Science Questions

10th Std Science Lesson Wise Questions in Tamil – Part 3

10th Science Lesson 16 Questions in Tamil

16] தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

1. ஹார்மோன் என்னும் சொல் கீழ்க்கண்ட எம்மொழிச்சொல்லிளிருந்து உருவானது.

A) இலத்தின்

B) ஸ்பானிஷ்

C) கிரேக்கம்

D) பிரெஞ்சு

விளக்கம்: ‘கிளர்ச்சி’ என்ற பொருள்படும் ‘ஹார்மன்’ என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து ‘ஹார்மோன்’ என்னும் சொல் உருவாகியது.

2. கூற்று (i): தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் சில வேதிப்பொருட்கள் தாவரங்களில் கட்டுப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளைச் செய்கின்றன. இவை தாவர ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கூற்று(ii): தாவரங்களின் பல்வேறு செல்கள் தாவர ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்துள்ளதால் இத்தாவர ஹார்மோன்கள் பல்வேறு விதமான வாழ்வியல் செயல்பாடுகளைச் செய்வதற்காக தாவரங்களின் பல பாகங்களுக்கும் கடத்தப்படுகின்றன.

A) கூற்று i சரி, ii இரண்டு தவறு

B) கூற்று i தவறு, ii இரண்டு சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

3. முதுகெலும்புள்ள விலங்குகளில் பல்வேறு செயல்பாடுகளை வேதியியல் ஒருங்கிணைப்பு மூலம் பராமரிப்பது.

A) நாளமுள்ள சுரப்பிகள்

B) நாளமில்லா சுரப்பிகள்

C) கொழுப்புகள்

D) புரதங்கள்

விளக்கம்: முதுகெலும்புள்ள விலங்குகளில் நாளமில்லா சுரப்பிகள் பல்வேறு செயல்பாடுகளை வேதியியல் ஒருங்கிணைப்பு மூலம் பாராமரிக்கின்றன.

4. உடற்செயலியல் செயல்களான செரித்தல், வளர்ச்சி, இனப்பெருக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துவது.

A) கொழுப்புகள்

B) புரதங்கள்

C) வைட்டமின்கள்

D) ஹார்மோன்கள்

விளக்கம்: உடற்செயலியல் செயல்களான செரித்தல், வளர்ச்சி, இனப்பெருக்கம் போன்றவற்றை ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன.

5. பொருத்துக:

A) வேதியியல் தூதுவர்கள் – 1. வளர்ச்சி

B) கேனரி புல் – 2. செல் பகுப்பைக் கட்டுபடுத்துதல்

C) ஜிப்ரல்லிக் அமிலம் – 3. ஃபலாரிஸ் கனாரியன்ஸிஸ்

D) ஆக்ஸின் – 4. ஹார்மோன்கள்

A) 1 2 3 4

B) 4 3 2 1

C) 2 1 3 4

D) 1 2 4 3

விளக்கம்:

A) வேதியியல் தூதுவர்கள் – 1. ஹார்மோன்கள்

B) கேனரி புல் – 2. ஃபலாரிஸ் கனாரியன்ஸிஸ்

C) ஜிப்ரல்லிக் அமிலம் – 3. செல் பகுப்பைக் கட்டுபடுத்துதல்

D) ஆக்ஸின் – 4. வளர்ச்சி

6. கூற்று (i): தாவரங்களில் குறைவற்ற செறிவில் உற்பத்தி செய்யப்படும் கரிம மூலக்கூறுகளே ‘தாவர ஹார்மோன்கள்’ ஆகும்.

கூற்று (ii): இம்மூலக்கூறுகள் புறத்தோற்றம், செயலியல் மற்றும் உயிர் வேதியியல் பதில் விளைவுகளைக் கட்டுப்படுத்துகின்றன.

A) கூற்று i சரி, ii தவறு

B) கூற்று i தவறு, ii சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: தாவரங்களில் குறைவான செறிவில் உற்பத்தி செய்யப்படும் கரிம மூலக்கூறுகளே ‘தாவர ஹார்மோன்கள்’ ஆகும். இம்மூலக்கூறுகள் புறத்தோற்றம், செயலியல் மற்றும் உயிர் வேதியியல் பதில் விளைவுகளைக் கட்டுப்படுத்துகின்றன.

7. தாவர ஹார்மோன்களின் வகைகள்____________

A) மூன்று

B) நான்கு

C) ஐந்து

D) ஆறு

விளக்கம்: ஐந்து வகையான முக்கிய தாவர ஹார்மோன்கள் உள்ளன. அவை – ஆக்சின்கள், சைட்டோகைனின்கள், ஜிப்ரல்லின்கள், அப்சிசிக் அமிலம் (ABA) மற்றும் எத்திலின் ஆகியவையாகும்.

8. கீழ்க்கண்டவற்றுள் தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் தாவர ஹார்மோன்களுடன் பொருந்தாதது எது.

A) ஆக்சின்கள்

B) ஜிப்ரல்லின்கள்

C) சைட்டோகைனின்கள்

D) அப்சிசிக் அமிலம்

விளக்கம்: ஆக்சின்கள், ஜிப்ரல்லின்கள் மற்றும் சைட்டோகைனின்கள் போன்றவை தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன்களாகும். அதே வேளையில் அப்சிசிக் அமிலம் மற்றும் எத்திலின் போன்றவை தாவர வளர்ச்சியை தடை செய்யும் ஹார்மோன்களாகும்.

9. கீழ்க்கண்டவற்றுள் தாவரங்களின் வளர்ச்சியை தடை செய்யும் ஹார்மோன்களை கண்டறி.

A) ஆக்ஸின்

B) அப்சிசிக் அமிலம்

C) எத்திலின்

D) B, C இரண்டும்

விளக்கம்: ஆக்சின்கள், ஜிப்ரல்லின்கள் மற்றும் சைட்டோகைனின்கள் போன்றவை தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன்களாகும். அதே வேளையில் அப்சிசிக் அமிலம் மற்றும் எத்திலின் போன்றவை தாவர வளர்ச்சியை தடை செய்யும் ஹார்மோன்களாகும்.

10. பொருத்துக:

A) தண்டு நீட்சியைக் கட்டுப்படுத்துதல் – 1. ஆக்சின்

B) இளம் கனிகளின் வளர்ச்சி – 2. எத்திலின்

C) கனிகள் பழுப்பதைத் தூண்டுதல் – 3. ஆக்சின் (ம) ஜிப்ரல்லின்

D) வேர்களின் புவி நாட்டம் – 4. சைட்டோகைனின்கள்

A) 1 2 3 4

B) 3 4 2 1

C) 2 1 3 4

D) 1 2 4 3

விளக்கம்:

A) தண்டு நீட்சியைக் கட்டுப்படுத்துதல் – 1. ஆக்சின் (ம) ஜிப்ரல்லின்

B) இளம் கனிகளின் வளர்ச்சி – 2. சைட்டோகைனின்கள்

C) கனிகள் பழுப்பதைத் தூண்டுதல் – 3. எத்திலின்

D) வேர்களின் புவி நாட்டம் – 4. ஆக்சின்

11. பொருத்துக:

A) செல் பகுப்பைக் கட்டுப்படுத்துதல் – 1. சைட்டோகைனின்கள்

B) இலைத்துளை மூடுதல் – 2. எத்திலின்

C) உதிர்தல் பகுதி உருவாதல் – 3. ஆக்சின்

D) உதிர்தலைத் தடுத்தல் – 4. அப்சிசிக் அமிலம்

A) 1 2 3 4

B) 3 4 2 1

C) 2 1 3 4

D) 1 4 2 3

விளக்கம்:

A) செல் பகுப்பைக் கட்டுப்படுத்துதல் – 1. சைட்டோகைனின்கள்

B) இலைத்துளை மூடுதல் – 2. அப்சிசிக் அமிலம்

C) உதிர்தல் பகுதி உருவாதல் – 3. எத்திலின்

D) உதிர்தலைத் தடுத்தல் – 4. ஆக்சின்

12. தாவர ஹார்மோன்களில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஹார்மோன்__________

A) ஆக்சின்

B) ஜிப்ரல்லின்

C) சைட்டோகைனின்

D) அப்சிசிக் அமிலம

விளக்கம்: ஐந்து வகையான முக்கிய தாவர ஹார்மோன்கள் உள்ளன. அவை- ஆக்சின்கள், சைட்டோகைனின்கள், ஜிப்ரல்லின்கள், அப்சிசிக் அமிலம்(ABA) மற்றும் எத்திலின் ஆகியவையாகும். இவற்றுள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தாவர ஹார்மோன் ஆக்சின் ஆகும்.

13. ஆக்சின் என்ற சொல்லை அறிமுகம் செய்தவர்கள்_____________

A) டார்வின் மற்றம் ஹாஜன் ஸ்மித்

B) கால் மற்றும் ஹாஜன் ஸ்மித்

C) ஹாஜன் ஸ்மித்

D) கால்

விளக்கம்: ஆக்சின் என்ற சொல்லை கால் மற்றும் ஹாஜன்ஸ்மித்(1931) ஆகியோர் அறிமுகம் செய்தனர். ஆக்சின்கள் வேர் மற்றம் தண்டின் நுனியில் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து அவை நீட்சிப் பகுதிக்கு நகர்கின்றன.

14. கேனரி புல் தாவரத்தில் முளைக்குருத்து உறையானது ஒளியின் திசையை நோக்கி வளர்வதையும், வளைவதையும் கண்டறிந்தவர்___________

A) ஹாஜன் ஸ்மித்

B) சார்லஸ் ப்ரௌன்

C) சார்லஸ் டார்வின்

D) கால்

விளக்கம்: சார்லஸ் டார்வின் கேனரி புல் (ஃபலாரிஸ் கனாரியன்ஸிஸ்) தாவரத்தில் முளைக்குருத்து உறையானது ஒளியின் திசையை நோக்கி வளர்வதையும், வளைவதையும் கண்டறிந்தார். அவர் முளைக்குருத்து உறையின் நுனியிலிருந்து அடிப்பகுதிக்கு ஒரு விதமான ‘ஆதிக்கப் பொருள்’ கடத்தப்படுகிறது என்ற முடிவுக்கு வந்தார்.

15. தாவரங்களில் ஆக்சின் இருப்பதையும், அதன் விளைவுகளைவும் விளக்கியவர்_________

A) ஹாஜன் ஸ்மித்

B) சார்லஸ் ப்ரௌன்

C) சார்லஸ் டார்வின்

D) ஃபிரிட்ஸ் வார்மால்ட் வெண்ட்

விளக்கம்: ஃபிரிட்ஸ் வார்மால்ட் வெண்ட்(1903-1990) என்ற டச்சு நாட்டு உயிரியல் அறிஞர் தாவரங்களில் ஆக்சின் இருப்பதையும், அதன் விளைவுகளையும் விளக்கினார். இதற்காக அவர் அவினா முளைக்குருத்து உறையில் வரிசைக்கிரமமான பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

16. ஃபிரிட்ஸ் வார்மால்ட் வெண்ட்டின் ஆய்வுகள் பற்றிய கருத்துக்களுல் தவறானதைக் கண்டறி.

A) இவர் தன் முதல் ஆய்வில் அவினா தாவரத்தின் முளைக்குருத்து உறையின் நுனியை நீக்கினார். நுனி நீக்கப்பட்ட முளைக்குருத்து உறை வளரவில்லை என்பதை உணர்ந்தார். இது வளர்ச்சிக்குத் தேவையான ஏதோ ஒரு பொருள் முளைக்குருத்து உறையின் நுனியிலிருந்து உருவாக்கப்பட்டது என்பதைக் காட்டியது.

B) தன் இரண்டாவது ஆய்வில் அகார் துண்டை, நுனி நீக்கப்பட்ட முளைக்குருத்து உறையின் மீது வைத்தார். முளைக்குருத்து உறைநுனி எவ்வித பதில் விளைவையும் காட்டவில்லை.

C) தன் மூன்றாவது ஆய்வில் முளைக்குருத்து உறையின் நுனியை வெட்டி எடுத்து, அதனை அகார் துண்டத்தின் மீது வைத்தார். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் நுனியை நீக்கிவிட்டு, அகார் துண்டத்தை நுனி நீக்கப்பட்ட முளைக்குருத்து உறையின் மீது வைத்தார். அது நேராக வளர்ந்தது.

D) இந்த ஆய்வானது முளைக்குருத்து உறையின் நுனியில் இருந்து அகார் துண்டத்தின் ஊடுருவி சென்ற ஏதோ ஒரு ஊட்டச்சத்துப் பொருள்தான் வளர்ச்சியைத் தூண்டியது என்பதைக் காட்டியது.

விளக்கம்: இந்த ஆய்வானது முளைக்குருத்து உறையின் நுனியில் இருந்து அகார் துண்டத்தின் ஊடுருவி சென்ற ஏதோ ஒரு வேதிப்பொருள் தான் வளர்ச்சியைத் தூண்டியது என்பதைக் காட்டியது.

17. முளைக்குருத்து உறையின் நுனியிலிருந்து அடிப்பகுதிக்கு கடத்தப்படும் ஒரு விதமான ஆதிக்கப் பொருளுக்கு ஆக்சின் என பெயரிட்டவர்.

A) ஹாஜன் ஸ்மித்

B) ஃபிரிட்ஸ் வார்மால்ட் வெண்ட்

C) சார்லஸ் டார்வின்

D) சார்லஸ் ப்ரௌன்

விளக்கம்: முளைக்குருத்து உறையின் நுனியிலிருந்து அடிப்பகுதிக்கு ஒரு விதமான ஆதிக்கப் பொருள் கடத்தப்படுகிறது. அவ்வாறு கடத்தப்படும் வேதிப்பொளுக்கு ஆக்சின் என்ற பெயரிட்டவர் வெண்ட் ஆவார். ஆக்சின் என்பதன் பொருள் வளர்ச்சி ஆகும்.

18. ஆக்சின்களின் வாழ்வியல் விளைவுகளுடன் பொருந்தாததைக் கண்டறி:

A) ஆக்சின்கள் தண்டு மற்றும் முளைக்குருத்தின் நீட்சியை ஊக்குவித்து, அவற்றை வளரச் செய்கின்றன.

B) மிக அதிக செறிவில் ஆக்சின்கள் வேர் உருவாதலைத் தூண்டுகின்றன. குறைந்த செறிவில் வேர் உருவாதலைத் தடை செய்கின்றன.

C) நுனி மொட்டுகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சின்கள் பக்கவாட்டு மொட்டுகளின் வளர்ச்சியை தடை செய்கின்றன. இதற்க நுனி ஆதிக்கம் என்று பெயர்.

D) ஆக்சின்கள் உதிர்தல் அடுக்கு உருவாதலைத் தடை செய்கின்றன.

விளக்கம்: குறைந்த செறிவில் ஆக்சின்கள் வேர் உருவாதலைத் தூண்டுகின்றன. அதிக செறிவில் வேர் உருவாதலைத் தடை செய்கின்றன.

19. கருவுருதல் நடைபெறாமலேயே விதையிலாக் கனிகள் உருவாக தெளிக்கப்படும் தாவர ஹார்மோன்______________

A) அப்சிசிக் அமிலம்

B) ஜிப்ரல்லின்

C) எத்திலின்

D) ஆக்சின்

விளக்கம்: ஆக்சின்களைத் தெளிப்பதால் கருவுருதல் நடைபெறாமலேயே விதையிலாக் கனிகள் உருவாதல் தூண்டப்படுகிறது. இதற்கு கருவுறாக்கனியாதல் என்று பெயர்.

20. கீழ்க்கண்டவற்றுள் கருவுறாக்கனியாதலுடன் தொடர்பிள்ளாதது எது.

A) தர்பூசனி

B) எலுமிச்சை

C) திராட்சை

D) மா

விளக்கம்: ஆக்சின்களைத் தெளிப்பதால் கருவுருதல் நடைபெறாமலேயே விதையிலாக் கனிகள் உருவாதல் தூண்டப்படுகிறது. இதற்கு கருவுறாக்கனியாதல் என்று பெயர். அவற்றுள் சில தர்பூசனி, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்றவையாகும்.

21. கீழ்க்கண்டவற்றுள் இயற்கை ஆக்சின்கள் அல்லாதது எது.

A) பினைல் அசிடிக் அமிலம் (PAA)

B) இண்டோல் 3 அசிடோ நைட்ரல் (IAN)

C) இண்டோல் 3 பியூட்ரிக் அமிலம் (IBA)

D) புரோப்பியானிக் அமிலம்

22. கீழ்க்கண்டவற்றுள் செயற்கை ஆக்சின்கள் அல்லாதது எது.

A) புரோப்பியானிக் அமிலம்

B) நாப்தலின் அசிடிக் அமிலம் (NAA)

C) 2, 4, 5 – ட்ரைகுளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம்

D) பினைல் அசிட்டிக் அமிலம்

23. சைட்டோகைனின் பற்றிய கூற்றுக்களுல் சரியானதைத் தேர்ந்தெடு.

1) இவை முதலில் ஹெர்ரிங் மீனின் விந்து செல்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டன.

2) தாவர செல்களில் செல் பகுப்பு அல்லது சைட்டோகைனசிஸ் நிகழ்வை ஊக்குவிக்கும் தாவர ஹார்மோன்களே சைட்டோகைனின்கள் ஆகும்.

3) சியா மெய்ஸ்(மக்காச்சோளம்) தாவரத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சைட்டோகைனின் சியாட்டின் ஆகும்.

4) சைட்டோகைனின் முற்றிய தேங்காயில் அதிகமாக காணப்படுகிறது.

A) 1, 2 மட்டும் சரி

B) 1, 2, 3 மட்டும் சரி

C) 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: சைட்டோகைனின் தேங்காயின் இளநீரில் அதிகமாக காணப்படுகிறது. இவை முதலில் ஹெர்ரிங் மீனின் விந்து செல்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டன. தாவர செல்களில் செல் பகுப்பு அல்லது சைட்டோகைனசிஸ் நிகழ்வை ஊக்குவிக்கும் தாவர ஹார்மோன்களே சைட்டோகைனின்கள் ஆகும். சியாட்டின் என்பது சியா மெய்ஸ்(மக்காச்சோளம்) தாவரத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சைட்டோகைனின் ஆகும்.

24. சைட்டோகைனின்களின் வாழ்வியல் விளைவுகளுல் சரியானதைக் கண்டறி.

1) ஆக்சின்கள் இருக்கும்போது சைட்டோகைனின்கள் செல்பகுப்பைத் (சைட்டோகைனிஸ்) தூண்டுகின்றன.

2) சைட்டோகைனின்கள் செல்களை நீட்சியடையச் செய்கின்றன.

3) நுனி மொட்டு இருக்கும்போதே பக்கவாட்டு மொட்டின் வளர்ச்சியை சைட்டோகைனின்கள் தடைசெய்கின்றன.

A) அனைத்தும் சரி

B) 3 மட்டும் சரி

C) 1, 2 மட்டும் சரி

D) அனைத்தும் தவறு

விளக்கம்: நுனி மொட்டு இருக்கும்போதே பக்கவாட்டு மொட்டின் வளர்ச்சியை சைட்டோகைனின்கள் ஊக்குவிக்கின்றன. ஆக்சின்கள் இருக்கும்போது சைட்டோகைனின்கள் செல்பகுப்பைத் (சைட்டோகைனிஸ்) தூண்டுகின்றன. சைட்டோகைனின்கள் செல்களை நீட்சியடையச் செய்கின்றன.

25. திசு வளர்ப்பு முறையில் காலஸில் இருந்து புதிய உறுப்புகள் தோன்ற தேவைப்படுவது________

A) ஆக்சின்கள்

B) சைட்டோகைனின்கள்

C) அப்சிசிக் அமிலம்

D) A, B இரண்டும்

விளக்கம்: திசு வளர்ப்பு முறையில் காலஸில் இருந்து புதிய உறுப்புகள் தோன்ற ஆக்சின்களும் சைட்டோகைனின்களும் தேவைப்படுகின்றன. இதற்கு உருவத்தோற்றவியல் என்று பெயர்.

26. தாவரங்கள் முதுமையடைவதைத் தாமதப்படுத்தப் பயன்படுவது_____________

A) ஆக்சின்கள்

B) சைட்டோகைனின்கள்

C) அப்சிசிக் அமிலம்

D) ஜிப்ரல்லின்கள்

விளக்கம்: சைட்டோகைனின்களைப் பயன்படுத்தும்போது தாவரங்கள் முதுமையடைவது தாமதப்படுத்தப்படுகிறது. இதற்கு ரிச்மாண்ட் லாங்க் விளைவு(Richmond Lang effect) என்று பெயர்

27. பொருத்துக:

A) இன்டோல் 3 அசிட்டிக் அமிலம் – 1. ரிச்மாண்ட் லாங்க் விளைவு

B) 2, 4 டைகுளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம் – 2. மக்காச்சோளம்

C) சியா மெய்ஸ் – 3. செயற்கை ஆக்சின்

D) தாவரங்கள் முதுமையடைவதை தாமதப்படுத்தல் – 4. இயற்கை ஆக்சின்

A) 1 2 3 4

B) 4 3 2 1

C) 2 1 3 4

D) 1 4 2 3

விளக்கம்:

A) இன்டோல் 3 அசிட்டிக் அமிலம் – 1.இயற்கை ஆக்சின்

B) 2, 4 டைகுளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம் – 2. செயற்கை ஆக்சின்

C) சியா மெய்ஸ் – 3. மக்காச்சோளம்

D) தாவரங்கள் முதுமையடைவதை தாமதப்படுத்தல் – 4. ரிச்மாண்ட் லாங்க் விளைவு

28. தாவரங்களில் அதிக அளவு காணப்படும் ஹார்மோன்____________

A) ஆக்சின்கள்

B) சைட்டோகைனின்கள்

C) அப்சிசிக் அமிலம்

D) ஜிப்ரல்லின்கள்

விளக்கம்: ஜிப்ரல்லின்களே அதிக அளவு காணப்படும் தாவர ஹார்மோன்களாகும். குருசோவா (1926) நெல் பயிரில் ‘பக்கானே நோய்’ அல்லது ‘கோமாளித்தன நோயை’ கண்டறிந்தார். நெல்லின் கணுவிடைப் பகுதியின் இத்தகைய நீட்சி ஜிப்ரில்லா பியூஜிகுராய் என்னும் பூஞ்சையால் ஏற்பட்டது. இதற்கு காரணமான செயல்திறன் வாய்ந்த பொருள் ஜிப்ரல்லிக் அமிலம் என அடையாளம் காணப்பட்டது.

29. ஜிப்ரல்லின்களின் வாழ்வியல் விளைவுகள் பற்றிய கூற்றுகளுல் தவறானதைக் கண்டறி.

1) தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும்போது, அது கணுப்பகுதுயின் அசாதாரண நீட்சியைத் தூண்டுகிறது.

2) ஜிப்ரல்லின்கள் உருளைக் கிழங்கின் உறக்க நிலையை நீக்குகின்றன.

3) விதைகளற்ற கனிகளைத் (கருவுறாக்கனிகள்-கருவுருதல்) தூண்டுவதில் ஆக்சின்களைவிட ஜிப்ரல்லின்கள் திறன் மிக்கவை. எ.கா. தக்காளி.

A) 1 மட்டும் தவறு

B) 2, 3 மட்டும் தவறு

C) அனைத்தும் தவறு

D) அனைத்தும் சரி

விளக்கம்: தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும்போது, அது கணுவிடைப்பகுதுயின் அசாதாரண நீட்சியைத் தூண்டுகிறது. ஜிப்ரல்லின்கள் உருளைக் கிழங்கின் உறக்க நிலையை நீக்குகின்றன. விதைகளற்ற கனிகளைத் (கருவுறாக்கனிகள்-கருவுருதல்) தூண்டுவதில் ஆக்சின்களைவிட ஜிப்ரல்லின்கள் திறன் மிக்கவை. எ.கா. தக்காளி.

30. நெருங்கிய இலையடுக்கம் கொண்ட தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும் போது ஏற்புடும் தண்டு நீட்சி மற்றும் மலர்தலுக்கு___________என்று பெயர்.

A) மோல்டிங்

B) போல்டிங்

C) ரிச்மாண்ட் லாங்க் விளைவு

D) சீல்டிங்

விளக்கம்: நெருங்கிய இலையடுக்கம் கொண்ட தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும் போது, திடீரென தண்டு நீட்சியடைவதும் அதன் தொடர்ச்சியாக மலர்தலும் நிகழ்கின்றன. இதற்கு போல்டிங் என்று பெயர்.

31. இருபாலிணைந்த தாவரங்களில் ஆண் மலர்கள் தோன்றுவதை ஊக்குவிப்பது_________

A) ஆக்சின்கள்

B) சைட்டோகைனின்கள்

C) ஜிப்ரல்லின்கள்

D) அப்சிசிக் அமிலம்

விளக்கம்: ஜிப்ரல்லின்கள் இருபாலிணைந்த தாவரங்களில் (ஓரில்லத் தாவரங்களில்) ஆண் மலர்கள் தோன்றுவதை ஊக்குவிக்கின்றன. (வெள்ளரி)

32. தாவரங்களில் உதிர்தல் மற்றும் உறக்க நிலையை ஒழுங்குபடுத்தும் வளர்ச்சி அடக்கி___________

A) ஆக்சின்கள்

B) அப்சிசிக் அமிலம்

C) ஜிப்ரல்லின்கள்

D) சைட்டோகைனின்கள்

விளக்கம்: அப்சிசிக் அமிலம்(ABA) உதிர்தல் மற்றும் உறக்க நிலையை ஒழுங்குபடுத்தும் வளர்ச்சி அடக்கி ஆகும். இது பல்வேறு வகையான இறுக்க நிலைகளுக்கு எதிராக தாவரங்களின் சகிப்புத் தன்மையை அதிகரிக்கிறது. எனவே இது ‘இறுக்கநிலை ஹார்மோன்’ என அழைக்கப்படுகிறது.

33. தாவரங்களின் பசுங்கணிகங்களில் காணப்படும் ஹார்மோன்_________

A) அப்சிசிக் அமிலம்

B) ஆக்சின்கள்

C) ஜிப்ரல்லின்கள்

D) சைட்டோகைனின்கள்

34. அப்சிசிக் அமிலத்தின் வாழ்வியல் விளைவுகள் பற்றிய கருத்துகளுல் தவறானதைக் கண்டறி

A) அப்சிசிக் அமிலம் உதிர்தல் நிகழ்வை (இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் ஆகியவை கிளையிலிருந்து தனித்து உதிர்ந்து விடுவது) தடைசெய்கிறது.

B) நீர் இறுக்கம் மற்றும் வறட்சிக் காலங்களில் அப்சிசிக் அமிலம் இலைத் துளையை மூடச் செய்கிறது.

C) குளிர்காலங்களின் போது பிர்ச் போன்ற மரங்களில், அப்சிசிக் அமிலம் மொட்டு உறக்கத்தைத் தூண்டுகிறது.

D) தக்காளி தாவரத்தில், அப்சிசிக் அமிலம் பக்கவாட்டு வளர்ச்சி அடக்கி ஆகும்.

விளக்கம்: அப்சிசிக் அமிலம் உதிர்தல் நிகழ்வை (இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் ஆகியவை கிளையிலிருந்து தனித்து உதிர்ந்து விடுவது ஊக்குவிக்கிறது. நீர் இறுக்கம் மற்றும் வறட்சிக் காலங்களில் அப்சிசிக் அமிலம் இலைத் துளையை மூடச் செய்கிறது. குளிர்காலங்களின் போது பிர்ச் போன்ற மரங்களில், அப்சிசிக் அமிலம் மொட்டு உறக்கத்தைத் தூண்டுகிறது. தக்காளி தாவரத்தில், அப்சிசிக் அமிலம் பக்கவாட்டு வளர்ச்சி அடக்கி ஆகும்.

35. கீழ்க்கண்டவற்றுள் இறுக்கநிலை ஹார்மோன் எனப்படுவது எது.

A) ஆக்சின்கள்

B) சைட்டோகைனின்கள்

C) ஜிப்ரல்லின்கள்

D) அப்சிசிக் அமிலம்

36. கூற்று (i): எத்திலின் ஒரு வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன். இது ஒரு வளர்ச்சி தூண்டும் ஹார்மோன் ஆகும்.

கூற்று (ii): எத்திலின் கனிகள் முதிர்ச்சியடைவதிலும் பழுப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. ஆப்பிள், வாழை, தர்பூசனி போன்ற தாவரங்களில் கனிகள் பழுக்கும் போது அதிக அளவு எத்திலின் உற்பத்தியாகிறது.

A) கூற்று i சரி, கூற்று ii தவறு

B) கூற்று i தவறு, கூற்று ii சரி

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

விளக்கம்: எத்திலின் ஒரு வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன். இது ஒரு வளர்ச்சி அடக்கி ஆகும். எத்திலின் கனிகள் முதிர்ச்சியடைவதிலும் பழுப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. ஆப்பிள், வாழை, தர்பூசனி போன்ற தாவரங்களில் கனிகள் பழுக்கும் போது அதிக அளவு எத்திலின் உற்பத்தியாகிறது.

37. எத்திலின் வாழ்வியல் விளைவுகள் பற்றிய கூற்றுக்களுல் பொருந்தாததைக் காண்க.

A) எத்திலின் கனிகள் பழுப்பதை ஊக்குவிக்கிறது. எ.கா. தக்காளி, ஆப்பிள், மா, வாழை.

B) எத்திலின் இலைகள் மற்றும் மலர்கள் மூப்படைவதை தாமதப்படுத்துகிறது.

C) எத்திலின் இலைகள், மலர்கள் மற்றும் கனிகளில் உதிர்தல் அடுக்கு உற்பத்தியாவதைத் தூண்டுகிறது. இதனால் இவை முதிர்ச்சி அடையும் முன்னரே உதிர்ந்துவிடுகின்றன.

D) எத்திலின் மொட்டுகள், விதைகளின் உறக்கத்தை நீக்குகிறது.

விளக்கம்: எத்திலின் இலைகள் மற்றும் மலர்கள் மூப்படைவதை விரைவுப்படுத்துகிறது. எத்திலின் கனிகள் பழுப்பதை ஊக்குவிக்கிறது. எ.கா. தக்காளி, ஆப்பிள், மா, வாழை. எத்திலின் இலைகள், மலர்கள் மற்றும் கனிகளில் உதிர்தல் அடுக்கு உற்பத்தியாவதைத் தூண்டுகிறது. இதனால் இவை முதிர்ச்சி அடையும் முன்னரே உதிர்ந்துவிடுகின்றன. எத்திலின் மொட்டுகள், விதைகளின் உறக்கத்தை நீக்குகிறது.

38. இருவிதையிலைத் தாவரங்களில் வேர் மற்றும் தண்டு நீட்சி அடைவதைத் தடைச் செய்யும் தாவர ஹார்மோன்_____________

A) ஆக்சின்கள்

B) சைட்டோகைனின்கள்

C) எத்திலின்

D) அப்சிசிக் அமிலம்

39. கூற்று (i): விலங்கினங்களில் நாளமுள்ள சுரப்பிகள் மற்றும் நாளமில்லாச் சுரப்பிகள் என் இருவகையான சுரப்பிகள் காணப்படுகின்றன.

கூற்று (ii): நாளமில்லாச் சுரப்பிகள் மனிதரிலும், விலங்குகளின் உடலிலும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன. இவற்றில் நாளங்கள் இல்லாததால் நாளமில்லாச் சுரப்பிகள் என அழைக்கப்படுகின்றன.

A) கூற்று i சரி, கூற்று ii தவறு

B) கூற்று i தவறு, கூற்று ii சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

40. நாளமில்லாச் சுரப்பிகள் சுரப்பது____________

A) புரதங்கள்

B) கொழுப்புகள்

C) ஹார்மோன்கள்

D) பிளாஸ்மா

விளக்கம்: நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் பொருளுக்கு ஹார்மோன்கள் என்று பெயர். மிகக் குறைவான அளவு சுரக்கும் இவை, இரத்தத்தில் பரவுவதன் மூலம் உடலின் தொலைதூர பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவை குறிப்பிட்ட உறுப்புகளில் செயல்படுகின்றன. இத்தகைய உறுப்புகள் இலக்கு உறுப்புகள் என குறிப்பிடப்படுகின்றன.

41. என்டோகிரைனாலஜி என்பது____________

A) நாளமுல்ல சுரப்பி மண்டலம் மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றிய உயிரியல் பிரிவு.

B) நாளமில்லாச் சுரப்பி மண்டலம் மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றிய உயிரியல் பிரிவு.

C) உறுப்பு மண்டலங்கள் மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றிய உயிரியல் பிரிவு.

D) உயிரினங்கள் மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றிய உயிரியல் பிரிவு.

42. நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் தந்தை எனப்படுபவர்___________

A) தாமஸ் ஆல்வா எடிசன்

B) தாமஸ் அடிசன்

C) டி மோரிசன்

D) டார்வின்

43. ஹார்மோன் என்ற சொல்லை 1909-ம் ஆண்டு முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள்.

A) W.H. பேய்லிஸ்

B) B.V. வெண்ட்

C) E.H. ஸ்டார்லிங்

D) A, C இரண்டும்

44. முதன்முதலில் கண்டறிந்த ஹார்மோன்__________

A) பிட்யூட்டரி

B) தைராக்சின்

C) அட்ரினலின்

D) செக்ரிடின்

45. கீழ்க்கண்டவற்றுள் நாளமுள்ள சுரப்புபொருளுடன் பொருந்தாதது__________

A) உமிழ் நீர் சுரப்பிகள்

B) பால் சுரப்பிகள்

C) வியர்வை சுரப்பிகள்

D) தைராக்சின்

விளக்கம்: நாளமுள்ள சுரப்பிகள் சுரக்கும் பொருளினை எடுத்துச் செல்ல நாளங்கள் உள்ளன. எ.கா. உமிழ் சுரப்பிகள், பால் சுரப்பிகள், வியர்வை சுரப்பிகள்.

46. கீழ்க்கண்டவற்றுள் நாளமில்லா சுரப்புபொருளுடன் பொருந்தாதது__________

A) பிட்யூட்டரி சுரப்பி

B) தைராய்டு சுரப்பி

C) பாரா தைராய்டு சுரப்பி

D) உமிழ் நீர் சுரப்பி

விளக்கம்: மனிதரிலும் பிற முதுகெலும்பிகளிலும் காணப்படும் நாளமில்லாச் சுரப்பிகள் பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி, பாரா தைராய்டு சுரப்பி, கணையம், அட்ரினல் சுரப்பி, இனப்பெருக்க சுரப்பிகள் மற்றும் தைமஸ் சுரப்பி போன்றவை நாளமில்லாச் சுரப்பிகள் ஆகும்.

47. பிட்யூட்டரி சுரப்பி அல்லது ஹைப்போபைஸிஸ் கீழ்க்கண்ட எந்த வடிவம் கொண்டது.

A) அவரை விதை வடிவம்

B) பட்டாணி வடிவம்

C) சிறுநீரக வடிவம்

D) மேற்கண்ட எதுமில்லை

விளக்கம்: பிட்யூட்டரி சுரப்பி அல்லது ஹைப்போபைஸிஸ் பட்டாணி வடிவிலான திரட்சியான செல்களின் தொகுப்பாகும்.

48. பிட்யூட்டரி சுரப்பி பற்றிய கூற்றுகளுல் பொருந்தாததைத் தேர்ந்தெடு.

A) பிட்யூட்டரி சுரப்பியானது மூளையின் அடிப்பகுதியில் டயன்செபலானின் கீழ்ப்புறத்தில் ஹைபோதலாமசுடன், பிட்யூட்டரி தண்டின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

B) பிட்யூட்டரி சுரப்பியானது நான்கு கதுப்புகளைக் கொண்டது. மேலும் அவை வெவ்வேறு செயல்பாடுகளை செய்கின்றன.

C) முன்புற கதுப்பு அடினோஹைப்போபைசிஸ் எனவும் பின்புற கதுப்பு நியூரோஹைப்போபைசிஸ் எனவும் அழைக்கப்படுகிறது.

D) இடைக்கதுப்பு மனிதர்களில் இல்லை.

விளக்கம்: பிட்யூட்டரி சுரப்பியானது இரண்டு கதுப்புகளைக் கொண்டது. மேலும் அவை வெவ்வேறு செயல்பாடுகளை செய்கின்றன. பிட்யூட்டரி சுரப்பியானது மூளையின் அடிப்பகுதியில் டயன்செபலானின் கீழ்ப்புறத்தில் ஹைபோதலாமசுடன், பிட்யூட்டரி தண்டின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. முன்புற கதுப்பு அடினோஹைப்போபைசிஸ் எனவும் பின்புற கதுப்பு நியூரோஹைப்போபைசிஸ் எனவும் அழைக்கப்படுகிறது. இடைக்கதுப்பு மனிதர்களில் இல்லை.

49. தலைமை சுரப்பி என்றழைக்கப்படுவது__________

A) பிட்யூட்டரி சுரப்பி

B) அட்ரினலின் சுரப்பி

C) தைராக்சின் சுரப்பி

D) கணையம்

விளக்கம்: பெரும்பாலான முதுகெலும்புகளில் பிட்யூட்டரி சுரப்பி ஒரு முதன்மையான சுரப்பியாகும். இது பிற நாளமில்லாச் சுரப்பிகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதால் ‘தலைமை சுரப்பி’ என்றும் அழைக்கப்படுகிறது.

50. பொருத்துக:

A) அடினோ ஹைப்போபைசிஸ் – 1. பிட்யூட்டரி சுரப்பி

B) நியூரோ ஹைப்போபைசிஸ் – 2. லாங்கர்கான் திட்டுகள்

C) தலைமை சுரப்பி – 3. பிட்யூட்டரியின் முன் கதுப்பு

D) கணையம் – 4. பிட்யூட்டரியின் பின் கதுப்பு

A) 1 2 3 4

B) 3 4 1 2

C) 2 1 3 4

D) 1 4 2 3

விளக்கம்:

A) அடினோ ஹைப்போபைசிஸ் – 1. பிட்யூட்டரியின் முன் கதுப்பு

B) நியூரோ ஹைப்போபைசிஸ் – 2. பிட்யூட்டரியின் பின் கதுப்பு

C) தலைமை சுரப்பி – 3. பிட்யூட்டரி சுரப்பி

D) கணையம் – 4. லாங்கர்கான் திட்டுகள்

51. கூற்று (i): பிட்யூட்டரியின் முன் கதுப்பு பல்வேறு வகையான செல்களால் ஆக்கப்பட்டது. மேலும் இப்பகுதி பிற நாளமுள்ள சுரப்பிகளைத் தூண்டும் பலவகையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

கூற்று (ii): வளர்ச்சி ஹார்மோன், தைராய்டைத் தூண்டும் ஹார்மோன், அட்ரினோ கார்ட்டிக்கோட்ராயிக் ஹார்மோன், கொனாடோட்ராபிக் ஹார்மோன் மற்றும் புரோலாக்டின் ஆகியவை பிட்யூட்டரியின் முன் கதுப்பு சுரக்கும் ஹார்மோன்களாகும்.

A) கூற்று i சரி, கூற்று ii தவறு

B) கூற்று i தவறு, கூற்று ii சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: பிட்யூட்டரியின் முன் கதுப்பு பல்வேறு வகையான செல்களால் ஆக்கப்பட்டது. மேலும் இப்பகுதி பிற நாளமில்லாச் சுரப்பிகளைத் தூண்டும் பலவகையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. வளர்ச்சி ஹார்மோன், தைராய்டைத் தூண்டும் ஹார்மோன், அட்ரினோ கார்ட்டிக்கோட்ராயிக் ஹார்மோன், கொனாடோட்ராபிக் ஹார்மோன் மற்றும் புரோலாக்டின் ஆகியவை பிட்யூட்டரியின் முன் கதுப்பு சுரக்கும் ஹார்மோன்களாகும்.

52. உடல் திசுக்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்தை ஊக்குவிக்கும் ஹார்மோன்____________

A) தைராய்டு ஹார்மோன்

B) ப்ரோலாக்டின்

C) வளர்ச்சி ஹார்மோன்

D) கொனாடோட்ராபிக் ஹார்மோன்

விளக்கம்: வளர்ச்சி ஹார்மோன் என்பது உடல் திசுக்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்தை ஊக்குவிக்கிறது. தசைகள் குருத்தெலும்பு மற்றும் எலும்புகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இது செல்களின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது.

53. பொருத்துக: (பிட்யூட்டரி சுரப்பின் தன்மை)

A) மனவளர்ச்சி குறைபாடு – 1. பெரியவர்களில் அதிகபடியான வளர்ச்சி

B) மிகையான வளர்ச்சி – 2. குழந்தைகளில் குறைவான சுரப்பு

C) அக்ரோமெகாலி – 3. அசுரத்தன்மை

A) 1 2 3

B) 2 1 3

C) 2 3 1

விளக்கம்:

A) மனவளர்ச்சி குறைபாடு – 1. குழந்தைகளில் குறைவான சுரப்பு

B) மிகையான வளர்ச்சி – 2. அசுரத்தன்மை

C) அக்ரோமெகாலி – 3. பெரியவர்களில் அதிகபடியான வளர்ச்சி

54. தைராய்டு சுரப்பியின் வளர்ச்சியை கட்டுபடுத்தி அதன் செயல்களையும் ஹார்மோன் சுரத்தலையும் ஒருங்கிணைப்பது___________

A) GH

B) TSH

C) FSH

D) GTH

55. அட்ரினல் புறணியில் நடைபெறும் புரத உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவது.

A) அட்ரினோகார்ட்டிக்கோட்ராபிக் ஹார்மோன்

B) அட்ரினல் புறணியைத் தூண்டும் ஹார்மோன்

C) கொனடோட்ராபிக் ஹார்மோன்

D) A, B இரண்டும்

விளக்கம்: அட்ரினோகார்ட்டிக்கோட்ராபிக் ஹார்மோன் அல்லது அட்ரினல் புறணியைத் தூண்டும் ஹார்மோன் அட்ரினல் சுரப்பியின் புறணியைத் தூண்டி, ஹார்மோன்களை சுரக்கச் செய்யும் மேலும் அட்ரினல் புறணியில் நடைபெறும் புரத உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

56. இயல்பான இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சிக்கு காரணமான ஹார்மோன்_____________

A) அட்ரினோகார்ட்டிக்கோட்ராபிக் ஹார்மோன்

B) பாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன்

C) லூட்டினைசிங் ஹார்மோன்

D) கொனடோட்ராபிக் ஹார்மோன்

விளக்கம்: ஃபாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன் மற்றும் லூட்டினைசிங் ஹார்மோன் ஆகிய இரு கொனடோட்ராபிக் ஹார்மோன்களும் இயல்பான இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சிக்கு காரணமாகின்றன.

57. ஆண்களில் விந்தகங்களின் எபிதீலியத்தை தூண்டுவதன் மூலம் விந்தணுக்கள் உருவாக்கத்திற்கு காரணமான ஹார்மோன்____________

A) அட்ரினோகார்ட்டிக்கோட்ராபிக் ஹார்மோன்

B) பாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன்

C) லூட்டினைசிங் ஹார்மோன்

D) கொனடோட்ராபிக் ஹார்மோன்

விளக்கம்: பாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன் ஆண்களில் விந்தகங்களின் எபிதீலியத்தை தூண்டுவதன் மூலம் விந்தணுக்கள் உருவாக்கத்திற்கும், பெண்களின் அண்டச் சுரப்பியினுள் அண்டச் செல்கள் வளர்ச்சி அடைவதை ஊக்குவிப்பதற்கும் காரணமாகிறது.

58. ஆண்களில் லீடிக் செல்கள் தூண்டப்படுவதன் மூலம் ஆண் இனப்பெருக்க ஹார்மோனான டெஸ்டோஸ்டிரான் சுரக்க காரணமாகும் ஹார்மோன்___________

A) அட்ரினோகார்ட்டிக்கோட்ராபிக் ஹார்மோன்

B) பாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன்

C) லூட்டினைசிங் ஹார்மோன்

D) கொனடோட்ராபிக் ஹார்மோன்

விளக்கம்: லூட்டினைசிங் ஹார்மோனானது ஆண்களில் லீடிக் செல்கள் தூண்டப்படுவதன் மூலம் ஆண் இனப்பெருக்க ஹார்மோனான டெஸ்டோஸ்டிரான் சுரக்க காரணமாகிறது.

59. பெண் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் உருவாக்கத்திற்கு காரணமான ஹார்மோன்________________

A) லூட்டினைசிங் ஹார்மோன்

B) பாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன்

C) அட்ரினோகார்ட்டிக்கோட்ராபிக் ஹார்மோன்

D) கொனடோட்ராபிக் ஹார்மோன்

விளக்கம்: லூட்டினைசிங் ஹார்மோனானது பெண்களின் அண்டம் விடுபடும் செயலுக்கும், கார்ப்பஸ் லூட்டியம் வளர்ச்சியடையவும், பெண் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் உருவாக்கத்திற்கும் காரணமாகிறது.

60. பொருத்துக:

A) லாக்டோஜினிக் ஹார்மோன் – 1. அட்ரினலின்

B) சிறுநீர் பெருக்கெதிர் ஹார்மோன் – 2. தைராய்டு

C) பயமுறுத்தும் ஹார்மோன் – 3. புரோலாக்டின்

D) ஆளுமை ஹார்மோன் – 4. வாசோபிரஸ்ஸின்

A) 1 2 3 4

B) 3 4 1 2

C) 2 1 3 4

D) 1 4 2 3

விளக்கம்:

A) லாக்டோஜினிக் ஹார்மோன் – 1. புரோலாக்டின்

B) சிறுநீர் பெருக்கெதிர் ஹார்மோன் – 2. வாசோபிரஸ்ஸின்

C) பயமுறுத்தும் ஹார்மோன் – 3. அட்ரினலின்

D) ஆளுமை ஹார்மோன் – 4. தைராய்டு

61. குழந்தைப் பேறு காலத்தில் பால் சுரப்பியின் வளர்ச்சி மற்றும் குழந்தை பேற்றிற்கு பின் பால் உற்பத்தியை தூண்டும் ஹார்மோன்____________

A) புரோலாக்டின்

B) வாசோபிரஸ்ஸின்

C) அட்ரினலின்

D) தைராய்டு

விளக்கம்: லாக்டோஜெனிக் ஹார்மோன் என்றழைக்கப்படும் புரோலாக்டீன் ஹார்மோன் குழந்தைப் பேறு காலத்தில் பால் சுரப்பியின் வளர்ச்சிக்கும் மற்றும் குழந்தை பேற்றிற்கு பின் பால் உற்பத்தியை தூண்டுவதற்கும் காரணமாகிறது.

62. கீழ்க்கண்டவற்றுள் நியூரோ ஹைப்போபைசிஸ் ஹார்மோனுடன் தொடர்பில்லாதது எது.

A) வாசோபிரஸ்ஸின்

B) ஆன்டிடையூரிட்டிக் ஹார்மோன்(ADH)

C) ஆக்ஸிடோசின்

D) தைராய்டு

63. கீழ்க்கண்ட எந்த ஹார்மோன் குறைவாக சுரப்பதால் டயாபடீஸ் இன்சிபிடஸ் என்ற குறைபாடு ஏற்படுகிறது.

A) இன்சுலின்

B) குளுக்ககான்

C) ஆன்டிடையூரிட்டிக் ஹார்மோன்(ADH)

D) ஆக்ஸிடோசின்

விளக்கம்: சிறுநீரக குழல்களில் நீர் மீள உறிஞ்சப்படுதலை அதிகரிக்கிறது. இதன் காரணமாக சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும் நீர் இழப்பைக் குறைக்கிறது. எனவே இது ஆன்டிடையூரிட்டிக் ஹார்மோன் (சிறுநீர் பெருக்கெதிர் ஹார்மோன்) எனப்படுகிறது. ஆன்டிடையூரிட்டிக் ஹார்மோன் குறைவாக சுரப்பதால் நீர் மீள உறிஞ்சப்படுவது குறைவதால் அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றும் நிலை (பாலியூரியா) உண்டாகிறது. இக்குறைபாடு டையாபடீஸ் இன்சிபிடஸ் எனப்படும்.

64. பெண்களின் குழந்தைப்பேற்றின் போது கருப்பையை சுருக்கி விரிவடையச் செய்து குழந்தைப்பேற்றை எளிமையாக்கும் ஹார்மோன்__________

A) ஆன்டிடையூரிட்டிக் ஹார்மோன்

B) ஆக்ஸிடோசின்

C) புரோலாக்டின்

D) லாக்டோஜெனிக்

65. குழந்தைப்பேற்றுக்கு பிறகு பால் சுரப்பிகளில் பாலை வெளியேற்றுவதற்கு காரணமான ஹார்மோன்_________

A) புரோலாக்டின்

B) ஆக்ஸிடோசின்

C) ஆன்டிடையூரிட்டிக் ஹார்மோன்

D) லாக்டோஜெனிக்

66. காளத் தூதுவர்கள் என்றழைக்கப்படும் ஹார்மோன்_____________

A) புரோலாக்டின்

B) ஆக்ஸிடோசின்

C) மெலட்டோனின்

D) லாக்டோஜெனிக்

விளக்கம்: மெலட்டோனின் என்னும் ஹார்மோன் பினியல் சுரப்பியில் சுரக்கிறது. இந்த ஹார்மோன் காலத் தூதுவர்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் உடல் முழுமைக்கும் இரவு நேரத்தினை உணர்த்தும் பணியை இந்த ஹார்மோன் மேற்கொள்கிறது.

67. கூற்று (i): இரவு நேரங்களில் ஒளி, குறிப்பாக அதிக அலை நீளம் கொண்ட ஒளி படுவதால், மெலட்டோனின் ஹார்மோன் உற்பத்தி குறைகிறது.

கூற்று (ii): மெலட்டோனின் உற்பத்தி குறைவதால் இயற்கையான உறக்கச் சுழற்சி பாதிக்கப்படுகிறது. இதனால் உண்டாகும் உறக்கமின்மையின் காரணமாக வளர்சிதை மாற்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன.

A) கூற்று i தவறு, கூற்று ii சரி

B) கூற்று i சரி, கூற்று ii தவறு

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: இரவு நேரங்களில் ஒளி, குறிப்பாக குறைந்த அலை நீளம் கொண்ட ஒளி படுவதால், மெலட்டோனின் ஹார்மோன் உற்பத்தி குறைகிறது. மெலட்டோனின் உற்பத்தி குறைவதால் இயற்கையான உறக்கச் சுழற்சி பாதிக்கப்படுகிறது. இதனால் உண்டாகும் உறக்கமின்மையின் காரணமாக வளர்சிதை மாற்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன.

68. தைராய்டு சுரப்பு பற்றிய கருத்துக்களுல் தவறானதைக் கண்டறி:

A) தைராய்டு சுரப்பியானது மூச்சுக்குழலின் இரு புறமும் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு கதுப்புகளாக அமைந்துள்ளது.

B) இவ்விரண்டு கதுப்புகளும் இஸ்துமஸ் என்னும் மெல்லிய திசுக் கற்றையால் இணைக்கப்பட்டுள்ளன.

C) இச்சுரப்பியானது பல நுண் கதுப்புகளால் ஆனது. இந்த நுண் கதுப்புகள் தட்டு எபிதிலிய செல்களை சுவராகக் கொண்டுள்ளன.

D) இந்த நுண் கதுப்புகளின் உள்ளே தைரோகுளோபுலின் என்னும் கூழ்மப் பொருள் நிரம்பியுள்ளது.

விளக்கம்: தைராய்டு சுரப்பியானது மூச்சுக்குழலின் இரு புறமும் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு கதுப்புகளாக அமைந்துள்ளது. இவ்விரண்டு கதுப்புகளும் இஸ்துமஸ் என்னும் மெல்லிய திசுக் கற்றையால் இணைக்கப்பட்டுள்ளன. சுரப்பியானது பல நுண் கதுப்புகளால் ஆனது. இந்த நுண் கதுப்புகள் கன சதுர எபிதிலிய செல்களை சுவராகக் கொண்டுள்ளன. இந்த நுண் கதுப்புகளின் உள்ளே தைரோகுளோபுலின் என்னும் கூழ்மப் பொருள் நிரம்பியுள்ளது.

69. தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு காரணமான ஊட்டப்பொருள்_____________

A) டைரோசின்

B) அயோடின்

C) புரோட்டின்

D) A, B இரண்டும்

70. கீழ்க்கண்டவற்றுள் தைராய்டு சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன்களில் அல்லாதது எது.

A) ட்ரைஅயோடோ தைரோனின்(T3)

B) டெட்ராஅயோடோ தைரோனின் (T4)

C) தைராக்சின் (T4)

D) ஆக்ஸிடோசின்

71. கீழ்க்கண்டவற்றுள் தைராய்டு ஹார்மோன்களின் பணிகளுல் பொருந்தாதது எது.

A) அடிப்படை வளர்சிதை மாற்ற வீதத்தை பராமரித்து ஆற்றலை உற்பத்தி செய்கிறது.

B) உடல் வெப்ப நிலையை சமநிலையில் பராமரிக்கிறது.

C) மைய நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளில் பங்கேற்கிறது.

D) உடல் வளர்ச்சி மற்றும் எலும்புகள் உருவாக்கம், ஆகியவற்றைக் தூண்டுகிறது.

விளக்கம்: உடல் வளர்ச்சி மற்றும் எலும்புகள் உருவாக்கம், ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது அடிப்படை வளர்சிதை மாற்ற வீதத்தை பராமரித்து ஆற்றலை உற்பத்தி செய்கிறது. உடல் வெப்ப நிலையை சமநிலையில் பராமரிக்கிறது. மைய நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளில் பங்கேற்கிறது.

72. கீழ்க்கண்டவற்றுள் தைராய்டு ஹார்மோன்களின் பணிகளுல் பொருந்தாதது எது.

1) உடல், மனம் மற்றும் ஆளுமை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது.

2) இது பறக்கும் அல்லது பயமுறுத்தும் ஹார்மோன் எனப்படுகிறது.

3) செல்களில் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது.

A) 1, 3 தவறானது

B) 2 மட்டும் தவறானது

C) 1 மட்டும் தவறானது

D) அனைத்தும் தவறு

73. தைராக்ஸின் ஹார்மோனை 1914 – ம் ஆண்டில் முதன்முறையாக படிக நிலையில் தனித்துப் பிரித்தவர்.

A) எட்வர்ட் C. கெண்டல்

B) சார்லஸ் ஹாரிங்டன்

C) ஜார்ஜ் பார்ஜர்

D) தாமஸ் அடிசன்

74. தைராக்சின் ஹார்மோனின் மூலக்கூறு அமைப்பை 1927 ஆம் ஆண்டில் கண்டறிந்தவர்கள்.

A) எட்வர்ட் C கெண்டல்

B) சார்லஸ் ஹாரிங்டன்

C) ஜார்ஜ் பார்ஜர்

D) B, C இரண்டும்

75. ஒவ்வொரு நாளும் தைராய்டு சுரப்பியானது தைராக்சினைச் சுரக்க தேவைப்படும் அயோடின் அளவு______________

A) 120 மில்லி கிராம்

B) 120 மைக்ரோ கிராம்

C) 120 கிராம்

D) 150 மைக்ரோ கிராம்

76. தைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பதினால் ஏற்படும் குறைபாடுகளுல் அல்லாதது.

A) எளிய காய்டர்

B) கிரிட்டினிசம்

C) மிக்ஸிடிமா

D) கிரேவின் நோய்

விளக்கம்: தைராய்டு ஹார்மோன்களின் குறைவான சுரப்பின் காரணமாக எளிய காய்டர், கிரிட்டினிசம் மற்றும் மிக்ஸிடிமா ஆகியவை போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. இது ஹைபோதைராய்டிசம் என்றும் அழைக்கப்படுகிறது.

77. தைராய்டு சுரப்பி மிகையாக சுரப்பதினால் ஏற்படும் குறைபாடு___________

A) எளிய காய்டர்

B) எக்ஸாப்தல்மிக் காய்டர்

C) கிரிட்டினிசம்

D) மிக்சிடிமா

விளக்கம்: தைராய்டு ஹார்மோன்களின் அதிகரித்த சுரப்பின் காரணமாக கிரேவின் நோய் (எக்ஸாப்தல்மிக் காய்டர்) பெரியவர்களில் உண்டாகிறது. இதன் அறிகுறிகள் துருத்திய கண்கள் (எக்ஸாப்தல்மியா), வளர்சிதை மாற்ற வீதம் அதிகரித்தல், மிகை உடல் வெப்பநிலை, மிகையாக வியர்த்தல், உடல் எடை குறைவு, நரம்புத் தளர்ச்சி ஆகியவையாகும்.

78. கீழ்க்கண்டவற்றுள் கிரேவின் நோய்க்கான அறிகுறிகள்_______________

A) துருத்திய கண்கள்

B) வளர்சிதை மாற்ற வீதம் அதிகரித்தல்

C) மிசை உடல் வெப்பநிலை

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: தைராய்டு ஹார்மோன்களின் அதிகரித்த சுரப்பின் காரணமாக கிரேவின் நோய் (எக்ஸாப்தல்மிக் காய்டர்) பெரியவர்களில் உண்டாகிறது. இதன் அறிகுறிகள் துருத்திய கண்கள் (எக்ஸாப்தல்மியா), வளர்சிதை மாற்ற வீதம் அதிகரித்தல், மிகை உடல் வெப்பநிலை, மிகையாக வியர்த்தல், உடல் எடை குறைவு, நரம்புத் தளர்ச்சி ஆகியவையாகும்.

79. பொருத்துக:

A) ஹைபோதைராய்டிசம் – 1. எக்ஸாப்தல்மியா

B) ஹைபர் தைராய்டிசம் – 2. எக்ஸாப்தல்மிக் காய்டர்

C) கிரேவின் நோய் – 3. தைராய்டு ஹார்மோன்களின் மிகை சுரப்பு

D) துருத்திய கண்கள் – 4. தைராய்டு ஹார்மோன்களின் குறை சுரப்பு

A) 1 2 3 4

B) 3 4 1 2

C) 2 1 3 4

D) 4 3 2 1

விளக்கம்:

A) ஹைபோதைராய்டிசம் – 1. தைராய்டு ஹார்மோன்களின் குறை சுரப்பு

B) ஹைபர் தைராய்டிசம் – 2. தைராய்டு ஹார்மோன்களின் மிகை சுரப்பு

C) கிரேவின் நோய் – 3. எக்ஸாப்தல்மிக் காய்டர்

D) துருத்திய கண்கள் – 4. எக்ஸாப்தல்மியா

80. எளிய காய்டர் கீழ்க்கண்ட எந்த மலைப்பகுதியில் வாழும் மக்களிடையே அதிகமாக காணப்படுகிறது.

A) நீலிகிரி மலைப் பகுதி

B) கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதி

C) மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி

D) இமயமலைப் பகுதி

விளக்கம்: உணவில் தேவையான அளவு அயோடின் இல்லாததால் எளிய காய்டர் ஏற்படுகிறது. இமயமலைப் பகுதியின் பெரும்பான்மையான மக்களிடம் இந்நிலை காணப்படுகிறது. இமயலைப் பகுதி மண் வளத்தில் குறைவான அளவு அயோடின் இருப்பதால் இந்நிலை அங்கு பொதுவாகக் காணப்படுகிறது. கழுத்துப்பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு தைராய்டு சுரப்பி வீங்கி காணப்படும் இந்நிலை எளிய காய்டர் எனப்படும்.

81. குழந்தைகளில் தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பதனால் ஏற்படும் பாதிப்பு____________

A) எளிய காய்டர்

B) எக்ஸாப்தல்மிக் காய்டர்

C) கிரிட்டினிசம்

D) மிக்சிடிமா

விளக்கம்: குழந்தைகளில் குறைவான தைராய்டு ஹார்மோன் சுரப்பால் இந்நிலை ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் குள்ளத்தன்மை, குறைவான மனவளர்ச்சி, குறைபாடான எலும்புகள் வளர்ச்சி ஆகியனவாகும். இவர்களை ‘கிரிட்டின்கள்’ என்று அழைப்பர்.

82. பெரியவர்களில் தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பதனால் ஏற்படும் பாதிப்பு____________

A) எளிய காய்டர்

B) எக்ஸாப்தல்மிக் காய்டர்

C) கிரிட்டினிசம்

D) மிக்சிடிமா

விளக்கம்: இது பெரியவர்களில் தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பதால் ஏற்படுகிறது. இதன் காரணமாக குறைவான மூளை செயல்பாடு, முகம் உப்பிய அல்லது வீங்கிய தோற்றம். உடல் எடை அதிகரிப்பு ஆகியவை தோன்றும்.

83. குழந்தைகளுக்கு கிரிட்டினசத்தினால் ஏற்படும் அறிகுறி___________

A) குள்ளத்தன்மை

B) குறைவான மனவளர்ச்சி

C) குறைபாடான எலும்புகள் வளர்ச்சி

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: குழந்தைகளில் குறைவான தைராய்டு ஹார்மோன் சுரப்பால் இந்நிலை ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் குள்ளத்தன்மை, குறைவான மனவளர்ச்சி, குறைபாடான எலும்புகள் வளர்ச்சி ஆகியனவாகும். இவர்களை ‘கிரிட்டின்கள்’ என்று அழைப்பர்.

84. பெரியவர்களுக்கு ஏற்படும் மிக்சிடிமா எனும் குறைபாட்டினால் தோன்றும் அறிகுறிகளுல் அல்லாதது.

A) குறைவான மூளை செயல்பாடு

B) முகம் உப்பிய அல்லது வீங்கிய தோற்றம்

C) உடல் எடை அதிகரிப்பு

D) குள்ளத்தன்மை

விளக்கம்: இது பெரியவர்களில் தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பதால் ஏற்படுகிறது. இதன் காரணமாக குறைவான மூளை செயல்பாடு, முகம் உப்பிய அல்லது வீங்கிய தோற்றம். உடல் எடை அதிகரிப்பு ஆகியவை தோன்றும்.

85. பெரியவர்களுக்கு தைராய்டு ஹார்மோன்களின் அதிகரிப்பு சுரப்பினால் தோன்றும் கிரேவின் நோய்க்கான அறிகுறி.

A) துருத்திய கண்கள்.

B) வளர்சிதைமாற்ற வீதம் அதிகரித்தல்

C) மிகை உடல் வெப்பநிலை

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: தைராய்டு ஹார்மோன்களின் அதிகரித்த சுரப்பின் காரணமாக கிரேவின் நோய்(எக்ஸாப்தல்மிக் காய்டர்) பெரியவர்களில் உண்டாகிறது. இதன் அறிகுறிகள், துருத்திய கண்கள்(எக்ஸாப்தல்மியா), வளர்சிதை மாற்ற வீதம் அதிகரித்தல், மிகை உடல் வெப்பநிலை, மிகையாக வியர்த்தல், உடல் எடை குறைவு, நரம்புத் தளர்ச்சி, ஆகியனவாகும்.

86. பாராதைராய்டு சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன்______________

A) புரோலாக்டின்

B) ஆக்ஸிடோசின்

C) பாராதார்மோன்

D) தைராக்ஸின்

விளக்கம்: தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் நான்கு சிறிய வட்ட வடிவிலான பாராதைராய்டு சுரப்பிகள் அமைந்துள்ளன. இச்சுரப்பியின் முதன்மைச் செல்கள் பாராதார்மோன் என்னும் ஹார்மோனை சுரக்கின்றன.

87. பாராதார்மோன் ஹார்மோனின் பணிகளுல் சரியானதைத் தேர்ந்தெடு.

1) மனித உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது.

2) இரத்தித்தில் கால்சியம் அளவை பராமரிப்பதற்காக எலும்பு, சிறுநீரகம் மற்றும் குடல் ஆகியவற்றில் செயலாற்றுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 1, 2 இரண்டும் சரி

D) 1, 2 இரண்டும் தவறு

88. பொருத்துக:

A) எளிய காய்டர் – 1. இன்சுலின் குறைபாடு

B) தைராய்டெக்டமி – 2. நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பி

C) கணையம் – 3. தைராய்டு சுரப்பி அகற்றப்படுதல்

D) டயாபெடிஸ் மெலிடஸ் – 4. அயோடின் குறைபாடு

A) 1 2 3 4

B) 3 4 1 2

C) 2 1 3 4

D) 4 3 2 1

விளக்கம்:

A) எளிய காய்டர் – 1. அயோடின் குறைபாடு

B) தைராய்டெக்டமி – 2. தைராய்டு சுரப்பி அகற்றப்படுதல்

C) கணையம் – 3. நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பி

D) டயாபெடிஸ் மெலிடஸ் – 4. இன்சுலின் குறைபாடு

89. பாராதைராய்டு சுரப்பியில் சுரக்கும் பாராதார்மோன் ஹார்மோன் குறைவாக சுரப்பதால் ஏற்படும் குறைபாடுகளுல் சரியானதைத் தேர்ந்தெடு.

1) தசை இறுக்கம் எனப்படும் டெட்டனி ஏற்படுதல்(முகம், குரல்வளை, கைகள் மற்றும் பாதங்கள் ஆகியவற்றின் தசைகள் இறுக்கமடைதல்).

2) கால் தசைகளில் வலியுடன் கூடிய தசைபிடிப்பு உண்டாதல் ஆகிய நிலைகள் ஏற்படுகின்றன.

A) 1, 2 இரண்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 1 மட்டும் சரி

D) 1, 2 இரண்டும் தவறு

90. இரைப்பைக்கும் டியோடினத்திற்கும் இடையில், மஞ்சள் நிறத்தில் நீள் வாட்டத்தில் காணப்படும் சுரப்பி___________

A) கல்லீரல்

B) தைராய்டு

C) கணையம்

D) அட்ரினல்

விளக்கம்: கணையம் இரைப்பைக்கும் டியோடினத்திற்கும் இடையில், மஞ்சள் நிறத்தில் நீள் வாட்டத்தில் காணப்படும் சுரப்பியாகும். இது நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பியாக இரு வழிகளிலும் பணிபுரிகிறது.

91. கீழ்க்கண்டவற்றுள் உணவு செரித்தலில் முக்கிய பங்காற்றுவது__________

A) கல்லீரல் நீர்

B) பித்த நீர்

C) கணைய நீர்

D) உமிழ் நீர்

விளக்கம்: கணையத்தின் நாளமுள்ள பகுதி கணைய நீரை சுரக்கிறது. இஃது உணவு செரித்தலில் முக்கிய பங்காற்றுகிறது. நாளமில்லாச் சுரப்பு பகுதியானது லாங்கர்ஹான் திட்டுகள் எனப்படுகிறது.

92. மனித இன்சுலின் ஹார்மோனை 1921 ல் முதன் முதலில் கண்டறிந்தவர்கள்.

A) ஃபிரெட்ரிக் பான்டிங்

B) சார்லஸ் பெஸ்ட்

C) மெக்லாட்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: மனித இன்சுலின் ஹார்மோன் 1921 ஆம் ஆண்டில் ஃபிரெட்ரிக் பான்டிங், சார்லஸ் பெஸ்ட் மற்றும் மெக்லாட் ஆகியோரால் முதன் முதலில் கண்டறியப்பட்டது.

93. முதன்முதலில் நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்காக இன்சுலின் பயன்படுத்தப்பட்ட நாள்.

A) 1922 ஜனவரி 22

B) 1922 ஜனவரி 11

C) 1923 ஜனவரி 11

D) 1923 ஜனவரி 12

விளக்கம்: 1922 ஆம் ஆண்டு ஜனவரி 11 ந்தேதி அன்று முதன்முதலில் நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்காக இன்சுலின் பயன்படுத்தப்பட்டது.

94. கூற்று (i): லாங்கர்ஹான் திட்டுகள் ஆல்ஃபா செல்கள் மற்றும் பீட்டா செல்கள் என்னும் இருவகை செல்களைக் கொண்டுள்ளன.

கூற்று (ii): ஆல்ஃபா செல்கள், இன்சுலின் என்னும் ஹார்மோனையும் பீட்டா செல்கள், குளுக்கோகான் ஹார்மோனையும் சுரக்கின்றன.

A) கூற்று i தவறு, கூற்று ii சரி

B) கூற்று i சரி, கூற்று ii தவறு

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: லாங்கர்ஹான் திட்டுகள் ஆல்ஃபா செல்கள் மற்றும் பீட்டா செல்கள் என்னும் இருவகை செல்களைக் கொண்டுள்ளன. ஆல்ஃபா செல்கள் குளுக்கோகான் என்னும் ஹார்மோனையும் பீட்டா செல்கள் இன்சுலின் ஹார்மோனையும் சுரக்கின்றன.

95. இன்சுலின் ஹார்மோன்களின் பணிகளுல் பொருந்தாதது எது.

A) குளுக்கோஸைக் கிளைக்கோஜனாக மாற்றிக் கல்லீரலிலும் தசைகளிலும் சேமிக்கிறது.

B) செல்களுக்குள் குளுக்கோஸ் செல்வதை ஊக்குவிக்கிறது.

C) இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.

D) இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது.

விளக்கம்: குளுக்கோஸைக் கிளைக்கோஜனாக மாற்றிக் கல்லீரலிலும் தசைகளிலும் சேமிக்கிறது. செல்களுக்குள் குளுக்கோஸ் செல்வதை ஊக்குவிக்கிறது. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.

96. குளுக்கோகான் ஹார்மோன்களின் பணிகளுல் சரியானதைத் தேர்ந்தெடு.

1) கல்லீரலில் கிளைக்கோஜன் குளுக்கோஸாக மாற்றம் அடைய உதவுகிறது.

2) இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது.

3) இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.

A) 1, 3 மட்டும் சரி

B) 1, 2 மட்டும் சரி

C) 1 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

97. பொருத்துக:

A) பாலியூரியா – 1. அடிக்கடி தாகம் எடுத்தல்

B) பாலிடிப்சியா – 2. அடிக்கடி சிறுநீர் கழித்தல்

C) பாலிஃபேஜியா – 3. அதிகப்படியான குளுக்கோஸ் வெளியேறுதல்

D) கிளைக்கோசூரியா – 4. அடிக்கடி பசி எடுத்தல்

A) 1 2 3 4

B) 3 4 1 2

C) 2 1 4 3

D) 4 3 2 1

விளக்கம்:

A) பாலியூரியா – 1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்

B) பாலிடிப்சியா – 2. அடிக்கடி தாகம் எடுத்தல்

C) பாலிஃபேஜியா – 3. அடிக்கடி பசி எடுத்தல்

D) கிளைக்கோசூரியா – 4. அதிகப்படியான குளுக்கோஸ் வெளியேறுதல்

98. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது___________

A) கிளைக்கோசூரியா

B) ஹைபர்கிளைசீமியா

C) பாலிடிப்சியா

D) பாலியூரியா

99. ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேல்புறத்திலும் அமைந்துள்ள சுரப்பி____________

A) கணையம் சுரப்பி

B) தைராய்டு சுரப்பி

C) பிட்யூட்டரி சுரப்பி

D) அட்ரினல் சுரப்பி

விளக்கம்: ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேற்புறத்திலும் அட்ரினல் சுரப்பிகள் அமைந்துள்ளன. இவை சிறுநீரக மேற்சுரப்பிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

100. பொருத்துக:

A) டெட்டனி – 1. இன்சுலின்

B) ஆல்ஃபா செல்கள் – 2. அட்ரினலின்

C) பீட்டா செல்கள் – 3. குளுக்கோகான்

D) சுப்ராரீனல் சுரப்பி – 4. தசை இறுக்கம்

A) 1 2 3 4

B) 3 4 1 2

C) 2 1 4 3

D) 4 3 1 2

விளக்கம்:

A) டெட்டனி – 1. தசை இறுக்கம்

B) ஆல்ஃபா செல்கள் – 2. குளுக்கோகான்

C) பீட்டா செல்கள் – 3. இன்சுலின்

D) சுப்ராரீனல் சுரப்பி – 4. அட்ரினலின்

101. கீழ்க்கண்டவற்றுள் அட்ரினல் சுரப்பி பற்றிய கூற்றுகளுல் சரியானதைத் தேர்ந்தெடு.

1) அட்ரினல் சுரப்பியின் வெளிப்புறப் பகுதி அட்ரினல் மெடுல்லா என்றும் உட்புறப்பகுதி அட்ரினல் கார்டெக்ஸ் என்றும் அழைக்கப்படும்.

2) அட்ரினல் கார்டெக்ஸில் சுரக்கும் ஹார்மோன்கள் கார்ட்டிகோஸ்டீராய்டுகள் எனப்படுகின்றன.

3) அட்ரினல் கார்டெக்ஸ் மூவகையான செல் அடுக்குகளால் ஆனது. அவை சோனா குளாமருலோசா, சோனா ஃபாஸிகுலேட்டா மற்றும் சோனா கார்ட்டிகோஸ்டீராய்டுகள் ஆகும்.

4) அட்ரினல் மெடுல்லா குரோமாஃபின் செல்களாலானது. இப்பகுதி பரிவு மற்றும் எதிர்பரிவு நரம்புகள் நிறைந்து காணப்படுகிறது.

விளக்கம்: அட்ரினல் சுரப்பியின் வெளிப்புறப் பகுதி அட்ரினல் கார்டெக்ஸ் என்றும் உட்புறப்பகுதி அட்ரினல் மெடுல்லா என்றும் அழைக்கப்படும். அட்ரினல் கார்டெக்ஸில் சுரக்கும் ஹார்மோன்கள் கார்ட்டிகோஸ்டீராய்டுகள் எனப்படுகின்றன. அட்ரினல் கார்டெக்ஸ் மூவகையான செல் அடுக்குகளால் ஆனது. அவை சோனா குளாமருலோசா, சோனா ஃபாஸிகுலேட்டா மற்றும் சோனா கார்ட்டிகோஸ்டீராய்டுகள் ஆகும். அட்ரினல் மெடுல்லா குரோமாஃபின் செல்களாலானது. இப்பகுதி பரிவு மற்றும் எதிர்பரிவு நரம்புகள் நிறைந்து காணப்படுகிறது.

102. அட்ரினல் கார்டெக்ஸ் சுரக்கும் ஹார்மோன்கள்____________

A) குளுக்கோகார்ட்டிகாய்டுகள்

B) மினரலோக்கார்டிகாய்டுடகள்

C) செனட்டோட்ரோபிக்

D) A, B இரண்டும்

103. குளுக்கோகார்ட்டிகாய்டுகள் ஹார்மோன்களின் பணிகளுல் பொருந்தாதது எது.

A) சோனா பாஸிகுலேட்டாவில் சுரக்கும் குளுக்கோகார்ட்டிகாய்டுகள் கார்ட்டிசோல் மற்றும் கார்ட்டிகோஸ்டிரான்களாகும்.

B) இது செல்களில் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது.

C) கல்லீரலில் கிளைக்கோஜனை, குளுக்கோஸாக மாற்றுவதைத் கட்டுப்படுத்துகிறது

D) இது அழற்சி மற்றும் ஒவ்வாமை தடுப்புப் பொருளாகச் செயல்படுகிறது.

104. மினரலோக்கார்ட்டிகாய்டுகளின் பணிகளுல் தவறானதைக் கண்டறி:

A) சோனா குளாமருலோசாவில் உள்ளே மினரலோக்கார்டிகாய்டுகள் சுரக்கும் ஹார்மோன் ஆல்டோஸ்டிரான்.

B) சிறுநீரகக் குழல்களில் சோடியம் அயனிகளை மீள உறிஞ்சுதலுக்கு உதவுகிறது.

C) அதிகமான கால்சியம் அயனிகளை வெளியேற்றக் காரணமாகிறது.

D) மின்பகு பொருட்களின் சமநிலை, நீர்ம அளவு சவ்வூடு பரவல் அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம், ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது.

105. அட்ரினல் மெடுல்லா சுரக்கும் ஹார்மோன்கள்__________

A) எபிநெஃப்ரின் (அட்ரினலின்)

B) நார் எபிநெஃப்ரின் (நார் அட்ரினலின்)

C) குளுக்கோகார்ட்டிகாய்டுகள்

D) A, B இரண்டும்

106. அவசர கால ஹார்மோன்கள் எனப்படுவது_____________

A) எபிநெஃப்ரின் (அட்ரினலின்)

B) குளுக்கோகார்ட்டிகாய்டுகள்

C) நார் எபிநெஃப்ரின் (நார் அட்ரினலின்)

D) A, C இரண்டும்

விளக்கம்: அட்ரினலின் மற்றும் நார் அட்ரினலின் ஆகிய இரண்டு ஹார்மோன்களும் பொதுவாக ‘அவசர கால ஹார்மோன்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அதனால் இவை மன அழுத்தம் மற்றும் உணர்ச்சி வசப்படும் காலங்களில் உற்பத்தியாகின்றன. எனவே இந்த ஹார்மோன்கள் சண்டை, பயமுறுத்தம் அல்லது பறக்கும் ஹார்மோன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

107. பொருத்துக:

A) அட்ரினலின் – 1. நார் அட்ரினலின்

B) நார் எபிநெஃப்ரின் – 2. அட்ரினலின்

C) சண்டை ஹார்மோன் – 3. கார்ட்டிசோல்

D) உயிர் காக்கும் ஹார்மோன் – 4. எபிநெஃப்ரின்

A) 1 2 3 4

B) 3 4 1 2

C) 2 1 4 3

D) 4 1 2 3

விளக்கம்:

A) அட்ரினலின் – 1. எபிநெஃப்ரின்

B) நார் எபிநெஃப்ரின் – 2. நார் அட்ரினலின்

C) சண்டை ஹார்மோன் – 3. அட்ரினலின்

D) உயிர் காக்கும் ஹார்மோன் – 4. கார்ட்டிசோல்

108. கார்ட்டிசோல் ஹார்மோனை சுரப்பது______________

A) அட்ரினல் மெடுல்லா

B) அட்ரினல் கார்டெக்ஸ்

C) எபிநெஃப்ரின்

D) நார் எபிநெஃப்ரின்

விளக்கம்: அட்ரினல் கார்டெக்ஸ் சுரக்கும் ‘கார்ட்டிசோல்’ ஹார்மோன்கள் உடலை உயிர்ப்பு நிலையில் வைத்திருக்கவும், மிகுந்த பாதிப்பு மற்றும் மன அழுத்தங்களிலிருந்து மீண்டு வரவும் உதவுகிறது. கார்ட்டிசோல் என்பது உயிர் காக்கும் பணியை மிகுந்த அழுத்த நிலைகளில் மேற்கொள்கிறது. எனவே இது ‘உயிர் காக்கும் ஹார்மோன்’ என்றும் அழைக்கப்படுகிறது.

109. அட்ரினலின் மெடுல்லா சுரக்கும் அட்ரினலின் ஹார்மோன்களின் பணிகளுல் தவறானதைக் கண்டறி:

A) கல்லீரல் மற்றும் தசைகளில் உள்ள கிளைக்கோஜனை குளுக்கோஸாக மாற்றுவதை ஊக்குவிக்கின்றது.

B) மூச்சுக்குழல் மற்றும் மூச்சுச் சிற்றறை ஆகியவற்றை விரிவடையச் செய்வதன் மூலம் சுவாச வீதத்தை அதிகரிக்கச் செய்கிறது.

C) கண் பாவையை விரிவடையச்செய்கிறது.

D) தோலினடியில் செல்லும் இரத்த ஓட்டத்தைக் அதிகரிக்கிறது.

விளக்கம்: தோலினடியில் செல்லும் இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. கல்லீரல் மற்றும் தசைகளில் உள்ள கிளைக்கோஜனை குளுக்கோஸாக மாற்றுவதை ஊக்குவிக்கின்றது. மூச்சுக்குழல் மற்றும் மூச்சுச் சிற்றறை ஆகியவற்றை விரிவடையச் செய்வதன் மூலம் சுவாச வீதத்தை அதிகரிக்கச் செய்கிறது. கண் பாவையை விரிவடையச்செய்கிறது.

110. இதயதுடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஹார்மோன்_____________

A) எபிநெஃப்ரின்

B) நார் எபிநெஃப்ரின்

C) அட்ரினலின்

D) A, C இரண்டும்

111. கீழ்க்கண்டவற்றுள் விந்தக செல்லுடன் தொடர்பில்லாதது எது.

A) செமினிஃபெரல் குழல்கள்

B) லீடிக் செல்கள்

C) செர்டோலி செல்கள்

D) கிராஃபியன் செல்கள்

விளக்கம்: விந்தகம் ஆண்களின் இனப்பெருக்க சுரப்பியாகும். விந்தகம் செமினிஃபெரல் குழல்கள், லீடிக் செல்கள் மற்றும் செர்டோலி செல்களைக் கொண்டுள்ளது.

112. டெஸ்டோஸ்டீரான் என்னும் ஆண் இனப்பெருக்க ஹார்மோனை சுரக்கும் செல்

A) செமினிஃபெரல் குழல்கள்

B) லீடிக் செல்கள்

C) செர்டோலி செல்கள்

D) கிராஃபியன் செல்கள்

விளக்கம்: லீடிக் செல்கள் நாளமில்லாச் சுரப்பியாக செயல்படுகின்றன. இவை டெஸ்டோஸ்டீரான் என்னும் ஆண் இனப்பெருக்க ஹார்மோனை சுரக்கின்றன.

113. கீழ்க்கண்டவற்றில் டெஸ்டோஸ்டீரானின் பணிகளுல் பொருந்தாததைத் தேர்ந்தெடு.

1) விந்து செல் உற்பத்தியில் பங்கேற்கிறது.

2) கொழுப்பு உற்பத்தியினைத் தூண்டி தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

3) இரண்டாம் நிலை பால் பண்புகளின் (உடல் மற்றும் முகத்தில் ரோமங்கள் வளர்தல், குரலில் ஏற்படும் மாற்றம் போன்றவை) வளர்ச்சிக்குக் காரணம் ஆகிறது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 1, 3 மட்டும் தவறு

D) 1, 2 மட்டும் தவறு

விளக்கம்: டெஸ்டோஸ்டீரான் புரத உற்பத்தியினைத் தூண்டி தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. விந்து செல் உற்பத்தியில் பங்கேற்கிறது. இரண்டாம் நிலை பால் பண்புகளின் (உடல் மற்றும் முகத்தில் ரோமங்கள் வளர்தல், குரலில் ஏற்படும் மாற்றம் போன்றவை) வளர்ச்சிக்குக் காரணம் ஆகிறது.

114. பெண் இனப்பெருக்க சுரப்பியான அண்டகத்தில் சுரக்கும் ஹார்மோன்களை கண்டறி.

A) ஈஸ்ட்ரோஜன்

B) டெஸ்டோஸ்டீரான்

C) புரோஜெஸ்டிரான்

D) A, C இரண்டும்

115. வளர்ச்சியுறும் அண்டத்தின் கிராஃபியன் செல்களினால் சுரக்கப்படும் ஹார்மோன்__________

A) ஈஸ்ட்ரோஜன்

B) டெஸ்டோஸ்டீரான்

C) புரோஜெஸ்டிரான்

D) நெப்ரின்

116. அண்டம் விடுபடும்போது பிரியும் ஃபாலிக்கிள்கள் உருவாக்கும் கார்ப்பஸ் லூட்டியத்தில் உற்பத்தியாகும் ஹார்மோன்_____________

A) ஈஸ்ட்ரோஜன்

B) டெஸ்டோஸ்டீரான்

C) புரோஜெஸ்டிரான்

D) நெப்ரின்

117. கீழ்க்கண்டவற்றுள் ஈஸ்ட்ரோஜனின் பணிகளுல் பொருந்தாததைத் தேர்ந்தெடு.

A) இது பருவமடைதலின் உடல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

B) அண்ட செல் உருவாக்கத்தைத் துவக்குகிறது.

C) அண்ட பாலிக்கிள் செல்கள் முதிர்வடைவதைத் தூண்டுகிறது.

D) முதல் நிலை பால் பண்புகள் வளர்ச்சியடைவதை ஊக்குவிக்கிறது.

விளக்கம்: இரண்டாம் நிலை பால் பண்புகள் (மார்பக வளர்ச்சி, குரலில் ஏற்படும் மாற்றம் போன்றவை) வளர்ச்சியடைவதை ஊக்குவிக்கிறது. அண்ட பாலிக்கிள் செல்கள் முதிர்வடைவதைத் தூண்டுகிறது. அண்ட செல் உருவாக்கத்தைத் துவக்குகிறது. இது பருவமடைதலின் உடல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

118. கீழ்க்கண்டவற்றுல் புரோஜெஸ்ட்ரானின் பணிகளுல் பொருந்தாததைத் தேர்ந்தெடு.

A) கருப்பையில் நடைபெறும் பின் மாதவிடாய் கால மாற்றங்களுக்குக் காரணமாக உள்ளது.

B) கரு பதிவதற்கு கருப்பையை தயார் செய்கிறது.

C) கர்ப்ப காலத்தினைப் பராமரிக்கிறது.

D) தாய்-சேய் இணைப்புத்திசு உருவாவதற்கு அவசியமாகிறது.

விளக்கம்: கருப்பையில் நடைபெறும் முன் மாதவிடாய் கால மாற்றங்களுக்குக் காரணமாக உள்ளது. கரு பதிவதற்கு கருப்பையை தயார் செய்கிறது. கர்ப்ப காலத்தினைப் பராமரிக்கிறது. தாய்-சேய் இணைப்புத்திசு உருவாவதற்கு அவசியமாகிறது.

119. கீழ்க்கண்டவற்றுள் நாளமில்லாச் சுரப்பியாகவும் நிணநீர் உறுப்பாகவும் செயல்படும் சுரப்பி_____________

A) அட்ரினல் சுரப்பி

B) பாராதைராய்டு சுரப்பி

C) தைமஸ் சுரப்பி

D) பிட்யூட்டரி சுரப்பி

விளக்கம்: தைமஸ் சுரப்பி நாளமில்லாச் சுரப்பியாகவும் நிணநீர் உறுப்பாகவும் செயல்படுகின்றது.

120. தைமஸ் சுரப்பி சுரக்கும் ஹார்மோன்______________

A) பாராதார்மோன்

B) தைராக்சின்

C) தைமோசின்

D) வளர்ச்சி ஹார்மோன்

121. கீழ்க்கண்டவற்றுள் தைமோசின் ஹார்மோனின் பணிகளுல் சரியானதைக் கண்டறி.

1) நோய்த்தடைக்காப்பு மண்டலத்தின் செயல்பாடுகளைத் தடை செய்கிறது.

2) லிம்ஃபோசைட்டுகள் உருவாதலையும் வேறுபடுதலையும் தூண்டுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: தைமோசின் ஹார்மோனானது நோய்த்தடைக்காப்பு மண்டலத்தின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது. லிம்ஃபோசைட்டுகள் உருவாதலையும் வேறுபடுதலையும் தூண்டுகிறது.

122. கணையத்தின் லாங்கர்கான் திட்டுக்களானது ஒரு___________

A) நாளமுள்ள சுரப்பி

B) நாளமில்லா சுரப்பி

C) பிளாஸ்மா பகுதி

D) கொழுப்பு பகுதி

123. குருதேவ் என்பவரால் 1926 ம் ஆண்டு நெற்பயிரில் கண்டறியப்பட்ட நோய்_________

A) பக்கானே நோய்

B) பள்ளி அழுகல் நோய்

C) கோமாளித்தன நோய்

D) A, C இரண்டும்

124. ஃபிரிட்ஸ் வார்மால்ட் வெண்ட் கீழ்க்கண்ட எந்த நாட்டைச் சேர்ந்த உயிரியல் அறிஞர்____________

A) இங்கிலாந்து

B) அமெர்க்கா

C) பிரான்ஸ்

D) டச்சு

10th Science Lesson 17 Questions in Tamil

17] தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

1. கூற்று (i): உயிரினங்களின் வாழ்நாளானது இப்புவியில் வரையறுக்கப்படாத ஒன்றாகும். எனவே, எந்த ஒரு உயிரினமும் நீண்ட நாள் உயிர் வாழ இயலும்.

கூற்று (ii): அனைத்து உயிரினங்களும் தன்னை ஒத்த உயிரினத்தை உருவாக்கும் திறன் இனப்பெருக்கம் எனப்படும்.

A) கூற்று i சரி, கூற்று ii தவறு

B) கூற்று i தவறு, கூற்று ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

விளக்கம்: உயிரினங்களின் வாழ்நாளானது இப்புவியில் வரையறுக்கப்பட்டதாகும். எனவே, எந்த ஒரு உயிரினமும் நீண்ட நாள் உயிர் வாழ இயலாது. அனைத்து உயிரினங்களும் தன்னை ஒத்த உயிரினத்தை உருவாக்கும் திறன் இனப்பெருக்கம் எனப்படும். இனப்பெருக்கம் தன்னை போன்ற உயிரினங்களின் தோன்றலுக்கு வழிவகுக்கிறது. இது தொடர்ந்து உயிரினங்கள் உயிரிவாழ்தலை தீர்மானிக்கிறது.

2. சுய நிலைப்பேறுடைமை என்பது___________

A) ஒரு குறிப்பிட்ட பேரினம் பாதுகாக்கப்படுவது

B) ஒரு குறிப்பிட்ட குடும்பம் பாதுகாக்கப்படுவது

C) ஒரு குறிப்பிட்ட தொகுதி பாதுகாக்கப்படுவது

D) ஒரு குறிப்பிட்ட சிற்றினம் பாதுகாக்கப்படுவது

3. கூற்று (i): இனப்பெருக்கம் நிகழும் காலமானது உயிரினத்திற்கு உயிரினம் மாறுபடுகிறது.

கூற்று (ii): பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைந்து புதிய உயிரினம் தோன்றுகிறது.

A) கூற்று i சரி, கூற்று ii தவறு

B) கூற்று i தவறு, கூற்று ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

விளக்கம்: இனப்பெருக்கம் நிகழும் காலமானது உயிரினத்திற்கு உயிரினம் மாறுபடுகிறது. ஈஸ்ட், பாக்டீரியா, எலி, பசு, யானை மற்றும் மனிதரில் இனப்பெருக்க காலத்தில் இம்மாறுபாட்டைக் காணலாம். பால் இனப்பெருக்கத்தின் மூலம் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள்(விந்து மற்றும் அண்டம்) இணைந்து புதிய உயிரினம் தோன்றுகிறது.

4. கீழ்க்கண்டவற்றுள் தாவரங்களின் இனப்பெருக்க நிலைகளுல் பொருந்தாதது எது.

A) இனச்செல் இனப்பெருக்கம்

B) பாலிலா இனப்பெருக்கம்

C) பாலினப் பெருக்கம்

D) உடல இனப்பெருக்கம்

5. கீழ்க்கண்டவற்றுள் தாவர உடல இனப் பெருக்க நிலைகள் பற்றிய கூற்றுக்களுல் தவறானதைக் கண்டறி.

A) இந்த வகை இனப்பெருக்கத்தில் புதிய தாவரங்கள், தாவரத்தின் ஏதேனும் ஒரு பாகத்தில் உள்ள உடல செல்களிலிலிருந்து தோன்றுகின்றன.

B) தாய் தாவரத்தில் உள்ள வேர், தண்டு, இலை அல்லது மொட்டு முதலான ஏதேனும் ஓர் உறுப்பிலிருந்து இளந்தாவரம் தோன்றி அது தனித்தாவரமாக வளர்கிறது.

C) தாவர உடல இனப்பெருக்கத்தில் குன்றல் பகுப்பு மட்டும் நடைபெறுவதால் இளந்தாவரங்கள், தாய்த் தாவரங்களைப் போன்றே காணப்படுகின்றன.

D) இவ்வகை இனப்பெருக்கம் நடைபெறும் போது பாலின செல்கள்(இனச்செல்கள்) இணைவதில்லை.

விளக்கம்: தாவர உடல இனப்பெருக்கத்தில் குன்றாப் பகுப்பு(மைட்டாசிஸ்) மட்டும் நடைபெறுவதால் இளந்தாவரங்கள், தாய்த் தாவரங்களைப் போன்றே காணப்படுகின்றன.

6. கீழ்க்கண்டவற்றுள் தாவர உடல இனப் பெருக்கத்துடன் தொடர்புடையதைக் காண்க.

A) இலை உடல இனப்பெருக்கம்

B) தண்டு மற்றும் வேர் உடல இனப்பெருக்கம்

C) பல்பில்ஸ் உடல இனப்பெருக்கம்

D) மேற்க்கண்ட அனைத்தும்

விளக்கம்: தாவர உடல இனப்பெருக்கமானது இலை, வேர், தண்டு மற்றும் மொட்டு போன்ற ஏதேனும் ஓர் உறுப்புகள் மூலம் நடைபெறுகிறது.

7. பொருத்துக:

தாவர உடல இனப்பெருக்கம் உதாரணம்

A) இலை உடல இனப்பெருக்கம் – 1. அஸ்பராகஸ்

B) தண்டு உடல இனப்பெருக்கம் – 2. ஸ்ட்ராபெர்ரி

C) வேர் உடல இனப்பெருக்கம் – 3. கற்றாழை

D) குமிழம் உடல இனப்பெருக்கம் – 4. பிரோயோஃபில்லம்

A) 1 2 3 4

B) 2 1 3 4

C) 4 2 1 3

D) 3 4 1 2

விளக்கம்:

தாவர உடல இனப்பெருக்கம் உதாரணம்

A) இலை உடல இனப்பெருக்கம் – 1. பிரோயோஃபில்லம்

B) தண்டு உடல இனப்பெருக்கம் – 2. ஸ்ட்ராபெர்ரி

C) வேர் உடல இனப்பெருக்கம் – 3. அஸ்பராகஸ்

D) குமிழம் உடல இனப்பெருக்கம் – 4. கற்றாழை

8. பொருத்துக:

A) இரணக்கள்ளி – 1. வேர் உடல இனப்பெருக்கம்

B) மைட்டாசிஸ் – 2. குன்றல் பகுப்பு

C) சர்க்கரைவள்ளிக்கிழங்கு – 3. பிரோயோஃபில்லம்

D) மியாசிஸ் – 4. குன்றாப் பகுப்பு

A) 1 2 3 4

B) 2 1 3 4

C) 4 2 1 3

D) 3 4 1 2

விளக்கம்:

A) இரணக்கள்ளி – 1. பிரோயோஃபில்லம்

B) மைட்டாசிஸ் – 2. குன்றாப் பகுப்பு

C) சர்க்கரைவள்ளிக்கிழங்கு – 3. வேர் உடல இனப்பெருக்கம்

D) மியாசிஸ் – 4. குன்றல் பகுப்பு

9. பொருத்துக:

தாவர உடல இனப்பெருக்கம் உதாரணம்

A) துண்டாதல் – 1. அமீபா

B) பிளத்தல் – 2. ஈஸ்ட்

C) மொட்டு விடுதல் (அ) அரும்புதல் – 3. ஸ்பைரோகைரா

D) இழப்பு மீட்டல் – 4. ஹைட்ரா, பிளனேரியா

A) 1 2 3 4

B) 2 1 3 4

C) 3 2 1 4

D) 3 1 2 4

விளக்கம்:

தாவர உடல இனப்பெருக்கம் உதாரணம்

A) துண்டாதல் – 1. ஸ்பைரோகைரா

B) பிளத்தல் – 2. அமீபா

C) மொட்டு விடுதல் (அ) அரும்புதல் – 3. ஈஸ்ட்

D) இழப்பு மீட்டல் – 4. ஹைட்ரா, பிளனேரியா

10 தாவர உடல இனப்பெருக்கத்தில் இழந்த பாகங்களை மீண்டும் உருவாக்கி புதிய உயிரியைத் தோற்றுவித்தல் என்பது____________

A) பிளத்தல்

B) துண்டாதல்

C) இழப்பு மீட்டல்

D) மொட்டு விடுதல்

விளக்கம்: இழந்த பாகங்களை மீண்டும் உருவாக்கி புதிய உயிரியைத் தோற்றுவித்தல் இழப்பு மீட்டல் எனப்படும். ஹைட்ரா, பிளனேரியா ஆகிய உயிரினங்கள், சிறு சிறு துண்டுகளாகப் பிரிகின்றன. ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரினத்தைத் தோற்றுவிக்கிறது.

11. தாவரத்தில் நடைபெறும் பாலிலா இனப்பெருக்கம் பற்றிய கூற்றுக்களில் சரியானதைக் கண்டறி.

1) பாலின செல்கள் இணைவின்றி ஒரே ஒரு தாய்த் தாவரத்திலிருந்து புதிய தாவரம் தோன்றும் முறையைப் பாலிலா இனப்பெருக்கம் என்கிறோம்.

2) இந்த வகை இனப்பெருக்கத்தில் குன்றாப் பகுப்பு செல் பிரிதல் மட்டுமே நடைபெறுகிறது. குன்றல் பகுப்பு நடைபெறுவதில்லை.

3) பாலிலா இனப்பெருக்க முறையில் குன்றாப் பகுப்பு நடைபெறுவதால் இம்முறையில் தோன்றும் இளம் உயிரிகள் தாய்த் தாவரத்தை ஒத்துக் காணப்படுவதில்லை.

4) பாலிலா இனப்பெருக்கம் விதைத்துகள்கள் மூலம் நடைபெறுகிறது.

A) அனைத்தும் சரி

B) 1, 2, 4 மட்டும் சரி

C) 1, 4 மட்டும் சரி

D) 1, 2, 3 மட்டும் சரி

விளக்கம்: பாலிலா இனப்பெருக்க முறையில் குன்றாப் பகுப்பு நடைபெறுவதால் இம்முறையில் தோன்றும் இளம் உயிரிகள் தாய்த் தாவரத்தை ஒத்துக் காணப்படுகின்றன.

12. கீழ்க்கண்ட தாவர இனப்பெருக்க முறைகளில் குன்றாப் பகுப்பு(மைட்டாசிஸ்) முறை மூலம் நடைபெறுபவை__________

A) உடல இனப்பெருக்கம்

B) பால் இனப்பெருக்கம்

C) பாலிலா இனப்பெருக்கம்

D) A, C இரண்டும்

விளக்கம்: தாவர இனப்பெருக்கமுறைகளுல் உடல இனப்பெருக்கம் மற்றும் பாலிலா இனப்பெருக்க முறையானது மைட்டாசிஸ் முறையில் மட்டுமே நடைபெறுகிறது.

13. பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களில் நடைபெறும் இனப்பெருக்க முறை_____________

A) உடல இனப்பெருக்கம்

B) பால் இனப்பெருக்கம்

C) பாலிலா இனப்பெருக்கம்

D) இனச்செல் இனப்பெருக்கம்

விளக்கம்: பாலிலா இனப்பெருக்கம் பெரும்பாலும் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களில் நடைபெறுகிறது. பாலிலா இனப் பெருக்கத்தின் போது பூஞ்சை இழையிலிருந்து ஒரு வித்தகம்(ஸ்போராஞ்சியம்) தோன்றுகிறது. இதனுள் இருக்கும் உட்கரு பலமுறை பிரிதல் அடைந்து ஏராளமான உட்கருக்களைத் தோற்றுவிக்கிறது. ஒவ்வொரு உட்கருவும் சிறிதளவு சைட்டோபிளாசத்துடன் சேர்ந்து ஸ்போராக(விதைத்துகள்) உருவாகிறது. வித்தகம் என்னும் ஸ்போராஞ்சியம் வெடித்து விதைத்துகள்கள் வெளியேற்றப்படுகின்றன. இவை நிலத்தில் விழும்போது புதிய உடல இழையைத்(ஹைபா) தோற்றுவிக்கின்றன.

14. தாவரங்களின் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைந்து தன்னை ஒத்த புதிய தாவரத்தை உருவாக்கும் முறை__________

A) உடல இனப்பெருக்கம்

B) பாலின இனப்பெருக்கம்

C) பாலிலா இனப்பெருக்கம்

D) இனச்செல் இனப்பெருக்கம்

விளக்கம்: பாலினப்பெருக்கம் என்பது தாவரங்களின் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் (கேமீட்டுகள்) இணைந்து தன்னை ஒத்த புதிய தாவரத்தை உருவாக்கும் முறையாகும். இந்த வகை இனப்பெருக்கத்தில் ஆண், பெண் பால் உறுப்புகள் பாலினசெல்களை உருவாக்கிடத் தேவைப்படுகின்றன.

15. தாவரத்தின் மாறுபாடு அடைந்த வரம்புடைய வளர்ச்சியினை உடைய தண்டுத் தொகுப்பு___________

A) சூலகம்

B) தண்டு

C) மலர்

D) மொட்டு

விளக்கம்: மலர் என்பது மாறுபாடு அடைந்த வரம்புடைய வளர்ச்சியினை உடைய தண்டுத் தொகுப்பு ஆகும். இதில் நான்கு அடக்குகள் உள்ளன. அவை பூத்தளத்தில் வெளிப்புறத்திலிருந்து உள் நோக்கி அமைந்திருக்கின்றன.

16. மலரானது கீழ்க்கண்ட எத்தனை அடுக்குகளைக் கொண்டது_______

A) மூன்று

B) நான்கு

C) ஐந்து

D) எண்ணற்றவை

விளக்கம்: மலரானது நான்கு அடுக்குகளைக் கொண்டது. அவை புல்லி வட்டம் (புல்லி இதழ்களால் ஆனது), அல்லி வட்டம் (அல்லி இதழ்களால் ஆனது), மகரந்ததாள் வட்டம் (மகரந்தத்தாளால் ஆனது) மற்றும் சூலக வட்டம் (சூலிலைகளால் ஆனது) ஆகியனவாகும்.

17. கூற்று (i): மலரின் வெளிப்புரத்தில் உள்ள இரண்டு அடுக்குகளான புல்லி வட்டம் மற்றும் அல்லி வட்டம் ஆகியவை நேரடியாக இனப்பெருக்கத்தில் பங்கெடுப்பதில்லை. எனவே இவை முதன்மையான அடுக்குகளாகக் கருதப்படுகின்றன.

கூற்று (ii): மலரின் உட்புரத்தில் உள்ள இரண்டு அடுக்குகளான மகரந்ததாள் வட்டம் மற்றும் சூலக வட்டம் இரண்டும் இனப்பெருக்கத்தில் பங்கெடுப்பதால் இவை துணை அடுக்களாகக் கருதப்படுகின்றன.

A) கூற்று i சரி, கூற்று ii தவறு

B) கூற்று i தவறு, கூற்று ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

விளக்கம்: மலரின் வெளிப்புரத்தில் உள்ள இரண்டு அடுக்குகளான புல்லி வட்டம் மற்றும் அல்லி வட்டம் ஆகியவை நேரடியாக இனப்பெருக்கத்தில் பங்கெடுப்பதில்லை. எனவே இவை துணை அடுக்குகளாகக் கருதப்படுகின்றன. உட்புரத்தில் உள்ள இரண்டு அடுக்குகளான மகரந்ததாள் வட்டம் மற்றும் சூலக வட்டம் இரண்டும் இனப்பெருக்கத்தில் பங்கெடுப்பதால் இவை முதன்மையான அடுக்களாகக் கருதப்படுகின்றன.

18. மலரின் பல மகரந்தத் தாள்களின் தொகுப்பானது_________

A) மகரந்ததாள் வட்டம்

B) சூலக வட்டம்

C) மகரந்தத் தூள்

D) சூல் முடி

விளக்கம்: மகரந்தத்தாள் வட்டமானது மலரின் ஆண் இனப்பெருக்கப் பகுதியாகும். இது பல மகரந்தத் தாள்களின் தொகுப்பு ஆகும். ஒவ்வொரு மகரந்தத் தாளும் ஒரு காம்பு போன்ற பகுதியையும் பை போன்ற பகுதியையும் கொண்டிருக்கும். காம்புப் பகுதி மகரந்தக்கம்பி எனவும் அதன் நுனியில் அமைந்த பை போன்ற பகுதி மகரந்தப்பை எனவும் அழைக்கப்படுகின்றன. மகரந்தத்தூள் மகரந்தப் பையின் உள்ளே காணப்படுகிறது.

19. பொருத்துக: (மலரின் பாகங்கள்)

A) மகரந்தத்தாள் வட்டம் – 1. இன்டைன்

B) சூலக வட்டம் – 2. எக்ஸைன்

C) கடினமான வெளியுறை(மகரந்தத்தூள்) – 3. ஆண் இனப்பெருக்க பகுதி

D) மெள்ளிய உள்ளுறை(மகரந்தத்தூள்) – 4. பெண் இனப்பெருக்க பகுதி

A) 1 2 3 4

B) 2 1 3 4

C) 3 4 2 1

D) 3 1 2 4

விளக்கம்:

A) மகரந்தத்தாள் வட்டம் – 1. ஆண் இனப்பெருக்க பகுதி

B) சூலக வட்டம் – 2. பெண் இனப்பெருக்க பகுதி

C) கடினமான வெளியுறை(மகரந்தத்தூள்) – 3. எக்ஸைன்

D) மெள்ளிய உள்ளுறை(மகரந்தத்தூள்) – 4. இன்டைன்

20. மகரந்தத்தூளின் வடிவம்_________

A) வட்ட வடிவம்

B) கோள வடிவம்

C) அவரை வடிவம்

D) காற்புள்ளி வடிவம்

விளக்கம்: மகரந்தத்தூள்கள் கோள வடிவமானவை. இரண்டு உறைகளால் ஆனவை. கடினமான வெளியுறை எக்ஸைன் எனப்படும். இந்த வெளியுறையில் நிலையான துளைகள் உள்ளன. அவை வளர்துளை எனப்படும். உள்ளுறை இன்டைன் எனப்படும். இது மிகவும் மெல்லியதாகவும் தொடர்ச்சியாகவும் காணப்படும்.

21. மகரந்தத்தூளின் இன்டைன் என்றழைக்கப்படும் உள்ளுறையானது கீழ்க்கண்ட எவற்றால் ஆனது______________

A) கால்சியம்

B) செல்லுலோஸ்

C) பெக்டின்

D) B, C இரண்டும்

விளக்கம்: மகரந்தத்தூளின் இன்டைன் என்றழைக்கப்படும் உள்ளுறையானது செல்லுலோஸ் மற்றும் பெக்டினால் ஆனது. முதிர்ந்த மகரந்தத்தூள்களில் இரண்டு விதமான செல்கள் உள்ளன. அவை முறையே உடல செல் மற்றும் உற்பத்தி செல் எனப்படும். உடல செல்லினுள் ஒரு பெரிய உட்கரு உள்ளது. உற்பத்தி செல்லானது குன்றாப் பகுப்பு (மைட்டாசிஸ்) மூலம் பிரிதல் அடைந்து இரண்டு ஆண் பாலினச் செல்களை உருவாக்குகிறது.

22. கீழ்க்கண்டவற்றுள் சூலகத்துடன் பொருத்தமற்றது எது.

A) சூலக முடி

B) சூல் தண்டு

C) சூல் பை

D) மகரந்தப் பை

விளக்கம்: சூலகமானது மலரின் பெண் இனப் பெருக்கப் பகுதியாகும். இது சூல் இலைகளால் ஆனது. ஒவ்வொரு சூலகமும் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை சூல் முடி, சூல் தண்டு மற்றும் சூல் பை ஆகியவையாகும்.

23. சூலின் அமைப்புப் பற்றியக் கூற்றுக்களில் தவறானதைக் கண்டறி:

1) சூலானது சூல் அறையினுள் ஒரு சிறிய காம்பின் மூலம் ஒட்டிக் கொண்டுள்ளது. இதற்கு சூல் காம்பு என்று பெயர்.

2) சூலின் அடிப்பகுதி சூல் அடி எனப்படுகிறது.

3) கருப்பையினுள் உள்ள சூல் திசுவினுள் எட்டு செல்களும் ஏழு உட்கருக்களும் அமைந்துள்ளன.

A) 1, 2 மட்டும் தவறு

B) 1, 3 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: சூலானது சூல் அறையினுள் ஒரு சிறிய காம்பின் மூலம் ஒட்டிக் கொண்டுள்ளது. இதற்கு சூல் காம்பு என்று பெயர். சூலின் அடிப்பகுதி சூல் அடி எனப்படுகிறது. கருப்பையினுள் உள்ள சூல் திசுவினுள் ஏழு செல்களும் எட்டு உட்கருக்களும் அமைந்துள்ளன.

24. சூலின் முக்கியமான பகுதி__________

A) சூலக முடி

B) சூல் தண்டு

C) சூல் பை

D) சூல் திசு

விளக்கம்: சூலின் முக்கியமான பகுதி சூல் திசு ஆகும். இது இரண்டு சூல் உறைகளால் சூழப்பட்டுள்ளது. மேல் பகுதியில் சூல் உறை இணையாமல் அமைந்த இடைவெளியானது சூல்துளை எனப்படுகிறது.

25. கூற்று (i): தாவரத்தின் ஆண் இனப்பெருக்க உறுப்பான சூலகத்தில் அமைந்துள்ள சூல் துளையின் அருகில் உள்ள மூன்று கருப்பை செல்கள், அண்டசாதனத்தை உருவாக்குகின்றன.

கூற்று (ii): அண்ட சாதனமானது ஓர் அண்ட செல்லையும் இரண்டு பக்கவாட்டு செல்களையும் கொண்டுள்ளது. இந்த பக்கவாட்டு செல்கள் சினையாற்றியம் என அழைக்கப்படுகின்றன.

A) கூற்று i சரி, கூற்று ii தவறு

B) கூற்று i தவறு, கூற்று ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

26. பூக்கும் தாவரங்களின் பாலினப்பெருக்கமானது கீழ்க்கண்ட எந்த படிநிலைகளில் நடைபெறுகிறது.

A) மகரந்தச்சேர்க்கை

B) துண்டாதல்

C) கருவுருதல்

D) A, C இரண்டும்

விளக்கம்: பூக்கும் தாவரங்களின் பாலினப்பெருக்கம் இரண்டு படிநிலைகளில் நடைபெறுகிறது. அவை மகரந்தச்சேர்க்கை மற்றும் கருவுருதல் ஆகியனவாகும்.

27. பூவின் மகரந்தப் பையிலிருந்து மகரந்தத்தூளானது சூலக முடியைச் சென்றடைவது________

A) கருவுருதல்

B) மகரந்தச்சேர்க்கை

C) மகரந்தப் பெருக்கம்

D) சூலகம் உருவாதல்

விளக்கம்: பூவின் மகரந்தப் பையிலிருந்து மகரந்தத்தூள், சூலக முடியைச் சென்று அடைவது மகரந்தச்சேர்க்கை எனப்படுகிறது.

28. மகரந்தச் சேர்க்கையின் பயன்களுல் பொருந்தாததைத் தேர்ந்தெடு.

1) மகரந்தச்சேர்க்கையைத் தொடர்ந்து கருவுறுதல் நடைபெற்று கனியும் விதையும் உருவாகின்றன.

2) தன் மகரந்தச்சேர்க்கையின் காரணமாக இருவேறுபட்ட ஜீன்கள் இணைவதால் புதிய வகைத் தாவரம் உருவாகிறது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

விளக்கம்: மகரந்தச்சேர்க்கையைத் தொடர்ந்து கருவுறுதல் நடைபெற்று கனியும் விதையும் உருவாகின்றன. அயல் மகரந்தச்சேர்க்கையின் காரணமாக இருவேறுபட்ட ஜீன்கள் இணைவதால் புதிய வகைத் தாவரம் உருவாகிறது.

29. ஒரு மலரிலுள்ள மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை அல்லது அதே தாவரத்தில் உள்ள வேறொரு மலரின் சூலக முடியைச் சென்றடைவது___________

A) தன் மகரந்தச்சேர்க்கை

B) அயல் மகரந்தச்சேர்க்கை

C) அல்லோகேமி

D) என்டமோபிலி

விளக்கம்: ஒரு மலரிலுள்ள மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை அல்லது அதே தாவரத்தில் உள்ள வேறொரு மலரின் சூலக முடியைச் சென்றடைவது தன் மகரந்தச்சேர்க்கை எனப்படும் எ.கா. ஹைபிஸ்கஸ்

30. ஒரு மலரின் மகரந்தத்தூள் அதே இனத்தைச் சார்ந்த மற்றொரு தாவரத்தின் மலரில் உள்ள சூலக முடியைச் சென்றடைவது___________

A) தன் மகரந்தச்சேர்க்கை

B) அயல் மகரந்தச்சேர்க்கை

C) ஆட்டோகேமி

D) மொட்டு அரும்புதல்

விளக்கம்: ஒரு மலரின் மகரந்தத்தூள் அதே இனத்தைச் சார்ந்த மற்றொரு தாவரத்தின் மலரில் உள்ள சூலக முடியைச் சென்று அடைவது அயல் மகரந்தச்சேர்க்கை எனப்படும் எ.கா. ஆப்பிள், திராட்சை, பிளம் முதலியன.

31. பொருத்துக:

A) தன் மகரந்தச்சேர்க்கை – 1. இனச்செல்கள்

B) அயல் மகரந்தச்சேர்க்கை – 2. ஆட்டோகேமி

C) சூல்திசு – 3. அல்லோகேமி

D) கேமிட்டுகள் – 4. நியூசெல்லஸ்

A) 1 2 3 4

B) 2 3 4 1

C) 3 4 2 1

D) 3 1 2 4

விளக்கம்:

A) தன் மகரந்தச்சேர்க்கை – 1. ஆட்டோகேமி

B) அயல் மகரந்தச்சேர்க்கை – 2. அல்லோகேமி

C) சூல்திசு – 3. நியூசெல்லஸ்

D) கேமிட்டுகள் – 4. இனச்செல்கள்

32. கீழ்க்கண்டவற்றுள் தன் மகரந்தச் சேர்க்கையினால் ஏற்படும் நன்மைகளுல் பொருந்தாதது.

A) இருபால் மலர்களில் தன் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.

B) மலர்கள் புறக்காரணிகளைச் சார்ந்திருக்கத் தேவையில்லை.

C) மகரந்தத்தூள்கள் வீணடிக்கப்படுவதில்லை.

D) விதைகள் அதிக எண்ணிக்கையில் உருவாகின்றன.

விளக்கம்: இருபால் மலர்களில் தன் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. மலர்கள் புறக்காரணிகளைச் சார்ந்திருக்கத் தேவையில்லை. மகரந்தத்தூள்கள் வீணடிக்கப்படுவதில்லை. விதைகள் குறைந்த எண்ணிக்கையில் உருவாகின்றன.

33. கீழ்க்கண்டவற்றுள் அயல் மகரந்தச் சேர்க்கையினால் ஏற்படும் நன்மைகளுல் பொருந்தாதது.

1) அயல் மகரந்தச்சேர்க்கையின் மூலம் உருவாகும் விதைகள், வலிமையான தாவரங்களை உருவாக்குகிறது. இதன் மூலம் புதிய வகைத் தாவரங்கள் உருவாகின்றன.

2) நன்கு முளைக்கும் திறன் கொண்ட விதைகள் உருவாகின்றன.

3) கருவூண் மிகச் சிறியது. எனவே விதைகள் மிக நலிவடைந்த தாவரங்களை உருவாக்குகிறது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

34. அயல் மகரந்தச்சேர்க்கைப் பற்றியக் கூற்றுக்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடு.

A) அயல் மகரந்தச்சேர்க்கை, புறக்காரணிகளை நம்பி இருப்பதால் மகரந்தச்சேர்க்கை தடைபடுகிறது.

B) அதிக அளவில் மகரந்தத்தூள் வீணாகிறது.

C) சில தேவையில்லாத பண்புகள் தோன்றுகின்றன.

D) மலர்கள் புறக்காரணிகளைச் சார்ந்த இருக்க வேண்டிய அவசியமில்லை.

விளக்கம்: அயல் மகரந்தச்சேர்க்கை, புறக்காரணிகளை நம்பி இருப்பதால் மகரந்தச்சேர்க்கை தடைபடுகிறது. அதிக அளவில் மகரந்தத்தூள் வீணாகிறது. சில தேவையில்லாத பண்புகள் தோன்றுகின்றன.

35. பொருத்துக:

A) காற்று வழி மகரந்தச்சேர்க்கை – 1. ஹைட்ரோஃபிலி

B) பூச்சிகள் வழி மகரந்தச்சேர்க்கை – 2. அனிமோஃபிலி

C) நீர்வழி மகரந்தச்சேர்க்கை – 3. சூஃபிலி

D) விலங்குகள் வழி மகரந்தச்சேர்க்கை – 4. எண்டமோஃபிலி

A) 1 2 3 4

B) 2 4 1 3

C) 3 4 2 1

D) 3 1 2 4

விளக்கம்:

A) காற்று வழி மகரந்தச்சேர்க்கை – 1. அனிமோஃபிலி

B) பூச்சிகள் வழி மகரந்தச்சேர்க்கை – 2. எண்டமோஃபிலி

C) நீர்வழி மகரந்தச்சேர்க்கை – 3. ஹைட்ரோஃபிலி

D) விலங்குகள் வழி மகரந்தச்சேர்க்கை – 4. சூஃபிலி

36. காற்றின் வழி மகரந்தச்சேர்க்கை நடைபெறும் தாவர மலர்களின் பண்புகளுல் பொருந்தாதது எது.

A) இவ்வகை மலர்கள் ஏராளமான மகரந்தத்தூள்களை உற்பத்தி செய்கின்றன.

B) மகரந்தத்தூள்கள் சிறியதாகவும், மென்மையானதாகவும், உலர்ந்ததாகவும், எடை குறைவாகவும் உள்ளன.

C) இவ்வகைத் தாவரங்களின் மகரந்தத்தூள்கள் 1000 கி.மீ. தூரத்தக்கு மேல் கடக்கின்றன.

D) சூல் முடியானது சிறியதாகவும் உட்புறம் குவிந்தும் காணப்படும். சில நேரங்களில் கிளைத்து முடி போன்று மகரந்தத் தூளைப் பிடித்துக் கொள்வதற்கு ஏற்றதாக இருக்கும்.

விளக்கம்: சூல் முடியானது பெரியதாகவும் வெளியே நீட்டிக் கொண்டும் இருக்கும். சில நேரங்களில் கிளைத்து முடி போன்று மகரந்தத் தூளைப் பிடித்துக் கொள்வதற்கு ஏற்றதாக இருக்கும்.

37. பூச்சிகள் வழி மகரந்தச்சேர்க்கை நடைபெறும் தாவர மலர்களின் பண்புகளுல் சரியானதைத் தேர்ந்தெடு.

1) இவ்வகை தாவர மலர்கள் பூச்சிகளைக் கவர்வதற்கு ஏற்றாற் போல பல நிறம், மணம், தேன் சுரக்கும் தன்மை ஆகியவற்றுடன் இவ்வகை மலர்கள் காணப்படும்.

2) இவ்வகை மலர்களில் மகரந்தத்தூள் பெரியதாகவும் வெளியுறையானது துளைகளுடனும் வெளிப்பக்கத்தில் முட்களுடனும் காணப்படும்.

3) பூச்சிகளால் நடைபெறும் மகரந்தச்சேர்க்கையில் ஏறத்தாழ 80% மகரந்தச்சேர்க்கையானது தேன்சிட்டுக்களால் நடைபெறுகிறது.

A) அனைத்தும் சரி

B) அனைத்தும் தவறு

C) 1, 2 மட்டும் சரி

D) 3 மட்டும் சரி

விளக்கம்: பூச்சிகளால் நடைபெறும் மகரந்தச்சேர்க்கையில் ஏறத்தாழ 80% மகரந்தச்சேர்க்கையானது தேனீக்களால் நடைபெறுகிறது.

38. கூற்று (i): விலங்குகள் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை, விலங்குகள் வழி மகரந்தச்சேர்க்கை(சூஃபிலி) எனப்படும்.

கூற்று (ii): இவ்வகை மகரந்தச்சேர்க்கையில் மலர்கள், விலங்குகளைக் கவர்வதற்காகப் பிரகாசமான வண்ணங்களைக் கொண்டவையாகவும் அளவில் பெரியவையாகவும் மிகுந்த மணம் கொண்டவையாகவும் இருக்கும்.

A) கூற்று i சரி, கூற்று ii தவறு

B) கூற்று i தவறு, கூற்று ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

39. அணில்கள் மூலம் கீழ்க்கண்ட எந்த தாவரத்தில் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.

A) கல்வாழை

B) கிளாடியோலி

C) ஹைட்ரில்லா

D) இலவம் பஞ்சு

40. பொருத்துக:

A) காற்று வழி மகரந்தச்சேர்க்கை – 1. ஹைட்ரில்லா

B) பூச்சிகள் வழி மகரந்தச்சேர்க்கை – 2. புல் (ம) கள்ளிச் செடிகள்

C) நீர்வழி மகரந்தச்சேர்க்கை – 3. செம்பருத்தி

D) விலங்குகள் வழி மகரந்தச்சேர்க்கை – 4. தேன்சிட்டு

A) 2 3 1 4

B) 2 4 1 3

C) 3 4 2 1

D) 3 1 2 4

விளக்கம்:

A) காற்று வழி மகரந்தச்சேர்க்கை – 1. புல் (ம) கள்ளிச் செடிகள்

B) பூச்சிகள் வழி மகரந்தச்சேர்க்கை – 2. செம்பருத்தி

C) நீர்வழி மகரந்தச்சேர்க்கை – 3. ஹைட்ரில்லா

D) விலங்குகள் வழி மகரந்தச்சேர்க்கை – 4. தேன்சிட்டு

41. தாவரங்களின் கருவுருதல் பற்றியக் கருத்துக்களுல் பொருந்தாததைத் தேர்ந்தெடு.

A) மகரந்தத்தூள், சூல்முடியை அடைந்ததும் முளைக்கக் தொடங்குகிறது.

B) மகரந்தக் குழாய் சூல்முடி மற்றும் சூல்தண்டில் உள்ள திசுக்கள் வழியாக வளர்ந்து இறுதியில் சூலகத்தில் உள்ள சூல் துளையை அடைகிறது.

C) உடல செல்லானது அழிந்து உற்பத்தி செல்லானது பகுப்படைந்து இரண்டு ஆண் இனச்செல்களை உருவாக்குகிறது.

D) மகரந்தக் குழாயின் முனை வெடித்து இரண்டு ஆண் இனச்செல்லும் மகரந்தப்பையை அடைகின்றது.

விளக்கம்: மகரந்தக் குழாயின் முனை வெடித்து இரண்டு ஆண் இனச்செல்லும் சூல்பையை அடைகின்றது.

42. தாவரங்களில் கருவுருதலுக்குப்பின் நடைபெறும் நிகழ்வுகளுல் பொருந்தாதது எது.

A) சூலானது விதையாக மாறுகிறது.

B) சூலுறை, விதையுறையாக மாற்றம் அடைகிறது.

C) சூல் பை பெரியதாகி, விதையுறையாக மாறுகிறது.

D) விதையானது வருங்காலத் தாவரத்தை உள்ளடக்கியுள்ளது. பின்பு இது தகுந்த சூழ்நிலையை அடையும்போது தாவரமாக வளர்கிறது.

விளக்கம்: சூல் பை பெரியதாகி, கனியாக மாறுகிறது.

43. பொருத்துக:

A) எபிடிடைமிஸ் – 1. இரட்டைமயத் தன்மையுடைய கருமுட்டை

B) செமினல் வெசிக்கள் – 2. முன்னிலைச் சுரப்பி

C) புராஸ்டேட் சரப்பி – 3. விந்தணு முதிர்ச்சிப்பை

D) சைகோட் – 4. விந்துப்பை

A) 2 3 1 4

B) 2 4 1 3

C) 3 4 2 1

D) 3 1 2 4

விளக்கம்:

A) எபிடிடைமிஸ் – 1. விந்தணு முதிர்ச்சிப்பை

B) செமினல் வெசிக்கள் – 2. விந்துப்பை

C) புராஸ்டேட் சரப்பி – 3. முன்னிலைச் சுரப்பி

D) சைகோட் – 4. இரட்டைமயத் தன்மையுடைய கருமுட்டை

44. கீழ்க்கண்டவற்றுள் ஆண்களின் துணை பாலுறுப்புகளுடன் பொருந்தாதது.

A) எபிடிடைமிஸ்

B) செமினல் வெசிக்கள்

C) புராஸ்டேட் சுரப்பி

D) விந்தகம்

விளக்கம்: ஆண்களில் விந்தகங்களும் பெண்களில் அண்டகங்களும் முதல்நிலை பால் இனப்பெருக்க உறுப்புகளாகும்.

45. கீழ்க்கண்டவற்றுள் பெண்களின் துணை பாலுறுப்புகளுடன் பொருந்தாதது.

A) பெலோப்பியன் நாளம்

B) அண்டகம்

C) செர்விக்ஸ்

D) கருப்பை

விளக்கம்: ஆண்களில் விந்தகங்களும் பெண்களில் அண்டகங்களும் முதல்நிலை பால் இனப்பெருக்க உறுப்புகளாகும்.

46. டியூனிகா அல்புஜினியா என்பது_____________

A) அண்டகத்தை சூழ்ந்துள்ள நாரிழைத்திசு அடுக்கு

B) விந்தகத்தை சூழ்ந்துள்ள நாரிழைத்திசு அடுக்கு

C) கருப்பையை சூழ்ந்துள்ள நாரிழைத்திசு அடுக்கு

D) கருநாளத்தை சூழ்ந்துள்ள நாரிழைத்திசு அடுக்கு

விளக்கம்: ஒவ்வொரு விந்தகத்தையும் சூழ்ந்துள்ள நாரிழைத்திசு அடுக்கு டியூனிகா அல்புஜினியா என அழைக்கப்படுகிறது. விந்தகம் இந்த அடுக்கில் பல இடைச் சுவரினால் பிரமிடு வடிவமுடைய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

47. விந்தகத்தில் காணப்படும் இடையீட்டுச் செல்__________

A) செமினிபெரஸ் குழாய்கள்

B) செர்டோலி செல்கள்

C) லீடிக் செல்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: விந்தகமானது டியூனிகா அல்புஜினியா எனும் அடுக்கினால் சூழப்பட்டுள்ளது. இந்த அடுக்கின் பல இடைச் சுவரினால் பிரமிடு வடிவமுடைய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் செமினிபெரஸ் குழாய்கள், செர்டோலி செல்கள் மற்றும் லீடிக்செல்கள் ஆகியவை(இடையீட்டுச் செல்கள்) அமைந்துள்ளன.

48. பொருத்துக:

A) விந்தகம் – 1. செமினிபெரஸ் குழாய்கள்

B) அண்டகம் – 2. ஸ்குரூட்டம்

C) விதைப்பை – 3. முட்டை வடிவம்

D) விந்தணுவாக்க நிகழ்வு – 4. பாதாம் வடிவம்

A) 2 3 1 4

B) 2 4 1 3

C) 3 1 2 4

D) 3 4 2 1

விளக்கம்:

A) விந்தகம் – 1. முட்டை வடிவம்

B) அண்டகம் – 2. பாதாம் வடிவம்

C) விதைப்பை – 3. ஸ்குரூட்டம்

D) விந்தணுவாக்க நிகழ்வு – 4. செமினிபெரஸ் குழாய்கள்

49. விந்தணுவாக்க உருவாக்கத்திற்கு தேவையான உணவூட்டத்தை அளிப்பது_________

A) செமினிபெரஸ் குழாய்கள்

B) செர்டோலி செல்கள்

C) லீடிக் செல்கள்

D) பெலோப்பியன் நாளம்

50. டெஸ்டோஸ்டீரானைச் சுரந்து விந்தணுவாக்க நிகழ்வைத் துவக்குவது_________

A) செமினிபெரஸ் குழாய்கள்

B) செர்டோலி செல்கள்

C) லீடிக் செல்கள்

D) பெலோப்பியன் நாளம்

விளக்கம்: பன்முக அமைப்பைக் கொண்ட லீடிக் செல்கள் செமினிபெரஸ் குழல்களுக்கிடையில் அமைந்து டெஸ்டோஸ்டீரானைச் சுரக்கின்றன. இது விந்தணுவாக்க நிகழ்வைத் துவக்குகிறது.

51. அண்டகத்திலுள்ள அண்டத்தைச் சூழ்ந்து முதல்நிலை பாலிக்கிள்களை உருவாக்குவது________

A) கிரானுலோசா செல்கள்

B) செர்டோலிக் செல்கள்

C) எபிதீலியல் செல்கள்

D) A, C இரண்டும்

விளக்கம்: ஒவ்வொரு அண்டகமும் வெளிப்புற கார்டெக்ஸையும், உட்புற மெடுல்லாவையும் பெற்றுள்ளது இணைப்புத்திசுவாலான வலைப்பின்னல் அமைப்புடைய ஸ்ட்ரோமாக்களால் கார்டெக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இவை இனச்செல் எபிதீலியத்தால் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கிரானுலோசா செல்கள் என்றழைக்கப்படும் எபிதீலியல் செல்கள் அண்டகத்திலுள்ள அண்டத்தைச் சூழ்ந்து முதல்நிலை பாலிக்கிள்களை உருவாக்குகின்றன.

52. பெண் குழந்தைகள் பிறக்கின்ற போது அவர்களின் துவக்கநிலை பாலிக்கிள்களின் எண்ணிக்கை_______________

A) 7 பில்லியன்

B) 7 மில்லியன்

C) 7 டிரில்லியன்

D) 8 மில்லியன்

விளக்கம்: பெண் குழந்தைகள் பிறக்கின்ற போது துவக்கநிலை பாலிக்கிள்களின் எண்ணிக்கை 7 மில்லியன் ஆகும். பருவமடையும்போது 60000 – லிருந்து 70000 மாகக் காணப்படுகிறது. பெண்களின் வாழ்நாளில் 1-2 மில்லியன் அண்டத்தில், 300 – 400 அண்டம் மட்டுமே அண்டம் விடுபடும் நிகழ்வின் மூலம் வெளியேற்றப்படுகிறது. மாறாக ஆண்களின் வாழ்நாளில் 500 பில்லியன் விந்துணுக்கள் வெளியேறுகின்றன.

53. கூற்று (i): ஆண்களில் விந்துவும், பெண்களில் அண்டமும் உருவாதல் என்பது இனச்செல் உருவாக்கம் என்று அழைக்கப்படுகிறது.

கூற்று (ii): இதன் மூலம் இரட்டைமய செல்களை உடைய இனச்செல்கள் உருவாக்கப்படுகின்றன.

A) கூற்று i சரி, கூற்று ii தவறு

B) கூற்று i தவறு, கூற்று ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

விளக்கம்: ஆண்களில் விந்துவும், பெண்களில் அண்டமும் உருவாதல் என்பது இனச்செல் உருவாக்கம் என்று அழைக்கப்படுகிறது. இது விந்து செல் உருவாக்கம் மற்றும் அண்டசெல் உருவாக்கம் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. இதன் மூலம் ஒற்றைமய செல்களை உடைய இனச்செல்கள் உருவாக்கப்படுகின்றன.

54. விந்து செல்லின் எந்தப் பகுதியானது அக்ரோசோம் என்றழைக்கப்படுகிறது.

A) தொப்பி போன்ற முன் முனைப்பகுதி

B) நடுப்பகுதி

C) வால்பகுதி

D) கழுத்துப்பகுதி

விளக்கம்: விந்து செல்லானது தலை, நடுப்பகுதி மற்றும் வால் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. விந்து செல்லின் நீண்ட தலைப்பகுதி சுருங்கிய உட்கருவைக் கொண்டுள்ளது. தொப்பி போன்ற முன் முனைப்பகுதி அக்ரோசோம் என்று அழைக்கப்படுகிறது. கருவுறுதலின்போது விந்துவானது அண்டத்தினுள் நுழைவதற்குத் தேவையான ஹயலுரானிடேஸ் என்னும் நொதியை அக்ரோசோம் கொண்டுள்ளது.

55. விந்து செல்லின் தலைப்பகுதியையும் நடுப்பகுதியையும் இணைக்கின்ற குறுகிய கழுத்துப் பகுதியானது கீழ்க்கண்ட எதனை உள்ளடக்கியது.

A) அக்ரோசோம்

B) சென்ட்ரோமியர்

C) சென்ட்ரியோல்

D) சென்ட்ரோசோம்

விளக்கம்: விந்து செல்லின் தலைப்பகுதியையும் நடுப்பகுதியையும் இணைக்கின்ற குறுகிய கழுத்துப் பகுதியானது சென்ட்ரியோலை உள்ளடக்கியுள்ளது. மைட்டோகாண்ட்ரியாவால் ஆன நடுப்பகுதி வால்பகுதி நகர்வதற்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது.

56. கீழ்க்கண்டவற்றுள் அண்டத்தின் அமைப்புப் பற்றியக் கருத்துக்களில் தவறானதைக் கண்டறி.

A) முதிர்ச்சியடைந்த அண்டம் அல்லது முட்டையானது கோள வடிவமானது மற்றும் கருவுணவு அற்றது.

B) இது அதிக அளவு சைட்டோபிளாசத்தையும், உட்கருவையும் கொண்டுள்ளது.

C) அண்டமானது மூன்று சவ்வுகளால் சூழப்பட்டுள்ளது. அவற்றுள் பிளாஸ்மா படலமானது வெளிப்புற சோனா பெலுசிடா மற்றும் உட்புற தடித்த கரோனா ரேடியேட்டாவாலும் சூழப்பட்டுள்ளது. இவற்றுள் கரோனா ரேடியேட்டாவானது பாலிக்கிள் செல்களால் ஆனது.

D) அண்டத்தின் மேற்புற படலத்தின் சவ்வு விட்டலின் சவ்வு என்றழைக்கப்படுகிறது.

விளக்கம்: அண்டமானது மூன்று சவ்வுகளால் சூழப்பட்டுள்ளது. அவற்றுள் பிளாஸ்மா படலமானது மெலிந்த சோனா பெலுசிடா மற்றும் வெளிப்புற தடித்த கரோனா ரேடியேட்டாவாலும் சூழப்பட்டுள்ளது. இவற்றுள் கரோனா ரேடியேட்டாவானது பாலிக்கிள் செல்களால் ஆனது.

57. அண்டத்தின் மேற்பரப்பிற்கும் சோனா பெலுசிடாவிற்கும் இடைப்பட்ட திரவம் நிரம்பிய இடைவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது.

A) பெரிகார்டிய இடைவெளி

B) பெரிவிட்டலின் இடைவெளி

C) பெரியாஸ்டிய இடைவெளி

D) மேற்கண்ட எதுமில்லை

விளக்கம்: அண்டத்தின் மேற்புறபரப்பிற்கும் சோனா பெலுசிடாவிற்கும் இடைப்பட்ட திரவம் நிரம்பிய இடைவெளி பெரிவிட்டலின் இடைவெளி என்று அழைக்கப்படுகிறது.

58. பருவமடைதல் பற்றிய கூற்றுக்களுல் தவறானதைத் தேர்ந்தெடு.

1) ஆண்கள் மற்றும் பெண்களில் பாலியல் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிப்பதனால் இனப்பெருக்கம் மண்டலம் செயல்படத் தொடங்குதல் பருவமடைதல் எனப்படும். இது பெண்களைவிட ஆண்களில் இந்நிகழ்வு முன்னதாகவே துவங்குகிறது.

2) ஆண்கள் 13-லிருந்து 14 வயதிற்குள்ளும், பெண்கள் 11-லிருந்து 13 வயதிற்குள்ளும் பருவமடைகின்றனர்.

3) ஆண்களில் விந்தகங்களில் சுரக்கும் டெஸ்டோஸ்டீரான் மற்றும் பெண்களில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் ஹார்மோன்களின் தூண்டுதலால் பருவமடைதல் தொடங்குகிறது.

A) 1, 2 மட்டும் தவறு

B) 3 மட்டும் தவறு

C) 1 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: ஆண்கள் மற்றும் பெண்களில் பாலியல் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிப்பதனால் இனப்பெருக்கம் மண்டலம் செயல்படத் தொடங்குதல் பருவமடைதல் எனப்படும். இது ஆண்களைவிட பெண்களில் இந்நிகழ்வு முன்னதாகவே துவங்குகிறது.

59. ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க ஹார்மோன்களின் சுரப்பானது கீழ்க்கண்ட எந்த ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

A) கொனோடோட்ரோபின் ஹார்மோன்

B) லூட்டினைசிங் ஹார்மோன்

C) பாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன்

D) மேற்க்கண்ட அனைத்தும்

விளக்கம்: பிட்யூட்டரி சுரப்பியின் கொனோடோட்ரோபின், லூட்டினைசிங் ஹார்மோன் மற்றும் பாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன்கள் ஆகியவற்றால் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க ஹார்மோன்களின் சுரப்பானது கட்டுப்படுத்தப்படுகிறது.

60. பொருத்துக:

A) மாதவிடாய் சுழற்சி – 1. (11 முதல் 13 வயது)

B) பூப்படைதல் நிலை – 2. (48 முதல் 50 வயது)

C) மாதவிடைவு நிலை – 3. கால ஒழுங்கு மாற்றம்

D) LH மற்றும் FSH ஹார்மோன் – 4. பிட்யூட்டரி சுரப்பி

A) 2 3 1 4

B) 2 4 1 3

C) 3 1 2 4

D) 3 4 2 1

விளக்கம்:

A) மாதவிடாய் சுழற்சி – 1. கால ஒழுங்கு மாற்றம்

B) பூப்படைதல் நிலை – 2. (11 முதல் 13 வயதிற்குள்)

C) மாதவிடைவு நிலை – 3. (48 முதல் 50 வயதிற்குள்)

D) LH மற்றும் FSH ஹார்மோன் – 4. பிட்யூட்டரி சுரப்பி

61. மாதவிடாய் சுழற்சியானது கீழ்க்கண்ட எத்தனை நிலைகளை உள்ளடக்கியுள்ளது.

A) மூன்று

B) நான்கு

C) ஐந்து

D) ஆறு

விளக்கம்: மாதவிடாய் சுழற்சியானது நான்கு நிலைகளை உள்ளடக்கியது அவை மாதவிடாய் அல்லது அழிவு நிலை, பாலிக்குலார் அல்லது பெருக்க நிலை, அண்டம் விடுபடும் நிலை மற்றும் லூட்டியல் அல்லது உற்பத்தி நிலை ஆகியனவாகும்.

62. பொருத்துக:

மாதவிடாய் நிலை – நாட்கள்

A) மாதவிடாய் நிலை – 1. (4 – 5 நாள்)

B) பாலிக்குலார் நிலை – 2. (14 – ம் நாள்)

C) அண்டம் விடுபடும் நிலை – 3. (6 – 13 நாள்கள்)

D) லூட்டியல் நிலை – 4. (15 – 28 நாள்கள்)

A) 1 3 2 4

B) 2 4 1 3

C) 3 1 2 4

D) 3 4 2 1

விளக்கம்:

A) மாதவிடாய் நிலை – 1. (4 – 5 நாள்)

B) பாலிக்குலார் நிலை – 2. (6 – 13 நாள்கள்)

C) அண்டம் விடுபடும் நிலை – 3. (14 – ம் நாள்)

D) லூட்டியல் நிலை – 4. (15 – 28 நாள்கள்)

63. பொருத்துக:

மாதவிடாய் நிலை ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம்

A) மாதவிடாய் நிலை – 1. LH மற்றும் FSH குறைதல்

B) பாலிக்குலார் நிலை – 2. LH – ன் உச்ச நிலை

C) அண்டம் விடுபடும் நிலை – 3. LH (அ) ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பு

D) லூட்டியல் நிலை – 4. இனப்பெருக்க ஹார்மோன் குறைதல்

A) 1 3 2 4

B) 2 4 1 3

C) 3 1 2 4

D) 4 3 2 1

விளக்கம்:

மாதவிடாய் நிலை ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம்

A) மாதவிடாய் நிலை – 1. இனப்பெருக்க ஹார்மோன் குறைதல்

B) பாலிக்குலார் நிலை – 2. LH (அ) ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பு

C) அண்டம் விடுபடும் நிலை – 3. LH – ன் உச்ச நிலை

D) லூட்டியல் நிலை – 4. LH மற்றும் FSH குறைதல்

64. மனிதரில் அகக்கருவுறுதலானது பிறப்புறுப்புப் பாதையில் உள்ள அண்டநாளத்தின் எந்த பகுதியில் நடைபெறுகிறது.

A) சைகோட்

B) ஸ்குரூட்டம்

C) ஆம்புல்லா

D) மெடுல்லா

விளக்கம்: மனிதரில் அகக்கருவுறுதலானது, பிறப்புறுப்புப் பாதையில் உள்ள அண்டநாளத்தின் ஆம்புல்லா பகுதியில் நடைபெறுகிறது. பாலிக்கிளிலிருந்து விடுபட்ட அண்டம் 24 மணிநேரம் மட்டுமே உயிரிடுன் இருக்கும். எனவே கருவுறுதல், அண்டம் விடுபட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக நடைபெற வேண்டும்.

65. ஒவ்வொரு மாதமும் அண்டம் அல்லது முட்டையானது பாலிக்கிளிலிருந்து வெடித்து வெளியேற்றப்படும் நிலை_______

A) மாதவிடாய் நிலை

B) பாலிக்குலார் நிலை

C) அண்டம் விடுபடும் நிலை

D) லூட்டியல் நிலை

விளக்கம்: பொதுவாக ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டையானது அண்டகத்தில் முதிர்ச்சியுறுகிறது. அண்டம் அல்லது முட்டையானது பாலிக்கிளிலிருந்து வெடித்து வெளியேற்றப்படுவது அண்டம் விடுபடும் நிலை எனப்படும். கருவுற்ற முட்டையைப் பெறுவதற்கு கருப்பையானது ஒவ்வொரு மாதமும் தன்னைத் தயார்படுத்துகிறது. கருவுற்ற முட்டை பதிவதற்கு ஏதுவாக கருப்பையின் உட்சுவர் தடிமானகவும், மிருதுவாகவும் மாறுகிறது.

66. கூற்று (i): கருவுற்ற காலம் முதல் கர்ப்பகாலம் முடியும் வரை கார்பஸ்லூட்டித்தால் சுரக்கப்படும் புரோஜெஸ்டிரான் என்னும் ஹார்மோன் கருப்பையின் சுவரை தடிமனாகவும் மற்றும் மற்ற பாலிக்கிள்கள் முதிர்ச்சியடைவதைத் தடுத்தும் பராமரிக்கிறது.

கூற்று (ii): கருவுறா நிலையில் கார்பஸ்லூட்டியம் அழிவதன் காரணமாக முட்டை சிதைவுற்ற கருப்பையின் உட்சுவர் மெதுவாக உரிந்து இரத்தம் மற்றும் கோழைப் பொருளை மாதவிடாய் சுழற்சியின் மூலம் வெளியேற்றுகிறது.

A) கூற்று i, சரி, கூற்று ii தவறு

B) கூற்று i தவறு, கூற்று ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

67. கருமுட்டையில் நிகழும் விரைவான மறைமுக செல் பகுப்பின் மூலம் பல செல்களை உடைய பிளாஸ்டுலா உருவாதல் நிலை________

A) பிளத்தல்

B) பதித்தல்

C) கேஸ்ட்ருலாவாக்கம்

D) உறுப்பாதல்

விளக்கம்: கருவுற்ற முட்டையின் முதல் பிளத்தல் நிகழ்வானது 30 மணி நேரத்தில் நடைபெறுகிறது. கருமுட்டையில் நிகழும் விரைவான மறைமுக செல் பகுப்பின் மூலம் பல செல்களை உடைய பிளாஸ்டுலா உருவாதல் பிளத்தல் எனப்படுகிறது. இது சிறிய செல்களாலான வெளிப்புற படலத்தையும், பெரிய செல்களாலான உட்புற படலத்தையும் உள்ளடக்கியது.

68. கருவுறுதலுக்குப்பின் கருமுட்டையானது கீழ்க்கண்ட எந்த நிலையில் கருப்பையின் சுவரில் பதிய வைக்கப்படுகிறது.

A) பிளாஸ்மாசிஸ்ட்

B) பிளாஸ்டோசிஸ்ட்

C) லியூக்கோபிளாஸ்ட்

D) மேற்கண்ட எதுமில்லை

விளக்கம்: கருவுறுதலுக்குப்பின் 6 முதல் 7 நாள்களுக்குள் கருமுட்டையானது பிளாஸ்டோசிஸ்ட் என்னும் நிலையில் கருப்பையின் சுவரில்(எண்டோமெட்ரியம்) பதிய வைக்கப்படுகிறது. இந்நிகழ்விற்கு பதித்தல் என்று பெயர்

69. வளரும் கருவிற்கும் தாய்க்கும் இடையே தற்காலிக இணைப்பை ஏற்படுத்தும் அமைப்பு___________

A) கருமுட்டை

B) கருப்பை

C) தாய் சேய் இணைப்புத் திசு

D) எண்டோமேட்ரியம்

விளக்கம்: தாய் சேய் இணைப்புத் திசுவானது, தட்டு வடிவமான, கருப்பைச் சுவருடன் இணைந்து, வளரும் கருவிற்கும் தாய்க்கும் இடையே தற்காலிக இணைப்பை ஏற்படுத்தும் ஒரு அமைப்பாகும். இது உணவுப் பொருள்களின் பரிமாற்றம், ஆக்ஸிஜன் பரவல், நைட்ரஜன் கழிவுகளை வெளியேற்றுவது மற்றும் கார்பன் டை ஆக்ஸைடை நீக்குதல் போன்றவற்றை அனுமதிக்கிறது.

70. பொதுவாக மனிதரில் கர்ப்ப காலம்___________

A) 300 நாள்கள்

B) 290 நாள்கள்

C) 280 நாள்கள்

D) 250 நாள்கள்

71. கர்ப்ப காலத்தில் கருப்பையானது தன்னுடைய இயல்பு நிலையிலிருந்து எத்தனை மடங்கு விரிவடைகிறது.

A) 250 மடங்கு

B) 5000 மடங்கு

C) 500 மடங்கு

D) 50 மடங்கு

72. குழந்தை பிறப்பின் போது கருப்பை சுருங்குவதைத் தூண்டி கருப்பையிலிருந்து குழந்தை வெளிவரத் தேவையான விசையை அளிக்கும் ஹார்மோன்____________

A) வாஸோபிரஸின்

B) புரோலாக்டின்

C) ஆக்ஸிடோசின்

D) வளர்ச்சி ஹார்மோன்

73. ஆக்ஸிடோசின் ஹார்மோனானது கீழ்க்கண்ட எந்த சுரப்பியில் சுரக்கப்படுகிறது.

A) முன் பிட்யூட்டரி

B) பின் பிட்யூட்டரி

C) அடினோ ஹைபோபைசிஸ்

D) அட்ரிலின்

74. கூற்று (i): அண்டகத்தினால் இரண்டு முட்டையானது வெளியிடப்பட்டு இரு வேறுபட்ட விந்துவால் கருவுறுதல் நடைபெற்றால் வேறுபட்ட இரட்டையர்கள் உருவாகின்றனர்.

கூற்று (ii): ஒரு முட்டையானது ஒரு விந்துவால் கருவுறச் செய்யப்பட்டு இரண்டு கருவாக பிளவுபட்டால் ஒத்த இரட்டையர்கள் உருவாகின்றனர்.

A) கூற்று i சரி, கூற்று ii தவறு

B) கூற்று i தவறு, கூற்று ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

75. பொருத்துக:

A) கொலஸ்ட்ரம் – 1. புரோலாக்டின்

B) பின் பிட்யூட்டரி சுரக்கும் ஹார்மோன் – 2. லேக்டேசன்

C) முன் பிட்யூட்டரி சுரக்கும் ஹார்மோன் – 3. ஆக்ஸிடோசின்

D) பால்சுரப்பு – 4. சீம்பால்

A) 1 3 2 4

B) 2 4 1 3

C) 3 1 2 4

D) 4 3 1 2

விளக்கம்:

A) கொலஸ்ட்ரம் – 1. சீம்பால்

B) பின் பிட்யூட்டரி சுரக்கும் ஹார்மோன் – 2. ஆக்ஸிடோசின்

C) முன் பிட்யூட்டரி சுரக்கும் ஹார்மோன் – 3. புரோலாக்டின்

D) பால்சுரப்பு – 4. லேக்டேசன்

76. பால் சுரப்பியின் நுண்குழல்களிலிருந்து பால் உற்பத்தியாதலைத் தூண்டும் ஹார்மோன்_________

A) புரோலாக்டின்

B) ஆக்சிடோசின்

C) கொனோடோட்ரோபின்

D) வாஸோப்ரசின்

77. பால் சுரப்பியிலிருந்து பால் வெளியேறுதலை தூண்டும் ஹார்மோன்___________

A) புரோலாக்டின்

B) ஆக்சிடோசின்

C) வாஸோப்ரசின்

D) கொனோடோட்ரோபின்

78. பிறந்த குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியானது கீழ்க்கண்ட எதன் மூலம் அதிக அளவில் கிடைக்கிறது.

A) சீம்பாள்

B) கொலஸ்ட்ரம்

C) புட்டிப்பால்

D) A, B இரண்டும்

விளக்கம்: குழந்தை பிறப்பிற்குப் பிறகு முதல் 2 நாட்களிலிருந்து 3 நாட்களுக்குள் மார்பகங்களால் சுரக்கப்படும் பால் சீம்பால் (கொலஸ்ட்ரம்) எனப்படும். பிறந்த குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புத் திறனை அளிக்கக்கூடிய நோய் எதிர்ப்புப் பொருள்களை இது கொண்டுள்ளது.

79. இனப்பெருக்க ஆரோக்கியம் என்பது இனப்பெருக்கத்திறன், கருவுறுதல், பாதுகாப்பான குழந்தை பிறப்பு மற்றும் தாய் சேய் உயிர் வாழ்வதற்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாகும் எனக் கூறிய அமைப்பு_________

A) உலக சுற்றுச்சூழல் ஆணையம்

B) மாநில பொதுப்பணி ஆணையம்

C) உலக சுகாதார ஆணையம்

D) மாநில சுகாதார ஆணையம்

விளக்கம்: உலக சுகாதார அமைப்பின்படி, இனப்பெருக்க ஆரோக்கியம் என்பது இனப்பெருக்கத்திறன், கருவுறுதல், பாதுகாப்பான குழந்தை பிறப்பு மற்றும் தாய் சேய் உயிர் வாழ்வதற்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாகும்.

80. கீழ்க்கண்டவற்றுள் தேசிய குடும்ப நலத்திட்டம் சார்ந்த கொள்கைகளுல் பொருத்தமல்லாதது.

A) தாய் சேய் நலம் பேணுதல்.

B) தாய், சேய் மற்றும் குழந்தைகளுக்கு நோய்த் தடைகாப்பு ஏற்படுத்துதல்.

C) கருவுற்ற பெண்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் முறையான உணவூட்டம்

D) கருத்தடை சாதனங்களை அறவே ஒழித்தல்.

விளக்கம்: கருத்தடை சாதனங்களை முறையாகப் பயன்படுத்துவதற்கான கல்வியறிவு. தாய் சேய் நலம் பேணுதல். தாய், சேய் மற்றும் குழந்தைகளுக்கு நோய்த் தடைகாப்பு ஏற்படுத்துதல். கருவுற்ற பெண்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் முறையான உணவூட்டம்.

81. மக்கள்தொகையின் எண்ணிக்கையிலும் அளவிலும் திடீரென ஏற்படக்கூடிய அதிகரிப்பு_____________

A) மக்கள்தொகை பெருக்கம்

B) மக்கள்தொகை அடர்த்தி

C) பாலின விகிதம்

D) மக்கள்தொகை வெடிப்பு

விளக்கம்: மக்கள்தொகையின் எண்ணிக்கையிலும் அளவிலும் திடீரென ஏற்படக்கூடிய அதிகரிப்பு மக்கள்தொகை வெடிப்பு எனப்படும். மக்கள்தொகை உயர்வின் உள்ளார்ந்த ஆபத்துக்களை உணர்ந்த இந்திய அரசு, மக்கள்தொகை உயர்வினைக் கண்காணிக்கவும், கட்டுபடுத்தவும் குடும்ப கட்டுப்பாடு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

82. இந்தியாவில் தேசியக் குடும்ப நலத்திட்டமானது உருவாக்கப்பட்ட ஆண்டு__________

A) 1942

B) 1952

C) 1962

D) 1972

விளக்கம்: தேசியக் குடும்ப நலத்திட்டமானது இந்தியாவில் 1952-ல் உருவாக்கப்பட்டது. உலக அளவில் குடும்ப நலத்திட்டத்தை உருவாக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் திகழ்கிறது.

83. உலகலாவிய நலம் சார்ந்த அளவுகோலாக திகழும் திட்டம்_____________

A) தேசிய குடும்ப நலத்திட்டம்

B) மாநில குடும்ப நலத்திட்டம்

C) தேசிய சுகாதார திட்டம்

D) குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம்

விளக்கம்: குடும்பம் மற்றும் சமுதாய நலன் கருதி, பொறுப்புணர்வின் அடிப்படையில் இளம் தம்பதியர் தாமாகவே முன்வந்து குடும்பக் கட்டுபாட்டு முறைகளை மேற்கொள்ளுதல் குடும்பநலத் திட்டமாகும். உலகலாவிய நலம் சார்ந்த அளவுகோலாக குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் திகழ்வதால் உலக சுகாதார அமைப்பும் இதனை வலியுறுத்துகிறது.

84. இந்தியாவில் குடும்ப நல மேம்பாட்டிற்கான குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைக் குறிக்கும் குறியீடு.

A) நேரான சிவப்பு வடிவ முக்கோண குறியீடு

B) தலைகீழான சிவப்பு வடிவ முக்கோண குறியீடு

C) நேரான மஞ்சள் வடிவ முக்கோண குறியீடு

D) தலைகீழான மஞ்சள் வடிவ முக்கோண குறியீடு

விளக்கம்: தலைகீழான சிவப்பு வடிவ முக்கோண குறியீடு இந்தியாவில் குடும்ப நல மேம்பாட்டிற்கான குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைக் குறிக்கிறது. இது குறிப்பாக அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் குடும்ப நல மையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்படுவோர்க்கு குடும்பக் கட்டுபாடு தொடர்பாக உதவி மற்றும் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. ‘சிறு குடும்பமே சீரான வாழ்வு’ என்ற வாசகத்துடன் இந்த தலைகீழான சிவப்பு வடிவ முக்கோண குறியீடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

85. கருத்தரித்தலைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான கருத்தடை முறைகளுல் தவறானது.

A) ஹார்மோன் முறைகள்

B) கருப்பையினுள் பொருத்தப்படும் கருத்தடை சாதனங்கள்

C) அறுவை சிகிச்சை முறைகள்

D) கருக்கலைப்பு

86. பாலியல் தொடர்பினால் ஏற்படும் நோய்கள்__________

A) சிபிலிஸ்

B) எய்ட்ஸ்

C) A, B இரண்டும்

D) மஞ்கள் காமாலை

87. இந்தியாவில் உள்ள கருத்தடைச் சாதனங்கள்______________

A) லிப்பிஸ் லூப்

B) காப்பர்-C

C) காப்பர்-டி

D) A, C இரண்டும்

விளக்கம்: இந்தியாவில் நடைமுறையில் உள்ள இரண்டு சாதனங்கள் லிப்பிஸ் லூப் மற்றும் காப்பர்-டி ஆகும். இவை தாமிரம் மற்றும் பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இவை கருப்பையினுள் பொருத்தப்பட்டதிலிருந்து 3 ஆண்டுகள் வரை இருக்கும்.

88. பொருத்துக:

A) வாசக்டெமி – 1. அண்டநாள துண்டிப்பு

B) டியுபெக்டமி – 2. மே 28

C) சிறுநீர்ப்பை அழற்சி – 3. விந்துநாள துண்டிப்பு

D) மாதவிடாய் சுகாதார நாள் – 4. 20 முதல் 50 வயது

A) 1 3 2 4

B) 2 4 1 3

C) 3 1 4 2

D) 4 3 1 2

விளக்கம்:

A) வாசக்டெமி – 1. விந்துநாள துண்டிப்பு

B) டியுபெக்டமி – 2. அண்டநாள துண்டிப்பு

C) சிறுநீர்ப்பை அழற்சி – 3. 20 முதல் 50 வயது

D) மாதவிடாய் சுகாதார நாள் – 4. மே 28

89. எந்த ஆண்டு முதல் சுகாதார அமைச்சகத்தால் மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின் மூலம் நாப்கின்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.

A) 2010

B) 2011

C) 2013

D) 2016

விளக்கம்: சுகாதார அமைச்சகத்தால் 2011 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின் மூலம் நாப்கின்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.

90. தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட எந்த அமைப்பின் மூலம் பள்ளிகளில் நாப்கின்களை எரிப்பதற்கான மலிவு விலை எரியூட்டிகள் வழங்கப்பட்டது.

A) யுனெஸ்கோ

B) யுனிசெஃப்

C) உலக சுகாதார ஆணையம்

D) உலக தர ஆணையம்

விளக்கம்: தமிழ்நாட்டில் யுனிசெஃப் அமைப்பானது, பள்ளிகளில் நாப்கின்களை எரிப்பதற்கான மலிவு விலை எரியூட்டிகளை வழங்கியதுடன், அவற்றை சிதைப்பதற்கான (மட்கச் செய்தல்) குழிகளையும் ஏற்படுத்தியது.

10th Science Lesson 18 Questions in Tamil

18] மரபியல்

1. ஓர் உயிரியின் வெளிப்புறத்தோற்றத்திற்கும், உயிரியல் செயல்பாடுகளுக்கும் காரணமாக அமைவது.

A) குரோமோசோம்கள்

B) சென்ட்ரோசோம்

C) ஜீன்கள்

D) டி.என்.ஏ

விளக்கம்: ஜீன்கள் வெளிப்புறத்தோற்றத்திற்கும், உயிரியல் செயல்பாடுகளுக்கும் காரணமாக அமைகின்றன.

2. மரபணுக்கள், மரபியல் மாற்றம் மற்றும் உயிரிகளில் பாரம்பரியமாதல் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு____________

A) மரபியல்

B) செல் உயிரியல்

C) ஜீனாக்கவியல்

D) மரபணுவியல்

விளக்கம்: மரபணுக்கள், மரபியல் மாற்றம் மற்றும் உயிரிகளில் பாரம்பரியமாதல் பற்றிப் படிக்கும் அறிவியல் மரபியல் எனப்படும்.

3. கூற்று (i): பாரம்பரியம் என்பது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குப் பண்புகள் கடத்தப்படுவதாகும்.

கூற்று (ii): வேறுபாடு என்பது ஒரே சிற்றினத்தைச் சார்ந்த உயிரிகளிடையே மற்றும் ஒத்த பெற்றோரிடமிருந்து உருவாகும் சந்ததிகளுக்கிடையே உள்ள மாறுபாடுகளைக் குறிப்பதாகும்.

A) கூற்று i சரி, ii தவறு

B) கூற்று i, தவறு ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

4. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குப் பண்புகள் கடத்தப்படுவது கீழ்க்கண்ட எதன் மூலம் நடைபெறுகிறது.

A) செல்கள்

B) திசுக்கள்

C) குரோமோசோம்கள்

D) சென்ட்ரோசோம்கள்

5. மரபியலின் அடிப்படைத் தத்துவங்களைத் தனது சோதனைகள் மூலம் கண்டுபிடித்தவர்__________

A) டார்வின்

B) ப்ரௌவுன்

C) டி. மோரிஸ்

D) ஜோகன் மென்டல்

விளக்கம்: மெண்டல் (1822-1884) என்ற ஆஸ்திரிய துறவி மரபியலின் அடிப்படைத் தத்துவங்களைத் தனது சோதனைகள் மூலம் கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்புகள் நவீன மரபியலுக்கு அடித்தளமிட்டன.

6. கிரிகன் ஜோகன் மெண்டல் பற்றியக் கருத்துக்களுல் தவறானதைக் கண்டறி.

A) மெண்டல் 1822 ம் ஆண்டு செக்கஸ்லோவியாவிலுள்ள சிலிசியன் என்ற ஊரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

B) இவர் தன் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பதினெட்டாம் வயதில் பிரன் என்ற ஊரில் உள்ள அகஸ்தினியன் துறவி மடத்தில் துறவியாக நுழைந்தார்.

C) இவர் இயற்பியல், கணிதம் மற்றும் இயற்கை அறிவியலில் பயிற்சி பெற இங்கிலாந்து பல்கலைக்கழகத்துக்குச் சென்றார்.

D) இவர் 1854 ஆம் ஆண்டு மீண்டும் மடத்துக்கு வந்து பாதிரியாராகவும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

விளக்கம்: மெண்டல் 1822 ம் ஆண்டு செக்கஸ்லோவியாவிலுள்ள சிலிசியன் என்ற ஊரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பதினெட்டாம் வயதில் பிரன் என்ற ஊரில் உள்ள அகஸ்தினியன் துறவி மடத்தில் துறவியாக நுழைந்தார். இங்கிருந்து இயற்பியல், கணிதம் மற்றும் இயற்கை அறிவியலில் பயிற்சி பெற வியன்னா பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். 1854 ஆம் ஆண்டு மீண்டும் மடத்துக்கு வந்து பாதிரியாராகவும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

7. கிரிகர் ஜோகன் மெண்டல் தன் சோதனைக்கு பயன்படுத்திய தாவரம்___________

A) அவரை

B) துவரை

C) பட்டாணி

D) செம்பருத்தி

விளக்கம்: கிரிகர் ஜோகன் மெண்டல் தன் ஓய்வு நேரத்தில் தோட்டத்தில் உள்ள பட்டாணிச் செடியில் புகழ்மிக்க வரலாற்றுச் சிறப்புடைய அவரது சோதனைகளைச் செய்தார். இந்தச் சோதனைகளை மடத்தில் தங்கியிருந்து 1856 முதல் 1865 வரை ஒன்பது வருடங்கள் செய்தார். 34 வகைக்குட்பட்ட 10000 தாவரங்களைத் தனது சோதனைகளுக்கு உட்படுத்தினார். ஒவ்வொரு தாவரமும் மற்ற தாவரத்திலிருந்து பல வகைகளில் வேறுப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்.

8. கிரிகர் ஜோகன் மென்டல் பட்டாணிச் செடியில் தன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பண்புகளின் எண்ணிக்கை___________

A) ஏழு ஜோடி

B) எட்டு ஜோடி

C) பதினான்கு

D) A, C இரண்டும்

விளக்கம்: கிரிகர் ஜோகன் மென்டல் 34 வகைக்குட்பட்ட 10000 தாவரங்களைத் தனது சோதனைகளுக்கு உட்படுத்தினார். ஒவ்வொரு தாவரமும் மற்ற தாவரத்திலிருந்து பல வகைகளில் வேறுப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார். இவ்வாறு அவர் ஏழு ஜோடி பண்புகளில் வேறுபட்ட தாவரங்களைத் தனது ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்து தன் ஆய்வுகளை மேற்கொண்டார்.

9. பொருத்துக:

உட்படுத்தப்பட்ட பண்பு ஓங்கு பண்பு

A) விதையின் வடிவம் – 1. உப்பியது

B) விதையின் நிறம் – 2. மஞ்சள்

C) விதையுறையின் நிறம் – 3. நிறமுடையது

D) கனியின் வடிவம் – 4. உருண்டை

A) 4 3 2 1

B) 4 2 3 1

C) 4 1 2 3

D) 4 2 1 3

விளக்கம்:

உட்படுத்தப்பட்ட பண்பு ஓங்கு பண்பு

A) விதையின் வடிவம் – 1. உருண்டை

B) விதையின் நிறம் – 2. மஞ்சள்

C) விதையுறையின் நிறம் – 3. நிறமுடையது

D) கனியின் வடிவம் – 4. உப்பியது

10. பொருத்துக:

உட்படுத்தப்பட்ட பண்பு ஒடுங்கு பண்பு

A) விதையின் வடிவம் – 1. சுருங்கியது

B) விதையின் நிறம் – 2. வெள்ளை

C) விதையுறையின் நிறம் – 3. மஞ்சள்

D) கனியின் நிறம் – 4. பச்சை

A) 4 3 2 1

B) 1 2 3 4

C) 1 4 2 3

D) 4 2 1 3

விளக்கம்:

A) விதையின் வடிவம் – 1. சுருங்கியது

B) விதையின் நிறம் – 2. பச்சை

C) விதையுறையின் நிறம் – 3. வெள்ளை

D) கனியின் நிறம் – 4. மஞ்சள்

11. மெண்டல் தன் ஆய்வுக்கு உட்படத்தபட்ட பண்பு மற்றும் ஓங்கு பண்புடன் பொருந்தாததைக் கண்டறி.

A) கனியின் நிறம் – பச்சை

B) மலரின் அமைவிடம் – கோண மலர்

C) தண்டின் உயரம் – நெட்டை

D) விதையின் வடிவம் – சுருங்கியது

விளக்கம்:

A) கனியின் நிறம் – பச்சை

B) மலரின் அமைவிடம் – கோண மலர்

C) தண்டின் உயரம் – நெட்டை

D) விதையின் வடிவம் – உருண்டை

12. மெண்டல் தன் ஆய்வுக்கு உட்படத்தபட்ட பண்பு மற்றும் ஒடுங்கு பண்புடன் பொருந்தாததைக் கண்டறி.

A) கனியின் வடிவம் – சுருங்கியது

B) மலரின் அமைவிடம் – நுனி மலர்

C) விதையின் நிறம் – மஞ்சள்

D) தண்டின் உயரம் – குட்டை

விளக்கம்:

A) கனியின் வடிவம் – சுருங்கியது

B) மலரின் அமைவிடம் – நுனி மலர்

C) விதையின் நிறம் – பச்சை

D) தண்டின் உயரம் – குட்டை

13. மெண்டல் தன் ஆய்விற்குப் பட்டாணிச் செடியை பயன்படுத்தியதற்கான காரணங்களுல் பொருந்தாததைக் கண்டறி.

A) இதில் இயற்கையாகவே தன் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவதால், தூய தாவரங்களைப் பெருக்கம் செய்வது எளிது.

B) இதில் அயல் மகரந்தச் சேர்க்கை செய்வது மிகவும் எளிது.

C) ஆழமாக வரையறுக்கப்பட்ட பல வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளது.

D) மலர்கள் அனைத்தும் ஒருபால் தன்மை கொண்டவை.

விளக்கம்: இதில் இயற்கையாகவே தன் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவதால், தூய தாவரங்களைப் பெருக்கம் செய்வது எளிது. இதில் அயல் மகரந்தச் சேர்க்கை செய்வது மிகவும் எளிது. ஆழமாக வரையறுக்கப்பட்ட பல வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளது. மலர்கள் அனைத்தும் இருபால் தன்மை கொண்டவை.

14. மெண்டல் தன் சோதனைக்கு உட்படுத்திய பட்டாணிச் செடியின் பருவகாலம்____________

A) 4 மாதம்

B) 6 மாதம்

C) 8 மாதம்

D) 12 மாதம்

விளக்கம்: மெண்டல் தன் சோதனைக்கு உட்படுத்திய பட்டாணிச் செடியானது ஓர் ஓராண்டு தாவரமாகும். இதன் வாழ்க்கைக் காலமும் மிகக் குறுகியதாகும். எனவே குறுகிய காலத்தில் பல தலைமுறைகளை விரைவில் அறிந்து கொள்ளலாம்.

15. கூற்று (i): ஒரு பண்பின் இரு மாற்றுத் தோற்றங்களைத் தனித்தனியாகப் பெற்ற இரு தாவரங்களைக் கலவியுறச் செய்வது ஒரு பண்புக் கலப்பு ஆகும்.

கூற்று (ii): மெண்டல் தன் ஒரு பண்பு கலப்பு சோதனைக்கு எடுத்துக்கொண்ட பெற்றோர் தலைமுறையில் ஒரு தூய நெட்டைத் தாவரத்தையும் தூய குட்டைத் தாவரத்தையும் தேர்ந்தெடுத்தார்.

A) கூற்று i சரி, ii தவறு

B) கூற்று i தவறு, ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

16. மெண்டல் தன் ஒரு பண்பு கலப்பு சோதனை மூலம் முதல் சந்ததியில்(F1) பெறப்பட்ட அனைத்துத் தாவரங்களும் கீழ்க்கண்ட எந்த பண்பினை கொண்டிருந்தது.

A) நெட்டைத் தன்மை

B) குட்டைத் தன்மை

C) ஒடுங்குத் தன்மை

D) B, C இரண்டும்

விளக்கம்: முதல் சந்ததி (F1) பெற்றோர்- தூய பெற்றோர் கலப்பின் மூலம் பெறப்பட்ட விதைகளிலிருந்து தோன்றும் தாவரங்கள் முதல் சந்ததி தாவரங்கள் ஆகும். அனைத்துத் தாவரங்களும் நெட்டைத் தன்மைக் கொண்ட ஒரு பண்புக் கலப்புயிரிகள்.

17. மெண்டல் தன் ஒரு பண்பு கலப்பு சோதனை மூலம் கிடைத்த F1 சந்ததியின் ஒரு பண்புக் கலப்புயிரிகளைத் தன் மகரந்தச்சேர்க்கைக்கு உட்படுத்தும்போது கிடைத்த நெட்டை மற்றும் குட்டை தாவரங்களின் விகித முறை_____________

A) 1:3

B) 3:1

C) 1:2:1

D) 1:3:1

விளக்கம்: இரண்டாம் சந்ததி (தலைமுறை) F2 :- F1 சந்ததியின் ஒரு பண்புக் கலப்புயிரிகளைத் தன் மகரந்தச்சேர்க்கைக்கு உட்படுத்தும் போது நெட்டை மற்றும் குட்டை தாவரங்கள் 3 : 1 என்ற விகிதத்தில் தோன்றின. அவை 784 நெட்டைத் தாவரங்களும் 277 குட்டைத் தாவரங்களும் ஆகும்.

18. பொருத்துக:

A) மரபியலின் தந்தை – 1. செக்கோஸ்லோவியா

B) ஹோமோசைகஸ் – 2. வேறுபட்ட கருநிலை

C) ஹெட்டிரோசைகஸ் – 3. ஒத்த கருநிலை

D) சிலிசியன் – 4. கிரிகர் ஜோகன் மெண்டல்

A) 4 3 2 1

B) 1 2 3 4

C) 1 4 2 3

D) 4 2 1 3

விளக்கம்:

A) மரபியலின் தந்தை – 1. கிரிகர் ஜோகன் மெண்டல்

B) ஹோமோசைகஸ் – 2. ஒத்த கருநிலை

C) ஹெட்டிரோசைகஸ் – 3. வேறுபட்ட கருநிலை

D) சிலிசியன் – 4. செக்கோஸ்லோவியா

19. பொருத்துக:

A) புறத்தோற்றம் விகிதம் – 1. tt – 1

B) ஜீனாக்க விகிதம் – 2. TT – 2

C) கலப்பற்ற நெட்டை – 3. ஜீனோடைப்

D) கலப்பற்ற குட்டை – 4. பீனோடைப்

A) 4 3 2 1

B) 1 2 3 4

C) 1 4 2 3

D) 4 2 1 3

விளக்கம்:

A) புறத்தோற்றம் விகிதம் – 1. பீனோடைப்

B) ஜீனாக்க விகிதம் – 2. ஜீனோடைப்

C) கலப்பற்ற நெட்டை – 3. TT – 1

D) கலப்பற்ற குட்டை – 4. tt – 1

20. ஒரு பண்பு கலப்பின் ஜீனாக்க விகிதம்____________

A) 1:3

B) 3:1

C) 1:2:1

D) 1:3:1

21. ஒரு ஜோடி பண்புகள் தோன்றுவதற்குக் காரணமான காரணிகள்__________

A) அல்லீல்கள்

B) சென்ட்ரோசோம்கள்

C) அல்லீலோமார்ஃபுகள்

D) A, C இரண்டும்

விளக்கம் : இரு வகையான காரணிகள் ஒரு ஜோடி பண்புகள் தோன்றுவதற்குக் காரணமாக உள்ளன. அவை அல்லீல்கள் அல்லது அல்லீலோமார்ஃபுகள் எனப்படும்.

22. கூற்று (i): ஒரு பண்பின் இரு வேறுபட்ட நிலைகளுக்கான காரணிகளில் கருவுறுதல் நடைபெறும் போது, ஒரு பண்பு மட்டும் வெளிப்படுகிறது மற்றொன்று மறைக்கப்படுகிறது.

விளக்கம்: அவ்வாறு வெளிப்படும்போது வெளிப்படும் பண்பு ஓங்கு பண்பு எனவும், மறைக்கப்படும் பண்பு ஒடுங்கு பண்பு எனவும் அழைக்கப்படுகிறது.

A) கூற்று காரணம் சரி, காரணம் கூற்றிற்க்கான சரியான விளக்கமல்ல.

B) கூற்று காரணம் சரி, காரணம் கூற்றிற்க்கான சரியான விளக்கமாகும்.

C) கூற்று சரி, காரணம் தவறு

D) கூற்று தவறு, காரணம் சரி

23. மரபியல் கலப்பில் ஜீனோடைப் எவ்வாறு உருவாகிறது என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் வரைபட முறையையை உருவாக்கியவர்___________

A) R.C. புன்னட்

B) H.C. கின்னட்

C) R.H. புன்னட்

D) H.R. கின்னட்

விளக்கம்: புன்னட் கட்டம் என்பது R.C. புன்னட்டால் உருவாக்கப்பட்ட சோதனைப் பலகை ஆகும். மரபியல் கலப்பில் ஜீனோடைப் எவ்வாறு உருவாகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஒரு வரைபட முறையாகும்.

24. மெண்டல் தன் இரு பண்புக் கலப்பு சோதனைக்கு எடுத்துக்கொண்ட பண்புகள்__________

A) விதையின் வடிவம்

B) விதையின் நிறம்

C) விதையுறையின் வடிவம்

D) A, B இரண்டும்

விளக்கம்: இரண்டு இணை எதிரெதிரான பண்புகளைப் பற்றிய இனக் கலப்பு இருபண்பு கலப்பு எனப்படும். மெண்டல், விதையின் நிறம் மற்றும் வடிவத்தைத் தன் ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்தார். (விதையின் நிறம் – மஞ்சள் மற்றும் பச்சை, விதையின் வடிவம் – உருண்டை மற்றும் சுரங்கியது.

25. மெண்டலின் இரு பண்புக் கலப்பு சோதனையில் F1 சந்ததியில் வெளிப்பட்ட பண்பு__________

A) உருண்டை மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரம்

B) உருண்டை மற்றும் பச்சை நிற விதையுடைய தாவரம்

C) சுருங்கிய மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரம்

D) சுருங்கிய மற்றும் பச்சை நிற விதையுடைய தாவரம்

விளக்கம்: மெண்டல், முதலில் தூய உருண்டை வடிவம் மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரத்தை தூய சுருங்கிய வடிவம் மற்றும் பச்சை நிற விதையுடைய தாவரத்துடன் கலப்பு செய்யும்போது F1 சந்ததியில் கிடைத்த அனைத்துத் தாவரங்களும் உருண்டை மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரங்களாகக் காணப்பட்டன. சுருங்கிய பச்சை நிற விதையுடைய தாவரங்கள் F1 ல் தோன்றவில்லை. இதிலிருந்து அவர் உருண்டை மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரங்கள் ஓங்கு பண்புத் தாவரங்கள் எனவும் சுருங்கிய பச்சை நிற விதையுடைய தாவரங்கள் ஒடுங்கு பண்புத் தாவரங்கள் எனவும் கண்டறிந்தார்.

26. மெண்டலின் இரு பண்பு கலப்பு முடிவுகள் பற்றிய கூற்றுக்களுல் பொருந்தாததைத் தேர்ந்தெடு.

1) இரு பண்புக் கலப்பின் முடிவில் F2 சந்ததியில் நான்கு விதமான தாவரங்கள் தோன்றின. அவற்றில் 9 தாவரங்கள் ஓங்கு பண்புடனும் 3 தாவரங்கள் ஓர் ஓங்கு பண்பு மற்றும் ஒடுங்கு பண்புடனும் அடுத்த மூன்று தாவரங்கள் மற்றொரு ஓங்கு மற்றும் ஒடுங்கு பண்புடனும், ஒரே ஒரு தாவரம் மட்டும் இரண்டு ஓங்கு பண்புடனும் தோன்றின.

2) இரண்டு புதிய பண்புகளுடைய தாவரங்கள் தோன்றின. அவை உருண்டை வடிவப் பச்சை நிற விதைகள், சுருங்கிய மஞ்சள் நிற விதைகள், ஆகியனவாகும். இவை இரண்டாம் சந்ததியில் தோன்றிய தாவரங்கள் ஆகும்.

A) 1 சரி, 2 தவறு

B) 1 தவறு, 2 சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: இரு பண்புக் கலப்பின் முடிவில் F2 சந்ததியில் நான்கு விதமான தாவரங்கள் தோன்றின. அவற்றில் 9 தாவரங்கள் ஓங்கு பண்புடனும் 3 தாவரங்கள் ஓர் ஓங்கு பண்பு மற்றும் ஒடுங்கு பண்புடனும் அடுத்த மூன்று தாவரங்கள் மற்றொரு ஓங்கு மற்றும் ஒடுங்கு பண்புடனும், ஒரே ஒரு தாவரம் மட்டும் இரண்டு ஒடுங்கு பண்புடனும் தோன்றின.

27. கீழ்க்கண்டவற்றுள் மெண்டலின் விதிகளுல் பொருந்தாதது எது.

A) ஓங்கு தன்மையின் விதி

B) தனித்துப் பிரிதலின் விதி

C) ஒடுங்கு தன்மையின் விதி

D) சார்பின்றி ஒதுங்குதலின் விதி

விளக்கம்: ஒரு பண்பு கலப்பு மற்றும் இரு பண்புக் கலப்பு சோதனைகளின் அடிப்படையில் மெண்டல் மூன்று முக்கியமான விதிகளை முன் வைத்தார் அவை: ஓங்கு தன்மையின் விதி, தனித்துப் பிரிதலின் விதி அல்லது கேமீட்டுகளின் கலப்பற்ற தன்மையின் விதி மற்றும் சார்பின்றி ஒதுங்குதலின் விதி ஆகியனவாகும்.

28. மரபியலின் குரோமோசோம்களின் பங்கு பற்றிய கண்டுபிடிப்பிற்காக 1933 – ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்____________

A) டி. மோரிஸ்

B) T.H. மோர்கன்

C) மெண்டல்

D) கிரிகர் ஜோகன்

விளக்கம்: மரபியலில் குரோமோசோம்களின் பங்கு பற்றிய கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு 1933 ஆம் ஆண்ட T.H. மோர்கனுக்கு வழங்கப்பட்டது.

29. குரோமோசோம் என்ற சொல்லை 1888 ஆம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கிப் பயன்படுத்தியவர்________________

A) மெண்டல்

B) மோர்கன்

C) மோரிஸ்

D) வால்டேயர்

விளக்கம்: மனித உடல் பல மில்லியன் செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லின் உட்கருவிலும், குரோமோசோம்கள் என அழைக்கப்படும் மெல்லிய நூல் போன்ற அமைப்புகள் உள்ளன. வால்டேயர் என்பவர் 1888 ஆம் ஆண்டு, ‘குரோமோசோம்கள்’ என்ற சொல்லை முதன்முதலில் உருவாக்கிப் பயன்படுத்தினார். குரோமோசோம்கள் என்பவை பாரம்பரியத் தகவல்களை உள்ளடக்கிய மரபுப் பொருள்களைத் தன்னகத்தே கொண்டவை.

30. கீழ்க்கண்டக் கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.

1) டி.என்.ஏ வை உள்ளடக்கிய, நன்கு ஒடுங்கிச் சுருண்ட குரோமேட்டின் இழைகளைக் கொண்ட மரபுப் பொருள், சென்ட்ரோசோம் ஆகும்.

2) ஒரு குறிப்பிட்ட புறத்தோற்றப் பண்பு கடத்தப்படுவதற்கு காரணமான டி.என்.ஏ வின் பகுதி, ஜீன் ஆகும். ஒவ்வொரு ஜீனும் குரோமோசோமில் ஒரு குறிப்பிட்ட அமைவிடத்தில் அமைந்துள்ளன. அந்த அமைவிடம் ‘லோகஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

A) 1 சரி, 2 தவறு

B) 1 தவறு, 2 சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: டி.என்.ஏ வை உள்ளடக்கிய, நன்கு ஒடுங்கிச் சுருண்ட குரோமேட்டின் இழைகளைக் கொண்ட மரபுப் பொருள், குரோமோசோம் ஆகும். ஒரு குறிப்பிட்ட புறத்தோற்றப் பண்பு கடத்தப்படுவதற்கு காரணமான டி.என்.ஏ வின் பகுதி, ஜீன் ஆகும். ஒவ்வொரு ஜீனும் குரோமோசோமில் ஒரு குறிப்பிட்ட அமைவிடத்தில் அமைந்துள்ளன. அந்த அமைவிடம் ‘லோகஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

31. குரோமேட்டிடுகளை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் ஒன்றாக இணைப்பது___________

A) ஜீன்கள்

B) டீலோமியர்

C) குரோமோசோம்

D) சென்ட்ரோமியர்

விளக்கம்: சென்ட்ரோமியர், இரண்டு குரோமேட்டிடுகளையும் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் ஒன்றாக இணைக்கிறது. ஒவ்வொரு குரோமேட்டிடும், திருகு போல் சுருட்டப்பட்ட மெல்லிய குரோமோனீமா என்ற அமைப்பால் ஆனது. குரோமோனீமா தன் முழு நீளத்திற்கும் எண்ணற்ற மணி போன்ற குரோமோமியர்களைக் கொண்டுள்ளது. குரோமோசோம்கள் டி.என்.ஏ, ஆர்.என்.ஏ குரோமோசோம் புரதங்கள் மற்றும் சில உலோக அயனிகள் ஆகியவற்றைக் கொண்டது. இந்த குரோமோசோம் கட்டமைப்பிற்கு ஆதாரமாக விளங்குகின்றன.

32. குரோமோசோமின் இரண்டு கரங்களும் இணையும் புள்ளி_________

A) முதன்மைச் சுருக்கம்

B) டீலோமியர்

C) சென்ட்ரோமியர்

D) A, C இரண்டும்

விளக்கம்: குரோமோசோமின் இரண்டு கரங்களும் இணையும் புள்ளி, முதன்மைச் சுருக்கம் அல்லது சென்ட்ரோமியர் ஆகும். செல் பிரிதலின போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோம்களுடன் இணையும் பகுதி சென்ட்ரோமியர் ஆகும்.

33. குரோமோசோம்களின் இறுதிப் பகுதி________

A) முதன்மைச் சுருக்கம்

B) டீலோமியர்

C) சென்ட்ரோமியர்

D) இரண்டாம் நிலைச் சுருக்கம்

விளக்கம்: குரோமோசோமின் இறுதிப் பகுதி டீலோமியர் என அழைக்கப்படுகிறது. குரோமோசோமின் இரண்டு நுனிகளும் எதிரெதிர்த் தன்மை உடையன. இது அருகில் உள்ள குரோமோசோம்கள் ஒன்றுடன் ஒன்று சேருவதைத் தடுக்கிறது.

34. குரோமோசோம்களுக்கு நிலைப்புத் தன்மையை அளித்துப் பராமரிப்பது___________

A) முதன்மைச் சுருக்கம்

B) சென்ட்ரோமியர்

C) டீலோமியர்

D) இரண்டாம் நிலைச் சுருக்கம்

விளக்கம்: குரோமோசோமின் இறுதிப் பகுதி டீலோமியர் என அழைக்கப்படுகிறது. குரோமோசோமின் இரண்டு நுனிகளும் எதிரெதிர்த் தன்மை உடையன. இது அருகில் உள்ள குரோமோசோம்கள் ஒன்றுடன் ஒன்று சேருவதைத் தடுக்கிறது. குரோமோசோம்களுக்கு நிலைப்புத் தன்மையை அளித்துப் பராமரிக்கிறது.

35. குரோமோசோம்களில் இரண்டாம் நிலை சுருக்கங்களை பெற்றிருக்கும் பகுதி_____________

A) உட்கருப் பகுதி

B) டீலோமியர் பகுதி

C) உட்கருமணி உருவாக்கும் பகுதி

D) A, C இரண்டும்

விளக்கம்: சில குரோமோசோம்கள் ஏதேனும் சில பகுதிகளில் இரண்டாம் நிலைச் சுருக்கங்களையும் பெற்றிருக்கும். இந்தப் பகுதி உட்கருப் பகுதி அல்லது உட்கருமணி உருவாக்கும் பகுதி (உட்கருவில் உட்கருமணி உருவாக்கம்) என அழைக்கப்படுகிறது.

36. நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு காணப்படும் குரோமோசோம்____________

A) சாட்டிலைட் குரோமோசோம்

B) சப் மெட்டா குரோமோசோம்

C) மெட்டா குரோமோசோம்

D) டீலோ குரோமோசோம்

விளக்கம்: சில குரோமோசோம்களின் ஒரு முனையில் நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு காணப்படுகிறது. இந்த இணையுறுப்பு சாட்டிலைட் என அழைக்கப்படுகிறது. சாட்டிலைட்டைப் பெற்றுள்ள குரோமோசோம்கள், சாட் -குரோமோசோம்கள் என அழைக்கப்படுகின்றன.

37. செல்லின் முதுமையை உணர்த்தும் கடிகாரமாக செயல்படுவது____________

A) முதன்மைச் சுருக்கம்

B) டீலோமியர்

C) சென்ட்ரோமியர்

D) இரண்டாம் நிலைச் சுருக்கம்

விளக்கம்: டீலோமியர்கள் ஒவ்வொரு செல்லின் முதுமையை உணர்த்தும் கடிகாரங்களாகச் செயல்படுகின்றன. டீலோமியர்கள், குரோமோசோம்களில் காணப்படும் பாதுகாப்பு நியூக்ளியோடைட் தொடர்வரிசை ஆகும். ஒவ்வொரு முறை செல் பகுப்படையும் போதும் அவை குறுகல் அடைகின்றன. டீலோமியர்கள் மிகவும் குறுகி, தங்கள் வேலையைச் செய்ய முடியாத போது செல்கள் முதுமையடைய காரணமாகின்றன.

38. பொருத்துக:

குரோமோசோம்கள் அவற்றின் வடிவங்கள்

A) டீலோசென்ட்ரிக் – 1. V வடிவ குரோமோசோம்கள்

B) அக்ரோசென்ட்ரிக் – 2. J வடிவ (அ) L வடிவம்

C) சப் – மெட்டா சென்ட்ரிக் – 3. ஒரு குட்டையான (ம) ஒரு நீண்ட கரம்

D) மெட்டா சென்ட்ரிக் – 4. கோல் வடிவ குரோமோசோம்கள்

A) 4 2 1 3

B) 1 2 3 4

C) 1 4 2 3

D) 4 3 2 1

விளக்கம்:

குரோமோசோம்கள் அவற்றின் வடிவங்கள்

A) டீலோசென்ட்ரிக் – 1. கோல் வடிவ குரோமோசோம்கள்

B) அக்ரோசென்ட்ரிக் – 2. குட்டையான (ம) ஒரு நீண்ட கரம்

C) சப் – மெட்டா சென்ட்ரிக் – 3. J வடிவ (அ) L வடிவம் ஒரு

D) மெட்டா சென்ட்ரிக் – 4. V வடிவ குரோமோசோம்கள்

39. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தாததைக் கண்டறி.

A) டீலோசென்ட்ரிக் – சென்ட்ரோமியர் குரோமோசோமின் ஒரு முனையில் காணப்படுகிறது. இவை கோல் வடிவ குரோமோசோம்கள்.

B) அக்ரோசென்ட்ரிக் – குரோமோசோம்கள் ஒரு முனைக்கு அருகில் காணப்படுவதால், ஒரு குட்டையான கரமும் ஒரு நீண்ட கரமும் பெற்றள்ளன. இவை கோள வடிவ குரோமோசோம்கள் எனப்படுகின்றன.

C) சப் – மெட்டா சென்ட்ரிக் – சென்ட்ரோமியர் குரோமோசோமின் மையத்ததிற்கு அருகில் காணப்படுகிறது. எனவே இரண்டு சமமற்ற கரங்கள் உருவாகின்றன.

D) மெட்டா சென்ட்ரிக் – சென்ட்ரோமியர் குரோமோசோமின் மையத்தில் அமைந்து இரண்டு சம நீளமுள்ள கரங்களை உருவாக்குகிறது. இவை V வடிவக் குரோமோசோம்களாகும்.

விளக்கம்: அக்ரோசென்ட்ரிக் – குரோமோசோம்கள் ஒரு முனைக்கு அருகில் காணப்படுவதால், ஒரு குட்டையான கரமும் ஒரு நீண்ட கரமும் பெற்றள்ளன. இவை கோல் வடிவ குரோமோசோம்கள் எனப்படுகின்றன.

40. உடல் பண்புகளை நிர்ணயிக்கும் ஜீன்களைப் பெற்றுள்ள குரோமோசோம்கள்_________

A) ஆட்டோசோம்கள்

B) உடல் குரோமோசோம்கள்

C) அல்லோசோம்கள்

D) A, B இரண்டும்

விளக்கம்: யூகேரியேட்டிக் குரோமோசோம்கள் ஆட்டோசோம்கள் மற்றும் அல்லோசோம்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. உடல் பண்புகளை நிர்ணயிக்கும் ஜீன்களைப் பெற்றுள்ளவை ஆட்டோசோம்கள் (உடல் குரோமோசோம்கள்) ஆகும். ஆண் மற்றும் பெண் உயிரிகள் சம எண்ணிக்கையில் உடல் குரோமோசோம்களைப் பெற்றுள்ளன.

41. உயிரியின் பாலினத்தை நிர்ணயிக்கின்ற குரோமோசோம்கள்_________

A) அல்லோசோம்கள்

B) உடல் குரோமோசோம்கள்

C) ஹெட்டிரோசோம்கள்

D) A, C இரண்டும்.

விளக்கம்: உயிரியின் பாலினத்தை நிர்ணயிக்கின்ற குரோமோசோம்கள், அல்லோசோம்கள் எனப்படும். இவை பால் குரோமோசோம்கள் அல்லது ஹெட்டிரோசோம்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. X – குரோமோசோம்கள் மற்றும் Y – குரோமோசோம்கள் என இருவகை பால் குரோமோசோம்கள் உள்ளன. மனித இனத்தில் ஆண்கள் ஒரு X குரோமோசோமையும் ஒரு Y குரோமோசோமையும் பெற்றுள்ளனர். பெண்கள் இரண்டு X குரோமோசோம்களைப் பெற்றுள்ளனர்.

42. ஒவ்வொரு மனித செல்லிலும் பொதுவாக எத்தனை ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.

A) 23 ஜோடி

B) 22 ஜோடி

C) 21 ஜோடி

D) 18 ஜோடி

விளக்கம்: எந்த ஒரு குறிப்பிட்ட வாழும் உயிரினத்திற்க்கும் (விலங்கு அல்லது தாவரம்), குரோமோசோம் எண்ணிக்கை மாறிலியாக உள்ளது. ஒவ்வொரு மனித செல்லிலும் பொதுவாக 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இதில் 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 23 வது ஜோடி அல்லோசோம்கள் அல்லது பால் குரோமோசோம்கள் ஆகும்.

43. பொருத்துக:

A) டி.என்.ஏ – 1. இரு பண்பு கலப்பின் புறத்தோற்ற விகிதம்

B) ஆட்டோசோம்கள் – 2. ( 23 வது ஜோடீ குரோமோசோம்)

C) அல்லோசோம்கள் – 3. ( 22 ஜோடீ குரோமோசோம்கள்)

D) 9:3:3:1 – 4. டீ ஆக்ஸி ரைபோ நியூக்ளிக் அமிலம்

A) 4 2 1 3

B) 4 3 2 1

C) 1 4 2 3

D) 1 2 3 4

விளக்கம்:

A) டி.என்.ஏ – 1. இரு பண்பு கலப்பின் புறத்தோற்ற விகிதம்

B) ஆட்டோசோம்கள் – 2. ( 23 வது ஜோடீ குரோமோசோம்)

C) அல்லோசோம்கள் – 3. ( 22 ஜோடீ குரோமோசோம்கள்)

D) 9:3:3:1 – 4. டீ ஆக்ஸி ரைபோ நியூக்ளிக் அமிலம்

44. பொருத்துக:

A) கேரியோடைப் – 1. சிற்றினத்தின் வரைபட விளக்கம்

B) இடியோகிராம் – 2. X Y குரோமோசோம்

C) ஆண்கள் – 3. X குரோமோசோம்

D) பெண்கள் (23 வது ஜோடி) – 4. குரோமோசோம்களின் அளவு, வடிவம்

A) 4 1 2 3

B) 4 3 2 1

C) 1 4 2 3

D) 1 2 3 4

விளக்கம்:

A) கேரியோடைப் – 1. குரோமோசோம்களின் அளவு, வடிவம்

B) இடியோகிராம் – 2. சிற்றினத்தின் வரைபட விளக்கம்

C) ஆண்கள் (23 ஜோடி) – 3. X Y குரோமோசோம்

D) பெண்கள் (23 வது ஜோடி) – 4. X குரோமோசோம்

45. ஓர் உயிரினத்தில் செல் உட்கருவில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை, அளவு மற்றும் வடிவம்_________ எனப்படுகிறது.

A) இடியோகிராம்

B) இன்டர்பெரான்

C) கேரியோடைப்

D) A, C இரண்டும்

விளக்கம்: ஓர் உயிரினத்தில் செல் உட்கருவில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை, அளவு மற்றும் வடிவம் கேரியோடைப் எனப்படுகிறது.

46. கூற்று (i): சிற்றினத்தின் கேரியோடைப் வரைபட விளக்க படத்தில் அனைத்து மெட்டாநிலை குரோமோசோம்களும் ஒத்திசைவான குரோமோசோம் ஜோடீகளாக அவற்றின் நீளம், தடிமன், சென்ட்ரோமியரின் நிலை, வடிவம் மற்றும் பல பண்புகளின் இறங்கு வரிசையில் இடம் பெற்றுள்ளன.

கூற்று (ii): இவ்வரைபடத்தில் பால் குரோமோசோம்கள் வரிசையின் முதலில் இடம்பெற்றுள்ளன.

A) கூற்று i, சரி ii தவறு

B) கூற்று i, தவறு ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

விளக்கம்: சிற்றினத்தின் கேரியோடைப் வரைபட விளக்க படத்தில் அனைத்து மெட்டாநிலை குரோமோசோம்களும் ஒத்திசைவான குரோமோசோம் ஜோடீகளாக அவற்றின் நீளம், தடிமன், சென்ட்ரோமியரின் நிலை, வடிவம் மற்றும் பல பண்புகளின் இறங்கு வரிசையில் இடம் பெற்றுள்ளன. இவ்வரைபடத்தில் பால் குரோமோசோம்கள் வரிசையின் இறுதியில் இடம்பெற்றுள்ளன.

47. டி.என்.ஏ வின் முப்பரிமாண அமைப்பினை வெளியிட்ட அறிவியல் அறிஞர்கள்______________

A) ஜேம்ஸ் வாட்சன்

B) ஜேம்ஸ் வாட்

C) ஃபிரான்சிஸ் கிரிக்

D) A, C இரண்டும்

விளக்கம்: டி.என்.ஏ என்பது மரபுத் தகவல்களை உள்ளடக்கிய பாரம்பரியப் பொருள். இது குரோமோசோமின் மிக முக்கியக் கூறாகும். ஜேம்ஸ் வாட்சன் மற்றும் ஃபிரான்சிஸ் கிரிக் ஆகியோர் வெளியிட்ட டி.என்.ஏ வின் முப்பரிமாண அமைப்பு, பெரும்பாலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட டி.என்.ஏ மாதிரி ஆகும். ஃபிராங்களின் மற்றும் மௌரிஸ் வில்கின்ஸ் ஆகியோரின் டி.என்.ஏ X கதிர் விளிம்பு விலகல் ஆய்வின் அடிப்படையில் டி.என்.ஏ வின் முப்பரிமான மாதிரியை வாட்சன் மற்றும் கிரிக் வெளியிட்டனர்.

48. நியூக்ளிக் அமிலங்களின் மூலக்கூறு அமைப்பு பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக வாட்சன் மற்றும் கிரிக்கிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு___________

A) 1952

B) 1962

C) 1963

D) 1972

விளக்கம்: நியூக்ளிக் அமிலங்களின் மூலக்கூறு அமைப்பு பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக வாட்சன் மற்றும் கிரிக்கிற்கு 1962 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு வழங்கப்பட்டது.

49. கீழ்க்கண்டவற்றுள் பாலி நியூக்ளியோடைடு எனப்படுவது____________

A) ஆர்.என்.ஏ

B) எம்.ஆர்.என்.ஏ

C) டி.என்.ஏ

D) எஸ்.ஆர்.என்.ஏ

விளக்கம்: டி.என்.ஏ என்பது மில்லியன் கணக்கான நியூக்ளியோடைடுகளை உள்ளடக்கிய மிகப் பெரிய மூலக்கூறு ஆகும். எனவே பாலி நியூக்ளியோடைடு எனவும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நியூக்ளியோடைடுகளும் மூன்று கூறுகளை உள்ளடக்கியது.

50. டி.என்.ஏ வில் உள்ள நைட்ரஜன் காரங்கள் முறையே_____________

A) பியூரின்கள்

B) பிரிமிடின்கள்

C) ஒற்றைச் சர்க்கரை

D) A, B இரண்டும்

51. பொருத்துக:

A) டீ ஆக்சிரைபோஸ் சர்க்கரை – 1. சைட்டோசின் (ம) தைமிஸ்

B) பிரிமிடின்கள் – 2. சர்க்கரை மூலக்கூறு

C) பியூரின்கள் – 3. டி.என்.ஏ

D) பாலி நியூக்ளியோடைடு – 4. அடினைன் (ம) குவானைன்

A) 4 1 2 3

B) 2 1 4 3

C) 1 4 2 3

D) 1 2 3 4

விளக்கம்:

A) டீ ஆக்சிரைபோஸ் சர்க்கரை – 1. சர்க்கரை மூலக்கூறு

B) பிரிமிடின்கள் – 2. சைட்டோசின் (ம) தைமிஸ்

C) பியூரின்கள் – 3. அடினைன் (ம) குவானைன்

D) பாலி நியூக்ளியோடைடு – 4. டி.என்.ஏ

52. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.

1) நியூக்ளியோசைடு ஸ்ர = நியூக்ளியோசைடு + பாஸ்பேட்

2) நியூக்ளியோடைடு = நைட்ரஜன் காரம் + சர்க்கரை

A) இரண்டும் சரி

B) இரண்டும் தவறு

C) 1 சரி, 2 தவறு

D) 1 தவறு, 2 சரி

விளக்கம்:

1) நியூக்ளியோசைடு ஸ்ர = நைட்ரஜன் காரம் + சர்க்கரை

2) நியூக்ளியோடைடு = நியூக்ளியோசைடு + பாஸ்பேட்

53. வாட்சன் மற்றும் கிரிக்கின் டி.என்.ஏ மாதிரி பற்றிய கருத்துக்களுல் பொருந்தாததைத் தேர்ந்தெடு.

A) டி.என்.ஏ மூலக்கூறு நான்கு பாலிநியூக்ளியோடைடு இழைகளால் ஆனது.

B) இந்த இழைகள் இரட்டைச் சுருள் அமைப்பை உருவாக்குகின்றன. இவ்விழைகள் ஒன்றுக்கொன்று எதிர் இணை இயல்புடன் எதிரெதிர் திசைகளில் செல்கின்றன.

C) மையத்தில் உள்ள நைட்ரஜன் காரங்கள், சர்க்கரை – பாஸ்பேட் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகள் டி.என்.ஏ வின் முதுகெலும்பாக உள்ளன.

D) நைட்ரஜன் காரங்கள் இணைவுறுதல், எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட விதத்திலேயே அமைகிறது. அவை எப்பொழுதும் ஹைட்ரஜன் பிணைப்புகளால் இணைக்கப்படுகின்றன. இத்தகைய இணைவுறுதல் நிரப்பு கார இணைவுறுதல் என்று அழைக்கப்படுகிறது.

விளக்கம்: டி.என்.ஏ மூலக்கூறு இரண்டு பாலிநியூக்ளியோடைடு இழைகளால் ஆனது.

54. வாட்சன் மற்றும் கிரிக்கின் டி.என்.ஏ மாதிரி பற்றிய கருத்துக்களுல் பொருந்தாததைத் தேர்ந்தெடு.

1) ஹைட்ரஜன் காரங்களுக்கு இடையேயான நைட்ரஜன் பிணைப்பு டி.என்.ஏ விற்கு நிலைப்புத் தன்மையைத் தருகிறது.

2) இரட்டைச் சுருள் அமைப்பின் ஒவ்வொரு சுற்றும் 34A0 (3.4nm) அளவிலானது. ஒரு முழு சுற்றில் பத்து கார இணைகள் உள்ளன.

3) இரட்டைச் சுருளில் உள்ள நியூக்ளியோடைடுகள் பாஸ்போ டை எஸ்டர் பிணைப்புகளால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

A) 1 மட்டும் தவறு

B) 2, 3 மட்டும் தவறு

C) அனைத்தும் சரி

D) அனைத்தும் தவறு

விளக்கம்: நைட்ரஜன் காரங்களுக்கு இடையேயான ஹைட்ரஜன் பிணைப்பு டி.என்.ஏ விற்கு நிலைப்புத் தன்மையைத் தருகிறது. இரட்டைச் சுருள் அமைப்பின் ஒவ்வொரு சுற்றும் 34A0 (3.4nm) அளவிலானது. ஒரு முழு சுற்றில் பத்து கார இணைகள் உள்ளன. இரட்டைச் சுருளில் உள்ள நியூக்ளியோடைடுகள் பாஸ்போ டை எஸ்டர் பிணைப்புகளால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

55. எர்வின் சார்காஃபி கூற்றுப்படி டி.என்.ஏ வில் எப்பொழுதும்____________

A) அடினைனின் விகிதமும் தைமினின் விகிதமும் சமமாக இருக்கும்.

B) குவானைனின் விகிதமும் சைட்டோசைனின் விகிதமும் சமமாக இருக்கும்.

C) அடினைனின் விகிதம் தைமினின் விகிதத்தைவிட குறைவாக இருக்கும்.

D) A, B இரண்டும்

56. டி.என்.ஏ இரட்டிப்பாதல் நிகழ்வு பற்றிய கருத்துக்களில் சரியானதைக் கண்டறி.

1) இரட்டிப்பாதல் செயல்பாட்டின் பொழுது டி.என்.ஏ மூலக்கூறு தன் அமைப்பை ஒத்த நகல்களை உருவாக்குகிறது.

2) டி.என்.ஏ மூலக்கூறின் இரு இழைகளும் நிரப்பு கார இணைகளைப் பெற்றுள்ளன. ஒவ்வொரு இழையிலும் உள்ள நியூக்ளியோடைடுகள் புதிய இழை உருவாக்குவதற்கான தகவல்களை அளிக்கின்றன.

3) ஒவ்வொரு முறை செல் பகுப்படையும் பொழுதும் இரண்டு சேய் செல்களும் தாய் செல் போன்றே சரியாக அதே மரபியல் தகவல்களைப் பெற்றுள்ளன.

A) அனைத்தும் சரி

B) அனைத்தும் தவறு

C) 1, 2 மட்டும் சரி

D) 2, 3 மட்டும் சரி

57. டி.என்.ஏ வின் இரண்டு இழைகளையும் பிரிக்கும் நொதி__________

A) எண்டோநியூக்ளியஸ்

B) ரெஸ்ட்ரிக்ஸன்

C) ஹெலிகேஸ்

D) டோபோஐசோமெரேஸ்

விளக்கம்: இரட்டிப்பாதல் தொடங்கும் இடத்தில் ஹெலிகேஸ் என்ற நொதி இணைகிறது. ஹெலிகேஸ், டி.என்.ஏ வின் இரண்டு இழைகளையும் பிரிக்கிறது. டோபோஐசோமெரேஸ் நொதி இரட்டிப்பாதல் கவையின் மேலே உள்ள இரட்டைச் சுருளை பிரித்து, அவை பிரியும் பொழுது ஏற்பட்ட முறுக்கல்களை நீக்குகிறது. பிரிந்த ஒவ்வொரு டி.என்.ஏ இழையும் புதிய டி.என்.ஏ இழைக்கான ‘மாதிரி உரு’ போன்று செயல்படுகின்றன.

58. டி.என்.ஏ க்களை இணைக்கும் நொதி_________

A) எண்டோநியூக்ளியஸ்

B) லிகேஸ்

C) ஹெலிகேஸ்

D) டோபோஐசோமெரேஸ்

59. டி.என்.ஏ வின் முக்கியத்துவத்துவம் பற்றிய கருத்துக்களில் பொருந்தாதது எது.

1) இது மரபியல் தகவல்களை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறது.

2) இது கொழுப்புகள் உருவாக்கத்திற்குத் தேவையான தகவல்களை பெற்றுள்ளது.

3) ஒரு உயிரினத்தின் வளர்ச்சி சார் மற்றும் வாழ்வியல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.

A) 1, 3 மட்டும் தவறு

B) 3 மட்டும் தவறு

C) 2 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: இது மரபியல் தகவல்களை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறது. இது புரதங்கள் உருவாக்கத்திற்குத் தேவையான தகவல்களை பெற்றுள்ளது. ஒரு உயிரினத்தின் வளர்ச்சி சார் மற்றும் வாழ்வியல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.

60. மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை___________

A) 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்

B) 22 ஆட்டோசோம்கள் மற்றும் 1 அல்லோசோம்கள்

C) 46 ஆட்டோசோம்கள்

D) 1 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 22 ஜோடி அல்லோசோம்கள்

விளக்கம்: மனிதனில் உள்ள 23 ஜோடி குரோமோசோம்களில் 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி (23 வது ஜோடி) பால் குரோமோசோம்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

61. மனித இனத்தில் பெண் உயிரியில் காணப்படும் ஒரே மாதிரியான குரோமோசோம் அமைப்பிற்கு____________என்று பெயர்

A) ஹோமோசைகஸ்

B) ஹெட்டிரோசைகஸ்

C) ஹோமோகேமீட்டிக்

D) ஹெட்டிரோகேமீட்டிக்

விளக்கம்: பெண் கேமீட்டுகள் அல்லது அண்ட செல்கள் ஒரே மாதிரியான குரோமோசோம் அமைப்பை (22 + X) பெற்றுள்ளன. ஆகவே, மனித இனத்தின் பெண் உயிரிகள் ஹோமோகேமீட்டிக் ஆகும்.

62. கூற்று (i): ஆண் கேமீட்டுகள் அல்லது விந்தணுக்கள் இரண்டு வகைப்படும். இரண்டு வகைகளும் சம விகிதத்தில் உருவாகின்றன. அவை (22 + X) குரோமோசோம்களை உடைய விந்தணுக்கள் மற்றும் (22 + Y) குரோமோசோம்களை உடைய விந்தணுக்கள்.

கூற்று (ii): மனித இனத்தில் ஆண் உயிரிகள் ஹெட்டிரோகேமீட்டிக் என அழைக்கப்படுகின்றனர்.

A) கூற்று i சரி, ii தவறு

B) கூற்று i தவறு, ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

63. மனிதனில் பாலின நிர்ணயம் பற்றிய கூற்றுக்களில் சரியானதைக் கண்டறி.

A) அண்டம் (X), X – குரோமோசோம் கொண்ட விந்தணுவோடு இணைந்தால், XX உயிரி (பெண்) உருவாகிறது.

B) அண்டம் (X), Y – குரோமோசோம் கொண்ட விந்தணுவோடு இணைந்தால் XY – உயிரி (ஆண்) உருவாகிறது.

C) பாலினத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது தந்தை உருவாக்கும் விந்தணுக்களே ஆகும்.

D) குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பதில் தந்தைக்கு நிகரான பங்கு தாய்க்கும் உள்ளது.

விளக்கம்: குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பதில் தாய்க்கு எவ்விதப் பங்கும் இல்லை.

64. சடுதி மாற்றம் என்ற சொல்லை 1901 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர்_________

A) டி. மோரிஸ்

B) டி. மோர்கன்

C) ஹியூசோ டீ விரிஸ்

D) வாட்சன் மற்றும் கிரிக்

விளக்கம்: ஈனோத்தீரா லாமார்க்கியானா, மாலை நேர பிரிம்ரோஸ் வகை தாவரத்தில், தாம் கண்டறிந்த புறத்தோற்றப் பண்பு மாற்றங்களின் அடிப்படையில் 1901 ஆம் ஆண்டு ஹியூகோ டீ விரிஸ் என்பவர் ‘சடுதிமாற்றம்’ என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார். பரம்பரையாகத் தொடரக்கூடிய, திடீரென ஓர் உயிரியின் மரபுப் பொருளில் திடீரென ஏற்படும் மாற்றம் ‘சடுதிமாற்றம்’ எனப்படும்.

65. ஜீன்களின் எண்ணிக்கை மற்றும் அமைப்பில் மாற்றம் ஏற்படக் காரணம்___________

A) நீக்கமடைதல்

B) இரட்டிப்பாதல்

C) தலைகீழ் மாற்றம்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: பொதுவாக செல் பகுப்பின் போது ஏற்படும் தவறுகளால் குரோமோசோம் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. குரோமோசோம்களில் ஏற்படும் நீக்கமடைதல், இரட்டிப்பாதல், தலைகீழ் மாற்றம் மற்றும் இடம்பெயர்தல் ஆகியவற்றின் விளைவாக ஜீன்களின் எண்ணிக்கை மற்றும் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

66. கீழ்க்கண்டவற்றுள் குரோமோசோமின் பன்மய நிலையைக் குறிப்பது__________

A) டிப்பிளாய்டி

B) யூபிளாய்டி

C) அன்யூபிளாய்டி

D) B, C இரண்டும்

விளக்கம்: ஒரு செல்லில் இடம்பெற்றுள்ள குரோமோசோம் எண்ணிக்கை அதிகரித்தல் மல்லது குறைதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. அது பன்மய நிலை(பிளாய்டி) எனப்படுகிறது. பன்மய நிலை இரு வகைப்படும். அவை: யூபிளாய்டி மற்றும் அன்யூபிளாய்டி ஆகியனவாகும்.

67. குரோமோசோம் அமைப்பு அல்லது எண்ணிக்கையில் ஏற்படும் திடீர் மாற்றம்___________

A) ஜீன் சடுதிமாற்றம்

B) மரபு சடுதிமாற்றம்

C) குரோமோசோம் சடுதிமாற்றம்

D) பிளாய்டி சடுதிமாற்றம்

விளக்கம்: குரோமோசோம் அமைப்பு அல்லது எண்ணிக்கையில் ஏற்படும் திடீர் மாற்றம், குரோமோசோம் சடுதிமாற்றம் என அழைக்கப்படுகிறது.

68. உயிரிகள் வழக்கமான இருமய குரோமோசோம்களை விட அதிக எண்ணிக்கையில் பெற்றுள்ள நிலை____________

A) டிப்பிளாய்டி

B) யூபிளாய்டி

C) அன்யூபிளாய்டி

D) B, C இரண்டும்

விளக்கம்: உயிரிகள் வழக்கமான இருமய(2n) குரோமோசோம்களை விட அதிக எண்ணிக்கையில் பெற்றுள்ள நிலை யூபிளாய்டி எனப்படும். ஒரு உயிரி மூன்று ஒற்றைமய குரோமோசோம் தொகுப்புகளைப் பெற்றிருந்தால் அது மும்மைய நிலை (3n) எனப்படும். ஒரு உயிரி நான்கு ஒற்றைமயத் தொகுப்புகளைப் பெற்றிருந்தால் அது நான்மய நிலை(4n) எனப்படும்.

69. பெரும்பாலும் நன்மை பயக்கக் கூடிய தாவரங்கள் கீழ்க்கண்ட எந்த நிலையைக் கொண்டது.

A) ஒற்றைமய நிலை

B) இருமய நிலை

C) மும்மைய நிலை

D) நான்மய நிலை

70. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் அல்லது கூடுதலாகப் பெறுதல் என்பது___________

A) டிப்பிளாய்டி

B) யூபிளாய்டி

C) அன்யூபிளாய்டி

D) A, C இரண்டும்

விளக்கம்: தொகுப்பில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் அல்லது கூடுதலால் பெறுதல் அன்யூபிளாய்டி எனப்படும். இது மூன்று வகைப்படும் அவை மோனோசோமி (2n-1), டிரைசோமி (2n+1) மற்றும் நல்லிசோமி (2n-2).

71. பொருத்துக:

A) சடுதிமாற்றம் – 1. மரபுப் பொருளில் ஏற்படும் திடீர் மாற்றம்

B) மும்மய நிலை – 2. டவுன் நோய்க் குறைபாடு

C) நான்மய நிலை – 3. மலட்டுத்தன்மை

D) அன்யூபிளாய்டி – 4. அளவில் பெரிய பழம் மற்றும் பூக்கள்

A) 4 1 2 3

B) 2 1 4 3

C) 1 3 4 2

D) 1 2 3 4

விளக்கம்:

A) சடுதிமாற்றம் – 1. மரபுப் பொருளில் ஏற்படும் திடீர் மாற்றம்

B) மும்மய நிலை – 2. மலட்டுத்தன்மை

C) நான்மய நிலை – 3. அளவில் பெரிய பழம் மற்றும் பூக்கள்

D) அன்யூபிளாய்டி – 4. டவுன் நோய்க் குறைபாடு

72. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணை அல்லாததைக் கண்டறி:

A) மோனோசோமி – (2n-1)

B) டிரைசோமி – (2n+1)

C) நல்லிசோமி – (2n-2)

D) மும்மய நிலை – (2n-3)

73. லாங்க்டன் டவுன் என்ற மருத்துவரால் 1866 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்ட குறைபாட்டு நோய்____________

A) மலட்டுத்தன்மை

B) இரத்தசோகை

C) டவுன் நோய்

D) கல்லீரல் நோய்

விளக்கம்: டவுன் நோயானது முதன்முதலாக லாங்க்டன் டவுன் என்ற மருத்துவரால் 1866 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டது. இது 21 வது குரோமோசோமில் ஒரு கூடுதல் நகல் குரோமோசோம் (21 வது டிரைசோமி) உள்ள மரபியல் நிலை ஆகும்.

74. டவுன் நோய்க் குறைப்பாட்டினால் ஏற்புடும் அறிகுறிகளுல் பொருந்தாததைக் கண்டறி.

A) மனவளர்ச்சி குறைபாடு

B) பலவீனமான தசை அமைப்பு

C) நடத்தை சார்ந்த பிரச்சனைகள்

D) விரைவான வளர்ச்சி

விளக்கம்: மனவளர்ச்சிக் குறைபாடு, தாமதமான வளர்ச்சி, நடத்தை சார்ந்த பிரச்சனைகள், பலவீனமான தசை அமைப்பு, பார்வை மற்றும் கேட்டல் குறைபாடு ஆகியவை பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் காணப்படும்.

75. 21 வது குரோமோசோமில் ஒரு கூடுதல் நகல் குரோமோசோம் உள்ள மரபியல் நிலை___________

A) டவுன் நோய்

B) இரத்தசோகை

C) மலட்டுத்தன்மை

D) கதிர் அரிவாள் இரத்த சோகை

76. ஒரு ஜீனின் நியூக்ளிளோடைட் வரிசையில் ஏற்படும் மாற்றம்__________

A) ஜீன் சடுதிமாற்றம்

B) மரபு சடுதிமாற்றம்

C) குரோமோசோம் சடுதிமாற்றம்

D) பிளாய்டி சடுதிமாற்றம்

விளக்கம்: ஒரு ஜீனின் நியுக்ளியோடைடு வரிசையில் ஏற்படும் மாற்றங்கள் ஜீன் சடுதிமாற்றம் எனப்படும். இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நைட்ரஜன் காரங்களில் ஏற்படும் பதிலீடு செய்தல், நீக்கமடைதல், இடைச்சேர்த்தல் அல்லது தலைகீழாதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஜீன்களில் ஏற்படும் மாற்றம் ஒரு உயிரியின் இயல்புக்கு மாறான புரத உற்பத்திக்கு வழிவகுக்கிறது.

77. ஒரு உயிரியின் இயல்புக்கு மாறான புரத உற்பத்திக்கு காரணமாவது____________

A) ஜீன்களில் ஏற்படும் மாற்றம்

B) குரோமோசோமில் ஏற்படும் மாற்றம்

C) பாரம்பரிய மாற்றம்

D) தலைமுறை மாற்றம்

விளக்கம்: ஒரு ஜீனின் நியுக்ளியோடைடு வரிசையில் ஏற்படும் மாற்றங்கள் ஜீன் சடுதிமாற்றம் எனப்படும். இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நைட்ரஜன் காரங்களில் ஏற்படும் பதிலீடு செய்தல், நீக்கமடைதல், இடைச்சேர்த்தல் அல்லது தலைகீழாதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஜீன்களில் ஏற்படும் மாற்றம் ஒரு உயிரியின் இயல்புக்கு மாறான புரத உற்பத்திக்கு வழிவகுக்கிறது.

78. ஒற்றை ஜீனில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் ஏற்படும் நோய்_____________

A) டவுன் நோய்

B) இரத்தசோகை

C) மலட்டுத்தன்மை

D) கதிர் அரிவாள் இரத்த சோகை

விளக்கம்: ஒற்றை ஜீனில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் கதிர் அரிவாள் இரத்த சோகை நோய் ஏற்படுகிறது. இந்த ஜீனில் ஏற்படும் மாற்றம், ஹீமோகுளோபின் மூலக்கூறில் உள்ள புரதப் பகுதியின் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. புரத மூலக்கூறில் ஏற்பட்ட மாற்றத்தினால், இந்த ஹீமோகுளோபினைக் கொண்டுள்ள சிவப்பு இரத்த செல்கள் கதிர் அரிவாள் வடிவத்தைப் பெறுகின்றன.

79. மெண்டலின் கருத்துப்படி அல்லீல்கள் கீழ்க்கண்ட பண்புகளைப் பெற்றுள்ளன.

A) ஒரு ஜோடி ஜீன்கள்

B) பண்புகளை நிர்ணயிப்பது

C) மரபணுக்களை (ஜீன்) உருவாக்குவது

D) ஒடுங்கு காரணிகள்

80. எந்நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது.

A) பிரிதல்

B) குறுக்கே கலத்தல்

C) சார்பின்றி ஒதுங்குதல்

D) ஒடுங்கு தன்மை

விளக்கம்: இரு பண்பு கலப்பு சோதனைமுறையில் காரணிகள் தனித்தன்மையுடனும் சார்பின்றியும் கேமீட்டகளில் காணப்படுகின்றன. இக்காரணிகள் ஒவ்வொன்றும் சார்பின்றி தனித்தன்மை இழக்காமல் அடுத்த சந்ததிக்கு செல்லும்.

81. செல் பகுப்படையும் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி.

A) குரோமோசோம்

B) சென்ட்ரோசோம்

C) சென்ட்ரோமியர்

D) குரோமோனீமா

82. சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது ___________ வகை குரோமோசோம்.

A) டீலோ சென்ட்ரிக்

B) மெட்டா சென்ட்ரிக்

C) சப் – மெட்டா சென்ட்ரிக்

D) அக்ரோ சென்ட்ரிக்

83. டி.என்.ஏ வின் முதுகெலும்பாக உள்ளது ___________

A) டீ ஆக்ஸி ரைபோஸ் சர்க்கரை

B) பாஸ்பேட்

C) நைட்ரஜன் காரங்கள்

D) சர்க்கரை பாஸ்பேட்

84. பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் என்பது___________

A) நான்மய நிலை

B) அன்யூபிளாய்டி

C) யூபிளாய்டி

D) பல பன்மய நிலை

10th Science Lesson 19 Questions in Tamil

19] உயிரின் தோற்றமும் பரிணாமமும்

1. அண்டத்தின் தோற்றத்தைப் பற்றி விளக்கும் கோட்பாடு___________

A) பெருவெடிப்புக் கோட்பாடு

B) அண்ட வெளிக் கோட்பாடு

C) புவியியல் கோட்பாடு

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: உயிரினங்களின் தோற்றம் பூமியின் தோற்றத்தோடு தொடர்புடையது. பெருவெடுப்புக் கோட்பாடு அண்டத்தின் தோற்றத்தை விளக்குகிறது. இக்கோட்பாடு அண்டம் ஒரு பெரு வெடிப்பினால் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக முன்மொழிகிறது.

2. பெருவெடிப்புக் கோட்பாட்டின்படி இந்த அண்டமானது எத்தனை ஆண்டுகளுக்குமுன் தோன்றியதாக நம்பப்படுகிறது.

A) 15 மில்லியன்

B) 4.5 மில்லியன்

C) 15 பில்லியன்

D) 4.5 பில்லியன்

விளக்கம்: உயிரினங்களின் தோற்றம் பூமியின் தோற்றத்தோடு தொடர்புடையது. பெருவெடுப்புக் கோட்பாடு அண்டத்தின் தோற்றத்தை விளக்குகிறது. இக்கோட்பாடு அண்டம் ஒரு பெரு வெடிப்பினால் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக முன்மொழிகிறது.

3. அண்டமானது கீழ்க்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது.

A) விண்மீன்கள்

B) வாயு மேகங்கள்

C) தூசுகளினால் ஆன விண்மீன் மண்டலங்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: அண்டமானது விண்மீன்கள், வாயு மேகங்கள் மற்றும் தூசுகளினால் ஆன விண்மீன் மண்டலங்களை உள்ளடக்கியது. வாயு மேகங்கள் தங்களின் ஈர்ப்பு விசை காரணமாக மோதிக் கொள்ளத் தொடங்கி, அணுக்களையும், துகள்களையும் உருவாக்கின. அப்போது சூரிய மண்டலம் உருவாகி இருக்கலாம். அணுக்கள், தூசித் துகள்கள் மற்றும் வாயு அடுக்குகள் திரளாக இணைந்து கோள்களை உருவாக்கின. இவை பால்வழி விண்மீன் திரளில் சூரிய மண்டலத்தை உருவாக்கின.

4. பூமியின் தற்போதைய வயது (தோராயமாக)____________

A) 4.5 பில்லியன்

B) 4.5 மில்லியன்

C) 5 மில்லியன்

D) 5 பில்லியன்

விளக்கம்: ஏறக்குறைய 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் பூமி உருவாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பூமி தோன்றிய 500 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின் உயிரினங்கள் தோன்றின.

5. பூமி தோன்றி எத்தனை ஆண்டுகளுக்குப் பின் உயிரினங்கள் தோன்றியதாக நம்பப்படுகிறது.

A) 500 பில்லியன்

B) 500 மில்லியன்

C) 250 மில்லியன்

D) 300 பில்லியன்

6. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடந்த இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட நிகழ்வின் காரணமாக உயிரினங்கள் தோன்றி இருக்கலாம் என விளக்கும் கோட்பாடு____________

A) சுய படைப்புக் கோட்பாடு

B) உயிர்ப் பிறப்புக் கோட்பாடு

C) வேற்றுக் கிரக அல்லது காஸ்மிக் தோற்றக் கோட்பாடு

D) சிறப்புத் தோற்றக் கோட்பாடு

விளக்கம்: இக்கோட்பாட்டின்படி பூமியிலுள்ள உயிரினங்கள் யாவும் ஒரு தெய்வீக படைப்பு மேலும் கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடந்த இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட நிகழ்வின் காரணமாகவும் உயிரினங்கள் தோன்றி இருக்கலாம். உயிரினங்கள் தோன்றியதிலிருந்து இதுவரை அவற்றில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்ற கருத்தை இது வலியுறுத்துகிறது.

7. உயிரற்ற பொருட்களிலிருந்து தன்னிச்சையாக உயிர் தோன்றியதாக விளக்கும் கோட்பாடு___________

A) சுய படைப்புக் கோட்பாடு

B) உயிர்ப் பிறப்புக் கோட்பாடு

C) வேற்றுக் கிரக அல்லது காஸ்மிக் தோற்றக் கோட்பாடு

D) சிறப்புத் தோற்றக் கோட்பாடு

விளக்கம்: இக்கோட்பாட்டின்படி உயிரற்ற பொருட்களிலிருந்து தன்னிச்சையாக உயிர் தோன்றியது. மீன்கள் சேற்றில் இருந்தும், தவளைகள் ஈரமான மண்ணில் இருந்தும், பூச்சிகள் அழுகும் பொருட்களில் இருந்தும் தோன்றியதாக நம்பப்பட்டது.

8. லூயிஸ் பாஸ்டர் (1862) கீழ்க்கண்ட எந்த கோட்பாட்டின் மூலம் முன்பிருந்த உயிரியில் இருந்துதான் உயிர் தோன்றியது எனத் தெளிவுப்படுத்தினார்.

A) சுய படைப்புக் கோட்பாடு

B) உயிர்ப் பிறப்புக் கோட்பாடு

C) வேற்றுக் கிரக அல்லது காஸ்மிக் தோற்றக் கோட்பாடு

D) சிறப்புத் தோற்றக் கோட்பாடு

விளக்கம்: லூயிஸ் பாஸ்டர் (1802) அவர்களின் ஊகப்படி முன்பிருந்த உயிரியில் இருந்துதான் உயிர் தோன்றியது. கிருமி நீக்கம் செய்யப்பட்ட, காற்றுப் புகாத குடுவையில் இறந்த ஈஸ்ட்களில் இருந்து உயிர் உருவாகவில்லை. ஆனால் காற்று உட்புகும் மற்றொரு குடுவையில், இறந்த ஈஸ்ட்களில் இருந்து புதிய உயிரினங்கள் தோன்றுகின்றன என்பதை நிரூபித்தார்.

9. புவிக்கு அப்பால் விண்வெளியில் இருந்து உயிர் தோன்றியதாக விளக்கும் கோட்பாடு__________

A) சுய படைப்புக் கோட்பாடு

B) உயிர்ப் பிறப்புக் கோட்பாடு

C) வேற்றுக் கிரக அல்லது காஸ்மிக் தோற்றக் கோட்பாடு

D) சிறப்புத் தோற்றக் கோட்பாடு

விளக்கம்: புவிக்கு அப்பால் விண்வெளியில் இருந்து உயிர் தோன்றியதாக இன்றும் சில அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இதன்படி, உயிரின் அலகான ஸ்போர்கள் (பான்ஸ்பெர்மியா) புவி உள்ளிட்ட பல்வேறு கோள்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. சில வானியல் அறிஞர்கள் இன்றும் இக்கருத்தைக் கொண்டுள்ளனர்.

10. உயிர்களின் வேதிப் பரிமாற்றக் கோட்பாட்டை விளக்கியவர்கள்___________

A) ஓபாரின் (1922)

B) ஹால்டன் (1929)

C) லூயிஸ் பாஸ்டர் (1862)

D) A, B இரண்டும்

விளக்கம்: இக்கருத்தை ஓபாரின் (1922) மற்றம் ஹால்டன் (1929) ஆகியோர் வெளியிட்டனர். இதன்படி, புவியில் நிலவும் சூழலுக்கு ஏற்ப, தொடர்ச்சியான வேதி வினைகள் மூலமாக உயிர் தோன்றியது என்ற கருத்தை முன்மொழிந்தனர்.

11. ஓபாரின் மற்றும் ஹால்டன் ஆகியோர்களின் வேதிப் பரிணாமக் கூற்றினை கவனி: (சரியானதைக் கண்டறி)

1) உயிர்களின் வேதி பரிணாமக் கூற்றுப்படி முதலில் தோன்றிய உயிர் ஏற்கனவே இருந்த உயிரற்ற கனிம மூலக்கூறுகளில் இருந்து உருவாகி இருக்கலாம் என்றனர். இக்கனிம மூலக்கூறுகள் பல்வேறு கரிம மூலக்கூறுகள் உருவாக வழி வகுத்தன.

2) கனிம மூலக்கூறுகள் பல்வேறு கரிம மூலக்கூறுகள் உருவாக வழி வகுத்தன. இக்கரிம மூலக்கூறுகள் கூழ்மத் தொகுதிகளாக மாற்றம் அடைந்து உயிர்களை உருவாக்கின.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 1, 2 இரண்டும் சரி

D) 1, 2 இரண்டும் தவறு

12. தற்கால பறவைகளின் தோற்றத்திற்கு சான்றாக இருப்பது_________

A) மரபியல் சான்றுகள்

B) எலும்புத் துகள்கள்

C) தொல்லுயிரியல் சான்றுகள்

D) வரலாற்றுச் சான்றுகள்

விளக்கம்: அனைத்து உயிரினங்களும் பொது முன்னோர்களில் இருந்து தோன்றின என்ற கருத்தை இச்சான்றுகள் ஆதரிக்கின்றன. தொல்லுயிரியல் சான்றுகள், தற்கால பறவைகளின் தோற்றத்தில் ஆதாரமாக உள்ளன.

13. ஒரே மாதிரியான கரு வளர்ச்சி முறை கொண்ட பொதுவான முன்னோர்களிடம் இருந்து மரபு வழியாக உருவான உறுப்புகள் என்பது__________

A) செயல் ஒத்த உறுப்புகள்

B) எச்ச உறுப்புகள்

C) அமைப்பு ஒத்த உறுப்புகள்

D) முன்னோர் பண்பு மீட்சி

விளக்கம்: ஒரே மாதிரியான கரு வளர்ச்சி முறை கொண்ட பொதுவான முன்னோர்களிடம் இருந்து மரபு வழியாக உருவான உறுப்புகள், அமைப்பு ஒத்த உறுப்புகள் எனப்படும். பாலூட்டிகளின் முன்னங்கால்கள், அமைப்பு ஒத்த உறுப்புகள் ஆகும். எ.கா. மனிதனின் கை, பூனையின் முன்னங்கால் ஆகியவை அமைப்பு ஒத்த உறுப்புகள் ஆகும்.

14. வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கரு வளர்ச்சி முறைகளைக் கொண்ட ஒரே மாதிரியான பணிகளை செய்யும் உறுப்புகள்_________

A) செயல் ஒத்த உறுப்புகள்

B) எச்ச உறுப்புகள்

C) அமைப்பு ஒத்த உறுப்புகள்

D) முன்னோர் பண்பு மீட்சி

விளக்கம்: செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன. ஆனால் அவை வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கரு வளர்ச்சி முறைகளை கொண்டதாக உள்ளன.

15. விலங்குகளின் உடலில் உள்ள உரு வளர்ச்சி குன்றிய மற்றும் இயங்காத நிலையில் உள்ள உறுப்புகள்____________என அழைக்கப்படுகின்றன.

A) செயல் ஒத்த உறுப்புகள்

B) எச்ச உறுப்புகள்

C) அமைப்பு ஒத்த உறுப்புகள்

D) முன்னோர் பண்பு மீட்சி

விளக்கம்: விலங்குகளின் உடலில் உள்ள உரு வளர்ச்சி குன்றிய மற்றும் இயங்காத நிலையில் உள்ள உறுப்புகள் எச்ச உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன. தொடர்புடைய ஒரு சில விலங்குகளில், இதே உறுப்புகள் நன்றாக வளர்ச்சியடைந்தும் இயங்கும் நிலையிலும் காணப்படுகின்றன. குடல்வால், கண்ணிமைப் படலம், வால் முள்ளெலும்பு, தண்டுவட எலும்பின் வால் பகுதி ஆகியவை மனிதனில் காணப்படும் சில எச்ச உறுப்புகள் ஆகும்.

16. உயிரிகளில் அவற்றின் மூதாதையர்களின் பண்புகள் மீண்டும் தோன்றுவதற்கு_________என்று பெயர்.

A) செயல் ஒத்த உறுப்புகள்

B) எச்ச உறுப்புகள்

C) அமைப்பு ஒத்த உறுப்புகள்

D) முன்னோர் பண்பு மீட்சி

விளக்கம்: சில உயிரிகளில் அவற்றின் மூதாதையர்களின் பண்புகள் மீண்டும் தோன்றுவது முன்னோர் பண்பு மீட்சி எனப்படுகிறது. பிறந்த குழந்தைகளில் காணப்படும் அடர்த்தியான ரோமம் போன்றவை முன்னோர் பண்பு மீட்சிக்கான சில எடுத்துக்காட்டகளாகும்.

17. பொருத்துக:

A) செயல் ஒத்த உறுப்புகள் – 1. வளர்ச்சியற்ற வால்

B) எச்ச உறுப்புகள் – 2. கண்ணிமைப் படலம்

C) அமைப்பு ஒத்த உறுப்புகள் – 3. பறவையின் இறக்கை

D) முன்னோர் பண்பு மீட்சி – 4. திமிங்கலத்தின் துடுப்பு

A) 1 2 3 4

B) 2 1 3 4

C) 3 2 4 1

D) 4 3 1 2

விளக்கம்:

A) செயல் ஒத்த உறுப்புகள் – 1. பறவையின் இறக்கை

B) எச்ச உறுப்புகள் – 2. கண்ணிமைப் படலம்

C) அமைப்பு ஒத்த உறுப்புகள் – 3. திமிங்கலத்தின் துடுப்பு

D) முன்னோர் பண்பு மீட்சி – 4. வளர்ச்சியற்ற வால்

18. கூற்று (i): வெவ்வேறு விலங்குகளின் ஒப்பீட்டுக் கருவியல் ஆய்வுகள், பரிணாமம் பற்றிய கருத்துகளுக்கு ஆதரவாக உள்ளன.

கூற்று (ii): மீன் முதல் பாலுட்டிகள் வரை அனைத்து வகை கருக்களின் ஆரம்ப வளர்ச்சி நிலை ஒரே மாதிரியாக உள்ளது. அவற்றின் சிறப்புப் பண்புகளின் வேறுபாடு கரு வளர்ச்சியின் முந்தைய நிலைகளில் ஏற்படுகிறது.

A) கூற்று i சரி, கூற்று ii தவறு

B) கூற்று i தவறு, கூற்று ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

விளக்கம்: வெவ்வேறு விலங்குகளின் ஒப்பீட்டுக் கருவியல் ஆய்வுகள், பரிணாமம் பற்றிய கருத்துகளுக்கு ஆதரவாக உள்ளன. மீன் முதல் பாலுட்டிகள் வரை அனைத்து வகை கருக்களின் ஆரம்ப வளர்ச்சி நிலை ஒரே மாதிரியாக உள்ளது. அவற்றின் சிறப்புப் பண்புகளின் வேறுபாடு கரு வளர்ச்சியின் பிந்தைய நிலைகளில் ஏற்படுகிறது.

19. தனி உயிரியின் வளர்ச்சி நிலைகள் அவ்வுயிரி சார்ந்துள்ள தொகுதியினுடைய பரிணாம வளர்ச்சி நிலைகளை ஒத்தது என்பதை விளக்கும் வழிமுறைத் தொகுப்பு கொள்கையை வெளியிட்டவர்.

A) லூயிஸ் பாஸ்டர்

B) ஓபாரின் மற்றும் ஹால்டன்

C) எர்னஸ்ட் பர்க்னர்

D) எர்னஸ்ட் ஹெக்கல்

விளக்கம்: உயிர்வழித் தோற்ற விதி அல்லது வழிமுறைத் தொகுப்பு கொள்கையை எர்னஸ்ட் ஹெக்கல் என்பவர் வெளியிட்டார். அவரின் கொள்கைப்படி தனி உயிரியின் வளர்ச்சி நிலைகள் அவ்வுயிரி சார்ந்துள்ள தொகுதியினுடைய பரிணாம வளர்ச்சி நிலைகளை ஒத்தது.

20. பொருத்துக:

A) புதைபடிவங்கள் பற்றிய அறிவியல் பிரிவு – 1. எர்னஸ்ட் ஹெக்கல்

B) தொல்லுயிரியலின் தந்தை – 2. லூயிஸ் பாஸ்டர்

C) உயிர்வழித் தோற்ற விதி – 3. லியோனார்டோ டாவின்சி

D) உயிர்ப் பிறப்புக் கோட்பாடு – 4. தொல்லுயிரியல்

A) 1 2 3 4

B) 2 1 3 4

C) 4 3 2 1

D) 4 3 1 2

விளக்கம்:

A) புதைபடிவங்கள் பற்றிய அறிவியல் பிரிவு – 1. தொல்லுயிரியல்

B) தொல்லுயிரியலின் தந்தை – 2. லியோனார்டோ டாவின்சி

C) உயிர்வழித் தோற்ற விதி – 3. எர்னஸ்ட் ஹெக்கல்

D) உயிர்ப் பிறப்புக் கோட்பாடு – 4. லூயிஸ் பாஸ்டர்

21. எளிய உயிரினங்களில் இருந்து சிக்கலான அமைப்பு கொண்ட உயிரினங்கள் படிப்படியாக தோன்றுவது_______

A) மரபியல் வளர்ச்சி

B) புதைபடிவ வளர்ச்சி

C) தொல்லியல் வளர்ச்சி

D) பரிணாம வளர்ச்சி

விளக்கம்: பரிணாம வளர்ச்சி என்பது எளிய உயிரினங்களில் இருந்து சிக்கலான அமைப்பு கொண்ட உயிரினங்கள் படிப்படியாக தோன்றுவது என்பதை புதைபடிவ ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. தற்காலப் பறவைகளின் தோற்றத்தைத் தொல்லுயிரியல் படிவச் சான்றுகள் ஆதரிக்கின்றன.

22. முதுகெலும்புள்ளவை மற்றும் முதுகெலும்பற்றவைகளின் பரிணாமப் பாதையைப் புரிந்து கொள்ள பயன்படும் ஆய்வு முறை________

A) மரபியல் ஆய்வு முறை

B) ஆய்வக ஆய்வு முறை

C) புதைபடிவ ஆய்வு முறை

D) மேற்கண்ட எதுவுமில்லை

23. ஊர்வன மற்றும் பறவைகளுக்கு இடையேயான இணைப்பு உயிரியாகக் கருதப்படுவது____________

A) ஆர்க்கியாப்டெரிக்ஸ்

B) புதைபடிவப் பறவை

C) வெளவால்

D) A, B இரண்டும்

விளக்கம்: ஆர்க்கியாப்டெரிக்ஸ் என்பது பழங்காலப் புதைபடிவப் பறவை இது ஜீராசிக் காலத்தில் வாழ்ந்த முற்காலப் பறவை போன்ற உயிரினம் இது ஊர்வன மற்றும் பறவைகளுக்கு இடையேயான இணைப்பு உயிரியாகக் கருதப்படுகிறது. இது பறவைகளைப் போல இறகுகளுடன் கூடிய இறக்கைகளை பெற்றிருந்தது. ஊர்வன போல நீண்ட வால் நகங்களை உடைய விரல்கள் மற்றும் கூம்பு வடிவப் பற்களையும் பெற்றிருந்தது.

24. பரிணாமக் கோட்பாடுகள் பற்றிய கருத்துக்களுல் தவறானதைத் தேர்ந்தெடு:

A) பூமியின் பரிணாம வளர்ச்சியோடு சேர்ந்து உயிரினங்களும் தோன்றின என்ற கருத்து 18-ம் நூற்றாண்டின் இறுதியில் வலுப்பெறத் தொடங்கியது.

B) பரிணாமம் என்பது கால மாற்றத்திற்கு ஏற்ப உயிரினங்களில் படிப்படியாகத் தோன்றிய மாற்றங்கள் ஆகும்.

C) இயற்கைத் தேர்வுக்குத் தூண்டலாக உயிரினங்களின் குறிப்பிட்ட பண்புகளில் பல தலைமுறைகளாக மாற்றங்கள் புதிய சிற்றினங்கள் உருவாகின.

D) இத்தகைய இயற்கை மாற்ற நிகழ்வகளை லாமார்க் மற்றும் டார்வின் ஆகியோரின் பரிணாமக் கோட்பாடுகள் விளக்குகின்றன.

விளக்கம்: இயற்கைத் தேர்வுக்குத் தூண்டலாக உயிரினங்களின் குறிப்பிட்ட பண்புகளில் பல தலைமுறைகளாக மாற்றங்கள் புதிய சிற்றினங்கள் உருவாகின.

25. ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் என்பவரின் கோட்பாடானது எவ்வாறு பிரபலமாக அறியப்படுகிறது.

A) மரபு வழியாகப் பெறப்பட்ட பண்புகளின் கோட்பாடு

B) பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமைக் கோட்பாடு

C) லமார்க்கியம்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் (1744-1829) என்பார் ஒரு ஃபிரெஞ்சு இயற்கை அறிவியலாளர். அவரின் பரிணாமக் கொள்கைகளுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர். லாமார்க்கின் பரிணாமக் கோட்பாடுகள் 1809-ஆம் ஆண்டு ‘ஃபிலாசஃபிக் ஜீவாலஜிக்’ என்ற நூலில் வெளியிடப்பட்டது. இது ‘மரபுவழியாகப் பெறப்பட்ட பண்புகளின் கோட்பாடு’ அல்லது ‘பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமைக் கோட்பாடு’ அல்லது ‘லாமார்க்கியம்’ எனப் பிரபலமாக அறியப்படுகிறது.

26. லாமார்க்கியத்தின் கொள்கைகளுல் பொருந்தாததைத் தேர்ந்தெடு.

A) உயிரினங்கள் அல்லது அவற்றின் பகுதிகள் தொடர்ச்சியாக அளவில் பெரியதாக வளர்கின்றன. உயிரினங்களின் உள்ளுரைத் திறன் காரணமாக உயிரினங்களின் அளவு அதிகரிக்கின்றது.

B) சூழ்நிலையில் ஏற்படும் மாற்றம், உயிரினங்களின் தேவைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப, உயிரினங்கள் சில தகவமைப்புப் பண்புகளை உருவாக்கிக் கொள்கின்றன.

C) லாமார்க்கின் உறுப்புகளின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமைக் கோட்பாட்டின்படி ஓர் உறுப்பை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது அவ்வுறுப்பு நன்கு வளர்ச்சியடையாமல் வலிமை குறைகிறது.

D) சூழ்நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது விலங்குகள் அந்த மாற்றங்களுக்கு எதிர்வினை புரிகின்றன. இந்த எதிர்வினைகள் புதிய தகவமைப்புப் பண்புகளை உருவாக்குகின்றன.

விளக்கம்: லாமார்க்கின் உறுப்புகளின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமைக் கோட்பாட்டின்படி ஓர் உறுப்பை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது அவ்வுறுப்பு நன்கு வளர்ச்சியடைந்து வலிமை பெறுகின்றது.

27. லமார்க் தன்னுடைய பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமைக் கோட்பாட்டின் ஆய்விற்கு எடுத்துக்கொண்ட உயிரினங்கள்____________

A) ஒட்டகச்சிவிங்கி

B) கிளிப் பறவை

C) கினிப் பறவை

D) A, C இரண்டும்

28. பேராசியர் J.S. ஹென்ஸ்லோ என்பவரின் நட்பின் காரணமாக சார்வின் டார்வினுக்கு கீழ்க்கண்ட எதன் மீத ஆர்வம் ஏற்பட்டது.

A) மரபியல்

B) தொல்லியல்

C) இயற்கை

D) வளங்கள்

விளக்கம்: சார்லஸ் டார்வின் (1809-1882) என்பவர் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிறந்த இயற்கை அறிவியலாளர் மற்றும் தத்துவஞானி. அவர் 1809 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். அவர் கல்லூரியில் படிக்கும் போது, பேராசிரியர் J.S. ஹென்ஸ்லே என்பவரின் நட்பின் காரணமாக, இயற்கையின் பால் ஈர்க்கப்பட்டார்.

29. சார்லஸ் டார்வின் H.M.S பீகல் என்ற கப்பலில் எத்தனை ஆண்டு காலம் தென் அமெரிக்காவை சுற்றி தன் ஆய்வைக் மேற்க்கொண்டார்.

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

விளக்கம்: சார்லஸ் டார்வின் H.M.S. பீகல் என்ற கப்பலில் ஐந்து வருடங்கள் (1831-1835) தென் அமெர்க்காவைச் சுற்றி ஆய்வுப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டது. ஒரு இளம் இயற்கை அறிவியலாளரை நியமிக்கும்படி ஹென்ஸ்லோ கேட்டுக்கொள்ளப்பட்டார். டார்வின் அவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

30. சார்லஸ் டார்வின் தன் ஐந்தாண்டுகால பயணத்தின் போது ஆய்வு மேற்கொண்ட தீவுகள்________________

A) கேலபாகஸ் தீவு

B) பசிபிக் தீவு

C) மினிகாய்த் தீவு

D) A, B இரண்டும்

விளக்கம்: சார்லஸ் டார்வின் கேலபாகஸ் தீவு மற்றும் பசிபிக் தீவு உள்ளிட்ட பல தீவுகளையும், உலகின் பல பகுதிகளையும் ஐந்து வருடப் பயணத்தின் போது பார்வையிட்டார். டார்வின், தான் பார்வையிட்ட பகுதிகளின் நிலம், தாவரம் மற்றும் விலங்குகளின் தன்மைப் பற்றி விரிவாகக் கண்டறிந்து பதிவுகளை மேற்கொண்டார்.

31. பொருத்துக:

A) ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் – 1. இயற்கைத் தேர்வுக் கோட்பாடு

B) சார்லஸ் டார்வின் – 2. ஃபிலாசஃபிக் ஜீவாலஜிக்

C) சிற்றினங்களின் தோற்றம் – 3. தொல் தாவரவியலின் தந்தை

D) வான் ஸ்டெர்ன்பெர்க் – 4. (1859)

A) 1 2 3 4

B) 2 1 4 3

C) 4 3 2 1

D) 4 3 1 2

விளக்கம்:

A) ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் – 1. ஃபிலாசஃபிக் ஜீவாலஜிக்

B) சார்லஸ் டார்வின் – 2. இயற்கைத் தேர்வுக் கோட்பாடு

C) சிற்றினங்களின் தோற்றம் – 3. (1859)

D) வான் ஸ்டெர்ன்பெர்க் – 4. தொல் தாவரவியலின் தந்தை

32. ஆர்ஜின் ஆஃப் ஸ்பிசியஸ் என்ற நூலினை வெளியிட்ட அறிவியல் அறிஞர்_____________

A) அரிஸ்டாட்டில்

B) கரோலஸ் லின்னேயஸ்

C) பெந்தம் மற்றும் ஹீக்கர்

D) சார்லஸ் டார்வின்

விளக்கம்: சார்லஸ் டார்வின் 20 ஆண்டுகள் ஆய்வுப் பணியை மேற்க்கொண்டு இயற்கைத் தேர்வு தொடர்ந்து வெளியிட்டார். டார்வின் தன்னுடைய பதிவுகளையும், முடிவுகளையும் ‘சிற்றினங்களின் தோற்றம்’ (Origin of Species) என்ற பெயரில் 1859-ம் ஆண்டு வெளியிட்டார். டார்வினுடைய இந்தப் புத்தகம், பரிணாமம் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்தியது இது பரிணாம மாற்றங்களுக்கான இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை விளக்கியது.

33. சார்லஸ் டார்வினின் கொள்கைகளுல் பொருந்தாததைக் கண்டறி:

A) உயிரினங்கள், அதிக அளவு உயிரிகளை இனப்பெருக்கம் செய்து தங்களுடைய சந்ததியை உருவாக்கும் திறன் பெற்றவை. அவை பெருக்கல் விகித முறையில் இனப்பெருக்கம் செய்யும் ஆற்றல் உடையவை.

B) உயிரினங்களின் அதிக உற்பத்திக் காரணமாக அவை வாழத் தேவையான இடமும், உணவும் அதே அளவில் மாறாமல் உள்ளது.

C) அதிக வெப்பம் அல்லது குளிர், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சூழல்கள் உயிரினங்களின் வாழ்வியலை பாதிப்பதில்லை.

D) டார்வின் கூற்றுப்படி சாதகமான வேறுபாடுகள் உயிரினங்களுக்கு உபயோகமாகவும், சாதகமற்ற வேறுபாடுடகள் உயிரினத்திற்குத் தீங்கு விளைவிக்க்ககூடிய அல்லது பயன் அற்றவையாகவும் உள்ளன.

விளக்கம்: அதிக வெப்பம் அல்லது குளிர், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சூழலும் உயிரினங்களின் வாழ்வியலை பாதிக்கின்றன.

34. வாழ்க்கைக்கான போராட்டங்கள் பற்றிய சார்லஸ் டார்வினின் வகைகளுடன் தொடர்பில்லாததைக் கண்டறி.

A) ஒரே சிற்றின உயிரினங்களுக்கு இடையேயான போராட்டம்.

B) இரு வேறுபட்ட சிற்றினங்களுக்கு இடையேயான போராட்டம்.

C) சூழ்நிலை போராட்டம்

D) இரு வேறுபட்ட பேரினங்களுக்கு இடையேயான போராட்டம்

35. கூற்று (i): ஒரே சிற்றினத்தைச் சார்ந்த உயிரினங்கள் மற்றும் ஒரே பெற்றோரின் இளம் சந்ததிகள் ஆகியவற்றிற்கு இடையே காணப்படும் மாறுபாடுகள், வேறுபாடுகள் எனப்படும்.

கூற்று (ii): வேறுபாடுகள் மூலப் பொருளாக அமைந்து பரிணாமத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வேறுபாடுகள் இல்லாமல் பரிணாமம் ஏற்பட சாத்தியமில்லை.

A) கூற்று i சரி, ii தவறு

B) கூற்று i தவறு, ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

36. பொருத்துக:

A) உடல் செல் வேறுபாடு – 1. திடீரென தோன்றும் வேறுபாடு

B) இனச் செல் வேறுபாடு – 2. படிப்படியாக நிகழும் வேறுபாடு

C) தொடர்ச்சியற்ற வேறுபாடு – 3. அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை

D) தொடர்ச்சியான வேறுபாடு – 4. அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன

A) 1 2 3 4

B) 2 1 4 3

C) 3 4 1 2

D) 4 3 1 2

விளக்கம்:

A) உடல் செல் வேறுபாடு – 1. அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை

B) இனச் செல் வேறுபாடு – 2. அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன

C) தொடர்ச்சியற்ற வேறுபாடு – 3. திடீரென தோன்றும் வேறுபாடு

D) தொடர்ச்சியான வேறுபாடு – 4. படிப்படியாக நிகழும் வேறுபாடு

37. சடுதி மாற்றம் என்றச் சொல்லை அறிமுகப்படுத்தியவர்____________

A) டி. மோரிஸ்

B) ஹியூகோ டி விரிஸ்

C) ஜேம்ஸ் வாட்சன்

D) வாட்சன் கிரிக்

38. கீழ்க்கண்டவற்றுல் நிலையற்ற வேறுபாடுகள் என்று அழைக்கப்படுவது__________

A) உடல் செல் வேறுபாடு

B) இனச் செல் வேறுபாடு

C) தொடர்ச்சியற்ற வேறுபாடு

D) தொடர்ச்சியான வேறுபாடு

39. சடுதி மாற்றம் மற்றும் வேறுபாடுகள் ஆகிய இரண்டு நிகழ்வுகளையும் உள்ளடக்கியது____________

A) பாரம்பரியம்

B) மரபியல்

C) பரிணாமம்

D) ஜீன் மாற்றம்

விளக்கம்: பரிணாமம் என்பது சடுதிமாற்றம் மற்றும் வேறுபாடுகள் ஆகிய இரண்டு நிகழ்வுகளை உள்ளடக்கியது. DNA இரட்டிப்பாதலின் போது ஏற்படும் பிழைகள் அல்லது UV கதிர்கள் அல்லது வேதிப்பொருட்களோடு தொடர்புக் கொள்ளும் போது சடுதி மாற்றம் ஏற்படுகிறது. சடுதி மாற்றம் வேறுபாடுகளுக்கு வழிவகுக்கிறது.

40. தொல் தாவரவியல் என்ற சொல் கீழ்க்கண்ட எம்மொழிச்சொல்லிருந்து பெறப்பட்டது.

A) இலத்தின்

B) பிரெஞ்சு

C) ஸ்பானிஷ்

D) கிரேக்கம்

விளக்கம்: தொல் தாவரவியல் (Palaeobotany) என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவாக்கப்பட்டது Palaeon (தொல்) என்னும் சொல்லின் பொருள் தொன்மையான எனவும் Botany (தாவரவியல்) என்னும் சொல் தாவரங்களைப் பற்றிப் படிக்கும் அறிவியல் எனவும் பொருள் தரும். இது தொல் பொருளியலின் ஒரு பிரிவு ஆகும்.

41. தாவர உயிர்ப் படிவங்களின் முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களுல் தவறானதைக் கண்டறி.

1) முந்தைய தாவரங்கள் பற்றிய வரலாறு மற்றும் பரிணாமத்தைப் பிரதிபலிக்கிறது.

2) தாவர புதை உயிர்ப் படிவங்கள் மூலம் தாவர உலகத்தைப் பற்றிய ஒரு வரலாற்று அணுகுமுறையை அறிய முடிகிறது.

3) தாவர வகைப்பாட்டியலுக்கு இது உதவுகிறது. தாவரப் புதை உயிர்ப் படிவங்கள், தாவரத்தைப் பற்றிய தெளிவான விளக்கத்தையும் உள்ளமைப்பையும் ஒப்பிட உதவுகிறது.

A) 1, 2 மட்டும் சரி

B) 1, 3 மட்டும் சரி

C) அனைத்தும் சரி

D) அனைத்தும் தவறு

42. பிராகு என்ற ஊரில் பொகியின் தேசிய அருங்காட்சியகத்தை நிறுவி, நவீன தொல் தாவரவியலுக்கு அடித்தளமிட்டவர்______________

A) பீர்பால் சகானி

B) டி. விரிஷ்

C) காஸ்பர் மரியா வான் ஸ்டெர்பெர்க்

D) வாட்சன்

விளக்கம்: ஐரோப்பாவில் பிறந்த இவர், ‘தொல் தாவரவியலின் தந்தை’ என அழைக்கப்படுகிறார். இவர் பிராகு என்ற ஊரில் பொகியின் தேசிய அருங்காட்சியகத்தை நிறுவி, நவீன தொல் தாவரவியலுக்கு அடித்தளமிட்டார்.

43. இந்திய தொல் தாவரவியலின் தந்தை என்ப்படுபவர்______________

A) பீர்பால் சகானி

B) டி. விரிஷ்

C) காஸ்பர் மரியா வான் ஸ்டெர்பெர்க்

D) வாட்சன்

விளக்கம்: இவர் ‘தொல் தாவரவியலின் தந்தை’ என அழைக்கப்படுகிறார். இவர் தனது ஆய்வைத் தொல் தாவரவியலின் இரண்டு வேறுபட்ட வகைகளில் மேற்கொண்டார்.

44. பெருந்தாவரங்களின் உள்ளமைப்பு மற்றும் புறஅமைப்பியல் பற்றிய பிரிவு______________

A) பேலியோபிளாஸ்டிக்

B) பேலியோஸோயிக்

C) பேலியோலோயிக்

D) A, C இரண்டும்

45. பாறைகளில் புதை உயிர்ப் படிவங்கள் உருவாவதைப் ___________ என்கிறோம்.

A) படிகமாதல்

B) படியவைத்தல்

C) படிவமாதல்

D) A, B இரண்டும்

விளக்கம்: பாறைகளில் புதை உயிர்ப் படிவங்கள் உருவாவதைப் படிவமாதல் என்கிறோம். புதை உயிர்ப் படிவமாதலின் வகைகள் பொதுவாகப் புதை உயிர்ப் படிவங்கள் கல்லாதல், அச்சு மற்றும் வார்ப்பு, கார்பனாதல், பதப்படுத்துதல், அழுத்தம் மற்றும் ஊடுருவல் ஆகிய வகைகளில் உருவாகின்றன. 46. எலும்புகளும் மரக்கட்டைகளும் கீழ்க்கண்ட எந்த முறையில் படிவம் ஆகின்றன.

A) கல்லாதல்

B) அச்சு மற்றும் வார்ப்பு

C) பதப்படுத்தல்

D) ஊடுருவுதல் அல்லது பதிலீட்டுதல்

விளக்கம்: சிலிக்கா போன்ற கனிமங்கள், இறந்த உயிரியின் உள்ளே ஊடுருவி, திசுக்களை அழித்து ஒரு பாறை போன்ற புதைப் படிவத்தை உருவாக்குகிறது. இந்த வகைப் படிவமாதலில் கடின மற்றும் மென்மையான பாகங்கள் படிவம் ஆகின்றன. பெரும்பாலும் எலும்புகலும் மரக்கட்டைகளும் இம்முறையில் படிவம் ஆகின்றன.

47. முழுத்தாவம் மற்றும் மரங்கள் கீழ்க்கண்ட எந்த முறையில் பதப்படுத்தப்படுகிறது.

A) கல்லாதல்

B) அச்சு மற்றும் வார்ப்பு

C) பதப்படுத்தல்

D) ஊடுருவுதல் அல்லது பதிலீட்டுதல்

விளக்கம்: பனிக்கட்டி அல்லது மரங்களின் தண்டுப் பகுதியில் கசியும் பிசின் போன்றவற்றில் பதியும் உயிரிகள் அழுகிப் போகாமல் பாதுகாக்கப்படுகின்றன. முழுத்தாவரம் அல்லது விலங்கு இம்முறையில் பதப்படுத்தப்படுகிறது.

48. கீழ்க்கண்டவற்றுள் தற்போது வாழும் தொல் உயிர்ப் படிவத்தைத் தேர்ந்தெடு.

A) நீடேல்ஸ்

B) சைகஸ்

C) மாஸ்

D) ஜிங்கோ பைலோபா

விளக்கம்: இலை தற்போது உயிருள்ளவை இவை படிவமாக மாறிய முன்னோரைப் போன்ற தோற்றத்தை ஒத்திருப்பதால் இவற்றை வாழும் தொல் உயிர்ப் படிவங்கள் என்கிறோம்.

49. பொருத்துக:

A) கல்லாதல் – 1. கடலுக்கு அடியில் உள்ள இறந்த உயிரினம்

B) அச்சு மற்றும் வார்ப்பு – 2. கால்சியம் கார்பனேட், சிலிகா

C) ஊடுருவுதல் – 3. தாவரம் (ம) விலங்கு பாறை

D) அழுத்திய சின்னங்கள் – 4. எலும்புகள் (ம) மரக்கட்டை

A) 1 2 3 4

B) 2 1 4 3

C) 3 4 1 2

D) 4 3 2 1

விளக்கம்:

A) கல்லாதல் – 1. எலும்புகள் (ம) மரக்கட்டை

B) அச்சு மற்றும் வார்ப்பு – 2. தாவரம் (ம) விலங்கு பாறை

C) ஊடுருவுதல் – 3. கால்சியம் கார்பனேட்இ சிலிகா

D) அழுத்திய சின்னங்கள் – 4. கடலுக்கு அடியில் உள்ள இறந்த உயிரினம்

50. படிவங்களின் வயதினை கண்டறிய பயன்படும் கதிரியக்கத் தனிமங்கள்_____________

A) கார்பன்

B) யுரேனியம்

C) காரீயம் (ம) பொட்டாசியம்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: படிவங்களின் வயதினை அவற்றில் உள்ள கதிரியக்கத் தனிமங்களால் கண்டுபிடிக்கலாம். அத்தனிமங்கள் கார்பன், யுரேனியம், காரீயம் மற்றும் பொட்டாசியமாக இருக்கலாம். இவை தொல் தாவரவியல் மற்றும் மானுடவியலில் மனிதப்படிவங்களின் வயதினையும் சுவடிகளின் காலத்தையும் அறிய உதவுகின்றன.

51. கதிரியக்கக் கார்பன் முறையைக் கண்டுபிடித்தவர்____________

A) J.W. கார்ஸ் பெர்கர்

B) ரொனால்டு ராஸ்

C) ஹியுகோ டி விரிஸ்

D) W.F. லிபி

விளக்கம்: இந்தக் கதிரியக்கக் கார்பன் முறையைக் கண்டுபிடித்தவர் W.F. லிபி (1956). உயிரிழந்த தாவரங்களும் விலங்குகளும் கார்பனை உட்கொள்ளுவதில்லை. அதன் பின்பு அவற்றிலுள்ள கார்பன் அழியத் தொடங்குகிறது. உயிரிழந்த தாவரத்தில் அல்லது விலங்கில் உள்ள கார்பன்(C14) அளவைக் கொண்டு அந்தத் தாவரம் அல்லது விலங்கு எப்போது உயிரிழந்தது என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

52. பாறை அடுக்குகளின் அமைப்பினைக் கால வரிசைப்படி அறிந்து கொள்ளும் முறை____________

A) புவி அமைப்புக் கால அளவை முறை

B) இயற்கைத் தேர்வுக் கோட்பாடு முறை

C) செயற்கைத் தேர்வுக் கோட்பாடு முறை

D) மேற்கண்ட எதுவுமில்லை.

விளக்கம்: புவி அமைப்புக் கால அளவை என்பது, பாறை அடுக்குகளின் அமைப்பினைக் கால வரிசைப்படி அறிந்து கொள்ளும் முறை ஆகும். இதன் மூலம் புவி அமைப்பு வல்லுநர்கள், தொல்பொருள் ஆய்வாரள்கள் மற்றும் புவி சார் அறிஞர்கள் புவியின் வரலாற்றினைக் காலத்தோடும் நிகழ்வுகளின் தொடர்போடும் இணைத்து விளக்குகின்றனர்.

53. திருவக்கரை கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்பகுதி.

A) விருதுநகர்

B) விழுப்புரம்

C) திருவாரூர்

D) திருவண்ணாமலை

54. கல்மரப் படிவ புங்கா கீழ்க்கண்ட எந்த கிராமத்தில் அமைந்துள்ளது.

A) திருத்துரைப்பூண்டி

B) திருப்பத்தூர்

C) திருவக்கரை

D) திருவாச்சூர்

விளக்கம்: திருவக்கரை (விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு) கல்மரப் படிவப் பூங்கா இரண்டாயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தாவரத் தண்டுப் பகுதியானது ஆற்றங்கரையில் மண்ணில் புதையுண்டு காலப்போக்கில் அதிலுள்ள கரிமப் பொருள்கள் சிலிகாவினால் நிரப்பப்பட்டுப் படிவமாகியுள்ளது. கல்மரமான பின்பும் இத்தாவரங்கள் முந்தைய நிறம், வடிவம் வரித் தன்மை முதலானவற்றைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. ஆண்டு வளையம், நிறங்களின் அடுக்கு, கணுப் பகுதிகள் போன்ற அனைத்துப் பண்புகளும் கல்மரமான பிறகும் புலப்படும் வகையில் அமைந்துள்ளன.

55. கூற்று (i): வட்டார இனத் தாவரவியல் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள தாவரங்கள் அப்பகுதியல் உள்ள மக்களுக்கு வழி வழியாக எவ்வாறு பயன்படுகிறது என்பதைப் பற்றி அறவதாகும்.

கூற்று (ii): வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் J.W. ஹார்ஸ்பெர்கர் ஆவார்

A) கூற்று i சரி, ii தவறு

B) கூற்று i தவறு, ii சரி

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

56. வட்டார இனத் தாவரவியல் இயற்கை அறிவியலின் ஒரு பகுதியாகத் தோன்றியக் காலம்______________

A) 17-ம் நூற்றாண்டு

B) 18-ம் நூற்றாண்டு

C) 19-ம் நூற்றாண்டு

D) 20-ம் நூற்றாண்டு

விளக்கம்: வட்டார இனத் தாவரவியல் என்பது பழங்காலத்திலிருந்து அப்பகுதியல் உள்ள மக்கள் தாவரங்களை என்னென்ன வழிகளில் பயன்படுத்தினர் என்பதைப் பற்றி அறிவதாகும். அக்காலத்திலேயே இதைப்பற்றிய கருத்த மக்களிடையே இருந்தபோதிலும் 20 ஆம் நூற்றாண்டில்தான் வட்டார இனத் தாவரவியல் இயற்கை அறிவியல்தான் ஒரு பகுதியாகத் தோன்றியது.

57. வட்டார இனத் தாவரவியலானது கீழ்க்கண்ட எந்த துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

A) உணவூட்டப் பிரச்சினை

B) சுகாதாரம்

C) உடல் நம்பிக்கை

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: வட்டார இனத் தாவரவியலானது உணவூட்டப் பிரச்சினை, சுகாதாரம், உடல் இயக்க அமைவு, தாவரங்கள் மேல் உள்ள நம்பிக்கை, குடிசைத் தொழில், பொருளாதார முன்னேற்றம், பன்மயப் பாதுகாப்பு, தொடர் பயன் வேளாண்மை, போன்ற துளைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

58. வட்டார இனத் தாவரங்களின் முக்கியத்துவங்களுல் பொருந்தாததைக் கண்டறி:

A) பரம்பரை பரம்பரையாகத் தாவரங்களின் பயன்களை இதன் மூலம் அறிய முடிவதில்லை.

B) நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத தாவரங்களின் பயன்களைப் பற்றிய தகவலை அளிக்கிறது.

C) வட்டார இனத் தாவரவியலானது மருந்தாளுனர், வேதியியல் வல்லுநர், மூலிகை மருத்துவப் பயிற்சியாளர் முதலானோருக்குப் பயன்படும் தகவல்களை அளிக்கிறது.

D) மலைவாழ் பழங்குடி மக்கள் மருத்துவ இன அறிவியல் மூலம் பலவகையான நோய்களைக் குணப்படுத்தும் மருந்துத் தாவரங்களை அறிந்து வைத்துள்ளனர். எ.கா. வயிற்றுப் போக்கு, காய்ச்சல் மற்றும் தலைவலி முதலான நோய்களுக்கு தாவரங்களின் பட்டைஇ வேர் மற்றும் இலை முதலானவற்றைப் பயன்படுத்தி குணமாக்கினர்.

59. அண்ட வெளியில் உள்ள உயிரினங்களைப் பற்றி அறியும் அறிவியலுக்கு____________என்று பெயர்.

A) தொல் உயிரியல்

B) தாவர உயிரியல்

C) வான் இயற்பியல்

D) வான் உயிரியல்

60. வான் உயிரியல் என்பது கீழ்க்கண்ட எவற்றை உள்ளடக்கியது.

A) வேற்றுக் கிரகங்களில் உயிரிகள் இருப்பதற்கான ஆய்வு

B) உயிரிகளின் பரவல்

C) பரிணாம வளர்ச்சி

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: அண்டத்தில் உள்ள உயிரினங்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி, உயிரிகளின் பரவல் மற்றும் வேற்றுக் கிரகங்களில் உயிரிகள் இருப்பதற்கான ஆய்வு ஆகியவற்றை உள்ளடக்கியது வான் உயிரியல் ஆகும்.

61. பிற கிரகங்களில் உயிர் வாழ தேவைப்படும் காரணிகளுல் பொருந்தாதது எது.

1) வளி மண்டலத்தைத் தக்க வைத்துக் கொள்ள குறிப்பிட்ட பரப்பளவுத் தேவை.

2) சுற்று வட்டப் பாதையானது சூரியனிலிருந்து சரியான தொலைவில் இருத்தல் வேண்டும்.

A) இரண்டும் தவறு

B) இரண்டும் சரி

C) 1 மட்டும் தவறு

D) 2 மட்டும் தவறு

விளக்கம்: வளி மண்டலத்தைத் தக்க வைத்துக் கொள்ள குறிப்பிட்ட நிறை தேவை.

62. கோல்டி லாக்மண்டலம் என்பது____________

A) சுற்று வட்டப் பாதையானது சூரியனிலிருந்து மிகக் குருகிய தொலைவில் இருத்தல்.

B) சுற்று வட்டப் பாதையானது சூரியனிலிருந்து மிகக் அதிக தொலைவில் இருத்தல்.

C) சுற்று வட்டப் பாதையானது சூரியனிலிருந்து சரியான தொலைவில் இருத்தல்.

D) சுற்று வட்டப் பாதையானது சூரியனிலிருந்து குறைந்த தொலைவில் இருத்தல்.

விளக்கம்: சுற்று வட்டப் பாதையானது சூரியனிலிருந்து சரியான தொலைவில் இருந்தால் நீர்த் துளிகள் இருக்கும். இந்தத் தொலைவானது அதிக வெப்பமும் இல்லாமலும் அதிகக் குளிரும் இல்லாத அளவிலான தொலைவாக இருந்தால் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த சூழல் இருக்கும். இதை கோல்டி லாக்மண்டலம் எனப் போற்றுவர்.

63. நமது சூரியக் குடும்பத்தில் கீழ்க்கண்ட எந்தக் கோள் கோல்டி லாக் மண்டலத்தில் அமைந்துள்ளது.

A) புதன்

B) செவ்வாய்

C) புமி

D) வியாழன்

விளக்கம்: நமது சூரியக் குடும்பத்தில் உள்ள புவி மட்டும் தான் கோல்டி லாக் மண்டலத்தில் உள்ள கோள் ஆகும். இந்த மண்டலத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படுவதால் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. செவ்வாய்க் கிரகத்தில் மக்கள வாழ உகந்த சூழல் இருப்பதை நாம்ட அறிந்துள்ளோம்.

64. கீழ்க்கண்ட எந்த உயிரி எந்தக் கடினச் சூழலையும் தாங்கும் இயல்பு கொண்டது___________

A) வைரஸ்

B) பாக்டீரியா

C) புரோட்டோசோவா

D) விலங்குயிரி

விளக்கம்: நமது சூரியக் குடும்பத்தில் ஏராளமான பகுதிகள் புவியிலிருந்து வேறுபட்டுள்ளன. அங்கு எந்தக் கடினச் சூழலையும் தாங்கும் இயல்பு கொண்ட பாக்டீரியாக்கள் இருக்கலாம்.

65. வான் உயிரியல் என்னும் திட்டத்தை நாசா துவக்கிய ஆண்டு____________

A) 2000

B) 2010

C) 2015

D) 2020

66. செவ்வாயின் மேற்புறப் புவி அமைப்புக் குறித்தும், செவ்வாயில் உயிரிகள் இருந்தனவா என்பது குறித்தும் ஆராய நாசா தொடங்கிய திட்டம்____________

A) வான் இயற்பில் திட்டம்

B) கட்டுப்பாட்டு திட்டம்

C) ககன்யான் திட்டம்

D) வான் உயிரியல் திட்டம்

விளக்கம்: நாசா 2020 இல் வான் உயிரியல் என்னும் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் செவ்வாயின் பழமையான சூழல் குறித்தும் செவ்வாயின் மேற்புறப் புவி அமைப்புக் குறித்தும் செவ்வாயில் உயிரிகள் இருந்தனவா என்பது குறித்தும் அவ்வாறு உயிரிகள் இருந்தால் அவற்றைப் பாதுகாப்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறது.

67. வான் உயிரியல் திட்டத்தை தொடங்கிய நாசா விண்வெளி மையம் அமைந்துள்ள நாடு_______________

A) இந்தியா

B) ஜப்பான்

C) சீனா

D) அமெரிக்கா

விளக்கம்: நாசா 2020 இல் வான் உயிரியல் என்னும் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் செவ்வாயின் பழமையான சூழல் குறித்தும் செவ்வாயின் மேற்புறப் புவி அமைப்புக் குறித்தும் செவ்வாயில் உயிரிகள் இருந்தனவா என்பது குறித்தும் அவ்வாறு உயிரிகள் இருந்தால் அவற்றைப் பாதுகாப்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறது.

68. பொருத்துக:

A) கதிரியக்க கார்பன் முறை – 1. 1956

B) சிற்றினங்களின் தோற்றம் – 2. 1862

C) ஃபிலாசஃபிக் ஜீவாலஜி – 3. 1859

D) உயிர் பிறப்புக் கோட்பாடு – 4. 1809

A) 1 3 4 2

B) 2 1 4 3

C) 3 4 1 2

D) 4 3 2 1

69. தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் தற்போதைய முறை____________

A) ரேடியோ கார்பன் முறை

B) யுரேனியம் காரீய முறை

C) பொட்டாசியம் ஆர்கான் முறை

D) மேற்கண்ட அனைத்தும்

10th Science Lesson 20 Questions in Tamil

20] இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

1.கூற்று (A): கால்நடை வளர்ப்பு விலங்கினப் பெருக்கத்தை உள்ளடக்கியது.

காரணம் (R): விலங்குகளின் ஜீனாக்கத்தை மேம்படுத்தி, மனித குலத்துக்கு அதிக பயனுள்ளதாக வளர்ப்பு விலங்கினங்களை மேம்படுத்துவதையே விலங்கினப் பெருக்கம் குறிக்கோளாகக் கொண்டது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: கால்நடை வளர்ப்பு விலங்கினப் பெருக்கத்தை உள்ளடக்கியது. விலங்குகளின் ஜீனாக்கத்தை மேம்படுத்தி, மனித குலத்துக்கு அதிக பயனுள்ளதாக வளர்ப்பு விலங்கினங்களை மேம்படுத்துவதையே விலங்கினப் பெருக்கம் குறிக்கோளாகக் கொண்டது.

2. பயிர் மேம்பாட்டின் குறிக்கோள் அல்லாதது எது?

A) அதிக மகசூல்

B) உயர்ந்த தரம்

C) சரியான பாசனம்

D) குறுகிய சாகுபடி காலம்

விளக்கம்: அதிக மகசூல், உயர்ந்த தரம், நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் குறுகிய சாகுபடி காலம் போன்ற பண்புகளைக் கொண்ட மேம்படுத்தப்பட்ட பயிர் வகைகளை உருவாக்குவதே பயிர் மேம்பாட்டின் குறிக்கோள் ஆகும்.

3. பசுமைப்புரட்சியின் தந்தை ____________

A) M.S ஸ்வாமிநாதன்

B) டாக்டர். நார்மன் E. போர்லாக்

C) டாக்டர். குரியன்

D) கார்மல்

விளக்கம்: “பசுமைப்புரட்சியின் தந்தை’’ என்று அழைக்கப்பட்ட அமெரிக்க வேளாண் விஞ்ஞானியான டாக்டர். நார்மன் E. போர்லாக் ஆவார்.

4. அமெரிக்க வேளாண் விஞ்ஞானியான டாக்டர். நார்மன் E. போர்லாக் ____________ ஆம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

A) 1980

B) 1975

C) 1970

D) 1985

விளக்கம்: அமெரிக்க வேளாண் விஞ்ஞானியான டாக்டர். நார்மன் E. போர்லாக் 1970 ஆம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

5. டாக்டர். போர்லாகுடன் இணைந்து இந்தியாவில், டாக்டர் மா.சா சுவாமிநாதன் __________ வகை கோதுமையை அறிமுகம் செய்தார்.

A) அமெரிக்கன்

B) RAS- 51 Wheat

C) RAS- 50 Wheat

D) மெக்சிகன்

விளக்கம்: டாக்டர். போர்லாகுடன் இணைந்து இந்தியாவில், டாக்டர் மா.சா சுவாமிநாதன் மெக்சிகன் கோதுமை வகைகளை அறிமுகம் செய்து, பசுமைப்புரட்சியைக் கொண்டு வந்தார்.

6. மெக்சிகோவின் அதிக மகசூல் தரும், அரைக்குள்ள உயரமுடைய கோதுமை வகைகளில் இருந்து, ____________ போன்ற அரைக்குள்ள கோதுமை வகைகள் உற்பத்திச் செய்யப்பட்டன.

A) IR 8

B) IR 9 சோனாலிகா

C) சோனாலிகா

D) கல்யாண் IR 8

விளக்கம்: மெக்சிகோவின் அதிக மகசூல் தரும், அரைக்குள்ள உயரமுடைய (semidwarf), செயற்கை உரத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்ட கோதுமை வகைகளில் இருந்து, சோனாலிகா மற்றும் கல்யாண் சோனா போன்ற அரைக்குள்ள கோதுமை வகைகள் உற்பத்திச் செய்யப்பட்டன.

7. எந்த நாட்டைச் சார்ந்த சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் அதிக மகசூல் தரும் அரைக்குள்ள நெல் வகையை உற்பத்திச் செய்தது?

A) அமெரிக்கா

B) இந்தியா

C) சீனா

D) பிலிப்பைன்ஸ்

விளக்கம்: பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் (IRRI), ஐ ஆர் 8 (அதிசய அரிசி) என்ற அதிக மகசூல் தரும் அரைக்குள்ள நெல் வகையை உற்பத்திச் செய்தது.

8. ஐ ஆர் 8 (அதிசய அரிசி) முதன்முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு____________

A) 1965

B) 1976

C) 1966

D) 1978

விளக்கம்: ஐ ஆர் 8 (அதிசய அரிசி) 1966 ஆம் ஆண்டு முதன்முதலில் பிலிப்பைன்ஸ் நாட்டிலும், இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

9. ஐ ஆர் 8 (அதிசய அரிசி) எந்த குள்ள நெல் வகையின் கலவையாகும்?

A) ஆல்பா

B) ஜியோ

C) ஜென் டியோ

D) பீட்டா

விளக்கம்: ஐ ஆர் 8 (அதிசய அரிசி) இது இந்தோனேசியாவின் அதிக மகசூல் தரும் நெல் வகையான பீட்டா மற்றும் சீனாவின் குள்ளநெல் வகையான டீ – ஜியோ – வூ-ஜென் (Dee – geowoo-gen – DGWG) ஆகியவை இணைந்து உருவான கலப்பினமாகும்.

10. இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை____________

A) டாக்டர். மான்கொம்பு சாம்பசிவன்

B) டாக்டர். நார்மன் E. போர்லாக்

C) டாக்டர். குரியன்

D) கார்மல்

விளக்கம்: இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை டாக்டர். மான்கொம்பு சாம்பசிவன் ஆவார்.

11. 1960 ஆம் ஆண்டில் 12 மில்லியன் டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி, தற்போது____________ டன்னாக உயர்ந்துள்ளது.

A) 800 மில்லியன்

B) 700 மில்லியன்

C) 900 மில்லியன்

D) 600 மில்லியன்

விளக்கம்: டாக்டர். மான்கொம்பு சாம்பசிவன் அவரது பெரும் முயற்சிகளால் 1960 ஆம் ஆண்டில் 12 மில்லியன் டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி, தற்போது 70 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.

12. அதிக மகசூல் தரும் தாவர வகைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அறிமுகம் செய்யும் செயல்முறை ____________

A) புதிய வகைத் தாவரங்களின் அறிமுகம்

B) தேர்வு செய்தல்

C) பன்மய பயிர்ப்பெருக்கம்

D) அயல் இனங்கள்

விளக்கம்: இது அதிக மகசூல் தரும் தாவர வகைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அறிமுகம் செய்யும் செயல்முறையாகும். இத்தகைய தாவரங்கள் அயல் இனங்கள் என அழைக்கப்படுகின்றன.

13. அயல் இனத்திற்கு எடுத்துக்காட்டு____________

A) பேசியோலஸ் முங்கோ

B) கோதுமை ரகமான அட்லஸ் 66

C) புரோட்டினா

D) லைசின்

விளக்கம்: அயல் இனத்திற்கு எடுத்துக்காட்டாக பேசியோலஸ் முங்கோ என்ற உளுந்து ரகம் சீனாவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டது.

14. புறத்தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு சிறந்த தாவர ரகங்களைத் தாவரக்கூட்டத்தில் இருந்து பிரித்தெடுக்கும் பழம் பெரும் முறை____________

A) புதிய வகைத் தாவரங்களின் அறிமுகம்

B) தேர்வு செய்தல்

C) பன்மய பயிர்ப்பெருக்கம்

D) அயல் இனங்கள்

விளக்கம்: புறத்தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு சிறந்த தாவர ரகங்களைத் தாவரக்கூட்டத்தில் இருந்து பிரித்தெடுக்கும் பழம் பெரும் முறை “தேர்வு செய்தல்” ஆகும்.

15. கீழ்க்கண்டவற்றுள் தேர்வு முறைகள் அல்லாதது எது?

A) கூட்டுத் தேர்வு முறை

B) தூய வரிசைத் தேர்வு முறை

C) போத்துத் தேர்வு முறை

D) சடுதிமாற்ற முறை

விளக்கம்: தேர்வு முறைகள் மூன்று வகையான தேர்வு முறைகள் உள்ளன. 1. கூட்டுத் தேர்வு முறை 2. தூய வரிசைத் தேர்வு முறை 3. போத்துத் தேர்வு முறை

16. கூட்டுத் தேர்வுக்கான எடுத்துக்காட்டுக்கள் ____________

A) வேர்க்கடலை TMV – 3

B) வேர்க்கடலை TMV – 2

C) வேர்க்கடலை TMV – 1

D) வேர்க்கடலை TMV – 4

விளக்கம்: வேர்க்கடலை ரகங்களான TMV – 2 மற்றும் AK-10 ஆகியவை கூட்டுத் தேர்வுக்கான சில எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.

17. தனி உயிரியில் இருந்து தற்கலப்பு மூலம் பெறப்பட்ட சந்ததி ___________

A) கூட்டுத் தேர்வு முறை

B) தூய வரிசைத் தேர்வு முறை

C) போத்துத் தேர்வு முறை

D) சடுதிமாற்ற முறை

விளக்கம்: தூய வரிசை என்பது “தனி உயிரியில் இருந்து தற்கலப்பு மூலம் பெறப்பட்ட சந்ததி” ஆகும். இது “தனித் தாவரத் தேர்வு” எனவும் அழைக்கப்படுகிறது.

18. ஒரு தனித் தாவரத்திலிருந்து உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே ___________

A) ஜீன்கள்

B) மரபணுக்கள்

C) குரோமோசோம்கள்

D) குளோன்கள்

விளக்கம்: ஒரு தனித் தாவரத்திலிருந்து உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே குளோன்கள் எனப்படுகின்றன.

19. ஒற்றைமயம் (n) குரோமோசோம் எதில் காணப்படுகின்ற்ன ?

A) பாலினப் பெருக்கம் செய்யும் தாவரங்களின் உடல செல்களில்

B) மியூடாஜென்கள்

C) கால்ச்சிசின்

D) கேமீட்டுகள்

விளக்கம்: கேமீட்டுகளில் (இனச்செல்களில்) ஒரே இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் ஒரு தொகுதி குரோமோசோம் மட்டுமே உள்ளது. இது “ஒற்றைமயம்” (n) என்று அழைக்கப்படுகிறது.

20. கூற்று(A): ஒரு உயிரினத்தின் DNA வின் நியூக்ளியோடைடு வரிசையில் திடீரென ஏற்படும், பாரம்பரியத்துக்கு உட்படும் மாற்றமே சடுதிமாற்றம் எனப்படும்.

காரணம்(R): இது மரபியல் வேறுபாடுகளை உண்டாக்குவதன் மூலமாக, உயிரினங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் செயல் ஆகும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு உயிரினத்தின் DNA வின் நியூக்ளியோடைடு வரிசையில் திடீரென ஏற்படும், பாரம்பரியத்துக்கு உட்படும் மாற்றமே சடுதிமாற்றம் எனப்படும். இது மரபியல் வேறுபாடுகளை உண்டாக்குவதன் மூலமாக, உயிரினங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் செயல் ஆகும்.

21. மரபுப் பண்பு மாற்றம் என்பது _________ தொழில்நுட்பம் மூலம் உயிரினங்களில் ஜீனில் மாற்றத்தை ஏற்படுத்துவது ஆகும்.

A) RDNA

B) RNA

C) DNA

D) rDNA

விளக்கம்: மரபுப் பண்பு மாற்றம் என்பது rDNA தொழில்நுட்பம் மூலம் உயிரினங்களில் விரும்பிய பண்புகளை ஏற்படுத்த ஜீனில் மாற்றத்தை ஏற்படுத்துவது அல்லது ஜீன்களை விரும்பியபடி கையாள்வது ஆகும்.

22. ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக எந்த முறையைப் பின்பற்றுவார்?

A) போத்துத் தேர்வு முறை

B) கூட்டுத் தேர்வு முறை

C) தூய வரிசைத் தேர்வு முறை

D) கலப்பினமாக்கம்

விளக்கம்: பல வகைப் பண்புகள் கொண்ட தாவரங்களின் கூட்டத்தில் இருந்து விரும்பத் தக்க பண்புகளைக் கொண்ட சிறந்த தாவரங்களின் விதைகள் சேகரிக்கப் படுகின்றன. இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு பயிரிடுவதற்காக விநியோகிக்கப்படுகிறது.

23. பூசா கோமல் என்பது __________ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்

A) கரும்பு

B) நெல்

C) தட்டைப்பயிறு

D) மக்காச் சோளம்

விளக்கம்: பூசா கோமல் என்பது தட்டைப்பயிறின் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.

24. கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது __________ இன் ரகமாகும்.

A) மிளகாய்

B) மக்காச்சோளம்

C) கரும்பு

D) கோதுமை

விளக்கம்: கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது கோதுமையின் ரகமாகும்.

25. தன்னுடைய 50 வது பிறந்த நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி _____________ ஆகும்.

A) IR 8

B) IR 24

C) அட்டாமிட்டா 2

D) பொன்னி

விளக்கம்: பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் (IRRI), ஐ ஆர் 8 (அதிசய அரிசி) என்ற அதிக மகசூல் தரும் அரைக்குள்ள நெல் வகையை உற்பத்திச் செய்தது. இது 1966 ஆம் ஆண்டு முதன்முதலில் பிலிப்பைன்ஸ் நாட்டிலும், இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

26. உயிர்த்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பின்வரும் எப்பொருள் மனிதனுக்கு பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது?

A) உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட நொதி

B) வாழும் உயிரினங்கள்

C) வைட்டமின்கள்

D) A மற்றும் B

27. மூலக்கூறு கத்திரிக்கோல் என அழைக்கப்படுவது _____________

A) பிளாஸ்மிட் நொதிகள்

B) லைக்கேஸ் நொதிகள்

C) ரெஸ்ட்ரின் நொதிகள்

D) ரெஸ்ட்ரிக்ஸன் நொதிகள்

விளக்கம்: டி. என். ஏ இலையினை குறிப்பிட்ட இடத்தில் துண்டிக்கின்றன. எனவே இவை மூலக்கூறு கத்திரிக்கோல் என்றழைக்கபடுகின்றன.

28. துண்டிக்கப்பட்ட டி. என். ஏ துண்டுகளை இணைக்க பயன்படுவது_____________

A) பிளாஸ்மிட் நொதிகள்

B) டி. என்.ஏ லைககேஸ் நொதிகள்

C) ரெஸ்ட்ரின் நொதிகள்

D) ரெஸ்ட்ரிக்ஸன் நொதிகள்

விளக்கம்: துண்டிக்கப்பட்ட டி. என். ஏ துண்டுகளை இணைக்க டி. என்.ஏ லைககேஸ் நொதிகள் பயன்படுத்தப்படுகிறது.

29. பாக்ட்ரியாவின் குரோமோசோம் டி. என். ஏ வுடன் சேர்ந்து தன்னிசையாக இரட்டிப்பு அடைவது _____________

A) பிளாஸ்மிட் DNA

B) டி. என்.ஏ லைககேஸ் நொதிகள்

C) ரெஸ்ட்ரின் நொதிகள்

D) ரெஸ்ட்ரிக்ஸன் நொதிகள்

விளக்கம்: பாக்ட்ரியாவின் குரோமோசோம் டி. என். ஏ வுடன் சேர்ந்து தன்னிசையாக இரட்டிப்பு அடைவது பிளாஸ்மிட் DNA

30. rDNA என்பது ______________

A) ஊர்தி DNA

B) வட்ட வடிவ DNA

C) ஊர்தி DNA மற்றும் விரும்பத் தக்க DNA வின் சேர்க்கை.

D) சாட்டிலைட் DNA

விளக்கம்: rDNA என்பது ஊர்தி DNA மற்றும் விரும்பத் தக்க DNA வின் சேர்க்கை.

31. DNA விரல்ரேகை தொழில்நுட்பம் ______________ DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது.

A) ஓரிழை

B) திடீர்மாற்றமுற்ற

C) பல்லுருத்தோற்ற

D) மீண்டும் மீண்டும் வரும் தொடர்

விளக்கம்: டி.என்.ஏ வில் உள்ள மாறுபடும் எண்ணிக்கையிலமைந்த தொடர்வரிசை அமைப்பு (Variable Number Tandem Repeat Sequences – VNTRs), அடையாளம் காண்பதற்காக மூலக்கூறு குறியீடாக திகழ்கிறது.

32. டி.என்.ஏ விரல் ரேகை தொழிநுட்பம் வடிவமைத்தவர் ______________

A) அயன் வில்மட்

B) அலெக்ஸ் ஜெஃப்ரே

C) அலக் ஜெஃப்ரே

D) அலக் வில்மட்

விளக்கம்: டி.என்.ஏ விரல் ரேகை தொழிநுட்பம் எளிதான மற்றும் விரைவான முறையாகும். இம்முறையினை அலக் ஜெஃப்ரே வடிவமைத்தார்.

33. மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் ______________ என அழைக்கப்படுகின்றன.

A) அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்

B) மரபுப் பண்பு மாற்றம் செய்யப்பட்டவை

C) திடீர் மாற்றம் அடைந்தவை

D) A மற்றும் B

விளக்கம்: இம்முறையில் மாற்றப்பட்ட ஜீன் அல்லது புதிய ஜீனை பெற்ற தாவர, விலங்குகள் மரபுப் பண்பு மாற்றப்பட்ட உயிரிகள் என்றழைக்கப்படுகின்றன.

34. ஹெக்சாபிளாய்டி கோதுமையில் (2n = 6x = 42) ஒற்றை மயம் (n) மற்றும் அடிப்படைத் தொகுதி (x) குரோமோசோம் எண்ணிக்கை முறையே ______________ ஆகும்

A) n = 7 மற்றும் x = 21

B) n= 21 மற்றும் x = 21

C) n = 7 மற்றும் x = 7

D) n = 21 மற்றும் x = 7

விளக்கம்: ஹெக்சாபிளாய்டி கோதுமையில் (2n = 6x = 42) ஒற்றை மயம் (n) மற்றும் அடிப்படைத் தொகுதி (x) குரோமோசோம் எண்ணிக்கை முறையே n = 21 மற்றும் x = 7 ஆகும்.

35. பூசா பனிப்பந்து K-1 என்பது __________ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.

A) மிளகாய்

B) காலி பிளவர்

C) கரும்பு

D) கோதுமை

விளக்கம்: பூசா பனிப்பந்து K-1 என்பது காலி பிளவரின் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.

36. பூசா கவுரவ் என்பது __________ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.

A) மிளகாய்

B) காலி பிளவர்

C) கரும்பு

D) கடுகு

விளக்கம்: பூசா கவுரவ் என்பது கடுகின் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.

37. பூசா செம்- 3 என்பது __________ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.

A) மிளகாய்

B) காலி பிளவர்

C) கரும்பு

D) அவரைக்காய்

விளக்கம்: பூசா செம்- 3 மற்றும் பூசா செம்-2 என்பது அவரைக்காயின் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.

38. பூசா சவானி என்பது __________ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.

A) மிளகாய்

B) காலி பிளவர்

C) கரும்பு

D) வெண்டை

விளக்கம்: பூசா சவானி மற்றும் பூசா A4 என்பது வெண்டையின் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.

39. __________ என்பது கோதுமை மற்றும் ரை ஆகியவற்றை கலப்பு செய்ததால் கிடைக்கப்பெற்றது.

A) டிரிட்டிக்கேல்

B) வாழைப்பழம்

C) தர்பூசணிப்பழம்

D) ரப்பனோ பிரகாசிகா

விளக்கம்: டிரிட்டிக்கேல் என்பது கோதுமை (டிரிட்டிகம் டியூரம், 2n = 28) மற்றும் ரை (சீகேல் சிரியேல், 2n = 14) ஆகியவற்றை கலப்பு செய்ததால் கிடைக்கப் பெற்றது.

40. இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினம் __________

A) பன்மயம்

B) இரட்டைமயம்

C) ஒற்றைமயம்

D) டேபிளாயடு

விளக்கம்: இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினம் “பன்மயம்” (Greek : Polys = many + aploos= One fold + eidos=form) எனப்படும்.

41. ______________ என்பது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த தரமுடைய தாவரங்களை உற்பத்திச் செய்யும் கலை ஆகும்.

A) கால்நடை வளர்ப்பு

B) தாவரப் பயிர்ப்பெருக்கம்

C) உயிரூட்டச்சத்தேற்றம்

D) கூட்டுத் தேர்வு ம றை

விளக்கம்: தாவரப் பயிர்ப்பெருக்கம் என்பது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த, உயர்ந்த தரமுடைய தாவரங்களை உற்பத்திச் செய்யும் கலை ஆகும்.

42. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] திலேப்பியா மீன்களில் உள்ள ஜீன் வளர்ச்சி ஹார்மோன் ஜீன் ஆகும்.

2] வைட்டமின் குறைப்பாட்டினை தவிர்க்கும் மரபணு மாற்றம் செய்யப்பட அரிசி டைமண்ட் அரிசி ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: திலேப்பியா மீன்களில் உள்ள ஜீன் வளர்ச்சி ஹார்மோன் ஜீன் ஆகும். வைட்டமின் குறைப்பாட்டினை தவிர்க்கும் மரபணு மாற்றம் செய்யப்பட அரிசி கோல்டன் ரைஸ் ஆகும்.

43. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] மாறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு rDNA ஆகும்.

2] உடல குருத்தணுக்களின் மாறுபாடுகள் முதிர் குருத்தணுக்கள் எனப்படும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மாறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு குருத்தணுக்கள் ஆகும். உடல குருத்தணுக்களின் மாறுபாடுகள் முதிர் குருத்தணுக்கள் எனப்படும்.

44. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] டாலி ஆட்டுக்குட்டி உட்கரு மாற்றி பொருத்துதல் முறையில் உருவாக்கப்பட்டது.

2] மனிதனின் குறைபாடுள்ள ஜின்களுக்கு பதிலாக திருத்தப்பட்ட ஜீன்களை இடமாற்றம் பெயர் ஜீன் சிகிச்சை ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: டாலி ஆட்டுக்குட்டி உட்கரு மாற்றி பொருத்துதல் முறையில் உருவாக்கப்பட்டது. மனிதனின் குறைபாடுள்ள ஜின்களுக்கு பதிலாக திருத்தப்பட்ட ஜீன்களை இடமாற்றம் பெயர் ஜீன் சிகிச்சை ஆகும்.

45. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] கால்ச்சிசின் சிகிச்சையால் உருவாக்கப்பட்ட ரப்பனோ பிராசிக்கா என்பது மனிதன் உருவாக்கிய ஒரு அல்லோடெட்ராபிளாய்டு ஆகும்.

2] இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்களை உருவாக்கும் முறை சடுதிமாற்றம் எனப்படும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: கால்ச்சிசின் சிகிச்சையால் உருவாக்கப்பட்ட ரப்பனோ பிராசிக்கா என்பது மனிதன் உருவாக்கிய ஒரு அல்லோடெட்ராபிளாய்டு ஆகும். இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்களை உருவாக்கும் முறை பன்மயம் எனப்படும்.

46. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித்தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே தூய வரிசை எனப்படும்.

2] இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம், பயிர் செய்யப்பட்ட தாவரத்தின் புரதத் தரத்தை தீர்மானிக்கிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித்தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே குளோன்கள் எனப்படும். இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம், பயிர் செய்யப்பட்ட தாவரத்தின் புரத தரத்தை மேம்படுத்தி உருவாக்கப்பட்டது.

47. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] ‘கோல்டன் ரைஸ்’ ஒரு கலப்புயிரி

2] பாக்டீரியாவின் Bt ஜீன், பூச்சிகளைக் கொல்லக் கூடியது

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ‘கோல்டன் ரைஸ்’ ஒரு மரபணு மாற்றம் செய்யப்பட அரிசி ஆகும். பாக்டீரியாவின் Bt ஜீன், பூச்சிகளைக் கொல்லக் கூடியது

48. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] செயற்கைக் கருவுறுதல் என்பது உடலுக்குள் நடைபெறும் கருவுறுதலாகும்.

2] DNA விரல் ரேகை தொழில் நுட்பம் அலெக் ஜெஃப்ரே என்பரால் உருவாக்கப் பட்டது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: செயற்கைக் கருவுறுதல் என்பது உடலுக்கு வெளியே நடைபெறும் கருவுறுதலாகும். DNA விரல் ரேகை தொழில் நுட்பம் அலெக் ஜெஃப்ரே என்பரால் உருவாக்கப் பட்டது.

49. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] பேசியோலஸ் முங்கோ என்ற உளுந்து ரகம் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது.

2] காலச்சிசின் என்பது சடுதி மாற்ற தூண்டிகள் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பேசியோலஸ் முங்கோ என்ற உளுந்து ரகம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. காலச்சிசின் என்பது பன்மய வேதிகாரணி ஆகும்.

50. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] சர்பதி ஸொரானா என்ற கோதுமை ரகம் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது.

2] தொடர்ச்சியாக ஒரு இனத்தினை உட்கலப்பு செய்வதால் அதன் பாலின வளம் மற்றும் உற்பத்தி திறன் குறைகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: சர்பதி ஸொரானா என்ற கோதுமை ரகம் சடுதிமாற்ற முறையில் உருவாக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஒரு இனத்தினை உட்கலப்பு செய்வதால் அதன் பாலின வளம் மற்றும் உற்பத்தி திறன் குறைகிறது.

51. பொருத்துக

a) சோனாலிகா – 1] அரைக்குள்ள அரிசி

b) IR 8 – 2] அரைக்குள்ள கோதுமை

c) சக்காரம் – 3] கரும்பு

d) முங் நம்பர் 1 – 4] பேசியோலஸ் முங்கோ

a b c d

A) 3 1 2 4

B) 4 1 2 3

C) 2 1 3 4

D) 1 3 4 2

52. பொருத்துக

a) TMV – 2 – 1] வேர்க்கடலை

b) இன்சுலின் – 2] பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்

c) Bt நச்சு – 3] பீட்டா கரோட்டின்

d) கோல்டன் ரைஸ் – 4] rDNA தொழில் நுட்பத்தில் உருவான முதல் ஹார்மோன்

a b c d

A) 3 1 2 4

B) 4 1 2 3

C) 2 1 3 4

D) 1 4 2 3

53. கூற்று(A) : கலப்புயிரி இரு பெற்றோரையும் விட மேம்பட்டதாக இருக்கும்.

காரணம்(R) : கலப்பின வீரியம் தற்கலப்பில்  இழக்கப்படுகிறது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: கலப்புயிரி இரு பெற்றோரையும் விட மேம்பட்டதாக இருக்கும். கலப்பின வீரியம் தற்கலப்பில்  இழக்கப்படுகிறது.  

54.கூற்று(A): rDNA தொழில் நுட்பம் கலப்பினமாக்கலை விட மேலானது.

காரணம்( R): இலக்கு உயிரினத்தில் விரும்பத் தகாத  ஜீன்களை நுழைக்காமல் விரும்பத் தக்க ஜீன்கள் மட்டும் நுழைக்கப் படுகின்றன.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: rDNA தொழில் நுட்பம் கலப்பினமாக்கலை விட மேலானது. இலக்கு உயிரினத்தில் விரும்பத் தகாத  ஜீன்களை நுழைக்காமல் விரும்பத் தக்க ஜீன்கள் மட்டும் நுழைக்கப் படுகின்றன.

55. கூற்று(A): முதிர் குருத்தணுக்கள் அல்லது உடலக் குருத்தணுக்கள் என்பவை பிறந்த பச்சிளம் குழந்தைகளின் உடலிலும், பெரியவர்களின் உடலிலும் காணப்படும்.

காரணம்(R): இவ்வகை செல்கள் உடலின் குறிப்பிட்ட செல் வகைகளாக மட்டும் மாறக்கூடிய திறன் பெற்றவை.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: முதிர் குருத்தணுக்கள் அல்லது உடலக் குருத்தணுக்கள் என்பவை பிறந்த பச்சிளம் குழந்தைகளின் உடலிலும், பெரியவர்களின் உடலிலும் காணப்படும். இவ்வகை செல்கள் உடலின் குறிப்பிட்ட செல் வகைகளாக மட்டும் மாறக்கூடிய திறன் பெற்றவை.

56. முதிர் குருத்தணுக்களின் மூலங்களாக விளங்குபவை________

A) அம்னியாட்டிக் திரவம்

B) தொப்புள்கொடி

C) எலும்பு மஜ்ஜை

D) இவை அனைத்தும்

விளக்கம்: அம்னியாட்டிக் திரவம், தொப்புள்கொடி மற்றும் எலும்பு மஜ்ஜை போன்றவை முதிர் குருத்தணுக்களின் மூலங்களாக விளங்குபவை ஆகும்.

57. கூற்று(A): பகுப்படைவதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான குருத்தணுக்களை உற்பத்தி செய்யப்படுகிறது.

காரணம்(R): இது ‘சுய புதுப்பித்தல்’ எனப்படுகிறது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: பகுப்படைவதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான குருத்தணுக்களை உற்பத்தி செய்யும் திறன். இது ‘சுய புதுப்பித்தல்’ எனப்படுகிறது.

58. கூற்று(A): பூச்சி மற்றும் தீங்குயிரி எதிர்ப்புத்திறன் பெற்ற பயிர்வகைகள் உருவாக்கப்பட்டன.

காரணம்(R): நுண்ணுயிரிகளுடன் ஏராளமான பூச்சிகள் மற்றும் தீங்குயிரிகள் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கின்றன.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: பூச்சி மற்றும் தீங்குயிரி எதிர்ப்புத்திறன் பெற்ற பயிர்வகைகள் உருவாக்கப்பட்டன. ஏனெனில், நுண்ணுயிரிகளுடன் ஏராளமான பூச்சிகள் மற்றும் தீங்குயிரிகள் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கின்றன.

59. கூற்று(A): மரபியல் வேறுபாடுகளை ஏற்படுத்தி மேம்பட்ட வகை ரகங்களை உருவாக்கும் பொதுவான முறையே கலப்பினமாக்கம் ஆகும்.

காரணம்(R): மனிதன் உருவாக்கிய முதல் கலப்பின தானியம் டிரிட்டிக்கோல்

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: மரபியல் வேறுபாடுகளை ஏற்படுத்தி மேம்பட்ட வகை ரகங்களை உருவாக்கும் பொதுவான முறையே கலப்பினமாக்கம் ஆகும். மனிதன் உருவாக்கிய முதல் கலப்பின தானியம் டிரிட்டிக்கோல் ஆகும்.

60. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] அதிக நார்ச்சத்தும், புரதமும் நிறைந்த கோதுமை ரகம் அட்லஸ் 66 ஆகும்.

2] காமாக் கதிர்கள் மூலமாக சடுதி மாற்றத்தை தூண்டும் காரணிகள் கோபால்ட் – 60, சீசியம் – 137 ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: அதிக நார்ச்சத்தும், புரதமும் நிறைந்த கோதுமை ரகம் அட்லஸ் 66 ஆகும். காமாக் கதிர்கள் மூலமாக சடுதி மாற்றத்தை தூண்டும் காரணிகள் கோபால்ட் – 60, சீசியம் – 137 ஆகும்.

61. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] நரம்புச் சிதைவு குறைபாடுடைய நோய் பார்க்கின்சன் நோய் மற்றும் அல்சீமர் நோய் ஆகும்.

2] கால்ச்சிசின் என்பது குரோமோசோம் எண்ணிக்கையை இரட்டிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பார்க்கின்சன் நோய் மற்றும் அல்சீமர் நோய் போன்ற நரம்புச் சிதைவு குறைபாடுகளை குணப்படுத்த நரம்புக் குருத்தணுக்கள் (Neuronal stem cells) பயன்படுத்தப்பட்டு சிதைவடைந்த அல்லது இழந்த நியூரான்களுக்கு பதிலாக பதிலீடு செய்யப்படுகின்றன. கால்ச்சிசின் என்பது குரோமோசோம் எண்ணிக்கையை இரட்டிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் ஆகும்.

62. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] விரும்பத்தக்க ஊட்டச்சத்து நிறைந்த பயிர்த் தாவரங்களை உற்பத்திச் செய்யும் அறிவியல் முறை உயிரூட்ட சத்தேற்றம் எனப்படும்.

2] ஒத்த DNA விரல் ரேகை அமைப்பு ஒற்றை கரு இரட்டையர்கள் இடையே காணப்படும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: விரும்பத்தக்க ஊட்டச்சத்து நிறைந்த பயிர்த் தாவரங்களை உற்பத்திச் செய்யும் அறிவியல் முறை உயிரூட்ட சத்தேற்றம் எனப்படும். ஒத்த DNA விரல் ரேகை அமைப்பு ஒற்றை கரு இரட்டையர்கள் இடையே காணப்படும்.

63. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] வேறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு குருத்தணுக்கள் ஆகும்.

2] ஜீன் குளோனிங் முறையில் விரும்பிய DNA, பிளாஸ்மிட் உடன் ஒருங்கிணைக்கப் படுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: வேறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு குருத்தணுக்கள் ஆகும். ஜீன் குளோனிங் முறையில் விரும்பிய DNA, பிளாஸ்மிட் உடன் ஒருங்கிணைக்கப் படுகிறது.

64. நெல் பொதுவாக வண்டல் மண்ணில் செழித்து வளர்கிறது. ஆனால் சடுதிமாற்றத்தின் மூலம் உற்பத்திச் செய்யப்பட்ட ______________என்ற நெல் ரகம் உவர் தன்மை வாய்ந்த மண்ணில் செழித்து வளரும்.

A) அட்டாமிட்டா 1

B) அட்டாமிட்டா 3

C) அட்டாமிட்டா 4

D) அட்டாமிட்டா 2

விளக்கம்: நெல் பொதுவாக வண்டல் மண்ணில் செழித்து வளர்கிறது. ஆனால் சடுதிமாற்றத்தின் மூலம் உற்பத்திச் செய்யப்பட்ட அட்டாமிட்டா 2 என்ற நெல் ரகம் உவர் தன்மை வாய்ந்த மண்ணில் செழித்து வளரும்.

65. பொருத்துக

a) பேசியோலஸ் முங்கோ – 1] அமினோ அமிலம்

b) லைசின் – 2] உளுந்து ரகம்

c) அதிசய அரிசி – 3] கோதுமை ரகம்

d) சர்பதி ஸொரானா – 4] ஐ. ஆர். 8

a b c d

A) 3 1 2 4

B) 4 1 2 3

C) 2 1 4 3

D) 1 3 4 2

66. பொருத்துக

a) X கதிர்கள் – 1] ரப்பானோ பிரகாசிகா

b) கால்சிசின் – 2] சடுதி மாற்ற தூண்டிகள்

c) மீயூடாஜென்கள் – 3] மாறுபாடு அடைந்த செல்கள்

d) குருத்தணுக்கள் – 4] பன்மய இயற்பியல் காரணி

a b c d

A) 3 1 2 4

B) 4 1 2 3

C) 2 1 4 3

D) 1 3 4 2

67. பொருத்துக

a) AK- 10 – 1] அரிசி

b) ஐ. ஆர்.8 – 2] கோதுமை, ரை கலப்பு

c) டிரிட்டிகேல் – 3] நிலக்கடலை

d) சாகிலால் – 4] பசு

a b c d

A) 3 1 2 4

B) 4 1 2 3

C) 2 1 4 3

D) 1 3 4 2

68. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] 1% டி.என்.ஏ வரிசை தொடர் சிறிய பகுதியாக தொடர்ந்து காணப்படும். இதற்கு சாட்டிலைட் டி.என்.ஏ என்று பெயர்.

2] இந்த தொடர் வரிசை மாறுபடும் எண்ணிக்கையிலமைந்த தொடர்வரிசை என்று அழைக்கப்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: 1% டி.என்.ஏ வரிசை தொடர் சிறிய பகுதியாக தொடர்ந்து காணப்படும். இதற்கு சாட்டிலைட் டி.என்.ஏ என்று பெயர். இந்த தொடர் வரிசை மாறுபடும் எண்ணிக்கையிலமைந்த தொடர்வரிசை என்று அழைக்கப்படுகிறது.

69. கூற்று(A): கருநிலை அல்லது இனப்பெருக்க செல்களில் (விந்து மற்றும் அண்ட செல்) திருத்தப்பட்ட ஜீன்கள் இடம் மாற்றப்படுகிறது.

காரணம்(R): இவை இன செல் அல்லது கருநிலை செல் ஜீன் சிகிச்சை எனப்படும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: கருநிலை அல்லது இனப்பெருக்க செல்களில் (விந்து மற்றும் அண்ட செல்) திருத்தப்பட்ட ஜீன்கள் இடம் மாற்றப்படுதல் இன செல் அல்லது கருநிலை செல் ஜீன் சிகிச்சை எனப்படும்.

70. ஜீன் சிகிச்சை நடைமுறைப்படுத்தபட்ட ஆண்டு _________

A) 1990

B) 1991

C) 1992

D) 1993

விளக்கம்: குறைபாடு / நோய் உள்ள மனிதரின் ஜீன்கள் மறுசேர்க்கை டி.என்.ஏ தொழில்நுட்பத்திற்கு உட்படுத்தப்பட்டு திருத்தப்படுகின்றன. இம்முறை 1990 ஆம் ஆண்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

71. குளோனிங் முறையிலான பெண் செம்மறியாட்டு குட்டி முதன் முதலில் உருவாக்கிய ஆண்டு _________

A) 1997

B) 1996

C) 1995

D) 1998

விளக்கம்: குளோனிங் முறையிலான பெண் செம்மறியாட்டு குட்டி முதன் முதலில் உருவாக்கிய ஆண்டு 1996 ஆகும்.

72. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] ரெஸ்ட்ரிக்ஸன் நொதி டி.என்.ஏ வில் குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் குறிப்பிட்ட அமில வரிசையை அடையாளம் காண்கிறது.

2] பின்னர் அவ்விடத்தில் உள்ள பாஸ்போடைஎஸ்டர் இணைப்புகளை துண்டிப்பதன் மூலம் டி.என்.ஏ-வைத் துண்டிக்கிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ரெஸ்ட்ரிக்ஸன் நொதி டி.என்.ஏ வில் குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் குறிப்பிட்ட கார வரிசையை அடையாளம் கண்டு, அவ்விடத்தில் உள்ள பாஸ்போடைஎஸ்டர் இணைப்புகளை துண்டிப்பதன் மூலம் டி.என்.ஏ-வைத் துண்டிக்கிறது.

73. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] பிளாஸ்மிட் என்பவை பாக்ட்ரியா செல்லின் சைட்டோபிளாசத்தில் காணப்படும் குரோமோசோம் சாராத, சிறிய வட்ட வடிவ, இரண்டு இழைகளான டி.என்.ஏ ஆகும்.

2] இது குரோமோசோம் டி.என்.ஏ விலிருந்து வேறுபட்டது.

3] இது தனினிசையாக இரட்டிப்பு அடையும் திறனுடையது.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1, 3 சரி 2 தவறு

விளக்கம்: பிளாஸ்மிட் என்பவை பாக்ட்ரியா செல்லின் சைட்டோபிளாசத்தில் காணப்படும் குரோமோசோம் சாராத, சிறிய வட்ட வடிவ, இரண்டு இழைகளான டி.என்.ஏ ஆகும். இது குரோமோசோம் டி.என்.ஏ விலிருந்து வேறுபட்டது. இது தனினிசையாக இரட்டிப்பு அடையும் திறனுடையது.

74. கலப்பின சேர்க்கை மூலம் உயர்தர பண்புகளை உடைய கலப்பினங்களை உற்பத்தி செய்வது ________

A) ஹெட்டிரோசிஸ்

B) மெட்டிரோசிஸ்

C) கலப்பின சேர்க்கை

D) கலப்பின உயர்வு

விளக்கம்: கலப்பின சேர்க்கை மூலம் உயர்தர பண்புகளை உடைய கலப்பினங்களை உற்பத்தி செய்வது ஹெட்டிரோசிஸ் அல்லது கலப்பின வீரியம் எனப்படும்.

75. வானகம்- நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவகம் என்ற அறக்கட்டளை நிறுவி இயற்கை வேளாண்மையின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கியவர் ________

A) M. S சுவாமிநாதன்

B) நம்மாழ்வார்

C) பேயாழ்வார்

D) பெரியாழ்வார்

விளக்கம்: வானகம்- நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவகம் என்ற அறக்கட்டளை நிறுவி இயற்கை வேளாண்மையின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கியவர் நம்மாழ்வார் ஆவார்.

76. குளோனிங் முறையிலான பெண் செம்மறியாட்டு குட்டி முதன் முதலில் உருவாக்கியவர் ________

A) M.S ஸ்வாமிநாதன்

B) டாக்டர். நார்மன் E. போர்லாக்

C) டாக்டர்.அயான் வில்மட்

D) கார்மல்

விளக்கம்: குளோனிங் முறையிலான பெண் செம்மறியாட்டு குட்டி முதன் முதலில் உருவாக்கியவர் டாக்டர்.அயான் வில்மட் ஆவார்.

10th Science Lesson 21 Questions in Tamil

21] உடல் நலம் மற்றும் நோய்கள்

1. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] கொடூரமான, வன்முறையான, தீங்கு விளைவிக்கின்ற அல்லது காயமேற்படுத்துகின்ற தாக்குதலுக்கு ஒருவரை மற்றொருவர் உள்ளாக்குவது தவறான பயன்பாடு எனப்படும்.

2] இது குடும்பம் மற்றும் அக்குடும்பத்தை சாராத நபர்களினால் ஏற்படுகிறது.

3] இது உடல், உணர்வு அல்லது மனம், வாய்மொழி, குழந்தைகள் மற்றும் பாலியல் ரீதியிலான தவறான பயன்பாடுகளை உள்ளடக்கியதாகும்.

A) 1, 2, 3 சரி

B) 1, 3 தவறு 2 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1, 2, 3 தவறு

விளக்கம்: கொடூரமான, வன்முறையான, தீங்கு விளைவிக்கின்ற அல்லது காயமேற்படுத்துகின்ற தாக்குதலுக்கு ஒருவரை மற்றொருவர் உள்ளாக்குவது தவறான பயன்பாடு எனப்படும். இது குடும்பம் மற்றும் அக்குடும்பத்தை சாராத நபர்களினால் ஏற்படுகிறது.

2. போக்சோ சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ____________

A) 2013

B) 2012

C) 2014

D) 2011

விளக்கம்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக 2012 – இல் போக்சோ (POCSO) சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

3. குழந்தை உரிமைகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ____________

A) 2007

B) 2005

C) 2006

D) 2004

விளக்கம்: குழந்தை உரிமைகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 2005 ஆகும்.

4. குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு ____________

A) மார்ச் 2005

B) ஏப்ரல் 2007

C) மார்ச் 2007

D) ஏப்ரல் 2005

விளக்கம்: குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு மார்ச் 2007 ஆகும்.

5. மருந்துகளின் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் மீதான சர்வதேச நாள் ____________

A) ஜூலை 26

B) ஜுன் 26

C) ஜூலை 27

D) ஜுன் 27

விளக்கம்: மருந்துகளின் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் மீதான சர்வதேச நாள் – ஜுன் 26

6. போதையூட்டும் மருந்துகள் மற்றும் மனோவியல் மருந்துகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ____________

A) 1975

B) 1985

C) 1986

D) 1987

விளக்கம்: 1985 – ஆம் ஆண்டில் போதையூட்டும் மருந்துகள் மற்றும் மனோவியல் மருந்துகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

7. கூற்று(A): நச்சு நீக்கம் மருந்துகளைப் படிப்படியாக நிறுத்தி, அடிமையானவரை அறிகுறிகளிலிருந்து மீட்பதற்கு உதவுகிறது.

காரணம்(R): இதனால் அவர்கள் கடுமையான உடல் மற்றும் உணர்வுரீதியான தொந்தரவுக்கு உள்ளாகின்றனர்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: நச்சு நீக்கம் மருந்துகளைப் படிப்படியாக நிறுத்தி, அடிமையானவரை அறிகுறிகளிலிருந்து மீட்பதற்கு உதவுகிறது. இதனால் அவர்கள் கடுமையான உடல் மற்றும் உணர்வுரீதியான தொந்தரவுக்கு உள்ளாகின்றனர்.

8. புகையிலையானது ____________ புகையிலைத் தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது.

A) நிக்கோட்டியானா ஆக்லாய்டு

B) நிக்கோட்டின்

C) நிக்கோட்டின் பென்சோபைரின்

D) நிக்கோட்டியானா டொபாக்கம்

விளக்கம்: புகையிலையானது நிக்கோட்டியானா டொபாக்கம் மற்றும் நிக்கோட்டியானா ரஸ்டிகா ஆகிய புகையிலைத் தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது.

9. புகைபிடித்தலின் போது வெளிப்படும் புகையில் உள்ள ____________ எனும் புற்றுநோய்க் காரணிகள், நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகின்றன.

A) நிக்கோட்டியானா ஆக்லாய்டு

B) நிக்கோட்டின்

C) நிக்கோட்டின் பென்சோபைரின்

D) பென்சோபைரின்

விளக்கம்: புகைபிடித்தலின் போது வெளிப்படும் புகையில் உள்ள பென்சோபைரின் மற்றும் பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன்கள் எனும் புற்றுநோய்க் காரணிகள், நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகின்றன.

10. நுரையீரலின் மூச்சு சிற்றறைகளில் ஏற்படும் வீக்கம் ____________ எனும் நோயை உண்டாக்குகிறது.

A) பென்சோபைரின்

B) பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன்கள்

C) புற்று நோய்

D) எம்பைசீமா

விளக்கம்: நுரையீரலின் மூச்சு சிற்றறைகளில் (lung alveoli) ஏற்படும் வீக்கம் வாயு பரிமாற்றத்திற்கான மேற்பரப்பை குறைத்து எம்பைசீமா எனும் நோயை உண்டாக்குகிறது.

11. கூற்று(A): புகைபிடித்தலின்போது உண்டாகும் புகையில் உள்ள கார்பன்-மோனாக்சைடு இரத்த சிவப்பணுவில் உள்ள ஹீமோகுளோபினுடன் பிணைப்பை ஏற்படுத்தி அதன் ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் திறனை குறைக்கிறது.

காரணம்(R): இதனால் உடல் திசுக்களில் ரத்தசோகையை உண்டாக்குகிறது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: புகைபிடித்தலின்போது உண்டாகும் புகையில் உள்ள கார்பன்-மோனாக்சைடு இரத்த சிவப்பணுவில் உள்ள ஹீமோகுளோபினுடன் பிணைப்பை ஏற்படுத்தி அதன் ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் திறனை குறைக்கிறது. இதனால் உடல் திசுக்களில் ஹைபாக்சியாவை உண்டாக்குகிறது.

12. கூற்று(A): புகைபிடித்தலினால் ஏற்படும் அதிக இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

காரணம்(R): இதனால் இதய நோய்கள் உண்டாவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: புகைபிடித்தலினால் ஏற்படும் அதிக இரத்த அழுத்தம் இதய நோய்கள் உண்டாவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது.

13. புகைபிடித்தலினால் ____________ சுரப்பினை அதிகரித்து, இரைப்பை மற்றும் முன்சிறுகுடல் புண்களை (அல்சர்) ஏற்படுத்துகிறது.

A) கல்லீரல்

B) இரப்பை

C) மண்ணீரல்

D) நுரையீரல்

விளக்கம்: இரைப்பை சுரப்பினை அதிகரித்து, இரைப்பை மற்றும் முன்சிறுகுடல் புண்களை (அல்சர்) ஏற்படுத்துகிறது.

14. உலக சுகாதார நிறுவனம் (WHO) எந்த ஆண்டுபோதை (drug) என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆலோசனை வழங்கியது?

A0 1985

B) 1984

C) 1986

D) 1987

விளக்கம்: உலக சுகாதார நிறுவனம் (WHO) 1984 போதை (drug) என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆலோசனை வழங்கியது.

15. புகையிலை எதிர்ப்புச் சட்டம் ____________ இல் கொண்டு வரப்பட்டது.

A) ஜூன்-1 2005

B) ஜூன்-1 2006

C) மே-1 2004

D) மே-1 2005

விளக்கம்: புகையிலை எதிர்ப்புச் சட்டம் மே-1 2004- இல் கொண்டு வரப்பட்டது.

16. உலக புகையிலை எதிர்ப்பு நாள் ____________

A) ஜூன் 31

B) ஜூன் 30

C) மே 30

D) மே 31

விளக்கம்: மே – 31 புகையிலை எதிர்ப்பு நாளாகக் கருதப்படுகிறது. (உலக புகையிலை எதிர்ப்பு நாள்)

17. மதுவினால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீமையான விளைவுகளில் எவை சரியானவை?

1] நரம்பு செல்லைப் பாதித்து பல்வேறு விதமான மன மற்றும் உடல்ரீதியான தொந்தரவுகளை உண்டாக்குகிறது.

2] உடல் உறுப்புகளின் ஒருங்கிணைப்பை அதிகரிக்கிறது.

3] மங்கலான, குறைந்த பார்வை, சாலைகளில் விபத்துகளில் முடிகிறது.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1, 3 சரி 2 தவறு

விளக்கம்: நரம்பு செல்லைப் பாதித்து பல்வேறு விதமான மன மற்றும் உடல்ரீதியான தொந்தரவுகளை உண்டாக்குகிறது. உடல் உறுப்புகளின் ஒருங்கிணைப்பை குறைக்கிறது. மங்கலான, குறைந்த பார்வை, சாலைகளில் விபத்துகளில் முடிகிறது.

18. மதுவினால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீமையான விளைவுகளில் எவை சரியானவை?

1] இரத்த நாளங்களின் விரிவடைதல் இதயத்தின் செயல்பாட்டைப் பாதிக்கின்றது.

2] உடல் தன் கட்டுப்பாட்டையும், தன்ணுணர்வினையும் இழந்து உடல்நலக் கோளாறுகளை உண்டாக்கி இறுதியில் இறப்பை ஏற்படுத்துகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1 சரி 2 தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: இரத்த நாளங்களின் விரிவடைதல் இதயத்தின் செயல்பாட்டைப் பாதிக்கின்றது. உடல் தன் கட்டுப்பாட்டையும், தன்ணுணர்வினையும் இழந்து உடல்நலக் கோளாறுகளை உண்டாக்கி இறுதியில் இறப்பை ஏற்படுத்துகிறது.

19. கல்லீரல் சேதத்தினால் கல்லீரலில் அதிக அளவு கொழுப்பு சேமிக்கப்பட்டு ____________ மற்றும் நார்த் திசுக்கள் உருவாதலை ஏற்படுத்துகிறது.

A) சிர்ரோஸிஸ்

B) எம்பைசீமா

C) பென்சோபைரின்

D) புற்று நோய்

விளக்கம்: கல்லீரல் சேதத்தினால் கல்லீரலில் அதிக அளவு கொழுப்பு சேமிக்கப்பட்டு சிர்ரோஸிஸ் மற்றும் நார்த் திசுக்கள் உருவாதலை ஏற்படுத்துகிறது.

20. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] டயாபடீஸ் மெல்லிடஸ் ஒரு நாள்பட்ட வளர்சிதை மாற்றக் கோளாறாகும்.

2] லத்தீனில் டயாபடீஸ் – இனிப்பு : மெல்லிடஸ் – ஓடுகின்ற எனப் பொருள்படும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1 சரி 2 தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: டயாபடீஸ் மெல்லிடஸ் ஒரு நாள்பட்ட வளர்சிதை மாற்றக் கோளாறாகும். (கிரேக்கத்தில் டயாபடீஸ் – ஓடுகின்ற : மெல்லிடஸ் – இனிப்பு எனப் பொருள்படும்).

21. கூற்று(A): இன்சுலின் சுரப்பியின் பற்றாக்குறையான, குறைபாடான இன்சுலின் செயல்பாடு அல்லது இன்சுலின் சுரக்காமை போன்றவற்றால் அதிகரிக்கும்.

காரணம்(R): இரத்த குளுக்கோஸ் அளவு இதன் பண்பாகும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: இன்சுலின் சுரப்பியின் பற்றாக்குறையான, குறைபாடான இன்சுலின் செயல்பாடு அல்லது இன்சுலின் சுரக்காமை போன்றவற்றால் அதிகரிக்கும் இரத்த குளுக்கோஸ் அளவு இதன் பண்பாகும்.

22. டயாபடீஸ் மெல்லிடஸ் பொதுவாக அதிக அளவில் காணப்படும் ____________ குறைபாடாகும்.

A) கல்லீரல்

B) இரப்பை

C) மண்ணீரல்

D) கணையம்

விளக்கம்: டயாபடீஸ் மெல்லிடஸ் பொதுவாக அதிக அளவில் காணப்படும் கணையக் குறைபாடாகும்.

23. நீரிழிவு நோயாளிகளில் 10%-லிருந்து 20% ____________ வகையைச் சார்ந்தவர்களாவர்.

A) IDM
B) IDDM

C) IDTM

D) ITTM

விளக்கம்: நீரிழிவு நோயாளிகளில் 10%-லிருந்து 20% IDDM (Insulin Dependent Diabetes Mellitus) வகையைச் சார்ந்தவர்களாவர்.

24. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] IDDM திடீரெனத் தோன்றும், உயிருக்கு ஆபத்தானது. இது கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிவதன் காரணமாக ஏற்படுகிறது.

2] இதனால் வழக்கத்திற்கு மாறாக, போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1 சரி 2 தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: IDDM திடீரெனத் தோன்றும், உயிருக்கு ஆபத்தானது. இது கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிவதன் காரணமாக ஏற்படுகிறது. இதனால் வழக்கத்திற்கு மாறாக, போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது.

25. குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே ஏற்படுவது ____________

A) IDM
B) IDDM

C) IDTM

D) ITTM

விளக்கம்: IDDM (வகை-1 இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய்) இது குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே ஏற்படுகிறது.

26. பின்வரும் காரணங்கள் எந்த வகை நீரிழிவு நோய் என கண்டறிக?

1] மரபணு மரபுவழி

2] சுற்றுச்சூழல் காரணிகள்

3] வைரஸ் காரணமாக தொற்றுகள்

4] கடுமையான மன அழுத்தம்

A) இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய்

B) இன்சுலின் சாராத நீரிழிவு நோய்

C) NIDDM

D) IDM

விளக்கம்: இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய்க்கான காரணங்கள்: மரபணு மரபுவழி மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் (வைரஸ் காரணமாக தொற்றுகள், கடுமையான மன அழுத்தம்) ஆகியவை இவ்வகையான நீரிழிவு நோய்க்கு காரணமாகின்றன.

27. இன்சுலின் சாராத நீரிழிவு நோய் ____________ என அழைக்கப்படும்.

A) ஹைபர்கிளைசீமியா

B) இளம்வயது நீரிழிவு நோய்

C) வயதானோரின் நீரிழிவு நோய்

D) பாலிபேஜியா

விளக்கம்: இன்சுலின் சாராத நீரிழிவு நோய் வயதானோரின் நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும்.

28. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] NIDDM 80%-லிருந்து 90% நீரிழிவு நோயாளிகளில் காணப்படுகிறது.

2] இது மெதுவாகவும், மிதமாகவும் உருவாகி அதிக நிலைப்புத் தன்மை பெறுகிறது.

3] கணையத்தால் சுரக்கப்படுகின்ற இன்சுலினின் அளவு போதுமானதாக உள்ளது.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: NIDDM 80%-லிருந்து 90% நீரிழிவு நோயாளிகளில் காணப்படுகிறது. இது மெதுவாகவும், மிதமாகவும் உருவாகி அதிக நிலைப்புத் தன்மை பெறுகிறது. கணையத்தால் சுரக்கப்படுகின்ற இன்சுலினின் அளவு போதுமானதாக உள்ளது. ஆனால் அதன் செயல்பாடு குறைபாடு உள்ளதாகக் காணப்படுகிறது.

29. பின்வரும் காரணங்கள் எந்த வகை நீரிழிவு நோய் என கண்டறிக?

1] வயது அதிகரித்தல்

2] உடல் பருமன்

3] உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை

A) இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய்

B) இன்சுலின் சாராத நீரிழிவு நோய்

C) NIDM

D) IDM

விளக்கம்: இன்சுலின் சாராத நீரிழிவு நோய்க்கான காரணங்கள்: வயது அதிகரித்தல் (நடுத்தர மற்றும் வயதானவர்களை பாதிக்கும்), உடல் பருமன், உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை, அளவுக்கதிகமாக உண்ணுதல், உடல் செயல்பாடுகள் இல்லாமை போன்ற காரணிகள் இதற்கு காரணமாய் அமைகின்றன.

30. WHO-வின் திருத்தம் செய்யப்பட்ட புள்ளி விவரப்படி எந்த ஆண்டில் இந்தியாவில் 57.2 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது?

A) 2024

B) 2025

C) 2030

D) 2027

விளக்கம்: WHO-வின் திருத்தம் செய்யப்பட்ட புள்ளி விவரப்படி 2025-இல் இந்தியாவில் 57.2 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

31. 2030 – இல் இறப்பை ஏற்படுத்துகின்ற காரணிகளில் நீரிழிவு நோய் ____________ ஆக திகழுமென உலக சுகாதார (WHO) அமைப்பு தெரிவிக்கிறது.

A) 8

B) 7

C) 9

D) 6

விளக்கம்: 2030 – இல் இறப்பை ஏற்படுத்துகின்ற காரணிகளில் நீரிழிவு நோய் 7-வதாகத் திகழுமென உலக சுகாதார (WHO) அமைப்பு தெரிவிக்கிறது.

32. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] இந்தியாவில் ஏழு பேரில் ஒருவர் நீரிழிவு நோயாளி ஆவார்.

2] நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சராசரி வயது 45 ஆகும். பிற நாடுகளில் 56 வயதாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1 சரி 2 தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: இந்தியாவில் எட்டு பேரில் ஒருவர் நீரிழிவு நோயாளி ஆவார். நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சராசரி வயது 40 ஆகும். பிற நாடுகளில் 55 வயதாகும்.

33. பொருத்துக

a) இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரித்தல் – 1] பாலியூரியா

b) அதிகளவு சிறுநீர் வெளியேறுதல் – 2] ஹைபர்கிளைசீமியா

c) நீரிழப்பினால் ஏற்படும் தாகம் – 3] கிளைகோசூரியா

d) குளுக்கோஸ் சிறுநீரில் வெளியேற்றப்படுதல் – 4] பாலிபேஜியா

e) அதிகப்படியான பசி – 5] பாலிடிப்சியா

a b c d e

A) 5 1 2 3 4

B) 2 1 4 5 3

C) 2 1 5 3 4

D) 3 2 5 1 4

34. WHO-வின் அளவீட்டின்படி உணவுண்ணா நிலையில் இரத்த குளுக்கோஸின் அளவு ____________ விட அதிகமாகவும் காணப்பட்டால் டயாபடீஸைக் கண்டறிந்து உறுதிப்படுத்துதல் அவசியமானதாகும்.

A) 200 மிகி/டெசிலி

B) 140 மிகி/டெசிலி

C) 150 மிகி/டெசிலி

D) 210 மிகி/டெசிலி

விளக்கம்: WHO-வின் அளவீட்டின்படி உணவுண்ணா நிலையில் இரத்த குளுக்கோஸின் அளவு 140 மிகி/டெசிலி விட அதிகமாகவும் காணப்பட்டால் டயாபடீஸைக் கண்டறிந்து உறுதிப்படுத்துதல் அவசியமானதாகும்.

35. WHO-வின் அளவீட்டின்படி உணவுண்ணா நிலையில் சீரற்ற இரத்த குளுக்கோஸ் அளவு ____________ விட அதிகமாகவும் காணப்பட்டால் டயாபடீஸைக் கண்டறிந்து உறுதிப்படுத்துதல் அவசியமானதாகும்.

A) 200 மிகி/டெசிலி

B) 140 மிகி/டெசிலி

C) 150 மிகி/டெசிலி

D) 210 மிகி/டெசிலி

விளக்கம்: WHO-வின் அளவீட்டின்படி உணவுண்ணா நிலையில் சீரற்ற இரத்த குளுக்கோஸ் அளவு 200 மிகி/டெசிலி-ஐ விட அதிகமாகவும் இரண்டு சந்தர்ப்பங்களுக்கு மேல் காணப்பட்டால் டயாபடீஸைக் கண்டறிந்து உறுதிப்படுத்துதல் அவசியமானதாகும்.

36. கார்போஹைட்ரேட்டுகள் ____________ மற்றும் சிக்கலான சர்க்கரை வடிவத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

A) சுக்ரோஸ்

B) குளுக்கோஸ்

C) பல்கொழுப்பு அமிலங்கள்

D) ஸ்டார்ச்

விளக்கம்: கார்போஹைட்ரேட்டுகள் ஸ்டார்ச் மற்றும் சிக்கலான சர்க்கரை வடிவத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

37. மொத்த கலோரி மதிப்பில்____________ அளவு கார்போஹைட்ரேட் மூலம் பராமரிக்கப்பட வேண்டும்.

A) 55- 60%

B) 50- 55%

C) 50-60%

D) 65- 75%

விளக்கம்: மொத்த கலோரி மதிப்பில் 50 – 55% அளவு கார்போஹைட்ரேட் மூலம் பராமரிக்கப்பட வேண்டும்.

38. இந்தியர்களின் இரத்தத்தில் இருக்க வேண்டிய விரும்பத்தக்க கொழுப்பின் அளவானது ____________ ஆகும்.

A) 205 மிகி/டெசிலி

B) 200 மிகி/டெசிலி

C) 210 மிகி/டெசிலி

D) 215 மிகி/டெசிலி

விளக்கம்: இந்தியர்களின் இரத்தத்தில் இருக்க வேண்டிய விரும்பத்தக்க கொழுப்பின் அளவானது 200 மிகி/டெசிலி ஆகும்.

39. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] LDL நல்ல கொலஸ்ட்ரால் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது.

2] HDL இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1, சரி 2 தவறு

விளக்கம்: HDL (அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரதம்) அல்லது நல்ல கொலஸ்ட்ரால் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது. மாறாக LDL (குறை அடர்த்தி கொண்ட லிப்போபுரதம்) இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது.

40. புற்றுநோய் என்ற சொல்லுக்கு இலத்தீன் மொழியில் ____________ என்று பொருள்.

A) வண்டு

B) நண்டு

C) கட்டி

D) பெருக்கம்

விளக்கம்: புற்றுநோய் என்ற சொல்லுக்கு இலத்தீன் மொழியில் ‘நண்டு’ என்று பொருள்.

41. புற்றுநோயைப் பற்றிய படிப்புக்கு ____________ என்று பெயர்.

A) ஆந்தாலஜி

B) கிளைக்காலஜி

C) அண்ட்ரோலாஜி

D) ஆன்காலஜி

விளக்கம்: புற்றுநோயைப் பற்றிய படிப்புக்கு “ஆன்காலஜி” (ஆன்கோ – கட்டி) என்று பெயர்.

42. உலக புற்றுநோய் நாள் ____________

A) பிப்ரவரி 6

B) பிப்ரவரி 4

C) பிப்ரவரி 7

D) பிப்ரவரி 8

விளக்கம்: உலக புற்றுநோய் நாள் – பிப்ரவரி 4

43. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள்____________

A) நவம்பர் 8

B) நவம்பர் 9

C) நவம்பர் 7

D) நவம்பர் 10

விளக்கம்: தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் – நவம்பர் 7

44. புகையிலைப் பழக்கம், அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்குக் காரணமான காரணி

A) நிக்கோட்டின்

B) டானிக் அமிலம்

C) குர்குமின்

D) லெப்டின்

விளக்கம்: உலகளாவிய வணிக ரீதியிலான புகையிலை தயாரிப்பில் பயன்படுகின்றன. அதிலிருக்கும் “நிக்கோட்டின்” எனும் ஆல்கலாய்டு புகையிலைக்கு ஒருவர் அடிமையாதலை ஏற்படுத்துகிறது. நிக்கோட்டின் கிளர்ச்சியைத் தூண்டும், மிகவும் தீங்கு விளைவிக்கின்ற, நச்சுத்தன்மை வாய்ந்த பொருளாகும்.

45. சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள் கதிர்வீச்சினால் சுலபமாக அழிக்கப்படுகின்றன. ஏனெனில் அவை

A) வேறுபட்ட உருவ அமைப்பு கொண்டவை

B) பிளவுக்கு உட்படுவதில்லை

C) திடீர்மாற்றமடைந்த செல்கள்

D) துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை

விளக்கம்: கட்டுப்பாடற்ற, அபரிமிதமான செல் பிரிதல் புற்றுநோயாகும். எனவே அவை சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள் கதிர்வீச்சினால் சுலபமாக அழிக்கப்படுகின்றன.

46. நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை

A) கார்சினோமா

B) சார்க்கோமா

C) லுயூக்கேமியா

D) லிம்போமா

விளக்கம்: லிம்போமா புற்றுநோய் வகை நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும்.

47. அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தினால் உருவாவது

A) ஞாபக மறதி

B) கல்லீரல் சிதைவு

C) மாயத் தோற்றம்

D) மூளைச் செயல்பாடு குறைதல்

விளக்கம்: கல்லீரல் சேதத்தினால் கல்லீரலில் அதிக அளவு கொழுப்பு சேமிக்கப்பட்டு சிர்ரோஸிஸ் மற்றும் நார்த் திசுக்கள் உருவாதலை ஏற்படுத்துகிறது.

48. இதயக்குழல் இதயநோய் ஏற்படக் காரணம்

A) ஸ்ட்ரெப்டோகாக்கை பாக்டீரியா தொற்று

B) பெரிகார்டியத்தின் வீக்கம்

C) இதய வால்வுகள் வலுவிழப்பு

D) இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாமை

விளக்கம்: இதயக்குழல் இதயநோய் ஏற்படக் காரணம் இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாமை ஆகும்.

49. எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு ________ என்று பெயர்.

A) லுயூக்கேமியா

B) சார்க்கோமா

C) கார்சினோமா

D) லிம்போமா

விளக்கம்: கார்சினோமா : எபிதீலியல் மற்றும் சுரப்பிகளின் திசுக்களில் உருவாகிறது.

50. மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது

A) வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்)

B) தீங்கற்ற கட்டி

C) A மற்றும் B

D) மகுடக் கழலை நோய்

விளக்கம்: மெட்டாஸ்டாசிஸ் வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்) தொடர்புடையது ஆகும்.

51. மது அருந்தியவுடன், உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி

A) கண்கள்

B) செவி உணர்வுப் பகுதி

C) கல்லீரல்

D) மைய நரம்பு மண்டலம்

விளக்கம்: நரம்பு செல்லைப் பாதித்து பல்வேறு விதமான மன மற்றும் உடல்ரீதியான தொந்தரவுகளை உண்டாக்குகிறது.

52. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] எய்ட்ஸ் என்பது ஒரு கொள்ளை நோய் (எபிடமிக்)

2] புற்றுநோய் உருவாக்கும் ஜீன்களுக்கு ஆன்கோஜீன்கள் என்று பெயர்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1, சரி 2 தவறு

விளக்கம்: எய்ட்ஸ் என்பது ஒரு கொள்ளை நோய் (எபிடமிக்). புற்றுநோய் உருவாக்கும் ஜீன்களுக்கு ஆன்கோஜீன்கள் என்று பெயர்.

53. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] உடல் பருமனின் பண்பு கட்டிகள் உருவாக்கம் ஆகும்.

2] வெள்ளையணுக்கள் மற்றும் இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது லுயூக்கேமியா எனப்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1, சரி 2 தவறு

விளக்கம்: புற்றுநோயின் பண்பு கட்டிகள் உருவாக்கம் ஆகும். வெள்ளையணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது லுயூக்கேமியா எனப்படுகிறது.

54. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] நோயின் காரணங்கள் பற்றி அறிய உதவும் அறிவியல் பிரிவு நோய்க்காரண ஆய்வு (ஏட்டியாலஜி) எனப்படுகிறது.

2] நோயாளிகளின் ஆடைகளை பயன்படுத்துவதனால் எய்ட்ஸ் நோய் பரவாது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1, சரி 2 தவறு

விளக்கம்: நோயின் காரணங்கள் பற்றி அறிய உதவும் அறிவியல் பிரிவு நோய்க்காரண ஆய்வு (ஏட்டியாலஜி) எனப்படுகிறது. நோயாளிகளின் ஆடைகளை பயன்படுத்துவதனால் எய்ட்ஸ் நோய் பரவாது.

55. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] இன்சுலின் பற்றாக்குறையினால் டயாபடீஸ் மெல்லிடஸ் வகை-2 உருவாகிறது.

2] கார்சினோஜன் என்பவை புற்றுநோயை உருவாக்கும் காரணிகளாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1, சரி 2 தவறு

விளக்கம்: இன்சுலின் செயல்பாடு குறைவாக உள்ளதால் டயாபடீஸ் மெல்லிடஸ் வகை-2 உருவாகிறது. கார்சினோஜன் என்பவை புற்றுநோயை உருவாக்கும் காரணிகளாகும்.

56. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] நிக்கோட்டின் என்பது மயக்கமூட்டி வகை மருந்து.

2] சிர்ரோசிஸ் (கல்லீரல் வீக்கம்) என்பது மூளைக் கோளாறு நோயுடன் தொடர்புடையது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: நிக்கோட்டின் என்பது மயக்கமூட்டி வகை மருந்து. சிர்ரோசிஸ் (கல்லீரல் வீக்கம்) என்பது கல்லீரல் வீக்கம் நோயுடன் தொடர்புடையது.

57. பொருத்துக

a) உணவு பழக்கம் மாறுதல் – 1] உடல் பருமன்

b) அதிக கலோரி – 2] கீமோதெரபி

c) நீடித்த வயிற்றுப்போக்கு – 3] எய்ட்ஸ்

d) வேதி மருந்து சிகிச்சை – 4] தவறான பயன்பாடு

a b c d

A) 3 1 2 4

B) 4 1 3 2

C) 2 4 3 1

D) 1 3 4 2

58. பொருத்துக

a) முழு தானியங்கள் – 1] ஹீமோகுளோபின்

b) ஆல்கஹால் – 2] கிளைக்கோசூரியா

c) கார்பன் மோனாக்சைடு – 3] டயாபாடிஸ் மெல்லிடஸ்

d) கொழுப்பு பொருட்கள் – 4] ஆலோசனைகள்

e) அதிகப்படியான குளூக்கோஸ் – 5] கரோனரி இதய நோய்

a b c d e

A) 3 1 2 4 5

B) 4 1 2 5 3

C) 3 4 1 5 2

D) 5 3 4 2 1

59. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] மருந்துகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்பவர்கள் அதற்கு அடிமையாகின்றனர். இதுவே மருந்துக்கு அடிமையாதல் என்றழைக்கப்படுகிறது.

2] ஆல்கஹாலைச் சார்ந்திருத்தல், மதுப் பழக்கம் எனவும், அடிமையாதல், மதுவுக்கு அடிமையாதல் எனவும் அழைக்கப்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மருந்துகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்பவர்கள் அதற்கு அடிமையாகின்றனர். இதுவே மருந்துக்கு அடிமையாதல் அல்லது மருந்துகளின் தவறான பயன்பாடு என்றழைக்கப்படுகிறது. ஆல்கஹாலைச் சார்ந்திருத்தல், மதுப் பழக்கம் எனவும், அடிமையாதல், மதுவுக்கு அடிமையாதல் எனவும் அழைக்கப்படுகிறது.

60. உலக எய்ட்ஸ் தினம் ____________

A) டிசம்பர் 7

B) டிசம்பர் 5

C) டிசம்பர் 1

D) டிசம்பர் 2

விளக்கம்: ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1 ஆம் நாள் “உலக எய்ட்ஸ் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது.

61. கீழ்க்கண்டவை எந்த நோய்க்கான அறிகுறிகள் ஆகும்?

1] நிணநீர் முடிச்சுகளில் வீக்கம்

2] மூளைச் சேதம்

3] நினைவாற்றல் குறைவு

4] பசியின்மை,

A) டயாபடீஸ்

B) காலரா

C) ஆப்ரிக்கா தூக்க வியாதி

D) எய்ட்ஸ்

விளக்கம்: பாதிக்கப்பட்ட நபர்களில் நோய் எதிர்ப்பாற்றல் குறைகிறது. இதனால் அந்நபர்கள்வைரஸ், பாக்டீரியா, புரோட்டோசோவா மற்றும் பூஞ்சைத் தொற்றினால் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். நிணநீர் முடிச்சுகளில் வீக்கம், மூளைச் சேதம், நினைவாற்றல் குறைவு, பசியின்மை, எடை குறைதல், காய்ச்சல், நீடித்த வயிற்றுப்போக்கு, இருமல், சோம்பல், தொண்டை அழற்சி, வாந்தி மற்றும் தலைவலி போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

62. HIV வைரஸை ____________ சோதனை மூலம் உறுதிப்படுத்தலாம்.

A) வலைசா

B) எலைசா

C) மாடர்ன் பிளாட்

D) பிளாட்

விளக்கம்: HIV வைரஸை எலைசா (ELISA-Enzyme Linked ImmunoSorbentAssay)சோதனை மற்றும் வெஸ்டர்ன் பிளாட் சோதனை மூலம் உறுதிப்படுத்தலாம்.

63. இந்தியாவின் முதல் எய்ட்ஸ் நோயாளி ____________யைச் சேர்ந்தவர்.

A) கல்கத்தா

B) மும்பை

C) சென்னை

D) பெங்களூரு

விளக்கம்: இந்தியாவின் முதல் எய்ட்ஸ் நோயாளி சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்.

64. இந்தியாவில் முதன் முதலில் HIV தொற்றுக்கான ஆதாரத்தினை ஆவணப்படுத்திய ஆண்டு____________

A) 1986

B) 1985

C) 1987

D) 1984

விளக்கம்: டாக்டர் சுனிதி சால்மோன் குழுவினர் 1985 – இல் இந்தியாவில் முதன் முதலில் HIV தொற்றுக்கான ஆதாரத்தினை ஆவணப்படுத்தினார்கள்.

65. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] இந்தியாவின் டாக்டர் சுனிதி சால்மோன் HIV ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையின் முன்னோடி ஆவார்.

2] இவர் சென்னையில் 1981 –களில் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கான முதல் தன்னார்வ சோதனை மற்றும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்தினார்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: இந்தியாவின் டாக்டர் சுனிதி சால்மோன் HIV ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையின் முன்னோடி ஆவார். இவர் சென்னையில் 1980 –களில் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கான முதல் தன்னார்வ சோதனை மற்றும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்தினார்.

66. உயிரியல் துலங்கல் மாற்றிகளான ____________ தடைகாப்பு மண்டலத்தைத் தூண்டுவதன் மூலம் புற்று நோய் கட்டிகளை அழிக்கின்றன.

A) கிளைக்கோசூரியா

B) இஸ்கிமியா

C) பாலிபேஜியா

D) இண்டர்பெரான்கள்

விளக்கம்: உயிரியல் துலங்கல் மாற்றிகளான இண்டர்பெரான்கள் தடைகாப்பு மண்டலத்தைத் தூண்டுவதன் மூலம் புற்று நோய் கட்டிகளை அழிக்கின்றன.

67. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] தக்காளி இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் உதவுகின்றன.

2] எய்ட்ஸ் நோய்த்தடைக்காப்பு மண்டலத்தினை பாதிக்கிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: கரையாத நார்ச்சத்து கொண்ட ஆளி விதைகள், கொய்யா, தக்காளி மற்றும் கீரைகள் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் உதவுகின்றன. மனித தடைகாப்பு குறைவு வைரஸால் (HIV) ஏற்படுத்தப்படும் ஒரு கொடிய நோய் எய்ட்ஸ் ஆகும். இதில் நோய்த் தடைக்காப்பு மண்டலம் உடலின் நோய்க் காரணிகளை ஒடுக்குவதில் தோல்வியடைகிறது.

68. ____________ என்பது புற்றுநோய்க்கான சிகிச்சை அல்ல

A) அறுவை சிகிச்சை

B) தடைக்காப்பு சிகிச்சை

C) வாசெக்டெமி

D) கதிரியக்க சிகிச்சை

விளக்கம்: புற்றுநோய் சிகிச்சை கீழ்க்கண்ட வழிமுறைகளை உள்ளடக்கியது: அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, வேதிமருந்து சிகிச்சை, தடைக்காப்பு சிகிச்சை.

69. பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகளில் ____________ அறிகுறிகள் காணப்படுகின்றன.

A) அடிக்கடி ஏற்படும் சிறுநீர்த் தொற்று

B) தலைவலி

C) மயக்கம்

D) வாந்தி

விளக்கம்: பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகளில் பிறப்புறுப்புக் காயம், வயிற்று வலி, அடிக்கடி ஏற்படும் சிறுநீர்த் தொற்று மற்றும் நடத்தையில் மாற்றம் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.

70. இரத்தப் புற்றுநோய்க்கு ____________ என்று பெயர்.

A) கார்சினோமா

B) லியூக்கேமியா

C) சார்கோமா

D) லிம்போமா

விளக்கம்: லியூக்கேமியா; இது இரத்தப் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாகக் காணப்படும் இவ்வகைப் புற்றுநோய் 15 வயதுக்கும் குறைவான குழந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

71. எலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீர் முடிச்சுகளில் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது எந்த வகை புற்றுநோயின் பண்பாகும்?

A) கார்சினோமா

B) லியூக்கேமியா

C) சார்கோமா

D) லிம்போமா

விளக்கம்: லியூக்கேமியா : எலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீர் முடிச்சுகளில் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இதன் பண்பாகும்.

72. இணைப்பு மற்றும் தசைத் திசுக்களில் உருவாகும் புற்றுநோய் எந்த வகை புற்றுநோயின் பண்பாகும்?

A) கார்சினோமா

B) லியூக்கேமியா

C) சார்கோமா

D) லிம்போமா

விளக்கம்: சார்கோமா : இணைப்பு மற்றும் தசைத் திசுக்களில் உருவாகும் புற்றுநோய் இவ்வகையைச் சார்ந்தது. இவ்வகைப் புற்றுநோய் எலும்பு, குருத்தெலும்பு, தசை நாண்கள், அடிப்போஸ் திசு மற்றும் தசைகள் ஆகியவற்றில் ஏற்படலாம்.

73. கீழ்க்கண்டவை எந்த வகை கட்டிகள் என கண்டறிக?

1] உறுப்புகளுக்குள்ளாகவே பாதிப்பை ஏற்படுத்தும்.

2] உடலின் மற்ற பாகங்களுக்கு பரவாது.

A) கார்சினோமா கட்டிகள்

B) லியூக்கேமியா கட்டிகள்

C) மேலிக்னன்ட் கட்டிகள்

D) தீங்கற்ற கட்டிகள்

விளக்கம்: தீங்கற்ற அல்லது மேலிக்னன்ட் வகை அல்லாத கட்டிகள்: உறுப்புகளுக்குள்ளாகவே பாதிப்பை ஏற்படுத்தும். உடலின் மற்ற பாகங்களுக்கு பரவாது.

74. பெருக்கமடைந்த செல் குழுக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து சுற்றியுள்ள இயல்பான திசுக்களில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்துவது ____________

A) கார்சினோமா கட்டிகள்

B) லியூக்கேமியா கட்டிகள்

C) மேலிக்னன்ட் கட்டிகள்

D) தீங்கற்ற கட்டிகள்

விளக்கம்: மேலிக்னன்ட் கட்டிகள் பெருக்கமடைந்த செல் குழுக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து சுற்றியுள்ள இயல்பான திசுக்களில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும்.

75. BMI விரிவாக்கம் ____________

A) உடற் பருமக் குறீயீடு

B) கரோனரி இதய நோய்

C) இதய நோய்கள்

D) நிறைவுறாத கொழுப்பு அமிலம்

விளக்கம்: BMI- உடற் பருமக் குறீயீடு

76. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] CHD என்பது கரோனரி இதய நோய் ஆகும்.

2] CUD என்பது இதய நோய்கள் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: CHD என்பது கரோனரி இதய நோய் ஆகும். CUD என்பது இதய நோய்கள் ஆகும்.

77. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] NACO என்பது தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும்.

2] PUFA என்பது நிறைவுறாத கொழுப்பு அமிலம் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: NACO என்பது தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். PUFA என்பது நிறைவுறாத கொழுப்பு அமிலம் ஆகும்.

78. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] கணையத்தில் பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்கின்றன.

2] ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபினுடன் கார்பன் மோனாக்சைடு பிணைப்பை ஏற்படுத்துகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: கணையத்தில் பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்கின்றன. ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபினுடன் கார்பன் மோனாக்சைடு பிணைப்பை ஏற்படுத்துகிறது.

79. கூற்று(A): நீரிழிவு நோய் உடல்பருமன் மற்றும் புற்றுநோய் போன்றவை வாழ்க்கை பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களினால் ஏற்படுகிறது.

காரணம்(R): வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மனிதனுக்கு தேவைப்படுகிறது

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: நீரிழிவு நோய் உடல்பருமன் மற்றும் புற்றுநோய் போன்றவை வாழ்க்கை பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களினால் ஏற்படுகிறது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மனிதனுக்கு தேவைப்படுகிறது

80. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] பரவலாகக் காணப்படும் இதயக் குழல் நோய் (கரோனரி இதய நோய்) இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால் ஏற்படுகிறது. ™

2] கட்டுப்பாடற்ற, அபரிமிதமான செல் பிரிதல் புற்று நோயாகும். இது அருகிலுள்ள திசுக்களுக்குள் ஊடுருவி, கட்டிகள் அல்லது நியோபிளாசத்தை உருவாக்கி திசுக்களை அழிக்கிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பரவலாகக் காணப்படும் இதயக் குழல் நோய் (கரோனரி இதய நோய்) இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால் ஏற்படுகிறது. ™ கட்டுப்பாடற்ற, அபரிமிதமான செல் பிரிதல் புற்று நோயாகும். இது அருகிலுள்ள திசுக்களுக்குள் ஊடுருவி, கட்டிகள் அல்லது நியோபிளாசத்தை உருவாக்கி திசுக்களை அழிக்கிறது.

81. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] HIV நோயை உண்டாக்கும் வைரஸ் ரெட்ரோ வைரஸ் எனப்படும்.

2] இதயத் தசை நசிவுறல் நோய் இதயத் தசை திசுக்களின் இறப்பு நோய் என்றழைக்கப்படும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: HIV நோயை உண்டாக்கும் வைரஸ் ரெட்ரோ வைரஸ் எனப்படும். இதயத் தசை நசிவுறல் நோய் இதயத் தசை திசுக்களின் இறப்பு நோய் என்றழைக்கப்படும்.

10th Science Lesson 22 Questions in Tamil

22] சுற்றுச்சூழல் மேலாண்மை

1. கூற்று (i): சுற்றுச்சூழலில் உள்ள பல்வேறு காரணிகளான அமைப்பு, செயல்பாடு, தரம், உயிரிய மற்றும் உயிரற்ற கூறுகளை பராமரித்தல் சுற்றுச்சூழல் மேலாண்மை என்றழைக்கப்படுகிறது.

கூற்று (ii): இயற்கையில் கிடைக்ககூடிய அனைத்தும் மனிதனுக்கு பயன் அளிக்கக்கூடிய வகையிலே அமைந்திருந்தாலும் அதன் பயன்பாடு பொருத்தமான தொழில் நுட்பம் மூலம் மட்டுமே சாத்தியமாகிறது.

A) கூற்று i தவறு, கூற்று ii சரி

B) கூற்று i சரி, கூற்று ii தவறு

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

2. கீழ்க்கண்டவற்றுள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களுள் அல்லாதது.

A) நிலத்தடி நீர்

B) காற்று

C) நிலக்கரி

D) சூரிய ஆற்றல்

விளக்கம்: சில வகையான வளங்களை நாம் தொடர்ச்சியாக பயன்படுத்திக் கொண்டிருக்கும்போதே அவை மீண்டும் தம்மை புதுப்பித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றன. ( வனங்கள், பயிர்கள், வன உயிரிகள், நிலத்தடி நீர், காற்று மற்றும் சூரிய ஆற்றல்). இவை இயற்கையான மறு சுழற்சி முறையிலோ அல்லது உரிய மேலாண்மை வழியாகவோ தம்மை மீண்டும் புதுப்பித்துக் கொள்கின்றன.

3. கீழ்க்கண்டவற்றுள் புதுப்பிக்கத்தக்க இயலாத ஆற்றல் வளங்களுள் பொருந்தாதது எது.

A) நிலக்கரி

B) பெட்ரோலியம்

C) தாது வளங்கள்

D) காற்று ஆற்றல்

விளக்கம்: தம்மை இயற்கையான மறு சுழற்சி முறையில் புதுப்பித்துக் கொள்ள இயலாத வளங்கள், தேவைக்கதிகமான மற்றும் தொடர்ச்சியான பயன்பாட்டினால் தீர்ந்து போகக் கூடியதாக உள்ளன. (தாது வளங்கள், கரி, பெட்ரோலியம்). இவற்றை எளிதில் புதுப்பிக்க இயலாது.

4. நாம் வாழும் பூமியில் மனிதர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கான காரணம்___________

A) பாலின விகிதம்

B) மக்கள் இடம்பெயர்தல்

C) எழுத்தறிவு விகிதம்

D) மக்கள் தொகைப் பெருக்கம்

விளக்கம்: மனிதர்களின் தேவை, மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக அதிகரித்துள்ளது. மனிதன் தன்னுடைய தேவைகளுக்காகவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் மிக அதிகமாக இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதால் அவை மிகவும் வேகமாக குறையத் தொடங்கியுள்ளன.

5. ஒரு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கிய பங்களிப்பது_____________

A) மரங்களை வளர்த்தல்

B) இயற்கை வளங்களை பாதுகாத்தல்

C) காடுகளை உருவாக்குதல்

D) இயற்கை வளங்களை குறைத்தல்

விளக்கம்: இயற்கை வளங்களை பாதுகாப்பது என்பது, ஒரு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கியமான பங்கை அளிக்கக்கூடியதாக உள்ளது.

6. கூற்று (i): இயற்கை வளங்கள் அவற்றின் உயிரிய பொருளாதார மற்றும் பொழுதுபோக்கு மதிப்புகளுக்காகப் பாதுகாக்கப்படுகின்றன.

கூற்று (ii): இயற்கை வளங்களின் அதிகமான மற்றும் திட்டமிடப்படாத பயன்பாடு சுற்றுச்சூழலில் ஒரு சமமான நிலையை உருவாக்குகிறது.

A) கூற்று i தவறு, கூற்று ii சரி

B) கூற்று i சரி, கூற்று ii தவறு

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

விளக்கம்: இயற்கை வளங்கள் அவற்றின் உயிரிய பொருளாதார மற்றும் பொழுதுபோக்கு மதிப்புகளுக்காகப் பாதுகாக்கப்படுகின்றன. இயற்கை வளங்களின் அதிகமான மற்றும் திட்டமிடப்படாத பயன்பாடு சுற்றுச்சூழலில் ஒரு சமமற்ற நிலையை உருவாக்குகிறது.

7. கார்பன் தொட்டி என்றழைக்கப்படுவது________

A) பிட்டுமன்

B) வளிமண்டலங்கள்

C) மரக்கரி

D) காடுகள்

விளக்கம்: காடுகள் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் உடைய பெரும் காரணிகளாகும். காடுகள் கார்பனை நிலை நிறுத்தவதால், அவை கார்பன் தொட்டி என்றும் அழைக்கப்படுகின்றன. தட்பவெப்ப நிலையை ஒழுங்குபடுத்தி, மழைப்பொழிவை அதிகமாக்கி புவி வெப்பமாதலைக் குறைத்து, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களை தடுத்து வன உயிரிகளை பாதுகாத்து நீர் பிடிப்பு பகுதிகளாக மாறி செயல்படுகின்றன.

8. பல தரப்பட்ட புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களின் ஆதாரமாக விளங்குவது_________

A) நிலப்பகுதி

B) சுரங்கங்கள்

C) நீர்ப்பகுதி

D) காடுகள்

விளக்கம்: காடுகள் நமது நாட்டின் பொருளாதார மேம்பாட்டின் முக்கிய பங்களிப்பவை. காடுகள் மனித வாழ்வுக்கு இன்றியமையாதவை, மேலும் பல தரப்பட்ட புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களின் ஆதாரமாகவும் விளங்குபவை.

9. கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி:

1) பெரும்பான்மையான காட்டுப் பகுதிகள் அழிக்கப்படுவது காடுகள் அழிக்கப்படுதல் எனப்படுகறிது.

2) வேளாண்மை, நகரமயமாதல், அணைகள், சாலைகள், கட்டிடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் காடுகளை குடைந்து சாலைகள் அமைத்தல் ஆகிய காரணங்களால் காடுகள் அழிக்கப்படுகின்றன.

3) இவை அனைத்தும் எதிர்கால பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு முன் முயற்சியாகும்.

A) 1, 2 மட்டும் சரி

B) 3 மட்டும் தவறு

C) A, B இரண்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: பெரும்பான்மையான காட்டுப் பகுதிகள் அழிக்கப்படுவது காடுகள் அழிக்கப்படுதல் எனப்படுகறிது. வேளாண்மை, நகரமயமாதல், அணைகள், சாலைகள், கட்டிடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் காடுகளை குடைந்து சாலைகள் அமைத்தல் ஆகிய காரணங்களால் காடுகள் அழிக்கப்படுகின்றன. இது எதிர்கால பொருளாதார, வாழ்க்கைத் தரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரும் அச்சுருத்தலாக உள்ளது.

10. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அழிந்துவரும் வனப்பரப்புகளின் அளவு_____________

A) 1.5 பில்லியன் ஹெக்டார்

B) 1.5 மில்லியன் ஏக்கர்

C) 1 மில்லியன் ஹெக்டார்

D) 1.5 மில்லியன் ஹெக்டார்

11. காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளுள் அல்லாதது.

A) நீர் வளம் பெருகுதல்

B) மண்ணரிப்பு

C) வன உயிரிகள் அழிப்பு

D) அருகிவரும் சிற்றினங்கள் முற்றிலுமாக அழிதல்

விளக்கம்: காடுகள் அழிக்கப்படுவதால் பெரு வெள்ளம் வறட்சி, மண்ணரிப்பு, வன உயிரிகள் அழிப்பு, அருகிவரும் சிற்றினங்கள் முற்றிலுமாக அழிதல் உயிர்புவி சுழற்சியில் சமமற்ற நிலை, பருவ நிலைகளில் மாற்றம், பாலைவனமாதல் போன்ற சூழல் பிரச்சனைகள் உண்டாகின்றன.

12. அகிம்சா வழியில் மரங்களையும் காடுகளையும் பாதுகாப்பதற்காக துவக்கப்பட்ட இயக்கம்.

A) அபிக்கோ இயக்கம்

B) சுத்தி இயக்கம்

C) சிப்கோ இயக்கம்

D) மேற்கண்ட எதுமில்லை

விளக்கம்: சிப்கோ இயக்கம் 1973 ஆம் ஆண்டில் அகிம்சா வழியில் மரங்களையும் காடுகளையும் பாதுகாப்பதற்காக துவக்கப்பட்ட இயக்கம். ‘சிப்கோ’ என்னும் வார்த்தைக்கு பொருள் தழுவுதல் என்பதாகும். மரங்களை வெட்ட விடாமல் கிராம மக்கள் அவற்றை வட்டமாக சூழ்ந்துகொண்டு கட்டித் தழுவியபடி நின்றதால் இப்பெயர் அமைந்தது.

13. சிப்கோ இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு____________

A) 1963

B) 1973

C) 1983

D) 1993

விளக்கம்: சிப்கோ இயக்கம் 1973 ஆம் ஆண்டில் அகிம்சா வழியில் மரங்களையும் காடுகளையும் பாதுகாப்பதற்காக துவக்கப்பட்ட இயக்கம். ‘சிப்கோ’ என்னும் வார்த்தைக்கு பொருள் தழுவுதல் என்பதாகும். மரங்களை வெட்ட விடாமல் கிராம மக்கள் அவற்றை வட்டமாக சூழ்ந்துகொண்டு கட்டித் தழுவியபடி நின்றதால் இப்பெயர் அமைந்தது.

14. சிப்கோ இயக்கம் தொடங்கப்பட்ட சாமோலி என்னும் கிராமப்பகுதி அமைந்துள்ள மாநிலம்.

A) தமிழ்நாடு

B) ஆந்திரபிரதேசம்

C) மத்தியபிரதேசம்

D) உத்திரபிரதேசம்

விளக்கம்: சிப்கோ இயக்கம் உத்திரப்பிரதேச (தற்போதைய உத்தரகாண்ட்) மாநிலத்தில் உள்ள சாமோலி என்னும் ஊரில் தோன்றியது. இமயமலைப் பகுதிகளில் உள்ள காடுகளை 15 ஆண்டுகள் அழிக்கக் கூடாது என்ற தடை உத்தரவை பெற்று 1980 ஆம் ஆண்டு இவ்வியக்கம் மிகப்பெறும் வெற்றியை அடைந்தது.

15. உத்திரபிரதேச மாநில சாமோலி என்னும் ஊரில் தொடங்கிய சிப்கோ இயக்கம் மிகப்பெரிய வெற்றியை அடைந்த ஆண்டு_____________

A) 1970

B) 1980

C) 1990

D) 1993

விளக்கம்: சிப்கோ இயக்கம் உத்திரப்பிரதேச (தற்போதைய உத்தரகாண்ட்) மாநிலத்தில் உள்ள சாமோலி என்னும் ஊரில் தோன்றியது. இமயமலைப் பகுதிகளில் உள்ள காடுகளை 15 ஆண்டுகள் அழிக்கக் கூடாது என்ற தடை உத்தரவை பெற்று 1980 ஆம் ஆண்டு இவ்வியக்கம் மிகப்பெறும் வெற்றியை அடைந்தது.

16. பொருத்துக:

A) சிப்கோ – 1. மரக்கன்றுகள் நடுதல்

B) காப்புக் காடுகள் – 2. (752.3) லட்சம் ஹெக்டேர் பரப்பளவு

C) பாதுகாப்புக் காடுகள் – 3. (215.1) லட்சம் ஹெக்டேர் பரப்பளவு

D) வன மகோத்சவம் – 4. தழுவுதல்

A) 1 2 3 4

B) 4 2 3 1

C) 4 3 2 1

D) 4 1 2 3

விளக்கம்:

A) சிப்கோ – 1. தழுவுதல்

B) காப்புக் காடுகள் – 2. (752.3) லட்சம் ஹெக்டேர் பரப்பளவு

C) பாதுகாப்புக் காடுகள் – 3. (215.1) லட்சம் ஹெக்டேர் பரப்பளவு

D) வன மகோத்சவம் – 4. மரக்கன்றுகள் நடுதல்

17. பொருத்துக:

A) தேசிய காடுகள் சட்டம் – 1. (1980)

B) தேசிய காடுகள் திருத்தச் சட்டம் – 2. (1972)

C) காடுகள் பாதுகாப்புச் சட்டம் – 3. (1988)

D) வன உயிரி பாதுகாப்புச் சட்டம் – 4. (1952)

A) 1 2 3 4

B) 4 2 3 1

C) 4 3 1 2

D) 4 1 2 3

விளக்கம்:

A) தேசிய காடுகள் சட்டம் – 1. (1952)

B) தேசிய காடுகள் திருத்தச் சட்டம் – 2. (1988)

C) காடுகள் பாதுகாப்புச் சட்டம் – 3. (1980)

D) வன உயிரி பாதுகாப்புச் சட்டம் – 4. (1972)

18. வன உயிரினங்களின் பாதுகாப்புப் பற்றியக் கூற்றுக்களில் தவறானதைக் கண்டறி:

A) இயற்கையான வாழிடத்தில் (காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள்) வாழும் மனிதர்களால் வளர்க்கப்படும் உயிரினங்கள் வன உயிரிகள் எனப்படும்.

B) உயிரிகள் பல்வகைத் தன்மையை நிலை நிறுத்த, வன உயிரிகள் அவசியமாகின்றன.

C) வன உயிரிகள், வனச் சுற்றுலாவை மையமாகக்கொண்டு வருவாயைப் பெருக்குவதால் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திட உதவுகின்றன.

D) காடுகள் பாதுகாப்பும், வன உயிரின பாதுகாப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.

விளக்கம்: இயற்கையான வாழிடத்தில் (காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள்) வாழும் மனிதர்களால் வளர்க்கப்படாத உயிரினங்கள் வன உயிரிகள் எனப்படும். உயிரிகள் பல்வகைத் தன்மையை நிலை நிறுத்த, வன உயிரிகள் அவசியமாகின்றன. வன உயிரிகள், வனச் சுற்றுலாவை மையமாகக்கொண்டு வருவாயைப் பெருக்குவதால் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திட உதவுகின்றன. காடுகள் பாதுகாப்பும், வன உயிரின பாதுகாப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.

19. வன உயிர்களை பாதுகாப்பதன் நோக்கங்களுல் பொருந்தாததைக் கண்டறி:

A) சிற்றினங்களை அழிவிலிருந்து பாதுகாத்தல்.

B) தாவரங்கள் மற்றும் விலங்குகளை அழிவிலிருந்து பாதுகாத்தல்.

C) அருகி வரும் சிற்றினங்கள் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள சிற்றினங்கள் அழியாமல் பாதகாத்தல்.

D) சட்டவிரோத வேட்டையாடுதல் மற்றும் விலங்குகளை பிடித்தல் ஆகியவற்றிற்கு ஆதரவு அளித்தல்.

விளக்கம்: சட்டவிரோத வேட்டையாடுதல் மற்றும் விலங்குகளை பிடித்தல் ஆகியவற்றைத் தடை செய்தல்.

20. வன உயிரி பாதுகாப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்களுல் பொருந்தாதது எது.

A) குறிப்பிட்ட வன உயிரிகளை வேட்டையாடுவதும், கொல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

B) வன உயிரிகளை பாதுகாக்க சரணாயலங்கள், தேசிய பூங்காக்கள், மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை புதிதாக உருவாக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

C) மாநில வன விலங்கு வாரியம் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் தேசிய பூங்காக்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

D) அழியும் நிலையிலுள்ள உயிரிகளை பாதுகாக்க சிறப்பு திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விளக்கம்: மத்திய வன விலங்கு வாரியம் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் தேசிய பூங்காக்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

21. இந்தியாவில் துவங்கப்பட்ட முதல் தேசியப் பூங்கா____________

A) ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா

B) பந்திப்பூர் தேசியப் பூங்கா

C) துத்வா தேசியப் பூங்;கா

D) கிர் தேசியப் பூங்கா

விளக்கம்: ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா, 1936ம் ஆண்டு உத்தராகாண்ட் மாநிலத்தில் துவங்கப்பட்ட இந்தியாவின் முதல் தேசியப் பூங்காவாகும்.

22. இந்தியாவில் தற்போது உள்ள உயிர்க்கோளக் காப்பகங்களின் எண்ணிக்கை____________

A) 10

B) 15

C) 20

D) 25

23. கீழ்க்கண்டவற்றுள் தமிழ்நாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோளக்காப்பகத்தைக் கண்டறி.

A) சுந்தரவனம் உயிர்க்கோள காப்பகம்

B) நந்தாதேவி உயிர்க்கோள காப்பகம்

C) நீலகிரி உயிர்க்கோள காப்பகம்

D) பச்மரி உயிர்க்கோள காப்பகம்

விளக்கம்: தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி பகுதி, ஒரு பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோளக் காப்பக பகுதியாகும்.

24. இந்தியாவின் முதல் பெண் வன உயிரி புகைப்படக் கலைஞர்___________

A) ராதிகா ராமசாமி

B) ராதிகா குமாரசாமி

C) ராதிகா துரைசாமி

D) ராதிகா ரகுராம்

விளக்கம்: தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், வெங்கடாச்சலபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ராதிகா ராமசாமி என்பவர் ‘இந்தியாவின் முதல் பெண் வன உயிரி புகைப்படக் கலைஞர்’ என்று சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளார்.

25. இந்தியாவின் முதல் பெண் வன உயிரி புகைப்படக் கலைஞரான ராதிகா ராமசாமி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

A) விழுப்புரம்

B) பெரம்பலூர்

C) தூத்துக்குடி

D) தேனி

விளக்கம்: தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், வெங்கடாச்சலபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ராதிகா ராமசாமி என்பவர் ‘இந்தியாவின் முதல் பெண் வன உயிரி புகைப்படக் கலைஞர்’ என்று சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளார்.

26. இந்தியாவின் முதல் பெண் வன உயிரி புகைப்படக் கலைஞரான ராதிகா ராமசாமியின் புகைப்படத் தொகுப்பு கீழ்க்கண்ட எந்த தலைப்பில் வெளியானது.

A) வன விலங்குகளின் சிறந்த தருணங்கள்

B) தாவரங்களின் சிறந்த தருணங்கள்

C) ஊர்வனங்களின் சிறந்த தருணங்கள்

D) வன உயிரினங்களின் சிறந்த தருணங்கள்

விளக்கம்: இந்தியாவின் முதல் பெண் வன உயிரி புகைப்படக் கலைஞரான ராதிகா ராமசாமியின் புகைப்படத் தொகுப்பு ‘வன உயிரினங்களின் சிறந்த தருணங்கள்’ என்னும் தலைப்பில் நவம்பர் 2014 ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

27. பொருத்துக:

A) ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா – 1. நவம்பர் 2014

B) வெங்கடாச்சலபுரம் – 2. (1936)

C) வன உயிரினங்களின் சிறந்த தருணங்கள் – 3. கார்பெட் தேசிய பூங்கா

D) உத்தரகான்ட் – 4. தேனி

A) 1 2 3 4

B) 4 2 3 1

C) 2 4 1 3

D) 4 1 2 3

விளக்கம்:

A) ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா – 1. (1936)

B) வெங்கடாச்சலபுரம் – 2. தேனி

C) வன உயிரினங்களின் சிறந்த தருணங்கள் – 3. நவம்பர் 2014

D) உத்தரகான்ட் – 4. கார்பெட் தேசிய பூங்கா

28. பொருத்துக:

A) இந்திய வன உயிரி வாரியம் – 1. World Wildlife Fund

B) சர்வதேச வன உயிரி நிதியம் – 2. Wild Life Conservation

C) உலகப் பாதுகாப்பு ஒன்றியம் – 3. Indian Board of Wildlife

D) பாம்பே இயற்கை வரலாற்று நிறுவனம் – 4. Bombay Natural History Society

A) 3 1 2 4

B) 4 2 3 1

C) 2 4 1 3

D) 4 1 2 3

விளக்கம்:

A) இந்திய வன உயிரி வாரியம் – 1. Indian Board of Wildlife

B) சர்வதேச வன உயிரி நிதியம் – 2. World Wildlife Fund

C) உலகப் பாதுகாப்பு ஒன்றியம் – 3. Wild Life Conservation

D) பாம்பே இயற்கை வரலாற்று நிறுவனம் – 4. Bombay Natural History Society

29. பன்னாட்டு இயற்கை மற்றும் இயற்கை வளங்களுக்கான பாதுகாப்பு ஒன்றிய அமைப்பு___________

A) Bombay Natural History Society (BNHS)

B) World Wildlife Fund (WWF)

C) International Union for Conservation of Nature ( IUCN)

D) Wild Life Conservation (WCN)

30. இந்திய வன உயிரி பாதுகாப்பு நிறுவனம் அமைந்துள்ள இடம்__________

A) ஹைதராபாத்

B) கொல்கத்தா

C) சென்னை

D) டெஹ்ராடூன்

31. பொருத்துக:

A) புலிகள் பாதுகாப்பு திட்டம் – 1. (1999)

B) யானைகள் பாதுகாப்புத் திட்டம் – 2. (1973)

C) முதலைகள் பாதுகாப்பு திட்டம் – 3. (1992)

D) கடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம் – 4. (1976)

A) 1 2 3 4

B) 2 3 4 1

C) 2 4 1 3

D) 4 1 2 3

விளக்கம்:

A) புலிகள் பாதுகாப்பு திட்டம் – 1. (1973)

B) யானைகள் பாதுகாப்புத் திட்டம் – 2. (1992)

C) முதலைகள் பாதுகாப்பு திட்டம் – 3. (1976)

D) கடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம் – 4. (1999)

32. ‘இந்திய காண்டாமிருகங்கள் பாதுகாப்பு 2020’ என்னும் திட்டம் கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் துவங்கப்பட்டது.

A) உத்திரபிரதேசம்

B) அசாம்

C) குஜராத்

D) கர்நாடகா

விளக்கம்: அசாம் மாநிலத்திலுள்ள காண்டாமிருகங்கள் பாதுகாக்க ‘இந்திய காண்டாமிருகங்கள் பாதுகாப்பு 2020’ என்னும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த பட்சம் 3000 ஒற்றைக் கொம்புடைய காண்டாமிருகங்களையாவது 2020 ம் ஆண்டுக்குள் பாதுகாத்திட குறிக்கோள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

33. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி:

1) மண்ணின் மேலடுக்கு, மட்கிய இலை தழைகள், மற்றும் தாது உப்புக்கள் முதலிய, தாவரங்கள் வளர்ச்சியடைத் தேவையான அவசிய பொருட்களைத் கொண்டுள்ளது.

2) மேலடுக்கு மண், காற்று மற்றும் நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்படுவது ‘மண்ணரிப்பு’ எனப்படுகிறது.

3) மண்ணரிப்பின் காரணமாக மண்ணின் மட்கு, ஊட்டப் பொருட்கள், வளம் ஆகியவை வெகுவாகக் குறைந்து மண் வளத்தை அதிகரிக்கிறது.

A) 1, 2 மட்டும் சரி

B) 3 மட்டும் தவறு

C) அனைத்தும் சரி

D) A, B இரண்டும் சரி

விளக்கம்: மண்ணரிப்பின் காரணமாக மண்ணின் மட்கு, ஊட்டப் பொருட்கள், வளம் ஆகியவை வெகுவாகக் குறைந்து மண் வளத்தை குறைக்கிறது.

34. கீழ்க்கண்டவற்றுள் மண்ணரிப்பிற்கான காரணங்களுல் பொருந்தாதது எது.

A) அதி வேகமாக வீசும் காற்று

B) பெரு வெள்ளம்

C) நிலச்சரிவு

D) மரம் வளர்த்தல்

விளக்கம்: அதி வேகமாக வீசும் காற்று, பெரு வெள்ளம், நிலச்சரிவு, மனிதரின் நடவடிக்கைகள் (வேளாண்மை, காடழிப்பு, சுரங்கங்கள் ஏற்படுத்துதல்) மற்றும் கால்நடைகளின் அதிக மேய்ச்சல் ஆகியவை மண்ணரிப்பிற்கான முக்கிய காரணிகளாகும்.

35. மண்ணரிப்பை தடுப்பதற்கான வழிமுறைகளுல் தவறானதைக் கண்டறி:

A) தாவரப்பரப்பை நிலை நிறுத்திக் கொள்வதன் மூலம் மண்ணரிப்பைத் தடுக்கலாம்.

B) கால்நடைகளின் அதிகமான மேய்ச்சலைக் கட்டுபடுத்துவதன் மூலம் மண் அரிப்பை தடுக்கலாம்.

C) காடுகள் உருவாக்கம், மலைகளில் நிலத்தை சமப்படுத்துதல், நீரோட்டத்தின் திசையில் மண்ணை உழுதல் ஆகியவை மூலம் மண் அரிப்பை தடுக்கலாம்.

D) பயிர் சுழற்சி மற்றும் மண்வள மேலாண்மை மூலம் மண்ணில் கரிமப் பொருள்களின் அளவை மேம்படுத்தலாம்.

விளக்கம்: காடுகள் உருவாக்கம், மலைகளில் நிலத்தை சமப்படுத்துதல், நீரோட்டத்தின் எதிர்திசையில் மண் உழுதல் ஆகியவை மூலம் மண் அரிப்பை தடுக்கலாம்.

36. மண்ணரிப்பை தடுப்பதற்கான வழிமுறைகளுல் பொருந்தாததைக் கண்டறி:

1) நிலப்பரப்பில் ஓடும் நீரினை நீர்பிடிப்பு பகுதிகளில் சேமிப்பதன் மூலம் மண் அரிப்பைத் தடுக்கலாம்.

2) காற்றின் வேகத்தை அதிகரிக்க அதிக பரப்பில் மரங்களை நடுவதன் மூலம் (பாதுகாப்பு அடுக்கு) மண் அரிப்பை தடுக்கலாம்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

37. வளர்ச்சி மேம்பாட்டின் அடிப்படையில் ஆற்றல் வளங்களை கீழ்க்கண்ட எத்தனை வகைகளாக பிரிக்கப்படுகிறது.

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

விளக்கம்: வளர்ச்சி மேம்பாட்டின் முக்கிய உள்ளீடு ஆற்றலாகும். ஆற்றல் வளங்களின் விரிவாக்கம் என்பது உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள விவசாய மற்றும் தொழில்துறை விரிவாக்கத்துடன் நேரடித் தொடர்புடையது. ஆற்றல் வளங்களை புதுப்பிக்க இயலாத மற்றும் புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளங்கள் என இரு வகையாக வகைப்படுத்தப்படுகிறது.

38. குறைந்த காலத்தில் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ள முடியாத ஆற்றல் மூலங்கல்___________

A) மரபுசார் ஆற்றல் வளங்கள்

B) புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்கள்

C) தீர்ந்து போகக் கூடிய வளங்கள்

D) A, C இரண்டும்

விளக்கம்: குறைந்த காலத்தில் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ள முடியாத ஆற்றல் மூலத்தில் இருந்து பெறப்படும் ஆற்றல் புதுப்பிக்க இயலாத ஆற்றல் எனப்படும். இவை மிகக் குறைந்த அளவே இயற்கையில் கிடைக்கிறது. புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்களாவன: நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு மற்றும் அணுக்கரு ஆற்றல் ஆகியவையாகும்.

39. உலகின் ஆற்றல் தேவைகளில் மரபுசார் ஆற்றல் மற்றும் அணு ஆற்றல் மூலங்களின் சதவீதங்கள் முறையே____________

A) 10%, 90%

B) 90%, 10%

C) 80%, 20%

D) 70%, 20%

40. அதிக அளவில் கிடைக்கூடியதும் தம்மை குறுகிய காலத்தில் புதுப்பித்துக் கொள்ளக் கூடியதுமான ஆற்றல் மூலங்கள்________

A) புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்கள்

B) மரபுசாரா ஆற்றல் வளங்கள்

C) தீர்ந்து போகக் கூடிய வளங்கள்

D) A, C இரண்டும்

விளக்கம்: இத்தகைய ஆற்றல் மூலங்கள் எப்போதும் அதிக அளவில் கிடைக்கக் கூடியதும் இயற்கையாகத் தம்மை குறுகிய காலத்தில் புதுப்பித்துக் கொள்ளக் கூடியதும் மற்றும் மிகக்குறைந்த செலவில் ஆற்றலை தொடர்ச்சியாக பெரும்படியும் உள்ள மூலங்களாகும். பெரும் அளவிலான மரபுசாரா ஆற்றல் மூலங்கள் உயிரி எரிபொருள், உயிரிப் பொருண்மை ஆற்றல், புவிவெப்ப ஆற்றல், நீராற்றல்(நீர் மின் ஆற்றல் மற்றும் ஓத ஆற்றல்), சூரிய ஆற்றல் மற்றும் காற்றாற்றல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

41. புதைபடிவ எரிபொருள்கள் பற்றியக் கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:

A) புதைபடிவ எரிபொருட்கள் புவியின் மேல் அடுக்கினுள் காணப்படுகின்றன.

B) இவை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து மடிந்த உயிரினங்கள் காற்றில்லா சூழலில் மட்குதல் போன்ற இயற்கை நிகழ்வுகள் காரணமாக உருவானவையாகும்.

C) மடிந்த உயிரினங்கள் மேல் மண் அடுக்குகள் மேலும் மேலும் படிவதால் உருவான வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக உயிரினங்கள் மெல்ல மெல்ல ஹைட்ரஜன்களாக மாற்றமடைந்தன.

D) உதாரணம்: பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் இயற்கை வாயு.

விளக்கம்: மடிந்த உயிரினங்கள் மேல் மண் அடுக்குகள் மேலும் மேலும் படிவதால் உருவான வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக உயிரினங்கள் மெல்ல மெல்ல ஹைட்ரோகார்பன்களாக மாற்றமடைந்தன.

42. கச்சா எண்ணெய் பயன்படுத்தும் முதலாவது பெரிய நாடு___________

A) இந்தியா

B) சீனா

C) அமெரிக்கா

D) ஜப்பான்

விளக்கம்: அமெரிக்கா மற்றும் சீனாவிற்க அடுத்தபடியாக உலக அளவில் கச்சா எண்ணெய் பயன்படுத்தும் மூன்றாவது பெரிய நாடு இந்தியாவாகும்.

43. கச்சா எண்ணெய் பயன்படுத்தும் இரண்டாவது பெரிய நாடு____________

A) இந்தியா

B) சீனா

C) அமெரிக்கா

D) ஜப்பான்

விளக்கம்: அமெரிக்கா மற்றும் சீனாவிற்க அடுத்தபடியாக உலக அளவில் கச்சா எண்ணெய் பயன்படுத்தும் மூன்றாவது பெரிய நாடு இந்தியாவாகும்.

44. கச்சா எண்ணெய் பயன்படுத்தும் மூன்றாவது பெரிய நாடு__________

A) இந்தியா

B) சீனா

C) அமெரிக்கா

D) ஜப்பான்

விளக்கம்: அமெரிக்கா மற்றும் சீனாவிற்க அடுத்தபடியாக உலக அளவில் கச்சா எண்ணெய் பயன்படுத்தும் மூன்றாவது பெரிய நாடு இந்தியாவாகும்.

45. அனல் மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்யப் பயன்படும் ஆற்றல் மூலம்__________

A) கச்சா எண்ணெய்

B) பெட்ரோலியம்

C) நிலக்கரி

D) டீசல்

விளக்கம்: நிலக்கரி அனல்மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. பெட்ரோலியம், கச்சா எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது. இது எண்ணெய் சுத்திரிப்பு நிலையங்களில் பெட்ரோல் மற்றம் டீசல் ஆக சுத்திகரிக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து, சரக்கு ஊர்திகள், தொடர்வண்டிகள், கப்பல்கள் மற்றும் ஆகாய விமானங்களை இயக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

46. கச்சா எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வீட்டு உபயோக பொருள்____________

A) கெரோசின்

B) திரவ பெரோலிய வாயு()

C) பெட்ரோலியம்

D) A, C இரண்டும்

விளக்கம்: கச்சா எண்ணெயில் இருந்து பிரித்து எடுக்கப்படும் கெரோசின் மற்றும் திரவ மயமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு(LPG) ஆகியவை வீட்டு உபயோக எரிபொருளாக. உணவு சமைக்க பயன்படுத்தப்படுகின்றன. நிலக்கரி மற்றும் பெட்ரோலிய எண்ணெய் இருப்புகள், நாம் தொடர்ந்து அதிகமாகப் பயன்படுத்தினால் மிக விரைவாகத் தீர்ந்து போகக்கூடிய நிலையில் உள்ளன.

47. பொருத்துக:

A) தீர்ந்து போகக் கூடியது – 1. அழுத்தப்பட்ட இயற்கை வாயு

B) தீர்ந்து போகாதது – 2. நிலக்கரி

C) கச்சா எண்ணெய் – 3. காற்று ஆற்றல்

D) CNG – 4. பெட்ரோலியம்

A) 1 2 3 4

B) 4 1 2 3

C) 2 4 1 3

D) 2 3 4 1

விளக்கம்:

A) தீர்ந்து போகக் கூடியது – 1. நிலக்கரி

B) தீர்ந்து போகாதது – 2. காற்று ஆற்றல்

C) கச்சா எண்ணெய் – 3. பெட்ரோலியம்

D) CNG – 4. அழுத்தப்பட்ட இயற்கை வாயு

48. நிலக்கரி மற்றம் பெட்ரோலியம் வளங்களை பாதுகாக்கும் வழிமுறைகளுல் பொருந்தாததைக் கண்டறி:

1) மின்சாரத்தை செலவழிப்பதன் மூலம் நிலக்கரி பயன்பாட்டினை குறைக்கலாம். மிகக் குறைந்த தூரங்களுக்கு இருசக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவற்றுக்குப் பதிலாக நடைவண்டிகளைப் பயன்படுத்தலாம்.

2) சமைப்பதற்கு அழுத்தக் கலன்களை பயன்டுத்துவதன் மூலம் கெரோசின் மற்றும் எல்பிஜி ஆகியவற்றின் நுகர்வை குறைக்கலாம். மேலும் சாத்தியமான இடங்களில் சூரிய வெப்பசூடேற்றி, சூரிய சமையல் கலன்களை பயன்படுத்தலாம்.

3) எரிபொருள் மேம்பாட்டுத் திறன் கொண்ட எந்திரங்களை மோட்டார் வாகனங்களில் பயன்படுத்துவதன் மூலமாக ஆற்றலை மேம்படுத்துவதுடன் காற்று மாசுபாடுதலையும் குறைக்கலாம்.

A) 1, 2 மட்டும் தவறு

B) 1, 3 மட்டும் தவறு

C) 1 மட்டும் தவறு

D) அனைத்தும் சரி

விளக்கம்: மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் நிலக்கரி பயன்பாட்டினை குறைக்கலாம். மிகக் குறைந்த தூரங்களுக்கு இருசக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவற்றுக்குப் பதிலாக மிதிவண்டிகளைப் பயன்படுத்தலாம்.

49. சூரிய ஆற்றல் பற்றியக் கருத்துக்களில் சரியானதைக் கண்டறி:

1) சூரியனில் இருந்து பெறப்படும் ஆற்றல் சூரிய ஆற்றல் எனப்படும். சூரியன் பெருமளவு வெப்பத்தையும் ஒளியையும் வெளியிடுகிறது.

2) சூரியனிலிருந்து ஒளி ஆற்றல் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு பூமியின் மேற்பரப்பை வந்து அடைகிறது.

3) இதில் மிகச் சிறிய அளவைப் பயன்படுத்துவதன் மூலம் நாம், நம் நாட்டில் பெருமளவு ஆற்றல் தேவைகளில் நிறைவு பெற முடியும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 1, 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: சூரியனிலிருந்து ஒளி ஆற்றல் ஏறக்குறைய பாதியளவே (47%) பூமியின் மேற்பரப்பை வந்து அடைகிறது.

50. உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது.

A) மத்தியப்பிரதேசம்

B) உத்தரப்பிரதேசம்

C) ஆந்திரப்பிரதேசம்

D) ஹிமாச்சலபிரதேசம்

விளக்கம்: உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ளது. இது வெண்மை நிற பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளது.

51. தாஜ்மஹாலின் வெள்ளை பளிங்குக் கற்கலானது மஞ்சள் நிறமாக மாறக் காரணமான வாயுக்கள்_______________

A) சல்ஃபர்

B) ஹைட்ரஜன் ஆக்ஸைடு

C) நைட்ரஜன் ஆக்ஸைட

D) A, C இரண்டும்

விளக்கம்: இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான மதுரா எண்ணெய் சுத்தகரிப்பு ஆலை தாஜ்மஹாலுக்கு அருகில் அமைந்துள்ளது. இதிலிருந்து உற்பத்தியாகும் சல்ஃபர் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் இப்பகுதியில் உள்ள தாஜ்மஹாலின் வெண்ணிற பளிங்கு கற்களில் மேல் படிந்து அக்கற்களை மஞ்சள் நிறமாக மாற்றியுள்ளது. தாஜ்மஹாலை சிதைவிலிருந்து பாதுகாக்க தற்போது இந்திய அரசானது வெளியேற்றும் புகைகளுக்கு குறிப்பிட்ட வரையறை அளவினை விதித்துள்ளது.

52. சூரிய ஒளியை மின் ஆற்றலாக மாற்றும் சூரிய மின்கலனானது எந்த உலோகத்தினால் உருவாக்கப்பட்டது.

A) டங்ஸ்டன்

B) சிலிக்கான்

C) வுல்ப்ஃரம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: சூரிய மின்கலன்கள் (ஃபோட்டோவோல்டாயிக் கருவிகள்) சிலிக்கானால் உற்பத்தி செய்யப்பட்டு சூரிய ஒளியை மின் ஆற்றலாக மாற்றும் திறன் கொண்டவை. சூரிய மின்கலன்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மின் உற்பத்தி செய்யக்கூடியவை. இதிலிருந்து மாசு உண்டாக்ககூடிய எரிபொருட்களோ, ஆபத்தான வாயுக்களோ, கழிவுப் பொருட்களோ வெளியேறுவதில்லை.

53. சூரிய மின் கலன் அடுக்குகள் பற்றிய கூற்றுக்களைக் கவனி:

1) சூரிய மின்கலன்களை தொடர் அடுக்காக அமைப்பதன் மூலம் சூரிய மின் கலன் அடுக்குகள் அமைக்கப்படுகிறது.

2) இதனால் இதில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு அதிகமாகிறது.

3) சூரிய மின்கல அடுக்குகளை உற்பத்தி செய்வதற்கான செலவு குறைவு.

A) 1, 3 மட்டும் சரி

B) 1, 2 மட்டும் சரி

C) 3 மட்டும் தவறு

D) B, C இரண்டும்

விளக்கம்: சூரிய மின்கலன்களை தொடர் அடுக்காக அமைப்பதன் மூலம் சூரிய மின் கலன் அடுக்குகள் அமைக்கப்படுகிறது. இதனால் இதில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு அதிகமாகிறது. ஆனால் இவை மிகவும் செலவு மிக்கவை.

54. (100) சூரிய வெப்ப சூடேற்றிகள் மூலம் ஒரு ஆண்டுக்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு____________

A) 1500 யூனிட்

B) 1500 மெகா யூனிட்

C) 15000 யூனிட்

D) 15000 மெகாயூனிட்

விளக்கம்: 100 யூனிட் வெப்ப சூடேற்றிகள் மூலம் ஒரு ஆண்டுக்கு 1500 யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும்.

55. சூரிய ஆற்றலின் நன்மைகளுல் பொருந்தாததைக் கண்டறி:

A) பெருமளவிலும், விலையில்லாமலும் கிடைக்கக்கூடியது.

B) இது ஒரு புதுப்பிக்க இயலா ஆற்றல் மூலமாகும்.

C) இது வெப்பமூட்டியாகவும், மின்னாற்றலை உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது.

D) எவ்வித மாசும் உண்டாக்குவதில்லை.

விளக்கம்: இது ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும்.

56. சூரிய சமையற்கலன் பற்றிய கருத்துக்களுல் பொருத்தமானதைக் காண்க:

1) சூரிய சமையற்கலன் என்பது உட்புறம் கருமை நிற வர்ணம் பூசப்பட்ட காப்பிடப்பட்ட உலோகம் அல்லது மரத்தால் ஆன பெட்டியாகும்.

2) இதன் மேற்புறம் தடிமனான கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.

3) சமதள கண்ணாடி சூரிய ஒளியை உட்கிரகிப்பதாக அமைந்துள்ளது.

4) சூரியனில் இருந்து பெறப்படும் கதிர்வீச்சு ஆற்றல் மூலம் உணவு சமைக்கப்படுகிறது.

A) 1, 2, 3 மட்டும் சரி

B) 1, 3, 4 மட்டும் சரி

C) 1, 2, 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: சமதள கண்ணாடி சூரிய ஒளியை எதிரொளிப்பதாக அமைந்துள்ளது.

57. சூரிய ஒளி வெப்ப ஆற்றல் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படுவது.

A) ஒளித்தகடு

B) ஒளிமூலம்

C) டர்பைன்கள்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: சூரிய ஒளித் தகடுகள் மூலம் குவிக்கப்பட்ட சூரிய ஒளியின் மூலம் நீர் வெப்பப்படுத்திபட்டு நீராவியாக மாற்றி டர்பைன்களை இயக்குவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

58. உயிரி வாயுக்களில் அதிக அளவு இருப்பது____________

A) ஹைட்ரஜன் சல்பைட்

B) கார்பன்-டை ஆக்ஸைடு

C) ஹைட்ரஜன்

D) மீத்தேன்

விளக்கம்: உயிரி வாயு என்பது மீத்தேன்(75%), ஹைட்ரஜன் சல்பைட், கார்பன்-டை ஆக்ஸைடு மற்றும் ஹைட்ரஜன் சேர்ந்த கலவையாகும். இவ்வாயு விலங்குகள் மற்றும் தாவரங்களின் கழிவுகள், காற்றில்லாச் சூழலில் மட்கும் போது(சிதைவடையும் போது) உருவாகிறது.

59. பொருத்துக:

A) சூரிய மின்கலன் – 1. மாட்டுச் சாணம்

B) மதுரா எண்ணெய் வயல் – 2. மீத்தேன்

C) கோபர் நிகஸ் – 3. உத்திரப்பிரதேசம்

D) கோபர் – 4. ஃபோட்டோவோல்டாயிக் கருவி

A) 4 3 2 1

B) 4 1 2 3

C) 2 4 1 3

D) 2 3 4 1

விளக்கம்:

A) சூரிய மின்கலன் – 1. ஃபோட்டோவோல்டாயிக் கருவி

B) மதுரா எண்ணெய் வயல் – 2. உத்திரப்பிரதேசம்

C) கோபர் நிகஸ் – 3. மீத்தேன்

D) கோபர் – 4. மாட்டுச் சாணம்

60. கோபர் நிகஸ் என்ற சொல் கீழ்க்கண்ட எம்மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது.

A) இலத்தின்

B) கிரேக்கம்

C) ஹிந்தி

D) பிரெஞ்சு

விளக்கம்: உயிரி வாயு என்பது மீத்தேன்(75%), ஹைட்ரஜன் சல்பைட், கார்பன்-டை ஆக்ஸைடு மற்றும் ஹைட்ரஜன் சேர்ந்த கலவையாகும். இவ்வாயு விலங்குகள் மற்றும் தாவரங்களின் கழிவுகள், காற்றில்லாச் சூழலில் மட்கும் போது(சிதைவடையும் போது) உருவாகிறது. பொதுவாக இவை “கோபர் கேஸ்” (கோபர் (ஹிந்தி) ஸ்ரீ மாட்டுச் சாணம்) என்றும் அழைக்கப்படுகிறது.

61. கீழ்க்கண்டவற்றுள் உயிரி வாயுவின் மேம்மைகளுல் பொருந்தாததைக் கண்டறி:

A) இவை எரியும் போது புகையை அதிக வெளியிடுவதில்லை. எனவே இவை குறைந்த மாசினை உண்டாக்குகின்றன.

B) உயிரியக் கழிவுகள் மற்றும், கழிவுப்பொருட்கள் போன்ற கரிமப் பொருள்களை சிதைவடையச் செய்வதற்கு மிகச் சிறந்த வழியாகும்.

C) படியும் கழிவுகளில் பாஸ்பரஸ் மற்றும் ஹைட்ரஜன் அளவு மிகுந்திருப்பதால், அதனை சிறந்த உரமாக பயன் படுத்தலாம்.

D) இது பயன்படுத்த, பாதுகாப்பானதும் வசதியானதுமாகும்.

62. ஷேல் வாயுக்களை வெளியே எடுக்கப் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம்___________

A) ஹைட்ராலிக் ப்ராக்சரிங்

B) ஹைட்ராலிக் முறிவு

C) ஹைட்ராலிக் பிரஷ்ஷர்

D) A, B இரண்டும்

விளக்கம்: இவ்வாயுக்கள் மற்றும் எண்ணெயினை வெளியே எடுக்க ஹைட்ராலிக் ப்ராக்சரிங்ஃஹைட்ராலிக் முறிவு (பாறை அடக்குகளின் மேல் எண்ணெய் மற்றும் வாயுக்கள் நிரம்பியுள்ள அடுக்கை அடையும் வரை ஆழமாகத் துளையிடப்படுதல்) என்னும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

63. ஷேல் எனப்படுவது கீழ்க்கண்ட எதனைக் குறிப்பது__________

A) கடினப் பாறை

B) சேறு மற்றும் தாதுக்கள் அடங்கியப் பாறை

C) உருமாறியப் பாறை

D) தீப்பாறை

விளக்கம்: ஷேல் எனப்படுவது பூமியின் அடிப்புறத்தில் அமைந்துள்ள சேறு மற்றும் தாதுக்கள் (குவார்ட்ஸ் மற்றும் கால்சைட்) அடங்கிய மென்மையான பாறை அடுக்குகளைக் குறிப்பதாகும். இப்பாறை அடுக்குகளின் இடையிலுள்ள துளைகளில் எண்ணெய் மற்றும் வாயுக்கள் நிரம்பியிருக்கின்றன.

64. கூற்று (i): ஷேல் வாயுக்களுக்காக இடப்படும் துளைகள் நிலத்தடி நீர் மட்டத்தினை அதிகரித்து குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்துகிறது. மேலும் மண் வளத்தையும் உயர்த்துகிறது.

கூற்று (ii): நிலத்தடியில் உள்ள வாயுக்கள் மற்றும் எண்ணெயினை வெளியேற்ற பல மில்லியன் கன அளவு நீரைப் பயன்படுத்த வேண்டியிருப்பதால், இவை நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாகப் பாதிக்கிறது.

A) கூற்று I, தவறு, கூற்று ii சரி

B) கூற்று i சரி, கூற்று ii தவறு

C) கூற்று i, ii இரண்டும் சரி

D) கூற்று i, ii இரண்டும் தவறு

விளக்கம்: ஷேல் வாயுக்களுக்காக இடப்படும் துளைகள் நிலத்தடி நீர் மட்டத்தினை வெகுவாகப் பாதித்து குடிநீர் ஆதாரத்தை மாசுபடுத்துகிறது. மேலும் மண் வளத்தையும் பாதிக்கிறது.

65. ஷேல் வாயுக்கள் எடுப்பதற்காக இந்தியாவில் கண்டறியப்பட்ட பகுதிகளுல் பொருந்தாதது.

A) கேம்பே – குஜராத்

B) ரேணிகுன்டா – ஆந்திரப்பிரதேசம்

C) அரக்கான் – அஸ்ஸாம்

D) கோண்ட்வானா – மத்திய இந்தியா

66. ஷேல் வாயுக்கள் எடுப்பதற்காக இந்தியாவில் கண்டறியப்பட்ட பகுதிகளுல் பொருந்தாதது.

A) கிருஷ்ணா கோதாவரி – கிழக்கு கடற்கரைப் பகுதி

B) காவேரி (ம) இந்தோ – கங்கை வடிநிலப் பகுதி

C) அஸ்ஸாம் (அரக்கான்) – வட கிழக்குப் பகுதி

D) இலங்கை – வட கிழக்குப் பகுதி

67. வேகமாக வீசக்கூடிய காற்றின் இயக்க ஆற்றலானது காற்றாலைகள் மூலம் கீழ்க்கண்ட எந்த ஆற்றலாக மாற்றப்படுகிறது.

A) ஒளி ஆற்றல்

B) மின் ஆற்றல்

C) எந்திர ஆற்றல்

D) வெப்ப ஆற்றல்

விளக்கம்: வேகமாக வீசக்கூடிய காற்றின் இயக்க ஆற்றலானது காற்றாலைகள் மூலம் எந்திர ஆற்றலாக மாற்றப்படுகிறது. இந்த காற்றாற்றல் மின்சார உற்பத்தி, நீர் உந்திகள், அரவை ஆலைகள் மற்றும் கிணற்றிலிருந்து நீரை மேலேற்றப் பயன்படுகிறது.

68. ஒரு காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்னாற்றலை எத்தனை வீடுகளுக்கு பயன்படுத்த இயலும்____________

A) 300 வீடுகள்

B) 400 வீடுகள்

C) 500 வீடுகள்

D) 600 வீடுகள்

69. காற்றாற்றலின் நன்மைகளுல் பொருந்தாததைத் தேர்ந்தெடு.

1) காற்றாற்றல், விலையில்லாத, சுற்றுச்சூழலுக்குகந்த, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளமாகும்.

2) இவை எவ்வித மாசும் ஏற்படுத்துவதில்லை.

3) பிற மின்னாற்றல் உற்பத்தி நிலையங்களை ஒப்பிடும்போது பராமரிப்பு செலவு மிகவும் அதிகம்.

A) 3 மட்டும் தவறு

B) 1, 2 இரண்டும் தவறு

C) 1 மட்டும் தவறு

D) அனைத்தும் சரி

விளக்கம்: காற்றாற்றல், விலையில்லாத, சுற்றுச்சூழலுக்குகந்த, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளமாகும். இவை எவ்வித மாசும் ஏற்படுத்துவதில்லை. பிற மின்னாற்றல் உற்பத்தி நிலையங்களை ஒப்பிடும்போது பராமரிப்பு செலவு மிகவும் குறைவு.

70. பொருத்துக:

A) உலகின் மிக உயரமான காற்றாலை – 1. தமிழ்நாடு

B) டேஹ்ரி அணை – 2. ஹவாய்

C) சர்தார் சரோவர் அணை – 3. உத்தரகாண்ட்

D) கல்லணை – 4. குஜராத்

A) 4 3 2 1

B) 4 1 2 3

C) 2 4 1 3

D) 2 3 4 1

விளக்கம்:

A) உலகின் மிக உயரமான காற்றாலை – 1. ஹவாய்

B) டேஹ்ரி அணை – 2. உத்தரகாண்ட்

C) சர்தார் சரோவர் அணை – 3. குஜராத்

D) கல்லணை – 4. தமிழ்நாடு

71. புவியின் மேற்பரப்பானது ஏறக்குறைய எத்தனை சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது.

A) 51%

B) 61%

C) 71%

D) 81%

விளக்கம்: புவியின் மேற்பரப்பு ஏறக்குறைய 71% நீரால் சூழப்பட்டுள்ளது ஓடும் நீரினில் இருந்து பெறப்படும் ஆற்றல், மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது இவ்வாறு பெறப்படும் ஆற்றல் புனல் மின்னாற்றல் எனப்படும்.

72. புனல் மின் உற்பத்தி செய்யப் உகந்த அமைவிடம்_________

A) கடற்கரைப் பகுதி

B) மலைப்பகுதி

C) நிலப்பகுதி

D) ஆற்றுப்பகுதி

விளக்கம்: புனல் மின் உற்பத்தி நிலையங்களில் மேலிருந்து வேகமாக கீழே விழும் நீர் அல்லது வேகமாக ஓடும் நீரின் இயக்க ஆற்றல் மின்னாற்றலாகப் பெறப்படுகிறது. மலைப்பகுதிகள் இதற்கு மிகவும் ஏற்றவை. ஏனெனில் அதிக சரிவான பகுதிகளிலிருந்து நீர் பெருமளவில் தொடர்ந்து வழிந்தோடி வருகின்றது.

73. நீர் மின்சார நிலையங்கள் ஓடும் நீரிலுள்ள நிலை ஆற்றலை கீழ்க்கண்ட எந்த ஆற்றலாக மாற்றுகிறது.

A) வெப்ப ஆற்றல்

B) எந்திர ஆற்றல்

C) இயக்க ஆற்றல்

D) மின்னாற்றல்

விளக்கம்: நீர் மின்சார நிலையங்கள், ஓடும் நீரிலுள்ள நிலை ஆற்றலை மின்னாற்றலாக மாற்றக் கூடியவை இது நீர் மின்சாரம் எனப்படும்.

74. கடலோரங்களில் உண்டாகும் கடல்நீரின் வேகமான இடப்பெயர்ச்சியினால் ஏற்படும் ஆற்றல்___________

A) இயக்க ஆற்றல்

B) எந்திர ஆற்றல்

C) காற்று ஆற்றல்

D) ஓத ஆற்றல்

விளக்கம்: ஓத ஆற்றல் எனப்படுவது கடலோரங்களில் உண்டாகும் கடல்நீரின் வேகமான இடப்பெர்ச்சியினால் ஏற்படும் ஆற்றல் ஆகும். ஓதங்கள் என்பவை கடல் நீரின் மீது, புவியீர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, கடல் நீர் மட்டம் உயர்வதும், தாழ்வதுமாகும்.

75. கீழ்க்கண்டவற்றுள் டர்பைன்களை பயன்படுத்தி மின்னாற்றல் தயாரிக்கப்படும் ஆற்றல் மூலங்கள்.

A) சூரிய ஆற்றல்

B) நீர் ஆற்றல்

C) ஓத ஆற்றல்

D) மேற்கண்ட அனைத்தும்

76. ஓத ஆற்றலினால் உண்டாகும் நன்மைகளுல் பொருந்தாதது எது.

A) எவ்வித சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுத்துவதில்லை

B) இவற்றுள் எவ்வித எரிபொருளும் பயன்படுத்தாததால் கழிவுகள் மிக அதிகமாக ஏற்படுகின்றன.

C) ஓதங்கள் எப்போது உருவாகும் என்பதனை முன்னரே நம்மால் கணிக்க முடியும் இதனால் இந்த ஆற்றலை நாம் தொடர்ச்சியாக பெறமுடியும்.

D) நீரின் அடர்த்தி காற்றை விட அதிகமாக உள்ளதால் மிக மெதுவான நீரின் இயக்கத்தினால் கூட, டர்பைனை இயங்கச் செய்வதால், மின்சாரம் உற்பத்தி செய்ய முடிகிறது.

விளக்கம்: இவற்றுள் எவ்வித எரிபொருளும் பயன்படுத்தாததால் கழிவுகள் ஏதும் ஏற்படுவதில்லை.

77. சோழ வம்சத்தைச் சேர்ந்த கரிகால் சோழ மன்னரால் கட்டப்பட்ட கல்லணையானது கீழ்க்கண்ட எந்த நூற்றாண்டைச் சார்ந்தது.

A) முதல் நூற்றாண்டு

B) இரண்டாம் நூற்றாண்டு

C) மூன்றாம் நூற்றாண்டு

D) நான்காம் நூற்றாண்டு

விளக்கம்: கி.பி. 2ம் நூற்றாண்டில் சோழ வம்சத்தைச் சேர்ந்த கரிகால் சோழ மன்னரால் கட்டப்பட்ட கல்லணையானது மிகவும் பழமையானது.

78. உலகின் நான்காவது பழமையான அணை_____________

A) பக்ராநங்கல் அணை

B) ஹிராகுட் அணை

C) கல்லணை

D) மேட்டூர் அணை

விளக்கம்: உலகின் நான்காவது பழமையான அணை கல்லணையாகும். இந்த அணை இன்றும் தமிழக மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது. இவ்வணை திருச்சிராப்பள்ளி நகருக்கு 20 கி.மீ. அருகில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

79. மின்னனுக் கழிவுகளில் காணப்படும் நச்சு உலோகங்கள்_____________

A) காரீயம்

B) காட்மியம்

C) குரோமியம்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: மின்னணுக் கழிவுகள் என்பது பயன்படுத்த முடியாத, பழைய, மீண்டும் சரிப்படுத்தி உபயோகிக்க முடியாத, மின்சார மற்றும் மின்னணு சாதனங்களைக் குறிப்பதாகும். இக்கழிவுகளில் நச்சு உலோகங்களான காரீயம், காட்மியம், குரோமியம், பாதரசம், மட்டுமல்லாமல் பிற உலோகங்களான இரும்பு, தாமிரம், சிலிக்கான், அலுமினியம். தங்கம் போன்றவை பிரித்தெடுக்கக் கூடியவையாக உள்ளன.

80. எத்தனை சதவீத மின்னணுக் கழிவுகள் மறுசுழற்ச்சிக்கு பயன்படுகிறது.

A) 5%

B) 10%

C) 15%

D) 20%

81. பொருத்துக: (மின்னணுக் கழிவுப்பொருள் – பாதிப்பு)

A) ஈயம் – 1. சிறுநீரகம் (ம) கல்லீரல் பாதிப்பு

B) குரோமியம் – 2. மூளை (ம) சுவாச மண்டலம் பாதிப்பு

C) கேட்மியம் – 3. மைய (ம) பக்க நரம்பு மண்டலம் பாதிப்பு

D) பாதரசம் – 4. மூச்சுத்திணறல் ஆஸ்துமா

A) 4 3 2 1

B) 3 4 1 2

C) 2 4 1 3

D) 2 3 4 1

விளக்கம்:

A) ஈயம் – 1. மைய (ம) பக்க நரம்பு மண்டலம் பாதிப்பு

B) குரோமியம் – 2. மூச்சுத்திணறல் ஆஸ்துமா

C) கேட்மியம் – 3. சிறுநீரகம் (ம) கல்லீரல் பாதிப்பு

D) பாதரசம் – 4. மூளை (ம) சுவாச மண்டலம் பாதிப்பு

82. கீழ்க்கண்ட எந்த மின்னணுக் கழிவினால் இனப்பெருக்க மண்டலம் மற்றும் பணிகள் பாதிக்கப்படுகிறது.

A) ஈயம்

B) பாலிவினைல் குளோரைடு

C) குரோமியம்

D) பாதரசம்

விளக்கம்: பாலிவினைல் குளோரைடு உள்ளிட்ட நெகிழிகளை எரிப்பதால் உண்டாகும் டையாக்ஸின்கள் இனப்பெருக்க மண்டலத்தின் வளர்ச்சியையும், பணியையும் பாதிக்கிறது.

83. நெகிழிகளை எரிக்கும்போது அதிலிருந்து உண்டாகும் தீங்கு விளைவிக்கும் பொருள்__________

A) டையாக்சின்

B) கோவேக்சின்

C) பைரிடாக்சின்

D) சென்டோசின்

84. பொருத்துக:

A) கணினிப் பொருள்கள் – 1. (6 %)

B) தொலைத் தொடர்பு சாதனங்கள் – 2. (7 %)

C) உயிரி மருத்துவ சாதனங்கள் – 3. (12 %)

D) பிற சாதனங்கள் – 4. (66 %)

A) 4 3 2 1

B) 3 4 1 2

C) 2 4 1 3

D) 2 3 4 1

விளக்கம்:

A) கணினிப் பொருள்கள் – 1. (66 %)

B) தொலைத் தொடர்பு சாதனங்கள் – 2. (12 %)

C) உயிரி மருத்துவ சாதனங்கள் – 3. (7 %)

D) பிற சாதனங்கள் – 4. (6 %)

85. கீழ்க்கண்டவற்றுள் கழிவு நீர் சுத்திகரிப்பு முறைகளுல் பொருந்தாதது எது.

A) வடிகட்டுதல்

B) காற்றேற்றம்

C) வீழ்படிவு செயல் முறை

D) வாலை வடித்தல்

86. கீழ்க்கண்டவற்றுள் கழிவு நீர் சுத்திகரிப்பு முறைகளுல் பொருந்தாதது எது.

A) படிவு அகற்றுதல்

B) கிருமி நீக்குதல்

C) ஆவியாக்குதல்

D) நீர் மறுசுழற்சி

87. குளோரினேற்றம் மற்றும் புற ஊதாக் கதிர்கள் மூலம் நோயை உண்டாக்கக்கூடிய நுண்ணுயிரிக்ள நீக்கம் செய்யப்படும் முறை________

A) கிருமி நீக்குதல்

B) படிவு அகற்றுதல்

C) ஆவியாக்குதல்

D) நீர் மறுசுழற்சி

விளக்கம்: குளோரினேற்றம் மற்றும் புற ஊதாக் கதிர்கள் மூலம் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு நோயை உண்டாக்கக்கூடிய நுண்ணுயிரிகள் நீக்கம் செய்யப்படுகின்றன.

88. திடக்கழிவுகளை அகற்றும் முறைகளுல் பொருந்தாதது.

A) தனித்துப் பிரித்தல்

B) நிலத்தில் நிரப்புதல்

C) எரித்து சாம்பலாக்கல்

D) படிவு அகற்றுதல்

89. பொருத்துக:

A) தனித்துப் பிரித்தல் – 1. உயிரி சிதைவடைய கழிவுகள்

B) நிலத்தில் நிரப்புதல் – 2. மருத்துவக் கழிவுகள்

C) எரித்து சாம்பலாக்கல் – 3. மக்கும் (ம) மக்கா தன்மையுடையவை

D) உரமாக்குதல் – 4. கரிம பொருட்கள் சிதைவடைதல்

A) 4 3 2 1

B) 3 4 2 1

C) 2 4 1 3

D) 2 3 4 1

விளக்கம்:

A) தனித்துப் பிரித்தல் – 1. மக்கும் (ம) மக்கா தன்மையுடையவை

B) நிலத்தில் நிரப்புதல் – 2. கரிம பொருட்கள் சிதைவடைதல்

C) எரித்து சாம்பலாக்கல் – 3. மருத்துவக் கழிவுகள்

D) உரமாக்குதல் – 4. உயிரி சிதைவடைய கழிவுகள்

90. கழிவுகளை சிறப்பான முறையில் கையாளுவதற்கு ஏற்ற முறை__________

A) குறைத்தல்

B) மறுபயன்பாடு

C) மறுசுழற்சி

D) மேற்கண்ட அனைத்தும்

91. பொருத்துக:

A) மண்ணரிப்பு – 1. CO2

B) உயிரி வாயு – 2. புதுப்பிக்க இயலாத ஆற்றல்

C) இயற்கை வாயு – 3. தாவரப் பரப்பு நீக்கம்

D) பசுமை இல்ல வாயு – 4. புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

A) 4 3 2 1

B) 3 4 2 1

C) 2 4 1 3

D) 2 3 4 1

விளக்கம்:

A) மண்ணரிப்பு – 1. தாவரப் பரப்பு நீக்கம்

B) உயிரி வாயு – 2. புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

C) இயற்கை வாயு – 3. புதுப்பிக்க இயலாத ஆற்றல்

D) பசுமை இல்ல வாயு – 4. CO2

92. கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக கீழுள்ளவற்றுள் எவற்றினை நீவிர் பயன்படுத்துவீர்.

A) கழிவுகள் உருவாகும் அளவைக் குறைத்தல்

B) கழிவுகளை மறு பயன்பாட்டு முறையில் பயன்படுத்துதல்

C) கழிவுகளை மறுசுழற்சி செய்தல்

D) மேலே உள்ளவை அனைத்தும்

93. புசுமை இல்ல விளைவு என குறிப்பிடப்படுவது.

A) பூமி குளிர்தல்

B) புற ஊதாக் கதிர்கள் வெளி செல்லாமல் இருத்தல்

C) தாவரங்கள் பயிர் செய்தல்

D) பூமி வெப்பமாதல்

94. புவி வெப்பமாதலின் காரணமாக ஏற்படக்கூடிய விளைவு.

A) கடல் மட்டம் உயர்தல்

B) பனிப்பாறைகள் உருகுதல்

C) தீவுக்கூட்டங்கள் மூழ்குதல்

D) மேலே கூறிய அனைத்தும்

95. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் காற்றாற்றல் குறித்த தவறான கூற்று எது?

A) காற்றாற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

B) காற்றாலையின் இறக்கைகள் மின்மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன.

C) காற்றாற்றல் மாசு ஏற்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படுகிறது

D) காற்றாலைப் பயன்படுத்துவதன் மூலம் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டினைக் குறைக்கலாம்

96. உயிரி மருத்துவ சாதனங்கள் மூலம் வெளியேற்றப்படும் மின்னணுக் கழிவு.

A) 12 %

B) 5 %

C) 7 %

D) 12 %

97. குறைந்த மின்னாற்றலை பயன்படுத்தி ஒளிரும் மின்சாதனங்கள்_________

A) சிஎப்எல் பல்பு

B) எல்இடி பல்புகள்

C) விளம்பரப் பலகை மின்விளக்குகள்

D) மேற்கண்ட அனைத்தும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!