MCQ Questions

பாமினி விஜயநகர அரசுகள் 11th History Lesson 7 Questions in Tamil

11th History Lesson 7 Questions in Tamil

7] பாமினி விஜயநகர அரசுகள்

  1. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தில்லி சுல்தானியம் தெற்கே விரிவாக்கத்திற்குத் தயாரான போது தக்காண தென்னிந்தியா எத்தனை அரசுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன?

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: நான்கு அரசுகள்

  • தேவகிரியின் யாதவர் (மேற்குத் தக்காணம்/தற்போதைய மகாராஷ்டிரா)
  • ஹொய்சாலரின் துவாரசமுத்திரம் (கர்நாடகா)
  • வாரங்கல் பகுதியை சார்ந்த காகத்தியர்
  • மதுரையை சார்ந்த பாண்டியர்)
  1. தக்காண தென்னிந்திய அரசுகள் ____________ ஆண்டுகளில் நடைபெற்ற மாலிக்காபூரின் படையெடுப்புகளினால் ஒன்றன்பின் ஒன்றாகத் தோற்கடிக்கப்பட்டன.

A) 1302, 1309

B) 1304, 1312

C) 1304, 1310

D) 1306, 1314

(குறிப்பு: தென்னிந்திய அரசுகள் சேர்த்து வைக்கப்பட்டிருந்த தங்கள் செல்வங்களின் பெரும்பகுதியையும் தில்லி சுல்தானியத்தின் படையெடுப்பின் போது இழந்தன.)

  1. தன் அரசை சிறப்பாக ஆட்சி புரிவதற்கென தலைநகரை தேவகிரிக்கு மாற்றியவர்

A) பால்பன்

B) முகமது பின் காசிம்

C) அலாவுதீன் கில்ஜி

D) முகம்மது பின் துக்ளக்

(குறிப்பு: தலைநகர் மாற்றத்தின் போது தேவகிரி தௌலதாபாத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் இம்முயற்சி தோல்வியடைந்து மக்கள் பெருந்துயருக்கு ஆளாயினர். மீண்டும் தன் தலைநகரை தில்லிக்கு மாற்றியபோது முகமது பின் துக்ளக்கின் தென் பகுதி மாகாண ஆளுநர்கள் தங்களை சுதந்திர அரசர்களாக அறிவித்தனர்.)

  1. வடக்கு கர்நாடகாவில் ஜாபர்கான் தன்னைச் சுதந்திர அரசராக அறிவித்துக் கொண்டு தன் தலைநகரை தேவகிரியிலிருந்து குல்பர்காவிற்கு மாற்றிய ஆண்டு

A) 1342 B) 1343 C) 1344 D) 1345

(குறிப்பு: ஜாபர்கான் பாமன் ஷா என்ற பட்டத்தைச் சூடி பாமினி அரசவம்சத்தைத் (1347-1527) தோற்றுவித்தார்.)

  1. விஜயநகர அரசு சங்கம வம்ச சகோதரர்களான ஹரிஹரர், புக்கர் ஆகியோரால் ____________ நதிக்கரையில் தோற்றுவிக்கப்பட்டது.

A) கிருஷ்ணா

B) துங்கபத்ரா

C) கங்கை

D) யமுனை

(குறிப்பு: 1336 ஆம் ஆண்டு விஜயநகரைத் தலைநகராகக் கொண்டு (தற்போதைய ஹம்பி) விஜயநகர அரசு தோற்றுவிக்கப்பட்டது.)

  1. பாமினி, விஜயநகர அரசுகள் ______________ ஆற்றிடைப் பகுதியைக் கட்டுப்படுத்த தங்களுக்குள் கடுமையாக போரிட்டனர்.

A) ஹனோவர்

B) தோ-ஆப்

C) ரெய்ச்சூர்

D) கன்னோசி

(குறிப்பு: மேலும் இராணுவத்திற்குத் தேவைப்படும் குதிரைகளை இறக்குமதி செய்யவும், மேற்குக் கடற்கரையிலுள்ள கோவா, ஹனோவர் துறைமுகங்களைக் கட்டுப்படுத்தவும் இடைவெளியில்லாமல் கடுமையாகப் போரிட்டனர்.)

  1. கிருஷ்ணதேவராயரின் கீழ் இருந்த நாயக்க முறை பற்றிய தகவல்களைத் தரும் இலக்கியம்

A) மனுசரிதம்

B) சாளுவவையுதயம்

C) ராயவாசகமு

D) மதுரா விஜயம்

(குறிப்பு: ராயவாசகமு என்பது தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட இலக்கியம் ஆகும்.)

  1. தவறான இணையைத் தேர்ந்தெடு. (அயல்நாட்டுப் பயணிகள் – நாடு)

A) இபன் பதூதா – மொராக்கோ

B) அப்துர் ரசாக் – பாரசீகம்

C) நிகிடின் – ரஷ்யா

D) டோமிங்கோ பயஸ் – இத்தாலி

(குறிப்பு: டோமிங்கோ பயஸ் – போர்த்துகல் நாடு, நூனிஸ் – இத்தாலி.)

  1. பொருத்துக. (அயல்நாட்டுப் பயணிகள் – காலம்)

1. இபன்பதுதா i) 1520 – 35

2. அப்துர் ரசாக் ii) 1470 – 74

3. நிகிடின் iii) 1443 – 45

4. நூனிஸ் iv) 1333 – 45

A) i ii iii iv

B) ii i iv iii

C) iv iii ii i

D) iii i ii iv

  1. சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. விஜயநகர அரசர்கள் வராகன் என்று குறிப்பிடப்பட்ட தங்க நாணயங்களை அதிக எண்ணிக்கையில் வெளியிட்டனர்.

2. இது தமிழில் பொன் என்றும் கன்னடத்தில் ஹொன்னு என்றும் குறிப்பிடப்பட்டது.

3. நாணயத்தில் அரசனுடைய பெயர் நகரி அல்லது கன்னட எழுத்து வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: வராகன் என்ற தங்க நாணயங்கள் வெவ்வேறு இந்து தெய்வங்களின் உருவங்களையும் காளை, யானை, கன்ட பெருண்டா என்ற கற்பனைப் பறவை ஆகிய விலங்கு உருவங்களையும் தாங்கியுள்ளன.)

  1. சுமூகமான நிர்வாகத்திற்காக தில்லி சுல்தானியர் முறையைப் பின்பற்றிய பாமன்ஷா தன் ஆட்சிப் பகுதியை எத்தனை பிரிவுகளாக பிரித்தார்?

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: குல்பர்கா, தெளலதாபாத், பீடார், பெரார் ஆகியவை பாமன்ஷா ஆட்சியின் நான்கு மாகாணங்களாகும்.)

  1. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

A) பாமன்ஷா ஆட்சியின் நான்கு பிரிவுகள் தராப்ஸ் எனப்பட்டன.

B) பாமன்ஷா ஆட்சியின் பிரிக்கப்பட்ட நான்கு பகுதிகளுக்கும் ஒவ்வொரு ஆளுநர் நியமிக்கப்பட்டு, அவர்கள் அப்பகுதியின் படைகளையும் வழிநடத்தினர்.

C) மாகாண ஆளுநர்கள் மாகாண நிர்வாகம், வரிவசூல் போன்றவற்றிற்கு முழுப்பொறுப்பாவர்.

D) பாமன்ஷா தன் அரசியல் எதிரிகளை அடக்கி 21 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தார்.

(குறிப்பு: அலாவுதீன் ஹசன் பாமன்ஷாவின் ஆட்சிக் காலம் 1347 – 1358. (11 ஆண்டுகள்))

  1. சுதந்திரமான மதுரை சுல்தானியம் உருவான ஆண்டு

A) 1234 B) 1332 C) 1333 D) 1344

  1. தான் பெற்ற வெற்றிகளை நினைவு கூரும் வகையில் நாணயங்களில் இரண்டாம் அலெக்சாண்டர் என்று பொறித்து கொண்டவர்

A) முதலாம் முகமது

B) ஜாபர்கான்

C) முகமது கவான்

D) ராஜா கிருஷ்ண தேவ்

(குறிப்பு: பாமன்ஷா வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான ராஜமுந்திரி, கொண்டவீடு ஆகியவற்றிடமிருந்து வருடம்தோறும் கப்பம் பெற அவர் மேற்கொண்ட முயற்சி பல போர்களுக்கு இட்டுச்சென்றது.)

  1. முதலாம் முகமது ____________ ஆண்டு வாரங்கல் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார்.

A) 1362 B) 1363 C) 1364 D) 1365

(குறிப்பு: இப்போரின் முடிவில் வாரங்கல் போர் நஷ்டஈட்டை வாரி வழங்கியது. கோல்கொண்டா கோட்டை முதலாம் முகமது வசமானது. அங்கிருந்த கருவூலங்கள், ரத்தினக்கற்கள், பாமினி அரசின் வசமாயின.)

  1. கூற்று 1: ஆகாய நீல வண்ணத்திலுள்ள ரத்தினக்கற்கள் ஓரளவு விலை மதிப்புள்ள கற்களாகும்.

கூற்று 2: நீல வண்ண மாணிக்கக் கற்களினால் இழைக்கப்பட்ட அரியணை பாரசீக அரசர்களின் ஒரு சிம்மாசனமாக இருந்தது என மனுசரிதம் என்னும் நூல் குறிப்பிடுகின்றது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: நீல வண்ண மாணிக்கக் கற்களினால் இழைக்கப்பட்ட அரியணை பாரசீக அரசர்களின் ஒரு சிம்மாசனமாக இருந்தது என பிர்தெளசியின் ஷாநாமா என்னும் நூல் குறிப்பிடுகின்றது.)

  1. தவறான இணையைத் தேர்ந்தெடு. (முதலாம் முகமதுவின் அமைச்சர்கள் குழு)

A) வகில்-உஸ்-சுல்தானா : படைத்தலைவர், அரசருக்கு அடுத்தநிலையில் உள்ளவர்.

B) வசீர்-குல்: மற்ற அமைச்சர்களின் பணிகளை மேற்பார்வையிடுபவர்

C) அமீர்-இ-ஜும்லா: நிதித்துறை இணையமைச்சர்

D) வசீர்-இ-அஷ்ரப்: வெளியுறவு அமைச்சர்

(குறிப்பு: அமீர்-இ-ஜும்லா: நிதியமைச்சர், வசீர்-இ-அஷ்ரப்: வெளியுறவு அமைச்சர் அரசு விவகாரத்துறை அமைச்சர், அரசு விழாக்களை முன்னின்று நடத்தும் பொறுப்புடையவர்.)

  1. பொருத்துக. (முதலாம் முகமதுவின் அமைச்சர்கள் குழு)

1. நசீர் i) தலைமை நீதிபதி

2. பேஷ்வா ii) காவல்துறைத் தலைவர்

3. கொத்வால் iii) அரசப் படைகளின் பொறுப்பாளர்

4. சதர்-இ-ஜஹான் iv) நிதித்துறை இணையமைச்சர்

A) i ii iii iv

B) ii i iv iii

C) iv iii ii i

D) ii iii i iv

(குறிப்பு:

  • கொத்வால்- காவல்துறைத் தலைவர், தலைநகரின் நீதிபதி
  • சதர்-இ-ஜஹான்: தலைமை நீதிபதி, சமய அறநிலையத்துறை அமைச்சர்.)
  1. முதலாம் முகமது ___________இல் இரு மசூதிகளை எழுப்பினார்.

A) குல்பர்கா

B) தௌலதாபாத்

C) பீடார்

D) பெரார்

(குறிப்பு: இதில் ஒரு மசூதி 1367ல் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.)

  1. கூற்று 1: முதலாம் முகமது வழிப்பறி கொள்ளையர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தார்.

கூற்று 2: நிறுவன மற்றும் புவியியல் ரீதியில் முகமது ஷா ஏற்படுத்திய ஒருங்கிணைப்பே அவர் அரசுக்கு திடமான அடித்தளத்தை உருவாக்கியது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

  1. பாமினி அரசாட்சியின் போது, ஒரிசா ஆட்சியாளர்கள் ____________ ஆண்டு வாரங்கல் மற்றும் அதன் கிழக்கிலிருந்த பகுதிகளை கைப்பற்றினர்.

A) 1365 B) 1375 C) 1413 D) 1425

  1. முதலாம் முகமதுவின் ஆட்சிக்கு பின் பாமினி அரசின் தலைநகரம் குல்பர்காவிலிருந்து ___________ ஆண்டு பீடாருக்கு மாற்றப்பட்டது.

A) 1426 B) 1427 C) 1428 D) 1429

(குறிப்பு: முதலாம் முகமது ஷாவிற்குப் பின் சில சுல்தான்கள் ஆட்சி செய்தனர். அவர்கள் திறமையற்றவர்களாக விளங்கினர்.)

  1. சிறந்த அரசியல் விவேகியான முகமது கவான் யாருடைய காலத்தில் அமைச்சராக விளங்கினார்?

A) ஜாபர்கான்

B) முதலாம் முகமது

C) இரண்டாம் முகமது

D) மூன்றாம் முகமது

(குறிப்பு: மூன்றாம் முகமதுவின் காலம் 1463 – 1482.)

  1. முகமது கவான் ____________ல் ஒரு பெரிய மதரசாவை நிறுவி அதில் ஒரு பெரிய நூலகத்தை அமைத்தார்.

A) குல்பர்கா

B) தௌலதாபாத்

C) பீடார்

D) பெரார்

(குறிப்பு: பாரசீகத்தில் பிறந்த முகமது கவான் புகழ்பெற்ற இஸ்லாமிய சமய வல்லுநராகவும், பாரசீக மொழியில், கணிதத்தில் புலமை பெற்றவராகவும் விளங்கினார்.)

  1. தவறான கூற்றைத் தேர்ந்தெடு. (முகமது கவான்)

A) முகமது கவான் பீடாரில் நிறுவிய நூலகத்தில் 3000 கையெழுத்து நூல்கள் இருந்தன.

B) கொங்கணம், ஒரிசா, விஜயநகர மன்னர்களுக்கு எதிராக வெற்றிகரமாகப் போரை நடத்தினார்.

C) ஆங்கிலேய வேதியியல் வல்லுநர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வெடிமருந்தை பயன்படுத்தினார்.

D) பாமினி அரசை நிர்வகிக்க வசதியாக நாட்டை எட்டு மாகாணங்களாகப் பிரித்தார்.

(குறிப்பு: பாரசீக வேதியியல் வல்லுநர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வெடிமருந்தை பயன்படுத்தினார்.)

  1. கூற்று 1: முகமது கவான் அறிமுகப்படுத்திய நிர்வாகச் சீர்திருத்தங்கள் மூன்றாம் முகமது அரசின் நிலையை உயர்த்தின. ஆனால் மாகாணத் தலைவர்களுக்குத் தரப்பட்ட அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.

கூற்று 2: மாகாணத் தலைவர்களில் பலர் தக்காணத்தை சேர்ந்தவர்களாவர். தக்காணத்தில் அவர்களுக்கிடையே இருபிரிவுகள் உண்டாயின.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: மாகாணத் தலைவர்களின் இருபிரிவுகள்

  • தக்காண முஸ்லீம்கள்
  • வெளிநாட்டிலிருந்து வந்த முஸ்லீம்கள்)
  1. கோல்கொண்டா கோட்டையை கட்டிய காகத்திய வம்ச அரசர்

A) ராஜா ரனதேவ்

B) குலிகுதப்ஷா

C) பிரதாபருத்ரன்

D) ராஜா கிருஷ்ண தேவ்

(குறிப்பு: ராஜா கிருஷ்ண தேவ் வாரங்கல்லைத் தலைநகராகக் கொண்ட காகத்திய அரசர் ஆவார்.)

  1. கோல்கொண்டா கோட்டை சுல்தான் குலி குதப்ஷாவிற்கு ஜாகீராகத் தரப்பட்ட ஆண்டு

A) 1492 – 1493

B) 1493 – 1494

C) 1494 – 1495

D) 1495 – 1496

(குறிப்பு: குலிகுதப்ஷா கோல்கொண்டா கோட்டையை கருங்கற்கள் கொண்டு புனரமைத்தார். அதன் பின் இக்கோட்டைப் பகுதி இருந்த நகரம் முகம்மது நகர் எனப்பட்டது.)

  1. குதுப்ஷாகி வம்சத்தின் ஐந்தாவது சுல்தான் _____________ ஆவார்.

A) முகமது அலி

B) முகம்மது குலி குதுப்ஷா

C) அகமது குலி குதுப்ஷா

D) அலாவுதீன் குலி குதுப்ஷா

(குறிப்பு: முகம்மது குலி குதுப்ஷா காலத்தில் கம்பீரமான கோட்டையாக கோல்கொண்டா கோட்டை திகழ்ந்தது.)

  1. ____________நூற்றாண்டில் கோல்கொண்டா ஒரு சிறந்த வைரச் சந்தையாகத் திகழ்ந்தது.

A) 15 B) 16 C) 17 D) 18

(குறிப்பு: கோல்கொண்டா வைரச் சந்தை, கோஹினூர் வைரம் உட்பட மிகச்சிறந்த வைரங்களை உலகிற்கு வழங்கியது.)

  1. கூற்று 1: கோல்கொண்டா கோட்டை பெங்களூருவிலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மலைமீது 120 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கூற்று 2: கோல்கொண்டா கோட்டை அதன் ஒலி அம்ச அடிப்படையில் சிறந்த கட்டடக் கலையின் அம்சமாகும்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: கோல்கொண்டா கோட்டை ஹைதராபாத்திலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மலைமீது 120 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கோல்கொண்டா கோட்டையில் அரச அவையும் உள்ளது.)

  1. கோல்கொண்டா கோட்டையின் உயர்ந்த பகுதி______________ என்றழைக்கப்படுகிறது.

A) பதேதர்வாசா

B) தர்பார்வாசா

C) பாலா ஹிசார்

D) பதேதர்ஹிசா

(குறிப்பு: கோல்கொண்டா கோட்டையின் நுழைவாயில் பகுதி பதேதர்வாசா (அ) வெற்றி நுழைவாயில் என்றழைக்கப்படுகிறது.)

  1. கோல்கொண்டா கோட்டையில் ___________ன் கல்லறை உள்ளது.

A) ராஜா கிருஷ்ண தேவ்

B) ஒளரங்கசீப்

C) ஷாஜகான்

D) குதுப்ஷாகி

(குறிப்பு: கோல்கொண்டா கோட்டையில் பீரங்கிகள், பாலங்கள், அரச அரண்மனைகள், அறைகள், மசூதிகள், தொழுவங்கள் உட்பட நான்கு சிறிய கோட்டைகளும் இதனுள் அடங்கும்.)

  1. ஒளரங்கசீப் கோல்கொண்டா கோட்டையை எட்டு மாதங்கள் முற்றுகையிட்டு ____________ ஆண்டு அதன் ஆட்சியாளரிடமிருந்து கைப்பற்றினார்.

A) 1686 B) 1687 C) 1688 D) 1689

(குறிப்பு: 1687 இல் ஆப்கானிய வாசல் காப்பாளரின் துரோகம் காரணமாக ஒளரங்கசீப் கோல்கொண்டா கோட்டையை கைப்பற்றினார்.)

  1. மூன்றாம் முகம்மது இறந்தபின் பாமினி அரசிலிருந்து பிரிந்த சுதந்திர அரசுகள் எவை?

1. பீஜப்பூர் 2. அகமது நகர் 3. பெரார்

4. கோல்கொண்டா 5. பீடார்

A) அனைத்தும் B) 1, 2, 5 C) 1, 2, 3, 5 D) 2, 3, 4, 5

(குறிப்பு: பிற்காலத்தில் பீஜப்பூர் வலிமையான அரசானது. பீடார், பெரார் போன்றவை அதில் இணைக்கப்பட்டன. அதே நேரத்தில் அகமதுநகர், கோல்கொண்டா போன்றவை சுதந்திர அரசுகளாயின.)

  1. மூன்றாம் முகம்மது இறந்த பின் பாமினி வம்சத்தை சேர்ந்த ____________ மன்னர்கள் ஆட்சி செய்தனர்.

A) 3 B) 4 C) 5 D) 6

(குறிப்பு: மூன்றாம் முகம்மது இறந்த பின் பாமினி அரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது.)

  1. விஜயநகர அரசுக்கும், பாமினி அரசிலிருந்து உருவான ஐந்து சுதந்திர அரசுகளுக்கும் இடையிலான ராக்சஷி தங்கடி போர் நடைபெற்ற ஆண்டு

A) 1525 B) 1545 C) 1565 D) 1656

(குறிப்பு: ராக்கஷி தங்கடி போரில் (தலைக்கோட்டைப் போர்) விஜயநகர அரசு தோற்கடிக்கப்பட்டது. இப்போருக்கு பின் தக்காண சுல்தானியங்கள் முகலாய அரசுடன் இணைக்கப்பட்டன.)

  1. ஹொய்சாள அரசரிடம் சில காலம் பணி செய்த ஹரிஹரர், புக்கர் ஆகியோர் தங்களை சுதந்திர அரசர்களாக நிலைநிறுத்திக் கொண்டு __________ ஆண்டு புதிய அரசுக்கான அடித்தளத்தை அமைத்தனர்.

A) 1334 B) 1336 C) 1342 D) 1346

(குறிப்பு: இந்நிகழ்வு ஹொய்சாள அரசர் மூன்றாம் பல்லாலர் மதுரை சுல்தானால் கொல்லப்பட்ட பின்னர் நடைபெற்றிருக்க வேண்டும். ஹரிஹரர் புக்கர் ஆகியோர் சங்கமரின் புதல்வர்கள் ஆவர்.)

  1. கூற்று 1: விஜயநகர அரசின் தொடக்கத்தில் துங்கபத்திரை நதியின் வடக்குக் கரையில் அனகொண்டி அருகே தலைநகர் அமைந்திருந்தது.

கூற்று 2: விரைவில் துங்கபத்திரை ஆற்றின் தென்கரையில் அமைந்திருந்த ஹொய்சாள நகரமான ஹொசபட்னா என்னும் இடத்திற்கு தலைநகர் மாற்றப்பட்டது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: தலைநகரமான ஹொசபட்னா விரிவுபடுத்தப்பட்ட பின்னர் வெற்றியின் நகரம் என்ற பொருளில் விஜயநகரம் என புதிய பெயர் சூட்டப்பட்டது.)

  1. விஜயநகர அரசர்கள், சாளுக்கியரின் முத்திரையான ___________ உருவத்தைத் தங்களது அரச முத்திரையாகக் கொண்டனர்.

A) பசு

B) குதிரை

C) யானை

D) பன்றி (வராகம்)

(குறிப்பு: வரலாற்றறிஞர்கள் ஹரிஹரர் தொடங்கிய அரச வம்சத்தை அவரின் தந்தையாரின் பெயரில் அல்லது மூதாதையாரின் பெயரில் சங்கம வம்சம் என அழைத்தனர்.)

  1. கல்வெட்டுச் சான்றுகளின்படி வித்யாரண்யர் ____________ நூற்றாண்டின் இறுதி பகுதியில் வாழ்ந்தவர் ஆவார்.

A) 13 B) 14 C) 15 D) 16

(குறிப்பு: வித்யாரண்யர் விஜயநகரப் பேரரசு உருவான ஆறுபது ஆண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்தவர் ஆவார்.)

  1. தவறான இணையைத் தேர்ந்தெடு.

A) சங்கம வம்சம்: (1336 – 1485)

B) சாளுவ வம்சம்: (1485 – 1505)

C) துளுவ வம்சம்: (1505 – 1570)

D) ஆரவீடு வம்சம்: (1570 – 1630)

(குறிப்பு: ஆரவீடு வம்சம்: (1570 – 1650). விஜயநகர அரசு நான்கு அரச வம்சத்து அரசர்களால் முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆளப்பட்டது.)

  1. பதிமூன்றாம் நூற்றாண்டின் பெரிய அரசுகளான தமிழ்நாட்டில் பாண்டியர், கர்நாடகத்தைச் சேர்ந்த ஹொய்சாளர், ஆந்திர காகத்தியர் ஆகிய மூன்று அரசுகளும் பதினான்காம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் ___________ படையெடுப்புகளால் அழிவுற்று பெரும் அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியது.

A) விஜயநகர அரசு

B) பாமினி அரசு

C) சோழ அரசு

D) தில்லி சுல்தானியம்

(குறிப்பு: குழப்பமும் கொந்தளிப்பும் நிறைந்த இச்சூழ்நிலை சங்கம வம்சத்தை சேர்ந்த ஹரிஹரர் முதலான ஐந்து சகோதரர்களுக்கு தங்கள் பகுதிகளை ஒருங்கிணைக்கவும் விரிவாக்கம் செய்யவும் வாய்ப்பினை வழங்கியது.)

  1. சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. விஜயநகர அரசு உருவான நாற்பதாண்டுகளுக்கு உள்ளாகவே ஐந்து சகோதரர்களும் வெவ்வேறு திசைகளில் மேற்கொண்ட படையெடுப்புகளின் விளைவாக குறுநில அரசு என்ற நிலையிலிருந்து பெரிய அரசாக மாறியது.

2. முதலில் கர்நாடகாவில் ஹொய்சாள அரசின் இதயமாக இருந்த பகுதிகள் விஜயநகரோடு இணைக்கப்பட்டன. தொடர்ந்து கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன.

3. பல துறைமுகங்களை சென்றடையும் வாய்ப்பினை இப்பகுதி கொண்டிருந்ததால் இப்பகுதியின் பிரதானிகள் அல்லது அல்லது ஆளுநர்கள் இப்பகுதியின் நிர்வாகத்தில் அக்கறை செலுத்தினர்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

  1. விஜயநகர பேரரசில் ___________ ஆட்சியின் போது தமிழகத்தின் தொண்டை மண்டலப் பகுதியின் மீது கவனம் திரும்பியது.

A) மாரையா நாயக்கர்

B) முதலாம் புக்கர்

C) இரண்டாம் புக்கர்

D) மூன்றாம் புக்கர்

(குறிப்பு: இச்சமயத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலப் பகுதியை சம்புவராயர் ஆண்டு வந்தனர்.)

  1. இளவரசர் கம்பண்ணாவின் (குமார கம்பண்ணா) நம்பிக்கைக்குரிய தளபதி_____________.

A) மாலிக் கபூர்

B) மார்க்கண்டேயன்

C) மாரையா

D) மாணிக்கராயர்

(குறிப்பு: முதலாம் புக்கரின் தொண்டை மண்டலப் பகுதியை கைப்பற்றும் பணியை கம்பண்ணா, தளபதி மாரையாவின் உதவியுடன் வெற்றிகரமாக முடித்தார்.)

  1. குமார கம்பண்ணா ___________ ஆண்டு மதுரை சுல்தானைக் கொன்று மதுரை சுல்தானிய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்.

A) 1340 B) 1348 C) 1360 D) 1370

(குறிப்பு: ஆனால் மதுரை உள்ளிட்ட பாண்டிய நாடு அப்போது விஜயநகர அரசோடு இணையவில்லை. நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1500 வாக்கில் பாண்டியநாடு விஜயநகர அரசின் ஒரு பகுதியானது.)

  1. குமார கம்பண்ணாவின் மனைவி கங்காதேவி எழுதிய ‘மதுரா விஜயம்’ எனும் நூல் ____________மொழியில் எழுதப்பட்டது.

A) தெலுங்கு

B) கன்னடம்

C) சமஸ்கிருதம்

D) தமிழ்

(குறிப்பு: இந்நூல் குமார கம்பண்ணா மதுரை சுல்தானை வெற்றிக் கொண்டதை பற்றிக் குறிப்பிடுகிறது.)

  1. ____________ நதி விஜயநகர பாமினி அரசுகளை பிரிக்கும் எல்லைக் கோடாக அமைந்திருந்தது.

A) கிருஷ்ணா

B) கோதாவரி

C) மகாநதி

D) தபதி

(குறிப்பு: விஜயநகர அரசர்கள் முஸ்லீம்கள் அல்லாத இந்து அரசுகளான வாராங்கல், கொண்டவீடு, ஒரிசா ஆகியவற்றுடன் போரிட்டபோது முஸ்லீம் அரசுகள் சிலசமயம் விஜயநகருக்கு ஆதரவாகவும் சில சமயம் எதிர்தரப்புக்கு ஆதரவாகவும் பங்கேற்றனர்.)

  1. ஆந்திராவின் கடற்கரைப்பகுதிகளில் அதிகாரத்திற்கான போட்டி ஒரிசாவை சேர்ந்த ______________ அரசுக்கும் விஜயநகருக்குமிடையே நடைபெற்றது.

A) காகத்திய அரசு

B) ஹொய்சாள அரசு

C) சோளங்கிகள் அரசு

D) கஜபதி அரசு

(குறிப்பு: இரண்டாம் தேவராயர் (1422 – 46) ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வரை இப்பிரச்சனையில் விஜயநகரால் பெரும் வெற்றி என எதையும் பெற இயலவில்லை.)

  1. கூற்று 1: இரண்டாம் தேவராயர் ஒரியர்களை சில போர்களில் தோற்கடித்தார்.

கூற்று 2: இப்போர்களின் மூலம் ஒரியாவின் பல பகுதிகள் விஜயநகர அரசுடன் இணைக்கப்பட்டன.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: இரண்டாம் தேவராயர் மேற்கொண்ட போர்கள் அனைத்தும் கப்பம் வசூல் செய்வதற்காகவே நடைபெற்றன. இடங்கள் கைப்பற்றப்பட்டு இணைக்கப்படவில்லை.)

  1. சங்கம வம்ச அரசர்களுள் மிகச்சிறந்த அரசர் ____________.

A) முதலாம் புக்கர்

B) இரண்டாம் புக்கர்

C) முதலாம் தேவராயர்

D) இரண்டாம் தேவராயர்

(குறிப்பு: இரண்டாம் தேவராயர் தனது குதிரைப் படையின் வலிமையைப் பெருக்குவதற்காகப் பயிற்சி பெற்ற முஸ்லீம் குதிரைப்படை வீரர்களை தனது படைகளில் சேர்த்துக் கொண்டார்.)

  1. இரண்டாம் தேவராயரின் காலத்தில் விஜயநகருக்கு வருகை தந்த பாரசீக நாட்டின் தூதுவர்

A) நூனிஸ்

B) இபன் பதூதா

C) அப்துர் ரசாக்

D) நிகிடின்

(குறிப்பு: அப்துர் ரசாக், கொச்சி சாமுத்திரி அரசவைக்கும் விஜயநகரத்திற்கும் வருகை தந்தார். அப்துர் ரசாக் தனது குறிப்புகளில், இரண்டாம் தேவராயர் மிகப்பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தினார் என்று குறிப்பிடுகின்றார்.)

  1. இலங்கை அரசனிடமிருந்து கப்பம் பெற்ற விஜயநகர அரசர்

A) கிருஷ்ண தேவராயர்

B) முதலாம் புக்கர்

C) ஹரிஹரர்

D) இரண்டாம் தேவராயர்

  1. இரண்டாம் தேவராயரின் இறப்புக்குப் பின்____________ ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் கஜபதி படைகள் விஜயநகரின் மீது பலமுறை தாக்குதல்களை மேற்கொண்டன.

A) 1446 – 1450

B) 1450 – 1455

C) 1455 – 1460

D) 1460 – 1465

(குறிப்பு: திருச்சிராப்பள்ளி வரை வெற்றிகரமாகப் படையெடுத்து வந்த கஜபதி படைகள் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியதோடு கோவில்களின் செல்வத்தையும் கொள்ளையடித்தன.)

  1. கஜபதியர்களிடமிருந்து விஜயநகரை காத்து, ஆந்திரக் கடற்கரை பகுதிகளை மீட்ட தளபதி சாளுவ நரசிம்மர் __________ஆண்டு அரசாட்சியை கைப்பற்றினார்.

A) 1483 B) 1484 C) 1485 D) 1486

(குறிப்பு: சாளுவ வம்ச அரசர்களின் எழுச்சி வரை தஞ்சாவூர், திருச்சி பகுதிகளில் திருமலைத்தேவர், கோனேரித் தேவர் போன்ற குறுநில மன்னர்கள் ஒரு சில பத்தாண்டுகள் சுதந்திர அரசர்களை போல ஆட்சி நடத்தினர்.)

  1. ____________ என்ற மாபெரும் போர்வீரர் சாளுவ நரசிம்மரின் தளபதியாக திகழ்ந்தார்.

A) வீரநரசிம்மர்

B) நரச நாயக்

C) நரசிம்மர்

D) நரசிம்மராஜன்

(குறிப்பு: நரச நாயக் தென்பகுதியில் கலகத்தில் ஈடுபட்ட உள்ளூர் தலைவர்களை அடக்க முயன்றார்.)

  1. சாளுவ நரசிம்மர் ___________ ஆண்டு மரணமடைந்தார்.

A) 1486 B) 1488 C) 1490 D) 1491

(குறிப்பு: சாளுவ நரசிம்மர் இறப்பதற்கு முன்பாக தனது இளம் வயது மகன்களை நரச நாயக்கரின் பாதுகாப்பில் விட்டுச்சென்றார். உண்மையான ஆட்சி அதிகாரம் தனது கைகளுக்கு வரப்பெற்ற நரச நாயக் தனது மரணம் வரையிலும் நாட்டை பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.)

  1. நரச நாயக்கின் மூத்த மகனான வீரநரசிம்மர் துளுவ வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்த ஆண்டு

A) 1501 B) 1503 C) 1505 D) 1508

(குறிப்பு: வீரநரசிம்மரைத் தொடர்ந்து அவருடைய தம்பி கிருஷ்ண தேவராயர் அரியணை ஏறினார்.)

  1. மைசூருக்கு அருகே இருந்த கலக மனப்பான்மை கொண்ட உம்மத்தூர் குறுநில மன்னனைத் தோற்கடித்துப் பணியச் செய்தவர்

A) கிருஷ்ண தேவராயர்

B) முதலாம் புக்கர்

C) ஹரிஹரர்

D) இரண்டாம் தேவராயர்

(குறிப்பு: இந்த வெற்றியைத் தொடர்ந்து கிருஷ்ண தேவராயர் இருமுனைகளில் போரிட வேண்டியிருந்தது. ஒன்று பரம்பரை எதிரிகளான பாமினி சுல்தான்களுடன், மற்றொன்று ஒரிசாவின் கஜபதி அரசர்களுடன்.)

  1. கிருஷ்ணதேவராயர் தனது வெற்றித் தூணை நிறுவிய இடம்

A) பீடார்

B) குல்பர்கா

C) சிம்மாச்சலம்

D) விஜயநகர்

(குறிப்பு: கிருஷ்ணதேவராயருடைய கிழக்குத் திசை படையெடுப்பின்போது கஜபதி அரசர்களின் வசமிருந்த உதயகிரி கோட்டையைப் போன்று பல கோட்டைகள் கைப்பற்றப்பட்டதைப் பற்றி பல கல்வெட்டுகள் தெளிவாக விளக்குகின்றன.)

  1. கூற்று: பாமினி படைகளை முறியடிப்பதற்காகக் கிருஷ்ணதேவராயர் ஒன்றுக்கும் மேற்பட்ட படையெடுப்புகளை ஆண்டுதோறும் மேற்கொள்ள நேர்ந்தது.

காரணம்: ஆண்டுக்கு ஒருமுறை என்ற கணக்கில் பாமினிப் படைகள் விஜயநகரை ஊடுருவின.

A) கூற்று சரி மற்றும் காரணம் தவறு

B) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

C) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை

  1. கிருஷ்ணதேவராயரிடமிருந்து, போர்ச்சுக்கீசியர்கள் ___________ என்னும் இடத்தில் கோட்டை கட்டிக்கொள்ளும் உரிமையை பெற்றனர்.

A) கோவா

B) சிம்மாச்சலம்

C) தெளலதாபாத்

D) பத்கல்

(குறிப்பு: ஒரு சில படையெடுப்புகளின்போது, மலபார், கொங்கணக் கடற்கரைப் பகுதிகளில் தங்களுடைய அதிகாரத்தை நிறுவுவதற்கு முயன்றுகொண்டிருந்த போர்த்துகீசியர் விஜயநகருக்கு இராணுவ உதவிகளைச் செய்தனர்.)

  1. கீழ்க்கண்ட எந்த இடங்களில் உள்ள சைவ வைணவக் கோயில்களுக்கு கிருஷ்ண தேவராயர் கொடையளித்தார்?

1. ஸ்ரீசைலம் 2. திருப்பதி 3. காளஹஸ்தி

4. காஞ்சிபுரம் 5. திருவண்ணாமலை 6. சிதம்பரம்

A) அனைத்தும் B) 1, 2, 3, 4 C) 2, 3, 4, 5 D) 1, 2, 3, 6

(குறிப்பு: பல கோவில்களில் கிருஷ்ணதேவராயர் எழுப்பிய கோபுரங்கள் இன்று வரை உள்ளன.)

  1. கூற்று 1: விஜயநகருக்கு வருகை தந்த சமகாலத்து வெளிநாட்டுப் பயணிகளான நூனிஸ், பயஸ் போன்றோர் அவருடைய ஆளுமை குறித்தும் விஜயநகரத்தின் உயர் நிலை, செல்வச்செழிப்பு ஆகியன பற்றியும் பாராட்டுகளை விட்டுச் சென்றுள்ளனர்.

கூற்று 2: கிருஷ்ணதேவராயருடைய அரசவையை அல்லசானி பெத்தண்ணா போன்ற தலைசிறந்த புலவர்கள் அலங்கரித்தனர்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

  1. கூற்று 1: கிருஷ்ணதேவராயர் ஆமுக்தமால்யதா (ஆண்டாளின் கதை) எனும் நூலை இயற்றியுள்ளார்.

கூற்று 2: அச்சுததேவராயர் நாயக் அல்லது நாயங்காரா முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: கிருஷ்ணதேவராயர் நாயக் அல்லது நாயங்காரா முறையை மறுசீரமைப்பு செய்து அதற்கு சட்ட அங்கீகாரத்தையும் கொடுத்தார்.)

  1. கிருஷ்ணதேவராயர் இறந்தபோது அவருடைய மகன் குழந்தையாக இருந்ததால் அவருடைய சகோதரரான _____________ என்பவர் ஆட்சிப் பொறுப்பேற்றார்.

A) ராமராஜா

B) அச்சுத தேவராயர்

C) நரச நாயக்கர்

D) செல்லப்பா

(குறிப்பு: கிருஷ்ணதேவராயரின் மருமகனான ராமராஜா அச்சிறு வயது இளவரசனுக்கு பட்டம் சூட்டுவதன் வழியாக அரசியல் மேலாதிக்கம் செலுத்த விரும்பினார்.)

  1. விஜயநகர பேரரசின் வாரிசுரிமை பிரச்சனையில் கிருஷ்ணதேவராயரின் சகோதரரான அச்சுதராயருக்கு ___________ என்பாரின் ஆதரவு இருந்தது.

A) வீரநரசிம்மர்

B) நரச நாயக்

C) செல்லப்பா

D) நரசிம்மராஜன்

(குறிப்பு: செல்லப்பா (சாளுவ நாயக் என்றும் அறியப்படுபவர்) என்பவர் அக்காலக் கட்டத்தில் தமிழகத்தின் பெரும்பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். காலப்போக்கில் இவரே கிளர்ச்சியில் ஈடுபட அச்சுதராயர் பெரும்படையோடு தென்னகம் வந்து இவரை அடக்கினார்.)

  1. அச்சுததேவராயர் மரணமடைந்த ஆண்டு_____________.

A) 1539 B) 1540 C) 1541 D) 1542

(குறிப்பு: அச்சுததேவராயர் மரணமடைந்த பிறகு அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் அரச பதவியேற்று ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆண்டார் (1542-70). ஆனால் உண்மையான அதிகாரம் ராமராஜாவின் கைகளில் இருந்தது.)

  1. சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. சிறந்த வீரரும் ராணுவ வல்லுநருமான ராமராஜர் பாமினி சுல்தான்களை ஒருவரோடு ஒருவர் மோதச் செய்யும் திறமை பெற்றிருந்தார்.

2. போர்த்துகீசியரோடு ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் பீஜப்பூர் அரசருக்குக் குதிரைகள் அனுப்பப்படுவதை நிறுத்தினார்.

3. சிலகாலம் கழித்து கோல்கொண்டா, அகமதுநகர் சுல்தான்களுக்கு எதிராக பீஜப்பூரோடு கைகோத்தார்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவாக, தக்காண சுல்தான்கள் தங்களது பரஸ்பர பகையை மறந்து ஒன்றுபட்டு, பொது எதிரிக்கு (விஜயநகர அரசு) எதிராக இறுதிப்போர் புரிய கைகோத்தனர்.)

  1. தலைக்கோட்டை போரில் விஜயநகரம் தோல்வியடைந்த பின் அரசர் சதாசிவராயரும் அவருடைய வீரர்களும் __________க்கு தப்பிச் சென்றனர்.

A) சந்திரகிரி

B) பெனுகொண்டா

C) மங்களூர்

D) பரகூர்

  1. தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. தலைக்கோட்டை போருக்கு பின் ராமராஜாவின் சகோதரர் 1570 இல் தன்னை அரசராக அறிவித்து நான்காவது அரசமரபான ஆரவீடு வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தார்.

2. ராமராஜாவின் சகோதரரைத் தொடர்ந்து அவருடைய மகன்களும் பேரன்களும் அளவில் சுருங்கிய அரசை இரு தலைமுறை காலத்திற்கு 1620 வரை ஆட்சி புரிந்தனர்.

3. வேறு சில அரசர்கள் நிரந்தரத் தலைநகரமில்லாமல் நாடோடிகளாகத் திரிந்து 1670 வரை ஆட்சி புரிந்தனர்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) எதுவுமில்லை

(குறிப்பு: ராமராஜாவின் சகோதரரைத் தொடர்ந்து அவருடைய மகன்களும் பேரன்களும் அளவில் சுருங்கிய அரசை இரு தலைமுறை காலத்திற்கு 1630 வரை ஆட்சி புரிந்தனர்.)

  1. கூற்று 1: 1601 இல் விஜயநகர அரசின் விசுவாசிகள் பெரும்பேடு என்னும் ஊரைச் சேர்ந்த யச்சம நாயக்கர் தலைமையிலும் எதிர்தரப்பினர் வேலூர் நாயக் (வேலூர்) தலைமையிலும் உத்திரமேரூரில் கடுமையான போரில் ஈடுபட்டனர்.

கூற்று 2: இப்போரில் சுதந்திர அரசுகளாக மாறிவிட்ட தஞ்சாவூர், மதுரை, செஞ்சி நாயக்க அரசுகள் வேலூர் நாயக்கை ஆதரித்தனர்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

  1. பொருத்துக.

1. முதலமைச்சர் i) மகாபிரதானி

2. தளவாய் ii) தளபதி

3. வாசல் iii) அரண்மனைப் பாதுகாவலர்

4. ராயசம் iv) செயலர்/கணக்கர்

5. அடைப்பம் v) தனி உதவியாளர்

6. காரிய கர்த்தா vi) செயல் முகவர்

A) i ii iii iv v vi

B) ii i iii v iv vi

C) i ii iii v iv vi

D) iv ii iii vi i v

  1. தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு. (விஜயநகரப் பேரரசு)

1. முதலாம் ஹரிஹரரும் அவரைத் தொடர்ந்து ஆட்சி செய்தவர்களும் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்து அவற்றில் நிர்வாக அமைப்புகளை உருவாக்க முயன்றனர்.

2. ராஜ்யா என்னும் மண்டலங்களாக நாடு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு ராஜ்யாவுக்கும் ஒரு ராயசம் நியமிக்கப்பட்டார்.

3. ஹொய்சாள, ராஜ்யா, அரகா, பரகூர், மங்களூர், முளுவாய் ஆகியன முக்கியமான ராஜ்யாக்களாகும்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 1, 2 தவறு

(குறிப்பு: ராஜ்யா என்னும் மண்டலங்களாக நாடு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு ராஜ்யாவுக்கும் ஒரு பிரதானி (ஆளுநர்) நியமிக்கப்பட்டார்.)

  1. 1400இல் தமிழக பகுதிகளில் விஜயநகரை சேர்ந்த ___________ராஜ்யாக்கள் இருந்தன.

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: சந்திரகிரி, படைவீடு, வலுதலும்பட்டு, திருச்சி, திருவாரூர் என்பன ஐந்து ராஜ்யாக்களாகும்.)

  1. கூற்று 1: விஜயநகர அரசில் பிரதானி என்பவர் அரசவை உறுப்பினராகவோ அல்லது ராணுவ அதிகாரியாகவோ இருப்பார்.

கூற்று 2: பிரதானி அரச குடும்பத்திற்கு உறவினராக இருப்பார்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: பிரதானி அரச குடும்பத்திற்கு உறவினர் அல்ல. நிர்வாகத்தில் அவருக்கு உதவி செய்யக் கணக்கர்களும் ராணுவ அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டனர்.)

  1. கீழ்க்கண்டவற்றுள் எது ராஜ்யாவின் (விஜயநகர பேரரசு) நிர்வாகப் பிரிவு அல்ல?

A) சீமை

B) ஸ்தலம்

C) கம்பனா

D) வாசல்

(குறிப்பு: விஜயநகர பேரரசின் மிகச்சிறிய நிர்வாக அலகு கிராமமாகும். துளுவ வம்சத்தைச் சேர்ந்த கிருஷ்ணதேவராயரால் நாயக் முறை அறிமுகமானபோது ராஜ்யாக்கள் தங்களது நிர்வாக, வருவாய் முக்கியத்துவத்தை இழந்தன.)

  1. நாயக்க என்னும் சொல் தெலுங்கு, கன்னடப் பகுதிகளில் ___________ நூற்றாண்டிலிருந்தே இராணுவத் தலைவர், அல்லது இராணுவ வீரர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

A) 11 B) 12 C) 13 D) 14

(குறிப்பு: பதிமூன்றாம் நூற்றாண்டில் காகத்திய அரசில் ஒரு நாயக்கின் இராணுவ சேவைக்கும் பதிலாக ஒரு குறிப்பிட்ட பகுதியின் வருவாயை வழங்கும் முறை நடைமுறையில் இருந்தது. இது தில்லி சுல்தானியத்தில் பின்பற்றப்பட்ட இக்தா முறையைப் போன்றதாகும்.)

  1. கூற்று 1: விஜயநகர அரசில் இராணுவ சேவைக்கு பதிலாக வருவாய் ஈட்டித்தரும் நிலப்பகுதிகளை வழங்கும் முறை 1500 அல்லது அதற்குச் சற்று முன்னதாகவே தொடங்கிற்று.

கூற்று 2: கல்வெட்டுகள் இம்முறையைத் தமிழில் நாயக் கட்டணம் எனவும், நாயக்தானம் என மலையாலத்திலும், நாயன் கரமு என தெலுங்கிலும் குறிப்பிடுகின்றன.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: கல்வெட்டுகள் இம்முறையைத் தமிழில் நாயக் கட்டணம் எனவும், நாயக்தானம் என கன்னடத்திலும், நாயன் கரமு என தெலுங்கிலும் குறிப்பிடுகின்றன.)

  1. நாயக்க முறை யாருடைய ஆட்சியின் போது நிறுவன வடிவம் பெற்றது?

1. ஹரிஹரர் 2. இரண்டாம் தேவராயர்

3. கிருஷ்ணதேவராயர் 4. அச்சுததேவராயர்

A) 1, 2 B) 2, 3 C) 1, 4 D) 3, 4

(குறிப்பு: கல்வெட்டுச் சான்றுகளும் நூனிஸ், பயஸ் போன்ற வெளிநாட்டவரின் பயணக் குறிப்புகளும் இதை உறுதி செய்கின்றன.)

  1. விஜயநகர அரசு ___________க்கும் மேற்பட்ட நாயக்குகளாக பிரிக்கப்பட்டிருந்ததாக நூனிஸ் குறிப்பிட்டுள்ளார்.

A) 200 B) 250 C) 300 D) 400

(குறிப்பு: இந்நாயக்குகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் குதிரை, காலாட்படை வீரர்களைப் பராமரித்து தேவைப்படும் நேரத்தில் அரசருக்கு இராணுவச் சேவை செய்ய வற்புறுத்தப்பட்டார்கள் எனவும் நூனிஸ் குறிப்பிடுகின்றார்.)

  1. விஜயநகர பேரரசின் நாயக்க முறை பற்றிய நூனிஸின் கூற்றை ___________ என்னும் நூல் உறுதிபடுத்துகிறது.

A) மதுரா விஜயம்

B) ஆமுக்த மால்யதா

C) ராயவாசகமு

D) மனுசரித்ரா

(குறிப்பு: ராயவாசகமு என்பது தெலுங்கு மொழி நூலாகும். இந்நூல் கிருஷ்ணதேவராயரின் காலத்தில் நாயக்க முறை நடைமுறையில் இருந்ததைக் கூறுகிறது.)

  1. கூற்று 1: நாயக்குகள் ஒவ்வொரு ஆண்டிலும் சில குறிப்பிட்ட ஒன்பது நாள் இராமநவமித் திருவிழா போன்ற சமயங்களில் அரசருக்குக் குறிப்பிட்ட வருவாயை வழங்க வேண்டும்.

கூற்று 2: கிருஷ்ணதேவராயரிடம் பணிபுரிந்த செல்லப்பா போன்ற மிகச்சிறந்த நாயக்குகள் பிராமணர்கள் ஆவர்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: பெரும்பாலான நாயக்குகள் கன்னட, தெலுங்கு போர்த் தளபதிகளாகவும் இருந்தனர்.)

  1. ____________ நூற்றாண்டு பெரும் நாயக்க அரசுகளின் நூற்றாண்டாகும்.

A) 15 B) 16 C) 17 D) 18

(குறிப்பு: நாயக்குகள் நாயக்தானம் எனப்பட்ட தங்களின் பகுதிகளில் உற்பத்தியைக் கட்டுப்படுத்தினர். பேட்டை எனும் வணிக மையங்களை நிறுவினர்.)

  1. கூற்று 1: பாமினி அரசவைகளில் நடைபெற்ற மோதல்களுக்குத் தக்காணப் பகுதிகளில் துருக்கியர், ஆப்கானியர், பாரசீகர் ஆகியோர் குடியேறியதே காரணமாயிற்று.

கூற்று 2: விஜயநகரப் பகுதிகளைப் பொறுத்த அளவில் கன்னட, தெலுங்கு போர் மரபுச் சமூகங்களும் அவர்களைச் சேர்ந்தோரும் தமிழகப் பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் குடியேறினர்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

  1. ட்டின் மையப்பகுதிகளில் ஒரு கிளர்ச்சி நடைபெற்றது

காரணம்: அரசு பிரதானி (ஆளுநர்) அவருடைய படைவீரர்கள் மற்றும் நிலப்பிரபுக்கள் உட்பட நியாயத்திற்குப் புறம்பாக அதிக வரி கட்டும்படி மக்களை வற்புறுத்தியதன் காரணமாக இக்கிளர்ச்சி ஏற்பட்டது.

A) கூற்று சரி மற்றும் காரணம் தவறு

B) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

C) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை

(குறிப்பு: சங்கம வம்ச அரசர்களின் காலத்தில் விஜயநகரத்தின் ஆட்சி புதிய பகுதிகளுக்குப் பரவியபோது வரிவசூல் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதால் உழைக்கும் மக்கள் கிளர்ச்சி செய்ததாகக் தெரிகிறது.)

  1. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

1. பதினாறாம் நூற்றாண்டில், நாயக்க நிர்வாக முறையில் நாயக்குகள் நெசவு போன்ற கைவினைத் தொழில்களை வளர்ப்பதற்காக அவ்வப்போது வரிச்சலுகை வழங்கினர்.

2. விஜயநகர அரசின் காலத்தில் வேளாண் சாராத கைவினைத்தொழில் உற்பத்தி வியத்தகு வளர்ச்சியை அடைந்தது.

3. வேளாண் அல்லாத பிரிவுகளை சார்ந்த பட்டடை அல்லது காஸய வர்க்கம் என்றழைக்கப்பட்டவர்கள் வரிகளைப் பணமாகவே வழங்கினர்.

4. தமிழகத்தின் வட பகுதி, ராயலசீமை, ஆந்திரக் கடற்கரைப்பகுதி ஆகியவற்றில் பெரும் எண்ணிக்கையில் வணிக மையங்களும் நெசவு மையங்களும் உருவாயின.

A) 1, 2 தவறு

B) 3 மட்டும் தவறு

C) 2, 4 தவறு

D) எதுவுமில்லை

(குறிப்பு: பதினாறாம் நூற்றாண்டிலிருந்து ஜவுளி வணிகமானது இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசியர் மற்றும் ஏனைய ஐரோப்பிய வணிகர்களைப் பெரிதும் ஈர்த்த ஒன்றாகும்.)

  1. எந்த இரு பகுதிகளிடையே இடைப்படு நாடாகப் புதுக்கோட்டை இருந்தது

A) சோழ மற்றும் விஜயநகர அரசுகள்

B) சோழ மற்றும் பாண்டிய அரசுகள்

C) சேர மற்றும் பாண்டிய அரசுகள்

D) சோழ மற்றும் சேர அரசுகள்

(குறிப்பு: புதுக்கோட்டை ஒரு சிறிய சிற்றரசாக மதுரை மற்றும் தஞ்சாவூர் நாயக்க அரசுகளின் இடையில் அமைந்திருந்தது.)

  1. இராமநாதபுரம் சிற்றரசு மதுரை நாயக்க அரசர் முத்துகிருஷ்ணப்ப நாயக்கரால் ____________நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் துவக்கிவைக்கப்பட்டது.

A) 15 B) 16 C) 17 D) 18

(குறிப்பு: போர்புரியும் மரபினைக் கொண்டிருந்த இப்பகுதி வாழ் மக்கள் பாண்டிய சோழ விஜயநகர அரசர்களிடம் படை வீரர்களாக பணியாற்றினர்.)

  1. இராமேஸ்வரம் கோயில் ___________ என்பவரின் பாதுகாப்பின் கீழிருந்தது.

A) நாயக்கர்கள்

B) அறங்காவலர்கள்

C) உடையான் சேதுபதி

D) பாண்டியர்கள்

(குறிப்பு: உடையான் சேதுபதி என்பதற்கு இராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீர் இணைப்பின் அல்லது பாலத்தின் தலைவர் என்று பொருள்.)

  1. சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. இராமநாதபுரம் பகுதி வாழ் மக்களைப் போலவே புதுக்கோட்டை பகுதி வாழ் மக்களும் போர்புரியும் மரபை சார்ந்தவர்களாவர்.

2. இதன் காரணமாகவே தொண்டைமான்களின் தலைமையில் புதுக்கோட்டை ஒரு சிற்றரசு என்னும் மதிப்பை பெற்றது.

3. இத்தொண்டைமான்கள் சேதுபதி, மதுரை, தஞ்சை நாயக்க அரசர்களின் அரண்மனைகளில் முக்கிய பணிகளில் பணியாற்றினர்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 4 சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!