | பன்வாரிலால் புரோகித் |
C | ராம் நாத் கோவிந்த் |
D | கேப்டன் சிங் சோலங்கி |
Question 9 Explanation:
ஓம் பிரகாஷ் கோஹ்லி, மூத்த பாரதீய ஜனதா கட்சி (BJP) தலைவர். மத்தியப் பிரதேசத்தின் 26வது ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும்,இவர் ராம் நரேஷ் யாதவை வென்று குஜராத்தின் ஆளுநராகவும் பதவி வகிக்கிறார்.
Question 10 |
10. இங்கிலாந்தால்(UK) வழங்கப்படும் சிறந்த வரலாற்று நாவலுக்கான "MM Bennetts" விருது 2016-ல் யாருக்கு வழங்கப்பட்டது ?
A | ஹெலினா பேஜ் ஸ்க்ரேடர் |
B | ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் |
C | கே ராமானுஜன் |
D | கெர்மிட்டின் ரூஸ்வெல்ட் |
Question 10 Explanation:
ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் எழுதிய “Into the Hidden Valley” எனும் புத்தகத்திற்கு, இங்கிலாந்து அரசின் (UK) சிறந்த வரலாற்று நாவலுக்கான 2016 "MM Bennetts" விருது வழங்கப்படுகிறது. இப்புத்தகம் பிரிட்டிஷ் இந்தியாவின் போது அருணாச்சல பிரதேசத்தில் வாழ்ந்த அப்டாணி எனும் பழங்குடி மக்களின் கதையை சொல்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரிட்டிஷ் வரலாறு மற்றும் நெப்போலியனின் போர்கள் குறித்து எழுதிவதில் சிறந்து விளங்கிய எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான Bennetts என்பவரின் நினைவாக இவ்விருதுக்கு பெயரிடப்பட்டது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
Get Results
There are 10 questions to complete.
You have completed
questions
question
Your score is
Correct
Wrong
Partial-Credit
You have not finished your quiz. If you leave this page, your progress will be lost.
Correct Answer
You Selected
Not Attempted
Final Score on Quiz
Attempted Questions Correct
Attempted Questions Wrong
Questions Not Attempted
Total Questions on Quiz
Question Details
Results
Date
Score
Hint
Time allowed
minutes
seconds
Time used
Answer Choice(s) Selected
Question Text
All done
Need more practice!
Keep trying!
Not bad!
Good work!
Perfect!
September 10, 2016
0 1,671 Less than a minute