General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 16

21. நற்றிணையைத் தொகுப்பித்தவர்

(அ) பன்னாடு தந்நத மாறன் வழுதி

(ஆ) உக்கிரப் பெருவழுதி

(இ) இளம் பெருவழுதி

(ஈ) மிளை கிழான்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) பன்னாடு தந்நத மாறன் வழுதி

நற்றிணை: இந்நூலை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி. பாடிய புலவர்கள் 275 பேர். கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். அடி வரையறை 9-12.

22. திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

(அ) 33

(ஆ) 133

(இ) 13

(ஈ) 1330

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 133

23. பாரதிதாசனார் எச்சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்?

(அ) புரட்சிக் கவிஞர்

(ஆ) தேசியக் கவிஞர்

(இ) உவகைக் கவிஞர்

(ஈ) கவிக்குயில்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) புரட்சிக் கவிஞர்

புரட்சிக் கவிஞர்-பாரதிதாசன்.

தேசியக்கவிஞர்-பாரதியார்.

உவமைக்கவிஞர்-சுரதா.

கவிக்குயில் -சரோஜினி நாயுடு.

24. “உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள்” என் வழங்கப்படும் காப்பியம் எது?

(அ) சிலப்பதிகாரம்

(ஆ) மணிமேகலை

(இ) சீவகசிந்தாமணி

(ஈ) வளையாபதி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரத்தில், பாடல்களின் இடையிடையே உரைநடையும் அமைந்திருப்பதால்” உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள்” என்று இந்நூல் வழங்கப்பெற்றது.

25. பொருத்துக:

அ. மேதி – 1.சிவன்

ஆ. சந்தம் – 2. எருமை

இ. கோதில் – 3. அழகு

ஈ. அங்கணர் – 4. குற்றமில்லாத

அ ஆ இ ஈ

அ. 2 3 4 1

ஆ. 2 3 1 4

இ. 3 1 4 2

ஈ. 3 2 1 4

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 2 3 4 1

26. பொருத்துக:

தொடர் பொருள்

அ. ஆகாயத்தாமரை – 1. மிகுதியாகப் பேசுதல்

ஆ. ஆயிரங்காலத்துப்பயிர் – 2. பொய்யழுகை

இ. முதலைக்கண்ணீர் – 3. நீண்ட காலத்திற்குரியது

ஈ. கொட்டியளத்தல் – 4. இல்லாத ஒன்று

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 4 3 1 2

இ. 3 4 1 2

ஈ. 3 4 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 4 3 2 1

27. சைவத்திருமுறைகளில் ————— திருமுறை திருமந்திரம்

(அ) ஏழாவது

(ஆ) பத்தாவது

(இ) எட்டாவது

(ஈ) மூன்றாவது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பத்தாவது

பன்னிரு திருமுறைகள்:

முதல் மூன்று-திருஞானசம்பந்தர் திருமுறைகள் தேவாரம்.

4,5,6-ம் திருமுறை-திருநாவுக்கரசர் திருமுறைகள் தேவாரம்.

7-ம் திருமுறை-சுந்தரர் தேவாரம்.

8-ம் திருமுறைகள்-திருவாசகம், திருக்கோவையார்.

9-ம் திருமுறை-ஒன்பதின்மர் நூல்கள்.

10-ம் திருமுறை-திருமந்திரம்.

11-ம் திருமுறை-பன்னிருவர் நூல்கள்.

12-ம் திருமுறை-பெரியபுராணம்.

28.”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” – என்பது எந்நூலின் புகழ்மிக்கத் தொடர்?

(அ) தேவாரம்

(ஆ) வேதியர் ஒழுக்கம்

(இ) திருமந்திரம்

(ஈ) நாலாயிர திவ்வியப்பிரபந்தம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) திருமந்திரம்

29. தவறானவற்றைத் தேர்வு செய்க.

குமரகுரபரரின் நூல்கள்

(அ) சுந்தர் கலிவெண்பா

(ஆ) வேதியர் ஒழுக்கம்

(இ) நீதிநெறி விளக்கம்

(ஈ) சகலகலாவல்லி மாலை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

வேதியர் ஒழுக்கம்-வீரமாமுனிவர்

30. கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகைகளின் எப்பகுதி உடல்நோயைத் தீர்ப்பன.

(அ) இலை

(ஆ) வேர்

(இ) பட்டை

(ஈ) காய்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) வேர்

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!